72. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! தமக்கு விரும்புவதையே தம் அண்டை வீட்டாருக்கும் அல்லது தம் சகோதரருக்கும் விரும்பாத எந்த அடியாரும் முழுமையான இறைநம்பிக்கையாளர் ஆகமாட்டார்.
€இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
பாடம் : 18 அண்டை வீட்டாருக்கு தொல்லை தருவது தடை செய்யப்பட்டுள்ளது.
73. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவருடைய நாசவேலைகளில் இருந்து அவருடைய அண்டைவீட்டார்க்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அவர் சொர்க்கத்தில் நுழையமாட்டார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 19 அண்டைவீட்டாரைக் கண்ணியப்படுத்துதல்,நல்லதையே பேசுதல் அல்லது வாய்மூடி இருத்தல் ஆகியவற்றை தூண்டும் நபிமொழிகளும்,இக்குணங்கள் யாவும் இறைநம்பிக்கையில் அ$டங்கும் என்பதும்.
74. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்,அல்லது வாய்மூடி இருக்கட்டும்,அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும்,அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
75. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தமது அண்டைவீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்.அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்.அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் ஒன்று நல்லதை பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
76. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
ஆனால் அதில் “(அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர்) தம் அண்டை வீட்டாருக்கு உதவி செய்யட்டும் “ என்று (சிறு வித்தியாசத்துடன்) காணப்படுகிறது.
அத்தியாயம் : 1
77. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் அண்டை வீட்டாருக்கு உதவி செய்யட்டும்,அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும்,அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பியவர் (ஒன்று) நல்லதை பேசட்டும் அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
இதை அபூஷீரைஹ் அல்குஸாஈ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
பாடம் : 20 தீமைகளை தடுப்பது இறைநம்பிக்கையின் ஓர் அம்சமாகும்;இறைநம்பிக்கை கூடலாம்;குறையலாம்;நல்லதை(ச் செய்யுமாறு) ஏவுவதும் தீமையை தடுப்பதும் இரு கடமைகளாகும் என்பன பற்றிய விளக்கம்.
78. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
முதன்முதலில் பெருநாள் தினத்தில் தொழுகைக்கு முன் சொற்பொழிவு (குத்பா) நிகழ்த்தியவர் மர்வான் பின் ஹகம் ஆவார்.(அவ்வாறு அவர் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.)அப்போது அவரை நோக்கி ஒருவர் எழுந்து நின்று,” “சொற்பொழிவுக்கு முன்பே (பெருநாள் தொழுகை) தொழ வேண்டும் என்று கூறினார்.
அதற்கு மர்வான் “முன்பு நடைபெற்றது கைவிடப்பட்டுவிட்டது (இப்போது அது நடைமுறையில் இல்லை) “ என்று கூறினார்.(அப்போது அங்கிருந்த$) அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள்,இதோ இந்த மனிதர் தமது கடமையை நிறைவேற்றிவிட்டார்.அல்லாஹ்வின் தூதர் (ஸல) அவர்கள் (பின்வருமாறு) கூற நான் கேட்டுள்ளேன்:
உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும்,முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்),அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலகீனமா(ன நிலையா)கும்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
79. மர்வான் பின் ஹகம் சம்பவத்தின் போது அபூசயீத் அல்குத்ரி (ரலி) அவர்கள் அறிவித்த மேற்கண்ட ஹதீஸ் வேறுசில அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
80. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்ததில்லை. அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைப்பிடிப்பார்கள்;அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள்.அந்தத் தோழர்களுக்கு பிறகு சிலர் வருவார்கள்.அவர்கள் தாம் செய்யாதவற்றைச் சொல்வார்கள்.தமக்கு கட்டளையிடப்படாதவற்றைச் செய்வார்கள்.ஆகவே,யார் இ(த்தகைய)வர்களுடன் தமது கரத்தால் போராடுவாரோ அவர் இறைநம்பிக்கையாளர் ஆவார்.யார் இவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுவாரோ அவரும் இறைநம்பிகையாளர்தாம்.இவற்றுக்கப்பால் இறை நம்பிக்கை என்பது கடுகளவு கூட கிடையாது.
இதை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இதை அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் இருந்து அறிவிக்கும்) அபூராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
இந்த ஹதீஸ் நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன்.அதை அவர்கள் மறுத்தார்கள்.இந்நிலையில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (மதினாவின் பள்ளத்தாக்குகளில் ஒன்றான)” “$கனாத்”“ எனும் இடத்திற்கு (ஒருமுறை) வந்தார்கள்,அப்போது அவர்களை நலம் விசாரிக்கச் சென்ற அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தம்முடன் என்னை வருமாறு கூறினார்கள்.நானும் அவர்களுடன் சென்றேன். நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் அமர்ந்த போது,
நான் இந்த ஹதீஸ் குறித்து அவர்களிடம் வினவினேன்.அப்போது அவர்கள் நான் அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களுக்கு அறிவித்ததைப் போன்றே அதை எனக்கு அறிவித்தார்கள்.
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸாலிஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(சர்ச்சைக்குரியவரான ஹாரிஸிடமிருந்து மட்டுமின்றி வேறு வழிகளிலும் இதை போன்றே அறிவிக்கப் பட்டுள்ளது.$)
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் இருந்து மற்றோர் அறிவிப்பாளர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் “ஒவ்வொரு இறைத்தூதருக்கும் சிறப்பு உதவியாளர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் அந்த இறைத்தூதரின் வழியில் நடப்பார்கள்; அவருடைய வழிமுறையைப் பின்பற்றுவார்கள்“என்று இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸ்ஸிலுள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.
ஆனால், அதில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் “கனாத்“ எனும் பள்ளத்தாக்கிற்கு வந்தது பற்றியோ அவர்களை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் சந்தித்தது பற்றியோ குறிப்பில்லை.
அத்தியாயம் : 1
பாடம் : 21 இறைநம்பிகையில்,இறைநம்பிக்கையாளர்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வும், இறைநம்பிக்கையில் யமனியர் முதலிடம் பெற்றிருப்பதும்.
81. அபூமஸ்ஊத் உக்பா அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் யமன் நாட்டுத் திசையை நோக்கி சைகை காட்டி,” “அறிந்து கொள்ளுங்கள்! இறைநம்பிக்கை (ஈமான்) இங்கே உள்ளது.கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் ஒட்டகங்களின் வால்களை பிடித்தபடி,அவற்றி அதட்டிக் கொண்டே (நாடோடிகளாகச்) சென்று கொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும்.அங்கிருந்துதான் ஷைத்தானின் இரு கொம்புகளும் (குழப்பங்கள்) உதயமாகும்.(அதாவது) ரபிஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவை தோன்றும்“ என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
82. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யமன்வாசிகள் (உங்களிடம்) வந்திருக்கிறார்கள்.அவர்கள் இளகிய நெஞ்சமுடையவர்கள்; இறைநம்பிக்கை,யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.மார்க்க ஞானமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
83. மேற்கண்ட ஹதீஸ் வேறு இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
84. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யமன்வாசிகள் உங்களிடம் வந்துள்ளனர்.அவர்கள் இளகிய மனம் படைத்தவர்கள்; மென்மையான நெஞ்சம் உடையவர்கள்.மார்க்க ஞானம் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
85. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைமறுப்பின் தலைமைப் பீடம் கிழக்கு திசையில் (அக்னி ஆராதகாரர்களான மஜூசிகள் வசிக்கும் பாரசீகத்தில்) உள்ளது.குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் உரிமையாளர்களிடமும் (நாடோடிப்) பாலைவனத்தவர்களான ஒட்டக் மேய்ப்பர்(களிடமும் பண்ணை முதலாளி)களிடமும் தற்பெருமையும் அகம்பாவமும் காணப்படுகின்றன.ஆடுகளின் உரிமையாளர்களிடம் அமைதி(யும் பணிவும்) காணப்படுகின்றது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
86. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.இறைமறுப்பு (அக்னி ஆராதனையாளர்கள் வசிக்கும்)கிழக்கு திசையில் (பாரசீகத்தில்) உள்ளது.அமைதி,ஆடுகளின் உரிமையாளர்களிடம் காணப்படுகிறது.தற்பெருமையும் முகஸ்துதியும் குதிரைகள் மற்றும் ஒட்டகங்களின் உரிமையாளர்களும் (நாடோடிப்) பாலைவனவாசிகளுமான ஒட்டக மேய்ப்பர் (களிடமும் பண்ணை முதலாளி)களிடமும் காணப்படுகின்றன.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 1
87. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பெருமையும் கர்வமும் ஒட்டகங்களின் உரிமையாளர்களான நாடோடிகளிடையே காணப்படும்.அமைதி(யும் பணிவும்) ஆடுகளின் உரிமையாளர்களிடையே காணப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
88. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில் அறிவிப்பாளர் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் “இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்“ என்று அதிகப்படியாக அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 1
89. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யமன்வாசிகள் (உங்களிடம்) வந்திருக்கின்றார்கள்.அவர்கள் மென்மையான நெஞ்சம் உடையவர்கள்; இளகிய மனம் படைத்தவர்கள்.இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.அமைதி(யும் பணிவும்)ஆடுகளின் உரிமையாளர்களிடையே காணப்படும்.பெருமையும் கர்வமும் கிழக்குத் திசையிலுள்ள ஒட்டக உரிமையாளர்களான நாடோடிகளிடையே காணப்படும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 1
90. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யமன்வாசிகள் உங்களிடம் வந்திருக்கிறார்கள்.அவர்கள் இளகிய மனம் படைத்தவர்கள்; மென்மையான நெஞ்சம் உடையவர்கள்.இறைநம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். இறை மறுப்பின் தலைமைப்பீடம் கிழக்குத் திசையில் (அக்னி ஆராதனையாளர்களான மஜீஸிகல் வசிக்கும் பாரசீகத்தில்) உள்ளது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில், அறிவிப்பாளஎ அஃமஷ் (ரஹ்) அவர்கல் “இறைமறுப்பின் தலைமைப் பீடம் கிழக்குத் திசையில் உள்ளது“ எனும் வாசகத்தை குறிப்பிடவில்லை.
அத்தியாயம் : 1
91. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அவற்றில் அறிவிப்பாளர் அஃமஷ் (ரஹ்) அவர்கள், “பெருமையும் அகம்பாவமும் ஒட்டக உரிமையாளர்களிடையே காணப்படும்.அமைதியும் கம்பீரமும் ஆடுகளின் உரிமையாளர்களிடையே காணப்படும்“ என்று (நபி (ஸல்) அவர்கல் கூறியதாக அதிகப்படியாக அறிவித்துள்ளார்கள்.
அத்தியாயம் : 1