பாடம் : 17 பயணத்தில் நோன்பு நோற்கவும் நோன்பை விட்டுவிடவும் உரிமை உண்டு.
2058. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பயணத்தில் நோன்பு நோற்பது குறித்துக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் நாடினால் நோன்பு நோற்பீராக; நாடினால் நோன்பை விட்டுவிடுவீராக!" என்றார்கள்.
அத்தியாயம் : 13
2058. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பயணத்தில் நோன்பு நோற்பது குறித்துக் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் நாடினால் நோன்பு நோற்பீராக; நாடினால் நோன்பை விட்டுவிடுவீராக!" என்றார்கள்.
அத்தியாயம் : 13
2059. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்ந்து நோன்பு நோற்கும் மனிதன் ஆவேன். பயணத்திலும் நான் நோன்பு நோற்கலாமா?" என்று கேட்டார்கள். அதற்கு, "நீர் நாடினால் நோன்பு நோற்பீராக! நீர் நாடினால் நோன்பை விட்டுவிடுவீராக!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 13
ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! நான் தொடர்ந்து நோன்பு நோற்கும் மனிதன் ஆவேன். பயணத்திலும் நான் நோன்பு நோற்கலாமா?" என்று கேட்டார்கள். அதற்கு, "நீர் நாடினால் நோன்பு நோற்பீராக! நீர் நாடினால் நோன்பை விட்டுவிடுவீராக!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2060. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
அத்தியாயம் : 13
2061. மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "நான் (விடாமல்) நோன்பு நோற்கும் மனிதன் ஆவேன். பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?" என்று ஹம்ஸா பின் அம்ர் (ரலி) அவர்கள் கேட்டார்கள் என ஹதீஸ் தொடங்குகிறது.
அத்தியாயம் : 13
அத்தியாயம் : 13
2062. ஹம்ஸா பின் அம்ர் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், "அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் நோன்பு நோற்க எனக்குச் சக்தி உண்டு என நான் உணர்கிறேன். (அவ்வாறு நோன்பு நோற்பது) என்மீது குற்றமாகுமா?" என்று கேட்டேன். அதற்கு "இது அல்லாஹ்விடமிருந்து (வந்துள்ள) சலுகையாகும். யார் அதைப் பயன்படுத்திக் கொள்கிறாரோ அது நல்லதே. (பயணத்தில்) நோன்பு நோற்க விரும்புகின்றவர் மீதும் குற்றம் இல்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஹாரூன் பின் சஈத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இது சலுகையாகும்" என்றே இடம்பெற்றுள்ளது. "அல்லாஹ்விடமிருந்து” எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 13
நான், "அல்லாஹ்வின் தூதரே! பயணத்தில் நோன்பு நோற்க எனக்குச் சக்தி உண்டு என நான் உணர்கிறேன். (அவ்வாறு நோன்பு நோற்பது) என்மீது குற்றமாகுமா?" என்று கேட்டேன். அதற்கு "இது அல்லாஹ்விடமிருந்து (வந்துள்ள) சலுகையாகும். யார் அதைப் பயன்படுத்திக் கொள்கிறாரோ அது நல்லதே. (பயணத்தில்) நோன்பு நோற்க விரும்புகின்றவர் மீதும் குற்றம் இல்லை" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், ஹாரூன் பின் சஈத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், "இது சலுகையாகும்" என்றே இடம்பெற்றுள்ளது. "அல்லாஹ்விடமிருந்து” எனும் குறிப்பு இல்லை.
அத்தியாயம் : 13
2063. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தில் கடுமையான வெப்பத்தில் (பயணம்) புறப்பட்டோம். கடும் வெப்பம் காரணமாக எங்களில் சிலர் தமது கையைத் தமது தலைமீது வைத்து (மறைத்து)க்கொண்டனர். அப்(பயணத்தின்) போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர எங்களில் வேறு யாரும் நோன்பு நோற்றிருக்கவில்லை.
அத்தியாயம் : 13
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ரமளான் மாதத்தில் கடுமையான வெப்பத்தில் (பயணம்) புறப்பட்டோம். கடும் வெப்பம் காரணமாக எங்களில் சிலர் தமது கையைத் தமது தலைமீது வைத்து (மறைத்து)க்கொண்டனர். அப்(பயணத்தின்) போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர எங்களில் வேறு யாரும் நோன்பு நோற்றிருக்கவில்லை.
அத்தியாயம் : 13
2064. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட பயணமொன்றில் கடுமையான வெப்பமுள்ள நாளில் அவர்களுடன் நாங்களும் இருந்தோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தமது கையைத் தமது தலைமீது வைத்து(மறைத்து)க்கொண்டனர். அப்(பயணத்தின்) போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர வேறு யாரும் நோன்பு நோற்றிருக்கவில்லை.
அத்தியாயம் : 13
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட பயணமொன்றில் கடுமையான வெப்பமுள்ள நாளில் அவர்களுடன் நாங்களும் இருந்தோம். கடும் வெப்பத்தின் காரணமாக சிலர் தமது கையைத் தமது தலைமீது வைத்து(மறைத்து)க்கொண்டனர். அப்(பயணத்தின்) போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களையும் தவிர வேறு யாரும் நோன்பு நோற்றிருக்கவில்லை.
அத்தியாயம் : 13
பாடம் : 18 அரஃபா (துல்ஹஜ் 9ஆவது) நாளில் "அரஃபாத்"தில் தங்கும் ஹாஜிகள் நோன்பு நோற்காமலிருப்பது விரும்பத்தக்கதாகும்.
2065. உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்று நோன்பு நோற்றிருக்கிறார்களா?" என்று "அரஃபா" நாளில் எனக்கருகே மக்கள் சிலர் விவாதித்தனர். சிலர் "அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்கள்" என்றனர். மற்றும் சிலர் "அவர்கள் நோன்பு வைக்கவில்லை" என்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பால் கோப்பை ஒன்றை நான் கொடுத்தனுப்பினேன்; அப்போது அவர்கள் "அரஃபா" பெருவெளியில் ஒட்டகத்தின் மேல் இருந்தார்கள். அதை அவர்கள் அருந்தி (தாம் நோன்பாளியல்ல என்பதை உணர்த்தி)னார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த உமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அவர்கள் ஒட்டகத்தின் மேல் இருந்தார்கள்" எனும் குறிப்பு இல்லை. "உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த உமைர் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கிறார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதிலும், "உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த உமைர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2065. உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்று நோன்பு நோற்றிருக்கிறார்களா?" என்று "அரஃபா" நாளில் எனக்கருகே மக்கள் சிலர் விவாதித்தனர். சிலர் "அவர்கள் நோன்பு வைத்திருக்கிறார்கள்" என்றனர். மற்றும் சிலர் "அவர்கள் நோன்பு வைக்கவில்லை" என்றனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பால் கோப்பை ஒன்றை நான் கொடுத்தனுப்பினேன்; அப்போது அவர்கள் "அரஃபா" பெருவெளியில் ஒட்டகத்தின் மேல் இருந்தார்கள். அதை அவர்கள் அருந்தி (தாம் நோன்பாளியல்ல என்பதை உணர்த்தி)னார்கள்.
இதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த உமைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "அவர்கள் ஒட்டகத்தின் மேல் இருந்தார்கள்" எனும் குறிப்பு இல்லை. "உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த உமைர் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கிறார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதிலும், "உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த உமைர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்" என்றே இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
2066. உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அரஃபா" நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்களா" என்று நபித்தோழர்களில் சிலர் சந்தேகம் தெரிவித்தனர். (அன்றைய தினம்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அரஃபாவில் இருந்தோம். அரஃபாவிலிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பாலிருந்த ஒரு கிண்ணத்தை நான் கொடுத்தனுப்பினேன். அதை அவர்கள் அருந்தினார்கள்.
அத்தியாயம் : 13
"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அரஃபா" நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்களா" என்று நபித்தோழர்களில் சிலர் சந்தேகம் தெரிவித்தனர். (அன்றைய தினம்) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அரஃபாவில் இருந்தோம். அரஃபாவிலிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் பாலிருந்த ஒரு கிண்ணத்தை நான் கொடுத்தனுப்பினேன். அதை அவர்கள் அருந்தினார்கள்.
அத்தியாயம் : 13
2067. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அரஃபா நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அரஃபாவில் தங்கியிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து அருந்தினார்கள்.
அத்தியாயம் : 13
அரஃபா நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அரஃபாவில் தங்கியிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் பால் பாத்திரத்தைக் கொடுத்தனுப்பினேன். மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிலிருந்து அருந்தினார்கள்.
அத்தியாயம் : 13
பாடம் : 19 ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளில் நோன்பு நோற்றல்.
2068. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் (அங்கும்) ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு (மக்களையும்) பணித்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2068. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது நாள்) அன்று நோன்பு நோற்றுவந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு நாடு துறந்து சென்றதும் (அங்கும்) ஆஷூரா நோன்பு நோற்றார்கள்; அந்நாளில் நோன்பு நோற்குமாறு (மக்களையும்) பணித்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும், நாடியவர் ஆஷூரா நோன்பு நோற்கலாம்; நாடியவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 13
2069. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள்" எனும் குறிப்பு ஹதீஸின் ஆரம்பத்தில் இடம்பெறவில்லை. ஹதீஸின் இறுதியில் "(ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும்) முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. எனவே,நாடியவர் அந்நாளில் நோன்பு நோற்றனர்; நாடியவர் அதை விட்டுவிட்டனர்" என்றே இடம்பெற்றுள்ளது. ("நாடியவர் நோற்கலாம்;நாடியவர் விட்டு விடலாம்" என) நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இல்லை.
- ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று நோன்பு நோற்கப் பட்டுவந்தது. இஸ்லாம் வந்தபோது விரும்பியவர் அந்த நோன்பை நோற்றனர்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டுவிட்டனர்.
அத்தியாயம் : 13
அவற்றில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்று வந்தார்கள்" எனும் குறிப்பு ஹதீஸின் ஆரம்பத்தில் இடம்பெறவில்லை. ஹதீஸின் இறுதியில் "(ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும்) முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விட்டுவிட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது. எனவே,நாடியவர் அந்நாளில் நோன்பு நோற்றனர்; நாடியவர் அதை விட்டுவிட்டனர்" என்றே இடம்பெற்றுள்ளது. ("நாடியவர் நோற்கலாம்;நாடியவர் விட்டு விடலாம்" என) நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இல்லை.
- ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று நோன்பு நோற்கப் பட்டுவந்தது. இஸ்லாம் வந்தபோது விரும்பியவர் அந்த நோன்பை நோற்றனர்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டுவிட்டனர்.
அத்தியாயம் : 13
2070. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்பு (ஆஷூரா நாள்) அன்று நோன்பு நோற்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுவந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் நாடியவர் ஆஷூரா நாளன்று நோன்பு நோற்றனர்;நாடியவர் (அதை) விட்டுவிட்டனர்.
அத்தியாயம் : 13
ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்பு (ஆஷூரா நாள்) அன்று நோன்பு நோற்குமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டுவந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் நாடியவர் ஆஷூரா நாளன்று நோன்பு நோற்றனர்;நாடியவர் (அதை) விட்டுவிட்டனர்.
அத்தியாயம் : 13
2071. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் குறைஷியர் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஆஷூரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் "முஹர்ரம் பத்தாவது நாளில் விரும்பியவர் (ஆஷூரா) நோன்பு நோற்கட்டும்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டுவிடட்டும்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
அறியாமைக் காலத்தில் குறைஷியர் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் ஆஷூரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் "முஹர்ரம் பத்தாவது நாளில் விரும்பியவர் (ஆஷூரா) நோன்பு நோற்கட்டும்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டுவிடட்டும்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2072. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் கால மக்கள் (குறைஷியர்) முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று நோன்பு நோற்றுவந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்புவரை முஹர்ரம் பத்தாவது நாளில் நோன்பு நோற்றனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஹர்ரம் பத்தாவது நாள் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாளாகும். நாடியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம்; நாடியவர் அ(ந்நாளில் நோன்பு நோற்ப)தை விட்டுவிடலாம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
அறியாமைக் கால மக்கள் (குறைஷியர்) முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) அன்று நோன்பு நோற்றுவந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்புவரை முஹர்ரம் பத்தாவது நாளில் நோன்பு நோற்றனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஹர்ரம் பத்தாவது நாள் அல்லாஹ்வின் நாட்களில் ஒரு நாளாகும். நாடியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம்; நாடியவர் அ(ந்நாளில் நோன்பு நோற்ப)தை விட்டுவிடலாம்" என்றார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2073. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) குறித்துப் பேசப்பட்டது. அப்போது, "அது, அறியாமைக் காலத்தார் நோன்பு நோற்ற தினமாகும். உங்களில் அன்றையதினம் நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்! விரும்பாதவர் நோன்பை விட்டுவிடட்டும்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) குறித்துப் பேசப்பட்டது. அப்போது, "அது, அறியாமைக் காலத்தார் நோன்பு நோற்ற தினமாகும். உங்களில் அன்றையதினம் நோன்பு நோற்க விரும்புகின்றவர் நோன்பு நோற்கட்டும்! விரும்பாதவர் நோன்பை விட்டுவிடட்டும்!" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 13
2074. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இது, அறியாமைக் காலத்தார் நோன்பு நோற்றுவந்த தினமாகும். விரும்புகின்றவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும்; அதை விட்டுவிட விரும்புகின்றவர் விட்டுவிடட்டும்!" என்றார்கள்.
இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், தாம் நோற்கும் வேறு ஏதேனும் நோன்பு அந்நாளில் தற்செயலாக அமைந்தால் தவிர, முஹர்ரம் பத்தாவது நாளன்று நோன்பு நோற்கமாட்டார்கள்.
அத்தியாயம் : 13
முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இது, அறியாமைக் காலத்தார் நோன்பு நோற்றுவந்த தினமாகும். விரும்புகின்றவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும்; அதை விட்டுவிட விரும்புகின்றவர் விட்டுவிடட்டும்!" என்றார்கள்.
இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், தாம் நோற்கும் வேறு ஏதேனும் நோன்பு அந்நாளில் தற்செயலாக அமைந்தால் தவிர, முஹர்ரம் பத்தாவது நாளன்று நோன்பு நோற்கமாட்டார்கள்.
அத்தியாயம் : 13
2075. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.
அதில், "நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பது குறித்துப் பேசப்பட்டது" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்றபடி மேற்கண்ட ஹதீஸிலுள்ள தகவல்கள் (அனைத்தும்) அப்படியே இதிலும் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 13
அதில், "நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பது குறித்துப் பேசப்பட்டது" என்று ஹதீஸ் தொடங்குகிறது. மற்றபடி மேற்கண்ட ஹதீஸிலுள்ள தகவல்கள் (அனைத்தும்) அப்படியே இதிலும் இடம்பெற்றுள்ளன.
அத்தியாயம் : 13
2076. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) குறித்துப் பேசப்பட்டது. அப்போது, "அது, அறியாமைக் காலத்தார் நோன்பு நோற்றுவந்த நாளாகும். எனவே, நாடுகின்றவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம்;நாடுகின்றவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 13
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் முஹர்ரம் பத்தாவது நாள் (ஆஷூரா) குறித்துப் பேசப்பட்டது. அப்போது, "அது, அறியாமைக் காலத்தார் நோன்பு நோற்றுவந்த நாளாகும். எனவே, நாடுகின்றவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம்;நாடுகின்றவர் அதை விட்டுவிடலாம்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 13
2077. அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் காலை உணவு உண்டுகொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள், "அபூமுஹம்மதே, சாப்பிட வாருங்கள்" என்று (என்னிடம்) கூறினார்கள். நான், "இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளல்லவா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆஷூரா நாள் எ(த்தகைய)து என்று நீர் அறிவீரா?" என்று கேட்டார்கள். "அது என்ன நாள்?" என்று கேட்டேன். அவர்கள், "அது ரமளான் நோன்பு கடமையாவதற்கு முன்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுவந்த நாளாகும். ரமளான் நோன்பு கடமையானபோது, அந்த நோன்பு (கட்டாயம் நோற்கப்பட வேண்டும் எனும் விதி) கைவிடப்பட்டது" என்று சொன்னார்கள்.
இதை அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அந்த நோன்பை (அல்லாஹ்வின் தூதர்-ஸல்) அவர்கள் கைவிட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "ரமளான் நோன்பு கடமையானபோது, அந்த (ஆஷூரா) நோன்பை (அல்லாஹ்வின் தூதர் - ஸல்) அவர்கள் கைவிட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13
நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் காலை உணவு உண்டுகொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள், "அபூமுஹம்மதே, சாப்பிட வாருங்கள்" என்று (என்னிடம்) கூறினார்கள். நான், "இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாவது) நாளல்லவா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆஷூரா நாள் எ(த்தகைய)து என்று நீர் அறிவீரா?" என்று கேட்டார்கள். "அது என்ன நாள்?" என்று கேட்டேன். அவர்கள், "அது ரமளான் நோன்பு கடமையாவதற்கு முன்பு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுவந்த நாளாகும். ரமளான் நோன்பு கடமையானபோது, அந்த நோன்பு (கட்டாயம் நோற்கப்பட வேண்டும் எனும் விதி) கைவிடப்பட்டது" என்று சொன்னார்கள்.
இதை அப்துர் ரஹ்மான் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், அபூகுறைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அந்த நோன்பை (அல்லாஹ்வின் தூதர்-ஸல்) அவர்கள் கைவிட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், "ரமளான் நோன்பு கடமையானபோது, அந்த (ஆஷூரா) நோன்பை (அல்லாஹ்வின் தூதர் - ஸல்) அவர்கள் கைவிட்டார்கள்" என்று இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 13