4623. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، قَالَ الْبَحِيرَةُ الَّتِي يُمْنَعُ دَرُّهَا لِلطَّوَاغِيتِ فَلاَ يَحْلُبُهَا أَحَدٌ مِنَ النَّاسِ. وَالسَّائِبَةُ كَانُوا يُسَيِّبُونَهَا لآلِهَتِهِمْ لاَ يُحْمَلُ عَلَيْهَا شَىْءٌ. قَالَ وَقَالَ أَبُو هُرَيْرَةَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" رَأَيْتُ عَمْرَو بْنَ عَامِرٍ الْخُزَاعِيَّ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ، كَانَ أَوَّلَ مَنْ سَيَّبَ السَّوَائِبَ "". وَالْوَصِيلَةُ النَّاقَةُ الْبِكْرُ تُبَكِّرُ فِي أَوَّلِ نِتَاجِ الإِبِلِ، ثُمَّ تُثَنِّي بَعْدُ بِأُنْثَى. وَكَانُوا يُسَيِّبُونَهُمْ لِطَوَاغِيتِهِمْ إِنْ وَصَلَتْ إِحْدَاهُمَا بِالأُخْرَى لَيْسَ بَيْنَهُمَا ذَكَرٌ. وَالْحَامِ فَحْلُ الإِبِلِ يَضْرِبُ الضِّرَابَ الْمَعْدُودَ، فَإِذَا قَضَى ضِرَابَهُ وَدَعُوهُ لِلطَّوَاغِيتِ وَأَعْفَوْهُ مِنَ الْحَمْلِ فَلَمْ يُحْمَلْ عَلَيْهِ شَىْءٌ وَسَمَّوْهُ الْحَامِيَ.
وَقَالَ لي أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، سَمِعْتُ سَعِيدًا، قَالَ يُخْبِرُهُ بِهَذَا قَالَ وَقَالَ أَبُو هُرَيْرَةَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم نَحْوَهُ. وَرَوَاهُ ابْنُ الْهَادِ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدٍ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم.
பாடம் : 13
(கால்நடைகள் சம்பந்தப்பட்ட சடங்குகளான) பஹீரா, சாயிபா, வஸீலா, ஹாம் என்பனவற்றை யெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்த வில்லை. மாறாக, (ஏக இறையை)மறுத்தோர்தான் அல்லாஹ்வின் மீது பொய்களைப் புனைந்து கூறுகின்றனர். அவர்களில் பெரும் பாலோர் விளங்கிக்கொள்வதில்லை (எனும் 5:103ஆவது இறைவசனம்)
(5:116ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ இஃத் காலல்லாஹ்' எனும் சொற்றொடரில் உள்ள “கால' (சொன்னான்) எனும் (இறந்தகால வினைச்)சொல்லுக்கு “சொல்வான்' என்று (எதிர்கால வினையின்) பொருளாகும்.
இந்த வசனத்திலுள்ள “இஃத்' எனும் சொல் “சொல்லிடை இணைப்புக் குறி' (ஸிலா) ஆகும்.
(5:112ஆவது வசனத்திலுள்ள வினையாலணையும் பெயரான) “அல்மாயிதா' எனும் சொல் உண்மையில் (பொருளைப் பொறுத்த வரை “விருந்தாக்கப்படும் உணவு' எனும்) செயப்பாட்டு எச்ச வினையாகும். “ஈஷத்துன் ராளியா' (திருப்தியான வாழ்க்கை), “தத்லீக்கத்துன் பாயினா' (பிரிவை ஏற்படுத்தும் மணவிலக்கு) ஆகிய சொற்றொடர்களைப் போல.
(இதன்படி “அல்மாயிதா' என்பதன்) சொற்பொருள் “விருந்தாளிக்கு அளிக்கப் படும் நல்ல உணவு' என்பதாகும்.
(“இஷ்திகாக்' எனும் “சொல் திரிபு வேறுபாட்டில்' இச்சொல்லை “ஃபஅல, யஃப்இலு' எனும் வாய்பாட்டில்) “மாத, யமீது' (உணவளித்தான், உணவளிப்பான்) என்றும் ஆளப்படுவதுண்டு.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(3:55ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முத்தவஃப்பீக்க' எனும் சொல்லுக்கு “உம்மை இறக்கச்செய்வோம்' என்பது கருத்தாகும்.18
4623. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“பஹீரா' என்பது, (அறியாமைக் காலச்) சிலைகளுக்காக (அவற்றின் பெயரால்) பால் கறக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுவந்த ஒட்டகமாகும்; மக்களில் யாரும் அதன் பாலைக் கறக்கமாட்டார்கள்.
“சாயிபா' என்பது, (அறியாமைக் காலத்தில் நோய் குணமாதல் போன்ற தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுதலில்) சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரிய விடப்பட்டு வந்த ஒட்டகமாகும். அதன் மீது எந்தச் சுமையும் ஏற்றப்படுவதில்லை. (அது நினைத்த தண்ணீரில் வாய்வைக்கும்; நினைத்த நிலத்தில் மேயும்; யாரும் அதைத் தடுக்கமாட்டார்கள்.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அம்ர் பின் ஆமிர் அல்குஸாஈ' தமது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்று கொண்டிருப்பதை நான் கண்டேன். முதன் முதலாக “சாயிபா' (ஒட்டகத்தைச் சிலைகளுக்காக நேர்ச்சை செய்து) திரியவிட்டவர் அவர்தான்.19
“வஸீலா' என்பது, முதல் ஈற்றிலும் இரண்டாம் ஈற்றிலும் பெண்குட்டி ஈனுகின்ற இளம் ஒட்டகமாகும்; இதை (அறியாமைக் கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிட்டுவந்தனர். இரண்டு (ஈற்று)க்குமத்தியில் ஆண்குட்டி ஈனாமல் ஒன்றை யடுத்து மற்றொன்றும் (பெண்குட்டியாக) அமைந்திருப்பதால் (இதை “தொடர்ந்து வரக்கூடியது' எனும் பொருளில்) “வஸீலா' என்று அழைத்தனர்.
“ஹாம்' என்பது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒட்டகங்களைச் சூல் கொள்ளச்செய்த (பொலி) ஒட்டகமாகும். இவ்வாறு சூல் கொள்ளச்செய்தபின் அந்த (பொலி) ஒட்டகத்தை (அறியாமைக் கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக அப்படியே விட்டுவந்தனர்; அதன் மீது சுமை ஏற்றாமல் விட்டுவிட்டனர்; எனவே, அதன் மீது சுமை எதுவும் ஏற்றப்படவில்லை. இதை “ஹாமீ' (தன் முதுகைப் பாதுகாத்துக்கொண்ட ஒட்டகம்) என்று பெயரிட்டு அழைத்தனர்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4623. சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“பஹீரா' என்பது, (அறியாமைக் காலச்) சிலைகளுக்காக (அவற்றின் பெயரால்) பால் கறக்கக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுவந்த ஒட்டகமாகும்; மக்களில் யாரும் அதன் பாலைக் கறக்கமாட்டார்கள்.
“சாயிபா' என்பது, (அறியாமைக் காலத்தில் நோய் குணமாதல் போன்ற தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்ற வேண்டுதலில்) சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரிய விடப்பட்டு வந்த ஒட்டகமாகும். அதன் மீது எந்தச் சுமையும் ஏற்றப்படுவதில்லை. (அது நினைத்த தண்ணீரில் வாய்வைக்கும்; நினைத்த நிலத்தில் மேயும்; யாரும் அதைத் தடுக்கமாட்டார்கள்.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அம்ர் பின் ஆமிர் அல்குஸாஈ' தமது குடலை இழுத்தபடி நரகத்தில் சென்று கொண்டிருப்பதை நான் கண்டேன். முதன் முதலாக “சாயிபா' (ஒட்டகத்தைச் சிலைகளுக்காக நேர்ச்சை செய்து) திரியவிட்டவர் அவர்தான்.19
“வஸீலா' என்பது, முதல் ஈற்றிலும் இரண்டாம் ஈற்றிலும் பெண்குட்டி ஈனுகின்ற இளம் ஒட்டகமாகும்; இதை (அறியாமைக் கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக (நேர்ந்து) சுதந்திரமாகத் திரியவிட்டுவந்தனர். இரண்டு (ஈற்று)க்குமத்தியில் ஆண்குட்டி ஈனாமல் ஒன்றை யடுத்து மற்றொன்றும் (பெண்குட்டியாக) அமைந்திருப்பதால் (இதை “தொடர்ந்து வரக்கூடியது' எனும் பொருளில்) “வஸீலா' என்று அழைத்தனர்.
“ஹாம்' என்பது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஒட்டகங்களைச் சூல் கொள்ளச்செய்த (பொலி) ஒட்டகமாகும். இவ்வாறு சூல் கொள்ளச்செய்தபின் அந்த (பொலி) ஒட்டகத்தை (அறியாமைக் கால) மக்கள் தங்கள் சிலைகளுக்காக அப்படியே விட்டுவந்தனர்; அதன் மீது சுமை ஏற்றாமல் விட்டுவிட்டனர்; எனவே, அதன் மீது சுமை எதுவும் ஏற்றப்படவில்லை. இதை “ஹாமீ' (தன் முதுகைப் பாதுகாத்துக்கொண்ட ஒட்டகம்) என்று பெயரிட்டு அழைத்தனர்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4624. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ أَبِي يَعْقُوبَ أَبُو عَبْدِ اللَّهِ الْكَرْمَانِيُّ، حَدَّثَنَا حَسَّانُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، رضى الله عنها قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " رَأَيْتُ جَهَنَّمَ يَحْطِمُ بَعْضُهَا بَعْضًا، وَرَأَيْتُ عَمْرًا يَجُرُّ قُصْبَهُ، وَهْوَ أَوَّلُ مَنْ سَيَّبَ السَّوَائِبَ ".
பாடம் : 13
(கால்நடைகள் சம்பந்தப்பட்ட சடங்குகளான) பஹீரா, சாயிபா, வஸீலா, ஹாம் என்பனவற்றை யெல்லாம் அல்லாஹ் ஏற்படுத்த வில்லை. மாறாக, (ஏக இறையை)மறுத்தோர்தான் அல்லாஹ்வின் மீது பொய்களைப் புனைந்து கூறுகின்றனர். அவர்களில் பெரும் பாலோர் விளங்கிக்கொள்வதில்லை (எனும் 5:103ஆவது இறைவசனம்)
(5:116ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ இஃத் காலல்லாஹ்' எனும் சொற்றொடரில் உள்ள “கால' (சொன்னான்) எனும் (இறந்தகால வினைச்)சொல்லுக்கு “சொல்வான்' என்று (எதிர்கால வினையின்) பொருளாகும்.
இந்த வசனத்திலுள்ள “இஃத்' எனும் சொல் “சொல்லிடை இணைப்புக் குறி' (ஸிலா) ஆகும்.
(5:112ஆவது வசனத்திலுள்ள வினையாலணையும் பெயரான) “அல்மாயிதா' எனும் சொல் உண்மையில் (பொருளைப் பொறுத்த வரை “விருந்தாக்கப்படும் உணவு' எனும்) செயப்பாட்டு எச்ச வினையாகும். “ஈஷத்துன் ராளியா' (திருப்தியான வாழ்க்கை), “தத்லீக்கத்துன் பாயினா' (பிரிவை ஏற்படுத்தும் மணவிலக்கு) ஆகிய சொற்றொடர்களைப் போல.
(இதன்படி “அல்மாயிதா' என்பதன்) சொற்பொருள் “விருந்தாளிக்கு அளிக்கப் படும் நல்ல உணவு' என்பதாகும்.
(“இஷ்திகாக்' எனும் “சொல் திரிபு வேறுபாட்டில்' இச்சொல்லை “ஃபஅல, யஃப்இலு' எனும் வாய்பாட்டில்) “மாத, யமீது' (உணவளித்தான், உணவளிப்பான்) என்றும் ஆளப்படுவதுண்டு.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(3:55ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முத்தவஃப்பீக்க' எனும் சொல்லுக்கு “உம்மை இறக்கச்செய்வோம்' என்பது கருத்தாகும்.18
4624. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைத் (தின்று) தகர்த்துக்கொண்டி ருப்பதை நான் கண்டேன். “அம்ர் (பின் ஆமிர் அல்குஸாஈ' நரகத்தில்) தன் குடலை இழுத்தபடி சென்றுகொண்டிருப்பதையும் கண்டேன். முதன் முதலாக ஒட்டகங்களைச் சிலைகளுக்காக (நேர்ச்சை செய்து) திரிய விட்டவர் அவர்தான்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 65
4624. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியைத் (தின்று) தகர்த்துக்கொண்டி ருப்பதை நான் கண்டேன். “அம்ர் (பின் ஆமிர் அல்குஸாஈ' நரகத்தில்) தன் குடலை இழுத்தபடி சென்றுகொண்டிருப்பதையும் கண்டேன். முதன் முதலாக ஒட்டகங்களைச் சிலைகளுக்காக (நேர்ச்சை செய்து) திரிய விட்டவர் அவர்தான்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 65
4625. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا الْمُغِيرَةُ بْنُ النُّعْمَانِ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَطَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " يَا أَيُّهَا النَّاسُ إِنَّكُمْ مَحْشُورُونَ إِلَى اللَّهِ حُفَاةً عُرَاةً غُرْلاً ـ ثُمَّ قَالَ ـ {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ} إِلَى آخِرِ الآيَةِ ـ ثُمَّ قَالَ ـ أَلاَ وَإِنَّ أَوَّلَ الْخَلاَئِقِ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيمُ، أَلاَ وَإِنَّهُ يُجَاءُ بِرِجَالٍ مِنْ أُمَّتِي فَيُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ يَا رَبِّ أُصَيْحَابِي. فَيُقَالُ إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ. فَأَقُولُ كَمَا قَالَ الْعَبْدُ الصَّالِحُ {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ} فَيُقَالُ إِنَّ هَؤُلاَءِ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ ".
பாடம் : 14
(மர்யமின் மைந்தர் ஈசா கூறினார்:) நான் அவர்களுடன் இருந்த வரையில், அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக் கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்! நீயோ அனைத்தையும் கண் காணிப்பவனாக இருக்கின்றாய் (எனும் 5:117ஆவது வசனத்தொடர்)
4625. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), “மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு, “எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போன்று நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) படைப்போம்” எனும் (21:104ஆவது) இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள்.
பிறகு, “அறிந்துகொள்ளுங்கள்: மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தான்.
அறிந்துகொள்ளுங்கள்: என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டுவரப்பட்டு, இடப்பக் கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். அப்போது நான், “என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்” என்று சொல்வேன். அதற்கு, “இவர்கள் உங்களு(டைய மரணத்து)க்குப்பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்று கூறப்படும்.
அப்போது நான், நல்லடியார் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போன்று, “நான் அவர்களுடன் இருந்தவரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்!” என்று பதிலளிப்பேன்.
அதற்கு, “இவர்களை நீங்கள் பிரிந்ததி óருந்து, இவர்கள் தங்கள் குதிகால் (சுவடு)களின் வழியே தமது மார்க்கத்திலிருந்து வெளியேறிக்கொண்டுதான் இருந்தார்கள்” என்று கூறப்படும்.20
அத்தியாயம் : 65
4625. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். (அதில்), “மக்களே! நீங்கள் (மறுமையில்) செருப்பணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாகவும், விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாகவும் அல்லாஹ்விடம் கொண்டுவரப்படுவீர்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு, “எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போன்று நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில், நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீண்டும் (அவர்களுக்கு உயிர் கொடுத்து) படைப்போம்” எனும் (21:104ஆவது) இறைவசனத்தை இறுதிவரை ஓதினார்கள்.
பிறகு, “அறிந்துகொள்ளுங்கள்: மறுமை நாளில் (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக்கப்படும் முதல் நபர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தான்.
அறிந்துகொள்ளுங்கள்: என் சமுதாயத்தாரில் சிலர் கொண்டுவரப்பட்டு, இடப்பக் கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். அப்போது நான், “என் இறைவா! (இவர்கள்) என் தோழர்களில் சிலர்” என்று சொல்வேன். அதற்கு, “இவர்கள் உங்களு(டைய மரணத்து)க்குப்பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்று உங்களுக்குத் தெரியாது” என்று கூறப்படும்.
அப்போது நான், நல்லடியார் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போன்று, “நான் அவர்களுடன் இருந்தவரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்!” என்று பதிலளிப்பேன்.
அதற்கு, “இவர்களை நீங்கள் பிரிந்ததி óருந்து, இவர்கள் தங்கள் குதிகால் (சுவடு)களின் வழியே தமது மார்க்கத்திலிருந்து வெளியேறிக்கொண்டுதான் இருந்தார்கள்” என்று கூறப்படும்.20
அத்தியாயம் : 65
4626. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الْمُغِيرَةُ بْنُ النُّعْمَانِ، قَالَ حَدَّثَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّكُمْ مَحْشُورُونَ، وَإِنَّ نَاسًا يُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ كَمَا قَالَ الْعَبْدُ الصَّالِحُ {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ} إِلَى قَوْلِهِ {الْعَزِيزُ الْحَكِيمُ }"
பாடம் : 15
“(இப்போது) நீ அவர்களுக்கு வேதனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடி யார்களே! நீ அவர்களை மன்னித் தாலும் (அப்போதும் அவர்கள் உன் அடியார்களே!) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய் (என்றும் மர்யமின் மைந்தர் ஈசா கூறுவார்)” எனும் (5:118ஆவது) இறைவசனம்
4626. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் (மறுமையில் உயிருடன்) எழுப்பப்படவிருக்கிறீர்கள். சிலபேர் இடப் பக்கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். அப்போது நான் நல்லடியார் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போல், “நான் அவர்களுடன் இருந்தவரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்! (இப்போது) நீ அவர்களுக்கு வேதனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும் அவர்கள் உன் அடியார்களே!) நீயே யாவற்றையும் மிகைத்தவ னும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்” (5:117,118) என்று சொல்வேன்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 65
4626. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் (மறுமையில் உயிருடன்) எழுப்பப்படவிருக்கிறீர்கள். சிலபேர் இடப் பக்கத்(திலுள்ள நரகத்)திற்குக் கொண்டுசெல்லப்படுவார்கள். அப்போது நான் நல்லடியார் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போல், “நான் அவர்களுடன் இருந்தவரையில் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய்! (இப்போது) நீ அவர்களுக்கு வேதனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன்னுடைய அடியார்களே! நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும் அவர்கள் உன் அடியார்களே!) நீயே யாவற்றையும் மிகைத்தவ னும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்” (5:117,118) என்று சொல்வேன்.
இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 65
4627. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَفَاتِحُ الْغَيْبِ خَمْسٌ إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ، وَيُنَزِّلُ الْغَيْثَ، وَيَعْلَمُ مَا فِي الأَرْحَامِ، وَمَا تَدْرِي نَفْسٌ مَاذَا تَكْسِبُ غَدًا، وَمَا تَدْرِي نَفْسٌ بِأَىِّ أَرْضٍ تَمُوتُ، إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ ".
பாடம்:
6. “அல்அன்ஆம்' அத்தியாயம்1
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(6:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃபித்னத்துஹும்' எனும் சொல்லுக்கு “அவர்கள் கூறும் காரணம், (அல்லது) சாக்குப்போக்கு' என்பது பொருள்.
(6:141ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மஅரூஷாத்' எனும் சொல்லுக்கு “திராட்சை முதலான (பந்தல்களில்) படரும் கொடிகள்” என்பது பொருள்.
(6:142ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹமூலத்' எனும் சொல்லுக்கு “சுமை சுமக்கும் பிராணி' என்று பொருள்.
(6:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “லபஸ்னா' எனும் சொல்லுக்கு “நாம் சந்தேகத்தில் ஆழ்த்தியவர்களாகியிருப்போம்' என்று பொருள்.
(6:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யன்அவ்ன' எனும் சொல்லுக்கு “தொலைவாகிவிடுகிறார்கள்' என்பது பொருள்.
(6:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “துப்சல' எனும் சொல்லுக்கு “இழிவுபடுத்தப்படும்' என்று பொருள். “உப்சிலூ' என்பதற்கு “அவர்கள் இழிவுபடுத்தப் பட்டனர்' என்று பொருள்.
(6:93ஆவது வசனத்தின் மூலத்தில்) “பாசித்தூ அய்தீஹிம்' என்பதிலுள்ள (பாசித்தூ எனும் சொல்லின் வேர்ச்சொல்லான) “அல்பஸ்த்' எனும் சொல்லுக்கு “அடித்தல்' என்பது பொருள்.
(6:128ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஸ்தக்ஸர்த்தும்' எனும் சொல்லுக்கு “பலரைக் கெடுத்துவிட்டீர்கள்' என்பது பொருள்.
(6:136ஆவது வசனத்தின் விளக்கமாவது:) இணைவைப்பாளர்கள் தங்களின் (பயிர், கால்நடை முதலியவற்றின்) பலன்களிலிருந்தும் செல்வத்திலிருந்தும் ஒரு பகுதியை அல்லாஹ்வுக்கென்றும், மற்றொரு பகுதியை ஷைத்தான் மற்றும் சிலைகளுக்கென்றும் படைக்கின்றனர்.
(6:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அகின்னத்' (திரைகள்) எனும் சொல்லின் ஒருமை: கினான்.
(6:143ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அம்மஷ்த்தமலத்' எனும் சொற்றொடரின் விளக்கமாவது: ஆண், பெண் ஆகிய இரு வகைகளையே ஆடுகள் கர்ப்பத்தில் சுமக்கின்றன. பிறகேன் (சில கால்நடைகளின் வயிற்றிலுள்ளவற்றை) சிலருக்குத் தடை விதிக்கிறீர்கள்; மற்றச் சிலருக்கு அனுமதிக்கிறீர்கள் (என்பதாகும்).2
(6:145ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மஸ்ஃபூஹ்' (வடியக்கூடிய) எனும் சொல்லுக்கு “சிந்தப்படும் (இரத்தம்)' என்பது பொருள்.
(6:157ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஸதஃப' எனும் சொல்லுக்கு “புறக் கணித்தான்' என்பது பொருள்.
(6:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “முப்லிசூன்' (“நம்பிக்கை இழந்தவர்கள்') எனும் சொல்லின் வினைச்சொல்லான) “உப்லிசூ' எனும் சொல்லுக்கு “நம்பிக்கை இழந்து (செயலற்று)விட்டனர்' என்பது பொருள்.
(6:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “உப்சிலூ' எனும் சொல்லுக்கு “(அழிவுக்கு) ஆளாக்கப்பட்டார்கள்' என்பது பொருள்.
(6:96ஆவது வசனத்தின் கருத்தில் அமைந்த 28:71ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “சர்மதன்' எனும் சொல்லுக்கு “நிரந்தரமானது' என்பது பொருள்.
(6:71ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஸ்தஹ்வத்ஹு' எனும் சொல்லுக்கு “அவனை வழிதவற செய்துவிட்டன' என்பது பொருள்.
(6:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தம்தரூன்' எனும் சொல்லுக்கு “நீங்கள் சந்தேகப்படுகிறீர்கள்' என்று பொருள்.
(6:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வக்ர்' எனும் சொல்லுக்கு “செவிட்டுத்தனம்' என்பது பொருள். (இதே சொல்லின் இகரமான) “விக்ர்' எனும் சொல்லுக்கு “சுமை' என்பது பொருள்.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “அசாத்தீர்' எனும் சொல்லுக்கு “கட்டுக்கதைகள்' என்பது பொருள். இதன் ஒருமை “உஸ்த்தூரத்' மற்றும் “இஸ்த்தாரத்' ஆகும்.
(6:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்பஃஸா' எனும் சொல், “பஃஸ்' (துன்பம்) எனும் சொல்லிருந்து பிறந்ததாகும். “புஃஸ்' (வறுமை) எனும் சொல்லிருந்தும் பிறந்திருக்கலாம்.
(6:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “—ஹ்ரத்' எனும் சொல்லுக்கு “நேருக்கு நேர்' என்பது பொருள்.
(6:73ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஸ்ஸுவர்' எனும் சொல் “ஸƒரத்' (உருவம்) எனும் சொல்லின் பன்மையாகும். “சூரத்' (எல்லைச் சுவர்) என்பதையும் (அதன் பன்மையான) “சுவர்' (எல்லைச் சுவர்கள்) என்பதையும் போல்.3
(6:75ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மலக்கூத்' எனும் சொல்லுக்கு “ஆட்சி' என்பது பொருள். (“மலக்கூத்' என்பதிலுள்ள இறுதி எழுத்துகளான வாவும் தாவும் அதிகப்படியானவை; எவ்வாறென்றால்) “ரஹபூத் கைருன் மின் ரஹமூத்' என்ப(தில் உள்ள ரஹபூத், ரஹமூத் ஆகிய சொற்களின் இறுதியிலுள்ள வாவும் தாவும் கூடுதலானவையாக இருப்ப)தைப் போல. இதையே, “துர்ஹபு கைருன் மின் அன் துர்ஹம” என்றும் கூறலாம்.4
(6:76ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “—ன்ன' எனும் சொல்லுக்கு “இருள் கவ்வியது' என்பது பொருள்.
(6:100ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தஆலா' எனும் சொல்லுக்கு “உயர்ந்தான்' என்பது பொருள்.
(6:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இன் தஅதில்' என்று தொடங்கும் வசனத்திற்கு “பிரதியாகக் கொடுத்தால், அந்நாளில் அது அங்கீகரிக்கப்படமாட்டாது' என்று பொருள்.
(6:96ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹுஸ்பான்' எனும் சொல்லுக்கு “(காலத்தின்) கணக்கை அறிதல்' என்பது பொருள். “அலல்லாஹி ஹுஸ்பானுஹு' (“அதன் கணக்கு வழக்கு அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது') என்று கூறப் படுவதுண்டு. “ஹுஸ்பான்' எனும் (இந்தச்) சொல்லுக்கு “(வானுலகச் செய்திகளை) ஒட்டுக்கேட்க வரும் ஷைத்தான்களை நோக்கி எறியப்படும் அம்பு' என்ற பொருளும் உண்டு.
(6:98ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முஸ்தகர்ருன்' எனும் சொல்லுக்கு “(தந்தையின்) முதுகந்தண்டில் தங்கவைக்கப்பட்டது' என்பது பொருள். “முஸ்தவ்தஉன்' எனும் சொல்லுக்கு “(தாயின்) கர்ப்பத்தில் பாதுகாக்கப்பட்டது' என்பது பொருள்.
(6:99ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கின்வான்' எனும் சொல்லுக்கு “பழக் குலைகள்' என்பது பொருள். இதன் ஒருமை “கின்வ்' என்பதாகும். இதன் இருமை “கின்வானி' என்பதாகும். பன்மையும் “கின்வான்' என்பதே ஆகும். “சின்வ்' (ஒருமை;) “சின்வான்' (இருமை மற்றும் பன்மை) என்பதைப்போல. (ஒரே வேரிலிருந்து தோன்றும் இரு பேரீச்சமரங்கள் என்பது இதன் பொருளாகும்.)
பாடம் : 1
மறைவானவற்றின் திறவுகோல்கள் அல்லாஹ்விடமே உள்ளன. அவற்றை அவனைத் தவிர வேறு யாரும் அறிவதில்லை (எனும் 6:59ஆவது வசனத்தொடர்)
4627. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். (ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்:) “நிச்சயமாக (இறுதித் தீர்ப்பிற்குரிய) அந்த நேரத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கின்றான். (பெண்களின்) கருப்பைகளில் இருப்பவற்றையும் அவனே அறிவான். எந்த மனிதனும், அவன் நாளை என்ன சம்பாதிக்கப்போகிறான் என்பதை அறிவதில்லை. தாம் எந்த இடத்தில் மரணிப்பார் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. நிச்சயமாக, அல்லாஹ்தான் (யாவற்றையும்) நன்கு அறிந்தவனாகவும் நுண்ணறிவுள்ளவனாகவும் இருக்கின் றான். (31:34)5
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6
அத்தியாயம் : 65
4627. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும். (ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்:) “நிச்சயமாக (இறுதித் தீர்ப்பிற்குரிய) அந்த நேரத்தைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையைப் பொழிவிக்கின்றான். (பெண்களின்) கருப்பைகளில் இருப்பவற்றையும் அவனே அறிவான். எந்த மனிதனும், அவன் நாளை என்ன சம்பாதிக்கப்போகிறான் என்பதை அறிவதில்லை. தாம் எந்த இடத்தில் மரணிப்பார் என்பதும் எந்த மனிதருக்கும் தெரியாது. நிச்சயமாக, அல்லாஹ்தான் (யாவற்றையும்) நன்கு அறிந்தவனாகவும் நுண்ணறிவுள்ளவனாகவும் இருக்கின் றான். (31:34)5
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6
அத்தியாயம் : 65
4628. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ {قُلْ هُوَ الْقَادِرُ عَلَى أَنْ يَبْعَثَ عَلَيْكُمْ عَذَابًا مِنْ فَوْقِكُمْ} قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَعُوذُ بِوَجْهِكَ ". قَالَ {أَوْ مِنْ تَحْتِ أَرْجُلِكُمْ} قَالَ " أَعُوذُ بِوَجْهِكَ" {أَوْ يَلْبِسَكُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَكُمْ بَأْسَ بَعْضٍ} قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَذَا أَهْوَنُ ". أَوْ " هَذَا أَيْسَرُ ".
பாடம் : 2
“(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்களின் கால்களுக்குக் கீழிருந்தோ ஏதேனுமொரு வேத னையை உங்கள்மீது அனுப்பவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்” எனும் (6:65ஆவது) வசனத்தொடர்
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “யல்பிசகும்' எனும் சொல்லுக்கு “கலந்துவிடுவது' என்பது பொருள். இது “இல்த்திபாஸ்' எனும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
“ஷியஉ' எனும் சொல்லுக்கு “பிரிவுகள்' என்பது பொருள்.
4628. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்கள் கால்களுக்குக் கீழேயிருந்தோ ஏதேனுமொரு வேத னையை உங்கள்மீது அனுப்பவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக் களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்” எனும் (6:65ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, “உங்களுக்கு மேலிருந்து ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கிவைக்கவும் அவன் ஆற்றலுள்ளவன்” என்பதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இறைவா!) உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறினார்கள்.
“உங்கள் கால்களுக்குக் கீழேயிருந்து' என்பதைக் கேட்டவுடன் நபி (ஸல்) அவர்கள், “உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறினார்கள். “அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும்” என்பதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (முந்தைய வேதனைகளைவிட) “எளிதானது' அல்லது “இது சுலபமானது' ஆகும்” என்று சொன்னார்கள்.7
அத்தியாயம் : 65
4628. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(நபியே!) கூறுக: உங்களுக்கு மேலிருந்தோ உங்கள் கால்களுக்குக் கீழேயிருந்தோ ஏதேனுமொரு வேத னையை உங்கள்மீது அனுப்பவும், அல்லது உங்களைப் பல்வேறு குழுக் களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும் அவன் ஆற்றலுள்ளவன்” எனும் (6:65ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, “உங்களுக்கு மேலிருந்து ஏதேனுமொரு வேதனையை உங்கள்மீது இறக்கிவைக்கவும் அவன் ஆற்றலுள்ளவன்” என்பதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இறைவா!) உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறினார்கள்.
“உங்கள் கால்களுக்குக் கீழேயிருந்து' என்பதைக் கேட்டவுடன் நபி (ஸல்) அவர்கள், “உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறினார்கள். “அல்லது உங்களைப் பல்வேறு குழுக்களாகப் பிரித்து உங்களில் சிலர் தரும் துன்பத்தை மற்றச் சிலர் சுவைக்கும்படி செய்யவும்” என்பதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (முந்தைய வேதனைகளைவிட) “எளிதானது' அல்லது “இது சுலபமானது' ஆகும்” என்று சொன்னார்கள்.7
அத்தியாயம் : 65
4629. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ {وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} قَالَ أَصْحَابُهُ وَأَيُّنَا لَمْ يَظْلِمْ فَنَزَلَتْ {إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ}
பாடம் : 3
எவர் (இறை)நம்பிக்கை கொண்டு பிறகு தமது நம்பிக்கையுடன் அநீதியைக் கலக்கவில்லையோ அவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நல்வழி அடைந்தவர்கள் ஆவர் (எனும் 6:82ஆவது இறைவசனம்)
4629. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“எவர் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலக்கவில்லையோ அவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நல்வழி பெற்றவர்கள் ஆவர்” எனும் (6:82ஆவது) வசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்கள், “எங்களில் எவர்தான் (தமக்குத் தாமே) அநீதியிழைக்கவில்லை?” என்று கேட்டனர். அப்போது, “இணைவைப்புத்தான் மாபெரும் அநீதியாகும்” எனும் (31:13ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.8
அத்தியாயம் : 65
4629. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“எவர் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலக்கவில்லையோ அவர்களுக்கு உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நல்வழி பெற்றவர்கள் ஆவர்” எனும் (6:82ஆவது) வசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்கள், “எங்களில் எவர்தான் (தமக்குத் தாமே) அநீதியிழைக்கவில்லை?” என்று கேட்டனர். அப்போது, “இணைவைப்புத்தான் மாபெரும் அநீதியாகும்” எனும் (31:13ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.8
அத்தியாயம் : 65
4630. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، قَالَ حَدَّثَنِي ابْنُ عَمِّ، نَبِيِّكُمْ يَعْنِي ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ".
பாடம் : 4
“(நம் தூதர்களாகிய) இஸ்மாயீல், அல்யசஉ, யூனுஸ், லூத் (ஆகியோரையும் நாம் நல்வழியில் செலுத்தினோம்). அகிலத்தார் அனைவரையும்விட இவர்கள் ஒவ்வொருவரையும் நாம் மேன்மை யாக்கினோம்” எனும் (6:86ஆவது) இறைவசனம்
4630. அபுல்ஆலியா ருஃபைஉ பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உங்கள் நபியினுடைய தந்தையின் சகோதரருடைய புதல்வர், அதாவது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எனக்கு அறிவித்தார்கள்:
“நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன்” என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது.9
அத்தியாயம் : 65
4630. அபுல்ஆலியா ருஃபைஉ பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
உங்கள் நபியினுடைய தந்தையின் சகோதரருடைய புதல்வர், அதாவது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எனக்கு அறிவித்தார்கள்:
“நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன்” என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது.9
அத்தியாயம் : 65
4631. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ سَمِعْتُ حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ".
பாடம் : 4
“(நம் தூதர்களாகிய) இஸ்மாயீல், அல்யசஉ, யூனுஸ், லூத் (ஆகியோரையும் நாம் நல்வழியில் செலுத்தினோம்). அகிலத்தார் அனைவரையும்விட இவர்கள் ஒவ்வொருவரையும் நாம் மேன்மை யாக்கினோம்” எனும் (6:86ஆவது) இறைவசனம்
4631. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன்” என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் முறையாகாது.10
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 65
4631. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன்” என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த மனிதருக்கும் முறையாகாது.10
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 65
4632. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي سُلَيْمَانُ الأَحْوَلُ، أَنَّ مُجَاهِدًا، أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ ابْنَ عَبَّاسٍ أَفِي " ص " سَجْدَةٌ فَقَالَ نَعَمْ. ثُمَّ تَلاَ {وَوَهَبْنَا} إِلَى قَوْلِهِ {فَبِهُدَاهُمُ اقْتَدِهْ} ثُمَّ قَالَ هُوَ مِنْهُمْ. زَادَ يَزِيدُ بْنُ هَارُونَ وَمُحَمَّدُ بْنُ عُبَيْدٍ وَسَهْلُ بْنُ يُوسُفَ عَنِ الْعَوَّامِ عَنْ مُجَاهِدٍ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ فَقَالَ نَبِيُّكُمْ صلى الله عليه وسلم مِمَّنْ أُمِرَ أَنْ يَقْتَدِيَ بِهِمْ.
பாடம் : 5
“(நபியே!) அல்லாஹ்வால் நல்வழியில் செலுத்தப்பட்டவர்கள்தான் இவர்கள். ஆகவே, இவர்களின் நல்வழியையே நீரும் பின்பற்று வீராக!” எனும் (6:90ஆவது) வசனத்தொடர்
4632. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “ஸாத் (எனும் 38ஆவது) அத்தியாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா உண்டா?” என்று கேட்டேன். அவர்கள், “ஆம் (38:24ஆவது வசனத்தில் சஜ்தா உண்டு)” என்று கூறிவிட்டு, “நாம் இப்ராஹீமுக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் (சந்ததி களாக) வழங்கினோம்” என்று தொடங்கி, “இவர்களுடைய நல்வழியையே நீரும் பின்பற்றுவீராக!” என்பதுவரை (6:84-90 வசனங்களை) ஓதினார்கள்.
பிறகு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “தாவூத் (அலை) அவர்கள் இந்த (வசனத் தில் கூறப்பட்டுள்ள) இறைத்தூதர்களில் ஒருவர்தான்” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் பிந்திய மூன்று தொடர்களில் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூடுதலாகக் கூறுகிறார்கள்:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டேன். அதற்கு அவர்கள், “முந்தைய இறைத்தூதர்களைப் பின்பற்றும்படி கட்டளையிடப் பட்டவர்களில் உங்கள் நபி (ஸல்) அவர்களும் ஒருவர்தான்” என்று சொன்னார்கள்.11
அத்தியாயம் : 65
4632. முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “ஸாத் (எனும் 38ஆவது) அத்தியாயத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா உண்டா?” என்று கேட்டேன். அவர்கள், “ஆம் (38:24ஆவது வசனத்தில் சஜ்தா உண்டு)” என்று கூறிவிட்டு, “நாம் இப்ராஹீமுக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் (சந்ததி களாக) வழங்கினோம்” என்று தொடங்கி, “இவர்களுடைய நல்வழியையே நீரும் பின்பற்றுவீராக!” என்பதுவரை (6:84-90 வசனங்களை) ஓதினார்கள்.
பிறகு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “தாவூத் (அலை) அவர்கள் இந்த (வசனத் தில் கூறப்பட்டுள்ள) இறைத்தூதர்களில் ஒருவர்தான்” என்று சொன்னார்கள்.
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் பிந்திய மூன்று தொடர்களில் முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூடுதலாகக் கூறுகிறார்கள்:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (மேற்கண்டவாறு) கேட்டேன். அதற்கு அவர்கள், “முந்தைய இறைத்தூதர்களைப் பின்பற்றும்படி கட்டளையிடப் பட்டவர்களில் உங்கள் நபி (ஸல்) அவர்களும் ஒருவர்தான்” என்று சொன்னார்கள்.11
அத்தியாயம் : 65
4633. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، قَالَ عَطَاءٌ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" قَاتَلَ اللَّهُ الْيَهُودَ، لَمَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِمْ شُحُومَهَا جَمَلُوهُ ثُمَّ بَاعُوهُ فَأَكَلُوهَا "".
وَقَالَ أَبُو عَاصِمٍ حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ، حَدَّثَنَا يَزِيدُ، كَتَبَ إِلَىَّ عَطَاءٌ سَمِعْتُ جَابِرًا، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 6
நகமுடைய பிராணிகள் ஒவ்வொன்றையும் யூதர்களுக்கு நாம் தடை செய்திருந்தோம். அவர்களுக்கு ஆடு மாடுகளின் கொழுப்பையும் தடை செய்திருந்தோம் (எனும் 6:146ஆவது இறைவசனம்)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நகமுடைய ஒவ்வொரு பிராணியும் என்பது, ஒட்டகத்தையும் தீக்கோழியையும் குறிக்கும். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹவாயா' என்பது குடல்களைக் குறிக்கும்.12
மற்றவர்கள் கூறுகின்றனர்:
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹாதூ' என்பதற்கு “யூதர்களாய் ஆகிவிட்டவர்கள்' என்பது பொருள்.
(இதே சொல்லிலிருந்து பிறந்த 7:156ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹுத்னா' என்பதற்கு “பாவமன்னிப்புக் கோரினோம்' என்பது பொருள். (இதன் வினையாலணையும் பெயரான) “ஹாயித்' என்பதற்கு “பாவமன்னிப்புக் கோருகின்றவர்' என்பது பொருள்.
4633. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யூதர்களைத் தன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்கு அல்லாஹ் செத்த பிராணி களின் கொழுப்புகளை (ஹராமாக்கித்) தடை செய்தபோது அதை அவர்கள் உருக்கி அத(ன் விலையி)னை உட்கொண்டார்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.13
அத்தியாயம் : 65
4633. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ் யூதர்களைத் தன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அவர்களுக்கு அல்லாஹ் செத்த பிராணி களின் கொழுப்புகளை (ஹராமாக்கித்) தடை செய்தபோது அதை அவர்கள் உருக்கி அத(ன் விலையி)னை உட்கொண்டார்கள்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.13
அத்தியாயம் : 65
4634. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ " لاَ أَحَدَ أَغْيَرُ مِنَ اللَّهِ، وَلِذَلِكَ حَرَّمَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَلاَ شَىْءَ أَحَبُّ إِلَيْهِ الْمَدْحُ مِنَ اللَّهِ، لِذَلِكَ مَدَحَ نَفْسَهُ ". قُلْتُ سَمِعْتَهُ مِنْ عَبْدِ اللَّهِ قَالَ نَعَمْ. قُلْتُ وَرَفَعَهُ قَالَ نَعَمْ.
பாடம் : 7
“மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவா னவை எதையும் நெருங்காதீர் கள்” எனும் (6:151ஆவது) வசனத்தொடர்
4634. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால் தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்க மானவை அனைத்திற்கும் அல்லாஹ் தடை விதித்துள்ளான். தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்” (என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்).
அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம், “இதை நீங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக் கேட்டீர்களா?” என்று கேட்க, அவர்கள், “ஆம்' என்று பதிலளித்தார்கள். நான், “இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்களா?” என்று கேட்க, அவர்கள், “ஆம்' என்று பதில் சொன்னார்கள்.
அத்தியாயம் : 65
4634. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுள்ளவர் வேறெவருமிலர். அதனால் தான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, அந்தரங்க மானவை அனைத்திற்கும் அல்லாஹ் தடை விதித்துள்ளான். தன்னைப் புகழ்வதைவிட அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமானது எதுவுமில்லை. ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்து கொண்டுள்ளான்” (என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்).
அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம், “இதை நீங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து (நேரடியாகக் கேட்டீர்களா?” என்று கேட்க, அவர்கள், “ஆம்' என்று பதிலளித்தார்கள். நான், “இதை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்களா?” என்று கேட்க, அவர்கள், “ஆம்' என்று பதில் சொன்னார்கள்.
அத்தியாயம் : 65
4635. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا عُمَارَةُ، حَدَّثَنَا أَبُو زُرْعَةَ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، رضى الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا، فَإِذَا رَآهَا النَّاسُ آمَنَ مَنْ عَلَيْهَا، فَذَاكَ حِينَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا، لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ ".
பாடம் : 8
(6:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ(க்)கீல்' எனும் சொல்லுக்கு “கண்காணித்துப் பாதுகாப்பவன்' என்பது பொருள்.
(6:111ஆவது வசனத்தின் மூலத்திலுள்) “குபுல்' எனும் சொல் கபீல் எனும் சொல்லின் பன்மையாகும். “பல வகை வேதனைகள்' என்பது அதன் பொருளாகும். ஒவ்வொரு வகையும் “கபீல்' எனப்படும்.
(6:112ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) “ஸுக்ருஃபுல் கவ்ல்' எனும் சொற்றொடரானது, எழிலூட்டி அலங் கரித்துக்காட்டும் எல்லா போலிகளையும் குறிக்கும்.
(6:138ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “ஹிஜ்ர்' எனும் சொல்லுக்கு “தடுக்கப்பட்டது' என்பது பொருள். தடை விதிக்கப்பட்ட எல்லாப் பொருட்களுக்கும் “ஹிஜ்ருன் மஹ்ஜூர்' எனப்படும். நீ கட்டி முடித்த கட்டடங்களுக்கும் “அல்ஹிஜ்ர்' எனலாம். பெட்டைக் குதிரையும் “ஹிஜ்ர்' எனப்படுகிறது. (அதைப் போன்று) அறிவுக்கும் “ஹிஜ்ர்' என்றும், “ஹிஜா' என்றும் சொல்லப்படுவதுண்டு.
“ஸமூத்' குலத்தார் வாழ்ந்த பகுதியும் “ஹிஜ்ர்' எனப்படுவதுண்டு.
தரையில் நீ பிரித்துவிட்ட பகுதியும் “ஹிஜ்ர்' எனப்படும். இதனால்தான், இறையில்லம் கஅபாவை ஒட்டியுள்ள “ஹத்தீம்' (எனும் வில் வடிவ அமைப்பிலுள்ள கால் வட்டச் சுவரும்) “ஹிஜ்ர்' (பிரிக்கப்பட்டது) எனப்படுகிறது.
(“ஃபஈல்' எனும் வாய்பாட்டில் அமைந்த இந்த) “ஹத்தீம்' எனும் சொல் (செயப்பாட்டுவினை எச்சமான) “மஹ்த்தூம்' (பிரிக்கப்பட்டது) என்ற பொருள் கொண்டதாகும். “கத்தீல்' என்பதற்கு “மக்த்தூல்' (கொல்லப்பட்டவன்) உடைய பொருள் இருப்பதைப் போல.
யமாமாவின் “ஹஜ்ர்' என்பது, (யமனுக்கும் ஹிஜாஸுக்கும் இடையிலுள்ள) ஒரு பகுதியாகும்.
பாடம் : 9
“உங்கள் சாட்சிகளைக் கொண்டுவாருங்கள்” எனும் (6:150ஆவது) வசனத்தொடர்
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹலும்ம' (கொண்டுவாருங்கள்) எனும் சொல் ஹிஜாஸ்வாசிகளின் மொழி வழக்குப்படி ஒருமைக்கும் இருமைக்கும் பன்மைக்கும் ஆக, அனைத்துக்குமே பயன்படுத்தப்படுவதாகும்.
பாடம் : 10
உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (யுகமுடிவு) நாளன்று, முன்னரே இறைநம்பிக்கை கொள்ளா திருந்த மனிதருக்கோ, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந் தாலும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கோ அவர் (அப்போது) இறைநம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது (எனும் 6:158ஆவது வசனத்தொடர்)
4635. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு மேற்கில் உதயமாவதை மக்கள் பார்க்கும்போது, பூமியின் மீதிருப்பவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்கள். அதற்கு முன் இறைநம்பிக்கை கொள்ளாமலிருந்த எந்த மனிதருக்கும் அவர் (அப்போது) கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத வேளையாய் அது இருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 65
4635. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை மறுமை நாள் வராது. அவ்வாறு மேற்கில் உதயமாவதை மக்கள் பார்க்கும்போது, பூமியின் மீதிருப்பவர்கள் இறைநம்பிக்கை கொள்வார்கள். அதற்கு முன் இறைநம்பிக்கை கொள்ளாமலிருந்த எந்த மனிதருக்கும் அவர் (அப்போது) கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காத வேளையாய் அது இருக்கும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 65
4636. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا فَإِذَا طَلَعَتْ وَرَآهَا النَّاسُ آمَنُوا أَجْمَعُونَ، وَذَلِكَ حِينَ لاَ يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا ". ثُمَّ قَرَأَ الآيَةَ.
பாடம் : 8
(6:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ(க்)கீல்' எனும் சொல்லுக்கு “கண்காணித்துப் பாதுகாப்பவன்' என்பது பொருள்.
(6:111ஆவது வசனத்தின் மூலத்திலுள்) “குபுல்' எனும் சொல் கபீல் எனும் சொல்லின் பன்மையாகும். “பல வகை வேதனைகள்' என்பது அதன் பொருளாகும். ஒவ்வொரு வகையும் “கபீல்' எனப்படும்.
(6:112ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) “ஸுக்ருஃபுல் கவ்ல்' எனும் சொற்றொடரானது, எழிலூட்டி அலங் கரித்துக்காட்டும் எல்லா போலிகளையும் குறிக்கும்.
(6:138ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “ஹிஜ்ர்' எனும் சொல்லுக்கு “தடுக்கப்பட்டது' என்பது பொருள். தடை விதிக்கப்பட்ட எல்லாப் பொருட்களுக்கும் “ஹிஜ்ருன் மஹ்ஜூர்' எனப்படும். நீ கட்டி முடித்த கட்டடங்களுக்கும் “அல்ஹிஜ்ர்' எனலாம். பெட்டைக் குதிரையும் “ஹிஜ்ர்' எனப்படுகிறது. (அதைப் போன்று) அறிவுக்கும் “ஹிஜ்ர்' என்றும், “ஹிஜா' என்றும் சொல்லப்படுவதுண்டு.
“ஸமூத்' குலத்தார் வாழ்ந்த பகுதியும் “ஹிஜ்ர்' எனப்படுவதுண்டு.
தரையில் நீ பிரித்துவிட்ட பகுதியும் “ஹிஜ்ர்' எனப்படும். இதனால்தான், இறையில்லம் கஅபாவை ஒட்டியுள்ள “ஹத்தீம்' (எனும் வில் வடிவ அமைப்பிலுள்ள கால் வட்டச் சுவரும்) “ஹிஜ்ர்' (பிரிக்கப்பட்டது) எனப்படுகிறது.
(“ஃபஈல்' எனும் வாய்பாட்டில் அமைந்த இந்த) “ஹத்தீம்' எனும் சொல் (செயப்பாட்டுவினை எச்சமான) “மஹ்த்தூம்' (பிரிக்கப்பட்டது) என்ற பொருள் கொண்டதாகும். “கத்தீல்' என்பதற்கு “மக்த்தூல்' (கொல்லப்பட்டவன்) உடைய பொருள் இருப்பதைப் போல.
யமாமாவின் “ஹஜ்ர்' என்பது, (யமனுக்கும் ஹிஜாஸுக்கும் இடையிலுள்ள) ஒரு பகுதியாகும்.
பாடம் : 9
“உங்கள் சாட்சிகளைக் கொண்டுவாருங்கள்” எனும் (6:150ஆவது) வசனத்தொடர்
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) “ஹலும்ம' (கொண்டுவாருங்கள்) எனும் சொல் ஹிஜாஸ்வாசிகளின் மொழி வழக்குப்படி ஒருமைக்கும் இருமைக்கும் பன்மைக்கும் ஆக, அனைத்துக்குமே பயன்படுத்தப்படுவதாகும்.
பாடம் : 10
உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (யுகமுடிவு) நாளன்று, முன்னரே இறைநம்பிக்கை கொள்ளா திருந்த மனிதருக்கோ, அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந் தாலும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கோ அவர் (அப்போது) இறைநம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது (எனும் 6:158ஆவது வசனத்தொடர்)
4636. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை யுக முடிவு நாள் வராது. சூரியன் (மேற்குத் திசையில்) உதயமாகி மக்கள் அதைப் பார்க்கும்போது அவர்கள் அனைவருமே இறைநம்பிக்கை கொள்வார்கள். அது, எந்த மனிதருக்கும் அவரது (அப்போதைய புதிய) இறைநம்பிக்கை பயனளிக்காத நேரமாகும்” என்று கூறிவிட்டு, “உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (யுகமுடிவு) நாளில் முன்னரே இறைநம்பிக்கை கொள்ளாதிருந்த மனிதருக்கும், அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கும் அவர் (அப்போது) இறைநம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது” எனும் இந்த (6:158ஆவது) வசனத்தை ஓதினார்கள்.14
அத்தியாயம் : 65
4636. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சூரியன் மேற்குத் திசையிலிருந்து உதயமாகாத வரை யுக முடிவு நாள் வராது. சூரியன் (மேற்குத் திசையில்) உதயமாகி மக்கள் அதைப் பார்க்கும்போது அவர்கள் அனைவருமே இறைநம்பிக்கை கொள்வார்கள். அது, எந்த மனிதருக்கும் அவரது (அப்போதைய புதிய) இறைநம்பிக்கை பயனளிக்காத நேரமாகும்” என்று கூறிவிட்டு, “உம்முடைய இறைவனின் சான்றுகள் சில வெளிப்படும் (யுகமுடிவு) நாளில் முன்னரே இறைநம்பிக்கை கொள்ளாதிருந்த மனிதருக்கும், அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தும் அதற்கேற்ப நன்மை புரியாதிருந்த மனிதருக்கும் அவர் (அப்போது) இறைநம்பிக்கை கொள்வது எவ்விதப் பயனையும் அளிக்காது” எனும் இந்த (6:158ஆவது) வசனத்தை ஓதினார்கள்.14
அத்தியாயம் : 65
4637. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ أَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ عَبْدِ اللَّهِ قَالَ نَعَمْ، وَرَفَعَهُ. قَالَ " لاَ أَحَدَ أَغْيَرُ مِنَ اللَّهِ، فَلِذَلِكَ حَرَّمَ الْفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ، وَلاَ أَحَدَ أَحَبُّ إِلَيْهِ الْمِدْحَةُ مِنَ اللَّهِ، فَلِذَلِكَ مَدَحَ نَفْسَهُ ".
பாடம்:
7. “அல்அஃராஃப்' அத்தியாயம்1
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(7:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “ரீஷ்' எனும் சொல், மற்றோர் ஓதல் முறையில் “ரியாஷ்' என்று வந்துள்ளது. அந்த) “ரியாஷ்' எனும் சொல்லுக்கு “செல்வச் செழிப்பு' என்பது பொருள்.
(7:55ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ள) “நிச்சயமாக அவன் எல்லை மீறுவோரை நேசிப்பதில்லை” எனும் தொடருக்கு, துஆ (பிரார்த்தனை) முதலானவற்றில் வரம்பு மீறுவோரை என்பது பொருள்.
(7:95ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஃபவ்' எனும் சொல்லுக்கு, “அவர்களின் எண்ணிக்கையும் அவர்களது சொத்து பத்துக்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது” என்று பொருள்.
(7:89ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஃப்தஹ் பைனனா' எனும் சொற்றொடருக்கு, “எங்களிடையே தீர்ப்பளி' என்று பொருள். (இச்சொல்லில் இருந்து வந்த 34:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்ஃபத்தாஹ்' எனும் சொல்லுக்கு “தீர்ப்பளிப்பவன்' என்பது பொருள்.
(7:171ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நத்தக்னல் ஜபல' எனும் வாக்கியத்திற்கு “அந்த (சினாய்) மலையை நாம் உயர்த்தினோம்' என்று பொருள்.
(7:160ஆவது வசனத்தில்) “பீறிட்டோடின' என்று குறிப்பிடப்பட்டுள்ள பொருள், மூலத்திலுள்ள “ஃபம்பஜஸத்' எனும் சொல்லுக்குரியதாகும்.
(7:139ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “முத்தப்பர்' எனும் சொல்லுக்கு “இழப்புக்குரியது' என்று பொருள்.
(7:93ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஆசா' எனும் சொல்லுக்கு “கவலைப்படுவேன்' என்று பொருள். (இதே இனச் சொல்லும், 5:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ளதுமான) “தஃஸ' எனும் சொல்லுக்கு “கவலைப்படுதல்' என்பது பொருள்.
(இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாத) மற்றவர்கள் கூறுகிறார்கள்:
(7:12ஆவது வசனத்தில்) “நீ சிரம் பணியாதிருக்கும்படி உன்னைத் தடுத்தது எது?' என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு “நீ ஏன் சிரம் பணியவில்லை?' என்று பொருள்.
(7:22ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யஃக்ஸிஃபானி' எனும் சொல்லுக்கு “அச்சோலையின் இலைகளை எடுத்துத் தங்களை மூடிக்கொள்ள அவர்கள் இருவரும் முயன்றனர்' என்று பொருள். அதாவது அந்த இலைகளில் ஒன்றோ டொன்றைக் கோத்துத் தங்க(ள் மறைவிடங்)களை மறைத்துக்கொள்ள முயன்றனர்'எனப் பொருள் விரியும்.
(இதே வசனத்திலுள்ள) “சவ்ஆத்' (மறைவிடங்கள்) எனும் சொல், அவர்களின் பிறவி உறுப்புகளைக் குறிப்பிடுகிறது.
(7:24ஆவது வசனத்திலுள்ள) “ஒரு காலம்வரை சுகம்' என்பது அப்போதிருந்து மறுமை நாள்வரை உள்ள காலத்தைக் குறிக்கிறது. “அல்ஹீன்' (காலம், நேரம்) எனும் சொல் அரபுகளிடம் சிறிது நேரம் முதல் எண்ணிறந்த காலம்வரை (எல்லா நேரத்தையும்) குறிக்கும்.
“ரியாஷ்' எனும் சொல்லும் (7:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ரீஷ்' எனும் சொல்லும் (“வெளிப்புற ஆடை' என்ற) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.
(7:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “கபீலுஹு' (அவனுடைய இனத்தார்) எனும் சொல், ஷைத்தானுடைய தலைமுறையைக் குறிக்கும்.
(7:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இத்தாரகூ' எனும் சொல்லுக்கு “அவர்கள் குழுமினர்' என்பது பொருள்.
(7:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “சம்மு' எனும் சொல்லுக்கு “துவாரம்' என்பது பொருள். இதன் பன்மை “சுமூம்' என்பதாகும். மனிதன் மற்றும் கால்நடைகளின் (உடலிலுள்ள) அனைத்துத் துவாரங்களையும் இது குறிக்கும். அவையாவன: இரு கண்கள், நாசியின் இரு துளைகள், வாய், இரு காதுகள், ஆசனவாய், பிறவி உறுப்பு (ஆகிய உறுப்புகளின் துவாரங்கள்) ஆகும்.
(7:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃகவாஷ்' எனும் சொல்லுக்கு “அவர்களுக்குப் போர்த்தப்படும் போர்வை' என்பது பொருள்.
(7:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “புஷ்ரா- நற்செய்தி' எனும் சொல், மற்றோர் ஓதல் முறையில் “நுஷ்ரா' என்று வந்துள்ளது. அந்த) “நுஷ்ரா' எனும் சொல்லுக்கு “பரவலானது' என்று பொருள்.
(7:58ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நகிதா' எனும் சொல்லுக்கு “சொற்பமானது' என்று பொருள்.
(7:92ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யஃக்னவ்' எனும் சொல்லுக்கு “வாழ்வார்கள்' என்பது பொருள்.
(7:105ஆவது வசனத்தில்) “கடமை' என்று குறிப்பிடப்பட்டுள்ள பொருள், மூலத்திலுள்ள “ஹகீக்' எனும் சொல்லுக்குரியதாகும்.
(7:116ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “இஸ்தர்ஹபூஹும்' (அவர்களைத் திடுக்கிடச் செய்தனர்) என்பது “ரஹ்பத்' (திடுக்கம்) எனும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
(7:117ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “தல்கஃபு' எனும் சொல் மற்றோர் ஓதல் முறையில் “தலக்கஃபு' என்று வந்துள்ளது. அந்த) “தலக்கஃபு' எனும் சொல்லுக்கு, “விழுங்கிவிட்டது' என்று பொருள்.
(7:131ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தாயிருஹும்' எனும் சொல்லுக்கு “அவர்களுக்கேற்பட்ட கதி' என்று பொருள்.
(7:133ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தூஃபான்' எனும் சொல்லுக்கு “வெள்ளப் பெருக்கு' என்று பொருள். ஏராளமான உயிர்ச் சேதமும் “தூஃபான்' எனப்படுவதுண்டு.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “கும்மல்' எனும் சொல், சிறு பூச்சி வகையான செடிப்பேனைக் குறிக்கும்.
(7:137ஆவது வசனத்தில் “மா கானூ யஅரிஷூன்' என்பதற்கு “அவர்கள் கட்டியிருந்த' என்பது பொருள். “யஅரிஷூன்' எனும் சொல்லின் பெயர்ச் சொற்களான) “உரூஷ்', “அரீஷ்' ஆகிய சொற்களுக்கு “கட்டடம்' என்பது பொருள்.
(7:149ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “சுகி(த்)த (ஃபீ அய்தீஹிம்)' எனும் சொல்லுக்கு “வருந்தினான்' என்பது பொருள். வருத்தப்படும் ஒவ்வொருவரையும் “சுகித்த ஃபீ யதிஹி' (கையில் தலையைக் கவிழ்த்தவன்) எனப்படும்.
(7:160ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஸ்பாத்' எனும் சொல், இஸ்ராயீல் சந்ததிகளின் (பன்னிரு) குலங்களைக் குறிக்கும்.
(7:163ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யஅதூன ஃபிஸ்ஸப்தி' என்பதற்கு “சனிக்கிழமையன்று எல்லை மீறிக்கொண்டிருந்தனர்' என்று பொருள். “தஅது' எனும் சொல்லுக்கு “நீ எல்லை மீறுகிறாய்' என்று பொருள்.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷுர்ரஅன்' எனும் சொல்லுக்கு “நீர் மட்டம்' என்பது பொருள்.
(7:165ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “பயீஸ்' எனும் சொல்லுக்கு “கடுமையானது' என்று பொருள்.
(7:176ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அக்லத இலல் அர்ள்' எனும் சொற்றொடருக்கு “அவன் இவ்வுலக (ஆசாபாச)த்தின்பால் சரிந்து முடங்கிக் கிடந்தான்' என்று பொருள்.
(7:182ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ச நஸ்தத்ரிஜுஹும்' எனும் சொல்லுக்கு, “அவர்கள் அச்சமற்று இருக்குமிடத்தில் நாம் அவர்களை (அழிக்க) வந்தோம்' என்று பொருள். “அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அல்லாஹ் அவர்களிடம் வந்(து அழித்)தான்” எனும் (59:2) வசனம் இதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
(7:184ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மின் ஜின்னத்' எனும் சொல்லுக்கு “பைத்தியம்' என்று பொருள்.
(7:187ஆவது வசத்தின் மூலத்திலுள்ள) “அய்யான முர்சாஹா' எனும் வாக்கியத்திற்கு, “மறுமையின் வருகை எப்போது?' என்று பொருள்.
(7:189ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃப மர்ரத் பிஹி' எனும் வாக்கியத்திற்கு “அவர் (ஹவ்வா) கர்ப்பத்தைச் சுமந்துகொண்டேயிருந்து பூர்த்தி செய்தார்” என்று பொருள்.
(7:200ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யன்ஸஃகன்னக்க' எனும் சொல்லுக்கு “உம்மைக் குழப்பமடையச் செய்தான்' என்று பொருள்.
(7:201ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள “தாயிஃப்' எனும் சொல் மற்றோர் ஓதல் முறையில் “தய்ஃப்' என்று வந்துள்ளது. அந்த) “தய்ஃப்' எனும் சொல்லுக்கு “ஷைத்தானின் தீண்டுதல்' என்று பொருள். (“தய்ஃப்' என்ற இச்சொல்) தாயிஃப் என்றும் ஓதப்படுகிறது. இதற்கும் அதற்கும் ஒரே பொருள்தான்.
(7:202ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “யமுத்தூனஹும்' எனும் சொல்லுக்கு “அவர்களுக்கு (சாத்தானின் சகோதரர்கள் தவறான வழிகளை) அலங்கரித்துக் காட்டுகிறார்கள்” என்று பொருள்.
(7:205ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “வ கீஃபத்' எனும் சொல்லுக்கு “பயம்' என்று பொருள். (கிட்டத்தட்ட இதே சாடையிலமைந்த) “குஃப்யத்' எனும் சொல் “இக்ஃபா' (மறைத்தல்) என்பதிலிருந்து பிறந்ததாகும்.
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) “வல் ஆஸால்' (மாலை) என்பதற்கு “அஸ்ருக்கும் மஃக்ரிபுக்கும் இடைப்பட்ட நேரம்' என்று பொருள். இதன் ஒருமை “அஸீல்' என்பதாகும். “புக்ரத்தன் வ அஸீலா' (காலை, மாலை) என்ற சொல்லாடல் இதற்கு எடுத்துக்காட்டாகும்.
பாடம் : 1
என் இறைவன் வெளிப்படை யாகவும் மறைவாகவும் உள்ள மானக்கேடான செயல்களையே தடை செய்துள்ளான் என்று (நபியே!) நீர் கூறுவீராக! (எனும் 7:33ஆவது வசனத்தொடர்)
4637. அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் (பின்வரும்) இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “ஆம்! அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அவர்கள் சொன்னார்கள்” என்று பதிலளித்தார்கள்.
“அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுடையவர் வேறெவருமிலர். ஆகவேதான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவானவை அனைத்தையும் அவன் தடை செய்துள்ளான். மேலும், அல்லாஹ்வைவிட அதிகமாகப் புகழ்ச்சியை விரும்பக்கூடியவர் வேறெவரும் இலர். ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டுள்ளான்” என்று கூறினார்கள்.2
அத்தியாயம் : 65
4637. அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் (பின்வரும்) இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து நேரடியாகச் செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “ஆம்! அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அவர்கள் சொன்னார்கள்” என்று பதிலளித்தார்கள்.
“அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுடையவர் வேறெவருமிலர். ஆகவேதான், மானக்கேடான செயல்களில் வெளிப்படையானவை, மறைவானவை அனைத்தையும் அவன் தடை செய்துள்ளான். மேலும், அல்லாஹ்வைவிட அதிகமாகப் புகழ்ச்சியை விரும்பக்கூடியவர் வேறெவரும் இலர். ஆகவேதான், அவன் தன்னைத் தானே புகழ்ந்துகொண்டுள்ளான்” என்று கூறினார்கள்.2
அத்தியாயம் : 65
4638. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ رَجُلٌ مِنَ الْيَهُودِ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم قَدْ لُطِمَ وَجْهُهُ وَقَالَ يَا مُحَمَّدُ إِنَّ رَجُلاً مِنْ أَصْحَابِكَ مِنَ الأَنْصَارِ لَطَمَ وَجْهِي. قَالَ " ادْعُوهُ ". فَدَعَوْهُ قَالَ " لِمَ لَطَمْتَ وَجْهَهُ ". قَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنِّي مَرَرْتُ بِالْيَهُودِ فَسَمِعْتُهُ يَقُولُ وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى الْبَشَرِ. فَقُلْتُ وَعَلَى مُحَمَّدٍ وَأَخَذَتْنِي غَضْبَةٌ فَلَطَمْتُهُ. قَالَ " لاَ تُخَيِّرُونِي مِنْ بَيْنِ الأَنْبِيَاءِ، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ الْقِيَامَةِ فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ الْعَرْشِ، فَلاَ أَدْرِي أَفَاقَ قَبْلِي أَمْ جُزِيَ بِصَعْقَةِ الطُّورِ ".
பாடம் : 2
நாம் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு மூசா வந்ததும் அவருடைய இறைவன் அவருடன் உரையாடிய போது, “என் இறைவா! எனக்கு நீ காட்சியளிப்பாயாக! நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று வேண்டினார். அதற்கு இறைவன், “என்னை நீர் ஒருபோதும் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலையைப் பாரும்! அது தனது இருப்பிடத்தில் நிலைத்திருந்தால் என்னை நீர் காண முடியும்” என்று கூறினான்.
அவ்வாறே அவருடைய இறைவன் அம்மலையின் மீது வெளிப்பட்டபோது அது சுக்குநூறாகிவிட்டது; மூசாவும் மூர்ச்சையாகிச் சரிந்தார். பிறகு மூர்ச்சை தெளிந்தபோது, “(இறைவா!) நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். மேலும், நான் இறைநம்பிக்கை கொண்டோரில் முதன்மையான வனாக இருக்கின்றேன்” என்று கூறினார் (எனும் 7:143ஆவது வசனம்)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “அரினீ' எனும் சொல்லுக்கு “எனக்கு வழங்குவாயாக' என்பது பொருள்.
4638. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒருவர் (அன்சாரி ஒருவரிடம்) தமது முகத்தில் அறைவாங்கிக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “அவரைக் கூப்பிடுங்கள்” என்று சொன்னார்கள். உடனே மக்கள் அவரை அழைத்(து வந்)தனர்.
நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இவர் முகத்தில் ஏன் அறைந்தீர்கள்?” என்று கேட்க அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் யூதர்களைக் கடந்து சென்றேன். அப்போது இவர், “மனிதர்கள் அனைவரிலும் மூசாவை (சிறந்தவராக)த்தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!” என்று சொல்லக் கேட்டேன். உடனே நான், “முஹம்மதை விடவுமா?” என்று கேட்டேன். எனக்குக் கோபம் மேலிட, நான் இவரை அறைந்துவிட்டேன்” என்று சொன்னார்.
நபி (ஸல்) அவர்கள், “இறைத்தூதர் களுக்கிடையே என்னைச் சிறந்தவர் ஆக்காதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையாகிவிடுவார்கள். மூர்ச்சை தெளிந்து எழுகின்றவர்களில் முதல் ஆளாக நான் இருப்பேன். அப்போது நான் மூசாவின் அருகே இருப்பேன். அவர் இறைவனுடைய அரியணையின் (அர்ஷின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக்கொண்டிருப்பார். அவர் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டாரா, அல்லது “தூர்சீனா' மலையில் (இறைவனைச் சந்திக்கச் சென்றபோது) அடைந்த மூர்ச்சைக்குப் பதிலாக இங்கு (மூர்ச்சையாக்கப்படாமல்) விட்டுவிடப்பட்டாரா என்பது எனக்குத் தெரியாது” என்று சொன்னார்கள்.3
மன்னும் சல்வாவும்4
அத்தியாயம் : 65
4638. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
யூதர்களில் ஒருவர் (அன்சாரி ஒருவரிடம்) தமது முகத்தில் அறைவாங்கிக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், “அவரைக் கூப்பிடுங்கள்” என்று சொன்னார்கள். உடனே மக்கள் அவரை அழைத்(து வந்)தனர்.
நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இவர் முகத்தில் ஏன் அறைந்தீர்கள்?” என்று கேட்க அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் யூதர்களைக் கடந்து சென்றேன். அப்போது இவர், “மனிதர்கள் அனைவரிலும் மூசாவை (சிறந்தவராக)த்தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!” என்று சொல்லக் கேட்டேன். உடனே நான், “முஹம்மதை விடவுமா?” என்று கேட்டேன். எனக்குக் கோபம் மேலிட, நான் இவரை அறைந்துவிட்டேன்” என்று சொன்னார்.
நபி (ஸல்) அவர்கள், “இறைத்தூதர் களுக்கிடையே என்னைச் சிறந்தவர் ஆக்காதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையாகிவிடுவார்கள். மூர்ச்சை தெளிந்து எழுகின்றவர்களில் முதல் ஆளாக நான் இருப்பேன். அப்போது நான் மூசாவின் அருகே இருப்பேன். அவர் இறைவனுடைய அரியணையின் (அர்ஷின்) கால்களில் ஒன்றைப் பிடித்துக்கொண்டிருப்பார். அவர் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டாரா, அல்லது “தூர்சீனா' மலையில் (இறைவனைச் சந்திக்கச் சென்றபோது) அடைந்த மூர்ச்சைக்குப் பதிலாக இங்கு (மூர்ச்சையாக்கப்படாமல்) விட்டுவிடப்பட்டாரா என்பது எனக்குத் தெரியாது” என்று சொன்னார்கள்.3
மன்னும் சல்வாவும்4
அத்தியாயம் : 65
4639. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ عَمْرِو بْنِ حُرَيْثٍ، عَنْ سَعِيدِ بْنِ زَيْدٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْكَمْأَةُ مِنَ الْمَنِّ وَمَاؤُهَا شِفَاءُ الْعَيْنِ ".
பாடம் : 2
நாம் குறிப்பிட்டிருந்த இடத்திற்கு மூசா வந்ததும் அவருடைய இறைவன் அவருடன் உரையாடிய போது, “என் இறைவா! எனக்கு நீ காட்சியளிப்பாயாக! நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்” என்று வேண்டினார். அதற்கு இறைவன், “என்னை நீர் ஒருபோதும் காண முடியாது. ஆயினும் (எதிரிலுள்ள) மலையைப் பாரும்! அது தனது இருப்பிடத்தில் நிலைத்திருந்தால் என்னை நீர் காண முடியும்” என்று கூறினான்.
அவ்வாறே அவருடைய இறைவன் அம்மலையின் மீது வெளிப்பட்டபோது அது சுக்குநூறாகிவிட்டது; மூசாவும் மூர்ச்சையாகிச் சரிந்தார். பிறகு மூர்ச்சை தெளிந்தபோது, “(இறைவா!) நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன். மேலும், நான் இறைநம்பிக்கை கொண்டோரில் முதன்மையான வனாக இருக்கின்றேன்” என்று கூறினார் (எனும் 7:143ஆவது வசனம்)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “அரினீ' எனும் சொல்லுக்கு “எனக்கு வழங்குவாயாக' என்பது பொருள்.
4639. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் (தானாக வளர்வதில்) “மன்னு'வின் வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5
அத்தியாயம் : 65
4639. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சமையல் காளான் (தானாக வளர்வதில்) “மன்னு'வின் வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.
இதை சயீத் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5
அத்தியாயம் : 65
4640. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَمُوسَى بْنُ هَارُونَ، قَالاَ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَلاَءِ بْنِ زَبْرٍ، قَالَ حَدَّثَنِي بُسْرُ بْنُ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي أَبُو إِدْرِيسَ الْخَوْلاَنِيُّ، قَالَ سَمِعْتُ أَبَا الدَّرْدَاءِ، يَقُولُ كَانَتْ بَيْنَ أَبِي بَكْرٍ وَعُمَرَ مُحَاوَرَةٌ، فَأَغْضَبَ أَبُو بَكْرٍ عُمَرَ، فَانْصَرَفَ عَنْهُ عُمَرُ مُغْضَبًا، فَاتَّبَعَهُ أَبُو بَكْرٍ يَسْأَلُهُ أَنْ يَسْتَغْفِرَ لَهُ، فَلَمْ يَفْعَلْ حَتَّى أَغْلَقَ بَابَهُ فِي وَجْهِهِ، فَأَقْبَلَ أَبُو بَكْرٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَبُو الدَّرْدَاءِ وَنَحْنُ عِنْدَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَمَّا صَاحِبُكُمْ هَذَا فَقَدْ غَامَرَ ". قَالَ وَنَدِمَ عُمَرُ عَلَى مَا كَانَ مِنْهُ فَأَقْبَلَ حَتَّى سَلَّمَ وَجَلَسَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَصَّ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الْخَبَرَ. قَالَ أَبُو الدَّرْدَاءِ وَغَضِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَجَعَلَ أَبُو بَكْرٍ يَقُولُ وَاللَّهِ يَا رَسُولَ اللَّهِ لأَنَا كُنْتُ أَظْلَمَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " هَلْ أَنْتُمْ تَارِكُو لِي صَاحِبِي هَلْ أَنْتُمْ تَارِكُو لِي صَاحِبِي إِنِّي قُلْتُ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا فَقُلْتُمْ كَذَبْتَ. وَقَالَ أَبُو بَكْرٍ صَدَقْتَ قَالَ أَبُو عَبْد اللَّهِ غَامَرَ سَبَقَ بِالْخَيْر".
பாடம் : 3
(நபியே!) கூறுக: மனிதர்களே! நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி எவனுக்குரியதோ அந்த அல்லாஹ்வின் தூதராக நான் உங்கள் அனைவருக்காகவும் அனுப்பப்பட்டுள்ளேன். அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவனே உயிரளிக்கின்றான்; இறக்கச் செய்கின்றான்.
எனவே, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்; அவனால் அனுப்பப்பட்ட “உம்மீ' (எழுத்தறிவற்ற) தூதர்மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். அவரோ அல்லாஹ்வையும் அவனது வேத வாக்குகளையும் நம்புகின்றார். ஆகவே, அவரைப் பின்பற்றுங்கள்; அதனால் நீங்கள் நல்வழி பெறக்கூடும் (எனும் 7:158ஆவது இறைவசனம்)
4640. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு சமயம்) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை கோபப்படுத்திவிட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் கோபத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்குப் பின்னாலேயே சென்று தம்மை மன்னித்துவிடுமாறு வேண்டினார்கள். ஆனால், உமர் (ரலி) அவர்கள் மன்னிக்காமல் அபூபக்ர் (ரலி) அவர்களின் முகத்திற்கு முன்னால்(தம் வீட்டுக்) கதவைச் சாத்தினார்கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தார்கள்.
(அப்போது) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அபூபக்ர் (ரலி) அவர்கள் வருவதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதோ உங்கள் தோழர் வழக்காடிவிட்டு வந்திருக்கிறார்” என்று சொன்னார்கள். (பிறகு) உமர் (ரலி) அவர்களும் தம்மால் ஏற்பட்டுவிட்ட செயலுக்கு வருந்தியவராக நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்து சலாம் (முகமன்) கூறி அமர்ந்தார்கள்; (நடந்த) செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள்.
(அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். (இதைக் கண்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (வாக்குவாதத்தை தொடங்கிவைத்ததால் உமரைவிட) நானே அதிகம் அநீதியிழைத்தவனாகிவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(மக்களே!) என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டுவிடுவீர்களா? என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டுவிடுவீர்களா? (ஒரு காலத்தில்) “மக்களே! நான் உங்கள் அனைவருக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று சொன்னேன். அப்போது நீங்கள், “பொய் சொல்கிறீர்' என்று கூறினீர்கள். ஆனால் அபூபக்ர் அவர்களோ, “நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்” என்றார்கள்.6
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) “ஃகாமர' எனும் சொல்லுக்கு “நன்மையில் முந்திக்கொண்டார்' என்பது பொருள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4640. அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு சமயம்) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை கோபப்படுத்திவிட்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் கோபத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றார்கள். உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்குப் பின்னாலேயே சென்று தம்மை மன்னித்துவிடுமாறு வேண்டினார்கள். ஆனால், உமர் (ரலி) அவர்கள் மன்னிக்காமல் அபூபக்ர் (ரலி) அவர்களின் முகத்திற்கு முன்னால்(தம் வீட்டுக்) கதவைச் சாத்தினார்கள். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி வந்தார்கள்.
(அப்போது) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அபூபக்ர் (ரலி) அவர்கள் வருவதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதோ உங்கள் தோழர் வழக்காடிவிட்டு வந்திருக்கிறார்” என்று சொன்னார்கள். (பிறகு) உமர் (ரலி) அவர்களும் தம்மால் ஏற்பட்டுவிட்ட செயலுக்கு வருந்தியவராக நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்து சலாம் (முகமன்) கூறி அமர்ந்தார்கள்; (நடந்த) செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தார்கள்.
(அப்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். (இதைக் கண்ட) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! (வாக்குவாதத்தை தொடங்கிவைத்ததால் உமரைவிட) நானே அதிகம் அநீதியிழைத்தவனாகிவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறலானார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(மக்களே!) என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டுவிடுவீர்களா? என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டுவிடுவீர்களா? (ஒரு காலத்தில்) “மக்களே! நான் உங்கள் அனைவருக்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்' என்று சொன்னேன். அப்போது நீங்கள், “பொய் சொல்கிறீர்' என்று கூறினீர்கள். ஆனால் அபூபக்ர் அவர்களோ, “நீங்கள் உண்மையே சொன்னீர்கள்' என்று கூறினார்” என்றார்கள்.6
அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) “ஃகாமர' எனும் சொல்லுக்கு “நன்மையில் முந்திக்கொண்டார்' என்பது பொருள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4641. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قِيلَ لِبَنِي إِسْرَائِيلَ {ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُولُوا حِطَّةٌ نَغْفِرْ لَكُمْ خَطَايَاكُمْ} فَبَدَّلُوا فَدَخَلُوا يَزْحَفُونَ عَلَى أَسْتَاهِهِمْ وَقَالُوا حَبَّةٌ فِي شَعَرَةٍ ".
பாடம் : 4
“ஹித்தத்துன் (எங்கள் பாவச் சுமையை இறக்குவாயாக!) என்று சொல்(லியவாறே செல்)லுங்கள்” எனும் (7:161ஆவது) வசனத்தொடர்
4641. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்ரவேலர்களிடம், “ஹித்ததுன்' (எங்கள் பாவச் சுமையை இறக்குவாயாக!) என்று கூறிக்கொண்டே அதன் வாயிலில் சிரம் தாழ்த்தியவர்களாய் நுழையுங்கள். நாம் உங்களுடைய குற்றங்களை மன்னித்துவிடுவோம்” என்று கூறப்பட்டது.
ஆனால், (அவர்கள் தமக்குக் கூறப்பட்ட வார்த்தையை) மாற்றி(க் கூறி)யபடி தம் புட்டங்களால் தவழ்ந்த வண்ணம் சென்றார்கள். மேலும் (உள்ளே நுழையும்போது) “ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின்” (ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானிய வித்து) என்று (பரிகாசமாகச்) சொன்னார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.7
அத்தியாயம் : 65
4641. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இஸ்ரவேலர்களிடம், “ஹித்ததுன்' (எங்கள் பாவச் சுமையை இறக்குவாயாக!) என்று கூறிக்கொண்டே அதன் வாயிலில் சிரம் தாழ்த்தியவர்களாய் நுழையுங்கள். நாம் உங்களுடைய குற்றங்களை மன்னித்துவிடுவோம்” என்று கூறப்பட்டது.
ஆனால், (அவர்கள் தமக்குக் கூறப்பட்ட வார்த்தையை) மாற்றி(க் கூறி)யபடி தம் புட்டங்களால் தவழ்ந்த வண்ணம் சென்றார்கள். மேலும் (உள்ளே நுழையும்போது) “ஹப்பத்துன் ஃபீ ஷஅரத்தின்” (ஒரு வாற்கோதுமைக்குள் ஒரு தானிய வித்து) என்று (பரிகாசமாகச்) சொன்னார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.7
அத்தியாயம் : 65
4642. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، أَنَّ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ عُيَيْنَةُ بْنُ حِصْنِ بْنِ حُذَيْفَةَ فَنَزَلَ عَلَى ابْنِ أَخِيهِ الْحُرِّ بْنِ قَيْسٍ، وَكَانَ مِنَ النَّفَرِ الَّذِينَ يُدْنِيهِمْ عُمَرُ، وَكَانَ الْقُرَّاءُ أَصْحَابَ مَجَالِسِ عُمَرَ وَمُشَاوَرَتِهِ كُهُولاً كَانُوا أَوْ شُبَّانًا. فَقَالَ عُيَيْنَةُ لاِبْنِ أَخِيهِ يَا ابْنَ أَخِي، لَكَ وَجْهٌ عِنْدَ هَذَا الأَمِيرِ فَاسْتَأْذِنْ لِي عَلَيْهِ. قَالَ سَأَسْتَأْذِنُ لَكَ عَلَيْهِ. قَالَ ابْنُ عَبَّاسٍ فَاسْتَأْذَنَ الْحُرُّ لِعُيَيْنَةَ فَأَذِنَ لَهُ عُمَرُ، فَلَمَّا دَخَلَ عَلَيْهِ قَالَ هِيْ يَا ابْنَ الْخَطَّابِ، فَوَاللَّهِ مَا تُعْطِينَا الْجَزْلَ، وَلاَ تَحْكُمُ بَيْنَنَا بِالْعَدْلِ. فَغَضِبَ عُمَرُ حَتَّى هَمَّ بِهِ، فَقَالَ لَهُ الْحُرُّ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنَّ اللَّهَ تَعَالَى قَالَ لِنَبِيِّهِ صلى الله عليه وسلم {خُذِ الْعَفْوَ وَأْمُرْ بِالْعُرْفِ وَأَعْرِضْ عَنِ الْجَاهِلِينَ} وَإِنَّ هَذَا مِنَ الْجَاهِلِينَ. وَاللَّهِ مَا جَاوَزَهَا عُمَرُ حِينَ تَلاَهَا عَلَيْهِ، وَكَانَ وَقَّافًا عِنْدَ كِتَابِ اللَّهِ.
பாடம் : 5
(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! அறிவீனர்களைவிட்டு விலகியிருப்பீராக! (எனும் 7:199ஆவது இறைவசனம்)
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “உர்ஃப்' எனும் சொல் “நன்மை'யைக் குறிக்கும்.
4642. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக்கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு பின் கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர் களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்த வர்களே உமர் (ரலி) அவர்களின் அவை யினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர்.
ஆகவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், “என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடத்தில் செல்வாக்கு உள்ளது. ஆகவே, அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா” என்று சொன்னார். அதற்கு அவர், “உமர் (ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்” என்று சொன்னார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர் (ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள்.
உயைனா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை” என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோன் அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!” (7:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்” என்று சொன்னார்.
அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு (ரலி) அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக்காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர் (ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக் கூடியவர்களாய் இருந்தார்கள்.
அத்தியாயம் : 65
4642. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா (ரலி) அவர்கள் (மதீனாவுக்கு) வந்து, தம் சகோதரருடைய புதல்வர் ஹுர்ரு பின் கைஸ் (ரலி) அவர்களிடம் தங்கினார். உமர் (ரலி) அவர்கள் தம் அருகில் அமர்த்திக்கொள்பவர்களில் ஒருவராக (அந்த அளவுக்கு அவர்களுக்கு நெருக்கமானவராக) ஹுர்ரு பின் கைஸ் இருந்தார். முதியவர்களோ இளைஞர் களோ யாராயினும், குர்ஆனை நன்கறிந்த வர்களே உமர் (ரலி) அவர்களின் அவை யினராகவும் ஆலோசகர்களாகவும் இருந்தனர்.
ஆகவே, உயைனா, தம் சகோதரருடைய புதல்வரிடம், “என் சகோதரர் மகனே! உனக்கு இந்தத் தலைவரிடத்தில் செல்வாக்கு உள்ளது. ஆகவே, அவரைச் சந்திக்க எனக்கு அனுமதி பெற்றுத் தா” என்று சொன்னார். அதற்கு அவர், “உமர் (ரலி) அவர்களிடம் செல்ல நான் உமக்காக அனுமதி கேட்கிறேன்” என்று சொன்னார். அவ்வாறே உமரைச் சந்திக்க உயைனாவுக்காக ஹுர்ரு அவர்கள் அனுமதி கேட்டார். உமர் (ரலி) அவர்களும் அவருக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதி கொடுத்தார்கள்.
உயைனா (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் சென்றபோது, “கத்தாபின் புதல்வரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் எங்களுக்கு அதிகமாக வழங்குவதில்லை. எங்களிடையே நீங்கள் நீதியுடன் தீர்ப்பளிப்பதில்லை” என்று சொன்னார். உமர் (ரலி) அவர்கள் கோபமுற்று அவரை நாடி (அடிக்க)ச் சென்றார்கள். உடனே ஹுர்ரு (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உயர்ந்தோன் அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “(நபியே!) மன்னிக்கும் போக்கை மேற்கொள்வீராக! மேலும், நன்மை புரியுமாறு ஏவுவீராக! அறிவீனர்களை விட்டு விலகியிருப்பீராக!” (7:199) என்று கூறியுள்ளான். இவர் அறியாதவர்களில் ஒருவர்” என்று சொன்னார்.
அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுர்ரு (ரலி) அவர்கள் இந்த வசனத்தை உமர் (ரலி) அவர்களுக்கு ஓதிக்காட்டியபோது உமர் (ரலி) அவர்கள் அதை மீறவில்லை. (பொதுவாக) உமர் (ரலி) அவர்கள் இறைவேதத்திற்கு மிகவும் கட்டுப்படக் கூடியவர்களாய் இருந்தார்கள்.
அத்தியாயம் : 65