4603. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي الأَعْمَشُ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا يَنْبَغِي لأَحَدٍ أَنْ يَقُولَ أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ".
பாடம் : 26 “(நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வேத அறிவிப்புச் செய்ததைப் போன்றே நிச்சயமாக உமக்கும் நாம் வேத அறிவிப்புச் செய்துள்ளோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக் கும் மற்றும் யஅகூப் உடைய வழித்தோன்றல்களுக்கும் ஈசா, அய்யூப், யூனுஸ், ஹாரூன் மற்றும் சுலைமான் ஆகியோருக்கும் நாம் வேத அறிவிப்புச் செய்தோம். தாவூதுக்கு ஸபூர் (எனும் வேதம்)தனை வழங்கினோம்” எனும் (4:163ஆவது) இறைவசனம்
4603. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நான் (இறைத்தூதர்) யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடச் சிறந்தவன்' என்று (என்னைப் பற்றி) எவரும் கூறுவது அவருக்குத் தகாது.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.33


அத்தியாயம் : 65
4604.
பாடம் : 26 “(நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின்னர் வந்த நபிமார்களுக்கும் நாம் வேத அறிவிப்புச் செய்ததைப் போன்றே நிச்சயமாக உமக்கும் நாம் வேத அறிவிப்புச் செய்துள்ளோம். மேலும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோருக் கும் மற்றும் யஅகூப் உடைய வழித்தோன்றல்களுக்கும் ஈசா, அய்யூப், யூனுஸ், ஹாரூன் மற்றும் சுலைமான் ஆகியோருக்கும் நாம் வேத அறிவிப்புச் செய்தோம். தாவூதுக்கு ஸபூர் (எனும் வேதம்)தனை வழங்கினோம்” எனும் (4:163ஆவது) இறைவசனம்
4604. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக்) கூறியவர் பொய் சொல்லிவிட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் :
4605. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ قَالَ آخِرُ سُورَةٍ نَزَلَتْ بَرَاءَةَ، وَآخِرُ آيَةٍ نَزَلَتْ {يَسْتَفْتُونَكَ }
பாடம் : 27 (நபியே!) “கலாலா' (அதாவது மூல வாரிசுகளோ கிளை வாரிசுகளோ இல்லாத நிலை) பற்றி உம்மிடம் அவர்கள் விளக்கம் கேட்கிறார்கள். (அவர்களிடம்) கூறுக: “கலாலா' பற்றி அல்லாஹ் உங்களுக்கு (இவ்வாறு) விளக்கம் கூறுகின்றான்: குழந்தை இல்லாத ஒருவர் இறந்து, அவருக்கு ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால், அவர் விட்டுச்சென்ற (சொத்)தில் பாதி அவளுக்குக் கிடைக்கும். குழந்தை இல்லாத ஒருத்தி (இறந்து, அவளுக்கு ஒரு சகோதரர் மட்டும் இருந்தால் அவளு)க்கு அவர் (முழு) வாரிசாவார். சகோதரிகள் இருவராக இருந்தால் அவ்விருவருக்கும் அவர் விட்டுச்சென்ற (சொத்)தில் மூன்றில் இரு பங்கு கிடைக்கும். சகோதர சகோதரிகளாகப் பலர் இருந்தால் அவர்களில் இரு பெண்களின் பங்குக்குச் சமமான (பங்கான)து ஓர் ஆணுக்குக் கிடைக்கும் (எனும் 4:176ஆவது வசனத்தொடர்) (இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள) “கலாலா' எனும் சொல், யாருக்கு வாரிசாகத் தந்தையோ மகனோ இல்லையோ அவரைக் குறிக்கும். இது “தகல்லலஹுந் நசபு' (வமிசாவளி அற்றவன்) எனும் வினைச்சொல்லின் வேர்ச்சொல்லாகும்.
4605. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:

(நபி (ஸல்) அவர்களுக்கு) இறுதியாக அருளப்பெற்ற (குர்ஆன்) அத்தியாயம் “பாராஅத்' எனும் (9ஆவது) அத்தியாயமாகும். (பாகப்பிரிவினை தொடர்பாக) இறுதியாக அருளப்பெற்ற வசனம், “(நபியே!) உங்களிடம் மக்கள் விளக்கம் கேட்கிறார்கள்” எனும் (இந்த 4:176ஆவது) வசனமாகும்.34

அத்தியாயம் : 65
4606. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ قَيْسٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَتِ الْيَهُودُ لِعُمَرَ إِنَّكُمْ تَقْرَءُونَ آيَةً لَوْ نَزَلَتْ فِينَا لاَتَّخَذْنَاهَا عِيدًا. فَقَالَ عُمَرُ إِنِّي لأَعْلَمُ حَيْثُ أُنْزِلَتْ، وَأَيْنَ أُنْزِلَتْ، وَأَيْنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ أُنْزِلَتْ يَوْمَ عَرَفَةَ، وَإِنَّا وَاللَّهِ بِعَرَفَةَ ـ قَالَ سُفْيَانُ وَأَشُكُّ كَانَ يَوْمَ الْجُمُعَةِ أَمْ لاَ – {الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ}
பாடம்: 5. “அல்மாயிதா' அத்தியாயம்1 பாடம் : 1 “அல்மாயிதா' அத்தியாயத்தின் பதவுரை (5:1ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஹுரும்' (இஹ்ராம் கட்டியவர்கள்) எனும் சொல்லின் ஒருமை “ஹராம்' என்பதாகும். (5:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃப பிமா நக்ளிஹிம் மீஸாக்கஹும்' என்பதற்கு “அவர்கள் தம் வாக்குறுதியை முறித்துவிட்ட காரணத்தால்' என்று பொருள். (5:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்லத்தீ க(த்)தபல்லாஹு' எனும் வாக்கியத்திற்கு “அல்லாஹ் உங்களுக்காக அமைத்து (வைத்)துள்ள (புனித பூமியினுள் நுழையுங்கள்)' என்று பொருள். (5:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தபூஅ' எனும் சொல்லுக்கு “நீயே சுமந்து கொண்டு' என்பது பொருள். (5:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “தாயிரத்துன்' எனும் சொல்லுக்கு “ஏதேனும் துன்பம்' என்பது பொருள். மற்றவர்கள் கூறுகின்றனர்: (5:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அஃக்ரய்னா' (ஊட்டினோம்) எனும் வினைச்சொல்லின் வேர்ச்சொல்லான) “இஃக்ராஉ' என்பதற்கு “சாட்டுதல்' என்பது பொருள். (5:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “உ—þரஹுன்ன' எனும் சொல்லுக்கு “அப்பெண்களுக்குரிய மஹ்ர் (மணக் கொடை)களை' என்பது பொருள். (5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்முஹைமின்' எனும் சொல்லுக்கு “நம்பகமான காவலன்' (அல்அமீன்) என்பது பொருள். அதாவது இந்த குர்ஆன் தனக்கு முந்தியுள்ள வேதம் ஒவ்வொன்றையும் நம்பகமான முறையில் பாதுகாக்கக் கூடியது. சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: குர்ஆனிலுள்ள, “வேதக்காரர்களே! தவ்ராத்தையும் இன்ஜீலையும் மற்றும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (இதர வேதங்கள் யா)வற்றையும் முழுமையாகச் செயல்படுத்தாத வரை, நீங்கள் எந்த அடிப்படையிலும் இல்லை” என்று (நபியே! தெளிவாகக்) கூறிவிடுவீராக!” எனும் (5:68) வசனத்தைவிட எனக்குக் கடுமையானது வேறெதுவுமில்லை.2 (5:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மஃக்மஸா' எனும் சொல்லுக்கு “பசி' என்பது பொருள். (5:32ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “மன் அஹ்யாஹா' (யார் ஓர் உயிரை வாழவைக்கிறாரோ...) என்பதற்கு, “நியாயமான காரணம் இருந்தால் அன்றி, ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து விலகிக்கொள்கின்றவர் மக்கள் அனைவரையுமே வாழவைத்தவர் ஆவார்' என்பது இதன் கருத்தாகும். (5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஷிர்அத்தன் வ மின்ஹா—ன்' என்பதற்கு “பாதை மற்றும் நடைமுறை' என்பது பொருள். (5:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃப இன் உஸிர' எனும் சொல்லுக்கு “வெளிப்பட்டால், - தெரியவந்தால்' என்பது பொருள். (5:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “அல்அவ்லயானி' (அதிகத் தகுதி வாய்ந்த இருவர்) எனும் சொல்லின் ஒருமை “(அல்)அவ்லா' என்பதாகும். பாடம் : 2 “இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். எனது அருட்கொடையையும் உங்கள்மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை (உங்களது மார்க்கமாக ஏற்றுக்கொண்டுவிட்டேன்” எனும் (5:3ஆவது) வசனத்தொடர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “மஃக்மஸா' எனும் சொல்லுக்கு “பசி' என்பது பொருள்.
4606. தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யூதர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “நீங்கள் ஓர் இறைவசனத்தை ஓது கிறீர்கள், அந்த வசனம் மட்டும் எங்க ளிடையே அருளப்பெற்றிருந்தால் அந்நாளை நாங்கள் பண்டிகை நாளாக ஆக்கிக்கொண்டிருப்போம்” என்று கூறினர்.

உமர் (ரலி) அவர்கள், “அது எப்போது அருளப்பெற்றது? எங்கே அருளப்பெற்றது? அது அருளப்பெற்ற வேளையில் அரஃபா (ஃதுல்ஹிஜ்ஜா ஒன்பதாம்) நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கேயிருந்தார்கள் என்பதையெல்லாம் நான் அறிவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அப்போது அரஃபாவில் இருந்தோம்” என்று கூறினார்கள்.3

(இதன் மூன்றாம்) அறிவிப்பாளர் சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“இன்று உங்களது மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கி விட்டேன்” எனும் (5:3ஆவது) வசனம் அருளப்பெற்ற நாள் (சிலரின் அறிவிப்பிலுள்ளது போல்) வெள்ளிக் கிழமையாக இருந்ததா? அல்லது (வெள்ளிக் கிழமையாக) இல்லையா என்று நான் (தீர்மானிக்க முடியாமல்) சந்தேகப்படுகின்றேன்.4

அத்தியாயம் : 65
4607. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَعْضِ أَسْفَارِهِ، حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ أَوْ بِذَاتِ الْجَيْشِ انْقَطَعَ عِقْدٌ لِي، فَأَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْتِمَاسِهِ، وَأَقَامَ النَّاسُ مَعَهُ، وَلَيْسُوا عَلَى مَاءٍ، وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ فَأَتَى النَّاسُ إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ فَقَالُوا أَلاَ تَرَى مَا صَنَعَتْ عَائِشَةُ أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبِالنَّاسِ، وَلَيْسُوا عَلَى مَاءٍ، وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ، فَجَاءَ أَبُو بَكْرٍ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي قَدْ نَامَ، فَقَالَ حَبَسْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّاسَ، وَلَيْسُوا عَلَى مَاءٍ، وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ قَالَتْ عَائِشَةُ فَعَاتَبَنِي أَبُو بَكْرٍ، وَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ، وَجَعَلَ يَطْعُنُنِي بِيَدِهِ فِي خَاصِرَتِي، وَلاَ يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلاَّ مَكَانُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى فَخِذِي، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى أَصْبَحَ عَلَى غَيْرِ مَاءٍ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ مَا هِيَ بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ. قَالَتْ فَبَعَثْنَا الْبَعِيرَ الَّذِي كُنْتُ عَلَيْهِ فَإِذَا الْعِقْدُ تَحْتَهُ.
பாடம் : 3 “நீங்கள் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரேனும் (மல ஜலம் கழித்துவிட்டு) கழிப்பிடத்திóருந்து வந்திருந்தால், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி “தயம்மும்' செய்துகொள்ளுங்கள். (அதாவது) அதில் உங்கள் கரங் களைப் பதித்து முகங்களிலும் கரங்களிலும் தடவிக்கொள்ளுங்கள்” எனும் (5:6ஆவது) வசனத்தொடர் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “தயம்மமூ' எனும் சொல்லுக்கு “நாடுங்கள்' என்பது (சொற்)பொருள். (5:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஆம்மீன' எனும் சொல்லுக்கு “நாடியவர்களாக' என்பது பொருள். “அம்மம்த்து' என்பதும் “தயம்மம்த்து' என்பதும் (“நாடினேன்' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (குர்ஆனில் இடம்பெற்றுள்ள) லமஸ்த்தும், தமஸ்ஸூஹுன்ன, வல்லாத்தீ தகல்த்தும் பிஹின்ன, அல்இஃப்ளாஉ ஆகிய சொற்கள் திருமணத்தை (தாம்பத்திய உறவை)க் குறிக்கும்.5
4607. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பயணம் ஒன்றில் (பனுல் முஸ்த்தலிக் போரின் பயணத்தில்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் (மதீனாவுக்கருகில் உள்ள) “பைதா' அல்லது “தாத்துல் ஜைஷ்' எனுமிடத்தில் (வந்துகொண்டு) இருந்தபோது, எனது கழுத்தணி அறுந்து விழுந்து (காணாமற் போய்)விட்டது. அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு முகாமிட்டுத்) தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் (முகாமிட்டுத்) தங்கினர்.

அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை; அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை. அப்போது மக்கள் (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களிடம் சென்று, “(உங்கள் புதல்வி) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்துவிட்டார்கள். இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை” என்று முறையிட்டனர்.

அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்துவிட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை” என்று கூறினார்கள்.

அவர்கள் எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்ó என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது (தலைவைத்துப் படுத்து) இருந்ததுதான் என்னை அசைய விடாமல் (அடிவாங்கிக்கொண்டிருக்கும்படி) செய்துவிட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலையில் விழித் தெழுந்தபோதும் தண்ணீர் இருக்கவில்லை. அப்போதுதான் “தயம்மும்' (மாற்று அங்கத் தூய்மை) உடைய (5:6ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

(இது குறித்து) உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், “அபூபக்ரின் குடும்பத்தாரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட நலன்களில் (பரக்கத்) இது (தயம்மும் எனும் சலுகை) முதலாவதாக இல்லை. (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன)” என்று கூறினார்கள்.

(பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பியபோது, அதன் அடியில் (காணாமற் போன) அந்தக் கழுத்தணி கிடந்தது.6


அத்தியாயம் : 65
4608. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ سَقَطَتْ قِلاَدَةٌ لِي بِالْبَيْدَاءِ وَنَحْنُ دَاخِلُونَ الْمَدِينَةَ، فَأَنَاخَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَنَزَلَ، فَثَنَى رَأْسَهُ فِي حَجْرِي رَاقِدًا، أَقْبَلَ أَبُو بَكْرٍ فَلَكَزَنِي لَكْزَةً شَدِيدَةً وَقَالَ حَبَسْتِ النَّاسَ فِي قِلاَدَةٍ. فَبِي الْمَوْتُ لِمَكَانِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَدْ أَوْجَعَنِي، ثُمَّ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اسْتَيْقَظَ وَحَضَرَتِ الصُّبْحُ فَالْتُمِسَ الْمَاءُ فَلَمْ يُوجَدْ فَنَزَلَتْ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا قُمْتُمْ إِلَى الصَّلاَةِ} الآيَةَ. فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ لَقَدْ بَارَكَ اللَّهُ لِلنَّاسِ فِيكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ، مَا أَنْتُمْ إِلاَّ بَرَكَةٌ لَهُمْ.
பாடம் : 3 “நீங்கள் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால், அல்லது உங்களில் எவரேனும் (மல ஜலம் கழித்துவிட்டு) கழிப்பிடத்திóருந்து வந்திருந்தால், அல்லது நீங்கள் பெண்களைத் தீண்டியிருந்தால் தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி “தயம்மும்' செய்துகொள்ளுங்கள். (அதாவது) அதில் உங்கள் கரங் களைப் பதித்து முகங்களிலும் கரங்களிலும் தடவிக்கொள்ளுங்கள்” எனும் (5:6ஆவது) வசனத்தொடர் (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) “தயம்மமூ' எனும் சொல்லுக்கு “நாடுங்கள்' என்பது (சொற்)பொருள். (5:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “ஆம்மீன' எனும் சொல்லுக்கு “நாடியவர்களாக' என்பது பொருள். “அம்மம்த்து' என்பதும் “தயம்மம்த்து' என்பதும் (“நாடினேன்' எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (குர்ஆனில் இடம்பெற்றுள்ள) லமஸ்த்தும், தமஸ்ஸூஹுன்ன, வல்லாத்தீ தகல்த்தும் பிஹின்ன, அல்இஃப்ளாஉ ஆகிய சொற்கள் திருமணத்தை (தாம்பத்திய உறவை)க் குறிக்கும்.5
4608. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (பனுல் முஸ்த்தலிக் போர் முடிந்து) மதீனாவிற்கு வந்துகொண்டிருந்தபோது (மதீனாவுக்கருகில் உள்ள) “பைதா' எனுமிடத்தில் என் கழுத்து மாலையொன்று (அறுந்து) விழுந்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் அங்கே தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, இறங்கி, எனது மடியில் தலை வைத்து உறங்கினார்கள். (அப்போது என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னை நோக்கி வந்து, என்னை வேகமாகக் குத்தி, “ஒரு கழுத்து மாலைக்காக (பயணத்தைத் தொடர விடாமல்) மக்களைத் தடுத்து நிறுத்திவிட்டாயே” என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் மடிமீது தலை வைத்துப் படுத்து) இருந்த காரணத்தால் நான் (அசையாமல்) உயிரற்(ற சடலம் போன்)றுஇருந்துவிட்டேன். அதனால் எனக்குக் கடும் வேதனை ஏற்பட்டது. பிறகு நபி (ஸல்) அவர்கள் விழித்தெழுந்தார்கள். சுப்ஹ் தொழுகை (நேரம்) வந்துவிட்டது. அங்கத் தூய்மை (உளூ) செய்வதற்காகத் தண்ணீர் தேடப்பட்டது. அது கிடைக்க வில்லை.

அப்போதுதான், “இறைநம்பிக்கை கொண்டவர்களே! தொழுகைக்காகச் செல்லும்போது உங்கள் முகங்களையும், முழங்கைகள்வரை உங்களுடைய கரங்களையும் கழுவிக்கொள்ளுங்கள்” என்று தொடங்கி “தண்ணீர் கிடைக்காதபோது தூய்மையான மண்ணைப் பயன்படுத்தி “தயம்மும்' செய்துகொள்ளுங்கள்” என்று கூறும் (5:6 ஆவது) வசனம் அருளப்பெற்றது.

அப்போது உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களால் மக்களுக்கு அருள்வளம் (பரக்கத்) பொழிந்துள்ளான், அபூபக்ரின் குடும்பத்தாரே! நீங்களே அவர்களுக்கு ஓர் அருள்வளம்தான்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 65
4609. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ مُخَارِقٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، سَمِعْتُ ابْنَ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ شَهِدْتُ مِنَ الْمِقْدَادِ ح وَحَدَّثَنِي حَمْدَانُ بْنُ عُمَرَ حَدَّثَنَا أَبُو النَّضْرِ حَدَّثَنَا الأَشْجَعِيُّ عَنْ سُفْيَانَ عَنْ مُخَارِقٍ عَنْ طَارِقٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ الْمِقْدَادُ يَوْمَ بَدْرٍ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لاَ نَقُولُ لَكَ كَمَا قَالَتْ بَنُو إِسْرَائِيلَ لِمُوسَى {فَاذْهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِلاَ إِنَّا هَا هُنَا قَاعِدُونَ} وَلَكِنِ امْضِ وَنَحْنُ مَعَكَ. فَكَأَنَّهُ سُرِّيَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. وَرَوَاهُ وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ مُخَارِقٍ عَنْ طَارِقٍ أَنَّ الْمِقْدَادَ قَالَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 4 “(மூசா!) நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின்றோம்” (என்று இஸ்ரவேலர்கள் கூறினர்) எனும் (5:24ஆவது) வசனத்தொடர்
4609. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மிக்தாத் (ரலி) அவர்கள், பத்ர் போரின்போது, “அல்லாஹ்வின் தூதரே! இஸ்ரவேலர்கள் மூசா (அலை) அவர்களிடம், “நீரும் உம்முடைய இறைவனும் சென்று போரிடுங்கள்; நாங்கள் இங்கேயே அமர்ந்திருக்கின் றோம்' என்று சொன்னதைப் போல் உங்களிடம் நாங்கள் சொல்லமாட்டோம். மாறாக, செல்லுங்கள்; நாங்களும் உங்களுடன் இருப்போம்” என்று சொன்னார்கள்.

இதைக் கேட்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தம் கவலைகள் அனைத்தும் நீங்கிவிட்டதைப் போலிருந்தது.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஓர் அறிவிப்பில், “மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் சொன்னபோது நான் (அங்கு) இருந்தேன்” என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாகத் தொடங்குகிறது.7

அத்தியாயம் : 65
4610. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، قَالَ حَدَّثَنِي سَلْمَانُ أَبُو رَجَاءٍ، مَوْلَى أَبِي قِلاَبَةَ عَنْ أَبِي قِلاَبَةَ، أَنَّهُ كَانَ جَالِسًا خَلْفَ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، فَذَكَرُوا وَذَكَرُوا فَقَالُوا وَقَالُوا قَدْ أَقَادَتْ بِهَا الْخُلَفَاءُ، فَالْتَفَتَ إِلَى أَبِي قِلاَبَةَ وَهْوَ خَلْفَ ظَهْرِهِ، فَقَالَ مَا تَقُولُ يَا عَبْدَ اللَّهِ بْنَ زَيْدٍ أَوْ قَالَ مَا تَقُولُ يَا أَبَا قِلاَبَةَ قُلْتُ مَا عَلِمْتُ نَفْسًا حَلَّ قَتْلُهَا فِي الإِسْلاَمِ إِلاَّ رَجُلٌ زَنَى بَعْدَ إِحْصَانٍ، أَوْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ، أَوْ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم. فَقَالَ عَنْبَسَةُ حَدَّثَنَا أَنَسٌ بِكَذَا وَكَذَا. قُلْتُ إِيَّاىَ حَدَّثَ أَنَسٌ قَالَ قَدِمَ قَوْمٌ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَكَلَّمُوهُ فَقَالُوا قَدِ اسْتَوْخَمْنَا هَذِهِ الأَرْضَ. فَقَالَ " هَذِهِ نَعَمٌ لَنَا تَخْرُجُ، فَاخْرُجُوا فِيهَا، فَاشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا ". فَخَرَجُوا فِيهَا فَشَرِبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا وَاسْتَصَحُّوا، وَمَالُوا عَلَى الرَّاعِي فَقَتَلُوهُ، وَاطَّرَدُوا النَّعَمَ، فَمَا يُسْتَبْطَأُ مِنْ هَؤُلاَءِ قَتَلُوا النَّفْسَ وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ، وَخَوَّفُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم. فَقَالَ سُبْحَانَ اللَّهِ. فَقُلْتُ تَتَّهِمُنِي قَالَ حَدَّثَنَا بِهَذَا أَنَسٌ. قَالَ وَقَالَ يَا أَهْلَ كَذَا إِنَّكُمْ لَنْ تَزَالُوا بِخَيْرٍ مَا أُبْقِيَ هَذَا فِيكُمْ أَوْ مِثْلُ هَذَا.
பாடம் : 5 யார் அல்லாஹ்வோடும் அவனு டைய தூதரோடும் போரிட்டு பூமியில் கலகம் விளைவிக்கத் தீவிரமாக முயற்சி செய்கிறார்களோ அவர்களுக்குரிய தண்டனை இதுதான்: அவர்கள் கொல்லப்பட வேண்டும்; அல்லது சிலுவையில் அறையப்பட வேண்டும்; அல்லது அவர்கள் மாறுகால் மாறுகை வாங்கப்பட வேண்டும்; அல்லது அவர்கள் நாடுகடத்தப்பட வேண்டும் (எனும் 5:33ஆவது வசனத்தொடர்) (இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ள) “அல்லாஹ்வுடன் போரிடுதல்' என்பதற்கு, “அவனை மறுத்தல்' என்பது கருத்தாகும்.
4610. அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (உமய்யா கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்தேன். (அறியாமைக் காலத்து “அல்கசாமா' எனும் சத்தியமுறை பற்றி அன்னார் கேட்க, அது பற்றி) மக்கள் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். (இதில் பழிவாங்கல் இருப்பது உண்மைதான். உங்களுக்கு முன்பிருந்த) கலீஃபாக்கள் இதன்படி பழிவாங்க உத்தரவிட்டுள்ளார்கள் என்றும் சொன்னார்கள்.

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் தம் முதுகுக்குப் பின்னால் அமர்ந்திருந்த என் பக்கம் திரும்பி, “அப்துல்லாஹ் பின் ஸைத் அவர்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்' அல்லது “அபூகிலாபாவே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?' என்று கேட்டார்கள். நான், “திருமணமான பின்பு விபசாரம் புரிந்த மனிதரையும், அல்லது உயிருக்குப் பதிலாக அன்றி (அநியாயமாக) ஓர் உயிரைக் கொன்றவரையும், அல்லது அல்லாஹ்வையும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களையும் எதிர்த்துப் போரிட்டவரையும் தவிர, வேறு எந்த மனிதரையும் கொல்வதற்கு இஸ்லாத்தில் அனுமதியிருப்பதாக நான் அறியவில்லை” என்று சொன்னேன்.

அப்போது அன்பஸா பின் சயீத் (ரஹ்) அவர்கள், “என்னிடம் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் (“அல்கசாமா' மற்றும் “உரைனா' சம்பவம் குறித்து) இப்படி இப்படியெல்லாம் அறிவித்தார்கள்” என்று சொன்னார்கள்.

நான் சொன்னேன்:

“அனஸ் (ரலி) அவர்கள் என்னிடம்கூட (இப்படிச்) சொன்னார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு சமுதாயத்தார் (“உக்ல்' மற்றும் “உரைனா' குலத்தைச் சேர்ந்தவர்கள்) வந்து உரையாடினார்கள். அப்போது அவர்கள், “இந்தப் பூமி (மதீனா)எங்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை (நாங்கள் நோய்வாய்ப்பட்டுவிட்டோம்)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், “இதோ, எங்களின் (தர்ம காரியத்திற் காக வந்துள்ள) இந்த ஒட்டகங்கள் (மேய்ச்சலுக்காக நகருக்கு) வெளியே செல்லவிருக்கின்றன. நீங்களும் இவற்று டன் சென்று இவற்றின் பாலையும் இவற்றின் சிறுநீரையும் அருந்துங்கள்” என்று சொன்னார்கள்.

அவ்வாறே அவர்கள் அவற்றுடன் வெளியே சென்று அவற்றின் சிறுநீரையும் அவற்றின் பாலையும் அருந்தி (நோய் நீங்கி) குணமடைந்தனர். பின்னர், ஒட்டகம் மேய்ப்பவரின்மீது பாய்ந்து அவரைக் கொன்றுவிட்டனர்; ஒட்டகங்களை ஓட்டியும் சென்றுவிட்டனர்.

ஓர் உயிரை (அநியாயமாகக்) கொன்று அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருட னும் போர் புரிந்து, அல்லாஹ்வின் தூதரை அச்சுறுத்திய இ(ந்தக் கொடுஞ்செயல் புரிந்த)வர்களுக்குத் தண்டனை கொடுப்பதில் தாமதம் காட்ட முடியுமா, என்ன?

அப்போது அன்பஸா (ரஹ்) அவர்கள், (வியப்புத் தெரிவிப்பது போல) “சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்று சொன்னார்கள்.

நான், “என்னை நீங்கள் சந்தேகப்படுகின்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(இல்லை) இதை எங்களுக்கு அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” என்று கூறிவிட்டு, “இந்த ஊர் (ஷாம்)வாசிகளே! இவரையும் இவரைப் போன்றவர் களையும் அல்லாஹ் உங்களிடையே வாழவைத்திருக்கும்வரை நீங்கள் நன்மையிலேயே நீடிப்பீர்கள்” என்று சொன்னார்கள்.8

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4611. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا الْفَزَارِيُّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَسَرَتِ الرُّبَيِّعُ ـ وَهْىَ عَمَّةُ أَنَسِ بْنِ مَالِكٍ ـ ثَنِيَّةَ جَارِيَةٍ مِنَ الأَنْصَارِ، فَطَلَبَ الْقَوْمُ الْقِصَاصَ، فَأَتَوُا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْقِصَاصِ. فَقَالَ أَنَسُ بْنُ النَّضْرِ عَمُّ أَنَسِ بْنِ مَالِكٍ لاَ وَاللَّهِ لاَ تُكْسَرْ سِنُّهَا يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا أَنَسُ كِتَابُ اللَّهِ الْقِصَاصُ ". فَرَضِيَ الْقَوْمُ وَقَبِلُوا الأَرْشَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ ".
பாடம் : 6 “(குற்றவியல் தண்டனையில்) காயங்களுக்கும் பழிவாங்கல் உண்டு” எனும் (5:45ஆவது) வசனத்தொடர்
4611. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையின் சகோதரி-ருபய்யிஉ பின்த் அந்நள்ர் (ரலி)-ஓர் அன்சாரி இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்துவிட்டார். அப்பெண்ணின் குலத்தார் பழிவாங்கலைக் கோரி நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்களும் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள். அப்போது என் தந்தையின் சகோதரர் அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அவ்வாறு நடக்காது; ருபய்யிஉவின் பல் உடைக்கப்படாது, அல்லாஹ்வின் தூதரே!” என்றார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அனஸே! (இந்த வழக்கில்) அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும் (ஆகவே, அதை வெறுக்கவோ மறுக்கவோ வேண்டாம்)” என்று கூறினார்கள். பிறகு அந்த (இளம் பெண்ணின்) குலத்தார் திருப்தியுடன் ஈட்டுத் தொகையை ஏற்றுக்கொண்டனர். (ருபய்யிஉவைப் பழிவாங்காமல் மன்னித்துவிட்டனர்.)

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விடுவார்களாயின் அதை அல்லாஹ் நிறைவேற்றிவிடுகின்றான்” என்று சொன்னார்கள்.9

அத்தியாயம் : 65
4612. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم كَتَمَ شَيْئًا مِمَّا أُنْزِلَ عَلَيْهِ، فَقَدْ كَذَبَ، وَاللَّهُ يَقُولُ {يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ} الآيَةَ.
பாடம் : 7 (எம்) தூதரே! உம்முடைய இறை வனிடமிருந்து உமக்கு அருளப் பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக! (எனும் 5:67ஆவது வசனத்தொடர்)
4612. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

முஹம்மத் (ஸல்) அவர்கள், தம்மீது அருளப்பெற்ற (வேதத்)திலிருந்து எதையும் மறைத்தார்கள் என்று உங்களிடம் யாரும் சொன்னால் அவர் பொய் சொல்லிவிட்டார். அல்லாஹ்வோ, “(எம்) தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக!” என்று கூறுகின்றான்.10

அத்தியாயம் : 65
4613. حَدَّثَنَا عَلِيُّ بْنُ سَلَمَةَ، حَدَّثَنَا مَالِكُ بْنُ سُعَيْرٍ، حَدَّثَنَا هِشَامٌ، عَنِ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ {لاَ يُؤَاخِذُكُمُ اللَّهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ} فِي قَوْلِ الرَّجُلِ لاَ وَاللَّهِ، وَبَلَى وَاللَّهِ.
பாடம் : 8 “நீங்கள் செய்த அர்த்தமற்ற சத்தி யங்களுக்காக அல்லாஹ் உங்களுக் குத் தண்டனை வழங்குவதில்லை” எனும் (5:89ஆவது) வசனத்தொடர்
4613. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

“நீங்கள் செய்த அர்த்தமற்ற சத்தியங் களுக்காக அல்லாஹ் உங்களுக்குத் தண்டனை வழங்குவதில்லை” எனும் (5:89ஆவது) இறைவசனம், “லா வல்லாஹி (இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக!') என்றும், “பலா வல்லாஹி (ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக!') என்றும் (பொருள் கொள்ளாமல் பழக்கத்தின் காரணமாகச் சத்தியம் செய்யும் சொற்களைக்) கூறுகின்றவரின் விஷயத்தில் அருளப்பெற்றது.


அத்தியாயம் : 65
4614. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ أَبِي رَجَاءٍ، حَدَّثَنَا النَّضْرُ، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ أَبَاهَا، كَانَ لاَ يَحْنَثُ فِي يَمِينٍ حَتَّى أَنْزَلَ اللَّهُ كَفَّارَةَ الْيَمِينِ. قَالَ أَبُو بَكْرٍ لاَ أَرَى يَمِينًا أُرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا، إِلاَّ قَبِلْتُ رُخْصَةَ اللَّهِ، وَفَعَلْتُ الَّذِي هُوَ خَيْرٌ.
பாடம் : 8 “நீங்கள் செய்த அர்த்தமற்ற சத்தி யங்களுக்காக அல்லாஹ் உங்களுக் குத் தண்டனை வழங்குவதில்லை” எனும் (5:89ஆவது) வசனத்தொடர்
4614. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (அபூபக்ர் (ரலி) அவர்கள்), சத்தியத்தை முறித்ததற்கான பரிகார(ம் தொடர்பான வசன)த்தை அல்லாஹ் அருளும்வரை எந்தச் சத்தியத்தையும் முறிக்காமலிருந்துவந்தார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள், “நான் ஒரு சத்தியத்தைச் செய்து, (அதன்பின் அதைக் கைவிட்டு) மற்ற (ஒன்றைத் தேர்ந்தெடுப்ப)தே அதைவிடச் சிறந்தது என்று கருதினால் (அதைக் கைவிட்டு) அல்லாஹ் அளித்த சலுகையை ஏற்றுக் கொண்டு எது சிறந்ததோ அதையே செய்வேன்” என்று சொன்னார்கள்.11

அத்தியாயம் : 65
4615. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ عَبْدِ اللَّهِ، رضى الله عنه قَالَ كُنَّا نَغْزُو مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلَيْسَ مَعَنَا نِسَاءٌ فَقُلْنَا أَلاَ نَخْتَصِي فَنَهَانَا عَنْ ذَلِكَ، فَرَخَّصَ لَنَا بَعْدَ ذَلِكَ أَنْ نَتَزَوَّجَ الْمَرْأَةَ بِالثَّوْبِ، ثُمَّ قَرَأَ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تُحَرِّمُوا طَيِّبَاتِ مَا أَحَلَّ اللَّهُ لَكُمْ }
பாடம் : 9 “இறைநம்பிக்கை கொண்டவர் களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி (ஹராமாக்கி)க்கொள்ளாதீர்கள்” எனும் (5:87ஆவது) வசனத்தொடர்
4615. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “எங்களுடன் துணைவியர் யாரும் இல்லாத நிலையில் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (ஓர்) அறப் போரில் கலந்துகொண்டிருந்தோம். ஆகவே, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம், “நாங்கள் காயடித்து (ஆண்மை நீக்கம் செய்து)கொள்ளலாமா?' என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள் அப்படிச் செய்ய வேண்டாமென்று எங்களைத் தடுத்தார்கள். அதன் பிறகு துணியை (மஹ்ராக)க் கொடுத்துப் பெண்ணை மணந்துகொள்ள எங்களுக்கு அனுமதியளித்தார்கள்” என்று கூறிவிட்டுப் பிறகு, “இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் உங்களுக்கு அனுமதித்த நல்லவற்றை விலக்கி (ஹராமாக்கி)க்கொள்ளாதீர்கள்” எனும் (5:87ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.12

அத்தியாயம் : 65
4616. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عُمَرَ بْنِ عَبْدِ الْعَزِيزِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ وَإِنَّ فِي الْمَدِينَةِ يَوْمَئِذٍ لَخَمْسَةَ أَشْرِبَةٍ، مَا فِيهَا شَرَابُ الْعِنَبِ.
பாடம் : 10 “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக மதுபானம், சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத் தக்க செயலாகும்” எனும் (5:90ஆவது) வசனத்தொடர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “அல்அஸ்லாம்' என்பது, (அறியாமைக் கால மக்கள்) தம் விவகாரங் களில் (ஒன்றைச் செய்யலாமா, வேண்டாமா என்பதை) முடிவு செய்வதற்காகப் பயன் படுத்திவந்த குறிபார்க்கும் அம்புகள் ஆகும்.13 “நுஸுப்' என்பது பலிப் பிராணிகளை அறுக்கும் பலிபீடங்களாகும். மற்றவர்கள் கூறுகின்றனர்: “அல்அஸ்லாம்' என்பதன் ஒருமை யான “அஸ்ஸலம்' என்பது (இரும்பு) முனை பொருத்தப்பட்டிராத அம்பாகும். “இஸ்திக்ஸாம்' (குறிபார்த்தல்) என்பது அம்புகளைக் குலுக்கிப் போட்டு, “வேண்டாம்' எனும் அம்பு வந்தால் (தான் எண்ணிய காரியத்தை) விட்டுவிடுவதையும், “செய்' எனும் அம்பு வந்தால் அதன்படி செய்வதையும் குறிக்கும். அம்புகளில் (“செய்யலாம்', “செய்ய வேண்டாம்'; “செய்தால் நல்லது', “செய்யா விட்டால் கேடு நேரிடும்' என்றெல்லாம்) பலவகையான அடையாளங்கள் இட்டு அவற்றால் (அறியாமைக் கால மக்கள்) குறிபார்த்துவந்தார்கள். இதிலிருந்து “ஃபஅல்(த்)து' எனும் வாய்பாட்டில் “கஸம்த்து' எனும் கடந்த கால வினையும் “குஸூம்' எனும் வேர்ச்சொல்லும் வரும்.
4616. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மது பானத்தைத் தடை செய்யும் இறைவசனம் அருளப்பெற்ற காலகட்டத் தில் ஐந்து வகையான மது பானங்கள் மதீனாவில் இருந்தன. அவற்றில் திராட்சை மதுபானம் இருக்கவில்லை.14


அத்தியாயம் : 65
4617. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا ابْنُ عُلَيَّةَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، قَالَ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ مَا كَانَ لَنَا خَمْرٌ غَيْرُ فَضِيخِكُمْ هَذَا الَّذِي تُسَمُّونَهُ الْفَضِيخَ. فَإِنِّي لَقَائِمٌ أَسْقِي أَبَا طَلْحَةَ وَفُلاَنًا وَفُلاَنًا إِذْ جَاءَ رَجُلٌ فَقَالَ وَهَلْ بَلَغَكُمُ الْخَبَرُ فَقَالُوا وَمَا ذَاكَ قَالَ حُرِّمَتِ الْخَمْرُ. قَالُوا أَهْرِقْ هَذِهِ الْقِلاَلَ يَا أَنَسُ. قَالَ فَمَا سَأَلُوا عَنْهَا وَلاَ رَاجَعُوهَا بَعْدَ خَبَرِ الرَّجُلِ.
பாடம் : 10 “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக மதுபானம், சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத் தக்க செயலாகும்” எனும் (5:90ஆவது) வசனத்தொடர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “அல்அஸ்லாம்' என்பது, (அறியாமைக் கால மக்கள்) தம் விவகாரங் களில் (ஒன்றைச் செய்யலாமா, வேண்டாமா என்பதை) முடிவு செய்வதற்காகப் பயன் படுத்திவந்த குறிபார்க்கும் அம்புகள் ஆகும்.13 “நுஸுப்' என்பது பலிப் பிராணிகளை அறுக்கும் பலிபீடங்களாகும். மற்றவர்கள் கூறுகின்றனர்: “அல்அஸ்லாம்' என்பதன் ஒருமை யான “அஸ்ஸலம்' என்பது (இரும்பு) முனை பொருத்தப்பட்டிராத அம்பாகும். “இஸ்திக்ஸாம்' (குறிபார்த்தல்) என்பது அம்புகளைக் குலுக்கிப் போட்டு, “வேண்டாம்' எனும் அம்பு வந்தால் (தான் எண்ணிய காரியத்தை) விட்டுவிடுவதையும், “செய்' எனும் அம்பு வந்தால் அதன்படி செய்வதையும் குறிக்கும். அம்புகளில் (“செய்யலாம்', “செய்ய வேண்டாம்'; “செய்தால் நல்லது', “செய்யா விட்டால் கேடு நேரிடும்' என்றெல்லாம்) பலவகையான அடையாளங்கள் இட்டு அவற்றால் (அறியாமைக் கால மக்கள்) குறிபார்த்துவந்தார்கள். இதிலிருந்து “ஃபஅல்(த்)து' எனும் வாய்பாட்டில் “கஸம்த்து' எனும் கடந்த கால வினையும் “குஸூம்' எனும் வேர்ச்சொல்லும் வரும்.
4617. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீங்கள் “ஃபளீக்' என்றழைக்கின்ற (பழுக்காத) இந்தப் பேரீச்சங்காய் மதுவைத் தவிர வேறெந்த மதுவும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எங்களிடம் இருக்கவில்லை. (ஒருமுறை) நான் (என் தாயாரின் இளைய கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்களுக்கும் இன்னாருக்கும் இன்னாருக்கும் மது ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் வந்து, “உங்களுக்குச் செய்தி எட்டியதா?” என்று கேட்டார். அங்கு இருந்தவர்கள், “என்ன அது?” என்று கேட்டனர். அவர், “மது தடை செய்யப்பட்டுவிட்டது” என்று பதிலளித்தார்.

அப்போது அவர்கள், “அனஸே! இந்த (மது) பீப்பாய்களைக் கீழே கொட்டிவிடுங்கள்” என்று கூறினர். அந்த மனிதர் அறிவித்த பிறகு அவர்கள் மதுவைக் குறித்து (வேறு யாரிடமும்) கேட்கவுமில்லை; மதுவைத் திரும்பிப் பார்க்கவுமில்லை.


அத்தியாயம் : 65
4618. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ، قَالَ صَبَّحَ أُنَاسٌ غَدَاةَ أُحُدٍ الْخَمْرَ فَقُتِلُوا مِنْ يَوْمِهِمْ جَمِيعًا شُهَدَاءَ، وَذَلِكَ قَبْلَ تَحْرِيمِهَا.
பாடம் : 10 “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக மதுபானம், சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத் தக்க செயலாகும்” எனும் (5:90ஆவது) வசனத்தொடர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “அல்அஸ்லாம்' என்பது, (அறியாமைக் கால மக்கள்) தம் விவகாரங் களில் (ஒன்றைச் செய்யலாமா, வேண்டாமா என்பதை) முடிவு செய்வதற்காகப் பயன் படுத்திவந்த குறிபார்க்கும் அம்புகள் ஆகும்.13 “நுஸுப்' என்பது பலிப் பிராணிகளை அறுக்கும் பலிபீடங்களாகும். மற்றவர்கள் கூறுகின்றனர்: “அல்அஸ்லாம்' என்பதன் ஒருமை யான “அஸ்ஸலம்' என்பது (இரும்பு) முனை பொருத்தப்பட்டிராத அம்பாகும். “இஸ்திக்ஸாம்' (குறிபார்த்தல்) என்பது அம்புகளைக் குலுக்கிப் போட்டு, “வேண்டாம்' எனும் அம்பு வந்தால் (தான் எண்ணிய காரியத்தை) விட்டுவிடுவதையும், “செய்' எனும் அம்பு வந்தால் அதன்படி செய்வதையும் குறிக்கும். அம்புகளில் (“செய்யலாம்', “செய்ய வேண்டாம்'; “செய்தால் நல்லது', “செய்யா விட்டால் கேடு நேரிடும்' என்றெல்லாம்) பலவகையான அடையாளங்கள் இட்டு அவற்றால் (அறியாமைக் கால மக்கள்) குறிபார்த்துவந்தார்கள். இதிலிருந்து “ஃபஅல்(த்)து' எனும் வாய்பாட்டில் “கஸம்த்து' எனும் கடந்த கால வினையும் “குஸூம்' எனும் வேர்ச்சொல்லும் வரும்.
4618. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

மக்கள் சிலர், உஹுத் போர் நடந்த நாளின் காலையில் மது அருந்தினர். அன்று அவர்கள் அனைவருமே வீர மரணம் அடைந்தார்கள். இது, மது தடை செய்யப்படுவதற்கு முன்னர் நடந்ததாகும்.15


அத்தியாயம் : 65
4619. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، أَخْبَرَنَا عِيسَى، وَابْنُ، إِدْرِيسَ عَنْ أَبِي حَيَّانَ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ سَمِعْتُ عُمَرَ ـ رضى الله عنه ـ عَلَى مِنْبَرِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَقُولُ أَمَّا بَعْدُ أَيُّهَا النَّاسُ إِنَّهُ نَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ وَهْىَ مِنْ خَمْسَةٍ، مِنَ الْعِنَبِ وَالتَّمْرِ وَالْعَسَلِ وَالْحِنْطَةِ وَالشَّعِيرِ، وَالْخَمْرُ مَا خَامَرَ الْعَقْلَ.
பாடம் : 10 “இறைநம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக மதுபானம், சூதாட்டம், பலிபீடங்கள், குறிபார்க்கும் அம்புகள் ஆகியவை ஷைத்தானின் அருவருக்கத் தக்க செயலாகும்” எனும் (5:90ஆவது) வசனத்தொடர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “அல்அஸ்லாம்' என்பது, (அறியாமைக் கால மக்கள்) தம் விவகாரங் களில் (ஒன்றைச் செய்யலாமா, வேண்டாமா என்பதை) முடிவு செய்வதற்காகப் பயன் படுத்திவந்த குறிபார்க்கும் அம்புகள் ஆகும்.13 “நுஸுப்' என்பது பலிப் பிராணிகளை அறுக்கும் பலிபீடங்களாகும். மற்றவர்கள் கூறுகின்றனர்: “அல்அஸ்லாம்' என்பதன் ஒருமை யான “அஸ்ஸலம்' என்பது (இரும்பு) முனை பொருத்தப்பட்டிராத அம்பாகும். “இஸ்திக்ஸாம்' (குறிபார்த்தல்) என்பது அம்புகளைக் குலுக்கிப் போட்டு, “வேண்டாம்' எனும் அம்பு வந்தால் (தான் எண்ணிய காரியத்தை) விட்டுவிடுவதையும், “செய்' எனும் அம்பு வந்தால் அதன்படி செய்வதையும் குறிக்கும். அம்புகளில் (“செய்யலாம்', “செய்ய வேண்டாம்'; “செய்தால் நல்லது', “செய்யா விட்டால் கேடு நேரிடும்' என்றெல்லாம்) பலவகையான அடையாளங்கள் இட்டு அவற்றால் (அறியாமைக் கால மக்கள்) குறிபார்த்துவந்தார்கள். இதிலிருந்து “ஃபஅல்(த்)து' எனும் வாய்பாட்டில் “கஸம்த்து' எனும் கடந்த கால வினையும் “குஸூம்' எனும் வேர்ச்சொல்லும் வரும்.
4619. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை யிóருந்தபடி, “(இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின்பு) மக்களே! மதுபானத் தடை(ச் சட்டம்) அருளப்பெற்றுவிட்டது. திராட்சை, பேரீச்சம்பழம், தேன், கோதுமை, தீட்டப்படாத கோதுமை ஆகிய ஐந்து பொருட்களிலிருந்தும் மது தயாரிக்கப் படுகிறது. (ஆயினும்,) அறிவை மயக்கும் அனைத்தும் மதுதான்” என்று கூறி னார்கள்.16

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4620. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ أَنَّ الْخَمْرَ، الَّتِي أُهْرِيقَتِ الْفَضِيخُ. وَزَادَنِي مُحَمَّدٌ عَنْ أَبِي النُّعْمَانِ قَالَ كُنْتُ سَاقِيَ الْقَوْمِ فِي مَنْزِلِ أَبِي طَلْحَةَ فَنَزَلَ تَحْرِيمُ الْخَمْرِ، فَأَمَرَ مُنَادِيًا فَنَادَى. فَقَالَ أَبُو طَلْحَةَ اخْرُجْ فَانْظُرْ مَا هَذَا الصَّوْتُ قَالَ فَخَرَجْتُ فَقُلْتُ هَذَا مُنَادٍ يُنَادِي أَلاَ إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ. فَقَالَ لِي اذْهَبْ فَأَهْرِقْهَا. قَالَ فَجَرَتْ فِي سِكَكِ الْمَدِينَةِ. قَالَ وَكَانَتْ خَمْرُهُمْ يَوْمَئِذٍ الْفَضِيخَ فَقَالَ بَعْضُ الْقَوْمِ قُتِلَ قَوْمٌ وَهْىَ فِي بُطُونِهِمْ قَالَ فَأَنْزَلَ اللَّهُ {لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا}.
பாடம் : 11 இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (விலக் கப்பட்ட பொருட்களில்) எதையேனும் (தடை செய்யப்படுவதற்கு முன்னர்) உட்கொண்டிருந்தால் அவர்கள்மீது (அது) குற்றமாகாது. ஆனால், அவர்கள் (இறையை) அஞ்சி, (முழுமையாக) இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்து, பின்னரும் (இறையை) அஞ்சி இறைநம்பிக்கை(யில் நிலையாக இருந்து)கொண்டு, பின்னரும் (இறையை) அஞ்சி நன்மை செய்திருக்க வேண்டும். (இவ்வாறு) நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கின்றான் (எனும் 5:93ஆவது இறைவசனம்)
4620. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:

(மதுபானம் தடை செய்யப்பட்ட அன்று மதீனாவின் வீதிகளில்) கொட்டப்பட்ட மது, (பழுக்காத) பேரீச்சங்காய் மது (ஃபளீக்) ஆகும்.

அபுந்நுஅமான் (ரஹ்) அவர்களிடமிருந்து முஹம்மத் பின் சலாம் (ரஹ்) அவர்கள் வழியாக இதே ஹதீஸ் கூடுதல் தகவலுடன் வந்துள்ளது. அந்தத் தகவலாவது:

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (மதுபானம் தடை செய்யப்பட்ட நாளன்று) நான் அபூதல்ஹா (ரலி) அவர்களின் வீட்டில் (அங்கிருந்த) மக்களுக்கு மது ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது (முழு) மது விலக்கிற்கான இறைவசனம் அருளப்பெற்றது. உடனே நபி (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு (மது தடை செய்யப்பட்ட செய்தியை மக்களுக்குத் தெரிவிக்க) பொது அறிவிப்புச் செய்யும்படி உத்தரவிட்டார்கள். அவர் அவ்வாறே அறிவிப்புச் செய்தார்.

இதைக் கேட்டதும் அபூதல்ஹா (ரலி) அவர்கள், “வெளியே போய் இது என்ன சப்தம் என்று பார்(த்து வா)” எனச் சொன்னார்கள். உடனே நான் வெளியே சென்றேன். (பார்த்துவிட்டுத் திரும்பி வந்து), “இதோ பொது அறிவிப்புச் செய்பவர், (மக்களே!) எச்சரிக்கை! மது பானம் தடை செய்யப்பட்டுவிட்டது என்று அறிவிக்கிறார்” என்று சொன்னேன். அதற்கு அபூதல்ஹா (ரலி) அவர்கள் என்னிடம், “நீ போய், இதைக் கொட்டி விடு!” என்று சொன்னார்கள். (மக்கள் மதுவைத் தரையில் கொட்ட) அது மதீனாவின் தெருக்களில் ஓடியது. அந்த நாளில் அவர்களது மதுபானம் (பழுக்காத) பேரீச்சங்காய் மதுவாக இருந்தது.

அப்போது மக்களில் சிலர், “(உஹுத் போரில்) ஒரு கூட்டத்தார் தம் வயிறுகளில் மது இருக்கக் கொல்லப்பட்டார்களே!” என்று கூறினர். அப்போதுதான், “இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (விலக்கப்பட்ட பொருட்களில்) எதையேனும் (தடை செய்யப்படுவதற்கு முன்னர்) உட்கொண்டிருந்தால் அவர்கள்மீது (அது) குற்றமாகாது” எனும் (5:93ஆவது) இறைவசனத்தை அல்லாஹ் அருளினான்.17

அத்தியாயம் : 65
4621. حَدَّثَنَا مُنْذِرُ بْنُ الْوَلِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْجَارُودِيُّ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُوسَى بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ خَطَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خُطْبَةً مَا سَمِعْتُ مِثْلَهَا قَطُّ، قَالَ " لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلاً وَلَبَكَيْتُمْ كَثِيرًا ". قَالَ فَغَطَّى أَصْحَابُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وُجُوهَهُمْ لَهُمْ خَنِينٌ، فَقَالَ رَجُلٌ مَنْ أَبِي قَالَ فُلاَنٌ فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ {لاَ تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ}. رَوَاهُ النَّضْرُ وَرَوْحُ بْنُ عُبَادَةَ عَنْ شُعْبَةَ.
பாடம் : 12 “இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித்துருவிக்) கேட்டுக்கொண்டிருக்காதீர்கள்! (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும்” எனும் (5:101ஆவது) இறைவசனம்
4621. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருநாள்) ஓர் உரை நிகழ்த்தினார்கள். அதைப் போன்ற ஓர் உரையை நான் (என் வாழ்நாளில்) ஒருபோதும் கேட்டதில்லை. (அதில்) அவர்கள், “நான் அறிகின்றவற்றை நீங்கள் அறிந்தால், நீங்கள் குறைவாகச் சிரிப்பீர்கள்; அதிகமாக அழுவீர்கள்” என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் தம் முகங்களை மூடிக்கொண்டு சப்தமிட்டு அழுதார்கள். அப்போது ஒரு மனிதர், “என் தந்தை யார்?' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “இன்னார்' என்று சொன்னார்கள். அப்போதுதான், “இறைநம்பிக்கைகொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித்துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும்” எனும் இந்த (5:101ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 65
4622. حَدَّثَنَا الْفَضْلُ بْنُ سَهْلٍ، حَدَّثَنَا أَبُو النَّضْرِ، حَدَّثَنَا أَبُو خَيْثَمَةَ، حَدَّثَنَا أَبُو الْجُوَيْرِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ قَوْمٌ يَسْأَلُونَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم اسْتِهْزَاءً، فَيَقُولُ الرَّجُلُ مَنْ أَبِي وَيَقُولُ الرَّجُلُ تَضِلُّ نَاقَتُهُ أَيْنَ نَاقَتِي فَأَنْزَلَ اللَّهُ فِيهِمْ هَذِهِ الآيَةَ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ} حَتَّى فَرَغَ مِنَ الآيَةِ كُلِّهَا.
பாடம் : 12 “இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித்துருவிக்) கேட்டுக்கொண்டிருக்காதீர்கள்! (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும்” எனும் (5:101ஆவது) இறைவசனம்
4622. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் (நபி (ஸல்) அவர்களிடம்), “என் தந்தை யார்?” என்று கேட்டார். தமது ஒட்டகம் காணாமற் போய்விட்ட இன்னொருவர், “என் ஒட்டகம் எங்கே?” என்று கேட்டார். அப்போதுதான் அல்லாஹ், அவர்கள் விஷயத்தில் இந்த வசனத்தை அருளினான்:

இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மனவருத்தத்தை ஏற்படுத்தும். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டுவிடும். நீங்கள் (இதுவரை விளையாட்டுத்தனமாக) வினவியவற்றை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கின்றான். (5:101)

அத்தியாயம் : 65