4349. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانُ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ بْنِ إِسْحَاقَ بْنِ أَبِي إِسْحَاقَ، حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي إِسْحَاقَ، سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ. بَعَثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ خَالِدِ بْنِ الْوَلِيدِ إِلَى الْيَمَنِ، قَالَ ثُمَّ بَعَثَ عَلِيًّا بَعْدَ ذَلِكَ مَكَانَهُ فَقَالَ مُرْ أَصْحَابَ خَالِدٍ، مَنْ شَاءَ مِنْهُمْ أَنْ يُعَقِّبَ مَعَكَ فَلْيُعَقِّبْ، وَمَنْ شَاءَ فَلْيُقْبِلْ. فَكُنْتُ فِيمَنْ عَقَّبَ مَعَهُ، قَالَ فَغَنِمْتُ أَوَاقٍ ذَوَاتِ عَدَدٍ.
பாடம் : 62
அலீ பின் அபீதாலிப் (ரலி), காலித் பின் அல்வலீத் (ரலி) ஆகிய இருவரும் “விடைபெறும் ஹஜ்ஜுக்கு முன்பாக யமன் நாட்டிற்கு அனுப்பப்படுதல்382
4349. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களுடன் யமன் நாட்டிற்கு எங்களை அனுப்பினார்கள். அதன் பிறகு, நபி (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் இடத்தில் அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அலீயே! காலிதின் சகாக்களில் “உங்களைத் தொடர்ந்து (யமன் நாட்டுக்கு) வர விரும்புபவர் தொடர்ந்து வரட்டும்! (மதீனாவை முன்னோக்சிச் செல்ல) விரும்புபவர் முன்னோக்கிச் செல்லட்டும்!' என்று அவர்களுக்கு உத்தரவிடுங்கள்” என்று சொன்னார்கள்.
நான் அலீ (ரலி) அவர்களைத் தொடர்ந்து வந்தவர்களில் ஒருவனாயிருந் தேன். போர்ச் செல்வமாக, பெரும் எண்ணிக்கையில் “ஊகியா'க்களை நான் பெற்றேன்.
அத்தியாயம் : 64
4349. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களுடன் யமன் நாட்டிற்கு எங்களை அனுப்பினார்கள். அதன் பிறகு, நபி (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் இடத்தில் அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அலீயே! காலிதின் சகாக்களில் “உங்களைத் தொடர்ந்து (யமன் நாட்டுக்கு) வர விரும்புபவர் தொடர்ந்து வரட்டும்! (மதீனாவை முன்னோக்சிச் செல்ல) விரும்புபவர் முன்னோக்கிச் செல்லட்டும்!' என்று அவர்களுக்கு உத்தரவிடுங்கள்” என்று சொன்னார்கள்.
நான் அலீ (ரலி) அவர்களைத் தொடர்ந்து வந்தவர்களில் ஒருவனாயிருந் தேன். போர்ச் செல்வமாக, பெரும் எண்ணிக்கையில் “ஊகியா'க்களை நான் பெற்றேன்.
அத்தியாயம் : 64
4350. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ سُوَيْدِ بْنِ مَنْجُوفٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ بَعَثَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلِيًّا إِلَى خَالِدٍ لِيَقْبِضَ الْخُمُسَ وَكُنْتُ أُبْغِضُ عَلِيًّا، وَقَدِ اغْتَسَلَ، فَقُلْتُ لِخَالِدٍ أَلاَ تَرَى إِلَى هَذَا فَلَمَّا قَدِمْنَا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم ذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ "" يَا بُرَيْدَةُ أَتُبْغِضُ عَلِيًّا "". فَقُلْتُ نَعَمْ. قَالَ "" لاَ تُبْغِضْهُ فَإِنَّ لَهُ فِي الْخُمُسِ أَكْثَرَ مِنْ ذَلِكَ "".
பாடம் : 62
அலீ பின் அபீதாலிப் (ரலி), காலித் பின் அல்வலீத் (ரலி) ஆகிய இருவரும் “விடைபெறும் ஹஜ்ஜுக்கு முன்பாக யமன் நாட்டிற்கு அனுப்பப்படுதல்382
4350. புரைதா பின் அல்ஹஸீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களிடம் “குமுஸ்' நிதியைப் பெற்றுவர அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ (ரலி) அவர்கள் (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக்கொண்ட பின்) குளித்துவிட்டு வந்தார்கள். அவர்கள் மீது நான் கோபமடைந்து காலித் (ரலி) அவர்களிடம், “இவரை நீங்கள் பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்டேன்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அதற்கு அவர்கள், “புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா?” என்று கேட்க நான், “ஆம்!' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “அவர்மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு “குமுஸ்' நிதியில் அதைவிட அதிக உரிமையுள்ளது” என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 64
4350. புரைதா பின் அல்ஹஸீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களிடம் “குமுஸ்' நிதியைப் பெற்றுவர அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ (ரலி) அவர்கள் (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக்கொண்ட பின்) குளித்துவிட்டு வந்தார்கள். அவர்கள் மீது நான் கோபமடைந்து காலித் (ரலி) அவர்களிடம், “இவரை நீங்கள் பார்க்கமாட்டீர்களா?” என்று கேட்டேன்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அதற்கு அவர்கள், “புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா?” என்று கேட்க நான், “ஆம்!' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், “அவர்மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு “குமுஸ்' நிதியில் அதைவிட அதிக உரிமையுள்ளது” என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 64
4351. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ بْنِ شُبْرُمَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنِ أَبِي نُعْمٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، يَقُولُ بَعَثَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنَ الْيَمَنِ بِذُهَيْبَةٍ فِي أَدِيمٍ مَقْرُوظٍ لَمْ تُحَصَّلْ مِنْ تُرَابِهَا، قَالَ فَقَسَمَهَا بَيْنَ أَرْبَعَةِ نَفَرٍ بَيْنَ عُيَيْنَةَ بْنِ بَدْرٍ، وَأَقْرَعَ بْنِ حَابِسٍ وَزَيْدِ الْخَيْلِ، وَالرَّابِعُ إِمَّا عَلْقَمَةُ وَإِمَّا عَامِرُ بْنُ الطُّفَيْلِ، فَقَالَ رَجُلٌ مِنْ أَصْحَابِهِ كُنَّا نَحْنُ أَحَقَّ بِهَذَا مِنْ هَؤُلاَءِ. قَالَ فَبَلَغَ ذَلِكَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَلاَ تَأْمَنُونِي وَأَنَا أَمِينُ مَنْ فِي السَّمَاءِ، يَأْتِينِي خَبَرُ السَّمَاءِ صَبَاحًا وَمَسَاءً "". قَالَ فَقَامَ رَجُلٌ غَائِرُ الْعَيْنَيْنِ، مُشْرِفُ الْوَجْنَتَيْنِ، نَاشِزُ الْجَبْهَةِ، كَثُّ اللِّحْيَةِ، مَحْلُوقُ الرَّأْسِ، مُشَمَّرُ الإِزَارِ، فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، اتَّقِ اللَّهَ. قَالَ "" وَيْلَكَ أَوَلَسْتُ أَحَقَّ أَهْلِ الأَرْضِ أَنْ يَتَّقِيَ اللَّهَ "". قَالَ ثُمَّ وَلَّى الرَّجُلُ، قَالَ خَالِدُ بْنُ الْوَلِيدِ يَا رَسُولَ اللَّهِ، أَلاَ أَضْرِبُ عُنُقَهُ قَالَ "" لاَ، لَعَلَّهُ أَنْ يَكُونَ يُصَلِّي "". فَقَالَ خَالِدٌ وَكَمْ مِنْ مُصَلٍّ يَقُولُ بِلِسَانِهِ مَا لَيْسَ فِي قَلْبِهِ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنِّي لَمْ أُومَرْ أَنْ أَنْقُبَ قُلُوبَ النَّاسِ، وَلاَ أَشُقَّ بُطُونَهُمْ "" قَالَ ثُمَّ نَظَرَ إِلَيْهِ وَهْوَ مُقَفٍّ فَقَالَ "" إِنَّهُ يَخْرُجُ مِنْ ضِئْضِئِ هَذَا قَوْمٌ يَتْلُونَ كِتَابَ اللَّهِ رَطْبًا، لاَ يُجَاوِزُ حَنَاجِرَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ "". وَأَظُنُّهُ قَالَ "" لَئِنْ أَدْرَكْتُهُمْ لأَقْتُلَنَّهُمْ قَتْلَ ثَمُودَ "".
பாடம் : 62
அலீ பின் அபீதாலிப் (ரலி), காலித் பின் அல்வலீத் (ரலி) ஆகிய இருவரும் “விடைபெறும் ஹஜ்ஜுக்கு முன்பாக யமன் நாட்டிற்கு அனுப்பப்படுதல்382
4351. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமனிலிருந்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள்: உயைனா பின் பத்ர் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), ஸைத் அல்கைல் (ரலி). நான்காமவர் அல்கமா (ரலி); அல்லது ஆமிர் பின் துஃபைல் (ரó). அப்போது நபித்தோழர்களில் ஒருவர், “இதைப் பெறுவதற்கு இவர்களைவிடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம்தான்” என்று கூறினார்.
இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என்மீது நீங்கள் நம்பிக்கை வைக்கமாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்தவண்ண முள்ளன” என்று சொன்னார்கள்.
அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் உப்பிய, நெற்றி புடைத்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?” என்று கேட்டார்கள்.
பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். அப்போது காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவருடைய தலையைக் கொய்து விடட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்” என்று சொன்னார்கள். அதற்கு காலித் (ரலி) அவர்கள், “எத்தனையோ தொழுகையாளிகள் தமது இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகிறார்கள்” என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைப் பிளந்து பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை” என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்றுகொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்தார்கள்.
மேலும் கூறினார்கள்: இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக ஓதுவார்கள். ஆனால்,அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்கள், வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறிவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார் கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளைஅடைந்தால் “ஆத்' கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போல அவர்களை நிச்சயம் அழித்துவிடுவேன்.383
அத்தியாயம் : 64
4351. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமனிலிருந்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள்: உயைனா பின் பத்ர் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), ஸைத் அல்கைல் (ரலி). நான்காமவர் அல்கமா (ரலி); அல்லது ஆமிர் பின் துஃபைல் (ரó). அப்போது நபித்தோழர்களில் ஒருவர், “இதைப் பெறுவதற்கு இவர்களைவிடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம்தான்” என்று கூறினார்.
இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என்மீது நீங்கள் நம்பிக்கை வைக்கமாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்தவண்ண முள்ளன” என்று சொன்னார்கள்.
அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் உப்பிய, நெற்றி புடைத்த, அடர்த்தியான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப்பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்?” என்று கேட்டார்கள்.
பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். அப்போது காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் அவருடைய தலையைக் கொய்து விடட்டுமா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “(அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம்” என்று சொன்னார்கள். அதற்கு காலித் (ரலி) அவர்கள், “எத்தனையோ தொழுகையாளிகள் தமது இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகிறார்கள்” என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மக்களின் இதயங்களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர்களின் வயிறுகளைப் பிளந்து பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை” என்று கூறிவிட்டு, திரும்பிச் சென்றுகொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்தார்கள்.
மேலும் கூறினார்கள்: இந்த மனிதரின் பரம்பரையிலிருந்து ஒரு சமுதாயத்தார் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை இனிமையாக ஓதுவார்கள். ஆனால்,அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்கள், வேட்டையாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறிவிடுவதைப் போன்று மார்க்கத்திலிருந்து வெளியேறிவிடுவார் கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளைஅடைந்தால் “ஆத்' கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போல அவர்களை நிச்சயம் அழித்துவிடுவேன்.383
அத்தியாயம் : 64
4352. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ عَطَاءٌ قَالَ جَابِرٌ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلِيًّا أَنْ يُقِيمَ عَلَى إِحْرَامِهِ. زَادَ مُحَمَّدُ بْنُ بَكْرٍ عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ عَطَاءٌ قَالَ جَابِرٌ فَقَدِمَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رضى الله عنه بِسِعَايَتِهِ، قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" بِمَ أَهْلَلْتَ يَا عَلِيُّ "". قَالَ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم قَالَ "" فَأَهْدِ وَامْكُثْ حَرَامًا كَمَا أَنْتَ "". قَالَ وَأَهْدَى لَهُ عَلِيٌّ هَدْيًا.
பாடம் : 62
அலீ பின் அபீதாலிப் (ரலி), காலித் பின் அல்வலீத் (ரலி) ஆகிய இருவரும் “விடைபெறும் ஹஜ்ஜுக்கு முன்பாக யமன் நாட்டிற்கு அனுப்பப்படுதல்382
4352. அதாஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
“(யமன் நாட்டிலிருந்து ஹஜ் செய்வதற் காக வருகை தந்த) அலீ (ரலி) அவர்களுக்கு, அவர்களது இஹ்ராமிலேயே தொடர்ந்து நீடிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
முஹம்மத் பின் பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இதே ஹதீஸ் சற்று கூடுதல் தகவலுடன் இடம்பெற்றுள்ளது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (யமனின்) அதிகாரி என்ற முறையில் (ஹஜ் செய்ய) வருகை தந்தார்கள். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “அலீயே! நீங்கள் எதற்காக இஹ்ராம் கட்டினீர்கள்?” எனக் கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காகவே நானும் கட்டியுள்ளேன்” என்றார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இப்போது இருப்பதைப் போன்று இஹ்ராமிலேயே நீடித்து (ஹஜ்ஜையும் உம்ராவையும் ஒருசேர முடித்தபின்னர்) குர்பானி கொடுங்கள்” என்று சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக குர்பானி பிராணி ஒன்றைப் பலியிட்டார்கள்.384
அத்தியாயம் : 64
4352. அதாஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
“(யமன் நாட்டிலிருந்து ஹஜ் செய்வதற் காக வருகை தந்த) அலீ (ரலி) அவர்களுக்கு, அவர்களது இஹ்ராமிலேயே தொடர்ந்து நீடிக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
முஹம்மத் பின் பக்ர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் இதே ஹதீஸ் சற்று கூடுதல் தகவலுடன் இடம்பெற்றுள்ளது:
அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (யமனின்) அதிகாரி என்ற முறையில் (ஹஜ் செய்ய) வருகை தந்தார்கள். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “அலீயே! நீங்கள் எதற்காக இஹ்ராம் கட்டினீர்கள்?” எனக் கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காகவே நானும் கட்டியுள்ளேன்” என்றார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இப்போது இருப்பதைப் போன்று இஹ்ராமிலேயே நீடித்து (ஹஜ்ஜையும் உம்ராவையும் ஒருசேர முடித்தபின்னர்) குர்பானி கொடுங்கள்” என்று சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக குர்பானி பிராணி ஒன்றைப் பலியிட்டார்கள்.384
அத்தியாயம் : 64
4353. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، حَدَّثَنَا بَكْرٌ، أَنَّهُ ذَكَرَ لاِبْنِ عُمَرَ أَنَّ أَنَسًا حَدَّثَهُمْ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم أَهَلَّ بِعُمْرَةٍ وَحَجَّةٍ، فَقَالَ أَهَلَّ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالْحَجِّ، وَأَهْلَلْنَا بِهِ مَعَهُ، فَلَمَّا قَدِمْنَا مَكَّةَ قَالَ " مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْىٌ فَلْيَجْعَلْهَا عُمْرَةً ". وَكَانَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم هَدْىٌ، فَقَدِمَ عَلَيْنَا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ مِنَ الْيَمَنِ حَاجًّا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " بِمَ أَهْلَلْتَ فَإِنَّ مَعَنَا أَهْلَكَ ". قَالَ أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم. قَالَ " فَأَمْسِكْ، فَإِنَّ مَعَنَا هَدْيًا ".
பாடம் : 62
அலீ பின் அபீதாலிப் (ரலி), காலித் பின் அல்வலீத் (ரலி) ஆகிய இருவரும் “விடைபெறும் ஹஜ்ஜுக்கு முன்பாக யமன் நாட்டிற்கு அனுப்பப்படுதல்382
4353. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் (சேர்த்து ஒரே) இஹ்ராம் கட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜை எண்ணியபோது நாங்களும் அவர்களுடன் ஹஜ்ஜையே எண்ணினோம். நாங்கள் மக்காவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள், “எவருடன் குர்பானி பிராணி இல்லையோ அவர் தமது ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கி (நிய்யத் செய்து ஹஜ்ஜைப் பிறகு செய்து) கொள்ளட்டும்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களுடன் குர்பானி பிராணி இருந்தது.
அப்போது எங்களிடம் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய நாடியவராக யமனிலிருந்து வர, நபி (ஸல்) அவர்கள், “எதற்காக இஹ்ராம் கட்டினீர்கள்? ஏனெனில், உங்கள் மனைவி(யும் என் மகளுமான ஃபாத்திமா) நம்முடன்தான் இருக்கிறார்” என்று கேட்டார்கள்.
அலீ (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் கட்டியுள்ளேன்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இஹ்ராமிலேயே நீடித்திருங்கள். ஏனெனில், நம்முடன் குர்பானி பிராணி உள்ளது” என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 64
4353. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் (சேர்த்து ஒரே) இஹ்ராம் கட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜை எண்ணியபோது நாங்களும் அவர்களுடன் ஹஜ்ஜையே எண்ணினோம். நாங்கள் மக்காவுக்கு வந்தபோது நபி (ஸல்) அவர்கள், “எவருடன் குர்பானி பிராணி இல்லையோ அவர் தமது ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கி (நிய்யத் செய்து ஹஜ்ஜைப் பிறகு செய்து) கொள்ளட்டும்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களுடன் குர்பானி பிராணி இருந்தது.
அப்போது எங்களிடம் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஹஜ் செய்ய நாடியவராக யமனிலிருந்து வர, நபி (ஸல்) அவர்கள், “எதற்காக இஹ்ராம் கட்டினீர்கள்? ஏனெனில், உங்கள் மனைவி(யும் என் மகளுமான ஃபாத்திமா) நம்முடன்தான் இருக்கிறார்” என்று கேட்டார்கள்.
அலீ (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் கட்டியுள்ளேன்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்கள் இஹ்ராமிலேயே நீடித்திருங்கள். ஏனெனில், நம்முடன் குர்பானி பிராணி உள்ளது” என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 64
4355. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا خَالِدٌ، حَدَّثَنَا بَيَانٌ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ كَانَ بَيْتٌ فِي الْجَاهِلِيَّةِ يُقَالُ لَهُ ذُو الْخَلَصَةِ وَالْكَعْبَةُ الْيَمَانِيَةُ وَالْكَعْبَةُ الشَّأْمِيَّةُ، فَقَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَلاَ تُرِيحُنِي مِنْ ذِي الْخَلَصَةِ "". فَنَفَرْتُ فِي مِائَةٍ وَخَمْسِينَ رَاكِبًا، فَكَسَرْنَاهُ وَقَتَلْنَا مَنْ وَجَدْنَا عِنْدَهُ، فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرْتُهُ، فَدَعَا لَنَا وَلأَحْمَسَ.
பாடம் : 63
“துல் கலஸா' போர்385
4355. ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் “துல் கலஸா' என்றழைக்கப்பட்டுவந்த (இணை வைப்போரின்) ஆலயம் ஒன்று இருந்தது. அது “யமன் நாட்டு கஅபா' என்றும் “ஷாம் நாட்டு (திசையை நோக்கி வாசல் அமைந்த) கஅபா' என்றும் அழைக்கப்பட்டுவந்தது. ஆகவே, என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “என்னை துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள்.
உடனே நான் நூற்றைம்பது (குதிரை) சவாரி செய்யும் வீரர்களுடன் புறப்பட்டு விரைந்து சென்றேன். அதை நாங்கள் உடைத்துப் போட்டுவிட்டு, அங்கு நாங்கள் கண்டவர்களைக் கொன்றுவிட்டோம். பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு (விவரம்) தெரிவித்தேன். அவர்கள் எங்களுக்காகவும் (இந்த நடவடிக்கையில் பங்கு பெற்ற) “அஹ்மஸ்' குலத்தாருக்காகவும் (நன்மை வேண்டிப்) பிரார்த்தித்தார்கள்.386
அத்தியாயம் : 64
4355. ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அறியாமைக் காலத்தில் “துல் கலஸா' என்றழைக்கப்பட்டுவந்த (இணை வைப்போரின்) ஆலயம் ஒன்று இருந்தது. அது “யமன் நாட்டு கஅபா' என்றும் “ஷாம் நாட்டு (திசையை நோக்கி வாசல் அமைந்த) கஅபா' என்றும் அழைக்கப்பட்டுவந்தது. ஆகவே, என்னிடம் நபி (ஸல்) அவர்கள், “என்னை துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள்.
உடனே நான் நூற்றைம்பது (குதிரை) சவாரி செய்யும் வீரர்களுடன் புறப்பட்டு விரைந்து சென்றேன். அதை நாங்கள் உடைத்துப் போட்டுவிட்டு, அங்கு நாங்கள் கண்டவர்களைக் கொன்றுவிட்டோம். பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு (விவரம்) தெரிவித்தேன். அவர்கள் எங்களுக்காகவும் (இந்த நடவடிக்கையில் பங்கு பெற்ற) “அஹ்மஸ்' குலத்தாருக்காகவும் (நன்மை வேண்டிப்) பிரார்த்தித்தார்கள்.386
அத்தியாயம் : 64
4356. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا قَيْسٌ، قَالَ قَالَ لِي جَرِيرٌ ـ رضى الله عنه ـ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَلاَ تُرِيحُنِي مِنْ ذِي الْخَلَصَةِ "". وَكَانَ بَيْتًا فِي خَثْعَمَ يُسَمَّى الْكَعْبَةَ الْيَمَانِيَةَ، فَانْطَلَقْتُ فِي خَمْسِينَ وَمِائَةِ فَارِسٍ مِنْ أَحْمَسَ، وَكَانُوا أَصْحَابَ خَيْلٍ، وَكُنْتُ لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ، فَضَرَبَ فِي صَدْرِي حَتَّى رَأَيْتُ أَثَرَ أَصَابِعِهِ فِي صَدْرِي، وَقَالَ "" اللَّهُمَّ ثَبِّتْهُ، وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا "". فَانْطَلَقَ إِلَيْهَا فَكَسَرَهَا وَحَرَّقَهَا، ثُمَّ بَعَثَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ رَسُولُ جَرِيرٍ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، مَا جِئْتُكَ حَتَّى تَرَكْتُهَا كَأَنَّهَا جَمَلٌ أَجْرَبُ. قَالَ فَبَارَكَ فِي خَيْلِ أَحْمَسَ وَرِجَالِهَا خَمْسَ مَرَّاتٍ.
பாடம் : 63
“துல் கலஸா' போர்385
4356. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அது “கஸ்அம்' குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது “யமன் நாட்டு கஅபா' என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்போது நான் “அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் சென்றேன். “அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தனர். என்னால் குதிரையில் சரியாக உட்கார முடியவில்லை.
ஆகவே, நபி (ஸல்) அவர்கள், தம் விரல்கள் பதிந்துள்ள அடையாளத்தை என் நெஞ்சில் நான் காணும் அளவுக்கு அதில் அடித்து, “இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப் பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
உடனே நான் அங்கு சென்று அதை உடைத்து எரித்துவிட்டேன். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (தூதுவர் ஒருவரை) அனுப்பினேன். அவர், “தங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அந்த ஆலயத்தைச் சிரங்கு பிடித்த ஒட்டகம் போன்ற நிலையில் விட்டுவிட்டுத்தான் நான் உங்களிடம் வந்துள்ளேன்” என்று சொன்னார்.
நபி (ஸல்) அவர்கள், “(இறைவா!) “அஹ்மஸ்' குலத்தாரின் குதிரைகளிலும் அவர்களின் மக்களிலும் வளர்ச்சியை அருள்வாயாக!” என்று ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.387
அத்தியாயம் : 64
4356. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?” என்று கேட்டார்கள். அது “கஸ்அம்' குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது “யமன் நாட்டு கஅபா' என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்போது நான் “அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் சென்றேன். “அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தனர். என்னால் குதிரையில் சரியாக உட்கார முடியவில்லை.
ஆகவே, நபி (ஸல்) அவர்கள், தம் விரல்கள் பதிந்துள்ள அடையாளத்தை என் நெஞ்சில் நான் காணும் அளவுக்கு அதில் அடித்து, “இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப் பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
உடனே நான் அங்கு சென்று அதை உடைத்து எரித்துவிட்டேன். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (தூதுவர் ஒருவரை) அனுப்பினேன். அவர், “தங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அந்த ஆலயத்தைச் சிரங்கு பிடித்த ஒட்டகம் போன்ற நிலையில் விட்டுவிட்டுத்தான் நான் உங்களிடம் வந்துள்ளேன்” என்று சொன்னார்.
நபி (ஸல்) அவர்கள், “(இறைவா!) “அஹ்மஸ்' குலத்தாரின் குதிரைகளிலும் அவர்களின் மக்களிலும் வளர்ச்சியை அருள்வாயாக!” என்று ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.387
அத்தியாயம் : 64
4357. حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلاَ تُرِيحُنِي مِنْ ذِي الْخَلَصَةِ "". فَقُلْتُ بَلَى. فَانْطَلَقْتُ فِي خَمْسِينَ وَمِائَةِ فَارِسٍ مِنْ أَحْمَسَ وَكَانُوا أَصْحَابَ خَيْلٍ وَكُنْتُ لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَضَرَبَ يَدَهُ عَلَى صَدْرِي حَتَّى رَأَيْتُ أَثَرَ يَدِهِ فِي صَدْرِي وَقَالَ "" اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا "". قَالَ فَمَا وَقَعْتُ عَنْ فَرَسٍ بَعْدُ. قَالَ وَكَانَ ذُو الْخَلَصَةِ بَيْتًا بِالْيَمَنِ لِخَثْعَمَ وَبَجِيلَةَ، فِيهِ نُصُبٌ تُعْبَدُ، يُقَالُ لَهُ الْكَعْبَةُ. قَالَ فَأَتَاهَا فَحَرَّقَهَا بِالنَّارِ وَكَسَرَهَا. قَالَ وَلَمَّا قَدِمَ جَرِيرٌ الْيَمَنَ كَانَ بِهَا رَجُلٌ يَسْتَقْسِمُ بِالأَزْلاَمِ فَقِيلَ لَهُ إِنَّ رَسُولَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم هَا هُنَا فَإِنْ قَدَرَ عَلَيْكَ ضَرَبَ عُنُقَكَ. قَالَ فَبَيْنَمَا هُوَ يَضْرِبُ بِهَا إِذْ وَقَفَ عَلَيْهِ جَرِيرٌ فَقَالَ لَتَكْسِرَنَّهَا وَلَتَشْهَدَنَّ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ أَوْ لأَضْرِبَنَّ عُنُقَكَ. قَالَ فَكَسَرَهَا وَشَهِدَ، ثُمَّ بَعَثَ جَرِيرٌ رَجُلاً مِنْ أَحْمَسَ يُكْنَى أَبَا أَرْطَاةَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يُبَشِّرُهُ بِذَلِكَ، فَلَمَّا أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا جِئْتُ حَتَّى تَرَكْتُهَا كَأَنَّهَا جَمَلٌ أَجْرَبُ. قَالَ فَبَرَّكَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى خَيْلِ أَحْمَسَ وَرِجَالِهَا خَمْسَ مَرَّاتٍ.
பாடம் : 63
“துல் கலஸா' போர்385
4357. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான், “சரி (விடுவிக்கிறேன்)” என்று சொன்னேன். அவ்வாறே, “அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் (துல் கலஸாவை நோக்கிப்) புறப்பட்டேன். “அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தார்கள். என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை. அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள் தமது கையால் என் நெஞ்சின் மீது அடித்தார்கள். எந்த அளவுக்கென்றால், அவர்களது கையின் அடையாளத்தை என் நெஞ்சில் நான் பார்த்தேன்.
அப்போது அவர்கள், “இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
அதன் பிறகு நான் (ஒருபோதும்) எந்த குதிரையிலிருந்தும் விழுந்ததில்லை. “துல் கலஸா' என்பது யமன் நாட்டிலிருந்த “கஸ்அம்' மற்றும் “பஜீலா' குலத் தாரின் ஆலயமாகும். அதில், வழிபாடு செய்யப்பட்டுவந்த பலிபீடங்கள் இருந்தன. அது “அல்கஅபா' என்று அழைக்கப் பட்டுவந்தது. நான் அங்கு சென்று அதைத் தீயிட்டுக் கொளுத்தி உடைத்துவிட்டேன். நான் யமன் நாட்டுக்குச் சென்றபோது அங்கு அம்புகளை வைத்துக் குறி கேட்கின்ற மனிதர் ஒருவர் இருந்தார். அப்போது அவரிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கே (அருகில்தான்) இருக்கிறார்கள். அவர்களிடம் நீ சிக்கிக்கொண்டால் உன் கழுத்தைத் துண்டித்துவிடுவார்கள்” என்று கூறப்பட்டது.
அந்த மனிதர் அந்த அம்புகளை எறிந்துகொண்டிருந்தபோது நான் அவரருகே சென்று நின்றேன். அப்போது நான் (அம்மனிதரிடம்), “நீ இந்த அம்புகளை உடைத்தெறிந்துவிட்டு, “அல்லாஹ்வைத் தவிர வேறெந்த இறைவனும் இல்லை' என்று நீ உறுதிமொழி சொல். அல்லது நான் உன் கழுத்தை வெட்டிவிடுவேன்” என்று சொன்னேன். அவ்வாறே அவர் அவற்றை உடைத்துவிட்டு, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று உறுதிமொழி கூறினார். பிறகு “அஹ்மஸ்' குலத்தாரில் “அபூஅர்த்தாத்' என்னும் (குறிப்புப்) பெயர் கொண்ட ஒரு மனிதரை, நபி (ஸல்) அவர்களிடம் (அந்த ஆலயம் அழிக்கப்பட்ட) இந்த நற்செய்தியைத் தெரிவிக்க அனுப்பிவைத்தேன்.
அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, “அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அதைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றுதான் (ஆக்கி)விட்டு வந்துள்ளேன்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) “அஹ்மஸ்' குலத்தாருக்கும் அவர்களின் குதிரைகளுக்கும் வளர்ச்சியை அளிக்கும் படி ஐந்து முறை (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 64
4357. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர்களா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான், “சரி (விடுவிக்கிறேன்)” என்று சொன்னேன். அவ்வாறே, “அஹ்மஸ்' குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் (துல் கலஸாவை நோக்கிப்) புறப்பட்டேன். “அஹ்மஸ்' குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தார்கள். என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை. அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள் தமது கையால் என் நெஞ்சின் மீது அடித்தார்கள். எந்த அளவுக்கென்றால், அவர்களது கையின் அடையாளத்தை என் நெஞ்சில் நான் பார்த்தேன்.
அப்போது அவர்கள், “இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.
அதன் பிறகு நான் (ஒருபோதும்) எந்த குதிரையிலிருந்தும் விழுந்ததில்லை. “துல் கலஸா' என்பது யமன் நாட்டிலிருந்த “கஸ்அம்' மற்றும் “பஜீலா' குலத் தாரின் ஆலயமாகும். அதில், வழிபாடு செய்யப்பட்டுவந்த பலிபீடங்கள் இருந்தன. அது “அல்கஅபா' என்று அழைக்கப் பட்டுவந்தது. நான் அங்கு சென்று அதைத் தீயிட்டுக் கொளுத்தி உடைத்துவிட்டேன். நான் யமன் நாட்டுக்குச் சென்றபோது அங்கு அம்புகளை வைத்துக் குறி கேட்கின்ற மனிதர் ஒருவர் இருந்தார். அப்போது அவரிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கே (அருகில்தான்) இருக்கிறார்கள். அவர்களிடம் நீ சிக்கிக்கொண்டால் உன் கழுத்தைத் துண்டித்துவிடுவார்கள்” என்று கூறப்பட்டது.
அந்த மனிதர் அந்த அம்புகளை எறிந்துகொண்டிருந்தபோது நான் அவரருகே சென்று நின்றேன். அப்போது நான் (அம்மனிதரிடம்), “நீ இந்த அம்புகளை உடைத்தெறிந்துவிட்டு, “அல்லாஹ்வைத் தவிர வேறெந்த இறைவனும் இல்லை' என்று நீ உறுதிமொழி சொல். அல்லது நான் உன் கழுத்தை வெட்டிவிடுவேன்” என்று சொன்னேன். அவ்வாறே அவர் அவற்றை உடைத்துவிட்டு, “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை' என்று உறுதிமொழி கூறினார். பிறகு “அஹ்மஸ்' குலத்தாரில் “அபூஅர்த்தாத்' என்னும் (குறிப்புப்) பெயர் கொண்ட ஒரு மனிதரை, நபி (ஸல்) அவர்களிடம் (அந்த ஆலயம் அழிக்கப்பட்ட) இந்த நற்செய்தியைத் தெரிவிக்க அனுப்பிவைத்தேன்.
அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, “அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அதைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்றுதான் (ஆக்கி)விட்டு வந்துள்ளேன்” என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) “அஹ்மஸ்' குலத்தாருக்கும் அவர்களின் குதிரைகளுக்கும் வளர்ச்சியை அளிக்கும் படி ஐந்து முறை (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 64
4358. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي عُثْمَانَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ عَمْرَو بْنَ الْعَاصِ عَلَى جَيْشِ ذَاتِ السَّلاَسِلِ قَالَ فَأَتَيْتُهُ فَقُلْتُ أَىُّ النَّاسِ أَحَبُّ إِلَيْكَ قَالَ "" عَائِشَةُ "". قُلْتُ مِنَ الرِّجَالِ قَالَ "" أَبُوهَا "". قُلْتُ ثُمَّ مَنْ قَالَ "" عُمَرُ "". فَعَدَّ رِجَالاً فَسَكَتُّ مَخَافَةَ أَنْ يَجْعَلَنِي فِي آخِرِهِمْ.
பாடம் : 64
“தாத்துஸ் ஸலாஸில்' போர்388
இதுவே “லக்ம்' மற்றும் “ஜுதாம்' போர் ஆகும். இதை இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
“(தாத்துஸ் ஸலாஸில் என்பது) பலீ, உத்ரா, பனுல் கைன் ஆகிய குலங்களின் ஊராகும்” என்று இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
4358. அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் “தாத்துஸ் ஸலாஸில்' (போருக்குச் சென்ற) படைக்கு என்னை(த் தளபதியாக்கி) அனுப்பினார்கள். (நான் திரும்பி வந்தவுடன்) நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “மனிதர்களில் தங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?” என்று கேட்டேன். அவர்கள், “ஆயிஷா' என்று பதிலளித்தார்கள்.
நான், “ஆண்களில் உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?” என்று கேட்டேன். அவர்கள், “ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)' என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு யார்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “உமர்' என்று பதிலளித்தார்கள். இன்னும் பலரையும் பட்டியலிட்டு (அவர்களெல்லாரும் தமக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று) கூறினார்கள். “தமக்குப் பிரியமானவர்களின் பட்டியலில் என்னைக் கடைசி ஆளாக ஆக்கிவிடுவார்களோ' என்று அஞ்சியதால் நான் மௌனமாயிருந்துவிட்டேன்.389
அத்தியாயம் : 64
4358. அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் “தாத்துஸ் ஸலாஸில்' (போருக்குச் சென்ற) படைக்கு என்னை(த் தளபதியாக்கி) அனுப்பினார்கள். (நான் திரும்பி வந்தவுடன்) நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “மனிதர்களில் தங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?” என்று கேட்டேன். அவர்கள், “ஆயிஷா' என்று பதிலளித்தார்கள்.
நான், “ஆண்களில் உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்?” என்று கேட்டேன். அவர்கள், “ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்)' என்று பதிலளித்தார்கள். நான், “பிறகு யார்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “உமர்' என்று பதிலளித்தார்கள். இன்னும் பலரையும் பட்டியலிட்டு (அவர்களெல்லாரும் தமக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று) கூறினார்கள். “தமக்குப் பிரியமானவர்களின் பட்டியலில் என்னைக் கடைசி ஆளாக ஆக்கிவிடுவார்களோ' என்று அஞ்சியதால் நான் மௌனமாயிருந்துவிட்டேன்.389
அத்தியாயம் : 64
4359. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ الْعَبْسِيُّ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ كُنْتُ بِالْبَحْرِ فَلَقِيتُ رَجُلَيْنِ مِنْ أَهْلِ الْيَمَنِ ذَا كَلاَعٍ وَذَا عَمْرٍو، فَجَعَلْتُ أُحَدِّثُهُمْ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهُ ذُو عَمْرٍو لَئِنْ كَانَ الَّذِي تَذْكُرُ مِنْ أَمْرِ صَاحِبِكَ، لَقَدْ مَرَّ عَلَى أَجَلِهِ مُنْذُ ثَلاَثٍ. وَأَقْبَلاَ مَعِي حَتَّى إِذَا كُنَّا فِي بَعْضِ الطَّرِيقِ رُفِعَ لَنَا رَكْبٌ مِنْ قِبَلِ الْمَدِينَةِ فَسَأَلْنَاهُمْ فَقَالُوا قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاسْتُخْلِفَ أَبُو بَكْرٍ وَالنَّاسُ صَالِحُونَ. فَقَالاَ أَخْبِرْ صَاحِبَكَ أَنَّا قَدْ جِئْنَا وَلَعَلَّنَا سَنَعُودُ إِنْ شَاءَ اللَّهُ، وَرَجَعَا إِلَى الْيَمَنِ فَأَخْبَرْتُ أَبَا بَكْرٍ بِحَدِيثِهِمْ قَالَ أَفَلاَ جِئْتَ بِهِمْ. فَلَمَّا كَانَ بَعْدُ قَالَ لِي ذُو عَمْرٍو يَا جَرِيرُ إِنَّ بِكَ عَلَىَّ كَرَامَةً، وَإِنِّي مُخْبِرُكَ خَبَرًا، إِنَّكُمْ مَعْشَرَ الْعَرَبِ لَنْ تَزَالُوا بِخَيْرٍ مَا كُنْتُمْ إِذَا هَلَكَ أَمِيرٌ تَأَمَّرْتُمْ فِي آخَرَ، فَإِذَا كَانَتْ بِالسَّيْفِ كَانُوا مُلُوكًا يَغْضَبُونَ غَضَبَ الْمُلُوكِ وَيَرْضَوْنَ رِضَا الْمُلُوكِ.
பாடம் : 65
ஜரீர் (ரலி) அவர்கள் யமன் நாட்டிற்குச் சென்றது390
4359. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் யமன் நாட்டில் இருந்தேன். அப்போது யமன்வாசிகளில் “தூ கலாஉ' மற்றும் “தூ அம்ர்' ஆகிய இருவரை நான் சந்தித்தேன்.391 அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிப் பேசலானேன். அப்போது “தூ அம்ர்' என்னிடம், “நீங்கள் சொல்லும் உங்கள் தோழரின் செய்தி உண்மையெனில் அவர் இறந்துபோய் மூன்று நாட்கள் கடந்துவிட்டன என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். அவர்கள் இருவரும் என்னுடன் வந்தார்கள்.
நாங்கள் இன்னும் பயணத்திலேயே இருந்துகொண்டிருக்கும்போது மதீனாவின் திசையிலிருந்து ஒரு பயணக் கூட்டம் வந்துகொண்டிருப்பது தென்பட்டது. நாங்கள் அவர்களிடம் விசாரித்தோம். அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டுவிட்டார்கள். மக்கள் அனை வரும் நல்லவர்களாக உள்ளனர்” என்று பதிலளித்தனர்.
உடனே “தூ கலாஉ' மற்றும் “தூ அம்ர்' இருவரும், “நாங்கள் இருவரும் புறப்பட்டு வந்தோம். (எனினும், இப்போது திரும்பிச் செல்கிறோம்.) இறைவன் நாடினால் (அவரிடம்) திரும்பி வருவோம்' என்று உங்கள் தோழரிடம் (அபூபக்ரிடம்) சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். பிறகு யமன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட்டார்கள். நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் செய்தியைத் தெரிவித்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அவர்களை (என்னிடம்) நீங்கள் அழைத்துவந்திருக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள்.
பிறகு (என்னைச் சந்திக்கும்) ஒரு சந்தர்ப்பம் வந்தபோது தூ அம்ர், “ஜரீரே! நீங்கள் எனக்கு உபகாரம் செய்திருக்கிறீர்கள். ஆகவே, நான் உங்களுக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறேன். அரபு மக்களாகிய நீங்கள், தலைவர் ஒருவர் இறந்துவிட்டால், (உங்களுக்குள் ஒருவரையொருவர் கலந்தாலோசித்து) வேறொருவரைத் தலைவராகத் தேர்ந் தெடுத்துக்கொள்ளும்வரை நன்மையில் இருப்பீர்கள்.
(ஆட்சித் தலைமை) வாள் பலத்தால் உருவாவதாயிருந்தால், ஆட்சித் தலைவர் களாக வருபவர்கள் மன்னர்களாக இருப்பார்கள். அவர்கள் மன்னர்கள் கோபப்படுவதைப் போன்றே (சொந்த நலன்களுக்காகக்) கோபப்பட்டு, மன்னர்கள் திருப்தியடைவதைப் போன்றே (சொந்த நலன்களுக்காகத்) திருப்தியடைவார்கள்” என்று சொன்னார்.
அத்தியாயம் : 64
4359. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் யமன் நாட்டில் இருந்தேன். அப்போது யமன்வாசிகளில் “தூ கலாஉ' மற்றும் “தூ அம்ர்' ஆகிய இருவரை நான் சந்தித்தேன்.391 அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிப் பேசலானேன். அப்போது “தூ அம்ர்' என்னிடம், “நீங்கள் சொல்லும் உங்கள் தோழரின் செய்தி உண்மையெனில் அவர் இறந்துபோய் மூன்று நாட்கள் கடந்துவிட்டன என்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார். அவர்கள் இருவரும் என்னுடன் வந்தார்கள்.
நாங்கள் இன்னும் பயணத்திலேயே இருந்துகொண்டிருக்கும்போது மதீனாவின் திசையிலிருந்து ஒரு பயணக் கூட்டம் வந்துகொண்டிருப்பது தென்பட்டது. நாங்கள் அவர்களிடம் விசாரித்தோம். அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள். அபூபக்ர் (ரலி) கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டுவிட்டார்கள். மக்கள் அனை வரும் நல்லவர்களாக உள்ளனர்” என்று பதிலளித்தனர்.
உடனே “தூ கலாஉ' மற்றும் “தூ அம்ர்' இருவரும், “நாங்கள் இருவரும் புறப்பட்டு வந்தோம். (எனினும், இப்போது திரும்பிச் செல்கிறோம்.) இறைவன் நாடினால் (அவரிடம்) திரும்பி வருவோம்' என்று உங்கள் தோழரிடம் (அபூபக்ரிடம்) சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். பிறகு யமன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட்டார்கள். நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் யமன்வாசிகளின் செய்தியைத் தெரிவித்தேன். அபூபக்ர் (ரலி) அவர்கள், “அவர்களை (என்னிடம்) நீங்கள் அழைத்துவந்திருக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள்.
பிறகு (என்னைச் சந்திக்கும்) ஒரு சந்தர்ப்பம் வந்தபோது தூ அம்ர், “ஜரீரே! நீங்கள் எனக்கு உபகாரம் செய்திருக்கிறீர்கள். ஆகவே, நான் உங்களுக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறேன். அரபு மக்களாகிய நீங்கள், தலைவர் ஒருவர் இறந்துவிட்டால், (உங்களுக்குள் ஒருவரையொருவர் கலந்தாலோசித்து) வேறொருவரைத் தலைவராகத் தேர்ந் தெடுத்துக்கொள்ளும்வரை நன்மையில் இருப்பீர்கள்.
(ஆட்சித் தலைமை) வாள் பலத்தால் உருவாவதாயிருந்தால், ஆட்சித் தலைவர் களாக வருபவர்கள் மன்னர்களாக இருப்பார்கள். அவர்கள் மன்னர்கள் கோபப்படுவதைப் போன்றே (சொந்த நலன்களுக்காகக்) கோபப்பட்டு, மன்னர்கள் திருப்தியடைவதைப் போன்றே (சொந்த நலன்களுக்காகத்) திருப்தியடைவார்கள்” என்று சொன்னார்.
அத்தியாயம் : 64
4360. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْثًا قِبَلَ السَّاحِلِ وَأَمَّرَ عَلَيْهِمْ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ وَهُمْ ثَلاَثُمِائَةٍ، فَخَرَجْنَا وَكُنَّا بِبَعْضِ الطَّرِيقِ فَنِيَ الزَّادُ فَأَمَرَ أَبُو عُبَيْدَةَ بِأَزْوَادِ الْجَيْشِ، فَجُمِعَ فَكَانَ مِزْوَدَىْ تَمْرٍ، فَكَانَ يَقُوتُنَا كُلَّ يَوْمٍ قَلِيلٌ قَلِيلٌ حَتَّى فَنِيَ، فَلَمْ يَكُنْ يُصِيبُنَا إِلاَّ تَمْرَةٌ تَمْرَةٌ فَقُلْتُ مَا تُغْنِي عَنْكُمْ تَمْرَةٌ فَقَالَ لَقَدْ وَجَدْنَا فَقْدَهَا حِينَ فَنِيَتْ. ثُمَّ انْتَهَيْنَا إِلَى الْبَحْرِ، فَإِذَا حُوتٌ مِثْلُ الظَّرِبِ فَأَكَلَ مِنْهَا الْقَوْمُ ثَمَانَ عَشْرَةَ لَيْلَةً، ثُمَّ أَمَرَ أَبُو عُبَيْدَةَ بِضِلَعَيْنِ مِنْ أَضْلاَعِهِ فَنُصِبَا، ثُمَّ أَمَرَ بِرَاحِلَةٍ فَرُحِلَتْ ثُمَّ مَرَّتْ تَحْتَهُمَا فَلَمْ تُصِبْهُمَا.
பாடம் : 66
“சீஃபுல் பஹ்ர்' (கடற்கரையோரப்) போர்392
நபித்தோழர்களின் ஒரு படை குறைஷியரின் வணிகக் குழு ஒன்றை (இடை மறிக்கத் தருணம் எதிர்பார்த்துக்) காத்துக்கொண்டிருந்தது. அப்போது அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள், அப்படையினருக்குத் தளபதியாக இருந்தார்கள்.
4360. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடற்கரையை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அப்படையினருக்கு அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களைத் தளபதியாக்கினார்கள். அவர்கள் (மொத்தம்) முன்னூறு பேர் இருந்தனர். (அதில் நானும் கலந்து கொள்ள) நாங்கள் புறப்பட்டோம்.
சிறிது தூரம் சென்றபின், வழியில் (எங்கள்) பயண உணவு தீர்ந்துபோய் விட்டது. ஆகவே, அபூஉபைதா (ரலி) அவர்கள் படையினரின் பயண உணவுகளை ஒன்று திரட்டும்படிக் கட்டளையிட, அவை ஒன்றுதிரட்டப்பட்டன. அவை இரு பைகள் நிறையப் பேரீச்சம் பழங்களாய் இருந்தன.
அபூஉபைதா (ரலி) அவர்கள் அது தீரும்வரை (அதிலிருந்து) எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக உண்ணக் கொடுத்தார்கள். ஆகவே, எங்களுக்கு ஒவ்வொரு பேரீச்சம் பழம்தான் (ஒவ்வொரு தினமும்) கிடைத்துவந்தது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான வஹ்ப் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (ஜாபிர் (ரலி) அவர்களிடம்), “(ஒருநாள் முழுவதற்கும்) ஒரு பேரீச்சம் பழம் உங்களுக்குப் போதாதே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அதுவும் தீர்ந்து போனபோதுதான் அதன் அருமையை நாங்கள் உணர்ந்தோம். இறுதியில், நாங்கள் கடலை வந்தடைந்தபோது சிறிய மலை போன்ற (திமிங்கில வகை) மீன் ஒன்றைக் கண்டோம். படை வீரர்கள் பதினெட்டு நாட்கள் அதிலிருந்து உண்டார்கள்.
பிறகு அபூஉபைதா (ரலி) அவர்கள் அதன் விலா எலும்புகளில் இரண்டை (பூமியில்) நட்டுவைக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவை நட்டுவைக்கப்பட்டன. பிறகு (அவற்றுக்கிடையே) தமது வாகனத்தைச் செலுத்தும்படி அவர்கள் உத்தரவிட, அவ்வாறே செலுத்தப்பட்டது. அவ்விரு விலா எலும்புகளின் கீழே அவ்வாகனம் சென்றது; எனினும், அவ்விரண்டையும் தொடாமலேயே அது (அவற்றுக்கிடையே புகுந்து வெளியே) சென்றுவிட்டது.393
அத்தியாயம் : 64
4360. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடற்கரையை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அப்படையினருக்கு அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களைத் தளபதியாக்கினார்கள். அவர்கள் (மொத்தம்) முன்னூறு பேர் இருந்தனர். (அதில் நானும் கலந்து கொள்ள) நாங்கள் புறப்பட்டோம்.
சிறிது தூரம் சென்றபின், வழியில் (எங்கள்) பயண உணவு தீர்ந்துபோய் விட்டது. ஆகவே, அபூஉபைதா (ரலி) அவர்கள் படையினரின் பயண உணவுகளை ஒன்று திரட்டும்படிக் கட்டளையிட, அவை ஒன்றுதிரட்டப்பட்டன. அவை இரு பைகள் நிறையப் பேரீச்சம் பழங்களாய் இருந்தன.
அபூஉபைதா (ரலி) அவர்கள் அது தீரும்வரை (அதிலிருந்து) எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக உண்ணக் கொடுத்தார்கள். ஆகவே, எங்களுக்கு ஒவ்வொரு பேரீச்சம் பழம்தான் (ஒவ்வொரு தினமும்) கிடைத்துவந்தது.
அறிவிப்பாளர்களில் ஒருவரான வஹ்ப் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் (ஜாபிர் (ரலி) அவர்களிடம்), “(ஒருநாள் முழுவதற்கும்) ஒரு பேரீச்சம் பழம் உங்களுக்குப் போதாதே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அதுவும் தீர்ந்து போனபோதுதான் அதன் அருமையை நாங்கள் உணர்ந்தோம். இறுதியில், நாங்கள் கடலை வந்தடைந்தபோது சிறிய மலை போன்ற (திமிங்கில வகை) மீன் ஒன்றைக் கண்டோம். படை வீரர்கள் பதினெட்டு நாட்கள் அதிலிருந்து உண்டார்கள்.
பிறகு அபூஉபைதா (ரலி) அவர்கள் அதன் விலா எலும்புகளில் இரண்டை (பூமியில்) நட்டுவைக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவை நட்டுவைக்கப்பட்டன. பிறகு (அவற்றுக்கிடையே) தமது வாகனத்தைச் செலுத்தும்படி அவர்கள் உத்தரவிட, அவ்வாறே செலுத்தப்பட்டது. அவ்விரு விலா எலும்புகளின் கீழே அவ்வாகனம் சென்றது; எனினும், அவ்விரண்டையும் தொடாமலேயே அது (அவற்றுக்கிடையே புகுந்து வெளியே) சென்றுவிட்டது.393
அத்தியாயம் : 64
4361. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الَّذِي حَفِظْنَاهُ مِنْ عَمْرِو بْنِ دِينَارٍ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ بَعَثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَمِائَةِ رَاكِبٍ أَمِيرُنَا أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ نَرْصُدُ عِيرَ قُرَيْشٍ، فَأَقَمْنَا بِالسَّاحِلِ نِصْفَ شَهْرٍ فَأَصَابَنَا جُوعٌ شَدِيدٌ حَتَّى أَكَلْنَا الْخَبَطَ، فَسُمِّيَ ذَلِكَ الْجَيْشُ جَيْشَ الْخَبَطِ، فَأَلْقَى لَنَا الْبَحْرُ دَابَّةً يُقَالُ لَهَا الْعَنْبَرُ، فَأَكَلْنَا مِنْهُ نِصْفَ شَهْرٍ وَادَّهَنَّا مِنْ وَدَكِهِ حَتَّى ثَابَتْ إِلَيْنَا أَجْسَامُنَا، فَأَخَذَ أَبُو عُبَيْدَةَ ضِلَعًا مِنْ أَضْلاَعِهِ فَنَصَبَهُ فَعَمَدَ إِلَى أَطْوَلِ رَجُلٍ مَعَهُ ـ قَالَ سُفْيَانُ مَرَّةً ضِلَعًا مِنْ أَعْضَائِهِ فَنَصَبَهُ وَأَخَذَ رَجُلاً وَبَعِيرًا ـ فَمَرَّ تَحْتَهُ قَالَ جَابِرٌ وَكَانَ رَجُلٌ مِنَ الْقَوْمِ نَحَرَ ثَلاَثَ جَزَائِرَ، ثُمَّ نَحَرَ ثَلاَثَ جَزَائِرَ، ثُمَّ نَحَرَ ثَلاَثَ جَزَائِرَ، ثُمَّ إِنَّ أَبَا عُبَيْدَةَ نَهَاهُ. وَكَانَ عَمْرٌو يَقُولُ أَخْبَرَنَا أَبُو صَالِحٍ أَنَّ قَيْسَ بْنَ سَعْدٍ قَالَ لأَبِيهِ كُنْتُ فِي الْجَيْشِ فَجَاعُوا. قَالَ انْحَرْ. قَالَ نَحَرْتُ. قَالَ ثُمَّ جَاعُوا قَالَ انْحَرْ. قَالَ نَحَرْتُ. قَالَ ثُمَّ جَاعُوا قَالَ انْحَرْ. قَالَ نَحَرْتُ ثُمَّ جَاعُوا قَالَ انْحَرْ. قَالَ نُهِيتُ.
பாடம் : 66
“சீஃபுல் பஹ்ர்' (கடற்கரையோரப்) போர்392
நபித்தோழர்களின் ஒரு படை குறைஷியரின் வணிகக் குழு ஒன்றை (இடை மறிக்கத் தருணம் எதிர்பார்த்துக்) காத்துக்கொண்டிருந்தது. அப்போது அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள், அப்படையினருக்குத் தளபதியாக இருந்தார்கள்.
4361. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் குதிரைப்படை வீரர்களான முந்நூறு பேரை (ஓர் அறப்போருக்கு) அனுப்பினார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள் எங்கள் தளபதியாக இருந்தார்கள். நாங்கள் குறைஷியரின் வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆகவே, நாங்கள் கடற்கரையோரமாக அரை மாதம் தங்கினோம். எங்களைக் கடுமையான பசி பீடிக்க, கருவேல மரத்தின் இலையை நாங்கள் புசித்தோம். ஆகவே அந்தப் படைப்பிரிவு “கருவேல இலைப் படைப்பிரிவு' என்று பெயர் சூட்டப்பட்டது.
கடல் எங்களுக்காக “அல்அம்பர்' (கொழுப்புத் தலை திமிங்கலம்) எனப்படும் ஓர் உயிரினத்தை (கரையில் ஒதுக்கிப்) போட்டது. நாங்கள் அதிலிருந்து அரை மாதம் உண்டோம். அதன் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்துக்கொண்டோம். அதனால் எங்கள் பழைய (வலிமையான) உடல்கள் எங்களுக்கு திரும்பக் கிடைத்துவிட்டன. அபூஉபைதா (ரலி) அவர்கள் அந்த (பெரிய) மீனின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அதை (பூமியில்) நட்டுவிட்டுத் தம்முடனிருந்த மிக உயரமான மனிதரிடம் சென்றார்கள். (அவரை அந்த விலா எலும்பின் கீழே நடந்து செல்லும்படி கேட்டுக்கொண்டார்கள்).
மற்றோர் அறிவிப்பில், “ஒரு மனிதரையும் ஓர் ஒட்டகத்தையும் அழைத்துக் கொண்டு, அந்த எலும்பு(க் கூட்டு)க்குக் கீழே நடந்து சென்றார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அந்தப் படையினரில் ஒருவர் மூன்று ஒட்டகங்களை அறுத்தார். பிறகு மூன்று ஒட்டகங்களையும் மீண்டும் மூன்று ஒட்டகங்களையும் அறுத்தார். பிறகு அபூஉபைதா (ரலி) அவர்கள் (“இனி அறுக்க வேண்டாம்” என்று) அவரைத் தடுத்துவிட்டார்கள்.
அபூஸாலிஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள் (போரிலிருந்து திரும்பியபின் தம் தந்தை சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம்), “நான் அந்தப் படையில் இருந்தேன். அப்போது மக்கள் கடும் பசிக்கு ஆளானார்கள்” என்று சொன்னார்கள். அவருடைய தந்தை, “நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்று சொன்னார். கைஸ் (ரலி) அவர்கள், “நான் அறுக்கத்தான் செய்தேன்” என்று சொல்லிவிட்டு, “அவர்கள் மீண்டும் பசிக்கு ஆளானார்கள்” என்று சொல்ல, அவருடைய தந்தை, “நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்று சொன்னார். அவர், “நான் அறுக்கத்தான் செய்தேன்” என்று சொல்லிவிட்டு, “மீண்டும் அவர்கள் பசிக்கு ஆளானார்கள்” என்றார். மீண்டும் அவருடைய தந்தை, “நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்று சொன்னார்.
உடனே அவர், “நான் அறுக்கத்தான் செய்தேன்” என்று சொல்லிவிட்டு, “மீண்டும், அவர்கள் பசிக்கு ஆளானார்கள்” என்று சொல்ல, அவருடைய தந்தை, “நீ ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்றார். அவர், “(மூன்று முறைக்குப் பிறகு) நான் அறுக்க வேண்டாமெனத் தடுக்கப்பட்டுவிட்டேன்” என்று சொன்னார்.
அத்தியாயம் : 64
4361. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் குதிரைப்படை வீரர்களான முந்நூறு பேரை (ஓர் அறப்போருக்கு) அனுப்பினார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள் எங்கள் தளபதியாக இருந்தார்கள். நாங்கள் குறைஷியரின் வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆகவே, நாங்கள் கடற்கரையோரமாக அரை மாதம் தங்கினோம். எங்களைக் கடுமையான பசி பீடிக்க, கருவேல மரத்தின் இலையை நாங்கள் புசித்தோம். ஆகவே அந்தப் படைப்பிரிவு “கருவேல இலைப் படைப்பிரிவு' என்று பெயர் சூட்டப்பட்டது.
கடல் எங்களுக்காக “அல்அம்பர்' (கொழுப்புத் தலை திமிங்கலம்) எனப்படும் ஓர் உயிரினத்தை (கரையில் ஒதுக்கிப்) போட்டது. நாங்கள் அதிலிருந்து அரை மாதம் உண்டோம். அதன் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்துக்கொண்டோம். அதனால் எங்கள் பழைய (வலிமையான) உடல்கள் எங்களுக்கு திரும்பக் கிடைத்துவிட்டன. அபூஉபைதா (ரலி) அவர்கள் அந்த (பெரிய) மீனின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அதை (பூமியில்) நட்டுவிட்டுத் தம்முடனிருந்த மிக உயரமான மனிதரிடம் சென்றார்கள். (அவரை அந்த விலா எலும்பின் கீழே நடந்து செல்லும்படி கேட்டுக்கொண்டார்கள்).
மற்றோர் அறிவிப்பில், “ஒரு மனிதரையும் ஓர் ஒட்டகத்தையும் அழைத்துக் கொண்டு, அந்த எலும்பு(க் கூட்டு)க்குக் கீழே நடந்து சென்றார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அந்தப் படையினரில் ஒருவர் மூன்று ஒட்டகங்களை அறுத்தார். பிறகு மூன்று ஒட்டகங்களையும் மீண்டும் மூன்று ஒட்டகங்களையும் அறுத்தார். பிறகு அபூஉபைதா (ரலி) அவர்கள் (“இனி அறுக்க வேண்டாம்” என்று) அவரைத் தடுத்துவிட்டார்கள்.
அபூஸாலிஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள் (போரிலிருந்து திரும்பியபின் தம் தந்தை சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடம்), “நான் அந்தப் படையில் இருந்தேன். அப்போது மக்கள் கடும் பசிக்கு ஆளானார்கள்” என்று சொன்னார்கள். அவருடைய தந்தை, “நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்று சொன்னார். கைஸ் (ரலி) அவர்கள், “நான் அறுக்கத்தான் செய்தேன்” என்று சொல்லிவிட்டு, “அவர்கள் மீண்டும் பசிக்கு ஆளானார்கள்” என்று சொல்ல, அவருடைய தந்தை, “நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்று சொன்னார். அவர், “நான் அறுக்கத்தான் செய்தேன்” என்று சொல்லிவிட்டு, “மீண்டும் அவர்கள் பசிக்கு ஆளானார்கள்” என்றார். மீண்டும் அவருடைய தந்தை, “நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்று சொன்னார்.
உடனே அவர், “நான் அறுக்கத்தான் செய்தேன்” என்று சொல்லிவிட்டு, “மீண்டும், அவர்கள் பசிக்கு ஆளானார்கள்” என்று சொல்ல, அவருடைய தந்தை, “நீ ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும்” என்றார். அவர், “(மூன்று முறைக்குப் பிறகு) நான் அறுக்க வேண்டாமெனத் தடுக்கப்பட்டுவிட்டேன்” என்று சொன்னார்.
அத்தியாயம் : 64
4362. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّهُ سَمِعَ جَابِرًا ـ رضى الله عنه ـ يَقُولُ غَزَوْنَا جَيْشَ الْخَبَطِ وَأُمِّرَ أَبُو عُبَيْدَةَ، فَجُعْنَا جُوعًا شَدِيدًا فَأَلْقَى الْبَحْرُ حُوتًا مَيِّتًا، لَمْ نَرَ مِثْلَهُ، يُقَالُ لَهُ الْعَنْبَرُ، فَأَكَلْنَا مِنْهُ نِصْفَ شَهْرٍ، فَأَخَذَ أَبُو عُبَيْدَةَ عَظْمًا مِنْ عِظَامِهِ فَمَرَّ الرَّاكِبُ تَحْتَهُ. فَأَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرًا يَقُولُ قَالَ أَبُو عُبَيْدَةَ كُلُوا. فَلَمَّا قَدِمْنَا الْمَدِينَةَ ذَكَرْنَا ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" كُلُوا رِزْقًا أَخْرَجَهُ اللَّهُ، أَطْعِمُونَا إِنْ كَانَ مَعَكُمْ "". فَأَتَاهُ بَعْضُهُمْ {بِعُضْوٍ} فَأَكَلَهُ.
பாடம் : 66
“சீஃபுல் பஹ்ர்' (கடற்கரையோரப்) போர்392
நபித்தோழர்களின் ஒரு படை குறைஷியரின் வணிகக் குழு ஒன்றை (இடை மறிக்கத் தருணம் எதிர்பார்த்துக்) காத்துக்கொண்டிருந்தது. அப்போது அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்கள், அப்படையினருக்குத் தளபதியாக இருந்தார்கள்.
4362. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் “கருவேல இலைப் படைப் பிரிவி'ல் சென்றோம். அபூஉபைதா (ரலி) அவர்கள் எங்களுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார்கள். எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது இறந்த (பெரிய) மீன் ஒன்றைக் கடல், (கரையில் கொணர்ந்து) போட்டது. (அதற்குமுன்) அதைப் போல் (ஒரு மீனை) நாங்கள் பார்த்ததேயில்லை. அது “அல்அம்பர்' (கொழுப்புத் தலை திமிங்கலம்) என்று அழைக்கப்படுகிறது.
அதிலிருந்து அரை மாதம் நாங்கள் உண்டோம். அபூஉபைதா அவர்கள் அதன் (விலா) எலும்புகளில் ஒன்றை எடுத்து பூமியில் நட்டுவைக்க (அதன் கீழே) ஒருவர் வாகனத்தில் சென்றார்.
அறிவிப்பாளர் அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஜாபிர் (ரலி) அவர்கள் இவ்விதம் கூற நான் கேட்டேன்:
அபூஉபைதா (ரலி) அவர்கள், “உண்ணுங்கள்” என்று சொன்னார்கள். நாங்கள் மதீனாவுக்கு (திரும்பி) வந்த போது, நபி (ஸல்) அவர்களிடம் அதைச் சொன்னோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் (கடலிலிருந்து) வெளிப்படுத்திய அந்த உணவை உண்ணுங்கள். (அதனால் தவறில்லை.) உங்களுடன் (அதில் சிறிது) இருந்தால் நமக்கும் உண்ணக்கொடுங்கள்” என்று சொன்னார்கள். உடனே அவர்களில் சிலர், நபி (ஸல்) அவர்களிடம் (அந்த மீனில்) ஒரு துண்டைக் கொண்டுவந்தனர். அதை நபி (ஸல்) அவர்கள் உண்டார்கள்.
அத்தியாயம் : 64
4362. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் “கருவேல இலைப் படைப் பிரிவி'ல் சென்றோம். அபூஉபைதா (ரலி) அவர்கள் எங்களுக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார்கள். எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது இறந்த (பெரிய) மீன் ஒன்றைக் கடல், (கரையில் கொணர்ந்து) போட்டது. (அதற்குமுன்) அதைப் போல் (ஒரு மீனை) நாங்கள் பார்த்ததேயில்லை. அது “அல்அம்பர்' (கொழுப்புத் தலை திமிங்கலம்) என்று அழைக்கப்படுகிறது.
அதிலிருந்து அரை மாதம் நாங்கள் உண்டோம். அபூஉபைதா அவர்கள் அதன் (விலா) எலும்புகளில் ஒன்றை எடுத்து பூமியில் நட்டுவைக்க (அதன் கீழே) ஒருவர் வாகனத்தில் சென்றார்.
அறிவிப்பாளர் அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஜாபிர் (ரலி) அவர்கள் இவ்விதம் கூற நான் கேட்டேன்:
அபூஉபைதா (ரலி) அவர்கள், “உண்ணுங்கள்” என்று சொன்னார்கள். நாங்கள் மதீனாவுக்கு (திரும்பி) வந்த போது, நபி (ஸல்) அவர்களிடம் அதைச் சொன்னோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் (கடலிலிருந்து) வெளிப்படுத்திய அந்த உணவை உண்ணுங்கள். (அதனால் தவறில்லை.) உங்களுடன் (அதில் சிறிது) இருந்தால் நமக்கும் உண்ணக்கொடுங்கள்” என்று சொன்னார்கள். உடனே அவர்களில் சிலர், நபி (ஸல்) அவர்களிடம் (அந்த மீனில்) ஒரு துண்டைக் கொண்டுவந்தனர். அதை நபி (ஸல்) அவர்கள் உண்டார்கள்.
அத்தியாயம் : 64
4363. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ أَبَا بَكْرٍ الصِّدِّيقَ ـ رضى الله عنه ـ بَعَثَهُ فِي الْحَجَّةِ الَّتِي أَمَّرَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ يَوْمَ النَّحْرِ فِي رَهْطٍ يُؤَذِّنُ فِي النَّاسِ لاَ يَحُجُّ بَعْدَ الْعَامِ مُشْرِكٌ وَلاَ يَطُوفُ بِالْبَيْتِ عُرْيَانٌ.
பாடம் : 67
அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுடன் ஒன்பதாம் ஆண்டில் ஹஜ் செய்தது394
4363. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“விடைபெறும் ஹஜ்'ஜ‚க்கு முந்தைய ஹஜ்ஜின்போது அபூபக்ர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணக் குழுவுக்குத்) தலைவராக ஆக்கியிருந்தார்கள். அப்போது (துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளான) நஹ்ருடைய நாளில் (மினாவில் வைத்து), “இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்போர் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. இறையில்லம் கஅபாவை நிர்வாணமாக யாரும் சுற்றி (தவாஃப்) வரக்கூடாது” என்று பொது அறிவிப்புச் செய்யும் குழுவினரில் ஒருவனாக என்னை அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.395
அத்தியாயம் : 64
4363. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“விடைபெறும் ஹஜ்'ஜ‚க்கு முந்தைய ஹஜ்ஜின்போது அபூபக்ர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணக் குழுவுக்குத்) தலைவராக ஆக்கியிருந்தார்கள். அப்போது (துல்ஹஜ் மாதம் பத்தாம் நாளான) நஹ்ருடைய நாளில் (மினாவில் வைத்து), “இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்போர் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. இறையில்லம் கஅபாவை நிர்வாணமாக யாரும் சுற்றி (தவாஃப்) வரக்கூடாது” என்று பொது அறிவிப்புச் செய்யும் குழுவினரில் ஒருவனாக என்னை அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிவைத்தார்கள்.395
அத்தியாயம் : 64
4364. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ آخِرُ سُورَةٍ نَزَلَتْ كَامِلَةً بَرَاءَةٌ، وَآخِرُ سُورَةٍ نَزَلَتْ خَاتِمَةُ سُورَةِ النِّسَاءِ {يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ}
பாடம் : 67
அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுடன் ஒன்பதாம் ஆண்டில் ஹஜ் செய்தது394
4364. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
முழுமையான வடிவில் அருளப்பெற்ற இறுதி அத்தியாயம், “பராஅத்' (எனும் 9ஆவது “அத்தவ்பா') அத்தியாயம் ஆகும். இறுதியாக அருளப்பெற்ற அத்தியாயப் பகுதி “அந்நிசா'வின் இறுதிப் பகுதியாகும். அந்த வசனம் வருமாறு:
(நபியே!) மக்கள் உங்களிடம் “கலாலா' பற்றி தீர்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள். நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் உங்களுக்கு “கலாலா' பற்றி இவ்வாறு தீர்ப்பளிக்கின்றான்...(4:176)396
அத்தியாயம் : 64
4364. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
முழுமையான வடிவில் அருளப்பெற்ற இறுதி அத்தியாயம், “பராஅத்' (எனும் 9ஆவது “அத்தவ்பா') அத்தியாயம் ஆகும். இறுதியாக அருளப்பெற்ற அத்தியாயப் பகுதி “அந்நிசா'வின் இறுதிப் பகுதியாகும். அந்த வசனம் வருமாறு:
(நபியே!) மக்கள் உங்களிடம் “கலாலா' பற்றி தீர்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள். நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் உங்களுக்கு “கலாலா' பற்றி இவ்வாறு தீர்ப்பளிக்கின்றான்...(4:176)396
அத்தியாயம் : 64
4365. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي صَخْرَةَ، عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ الْمَازِنِيِّ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ـ رضى الله عنهما ـ قَالَ أَتَى نَفَرٌ مِنْ بَنِي تَمِيمٍ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" اقْبَلُوا الْبُشْرَى يَا بَنِي تَمِيمٍ "". قَالُوا يَا رَسُولَ اللَّهِ قَدْ بَشَّرْتَنَا فَأَعْطِنَا. فَرِيءَ ذَلِكَ فِي وَجْهِهِ فَجَاءَ نَفَرٌ مِنَ الْيَمَنِ فَقَالَ "" اقْبَلُوا الْبُشْرَى إِذْ لَمْ يَقْبَلْهَا بَنُو تَمِيمٍ "". قَالُوا قَدْ قَبِلْنَا يَا رَسُولَ اللَّهِ.
பாடம் : 68
பனூ தமீம் குலத்தாரின் தூதுக் குழு397
4365. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ தமீம் குலத்தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!” என்று அவர்களிடம் சொன்னார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு நற்செய்தி சொன்னீர் கள். (அது இருக்கட்டும்! தர்மம்) கொடுங்கள்” என்று சொன்னார்கள். (இவர்கள் நம் நற்செய்தியை ஏற்க மறுத்து உலகப் பொருளையே விரும்புகிறார்களே என்று) நபி (ஸல்) அவர்களது முகத்தில் கவலை காணப்பட்டது.
அப்போது யமன் நாட்டிலிருந்து (அஷ்அரீ குலத்தார்) சிலர் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “(யமன்வாசிகளே!) நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை” என்று சொன்னார்கள். அதற்கு யமனியர், “நாங்கள் (அதை) ஏற்றுக்கொண்டோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள்.398
அத்தியாயம் : 64
4365. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ தமீம் குலத்தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே!” என்று அவர்களிடம் சொன்னார்கள். அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு நற்செய்தி சொன்னீர் கள். (அது இருக்கட்டும்! தர்மம்) கொடுங்கள்” என்று சொன்னார்கள். (இவர்கள் நம் நற்செய்தியை ஏற்க மறுத்து உலகப் பொருளையே விரும்புகிறார்களே என்று) நபி (ஸல்) அவர்களது முகத்தில் கவலை காணப்பட்டது.
அப்போது யமன் நாட்டிலிருந்து (அஷ்அரீ குலத்தார்) சிலர் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், “(யமன்வாசிகளே!) நற்செய்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை” என்று சொன்னார்கள். அதற்கு யமனியர், “நாங்கள் (அதை) ஏற்றுக்கொண்டோம், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள்.398
அத்தியாயம் : 64
4366. حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ لاَ أَزَالُ أُحِبُّ بَنِي تَمِيمٍ بَعْدَ ثَلاَثٍ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُهَا فِيهِمْ "" هُمْ أَشَدُّ أُمَّتِي عَلَى الدَّجَّالِ "". وَكَانَتْ فِيهِمْ سَبِيَّةٌ عِنْدَ عَائِشَةَ فَقَالَ "" أَعْتِقِيهَا فَإِنَّهَا مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ "". وَجَاءَتْ صَدَقَاتُهُمْ فَقَالَ "" هَذِهِ صَدَقَاتُ قَوْمٍ، أَوْ قَوْمِي "".
பாடம் : 69
(உயைனா படைப்பிரிவு)399
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா பின் பத்ர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பனுல் அம்பர் கூட்டத்தாரிடம் அனுப்பினார்கள். ஆகவே அவர்கள், அக்கூட்டத்தார்மீது தாக்குதல் தொடுத்து அவர்களில் சிலரை வீழ்த்தினார்கள். அவர்களில் சிலரைக் கைது செய்தார்கள்.
4366. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தாரிடம் மூன்று அம்சங் கள் குடிகொண்டிருப்பதாகக் கூறியதைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்கலானேன்.
அவையாவன:
1. “பனூ தமீம் குலத்தார்தான் என் சமுதாயத்தாரிலேயே தஜ்ஜாலிடம் மிகக் கடுமையாக நடந்துகொள்பவர்கள்” என்று (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
2. அக்குலத்தாரைச் சேர்ந்த பெண் போர்க்கைதி ஒருவர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இருந்தார். ஆகவே, (ஆயிஷா (ரலி) அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், “அவளை விடுதலை செய்துவிடு. ஏனெனில், அவள் (இறைத்தூதர்) இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய சந்ததிகளில் ஒருத்தியாவாள்” என்று சொன்னார்கள்.
3. (ஒருமுறை) பனூ தமீம் குலத்தாரின் தானப் பொருள்கள் வந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவை “ஒரு (முக்கிய) சமுதாயத்தின்' அல்லது “என் சமுதாயத்தின்' தானப் பொருட்கள்” என்று சொன்னார்கள்.400
அத்தியாயம் : 64
4366. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தாரிடம் மூன்று அம்சங் கள் குடிகொண்டிருப்பதாகக் கூறியதைக் கேட்டதிலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்கலானேன்.
அவையாவன:
1. “பனூ தமீம் குலத்தார்தான் என் சமுதாயத்தாரிலேயே தஜ்ஜாலிடம் மிகக் கடுமையாக நடந்துகொள்பவர்கள்” என்று (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
2. அக்குலத்தாரைச் சேர்ந்த பெண் போர்க்கைதி ஒருவர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இருந்தார். ஆகவே, (ஆயிஷா (ரலி) அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், “அவளை விடுதலை செய்துவிடு. ஏனெனில், அவள் (இறைத்தூதர்) இஸ்மாயீல் (அலை) அவர்களுடைய சந்ததிகளில் ஒருத்தியாவாள்” என்று சொன்னார்கள்.
3. (ஒருமுறை) பனூ தமீம் குலத்தாரின் தானப் பொருள்கள் வந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவை “ஒரு (முக்கிய) சமுதாயத்தின்' அல்லது “என் சமுதாயத்தின்' தானப் பொருட்கள்” என்று சொன்னார்கள்.400
அத்தியாயம் : 64
4367. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ، أَخْبَرَهُمْ أَنَّهُ، قَدِمَ رَكْبٌ مِنْ بَنِي تَمِيمٍ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ أَبُو بَكْرٍ أَمِّرِ الْقَعْقَاعَ بْنَ مَعْبَدِ بْنِ زُرَارَةَ. قَالَ عُمَرُ بَلْ أَمِّرِ الأَقْرَعَ بْنَ حَابِسٍ. قَالَ أَبُو بَكْرٍ مَا أَرَدْتَ إِلاَّ خِلاَفِي. قَالَ عُمَرُ مَا أَرَدْتُ خِلاَفَكَ. فَتَمَارَيَا حَتَّى ارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا فَنَزَلَ فِي ذَلِكَ {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تُقَدِّمُوا} حَتَّى انْقَضَتْ.
பாடம் : 69
(உயைனா படைப்பிரிவு)399
இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா பின் பத்ர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பனுல் அம்பர் கூட்டத்தாரிடம் அனுப்பினார்கள். ஆகவே அவர்கள், அக்கூட்டத்தார்மீது தாக்குதல் தொடுத்து அவர்களில் சிலரை வீழ்த்தினார்கள். அவர்களில் சிலரைக் கைது செய்தார்கள்.
4367. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ தமீம் குலத்தாரில் ஒரு பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரினர்.) அபூபக்ர் (ரலி) அவர்கள், “(அல்லாஹ்வின் தூதரே!) கஅகாஉ பின் மஅபத் பின் ஸுராரா அவர்களை இவர்களுக்குத் தலைவராக்குங்கள்” என்று சொன்னார்கள்.
உமர் (ரலி) அவர்கள், “இல்லை; அக்ரஉ பின் ஹாபிஸ் அவர்களைத் தலைவராக்குங்கள்” என்று சொன்னார் கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களிடம்), “நீங்கள் எனக்கு மாற்றமாகக் கருத்துச் சொல்லவே விரும்புகிறீர்கள்” என்று சொல்ல, உமர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு மாற்றமாகக் கருத்துச் சொல்வது என் நோக்கமல்ல” என்று பதிலளித்தார்கள்.
இருவரும் இப்படி மாறி மாறிப் பேசிச் சச்சரவிட்டுக்கொண்டார்கள். இறுதியில், இருவரின் குரல்களும் உயர்ந்தன. இது தொடர்பாகவே, “இறைநம்பிக்கை கொண்ட வர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான்” எனும் (49:1ஆவது) வசனம் முழுவதுமாக அருளப்பெற்றது.
அத்தியாயம் : 64
4367. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பனூ தமீம் குலத்தாரில் ஒரு பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரினர்.) அபூபக்ர் (ரலி) அவர்கள், “(அல்லாஹ்வின் தூதரே!) கஅகாஉ பின் மஅபத் பின் ஸுராரா அவர்களை இவர்களுக்குத் தலைவராக்குங்கள்” என்று சொன்னார்கள்.
உமர் (ரலி) அவர்கள், “இல்லை; அக்ரஉ பின் ஹாபிஸ் அவர்களைத் தலைவராக்குங்கள்” என்று சொன்னார் கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களிடம்), “நீங்கள் எனக்கு மாற்றமாகக் கருத்துச் சொல்லவே விரும்புகிறீர்கள்” என்று சொல்ல, உமர் (ரலி) அவர்கள், “உங்களுக்கு மாற்றமாகக் கருத்துச் சொல்வது என் நோக்கமல்ல” என்று பதிலளித்தார்கள்.
இருவரும் இப்படி மாறி மாறிப் பேசிச் சச்சரவிட்டுக்கொண்டார்கள். இறுதியில், இருவரின் குரல்களும் உயர்ந்தன. இது தொடர்பாகவே, “இறைநம்பிக்கை கொண்ட வர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து நடந்துகொள்ளுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான்” எனும் (49:1ஆவது) வசனம் முழுவதுமாக அருளப்பெற்றது.
அத்தியாயம் : 64
4368. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا قُرَّةُ، عَنْ أَبِي جَمْرَةَ، قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ إِنَّ لِي جَرَّةً يُنْتَبَذُ لِي نَبِيذٌ، فَأَشْرَبُهُ حُلْوًا فِي جَرٍّ إِنْ أَكْثَرْتُ مِنْهُ، فَجَالَسْتُ الْقَوْمَ، فَأَطَلْتُ الْجُلُوسَ خَشِيتُ أَنْ أَفْتَضِحَ فَقَالَ قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" مَرْحَبًا بِالْقَوْمِ غَيْرَ خَزَايَا وَلاَ النَّدَامَى "". فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، إِنَّ بَيْنَنَا وَبَيْنَكَ الْمُشْرِكِينَ مِنْ مُضَرَ، وَإِنَّا لاَ نَصِلُ إِلَيْكَ إِلاَّ فِي أَشْهُرِ الْحُرُمِ، حَدِّثْنَا بِجُمَلٍ مِنَ الأَمْرِ، إِنْ عَمِلْنَا بِهِ دَخَلْنَا الْجَنَّةَ، وَنَدْعُو بِهِ مَنْ وَرَاءَنَا. قَالَ "" آمُرُكُمْ بِأَرْبَعٍ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ، الإِيمَانِ بِاللَّهِ، هَلْ تَدْرُونَ مَا الإِيمَانُ بِاللَّهِ شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ وَصَوْمُ رَمَضَانَ، وَأَنْ تُعْطُوا مِنَ الْمَغَانِمِ الْخُمُسَ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ مَا انْتُبِذَ فِي الدُّبَّاءِ، وَالنَّقِيرِ، وَالْحَنْتَمِ، وَالْمُزَفَّتِ "".
பாடம் : 70
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு401
4368. அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “என்னிடம் “நபீத்' (பழச்சாறு மது) வைக்கப்படுகின்ற மண்பாண்டம் ஒன்று இருந்தது. மண்பாண்டத்தில் இனிப்பாக இருக்கும் நிலையில் நான் அதை அருந்துவேன். நான் அதை அதிகமாக அருந்தி, மக்களுடன் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் (போதையில் தாறுமாறாக நடந்து) கேவலப்பட்டுப் போய்விடுவேன் என நான் அஞ்சினேன்” என்று சொன்னேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (இவ்வாறு) கூறினார்கள்:
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(அப்துல் கைஸ்) சமுதாயத்தாரே! உங்கள் வரவு நல்வரவாகட்டும். இழிவுக்குள்ளாகாமலும், மனவருத்தத்திற்குள்ளாகாமலும் வருக!” என்று சொன்னார்கள்.
அம்மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும் உங்களுக்குமிடையே “முளர்' குலத்து இணைவைப்பாளர்கள் (நாம் சந்திக்க முடியாதபடி) தடையாக உள்ளனர். இதனால், (போர் புரியக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுள்ள) புனித மாதங்களில் தவிர (வேறு மாதங்களில்) நாங்கள் உங்களிடம் வர முடியவில்லை.
ஆகவே, எந்தக் கட்டளைகளை நாங்கள் செயல்படுத்தினால் நாங்கள் சொர்க்கம் செல்லவும் எங்களுக்குப் பின்னாலிருப்பவர்களை அவற்றின் பக்கம் நாங்கள் அழைக்கவும் ஏதுவாக இருக்குமோ அத்தகைய கட்டளைகளில் (முக்கியமான) சிலவற்றை எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு நான் நான்கு விஷயங்களைக் கட்டளையிடுகின்றேன்:
1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது.
அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” என்று உறுதி கூறுவதுதான் (அது).
2. தொழுகையைக் கடைப்பிடிப்பது.
3. ஸகாத் (கட்டாயக்கொடை) வழங்கு வது.
4. ரமளான் மாதம் நோன்பு நோற்பது.
மேலும், “போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை (அரசுக்குச்) செலுத்தும்படியும் (உங்களுக்குக்) கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கின்றேன். மது ஊற்றி வைக்கப்படும் பாத்திரங்களான சுரைக்காய்க் குடுவை, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய், மண் சாடி மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் ஊறவைக்கப்படும் பானங் கள்தான் அவை” என்றார்கள்.402
அத்தியாயம் : 64
4368. அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “என்னிடம் “நபீத்' (பழச்சாறு மது) வைக்கப்படுகின்ற மண்பாண்டம் ஒன்று இருந்தது. மண்பாண்டத்தில் இனிப்பாக இருக்கும் நிலையில் நான் அதை அருந்துவேன். நான் அதை அதிகமாக அருந்தி, மக்களுடன் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் (போதையில் தாறுமாறாக நடந்து) கேவலப்பட்டுப் போய்விடுவேன் என நான் அஞ்சினேன்” என்று சொன்னேன். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (இவ்வாறு) கூறினார்கள்:
அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், “(அப்துல் கைஸ்) சமுதாயத்தாரே! உங்கள் வரவு நல்வரவாகட்டும். இழிவுக்குள்ளாகாமலும், மனவருத்தத்திற்குள்ளாகாமலும் வருக!” என்று சொன்னார்கள்.
அம்மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும் உங்களுக்குமிடையே “முளர்' குலத்து இணைவைப்பாளர்கள் (நாம் சந்திக்க முடியாதபடி) தடையாக உள்ளனர். இதனால், (போர் புரியக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்டுள்ள) புனித மாதங்களில் தவிர (வேறு மாதங்களில்) நாங்கள் உங்களிடம் வர முடியவில்லை.
ஆகவே, எந்தக் கட்டளைகளை நாங்கள் செயல்படுத்தினால் நாங்கள் சொர்க்கம் செல்லவும் எங்களுக்குப் பின்னாலிருப்பவர்களை அவற்றின் பக்கம் நாங்கள் அழைக்கவும் ஏதுவாக இருக்குமோ அத்தகைய கட்டளைகளில் (முக்கியமான) சிலவற்றை எங்களுக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “உங்களுக்கு நான் நான்கு விஷயங்களைக் கட்டளையிடுகின்றேன்:
1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது.
அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை” என்று உறுதி கூறுவதுதான் (அது).
2. தொழுகையைக் கடைப்பிடிப்பது.
3. ஸகாத் (கட்டாயக்கொடை) வழங்கு வது.
4. ரமளான் மாதம் நோன்பு நோற்பது.
மேலும், “போர்ச் செல்வங்களில் ஐந்தில் ஒரு பங்கை (அரசுக்குச்) செலுத்தும்படியும் (உங்களுக்குக்) கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கின்றேன். மது ஊற்றி வைக்கப்படும் பாத்திரங்களான சுரைக்காய்க் குடுவை, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய், மண் சாடி மற்றும் தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் ஊறவைக்கப்படும் பானங் கள்தான் அவை” என்றார்கள்.402
அத்தியாயம் : 64