5271. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَسَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ أَتَى رَجُلٌ مِنْ أَسْلَمَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَهْوَ فِي الْمَسْجِدِ فَنَادَاهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الأَخِرَ قَدْ زَنَى ـ يَعْنِي نَفْسَهُ ـ فَأَعْرَضَ عَنْهُ فَتَنَحَّى لِشِقِّ وَجْهِهِ الَّذِي أَعْرَضَ قِبَلَهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ الأَخِرَ قَدْ زَنَى فَأَعْرَضَ عَنْهُ فَتَنَحَّى لِشِقِّ وَجْهِهِ الَّذِي أَعْرَضَ قِبَلَهُ فَقَالَ لَهُ ذَلِكَ فَأَعْرَضَ عَنْهُ فَتَنَحَّى لَهُ الرَّابِعَةَ، فَلَمَّا شَهِدَ عَلَى نَفْسِهِ أَرْبَعَ شَهَادَاتٍ دَعَاهُ فَقَالَ "" هَلْ بِكَ جُنُونٌ "". قَالَ لاَ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اذْهَبُوا بِهِ فَارْجُمُوهُ "". وَكَانَ قَدْ أُحْصِنَ.
பாடம்: 9 மணமுடிப்பதற்கு முன்னால் மணவிலக்கு என்பது கிடையாது. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கையாளர்களே! இறை நம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களைத் தொடுவதற்கு முன்பே மணவிலக்குச் செய்துவிட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய (இத்தா) தவணை உங்களுக்கு ஒன்று மில்லை. ஆகவே, அவர்களுக்கு (ஏற்ற வகையில்) ஏதேனும் அளித்து நல்ல முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள். (33:49) ‘‘(இந்த வசனத்தில்) மணவிலக்கைப் பற்றி திருமணத்திற்குப் பின்னரே அல்லாஹ் கூறியுள்ளான்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘(மண முடிப்பதற்கு முன்னால் ஒரு பெண்ணிற்கு மணவிலக்கு அளித்தால்) அவள் மணவிலக்குப் பெற்றவளாக மாட்டாள்” என்று அலீ (ரலி), சயீத் பின் அல்முசய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர், அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா, அபான் பின் உஸ்மான், அலீ பின் ஹுசைன், ஷுரைஹ், சயீத் பின் ஜுபைர், காசிம், சாலிம், தாவூஸ், ஹசன் அல்பளி, இக்ரிமா, அதாஉ, ஆமிர் பின் சஅத், ஜாபிர் பின் ஸைத், நாஃபிஉ பின் ஜுபைர், முஹம்மத் பின் கஅப், சுலைமான் பின் யசார், முஜாஹித், காசிம் பின் அப்திர் ரஹ்மான், அம்ர் பின் ஹரிம், ‘அபீ (ரஹ்) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.24 பாடம்: 10 ஒரு நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘‘இவள் என் சகோதரி” என்று கூறி னால் அது அவரைப் பாதிக்கும் (மணவிலக்கு போன்ற) ஒரு விஷயமே அல்ல. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியாரான) சாராவைப் பார்த்து ‘‘இவர் என் சகோதரி” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் திருப்திக்காகவே அப்படிச் சொன்னார்கள்.25 பாடம்: 11 நெருக்கடி, நிர்ப்பந்தம், போதை, பைத்தியம், தவறுதல், மறதி ஆகிய நிலைகளில் ஒருவர் மணவிலக்கு அளித்தல், (இறைவனுக்கு) இணைகற்பித்தல் உள்ளிட்ட செயல்களைச் செய்துவிட்டால் (சட்டம் என்ன)? குடிகாரனின் நிலையும் பைத்தியக்காரனின் நிலையும் (ஒன்றா? வேறா?)26 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியதே கிடைக்கும்.27 (‘தவறுதலாக அல்லது மறதியாக தலாக் சொன்னால் அது நிகழாது’ என்பதற்கு ஆதாரமாக) ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘எங்கள் இறைவா! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறுதலாகச் செய்திருப்பினும் எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக!” எனும் (2:286 ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள். மனபிரமைக்கு உள்ளானவனின் ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது (என்பது பற்றிய விளக்கம்). (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) தமக்குத் தாமே வாக்குமூலம் அளித்த ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘‘உனக்குப் பைத்தியமா? என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஹம்ஸா (ரலி) அவர்கள் எனது இரு (கிழ) ஒட்டகங்களின் இடுப்புகளை (குடி போதையில்) பிளந்துவிட்டார். எனவே, நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸாவைக் கண்டிக்கலானார்கள். அப்போது ஹம்ஸா வின் இரு கண்களும் சிவந்திருக்க அவர் போதையிலிருந்தார். பிறகு ஹம்ஸா (எங்களைப் பார்த்து), ‘‘நீங்கள் எல்லாரும் என் தந்தையின் அடிமைகள்தானே?” என்று கேட்டார். அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, (திரும்பாமல் அப்படியே பின்வாங்கிய வண்ணம் வந்த வழியே) நபி (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.28 ‘‘போதையிலுள்ளவன் மற்றும் நிர்ப்பந்திக்கப்பட்டவனின் மணவிலக்கு செல்லாது என உஸ்மான் (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறினார்கள். ‘‘மனபிரமையில் உள்ளவனின் மணவிலக்கு செல்லாது” என உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘ஒருவர் மணவிலக்குச் செய்யும்போது (தாம் விரும்பும்) நிபந்தனைகளைச் சேர்க்க அவருக்கு உரிமையுண்டு” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர், தம் மனைவி வீட்டைவிட்டு வெளியேறினால் ஒட்டுமொத்த (அல்பத்தா) தலாக் சொல்லப்பட்டவள் ஆவாள் என்று கூறினார். (இது குறித்து நான் வினவியபோது) இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘‘அவ்வாறு அவள் (வீட்டைவிட்டு) வெளியேறினால் அவன் மூலம் ஒட்டுமொத்த தலாக் சொல்லப்பட்டவளாகிவிடுவாள். வெளியேறாவிட்டால் ஒன்றும் நிகழாது” என்று கூறினார்கள். முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர், ‘நான் இப்படி இப்படிச் செய்யாவிட்டால் என் மனைவி மூன்று தலாக் சொல்லப் பட்டவள் ஆகிவிடுவாள்’ என்று கூறினால், அவர் அந்தப் பிரமாணத்தைக் கூறும் போது எப்படிக் கூறினார்? மேலும், எதைக் கருத்தில் கொண்டு சொன்னார்? என்று கேட்கப்படும். அந்தப் பிரமாணத்தைக் கூறும்போது ‘குறிப்பிட்ட ஒரு தவணையை மனத்தில் உறுதி செய்துகொண்டே நான் அவ்வாறு கூறினேன்’ என்று அவர் குறிப்பிட்டால், அது அவரது பொறுப்பிலும் நம்பிக்கையிலும் விடப்படும். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ எனக்குத் தேவையில்லை’ என்று கூறினால், அவர் என்ன எண்ணத் தில் கூறினாரோ அதன்படி அமையும். ஒவ்வொரு சமுதாயத்தாரின் தலாக்கும் அவரவர் மொழிப்படியே அமையும். கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியை நோக்கி, ‘‘நீ கர்ப்பமுற்றால் மூன்று தலாக் சொல்லப்பட்டவள் ஆகிவிடுவாய்” என்று கூறியிருந்தால், மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் ஒவ்வொரு நேரத்திலும் ஒரு தடவை அவளுடன் அவர் தாம்பத்திய உறவு கொள்ளலாம். எப்போது அவள் கர்ப்பமடைந்திருப்பது தெரியவருகிறதோ அப்போது அவரிடமிருந்து அவள் பிரிந்துவிடுவாள். ‘‘ஒருவர் தம் மனைவியிடம், ‘நீ உன் தாய் வீட்டிற்குப் போய்விடு’ என்று கூறினால் அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும்” என ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘அவசியத்தை முன்னிட்டே தலாக் சொல்லப்பட வேண்டும். (ஆனால்) அடிமை விடுதலை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக (எப்போதும்) நடைபெறலாம்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ என் மனைவி அல்லள்’ என்று சொன்னால், அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும். (அதாவது) மண விலக்குச் செய்யும் எண்ணத்தில் அவர் அவ்வாறு கூறியிருந்தால் அவர் எண்ணப் படியே மணவிலக்கு நிகழ்ந்துவிடும்” என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அலீ (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களை நோக்கி) ‘‘மூன்று நபர்களிட மிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்டார்கள்:29 1. பைத்தியக்காரனிடமிருந்து; அவன் புத்தி சுவாதீனம் அடையும்வரை. 2. சிறுவனிடமிருந்து; அவன் பருவ வயதை அடையும்வரை. 3. தூங்குபவனிடமிருந்து; அவன் கண் விழிக்கும்வரை. மேலும், ‘‘அறிவு குறைந்தவனின் மணவிலக்கைத் தவிர மற்றெல்லா மணவிலக்குகளும் செல்லும்” என்று அலீ (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
5271. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்துகொண்டிருந்த போது ‘அஸ்லம்’ குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவர்களிடம் வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே!” என்று அழைத்து, ‘‘பிற்போக்கானவன் விபசாரம் செய்து விட்டான்” என்று தம்மைப் பற்றிச் சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தை அவரை விட்டுத் திருப்பிக்கொண்டார்கள். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய பகுதிக்கு வந்து அவர்களின் முகத்திற்கு நேராக நின்றுகொண்டு முன்போலவே சொன்னார்.

அப்போதும் நபி (ஸல்) அவர்கள் முகத்தை (வேறு திசையில்) திருப்பிக் கொண்டார்கள். அவர் மறுபடியும் நபி (ஸல்) அவர்கள் திரும்பிய பகுதிக்கு வந்து அவர்களின் முகத்திற்கு நேராக நின்று கொண்டு முன்போலவே சொன்னார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் வேறு பக்கம் திரும்பிக்கொண்டார்கள். (இவ்வாறு) நான்காம் முறையாக நபி (ஸல்) அவர்களின் முகத்திற்கு நேராக நின்றுகொண்டு, தாம் விபசாரம் செய்துவிட்டதாக நான்கு முறை ஒப்புதல் வாக்குமூலம் அளித்தபோது அவரை நபி (ஸல்) அவர்கள் (அருகில்) அழைத்து ‘‘உனக்கு என்ன பைத்தியமா? (சுய நினைவோடுதான் கூறுகின்றாயா?)” என்று கேட்டார்கள்.

அவர், ‘‘(எனக்குப் பைத்தியம்) இல்லை. (நான் தெளிவுடன்தான் இருக்கிறேன்)” என்று சொன்னார்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் ‘‘இவரை அழைத்துச் சென்று கல்லெறி தண்டனை வழங்குங்கள்” என்று உத்தரவிட்டார்கள். அந்த மனிதர் திருமணம் ஆனவராக இருந்தார்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 68
5272. وَعَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي مَنْ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيَّ، قَالَ كُنْتُ فِيمَنْ رَجَمَهُ فَرَجَمْنَاهُ بِالْمُصَلَّى بِالْمَدِينَةِ، فَلَمَّا أَذْلَقَتْهُ الْحِجَارَةُ جَمَزَ حَتَّى أَدْرَكْنَاهُ بِالْحَرَّةِ، فَرَجَمْنَاهُ حَتَّى مَاتَ.
பாடம்: 9 மணமுடிப்பதற்கு முன்னால் மணவிலக்கு என்பது கிடையாது. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கையாளர்களே! இறை நம்பிக்கை கொண்ட பெண்களை நீங்கள் மணந்து, பிறகு நீங்கள் அவர்களைத் தொடுவதற்கு முன்பே மணவிலக்குச் செய்துவிட்டீர்களானால், அவர்கள் விஷயத்தில் நீங்கள் கணக்கிடக்கூடிய (இத்தா) தவணை உங்களுக்கு ஒன்று மில்லை. ஆகவே, அவர்களுக்கு (ஏற்ற வகையில்) ஏதேனும் அளித்து நல்ல முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள். (33:49) ‘‘(இந்த வசனத்தில்) மணவிலக்கைப் பற்றி திருமணத்திற்குப் பின்னரே அல்லாஹ் கூறியுள்ளான்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘(மண முடிப்பதற்கு முன்னால் ஒரு பெண்ணிற்கு மணவிலக்கு அளித்தால்) அவள் மணவிலக்குப் பெற்றவளாக மாட்டாள்” என்று அலீ (ரலி), சயீத் பின் அல்முசய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர், அபூபக்ர் பின் அப்திர் ரஹ்மான், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா, அபான் பின் உஸ்மான், அலீ பின் ஹுசைன், ஷுரைஹ், சயீத் பின் ஜுபைர், காசிம், சாலிம், தாவூஸ், ஹசன் அல்பளி, இக்ரிமா, அதாஉ, ஆமிர் பின் சஅத், ஜாபிர் பின் ஸைத், நாஃபிஉ பின் ஜுபைர், முஹம்மத் பின் கஅப், சுலைமான் பின் யசார், முஜாஹித், காசிம் பின் அப்திர் ரஹ்மான், அம்ர் பின் ஹரிம், ‘அபீ (ரஹ்) ஆகியோர் கூறியதாக அறிவிக்கப்படுகிறது.24 பாடம்: 10 ஒரு நிர்ப்பந்தத்தின் காரணமாக ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘‘இவள் என் சகோதரி” என்று கூறி னால் அது அவரைப் பாதிக்கும் (மணவிலக்கு போன்ற) ஒரு விஷயமே அல்ல. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் துணைவியாரான) சாராவைப் பார்த்து ‘‘இவர் என் சகோதரி” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் திருப்திக்காகவே அப்படிச் சொன்னார்கள்.25 பாடம்: 11 நெருக்கடி, நிர்ப்பந்தம், போதை, பைத்தியம், தவறுதல், மறதி ஆகிய நிலைகளில் ஒருவர் மணவிலக்கு அளித்தல், (இறைவனுக்கு) இணைகற்பித்தல் உள்ளிட்ட செயல்களைச் செய்துவிட்டால் (சட்டம் என்ன)? குடிகாரனின் நிலையும் பைத்தியக்காரனின் நிலையும் (ஒன்றா? வேறா?)26 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘எண்ணங்களைப் பொறுத்தே செயல்கள் அமைகின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் எண்ணியதே கிடைக்கும்.27 (‘தவறுதலாக அல்லது மறதியாக தலாக் சொன்னால் அது நிகழாது’ என்பதற்கு ஆதாரமாக) ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள், ‘‘எங்கள் இறைவா! நாங்கள் மறந்துபோயிருப்பினும், அல்லது நாங்கள் தவறுதலாகச் செய்திருப்பினும் எங்களைத் தண்டிக்காதிருப்பாயாக!” எனும் (2:286 ஆவது) வசனத்தை ஓதிக்காட்டினார்கள். மனபிரமைக்கு உள்ளானவனின் ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது (என்பது பற்றிய விளக்கம்). (தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக) தமக்குத் தாமே வாக்குமூலம் அளித்த ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் ‘‘உனக்குப் பைத்தியமா? என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ஹம்ஸா (ரலி) அவர்கள் எனது இரு (கிழ) ஒட்டகங்களின் இடுப்புகளை (குடி போதையில்) பிளந்துவிட்டார். எனவே, நபி (ஸல்) அவர்கள் ஹம்ஸாவைக் கண்டிக்கலானார்கள். அப்போது ஹம்ஸா வின் இரு கண்களும் சிவந்திருக்க அவர் போதையிலிருந்தார். பிறகு ஹம்ஸா (எங்களைப் பார்த்து), ‘‘நீங்கள் எல்லாரும் என் தந்தையின் அடிமைகள்தானே?” என்று கேட்டார். அவர் போதையில் இருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, (திரும்பாமல் அப்படியே பின்வாங்கிய வண்ணம் வந்த வழியே) நபி (ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நாங்களும் அவர்களுடன் வெளியேறினோம்.28 ‘‘போதையிலுள்ளவன் மற்றும் நிர்ப்பந்திக்கப்பட்டவனின் மணவிலக்கு செல்லாது என உஸ்மான் (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறினார்கள். ‘‘மனபிரமையில் உள்ளவனின் மணவிலக்கு செல்லாது” என உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். ‘‘ஒருவர் மணவிலக்குச் செய்யும்போது (தாம் விரும்பும்) நிபந்தனைகளைச் சேர்க்க அவருக்கு உரிமையுண்டு” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர், தம் மனைவி வீட்டைவிட்டு வெளியேறினால் ஒட்டுமொத்த (அல்பத்தா) தலாக் சொல்லப்பட்டவள் ஆவாள் என்று கூறினார். (இது குறித்து நான் வினவியபோது) இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘‘அவ்வாறு அவள் (வீட்டைவிட்டு) வெளியேறினால் அவன் மூலம் ஒட்டுமொத்த தலாக் சொல்லப்பட்டவளாகிவிடுவாள். வெளியேறாவிட்டால் ஒன்றும் நிகழாது” என்று கூறினார்கள். முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர், ‘நான் இப்படி இப்படிச் செய்யாவிட்டால் என் மனைவி மூன்று தலாக் சொல்லப் பட்டவள் ஆகிவிடுவாள்’ என்று கூறினால், அவர் அந்தப் பிரமாணத்தைக் கூறும் போது எப்படிக் கூறினார்? மேலும், எதைக் கருத்தில் கொண்டு சொன்னார்? என்று கேட்கப்படும். அந்தப் பிரமாணத்தைக் கூறும்போது ‘குறிப்பிட்ட ஒரு தவணையை மனத்தில் உறுதி செய்துகொண்டே நான் அவ்வாறு கூறினேன்’ என்று அவர் குறிப்பிட்டால், அது அவரது பொறுப்பிலும் நம்பிக்கையிலும் விடப்படும். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ எனக்குத் தேவையில்லை’ என்று கூறினால், அவர் என்ன எண்ணத் தில் கூறினாரோ அதன்படி அமையும். ஒவ்வொரு சமுதாயத்தாரின் தலாக்கும் அவரவர் மொழிப்படியே அமையும். கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒருவர் தம் மனைவியை நோக்கி, ‘‘நீ கர்ப்பமுற்றால் மூன்று தலாக் சொல்லப்பட்டவள் ஆகிவிடுவாய்” என்று கூறியிருந்தால், மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் ஒவ்வொரு நேரத்திலும் ஒரு தடவை அவளுடன் அவர் தாம்பத்திய உறவு கொள்ளலாம். எப்போது அவள் கர்ப்பமடைந்திருப்பது தெரியவருகிறதோ அப்போது அவரிடமிருந்து அவள் பிரிந்துவிடுவாள். ‘‘ஒருவர் தம் மனைவியிடம், ‘நீ உன் தாய் வீட்டிற்குப் போய்விடு’ என்று கூறினால் அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும்” என ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘அவசியத்தை முன்னிட்டே தலாக் சொல்லப்பட வேண்டும். (ஆனால்) அடிமை விடுதலை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக (எப்போதும்) நடைபெறலாம்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். ‘‘ஒருவர் தம் மனைவியை நோக்கி ‘நீ என் மனைவி அல்லள்’ என்று சொன்னால், அவர் என்ன எண்ணத்தில் கூறினாரோ அப்படியே அமையும். (அதாவது) மண விலக்குச் செய்யும் எண்ணத்தில் அவர் அவ்வாறு கூறியிருந்தால் அவர் எண்ணப் படியே மணவிலக்கு நிகழ்ந்துவிடும்” என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அலீ (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களை நோக்கி) ‘‘மூன்று நபர்களிட மிருந்து பேனா உயர்த்தப்பட்டுவிட்டது என்பது உங்களுக்குத் தெரியாதா?” எனக் கேட்டார்கள்:29 1. பைத்தியக்காரனிடமிருந்து; அவன் புத்தி சுவாதீனம் அடையும்வரை. 2. சிறுவனிடமிருந்து; அவன் பருவ வயதை அடையும்வரை. 3. தூங்குபவனிடமிருந்து; அவன் கண் விழிக்கும்வரை. மேலும், ‘‘அறிவு குறைந்தவனின் மணவிலக்கைத் தவிர மற்றெல்லா மணவிலக்குகளும் செல்லும்” என்று அலீ (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
5272. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கியவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன்.

அப்போது அவரை மதீனாவின் (பெரு நாள்) தொழுகைத் திடலில் வைத்து நாங்கள் கல்லெறிந்தோம். அவர்மீது கல்லடி விழத் தொடங்கியதும் (வலி தாங்க முடியாமல்) அவர் வெருண்டோடலானார். இறுதியில் அவரை நாங்கள் பாறைகள் நிறைந்த (‘அல்ஹர்ரா’ எனும்) இடத்தில் பிடித்து அவர் மரணிக்கும்வரை அவரைக் கல்லால் அடித்தோம்.

அத்தியாயம் : 68
5273. حَدَّثَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ،. أَنَّ امْرَأَةَ، ثَابِتِ بْنِ قَيْسٍ أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ ثَابِتُ بْنُ قَيْسٍ مَا أَعْتُبُ عَلَيْهِ فِي خُلُقٍ وَلاَ دِينٍ، وَلَكِنِّي أَكْرَهُ الْكُفْرَ فِي الإِسْلاَمِ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ "". قَالَتْ نَعَمْ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اقْبَلِ الْحَدِيقَةَ وَطَلِّقْهَا تَطْلِيقَةً "". قَالَ أَبُو عَبْد اللَّهِ لَا يُتَابَعُ فِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ
பாடம்: 12 ‘அல்குல்உ’ (ஈடாக ஏதேனும் கொடுத்து ஒரு பெண் தன் கணவனிட மிருந்து பிரிந்துகொள்வது) பற்றியும், அதுவே மணவிலக்கு ஆகிவிடுமா என்பது பற்றியும்31 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர, மனைவியருக்கு நீங்கள் வழங்கிய எந்தப் பொருளையும் (திரும்பப்) பெறுவது உங்களுக்குத் தகாது. அப்படி அவ்விருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என நீங்கள் அஞ்சினால், அவள் ஈட்டுத் தொகை வழங்குவதில் (கணவன் அதைப் பெறுவதில்) இருவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (2:229) ஆட்சியாளர் (அல்லது நீதிபதியின் அனுமதி) இல்லாமலேயே ‘குல்உ’ நிகழ்வதை உமர் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மனைவியின் பின்னலில் கட்டும் கயிற்றைத் தவிர (அவளின் அனைத்துச் சொத்துகளுக்கும் ஈடாக) ‘குல்உ’ நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என அஞ்சினால் தவிர...” எனும் (2:229ஆவது வசனத்) தொடரின் கருத்தாவது: இல்லற வாழ்க்கையிலும் பரஸ்பர உறவிலும் தம்பதியரில் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமையென அல்லாஹ் விதித்துள்ளவற்றை அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என அஞ்சினால் தவிர. (உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு) உன் மூலம் ஏற்பட்ட பெருந் துடக்கிற்காக நான் குளிக்கப்போவதில்லை என்று மனைவி கூறுகின்ற அளவுக்கு (பிணக்கு முற்றியதாக) இருந்தால்தான் ‘குலா’ செய்வது செல்லும் என்று விவரம் அறியாத சிலர் கூறியதைப் போன்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறவில்லை.
5273. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) ஸாபித் பின் கைஸின் குணத்தையோ மார்க்கப் பற்றையோ நான் குறை கூறவில்லை. ஆனால், நான் இஸ்லாத்தில் இருந்து கொண்டே இறைமறுப்புக்குரிய செயலைச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று கூறினார்.32

அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஸாபித் உனக்கு (மணக் கொடையாக) அளித்த தோட்டத்தை நீ அவருக்கே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘ஆம் (தந்துவிடுகிறேன்)” என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸாபித் அவர்களிடம்), ‘‘தோட்டத்தை ஏற்றுக்கொண்டு, அவளை ஒரு முறை தலாக் சொல்லிவிடுங்கள்!” என்று கூறினார்கள்.33

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிட மிருந்து அறிவிக்கப்படும் இந்த ஹதீஸில் ‘முதாபஆ’ (அறிவிப்பாளர்தொடரில் ஒற்றுமை) இல்லை.34


அத்தியாயம் : 68
5274. حَدَّثَنَا إِسْحَاقُ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ أُخْتَ عَبْدِ اللَّهِ بْنِ أُبَىٍّ، بِهَذَا، وَقَالَ "" تَرُدِّينَ حَدِيقَتَهُ "". قَالَتْ نَعَمْ. فَرَدَّتْهَا وَأَمَرَهُ يُطَلِّقْهَا. وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ خَالِدٍ عَنْ عِكْرِمَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَطَلِّقْهَا.
பாடம்: 12 ‘அல்குல்உ’ (ஈடாக ஏதேனும் கொடுத்து ஒரு பெண் தன் கணவனிட மிருந்து பிரிந்துகொள்வது) பற்றியும், அதுவே மணவிலக்கு ஆகிவிடுமா என்பது பற்றியும்31 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர, மனைவியருக்கு நீங்கள் வழங்கிய எந்தப் பொருளையும் (திரும்பப்) பெறுவது உங்களுக்குத் தகாது. அப்படி அவ்விருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என நீங்கள் அஞ்சினால், அவள் ஈட்டுத் தொகை வழங்குவதில் (கணவன் அதைப் பெறுவதில்) இருவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (2:229) ஆட்சியாளர் (அல்லது நீதிபதியின் அனுமதி) இல்லாமலேயே ‘குல்உ’ நிகழ்வதை உமர் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மனைவியின் பின்னலில் கட்டும் கயிற்றைத் தவிர (அவளின் அனைத்துச் சொத்துகளுக்கும் ஈடாக) ‘குல்உ’ நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என அஞ்சினால் தவிர...” எனும் (2:229ஆவது வசனத்) தொடரின் கருத்தாவது: இல்லற வாழ்க்கையிலும் பரஸ்பர உறவிலும் தம்பதியரில் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமையென அல்லாஹ் விதித்துள்ளவற்றை அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என அஞ்சினால் தவிர. (உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு) உன் மூலம் ஏற்பட்ட பெருந் துடக்கிற்காக நான் குளிக்கப்போவதில்லை என்று மனைவி கூறுகின்ற அளவுக்கு (பிணக்கு முற்றியதாக) இருந்தால்தான் ‘குலா’ செய்வது செல்லும் என்று விவரம் அறியாத சிலர் கூறியதைப் போன்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறவில்லை.
5274. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உபை என்பவரின் சகோதரி (ஜமீலா) இடம் நபி (ஸல்) அவர்கள், ‘‘உன் கணவரின் தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அவர் ‘ஆம்’ என்றார். ஆகவே, அதை அவர் திருப்பித் தந்துவிட்டார். பின்னர், தலாக் சொல்லிவிடும்படி நபி (ஸல்) அவர்கள் அவரு டைய கணவருக்கு உத்தரவிட்டார்கள்.

மற்றோர் அறிவிப்பில், ‘‘அவரை தலாக் சொல்லிவிடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று காணப் படுகிறது.


அத்தியாயம் : 68
5275. وَعَنِ ابْنِ أَبِي تَمِيمَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ قَالَ جَاءَتِ امْرَأَةُ ثَابِتِ بْنِ قَيْسٍ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي لاَ أَعْتُبُ عَلَى ثَابِتٍ فِي دِينٍ وَلاَ خُلُقٍ، وَلَكِنِّي لاَ أُطِيقُهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ "". قَالَتْ نَعَمْ.
பாடம்: 12 ‘அல்குல்உ’ (ஈடாக ஏதேனும் கொடுத்து ஒரு பெண் தன் கணவனிட மிருந்து பிரிந்துகொள்வது) பற்றியும், அதுவே மணவிலக்கு ஆகிவிடுமா என்பது பற்றியும்31 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர, மனைவியருக்கு நீங்கள் வழங்கிய எந்தப் பொருளையும் (திரும்பப்) பெறுவது உங்களுக்குத் தகாது. அப்படி அவ்விருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என நீங்கள் அஞ்சினால், அவள் ஈட்டுத் தொகை வழங்குவதில் (கணவன் அதைப் பெறுவதில்) இருவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (2:229) ஆட்சியாளர் (அல்லது நீதிபதியின் அனுமதி) இல்லாமலேயே ‘குல்உ’ நிகழ்வதை உமர் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மனைவியின் பின்னலில் கட்டும் கயிற்றைத் தவிர (அவளின் அனைத்துச் சொத்துகளுக்கும் ஈடாக) ‘குல்உ’ நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என அஞ்சினால் தவிர...” எனும் (2:229ஆவது வசனத்) தொடரின் கருத்தாவது: இல்லற வாழ்க்கையிலும் பரஸ்பர உறவிலும் தம்பதியரில் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமையென அல்லாஹ் விதித்துள்ளவற்றை அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என அஞ்சினால் தவிர. (உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு) உன் மூலம் ஏற்பட்ட பெருந் துடக்கிற்காக நான் குளிக்கப்போவதில்லை என்று மனைவி கூறுகின்ற அளவுக்கு (பிணக்கு முற்றியதாக) இருந்தால்தான் ‘குலா’ செய்வது செல்லும் என்று விவரம் அறியாத சிலர் கூறியதைப் போன்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறவில்லை.
5275. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களின் துணைவியார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப் பற்றையோ அவருடைய குணத்தையோ குறை சொல்லவில்லை. ஆனால், அவருடன் வாழ என்னால் முடியவில்லை” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘அவருடைய தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அவரும் ‘ஆம்’ (திருப்பித் தந்துவிடுகிறேன்) என்று கூறினார்.


அத்தியாயம் : 68
5276. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ الْمُخَرِّمِيُّ، حَدَّثَنَا قُرَادٌ أَبُو نُوحٍ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضى الله عنهما قَالَ جَاءَتِ امْرَأَةُ ثَابِتِ بْنِ قَيْسِ بْنِ شَمَّاسٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ مَا أَنْقِمُ عَلَى ثَابِتٍ فِي دِينٍ وَلاَ خُلُقٍ، إِلاَّ أَنِّي أَخَافُ الْكُفْرَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَتَرُدِّينَ عَلَيْهِ حَدِيقَتَهُ "". فَقَالَتْ نَعَمْ. فَرَدَّتْ عَلَيْهِ، وَأَمَرَهُ فَفَارَقَهَا.
பாடம்: 12 ‘அல்குல்உ’ (ஈடாக ஏதேனும் கொடுத்து ஒரு பெண் தன் கணவனிட மிருந்து பிரிந்துகொள்வது) பற்றியும், அதுவே மணவிலக்கு ஆகிவிடுமா என்பது பற்றியும்31 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர, மனைவியருக்கு நீங்கள் வழங்கிய எந்தப் பொருளையும் (திரும்பப்) பெறுவது உங்களுக்குத் தகாது. அப்படி அவ்விருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என நீங்கள் அஞ்சினால், அவள் ஈட்டுத் தொகை வழங்குவதில் (கணவன் அதைப் பெறுவதில்) இருவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (2:229) ஆட்சியாளர் (அல்லது நீதிபதியின் அனுமதி) இல்லாமலேயே ‘குல்உ’ நிகழ்வதை உமர் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மனைவியின் பின்னலில் கட்டும் கயிற்றைத் தவிர (அவளின் அனைத்துச் சொத்துகளுக்கும் ஈடாக) ‘குல்உ’ நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என அஞ்சினால் தவிர...” எனும் (2:229ஆவது வசனத்) தொடரின் கருத்தாவது: இல்லற வாழ்க்கையிலும் பரஸ்பர உறவிலும் தம்பதியரில் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமையென அல்லாஹ் விதித்துள்ளவற்றை அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என அஞ்சினால் தவிர. (உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு) உன் மூலம் ஏற்பட்ட பெருந் துடக்கிற்காக நான் குளிக்கப்போவதில்லை என்று மனைவி கூறுகின்ற அளவுக்கு (பிணக்கு முற்றியதாக) இருந்தால்தான் ‘குலா’ செய்வது செல்லும் என்று விவரம் அறியாத சிலர் கூறியதைப் போன்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறவில்லை.
5276. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களின் துணைவியார் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் ஸாபித் அவர்களின் மார்க்கப் பற்றையோ, அவருடைய குணத்தையோ பழி சொல்லவில்லை. ஆயினும், நான் இறைமறுப்புக்குரிய செயலைச் செய்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன்” என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘சரி! அவருடைய தோட்டத்தை அவரிடமே திருப்பித் தந்துவிடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவரும் ‘ஆம்’ என்று கூறினார்.

பின்னர் (அந்தத் தோட்டத்தை) ஸாபித் அவர்களுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். நபி (ஸல்) அவர்கள் ஸாபித் அவர்களுக்கு உத்தரவிட, அவரும் தம் மனைவியிட மிருந்து பிரிந்துவிட்டார்.


அத்தியாயம் : 68
5277. حَدَّثَنَا سُلَيْمَانُ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ جَمِيلَةَ، فَذَكَرَ الْحَدِيثَ.
பாடம்: 12 ‘அல்குல்உ’ (ஈடாக ஏதேனும் கொடுத்து ஒரு பெண் தன் கணவனிட மிருந்து பிரிந்துகொள்வது) பற்றியும், அதுவே மணவிலக்கு ஆகிவிடுமா என்பது பற்றியும்31 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என்று அஞ்சினால் தவிர, மனைவியருக்கு நீங்கள் வழங்கிய எந்தப் பொருளையும் (திரும்பப்) பெறுவது உங்களுக்குத் தகாது. அப்படி அவ்விருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என நீங்கள் அஞ்சினால், அவள் ஈட்டுத் தொகை வழங்குவதில் (கணவன் அதைப் பெறுவதில்) இருவர்மீதும் எந்தக் குற்றமும் இல்லை. (2:229) ஆட்சியாளர் (அல்லது நீதிபதியின் அனுமதி) இல்லாமலேயே ‘குல்உ’ நிகழ்வதை உமர் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். மனைவியின் பின்னலில் கட்டும் கயிற்றைத் தவிர (அவளின் அனைத்துச் சொத்துகளுக்கும் ஈடாக) ‘குல்உ’ நிகழ்ந்தாலும் அதையும் உஸ்மான் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள். தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘(தம்பதியர்) இருவரும் அல்லாஹ்வின் விதிகளை நிலைநாட்டமாட்டார்கள் என அஞ்சினால் தவிர...” எனும் (2:229ஆவது வசனத்) தொடரின் கருத்தாவது: இல்லற வாழ்க்கையிலும் பரஸ்பர உறவிலும் தம்பதியரில் ஒவ்வொருவரும் மற்றவருக்குச் செய்ய வேண்டிய கடமையென அல்லாஹ் விதித்துள்ளவற்றை அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என அஞ்சினால் தவிர. (உன்னுடன் படுக்கையைப் பகிர்ந்துகொண்டு) உன் மூலம் ஏற்பட்ட பெருந் துடக்கிற்காக நான் குளிக்கப்போவதில்லை என்று மனைவி கூறுகின்ற அளவுக்கு (பிணக்கு முற்றியதாக) இருந்தால்தான் ‘குலா’ செய்வது செல்லும் என்று விவரம் அறியாத சிலர் கூறியதைப் போன்று தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறவில்லை.
5277. இக்ரிமா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (அந்தப் பெண்ணின் பெயர்) ஜமீலா என்று மேற்கண்ட ஹதீஸ் தொடங்குகிறது.

அத்தியாயம் : 68
5278. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ بَنِي الْمُغِيرَةِ اسْتَأْذَنُوا فِي أَنْ يَنْكِحَ عَلِيٌّ ابْنَتَهُمْ، فَلاَ آذَنُ "".
பாடம்: 13 (கணவன்- மனைவிக்கிடையே) பிரிவினை ஏற்படு(மோ என அஞ்சு)வதும், அவசியம் நேரும்போது ‘குலா’ செய்யும்படி (நடுவர்) யோசனை கூறலாமா என்பதும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்: (கணவன்-மனைவி ஆகிய) அவ்விரு வரிடையே (பிணக்கு உண்டாகி) பிரிவினை ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின் குடும்பத்தாரிலிருந்து ஒரு நடுவரையும் மனைவியின் குடும்பத்தாரிலிருந்து ஒரு நடுவரையும் அனுப்புங்கள். அவ்விருவரும் சமாதானத்தை விரும்பி னால், அல்லாஹ் தம்பதியரிடையே ஒற்றுமை ஏற்படும்படி செய்துவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிகின்ற வனாகவும் நன்குணர்ந்தவனாகவும் இருக்கின்றான். (4:35)35
5278. மிஸ்வர் பின் மக்ரமா அஸ்ஸுஹ்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘பனூ முஃகீரா குலத்தார், தங்கள் புதல்வியை அலீ (ரலி) அவர்கள் மணமு டித்துக்கொள்ள அனுமதி கோரினர்.

(ஆனால், அதை) நான் அனுமதிக்கமாட்டேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன்.36

அத்தியாயம் : 68
5279. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كَانَ فِي بَرِيرَةَ ثَلاَثُ سُنَنٍ، إِحْدَى السُّنَنِ أَنَّهَا أُعْتِقَتْ، فَخُيِّرَتْ فِي زَوْجِهَا. وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". وَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالْبُرْمَةُ تَفُورُ بِلَحْمٍ، فَقُرِّبَ إِلَيْهِ خُبْزٌ وَأُدْمٌ مِنْ أُدْمِ الْبَيْتِ فَقَالَ "" أَلَمْ أَرَ الْبُرْمَةَ فِيهَا لَحْمٌ "". قَالُوا بَلَى، وَلَكِنْ ذَلِكَ لَحْمٌ تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ، وَأَنْتَ لاَ تَأْكُلُ الصَّدَقَةَ. قَالَ "" عَلَيْهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ "".
பாடம்: 14 (திருமணமான) அடிமைப் பெண்ணை விற்பது மணவிலக்கு ஆகாது.37
5279. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமைப் பெண்ணாயிருந்து விடுதலை அடைந்த) பரீராவின் விஷயத் தில் மூன்று வழிமுறைகள் கிடைக்கப் பெற்றன:

1. அவர் தம் (அடிமைக்) கணவர் விஷயத்தில் (அவருடன் தொடர்ந்து வாழவும், அல்லது பிரிந்துவிடவும்) உரிமை அளிக்கப்பட்டார்.

2. ‘‘அடிமையின் வாரிசுரிமை (‘வலா’), விடுதலை செய்தவருக்கே உண்டு” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

3. பாத்திரம் ஒன்றில் இறைச்சி கொதித்துக்கொண்டிருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்குமுன் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் ‘‘பாத்திரத்தில் இறைச்சி இருக்கக் கண்டேனே! (அது என்னவாயிற்று?)” என்று கேட்டார்கள். அதற்குக் குடும்பத்தார் ‘‘ஆம்! (இருக்கிறது.) ஆனால், அது பரீராவுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாகும். தாங்கள்தான் தர்மப் பொருட்களைச் சாப்பிடமாட்டீர்களே?” என்று கூறினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘அது பரீராவுக்குத்தான் தர்மம்; நமக்கு அது (பரீராவிடமிருந்து) அன்பளிப்பு” என்றார் கள்.38

அத்தியாயம் : 68
5280. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، وَهَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ رَأَيْتُهُ عَبْدًا يَعْنِي زَوْجَ بَرِيرَةَ.
பாடம்: 15 ஓர் அடிமைப் பெண் (விடுதலை செய்யப்பட்டால்) அடிமையான தன் கணவனுடன் வாழ(வும் பிரிந்துவிடவும் அவளுக்கு) உரிமை யுண்டு.39
5280. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீராவின் கணவர் ஓர் அடிமையாக இருந்ததை நான் பார்த்தேன்.


அத்தியாயம் : 68
5281. حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ ذَاكَ مُغِيثٌ عَبْدُ بَنِي فُلاَنٍ ـ يَعْنِي زَوْجَ بَرِيرَةَ ـ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَتْبَعُهَا فِي سِكَكِ الْمَدِينَةِ، يَبْكِي عَلَيْهَا.
பாடம்: 15 ஓர் அடிமைப் பெண் (விடுதலை செய்யப்பட்டால்) அடிமையான தன் கணவனுடன் வாழ(வும் பிரிந்துவிடவும் அவளுக்கு) உரிமை யுண்டு.39
5281. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பரீராவின் கணவர் முஃகீஸ் இன்ன குலத்தாரின் அடிமையாவார். அவர் (தம் மனைவி விடுதலையாகி விருப்ப உரிமை அளிக்கப்பட்டபின், தம்மிடமிருந்து பிரிந்துவிடுவதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டபோது) மதீனாவின் தெருக்களில் பரீராவுக்குப் பின்னால் அவருக்காக அழுதவண்ணம் பின்தொடர்ந்து சென்றதை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள் ளது.


அத்தியாயம் : 68
5282. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ زَوْجُ بَرِيرَةَ عَبْدًا أَسْوَدَ يُقَالُ لَهُ مُغِيثٌ، عَبْدًا لِبَنِي فُلاَنٍ، كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ وَرَاءَهَا فِي سِكَكِ الْمَدِينَةِ.
பாடம்: 15 ஓர் அடிமைப் பெண் (விடுதலை செய்யப்பட்டால்) அடிமையான தன் கணவனுடன் வாழ(வும் பிரிந்துவிடவும் அவளுக்கு) உரிமை யுண்டு.39
5282. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கறுப்பு அடிமையான பரீராவின் கணவர் முஃகீஸ் இன்ன குலத்தாரின் அடிமையாயிருந்தார். அவர் (தம் மனைவி விடுதலையாகி விருப்ப உரிமை அளிக்கப்பட்டபின், தம்மிடமிருந்து பிரிந்து விடுவதைத் தேர்ந்தெடுத்தபோது) மதீனா வின் தெருக்களில் பரீராவுக்குப் பின்னால் சுற்றிச்சுற்றி வந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.

அத்தியாயம் : 68
5283. حَدَّثَنَا مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ زَوْجَ، بَرِيرَةَ كَانَ عَبْدًا يُقَالُ لَهُ مُغِيثٌ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ يَطُوفُ خَلْفَهَا يَبْكِي، وَدُمُوعُهُ تَسِيلُ عَلَى لِحْيَتِهِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لِعَبَّاسٍ "" يَا عَبَّاسُ أَلاَ تَعْجَبُ مِنْ حُبِّ مُغِيثٍ بَرِيرَةَ، وَمِنْ بُغْضِ بَرِيرَةَ مُغِيثًا "". فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَوْ رَاجَعْتِهِ "". قَالَتْ يَا رَسُولَ اللَّهِ تَأْمُرُنِي قَالَ "" إِنَّمَا أَنَا أَشْفَعُ "". قَالَتْ لاَ حَاجَةَ لِي فِيهِ.
பாடம்: 16 பரீராவின் கணவருக்காக நபி (ஸல்) அவர்கள் பரிந்துரை செய்தது
5283. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பரீராவின் கணவர் அடிமையாக இருந்தார். அவருக்கு முஃகீஸ் என்று (பெயர்) சொல்லப்படும். அவர் (பரீரா தம்மைப் பிரிந்துவிட நினைக்கிறார் என்பதை அறிந்தபோது) தமது தாடியில் கண்ணீர் வழியும் அளவிற்கு அழுதவண்ணம் பரீராவிற்குப் பின்னால் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்ததை இப்போதும் நான் காண்பதைப் போன்றுள்ளது.

அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ‘‘அப்பாஸ் அவர்களே! முஃகீஸ் பரீராவின் மீது வைத்துள்ள நேசத்தையும், பரீரா முஃகீஸின் மீது கொண்டுள்ள கோபத்தையும் கண்டு நீங்கள் வியப்படையவில்லையா?” என்று கேட்டார்கள்.

(முஃகீஸிடமிருந்து பரீரா பிரிந்துவிட்ட போது) நபி (ஸல்) அவர்கள் ‘‘முஃகீஸிடம் நீ திரும்பிச் செல்லக் கூடாதா?” என்று (பரீராவிடம்) கேட்டார்கள். அதற்கு பரீரா ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தாங்கள் கட்டளையிடுகின்றீர்களா?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ‘‘(இல்லை.) நான் பரிந்துரைக்கவே செய்கின்றேன்” என்றார்கள். அப்போது பரீரா, ‘‘(அப்படி யானால்,) அவர் எனக்குத் தேவையில்லை” என்று கூறிவிட்டார்.

அத்தியாயம் : 68
5284. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، أَنَّ عَائِشَةَ، أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ، بَرِيرَةَ، فَأَبَى مَوَالِيهَا إِلاَّ أَنْ يَشْتَرِطُوا الْوَلاَءَ، فَذَكَرَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". وَأُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِلَحْمٍ فَقِيلَ إِنَّ هَذَا مَا تُصُدِّقَ عَلَى بَرِيرَةَ، فَقَالَ "" هُوَ لَهَا صَدَقَةٌ، وَلَنَا هَدِيَّةٌ "". حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ وَزَادَ فَخُيِّرَتْ مِنْ زَوْجِهَا.
பாடம்: 17
5284. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (அடிமைப் பெண்ணான) பரீராவை விலைக்கு வாங்க விரும்பினேன். பரீராவின் எசமான்கள் (‘வலா’ எனும்) வாரிசுரிமை தங்களுக்கே இருக்க வேண்டும் என நிபந்தனையிட்டு, (இல்லையேல் விற்க முடியாது என) மறுத்தனர். ஆகவே, இதைப் பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் (உன் விருப்பப்படியே) பரீராவை நீ வாங்கி விடுதலை செய்துவிடு! ஏனெனில், வாரிசுரிமை விடுதலை செய்தவருக்கே உரியதாகும் என்று சொன்னார்கள்.

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் இறைச்சி கொண்டுவரப்பட்டது. அப்போது ‘‘இ(ந்த இறைச்சியான)து, பரீராவுக்குத் தர்மமாக வழங்கப்பட்டதாகும்” என்று சொல்லப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இது பரீராவுக்குத்தான் தர்மம்: நமக்கு (இது) அன்பளிப்பாகும்” என்று சொன்னார்கள்.40

மற்றோர் அறிவிப்பில், ‘‘பரீரா தம் கணவர் விஷயத்தில் விருப்ப உரிமை அளிக்கப்பட்டார்” எனக் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 68
5285. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ إِذَا سُئِلَ عَنْ نِكَاحِ النَّصْرَانِيَّةِ، وَالْيَهُودِيَّةِ، قَالَ إِنَّ اللَّهَ حَرَّمَ الْمُشْرِكَاتِ عَلَى الْمُؤْمِنِينَ، وَلاَ أَعْلَمُ مِنَ الإِشْرَاكِ شَيْئًا أَكْبَرَ مِنْ أَنْ تَقُولَ الْمَرْأَةُ رَبُّهَا عِيسَى، وَهْوَ عَبْدٌ مِنْ عِبَادِ اللَّهِ.
பாடம்: 18 ‘‘(அல்லாஹ்வுக்கு) இணைகற் பிக்கும் பெண்களை -அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்; இணைகற்பிக்கும் (சுதந்திரமான) ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட இறைநம்பிக்கையுள்ள அடிமைப் பெண்ணே நிச்சயமாக மேலானவள் ஆவாள்” எனும் (2:221ஆவது) இறைவசனம்
5285. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முஸ்லிம்) கிறித்தவப் பெண்ணையோ அல்லது யூதப் பெண்ணையோ மணமுடித்துக்கொள்வது தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வினவப் பட்டால், அவர்கள் ‘‘இறைநம்பிக்கையாளர்கள் இணைகற்பிக்கும் பெண்களை மணமுடித்துக்கொள்வதை அல்லாஹ் அனுமதிக்கவில்லை. அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவரான ஈசா (அலை) அவர்களைத் தன்னுடைய இறைவன் என்று ஒரு பெண் கூறுவதைவிட மிகப் பெரிய இணைவைப்பாக வேறொன்றையும் நான் அறியவில்லை” என்பார்கள்.41

அத்தியாயம் : 68
5286. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَقَالَ، عَطَاءٌ عَنِ ابْنِ عَبَّاسٍ، كَانَ الْمُشْرِكُونَ عَلَى مَنْزِلَتَيْنِ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَالْمُؤْمِنِينَ، كَانُوا مُشْرِكِي أَهْلِ حَرْبٍ يُقَاتِلُهُمْ وَيُقَاتِلُونَهُ، وَمُشْرِكِي أَهْلِ عَهْدٍ لاَ يُقَاتِلُهُمْ وَلاَ يُقَاتِلُونَهُ، وَكَانَ إِذَا هَاجَرَتِ امْرَأَةٌ مِنْ أَهْلِ الْحَرْبِ لَمْ تُخْطَبْ حَتَّى تَحِيضَ وَتَطْهُرَ، فَإِذَا طَهُرَتْ حَلَّ لَهَا النِّكَاحُ، فَإِنْ هَاجَرَ زَوْجُهَا قَبْلَ أَنْ تَنْكِحَ رُدَّتْ إِلَيْهِ، وَإِنْ هَاجَرَ عَبْدٌ مِنْهُمْ أَوْ أَمَةٌ فَهُمَا حُرَّانِ وَلَهُمَا مَا لِلْمُهَاجِرِينَ. ثُمَّ ذَكَرَ مِنْ أَهْلِ الْعَهْدِ مِثْلَ حَدِيثِ مُجَاهِدٍ وَإِنْ هَاجَرَ عَبْدٌ أَوْ أَمَةٌ لِلْمُشْرِكِينَ أَهْلِ الْعَهْدِ لَمْ يُرَدُّوا، وَرُدَّتْ أَثْمَانُهُمْ.
பாடம்: 19 இணைவைப்பவர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்களை மணந்துகொள்வதும், (மணப்பதற்குமுன் மேற்கொள்ள வேண்டிய) அவர்களின் ‘இத்தா’ காலமும்42
5286. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களையும் முஸ்லிம் களையும் பொறுத்தவரையில் இணை வைப்பாளர்கள் இரு வகையினராக இருந்தனர். ஒரு வகை இணைவைப்பாளர் கள் பகைவர்களாக இருந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் போர் புரிவார்கள்; நபியவர்களும் அவர்களுடன் போர் புரிவார்கள். மற்றொரு வகை இணைவைப்பாளர்கள் (சமாதான) ஒப்பந்தம் செய்துகொண்டவர்களாக இருந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் போர் புரியமாட்டார்கள்; நபியவர்களும் அவர்களுடன் போர் புரியமாட்டார்கள்.

பகைவர்களின் கூட்டத்திலிருந்து ஒரு பெண் (முஸ்லிமாகி) புலம்பெயர்ந்து (மதீனாவுக்கு) வந்தால் அவளுக்கு மாதவிடாய் ஏறபட்டு தூய்மையடையும்வரை அவளை யாரும் பெண் பேச அனுமதிக்கப்படவில்லை. அவ்வாறு அவள் (மாதவிடாய்க்குப்பின்) தூய்மையடைந்தால் மணமுடித்துக்கொள்ள அவளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அத்தகைய பெண் (முஸ்லிம் ஒருவரை) மணந்துகொள்வதற்குமுன் அவளுடைய (முன்னாள்) கணவன் (முஸ்லிமாகி) புலம்பெயர்ந்து வந்தால் அவள் அவரிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டாள்.

பகைவர்களிலுள்ள அடிமையான ஆணோ, பெண்ணோ (முஸ்லிமாகி) புலம்பெயர்ந்து வந்தால் அவர் சுதந்திரமானவராகவே கருதப்பட்டார். அவருக்கு மற்ற முஹாஜிர்களுக்குள்ள (புலம்பெயர்ந்தோருக்குள்ள) அனைத்து மரியாதைகளும் அளிக்கப்பட்டன.

பின்னர் (இதன் அறிவிப்பாளரான) அதாஉ (ரஹ்) அவர்கள், (சமாதான) ஒப்பந்தம் செய்துகொண்ட இணைவைப் பாளர்(களின் பெண்)கள் குறித்து முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவித்திருப்பதைப் போன்று (பின்வருமாறு) அறிவிக் கிறார்கள்:

(சமாதான) ஒப்பந்தம் செய்துகொண்ட இணைவைப்பாளர்களின் ஆண் அடிமையோ, பெண் அடிமையோ (முஸ்லிமாகி) புலம்பெயர்ந்து வந்தால் அவர்கள் (தம் நாட்டிற்குத்) திருப்பி அனுப்பி வைக்கப்படவில்லை; அவர்களுக்குரிய விலை மட்டுமே திருப்பித் தரப்பட்டது.


அத்தியாயம் : 68
5287. وَقَالَ عَطَاءٌ عَنِ ابْنِ عَبَّاسٍ، كَانَتْ قَرِيبَةُ بِنْتُ أَبِي أُمَيَّةَ عِنْدَ عُمَرَ بْنِ الْخَطَّابِ فَطَلَّقَهَا، فَتَزَوَّجَهَا مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ، وَكَانَتْ أُمُّ الْحَكَمِ ابْنَةُ أَبِي سُفْيَانَ تَحْتَ عِيَاضِ بْنِ غَنْمٍ الْفِهْرِيِّ فَطَلَّقَهَا، فَتَزَوَّجَهَا عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ الثَّقَفِيُّ.
பாடம்: 19 இணைவைப்பவர்களாக இருந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பெண்களை மணந்துகொள்வதும், (மணப்பதற்குமுன் மேற்கொள்ள வேண்டிய) அவர்களின் ‘இத்தா’ காலமும்42
5287. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூஉமய்யாவின் மகள் ‘குறைபா’ என்பவர் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார். அவரை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் மணவிலக்குச் செய்துவிட்டார்கள். பின்னர் அவரை முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் மணந்துகொண்டார்கள்.

அபூசுஃப்யான் (ரலி) அவர்களின் புதல்வியார் உம்முல் ஹகம் அவர்கள், இயாள் பின் ஃகன்ம் அல்ஃபிஹ்ரீ (ரலி) அவர்களின் மனைவியாக இருந்தார். அவரை இயாள் மணவிலக்குச் செய்துவிட்டார்கள். பிறகு அவரை அப்துல்லாஹ் பின் உஸ்மான் அஸ்ஸகஃபீ என்பவர் மணமுடித்துக்கொண்டார்.43

அத்தியாயம் : 68
5288. حَدَّثَنَا ابْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ،. وَقَالَ إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، حَدَّثَنِي يُونُسُ، قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ كَانَتِ الْمُؤْمِنَاتُ إِذَا هَاجَرْنَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم يَمْتَحِنُهُنَّ بِقَوْلِ اللَّهِ تَعَالَى {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا جَاءَكُمُ الْمُؤْمِنَاتُ مُهَاجِرَاتٍ فَامْتَحِنُوهُنَّ} إِلَى آخِرِ الآيَةِ قَالَتْ عَائِشَةُ فَمَنْ أَقَرَّ بِهَذَا الشَّرْطِ مِنَ الْمُؤْمِنَاتِ فَقَدْ أَقَرَّ بِالْمِحْنَةِ، فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَقْرَرْنَ بِذَلِكَ مِنْ قَوْلِهِنَّ قَالَ لَهُنَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" انْطَلِقْنَ فَقَدْ بَايَعْتُكُنَّ ""، لاَ وَاللَّهِ مَا مَسَّتْ يَدُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَدَ امْرَأَةٍ قَطُّ، غَيْرَ أَنَّهُ بَايَعَهُنَّ بِالْكَلاَمِ، وَاللَّهِ مَا أَخَذَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى النِّسَاءِ إِلاَّ بِمَا أَمَرَهُ اللَّهُ يَقُولُ لَهُنَّ إِذَا أَخَذَ عَلَيْهِنَّ "" قَدْ بَايَعْتُكُنَّ "". كَلاَمًا.
பாடம்: 20 பகை நாட்டு இணைவைப்பாளரின், அல்லது இஸ்லாமிய நாட்டு முஸ்லிமல்லாத குடிமகனின் கிறித்தவ மனைவி, அல்லது இணைவைப் பாளியான மனைவி முஸ்லிமாகி விட்டால் (என்ன சட்டம்?)44 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: தன் கணவனுக்குச் சிறிது நேரத்திற்கு முன்பாக ஒரு கிறித்தவப் பெண் முஸ்லிமாகிவிட்டால்கூட உடனே அவள் தன் கணவனுக்கு விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள். இப்ராஹீம் அஸ்ஸாயிஃக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘இஸ்லாமிய நாட்டின் ஒப்பந்தப் பிரஜையான முஸ்லிமல்லாத ஒரு பெண் முஸ்லிமாகிவிட்டாள். பிறகு அவள் ‘இத்தா’ காலத்தில் இருந்துகொண்டிருந்தபோது அவளுடைய கணவனும் முஸ்லிமானார். இப்போது அவள் அவருடைய மனைவிதானா? (அவர்கள் இடையிலான மணஉறவு முறிந்துவிட்டதா? அல்லது தொடர்கிறதா?)” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘இல்லை (முறிந்துவிட்டது); இனி அவளாக முன்வந்து (அதே கணவனைப்) புதிதாகத் திருமணம் செய்துகொண்டு ‘மஹ்ர்’ பெற்றுக்கொள்ள விரும்பினால் தவிர. (அப்போதுதான் பழைய கணவனுடன் தொடர்ந்து அவள் வாழ முடியும்)” என்று பதிலளித்தார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (மேற்கண்ட நிலையில்) அவள் ‘இத்தா’வில் இருந்துகொண்டிருக்கும்போது கணவன் முஸ்லிமாகிவிட்டால் (புதிதாக) அவளை மணந்துகொள்ள வேண்டும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (முஸ்லிமாகிவிட்ட) அந்தப் பெண்கள் (முஸ்லிமல்லாத) தங்கள் கணவன் மார்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் அல்லர்; அந்தக் கணவன்மார்களும் இந்தப் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட வர்கள் அல்லர். (60:10) ஹசன் அல்பளி (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: (அக்னி ஆராதனையாளர்களான) மஜூசி தம்பதிகள் ஒரே நேரத்தில் முஸ்óமானால் (பழைய) மணஉறவிலேயே அவர்கள் இருவரும் நீடிப்பார்கள். அதே சமயம் அவர்களில் ஒருவர் மற்றவரை முந்திக்கொண்டு முஸ்லிமாகி, மற்றொருவர் (முஸ்லிமாக) மறுத்தார் எனில், (அவர்கள் இருவருக்கும் இடையே) மணமுறிவு ஏற்பட்டுவிடும்; அவள்மீது அவன் உரிமை கொண்டாட முடியாது. இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘இணைவைப்பாளர் களிலுள்ள ஒரு பெண் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு) முஸ்லிம்களிடம் வந்து சேர்ந்தால், (இணை வைப்பவரான) அவளுடைய (முன்னாள்) கணவனுக்கு அவள் மணக்கொடையை (மஹ்ரை)த் திருப்பிச் செலுத்த வேண்டுமா? ஏனெனில், அல்லாஹ் ‘(இப்பெண்களுக்காக) அவர்கள் செலவு செய்திருந்ததை அவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள்!’ (60:10) என்று கூறுகின்றானே?” என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், ‘‘(அவசியம்) இல்லை. அதுவெல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கும் (இணைவைப்பாளர் களான) ஒப்பந்தக்காரர்களுக்கும் இடையே இருந்த ஒன்றுதான். (இன்று அது நடைமுறையில் இல்லை)” என்று பதிலளித்தார்கள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இதுவெல்லாம் நபி (ஸல்) அவர்களுக்கும் குறைஷியருக்கும் இடையே ஏற்பட்டிருந்த உடன்பாட்டின்போதுதான். (பின்னர், மக்கா வெற்றியின்போது காலாவதியாகிவிட்டது.)
5288. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘இறைநம்பிக்கையாளர்களே! (இறைமறுப்பாளர்களிலுள்ள) பெண்கள் இறைநம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்து (புலம்பெயர்ந்து) உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப்பாருங்கள்...” எனும் (60:10ஆவது) வசனம் முழுமையாக அருளப்பெற்ற காரணத்தால் தம்மிடம் ஹிஜ்ரத் செய்துவரும் இறைநம்பிக்கை கொண்ட பெண்களை நபி (ஸல்) அவர்கள் சோதித்துவந்தார்கள். இறைநம்பிக்கை கொண்ட அப்பெண்களில் (‘இணை வைக்கமாட்டோம்; திருடமாட்டோம்; விபசாரம் புரியமாட்டோம்’ என்று) இந்த நிபந்தனைகளுக்கு யார் ஒப்புதல் அளிக் கிறாரோ அவர் சோதனை செய்யப்பட்டுவிட்டார் என்று முடிவு செய்யப்பட்டது.

இந்த உறுதிமொழியை அப்பெண்கள் வாய்மொழியாக ஒப்புக்கொண்டபோது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உங்களிடம் உறுதிப் பிரமாணம் வாங்கிவிட்டேன். நீங்கள் செல்லலாம்” என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! (உறுதிப் பிரமாணம் வாங்கியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை எந்தப் பெண்ணின் கையையும் ஒருபோதும் தொட்டதில்லை. வாய் மொழியாகவே அப்பெண்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். அல்லாஹ் ஆணையிட்ட நிபந்தனை (வாசகங்களைத்) தவிர வேறெதையும் அப்பெண்களிட மிருந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உறுதிமொழியாகப்) பெற வில்லை. அவர்களிடம் உறுதிமொழி வாங்கியதும் ‘உங்களிடம் உறுதிப் பிரமாணம் பெற்றுக்கொண்டேன்’ என்று வார்த்தையால் மட்டுமே கூறினார்கள். (பொதுவாக ஆண்களிடம் உறுதிமொழி வாங்கியபோது கரம் பற்றியதைப் போன்று பெண்களிடம் செய்யவில்லை.)45

அத்தியாயம் : 68
5289. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، عَنْ أَخِيهِ، عَنْ سُلَيْمَانَ، عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ آلَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ نِسَائِهِ، وَكَانَتِ انْفَكَّتْ رِجْلُهُ فَأَقَامَ فِي مَشْرُبَةٍ لَهُ تِسْعًا وَعِشْرِينَ، ثُمَّ نَزَلَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ آلَيْتَ شَهْرًا. فَقَالَ "" الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ "".
பாடம்: 21 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தம் மனைவியருடன் தாம்பத்திய உறவு கொள்வதில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாதங்கள் (வரையே) அவகாசம் உள்ளது. (அதற்குள்) அவர்கள் (தமது சத்தியத்திலிலிருந்து) திரும்பி விட்டால், அல்லாஹ் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். அவர்கள் மணவிலக்கு அளிப்பதில் உறுதியாக இருந்தால், அல்லாஹ் (அதைச்) செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவான். (2:226,227)46 (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஇன் ஃபாஊ’ எனும் சொற்றொடருக்கு ‘அவர்கள் மீண்டுகொண்டார்களானால்’ என்பது பொருள்.
5289. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை (ஒரு மாத காலம்) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்தார்கள். (இந்தக் காலகட்டத்தில்) அவர்களின் காலில் சுளுக்கு ஏற்பட்டிருந் தது. ஆகவே, அவர்கள் தமது மாடியறை யில் இருபத்தொன்பது நாட்கள் தங்கி யிருந்துவிட்டு பிறகு இறங்கி வந்தார்கள்.

அப்போது மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு மாத காலம் (தங்கள் துணைவியரை) நெருங்கமாட்டேன் எனச் சத்தியம் செய்திருந்தீர்களே?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த மாதத்திற்கு இருபத்தொன்பது நாட்கள்தான்” என்று பதிலளித்தார்கள்.47


அத்தியாயம் : 68
5290. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، رضى الله عنهما كَانَ يَقُولُ فِي الإِيلاَءِ الَّذِي سَمَّى اللَّهُ لاَ يَحِلُّ لأَحَدٍ بَعْدَ الأَجَلِ إِلاَّ أَنْ يُمْسِكَ بِالْمَعْرُوفِ، أَوْ يَعْزِمَ بِالطَّلاَقِ، كَمَا أَمَرَ اللَّهُ عَزَّ وَجَلَّ.
பாடம்: 21 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: தம் மனைவியருடன் தாம்பத்திய உறவு கொள்வதில்லை என்று சத்தியம் செய்தோருக்கு நான்கு மாதங்கள் (வரையே) அவகாசம் உள்ளது. (அதற்குள்) அவர்கள் (தமது சத்தியத்திலிலிருந்து) திரும்பி விட்டால், அல்லாஹ் மன்னிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவான். அவர்கள் மணவிலக்கு அளிப்பதில் உறுதியாக இருந்தால், அல்லாஹ் (அதைச்) செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவான். (2:226,227)46 (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஇன் ஃபாஊ’ எனும் சொற்றொடருக்கு ‘அவர்கள் மீண்டுகொண்டார்களானால்’ என்பது பொருள்.
5290. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ் குறிப்பிட்டுள்ள ‘ஈலா’ (எனும் சத்திய) விஷயத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘அந்த (நான்கு மாத கால) தவணை முடிந்துவிட்ட பின்னால் அல்லாஹ் உத்தரவிட்டிருப்பதைப் போன்று ஒருவர் நல்ல முறையில் (தம் மனைவியைத்) தம்மிடம் வைத்துக்கொள்ள வேண்டும்; அல்லது அவளை மணவிலக்குச் செய்ய உறுதியான முடிவு செய்திட வேண்டும். இதைத் தவிர வேறெதற்கும் அனுமதியில்லை” என்று கூறுவார்கள்.


அத்தியாயம் : 68