4771. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَأَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ أَنْزَلَ اللَّهُ {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} قَالَ " يَا مَعْشَرَ قُرَيْشٍ ـ أَوْ كَلِمَةً نَحْوَهَا ـ اشْتَرُوا أَنْفُسَكُمْ، لاَ أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا بَنِي عَبْدِ مَنَافٍ، لاَ أُغْنِي عَنْكُمْ مِنَ اللَّهِ شَيْئًا، يَا عَبَّاسُ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ، لاَ أُغْنِي عَنْكَ مِنَ اللَّهِ شَيْئًا، وَيَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ، لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا وَيَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ سَلِينِي مَا شِئْتِ مِنْ مَالِي، لاَ أُغْنِي عَنْكِ مِنَ اللَّهِ شَيْئًا ". تَابَعَهُ أَصْبَغُ عَنِ ابْنِ وَهْبٍ عَنْ يُونُسَ عَنِ ابْنِ شِهَابٍ.
பாடம்: 2
(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை நீர் எச்சரிப்பீராக! (எனும் 26:214ஆவது இறை வசனம்)
மேலும், (26:215ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வக்ஃபிள் ஜனாஹக்க’ எனும் வாசகத்திற்கு, ‘‘உம்மைப் பின்பற்றும் இறைநம்பிக்கையாளர்களிடம் மென்மையாக நடந்துகொள்வீராக!” என்று பொருள்.
4771. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ், ‘‘(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!” எனும் (26:214ஆவது) வசனத்தை அருளியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, ‘குறைஷிக் கூட்டத்தாரே!’ அல்லது ‘இது போன்ற ஒரு வார்த்தையைக்’ கூறியழைத்து, ‘‘உங்கள் உயிர்களை (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) விலைக்கு வாங்கி (காப்பாற்றி)க்கொள்ளுங்கள். உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்றவியலாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தóபின் புதல்வரான (என் தந்தையின் சகோதரர்) அப்பாஸ் அவர்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய அத்தையான ஸஃபியாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் புதல்வியான ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதை என்னிடம் கேள்! (தருகிறேன்). ஆனால், அல்லாஹ்விடமிருந்து, உன்னை என்னால் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது” என்று சொன்னார்கள்.6
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4771. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ், ‘‘(நபியே!) உம்முடைய நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!” எனும் (26:214ஆவது) வசனத்தை அருளியபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, ‘குறைஷிக் கூட்டத்தாரே!’ அல்லது ‘இது போன்ற ஒரு வார்த்தையைக்’ கூறியழைத்து, ‘‘உங்கள் உயிர்களை (இஸ்லாத்தை ஏற்பதன் மூலம்) விலைக்கு வாங்கி (காப்பாற்றி)க்கொள்ளுங்கள். உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்றவியலாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தóபின் புதல்வரான (என் தந்தையின் சகோதரர்) அப்பாஸ் அவர்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்ற இயலாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய அத்தையான ஸஃபியாவே! உங்களை அல்லாஹ்விடமிருந்து ஒருசிறிதும் என்னால் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் புதல்வியான ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதை என்னிடம் கேள்! (தருகிறேன்). ஆனால், அல்லாஹ்விடமிருந்து, உன்னை என்னால் ஒரு சிறிதும் காப்பாற்ற முடியாது” என்று சொன்னார்கள்.6
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4772. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، قَالَ لَمَّا حَضَرَتْ أَبَا طَالِبٍ الْوَفَاةُ جَاءَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَوَجَدَ عِنْدَهِ أَبَا جَهْلٍ وَعَبْدَ اللَّهِ بْنَ أَبِي أُمَيَّةَ بْنِ الْمُغِيرَةِ، فَقَالَ " أَىْ عَمِّ قُلْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، كَلِمَةً أُحَاجُّ لَكَ بِهَا عِنْدَ اللَّهِ ". فَقَالَ أَبُو جَهْلٍ وَعَبْدُ اللَّهِ بْنُ أَبِي أُمَيَّةَ أَتَرْغَبُ عَنْ مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ فَلَمْ يَزَلْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَعْرِضُهَا عَلَيْهِ، وَيُعِيدَانِهِ بِتِلْكَ الْمَقَالَةِ حَتَّى قَالَ أَبُو طَالِبٍ آخِرَ مَا كَلَّمَهُمْ عَلَى مِلَّةِ عَبْدِ الْمُطَّلِبِ، وَأَبَى أَنْ يَقُولُ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ. قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَاللَّهِ لأَسْتَغْفِرَنَّ لَكَ مَا لَمْ أُنْهَ عَنْكَ ". فَأَنْزَلَ اللَّهُ {مَا كَانَ لِلنَّبِيِّ وَالَّذِينَ آمَنُوا أَنْ يَسْتَغْفِرُوا لِلْمُشْرِكِينَ} وَأَنْزَلَ اللَّهُ فِي أَبِي طَالِبٍ، فَقَالَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم {إِنَّكَ لاَ تَهْدِي مَنْ أَحْبَبْتَ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ}. قَالَ ابْنُ عَبَّاسٍ {أُولِي الْقُوَّةِ} لاَ يَرْفَعُهَا الْعُصْبَةُ مِنَ الرِّجَالِ. {لَتَنُوءُ} لَتُثْقِلُ. {فَارِغًا} إِلاَّ مِنْ ذِكْرِ مُوسَى. {الْفَرِحِينَ} الْمَرِحِينَ. {قُصِّيهِ} اتَّبِعِي أَثَرَهُ، وَقَدْ يَكُونُ أَنْ يَقُصَّ الْكَلاَمَ {نَحْنُ نَقُصُّ عَلَيْكَ}. {عَنْ جُنُبٍ} عَنْ بُعْدٍ عَنْ جَنَابَةٍ وَاحِدٌ، وَعَنِ اجْتِنَابٍ أَيْضًا، يَبْطِشُ وَيَبْطُشُ. {يَأْتَمِرُونَ} يَتَشَاوَرُونَ. الْعُدْوَانُ وَالْعَدَاءُ وَالتَّعَدِّي وَاحِدٌ. {آنَسَ} أَبْصَرَ. الْجِذْوَةُ قِطْعَةٌ غَلِيظَةٌ مِنَ الْخَشَبِ، لَيْسَ فِيهَا لَهَبٌ، وَالشِّهَابُ فِيهِ لَهَبٌ. وَالْحَيَّاتُ أَجْنَاسٌ الْجَانُّ وَالأَفَاعِي وَالأَسَاوِدُ. {رِدْءًا} مُعِينًا. قَالَ ابْنُ عَبَّاسٍ {يُصَدِّقُنِي} وَقَالَ غَيْرُهُ {سَنَشُدُّ} سَنُعِينُكَ كُلَّمَا عَزَّزْتَ شَيْئًا فَقَدْ جَعَلْتَ لَهُ عَضُدًا. مَقْبُوحِينَ مُهْلَكِينَ. {وَصَّلْنَا} بَيَّنَّاهُ وَأَتْمَمْنَاهُ. {يُجْبَى} يُجْلَبُ .{بَطِرَتْ} أَشِرَتْ. {فِي أُمِّهَا رَسُولاً} أُمُّ الْقُرَى مَكَّةُ وَمَا حَوْلَهَا. {تُكِنُّ} تُخْفِي. أَكْنَنْتُ الشَّىْءَ أَخْفَيْتُهُ، وَكَنَنْتُهُ أَخْفَيْتُهُ وَأَظْهَرْتُهُ. {وَيْكَأَنَّ اللَّهَ} مِثْلُ أَلَمْ تَرَ أَنَّ اللَّهَ {يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ} يُوَسِّعُ عَلَيْهِ وَيُضَيِّقُ عَلَيْهِ.
பாடம்:
27. ‘அந்நம்ல்’ அத்தியாயம்1
(27:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்கப்உ’ எனும் சொல்லுக்கு’மறைக்கப்பட்டிருப்பவை’ என்பது பொருள்.
(27:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா கிபல’ எனும் சொற்றொடருக்கு ‘(எதிர்க்க) வலிமை இல்லை’ என்பது பொருள்.
(27:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸர்ஹ்’ எனும் சொல்லுக்கு ‘மாளிகை’ என்பது பொருள். இதன் பன்மை ‘ஸுரூஹ்’ என்பதாகும். கண்ணாடிச் சாந்துக்கும் ‘ஸர்ஹ்’ என்பர்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(27:23ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அர்ஷுன் அழீம்’ (மகத்தான அரியணை) என்பது, அழகான வேலைப்பாடுமிக்க விலை உயர்ந்த தரமான அரியணையைக் குறிக்கும்.
(27:38ஆவது வசனத்திலுள்ள) ‘கட்டுப்பட்டவர்கள்’ எனும் பொருள் மூலத்திலுள்ள ‘முஸ்லிமீன்’ எனும் சொல்லுக்குரியதாகும்.
(27:72ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரதிஃப’ எனும் சொல்லுக்கு ‘நெருங்கிவிட்டது’ என்பது பொருள். (இச்சொல்லுக்கு ‘பின்தொடர்ந்தது’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)
(27:88ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜாமிதா’ எனும் சொல்லுக்கு ‘நிலை கொண்டிருக்கக்கூடியது’ என்று பொருள். (இச்சொல்லுக்கு ‘வெகு உறுதியானது’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)
(27:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவ்ஸிஅனீ’ எனும் சொல்லுக்கு ‘என்னை ஆக்குவாயாக’ என்பது பொருள்.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(27:41ஆவது வசனத்திலுள்ள) ‘மாற்றி அமைத்துவிடுங்கள்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘நக்கிரூ’ எனும் சொல்லுக்குரியதாகும்.
(27:42ஆவது வசனத்திலுள்ள) ‘நாங்கள் முன்பே அறிந்திருந்தோம்’ எனும் வாசகம், சுலைமான் (அலை) அவர்களது கூற்றாகும்.
(27:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸர்ஹ்’ எனும் சொல், சுலைமான் (அலை) அவர்கள் கண்ணாடியிட்டு மூடிவைத்திருந்த நீர்நிலையைக் குறிக்கிறது.
பாடம்:
28. ‘அல்கஸஸ்’ அத்தியாயம்1
(28:88ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இல்லா வஜ்ஹஹு’ எனும் சொல்லுக்கு ‘அவனது ஆட்சியதிகாரத்தைத் தவிர’ என்பது பொருள். ‘இறைவனின் திருமுகத்திற்காகச் செய்யப்பட்ட (நற்செயல் முதலிய)வற்றைத் தவிர’ என்றும் பொருள் கூறப்படுகிறது.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(28:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்அன்பாஉ’ எனும் சொல்லுக்கு ‘ஆதாரங்கள்’ என்பது பொருள். (இச்சொல்லுக்கு ‘சகல விஷயங்கள்’ என்றும் அர்த்தங்கொள்ளப்படுவது உண்டு.)
பாடம்: 1
‘‘(நபியே!) நீர் விரும்பியவரை(யெல் லாம்) நல்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக, அல்லாஹ்தான், தான் நாடியவர்களை நல்வழியில் செலுத்துகின்றான்” எனும் (28:56 ஆவது) வசனத்தொடர்
4772. முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களுடைய தந்தையின் சகோதரர்) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூஜஹ்லையும், ‘அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா பின் முஃகீரா’வையும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘என் தந்தையின் சகோதரரே! ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை)’ என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்” என்று சொன்னார்கள்.
அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவும் ‘‘அபூதாóபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?” என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அவரிடம் கோரிக்கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்ன தையே சொல்லி (அவரைத் தடுத்து)க்கொண்டேயிருந்தார்கள்.
இறுதியில் அபூதாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது, ‘‘நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் இருக்கிறேன்” என்பதாகவே இருந்தது. ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டேயிருப்பேன்” என்று சொன்னார்கள்.
அப்போதுதான், ‘‘இணைவைப்போருக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத் தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லை” எனும் (9:113 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ் ‘‘(நபியே!) நீர் விரும்பியவரை(யெல்லாம்) நல்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக, அல்லாஹ்தான், தான் நாடியவர்களை நல்வழியில் செலுத்துகிறான்” எனும் (28:56ஆவது) வசனத்தை அருளினான்.2
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(28:76ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உலில் குவ்வத்தி’ (பலவான்கள்) என்பதன் கருத்தாவது: (காரூனின் பொக்கிஷங்களின் சாவிகளைப் பலவான்களான) ஆண்களில் ஒரு குழுவினரால்கூட சுமக்க முடியாது. ‘ல தனூஉ’ எனும் சொல்லுக்கு ‘சிரமமாக மாறும்’ என்பது பொருள்.
(28:10ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஃபாரிஃகா’ எனும் சொல்லுக்கு ‘(மூசாவுடைய தாயாரின் உள்ளம்) மூசாவின் நினைவைத் தவிர (வேறெல்லாக் கவலைகளிலிருந்தும் நீங்கி) வெறுமையாக இருந்தது’ என்று பொருள்.
(28:76ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஃபரிஹீன்’ எனும் சொல்லுக்கு ‘ஆணவம் கொண்டோர்’ என்பது பொருள். (இச்சொல்லுக்கு ‘பூரிப்படைவோர்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)
(28:11ஆவது வசனத்திலுள்ள) ‘அவரை நீ பின்தொடர்ந்து செல்’ எனும் பொருள் மூலத்திலுள்ள ‘குஸ்ஸீஹி’ எனும் சொல்லுக்குரியதாகும். சில நேரங்களில் ‘சம்பவத்தை எடுத்துரைத்தல்’ எனும் பொருளிலும் இச்சொல் வருவதுண்டு. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன் ஜுனுபின்’ எனும் சொல்லுக்கு ‘தூரத்திலிருந்து’ என்பது பொருள். (இச்சொல்லும்) ‘அன் ஜனாபத்தின்’ எனும் சொல்லும் (பொருளில்) ஒன்றே. ‘அன் இஜ்தினாப்’ எனும் சொல்லும் அவ்வாறே.
(28:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யப்தி” (தாக்க) எனும் சொல் ‘யப்து” என்றும் வாசிக்கப்பட்டுள்ளது.
(28:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஃதமிரூன’ எனும் சொல்லுக்கு ‘ஆலோசனை செய்துகொண்டிருக்கின்றனர்’ என்று பொருள்.
(28:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்உத்வான்’ எனும் சொல்லும், ‘அல்அதாஉ’ எனும் சொல்லும், ‘அத்தஅத்தீ’ எனும் சொல்லும் (‘எல்லை மீறல்’ எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.
(28:29ஆவது வசனத்திலுள்ள) ‘கண்டார்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘ஆனஸ’ எனும் சொல்லுக்குரியதாகும்.
(28:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜத்வா’ எனும் சொல்லுக்கு ‘தீக்கொழுந்து இல்லாத கெட்டியான எரி கொள்ளி’ என்பது பொருள். (27:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஷ்ஷிஹாப்’ எனும் சொல்லுக்கு ‘தீக்கொழுந்து உள்ள எரிகொள்ளி’ என்பது பொருள்.
(28:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜான்’ எனும் சொல், பாம்பு வகைகளில் ஒன்றை (வெண்ணிறச் சிறிய பாம்பை)க் குறிக்கும். ‘அஃபாஈ’ (பெண்ணின விஷப் பாம்பு) மற்றும் ‘அசாவித்’ (கருநாகம்) ஆகியவற்றையும் (20:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹய்யத்’ (பாம்பு) எனும் சொல் குறிக்கும்.
(28:34ஆவது வசனத்திலுள்ள) ‘உதவியாளர்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘ரித்ஃ’ எனும் சொல்லுக்குரியதாகும். (இதே வசனத்திலுள்ள சொல்லை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘யுஸத்திக்குனீ’ (அவர் என்னை உண்மைப்படுத்திவைப்பார்) என்று ஓதினார்கள். (வேறுசிலர் ‘யுஸத்திக்னீ’ என்று ஓதியுள்ளார்கள்.)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்:
(28:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸ நஷுத்து’ எனும் சொல்லுக்கு, ‘உமக்கு நாம் உதவி புரிவோம்’ என்று பொருள். (‘ஸ நஷுத்து அளுதக்க’ என்பதற்கு ‘உமது கரத்தை நாம் வலுப்படுத்துவோம்’ என்று பொருள்.) நீ யாருக்காவது உதவி புரியும்போதெல்லாம் நீ அவருக்குக் கரமாக ஆகிவிடுகிறாய்! (அதனால், இங்கு ‘கரம்’ அல்லது ‘கொடுங்கை’ (‘அளுத்’) எனும் சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது.)
(28:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மக்பூஹீன்’ எனும் சொல்லுக்கு ‘நாசமடைந்தவர்கள்’ என்பது பொருள்.
(28:51ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஸ்ஸல்னா லஹுமுல் கவ்ல’ எனும் வாக்கியத்திற்கு ‘(நம்முடைய வேத) வாக்கை அவர்களுக்கு நிறைவாகத் தெளிவுபடுத்தினோம்’ என்று பொருள்.
(28:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஜ்பா’ எனும் சொல்லுக்கு ‘கொண்டுவரப்படுகிறது’ என்பது பொருள்.
(28:58ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பத்திரத்’ எனும் சொல்லுக்கு ‘அடாவடித்தனம் புரிந்தனர்’ என்று பொருள்.
(28:59ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உம்மிஹா’ (அதன் தலைநகர்) என்பது மக்காவையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் குறிக்கும்.
(28:69ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துகின்னு’ எனும் சொல்லுக்கு ‘(உள்ளங்கள்) மறைத்துவைக்கின்ற’ என்று பொருள். (இதன் இறந்தகால வினைச் சொல்லான) ‘அக்னன்த்து’ என்பதற்கு ‘மறைத்தேன்’ என்று பொருள். (இதையே) ‘கனன்த்து’ என்று சொன்னால் ‘மறைத்தேன்’ என்றும், ‘வெளிப்படுத்தினேன்’ என்றும் (எதிரிடைப்) பொருள் வரும்.
(28:82ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வை கஅன்ன’ எனும் சொல், ‘அலம் தர’ (நீர் பார்க்கவில்லையா?) எனும் சொல்லுக்கு நிகரானதாகும். (இதே சொல்லுக்கு ‘என்ன நேர்ந்தது’ என்றும், ‘ஆச்சரியம்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யப்சுத்து’ எனும் சொல்லுக்குத் ‘தாராளமாக வழங்குகிறான்’ என்றும், ‘யக்திரு’ எனும் சொல்லுக்கு ‘சுருக்கிவிடுகின்றான்’ என்றும் பொருள்.
அத்தியாயம் : 65
4772. முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களுடைய தந்தையின் சகோதரர்) அபூதாலிப் அவர்களுக்கு மரண வேளை வந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றார்கள். அங்கே, அவரருகே அபூஜஹ்லையும், ‘அப்துல்லாஹ் பின் அபீஉமய்யா பின் முஃகீரா’வையும் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘என் தந்தையின் சகோதரரே! ‘லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை)’ என்று சொல்லுங்கள்! இந்த (ஏகத்துவ உறுதிமொழிக்கான) சொல்லை வைத்து நான் உங்களுக்காக அல்லாஹ்விடம் வாதாடுவேன்” என்று சொன்னார்கள்.
அப்போது அபூஜஹ்லும் அப்துல்லாஹ் பின் அபீஉமய்யாவும் ‘‘அபூதாóபே! நீங்கள் (உங்கள் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தையா வெறுத்து ஒதுக்கப்போகிறீர்கள்?” என்று கேட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழியைக் கூறும்படி அவரிடம் கோரிக்கொண்டேயிருந்தார்கள். அவ்விருவரும் தாம் முன்பு சொன்ன தையே சொல்லி (அவரைத் தடுத்து)க்கொண்டேயிருந்தார்கள்.
இறுதியில் அபூதாலிப் கடைசியாக அவர்களிடம் பேசியது, ‘‘நான் (என் தந்தை) அப்துல் முத்தலிபின் மார்க்கத்தில் இருக்கிறேன்” என்பதாகவே இருந்தது. ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ எனும் உறுதிமொழியைச் சொல்ல அவர் மறுத்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தடை விதிக்கப்படும்வரை உங்களுக்காக நான் பாவமன்னிப்புக் கேட்டுக்கொண்டேயிருப்பேன்” என்று சொன்னார்கள்.
அப்போதுதான், ‘‘இணைவைப்போருக்காகப் பாவமன்னிப்புக் கோர இறைத் தூதருக்கும் இறைநம்பிக்கையாளர்களுக்கும் உரிமை இல்லை” எனும் (9:113 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அபூதாலிப் தொடர்பாக (நபியவர்கள் வருந்தியபோது) அல்லாஹ் ‘‘(நபியே!) நீர் விரும்பியவரை(யெல்லாம்) நல்வழியில் செலுத்திவிட முடியாது. மாறாக, அல்லாஹ்தான், தான் நாடியவர்களை நல்வழியில் செலுத்துகிறான்” எனும் (28:56ஆவது) வசனத்தை அருளினான்.2
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(28:76ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உலில் குவ்வத்தி’ (பலவான்கள்) என்பதன் கருத்தாவது: (காரூனின் பொக்கிஷங்களின் சாவிகளைப் பலவான்களான) ஆண்களில் ஒரு குழுவினரால்கூட சுமக்க முடியாது. ‘ல தனூஉ’ எனும் சொல்லுக்கு ‘சிரமமாக மாறும்’ என்பது பொருள்.
(28:10ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஃபாரிஃகா’ எனும் சொல்லுக்கு ‘(மூசாவுடைய தாயாரின் உள்ளம்) மூசாவின் நினைவைத் தவிர (வேறெல்லாக் கவலைகளிலிருந்தும் நீங்கி) வெறுமையாக இருந்தது’ என்று பொருள்.
(28:76ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஃபரிஹீன்’ எனும் சொல்லுக்கு ‘ஆணவம் கொண்டோர்’ என்பது பொருள். (இச்சொல்லுக்கு ‘பூரிப்படைவோர்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)
(28:11ஆவது வசனத்திலுள்ள) ‘அவரை நீ பின்தொடர்ந்து செல்’ எனும் பொருள் மூலத்திலுள்ள ‘குஸ்ஸீஹி’ எனும் சொல்லுக்குரியதாகும். சில நேரங்களில் ‘சம்பவத்தை எடுத்துரைத்தல்’ எனும் பொருளிலும் இச்சொல் வருவதுண்டு. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன் ஜுனுபின்’ எனும் சொல்லுக்கு ‘தூரத்திலிருந்து’ என்பது பொருள். (இச்சொல்லும்) ‘அன் ஜனாபத்தின்’ எனும் சொல்லும் (பொருளில்) ஒன்றே. ‘அன் இஜ்தினாப்’ எனும் சொல்லும் அவ்வாறே.
(28:19ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யப்தி” (தாக்க) எனும் சொல் ‘யப்து” என்றும் வாசிக்கப்பட்டுள்ளது.
(28:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஃதமிரூன’ எனும் சொல்லுக்கு ‘ஆலோசனை செய்துகொண்டிருக்கின்றனர்’ என்று பொருள்.
(28:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்உத்வான்’ எனும் சொல்லும், ‘அல்அதாஉ’ எனும் சொல்லும், ‘அத்தஅத்தீ’ எனும் சொல்லும் (‘எல்லை மீறல்’ எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும்.
(28:29ஆவது வசனத்திலுள்ள) ‘கண்டார்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘ஆனஸ’ எனும் சொல்லுக்குரியதாகும்.
(28:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜத்வா’ எனும் சொல்லுக்கு ‘தீக்கொழுந்து இல்லாத கெட்டியான எரி கொள்ளி’ என்பது பொருள். (27:7ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஷ்ஷிஹாப்’ எனும் சொல்லுக்கு ‘தீக்கொழுந்து உள்ள எரிகொள்ளி’ என்பது பொருள்.
(28:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜான்’ எனும் சொல், பாம்பு வகைகளில் ஒன்றை (வெண்ணிறச் சிறிய பாம்பை)க் குறிக்கும். ‘அஃபாஈ’ (பெண்ணின விஷப் பாம்பு) மற்றும் ‘அசாவித்’ (கருநாகம்) ஆகியவற்றையும் (20:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹய்யத்’ (பாம்பு) எனும் சொல் குறிக்கும்.
(28:34ஆவது வசனத்திலுள்ள) ‘உதவியாளர்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘ரித்ஃ’ எனும் சொல்லுக்குரியதாகும். (இதே வசனத்திலுள்ள சொல்லை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ‘யுஸத்திக்குனீ’ (அவர் என்னை உண்மைப்படுத்திவைப்பார்) என்று ஓதினார்கள். (வேறுசிலர் ‘யுஸத்திக்னீ’ என்று ஓதியுள்ளார்கள்.)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்:
(28:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸ நஷுத்து’ எனும் சொல்லுக்கு, ‘உமக்கு நாம் உதவி புரிவோம்’ என்று பொருள். (‘ஸ நஷுத்து அளுதக்க’ என்பதற்கு ‘உமது கரத்தை நாம் வலுப்படுத்துவோம்’ என்று பொருள்.) நீ யாருக்காவது உதவி புரியும்போதெல்லாம் நீ அவருக்குக் கரமாக ஆகிவிடுகிறாய்! (அதனால், இங்கு ‘கரம்’ அல்லது ‘கொடுங்கை’ (‘அளுத்’) எனும் சொல் பிரயோகிக்கப்பட்டுள்ளது.)
(28:42ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மக்பூஹீன்’ எனும் சொல்லுக்கு ‘நாசமடைந்தவர்கள்’ என்பது பொருள்.
(28:51ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஸ்ஸல்னா லஹுமுல் கவ்ல’ எனும் வாக்கியத்திற்கு ‘(நம்முடைய வேத) வாக்கை அவர்களுக்கு நிறைவாகத் தெளிவுபடுத்தினோம்’ என்று பொருள்.
(28:57ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஜ்பா’ எனும் சொல்லுக்கு ‘கொண்டுவரப்படுகிறது’ என்பது பொருள்.
(28:58ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பத்திரத்’ எனும் சொல்லுக்கு ‘அடாவடித்தனம் புரிந்தனர்’ என்று பொருள்.
(28:59ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உம்மிஹா’ (அதன் தலைநகர்) என்பது மக்காவையும் அதன் சுற்றுவட்டாரத்தையும் குறிக்கும்.
(28:69ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துகின்னு’ எனும் சொல்லுக்கு ‘(உள்ளங்கள்) மறைத்துவைக்கின்ற’ என்று பொருள். (இதன் இறந்தகால வினைச் சொல்லான) ‘அக்னன்த்து’ என்பதற்கு ‘மறைத்தேன்’ என்று பொருள். (இதையே) ‘கனன்த்து’ என்று சொன்னால் ‘மறைத்தேன்’ என்றும், ‘வெளிப்படுத்தினேன்’ என்றும் (எதிரிடைப்) பொருள் வரும்.
(28:82ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வை கஅன்ன’ எனும் சொல், ‘அலம் தர’ (நீர் பார்க்கவில்லையா?) எனும் சொல்லுக்கு நிகரானதாகும். (இதே சொல்லுக்கு ‘என்ன நேர்ந்தது’ என்றும், ‘ஆச்சரியம்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)
(இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யப்சுத்து’ எனும் சொல்லுக்குத் ‘தாராளமாக வழங்குகிறான்’ என்றும், ‘யக்திரு’ எனும் சொல்லுக்கு ‘சுருக்கிவிடுகின்றான்’ என்றும் பொருள்.
அத்தியாயம் : 65
4773. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا يَعْلَى، حَدَّثَنَا سُفْيَانُ الْعُصْفُرِيُّ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، {لَرَادُّكَ إِلَى مَعَادٍ} قَالَ إِلَى مَكَّةَ.
பாடம்: 2
(நபியே!) இந்தக் குர்ஆனை உமக்குச் சட்டமாக்கியவன், நீர் திரும்ப வேண்டிய இடத்திற்கு உம்மை மீண்டும் கொண்டுபோய்ச் சேர்க்கவிருக்கிறான் (எனும் 28:85 ஆவது வசனத்தொடர்)
4773. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (28:85ஆவது வசனத்திலுள்ள) ‘நீங்கள் திரும்ப வேண்டிய இடம்’ (மஆத்) என்பது மக்காவைக் குறிக்கிறது என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 65
4773. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (28:85ஆவது வசனத்திலுள்ள) ‘நீங்கள் திரும்ப வேண்டிய இடம்’ (மஆத்) என்பது மக்காவைக் குறிக்கிறது என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 65
4774. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مَنْصُورٌ، وَالأَعْمَشُ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، قَالَ بَيْنَمَا رَجُلٌ يُحَدِّثُ فِي كِنْدَةَ فَقَالَ يَجِيءُ دُخَانٌ يَوْمَ الْقِيَامَةِ فَيَأْخُذُ بِأَسْمَاعِ الْمُنَافِقِينَ وَأَبْصَارِهِمْ، يَأْخُذُ الْمُؤْمِنَ كَهَيْئَةِ الزُّكَامِ. فَفَزِعْنَا، فَأَتَيْتُ ابْنَ مَسْعُودٍ، وَكَانَ مُتَّكِئًا، فَغَضِبَ فَجَلَسَ فَقَالَ مَنْ عَلِمَ فَلْيَقُلْ، وَمَنْ لَمْ يَعْلَمْ فَلْيَقُلِ اللَّهُ أَعْلَمُ. فَإِنَّ مِنَ الْعِلْمِ أَنْ يَقُولَ لِمَا لاَ يَعْلَمُ لاَ أَعْلَمُ. فَإِنَّ اللَّهَ قَالَ لِنَبِيِّهِ صلى الله عليه وسلم {قُلْ مَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَمَا أَنَا مِنَ الْمُتَكَلِّفِينَ} وَإِنَّ قُرَيْشًا أَبْطَئُوا عَنِ الإِسْلاَمِ فَدَعَا عَلَيْهِمِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " اللَّهُمَّ أَعِنِّي عَلَيْهِمْ بِسَبْعٍ كَسَبْعِ يُوسُفَ، فَأَخَذَتْهُمْ سَنَةٌ حَتَّى هَلَكُوا فِيهَا، وَأَكَلُوا الْمَيْتَةَ وَالْعِظَامَ وَيَرَى الرَّجُلُ مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ كَهَيْئَةِ الدُّخَانِ "، فَجَاءَهُ أَبُو سُفْيَانَ فَقَالَ يَا مُحَمَّدُ جِئْتَ تَأْمُرُنَا بِصِلَةِ الرَّحِمِ، وَإِنَّ قَوْمَكَ قَدْ هَلَكُوا فَادْعُ اللَّهَ، فَقَرَأَ {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ} إِلَى قَوْلِهِ {عَائِدُونَ} أَفَيُكْشَفُ عَنْهُمْ عَذَابُ الآخِرَةِ إِذَا جَاءَ ثُمَّ عَادُوا إِلَى كُفْرِهِمْ فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى {يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَى} يَوْمَ بَدْرٍ وَلِزَامًا يَوْمَ بَدْرٍ {الم * غُلِبَتِ الرُّومُ} إِلَى {سَيَغْلِبُونَ} وَالرُّومُ قَدْ مَضَى.
பாடம்:
29. ‘அல்அன்கபூத்’ அத்தியாயம்1
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(29:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தப்ஸிரீன்’ எனும் சொல்லுக்கு ‘வழி தவறியவர்கள் (தங்களைத் தெளிவானவர்கள் எனக் கருதிக்கொண்டிருந்தார்கள்)’ என்று பொருள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்:
(29:64ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹயவான்’ எனும் சொல்லும், ‘அல்ஹய்யு’ எனும் சொல்லும் (‘நிலையானது’ என்ற) ஒரே பொருள் கொண்டவையாகும்.
(29:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃப ல யஅலமன்னல்லாஹு’ எனும் சொல்லுக்கு ‘அல்லாஹ் அதை அறிந்தே உள்ளான்’ என்பது பொருள். இது, ‘அல்லாஹ் பகுத்துக்காட்டுவான்’ என்று கூறுவதற்கு ஒத்ததாகும். ‘‘நல்லவர்களிலிருந்து கெட்டவர்களை அல்லாஹ் பகுத்துக்காட்டுவதற்காக” எனும் (8:37ஆவது) வசனத்தைப் போல.
(29:13ஆவது வசனத்திலுள்ள) ‘தங்களின் சுமைகளுடன் மற்ற சுமைகளையும்’ என்பதன் கருத்தாவது: தங்களின் பாவங்களுடன் மற்ற(வர்களை வழிகெடுத்த) பாவங்களையும் அவர்கள் சுமந்தே தீருவார்கள்.
பாடம்:
30. ‘அர்ரூம்’ அத்தியாயம்1
30:39ஆவது வசனத்தின் கருத்தாவது:
தாம் வழங்கியதைவிடச் சிறந்தது தமக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஒருவர் வழங்கினால், அதற்கு (அல்லாஹ்விடம்) நற்பலன் கிடைப்பதில்லை.
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(30:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யுஹ்பரூன்’ எனும் சொல்லுக்கு ‘புதுப்புது இன்பங்களில் ஆழ்த்தப்படுவார்கள்’ என்பது பொருள்.
(30:44ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யம்ஹதூன்’ எனும் சொல்லுக்கு ‘தங்களுக்காகப் படுக்கையை விரித்து வைக்கின்றனர்’ என்று பொருள். (இச்சொல்லுக்கு ‘தயார்படுத்துகின்றனர்’ என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.)
(30:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வத்க்’ எனும் சொல்லுக்கு ‘மழை’ என்பது பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
‘‘உங்கள் வலக்கரம் உடைமையாக்கிக்கொண்டவர்(களான அடிமை)களில் எவரையும், நாம் உங்களுக்கு வழங்கியுள்ள (செல்வம் முதலான)வற்றில் பங்காளிகளாக்கி அவற்றில் அவர்களுடன் நீங்கள் சமமாக இருப்பீர்களா?” எனும் (30:28ஆவது) இறைவசனம் பொய்த் தெய்வங்கள் தொடர்பாகக் கூறப்பட்ட உதாரணம் ஆகும். அதாவது உங்க(ள் உறவினர்க)ளில் ஒருவர் மற்றவருக்கு வாரிசாவது போல அந்த அடிமைகள் உங்களுக்கு வாரிசாகிவிடுவார்களோ என நீங்கள் அஞ்சுகிறீர்கள்.2
(30:43ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஸ்ஸத்தஊன’ எனும் சொல்லுக்கு ‘பிரிந்துவிடுவார்கள்’ என்பது பொருள். (இதிலிருந்து வந்ததே ஏவல் வினையான) ‘ஃபஸ்தஉ’ எனும் (15:94ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சொல்லும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றனர்:
(30:54ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளுஅஃப்’ எனும் சொல்லும், ‘ளஅஃப்’ எனும் சொல்லும் (‘பலவீனம்’ என்ற) ஒரே பொருள் கொண்டவை ஆகும்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(30:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸூஆ’ எனும் சொல்லுக்கு ‘தீங்கு’ என்பது பொருள். தீயோருக்குக் கிடைக்கும் தண்டனை தீங்காகவே இருக்கும்.
4774. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘கிந்தா’3 எனும் இடத்தில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, ‘‘மறுமை நாளில் புகை ஒன்று வந்து நயவஞ்சகர்களின் செவிப்புலன்களையும் பார்வைப் புலன்களையும் பிடித்துக்கொள்ளும். இறைநம்பிக்கையாளருக்கு ஜலதோஷம் ஏற்படுவது போன்றிருக்கும்” என்று சொன்னார். (இதைக் கேட்ட) நாங்கள் பீதியடைந்தோம். உடனே நான், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள். (இதைக் கேட்டதும்) அவர்கள் கோபமுற்று (எழுந்து நேராக) அமர்ந்துகொண்டு (பின்வருமாறு) கூறினார்கள்:
அறிந்தவர் சொல்லட்டும்! அறியாதவர், அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று சொல்லட்டும்! ஏனெனில், ஒருவர் தாம் அறியாததை, எனக்குத் தெரியாது என்று சொல்வதும் அறிவின்பாற்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ‘‘சொல்வீராக: நான் இதற்காக, உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவனல்லன்” என்று (38:86) கூறியுள்ளான்.
மேலும், குறைஷியர் இஸ்லாத்தை ஏற்பதில் காலம் தாழ்த்தினர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் குறைஷியருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்கள், ‘‘இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து, எனக்கு உதவி செய்!” என்று வேண்டினார்கள். அவ்வாறே அவர்களைப் பஞ்சம் வாட்டியது. இறுதியில் அதில் அவர்கள் (பலரும்) அழிந்துபோனார்கள். மேலும் பலர் செத்தவற்றையும் எலும்புகளையும் உண்ண வேண்டியதாயிற்று. இன்னும் (கடும் பசியினால் கண் பஞ்சடைந்து அவர்களில்) ஒருவர் வானத்திற்கும் பூமிக்குமிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார்.
இந்நிலையில் அபூசுஃப்யான் வந்து, ‘‘முஹம்மதே! நீர் எங்களிடம் உறவுகளைப் பேணுமாறு கட்டளையிட்டபடி வந்தீர். உம் சமுதாயத்தாரோ அழிந்துகொண்டி ருக்கிறார்கள். ஆகவே, நீங்கள் (இந்தப் பஞ்சத்தை நீக்கும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானத்திóருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். மனிதர்களை அது சூழ்ந்துகொள்ளும்; அது வதைக்கும் வேதனையாகும்” என்று தொடங்கி, ‘‘மெய்யாகவே, (நீங்கள் உணர்வு பெறக்கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கிவைத்தோம். எனினும், நீங்கள் (பாவம் செய்யவே) திரும்பச் செல்கிறீர்கள்” என்பது வரையிலான (44:10-15) வசனங்களை ஓதிக்காட்டினார்கள். (நபி (ஸல்) அவர்களின் வேண்டுதலால் அவர்களைவிட்டுப் பஞ்சம் அகன்றுவிட்டாலும்,) மறுமை வேதனை வந்தால் அது அவர்களைவிட்டு அகற்றப்படவாபோகிறது? (இல்லை. பஞ்சம் நீங்கிய) பிறகு மீண்டும் அவர்கள் இறைமறுப்புக்கே திரும்பிவிட்டனர்.
இதைத்தான் அல்லாஹ், ‘‘மிக பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் நிச்சயம் அவர்களிடம் பழிவாங்கியே தீருவோம்” என்று (44:16ஆவது வசனத்தில்) பத்ர் போரைக் குறிக்கும் வகையிலும், வ லிஸாமன் (தண்டனை உங்களைப் பிடித்தே தீரும்) என்று (25:77ஆவது வசனத்தில்) அதே பத்ர் போரைக் குறிக்கும் வகையிலும் கூறுகின்றான்.
மேலும், ‘‘அலிஃப். லாம். மீம். (நபியே!) (கிழக்கு) ரோமர்கள் அண்டை நாட்டில் (இப்போது) தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். (எனினும்) அவர்கள் இத்தோல்விக்குப்பின் சில ஆண்டுக்குள்ளேயே வெற்றி அடைவார்கள்” என்றும் அல்லாஹ் கூறுகின்றான். (30:1-3) இது முன்பே (நடந்து) முடிந்துவிட்டது.4
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4774. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘கிந்தா’3 எனும் இடத்தில் ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, ‘‘மறுமை நாளில் புகை ஒன்று வந்து நயவஞ்சகர்களின் செவிப்புலன்களையும் பார்வைப் புலன்களையும் பிடித்துக்கொள்ளும். இறைநம்பிக்கையாளருக்கு ஜலதோஷம் ஏற்படுவது போன்றிருக்கும்” என்று சொன்னார். (இதைக் கேட்ட) நாங்கள் பீதியடைந்தோம். உடனே நான், இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் சாய்ந்தபடி அமர்ந்திருந்தார்கள். (இதைக் கேட்டதும்) அவர்கள் கோபமுற்று (எழுந்து நேராக) அமர்ந்துகொண்டு (பின்வருமாறு) கூறினார்கள்:
அறிந்தவர் சொல்லட்டும்! அறியாதவர், அல்லாஹ்வே நன்கறிந்தவன் என்று சொல்லட்டும்! ஏனெனில், ஒருவர் தாம் அறியாததை, எனக்குத் தெரியாது என்று சொல்வதும் அறிவின்பாற்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ‘‘சொல்வீராக: நான் இதற்காக, உங்களிடம் கூலி எதுவும் கேட்கவில்லை. நான் (இல்லாததைச் சொல்லி) பாவனை செய்வோரில் ஒருவனல்லன்” என்று (38:86) கூறியுள்ளான்.
மேலும், குறைஷியர் இஸ்லாத்தை ஏற்பதில் காலம் தாழ்த்தினர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் குறைஷியருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்கள், ‘‘இறைவா! யூசுஃப் (அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து, எனக்கு உதவி செய்!” என்று வேண்டினார்கள். அவ்வாறே அவர்களைப் பஞ்சம் வாட்டியது. இறுதியில் அதில் அவர்கள் (பலரும்) அழிந்துபோனார்கள். மேலும் பலர் செத்தவற்றையும் எலும்புகளையும் உண்ண வேண்டியதாயிற்று. இன்னும் (கடும் பசியினால் கண் பஞ்சடைந்து அவர்களில்) ஒருவர் வானத்திற்கும் பூமிக்குமிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார்.
இந்நிலையில் அபூசுஃப்யான் வந்து, ‘‘முஹம்மதே! நீர் எங்களிடம் உறவுகளைப் பேணுமாறு கட்டளையிட்டபடி வந்தீர். உம் சமுதாயத்தாரோ அழிந்துகொண்டி ருக்கிறார்கள். ஆகவே, நீங்கள் (இந்தப் பஞ்சத்தை நீக்கும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்” என்று சொன்னார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானத்திóருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். மனிதர்களை அது சூழ்ந்துகொள்ளும்; அது வதைக்கும் வேதனையாகும்” என்று தொடங்கி, ‘‘மெய்யாகவே, (நீங்கள் உணர்வு பெறக்கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கிவைத்தோம். எனினும், நீங்கள் (பாவம் செய்யவே) திரும்பச் செல்கிறீர்கள்” என்பது வரையிலான (44:10-15) வசனங்களை ஓதிக்காட்டினார்கள். (நபி (ஸல்) அவர்களின் வேண்டுதலால் அவர்களைவிட்டுப் பஞ்சம் அகன்றுவிட்டாலும்,) மறுமை வேதனை வந்தால் அது அவர்களைவிட்டு அகற்றப்படவாபோகிறது? (இல்லை. பஞ்சம் நீங்கிய) பிறகு மீண்டும் அவர்கள் இறைமறுப்புக்கே திரும்பிவிட்டனர்.
இதைத்தான் அல்லாஹ், ‘‘மிக பலமாக அவர்களை நாம் பிடிக்கும் நாளில் நிச்சயம் அவர்களிடம் பழிவாங்கியே தீருவோம்” என்று (44:16ஆவது வசனத்தில்) பத்ர் போரைக் குறிக்கும் வகையிலும், வ லிஸாமன் (தண்டனை உங்களைப் பிடித்தே தீரும்) என்று (25:77ஆவது வசனத்தில்) அதே பத்ர் போரைக் குறிக்கும் வகையிலும் கூறுகின்றான்.
மேலும், ‘‘அலிஃப். லாம். மீம். (நபியே!) (கிழக்கு) ரோமர்கள் அண்டை நாட்டில் (இப்போது) தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். (எனினும்) அவர்கள் இத்தோல்விக்குப்பின் சில ஆண்டுக்குள்ளேயே வெற்றி அடைவார்கள்” என்றும் அல்லாஹ் கூறுகின்றான். (30:1-3) இது முன்பே (நடந்து) முடிந்துவிட்டது.4
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4775. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ، فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ، كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ، هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ " ثُمَّ يَقُولُ {فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا لاَ تَبْدِيلَ لِخَلْقِ اللَّهِ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ}
பாடம்: 1
‘‘அல்லாஹ்வின் படைப்பில் எத்தகைய மாற்றமும் கிடையாது” எனும் (30:30ஆவது வசனத் தொடர்)
(இந்த 30:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல்கில்லாஹ்’ (‘அல்லாஹ் வின் படைப்பு’) என்பதற்கு, ‘அல்லாஹ்வின் நெறி’ என்பது கருத்து. ‘ஃபித்ரத்’ (இயற்கை) என்பதற்கு ‘இஸ்லாம்’ என்பது பொருள். (இதைப் போன்றே, ஓர் ஓதலின்படி 26:137 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல்குல் அவ்வலீன்’ என்பதற்கு ‘முந்தையவர்களின் வழி’ என்பது பொருள்.
4775. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப் போன்றே எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவது போல்,) பெற்றோர்கள்தான் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி,) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, அக்னி ஆராதனையாளர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டுப் பிறகு, ‘‘எந்த இயற்கை(யான நெறி)யில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோஅதுவே நிலையான மார்க்கமாகும். அல்லாஹ்வின் படைப்பில் (அதாவது மார்க்கத்தில்) எத்தகைய மாற்றமும் கிடையாது” எனும் (30:30ஆவது) வசனத்தைஓதிக்காட்டினார்கள்.5
அத்தியாயம் : 65
4775. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு விலங்கு முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுப்பதைப் போன்றே எல்லாக் குழந்தைகளுமே இயற்கையி(ன் மார்க்கத்தி)ல்தான் பிறக்கின்றன. விலங்குகள் நாக்கு, மூக்கு வெட்டப்பட்ட நிலையில் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்கசேதப்படுத்துவது போல்,) பெற்றோர்கள்தான் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி,) யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, அக்னி ஆராதனையாளர்களாகவோ ஆக்கிவிடுகின்றனர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டுப் பிறகு, ‘‘எந்த இயற்கை(யான நெறி)யில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோஅதுவே நிலையான மார்க்கமாகும். அல்லாஹ்வின் படைப்பில் (அதாவது மார்க்கத்தில்) எத்தகைய மாற்றமும் கிடையாது” எனும் (30:30ஆவது) வசனத்தைஓதிக்காட்டினார்கள்.5
அத்தியாயம் : 65
4776. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} شَقَّ ذَلِكَ عَلَى أَصْحَابِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَقَالُوا أَيُّنَا لَمْ يَلْبِسْ إِيمَانَهُ بِظُلْمٍ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّهُ لَيْسَ بِذَاكَ، أَلاَ تَسْمَعُ إِلَى قَوْلِ لُقْمَانَ لاِبْنِهِ {إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ}"
பாடம்:
31. ‘லுக்மான்’ அத்தியாயம்1
பாடம்: 1
‘‘என் அன்பு மகனே! அல்லாஹ் வுக்கு இணைகற்பிக்காதே! இணை கற்பிப்பது மாபெரும் அநீதியாகும்” (என்று லுக்மான் கூறினார் எனும் 31:13ஆவது வசனத்தொடர்)
4776. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘எவர் இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ” எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது. ஆகவே, அவர்கள், ‘‘எங்களில் எவர்தான் தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்துவிடாமல் (கலப்பற்ற இறைநம்பிக்கை மிக்கவராய்) இருக்கிறார்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அது அப்படியல்ல; (அறிஞர்) லுக்மான் அவர்கள் தம் புதல்வரிடம் ‘‘இணைகற்பிப்பது மாபெரும் அநீதியாகும்” என்று சொல்லியிருப்பதை (குர்ஆன் வாயிலாக) நீர் கேட்கவில்லையா?”என்று சொன்னார்கள்.2
அத்தியாயம் : 65
4776. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘எவர் இறைநம்பிக்கை கொண்டு (பின்னர்) தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ” எனும் (6:82ஆவது) இறைவசனம் அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களுக்கு அது கடினமாகத் தெரிந்தது. ஆகவே, அவர்கள், ‘‘எங்களில் எவர்தான் தமது இறைநம்பிக்கையுடன் அநீதியைக் கலந்துவிடாமல் (கலப்பற்ற இறைநம்பிக்கை மிக்கவராய்) இருக்கிறார்?” என்று கேட்டார்கள்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அது அப்படியல்ல; (அறிஞர்) லுக்மான் அவர்கள் தம் புதல்வரிடம் ‘‘இணைகற்பிப்பது மாபெரும் அநீதியாகும்” என்று சொல்லியிருப்பதை (குர்ஆன் வாயிலாக) நீர் கேட்கவில்லையா?”என்று சொன்னார்கள்.2
அத்தியாயம் : 65
4777. حَدَّثَنِي إِسْحَاقُ، عَنْ جَرِيرٍ، عَنْ أَبِي حَيَّانَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَوْمًا بَارِزًا لِلنَّاسِ إِذْ أَتَاهُ رَجُلٌ يَمْشِي فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَا الإِيمَانُ قَالَ " الإِيمَانُ أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ وَرُسُلِهِ وَلِقَائِهِ وَتُؤْمِنَ بِالْبَعْثِ الآخِرِ ". قَالَ يَا رَسُولَ اللَّهِ مَا الإِسْلاَمُ قَالَ " الإِسْلاَمُ أَنْ تَعْبُدَ اللَّهَ وَلاَ تُشْرِكَ بِهِ شَيْئًا، وَتُقِيمَ الصَّلاَةَ، وَتُؤْتِيَ الزَّكَاةَ الْمَفْرُوضَةَ، وَتَصُومَ رَمَضَانَ ". قَالَ يَا رَسُولَ اللَّهِ، مَا الإِحْسَانُ قَالَ " الإِحْسَانُ أَنْ تَعْبُدَ اللَّهَ كَأَنَّكَ تَرَاهُ، فَإِنْ لَمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ ". قَالَ يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ قَالَ " مَا الْمَسْئُولُ عَنْهَا بِأَعْلَمَ مِنَ السَّائِلِ، وَلَكِنْ سَأُحَدِّثُكَ عَنْ أَشْرَاطِهَا إِذَا وَلَدَتِ الْمَرْأَةُ رَبَّتَهَا، فَذَاكَ مِنْ أَشْرَاطِهَا، وَإِذَا كَانَ الْحُفَاةُ الْعُرَاةُ رُءُوسَ النَّاسِ فَذَاكَ مِنْ أَشْرَاطِهَا فِي خَمْسٍ لا يَعْلَمُهُنَّ إِلاَّ اللَّهُ {إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ وَيُنَزِّلُ الْغَيْثَ وَيَعْلَمُ مَا فِي الأَرْحَامِ} ". ثُمَّ انْصَرَفَ الرَّجُلُ فَقَالَ " رُدُّوا عَلَىَّ ". فَأَخَذُوا لِيَرُدُّوا فَلَمْ يَرَوْا شَيْئًا. فَقَالَ " هَذَا جِبْرِيلُ جَاءَ لِيُعَلِّمَ النَّاسَ دِينَهُمْ ".
பாடம்: 2
‘‘நிச்சயமாக மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது” எனும் (31:34 ஆவது) வசனத்தொடர்
4777. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள்முன் வந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் (வாகனமேதுமின்றி) நடந்து வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘‘ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன?” என்று கேட்டார். அவர்கள், ‘‘ஈமான் (இறைநம்பிக்கை) என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனது சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப்பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘இஸ்லாம்’ (அடிபணிதல்) என்றால் என்ன?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வழிபடுவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸகாத்’தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்” என்றார்கள். அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘இஹ்சான்’ (நன்மை புரிதல்) என்றால் என்ன?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இஹ்சான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான் (எனும் உணர்வுடன் அவனை வழிபடுவதாகும்.)” என்று பதிலளித்தார்கள்.
அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மறுமை (நாள்) எப்போது வரும்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக்கூறுகிறேன்:
ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.3 காலில் செருப்பணியாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும்.
‘‘நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கின்றான். இன்னும், அவன் கருப்பைகளில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்” (எனும் 31:34ஆவது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.)
பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்று சொன்னார்கள். மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்துவரச் சென்றார்கள். (அவரைத் தேடியும்) அவரை அவர்கள் எங்கேயும் காணவில்லை.
பின்னர், நபி (ஸல்) அவர்கள், ‘‘இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தான். மக்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர் வந்திருந்தார்” என்று சொன்னார்கள்.4
அத்தியாயம் : 65
4777. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் மக்கள்முன் வந்திருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் (வாகனமேதுமின்றி) நடந்து வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘‘ஈமான் (இறைநம்பிக்கை) என்றால் என்ன?” என்று கேட்டார். அவர்கள், ‘‘ஈமான் (இறைநம்பிக்கை) என்பது, அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய தூதர்களையும், அவனது சந்திப்பையும் நீங்கள் நம்புவதும், (மரணத்திற்குப்பின்) இறுதியாக (அனைவரும்) உயிருடன் எழுப்பப்படுவதை நம்புவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.
‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘இஸ்லாம்’ (அடிபணிதல்) என்றால் என்ன?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வழிபடுவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், தொழுகையை நிலைநிறுத்துவதும், கடமையான ‘ஸகாத்’தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்” என்றார்கள். அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘இஹ்சான்’ (நன்மை புரிதல்) என்றால் என்ன?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘இஹ்சான் என்பது அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். நீங்கள் அவனைப் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான் (எனும் உணர்வுடன் அவனை வழிபடுவதாகும்.)” என்று பதிலளித்தார்கள்.
அம்மனிதர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! மறுமை (நாள்) எப்போது வரும்?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். ஆயினும், நான் உங்களுக்கு மறுமை நாளின் அடையாளங்கள் சிலவற்றை எடுத்துக்கூறுகிறேன்:
ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானியைப் பெற்றெடுப்பாளாயின் அது மறுமையின் அடையாளங்களில் ஒன்றாகும்.3 காலில் செருப்பணியாத, நிர்வாணமானவர்கள் மக்களின் தலைவர்களாக இருந்தால் அதுவும் அதன் அடையாளங்களில் ஒன்றாகும். (மறுமை நாள் எப்போது வரவிருக்கிறது எனும் அறிவானது) அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியாத ஐந்து விஷயங்களில் அடங்கும்.
‘‘நிச்சயமாக, மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவனே மழையை இறக்கிவைக்கின்றான். இன்னும், அவன் கருப்பைகளில் உள்ளவற்றையும் (தீர்க்கமாக) அறிகின்றான். தாம் நாளை என்ன சம்பாதிப்போம் என்பதை (அவனைத் தவிர வேறு) யாரும் (உறுதியாக) அறிவதில்லை. எந்த இடத்தில் தாம் இறக்கப்போகிறோம் என்பதையும் எவரும் அறிவதில்லை. அல்லாஹ்தான் (இவற்றையெல்லாம்) நன்கறிந்தவன்; ஞானமிக்கவன்” (எனும் 31:34ஆவது வசனத்தை நபியவர்கள் ஓதினார்கள்.)
பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்த மனிதரைத் திரும்ப என்னிடம் அழைத்து வாருங்கள்!” என்று சொன்னார்கள். மக்கள் அம்மனிதரைத் திரும்ப அழைத்துவரச் சென்றார்கள். (அவரைத் தேடியும்) அவரை அவர்கள் எங்கேயும் காணவில்லை.
பின்னர், நபி (ஸல்) அவர்கள், ‘‘இ(ப்போது வந்து போன)வர், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள்தான். மக்களுக்கு அவர்களது மார்க்கத்தைக் கற்றுத்தருவதற்காக அவர் வந்திருந்தார்” என்று சொன்னார்கள்.4
அத்தியாயம் : 65
4778. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّ أَبَاهُ، حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ " مَفَاتِيحُ الْغَيْبِ خَمْسٌ " ثُمَّ قَرَأَ {إِنَّ اللَّهَ عِنْدَهُ عِلْمُ السَّاعَةِ}.
பாடம்: 2
‘‘நிச்சயமாக மறுமை (நாள் எப்போது சம்பவிக்கும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது” எனும் (31:34 ஆவது) வசனத்தொடர்
4778. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும்” என்று கூறிவிட்டு, பிறகு ‘‘நிச்சயமாக, மறுமை(நாள் எப்போது வரும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது” என்று தொடங்கும் (31:34 ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.5
அத்தியாயம் : 65
4778. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘மறைவானவற்றின் திறவுகோல்கள் ஐந்தாகும்” என்று கூறிவிட்டு, பிறகு ‘‘நிச்சயமாக, மறுமை(நாள் எப்போது வரும் என்பது) பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது” என்று தொடங்கும் (31:34 ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.5
அத்தியாயம் : 65
4779. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ ". قَالَ أَبُو هُرَيْرَةَ اقْرَءُوا إِنْ شِئْتُمْ {فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ}. وَحَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ عَنِ الأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ اللَّهُ مِثْلَهُ. قِيلَ لِسُفْيَانَ رِوَايَةً. قَالَ فَأَىُّ شَىْءٍ قَالَ أَبُو مُعَاوِيَةَ عَنِ الأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ قَرَأَ أَبُو هُرَيْرَةَ قُرَّاتِ أَعْيُنٍ.
பாடம்:
32. ‘அஸ்ஸஜ்தா’ அத்தியாயம்1
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(32:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஹீன்’ எனும் சொல்லுக்கு ‘பலவீனமானது’ என்று பொருள். இது ஆணுடைய விந்தைக் குறிக்கிறது.
(32:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளலல்னா’ எனும் சொல்லுக்கு ‘நாங்கள் அழிந்துபோனோம்’ என்பது பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(32:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜுருஸ்’ எனும் சொல் பயனேதுமில்லாத வகையில் மிகக் குறைவாகவே மழை பெய்யும் (வறண்ட களர்) நிலத்தைக் குறிக்கின்றது.
(32:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘யஹ்தி’ எனும் சொல் மற்றோர் ஓதலில் ‘நஹ்தி’ என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) ‘நஹ்தி’ எனும் சொல்லுக்கு ‘நாம் தெளிவுபடுத்தினோம்’ என்பது பொருள்.
பாடம்: 1
‘‘அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்” எனும் (32:17ஆவது) இறைவசனம்
4779. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அருள் வளமும் உயர்வும் உடைய அல்லாஹ், ‘‘என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்திருக்கிறேன்” என்று கூறுகின்றான்.
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் விரும்பினால், ‘‘அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்” எனும் (32:17ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.2
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் (ரஹ்) அவர்களிடம் ‘‘இது நபிமொழியா? (அல்லது உங்களின் கருத்தா?)” என வினவப்பட, அன்னார் ‘‘(இது நபிமொழி இல்லாமல்) வேறென்ன?” என்று (திருப்பிக்) கேட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 65
4779. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அருள் வளமும் உயர்வும் உடைய அல்லாஹ், ‘‘என் நல்லடியார்களுக்காக எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்திருக்கிறேன்” என்று கூறுகின்றான்.
இதை அறிவித்த அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘நீங்கள் விரும்பினால், ‘‘அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்” எனும் (32:17ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.2
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் (ரஹ்) அவர்களிடம் ‘‘இது நபிமொழியா? (அல்லது உங்களின் கருத்தா?)” என வினவப்பட, அன்னார் ‘‘(இது நபிமொழி இல்லாமல்) வேறென்ன?” என்று (திருப்பிக்) கேட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 65
4780. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم " يَقُولُ اللَّهُ تَعَالَى أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لاَ عَيْنٌ رَأَتْ، وَلاَ أُذُنٌ سَمِعَتْ، وَلاَ خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ، ذُخْرًا، بَلْهَ مَا أُطْلِعْتُمْ عَلَيْهِ ". ثُمَّ قَرَأَ {فَلاَ تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ}
பாடம்:
32. ‘அஸ்ஸஜ்தா’ அத்தியாயம்1
முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(32:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஹீன்’ எனும் சொல்லுக்கு ‘பலவீனமானது’ என்று பொருள். இது ஆணுடைய விந்தைக் குறிக்கிறது.
(32:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளலல்னா’ எனும் சொல்லுக்கு ‘நாங்கள் அழிந்துபோனோம்’ என்பது பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(32:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஜுருஸ்’ எனும் சொல் பயனேதுமில்லாத வகையில் மிகக் குறைவாகவே மழை பெய்யும் (வறண்ட களர்) நிலத்தைக் குறிக்கின்றது.
(32:26ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘யஹ்தி’ எனும் சொல் மற்றோர் ஓதலில் ‘நஹ்தி’ என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) ‘நஹ்தி’ எனும் சொல்லுக்கு ‘நாம் தெளிவுபடுத்தினோம்’ என்பது பொருள்.
பாடம்: 1
‘‘அவர்கள் செய்துகொண்டிருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்” எனும் (32:17ஆவது) இறைவசனம்
4780. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘உயர்ந்தோன் அல்லாஹ், ‘என் நல்லடியார்களின் சேமிப்பாக எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன். (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளவை, (அங்கே கிடைக்கவிருக்கும் இன்பங்களுக்கு முன்னே) சொற்பமானவையே ஆகும்’ எனக் கூறுகின்றான்” என்று சொன்னார்கள்.
பிறகு, ‘‘அவர்கள் செய்துகொண்டி ருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்” எனும் (32:17ஆவது) இறைவசனத்தை ஒதினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், அபூஹுரைரா (ரலி) அவர்கள் (32:17ஆவது வசனத்தின் மூலத்தில் உள்ள ‘குர்ரத்’ (குளிர்ச்சி) எனும் ஒருமையான சொல்லை) ‘குர்ராத்’ என(ப் பன்மையாக) வாசித்தார்கள் என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 65
4780. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘உயர்ந்தோன் அல்லாஹ், ‘என் நல்லடியார்களின் சேமிப்பாக எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தக் காதும் கேட்டிராத, எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன். (சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து) உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளவை, (அங்கே கிடைக்கவிருக்கும் இன்பங்களுக்கு முன்னே) சொற்பமானவையே ஆகும்’ எனக் கூறுகின்றான்” என்று சொன்னார்கள்.
பிறகு, ‘‘அவர்கள் செய்துகொண்டி ருந்த (நற்)செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறியமாட்டார்கள்” எனும் (32:17ஆவது) இறைவசனத்தை ஒதினார்கள்.
மற்றோர் அறிவிப்பில், அபூஹுரைரா (ரலி) அவர்கள் (32:17ஆவது வசனத்தின் மூலத்தில் உள்ள ‘குர்ரத்’ (குளிர்ச்சி) எனும் ஒருமையான சொல்லை) ‘குர்ராத்’ என(ப் பன்மையாக) வாசித்தார்கள் என்று காணப்படுகிறது.
அத்தியாயம் : 65
4781. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُلَيْحٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ هِلاَلِ بْنِ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَا مِنْ مُؤْمِنٍ إِلاَّ وَأَنَا أَوْلَى النَّاسِ بِهِ فِي الدُّنْيَا وَالآخِرَةِ، اقْرَءُوا إِنْ شِئْتُمْ {النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ} فَأَيُّمَا مُؤْمِنٍ تَرَكَ مَالاً فَلْيَرِثْهُ عَصَبَتُهُ مَنْ كَانُوا، فَإِنْ تَرَكَ دَيْنًا أَوْ ضِيَاعًا فَلْيَأْتِنِي وَأَنَا مَوْلاَهُ ".
பாடம்:
33. ‘அல்அஹ்ஸாப்’ அத்தியாயம்1
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(33:26ஆவது வசனத்திலுள்ள) ‘அவர்களின் கோட்டைகள்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘ஸயாஸீஹிம்’ எனும் சொல்லுக்குரியதாகும்.
பாடம்: 1
நிச்சயமாக, இறைநம்பிக்கையாளர் களுக்கு அவர்களின் உயிரைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவ ராவார் (எனும் 33:6ஆவது வசனத்தொடர்)
4781. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த ஓர் இறைநம்பிக்கையாளருக்கும், இந்த உலகிலும் மறுமையிலும் நானே மக்களில் மிக நெருக்கமானவன் ஆவேன். நீங்கள் விரும்பினால், ‘‘நிச்சயமாக, இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார்” எனும் (33:6ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
ஓர் இறைநம்பிக்கையாளர் (அவர் எவராயினும் சரி, இறந்துபோய்) செல்வத்தை விட்டுச்சென்றால் அவருடைய தந்தை வழி உறவினர்கள் -அவர்கள் எவ்வகையினராயினும் சரி -அதற்கு அவர்கள் வாரிசாகட்டும்!
எவர் (இறக்கும்போது) ஒரு கடனை (அடைக்காமல்) விட்டுச்செல்கின்றாரோ, அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்செல்கிறாரோ அவர்கள் என்னிடத்தில் வரட்டும். நானே அவர்களுக்குரிய காப்பாளன் (பொறுப்பேற்றுப் பராமரிப்பவன்) ஆவேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2
அத்தியாயம் : 65
4781. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எந்த ஓர் இறைநம்பிக்கையாளருக்கும், இந்த உலகிலும் மறுமையிலும் நானே மக்களில் மிக நெருக்கமானவன் ஆவேன். நீங்கள் விரும்பினால், ‘‘நிச்சயமாக, இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிரைவிட நபிதான் முன்னுரிமை பெற்றவராவார்” எனும் (33:6ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.
ஓர் இறைநம்பிக்கையாளர் (அவர் எவராயினும் சரி, இறந்துபோய்) செல்வத்தை விட்டுச்சென்றால் அவருடைய தந்தை வழி உறவினர்கள் -அவர்கள் எவ்வகையினராயினும் சரி -அதற்கு அவர்கள் வாரிசாகட்டும்!
எவர் (இறக்கும்போது) ஒரு கடனை (அடைக்காமல்) விட்டுச்செல்கின்றாரோ, அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்செல்கிறாரோ அவர்கள் என்னிடத்தில் வரட்டும். நானே அவர்களுக்குரிய காப்பாளன் (பொறுப்பேற்றுப் பராமரிப்பவன்) ஆவேன்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2
அத்தியாயம் : 65
4782. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُخْتَارِ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ زَيْدَ بْنَ حَارِثَةَ، مَوْلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَا كُنَّا نَدْعُوهُ إِلاَّ زَيْدَ ابْنَ مُحَمَّدٍ حَتَّى نَزَلَ الْقُرْآنُ {ادْعُوهُمْ لآبَائِهِمْ هُوَ أَقْسَطُ عِنْدَ اللَّهِ}.
பாடம்: 2
வளர்ப்புப் புதல்வர்களை அவர் களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும் (எனும் 33:5ஆவது வசனத்தொடர்)
4782. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘வளர்ப்புப் புதல்வர்களை அவர் களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்” எனும் (33:5ஆவது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை ‘ஸைத் பின் முஹம்மத்’ (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்துவந்தோம்.3
அத்தியாயம் : 65
4782. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘வளர்ப்புப் புதல்வர்களை அவர் களின் சொந்தத் தந்தையுடன் சேர்த்தே அழையுங்கள். இதுவே அல்லாஹ்விடம் நீதியாகும்” எனும் (33:5ஆவது) குர்ஆன் வசனம் அருளப்படும்வரை, நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட (அவர்களின் வளர்ப்பு மகன்) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களை ‘ஸைத் பின் முஹம்மத்’ (முஹம்மதின் புதல்வர் ஸைத்) என்றே அழைத்துவந்தோம்.3
அத்தியாயம் : 65
4783. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ نُرَى هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِي أَنَسِ بْنِ النَّضْرِ {مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ}.
பாடம் : 3
அவர்களில் சிலர் (தாம் வீரமரணம் அடைய வேண்டும் என்ற) தமது நோக்கத்தை அடைந்துவிட் டார்கள். இன்னும் அவர்களில் சிலர் (தமக்குரிய வாய்ப்பை) எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தமது வாக்குறுதியை ஒருபோதும் அவர்கள் மாற்றிக்கொள்ளவில்லை (எனும் 33:23ஆவது வசனத் தொடர்)
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நஹ்பஹு’ எனும் சொல்லுக்கு ‘தமது வாக்குறுதி’ என்பது பொருள். (இதற்கு இலட்சியம், நோக்கம், நேர்ச்சை ஆகிய பொருள்களும் உண்டு.)
(33:14ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘அக்தாரிஹா’ எனும் சொல்லுக்கு ‘அதன் பல பாகங்கள்’ என்பது பொருள். ‘அல்ஃபித்னத்த ல ஆத்தவ்ஹா’ எனும் சொற்றொடருக்கு ‘குழப்பத்தைத் தந்திருப்பார்கள்’ என்று பொருள்.
4783. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘இறைநம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்துகொண்டார்கள்” என்று தொடங்கும் (33:23ஆவது) வசனம், அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றதென்றே நாங்கள் கருதுகிறோம்.4
அத்தியாயம் : 65
4783. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘‘இறைநம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்துகொண்டார்கள்” என்று தொடங்கும் (33:23ஆவது) வசனம், அனஸ் பின் நள்ர் (ரலி) அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றதென்றே நாங்கள் கருதுகிறோம்.4
அத்தியாயம் : 65
4784. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي خَارِجَةُ بْنُ زَيْدِ بْنِ ثَابِتٍ، أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ، قَالَ لَمَّا نَسَخْنَا الصُّحُفَ فِي الْمَصَاحِفِ فَقَدْتُ آيَةً مِنْ سُورَةِ الأَحْزَابِ، كُنْتُ أَسْمَعُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْرَؤُهَا، لَمْ أَجِدْهَا مَعَ أَحَدٍ إِلاَّ مَعَ خُزَيْمَةَ الأَنْصَارِيِّ، الَّذِي جَعَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهَادَتَهُ شَهَادَةَ رَجُلَيْنِ {مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ}
பாடம் : 3
அவர்களில் சிலர் (தாம் வீரமரணம் அடைய வேண்டும் என்ற) தமது நோக்கத்தை அடைந்துவிட் டார்கள். இன்னும் அவர்களில் சிலர் (தமக்குரிய வாய்ப்பை) எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தமது வாக்குறுதியை ஒருபோதும் அவர்கள் மாற்றிக்கொள்ளவில்லை (எனும் 33:23ஆவது வசனத் தொடர்)
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நஹ்பஹு’ எனும் சொல்லுக்கு ‘தமது வாக்குறுதி’ என்பது பொருள். (இதற்கு இலட்சியம், நோக்கம், நேர்ச்சை ஆகிய பொருள்களும் உண்டு.)
(33:14ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘அக்தாரிஹா’ எனும் சொல்லுக்கு ‘அதன் பல பாகங்கள்’ என்பது பொருள். ‘அல்ஃபித்னத்த ல ஆத்தவ்ஹா’ எனும் சொற்றொடருக்கு ‘குழப்பத்தைத் தந்திருப்பார்கள்’ என்று பொருள்.
4784. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்,) குர்ஆனுக்குப் பிரதிகள் எடுத்தபோது ‘அல்அஹ்ஸாப்’ எனும் (33ஆவது) அத்தியாயத்தின் ஒரு வசனத்தை நான் காணவில்லை. அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதக் கேட்டிருந்தேன். குஸைமா அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் அது எனக்குக் கிடைக்கவில்லை. இந்த குஸைமாவின் சாட்சியத்தைத் தான் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு பேரின் சாட்சியத்திற்குச் சமமானதாக ஆக்கினார்கள்.5
(அந்த வசனம் இதுதான்:) ‘‘இறை நம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்துகொண்டார்கள்.” (33:23)6
அத்தியாயம் : 65
4784. ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்,) குர்ஆனுக்குப் பிரதிகள் எடுத்தபோது ‘அல்அஹ்ஸாப்’ எனும் (33ஆவது) அத்தியாயத்தின் ஒரு வசனத்தை நான் காணவில்லை. அதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓதக் கேட்டிருந்தேன். குஸைமா அல்அன்சாரீ (ரலி) அவர்களிடம் தவிர வேறு யாரிடமும் அது எனக்குக் கிடைக்கவில்லை. இந்த குஸைமாவின் சாட்சியத்தைத் தான் (ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு பேரின் சாட்சியத்திற்குச் சமமானதாக ஆக்கினார்கள்.5
(அந்த வசனம் இதுதான்:) ‘‘இறை நம்பிக்கையாளர்களில் சிலர் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்விடம் தாம் அளித்த வாக்குறுதியில் உண்மையாக நடந்துகொண்டார்கள்.” (33:23)6
அத்தியாயம் : 65
4785. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ، رضى الله عنها زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَهَا حِينَ أَمَرَ اللَّهُ أَنْ يُخَيِّرَ أَزْوَاجَهُ، فَبَدَأَ بِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ " إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا فَلاَ عَلَيْكِ أَنْ تَسْتَعْجِلِي حَتَّى تَسْتَأْمِرِي أَبَوَيْكِ "، وَقَدْ عَلِمَ أَنَّ أَبَوَىَّ لَمْ يَكُونَا يَأْمُرَانِي بِفِرَاقِهِ، قَالَتْ ثُمَّ قَالَ " إِنَّ اللَّهَ قَالَ {يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لأَزْوَاجِكَ} ". إِلَى تَمَامِ الآيَتَيْنِ فَقُلْتُ لَهُ فَفِي أَىِّ هَذَا أَسْتَأْمِرُ أَبَوَىَّ فَإِنِّي أُرِيدُ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الآخِرَةَ.
பாடம்: 4
‘‘நபியே! உம்முடைய துணைவி யரிடம் கூறுவீராக: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துவிடுகிறேன்” (எனும் 33:28ஆவது இறைவசனம்)
மஅமர் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(33:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தபர்ருஜ்’ எனும் சொல், ஒரு பெண் தன் அழகை (அந்நிய ஆடவர்களுக்கு) வெளிக்காட்டுவதைக் குறிக்கும்.
(33:38ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘சுன்னத்தல்லாஹ்’ எனும் சொல்லுக்கு ‘அல்லாஹ்வின் வழிமுறை (மரபு)’ என்பது பொருள். (இதன் வினைச் சொல்லான) ‘இஸ்தன்ன’ என்பதற்கு ‘வழிமுறையாக்கினான்’ என்பது பொருள்.
4785. நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்திடுமாறு தன் தூதருக்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.7
என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைச் சொன்னார்கள்: ‘‘(ஆயிஷாவே)! நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக்கொள்ளும்வரை அவசரப்பட வேண்டாம்” என்று சொன்னார்கள். என்னுடைய பெற்றோர் நபி (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி எனக்கு உத்தரவிடப்போவதில்லை என்று நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்திருந்தது.
பிறகு அவர்கள், ‘‘நபியே! உம்முடைய துணைவியரிடம் கூறுவீராக” என்று தொடங்கும் (33:28, 29) இரு வசனங்களை முழுமையாகச் சொன்னார்கள். அப்போது நான், ‘‘இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை இல்லத்தையுமே விரும்புகிறேன்” என்று நபியவர்களிடம் சொன்னேன்.8
அத்தியாயம் : 65
4785. நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்திடுமாறு தன் தூதருக்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.7
என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைச் சொன்னார்கள்: ‘‘(ஆயிஷாவே)! நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக்கொள்ளும்வரை அவசரப்பட வேண்டாம்” என்று சொன்னார்கள். என்னுடைய பெற்றோர் நபி (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி எனக்கு உத்தரவிடப்போவதில்லை என்று நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிந்திருந்தது.
பிறகு அவர்கள், ‘‘நபியே! உம்முடைய துணைவியரிடம் கூறுவீராக” என்று தொடங்கும் (33:28, 29) இரு வசனங்களை முழுமையாகச் சொன்னார்கள். அப்போது நான், ‘‘இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை இல்லத்தையுமே விரும்புகிறேன்” என்று நபியவர்களிடம் சொன்னேன்.8
அத்தியாயம் : 65
4786. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَمَّا أُمِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِتَخْيِيرِ أَزْوَاجِهِ بَدَأَ بِي فَقَالَ " إِنِّي ذَاكِرٌ لَكِ أَمْرًا فَلاَ عَلَيْكِ أَنْ لاَ تَعْجَلِي حَتَّى تَسْتَأْمِرِي أَبَوَيْكِ ". قَالَتْ وَقَدْ عَلِمَ أَنَّ أَبَوَىَّ لَمْ يَكُونَا يَأْمُرَانِي بِفِرَاقِهِ، قَالَتْ ثُمَّ قَالَ " إِنَّ اللَّهَ جَلَّ ثَنَاؤُهُ قَالَ {يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لأَزْوَاجِكَ إِنْ كُنْتُنَّ تُرِدْنَ الْحَيَاةَ الدُّنْيَا وَزِينَتَهَا} إِلَى {أَجْرًا عَظِيمًا} ". قَالَتْ فَقُلْتُ فَفِي أَىِّ هَذَا أَسْتَأْمِرُ أَبَوَىَّ فَإِنِّي أُرِيدُ اللَّهَ وَرَسُولَهُ وَالدَّارَ الآخِرَةَ، قَالَتْ ثُمَّ فَعَلَ أَزْوَاجُ النَّبِيِّ صلى الله عليه وسلم مِثْلَ مَا فَعَلْتُ. تَابَعَهُ مُوسَى بْنُ أَعْيَنَ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ. وَقَالَ عَبْدُ الرَّزَّاقِ وَأَبُو سُفْيَانَ الْمَعْمَرِيُّ عَنْ مَعْمَرٍ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ.
பாடம்: 5
‘‘ஆனால், நீங்கள் அல்லாஹ்வை யும் அவனுடைய தூதரையும் மறு உலகையும் விரும்புவீர்களா னால், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனைத் தயார் செய்து வைத் துள்ளான்” எனும் (33:29ஆவது) இறைவசனம்
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:
‘‘உங்கள் வீடுகளில் ஓதப்படுகின்ற இறைவசனங்களையும், ஞான (வாக்கிய)ங்களையும் நினைவில் வையுங்கள்” எனும் (33:34ஆவது வசனத்திலுள்ள) ‘இறைவசனங்கள்’ என்பது குர்ஆனையும், ‘ஞானங்கள்’ என்பது நபிவழியையும் குறிக்கிறது.
4786. நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமையளித்திடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டளை யிடப்பட்டபோது, அவர்கள் என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைச் சொன்னார் கள்: ‘‘(ஆயிஷா!) நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக் கொள்ளும்வரை அவசரப்பட வேண்டாம்” என்று சொன்னார்கள்.
என் பெற்றோர் நபி (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி உத்தரவிடப்போவ தில்லை என்று நபியவர்களுக்குத் தெரிந்திருந்தது.
பிறகு அவர்கள், ‘‘நபியே! உம்முடைய துணைவியரிடம் கூறுவீராக: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களது வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துவிடுகிறேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுஉலகையும் விரும்புவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை தயார் செய்துவைத்துள்ளான்” எனும் (33:28,29) வசனங்களை ஓதினார்கள்.
அப்போது நான், ‘‘இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை வீட்டையுமே விரும்புகிறேன்” என்று சொன்னேன். பிறகு நபி (ஸல்) அவர்களின் இதரத் துணைவியரும் என்னைப் போன்றே செயல்பட்டனர்.9
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4786. நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமையளித்திடுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கட்டளை யிடப்பட்டபோது, அவர்கள் என்னிடம்தான் முதன்முதலாக விஷயத்தைச் சொன்னார் கள்: ‘‘(ஆயிஷா!) நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக் கொள்ளும்வரை அவசரப்பட வேண்டாம்” என்று சொன்னார்கள்.
என் பெற்றோர் நபி (ஸல்) அவர்களைப் பிரிந்துவிடும்படி உத்தரவிடப்போவ தில்லை என்று நபியவர்களுக்குத் தெரிந்திருந்தது.
பிறகு அவர்கள், ‘‘நபியே! உம்முடைய துணைவியரிடம் கூறுவீராக: நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) விரும்புவீர்களாயின், வாருங்கள்! உங்களது வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து நல்ல முறையில் உங்களை விடுவித்துவிடுகிறேன். ஆனால், நீங்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுஉலகையும் விரும்புவீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் உங்களிலுள்ள (இத்தகைய) நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை தயார் செய்துவைத்துள்ளான்” எனும் (33:28,29) வசனங்களை ஓதினார்கள்.
அப்போது நான், ‘‘இது தொடர்பாக என் பெற்றோரிடம் நான் என்ன அனுமதி கேட்பது? நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறுமை வீட்டையுமே விரும்புகிறேன்” என்று சொன்னேன். பிறகு நபி (ஸல்) அவர்களின் இதரத் துணைவியரும் என்னைப் போன்றே செயல்பட்டனர்.9
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4787. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا مُعَلَّى بْنُ مَنْصُورٍ، عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ، حَدَّثَنَا ثَابِتٌ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ هَذِهِ، الآيَةَ {وَتُخْفِي فِي نَفْسِكَ مَا اللَّهُ مُبْدِيهِ} نَزَلَتْ فِي شَأْنِ زَيْنَبَ ابْنَةِ جَحْشٍ وَزَيْدِ بْنِ حَارِثَةَ.
பாடம் : 6
‘‘(நபியே!) நீர் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியி ருந்த விஷயத்தை உமது உள்ளத்தில் மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர். மேலும், நீர் மனிதர்களுக்கு அஞ்சிக்கொண்டிருந்தீர். ஆனால், அல்லாஹ்தான் நீர் அஞ்சுவதற்கு அதிகத் தகுதியுடையவன்” எனும் (33:37ஆவது) வசனத்தொடர்
4787. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘(நபியே!) நீர் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உமது உள்ளத்தில் மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர்...” எனும் இந்த (33:37ஆவது) வசனம் (நபி (ஸல்) அவர்களின் அத்தை மகளான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) மற்றும் (நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றது.10
அத்தியாயம் : 65
4787. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
‘(நபியே!) நீர் (அந்நேரத்தில்) அல்லாஹ் வெளிப்படுத்த நாடியிருந்த விஷயத்தை உமது உள்ளத்தில் மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர்...” எனும் இந்த (33:37ஆவது) வசனம் (நபி (ஸல்) அவர்களின் அத்தை மகளான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) மற்றும் (நபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகனான) ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்கள் தொடர்பாக அருளப்பெற்றது.10
அத்தியாயம் : 65
4788. حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ هِشَامٌ حَدَّثَنَا عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كُنْتُ أَغَارُ عَلَى اللاَّتِي وَهَبْنَ أَنْفُسَهُنَّ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَقُولُ أَتَهَبُ الْمَرْأَةُ نَفْسَهَا فَلَمَّا أَنْزَلَ اللَّهُ تَعَالَى {تُرْجِئُ مَنْ تَشَاءُ مِنْهُنَّ وَتُؤْوِي إِلَيْكَ مَنْ تَشَاءُ وَمَنِ ابْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ فَلاَ جُنَاحَ عَلَيْكَ} قُلْتُ مَا أُرَى رَبَّكَ إِلاَّ يُسَارِعُ فِي هَوَاكَ.
பாடம்: 7
‘‘(நபியே! உம்முடைய துணைவி யரான) அவர்களில் நீர் விரும்பி யவர்களை (விரும்பும் காலம் வரை) ஒதுக்கிவைக்கலாம். நீர் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் ஒதுக்கிவைத்தவர்களில் யாரை விரும்புகிறீரோ அவர்களை (மறுபடியும்) உம்முடன் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உம்மீது குற்றம் ஏதுமில்லை” எனும் (33:51ஆவது) வசனத்தொடர்.11
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துர்ஜீ’ எனும் சொல்லுக்கு ‘ஒதுக்கி வைக்கலாம்’ என்பது பொருள். (இதன் ஏவல் வினைச்சொல்லும், 7:111 மற்றும் 26:36 ஆகிய வசனங்களின் மூலத்தி லுள்ளதுமான) ‘அர்ஜிஹ்’ எனும் சொல்லுக்கு ‘அவரை விட்டுப்பிடி’ என்பது பொருள்.
4788. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக (மணக்கொடையின்றி) வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், ‘‘ஒரு பெண் தன்னைத் தானே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?” என்று சொல்லிக்கொண்டேன்.
‘‘(நபியே! உம்முடைய துணைவியரான) அவர்களில் நீர் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம். நீர் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் ஒதுக்கிவைத்தவர்களில் யாரை விரும்புகிறீரோ அவர்களை (மறுபடியும்) உம்முடன் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உம்மீது குற்றம் ஏதுமில்லை” எனும் (33:51ஆவது) இறைவசனத்தை அல்லாஹ் அருளியபோது, நான் ‘‘உங்கள் இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாகப் பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்” என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.12
அத்தியாயம் : 65
4788. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தங்களையே கொடையாக (மணக்கொடையின்றி) வழங்க முன்வந்த பெண்களைப் பற்றி நான் ரோஷம் கொண்டிருந்தேன். மேலும் நான், ‘‘ஒரு பெண் தன்னைத் தானே (ஓர் ஆணுக்கு) கொடையாக வழங்கவும் செய்வாளா?” என்று சொல்லிக்கொண்டேன்.
‘‘(நபியே! உம்முடைய துணைவியரான) அவர்களில் நீர் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம். நீர் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் ஒதுக்கிவைத்தவர்களில் யாரை விரும்புகிறீரோ அவர்களை (மறுபடியும்) உம்முடன் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உம்மீது குற்றம் ஏதுமில்லை” எனும் (33:51ஆவது) இறைவசனத்தை அல்லாஹ் அருளியபோது, நான் ‘‘உங்கள் இறைவன் உங்கள் விருப்பத்தை விரைவாகப் பூர்த்தி செய்வதையே நான் பார்க்கிறேன்” என்று (நபியவர்களிடம்) சொன்னேன்.12
அத்தியாயம் : 65
4789. حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمٌ الأَحْوَلُ، عَنْ مُعَاذَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَسْتَأْذِنُ فِي يَوْمِ الْمَرْأَةِ مِنَّا بَعْدَ أَنْ أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ {تُرْجِئُ مَنْ تَشَاءُ مِنْهُنَّ وَتُؤْوِي إِلَيْكَ مَنْ تَشَاءُ وَمَنِ ابْتَغَيْتَ مِمَّنْ عَزَلْتَ فَلاَ جُنَاحَ عَلَيْكَ}. فَقُلْتُ لَهَا مَا كُنْتِ تَقُولِينَ قَالَتْ كُنْتُ أَقُولُ لَهُ إِنْ كَانَ ذَاكَ إِلَىَّ فَإِنِّي لاَ أُرِيدُ يَا رَسُولَ اللَّهِ أَنْ أُوثِرَ عَلَيْكَ أَحَدًا. تَابَعَهُ عَبَّادُ بْنُ عَبَّادٍ سَمِعَ عَاصِمًا.
பாடம்: 7
‘‘(நபியே! உம்முடைய துணைவி யரான) அவர்களில் நீர் விரும்பி யவர்களை (விரும்பும் காலம் வரை) ஒதுக்கிவைக்கலாம். நீர் விரும்பியவர்களை (விரும்பும் காலம்வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் ஒதுக்கிவைத்தவர்களில் யாரை விரும்புகிறீரோ அவர்களை (மறுபடியும்) உம்முடன் சேர்த்துக்கொள்ளலாம். இதனால் உம்மீது குற்றம் ஏதுமில்லை” எனும் (33:51ஆவது) வசனத்தொடர்.11
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துர்ஜீ’ எனும் சொல்லுக்கு ‘ஒதுக்கி வைக்கலாம்’ என்பது பொருள். (இதன் ஏவல் வினைச்சொல்லும், 7:111 மற்றும் 26:36 ஆகிய வசனங்களின் மூலத்தி லுள்ளதுமான) ‘அர்ஜிஹ்’ எனும் சொல்லுக்கு ‘அவரை விட்டுப்பிடி’ என்பது பொருள்.
4789. முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘‘(நபியே! உங்கள் துணைவி யரான) அவர்களில் நீர் விரும்பி யவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம். நீர் விரும்பிய வர்களை (விரும்பும் காலம்வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீரோ அவர்களை (மறுபடியும்) உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உம்மீது குற்றம் ஏதுமில்லை” எனும் (33:51 ஆவது) இறைவசனம் அருளப்பட்ட பிறகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் ஒரு மனைவியின் நாளில் மற்றொரு மனைவியிடம் செல்ல விரும்பினால், அந்நாளை விட்டுக்கொடுக்கும்படி அனுமதி கேட்பார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
நான், ‘‘அதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! (வேறொரு மனைவிக்காக எனது நாளை விட்டுக்கொடுக்கும்படி,) நீங்கள் என்னிடம் அனுமதி கேட்பதாயிருந்தால், நான் யாருக்காகவும் தங்களை விட்டுக்கொடுக்க விரும்பமாட்டேன்’ என்று சொல்வேன்” என்றார்கள்.13
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4789. முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
‘‘(நபியே! உங்கள் துணைவி யரான) அவர்களில் நீர் விரும்பி யவர்களை (விரும்பும் காலம்வரை) ஒதுக்கிவைக்கலாம். நீர் விரும்பிய வர்களை (விரும்பும் காலம்வரை) உம்முடன் இருக்க வைக்கலாம். நீர் ஒதுக்கி வைத்தவர்களில் யாரை விரும்புகிறீரோ அவர்களை (மறுபடியும்) உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் உம்மீது குற்றம் ஏதுமில்லை” எனும் (33:51 ஆவது) இறைவசனம் அருளப்பட்ட பிறகும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் ஒரு மனைவியின் நாளில் மற்றொரு மனைவியிடம் செல்ல விரும்பினால், அந்நாளை விட்டுக்கொடுக்கும்படி அனுமதி கேட்பார்கள்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
நான், ‘‘அதற்கு நீங்கள் என்ன சொல்வீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! (வேறொரு மனைவிக்காக எனது நாளை விட்டுக்கொடுக்கும்படி,) நீங்கள் என்னிடம் அனுமதி கேட்பதாயிருந்தால், நான் யாருக்காகவும் தங்களை விட்டுக்கொடுக்க விரும்பமாட்டேன்’ என்று சொல்வேன்” என்றார்கள்.13
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4790. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، يَدْخُلُ عَلَيْكَ الْبَرُّ وَالْفَاجِرُ، فَلَوْ أَمَرْتَ أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ بِالْحِجَابِ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ الْحِجَابِ.
பாடம்: 8
‘‘இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப் பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டாலும், அப்போதும்கூட உணவு தயாரா வதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக, உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. இதை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.
நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்க வேண்டுமென்றால், திரைக்குப் பின்னாóருந்து கேளுங்கள். உங்களுடையவும் அவர்களுடையவும் உள்ளங்களின் தூய்மைக்கு இதுவே ஏற்ற முறையாகும்.
அல்லாஹ்வுடைய தூதருக்குத் தொல்லை தருவது உங்களுக்குத் தகாது. அவருக்குப் பின்னர் அவருடைய துணைவியரை நீங்கள் மணந்துகொள்வதும் ஒருபோதும் கூடாது. அவ்வாறு செய்வது அல்லாஹ்விடம் நிச்சயமாகப் பெரும் பாவமாகும்” எனும் (33:53ஆவது) இறைவசனம்
(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இனாஹு’ எனும் சொல்லுக்கு ‘தயாராகுதல்’ என்று பொருள். அனா, யஃனீ, அனாத்தன் (என இதன் வாய்பாடு அமையும்.)
‘‘உங்களுக்குத் தெரியுமா? அது (மறுமை நாள்), சமீபமாகவும் இருக்கக் கூடும்” எனும் (33:63ஆவது) வசனத் தொடர்.
(இவ்வசனத்தில் ‘சமீபமாக’ என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) ‘கரீப்’ எனும் சொல் அடைமொழியாக இருப்பின் (அடைமொழிக்குரிய ‘சாஅத்’ எனும் பெண்பால் வார்த்தைக்கேற்ப) ‘கரீபத்’ என்றே வரவேண்டும். அதை இடப்பெயர், அல்லது காலப்பெயராகக் கருதுகையில் ‘கரீப் என (ஆண்பாலாகவே) வரும். இந்நிலையில் ஆண்பால், பெண்பால், ஒருமை, இருமை, பன்மை அனைத்திலும் ஒரே மாதிரியாகவே சொல் அமையும்.
4790. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். ஆகவே, தாங்கள் (தங்களுடைய துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான்.14
அத்தியாயம் : 65
4790. உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தங்களிடம் நல்லவரும் கெட்டவரும் வருகின்றனர். ஆகவே, தாங்கள் (தங்களுடைய துணைவியரான) இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரை பர்தா அணியும்படி கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ் பர்தா (சட்டம்) தொடர்பான வசனத்தை அருளினான்.14
அத்தியாயம் : 65