4523. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ، تَرْفَعُهُ قَالَ "" أَبْغَضُ الرِّجَالِ إِلَى اللَّهِ الأَلَدُّ الْخَصِمُ "". وَقَالَ عَبْدُ اللَّهِ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنِي ابْنُ جُرَيْجٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 37 அவன் (எதற்கெடுத்தாலும்) கடுமையாகச் சண்டைபிடிக்கும் வழக்கமுடையவன் (எனும் 2:204ஆவது வசனத்தொடர்) “(2:205ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “நஸ்ல்' எனும் சொல்லுக்கு “உயிரினம்' என்பது பொருள்” என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
4523. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

“அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் (எதற்கெடுத் தாலும்) கடுமையாகச் சண்டைபிடிப்ப வனேயாவான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.57

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4524. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ، يَقُولُ قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ {حَتَّى إِذَا اسْتَيْأَسَ الرُّسُلُ وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِبُوا} خَفِيفَةً، ذَهَبَ بِهَا هُنَاكَ، وَتَلاَ {حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلاَ إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ} فَلَقِيتُ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ فَذَكَرْتُ لَهُ ذَلِكَ فَقَالَ
பாடம் : 38 உங்களுக்குமுன் சென்றுவிட்ட (இறைநம்பிக்கை கொண்ட)வர் களின் (சோதனையான) நிலை உங்களுக்கு நேராமலேயே நீங்கள் சொர்க்கம் புகுந்துவிடலாம் என நினைத்தீர்களா? அவர்களைத் துன்பங்களும் துயரங்களும் ஆட் கொண்டன. இறைத்தூதரும் அவருடன் இறைநம்பிக்கை கொண்டவர்களும் “அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்?' என்று கேட்கின்ற அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். “இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக அண்மையில் இருக்கிறது” (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது எனும் 2:214ஆவது இறைவசனம்)
4524. இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(இறைமறுப்பாளர்கள் இனி இறைநம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்று) இறைத் தூதர்கள் நிராசையடைந்தார்கள்; மேலும், தங்களிடம் (இறையுதவி வரும் என்று) பொய்யுரைக்கப்பட்டது என (நம்பிக்கை கொண்ட மக்களும்கூட) கருதலானார்கள். இந்நிலையில் நம்முடைய உதவி அவர்களுக்கு வந்தது” எனும் (12:110ஆவது) வசனத்தில் (“குஃத்திபூ' -இறைத்தூதர்கள் தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோம் என்று கருதலானார்கள்- என்று வாசிக்காமல்) “குஃதிபூ' (தங்களிடம் பொய்யுரைக் கப்பட்டது என மக்கள் கருதலானார்கள்”) என்று வாசித்துவிட்டு அவ்வசனத்திலிருந்து, “இறைத்தூதரும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும் அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்? என்று கேட்கின்ற அளவுக்கு அலைக்கழிக்கப்பட்டார்கள். “இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக அண்மையில் இருக்கிறது' (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது”) எனும் (2:214ஆவது) வசனத்திற்குச் சென்று ஓதிக்காட்டினார்கள்.58

பிறகு நான் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்களைச் சந்தித்து, அவர்களிடம் (குஃதிபூ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள்) அந்த வசனத்தை ஓதியது பற்றிச் சொன்னேன்.


அத்தியாயம் : 65
4525. قَالَتْ عَائِشَةُ مَعَاذَ اللَّهِ، وَاللَّهِ مَا وَعَدَ اللَّهُ رَسُولَهُ مِنْ شَىْءٍ قَطُّ إِلاَّ عَلِمَ أَنَّهُ كَائِنٌ قَبْلَ أَنْ يَمُوتَ، وَلَكِنْ لَمْ يَزَلِ الْبَلاَءُ بِالرُّسُلِ حَتَّى خَافُوا أَنْ يَكُونَ مَنْ مَعَهُمْ يُكَذِّبُونَهُمْ، فَكَانَتْ تَقْرَؤُهَا {وَظَنُّوا أَنَّهُمْ قَدْ كُذِّبُوا} مُثَقَّلَةً.
பாடம் : 38 உங்களுக்குமுன் சென்றுவிட்ட (இறைநம்பிக்கை கொண்ட)வர் களின் (சோதனையான) நிலை உங்களுக்கு நேராமலேயே நீங்கள் சொர்க்கம் புகுந்துவிடலாம் என நினைத்தீர்களா? அவர்களைத் துன்பங்களும் துயரங்களும் ஆட் கொண்டன. இறைத்தூதரும் அவருடன் இறைநம்பிக்கை கொண்டவர்களும் “அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்?' என்று கேட்கின்ற அளவுக்கு அவர்கள் அலைக்கழிக்கப்பட்டார்கள். “இதோ! அல்லாஹ்வின் உதவி நிச்சயமாக அண்மையில் இருக்கிறது” (என அவர்களுக்குச் சமாதானம் கூறப்பட்டது எனும் 2:214ஆவது இறைவசனம்)
4525. அதற்கு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் காப்பாற்றட்டும்! அல்லாஹ்வின் மீதாணை யாக! அல்லாஹ், தன் தூதர் எவருக்கும் ஏதேனும் ஒரு வாக்குறுதி அளித்தால் அது தம் இறப்புக்குமுன் நடந்தே தீரும் என அத்தூதர் அறியாமல் இருந்ததில்லை.

ஆனால், இறைத்தூதர்களுக்குத் தொடர்ந்து சோதனைகள் வந்துகொண்டே யிருந்தன. எந்த அளவுக்கென்றால், தம்முடன் இருப்பவர்கள் தம்மைப் பொய்யாக்க முற்படுவார்களோ என அந்த இறைத்தூதர்கள் அஞ்சும் அளவுக்கு அவை தொடர்ந்துவந்தன” என்று சொன் னார்கள்.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள், “வ ழன்னூ அன்னஹும் கத் குஃத்திபூ' என்று (குஃதிபூ என்று அழுத்தக் குறியின்றி சொல்லாமல் “குஃத்திபூ' என்று) அழுத்தக் குறியோடுதான் ஓதிவந்தார்கள்.59

அத்தியாயம் : 65
4526. حَدَّثَنَا إِسْحَاقُ، أَخْبَرَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنْ نَافِعٍ، قَالَ كَانَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ إِذَا قَرَأَ الْقُرْآنَ لَمْ يَتَكَلَّمْ حَتَّى يَفْرُغَ مِنْهُ، فَأَخَذْتُ عَلَيْهِ يَوْمًا، فَقَرَأَ سُورَةَ الْبَقَرَةِ حَتَّى انْتَهَى إِلَى مَكَانٍ قَالَ تَدْرِي فِيمَا أُنْزِلَتْ. قُلْتُ لاَ. قَالَ أُنْزِلَتْ فِي كَذَا وَكَذَا. ثُمَّ مَضَى.
பாடம் : 39 “உங்கள் மனைவியர் உங்களுக்குரிய “விளைநிலம்' ஆவர். ஆகவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள். இன்னும் உங்களு(டைய எதிர்கால நலன்களு)க்காக ஆயத்தம் செய்துகொள்ளுங்கள் மேலும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவனை நீங்கள் சந்திப்பவர்கள் தான் என்பதை நன்கு அறிந்துகொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர் களுக்கு நற்செய்தி கூறுங்கள்” எனும் (2:223ஆவது) இறைவசனம்
4526. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் குர்ஆனை ஓதினால் அதை ஓதி முடிக்கும்வரை (வேறு எதுவும்) பேசமாட்டார்கள். ஒருநாள் (அவர்கள் மனப்பாடமாக குர்ஆன் ஓதிக்கொண்டிருந்தபோது) அவர் களுக்காக நான் (குர்ஆன் பிரதியை)ப்பிடித்துக்கொண்டேன். அவர்கள் “அல்பகரா' அத்தியாயத்தை ஓதியபடி ஓரிடத்தில் நிறுத்தி, “இந்த வசனம் எது தொடர்பாக அருளப்பட்டது என்பது உமக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.

நான், “தெரியாது' என்றேன். அதற்கு அவர்கள், “இன்ன இன்ன விஷயம் தொடர்பாக அருளப்பட்டது” என்று கூறி விட்டுப் பிறகு தொடர்ந்து ஓதினார்கள்.60


அத்தியாயம் : 65
4527. وَعَنْ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، {فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ} قَالَ يَأْتِيهَا فِي. رَوَاهُ مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ أَبِيهِ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ.
பாடம் : 39 “உங்கள் மனைவியர் உங்களுக்குரிய “விளைநிலம்' ஆவர். ஆகவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள். இன்னும் உங்களு(டைய எதிர்கால நலன்களு)க்காக ஆயத்தம் செய்துகொள்ளுங்கள் மேலும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவனை நீங்கள் சந்திப்பவர்கள் தான் என்பதை நன்கு அறிந்துகொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர் களுக்கு நற்செய்தி கூறுங்கள்” எனும் (2:223ஆவது) இறைவசனம்
4527. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

“ஆகவே நீங்கள் விரும்பிய முறையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள்” எனும் (2:223 ஆவது) வசனத்திற்கு விளக்கமளிக்கையில் இப்னு உமர் (ரலி) அவர்கள், “மனைவியிடம் அவளது...கணவன் புணரலாம்” என்று குறிப்பிட்டார்கள்.61

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 65
4528. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ الْمُنْكَدِرِ، سَمِعْتُ جَابِرًا ـ رضى الله عنه ـ قَالَ كَانَتِ الْيَهُودُ تَقُولُ إِذَا جَامَعَهَا مِنْ وَرَائِهَا جَاءَ الْوَلَدُ أَحْوَلَ. فَنَزَلَتْ {نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ}
பாடம் : 39 “உங்கள் மனைவியர் உங்களுக்குரிய “விளைநிலம்' ஆவர். ஆகவே, நீங்கள் விரும்பும் வகையில் உங்கள் விளைநிலத்திற்குச் செல்லுங்கள். இன்னும் உங்களு(டைய எதிர்கால நலன்களு)க்காக ஆயத்தம் செய்துகொள்ளுங்கள் மேலும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அவனை நீங்கள் சந்திப்பவர்கள் தான் என்பதை நன்கு அறிந்துகொள்ளுங்கள். (நபியே!) நம்பிக்கையாளர் களுக்கு நற்செய்தி கூறுங்கள்” எனும் (2:223ஆவது) இறைவசனம்
4528. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் தம் மனைவியிடம் பின்புறத்திலிருந்து உடலுறவு கொண்டால் குழந்தை மாறுகண் கொண்டதாகப் பிறக்கும் என்று யூதர்கள் சொல்லிவந்தார்கள். எனவே, “உங்கள் பெண்கள் உங்களுக்குரிய “விளைநிலம்' ஆவர். ஆகவே, உங்கள் விளைநிலத்திற்கு நீங்கள் விரும்பியபடி செல்லுங்கள்” எனும் (2:223ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.62

அத்தியாயம் : 65
4529. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ رَاشِدٍ، حَدَّثَنَا الْحَسَنُ، قَالَ حَدَّثَنِي مَعْقِلُ بْنُ يَسَارٍ، قَالَ كَانَتْ لِي أُخْتٌ تُخْطَبُ إِلَىَّ. وَقَالَ إِبْرَاهِيمُ عَنْ يُونُسَ، عَنِ الْحَسَنِ، حَدَّثَنِي مَعْقِلُ بْنُ يَسَارٍ،. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ الْحَسَنِ، أَنَّ أُخْتَ، مَعْقِلِ بْنِ يَسَارٍ طَلَّقَهَا زَوْجُهَا، فَتَرَكَهَا حَتَّى انْقَضَتْ عِدَّتُهَا، فَخَطَبَهَا فَأَبَى مَعْقِلٌ، فَنَزَلَتْ {فَلاَ تَعْضُلُوهُنَّ أَنْ يَنْكِحْنَ أَزْوَاجَهُنَّ}.
பாடம் 40 நீங்கள் (உங்களுடைய) மனைவி யரை மணவிலக்குச் செய்து, அவர்கள் தங்களின் (“இத்தா') தவணையின் இறுதியை அடைந்து விட்டால், தங்களின் (பழைய) கணவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் அவர்கள் மணந்து கொள்வதை (உறவினர்களே!) நீங்கள் தடுக்க வேண்டாம் (எனும் 2:232ஆவது வசனத்தொடர்)
4529. மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்குச் சகோதரி ஒருவர் இருந்தார். என்னிடம் அவரைப் பெண்கேட்டு வந்தனர்.

ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மஅகில் பின் யசார் (ரலி) அவர்களின் சகோதரியை அவருடைய கணவர் மணவிலக்குச் செய்து “இத்தா' காலம் கழியும்வரையிலும் (திரும்ப அழைத்துக் கொள்ளாமல் அப்படியே) விட்டுவிட்டார்.

பிறகு, மீண்டும் அவரைப் பெண் பேச (விவாகரத்துச் செய்த கணவர்) வந்தார். (சகோதரிக்கு விருப்பமிருந்தும்) மஅகில் (ரலி) அவர்கள் (அவரை மீண்டும் (அவருடைய கணவருக்கே) மணமுடித்துக் கொடுக்க) மறுத்துவிட்டார்கள்.

அப்போதுதான், “அவர்கள் தங்களின் (பழைய) கணவர்களை மணந்துகொள்வதை நீங்கள் தடுக்க வேண்டாம்” எனும் (2:232ஆவது) வசனம் அருளப்பெற்றது.63

அத்தியாயம் : 65
4530. حَدَّثَنِي أُمَيَّةُ بْنُ بِسْطَامٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ حَبِيبٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ ابْنُ الزُّبَيْرِ قُلْتُ لِعُثْمَانَ بْنِ عَفَّانَ {وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا} قَالَ قَدْ نَسَخَتْهَا الآيَةُ الأُخْرَى فَلِمَ تَكْتُبُهَا أَوْ تَدَعُهَا قَالَ يَا ابْنَ أَخِي، لاَ أُغَيِّرُ شَيْئًا مِنْهُ مِنْ مَكَانِهِ.
பாடம் 41 உங்களில் எவரேனும் மனைவியரை விட்டுவிட்டு இறந்துபோயிருந் தால், அவர்(களின் மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள். அவர்கள் தங்களது (காத்திருப்புத்) தவணையின் இறுதியை எட்டிவிட்டால் தங்கள் விஷயத்தில் அவர்கள் முறையோடு செய்துகொள்கின்ற (அலங்காரம் முதலான)வற்றில் (உறவினர்களே! நீங்கள் தலையிடாமல் இருப்பதால்) உங்கள்மீது எவ்விதக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (எனும் 2:234ஆவது இறைவசனம்) (2:237ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “யஅஃபூன' (விட்டுக் கொடுத்தால்) எனும் சொல்லுக்கு “அன்பளிப்பாகக் கொடுத்தால்' என்று பொருள்.
4530. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம், “உங்களில் மனைவியரை விட்டுவிட்டு இற(க்கும் தறுவாயில் இரு)ப்பவர்கள், தம் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவிக்கட்டும்! ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டால் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் வல்லமை மிக்கவனும் விவேகமிக்கவனும் ஆவான்” எனும் (2:240ஆவது இறைவசனம் குறித்து இந்த) இறைவசனத்(தின் சட்டத்)தை (முந்தைய) மற்றோர் இறைவசனம் (2:234) மாற்றிவிட்டதே! இதை “ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?' அல்லது “இதை ஏன் (நீக்காமல் குர்ஆனில் அப்படியே) விட்டுவைக்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.64


அத்தியாயம் : 65
4531. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا شِبْلٌ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، {وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا} قَالَ كَانَتْ هَذِهِ الْعِدَّةُ تَعْتَدُّ عِنْدَ أَهْلِ زَوْجِهَا وَاجِبٌ، فَأَنْزَلَ اللَّهُ {وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا وَصِيَّةً لأَزْوَاجِهِمْ مَتَاعًا إِلَى الْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنْفُسِهِنَّ مِنْ مَعْرُوفٍ} قَالَ جَعَلَ اللَّهُ لَهَا تَمَامَ السَّنَةِ سَبْعَةَ أَشْهُرٍ وَعِشْرِينَ لَيْلَةً وَصِيَّةً، إِنْ شَاءَتْ سَكَنَتْ فِي وَصِيَّتِهَا، وَإِنْ شَاءَتْ خَرَجَتْ، وَهْوَ قَوْلُ اللَّهِ تَعَالَى {غَيْرَ إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ} فَالْعِدَّةُ كَمَا هِيَ وَاجِبٌ عَلَيْهَا. زَعَمَ ذَلِكَ عَنْ مُجَاهِدٍ. وَقَالَ عَطَاءٌ قَالَ ابْنُ عَبَّاسٍ نَسَخَتْ هَذِهِ الآيَةُ عِدَّتَهَا عِنْدَ أَهْلِهَا، فَتَعْتَدُّ حَيْثُ شَاءَتْ، وَهْوَ قَوْلُ اللَّهِ تَعَالَى {غَيْرَ إِخْرَاجٍ}. قَالَ عَطَاءٌ إِنْ شَاءَتِ اعْتَدَّتْ عِنْدَ أَهْلِهِ وَسَكَنَتْ فِي وَصِيَّتِهَا، وَإِنْ شَاءَتْ خَرَجَتْ لِقَوْلِ اللَّهِ تَعَالَى {فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ}. قَالَ عَطَاءٌ ثُمَّ جَاءَ الْمِيرَاثُ فَنَسَخَ السُّكْنَى فَتَعْتَدُّ حَيْثُ شَاءَتْ، وَلاَ سُكْنَى لَهَا. وَعَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ حَدَّثَنَا وَرْقَاءُ عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ مُجَاهِدٍ بِهَذَا. وَعَنِ ابْنِ أَبِي نَجِيحٍ عَنْ عَطَاءٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ نَسَخَتْ هَذِهِ الآيَةُ عِدَّتَهَا فِي أَهْلِهَا، فَتَعْتَدُّ حَيْثُ شَاءَتْ لِقَوْلِ اللَّهِ {غَيْرَ إِخْرَاجٍ} نَحْوَهُ.
பாடம் 41 உங்களில் எவரேனும் மனைவியரை விட்டுவிட்டு இறந்துபோயிருந் தால், அவர்(களின் மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள். அவர்கள் தங்களது (காத்திருப்புத்) தவணையின் இறுதியை எட்டிவிட்டால் தங்கள் விஷயத்தில் அவர்கள் முறையோடு செய்துகொள்கின்ற (அலங்காரம் முதலான)வற்றில் (உறவினர்களே! நீங்கள் தலையிடாமல் இருப்பதால்) உங்கள்மீது எவ்விதக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (எனும் 2:234ஆவது இறைவசனம்) (2:237ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “யஅஃபூன' (விட்டுக் கொடுத்தால்) எனும் சொல்லுக்கு “அன்பளிப்பாகக் கொடுத்தால்' என்று பொருள்.
4531. அப்துல்லாஹ் பின் அபீநஜீஹ் அல்மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“உங்களில் எவரேனும் மனைவியரை விட்டுவிட்டு இறந்துபோயிருந்தால், அவர்(களுடைய மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள்” (எனும் 2:234ஆவது வசனத்தின் விளக்கத்தில்) முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

(கணவன் இறந்துபோன) அந்தப்பெண் (நான்கு மாதம், பத்து நாட்கள் காத்திருத்தல் எனும்) இந்த “இத்தா'வைத் தம் கணவனு டைய குடும்பத்தாரிடம் மேற்கொள்வது கட்டாயமாக இருந்தது.

இந்நிலையில், “உங்களில் மனைவியரை விட்டுவிட்டு இற(க்கும் தறுவாயில்இரு)ப்பவர்கள் தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதிவிருப்பம் தெரிவிப்பார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் கிடையாது.” எனும் (2:240 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

(இதன் மூலம்) ஒரு முழு ஆண்டில் (நான்கு மாதம், பத்து நாட்கள் போக மீதியுள்ள) ஏழு மாதம், இருபது நாட்களை(க் கணவனின்) இறுதி விருப்ப(த்தை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்ப)மாக அல்லாஹ் ஆக்கினான். அவள் விரும்பினால் (அந்த ஏழு மாதம் இருபது நாட்களில்) தம் கணவனின் இறுதி விருப்பப்படி (கணவனின் வீட்டிலேயே) தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் (நான்கு மாதம் பத்து நாட்களுக்குப்பின்) வெளியேறிக்கொள்ளலாம்.

இதைத்தான், “வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம்வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதிவிருப்பம் தெரிவிப்பார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் கிடையாது” என்று இவ்வசனம் (2:240) குறிப்பிடுகின்றது.

ஆக, (நான்கு மாதம் பத்து நாட்கள் எனும்) “இத்தா' கால வரம்பு கணவனை இழந்த கைம்பெண்ணின் மீது கட்டாயமானதே ஆகும்.65

(ஆகவே, 2:234ஆவது வசனம், 2:240ஆவது வசனத்தை மாற்றிடவில்லை என்ற) இந்தக் கருத்தையே முஜாஹித் (ரஹ்) அவர்களிடமிருந்து இப்னு அபீநஜீஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இந்த வசனம் (2:240), அவள் தன்னுடைய கணவனது வீட்டில்தான் “இத்தா' இருக்க வேண்டும் என்பதை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் “இத்தா' இருப்பாள். இதையே, “(தானாக விரும்பி வெளியேறினால் தவிர, கட்டாயப்படுத்தி) வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம்வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதி விருப்பம் தெரிவிப்பார்களாக” எனும் இந்த இறை வசனத்தொடர் குறிக்கின்றது என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

(இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்தைச் சற்றுத் தெளிவுபடுத்தும் விதத்தில்) அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அவள் விரும்பினால் தன் கணவனின் வீட்டில் “இத்தா' இருப்பாள். தனக்காகத் தெரிவிக்கப்பட்ட இறுதி விருப்பத்தில் கண்டுள்ளபடி தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் வெளியேறி (வேறு எங்கேனும் தங்கி)க்கொள்வாள். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: ஆயினும் அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றைச் செய்துகொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை.

தொடர்ந்து அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு சொத்துரிமைச் சட்டம் (குறித்த 4:12ஆவது வசனம்) வந்து, தங்கும் வசதி (செய்து தர கணவன் இறுதி விருப்பம் தெரிவிக்க வேண்டுமென்ற முறை)யை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் “இத்தா' இருக்கலாம். அவளுக்குத் தங்கும் வசதி செய்து கொடுக்க வேண்டியது (கணவனின் உறவினர்களுக்குக் கடமையாக) இல்லை.66

இதையே முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாகவும் ஓர் அறிவிப்பாளர்தொடர் வழியாக இப்னு அபீநஜீஹ் (ரஹ்) அவர் களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடமிருந்து அதாஉ (ரஹ்) அவர்கள் வழியாக முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவித்த மேற்சொன்ன கருத்தைப் போலவே அதாஉ (ரஹ்) அவர்கள் வழியாக இப்னு அபீநஜீஹ் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 65
4532. حَدَّثَنَا حِبَّانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، قَالَ جَلَسْتُ إِلَى مَجْلِسٍ فِيهِ عُظْمٌ مِنَ الأَنْصَارِ وَفِيهِمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى، فَذَكَرْتُ حَدِيثَ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ فِي شَأْنِ سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ، فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ وَلَكِنَّ عَمَّهُ كَانَ لاَ يَقُولُ ذَلِكَ. فَقُلْتُ إِنِّي لَجَرِيءٌ إِنْ كَذَبْتُ عَلَى رَجُلٍ فِي جَانِبِ الْكُوفَةِ. وَرَفَعَ صَوْتَهُ، قَالَ ثُمَّ خَرَجْتُ فَلَقِيتُ مَالِكَ بْنَ عَامِرٍ أَوْ مَالِكَ بْنَ عَوْفٍ قُلْتُ كَيْفَ كَانَ قَوْلُ ابْنِ مَسْعُودٍ فِي الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا وَهْىَ حَامِلٌ فَقَالَ قَالَ ابْنُ مَسْعُودٍ أَتَجْعَلُونَ عَلَيْهَا التَّغْلِيظَ، وَلاَ تَجْعَلُونَ لَهَا الرُّخْصَةَ لَنَزَلَتْ سُورَةُ النِّسَاءِ الْقُصْرَى بَعْدَ الطُّولَى. وَقَالَ أَيُّوبُ عَنْ مُحَمَّدٍ لَقِيتُ أَبَا عَطِيَّةَ مَالِكَ بْنَ عَامِرٍ.
பாடம் 41 உங்களில் எவரேனும் மனைவியரை விட்டுவிட்டு இறந்துபோயிருந் தால், அவர்(களின் மனைவி)கள் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள். அவர்கள் தங்களது (காத்திருப்புத்) தவணையின் இறுதியை எட்டிவிட்டால் தங்கள் விஷயத்தில் அவர்கள் முறையோடு செய்துகொள்கின்ற (அலங்காரம் முதலான)வற்றில் (உறவினர்களே! நீங்கள் தலையிடாமல் இருப்பதால்) உங்கள்மீது எவ்விதக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (எனும் 2:234ஆவது இறைவசனம்) (2:237ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “யஅஃபூன' (விட்டுக் கொடுத்தால்) எனும் சொல்லுக்கு “அன்பளிப்பாகக் கொடுத்தால்' என்று பொருள்.
4532. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் முக்கியமானவர்கள் பலர் அமர்ந்திருந்த அவையொன்றில் நான் அமர்ந்தேன். அவர்களிடையே அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா (ரஹ்) அவர்களும் இருந்தார்கள். அப்போது நான், சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் (ரலி) தொடர்பான அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்களின் ஹதீஸை எடுத்துரைத்தேன்.67

அப்போது அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா (ரஹ்) அவர்கள், “அப்துல்லாஹ் பின் உத்பாவின் தந்தையுடைய சகோதரர் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்கள்) இதை ஏற்றுக்கொண்டதில்லையே” என்று சொன்னார்.

உடனே நான் உரத்த குரலில், “கூஃபா நகரத்திற்கு அருகிலுள்ள (அப்துல்லாஹ் பின் உத்பா என்ற) மனிதரின் தவற்றை நான் வெளிப்படுத்துகிறேன் என்றால் நான் மிகக் துணிச்சலுடையவன்தான்” என்று சொன்னேன்.68

பிறகு நான் (அந்த அவையிலிருந்து) வெளியேறிவிட்டேன். (செல்லும் வழியில்) “மாலிக் பின் ஆமிர்' அல்லது “மாóக் பின் அவ்ஃப்' (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். (அவரிடம்) நான், “தான் கர்ப்பிணியாயிருக்க, தன்னைவிட்டு (கணவன்) இறந்துவிட்ட பெண் விஷயத்தில் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் கருத்து என்னவாக இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர், “இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “(கணவன் இறந்துவிட்ட கர்ப்பிணியான) அவளுக்குச் சலுகை அளிக்காமல் கடும் சிரமத்தை (மட்டும்) அளிக்கிறீர்களா?' என்று கேட்டார்கள். (இந்நிலையில்தான்) பெண்கள் தொடர்பான (சட்டங்கள் இடம்பெற்றுள்ள “அல்பகரா' எனும்) பெரிய அத்தியாயத்திற்குப் பிறகு (“அத்தலாக்' எனும்) சிறிய அத்தியாயம் அருளப்பெற்றது” என்று கூறினார்கள்.69

மற்றோர் அறிவிப்பில் முஹம்மத் பின் சீரின் (ரஹ்) அவர்கள், “(வழியில்) நான் அபூஅதிய்யா மாலிக் பின் ஆமிர் அவர்களைச் சந்தித்தேன்” என்று (சந்தேக மின்றி ஒருவர் பெயரை மட்டும்) கூறியதாக வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4533. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم. حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ قَالَ هِشَامٌ حَدَّثَنَا قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ عَنْ عَبِيدَةَ عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ يَوْمَ الْخَنْدَقِ " حَبَسُونَا عَنْ صَلاَةِ الْوُسْطَى حَتَّى غَابَتِ الشَّمْسُ مَلأَ اللَّهُ قُبُورَهُمْ وَبُيُوتَهُمْ أَوْ أَجْوَافَهُمْ ـ شَكَّ يَحْيَى ـ نَارًا ".
பாடம் : 42 (இறைநம்பிக்கை கொண்டவர் களே!) அனைத்துத் தொழுகை களையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள் (எனும் 2:238ஆவது வசனத்தொடர்)
4533. அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அகழ்ப் போரின்போது நபி (ஸல்) அவர்கள், “நம்மை நடுத்தொழுகையைத் தொழ விடாமல் சூரியன் மறையும்வரை எதிரிகள் தடுத்துவிட்டார்கள். அவர்களின் புதைகுழிகளையும் “வீடுகளையும்' அல்லது அவர்களின் “வயிறுகளையும்' அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!” என்று சொன்னார்கள்.70

அறிவிப்பாளர் யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்களே சந்தேகத் துடன் “அல்லது அவர்களுடைய வயிறு களையும்” என்று சொன்னார்கள்.71

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களின் வழியாக வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4534. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، عَنِ الْحَارِثِ بْنِ شُبَيْلٍ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ كُنَّا نَتَكَلَّمُ فِي الصَّلاَةِ يُكَلِّمُ أَحَدُنَا أَخَاهُ فِي حَاجَتِهِ حَتَّى نَزَلَتْ هَذِهِ الآيَةُ {حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلاَةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ} فَأُمِرْنَا بِالسُّكُوتِ.
பாடம் : 43 மேலும், நீங்கள் உள்ளச்சம் உடைய வர்களாக நின்று அல்லாஹ்வை வழிபடுங்கள் (எனும் 2:238ஆவது வசனத்தொடர்) (இதில், “உள்ளச்சம் உடையவர்களாக” எனும் பொருளைச் சுட்டும் “கானித்தீன்' எனும் சொல்லுக்கு “கீழ்படிந்தவர்களாக' என்பது பொருள்.
4534. ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆரம்பக் காலத்தில்) நாங்கள் தொழுகையில் பேசிக்கொண்டிருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். “அனைத்துத் தொழுகைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகையையும் பேணி(த் தொழுது)வாருங்கள். மேலும், நீங்கள் உள்ளச்சம் உடையவர்களாக நின்று அல்லாஹ்வை வழிபடுங்கள்” எனும் (2:238ஆவது) வசனம் அருளப்பெறும்வரை (நாங்கள் இவ்வாறே தொழுகையில் பேசிவந்தோம்). இந்த வசனம் அருளப்பெற்றவுடன் பேசாமலிருக்கும்படி எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது.72

அத்தியாயம் : 65
4535. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ إِذَا سُئِلَ عَنْ صَلاَةِ الْخَوْفِ قَالَ يَتَقَدَّمُ الإِمَامُ وَطَائِفَةٌ مِنَ النَّاسِ فَيُصَلِّي بِهِمِ الإِمَامُ رَكْعَةً، وَتَكُونُ طَائِفَةٌ مِنْهُمْ بَيْنَهُمْ وَبَيْنَ الْعَدُوِّ لَمْ يُصَلُّوا، فَإِذَا صَلَّوُا الَّذِينَ مَعَهُ رَكْعَةً اسْتَأْخَرُوا مَكَانَ الَّذِينَ لَمْ يُصَلُّوا وَلاَ يُسَلِّمُونَ، وَيَتَقَدَّمُ الَّذِينَ لَمْ يُصَلُّوا فَيُصَلُّونَ مَعَهُ رَكْعَةً، ثُمَّ يَنْصَرِفُ الإِمَامُ وَقَدْ صَلَّى رَكْعَتَيْنِ، فَيَقُومُ كُلُّ وَاحِدٍ مِنَ الطَّائِفَتَيْنِ فَيُصَلُّونَ لأَنْفُسِهِمْ رَكْعَةً بَعْدَ أَنْ يَنْصَرِفَ الإِمَامُ، فَيَكُونُ كُلُّ وَاحِدٍ مِنَ الطَّائِفَتَيْنِ قَدْ صَلَّى رَكْعَتَيْنِ، فَإِنْ كَانَ خَوْفٌ هُوَ أَشَدَّ مِنْ ذَلِكَ صَلَّوْا رِجَالاً، قِيَامًا عَلَى أَقْدَامِهِمْ، أَوْ رُكْبَانًا مُسْتَقْبِلِي الْقِبْلَةِ أَوْ غَيْرَ مُسْتَقْبِلِيهَا. قَالَ مَالِكٌ قَالَ نَافِعٌ لاَ أُرَى عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ذَكَرَ ذَلِكَ إِلاَّ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 44 நீங்கள் (சூழ்நிலை குறித்து) அச்சம் கொண்டால் நடந்தவர்களாகவோ, அல்லது வாகனத்தில் இருந்தவர் களாகவோ (தொழுங்கள்). அச்சம் அகன்றுவிடின், அல்லாஹ் உங்களுக்கு நீங்கள் அறியாதவற்றைக் கற்றுக்கொடுத்தபடி அவனை(த் தொழுது) நினைவுகூருங்கள் (எனும் 2:239ஆவது இறைவசனம்) இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:73 (2:255ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “குர்சிய்யுஹு' (அவனது அரசாட்சி) எனும் சொல்லுக்கு “அவனது அறிவு' என்பது பொருள். (2:247ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “பஸ்தத்தன்' (அதிகம்) எனும் சொல்லுக்கு “கூடுதல்', “சிறப்பு' என்பது பொருள். (2:250ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அஃப்ரிஃக்' (பொழி வாயாக!) எனும் சொல்லுக்கு “இறக்கியருள்' என்பது பொருள். (2:255ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “வ லா யஊதுஹு' (அவனுக்குச் சுமையாகாது) எனும் சொற்றொடருக்கு “(வானங்கள் பூமியைப் பாதுகாப்பது) அவனுக்குப் பளுவானதல்ல' என்பது பொருள். (இதன் இறந்த கால வினைச்சொல் இடம்பெற்றுள்ள) “ஆதனீ' என்பதற்கு “எனக்குப் பளுவாகிவிட்டது' என்பது பொருள். “ஆது' என்பதற்கும் “அய்த்' என்பதற்கும் “பலம்' என்று பொருள். (அதே வசனத்தில் இடம்பெற்றுள்ள) “சினா' எனும் சொல்லுக்கு “சிற்றுறக்கம்' என்பது பொருள். (2:259ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “யதசன்னஹ்' (கெட்டுப் போனது) எனும் சொல்லுக்கு “(இயல்பு) மாறிவிட்டது' என்பது பொருள். (2:258ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஃப புஹித்த' (வாயடைத் துப்போனான்) என்பதற்கு “அவனது ஆதாரம் (பொய்த்துப்) போய்விட்டது' என்பது பொருள். (2:259ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) “காவியா' (விழுந்து கிடந்தது) எனும் சொல்லுக்கு, “மனித சஞ்சாரமற்ற' என்பது பொருள். “உரூஷிஹா' (அதன் முகடுகள்) என்பதற்கு “அதன் கட்டடங்கள்' என்பது பொருள். (2:259ஆவது வசனத்தின் மூலத்தில் ஓர் ஓதல் முறைப்படி இடம்பெற்றுள்ள) “நுன்ஷிருஹா' எனும் சொல்லுக்கு “அதை வெளிப்படுத்துகிறோம்' என்பது பொருள். (2:266ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “இஃஸார்' (சூறாவளி) எனும் சொல்லுக்கு “தூணைப் போன்று பூமியிலிருந்து வானத்தை நோக்கி வீசுகின்ற நெருப்புடன் கூடிய சூறாவளிக் காற்று' என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (2:264ஆவது வசனத்தின் மூலத் திலுள்ள) “ஸல்தா' (வெறும் பாறை) எனும் சொல்லுக்கு “மேலே எதுவும் இல்லாத (எதுவும் வளராத வழுக்குப் பாறை)' என்பது பொருள். இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (2:265ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) “வாபில்' என்பது பெருமழையும் “தல்லு' என்பது தூறலும் ஆகும். இது இறைநம்பிக்கையாளரின் செயலுக்கு உவமையாகும். (2:259ஆவது வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “யதசன்னஹ்' (கெட்டுப்போனது) என்பதற்கு “(இயல்பு) மாறிவிட்டது' என்று பொருள்.
4535. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் அச்ச நேரத் தொழுகை குறித்து கேட்கப்பட்டால் (இப்படிக்) கூறுவார்கள்:

(முதலில்) இமாமும் மக்களில் ஒரு பிரிவினரும் (ஓர் இடத்திற்கு) முன்னேறிச் செல்வார்கள். மக்களுக்கு இமாம் ஒரு ரக்அத் தொழுவிப்பார். மக்களில் மற்றொரு பிரிவினர் தொழாமல் மக்களுக்கும் எதிரிகளுக்கும் இடையில் (பாதுகாப்பு அரணாக) இருப்பார்கள். இமாமுடன் இருப்பவர்கள் ஒரு ரக்அத் தொழுது முடித்துவிட்டால், சலாம் கொடுக்காமலேயே இதுவரை தொழாதவர்களின் இடத்திற்குச் சென்றுவிடுவர். இப்போது இதுவரை தொழாதவர்கள், முன்சென்று இமாமுடன் ஒரு ரக்அத்தைத் தொழுதுகொள்வர்.

பிறகு, இமாம் இரண்டு ரக்அத்களைத் தொழுது முடித்த நிலையில் திரும்பிச் சென்றுவிட, அதன் பிறகு இரு பிரிவினரில் ஒவ்வொருவரும் நின்று தனித்தனியாக ஒரு ரக்அத் தொழுவார்கள். இப்படியாக, இரு பிரிவினரில் ஒவ்வொருவரும் இரு ரக்அத்களைத் தொழுதுவிட்டிருப்பார்கள். இதைவிடக் கடுமையான அச்ச நிலை ஏற்பட்டால் அவர்கள் நடந்தவர்களாகவோ, தம் கால்களால் நின்ற நிலையிலோ, வாகனத்தில் பயணம் செய்தவர்களாகவோ கிப்லா திசையை முன்னோக்கியபடி, அல்லது முன்னோக்காமல் தொழலாம்.

இதன் அறிவிப்பாளரான மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டே இதை அறிவித்திருப்பதாக நான் கருதுகிறேன் என்று நாஃபிஉ (ரஹ்) கூறினார்கள்.74

அத்தியாயம் : 65
4536. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا حُمَيْدُ بْنُ الأَسْوَدِ، وَيَزِيدُ بْنُ زُرَيْعٍ، قَالاَ حَدَّثَنَا حَبِيبُ بْنُ الشَّهِيدِ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، قَالَ قَالَ ابْنُ الزُّبَيْرِ قُلْتُ لِعُثْمَانَ هَذِهِ الآيَةُ الَّتِي فِي الْبَقَرَةِ {وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا} إِلَى قَوْلِهِ {غَيْرَ إِخْرَاجٍ} قَدْ نَسَخَتْهَا الأُخْرَى، فَلِمَ تَكْتُبُهَا قَالَ تَدَعُهَا. يَا ابْنَ أَخِي لاَ أُغَيِّرُ شَيْئًا مِنْهُ مِنْ مَكَانِهِ. قَالَ حُمَيْدٌ أَوْ نَحْوَ هَذَا.
பாடம் : 45 உங்களில் மனைவியரை விட்டுவிட்டு இற(க்கும் தருணத் தில் இரு)ப்பவர்கள், தங்கள் மனைவியரை (வீட்டிóருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதிவிருப்பம் (வஸிய்யத்) தெரிவிப்பார்களாக! (எனும் 2:240ஆவது வசனத்தொடர்)
4536. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களிடம், “உங்களில் மனைவியரை விட்டுவிட்டு இற(க்கும் தருணத்தில் இரு)ப்பவர்கள், தங்கள் மனைவியரை (வீட்டிóருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டுவரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) இறுதிவிருப்பம் (வஸிய்யத்) தெரிவிப்பார்களாக!” எனும் இந்த (2:240ஆவது) இறைவசனத்(தின் சட்டத்)தை மற்றோர் (2:234ஆவது) இறைவசனம் மாற்றிவிட்டதே! இதை ஏன் நீங்கள் (இன்னமும் குர்ஆன் வசனங்களில் சேர்த்து) எழுதுகிறீர்கள்?” என்று கேட்டேன்.

உஸ்மான் (ரலி) அவர்கள், இதை (நீக்காமல் குர்ஆனில் அப்படியே) விட்டு விடுவீராக! என் சகோதரர் மகனே! நான் குர்ஆனிலிருந்து எதையும் அதன் இடத்தைவிட்டு மாற்றமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.75

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுமைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அல்லது அதைப் போன்று' என இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம் : 65
4537. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَسَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " نَحْنُ أَحَقُّ بِالشَّكِّ مِنْ إِبْرَاهِيمَ إِذْ قَالَ {رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي}"
பாடம் 46 இப்ராஹீம் (இறைவனை நோக்கி), “இறைவா! மரித்தவர்களை நீ எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என் பதை எனக்குக் காட்டுவாயாக!” எனக் கூறியபோது, அவன், “நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று கேட்டான். (அதற்கு) அவர் “அவ்வாறன்று! (நம்பியிருக்கிறேன்.) ஆயினும், என் உள்ளம் நிம்மதியடைவதற்காகவே கேட்கிறேன்” என்று கூறினார். (அதற்கு இறைவன்) “நான்கு பறவைகளைப் பிடித்து, அவற்றை உம்மிடம் வைத்து(ப் பல துண்டுகளாக்கி) பின்னர் அவற்றில் ஒவ்வொரு பாகத்தையும், ஒவ்வொரு மலையின் மீது வைத்துவிட்டு அவற்றை நீர் அழைப்பீராக! அவை உம்மிடம் விரைந்து வந்துசேரும். நிச்சயமாக அல்லாஹ், வல்லமை மிக்கவனும் நுண்ணறிவு உள்ளோனும் ஆவான் என்பதை நீர் அறிந்துகொள்வீராக!” என்றான் (எனும் 2:260ஆவது இறைவசனம்) (இவ்வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஸுர்ஹுன்ன' (“அவற்றை உம்மிடம் வைத்துக்கொள்வீராக') எனும் சொல்லுக்கு “அவற்றைப் பல துண்டுகளாக்கி வைத்துக்கொள்வீராக' என்று பொருள்.
4537. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இறந்துபோனவற்றுக்கு அல்லாஹ் எப்படி உயிரூட்டுகிறான் என்ற சந்தேகம் இறைத்தூதர்களுக்கு வருவதாயிருந்தால் இறைத்தூதர்) இப்ராஹீம் (அலை) அவர் களைவிடவும் நாமே சந்தேகம் கொள்ள அதிகத் தகுதியுடையவர்கள் ஆவோம். (ஆகவே, சந்தேகப்பட்டு அவர்கள் அப்படிக் கேட்கவில்லை.)

ஏனெனில், “என் இறைவா! மரித்தவர் களை நீ எப்படி உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக!” என்று அன்னார் கேட்டார்கள். இறைவன்,”நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், “அவ்வாறன்று (நம்பியிருக்கிறேன்)! ஆயினும், என் உள்ளம் நிம்மதியடைவதற் காகவே கேட்கிறேன்” என்று பதிலளித் தார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.76

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4538. حَدَّثَنَا إِبْرَاهِيمُ، أَخْبَرَنَا هِشَامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي مُلَيْكَةَ، يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ،. قَالَ وَسَمِعْتُ أَخَاهُ أَبَا بَكْرِ بْنَ أَبِي مُلَيْكَةَ، يُحَدِّثُ عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ، قَالَ قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ يَوْمًا لأَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَ تَرَوْنَ هَذِهِ الآيَةَ نَزَلَتْ {أَيَوَدُّ أَحَدُكُمْ أَنْ تَكُونَ لَهُ جَنَّةٌ} قَالُوا اللَّهُ أَعْلَمُ. فَغَضِبَ عُمَرُ فَقَالَ قُولُوا نَعْلَمُ أَوْ لاَ نَعْلَمُ. فَقَالَ ابْنُ عَبَّاسٍ فِي نَفْسِي مِنْهَا شَىْءٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ. قَالَ عُمَرُ يَا ابْنَ أَخِي قُلْ وَلاَ تَحْقِرْ نَفْسَكَ. قَالَ ابْنُ عَبَّاسٍ ضُرِبَتْ مَثَلاً لِعَمَلٍ. قَالَ عُمَرُ أَىُّ عَمَلٍ قَالَ ابْنُ عَبَّاسٍ لِعَمَلٍ. قَالَ عُمَرُ لِرَجُلٍ غَنِيٍّ يَعْمَلُ بِطَاعَةِ اللَّهِ عَزَّ وَجَلَّ، ثُمَّ بَعَثَ اللَّهُ لَهُ الشَّيْطَانَ فَعَمِلَ بِالْمَعَاصِي حَتَّى أَغْرَقَ أَعْمَالَهُ. {فَصُرْهُنَّ} قَطِّعْهُنَّ.
பாடம் : 47 “நீரருவிகள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்ற திராட்சை மற்றும் பேரீச்சந்தோட்டம் ஒருவருக்கு இருந்து, அதில் எல்லா வகையான கனிகளும் அவருக்குக் கிடைக்கின்றன. அவரை முதுமை வந்தடை கிறது. வலுவில்லாத குழந்தைகளும் அவருக்கு உள்ளனர். (இந்நிலை யில்) நெருப்புடன் கூடிய சூறாவளி தாக்கி அது கரிந்துபோவதை உங்களில் எவரேனும் விரும்புவாரா? இவ்வாறு அல்லாஹ் தன் வசனங்களை, நீங்கள் சிந்திக்கும் பொருட்டு (உதாரணங்களின் மூலம்) உங்களுக்குத் தெளிவுபடுத்துகின்றான்” எனும் (2:266ஆவது) இறைவசனம்
4538. (அப்துல் அஸீஸ் பின் அப்தில் மலிக்) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தும், அவர்களுடைய சகோதரர் அபூபக்ர் பின் அபீமுளைக்கா அவர்கள், உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களிடமிருந்தும் (கேட்டு) அறிவித் தார்கள்:

உமர் (ரலி) அவர்கள் ஒருநாள் நபித் தோழர்களிடம், “நீரருவிகள் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்ற திராட்சை மற்றும் பேரீச்சந்தோட்டம் ஒருவருக்கு இருந்து...” (என்று தொடங்கும்) இந்த (2:266ஆவது) வசனம் எது தொடர்பாக அருளப்பெற்றது என நீங்கள் கருதுகிறீர்கள்?” என்று கேட்க, அவர்கள், “அல்லாஹ்வே அறிந்தவன்” என்று பதிலளித்தார்கள்.

உடனே உமர் (ரலி) அவர்கள் கோப மடைந்து, “எங்களுக்குத் தெரியும்; அல்லது தெரியாது என்று (இரண்டில் ஒன்றைத் தெளிவாகச்) சொல்லுங்கள்” என்று கேட்க, இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அதைப் பற்றி என் உள்ளத்தில் ஒரு கருத்து உள்ளது, இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே!” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், “என் சகோதரர் மகனே! சொல்லுங்கள்; உங்களை நீங்களே அற்பமாகக் கருதிக்கொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “இது, ஒரு செயலுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், “என்ன செயல்?” என்று கேட்க, இப்னு அப்பாஸ், “ஒரு செயலுக்கு” என்று (மீண்டும்) கூறினார்கள்.

உமர் (ரலி) அவர்கள், “செல்வந்தனாகிய ஒரு மனிதன் வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து நற்செயல் புரிந்துவந்தான். பிறகு அல்லாஹ் அவனிடம் ஷைத்தானை அனுப்ப, (அவனுடைய தூண்டுதலால்) அந்த மனிதன் பாவங்கள் புரிய, அது அவனுடைய (முந்தைய நற்)செயல்களை மூழ்கடித்துவிட்டது; (அதைத்தான் இங்கு இறைவன் இப்படி உவமித்துக் கூறுகிறான்)” என்று சொன்னார்கள்.77

அத்தியாயம் : 65
4539. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ حَدَّثَنِي شَرِيكُ بْنُ أَبِي نَمِرٍ، أَنَّ عَطَاءَ بْنَ يَسَارٍ، وَعَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي عَمْرَةَ الأَنْصَارِيَّ، قَالاَ سَمِعْنَا أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لَيْسَ الْمِسْكِينُ الَّذِي تَرُدُّهُ التَّمْرَةُ وَالتَّمْرَتَانِ وَلاَ اللُّقْمَةُ وَلاَ اللُّقْمَتَانِ. إِنَّمَا الْمِسْكِينُ الَّذِي يَتَعَفَّفُ وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ يَعْنِي قَوْلَهُ {لاَ يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا}"
பாடம் : 48 (பொருளீட்ட முடியாதவாறு) அல்லாஹ்வின் வழியில் ஈடுபடுத்தப்பட்ட ஏழைகளுக்கே (தர்மங்கள்) உரியவையாகும். அவர்கள் (பொருளீட்டுவதற்காக) பூமியில் பயணம் மேற்கொள்ள இயலாதவர்கள். அவர்களது சுய மரியாதையின் காரணத்தால், அறியாதோர் அவர்களைச் செல்வர் கள் என எண்ணுவர். அவர்களின் (எளிமையான) தோற்றத்தைக்கொண்டு அவர்களை (நபியே!) நீர் அறிந்துகொள்ளலாம். அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள் (எனும் 2:273ஆவது வசனத்தொடர்) “(தர்மம்) கேட்டு என்னைத் தொந்தரவு செய்தான்; என்னை நச்சரித்தான்” என்று சொல்வதற்கு “அல்ஹஃப அலய்ய' என்று (அரபுகள்) கூறுவர். இச்சொல்லின் வேர்ச்சொல்லே மேற்காணும் வசனத்தின் மூலத்தில் “இல்ஹாஃப்' (வற்புறுத்தல்) என இடம்பெற்றுள்ளது. (47:37ஆம் வசனத்தின் மூலத்திலுள்ள) “ஃபயுஹ்ஃபிகும்” எனும் சொல்லுக்கும் “வற்புறுத்தல்', “நெருக்கடி கொடுத்தல்' என்பதே பொருளாகும்.
4539. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓரிரு கவளம் உணவுக்காக, அல்லது ஓரிரு பேரீச்சம்பழங்களுக்காக மக்களிடம் அலைபவன் ஏழையல்லன்; ஏழை யாரெனில், அவன் (தன் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளப் பிறரிடம் கேட்க வெட்கப்பட்டு) தன்மானத்துடன் நடந்துகொள்வான். நீங்கள் விரும்பினால், “அவர்கள் மக்களிடம் (எதையும்) வற்புறுத்திக் கேட்கமாட்டார்கள்” எனும் (இந்த 2:273ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4540. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا نَزَلَتِ الآيَاتُ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ فِي الرِّبَا قَرَأَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى النَّاسِ، ثُمَّ حَرَّمَ التِّجَارَةَ فِي الْخَمْرِ.
பாடம் : 49 வட்டியை (வாங்கி) விழுங்குகிறவர் கள் ஷைத்தானின் தீண்டலால் பைத்தியம் பிடித்தவன் எழுவது போலன்றி (வேறு விதமாக மறுமையில்) எழமாட்டர். இது ஏனெனில், நிச்சயமாக அவர்கள் “வணிகம் என்பதே வட்டியைப் போன்றதுதானே” எனக் கூறிய தனாலேயாம். அல்லாஹ் வணி கத்தை அனுமதித்தும் வட்டியை விலக்கியும் இருக்கிறான் (எனும் 2:275ஆவது வசனத்தொடர்) (இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அல்மஸ்ஸு' (தீண்டல்) எனும் சொல்லுக்கு “பைத்தியம்' என்பது பொருள்.
4540. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) வட்டி தொடர்பாக அருளப்பெற்றபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அவற்றை (பள்ளிவாசலில் வைத்து) ஓதிக்காட்டினார்கள். பிறகு, மது வியாபாரத் தைத் தடை செய்தார்கள்.78

அத்தியாயம் : 65
4541. حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، سَمِعْتُ أَبَا الضُّحَى، يُحَدِّثُ عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ لَمَّا أُنْزِلَتِ الآيَاتُ الأَوَاخِرُ مِنْ سُورَةِ الْبَقَرَةِ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَتَلاَهُنَّ فِي الْمَسْجِدِ، فَحَرَّمَ التِّجَارَةَ فِي الْخَمْرِ.
பாடம் : 50 அல்லாஹ் வட்டிக்கு அழிவையும் தான தர்மங்களுக்கு வளர்ச்சியையும் அளிக்கின் றான் (எனும் 2:276ஆவது வசனத்தொடர்) (அதாவது) வட்டியைப் பயனற்றுப் போகச் செய்துவிடுகின்றான்.
4541. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

“அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டுச் சென்று அவற்றைப் பள்ளிவாசலில் (மக்களுக்கு) ஓதிக்காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்திற்குத் தடை விதித்தார்கள்.

அத்தியாயம் : 65
4542. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ لَمَّا أُنْزِلَتِ الآيَاتُ مِنْ آخِرِ سُورَةِ الْبَقَرَةِ قَرَأَهُنَّ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ، وَحَرَّمَ التِّجَارَةَ فِي الْخَمْرِ.
பாடம் : 51 “(வட்டியில் எஞ்சியுள்ளவற்றையும் நீங்கள் விட்டுவிடவில்லையாயின்) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் நீங்கள் போர் செய்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள் (எனும் 2:279ஆவது வசனத்தொடர்) (இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “ஃபஃதனூ' எனும் சொல்லுக்கு “அறிந்துகொள்ளுங்கள்' என்று பொருள்.79
4542. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்பகரா' அத்தியாயத்தின் இறுதி வசனங்கள் (2:275-281) அருளப்பெற்ற போது அவற்றை நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வைத்து (மக்களுக்கு) ஓதிக்காட்டினார்கள். மேலும், மது வியாபாரத்தைத் தடை செய்தார்கள்.

அத்தியாயம் : 65