4489. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمْ يَبْقَ مِمَّنْ صَلَّى الْقِبْلَتَيْنِ غَيْرِي.
பாடம் : 15 (நபியே!) உமது முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே, நீர் விரும்புகின்ற கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் நிச்சயமாக (இதோ) உம்மை நாம் திரும்பச் செய்கின்றோம். ஆகவே, உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப் பள்ளிவாசலை) நோக்தித் திருப்புவீராக! மேலும், நீங்கள் எங்கிருந்தாலும் அதன் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்புங்கள்! நிச்சயமாக வேதம் அருளப்பெற்றவர்கள் அது தங்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நன்கு அறிவர். அவர்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை (எனும் 2:144ஆவது இறைவசனம்)
4489. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பைத்துல் மக்திஸ், கஅபா ஆகிய) இரண்டு கிப்லாக்களையும் நோக்கித் தொழுதவர்களில் என்னைத் தவிர வேறெவரும் இப்போது உயிரோடில்லை.28

அத்தியாயம் : 65
4490. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ بَيْنَمَا النَّاسُ فِي الصُّبْحِ بِقُبَاءٍ جَاءَهُمْ رَجُلٌ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَأُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ أَلاَ فَاسْتَقْبِلُوهَا. وَكَانَ وَجْهُ النَّاسِ إِلَى الشَّأْمِ فَاسْتَدَارُوا بِوُجُوهِهِمْ إِلَى الْكَعْبَةِ.
பாடம் : 16 (நபியே!) வேதம் வழங்கப்பட்டவர்களிடம் நீர் எத்தனைச் சான்றுகளைக் கொண்டுவந்தாலும் உமது கிப்லாவை அவர்கள் பின்பற்றப்போவதில்லை. நீரும் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவரல்லர். அவர்களில் ஒரு பிரிவினர் மற்றப் பிரிவினரின் கிப்லாவைப் பின்பற்றுவோராயும் இல்லை. எனவே, உமக்கு (வஹீ மூலம்) மெய்யறிவு வந்த பின்னரும் அவர்களின் மனவிருப்பங்களை நீர் பின்பற்றினால் நிச்சயம் நீரும் அநீதியாளர்களில் ஒருவராகி விடுவீர் (எனும் 2:145ஆவது இறைவசனம்)
4490. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் குபாவில் “சுப்ஹ்' தொழுகையில் இருந்தபோது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “சென்ற இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பெற்றுள்ளது. (தொழுகையில் இதுவரை முன்னோக்கிவந்த பைத்துல் மக்திஸைவிட்டு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, (மக்களே!) கஅபாவையே நீங்கள் முன்னோக்கித் தொழுங்கள்” என்று சொன்னார்.

அப்போது மக்களின் முகம் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக்கொண்டார்கள்.29

அத்தியாயம் : 65
4491. حَدَّثَنَا يَحْيَى بْنُ قَزَعَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ بَيْنَا النَّاسُ بِقُبَاءٍ فِي صَلاَةِ الصُّبْحِ إِذْ جَاءَهُمْ آتٍ فَقَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ فَاسْتَقْبِلُوهَا. وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ فَاسْتَدَارُوا إِلَى الْكَعْبَةِ.
பாடம் : 17 எவருக்கு நாம் வேதம் அருளியிருக்கிறோமோ அவர்கள் தங்களுடைய பிள்ளைகளை (இனம் கண்டு) அறிந்துகொள்வதைப் போல் அதை/ அவரை (கஅபாவை அல்லது நபி முஹம்மதை) நன்கு அறிவார்கள். எனினும், அவர் களில் ஒரு பிரிவினர் நன்கு அறிந்திருந்தும் உண்மையை மறைக்கிறார்கள். இந்த உண்மை, உங்கள் இறைவனிடமிருந்து வந்தது ஆகும். எனவே, (இது பற்றி) ஐயம் கொண்டோரில் நீங்களும் (ஒருவராக) ஆகிவிட வேண்டாம் (எனும் 2:146, 147 ஆகிய இறைவசனங்கள்)
4491. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் குபாவில் சுப்ஹ் தொழுகை தொழுதுகொண்டிருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, “சென்ற இரவு நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பெற்றுள்ளது. (அதில்) அவர்கள் (தொழுகையில் இதுவரை தாம் முன்னோக்கிவந்த பைத்துல் மக்திஸை விட்டுவிட்டு இனிமேல் மக்காவிலுள்ள இறையில்லம்) கஅபாவை தொழுகையில் முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, நீங்களும் கஅபாவையே முன்னோக்குங்கள்” என்று சொன்னார்.

அப்போது மக்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையான) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே மக்கள் வட்டமடித்து கஅபாவை நோக்கித் திரும்பிக்கொண்டார்கள்.

அத்தியாயம் : 65
4492. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم نَحْوَ بَيْتِ الْمَقْدِسِ سِتَّةَ عَشَرَ ـ أَوْ سَبْعَةَ عَشَرَ ـ شَهْرًا، ثُمَّ صَرَفَهُ نَحْوَ الْقِبْلَةِ.
பாடம் : 18 ஒவ்வொரு (மதத்த)வருக்கும் அவரவர் முன்னோக்கக்கூடிய ஒரு திசையிருக்கிறது. நீங்கள் நன்மைகள் புரிய முந்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் ஒன்றுதிரட்டிக் கொண்டுவருவான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றல் கொண்டவனாய் இருக்கின்றான் (எனும் 2:148ஆவது இறைவசனம்)30
4492. பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது:

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் பைத்துல் மக்திஸை நோக்கி “பதினாறு' அல்லது “பதினேழு' மாதங்கள் தொழுதோம். பிறகு அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை (தற்போதைய கஅபா எனும்) இந்தக் கிப்லாவை நோக்கித் திருப்பிவிட்டான்.31

அத்தியாயம் : 65
4493. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَقُولُ بَيْنَا النَّاسُ فِي الصُّبْحِ بِقُبَاءٍ إِذْ جَاءَهُمْ رَجُلٌ فَقَالَ أُنْزِلَ اللَّيْلَةَ قُرْآنٌ، فَأُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ، فَاسْتَقْبِلُوهَا. وَاسْتَدَارُوا كَهَيْئَتِهِمْ، فَتَوَجَّهُوا إِلَى الْكَعْبَةِ وَكَانَ وَجْهُ النَّاسِ إِلَى الشَّأْمِ.
பாடம் : 19 மேலும், நீங்கள் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும் வேளையில்) உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராமை நோக்கித் திருப்புங்கள். இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மை (யான கட்டளை)யாகும். அல்லாஹ் நீங்கள் செய்கின்றவை பற்றிக் கவனமற்றவன் அல்லன் (எனும் 2:149ஆவது இறைவசனம்) இந்த வசனத்தில் (“நோக்கி' எனும் பொருளைத் தரும்) “ஷத்ர்' எனும் சொல் “திசையில்' எனும் பொருளைச் சுட்டும்.
4493. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் “குபா'வில் “சுப்ஹ்' தொழுகை யிலிருந்தபோது, ஒரு மனிதர் வந்து, “சென்ற இரவு (நபி (ஸல்) அவர்களுக்கு) குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பெற்றுள்ளது. (அதில் இனி தொழுகையில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, நீங்கள் கஅபாவை நோக்கித் தொழுங்கள்” என்று சொன்னார். உடனே மக்கள் தாம் இருந்த அதே நிலையிலேயே வட்டமடித்து கஅபாவை நோக்கி முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். (அதற்குமுன்) மக்களின் முகம் (பைத்துல் மக்திஸின் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது.32

அத்தியாயம் : 65
4494. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ بَيْنَمَا النَّاسُ فِي صَلاَةِ الصُّبْحِ بِقُبَاءٍ إِذْ جَاءَهُمْ آتٍ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ، وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الْكَعْبَةَ، فَاسْتَقْبِلُوهَا. وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ فَاسْتَدَارُوا إِلَى الْقِبْلَةِ.
பாடம் : 20 மேலும், (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டுச் சென்றாலும் (தொழும் வேளையில்) உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் பக்கமாகவே திருப்புங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின்போது) அதன் பக்கமே திருப்புங்கள் (எனும் 2:150ஆவது வசனத்தொடர்)33
4494. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கள் குபாவில் “சுப்ஹ்' தொழுகையில் இருந்தபோது ஒருவர் வந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு (குர்ஆன் வசனம்) அருளப்பெற்றுள்ளது. (அதில்) கஅபாவை நோக்கித் தொழ வேண்டும் என்று அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.ஆகவே, அ(ந்த இறையில்லத்)தை நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள்” என்று சொன்னார்.

அப்போது அவர்களின் முகங்கள் (பைத்துல் மக்திஸ் திசையில்) ஷாம் நாட்டை நோக்கியபடி இருந்தன. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் வட்டமிட்டு (தற்போதைய) கிப்லா(வான கஅபா)வை நோக்கித் திரும்பினார்கள்.

அத்தியாயம் : 65
4495. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ قُلْتُ لِعَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَنَا يَوْمَئِذٍ حَدِيثُ السِّنِّ أَرَأَيْتِ قَوْلَ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا} فَمَا أُرَى عَلَى أَحَدٍ شَيْئًا أَنْ لاَ يَطَّوَّفَ بِهِمَا. فَقَالَتْ عَائِشَةُ كَلاَّ لَوْ كَانَتْ كَمَا تَقُولُ كَانَتْ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ لاَ يَطَّوَّفَ بِهِمَا، إِنَّمَا أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ فِي الأَنْصَارِ، كَانُوا يُهِلُّونَ لِمَنَاةَ، وَكَانَتْ مَنَاةُ حَذْوَ قُدَيْدٍ، وَكَانُوا يَتَحَرَّجُونَ أَنْ يَطُوفُوا بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ سَأَلُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَأَنْزَلَ اللَّهُ {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا}
பாடம் 21 நிச்சயமாக ஸஃபா, மர்வா (ஆகிய குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகவே, யார் இறையில்லத்தில் “ஹஜ்' அல்லது “உம்ரா' (எனும் வழிபாடுகளைச்) செய்கின்றாரோ, அவர்மீது அவ்விரண்டுக்குமிடையே சுற்றி வருவது குற்றமாகாது. மேலும், யார் தாமாக முன்வந்து நல்லவற்றைச் செய்கிறாரோ (அவரது செயலை) அல்லாஹ் மதிப்பவனும் மிக நன்கறிந்தவனுமாவான்” எனும் (2:158ஆவது) இறைவசனம் (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “ஷஆயிர்' (அடையாளச் சின்னங்கள்) எனும் சொல்லுக்கு “அடையாளங்கள்' என்று பொருள். அதன் ஒருமை “ஷஈரா' ஆகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “ஸஃப்வான்' எனும் சொல்லுக்கு “கற்கள்' என்பது பொருள். எதையும் விளைவிக்காத வழுக்குப் பாறைகளும் “ஸஃப்வான்' எனப்படுவதுண்டு. இதன் ஒருமை “ஸஃப்வானா' என்பதாகும். இதுவும் “ஸஃபா'வும் பொருளில் ஒன்றே. (ஆனால்,) “ஸஃபா' என்பது பன்மைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
4495. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியாராகிய ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நிச்சயமாக ஸஃபா, மர்வா (எனும் குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை. எனவே, யார் (கஅபா எனும்) அவ்வீட்டில் ஹஜ் அல்லது உம்ரா செய்கிறார்களோ அவர்கள் அவ்விரண்டுக்குமிடையே சுற்றிவருவது குற்றமில்லை” என்ற (2:158) வளமும் உயர்வுமிக்க இறைவனின் வசனப்படி, ஸஃபா, மர்வாவுக்கிடையே சுற்றிவராவிட்டாலும் குற்றமேதுமில்லை என்று நான் கருதுகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?” எனக் கேட்டேன். அப்போது நான் சிறுவயதுடையவனாயிருந்தேன்.

அதற்கு (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள், “(என் சகோதரி அஸ்மாவின் மகனே!) நீ சொன்னது தவறு. அந்த வசனத்தில் “அவ்விரண்டையும் சுற்றிவராம லிருப்பது குற்றமில்லை' என்றிருந்தால்தான் நீ கூறும் கருத்து வரும். ஆனால், இவ்வசனம் அன்சாரிகளின் விஷயத்தில் அருளப்பெற்றதாகும். அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும்முன் தாங்கள் வழிபட்டுவந்த “முஷல்லல்' எனும் குன்றில் உள்ள) “மனாத்' எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டும் வழக்கம் உள்ளவர்களாக இருந்தனர். அந்த மனாத் (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையிலிருந்த) “குதைத்' எனும் இடத்திற்கு நேர் எதிரில் இருந்தது. அவர்கள் (இஸ்லாத்தை ஏற்றபின்) அந்த ஸஃபா, மர்வா குன்றுகளுக்கு மத்தியில் சுற்றி வருவது பாவமாகும் எனக் கருதினார்கள்.

எனவே, இஸ்லாம் வந்தபோது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி (அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஸஃபா, மர்வா இடையே சுற்றிவருவதைப் பாவமாகக் கருதுகின்றோம். இது சரியா? என)க் கேட்டார்கள். அப்போது தான் அல்லாஹ், “நிச்சயமாக ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவை” என்ற (2:158) இந்த வசனத்தை அருளி னான்.34


அத்தியாயம் : 65
4496. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ سُلَيْمَانَ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ عَنِ الصَّفَا، وَالْمَرْوَةِ،. فَقَالَ كُنَّا نَرَى أَنَّهُمَا مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ، فَلَمَّا كَانَ الإِسْلاَمُ أَمْسَكْنَا عَنْهُمَا، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ } إِلَى قَوْلِهِ {أَنْ يَطَّوَّفَ بِهِمَا}.
பாடம் 21 நிச்சயமாக ஸஃபா, மர்வா (ஆகிய குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். ஆகவே, யார் இறையில்லத்தில் “ஹஜ்' அல்லது “உம்ரா' (எனும் வழிபாடுகளைச்) செய்கின்றாரோ, அவர்மீது அவ்விரண்டுக்குமிடையே சுற்றி வருவது குற்றமாகாது. மேலும், யார் தாமாக முன்வந்து நல்லவற்றைச் செய்கிறாரோ (அவரது செயலை) அல்லாஹ் மதிப்பவனும் மிக நன்கறிந்தவனுமாவான்” எனும் (2:158ஆவது) இறைவசனம் (இந்த வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ள) “ஷஆயிர்' (அடையாளச் சின்னங்கள்) எனும் சொல்லுக்கு “அடையாளங்கள்' என்று பொருள். அதன் ஒருமை “ஷஈரா' ஆகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: “ஸஃப்வான்' எனும் சொல்லுக்கு “கற்கள்' என்பது பொருள். எதையும் விளைவிக்காத வழுக்குப் பாறைகளும் “ஸஃப்வான்' எனப்படுவதுண்டு. இதன் ஒருமை “ஸஃப்வானா' என்பதாகும். இதுவும் “ஸஃபா'வும் பொருளில் ஒன்றே. (ஆனால்,) “ஸஃபா' என்பது பன்மைக்குப் பயன்படுத்தப்படுகிறது.
4496. ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “ஸஃபா மர்வா(வுக்கிடையே ஹஜ், உம்ராவின்போது ஓடுவதை நீங்கள் வெறுத்துவந்தீர்களா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நாங்கள் அதனை அறியாமைக் காலச் செய்கை என்று கருதிவந்தோம். ஆகவே, இஸ்லாம் வந்தபோது நாங்கள் அவற்றுக்கிடையில் ஓடுவதை நிறுத்திவிட்டோம்.

அப்போது உயர்ந்தோனாகிய அல்லாஹ், “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங் களில் உள்ளவையாகும். ஆகவே, யார் இறையில்லத்தில் ஹஜ் அல்லது உம்ரா செய்ய விரும்புகிறாரோ அவர் அவ்விரண்டுக்குமிடையே சுற்றிவருவதில் குற்றமேதுமில்லை' எனும் (2:158ஆவது) இவ்வசனத்தை அருளினான்” என்று பதிலளித்தார்கள்.35

அத்தியாயம் : 65
4497. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم كَلِمَةً وَقُلْتُ أُخْرَى قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مَنْ مَاتَ وَهْوَ يَدْعُو مِنْ دُونِ اللَّهِ نِدًّا دَخَلَ النَّارَ ". وَقُلْتُ أَنَا مَنْ مَاتَ وَهْوَ لاَ يَدْعُو لِلَّهِ نِدًّا دَخَلَ الْجَنَّةَ.
பாடம் : 22 “அல்லாஹ் அல்லாதவற்றை அவனுக்கு இணைகளாக்கி அல்லாஹ்வை நேசிப்பதைப் போல அவற்றை நேசிக்கின்றவர்களும் மனிதர்களில் உள்ளனர்” எனும் (2:165ஆவது) வசனத்தொடர் (இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “அன்தாத்' (இணைகள்) எனும் சொல்லுக்கு “நேர் எதிரானவை' (அள்தாத்) என்பது பொருள். இதன் ஒருமை “நித்து' ஆகும்.
4497. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஒரு கருத்தை) ஒரு வாக்கியத்தில் சொல்ல, நான் (அதே கருத்தை) வேறொரு வாக்கியத்தில் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை என வாதித்தபடி இறந்துவிடுகிறாரோ அவர் நரகம் புகுவார்” என்று கூறினார்கள். “(அப்படியானால்) யார் அல்லாஹ் அல்லாததை அவனுக்கு இணை கற்பிக்காதவராக இறந்துவிடுகிறாரோ அவர் சொர்க்கம் புகுவார்” என்று நான் சொன்னேன்.36

அத்தியாயம் : 65
4498. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، قَالَ سَمِعْتُ مُجَاهِدًا، قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ يَقُولُ كَانَ فِي بَنِي إِسْرَائِيلَ الْقِصَاصُ، وَلَمْ تَكُنْ فِيهِمُ الدِّيَةُ فَقَالَ اللَّهُ تَعَالَى لِهَذِهِ الأُمَّةِ {كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالأُنْثَى بِالأُنْثَى فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَىْءٌ} فَالْعَفْوُ أَنْ يَقْبَلَ الدِّيَةَ فِي الْعَمْدِ {فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ} يَتَّبِعُ بِالْمَعْرُوفِ وَيُؤَدِّي بِإِحْسَانٍ، {ذَلِكَ تَخْفِيفٌ مِنْ رَبِّكُمْ} وَرَحْمَةٌ مِمَّا كُتِبَ عَلَى مَنْ كَانَ قَبْلَكُمْ. {فَمَنِ اعْتَدَى بَعْدَ ذَلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ} قَتَلَ بَعْدَ قَبُولِ الدِّيَةِ.
பாடம் : 23 இறைநம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக் காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந் திரமான மனிதன் சுதந்திரமான மனிதனுக்குப் பதிலாகவும், அடிமை அடிமைக்குப் பதிலாகவும், பெண் பெண்ணுக்குப் பதிலாகவுமே (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால், நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகையை) செலுத்த வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையும் ஆகும். இதன் பின்னரும் யாரேனும் எல்லை மீறினால் அவருக்கு வதைக்கும் வேதனையே உண்டு (எனும் 2:178ஆவது இறைவசனம்) (இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “உஃபிய' (மன்னிக்கப்பட்டால்) எனும் சொல்லுக்கு “விட்டுக்கொடுக்கப்பட்டால்' என்பது பொருள்.
4498. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இஸ்ரவேலர்களிடையே பழிக்குப் பழிவாங்கும் (கிஸாஸ்) சட்டம் (நடைமுறையில்) இருந்தது. ஆனால், அவர்களிடையே உயிரீட்டுத் தொகை (பெற்றுக்கொண்டு கொலை செய்தவனை மன்னித்துவிடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை. ஆகவே, அல்லாஹ் (முஹம்மத் (ஸல்) அவர்களின்) இந்தச் சமுதாயத்தாருக்கு, “கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. சுதந்திரமான மனிதன் சுதந்திரமான மனிதனுக்குப் பதிலாகவும், அடிமை அடிமைக்குப் பதிலாகவும், பெண் பெண்ணுக்குப் பதிலாகவும் (பழிவாங்கப் படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட கொலையுண்டவனின் உறவினரான) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால் நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகை) செலுத்த வேண்டும்” என்று கூறுகிறான்.

“மன்னிப்பளித்தல்' (அஃப்வ்) என்பது திட்டமிட்டுச் செய்த கொலைக்கு உயிரீட்டுத் தொகையை ஏற்றுக்கொள்வதைக் குறிக்கும். நியதியைப் பேணி நல்ல முறையில் அதனைக் கொலையாளி செலுத்த வேண்டும்.

“இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கருணையும் ஆகும்.” அதாவது உங்களுக்கு முன்பிருந்தவர்(களான பனூ இஸ்ராயீல்)கள்மீது கடமையாக்கப்பட்டிருந்ததைவிட இது இலேசாகும். இதற்கும் அப்பால் எவன் எல்லை மீறுகின்றானோ அவனுக்கு-அதாவது எவன் உயிரீட்டுத் தொகையைப் பெற்றுக்கொண்ட பின்பும் (பழிக்குப் பழியாகக்) கொலை செய்கிறானோ அவனுக்கு- வதைக்கும் வேதனையே உண்டு. (2:178)

இதை முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 65
4499. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، حَدَّثَنَا حُمَيْدٌ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " كِتَابُ اللَّهِ الْقِصَاصُ ".
பாடம் : 23 இறைநம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக் காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந் திரமான மனிதன் சுதந்திரமான மனிதனுக்குப் பதிலாகவும், அடிமை அடிமைக்குப் பதிலாகவும், பெண் பெண்ணுக்குப் பதிலாகவுமே (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால், நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகையை) செலுத்த வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையும் ஆகும். இதன் பின்னரும் யாரேனும் எல்லை மீறினால் அவருக்கு வதைக்கும் வேதனையே உண்டு (எனும் 2:178ஆவது இறைவசனம்) (இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “உஃபிய' (மன்னிக்கப்பட்டால்) எனும் சொல்லுக்கு “விட்டுக்கொடுக்கப்பட்டால்' என்பது பொருள்.
4499. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(கொலைக் குற்றத்தில்) அல்லாஹ்வின் சட்டம் பழிவாங்குவதாகும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.37


அத்தியாயம் : 65
4500. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ بَكْرٍ السَّهْمِيَّ، حَدَّثَنَا حُمَيْدٌ، عَنْ أَنَسٍ، أَنَّ الرُّبَيِّعَ، عَمَّتَهُ كَسَرَتْ ثَنِيَّةَ جَارِيَةٍ، فَطَلَبُوا إِلَيْهَا الْعَفْوَ فَأَبَوْا، فَعَرَضُوا الأَرْشَ فَأَبَوْا، فَأَتَوْا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبَوْا إِلاَّ الْقِصَاصَ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْقِصَاصِ، فَقَالَ أَنَسُ بْنُ النَّضْرِ يَا رَسُولَ اللَّهِ، أَتُكْسَرُ ثَنِيَّةُ الرُّبَيِّعِ لاَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لاَ تُكْسَرُ ثَنِيَّتُهَا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَا أَنَسُ كِتَابُ اللَّهِ الْقِصَاصُ ". فَرَضِيَ الْقَوْمُ فَعَفَوْا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ مِنْ عِبَادِ اللَّهِ مَنْ لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لأَبَرَّهُ ".
பாடம் : 23 இறைநம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக் காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந் திரமான மனிதன் சுதந்திரமான மனிதனுக்குப் பதிலாகவும், அடிமை அடிமைக்குப் பதிலாகவும், பெண் பெண்ணுக்குப் பதிலாகவுமே (பழிவாங்கப்படுவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட) அவனுடைய சகோதரனால் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால், நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (உயிரீட்டுத் தொகையை) செலுத்த வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து வழங்கப்பட்ட சலுகையும் கருணையும் ஆகும். இதன் பின்னரும் யாரேனும் எல்லை மீறினால் அவருக்கு வதைக்கும் வேதனையே உண்டு (எனும் 2:178ஆவது இறைவசனம்) (இந்த வசனத்தின் மூலத்தில் இடம்பெற்றுள்ள) “உஃபிய' (மன்னிக்கப்பட்டால்) எனும் சொல்லுக்கு “விட்டுக்கொடுக்கப்பட்டால்' என்பது பொருள்.
4500. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையின் சகோதரி (அத்தை) “ருபய்யிஉ' (பின்த் அந்நள்ர்) அவர்கள் ஓர் இளம் பெண்ணின் முன்பல்லை உடைத்து விட்டார்கள். ஆகவே, என் அத்தையின் குலத்தார் அப்பெண்ணி(ன் குலத்தாரி)டம்மன்னித்துவிடும்படி கோரினர். அவர்கள் (மன்னிக்க) மறுத்துவிட்டனர். ஆகவே, என் அத்தையின் குலத்தார் ஈட்டுத் தொகை செலுத்த முன்வந்தனர். அதற்கும் அவர்கள் மறுத்துவிடவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இறைச்சட்டப்படி தீர்ப்பளிக்கும்படி கேட்டு) வந்தனர்.

அப்போதும் அவர்கள் பழிவாங்கு வதைத் தவிர வேறெதற்கும் (ஒப்புக் கொள்ள) மறுத்துவிட்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பழிவாங்கும்படி உத்தரவிட்டார்கள்.

அப்போது (என் தந்தையின் சகோதரர்) அனஸ் பின் அந்நள்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! (என் சகோதரி) “ருபய்யிஉ'வின் முன்பல் உடைக்கப்படுமா? வேண்டாம்! உங்களைச் சத்திய (மார்க்கத்)துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! அவரது முன்பல் உடைக்கப்படக் கூடாது” என்று சொன்னார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அனஸே! அல்லாஹ்வின் சட்டம் பழி வாங்குவதாகும்” என்று சொன்னார்கள்.

அதற்குள் அந்த (இளம்பெண்ணின்) குலத்தார் (ஈட்டுத் தொகை பெற) ஒப்புக்கொண்டு (ருபய்யிஉவை) மன்னித்துவிட்டனர். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் அடியார்களில் சிலர் உள்ளனர்; அவர்கள், அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு (எதையேனும் கூறி)விட்டால் அவன் அதை நிறைவேற்றி (மெய்யாக்கிக் காட்டி) விடுகின்றான்” என்று கூறினார்கள்.38

அத்தியாயம் : 65
4501. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ عَاشُورَاءُ يَصُومُهُ أَهْلُ الْجَاهِلِيَّةِ، فَلَمَّا نَزَلَ رَمَضَانُ قَالَ " مَنْ شَاءَ صَامَهُ، وَمَنْ شَاءَ لَمْ يَصُمْهُ ".
பாடம் : 24 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது கடமையாக்கப்பட்டதைப் போல் உங்கள்மீதும் நோன்பு கடமையாக் கப்பட்டுள்ளது; (இதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் (எனும் 2:183ஆவது இறைவசனம்)
4501. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் கால மக்கள் (குறைஷியர்) ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுவந்தனர். ரமளான் (நோன்பு) கடமையானபோது நபி (ஸல்) அவர்கள், “(ஆஷூரா நோன்பை நோற்க) விரும்புகின்றவர் அதை நோற்கலாம்; (விட்டுவிட) விரும்புகின்றவர் அதை விட்டுவிடலாம்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 65
4502. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَانَ عَاشُورَاءُ يُصَامُ قَبْلَ رَمَضَانَ، فَلَمَّا نَزَلَ رَمَضَانُ قَالَ " مَنْ شَاءَ صَامَ، وَمَنْ شَاءَ أَفْطَرَ ".
பாடம் : 24 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது கடமையாக்கப்பட்டதைப் போல் உங்கள்மீதும் நோன்பு கடமையாக் கப்பட்டுள்ளது; (இதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் (எனும் 2:183ஆவது இறைவசனம்)
4502. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரமளானு(டைய நோன்பு)க்கு முன்பு “ஆஷூரா' (முஹர்ரம் பத்தாம்) நாளன்று நோன்பு நோற்கப்பட்டுவந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது விரும்பியவர் ஆஷூரா நாளன்று நோன்பு நோற்றனர்; (விட்டுவிட) விரும்பியவர் அதை விட்டு விட்டனர்.39


அத்தியாயம் : 65
4503. حَدَّثَنِي مَحْمُودٌ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ دَخَلَ عَلَيْهِ الأَشْعَثُ وَهْوَ يَطْعَمُ فَقَالَ الْيَوْمُ عَاشُورَاءُ. فَقَالَ كَانَ يُصَامُ قَبْلَ أَنْ يَنْزِلَ رَمَضَانُ، فَلَمَّا نَزَلَ رَمَضَانُ تُرِكَ، فَادْنُ فَكُلْ.
பாடம் : 24 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது கடமையாக்கப்பட்டதைப் போல் உங்கள்மீதும் நோன்பு கடமையாக் கப்பட்டுள்ளது; (இதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் (எனும் 2:183ஆவது இறைவசனம்)
4503. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருநாள்) நான் உணவுண்டு கொண்டி ருந்தபோது அஷ்அஸ் பின் கைஸ் அவர்கள் வந்து, “இன்று ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளாயிற்றே!” என்று (நான் நோன்பு நோற்காமல் உண்டுகொண்டிருப்பதைக் கண்டு வியந்து) சொன்னார். நான், “ரமளான் (நோன்பு) கடமையாவதற்கு முன்பு அந்த நாளில் நோன்பு நோற்கப்பட்டுவந்தது. ரமளான் (நோன்பு) கடமையானபோது அந்த (ஆஷுரா) நோன்பு (கட்டாயம் நோற்கப்பட வேண்டும் எனும் சட்டம்) கைவிடப்பட்டது. ஆகவே, அருகில் வந்து நீங்களும் உண்ணுங்கள்” என்று சொன்னேன்.


அத்தியாயம் : 65
4504. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا هِشَامٌ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ يَوْمُ عَاشُورَاءَ تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَصُومُهُ، فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ صَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ، فَلَمَّا نَزَلَ رَمَضَانُ كَانَ رَمَضَانُ الْفَرِيضَةَ، وَتُرِكَ عَاشُورَاءُ، فَكَانَ مَنْ شَاءَ صَامَهُ، وَمَنْ شَاءَ لَمْ يَصُمْهُ.
பாடம் : 24 இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள்மீது கடமையாக்கப்பட்டதைப் போல் உங்கள்மீதும் நோன்பு கடமையாக் கப்பட்டுள்ளது; (இதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம் (எனும் 2:183ஆவது இறைவசனம்)
4504. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:

அறியாமைக் காலத்தில் குறைஷியர் நோன்பு நோற்கும் நாளாக ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாள் இருந்துவந்தது. நபி (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்றுவந்தார்கள். (ஹிஜ்ரத் செய்து) மதீனா நகருக்கு அவர்கள் வந்தபோது அந்நாளில் தாமும் நோன்பு நோற்று, (மற்றவர்களும்) நோன்பு நோற்கும்படி பணித்தார்கள்.

பிறகு ரமளான் (நோன்பு) கடமையானபோது ரமளான் (மாத நோன்பு) கடமையான வழிபாடானது; ஆஷூரா நோன்பு கைவிடப்பட்டு, அன்று விரும்பியவர் நோன்பு நோற்கலாம்; விரும்பியவர் நோன்பு நோற்காமலும் இருக்கலாம் என்று (கூடுதல் வழிபாடாக) ஆகிவிட்டது.40

அத்தியாயம் : 65
4505. حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا رَوْحٌ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ عَطَاءٍ، سَمِعَ ابْنَ عَبَّاسٍ، يَقْرَأُ {وَعَلَى الَّذِينَ يُطَوَّقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ }. قَالَ ابْنُ عَبَّاسٍ لَيْسَتْ بِمَنْسُوخَةٍ، هُوَ الشَّيْخُ الْكَبِيرُ وَالْمَرْأَةُ الْكَبِيرَةُ لاَ يَسْتَطِيعَانِ أَنْ يَصُومَا، فَلْيُطْعِمَانِ مَكَانَ كُلِّ يَوْمٍ مِسْكِينًا.
பாடம் : 25 “(நோன்பு நோற்க வேண்டும் என்ற விதி ரமளான் எனும்) குறிப்பிட்ட சில நாட்களில்தான். ஆனால், (அந்நாட்களில்) உங்களில் எவரேனும் நோயாளியாகவோ பயணத்திலோ இருந்தால், அவர் (அந்நாட்களில் நோன்பு நோற்காமல்) மற்ற நாட்களில் கணக்கிட்டு (நோற்று)க் கொள்ள வேண்டும். நோன்பு நோற்கச் சிரமப்படுகிறவர்கள் அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப் பது கடமையாகும். ஆனால், எவரேனும் விரும்பி (கடமைக்குமேல்) அதிக நன்மை செய்தால், அது அவருக்கு மிகச் சிறந்ததாகும். நீங்கள் (நோன்பின் பலனை) அறிந்தவர்களாக இருப்பின் நோன்பு நோற்பதே மிக்க மேலானதாகும்” எனும் (2:184 ஆவது) இறைவசனம் “அல்லாஹ் (பொதுவாகக்) கூறியிருப்பதைப் போன்றே, எல்லா வித நோய்களின் காரணமாகவும் (ரமளான்) நோன்பை நோற்காமல் கைவிடலாம்” என்று “அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)' அவர்கள் கூறுகிறார்கள்.41 ஹசன் அல்பஸ்ரீ, இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்:42 (குழந்தைக்குப்) பாலூட்டுகின்றவளும் கர்ப்பிணிப் பெண்ணும் (நோன்பு நோற்பதால்) தம் உயிருக்கோ, தம் குழந்தையின் உயிருக்கோ ஆபத்து நேரும் என அஞ்சினால் நோன்பைக் கைவிட்டுவிட்டு, (பிறிதொரு சமயம்) விடுபட்டதை நிறைவேற்றலாம். தள்ளாத முதியவராயிருந்து அவரால் நோன்பு நோற்க இயலவில்லையென்றால், (நோன்பைக் கைவிட்டதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு) உணவளிக்க வேண்டும். அனஸ் (ரலி) அவர்கள் முதுமையடைந்துவிட்ட பின்னால், “ஓராண்டு' அல்லது “ஈராண்டுகள்' ஒவ்வொரு நாளும் ஓர் ஏழைக்கு ரொட்டி மற்றும் இறைச்சியை உண்ணக் கொடுத்து (பரிகாரம் தேடிக்கொண்டு) நோன்பை விட்டுவிட்டார்கள். (இந்த 2:184ஆவது வசனத்திலுள்ள “சிரமப்படுகிறவர்கள்' எனும் சொல்லின் மூலச் சொல்லைப்) பெரும்பாலோர் “யுதீகூனஹு' என்றே ஓதுகிறார்கள். இதுவே பெரும்பான்மை (குர்ஆன் ஓதல்முறை அறிஞர்களின் நிலை)யாகும்.43
4505. அதாஉ பின் அபீ ரபாஹ்-(ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “வ அலல்லதீன யுதவ்வகூனஹு ஃபித்யத் துன் தஆமு மிஸ்கீன்” (ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டு(ம் அதை நோற்கச் சக்தியின்றி) இருப்பவர்கள் (ஒரு நாள் நோன்பைக் கைவிட்டதற்குப்) பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்க வேண்டும்) எனும் (2:184ஆவது) இறைவசனத்தை ஓதி, “இது சட்டம் மாற்றப்பட்ட வசனம் அன்று; நோன்பு நோற்க இயலாத தள்ளாத முதியவரையும் தள்ளாத வயதுடைய பெண்ணையும் இது குறிக்கும். அவர்கள் ஒவ்வொரு நாளுக்கும் பகரமாக ஓர் ஏழைக்கு உணவளிக்கட்டும்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 65
4506. حَدَّثَنَا عَيَّاشُ بْنُ الْوَلِيدِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَرَأَ {فِدْيَةٌ طَعَامُ مَسَاكِينَ} قَالَ هِيَ مَنْسُوخَةٌ.
பாடம் : 26 உங்களில் யார் (ரமளான் எனும்) அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும் (எனும் 2:185ஆவது வசனத்தொடர்)
4506. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், (2:184ஆவது வசனத்தில், “அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்” என்பதன் மூலத்தை) “ஃபித்யத்து தஆமி மஸாகீன' என்று (“ஏழைகள்' எனப் பன்மையாக) ஓதிக்காட்டி “இது, சட்டம் காலாவதியாகிவிட்ட வசனமாகும்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 65
4507. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا بَكْرُ بْنُ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ يَزِيدَ، مَوْلَى سَلَمَةَ بْنِ الأَكْوَعِ عَنْ سَلَمَةَ، قَالَ لَمَّا نَزَلَتْ {وَعَلَى الَّذِينَ يُطِيقُونَهُ فِدْيَةٌ طَعَامُ مِسْكِينٍ} كَانَ مَنْ أَرَادَ أَنْ يُفْطِرَ وَيَفْتَدِيَ حَتَّى نَزَلَتِ الآيَةُ الَّتِي بَعْدَهَا فَنَسَخَتْهَا. مَاتَ بُكَيْرٌ قَبْلَ يَزِيدَ.
பாடம் : 26 உங்களில் யார் (ரமளான் எனும்) அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும் (எனும் 2:185ஆவது வசனத்தொடர்)
4507. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நோன்பு நோற்கச் சக்தியுள்ளவர்கள் (நோன்பு நோற்கத் தவறினால்) அதற்குப் பரிகாரமாக ஓர் ஏழைக்கு உணவளிப்பது கடமையாகும்” எனும் (2:184ஆவது) இறை வசனம் அருளப்பெற்றபோது, விரும்பியவர் நோன்பு நோற்காமல் விட்டுவிட்டுப் பரிகாரம் செய்துவந்தார். பின்னர் இதை மாற்றி இதற்குப் பின்னுள்ள வசனம் (“உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் அதில் நோன்பு நோற்கட்டும்!' என்ற 2:185ஆவது வசனம்) அருளப்பெற்றது.44

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) புகைர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் (தமக்கு அறிவிப்புச் செய்த) யஸீத் பின் அபீஉபைத் அல்அஸ்லமீ (ரஹ்) அவர்களுக்கு முன்பே இறந்து விட்டார்கள்.45

அத்தியாயம் : 65
4508. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ، حَدَّثَنَا شُرَيْحُ بْنُ مَسْلَمَةَ، قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ. لَمَّا نَزَلَ صَوْمُ رَمَضَانَ كَانُوا لاَ يَقْرَبُونَ النِّسَاءَ رَمَضَانَ كُلَّهُ، وَكَانَ رِجَالٌ يَخُونُونَ أَنْفُسَهُمْ، فَأَنْزَلَ اللَّهُ {عَلِمَ اللَّهُ أَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُونَ أَنْفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْ}.
பாடம் : 27 நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் உறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக் கப்பட்டுவிட்டது. அவர்கள் உங்க ளுக்கு ஆடையாக இருக்கிறார்கள்; நீங்கள் அவர்களுக்கு ஆடையாக இருக்கிறீர்கள். (இதுவரை) உங்க ளுக்கு நீங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களை மன்னித்தும்விட்டான். ஆதலால், இனி நீங்கள் அவர்களுடன் (இரவு நேரங்களில்) உறவுகொள்ளுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு(ச் சந்ததிகளாக) ஏற்படுத்தியதைத் தேடிக்கொள்ளுங்கள் (எனும் 2:187ஆவது வசனத்தொடர்)
4508. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரமளான் மாத நோன்பு கடமையானபோது, மக்கள் ரமளான் மாதம் முழுவதும் (தம்) மனைவியரை நெருங்காமலிருந்தார்கள். (மக்களில்) சிலர் தங்களுக்குத் தாங்களே அநீதியிழைத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆகவே, அல்லாஹ், “(இதுவரை) உங்களுக்கு நீங்களே அநீதியிழைத்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்து, நீங்கள் பாவமன்னிப்புக் கோரியதை ஏற்று, உங்களை மன்னித்துவிட்டான்” எனும் (2:187ஆவது) வசனத்தை அருளினான்.46

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65