4289. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، قَالَ أَخْبَرَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَقْبَلَ يَوْمَ الْفَتْحِ مِنْ أَعْلَى مَكَّةَ عَلَى رَاحِلَتِهِ، مُرْدِفًا أُسَامَةَ بْنَ زَيْدٍ وَمَعَهُ بِلاَلٌ وَمَعَهُ عُثْمَانُ بْنُ طَلْحَةَ، مِنَ الْحَجَبَةِ حَتَّى أَنَاخَ فِي الْمَسْجِدِ، فَأَمَرَهُ أَنْ يَأْتِيَ بِمِفْتَاحِ الْبَيْتِ، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهُ أُسَامَةُ بْنُ زَيْدٍ وَبِلاَلٌ وَعُثْمَانُ بْنُ طَلْحَةَ، فَمَكَثَ فِيهِ نَهَارًا طَوِيلاً ثُمَّ خَرَجَ، فَاسْتَبَقَ النَّاسُ، فَكَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَوَّلَ مَنْ دَخَلَ، فَوَجَدَ بِلاَلاً وَرَاءَ الْبَابِ قَائِمًا، فَسَأَلَهُ أَيْنَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَشَارَ لَهُ إِلَى الْمَكَانِ الَّذِي صَلَّى فِيهِ. قَالَ عَبْدُ اللَّهِ فَنَسِيتُ أَنْ أَسْأَلَهُ كَمْ صَلَّى مِنْ سَجْدَةٍ
பாடம் : 50
(மக்கா வெற்றியின்போது) நபி (ஸல்) அவர்கள் மக்காவின் மேற்பகுதியிலிருந்து ஊருக்குள் நுழைந்தது
4289. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தம் வாகனத்தின் மீது உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அமரவைத்துக்கொண்டு மக்காவின் மேற்பகுதியிலிருந்து முன்னேறிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் கஅபாவின் பொறுப்பாளர்களில் ஒருவரான உஸ்மான் பின் தல்ஹா(ரலி) அவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்களது வாகனம் இறுதியில் பள்ளி வாசலில் சென்று மண்டியிட்டு அமர்ந்தது.
நபி (ஸல்) அவர்கள், இறையில்லம் கஅபாவின் சாவியைக் கொண்டுவரும்படி உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். (சாவி கொண்டுவரப்பட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவைத் திறந்துகொண்டு) உசாமா (ரலி), பிலால் (ரலி),உஸ்மான் (ரலி) ஆகியோருடன் உள்ளே நுழைந்தார்கள்.
அங்கே நீண்ட ஒரு பகல் நேரத்திற்குத் தங்கியிருந்தார்கள்; பிறகு வெளியே வந்தார்கள்.
மக்கள் கஅபாவினுள் நுழைய ஒருவரோடொருவர் போட்டியிட்டனர். நான்தான் (அதனுள்) முதலில் நுழைந்தவன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் (கஅபாவின்) வாசலுக்குப் பின்னே நின்று கொண்டிருக்கக் கண்டேன். உடனே அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?” என்று கேட்டேன்.
பிலால் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தைச் சைகையால் சுட்டிக்காட்டினார்கள். நான் அவர்களிடம், “எத்தனை ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்?” என்று கேட்க மறந்துவிட்டேன்.329
அத்தியாயம் : 64
4289. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தம் வாகனத்தின் மீது உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அமரவைத்துக்கொண்டு மக்காவின் மேற்பகுதியிலிருந்து முன்னேறிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் கஅபாவின் பொறுப்பாளர்களில் ஒருவரான உஸ்மான் பின் தல்ஹா(ரலி) அவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்களது வாகனம் இறுதியில் பள்ளி வாசலில் சென்று மண்டியிட்டு அமர்ந்தது.
நபி (ஸல்) அவர்கள், இறையில்லம் கஅபாவின் சாவியைக் கொண்டுவரும்படி உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். (சாவி கொண்டுவரப்பட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவைத் திறந்துகொண்டு) உசாமா (ரலி), பிலால் (ரலி),உஸ்மான் (ரலி) ஆகியோருடன் உள்ளே நுழைந்தார்கள்.
அங்கே நீண்ட ஒரு பகல் நேரத்திற்குத் தங்கியிருந்தார்கள்; பிறகு வெளியே வந்தார்கள்.
மக்கள் கஅபாவினுள் நுழைய ஒருவரோடொருவர் போட்டியிட்டனர். நான்தான் (அதனுள்) முதலில் நுழைந்தவன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் (கஅபாவின்) வாசலுக்குப் பின்னே நின்று கொண்டிருக்கக் கண்டேன். உடனே அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்?” என்று கேட்டேன்.
பிலால் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தைச் சைகையால் சுட்டிக்காட்டினார்கள். நான் அவர்களிடம், “எத்தனை ரக்அத்கள் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்?” என்று கேட்க மறந்துவிட்டேன்.329
அத்தியாயம் : 64
4290. حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ خَارِجَةَ، حَدَّثَنَا حَفْصُ بْنُ مَيْسَرَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ عَامَ الْفَتْحِ مِنْ كَدَاءٍ الَّتِي بِأَعْلَى مَكَّةَ. تَابَعَهُ أَبُو أُسَامَةَ وَوُهَيْبٌ فِي كَدَاءٍ.
பாடம் : 50
(மக்கா வெற்றியின்போது) நபி (ஸல்) அவர்கள் மக்காவின் மேற்பகுதியிலிருந்து ஊருக்குள் நுழைந்தது
4290. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியிலிருந்த “கதா' எனும் கணவாயின் வழியாக (மக்காவினுள்) நுழைந்தார்கள்.330
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
4290. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியிலிருந்த “கதா' எனும் கணவாயின் வழியாக (மக்காவினுள்) நுழைந்தார்கள்.330
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
4291. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَامَ الْفَتْحِ مِنْ أَعْلَى مَكَّةَ مِنْ كَدَاءٍ.
பாடம் : 50
(மக்கா வெற்றியின்போது) நபி (ஸல்) அவர்கள் மக்காவின் மேற்பகுதியிலிருந்து ஊருக்குள் நுழைந்தது
4291. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியான “கதா' எனும் கணவாய் வழியாக ஊருக்குள் நுழைந்தார்கள்.
அத்தியாயம் : 64
4291. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியான “கதா' எனும் கணவாய் வழியாக ஊருக்குள் நுழைந்தார்கள்.
அத்தியாயம் : 64
4292. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، مَا أَخْبَرَنَا أَحَدٌ، أَنَّهُ رَأَى النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي الضُّحَى غَيْرَ أُمِّ هَانِئٍ، فَإِنَّهَا ذَكَرَتْ أَنَّهُ يَوْمَ فَتْحِ مَكَّةَ اغْتَسَلَ فِي بَيْتِهَا ثُمَّ صَلَّى ثَمَانِيَ رَكَعَاتٍ، قَالَتْ لَمْ أَرَهُ صَلَّى صَلاَةً أَخَفَّ مِنْهَا غَيْرَ أَنَّهُ يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ.
பாடம் : 51
நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது தங்கிய இடம்
4292. இப்னு அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “ளுஹா' தொழுகை தொழுததாக உம்மு ஹானீ (ரலி) அவர்களைத் தவிர வேறெவரும் எமக்கு அறிவிக்கவில்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரம் வெற்றி கொள்ளப்பட்ட நாளில் தமது வீட்டில் குளித்ததாகவும் பிறகு எட்டு ரக்அத்கள் தொழுததாகவும் உம்மு ஹானீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
மேலும் அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் அதைவிட விரைவாகத் தொழுத வேறெந்தத் தொழுகையையும் நான் கண்டதில்லை; ஆயினும், அவர்கள் (அந்தத் தொழுகையிலும்) ருகூவையும் சஜ்தாவையும் முழுமையாகச் செய்தார்கள்” என்று சொன்னார்கள்.331
அத்தியாயம் : 64
4292. இப்னு அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், “ளுஹா' தொழுகை தொழுததாக உம்மு ஹானீ (ரலி) அவர்களைத் தவிர வேறெவரும் எமக்கு அறிவிக்கவில்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரம் வெற்றி கொள்ளப்பட்ட நாளில் தமது வீட்டில் குளித்ததாகவும் பிறகு எட்டு ரக்அத்கள் தொழுததாகவும் உம்மு ஹானீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
மேலும் அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் அதைவிட விரைவாகத் தொழுத வேறெந்தத் தொழுகையையும் நான் கண்டதில்லை; ஆயினும், அவர்கள் (அந்தத் தொழுகையிலும்) ருகூவையும் சஜ்தாவையும் முழுமையாகச் செய்தார்கள்” என்று சொன்னார்கள்.331
அத்தியாயம் : 64
4293. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ "" سُبْحَانَكَ اللَّهُمَّ، رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي "".
பாடம் : 52
4293. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் ருகூவிலும் சஜ்தாவிலும், “சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க அல்லாஹும் மஃக்ஃபிர் லீ “ (இறைவா! எம் அதிபதியே! உன்னைப் போற்றிப்புகழ்ந்து துதிக்கிறேன். இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று பிரார்த்திப்பார்கள்.332
அத்தியாயம் : 64
4293. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் ருகூவிலும் சஜ்தாவிலும், “சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க அல்லாஹும் மஃக்ஃபிர் லீ “ (இறைவா! எம் அதிபதியே! உன்னைப் போற்றிப்புகழ்ந்து துதிக்கிறேன். இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று பிரார்த்திப்பார்கள்.332
அத்தியாயம் : 64
4294. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ عُمَرُ يُدْخِلُنِي مَعَ أَشْيَاخِ بَدْرٍ، فَقَالَ بَعْضُهُمْ لِمَ تُدْخِلُ هَذَا الْفَتَى مَعَنَا، وَلَنَا أَبْنَاءٌ مِثْلُهُ فَقَالَ إِنَّهُ مِمَّنْ قَدْ عَلِمْتُمْ. قَالَ فَدَعَاهُمْ ذَاتَ يَوْمٍ، وَدَعَانِي مَعَهُمْ قَالَ وَمَا رُئِيتُهُ دَعَانِي يَوْمَئِذٍ إِلاَّ لِيُرِيَهُمْ مِنِّي فَقَالَ مَا تَقُولُونَ {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ * وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ} حَتَّى خَتَمَ السُّورَةَ، فَقَالَ بَعْضُهُمْ أُمِرْنَا أَنْ نَحْمَدَ اللَّهَ وَنَسْتَغْفِرَهُ، إِذَا نُصِرْنَا وَفُتِحَ عَلَيْنَا. وَقَالَ بَعْضُهُمْ لاَ نَدْرِي. أَوْ لَمْ يَقُلْ بَعْضُهُمْ شَيْئًا. فَقَالَ لِي يَا ابْنَ عَبَّاسٍ أَكَذَاكَ تَقُولُ قُلْتُ لاَ. قَالَ فَمَا تَقُولُ قُلْتُ هُوَ أَجَلُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَعْلَمَهُ اللَّهُ لَهُ {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ} فَتْحُ مَكَّةَ، فَذَاكَ عَلاَمَةُ أَجَلِكَ {فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا} قَالَ عُمَرُ مَا أَعْلَمُ مِنْهَا إِلاَّ مَا تَعْلَمُ.
பாடம் : 52
4294. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொண்ட மூத்த வயதினருடன் வயதில் இளையவனான எனக்கும் (தமது அவையில்) இடமளித்துவந்தார் கள். ஆகவே, அவர்களில் சிலர், “எங்களுடன் இந்த இளைஞருக்கு ஏன் இடமளிக்கிறீர்கள்? எங்களுக்கு அவர் வயதில் பிள்ளைகள்கூட இருக்கின்ற னரே?” என்று கேட்டார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவர் நீங்கள் அறிந்துவைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்” என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒருநாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியினைப் பற்றி உணர்த்திக்காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன்.
(அவர்களெல்லாரும் வந்தவுடன் அவர்களிடம்) உமர் (ரலி) அவர்கள், “இதா ஜாஅ நஸ்ருல்லாஹி” (நபியே! இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைவதை நீர் பார்க்கும்போது உம்முடைய இறைவனைப் புகழ்ந்து அவனைத் துதிப்பீராக! மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக!)” எனும் (குர்ஆனின் 110ஆவது “அந்நஸ்ர்') அத்தியாயத்தை இறுதிவரை ஓதிக்காட்டி, “இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
அவர்களில் சிலர், “நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும்போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்” என்று (விளக்கம்) கூறினர். சிலர், “எங்களுக்குத் தெரியாது” என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் என்னிடம், “இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித்தான் கூறுகிறீர்களா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். அவர்கள், “அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
நான், “அது, அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி)விட்டது என அறிவித்த அறிவிப்பாகும். ஆகவே, “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து' என்பதில் உள்ள “வெற்றி' என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றிதான், (நபியே!) உமது ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். ஆகவே, நீர் உம்முடைய இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! அவன் (நீர் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உமக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்' என்பதே இதன் கருத்தாகும்” என்று சொன்னேன்.
உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகின்றீர்களோ அதையே நானும் அறிகின்றேன்” என்று சொன்னார்கள்.333
அத்தியாயம் : 64
4294. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உமர் (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொண்ட மூத்த வயதினருடன் வயதில் இளையவனான எனக்கும் (தமது அவையில்) இடமளித்துவந்தார் கள். ஆகவே, அவர்களில் சிலர், “எங்களுடன் இந்த இளைஞருக்கு ஏன் இடமளிக்கிறீர்கள்? எங்களுக்கு அவர் வயதில் பிள்ளைகள்கூட இருக்கின்ற னரே?” என்று கேட்டார்கள்.
அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அவர் நீங்கள் அறிந்துவைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்” என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒருநாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியினைப் பற்றி உணர்த்திக்காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன்.
(அவர்களெல்லாரும் வந்தவுடன் அவர்களிடம்) உமர் (ரலி) அவர்கள், “இதா ஜாஅ நஸ்ருல்லாஹி” (நபியே! இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைவதை நீர் பார்க்கும்போது உம்முடைய இறைவனைப் புகழ்ந்து அவனைத் துதிப்பீராக! மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக!)” எனும் (குர்ஆனின் 110ஆவது “அந்நஸ்ர்') அத்தியாயத்தை இறுதிவரை ஓதிக்காட்டி, “இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
அவர்களில் சிலர், “நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும்போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்” என்று (விளக்கம்) கூறினர். சிலர், “எங்களுக்குத் தெரியாது” என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் என்னிடம், “இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித்தான் கூறுகிறீர்களா?” என்று கேட்டார்கள். நான், “இல்லை” என்றேன். அவர்கள், “அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டார்கள்.
நான், “அது, அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி)விட்டது என அறிவித்த அறிவிப்பாகும். ஆகவே, “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து' என்பதில் உள்ள “வெற்றி' என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றிதான், (நபியே!) உமது ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். ஆகவே, நீர் உம்முடைய இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருவீராக! அவன் (நீர் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உமக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்' என்பதே இதன் கருத்தாகும்” என்று சொன்னேன்.
உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகின்றீர்களோ அதையே நானும் அறிகின்றேன்” என்று சொன்னார்கள்.333
அத்தியாயம் : 64
4295. حَدَّثَنَا سَعِيدُ بْنُ شُرَحْبِيلَ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي شُرَيْحٍ الْعَدَوِيِّ، أَنَّهُ قَالَ لِعَمْرِو بْنِ سَعِيدٍ وَهْوَ يَبْعَثُ الْبُعُوثَ إِلَى مَكَّةَ ائْذَنْ لِي أَيُّهَا الأَمِيرُ أُحَدِّثْكَ قَوْلاً قَامَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْغَدَ يَوْمَ الْفَتْحِ، سَمِعَتْهُ أُذُنَاىَ وَوَعَاهُ قَلْبِي، وَأَبْصَرَتْهُ عَيْنَاىَ، حِينَ تَكَلَّمَ بِهِ حَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ "" إِنَّ مَكَّةَ حَرَّمَهَا اللَّهُ وَلَمْ يُحَرِّمْهَا النَّاسُ، لاَ يَحِلُّ لاِمْرِئٍ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الآخِرِ أَنْ يَسْفِكَ بِهَا دَمًا، وَلاَ يَعْضِدَ بِهَا شَجَرًا، فَإِنْ أَحَدٌ تَرَخَّصَ لِقِتَالِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِيهَا فَقُولُوا لَهُ إِنَّ اللَّهَ أَذِنَ لِرَسُولِهِ، وَلَمْ يَأْذَنْ لَكُمْ. وَإِنَّمَا أَذِنَ لِي فِيهَا سَاعَةً مِنْ نَهَارٍ، وَقَدْ عَادَتْ حُرْمَتُهَا الْيَوْمَ كَحُرْمَتِهَا بِالأَمْسِ، وَلْيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ "". فَقِيلَ لأَبِي شُرَيْحٍ مَاذَا قَالَ لَكَ عَمْرٌو قَالَ قَالَ أَنَا أَعْلَمُ بِذَلِكَ مِنْكَ يَا أَبَا شُرَيْحٍ، إِنَّ الْحَرَمَ لاَ يُعِيذُ عَاصِيًا، وَلاَ فَارًّا بِدَمٍ، وَلاَ فَارًّا بِخَرْبَةٍ.
பாடம் : 52
4295. சயீத் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் பின் சயீத், (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக) மக்காவை நோக்கிப் படைகளை அனுப்பியபோது அவரிடம் அபூஷுரைஹ் அல்அத்வீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
தலைவரே! எனக்கு அனுமதி தாருங்கள். மக்கா வெற்றிக்கு மறுநாள், நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை உங்களுக்கு நான் கூறுகிறேன். என் காதுகள் அதைச் செவியுற்றன; என் உள்ளம் அதை நினைவில் வைத்திருக்கிறது; அவர்கள் அதைக் கூறும்போது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின் வருமாறு கூறினார்கள்:
அல்லாஹ்வே மக்காவிற்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்குப் புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர் கள் அல்லர். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கே இரத்தத்தைச் சிந்துவதோ இங்குள்ள மரத்தை வெட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை. அல்லாஹ்வின் தூதர் இங்கு போர் செய்ததால் இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், “அல்லாஹ் தன் தூதருக்குத்தான் அனுமதி வழங்கினான்; உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை” என்று கூறிவிடுங்கள். எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி அளிக்கப்பட்டது. இன்று அதன் புனிதத் தன்மை நேற்றைய அதன் புனிதத் தன்மையைப் போல் மீண்டு வந்துவிட்டது. (இதை இங்கு) வந்திருப்போர் வராதவருக்குச் சொல்லிவிடுங்கள்” என்று கூறினார்கள்.
அபூஷுரைஹ் (ரலி) அவர்களிடம், “இதற்கு அம்ர் உங்களுக்கு என்ன பதில் கூறினார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ அபூஷுரைஹே! உம்மை விட இதைப் பற்றி நான் நன்கு அறிந்தவன். நிச்சயமாக, புனித (ஹரம்) எல்லை, குற்றவாளிக்கும், கொலை செய்துவிட்டு, அல்லது கொள்ளை அடித்துவிட்டு ஓடி வந்தவருக்கும் பாதுகாப்பு அளிக்காது என அம்ர் கூறினார்” என்று பதிலளித் தார்கள்.334
(இங்கு “கொள்ளை' என்பதைக் குறிக்க) “கர்பத்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு “சோதனை' என்பது (சொற்) பொருளாகும்.
அத்தியாயம் : 64
4295. சயீத் பின் அபீசயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுநராயிருந்த) அம்ர் பின் சயீத், (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக) மக்காவை நோக்கிப் படைகளை அனுப்பியபோது அவரிடம் அபூஷுரைஹ் அல்அத்வீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:
தலைவரே! எனக்கு அனுமதி தாருங்கள். மக்கா வெற்றிக்கு மறுநாள், நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை உங்களுக்கு நான் கூறுகிறேன். என் காதுகள் அதைச் செவியுற்றன; என் உள்ளம் அதை நினைவில் வைத்திருக்கிறது; அவர்கள் அதைக் கூறும்போது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டுப் பின் வருமாறு கூறினார்கள்:
அல்லாஹ்வே மக்காவிற்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்குப் புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர் கள் அல்லர். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக்கூடிய எவருக்கும் இங்கே இரத்தத்தைச் சிந்துவதோ இங்குள்ள மரத்தை வெட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை. அல்லாஹ்வின் தூதர் இங்கு போர் செய்ததால் இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், “அல்லாஹ் தன் தூதருக்குத்தான் அனுமதி வழங்கினான்; உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை” என்று கூறிவிடுங்கள். எனக்குக்கூட பகலில் சிறிது நேரம் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி அளிக்கப்பட்டது. இன்று அதன் புனிதத் தன்மை நேற்றைய அதன் புனிதத் தன்மையைப் போல் மீண்டு வந்துவிட்டது. (இதை இங்கு) வந்திருப்போர் வராதவருக்குச் சொல்லிவிடுங்கள்” என்று கூறினார்கள்.
அபூஷுரைஹ் (ரலி) அவர்களிடம், “இதற்கு அம்ர் உங்களுக்கு என்ன பதில் கூறினார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ அபூஷுரைஹே! உம்மை விட இதைப் பற்றி நான் நன்கு அறிந்தவன். நிச்சயமாக, புனித (ஹரம்) எல்லை, குற்றவாளிக்கும், கொலை செய்துவிட்டு, அல்லது கொள்ளை அடித்துவிட்டு ஓடி வந்தவருக்கும் பாதுகாப்பு அளிக்காது என அம்ர் கூறினார்” என்று பதிலளித் தார்கள்.334
(இங்கு “கொள்ளை' என்பதைக் குறிக்க) “கர்பத்' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு “சோதனை' என்பது (சொற்) பொருளாகும்.
அத்தியாயம் : 64
4296. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ عَامَ الْفَتْحِ وَهْوَ بِمَكَّةَ "" إِنَّ اللَّهَ وَرَسُولَهُ حَرَّمَ بَيْعَ الْخَمْرِ "".
பாடம் : 52
4296. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றி ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கியிருந்தபோது, “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மது வியாபாரத்தைத் தடை செய்து விட்டார்கள்” என்று அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
அத்தியாயம் : 64
4296. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றி ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கியிருந்தபோது, “அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மது வியாபாரத்தைத் தடை செய்து விட்டார்கள்” என்று அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
அத்தியாயம் : 64
4297. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ،. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَقَمْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَشْرًا نَقْصُرُ الصَّلاَةَ.
பாடம் : 53
மக்கா வெற்றியின்போது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கி யிருந்தது
4297. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள், நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையைக் குறைத்து (கஸ்ர் செய்து) தொழுதவர்களாக (மக்கா நகரில்) பத்து நாட்கள் தங்கினோம்.335
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
4297. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள், நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையைக் குறைத்து (கஸ்ர் செய்து) தொழுதவர்களாக (மக்கா நகரில்) பத்து நாட்கள் தங்கினோம்.335
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
4298. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا عَاصِمٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، رضى الله عنهما قَالَ أَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِمَكَّةَ تِسْعَةَ عَشَرَ يَوْمًا يُصَلِّي رَكْعَتَيْنِ.
பாடம் : 53
மக்கா வெற்றியின்போது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கி யிருந்தது
4298. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரில் இரண்டு ரக்அத்கள் (கஸ்ராகத்) தொழுதபடி பத்தொன்பது நாட்கள் தங்கியிருந்தார்கள்.336
அத்தியாயம் : 64
4298. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரில் இரண்டு ரக்அத்கள் (கஸ்ராகத்) தொழுதபடி பத்தொன்பது நாட்கள் தங்கியிருந்தார்கள்.336
அத்தியாயம் : 64
4299. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا أَبُو شِهَابٍ، عَنْ عَاصِمٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ أَقَمْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ تِسْعَ عَشْرَةَ نَقْصُرُ الصَّلاَةَ. وَقَالَ ابْنُ عَبَّاسٍ وَنَحْنُ نَقْصُرُ مَا بَيْنَنَا وَبَيْنَ تِسْعَ عَشْرَةَ، فَإِذَا زِدْنَا أَتْمَمْنَا.
பாடம் : 53
மக்கா வெற்றியின்போது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கி யிருந்தது
4299. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (மக்கா வெற்றிப்) பயணத்தின் போது நபி (ஸல்) அவர்களுடன் தொழுகை யைக் குறைத்துத் தொழுதவர்களாக பத்தொன்பது நாட்கள் தங்கினோம்.
(பொதுவாக) நாங்கள் (பிரயாணம் மேற்கொண்டு தங்கினால்) பத்தொன்பது நாட்கள்வரை குறைத்துத் தொழு(தபடி தங்கு)வோம். அதற்கு மேலும் நாங்கள் தங்கும் போது (குறைத்துத் தொழாமல் வழக்கப்படி) முழுமையாகத் தொழுவோம்.
அத்தியாயம் : 64
4299. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் (மக்கா வெற்றிப்) பயணத்தின் போது நபி (ஸல்) அவர்களுடன் தொழுகை யைக் குறைத்துத் தொழுதவர்களாக பத்தொன்பது நாட்கள் தங்கினோம்.
(பொதுவாக) நாங்கள் (பிரயாணம் மேற்கொண்டு தங்கினால்) பத்தொன்பது நாட்கள்வரை குறைத்துத் தொழு(தபடி தங்கு)வோம். அதற்கு மேலும் நாங்கள் தங்கும் போது (குறைத்துத் தொழாமல் வழக்கப்படி) முழுமையாகத் தொழுவோம்.
அத்தியாயம் : 64
4300. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ ثَعْلَبَةَ بْنِ صُعَيْرٍ، وَكَانَ النَّبِيُّ، صلى الله عليه وسلم قَدْ مَسَحَ وَجْهَهُ عَامَ الْفَتْحِ.
பாடம் : 54
4300. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் ஸஅலபா பின் ஸுஐர் (ரலி) அவர்கள்-அன்னாரின் முகத்தை நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் (அன்போடு தடவிக் கொடுத்திருந்தார்கள் - எனக்குத் தெரிவித்தார்கள்...337
அத்தியாயம் : 64
4300. இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் ஸஅலபா பின் ஸுஐர் (ரலி) அவர்கள்-அன்னாரின் முகத்தை நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் (அன்போடு தடவிக் கொடுத்திருந்தார்கள் - எனக்குத் தெரிவித்தார்கள்...337
அத்தியாயம் : 64
4301. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سُنَيْنٍ أَبِي جَمِيلَةَ، قَالَ أَخْبَرَنَا وَنَحْنُ، مَعَ ابْنِ الْمُسَيَّبِ قَالَ وَزَعَمَ أَبُو جَمِيلَةَ أَنَّهُ أَدْرَكَ النَّبِيَّ صلى الله عليه وسلم، وَخَرَجَ مَعَهُ عَامَ الْفَتْحِ.
பாடம் : 54
4301. ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
நாங்கள் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களுடன் இருந்தபோது, அபூ ஜமீலா சுனைன் (ரலி) அவர்கள், தாம் நபி (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றிருந்ததாகவும் அவர்களுடன் மக்கா வெற்றி ஆண்டில் (மக்கா நோக்கி இஸ்லாமியச் சேனையில் ஒருவராகப்) புறப்பட்டதாகவும் சொன்னார்கள்.
அத்தியாயம் : 64
4301. ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
நாங்கள் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களுடன் இருந்தபோது, அபூ ஜமீலா சுனைன் (ரலி) அவர்கள், தாம் நபி (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றிருந்ததாகவும் அவர்களுடன் மக்கா வெற்றி ஆண்டில் (மக்கா நோக்கி இஸ்லாமியச் சேனையில் ஒருவராகப்) புறப்பட்டதாகவும் சொன்னார்கள்.
அத்தியாயம் : 64
4302. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ عَمْرِو بْنِ سَلِمَةَ، قَالَ قَالَ لِي أَبُو قِلاَبَةَ أَلاَ تَلْقَاهُ فَتَسْأَلَهُ، قَالَ فَلَقِيتُهُ فَسَأَلْتُهُ فَقَالَ كُنَّا بِمَاءٍ مَمَرَّ النَّاسِ، وَكَانَ يَمُرُّ بِنَا الرُّكْبَانُ فَنَسْأَلُهُمْ مَا لِلنَّاسِ مَا لِلنَّاسِ مَا هَذَا الرَّجُلُ فَيَقُولُونَ يَزْعُمُ أَنَّ اللَّهَ أَرْسَلَهُ أَوْحَى إِلَيْهِ، أَوْ أَوْحَى اللَّهُ بِكَذَا. فَكُنْتُ أَحْفَظُ ذَلِكَ الْكَلاَمَ، وَكَأَنَّمَا يُغْرَى فِي صَدْرِي، وَكَانَتِ الْعَرَبُ تَلَوَّمُ بِإِسْلاَمِهِمِ الْفَتْحَ، فَيَقُولُونَ اتْرُكُوهُ وَقَوْمَهُ، فَإِنَّهُ إِنْ ظَهَرَ عَلَيْهِمْ فَهْوَ نَبِيٌّ صَادِقٌ. فَلَمَّا كَانَتْ وَقْعَةُ أَهْلِ الْفَتْحِ بَادَرَ كُلُّ قَوْمٍ بِإِسْلاَمِهِمْ، وَبَدَرَ أَبِي قَوْمِي بِإِسْلاَمِهِمْ، فَلَمَّا قَدِمَ قَالَ جِئْتُكُمْ وَاللَّهِ مِنْ عِنْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم حَقًّا فَقَالَ "" صَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا، وَصَلُّوا كَذَا فِي حِينِ كَذَا، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ، فَلْيُؤَذِّنْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْثَرُكُمْ قُرْآنًا "". فَنَظَرُوا فَلَمْ يَكُنْ أَحَدٌ أَكْثَرَ قُرْآنًا مِنِّي، لِمَا كُنْتُ أَتَلَقَّى مِنَ الرُّكْبَانِ، فَقَدَّمُونِي بَيْنَ أَيْدِيهِمْ، وَأَنَا ابْنُ سِتٍّ أَوْ سَبْعِ، سِنِينَ وَكَانَتْ عَلَىَّ بُرْدَةٌ، كُنْتُ إِذَا سَجَدْتُ تَقَلَّصَتْ عَنِّي، فَقَالَتِ امْرَأَةٌ مِنَ الْحَىِّ أَلاَ تُغَطُّوا عَنَّا اسْتَ قَارِئِكُمْ. فَاشْتَرَوْا فَقَطَعُوا لِي قَمِيصًا، فَمَا فَرِحْتُ بِشَىْءٍ فَرَحِي بِذَلِكَ الْقَمِيصِ.
பாடம் : 54
4302. அம்ர் பின் சலிமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர்நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக்கொண்டிருந்தோம்.
அதற்கு அவர்கள், “அந்த மனிதர் “தம்மை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக' அல்லது “அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்' கூறுகிறார்” என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக்காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப
அத்தியாயம் : 64
4302. அம்ர் பின் சலிமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர்நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்றுகொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், “மக்களுக்கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன?” என்று கேட்டுக்கொண்டிருந்தோம்.
அதற்கு அவர்கள், “அந்த மனிதர் “தம்மை அல்லாஹ் (இறைத்தூதராக) அனுப்பியிருப்பதாக' அல்லது “அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்' கூறுகிறார்” என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக்காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப
அத்தியாயம் : 64
4303. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ عَنِ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عَائِشَةَ قَالَتْ كَانَ عُتْبَةُ بْنُ أَبِي وَقَّاصٍ عَهِدَ إِلَى أَخِيهِ سَعْدٍ أَنْ يَقْبِضَ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ، وَقَالَ عُتْبَةُ إِنَّهُ ابْنِي. فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَكَّةَ فِي الْفَتْحِ أَخَذَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ابْنَ وَلِيدَةِ زَمْعَةَ، فَأَقْبَلَ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، وَأَقْبَلَ مَعَهُ عَبْدُ بْنُ زَمْعَةَ، فَقَالَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ هَذَا ابْنُ أَخِي، عَهِدَ إِلَىَّ أَنَّهُ ابْنُهُ. قَالَ عَبْدُ بْنُ زَمْعَةَ يَا رَسُولَ اللَّهِ، هَذَا أَخِي، هَذَا ابْنُ زَمْعَةَ، وُلِدَ عَلَى فِرَاشِهِ. فَنَظَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى ابْنِ وَلِيدَةِ زَمْعَةَ، فَإِذَا أَشْبَهُ النَّاسِ بِعُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" هُوَ لَكَ، هُوَ أَخُوكَ يَا عَبْدُ بْنَ زَمْعَةَ "". مِنْ أَجْلِ أَنَّهُ وُلِدَ عَلَى فِرَاشِهِ، وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" احْتَجِبِي مِنْهُ يَا سَوْدَةُ "". لِمَا رَأَى مِنْ شَبَهِ عُتْبَةَ بْنِ أَبِي وَقَّاصٍ. قَالَ ابْنُ شِهَابٍ قَالَتْ عَائِشَةُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ "". وَقَالَ ابْنُ شِهَابٍ وَكَانَ أَبُو هُرَيْرَةَ يَصِيحُ بِذَلِكَ.
பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது.
அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், “அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டுவிடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர்தான் (என்று நிரூபணமாகி விடும்)” என்று சொன்னார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார்.
நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், “இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் யார் குர்ஆனை அதிகம் அறிந்துவைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்' என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.
ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னைவிட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள்.
நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும்போது அது என் முதுகை(விட்டு நழுவிப் பின்புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், “உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்கமாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
4303. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
உத்பா பின் அபீவக்காஸ் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், “ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் என் மகன்தான்'என்று கூறி (மக்கா செல்லும்போது)அவனைப் பிடித்து(வைத்து)க்கொள்ளும்படி உறுதிமொழி வாங்கியிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கா வெற்றியின் சமயம் மக்காவுக்கு (தம் தோழர்களுடன்) வருகை தந்தபோது, சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அவர்களுடன் ஸம்ஆவின் மகன் அப்த் (ரலி) அவர்களும் சென்றார்கள்.
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம், ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைச் சுட்டிக்காட்டி), “இவன் என் சகோதரரின் மகன்; இவனைத் தன் மகன் என்று (சொல்லி, இவனைப் பிடித்துக்கொள்ளும்படி என்னிடம்) என் சகோதரர் உறுதிமொழி வாங்கியுள்ளார்” என்று சொன்னார்.
அப்த் பின் ஸம்ஆ, “அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரன். இவன் (என் தந்தை) ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன்; அவள் என் தந்தையின் அதிகாரத்தில் இருந்தபோதுதான் இவன் பிறந்தான்” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைக் கூர்ந்துபார்த்தார்கள். அவன் (மக்காவாசிகளிலேயே) உத்பா பின் அபீவக்காஸை (தோற்றத்தில்) மிகவும் ஒத்திருந்தான்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவன் உனக்குரியவன்தான்; இவன் உன் சகோதரன்தான், அப்த் பின் ஸம்ஆவே!” என்று சொன்னார்கள். அவன் ஸம்ஆவின் அதிகாரத்தில் (அவனுடைய தாய்) இருந்தபோது பிறந்த காரணத்தால் அப்படிச் சொன்னார்கள்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்பா பின் அபீவக்காஸின் சாயலில் அந்த இளைஞன் இருந்ததைப் பார்த்த காரணத்தால், (தம் துணைவியார் சவ்தா (ரலி) அவர்களை நோக்கி, “ஸம்ஆ வின் மகள்) சவ்தாவே! இவனிடமிருந்து நீ திரையிட்டுக்கொள்” என்று சொன்னார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(ஒரு பெண்) யாருடைய அதிகாரத்தில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே அக்குழந்தை உரியது. விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது' என்று சொன்னார்கள்” என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.338
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
மேலும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் இந்தத் தீர்ப்பை (மக்களுக்கு) உரக்க அறிவித்துவந்தார்கள்.
அத்தியாயம் : 64
4303. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
உத்பா பின் அபீவக்காஸ் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், “ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் என் மகன்தான்'என்று கூறி (மக்கா செல்லும்போது)அவனைப் பிடித்து(வைத்து)க்கொள்ளும்படி உறுதிமொழி வாங்கியிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கா வெற்றியின் சமயம் மக்காவுக்கு (தம் தோழர்களுடன்) வருகை தந்தபோது, சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார்கள். அவர்களுடன் ஸம்ஆவின் மகன் அப்த் (ரலி) அவர்களும் சென்றார்கள்.
சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம், ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைச் சுட்டிக்காட்டி), “இவன் என் சகோதரரின் மகன்; இவனைத் தன் மகன் என்று (சொல்லி, இவனைப் பிடித்துக்கொள்ளும்படி என்னிடம்) என் சகோதரர் உறுதிமொழி வாங்கியுள்ளார்” என்று சொன்னார்.
அப்த் பின் ஸம்ஆ, “அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரன். இவன் (என் தந்தை) ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன்; அவள் என் தந்தையின் அதிகாரத்தில் இருந்தபோதுதான் இவன் பிறந்தான்” என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைக் கூர்ந்துபார்த்தார்கள். அவன் (மக்காவாசிகளிலேயே) உத்பா பின் அபீவக்காஸை (தோற்றத்தில்) மிகவும் ஒத்திருந்தான்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவன் உனக்குரியவன்தான்; இவன் உன் சகோதரன்தான், அப்த் பின் ஸம்ஆவே!” என்று சொன்னார்கள். அவன் ஸம்ஆவின் அதிகாரத்தில் (அவனுடைய தாய்) இருந்தபோது பிறந்த காரணத்தால் அப்படிச் சொன்னார்கள்.
மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்பா பின் அபீவக்காஸின் சாயலில் அந்த இளைஞன் இருந்ததைப் பார்த்த காரணத்தால், (தம் துணைவியார் சவ்தா (ரலி) அவர்களை நோக்கி, “ஸம்ஆ வின் மகள்) சவ்தாவே! இவனிடமிருந்து நீ திரையிட்டுக்கொள்” என்று சொன்னார்கள்.
இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “(ஒரு பெண்) யாருடைய அதிகாரத்தில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே அக்குழந்தை உரியது. விபசாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது' என்று சொன்னார்கள்” என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.338
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
மேலும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் இந்தத் தீர்ப்பை (மக்களுக்கு) உரக்க அறிவித்துவந்தார்கள்.
அத்தியாயம் : 64
4304. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ امْرَأَةً، سَرَقَتْ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ الْفَتْحِ، فَفَزِعَ قَوْمُهَا إِلَى أُسَامَةَ بْنِ زَيْدٍ يَسْتَشْفِعُونَهُ، قَالَ عُرْوَةُ فَلَمَّا كَلَّمَهُ أُسَامَةُ فِيهَا تَلَوَّنَ وَجْهُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" أَتُكَلِّمُنِي فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ "". قَالَ أُسَامَةُ اسْتَغْفِرْ لِي يَا رَسُولَ اللَّهِ. فَلَمَّا كَانَ الْعَشِيُّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم خَطِيبًا، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ، فَإِنَّمَا أَهْلَكَ النَّاسَ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمُ الشَّرِيفُ تَرَكُوهُ، وَإِذَا سَرَقَ فِيهِمِ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا "". ثُمَّ أَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِتِلْكَ الْمَرْأَةِ، فَقُطِعَتْ يَدُهَا، فَحَسُنَتْ تَوْبَتُهَا بَعْدَ ذَلِكَ وَتَزَوَّجَتْ. قَالَتْ عَائِشَةُ فَكَانَتْ تَأْتِي بَعْدَ ذَلِكَ فَأَرْفَعُ حَاجَتَهَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது.
அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், “அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டுவிடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர்தான் (என்று நிரூபணமாகி விடும்)” என்று சொன்னார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார்.
நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், “இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் யார் குர்ஆனை அதிகம் அறிந்துவைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்' என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.
ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னைவிட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள்.
நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும்போது அது என் முதுகை(விட்டு நழுவிப் பின்புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், “உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்கமாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
4304. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் மக்கா வெற்றிப் போரின்போது (மக்ஸூமி குலப்) பெண் ஒருவர் திருடிவிட்டார். ஆகவே, அவருடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவருக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். உசாமா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) அவருக்காகப் (பரிந்து) பேசியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது.
அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனை களில் ஒன்றைக் குறித்தா (அதைத் தளர்த்திவிடும்படி) என்னிடம் நீ (பரிந்து) பேசுகிறாய்?” என்று கேட்டார்கள். உடனே உசாமா (ரலி) அவர்கள், “எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள்.
மாலை நேரம் வந்தபோது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்ற எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனதுதகுதிக்கேற்றபடி போற்றிப் புகழ்ந்து விட்டுப் பிறகு, “இறைவாழ்த்துக்குப்பின்! உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்த (குலத்த)வர் திருடும்போது அவரை (தண்டிக்காமல்) விட்டுவந்ததும், பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வர் திருடும்போது அவருக்குத் தண்டனை கொடுத்து வந்ததும்தான். முஹம்மதின் உயிர் யார் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! முஹம்மதின் மகள் பாத்திமாவே திருடிவிட்டிருந்தாலும் அவரது கையையும் நான் கண்டிப்பாக வெட்டியிருப்பேன்” என்று சொன்னார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவரது கை வெட்டப்பட்டது. அதன் பிறகு அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி)விட்டார்; மேலும், மணம் புரிந்தும்கொண்டார்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அதன் பிறகு அவர் என்னிடம் வந்துகொண்டிருந்தார். நான் அவரது தேவையை(ப் பூர்த்தி செய்யும்படி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிடுவேன்.339
அத்தியாயம் : 64
4304. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் காலத்தில் மக்கா வெற்றிப் போரின்போது (மக்ஸூமி குலப்) பெண் ஒருவர் திருடிவிட்டார். ஆகவே, அவருடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவருக்காகப் பரிந்துரைக்கும்படி கோரி, உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். உசாமா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) அவருக்காகப் (பரிந்து) பேசியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது.
அவர்கள், “அல்லாஹ்வின் தண்டனை களில் ஒன்றைக் குறித்தா (அதைத் தளர்த்திவிடும்படி) என்னிடம் நீ (பரிந்து) பேசுகிறாய்?” என்று கேட்டார்கள். உடனே உசாமா (ரலி) அவர்கள், “எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே!” என்று சொன்னார்கள்.
மாலை நேரம் வந்தபோது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்ற எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனதுதகுதிக்கேற்றபடி போற்றிப் புகழ்ந்து விட்டுப் பிறகு, “இறைவாழ்த்துக்குப்பின்! உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்த (குலத்த)வர் திருடும்போது அவரை (தண்டிக்காமல்) விட்டுவந்ததும், பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வர் திருடும்போது அவருக்குத் தண்டனை கொடுத்து வந்ததும்தான். முஹம்மதின் உயிர் யார் கையிலுள்ளதோ அ(ந்த இறை)வன் மீதாணையாக! முஹம்மதின் மகள் பாத்திமாவே திருடிவிட்டிருந்தாலும் அவரது கையையும் நான் கண்டிப்பாக வெட்டியிருப்பேன்” என்று சொன்னார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவரது கை வெட்டப்பட்டது. அதன் பிறகு அவர் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி)விட்டார்; மேலும், மணம் புரிந்தும்கொண்டார்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அதன் பிறகு அவர் என்னிடம் வந்துகொண்டிருந்தார். நான் அவரது தேவையை(ப் பூர்த்தி செய்யும்படி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிடுவேன்.339
அத்தியாயம் : 64
4305. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي عُثْمَانَ، قَالَ حَدَّثَنِي مُجَاشِعٌ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِأَخِي بَعْدَ الْفَتْحِ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، جِئْتُكَ بِأَخِي لِتُبَايِعَهُ عَلَى الْهِجْرَةِ. قَالَ " ذَهَبَ أَهْلُ الْهِجْرَةِ بِمَا فِيهَا ". فَقُلْتُ عَلَى أَىِّ شَىْءٍ تُبَايِعُهُ قَالَ " أُبَايِعُهُ عَلَى الإِسْلاَمِ وَالإِيمَانِ وَالْجِهَادِ" فَلَقِيتُ أَبَا مَعْبَدٍ بَعْدُ وَكَانَ أَكْبَرَهُمَا فَسَأَلْتُهُ فَقَالَ صَدَقَ مُجَاشِعٌ.
பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது.
அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், “அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டுவிடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர்தான் (என்று நிரூபணமாகி விடும்)” என்று சொன்னார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார்.
நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், “இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் யார் குர்ஆனை அதிகம் அறிந்துவைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்' என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.
ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னைவிட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள்.
நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும்போது அது என் முதுகை(விட்டு நழுவிப் பின்புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், “உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்கமாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
4305. முஜாஷிஉ பின் மஸ்ஊத் பின் ஸஅலபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றிக்குப் பிறகு, நான் என் சகோதரர் (முஜாலித் பின் மஸ்ஊத்) உடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! ஹிஜ்ரத் செய்வதற் கான உறுதிமொழியை என் சகோதரரிடம் தாங்கள் பெற வேண்டுமென்பதற்காக அவரை அழைத்துக்கொண்டு நான் தங்களிடம் வந்துள்ளேன்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “(மக்கா வெற்றிக்கு முன்பு) ஹிஜ்ரத் செய்தவர்கள் அதிலுள்ள நன்மையை (முன்பே) கொண்டுசென்றுவிட்டார்கள்” என்று பதில் சொன்னார்கள்.
நான், “(அப்படியென்றால்) எதற்காக அவரிடம் தாங்கள் உறுதிமொழி பெறுவீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இஸ்லாத்தின்படி நடக்கவும் இறைநம்பிக்கையில் நிலைத்திருக்கவும், (தேவைப்படும்போது) அறப்போர் புரியவும் நான் அவரிடம் உறுதிமொழி பெறுவேன்” என்று பதிலளித்தார்கள்.340
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இதற்குப்பின் நான் (முஜாஷிஉ அவர்களின் சகோதரர்) மஅபத் (எனும்முஜாலித்) அவர்களைச் சந்தித்தேன். அவரே சகோதரர்கள் இருவரில் பெரியவராக இருந்தார். (இந்தச் செய்தி பற்றி) அவரிடம் விசாரித்தேன். அவர், “முஜாஷிஉ உண்மையே சொன்னார்” என்று கூறினார்.
அத்தியாயம் : 64
4305. முஜாஷிஉ பின் மஸ்ஊத் பின் ஸஅலபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்கா வெற்றிக்குப் பிறகு, நான் என் சகோதரர் (முஜாலித் பின் மஸ்ஊத்) உடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! ஹிஜ்ரத் செய்வதற் கான உறுதிமொழியை என் சகோதரரிடம் தாங்கள் பெற வேண்டுமென்பதற்காக அவரை அழைத்துக்கொண்டு நான் தங்களிடம் வந்துள்ளேன்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “(மக்கா வெற்றிக்கு முன்பு) ஹிஜ்ரத் செய்தவர்கள் அதிலுள்ள நன்மையை (முன்பே) கொண்டுசென்றுவிட்டார்கள்” என்று பதில் சொன்னார்கள்.
நான், “(அப்படியென்றால்) எதற்காக அவரிடம் தாங்கள் உறுதிமொழி பெறுவீர்கள்” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இஸ்லாத்தின்படி நடக்கவும் இறைநம்பிக்கையில் நிலைத்திருக்கவும், (தேவைப்படும்போது) அறப்போர் புரியவும் நான் அவரிடம் உறுதிமொழி பெறுவேன்” என்று பதிலளித்தார்கள்.340
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
இதற்குப்பின் நான் (முஜாஷிஉ அவர்களின் சகோதரர்) மஅபத் (எனும்முஜாலித்) அவர்களைச் சந்தித்தேன். அவரே சகோதரர்கள் இருவரில் பெரியவராக இருந்தார். (இந்தச் செய்தி பற்றி) அவரிடம் விசாரித்தேன். அவர், “முஜாஷிஉ உண்மையே சொன்னார்” என்று கூறினார்.
அத்தியாயம் : 64
4307. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ، عَنْ مُجَاشِعِ بْنِ مَسْعُودٍ، انْطَلَقْتُ بِأَبِي مَعْبَدٍ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم لِيُبَايِعَهُ عَلَى الْهِجْرَةِ، قَالَ " مَضَتِ الْهِجْرَةُ لأَهْلِهَا، أُبَايِعُهُ عَلَى الإِسْلاَمِ وَالْجِهَادِ." فَلَقِيتُ أَبَا مَعْبَدٍ فَسَأَلْتُهُ فَقَالَ صَدَقَ مُجَاشِعٌ. وَقَالَ خَالِدٌ عَنْ أَبِي عُثْمَانَ عَنْ مُجَاشِعٍ أَنَّهُ جَاءَ بِأَخِيهِ مُجَالِدٍ.
பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது.
அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், “அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டுவிடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர்தான் (என்று நிரூபணமாகி விடும்)” என்று சொன்னார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார்.
நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்தபோது, “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், “இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்துவிட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் யார் குர்ஆனை அதிகம் அறிந்துவைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்' என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள்.
ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்தபோது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னைவிட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள்.
நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும்போது அது என் முதுகை(விட்டு நழுவிப் பின்புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், “உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்கமாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
4307. முஜாஷிஉ பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழி யைப் பெறுவதற்காக (என் சகோதரர்) அபூமஅபத் (முஜாலித்) அவர்களை அழைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், “ஹிஜ்ரத், அதற்குரியவர் களுக்குக் கடமையாகி (நிறைவேறி மக்கா வெற்றியோடு) முடிந்துவிட்டது. இனி, இஸ்லாத்தின்படி நடக்கவும் அறப்போர் புரியவும்தான் இவரிடம் நான் உறுதிமொழி பெறுவேன்” என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர் அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
(இதை எனக்கு அறிவித்த முஜாஷிஉ (ரலி) அவர்களின் சகோதரர்) அபூமஅபத் (முஜாலித்-ரலி) அவர்களைப் பின்னர் நான் சந்தித்து, அவரிடம் (இந்தச் செய்தி பற்றி) விசாரித்தேன். அவர், “முஜாஷிஉ உண்மையே சொன்னார்” என்று கூறினார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் முஜாஷிஉ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்: நான் என் சகோதரர் முஜாலிதுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன்.
அத்தியாயம் : 64
4307. முஜாஷிஉ பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழி யைப் பெறுவதற்காக (என் சகோதரர்) அபூமஅபத் (முஜாலித்) அவர்களை அழைத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், “ஹிஜ்ரத், அதற்குரியவர் களுக்குக் கடமையாகி (நிறைவேறி மக்கா வெற்றியோடு) முடிந்துவிட்டது. இனி, இஸ்லாத்தின்படி நடக்கவும் அறப்போர் புரியவும்தான் இவரிடம் நான் உறுதிமொழி பெறுவேன்” என்று சொன்னார்கள்.
இதன் அறிவிப்பாளர் அபூஉஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
(இதை எனக்கு அறிவித்த முஜாஷிஉ (ரலி) அவர்களின் சகோதரர்) அபூமஅபத் (முஜாலித்-ரலி) அவர்களைப் பின்னர் நான் சந்தித்து, அவரிடம் (இந்தச் செய்தி பற்றி) விசாரித்தேன். அவர், “முஜாஷிஉ உண்மையே சொன்னார்” என்று கூறினார்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் முஜாஷிஉ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்: நான் என் சகோதரர் முஜாலிதுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன்.
அத்தியாயம் : 64