2545. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا وَاصِلٌ الأَحْدَبُ، قَالَ سَمِعْتُ الْمَعْرُورَ بْنَ سُوَيْدٍ، قَالَ رَأَيْتُ أَبَا ذَرٍّ الْغِفَارِيَّ ـ رضى الله عنه ـ وَعَلَيْهِ حُلَّةٌ وَعَلَى غُلاَمِهِ حُلَّةٌ فَسَأَلْنَاهُ عَنْ ذَلِكَ فَقَالَ إِنِّي سَابَبْتُ رَجُلاً فَشَكَانِي إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَقَالَ لِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَعَيَّرْتَهُ بِأُمِّهِ "". ثُمَّ قَالَ "" إِنَّ إِخْوَانَكُمْ خَوَلُكُمْ جَعَلَهُمُ اللَّهُ تَحْتَ أَيْدِيكُمْ، فَمَنْ كَانَ أَخُوهُ تَحْتَ يَدِهِ فَلْيُطْعِمْهُ مِمَّا يَأْكُلُ، وَلْيُلْبِسْهُ مِمَّا يَلْبَسُ، وَلاَ تُكَلِّفُوهُمْ مَا يَغْلِبُهُمْ، فَإِنْ كَلَّفْتُمُوهُمْ مَا يَغْلِبُهُمْ فَأَعِينُوهُمْ "".
பாடம் : 15 ‘‘அடிமைகள் உங்கள் சகோதரர்கள். நீங்கள் உண்பதிலிருந்தே அவர்களுக்கு உண்ணக்கொடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி யது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அல்லாஹ்வையே வழிபடுங்கள். அவனுக்கு எதையும் இணை கற்பிக் காதீர்கள். தாய் தந்தையர், உறவினர்கள், அநாதைகள், ஏழைகள், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பயணத் தோழர், வழிப்போக்கர், உங்கள் வலக் கரங்கள் உடைமையாக்கிக்கொண்ட அடிமைகள் ஆகியோருக்கு நன்மை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அகந்தை கொள்பவனையும் தற்பெருமை கொள்பவனையும் நேசிக்கமாட்டான். (4:36) அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: அண்டை வீட்டாரில் உறவினரைக் குறிக்க யிதில்குர்பா’ எனும் சொல்லும், அந்நியரைக் குறிக்க ‘அல்ஜுனுப்’ எனும் சொல்லும் மூலத்தில் ஆளப்பட்டுள்ளன.
2545. மஅரூர் பின் சுவைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், அபூதர் அல்கிஃபாரீ (ரலி) அவர் களை (ஒருமுறை) பார்த்தேன். அப்போது அவர்கள்மீது ஒரு (புதிய) மேலங்கியும் அவர்களின் அடிமைமீது (அதே போன்ற) ஓர் (புதிய) மேலங்கியும் இருந்தது. அதைப் பற்றி (இருவரும் ஒரே விதமான ஆடை அணிந்திருப்பது பற்றி) அபூதர் (ரலி) அவர்களிடம் நாங்கள் கேட்டோம்.

அப்போது அதற்கு அவர்கள் பின் வருமாறு சொன்னார்கள்: நான் ஒருவரை (அவருடைய தாயைக் குறிப்பிட்டு) ஏசிவிட்டேன்; அவர் என்னைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (என்னை நோக்கி) ‘‘நீர் இவருடைய தாயைக் குறித்துத் தரக்குறைவாகப் பேசினீரா” என்று கேட்டார்கள்.

பிறகு, ‘‘உங்கள் அடிமைகள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் ஒப்படைத்துள்ளான்.

ஆகவே, எவருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரர் இருக்கிறாரோ அவர், தம் சகோதரருக்கு தாம் உண்பதிலிருந்து உண்ணத்தரட்டும். தாம் உடுத்துவதிலிருந்தே உடுத்தத்தரட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள்மீது சுமத்தாதீர்கள். அப்படி அவர்களின் சக்திக்கு மீறிய வேலைப் பளுவை அவர்கள்மீது நீங்கள் சுமத்தினால், (அதை நிறைவேற்றிட) அவர்களுக்கு உதவுங்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 49
2546. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" الْعَبْدُ إِذَا نَصَحَ سَيِّدَهُ وَأَحْسَنَ عِبَادَةَ رَبِّهِ كَانَ لَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ "".
பாடம்: 16 இறைவனையும் முறையாக வழிபட்டு, உரிமையாளருக்கும் விசுவாசமாக நடந்துகொள்கிற அடிமை(யின் சிறப்பு)
2546. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடிமை, தன் எசமானுக்கு விசுவாசமாக நடந்து, தன் இறைவனை நன்முறையில் வழிபடுவானாயின் அவனுக்கு இரு முறை(‘னாலும்) நன்மை கிடைக்கும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 49
2547. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ صَالِحٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَيُّمَا رَجُلٍ كَانَتْ لَهُ جَارِيَةٌ فَأَدَّبَهَا فَأَحْسَنَ تَأْدِيبَهَا، وَأَعْتَقَهَا وَتَزَوَّجَهَا، فَلَهُ أَجْرَانِ، وَأَيُّمَا عَبْدٍ أَدَّى حَقَّ اللَّهِ وَحَقَّ مَوَالِيهِ، فَلَهُ أَجْرَانِ "".
பாடம்: 16 இறைவனையும் முறையாக வழிபட்டு, உரிமையாளருக்கும் விசுவாசமாக நடந்துகொள்கிற அடிமை(யின் சிறப்பு)
2547. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

எந்த மனிதரிடம் அடிமைப் பெண் ஒருத்தி இருந்து, அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, கல்வியையும் அழகிய முறையில் கற்றுக்கொடுத்து, அவளை விடுதலையும் செய்து, அவளைத் தாமே மணமும் புரிந்துகொள்கிறாரோ அவருக்கு இரு நன்மைகள் கிடைக்கும். எந்த அடிமை அல்லாஹ்வின் உரிமையையும் தன் எசமானர்களின் உரிமையையும் (ஒழுங்காக) நிறைவேற்றுகிறானோ அவ னுக்கும் இரு நன்மைகள் கிடைக்கும்.

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 49
2548. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، يَقُولُ قَالَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لِلْعَبْدِ الْمَمْلُوكِ الصَّالِحِ أَجْرَانِ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْلاَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ وَالْحَجُّ وَبِرُّ أُمِّي، لأَحْبَبْتُ أَنْ أَمُوتَ وَأَنَا مَمْلُوكٌ "".
பாடம்: 16 இறைவனையும் முறையாக வழிபட்டு, உரிமையாளருக்கும் விசுவாசமாக நடந்துகொள்கிற அடிமை(யின் சிறப்பு)
2548. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருக்கு உடைமையான நல்ல அடிமைக்கு இரண்டு நன்மைகள் உண்டு.

இதை அறிவித்துவிட்டு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘எவனது கையில் என் உயிர் இருக்கிறதோ அவன்மீது சத்திய மாக! அல்லாஹ்வின் பாதையில் அறப் போர் புரிவதும், ஹஜ்ஜும், என் தாய்க்குச் செய்ய வேண்டிய கடமையும் இல்லாம லிருந்தால் நான் (ஒருவரின்) அடிமையாக இருக்கும் நிலையில் இறப்பதையே விரும்பியிருப்பேன்.” என்று சொன் னார்கள்.


அத்தியாயம் : 49
2549. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" نِعْمَ مَا لأَحَدِهِمْ يُحْسِنُ عِبَادَةَ رَبِّهِ وَيَنْصَحُ لِسَيِّدِهِ "".
பாடம்: 16 இறைவனையும் முறையாக வழிபட்டு, உரிமையாளருக்கும் விசுவாசமாக நடந்துகொள்கிற அடிமை(யின் சிறப்பு)
2549. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

உங்களில் ஒருவரின் அடிமை, தம் இறைவனை நன்முறையில் வழிபட்டு, தம் எசமானுக்கு விசுவாசமாக நடந்து கொண்டால், அவரே நல்லவர் ஆவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

அத்தியாயம் : 49
2550. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا نَصَحَ الْعَبْدُ سَيِّدَهُ، وَأَحْسَنَ عِبَادَةَ رَبِّهِ، كَانَ لَهُ أَجْرُهُ مَرَّتَيْنِ "".
பாடம் : 17 அடிமையிடம் உயர்வு (தாழ்வு) காட்டுவதும் யிஎன் அடிமை' (அப்தீ), யிஎன் அடிமைப் பெண்' (அமத்தீ) என்று குறிப்பிடுவதும் விரும்பத் தக்கதல்ல. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும்... (24:32) பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை... (16:75) அப்போது அவளுடைய தலைவனை (கணவனை)த் தலைவாயிலில் இருவரும் கண்டார்கள். (12:25) இறைநம்பிக்கை கொண்ட உங்கள் அடிமைப் பெண்களில்... (4:25) நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘என்னைப் பற்றி உம்முடைய எசமானி டம் சொல்வீராக!” என்று (யூசுஃப்) கூறினார். (12:42) நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவர் யார்?” என்று கேட்டார்கள்.25
2550. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

அடிமை (அப்த்), தன் எசமானுக்கு (சய்யித்) விசுவாசமாக நடந்து, தன் இறைவனை நல்ல முறையில் வழிபட்டு வருவானாயின், அவனுக்கு இரு முறை(களிலும்) நன்மை கிடைக்கும்.26

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 49
2551. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْمَمْلُوكُ الَّذِي يُحْسِنُ عِبَادَةَ رَبِّهِ، وَيُؤَدِّي إِلَى سَيِّدِهِ الَّذِي لَهُ عَلَيْهِ مِنَ الْحَقِّ وَالنَّصِيحَةِ وَالطَّاعَةِ، لَهُ أَجْرَانِ "".
பாடம் : 17 அடிமையிடம் உயர்வு (தாழ்வு) காட்டுவதும் யிஎன் அடிமை' (அப்தீ), யிஎன் அடிமைப் பெண்' (அமத்தீ) என்று குறிப்பிடுவதும் விரும்பத் தக்கதல்ல. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும்... (24:32) பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை... (16:75) அப்போது அவளுடைய தலைவனை (கணவனை)த் தலைவாயிலில் இருவரும் கண்டார்கள். (12:25) இறைநம்பிக்கை கொண்ட உங்கள் அடிமைப் பெண்களில்... (4:25) நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘என்னைப் பற்றி உம்முடைய எசமானி டம் சொல்வீராக!” என்று (யூசுஃப்) கூறினார். (12:42) நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவர் யார்?” என்று கேட்டார்கள்.25
2551. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

தன் இறைவனை நல்லமுறையில் வழிபட்டு, தன் எசமானுக்கு (சய்யித்) தான் செய்ய வேண்டிய கடமைகளை (ஒழுங் காக) நிறைவேற்றி, அவனுக்கு நலம் நாடி (நேர்மையாகவும் விசுவாசமாகவும் நடந்துகொண்டு) அவனுக்குக் கீழ்ப்படிந்தும் நடக்கின்ற அடிமைக்கு இரு நன்மைகள் கிடைக்கும்.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்


அத்தியாயம் : 49
2552. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ "" لاَ يَقُلْ أَحَدُكُمْ أَطْعِمْ رَبَّكَ، وَضِّئْ رَبَّكَ، اسْقِ رَبَّكَ. وَلْيَقُلْ سَيِّدِي مَوْلاَىَ. وَلاَ يَقُلْ أَحَدُكُمْ عَبْدِي أَمَتِي. وَلْيَقُلْ فَتَاىَ وَفَتَاتِي وَغُلاَمِي "".
பாடம் : 17 அடிமையிடம் உயர்வு (தாழ்வு) காட்டுவதும் யிஎன் அடிமை' (அப்தீ), யிஎன் அடிமைப் பெண்' (அமத்தீ) என்று குறிப்பிடுவதும் விரும்பத் தக்கதல்ல. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும்... (24:32) பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை... (16:75) அப்போது அவளுடைய தலைவனை (கணவனை)த் தலைவாயிலில் இருவரும் கண்டார்கள். (12:25) இறைநம்பிக்கை கொண்ட உங்கள் அடிமைப் பெண்களில்... (4:25) நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘என்னைப் பற்றி உம்முடைய எசமானி டம் சொல்வீராக!” என்று (யூசுஃப்) கூறினார். (12:42) நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவர் யார்?” என்று கேட்டார்கள்.25
2552. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாரும் (அடிமையிடம்) ‘‘உன் ரப்புக்கு (அதிபதிக்கு) உணவு கொடு, உன் ரப்புக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்ய உதவு, உன் ரப்புக்கு நீர் புகட்டு” என்று கூற வேண்டாம். யிஎன் தலைவர்; என் உரிமையாளர்’ என்று கூறட்டும்.

அவ்வாறே, உங்களில் யாரும், என் அடிமை; என் அடிமைப் பெண் என்று கூற வேண்டாம். ‘‘என் பணியாள்; என் பணிப்பெண்; என் பையன்” என்று கூறட்டும்.27

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 49
2553. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ أَعْتَقَ نَصِيبًا لَهُ مِنَ الْعَبْدِ، فَكَانَ لَهُ مِنَ الْمَالِ مَا يَبْلُغُ قِيمَتَهُ، يُقَوَّمُ عَلَيْهِ قِيمَةَ عَدْلٍ، وَأُعْتِقَ مِنْ مَالِهِ، وَإِلاَّ فَقَدْ عَتَقَ مِنْهُ "".
பாடம் : 17 அடிமையிடம் உயர்வு (தாழ்வு) காட்டுவதும் யிஎன் அடிமை' (அப்தீ), யிஎன் அடிமைப் பெண்' (அமத்தீ) என்று குறிப்பிடுவதும் விரும்பத் தக்கதல்ல. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும்... (24:32) பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை... (16:75) அப்போது அவளுடைய தலைவனை (கணவனை)த் தலைவாயிலில் இருவரும் கண்டார்கள். (12:25) இறைநம்பிக்கை கொண்ட உங்கள் அடிமைப் பெண்களில்... (4:25) நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘என்னைப் பற்றி உம்முடைய எசமானி டம் சொல்வீராக!” என்று (யூசுஃப்) கூறினார். (12:42) நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவர் யார்?” என்று கேட்டார்கள்.25
2553. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

எவர் ஓர் அடிமையில் (அப்த்) தமக்கிருக்கும் பங்கை விடுதலை செய்கிறாரோ, அவருக்கு அவ்வடிமையின் (முழு) விலையை எட்டுகின்ற அளவுக்குச் செல்வமிருந்தால், அவனுக்கு நியாயமான விலை மதிப்பிடப்பட்டு, தமது செல்வத்திலிருந்து (அதைச் செலுத்தி அவனை) முழுமையாக விடுவித்துவிட வேண்டும். இல்லையெனில், அவர் எந்த அளவுக்கு அவ்வடிமையை விடுதலை செய்தாரோ அந்த அளவுக்கே அவன் விடுதலை பெறுவான்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 49
2554. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" كُلُّكُمْ رَاعٍ فَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهْوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهْوَ مَسْئُولٌ عَنْهُمْ، وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهْىَ مَسْئُولَةٌ عَنْهُمْ، وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهْوَ مَسْئُولٌ عَنْهُ، أَلاَ فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ "".
பாடம் : 17 அடிமையிடம் உயர்வு (தாழ்வு) காட்டுவதும் யிஎன் அடிமை' (அப்தீ), யிஎன் அடிமைப் பெண்' (அமத்தீ) என்று குறிப்பிடுவதும் விரும்பத் தக்கதல்ல. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும்... (24:32) பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை... (16:75) அப்போது அவளுடைய தலைவனை (கணவனை)த் தலைவாயிலில் இருவரும் கண்டார்கள். (12:25) இறைநம்பிக்கை கொண்ட உங்கள் அடிமைப் பெண்களில்... (4:25) நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘என்னைப் பற்றி உம்முடைய எசமானி டம் சொல்வீராக!” என்று (யூசுஃப்) கூறினார். (12:42) நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவர் யார்?” என்று கேட்டார்கள்.25
2554. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளி களே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். மக்கள்மீது ஆட்சி புரியும் தலைவர் மக்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான்.

பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி யாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை (அப்த்), தன் உரிமையாளரின் (சய்யித்) செல்வத்திற்குப் பொறுப் பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 49
2555. حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، وَزَيْدَ بْنَ خَالِدٍ، رضى الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا زَنَتِ الأَمَةُ فَاجْلِدُوهَا، ثُمَّ إِذَا زَنَتْ فَاجْلِدُوهَا، ثُمَّ إِذَا زَنَتْ فَاجْلِدُوهَا، فِي الثَّالِثَةِ أَوِ الرَّابِعَةِ بِيعُوهَا وَلَوْ بِضَفِيرٍ "".
பாடம் : 17 அடிமையிடம் உயர்வு (தாழ்வு) காட்டுவதும் யிஎன் அடிமை' (அப்தீ), யிஎன் அடிமைப் பெண்' (அமத்தீ) என்று குறிப்பிடுவதும் விரும்பத் தக்கதல்ல. உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் ஆண், பெண் அடிமைகளில் நல்லவர்களுக்கும்... (24:32) பிறருக்கு உடைமையாக்கப்பட்ட ஓர் அடிமை... (16:75) அப்போது அவளுடைய தலைவனை (கணவனை)த் தலைவாயிலில் இருவரும் கண்டார்கள். (12:25) இறைநம்பிக்கை கொண்ட உங்கள் அடிமைப் பெண்களில்... (4:25) நபி (ஸல்) அவர்கள் ‘‘உங்கள் தலைவருக்காக எழுந்து நில்லுங்கள்” என்று கூறினார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: ‘‘என்னைப் பற்றி உம்முடைய எசமானி டம் சொல்வீராக!” என்று (யூசுஃப்) கூறினார். (12:42) நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தலைவர் யார்?” என்று கேட்டார்கள்.25
2555. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அடிமைப் பெண் விபசாரம் செய்தால் அவளுக்குச் சாட்டையடி கொடுங்கள். அதன் பிறகும் அவள் விபசாரம் செய்தால் (அப்போதும்) அவளுக்குச் சாட்டையடி(யே) கொடுங்கள். பிறகு மூன்றாவதாகவோ, நான்காவதாகவோ விபசாரம் செய்தால் அவளை ஒரு முடிக்கற்றைக்கேனும் விற்றுவிடுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் ஸைத் பின் காலித் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 49
2557. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ زِيَادٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" إِذَا أَتَى أَحَدَكُمْ خَادِمُهُ بِطَعَامِهِ، فَإِنْ لَمْ يُجْلِسْهُ مَعَهُ، فَلْيُنَاوِلْهُ لُقْمَةً أَوْ لُقْمَتَيْنِ أَوْ أُكْلَةً أَوْ أُكْلَتَيْنِ، فَإِنَّهُ وَلِيَ عِلاَجَهُ "".
பாடம் : 18 உங்களில் ஒருவருடைய பணி யாள் அவருக்கு உணவு கொண்டு வந்தால்...
2557. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

உங்களில் ஒருவரிடம் அவருடைய பணியாள் அவரது உணவைக் கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமரச் செய்து உண்ணட்டும். அவ்வாறு) அமரச்செய்யவில்லையென் றாலும், அவருக்கு யிஒரு கவளம் அல்லது இரு கவளங்கள்’ அல்லது யிஒரு வாய் அல்லது இரு வாய்கள்’ (அந்த உணவி லிருந்து) கொடுக்கட்டும். ஏனெனில், அதைத் தயாரிக்கும் சுமையை அந்தப் பணியாள் ஏற்றுள்ளார்.

அத்தியாயம் : 49
2558. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" كُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالإِمَامُ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ فِي أَهْلِهِ رَاعٍ وَهْوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ فِي بَيْتِ زَوْجِهَا رَاعِيَةٌ وَهْىَ مَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ رَاعٍ وَهْوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ "". قَالَ فَسَمِعْتُ هَؤُلاَءِ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَحْسِبُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" وَالرَّجُلُ فِي مَالِ أَبِيهِ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ "".
பாடம் : 19 ‘‘அடிமை தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளி யாவான்”. (இதில்) நபி (ஸல்) அவர்கள் செல் வத்தை உரிமையாளருடன் இணைத்துக் கூறியுள்ளார்கள்.
2558. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே; உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். தம் பிரஜைகள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான். பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளி யாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் (அடிமை) தன் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவை பற்றி விசாரிக்கப் படுவான்.

இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘நான் இவற்றையெல்லாம் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘‘மனிதன் (மகன்) தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவனது பொறுப்புக் குட்பட்டவை குறித்து அவன் விசாரிக்கப் படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்’ என்று சொன்ன தாகவும் எண்ணுகிறேன்” என்று கூறி னார்கள்.

அத்தியாயம் : 49
2559. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ، قَالَ وَأَخْبَرَنِي ابْنُ فُلاَنٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا قَاتَلَ أَحَدُكُمْ فَلْيَجْتَنِبِ الْوَجْهَ "".
பாடம் : 20 ஒருவர் (தம்) அடிமையை அடித் தால் முகத்தில் அடிப்பதைத் தவிர்த் துக்கொள்ளட்டும்!
2559. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (யாரையேனும்) தாக்கினால், முகத்(தில் அடிப்ப)தைத் தவிர்க்கட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 49
2560. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ إِنَّ بَرِيرَةَ دَخَلَتْ عَلَيْهَا تَسْتَعِينُهَا فِي كِتَابَتِهَا وَعَلَيْهَا خَمْسَةُ أَوَاقٍ، نُجِّمَتْ عَلَيْهَا فِي خَمْسِ سِنِينَ، فَقَالَتْ لَهَا عَائِشَةُ وَنَفِسَتْ فِيهَا أَرَأَيْتِ إِنْ عَدَدْتُ لَهُمْ عَدَّةً وَاحِدَةً، أَيَبِيعُكِ أَهْلُكِ، فَأُعْتِقَكِ، فَيَكُونَ وَلاَؤُكِ لِي فَذَهَبَتْ بَرِيرَةُ إِلَى أَهْلِهَا، فَعَرَضَتْ ذَلِكَ عَلَيْهِمْ فَقَالُوا لاَ إِلاَّ أَنْ يَكُونَ لَنَا الْوَلاَءُ. قَالَتْ عَائِشَةُ فَدَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرْتُ ذَلِكَ لَهُ. فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اشْتَرِيهَا فَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا بَالُ رِجَالٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ، مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهْوَ بَاطِلٌ، شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ "".
பாடம்: தம் அடிமை பற்றி அவதூறு கூறியவரின் பாவம்2 பாடம் : 1 விடுதலை ஆவணம் பெற்ற அடிமையும் அவன் ஒவ்வோர் ஆண்டும் செலுத்த வேண்டிய தொகையும் அல்லாஹ் கூறுகின்றான்: உங்கள் அடிமைகளில் விடுதலை ஆவணம் எழுதித்தரும்படி கோருகின்றவர் களிடம் நன்மை இருப்பதாக நீங்கள் அறிந்தால், அவர்களுக்கு விடுதலை ஆவணம் எழுதிக்கொடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் செல்வத்தி லிருந்து அவர்களுக்கு வழங்குங்கள். (24:33) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அதா பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘என் அடிமையிடம் பொருள் (பணம்) இருப்பதாக நான் அறிந் தால், அவனுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக்கொடுப்பது என்மீது கடமையா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நான் அதைக் கடமையாகவே கருதுகிறேன்” என்று பதிலளித்தார்கள். அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அதா பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், ‘‘இதை எந்த நபித்தோழரிட மிருந்தாவது கேட்டுத்தான் அறிவிக்கிறீரா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘இல்லை” என்று பதிலளித்தார்கள். பிறகு மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் தெரிவித்ததாவது: (அனஸ் (ரலி) அவர்களின் அடிமையாக இருந்த) சீரீன் (ரஹ்) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களிடம் விடுதலைப் பத்திரம் எழுதித்தரும்படி கேட்டார். அனஸ் அதிக செல்வமுடையவராக இருந்தும், விடுதலைப் பத்திரம் தர மறுத்துவிட்டார்கள். உடனே சீரின் (ரஹ்) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் சென்று முறையிட் டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அனஸ் (ரலி) அவர்களிடம் ‘‘எழுதிக் கொடுங்கள்” என்று கூற, அப்போதும் அவர் மறுத்து விடவே உமர் (ரலி) அவர்கள் அனஸ் (ரலி) அவர்களைச் சாட்டையால் அடித்து மேற்கண்ட இறைவசனத்தை (24:33) ஓதிக்காட்டினார்கள். பிறகு அனஸ் (ரலி) அவர்கள், சீரீன் (ரஹ்) அவர்களுக்கு விடுதலைப் பத்திரம் எழுதிக்கொடுத் தார்கள்.
2560. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமையாய் இருந்த) பரீரா (ரலி) அவர்கள் (தம் உரிமையாளர்களிடமிருந்து) எழுதி வாங்கிய விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்துவதற்குத் தமக்கு உதவி செய்யும்படி கேட்டு என்னிடம் வந்தார். அவர் (தம் உரிமையாளர்களுக்கு விடுதலைத் தொகையாக) ஐந்து யிஊக்கி யாக்’களை3 ஐந்து ஆண்டுகளில், (ஆண் டுக்கு ஒரு ஊக்கியா வீதம்) தவணை முறையில் செலுத்த வேண்டியிருந்தது.

ஆகவே, நான் லிஅவரை விடுதலை செய்ய ஆசைப்பட்டுலி ‘‘உன் உரிமையாளர் களுக்கு ஒரே தடவையில் முழுத் தொகையையும் நான் செலுத்திவிடுகிறேன்; அவர்கள் உன்னை விற்(பதற்கு சம்மதிப்)பார்களா? பின்னர் உன்னை நான் விடுதலையும் செய்துவிடுகிறேன். ஆனால், (உனது வாரிசுரிமை எனக்கே இருக்க வேண்டும்! என்ன சொல்கிறாய்?” என்று கேட்டேன்.

உடனே பரீரா (ரலி), தன் உரிமையாளர்களிடம் சென்று, எனது நிபந்தனையை அவர்கள்முன் வைத்தார். அதற்கு அவர்கள், ‘‘இதை நாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது. (உனது) வாரிசுரிமை (உன்னை விற்ற பின்பும்) எங்களுக்கே இருக்க வேண்டும்” என்று கூறிவிட்டனர். (இதை அறிந்த) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று விஷயத்தைக் கூறினேன். அவர்கள் என்னிடம், ‘‘(அவரை) விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.

பிறகு எழுந்து நின்று, ‘‘சில மனிதர் களுக்கு என்ன நேர்ந்தது? இறைச் சட்டத் தில் இல்லாத நிபந்தனைகளையெல்லாம் விதிக்கிறார்களே! ஒருவர் இறைச் சட்டத் தில் இல்லாத நிபந்தனைகளை விதித்தால் அது செல்லாது. அல்லாஹ்வின் நிபந் தனையே (ஏற்று) பின்பற்றத் தக்கதும் உறுதி மிக்கதும் ஆகும்” என்று கூறி னார்கள்.

அத்தியாயம் : 49
2561. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّ بَرِيرَةَ جَاءَتْ تَسْتَعِينُهَا فِي كِتَابَتِهَا، وَلَمْ تَكُنْ قَضَتْ مِنْ كِتَابَتِهَا شَيْئًا، قَالَتْ لَهَا عَائِشَةُ ارْجِعِي إِلَى أَهْلِكِ، فَإِنْ أَحَبُّوا أَنْ أَقْضِيَ عَنْكِ كِتَابَتَكِ، وَيَكُونَ وَلاَؤُكِ لِي فَعَلْتُ. فَذَكَرَتْ ذَلِكَ بَرِيرَةُ لأَهْلِهَا فَأَبَوْا وَقَالُوا إِنْ شَاءَتْ أَنْ تَحْتَسِبَ عَلَيْكِ فَلْتَفْعَلْ، وَيَكُونَ وَلاَؤُكِ لَنَا، فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" ابْتَاعِي فَأَعْتِقِي، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". قَالَ ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" مَا بَالُ أُنَاسٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ مَنِ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَلَيْسَ لَهُ، وَإِنْ شَرَطَ مِائَةَ مَرَّةٍ، شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ "".
பாடம் : 2 விடுதலை ஆவணம் பெற்ற அடிமைக்கு விதிக்கப்படும் செல்லத் தக்க நிபந்தனைகளும் இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனையை விதிப்பவரும்... இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிட மிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.4
2561. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அடிமையாய் இருந்த) பரீரா (ரலி), தாம் (தம் உரிமையாளர்களிடம்) எழுதி வாங்கிய விடுதலை ஆவணத்திற்கான தொகையைச் செலுத்துவதற்கு உதவி கோரி என்னிடம் வந்தார். (அப்போது) அவர் தமது விடுதலைத் தொகையில் சிறிதளவும் செலுத்தியிருக்கவில்லை. நான் அவரிடம், ‘‘நீ உன் உரிமையாளர்களிடம் திரும்பிச் சென்று, (அவர்களின் சம்மதத்தைக் கேள்.) நான் உன் சார்பாக உன் விடுதலைப் பத்திரத்தின் தொகையைச் செலுத்தி விடுகிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்குத்தான் இருக்க வேண்டும். இதை அவர்கள் விரும்பினால், அவ்வாறு நான் செய்கிறேன்” என்று கூறினேன்.

அவ்வாறே, பரீரா (ரலி) தன் உரிமை யாளர்களிடம் கேட்க, அவர்கள் மறுத்து, ‘‘உன்(னை வாங்கி விடுதலை செய்வதன்) மூலம் அவர் (ஆயிஷா (ரலி) அவர்கள்) இறைவனிடம் நன்மையைப் பெற விரும்பு வாராயின் அவ்வாறே செய்யட்டும். ஆனால், உனது வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருக்கும்” என்று கூறிவிட்டார் கள். இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘நீ அவரை வாங்கி விடுதலை செய்துவிடு, ஏனெனில், விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறி னார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, ‘‘மக்களில் சிலருக்கு என்னவாயிற்று? இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார் களே! இறைச் சட்டத்தில் இல்லாத ஒரு நிபந்தனையை ஒருவர் விதித்தால், அது செல்லாது; அவர் நூறுமுறை நிபந்தனை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் நிபந்தனையே (ஏற்று) பின்பற்றத் தக்கதும் உறுதி வாய்ந்ததும் ஆகும்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 49
2562. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ أَرَادَتْ عَائِشَةُ أُمُّ الْمُؤْمِنِينَ أَنْ تَشْتَرِيَ جَارِيَةً لِتُعْتِقَهَا، فَقَالَ أَهْلُهَا عَلَى أَنَّ وَلاَءَهَا لَنَا. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ يَمْنَعُكِ ذَلِكِ، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "".
பாடம் : 2 விடுதலை ஆவணம் பெற்ற அடிமைக்கு விதிக்கப்படும் செல்லத் தக்க நிபந்தனைகளும் இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனையை விதிப்பவரும்... இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிட மிருந்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.4
2562. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள், விடுதலை செய்வதற்காக ஓர் அடிமைப் பெண்ணை விலைக்கு வாங்க விரும்பினார்கள். அப்போது அப்பெண்ணின் உரிமையாளர்கள், ‘அவரது வாரிசுரிமை எங்களுக்கே உரியது’ என்னும் நிபந்தனையின் பேரில்தான் நாங்கள் அவரை விற்போம் என்று கூறினார்கள்.

(இதை அறிந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர்களுடைய இந்த நிபந்தனை உனக்குத் தடை ஆகாது. ஏனெனில், விடுதலை செய்தவருக்கே (விடுதலை செய்யப்பட்ட அடிமையின்) வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறி னார்கள்.

அத்தியாயம் : 49
2563. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ جَاءَتْ بَرِيرَةُ فَقَالَتْ إِنِّي كَاتَبْتُ أَهْلِي عَلَى تِسْعِ أَوَاقٍ، فِي كُلِّ عَامٍ وَقِيَّةٌ، فَأَعِينِينِي. فَقَالَتْ عَائِشَةُ إِنْ أَحَبَّ أَهْلُكِ أَنْ أَعُدَّهَا لَهُمْ عَدَّةً وَاحِدَةً، وَأُعْتِقَكِ فَعَلْتُ، وَيَكُونَ وَلاَؤُكِ لِي. فَذَهَبَتْ إِلَى أَهْلِهَا، فَأَبَوْا ذَلِكَ عَلَيْهَا، فَقَالَتْ إِنِّي قَدْ عَرَضْتُ ذَلِكَ عَلَيْهِمْ، فَأَبَوْا إِلاَّ أَنْ يَكُونَ الْوَلاَءُ لَهُمْ. فَسَمِعَ بِذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَنِي فَأَخْبَرْتُهُ، فَقَالَ "" خُذِيهَا، فَأَعْتِقِيهَا، وَاشْتَرِطِي لَهُمُ الْوَلاَءَ، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "". قَالَتْ عَائِشَةُ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي النَّاسِ، فَحَمِدَ اللَّهَ، وَأَثْنَى عَلَيْهِ، ثُمَّ قَالَ "" أَمَّا بَعْدُ، فَمَا بَالُ رِجَالٍ مِنْكُمْ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَتْ فِي كِتَابِ اللَّهِ فَأَيُّمَا شَرْطٍ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهْوَ بَاطِلٌ، وَإِنْ كَانَ مِائَةَ شَرْطٍ، فَقَضَاءُ اللَّهِ أَحَقُّ، وَشَرْطُ اللَّهِ أَوْثَقُ، مَا بَالُ رِجَالٍ مِنْكُمْ يَقُولُ أَحَدُهُمْ أَعْتِقْ يَا فُلاَنُ وَلِيَ الْوَلاَءُ إِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "".
பாடம் : 3 விடுதலை ஆவணம் பெற்ற அடிமை உதவி கோருவதும் மக்களிடம் (அதற்காக) இரத்தலும்
2563. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பரீரா (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்து, ‘‘நான் என் உரிமையாளர்களிடம் (விடுதலைத் தொகையாக) ஒவ்வோர் ஆண்டும் ஓர் யிஊக்கியா’ வீதம் ஒன்பது யிஊக்கியா’க்களைச் செலுத்திவிட வேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கியுள்ளேன்; ஆகவே, நீங்கள் எனக்கு உதவுங்கள்” என்று கேட்டார்.5

நான், ‘‘உன் உரிமையாளர்களுக்கு அந்த யிஊக்கியாக்’களை ஒரே தடவையில் கொடுத்து உன்னை விடுதலை செய்துவிடுவதை அவர்கள் விரும்பினால் அவ்வாறே செய்கிறேன். ஆனால், உன் வாரிசுரிமை எனக்குத்தான் இருக்க வேண்டும்” என்று கூறினேன்.

எனவே, பரீரா (ரலி) தன் உரிமையாளர்களிடம் சென்றார். (அவர்களிடம் நான் சொன்னதைக் கூற) அவர்கள் அவரிடம் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டார்கள். பிறகு பரீரா (என்னிடம் வந்து), ‘‘அவர்களிடம் உங்கள் விருப்பத்தை முன்வைத் தேன். ‘(என்) வாரிசுரிமை தங்களுக்குக் கிடைத்தால் தவிர அதற்கு ஒப்புக் கொள்ள முடியாது’ என்று அவர்கள் மறுத்துவிட்டனர்” என்று கூறினார்.

இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அது பற்றி) என்னைக் கேட்க, நான் அவர்களுக்கு விவரத்தைச் சொன்னேன். பரீராவை வாங்கி விடுதலை செய்துவிடு. அவருடைய வாரிசுரிமை அவர்களுக்கே உரியது என்று நிபந்தனை விதித்துவிடு (பின்னர் பார்த்துக்கொள்வோம்.) ஏனெனில், சட்டப்படி விடுதலை செய்ப வருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தார்கள். பிறகு கூறினார்கள்: இறைவாழ்த்துக்குப்பின்! உங்களில் சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? இறைச் சட்டத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றார்களே! இறைச் சட்டத்தில் இல்லாத எந்த ஒரு நிபந்தனையும் செல்லாது; நூறு முறை நிபந்தனை விதித்தாலும் சரியே! அல்லாஹ்வின் தீர்ப்பே (ஏற்று) பின்பற்றத் தக்கதாகும். அல்லாஹ்வின் நிபந்தனையே உறுதி வாய்ந்ததாகும்.

உங்களில் சில மனிதர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்களில் ஒருவர் ‘‘இன்னாரே! (என் அடிமையை விலைக்கு வாங்கி) விடுதலை செய்துவிடு. ஆனால், வாரிசுரிமை எனக்கே உரியது” என்று கூறுகிறாரே! (உண்மையில்) விடுதலை செய்பவருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 49
2564. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ بَرِيرَةَ، جَاءَتْ تَسْتَعِينُ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ ـ رضى الله عنها ـ فَقَالَتْ لَهَا إِنْ أَحَبَّ أَهْلُكِ أَنْ أَصُبَّ لَهُمْ ثَمَنَكِ صَبَّةً وَاحِدَةً فَأُعْتِقَكِ فَعَلْتُ. فَذَكَرَتْ بَرِيرَةُ ذَلِكَ لأَهْلِهَا، فَقَالُوا لاَ. إِلاَّ أَنْ يَكُونَ وَلاَؤُكِ لَنَا. قَالَ مَالِكٌ قَالَ يَحْيَى فَزَعَمَتْ عَمْرَةُ أَنَّ عَائِشَةَ ذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" اشْتَرِيهَا وَأَعْتِقِيهَا، فَإِنَّمَا الْوَلاَءُ لِمَنْ أَعْتَقَ "".
பாடம் : 4 விடுதலை ஆவணம் பெற்ற அடிமையை, அவன் இசைந்தால் விற்பது6 ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘விடுதலை ஆவணம் பெற்ற அடிமை தனது விலை முழுவதையும் செலுத்தாமல் இன்னும் பாக்கி வைத்திருக்கும்வரை அடிமையாகவே இருப்பான்” என்று கூறினார்கள். ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், ‘‘அவன் ஒரேயொரு யிதிர்ஹம்’ பாக்கி வைத்திருந்தாலும்கூட அடிமையே ஆவான்” என்று கூறினார்கள். ‘‘அவன் சிறிது தொகை பாக்கி வைத்திருக்கும்வரை லிஅவன் வாழ்ந்தாலும் சரி, இறந்தாலும் சரி, அவன் குற்றம் புரிந்தாலும் சரிலி அடிமையே” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
2564. அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பரீரா (ரலி) அவர்கள், இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தமது விடுதலைப் பத்திரத் தொகையைச் செலுத்தும் விஷயத்தில்) உதவி கேட்டு வந்தார். அவரிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘நான் உன் உரிமையாளர்களுக்கு உன் விலையை ஒரே தடவையில் கொடுத்துவிடுகிறேன். பிறகு உன்னை விடுதலை செய்துவிடுகிறேன். இதை அவர்கள் விரும்பினால் அவ்வாறே செய்(யத் தயாராக இருக்)கி றேன்” என்று கூறினார்கள்.

(அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களின் இந்த விருப்பத்தை பரீரா (ரலி) தம் உரிமையாளர்களிடம் தெரிவித்தார். அதற்கு அவர்கள், ‘‘(உனது) வாரிசுரிமை எங்களுக்கே உரியதாக இருந்தால் தவிர, நாங்கள் இதற்குச் சம்மதிக்கமாட்டோம்” என்று கூறிவிட்டனர். ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தச் செய்தியை அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘‘நீ அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்துவிடு. ஏனெனில், விடுதலை செய்தவருக்கே வாரிசுரிமை உரியதாகும்” என்று கூறி னார்கள்.

அத்தியாயம் : 49