1753. وَقَالَ مُحَمَّدٌ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَمَى الْجَمْرَةَ الَّتِي تَلِي مَسْجِدَ مِنًى يَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ، يُكَبِّرُ كُلَّمَا رَمَى بِحَصَاةٍ، ثُمَّ تَقَدَّمَ أَمَامَهَا فَوَقَفَ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ رَافِعًا يَدَيْهِ يَدْعُو، وَكَانَ يُطِيلُ الْوُقُوفَ، ثُمَّ يَأْتِي الْجَمْرَةَ الثَّانِيَةَ، فَيَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ، يُكَبِّرُ كُلَّمَا رَمَى بِحَصَاةٍ، ثُمَّ يَنْحَدِرُ ذَاتَ الْيَسَارِ مِمَّا يَلِي الْوَادِيَ، فَيَقِفُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ رَافِعًا يَدَيْهِ يَدْعُو، ثُمَّ يَأْتِي الْجَمْرَةَ الَّتِي عِنْدَ الْعَقَبَةِ فَيَرْمِيهَا بِسَبْعِ حَصَيَاتٍ، يُكَبِّرُ عِنْدَ كُلِّ حَصَاةٍ، ثُمَّ يَنْصَرِفُ وَلاَ يَقِفُ عِنْدَهَا. قَالَ الزُّهْرِيُّ سَمِعْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ يُحَدِّثُ مِثْلَ هَذَا عَنْ أَبِيهِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَكَانَ ابْنُ عُمَرَ يَفْعَلُهُ.
பாடம் : 142 முதலிரண்டு ஐம்ராக்களிலும் பிரார்த்திப்பது
1753. முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினா பள்ளிவாசலை அடுத்திருக்கும் (முதல்) ஜம்ராவில் கல்லெறியும்போது ஏழு சிறு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறுவார் கள். பிறகு சற்று முன்னால் சென்று, கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்திப் பிரார்த்திப் பார்கள்.

பிறகு இரண்டாவது ஜம்ராவுக்கு வந்து அங்கும் ஏழு சிறு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும் போதும் தக்பீர் கூறுவார்கள். பிறது இடப் பக்கமாக, பள்ளத்தாக்கிற்கு அடுத்துள்ள பகுதியில் இறங்கி, கிப்லாவை முன்னோக்கி நின்று, கைகளை உயர்த்திப் பிரார்த்திப்பார்கள். பிறகு ஜம்ரத்துல் அகபாவுக்கு வந்து ஏழு சிறு கற்களை எறிவார்கள். ஒவ்வொரு கல்லை எறியும்போதும் தக்பீர் கூறுவார் கள். பின்பு அங்கிருந்து திரும்பி விடுவார் கள்; அங்கு நிற்கமாட்டார்கள்.

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் செய்ததாக தம் தந்தை இப்னு உமர் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள் என சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன். இப்னு உமர் (ரலி) அவர்களும் இவ்வாறே செய்பவராக இருந்தார்கள்.

அத்தியாயம் : 25
1754. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ، أَنَّهُ سَمِعَ أَبَاهُ ـ وَكَانَ أَفْضَلَ أَهْلِ زَمَانِهِ ـ يَقُولُ سَمِعْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ تَقُولُ طَيَّبْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بِيَدَىَّ هَاتَيْنِ حِينَ أَحْرَمَ، وَلِحِلِّهِ حِينَ أَحَلَّ، قَبْلَ أَنْ يَطُوفَ. وَبَسَطَتْ يَدَيْهَا.
பாடம் : 143 கல்லெறிந்தபின் நறுமணம் பூசிக்கொள்வதும் தவாஃபுல் இஃபாளாவுக்கு முன்பு தலையை மழித்துக்கொள்வதும்
1754. தம் காலத்தவரில் சிறந்த அறிஞராக விளங்கிய காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்ட நாடியபோதும், தவாஃபுல் இஃபாளா செய்யும் முன்னர், (ஜம்ராக்களில் கல் லெறிந்துவிட்டு, தலையை மழித்துக் கொண்டு) இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபட்டுவிட்டிருந்த வேளையிலும் நான் அவர்களுக்கு என்னுடைய இவ்விரு கைகளால் நறுமணம் பூசியிருக்கிறேன்” எனக் கூறித் தம்முடைய இரு கைகளை யும் விரித்துக்காட்டினார்கள்.

அத்தியாயம் : 25
1755. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ أُمِرَ النَّاسُ أَنْ يَكُونَ آخِرُ عَهْدِهِمْ بِالْبَيْتِ، إِلاَّ أَنَّهُ خُفِّفَ عَنِ الْحَائِضِ.
பாடம் : 144 ‘தவாஃபுல் வதா’ (விடைபெறும் தவாஃப்)72
1755. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதை (ஹஜ்ஜின்) இறுதி வழிபாடாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என மக்கள் கட்டளையிடப்பட்டனர். ஆயினும், மாதவிடாய்ப் பெண்களுக்கு மட்டும் அதில் (‘தவாஃபுல் வதா’வை விட்டுவிட) சலுகை வழங்கப்பட்டுள்ளது.


அத்தியாயம் : 25
1756. حَدَّثَنَا أَصْبَغُ بْنُ الْفَرَجِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ، ثُمَّ رَقَدَ رَقْدَةً بِالْمُحَصَّبِ، ثُمَّ رَكِبَ إِلَى الْبَيْتِ فَطَافَ بِهِ. تَابَعَهُ اللَّيْثُ حَدَّثَنِي خَالِدٌ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسَ بْنَ مَالِكٍ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 144 ‘தவாஃபுல் வதா’ (விடைபெறும் தவாஃப்)72
1756. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜில் மினாவில் கல்லெறிந்தபின்) லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளை ‘அல்முஹஸ்ஸப்’ எனுமிடத்தில் தொழுது விட்டு, பின்னர் சிறிது நேரம் உறங்கினார் கள். பின்பு வாகனத்தில் ஏறி இறையில்லம் கஅபாவிற்குச் சென்று அதை (இறுதியாக) தவாஃப் செய்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 25
1757. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ صَفِيَّةَ بِنْتَ حُيَىٍّ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم حَاضَتْ، فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" أَحَابِسَتُنَا هِيَ "". قَالُوا إِنَّهَا قَدْ أَفَاضَتْ. قَالَ "" فَلاَ إِذًا "".
பாடம் : 145 ‘தவாஃபுல் இஃபாளா’ செய்த பின்பு ஒரு பெண்ணுக்கு மாத விடாய் ஏற்பட்டுவிட்டால்...?73
1757. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு (ஹஜ்ஜின்போது) மாத விடாய் ஏற்பட்டுவிட்டது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் “அவர் நம்மை (மக்காவிலிருந்து செல்ல விடாமல்) தடுத்துவிட்டாரா?” எனக் கேட்டர்கள்.

அதற்குத் தோழர்கள் “அவர் தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டார்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால், பரவாயில்லை. (நாம் போகலாம்!)” என்றார்கள்.


அத்தியாயம் : 25
1758. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ أَهْلَ الْمَدِينَةِ، سَأَلُوا ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ امْرَأَةٍ، طَافَتْ ثُمَّ حَاضَتْ، قَالَ لَهُمْ تَنْفِرُ. قَالُوا لاَ نَأْخُذُ بِقَوْلِكَ وَنَدَعَ قَوْلَ زَيْدٍ. قَالَ إِذَا قَدِمْتُمُ الْمَدِينَةَ فَسَلُوا. فَقَدِمُوا الْمَدِينَةَ فَسَأَلُوا، فَكَانَ فِيمَنْ سَأَلُوا أُمُّ سُلَيْمٍ، فَذَكَرَتْ حَدِيثَ صَفِيَّةَ. رَوَاهُ خَالِدٌ وَقَتَادَةُ عَنْ عِكْرِمَةَ.
பாடம் : 145 ‘தவாஃபுல் இஃபாளா’ செய்த பின்பு ஒரு பெண்ணுக்கு மாத விடாய் ஏற்பட்டுவிட்டால்...?73
1758. 1759 இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “ஒரு பெண் (ஹஜ்ஜில் இஃபாளா) தவாஃப் செய்தபிறகு அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது?” எனக் கேட்டனர். அதற்கு அவர்கள், “அவள் (தவாஃபுல் வதா செய்யாமல்) போய்விட வேண்டி யதுதான்” என்றார்கள்.

அப்போது மக்கள், “உங்கள் கூற்றை எடுத்துக்கொண்டு, ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் கூற்றை விட்டுவிட நாங்கள் தயாரில்லை” என்றனர். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அப்படியாயின் நீங்கள் மதீனா சென்றதும் அங்கு(ள்ளோரிடம்) கேட்டுப்பாருங்கள்” என்றார்கள்.

மக்கள் மதீனா சென்றதும் இது பற்றிக் கேட்டார்கள். அவர்கள் (விளக்கம்) கேட்டவர்களில் உம்மு சுலைம் (ரலி) அவர்களும் ஒருவராவார்கள். அப்போது உம்மு சுலைம் (ரலி) அவர்கள், ஸஃபிய்யா (ரலி) அவர்களின் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 25
1760. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ رُخِّصَ لِلْحَائِضِ أَنْ تَنْفِرَ إِذَا أَفَاضَتْ.
பாடம் : 145 ‘தவாஃபுல் இஃபாளா’ செய்த பின்பு ஒரு பெண்ணுக்கு மாத விடாய் ஏற்பட்டுவிட்டால்...?73
1760. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மாதவிடாய் ஏற்பட்ட பெண் (ஹஜ்ஜில்) தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டால் (மக்காவைவிட்டுச்) சென்றுவிடலாம் என அவளுக்குச் சலுகை வழங்கப்பட்டிருந்தது.


அத்தியாயம் : 25
1761. قَالَ وَسَمِعْتُ ابْنَ عُمَرَ، يَقُولُ إِنَّهَا لاَ تَنْفِرُ. ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ بَعْدُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم رَخَّصَ لَهُنَّ.
பாடம் : 145 ‘தவாஃபுல் இஃபாளா’ செய்த பின்பு ஒரு பெண்ணுக்கு மாத விடாய் ஏற்பட்டுவிட்டால்...?73
1761. தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், “மாதவிடாய் ஏற்பட்ட பெண் (ஹஜ்ஜில் தவாஃபுல் வதா செய்யாமல்) மக்காவைவிட்டுச் செல்லக் கூடாது!” என்று ஆரம்பத்தில் கூறிக் கொண்டிருந்தார்கள். பிறகு அவர்களே, “நபி (ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களுக்கு (அவ்வாறு செல்ல) சலுகை வழங்கியுள்ளார்கள்” எனக் கூறினார்கள்.


அத்தியாயம் : 25
1762. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَلاَ نُرَى إِلاَّ الْحَجَّ، فَقَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ وَبَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَلَمْ يَحِلَّ وَكَانَ مَعَهُ الْهَدْىُ، فَطَافَ مَنْ كَانَ مَعَهُ مِنْ نِسَائِهِ وَأَصْحَابِهِ، وَحَلَّ مِنْهُمْ مَنْ لَمْ يَكُنْ مَعَهُ الْهَدْىُ، فَحَاضَتْ هِيَ، فَنَسَكْنَا مَنَاسِكَنَا مِنْ حَجِّنَا، فَلَمَّا كَانَ لَيْلَةُ الْحَصْبَةِ لَيْلَةُ النَّفْرِ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ كُلُّ أَصْحَابِكَ يَرْجِعُ بِحَجٍّ وَعُمْرَةٍ غَيْرِي. قَالَ "" مَا كُنْتِ تَطُوفِي بِالْبَيْتِ لَيَالِيَ قَدِمْنَا "". قُلْتُ لاَ. قَالَ "" فَاخْرُجِي مَعَ أَخِيكِ إِلَى التَّنْعِيمِ فَأَهِلِّي بِعُمْرَةٍ، وَمَوْعِدُكِ مَكَانَ كَذَا وَكَذَا "". فَخَرَجْتُ مَعَ عَبْدِ الرَّحْمَنِ إِلَى التَّنْعِيمِ، فَأَهْلَلْتُ بِعُمْرَةٍ، وَحَاضَتْ صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" عَقْرَى حَلْقَى، إِنَّكِ لَحَابِسَتُنَا، أَمَا كُنْتِ طُفْتِ يَوْمَ النَّحْرِ "". قَالَتْ بَلَى. قَالَ "" فَلاَ بَأْسَ. انْفِرِي "". فَلَقِيتُهُ مُصْعِدًا عَلَى أَهْلِ مَكَّةَ، وَأَنَا مُنْهَبِطَةٌ، أَوْ أَنَا مُصْعِدَةٌ، وَهُوَ مُنْهَبِطٌ. وَقَالَ مُسَدَّدٌ قُلْتُ لاَ. تَابَعَهُ جَرِيرٌ عَنْ مَنْصُورٍ فِي قَوْلِهِ لاَ.
பாடம் : 145 ‘தவாஃபுல் இஃபாளா’ செய்த பின்பு ஒரு பெண்ணுக்கு மாத விடாய் ஏற்பட்டுவிட்டால்...?73
1762. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்தோடு புறப்பட்டோம். நபி (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்ததும் இறை யில்லம் கஅபாவையும் ஸஃபா-மர்வா வையும் தவாஃப் செய்தார்கள்; ஆனால், இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை. அவர்கள் குர்பானி பிராணியைக் கொண்டு வந்திருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்களுடன் இருந்த அவர்களுடைய துணைவியர், அவர் களுடைய தோழர்கள் அனைவரும் தவாஃப் செய்தார்கள். பிறகு அவர்களில் குர்பானி பிராணி கொண்டுவராதவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிட்டனர். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. நாங்கள் ஹஜ்ஜின் எல்லா கிரியைகளையும் செய்தோம்.

நபி (ஸல்) அவர்கள் ‘அல்முஹஸ்ஸப்’ எனுமிடத்தில் தங்கியிருந்த - (மினாவிலி ருந்து) திரும்ப வேண்டிய- இரவில் நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னைத் தவிர, உங்களுடைய மற்ற எல்லாத் தோழர்களும் ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்துவிட்டு (ஊர்) திரும்புகின்றனர்” என்றேன். அதற்கு அவர்கள், “நாம் மக்காவுக்கு வந்கு சேர்ந்த இரவில் நீ தவாஃப் செய்யவில்லையா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். நபி (ஸல்) அவர்கள் “நீ உன் சகோதரருடன் ‘தன்யீம்’ என்ற இடத்திற்குப் போய், உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்! மேலும், இன்ன இன்ன இடத்திற்கு வந்துவிடு” எனக் கூறினார்கள்.

நான் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானுடன் ‘தன்யீம்’ சென்று உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினேன். அப்போது, ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள், “உன் கழுத்து அறுந்துபோக! உனக்குத் தொண்டை வலி வர! (காரியத்தைக் கெடுத்துவிட்டாயே!) நீ எங்களை (மக்காவிலிருந்து செல்ல விடாமல்) தடுத்துவிட்டாய். நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாளில் தவாஃப் செய்துவிட்டாயல்லவா?” எனக் கேட்டார் கள். அதற்கு அவர்கள் “ஆம்” என்றதும், “அப்படியாயின் பரவாயில்லை; புறப்படு!” என்றார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் மக்காவாசி களுடன் மேலே ஏறும்போது அவர்களை நான் சந்தித்தேன்; அப்போது நான் கீழே இறங்கிக்கொண்டிருந்தேன். அல்லது, நான் மேலே ஏறிக்கொண்டிருந்தேன்; அவர்கள் கீழே இறங்கிக்கொண்டிருந்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. எல்லாத் தொடர்களிலும் (மக்காவுக்கு வந்து சேர்ந்த இரவில் நீ தவாஃப் செய்யவில்லையா என்று கேட்டதற்கு, ஆயிஷா (ரலி) அவர்கள் ‘இல்லை’ என்று பதிலளித்ததைக் குறிக்க) ‘லா’ எனும் சொல்லே இடம்பெறுகிறது. (வேறுசில அறிவிப்புகளில் ‘பலா’ எனும் சொல் காணப்படுகிறது.)

அத்தியாயம் : 25
1763. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ الثَّوْرِيُّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَخْبِرْنِي بِشَىْءٍ، عَقَلْتَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَيْنَ صَلَّى الظُّهْرَ يَوْمَ التَّرْوِيَةِ قَالَ بِمِنًى. قُلْتُ فَأَيْنَ صَلَّى الْعَصْرَ يَوْمَ النَّفْرِ قَالَ بِالأَبْطَحِ. افْعَلْ كَمَا يَفْعَلُ أُمَرَاؤُكَ.
பாடம் : 146 ‘மினா’விலிருந்து புறப்படும் (நஃப்ருடைய) நாளில் ‘அல்அப்தஹ்’ எனுமிடத்தில் அஸ்ர் தொழல்74
1763. அப்துல் அஸீஸ் பின் ருஃபைஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் எட்டாம் நாள் எங்கு லுஹ்ர் தொழுதார்கள்?’ எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘மினாவில்’ என்று பதிலளித்தார் கள். அடுத்து நான், “(மினாவிலிருந்து) புறப்படும் (துல்ஹஜ் 12 அல்லது 13ஆவது) நாளில் நபி (ஸல்) அவர்கள் எங்கே அஸ்ர் தொழுதார்கள்?” என்று கேட்டதற்கு, ‘அல்அப்தஹில்’ என்று கூறிவிட்டு, “உன் தலைவர்கள் செய்வதைப் போன்று நீயும் செய்துகொள்!” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 25
1764. حَدَّثَنَا عَبْدُ الْمُتَعَالِ بْنُ طَالِبٍ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ قَتَادَةَ، حَدَّثَهُ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ صَلَّى الظُّهْرَ وَالْعَصْرَ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ، وَرَقَدَ رَقْدَةً بِالْمُحَصَّبِ، ثُمَّ رَكِبَ إِلَى الْبَيْتِ فَطَافَ بِهِ.
பாடம் : 146 ‘மினா’விலிருந்து புறப்படும் (நஃப்ருடைய) நாளில் ‘அல்அப்தஹ்’ எனுமிடத்தில் அஸ்ர் தொழல்74
1764. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (நஃப்ருடைய நாளில்) லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா ஆகிய தொழுகைகளை அல்முஹஸ்ஸ பில் நிறைவேற்றிவிட்டு சிறிது நேரம் உறங்கினார்கள். பிறகு வாகனத்தில் ஏறி, இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்தார்கள்.

அத்தியாயம் : 25
1765. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ إِنَّمَا كَانَ مَنْزِلٌ يَنْزِلُهُ النَّبِيُّ صلى الله عليه وسلم لِيَكُونَ أَسْمَحَ لِخُرُوجِهِ. يَعْنِي بِالأَبْطَحِ.
பாடம் : 147 அல்முஹஸ்ஸபில் தங்குதல்
1765. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அல்முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ்ஜின் வழிபாடுகளில் ஒன்றல்ல; மதீனாவுக்குப்) புறப்பட்டுச் செல்ல வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக நபி (ஸல்) அவர்கள் தங்கி ஓய்வெடுத்த ஓர் இடமே அல்முஹஸ்ஸப் -அதாவது அல்அப்தஹ்- ஆகும்.


அத்தியாயம் : 25
1766. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ عَمْرٌو عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ لَيْسَ التَّحْصِيبُ بِشَىْءٍ، إِنَّمَا هُوَ مَنْزِلٌ نَزَلَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 147 அல்முஹஸ்ஸபில் தங்குதல்
1766. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்முஹஸ்ஸபில் தங்குவது ஹஜ் ஜின் கிரியைகளில் ஒன்றல்ல; அது நபி (ஸல்) அவர்கள் தங்கி ஓய்வெடுத்த ஓரிடம்; அவ்வளவுதான்.

அத்தியாயம் : 25
1767. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَبُو ضَمْرَةَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يَبِيتُ بِذِي طُوًى بَيْنَ الثَّنِيَّتَيْنِ، ثُمَّ يَدْخُلُ مِنَ الثَّنِيَّةِ الَّتِي بِأَعْلَى مَكَّةَ، وَكَانَ إِذَا قَدِمَ مَكَّةَ حَاجًّا أَوْ مُعْتَمِرًا لَمْ يُنِخْ نَاقَتَهُ إِلاَّ عِنْدَ باب الْمَسْجِدِ، ثُمَّ يَدْخُلُ فَيَأْتِي الرُّكْنَ الأَسْوَدَ فَيَبْدَأُ بِهِ، ثُمَّ يَطُوفُ سَبْعًا ثَلاَثًا سَعْيًا، وَأَرْبَعًا مَشْيًا، ثُمَّ يَنْصَرِفُ فَيُصَلِّي سَجْدَتَيْنِ، ثُمَّ يَنْطَلِقُ قَبْلَ أَنْ يَرْجِعَ إِلَى مَنْزِلِهِ، فَيَطُوفُ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَكَانَ إِذَا صَدَرَ عَنِ الْحَجِّ أَوِ الْعُمْرَةِ أَنَاخَ بِالْبَطْحَاءِ الَّتِي بِذِي الْحُلَيْفَةِ الَّتِي كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُنِيخُ بِهَا.
பாடம் : 148 மக்காவிற்குள் நுழைவதற்கு முன் ‘தூ துவா’வில் தங்குவதும், மக்கா விலிருந்து திரும்பும்போது ‘துல்ஹுலைஃபா’விலுள்ள ‘அல்பத்ஹா’வில் தங்குவதும்75
1767. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘தூ துவா’ விலுள்ள இரண்டு கணவாய்களுக் கிடையே இரவில் தங்குவார்கள். பிறகு மக்காவின் மேற்பகுதியிலுள்ள கணவாய் வழியாக மக்காவிற்குள் நுழைவார்கள். அவர்கள் ஹஜ்ஜுக்காகவோ உம்ராவுக் காகவோ மக்காவுக்கு வந்ததும் மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலின் தலைவாயில் அருகேதான் ஒட்டகத்தைப் படுக்க வைப்பார்கள்.

பிறகு, மஸ்ஜிதில் நுழைந்து, ஹஜருல் அஸ்வதுக்கு வந்து, அங்கிருந்து ஆரம்பித்து (கஅபாவை) ஏழு முறை சுற்றுவார்கள். (முதல்) மூன்று சுற்றுகளில் விரைவாக நடந்தும் (பிந்திய) நான்கு சுற்றுகளில் (சாதாரணமாக) நடந்தும் தவாஃப் செய்வார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு தமது இருப்பிடத்திற்குத் திரும்புவதற்கு முன்பாகச் சென்று ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றுவார்கள்.

மேலும், அவர்கள் ஹஜ்ஜையோ உம்ராவையோ முடித்துவிட்டு (மதீனாவுக் குத்) திரும்பும்போது, நபி (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தைப் படுக்க வைத்துத் தங்கிய, ‘துல்ஹுலைஃபா’விலுள்ள ‘அல்பத்ஹா’ எனுமிடத்தில் வாகனத்தைப் படுக்கவைத்துத் தங்குவார்கள்.


அத்தியாயம் : 25
1768. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، قَالَ سُئِلَ عُبَيْدُ اللَّهِ عَنِ الْمُحَصَّبِ، فَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ،، قَالَ نَزَلَ بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعُمَرُ وَابْنُ عُمَرَ. وَعَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ كَانَ يُصَلِّي بِهَا ـ يَعْنِي الْمُحَصَّبَ ـ الظُّهْرَ وَالْعَصْرَ ـ أَحْسِبُهُ قَالَ وَالْمَغْرِبَ. قَالَ خَالِدٌ لاَ أَشُكُّ فِي الْعِشَاءِ، وَيَهْجَعُ هَجْعَةً، وَيَذْكُرُ ذَلِكَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 148 மக்காவிற்குள் நுழைவதற்கு முன் ‘தூ துவா’வில் தங்குவதும், மக்கா விலிருந்து திரும்பும்போது ‘துல்ஹுலைஃபா’விலுள்ள ‘அல்பத்ஹா’வில் தங்குவதும்75
1768. காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்களிடம் ‘அல்முஹஸ்ஸப்’ பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமர் (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் அந்த இடத்தில் தங்கியிருக்கிறார்கள்” என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் அறிவித்ததாக எங்களிடம் கூறினார்கள்.

“இப்னு உமர் (ரலி) அவர்கள், அல்முஹஸ்ஸபில் லுஹ்ர், அஸ்ர் ஆகிய தொழுகைகளைத் தொழுவது வழக்கம்” என நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

மஃக்ரிப் தொழுகைகயையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுவார் கள் என்று நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என்றே நான் நினைக்கிறேன் எனவும் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இஷாவையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் அங்கு தொழுதார்கள் (என நாஃபிஉ (ரஹ்) அவர்கள், உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களிடம் கூறினார்கள்) என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

“(இஷாவைத் தொழுத) பிறகு இப்னு உமர் (ரலி) அவர்கள் சிறிது நேரம் (அங்கேயே) உறங்கிவிடுவார்கள்; மேலும், ‘நபி (ஸல்) அவர்கள் இப்படிச் செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள்” எனவும் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாக, உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள்.

அத்தியாயம் : 25
1769. وَقَالَ مُحَمَّدُ بْنُ عِيسَى حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ كَانَ إِذَا أَقْبَلَ بَاتَ بِذِي طُوًى، حَتَّى إِذَا أَصْبَحَ دَخَلَ، وَإِذَا نَفَرَ مَرَّ بِذِي طُوًى وَبَاتَ بِهَا حَتَّى يُصْبِحَ، وَكَانَ يَذْكُرُ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يَفْعَلُ ذَلِكَ.
பாடம் : 149 மக்காவிலிருந்து திரும்பும்போது தூ துவாவில் தங்குதல்
1769. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் (மக்கா வுக்கு) வரும்போது ‘தூ துவா’வில் இரவில் தங்குவார்கள். விடிந்ததும் (மக்காவுக்குள்) நுழைவார்கள். (மக்காவிலிருந்து) திரும்பும் போதும் ‘தூ துவா’வில் விடியும்வரை தங்குவார்கள். மேலும், இப்படித்தான் நபி (ஸல்) அவர்கள் செய்வார்கள் என்றும் கூறுவார்கள்.

அத்தியாயம் : 25
1770. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ عَمْرُو بْنُ دِينَارٍ قَالَ ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ كَانَ ذُو الْمَجَازِ وَعُكَاظٌ مَتْجَرَ النَّاسِ فِي الْجَاهِلِيَّةِ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ كَأَنَّهُمْ كَرِهُوا ذَلِكَ حَتَّى نَزَلَتْ {لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلاً مِنْ رَبِّكُمْ} فِي مَوَاسِمِ الْحَجِّ.
பாடம் : 150 ஹஜ் நாட்களில் வணிகம் செய்வதும் அறியாமைக் கால சந்தைகளில் விற்பதும்76
1770. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

துல்மஜாஸ், உ(க்)காழ் ஆகியவை அறியாமைக் கால வணிகத் தலங்களாக இருந்தன. இஸ்லாம் வந்ததும் மக்கள் அவ்வணிகத் தலங்களை வெறுக்கலா னார்கள்.

இறுதியில், “(ஹஜ்ஜின்போது) உங்கள் இறைவனுடைய அருளைத் தேடுவது உங்கள்மீது குற்றமாகாது” (2:198) எனும் இறைவசனம் அருளப்பெற்றது. இது ஹஜ்ஜுக் காலங்களில் வியாபாரம் செய்வதைக் குறிக்கின்றது.

அத்தியாயம் : 25
1771. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ حَاضَتْ صَفِيَّةُ لَيْلَةَ النَّفْرِ، فَقَالَتْ مَا أُرَانِي إِلاَّ حَابِسَتَكُمْ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " عَقْرَى حَلْقَى أَطَافَتْ يَوْمَ النَّحْرِ ". قِيلَ نَعَمْ. قَالَ " فَانْفِرِي ".
பாடம் : 151 ‘அல்முஹஸ்ஸபி’லிருந்து இரவின் கடைசி நேரத்தில் புறப்படுதல்
1771. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஜ் முடிந்து புறப்படும் நாளில் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாத விடாய் ஏற்பட்டுவிட்டது. அப்போது அவர், “நான் உங்களை (புறப்பட விடாமல்) தடுத்துவிட்டேன் என்றே கருதுகிறேன்” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் “உன் கழுத்து அறுந்துபோக! உனக்குத் தொண்டை வலி வர! (காரியத்தைக் கெடுத்துவிட்டாயே)” என்று கூறிவிட்டு, “இவர் நஹ்ருடைய (பத்தாம்) நாளில் தவாஃப் செய்துவிட்டாரா?” எனக் கேட்டார் கள். அதற்கு ‘ஆம்’ எனச் சொல்லப்பட்ட தும் “அப்படியாயின் புறப்படு!” என்றார்கள்.


அத்தியாயம் : 25
1772. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَزَادَنِي مُحَمَّدٌ حَدَّثَنَا مُحَاضِرٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لاَ نَذْكُرُ إِلاَّ الْحَجَّ، فَلَمَّا قَدِمْنَا أَمَرَنَا أَنْ نَحِلَّ، فَلَمَّا كَانَتْ لَيْلَةُ النَّفْرِ حَاضَتْ صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " حَلْقَى عَقْرَى، مَا أُرَاهَا إِلاَّ حَابِسَتَكُمْ ". ثُمَّ قَالَ " كُنْتِ طُفْتِ يَوْمَ النَّحْرِ ". قَالَتْ نَعَمْ. قَالَ " فَانْفِرِي ". قُلْتُ يَا رَسُولَ اللَّهِ. إِنِّي لَمْ أَكُنْ حَلَلْتُ. قَالَ " فَاعْتَمِرِي مِنَ التَّنْعِيمِ ". فَخَرَجَ مَعَهَا أَخُوهَا، فَلَقِينَاهُ مُدَّلِجًا. فَقَالَ " مَوْعِدُكِ مَكَانَ كَذَا وَكَذَا ".
பாடம் : 151 ‘அல்முஹஸ்ஸபி’லிருந்து இரவின் கடைசி நேரத்தில் புறப்படுதல்
1772. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜை மட்டுமே எண்ணிப் புறப்பட்டோம். நாங்கள் (மக்கா வுக்கு) வந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு கட்டளையிட்டார்கள்.

நாங்கள் ஊர் திரும்பும் (நஃப்ருடைய) நாளின் இரவில் ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “உன் கழுத்து அறுந்துபோக! உனக்குத் தொண்டை வலி வர! (காரியத்தைக் கெடுத்துவிட்டாயே)” என்று கூறிவிட்டு, “இவர் நம்மைத் தடுத்துவிட்டார் என்றே கருதுகிறேன்” என்றார்கள். பிறகு அவர்கள், “நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாளில், நீ தவாஃப் செய்தாயா?” எனக் கேட்டதும் அவர் ‘ஆம்’ என்றார். “(அப்படியாயின்) நீ புறப்படு” என்றார்கள்.

அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் இன்னும் இஹ்ராமிலிருந்து விடுபடவில்லையே” என்றேன். அதற்கு அவர்கள், “தன்யீம் என்ற இடத்திலிருந்து உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்” என்றார்கள்.

நான் என் சகோதரருடன் புறப்பட்டு (தன்யீமுக்கு)ச் சென்றேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் இரவின் இறுதியில் (‘தவாஃபுல் வதா’வுக்காக மக்கா) போய்க் கொண்டிருந்தபோது அவர்களைச் சந்தித்தோம். அப்போது அவர்கள், “இன்ன இன்ன இடத்தில் நீ தங்க வேண்டும் (அங்கு மீண்டும் சந்திப்போம்)” என்றார்கள்.

அத்தியாயம் : 25