1424. حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي مَعْبَدُ بْنُ خَالِدٍ، قَالَ سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ الْخُزَاعِيَّ ـ رضى الله عنه ـ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" تَصَدَّقُوا، فَسَيَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ يَمْشِي الرَّجُلُ بِصَدَقَتِهِ فَيَقُولُ الرَّجُلُ لَوْ جِئْتَ بِهَا بِالأَمْسِ لَقَبِلْتُهَا مِنْكَ، فَأَمَّا الْيَوْمَ فَلاَ حَاجَةَ لِي فِيهَا "".
பாடம் : 16
வலக் கரத்தால் தர்மம் செய்தல்
1424. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இப்போதே) தர்மம் செய்துகொள் ளுங்கள்! ஏனெனில், உங்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தில் ஒருவர் தமது தர்மப் பொருளை (வலக் கரத்தில்) எடுத்துக்கொண்டு அலைவார். அப்போது ஒரு மனிதன், நேற்றே இதை நீர் கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே என்று கூறுவான்.
இதை ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1424. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இப்போதே) தர்மம் செய்துகொள் ளுங்கள்! ஏனெனில், உங்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தில் ஒருவர் தமது தர்மப் பொருளை (வலக் கரத்தில்) எடுத்துக்கொண்டு அலைவார். அப்போது ஒரு மனிதன், நேற்றே இதை நீர் கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே என்று கூறுவான்.
இதை ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1425. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أَنْفَقَتِ الْمَرْأَةُ مِنْ طَعَامِ بَيْتِهَا غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا أَجْرُهَا بِمَا أَنْفَقَتْ وَلِزَوْجِهَا أَجْرُهُ بِمَا كَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ، لاَ يَنْقُصُ بَعْضُهُمْ أَجْرَ بَعْضٍ شَيْئًا "".
பாடம் : 17
ஒருவர் நேரடியாகத் தாமே தர்மம் வழங்காமல் பணியாள் மூலம் வழங்குதல்
“அவரும் (தர்மத்தை விநியோகிக்கும் பணியாளரும்) தர்மம் செய்தவர்களில் ஒருவரே” என நபி (ஸல்) அவர்கள் கூறிய தாக அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
1425. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் (முறையோடு) தர்மம் செய்தால், அவள் செலவழித்தற்காக அவளுக்கும் (தர்மத்தின்) பலன் கிடைக்கும். அதைச் சம்பாதித்தவன் என்ற முறையில் அவளுடைய கணவனுக்கும் அதன் நன்மை கிடைக்கும்; அதைப் போன்றே, காசாளருக்கும் (நன்மை) கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் சிறிதும் குறைத்துவிடமாட் டார்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1425. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் (முறையோடு) தர்மம் செய்தால், அவள் செலவழித்தற்காக அவளுக்கும் (தர்மத்தின்) பலன் கிடைக்கும். அதைச் சம்பாதித்தவன் என்ற முறையில் அவளுடைய கணவனுக்கும் அதன் நன்மை கிடைக்கும்; அதைப் போன்றே, காசாளருக்கும் (நன்மை) கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் சிறிதும் குறைத்துவிடமாட் டார்கள்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1426. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" خَيْرُ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرِ غِنًى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ "".
பாடம் : 18
தனக்கு மிஞ்சியே தானதர்மம்
ஒருவர் தமக்கோ தம் குடும்பத்துக்கோ தேவை இருக்கும்போது, அல்லது கடனிருக்கும்போது தர்மம் செய்தால் அது திரும்பக் கொடுக்கப்பட வேண்டும். தர்மம் செய்தல், அடிமையை விடுதலை செய்தல், அன்பளிப்பு வழங்குதல் ஆகிய வற்றைவிடக் கடனை அடைப்பதே முக்கியமானதாகும். ஏனெனில், மற்றவர்களின் பொருளை அழிக்க ஒருவருக்கு உரிமையில்லை.
“யார் மக்களின் பொருளைப் பெற்று அதைச் சீரழிக்க நாடுகிறானோ அவனை அல்லாஹ் சீரழிப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இருப்பினும், பொறுமைக்குப் பெயர்போனவராக ஒருவர் இருந்தால், அவர் தமக்குப் பசி இருந்தாலும் பிறருக்கு முன்னுரிமை அளிக்கலாம். அபூபக்ர் (ரலி) அவர்கள், இவ்வாறே தமது சொத்(து முழுவ)தை(யும்) தர்மம் செய்திருக்கிறாôகள். அன்சாரிகள் தங்களைவிட முஹாஜிர் (களின் தேவை)களுக்கு முன்னுரிமை அளித்தார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் (மக்களின்) பொருட்களை வீணாக்குவதற் குத் தடை விதித்துள்ளார்கள். எனவே, தர்மத்தைக் காரணம்காட்டி பிற மக்களின் பொருட்களை வீணடிக்க யாருக்கும் உரிமையில்லை.
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! நான் செய்த தவறுக்குப் பரிகாரமாக எனது செல்வம் முழுவதையும் அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் தர்மமாக ஒப்படைத்துவிடுகிறேன்” என்று கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமது செல்வத்தில் சிறிதளவை நீர் வைத்துக் கொள்ளும்; அது உமக்குச் சிறந்தது” என்றார்கள். “கைபர் போரில் கிடைத்த எனது பங்கை மட்டும் நான் எனக்காக வைத்துக்கொள்கிறேன்” என்று நான் பதிலளித்தேன்.
1426. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தேவைபோக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். முதலில் உம்முடைய வீட்டாரிடமிருந்தே (தர்மத்தைத்) தொடங்குவீராக!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1426. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தேவைபோக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். முதலில் உம்முடைய வீட்டாரிடமிருந்தே (தர்மத்தைத்) தொடங்குவீராக!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1427. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ، وَخَيْرُ الصَّدَقَةِ عَنْ ظَهْرِ غِنًى، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ ". وَعَنْ وُهَيْبٍ، قَالَ أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ بِهَذَا.
பாடம் : 18
தனக்கு மிஞ்சியே தானதர்மம்
ஒருவர் தமக்கோ தம் குடும்பத்துக்கோ தேவை இருக்கும்போது, அல்லது கடனிருக்கும்போது தர்மம் செய்தால் அது திரும்பக் கொடுக்கப்பட வேண்டும். தர்மம் செய்தல், அடிமையை விடுதலை செய்தல், அன்பளிப்பு வழங்குதல் ஆகிய வற்றைவிடக் கடனை அடைப்பதே முக்கியமானதாகும். ஏனெனில், மற்றவர்களின் பொருளை அழிக்க ஒருவருக்கு உரிமையில்லை.
“யார் மக்களின் பொருளைப் பெற்று அதைச் சீரழிக்க நாடுகிறானோ அவனை அல்லாஹ் சீரழிப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இருப்பினும், பொறுமைக்குப் பெயர்போனவராக ஒருவர் இருந்தால், அவர் தமக்குப் பசி இருந்தாலும் பிறருக்கு முன்னுரிமை அளிக்கலாம். அபூபக்ர் (ரலி) அவர்கள், இவ்வாறே தமது சொத்(து முழுவ)தை(யும்) தர்மம் செய்திருக்கிறாôகள். அன்சாரிகள் தங்களைவிட முஹாஜிர் (களின் தேவை)களுக்கு முன்னுரிமை அளித்தார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் (மக்களின்) பொருட்களை வீணாக்குவதற் குத் தடை விதித்துள்ளார்கள். எனவே, தர்மத்தைக் காரணம்காட்டி பிற மக்களின் பொருட்களை வீணடிக்க யாருக்கும் உரிமையில்லை.
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! நான் செய்த தவறுக்குப் பரிகாரமாக எனது செல்வம் முழுவதையும் அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் தர்மமாக ஒப்படைத்துவிடுகிறேன்” என்று கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமது செல்வத்தில் சிறிதளவை நீர் வைத்துக் கொள்ளும்; அது உமக்குச் சிறந்தது” என்றார்கள். “கைபர் போரில் கிடைத்த எனது பங்கை மட்டும் நான் எனக்காக வைத்துக்கொள்கிறேன்” என்று நான் பதிலளித்தேன்.
1427. 1428 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மேல் கையே கீழ் கையைவிடச் சிறந்ததாகும். உம்முடைய குடும்பத்தாரிட மிருந்தே (தர்மத்தைத்) தொடங்குவீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறாரோ அவரை அல்லாஹ்வும் சுயமரியாதை உள்ளவராக ஆக்குவான். யார் தன்னிறைவோடு வாழவைக்குமாறு (அல்லாஹ்விடம்) கோருவாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான்.
இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்பட் டுள்ளது.
அத்தியாயம் : 24
1427. 1428 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மேல் கையே கீழ் கையைவிடச் சிறந்ததாகும். உம்முடைய குடும்பத்தாரிட மிருந்தே (தர்மத்தைத்) தொடங்குவீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறாரோ அவரை அல்லாஹ்வும் சுயமரியாதை உள்ளவராக ஆக்குவான். யார் தன்னிறைவோடு வாழவைக்குமாறு (அல்லாஹ்விடம்) கோருவாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான்.
இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்பட் டுள்ளது.
அத்தியாயம் : 24
1429. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم ح. وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ، وَذَكَرَ الصَّدَقَةَ وَالتَّعَفُّفَ وَالْمَسْأَلَةَ "" الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى، فَالْيَدُ الْعُلْيَا هِيَ الْمُنْفِقَةُ، وَالسُّفْلَى هِيَ السَّائِلَةُ "".
பாடம் : 18
தனக்கு மிஞ்சியே தானதர்மம்
ஒருவர் தமக்கோ தம் குடும்பத்துக்கோ தேவை இருக்கும்போது, அல்லது கடனிருக்கும்போது தர்மம் செய்தால் அது திரும்பக் கொடுக்கப்பட வேண்டும். தர்மம் செய்தல், அடிமையை விடுதலை செய்தல், அன்பளிப்பு வழங்குதல் ஆகிய வற்றைவிடக் கடனை அடைப்பதே முக்கியமானதாகும். ஏனெனில், மற்றவர்களின் பொருளை அழிக்க ஒருவருக்கு உரிமையில்லை.
“யார் மக்களின் பொருளைப் பெற்று அதைச் சீரழிக்க நாடுகிறானோ அவனை அல்லாஹ் சீரழிப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இருப்பினும், பொறுமைக்குப் பெயர்போனவராக ஒருவர் இருந்தால், அவர் தமக்குப் பசி இருந்தாலும் பிறருக்கு முன்னுரிமை அளிக்கலாம். அபூபக்ர் (ரலி) அவர்கள், இவ்வாறே தமது சொத்(து முழுவ)தை(யும்) தர்மம் செய்திருக்கிறாôகள். அன்சாரிகள் தங்களைவிட முஹாஜிர் (களின் தேவை)களுக்கு முன்னுரிமை அளித்தார்கள்.
மேலும், நபி (ஸல்) அவர்கள் (மக்களின்) பொருட்களை வீணாக்குவதற் குத் தடை விதித்துள்ளார்கள். எனவே, தர்மத்தைக் காரணம்காட்டி பிற மக்களின் பொருட்களை வீணடிக்க யாருக்கும் உரிமையில்லை.
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! நான் செய்த தவறுக்குப் பரிகாரமாக எனது செல்வம் முழுவதையும் அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் தர்மமாக ஒப்படைத்துவிடுகிறேன்” என்று கூறினேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமது செல்வத்தில் சிறிதளவை நீர் வைத்துக் கொள்ளும்; அது உமக்குச் சிறந்தது” என்றார்கள். “கைபர் போரில் கிடைத்த எனது பங்கை மட்டும் நான் எனக்காக வைத்துக்கொள்கிறேன்” என்று நான் பதிலளித்தேன்.
1429. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை(மிம்பர்) மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகிய வற்றைப் பற்றி உபதேசம் செய்தார்கள். அப்போது மேல் கையே கீழ் கையைவிடச் சிறந்ததாகும்; மேல் கை என்பது, தர்மம் செய்யக்கூடியது; கீழ் கை என்பது யாசிக்கக்கூடியது” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
1429. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை(மிம்பர்) மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகிய வற்றைப் பற்றி உபதேசம் செய்தார்கள். அப்போது மேல் கையே கீழ் கையைவிடச் சிறந்ததாகும்; மேல் கை என்பது, தர்மம் செய்யக்கூடியது; கீழ் கை என்பது யாசிக்கக்கூடியது” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
1430. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ عُقْبَةَ بْنَ الْحَارِثِ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم الْعَصْرَ، فَأَسْرَعَ ثُمَّ دَخَلَ الْبَيْتَ، فَلَمْ يَلْبَثْ أَنْ خَرَجَ، فَقُلْتُ أَوْ قِيلَ لَهُ فَقَالَ "" كُنْتُ خَلَّفْتُ فِي الْبَيْتِ تِبْرًا مِنَ الصَّدَقَةِ، فَكَرِهْتُ أَنْ أُبَيِّتَهُ فَقَسَمْتُهُ "".
பாடம் : 19
செய்த தர்மத்தைச் சொல்லிக்காட்டுபவர்
அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ்வின் வழியில் தம் செல்வங்களைச் செலவு செய்துவிட்டு, அதைத் தொடர்ந்து தாம் செலவு செய்வதைச் சொல்லிக்காட்டாமலும் புண்படுத்தாமலும் இருப்போருக்கு உரிய பிரதிபலன் அவர்களுடைய இறைவனிடம் கிடைக் கும். அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவு மாட்டார்கள். (2:262)
பாடம் : 20
தர்மத்தை அன்றே விரைவாகச் செய்ய விரும்புதல்
1430. உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகை தொழுவித்துவிட்டு, உடனே விரைந்து வீட்டினுள் சென்று, தாமதிக்காமல் வெளியே வந்தார்கள். அப்போது நான் காரணம் கேட்டேன் -அல்லது கேட்கப்பட்டது - அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் எனது வீட்டில் தர்மப் பொருளான தங்கக் கட்டியை வைத்திருந்தேன்; இரவுவரை அது என்னிடம் இருப்பதை நான் விரும்ப வில்லை. எனவே, அதைப் பகிர்ந்து அளித்துவிட்டேன்” எனக் கூறினார்கள்.
அத்தியாயம் : 24
1430. உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகை தொழுவித்துவிட்டு, உடனே விரைந்து வீட்டினுள் சென்று, தாமதிக்காமல் வெளியே வந்தார்கள். அப்போது நான் காரணம் கேட்டேன் -அல்லது கேட்கப்பட்டது - அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் எனது வீட்டில் தர்மப் பொருளான தங்கக் கட்டியை வைத்திருந்தேன்; இரவுவரை அது என்னிடம் இருப்பதை நான் விரும்ப வில்லை. எனவே, அதைப் பகிர்ந்து அளித்துவிட்டேன்” எனக் கூறினார்கள்.
அத்தியாயம் : 24
1431. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَدِيٌّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ عِيدٍ فَصَلَّى رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلُ وَلاَ بَعْدُ، ثُمَّ مَالَ عَلَى النِّسَاءِ وَمَعَهُ بِلاَلٌ، فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ، فَجَعَلَتِ الْمَرْأَةُ تُلْقِي الْقُلْبَ وَالْخُرْصَ.
பாடம் : 21
தர்மம் செய்யத் தூண்டுவதும் அதற்காகப் பரிந்துரைப்பதும்
1431. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள். அதற்கு முன்பும் பின்பும் எதையும் தொழவில்லை. பிறகு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்தார்கள். பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள் தங்கள் கை வளையல்களையும் காதணிகளையும் (தர்மமாக) வழங்க லானார்கள்.
அத்தியாயம் : 24
1431. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள். அதற்கு முன்பும் பின்பும் எதையும் தொழவில்லை. பிறகு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்தார்கள். பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள் தங்கள் கை வளையல்களையும் காதணிகளையும் (தர்மமாக) வழங்க லானார்கள்.
அத்தியாயம் : 24
1432. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا جَاءَهُ السَّائِلُ، أَوْ طُلِبَتْ إِلَيْهِ حَاجَةٌ قَالَ "" اشْفَعُوا تُؤْجَرُوا، وَيَقْضِي اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ صلى الله عليه وسلم مَا شَاءَ "".
பாடம் : 21
தர்மம் செய்யத் தூண்டுவதும் அதற்காகப் பரிந்துரைப்பதும்
1432. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் யாசகர் எவரேனும் வந்தால், அல்லது அவர்களிடம் ஏதேனும் தேவை(யை நிறைவேற்றுமாறு) கோரப் பட்டால், அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “(இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள்; அதனால் உங்க ளுக்கும் நற்பலன் வழங்கப்படும்” என்று கூறுவார்கள்.
பிறகு “அல்லாஹ், தன் தூதரின் நாவால் தான் நாடியதை நிறைவேற்று கிறான்” என்பார்கள்.
அத்தியாயம் : 24
1432. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் யாசகர் எவரேனும் வந்தால், அல்லது அவர்களிடம் ஏதேனும் தேவை(யை நிறைவேற்றுமாறு) கோரப் பட்டால், அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “(இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள்; அதனால் உங்க ளுக்கும் நற்பலன் வழங்கப்படும்” என்று கூறுவார்கள்.
பிறகு “அல்லாஹ், தன் தூதரின் நாவால் தான் நாடியதை நிறைவேற்று கிறான்” என்பார்கள்.
அத்தியாயம் : 24
1433. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تُوكِي فَيُوكَى عَلَيْكِ "". حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، عَنْ عَبْدَةَ، وَقَالَ، "" لاَ تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ ""
பாடம் : 21
தர்மம் செய்யத் தூண்டுவதும் அதற்காகப் பரிந்துரைப்பதும்
1433. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “நீ (தர்மம் செய்யாமல்) பையை முடிந்து வைத்துக்கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக்கொள்ளப்படும்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “(நல்லறங்களுக்காகச் செலவழிப்பதில்) கணக்குப் பார்த்துக்கொண்டிருக்காதே! (அப்படிப் பார்த்தால்) அல்லாஹ்வும் உன் விஷயத்தில் கணக்குப் பார்ப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 24
1433. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “நீ (தர்மம் செய்யாமல்) பையை முடிந்து வைத்துக்கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக்கொள்ளப்படும்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “(நல்லறங்களுக்காகச் செலவழிப்பதில்) கணக்குப் பார்த்துக்கொண்டிருக்காதே! (அப்படிப் பார்த்தால்) அல்லாஹ்வும் உன் விஷயத்தில் கணக்குப் பார்ப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 24
1434. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، عَنْ حَجَّاجِ بْنِ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، أَخْبَرَهُ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ أَنَّهَا جَاءَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" لاَ تُوعِي فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ، ارْضَخِي مَا اسْتَطَعْتِ "".
பாடம் : 22
இயன்றளவு தர்மம் செய்தல்
1434. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அல்லாஹ் உன்மீது (தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக்கொள்வான். (எனவே) உன்னால் இயன்றவரை சிறிதளவேனும் தர்மம் செய்!” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
1434. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அல்லாஹ் உன்மீது (தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக்கொள்வான். (எனவே) உன்னால் இயன்றவரை சிறிதளவேனும் தர்மம் செய்!” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
1435. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ أَيُّكُمْ يَحْفَظُ حَدِيثَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْفِتْنَةِ قَالَ قُلْتُ أَنَا أَحْفَظُهُ كَمَا قَالَ. قَالَ إِنَّكَ عَلَيْهِ لَجَرِيءٌ فَكَيْفَ قَالَ قُلْتُ فِتْنَةُ الرَّجُلِ فِي أَهْلِهِ وَوَلَدِهِ وَجَارِهِ تُكَفِّرُهَا الصَّلاَةُ وَالصَّدَقَةُ وَالْمَعْرُوفُ. قَالَ سُلَيْمَانُ قَدْ كَانَ يَقُولُ "" الصَّلاَةُ وَالصَّدَقَةُ، وَالأَمْرُ بِالْمَعْرُوفِ وَالنَّهْىُ عَنِ الْمُنْكَرِ "". قَالَ لَيْسَ هَذِهِ أُرِيدُ، وَلَكِنِّي أُرِيدُ الَّتِي تَمُوجُ كَمَوْجِ الْبَحْرِ. قَالَ قُلْتُ لَيْسَ عَلَيْكَ بِهَا يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ بَأْسٌ، بَيْنَكَ وَبَيْنَهَا باب مُغْلَقٌ. قَالَ فَيُكْسَرُ الْبَابُ أَوْ يُفْتَحُ. قَالَ قُلْتُ لاَ. بَلْ يُكْسَرُ. قَالَ فَإِنَّهُ إِذَا كُسِرَ لَمْ يُغْلَقْ أَبَدًا. قَالَ قُلْتُ أَجَلْ. فَهِبْنَا أَنْ نَسْأَلَهُ مَنِ الْبَابُ فَقُلْنَا لِمَسْرُوقٍ سَلْهُ. قَالَ فَسَأَلَهُ. فَقَالَ عُمَرُ ـ رضى الله عنه ـ. قَالَ قُلْنَا فَعَلِمَ عُمَرُ مَنْ تَعْنِي قَالَ نَعَمْ، كَمَا أَنَّ دُونَ غَدٍ لَيْلَةً، وَذَلِكَ أَنِّي حَدَّثْتُهُ حَدِيثًا لَيْسَ بِالأَغَالِيطِ.
பாடம் : 23
தர்மம் பாவங்களுக்குப் பரிகார மாகும்.
1435. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் (ரலி) அவர்கள், “உங்களில் யார் குழப்பங்கள் (ஃபித்னா) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவில் வைத்தி ருக்கிறார்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அப்படியே நினைவில் வைத்திருக்கிறேன்” என்றேன். உமர் (ரலி) அவர்கள், “நீர் அதற்குத் துணிந்தவர்தான். அவர்கள் எப்படிச் சொன்னார்கள்?” என்று கேட்டார்கள்.5
“ஒரு மனிதன் தன் குடும்பத்தார் மற்றும் குழந்தைகள் விஷயத்தில் (அவர்கள்மீது அளவு கடந்த பாசம் வைப்பதன் மூலமும்) தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) சோதனையில் (ஃபித்னாவில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, தர்மம், நல்லறம் ஆகியவை அதற்கான பரிகாரமாக அமையும் என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என) நான் பதில் கூறினேன்.
உமர் (ரலி) அவர்கள், “நான் இதைப் பற்றிக் கேட்கவில்லை; கடல் அலையைப் போல அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய (அல்லாஹ்வின் தூதரால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட) குழப்பத்தை (ஃபித்னா) பற்றியே கேட்கிறேன்” என்றார்கள்.
நான் “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்க ளுக்கும் அவற்றிற்குமிடையே மூடப்பட்ட கதவு உள்ளது” எனக் கூறியதும், “அக்கதவு உடைக்கப்படுமா? திறக்கப்படுமா?”என உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் “உடைக்கப்படும்” என்றேன். “அது உடைக்கப்பட்டால் ஒருபோதும் மூடப்படவேமாட்டாதுதானே?”என உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன்.6
அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள், “நல்லறம் என்பதற்குப் பதிலாக அபூவாயில் (ரஹ்) அவர்கள் நல்லதை ஏவி, தீயதைத் தடுத்தல் என்று கூறுவார்கள்” என்றார்கள்.
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“அந்தக் கதவு எது?” என ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே, மஸ்ரூக் (ரஹ்) அவர்களிடம் கேட்கச் சொன்னோம். அவர்கள் கேட்டதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள், “(அந்தக் கதவு) உமர் (ரலி) அவர்கள்)தான்”என்றார்கள்.
மேலும், (அவரிடமே) “நீங்கள் குறிப்பிடுவதை உமர் (ரலி) அவர்கள் அறிவார்களா?” எனக் கேட்டோம். அதற்கு அவர்கள் “ஆம், பகலுக்குமுன் இரவு உண்டு என்பதை அறிவதைப் போன்று அதை உமர் (ரலி) அவர்கள் அறிவார்கள். ஏனெனில், பொய்கள் கலவாத செய்தியையே நான் உமருக்கு அறிவித்தேன்” என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 24
1435. ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் (ரலி) அவர்கள், “உங்களில் யார் குழப்பங்கள் (ஃபித்னா) பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவில் வைத்தி ருக்கிறார்?” என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை அப்படியே நினைவில் வைத்திருக்கிறேன்” என்றேன். உமர் (ரலி) அவர்கள், “நீர் அதற்குத் துணிந்தவர்தான். அவர்கள் எப்படிச் சொன்னார்கள்?” என்று கேட்டார்கள்.5
“ஒரு மனிதன் தன் குடும்பத்தார் மற்றும் குழந்தைகள் விஷயத்தில் (அவர்கள்மீது அளவு கடந்த பாசம் வைப்பதன் மூலமும்) தன் அண்டை வீட்டார் விஷயத்தில் (அவர்களின் உரிமைகளில் குறைவைப்பதன் மூலமும்) சோதனையில் (ஃபித்னாவில்) ஆழ்த்தப்படும்போது, தொழுகை, தர்மம், நல்லறம் ஆகியவை அதற்கான பரிகாரமாக அமையும் என்று (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என) நான் பதில் கூறினேன்.
உமர் (ரலி) அவர்கள், “நான் இதைப் பற்றிக் கேட்கவில்லை; கடல் அலையைப் போல அடுக்கடுக்காக ஏற்படக்கூடிய (அல்லாஹ்வின் தூதரால் முன்னறிவிப்புச் செய்யப்பட்ட) குழப்பத்தை (ஃபித்னா) பற்றியே கேட்கிறேன்” என்றார்கள்.
நான் “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! அவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. உங்க ளுக்கும் அவற்றிற்குமிடையே மூடப்பட்ட கதவு உள்ளது” எனக் கூறியதும், “அக்கதவு உடைக்கப்படுமா? திறக்கப்படுமா?”என உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் “உடைக்கப்படும்” என்றேன். “அது உடைக்கப்பட்டால் ஒருபோதும் மூடப்படவேமாட்டாதுதானே?”என உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன்.6
அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள், “நல்லறம் என்பதற்குப் பதிலாக அபூவாயில் (ரஹ்) அவர்கள் நல்லதை ஏவி, தீயதைத் தடுத்தல் என்று கூறுவார்கள்” என்றார்கள்.
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“அந்தக் கதவு எது?” என ஹுதைஃபா (ரலி) அவர்களிடம் கேட்க நாங்கள் அஞ்சினோம். எனவே, மஸ்ரூக் (ரஹ்) அவர்களிடம் கேட்கச் சொன்னோம். அவர்கள் கேட்டதற்கு ஹுதைஃபா (ரலி) அவர்கள், “(அந்தக் கதவு) உமர் (ரலி) அவர்கள்)தான்”என்றார்கள்.
மேலும், (அவரிடமே) “நீங்கள் குறிப்பிடுவதை உமர் (ரலி) அவர்கள் அறிவார்களா?” எனக் கேட்டோம். அதற்கு அவர்கள் “ஆம், பகலுக்குமுன் இரவு உண்டு என்பதை அறிவதைப் போன்று அதை உமர் (ரலி) அவர்கள் அறிவார்கள். ஏனெனில், பொய்கள் கலவாத செய்தியையே நான் உமருக்கு அறிவித்தேன்” என்று ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 24
1436. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ أَشْيَاءَ كُنْتُ أَتَحَنَّثُ بِهَا فِي الْجَاهِلِيَّةِ مِنْ صَدَقَةٍ أَوْ عَتَاقَةٍ وَصِلَةِ رَحِمٍ فَهَلْ فِيهَا مِنْ أَجْرٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَسْلَمْتَ عَلَى مَا سَلَفَ مِنْ خَيْرٍ "".
பாடம் : 24
ஒருவர் இணைவைப்பவராக இருந்தபோது தர்மம் செய்து விட்டுப் பின்பு இஸ்லாத்தில் இணைதல்
1436. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில், தர்மம் செய்தல், அடிமைகளை விடுதலை செய்தல், உறவைப் பேணல் போன்ற நல்லறங்களைச் செய்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில் எனக்கு) நன்மை ஏதும் உண்டா?” என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்) களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்” என்று பதிலளித்தார்கள்.7
அத்தியாயம் : 24
1436. ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான், “அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்தில், தர்மம் செய்தல், அடிமைகளை விடுதலை செய்தல், உறவைப் பேணல் போன்ற நல்லறங்களைச் செய்துள்ளேன். அவற்றுக்கு (மறுமையில் எனக்கு) நன்மை ஏதும் உண்டா?” என்று கேட்டேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் முன்னர் செய்த நற்செயல்(களுக்குரிய நற்பலன்) களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர்” என்று பதிலளித்தார்கள்.7
அத்தியாயம் : 24
1437. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا تَصَدَّقَتِ الْمَرْأَةُ مِنْ طَعَامِ زَوْجِهَا غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا أَجْرُهَا، وَلِزَوْجِهَا بِمَا كَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ "".
பாடம் : 25
உரிமையாளரின் கட்டளையின் பேரில், அவரது பொருளைச் சீரழிக்காமல் தர்மம் செய்யும் பணியாளருக்கும் நன்மை கிடைக்கும்.
1437. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால், அதற்கான பலன் அவளுக்கு உண்டு. அதைச் சம்பாதித்தவன் என்ற முறையில் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும். அது போன்றே, காசாளருக்கும் (நன்மை) கிடைக்கும்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1437. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால், அதற்கான பலன் அவளுக்கு உண்டு. அதைச் சம்பாதித்தவன் என்ற முறையில் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும். அது போன்றே, காசாளருக்கும் (நன்மை) கிடைக்கும்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1438. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" الْخَازِنُ الْمُسْلِمُ الأَمِينُ الَّذِي يُنْفِذُ ـ وَرُبَّمَا قَالَ يُعْطِي ـ مَا أُمِرَ بِهِ كَامِلاً مُوَفَّرًا طَيِّبٌ بِهِ نَفْسُهُ، فَيَدْفَعُهُ إِلَى الَّذِي أُمِرَ لَهُ بِهِ، أَحَدُ الْمُتَصَدِّقَيْنِ "".
பாடம் : 25
உரிமையாளரின் கட்டளையின் பேரில், அவரது பொருளைச் சீரழிக்காமல் தர்மம் செய்யும் பணியாளருக்கும் நன்மை கிடைக்கும்.
1438. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தைச் செயல்படுத்தக்கூடிய -அல்லது அதற்காக வழங்கக்கூடிய- நேர்மையான முஸ்லிம் காசாளர், அதை முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமாகவும் வழங்கும்போது, தர்மத்தில் பங்கு வகிக்கும் இருவரில் ஒருவர் ஆவார்.8
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1438. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தைச் செயல்படுத்தக்கூடிய -அல்லது அதற்காக வழங்கக்கூடிய- நேர்மையான முஸ்லிம் காசாளர், அதை முழுமையாகவும் குறைவின்றியும் மனப்பூர்வமாகவும் வழங்கும்போது, தர்மத்தில் பங்கு வகிக்கும் இருவரில் ஒருவர் ஆவார்.8
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1439. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مَنْصُورٌ، وَالأَعْمَشُ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم تَعْنِي إِذَا تَصَدَّقَتِ الْمَرْأَةُ مِنْ بَيْتِ زَوْجِهَا. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا أَطْعَمَتِ الْمَرْأَةُ مِنْ بَيْتِ زَوْجِهَا غَيْرَ مُفْسِدَةٍ، لَهَا أَجْرُهَا، وَلَهُ مِثْلُهُ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ، لَهُ بِمَا اكْتَسَبَ، وَلَهَا بِمَا أَنْفَقَتْ "".
பாடம் : 26
கணவனின் இல்லத்திலுள்ள ஒன்றை வீணாக்காமல் ஒரு பெண் தர்மம் செய்தாலோ உணவளித்தாலோ அவளுக்கும் நன்மை கிடைக்கும்.
1439. 1440 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தன் கணவனின் வீட்டி லுள்ள ஒன்றை தர்மம் செய்தால்...
மற்றோர் அறிவிப்பில் இடம்பெற் றுள்ளதாவது:
ஒரு பெண் தன் கணவனின் வீட்டி லுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அதற்கான நற்பலன் அவளுக் குக் கிடைக்கும். அதைப் போன்ற நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அது போன்றே காசாளருக்கும் கிடைக்கும். அவள் செலவழித்ததற்காகவும் அவன் சம்பாதித்ததற்காகவும் அந்தத் தர்மத்தின் நன்மையைப் பெறுகின்றனர்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் (மொத்தம்) மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
1439. 1440 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பெண் தன் கணவனின் வீட்டி லுள்ள ஒன்றை தர்மம் செய்தால்...
மற்றோர் அறிவிப்பில் இடம்பெற் றுள்ளதாவது:
ஒரு பெண் தன் கணவனின் வீட்டி லுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அதற்கான நற்பலன் அவளுக் குக் கிடைக்கும். அதைப் போன்ற நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அது போன்றே காசாளருக்கும் கிடைக்கும். அவள் செலவழித்ததற்காகவும் அவன் சம்பாதித்ததற்காகவும் அந்தத் தர்மத்தின் நன்மையைப் பெறுகின்றனர்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் (மொத்தம்) மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
1441. حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا أَنْفَقَتِ الْمَرْأَةُ مِنْ طَعَامِ بَيْتِهَا غَيْرَ مُفْسِدَةٍ فَلَهَا أَجْرُهَا، وَلِلزَّوْجِ بِمَا اكْتَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ "".
பாடம் : 26
கணவனின் இல்லத்திலுள்ள ஒன்றை வீணாக்காமல் ஒரு பெண் தர்மம் செய்தாலோ உணவளித்தாலோ அவளுக்கும் நன்மை கிடைக்கும்.
1441. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு பெண் தன் (கணவனின்) வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால், அதன் நன்மை அவளுக்குக் கிடைக்கும். (அதைச்) சம்பாதித்த காரணத் தால் (தர்மத்தின் நன்மை) அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அதுபோலவே காசாளருக்கும் கிடைக்கும்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1441. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு பெண் தன் (கணவனின்) வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால், அதன் நன்மை அவளுக்குக் கிடைக்கும். (அதைச்) சம்பாதித்த காரணத் தால் (தர்மத்தின் நன்மை) அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும்; அதுபோலவே காசாளருக்கும் கிடைக்கும்.
இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1442. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي مُزَرِّدٍ، عَنْ أَبِي الْحُبَابِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ الْعِبَادُ فِيهِ إِلاَّ مَلَكَانِ يَنْزِلاَنِ فَيَقُولُ أَحَدُهُمَا اللَّهُمَّ أَعْطِ مُنْفِقًا خَلَفًا، وَيَقُولُ الآخَرُ اللَّهُمَّ أَعْطِ مُمْسِكًا تَلَفًا "".
பாடம் : 27
உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான் :
யார் (தானதர்மம்) கொடுத்து, (தம் இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மை என ஏற்கிறாரோ அவருக்கு நாம் இலகுவான (நன்மையின்) பாதையை எளிதாக்குவோம். ஆனால், யார் கஞ்சத் தனம் செய்து, தேவையற்றவராக தம்மைக் கருதிக்கொண்டு, நல்லவற்றை நம்ப மறுக்கிறாரோ அவருக்குச் சிரமத்திற்குரிய (தீமையின்) பாதையைத்தான் எளிதாக்கு வோம். (92:5-10)
“இறைவா! பொருளை (நல்வழியில்) செலவு செய்பவருக்குப் பிரதிபலன் வழங்குவாயாக!”
1442. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒவ்வொரு நாளும் அடியார்கள் காலைப்பொழுதை அடையும்போது, இரு வானவர்கள் (வானிலிருந்து) இறங்குகின்ற னர். அவ்விருவரில் ஒருவர், “இறைவா! (நல்வழியில்) செலவு செய்பவருக்குப் பிரதிபலன் வழங்குவாயாக!” என்று கூறுவார். மற்றொருவர், “இறைவா! (நல்வழியில்) செலவு செய்ய மறுப்பவருக்கு இழப்பைத் தருவாயாக!” என்று கூறுவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1442. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
ஒவ்வொரு நாளும் அடியார்கள் காலைப்பொழுதை அடையும்போது, இரு வானவர்கள் (வானிலிருந்து) இறங்குகின்ற னர். அவ்விருவரில் ஒருவர், “இறைவா! (நல்வழியில்) செலவு செய்பவருக்குப் பிரதிபலன் வழங்குவாயாக!” என்று கூறுவார். மற்றொருவர், “இறைவா! (நல்வழியில்) செலவு செய்ய மறுப்பவருக்கு இழப்பைத் தருவாயாக!” என்று கூறுவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1443. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَثَلُ الْبَخِيلِ وَالْمُتَصَدِّقِ كَمَثَلِ رَجُلَيْنِ، عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ "". وَحَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ حَدَّثَنَا أَبُو الزِّنَادِ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ حَدَّثَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَثَلُ الْبَخِيلِ وَالْمُنْفِقِ كَمَثَلِ رَجُلَيْنِ، عَلَيْهِمَا جُبَّتَانِ مِنْ حَدِيدٍ، مِنْ ثُدِيِّهِمَا إِلَى تَرَاقِيهِمَا، فَأَمَّا الْمُنْفِقُ فَلاَ يُنْفِقُ إِلاَّ سَبَغَتْ ـ أَوْ وَفَرَتْ ـ عَلَى جِلْدِهِ حَتَّى تُخْفِيَ بَنَانَهُ وَتَعْفُوَ أَثَرَهُ، وَأَمَّا الْبَخِيلُ فَلاَ يُرِيدُ أَنْ يُنْفِقَ شَيْئًا إِلاَّ لَزِقَتْ كُلُّ حَلْقَةٍ مَكَانَهَا، فَهُوَ يُوَسِّعُهَا وَلاَ تَتَّسِعُ "". تَابَعَهُ الْحَسَنُ بْنُ مُسْلِمٍ عَنْ طَاوُسٍ فِي الْجُبَّتَيْنِ. وَقَالَ حَنْظَلَةُ عَنْ طَاوُسٍ، "" جُنَّتَانِ "". وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرٌ، عَنِ ابْنِ هُرْمُزٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" جُنَّتَانِ "". وَقَالَ حَنْظَلَةُ عَنْ طَاوُسٍ، "" جُنَّتَانِ "". وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرٌ، عَنِ ابْنِ هُرْمُزٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" جُنَّتَانِ "". وَقَالَ حَنْظَلَةُ عَنْ طَاوُسٍ، "" جُنَّتَانِ "". وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرٌ، عَنِ ابْنِ هُرْمُزٍ، سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" جُنَّتَانِ "".
பாடம் : 28
தர்மம் செய்பவருக்கும் கஞ்சனுக்கும் உதாரணம்
1443. 1444 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கஞ்சனுக்கும் தர்மம் செய்பவருக்கும் உதாரணமாவது, இரும்பாலான இரு நீளங்கிகளை மார்பிலிருந்து கழுத்தெழும்பு வரை அணிந்துள்ள இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும்பொழுதெல்லாம் அவரது நீளங்கி விரிந்து, விரல்நுனிகளை மறைத்து பாதச் சுவடுகளைக்கூட(த் தொட்டு) அழிக்கும் அளவுக்கு நீளும்.
கஞ்சனோ, ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும்போதெல்லாம் அவனது நீளங்கி (அவனை அழுத்தி) அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுக்கி)ப் பிடிக்காமல் இருப்பதில்லை. அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், (இரு நீளங்கிகள் என்பதற்குப் பதிலாக) ‘இரு கவசங்கள்’ என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 24
1443. 1444 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
கஞ்சனுக்கும் தர்மம் செய்பவருக்கும் உதாரணமாவது, இரும்பாலான இரு நீளங்கிகளை மார்பிலிருந்து கழுத்தெழும்பு வரை அணிந்துள்ள இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும்பொழுதெல்லாம் அவரது நீளங்கி விரிந்து, விரல்நுனிகளை மறைத்து பாதச் சுவடுகளைக்கூட(த் தொட்டு) அழிக்கும் அளவுக்கு நீளும்.
கஞ்சனோ, ஒன்றைத் தர்மம் செய்ய எண்ணும்போதெல்லாம் அவனது நீளங்கி (அவனை அழுத்தி) அதன் ஒவ்வொரு வளையமும் அதனதன் இடத்தை (இறுக்கி)ப் பிடிக்காமல் இருப்பதில்லை. அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், (இரு நீளங்கிகள் என்பதற்குப் பதிலாக) ‘இரு கவசங்கள்’ என இடம்பெற்றுள்ளது.
அத்தியாயம் : 24