1404. وَقَالَ أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ خَالِدِ بْنِ أَسْلَمَ، قَالَ خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ فَقَالَ أَعْرَابِيٌّ أَخْبِرْنِي قَوْلَ اللَّهِ، {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ} قَالَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ مَنْ كَنَزَهَا فَلَمْ يُؤَدِّ زَكَاتَهَا فَوَيْلٌ لَهُ، إِنَّمَا كَانَ هَذَا قَبْلَ أَنْ تُنْزَلَ الزَّكَاةُ فَلَمَّا أُنْزِلَتْ جَعَلَهَا اللَّهُ طُهْرًا لِلأَمْوَالِ.
பாடம் : 4
ஸகாத் கொடுக்கப்பட்ட பொருள் (சட்ட விரோத) சேமிப்பு ஆகாது.
ஏனெனில், “ஐந்து ‘ஊக்கியா’க்களுக்குக் குறைந்த (வெள்ளி போன்ற) பொருட்களுக்கு ‘ஸகாத்’ செலுத்த வேண்டியதில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1404. காலித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் (வெளியில்) புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, “யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை இறைவழி யில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனையே உண்டு” (9:34) எனும் இறைவசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார்.
அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “யார் அவற்றைச் சேமித்து வைத்துக் கொண்டு, அதற்கான ஸகாத்தைக் கொடுக்காமலிருக்கிறாரோ அவருக்குக் கேடுதான். இவ்வசனம் ‘ஸகாத்’ கடமை யாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங் களுக்கான தூய்மையாக ஸகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்” என்றார்கள்.
அத்தியாயம் : 24
1404. காலித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் (வெளியில்) புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, “யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை இறைவழி யில் செலவு செய்யாமல் இருக்கிறார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனையே உண்டு” (9:34) எனும் இறைவசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார்.
அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “யார் அவற்றைச் சேமித்து வைத்துக் கொண்டு, அதற்கான ஸகாத்தைக் கொடுக்காமலிருக்கிறாரோ அவருக்குக் கேடுதான். இவ்வசனம் ‘ஸகாத்’ கடமை யாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங் களுக்கான தூய்மையாக ஸகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்” என்றார்கள்.
அத்தியாயம் : 24
1405. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَزِيدَ، أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، قَالَ الأَوْزَاعِيُّ أَخْبَرَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، أَنَّ عَمْرَو بْنَ يَحْيَى بْنِ عُمَارَةَ، أَخْبَرَهُ عَنْ أَبِيهِ، يَحْيَى بْنِ عُمَارَةَ بْنِ أَبِي الْحَسَنِ أَنَّهُ سَمِعَ أَبَا سَعِيدٍ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوَاقٍ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ ذَوْدٍ صَدَقَةٌ، وَلَيْسَ فِيمَا دُونَ خَمْسِ أَوْسُقٍ صَدَقَةٌ "".
பாடம் : 4
ஸகாத் கொடுக்கப்பட்ட பொருள் (சட்ட விரோத) சேமிப்பு ஆகாது.
ஏனெனில், “ஐந்து ‘ஊக்கியா’க்களுக்குக் குறைந்த (வெள்ளி போன்ற) பொருட்களுக்கு ‘ஸகாத்’ செலுத்த வேண்டியதில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1405. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
(வெள்ளியில்) ஐந்து ‘ஊக்கியா’வுக்குக் குறைந்ததில் ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து ‘வஸ்க்’ குக் குறைவான (தானியத்)தில் ஸகாத் இல்லை.2
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1405. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:
(வெள்ளியில்) ஐந்து ‘ஊக்கியா’வுக்குக் குறைந்ததில் ஸகாத் இல்லை. ஐந்து ஒட்டகங்களுக்குக் குறைவாக இருந்தால் அவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து ‘வஸ்க்’ குக் குறைவான (தானியத்)தில் ஸகாத் இல்லை.2
இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1406. حَدَّثَنَا عَلِيٌّ، سَمِعَ هُشَيْمًا، أَخْبَرَنَا حُصَيْنٌ، عَنْ زَيْدِ بْنِ وَهْبٍ، قَالَ مَرَرْتُ بِالرَّبَذَةِ فَإِذَا أَنَا بِأَبِي، ذَرٍّ ـ رضى الله عنه ـ فَقُلْتُ لَهُ مَا أَنْزَلَكَ مَنْزِلَكَ هَذَا قَالَ كُنْتُ بِالشَّأْمِ، فَاخْتَلَفْتُ أَنَا وَمُعَاوِيَةُ فِي الَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ. قَالَ مُعَاوِيَةُ نَزَلَتْ فِي أَهْلِ الْكِتَابِ. فَقُلْتُ نَزَلَتْ فِينَا وَفِيهِمْ. فَكَانَ بَيْنِي وَبَيْنَهُ فِي ذَاكَ، وَكَتَبَ إِلَى عُثْمَانَ ـ رضى الله عنه ـ يَشْكُونِي، فَكَتَبَ إِلَىَّ عُثْمَانُ أَنِ اقْدَمِ الْمَدِينَةَ. فَقَدِمْتُهَا فَكَثُرَ عَلَىَّ النَّاسُ حَتَّى كَأَنَّهُمْ لَمْ يَرَوْنِي قَبْلَ ذَلِكَ، فَذَكَرْتُ ذَاكَ لِعُثْمَانَ فَقَالَ لِي إِنْ شِئْتَ تَنَحَّيْتَ فَكُنْتَ قَرِيبًا. فَذَاكَ الَّذِي أَنْزَلَنِي هَذَا الْمَنْزِلَ، وَلَوْ أَمَّرُوا عَلَىَّ حَبَشِيًّا لَسَمِعْتُ وَأَطَعْتُ.
பாடம் : 4
ஸகாத் கொடுக்கப்பட்ட பொருள் (சட்ட விரோத) சேமிப்பு ஆகாது.
ஏனெனில், “ஐந்து ‘ஊக்கியா’க்களுக்குக் குறைந்த (வெள்ளி போன்ற) பொருட்களுக்கு ‘ஸகாத்’ செலுத்த வேண்டியதில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1406. ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (மதீனாவுக்கு அருகில் உள்ள) ‘ரபதா’ எனுமிடத்திற்குச் சென்றபோது அங்கு அபூதர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். நான் அவர்களிடம், “நீங்கள் இங்கு வந்து தங்கக் காரணமென்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் ஷாம் (சிரியா) நாட்டில் இருந்தபோது, ‘யார் பொன்னையும் வெள்ளியையும் திரட்டி வைத்துக்கொண்டு, அவற்றை இறைவழியில் செலவு செய்யா மல் இருக்கிறார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனையே உண்டு” (9:34) எனும் இறைவசனம் (அருளப்பெற்ற காரணம்) தொடர்பாக, நானும் முஆவியா (ரலி) அவர்களும் கருத்து வேறுபாடு கொண்டோம்.
முஆவியா (ரலி) அவர்கள், “இது வேதக்காரர்கள் தொடர்பாக அருளப் பெற்றது” என்றார்கள். நானோ “நம்மையும் அவர்களையும் குறித்தே அருளப்பெற்றது” என்றேன். எனவே, எனக்கும் முஆவியா வுக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. உடனே அவர் என்னைப் பற்றி உஸ்மான் (ரலி) அவர்களிடம் கடிதம் மூலம் முறையிட்டதும், உஸ்மான் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வருமாறு எனக்குக் கடிதம் எழுதினார்கள். எனவே, நான் அங்கு போனதும் மக்கள் இதற்குமுன் என்னைப் பார்க்காதவர்கள் போல என்னருகில் அதிகமாகவே கூடி (மதீனாவுக்கு அழைக்கப் பட்ட காரணத்தை விசாரிக்க ஆரம்பித்து)விட்டார்கள்.
நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கூறியதும் உஸ்மான் (ரலி) அவர்கள், “நீர் விரும்பினால் தனியாக (மதீனாவுக்கு) அருகில் எங்கேனும் இருந்துகொள்ளும்!” என்று கூறினார்கள். இதுதான் இந்த இடத்தில் என்னைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. எனக்கு ஒரு அபிசீனியர் (கறுப்பர்) தலைவராக இருந்தாலும் அவருக்கு நான் செவிதாழ்த்திக் கட்டுப்படுவேன்” என்று கூறினார்கள்.3
அத்தியாயம் : 24
1406. ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (மதீனாவுக்கு அருகில் உள்ள) ‘ரபதா’ எனுமிடத்திற்குச் சென்றபோது அங்கு அபூதர் (ரலி) அவர்கள் இருந்தார்கள். நான் அவர்களிடம், “நீங்கள் இங்கு வந்து தங்கக் காரணமென்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நான் ஷாம் (சிரியா) நாட்டில் இருந்தபோது, ‘யார் பொன்னையும் வெள்ளியையும் திரட்டி வைத்துக்கொண்டு, அவற்றை இறைவழியில் செலவு செய்யா மல் இருக்கிறார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனையே உண்டு” (9:34) எனும் இறைவசனம் (அருளப்பெற்ற காரணம்) தொடர்பாக, நானும் முஆவியா (ரலி) அவர்களும் கருத்து வேறுபாடு கொண்டோம்.
முஆவியா (ரலி) அவர்கள், “இது வேதக்காரர்கள் தொடர்பாக அருளப் பெற்றது” என்றார்கள். நானோ “நம்மையும் அவர்களையும் குறித்தே அருளப்பெற்றது” என்றேன். எனவே, எனக்கும் முஆவியா வுக்குமிடையே பிரச்சினை ஏற்பட்டது. உடனே அவர் என்னைப் பற்றி உஸ்மான் (ரலி) அவர்களிடம் கடிதம் மூலம் முறையிட்டதும், உஸ்மான் (ரலி) அவர்கள் மதீனாவுக்கு வருமாறு எனக்குக் கடிதம் எழுதினார்கள். எனவே, நான் அங்கு போனதும் மக்கள் இதற்குமுன் என்னைப் பார்க்காதவர்கள் போல என்னருகில் அதிகமாகவே கூடி (மதீனாவுக்கு அழைக்கப் பட்ட காரணத்தை விசாரிக்க ஆரம்பித்து)விட்டார்கள்.
நான் உஸ்மான் (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கூறியதும் உஸ்மான் (ரலி) அவர்கள், “நீர் விரும்பினால் தனியாக (மதீனாவுக்கு) அருகில் எங்கேனும் இருந்துகொள்ளும்!” என்று கூறினார்கள். இதுதான் இந்த இடத்தில் என்னைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. எனக்கு ஒரு அபிசீனியர் (கறுப்பர்) தலைவராக இருந்தாலும் அவருக்கு நான் செவிதாழ்த்திக் கட்டுப்படுவேன்” என்று கூறினார்கள்.3
அத்தியாயம் : 24
1407. حَدَّثَنَا عَيَّاشٌ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي الْعَلاَءِ، عَنِ الأَحْنَفِ بْنِ قَيْسٍ، قَالَ جَلَسْتُ. وَحَدَّثَنِي إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ الصَّمَدِ، قَالَ حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، حَدَّثَنَا أَبُو الْعَلاَءِ بْنُ الشِّخِّيرِ، أَنَّ الأَحْنَفَ بْنَ قَيْسٍ، حَدَّثَهُمْ قَالَ جَلَسْتُ إِلَى مَلإٍ مِنْ قُرَيْشٍ، فَجَاءَ رَجُلٌ خَشِنُ الشَّعَرِ وَالثِّيَابِ وَالْهَيْئَةِ حَتَّى قَامَ عَلَيْهِمْ فَسَلَّمَ ثُمَّ قَالَ بَشِّرِ الْكَانِزِينَ بِرَضْفٍ يُحْمَى عَلَيْهِ فِي نَارِ جَهَنَّمَ، ثُمَّ يُوضَعُ عَلَى حَلَمَةِ ثَدْىِ أَحَدِهِمْ حَتَّى يَخْرُجَ مِنْ نُغْضِ كَتِفِهِ، وَيُوضَعُ عَلَى نُغْضِ كَتِفِهِ حَتَّى يَخْرُجَ مِنْ حَلَمَةِ ثَدْيِهِ يَتَزَلْزَلُ، ثُمَّ وَلَّى فَجَلَسَ إِلَى سَارِيَةٍ، وَتَبِعْتُهُ وَجَلَسْتُ إِلَيْهِ، وَأَنَا لاَ أَدْرِي مَنْ هُوَ فَقُلْتُ لَهُ لاَ أُرَى الْقَوْمَ إِلاَّ قَدْ كَرِهُوا الَّذِي قُلْتَ. قَالَ إِنَّهُمْ لاَ يَعْقِلُونَ شَيْئًا. قَالَ لِي خَلِيلِي ـ قَالَ قُلْتُ مَنْ خَلِيلُكَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ـ " يَا أَبَا ذَرٍّ أَتُبْصِرُ أُحُدًا ". قَالَ فَنَظَرْتُ إِلَى الشَّمْسِ مَا بَقِيَ مِنَ النَّهَارِ وَأَنَا أُرَى أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُرْسِلُنِي فِي حَاجَةٍ لَهُ، قُلْتُ نَعَمْ. قَالَ " مَا أُحِبُّ أَنَّ لِي مِثْلَ أُحُدٍ ذَهَبًا أُنْفِقُهُ كُلَّهُ إِلاَّ ثَلاَثَةَ دَنَانِيرَ ". وَإِنَّ هَؤُلاَءِ لاَ يَعْقِلُونَ، إِنَّمَا يَجْمَعُونَ الدُّنْيَا. لاَ وَاللَّهِ لاَ أَسْأَلُهُمْ دُنْيَا، وَلاَ أَسْتَفْتِيهِمْ عَنْ دِينٍ حَتَّى أَلْقَى اللَّهَ.
பாடம் : 4
ஸகாத் கொடுக்கப்பட்ட பொருள் (சட்ட விரோத) சேமிப்பு ஆகாது.
ஏனெனில், “ஐந்து ‘ஊக்கியா’க்களுக்குக் குறைந்த (வெள்ளி போன்ற) பொருட்களுக்கு ‘ஸகாத்’ செலுத்த வேண்டியதில்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
1407. 1408 அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் குரைஷிப் பிரமுகர்கள் இருந்த இடத்திற்குச் சென்று அமர்ந்தேன். அப்போது பரட்டை முடியுள்ள சொர சொரப்பான ஆடையணிந்த முரட்டுத் தோற்றமுள்ள ஒரு மனிதர் அவர்களிடம் வந்து முகமன் (சலாம்) கூறிவிட்டு, “(ஸகாத் கொடுக்காமல்) பொருளைச் சேமிப்பவர் களுக்காக, நரக நெருப்பில் சூடேற்றப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் தோளின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியேறும். பிறகு அது தோளின் மேற்பகுதி எலும்பில் வைக்கப் படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக வெளியேறி உருண்டோடும்” என்று கூறினார்.
பிறகு திரும்பிச் சென்ற அவர் ஒரு தூணுக்கருகில் போய் உட்கார்ந்தார். நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவருக்கருகில் அமர்ந்தேன். அவர் யார் என்று எனக்கு (அப்போது) தெரியவில்லை. பிறகு நான் அவரிடம் “தாங்கள் கூறியதை மக்கள் வெறுப்பதாகவே நான் கண்டேன்” என்று சொன்னேன். அதற்கு அவர் “அவர்கள் விவரமற்றவர்கள்” எனக் கூறினார்.
“என் தோழர் என்னிடம் சொன்னார்...” என அந்தப் பெரியவர் மேலும் தொடர்ந்து, கூறும்போதே நான் (குறுக்கிட்டு) “உங்கள் தோழர் யார்?” எனக் கேட்டேன். “நபி (ஸல்) அவர்கள்தான்” எனக் கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்கள், ‘அபூதர்ரே! உஹுத் மலையை நீர் பார்த்திருக்கிறீரா?’ எனக் கேட்டார்கள். தமது வேலை ஏதோ ஒன்றுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அங்கு அனுப்பப் போகிறார்கள் என எண்ணி, பகல் முடிய இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது என அறிந்துகொள்வதற்காக சூரியனைப் பார்த்துவிட்டு, ‘ஆம்’ என்றேன்.
‘உஹுத் மலையளவுக்குத் தங்கம் என்னிடம் இருந்து அதில் மூன்று தீனார் களைத் தவிர மற்ற அனைத்தையும் செலவிடாமலிருப்பதை நான் விரும்ப வில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
இவர்களோ இதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் உலக ஆதாயங் களையே சேகரிக்கிறார்கள். அல்லாஹ் வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை இவ்வுலகப் பொருட்களை இவர்களிடம் நான் கேட்கமாட்டேன்; மார்க்க விஷயங்களைப் பற்றியும் இவர்களிடம் தீர்ப்பு கேட்கமாட்டேன்” என்று அந்தப் பெரியவர் (அபூதர் (ரலி) அவர்கள்) கூறினார்கள்.
அத்தியாயம் : 24
1407. 1408 அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் குரைஷிப் பிரமுகர்கள் இருந்த இடத்திற்குச் சென்று அமர்ந்தேன். அப்போது பரட்டை முடியுள்ள சொர சொரப்பான ஆடையணிந்த முரட்டுத் தோற்றமுள்ள ஒரு மனிதர் அவர்களிடம் வந்து முகமன் (சலாம்) கூறிவிட்டு, “(ஸகாத் கொடுக்காமல்) பொருளைச் சேமிப்பவர் களுக்காக, நரக நெருப்பில் சூடேற்றப்பட்ட ஒரு கல் உண்டு. அக்கல் அவர்களின் மார்புக் காம்பில் வைக்கப்படும். உடனே அக்கல் தோளின் மேற்பகுதி எலும்பின் வழியாக வெளியேறும். பிறகு அது தோளின் மேற்பகுதி எலும்பில் வைக்கப் படும். உடனே அது மார்புக் காம்பின் வழியாக வெளியேறி உருண்டோடும்” என்று கூறினார்.
பிறகு திரும்பிச் சென்ற அவர் ஒரு தூணுக்கருகில் போய் உட்கார்ந்தார். நான் அவரைப் பின்தொடர்ந்து சென்று அவருக்கருகில் அமர்ந்தேன். அவர் யார் என்று எனக்கு (அப்போது) தெரியவில்லை. பிறகு நான் அவரிடம் “தாங்கள் கூறியதை மக்கள் வெறுப்பதாகவே நான் கண்டேன்” என்று சொன்னேன். அதற்கு அவர் “அவர்கள் விவரமற்றவர்கள்” எனக் கூறினார்.
“என் தோழர் என்னிடம் சொன்னார்...” என அந்தப் பெரியவர் மேலும் தொடர்ந்து, கூறும்போதே நான் (குறுக்கிட்டு) “உங்கள் தோழர் யார்?” எனக் கேட்டேன். “நபி (ஸல்) அவர்கள்தான்” எனக் கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்கள், ‘அபூதர்ரே! உஹுத் மலையை நீர் பார்த்திருக்கிறீரா?’ எனக் கேட்டார்கள். தமது வேலை ஏதோ ஒன்றுக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அங்கு அனுப்பப் போகிறார்கள் என எண்ணி, பகல் முடிய இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது என அறிந்துகொள்வதற்காக சூரியனைப் பார்த்துவிட்டு, ‘ஆம்’ என்றேன்.
‘உஹுத் மலையளவுக்குத் தங்கம் என்னிடம் இருந்து அதில் மூன்று தீனார் களைத் தவிர மற்ற அனைத்தையும் செலவிடாமலிருப்பதை நான் விரும்ப வில்லை’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
இவர்களோ இதை அறியாதவர்களாய் இருக்கிறார்கள். இவர்கள் உலக ஆதாயங் களையே சேகரிக்கிறார்கள். அல்லாஹ் வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை இவ்வுலகப் பொருட்களை இவர்களிடம் நான் கேட்கமாட்டேன்; மார்க்க விஷயங்களைப் பற்றியும் இவர்களிடம் தீர்ப்பு கேட்கமாட்டேன்” என்று அந்தப் பெரியவர் (அபூதர் (ரலி) அவர்கள்) கூறினார்கள்.
அத்தியாயம் : 24
1409. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسٌ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً فَسَلَّطَهُ عَلَى هَلَكَتِهِ فِي الْحَقِّ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ حِكْمَةً فَهْوَ يَقْضِي بِهَا وَيُعَلِّمُهَا "".
பாடம் : 5
பொருளை அதற்குரிய அறவழியில் செலவிடல்
1409. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கி, அதை அறவழியில் செலவழிக்க அவரைத் தூண்டினான். இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் (செயல்பட்டு) தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக்கொடுப்பவராகவும் இருக்கிறார்.
இதை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1409. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும் பொறாமை கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கி, அதை அறவழியில் செலவழிக்க அவரைத் தூண்டினான். இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் ஞானத்தை வழங்கி, அதற்கேற்ப அவர் (செயல்பட்டு) தீர்ப்பு வழங்குபவராகவும் கற்றுக்கொடுப்பவராகவும் இருக்கிறார்.
இதை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1410. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ أَبَا النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ ـ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ـ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ تَصَدَّقَ بِعَدْلِ تَمْرَةٍ مِنْ كَسْبٍ طَيِّبٍ ـ وَلاَ يَقْبَلُ اللَّهُ إِلاَّ الطَّيِّبَ ـ وَإِنَّ اللَّهَ يَتَقَبَّلُهَا بِيَمِينِهِ، ثُمَّ يُرَبِّيهَا لِصَاحِبِهِ كَمَا يُرَبِّي أَحَدُكُمْ فَلُوَّهُ حَتَّى تَكُونَ مِثْلَ الْجَبَلِ "". تَابَعَهُ سُلَيْمَانُ عَنِ ابْنِ دِينَارٍ. وَقَالَ وَرْقَاءُ عَنِ ابْنِ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَرَوَاهُ مُسْلِمُ بْنُ أَبِي مَرْيَمَ وَزَيْدُ بْنُ أَسْلَمَ وَسُهَيْلٌ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 6
தர்மம் செய்வதில் முகஸ்துதி
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
இறைநம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பாமல் மனிதர்களுக்குக் காண்பிப்பதற் காகத் தனது செல்வத்தைச் செலவு செய்பவனைப் போன்று (தர்மம் செய்த தைச்) சொல்லிக் காட்டியும் (மனதைப்) புண்படுத்தியும் உங்களின் தர்மங்களைப் பாழாக்கிவிடாதீர்கள். (2:264)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (மேற்கண்ட வசனத்தின் தொடர்ச்சியில் மூலத்தில் ‘பாறை’ என்ப தைக் குறிக்க) ‘ஸல்த்’ எனும் சொல் ஆளப் பட்டுள்ளது. இதற்கு, ‘ஒன்றும் இல்லாத வெறும் பாறை’ என்பது பொருளாகும்.
இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (‘பெருமழை’ என்பதைக் குறிக்க) ‘வாபில்’ எனும் சொல் இடம்பெறுகிறது. இதற்கு ‘கடுமையான மழை’ என்பது பொருள். (அடுத்த வசனத்தில் ‘தூறல்’ என்பதைக் குறிக்க) ‘அத்தல்’ எனும் சொல் இடம்பெறுகிறது. இதற்கு ‘சிறு துளி’ என்பது பொருள்.
பாடம் : 7
மோசடிப் பொருளிலிருந்து தர்மம் செய்வதை அல்லாஹ் ஏற்பதில்லை.
முறையான சம்பாத்தியத்தில் கிடைத்த பொருளிலிருந்தே தவிர (வேறு வழியில் செய்யப்படும் தான தர்மத்தை) அல்லாஹ் ஏற்றுக்கொள்வதில்லை.
அல்லாஹ் கூறுகின்றான்: கனிவான சொல்லும் மன்னிப்பும் தர்மம் செய்துவிட்டுப் பின்னர் புண்படுத்துவதைவிடச் சிறந்ததாகும். (2:263)
பாடம் : 8
தூய்மையான வருவாயிலிருந்து தர்மம் செய்தல்
அல்லாஹ் கூறுகின்றான்:
தர்மங்களை (அல்லாஹ்) வளர்க்கின் றான். (தனக்கு) மாறு செய்யும் எந்தப் பாவியையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான். இறைநம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் புரிந்து, தொழுகையைக் கடைப்பிடித்து, ஸகாத்தும் கொடுத்து வருகின்றவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடம் உரிய பிரதிபலன் உண்டு. அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை; அவர்கள் கவலைப்படவு மாட்டார்கள். (2:276, 277)
1410. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தூய்மையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் தூய்மையானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வ தில்லை- அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக்கொள்கிறான். பிறகு உங்களில் ஒருவர் தமது குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று, அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு அவருக்காக வளர்ச்சி அடை யச்செய்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
1410. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் தூய்மையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ -அல்லாஹ் தூய்மையானதைத் தவிர வேறெதையும் ஏற்றுக்கொள்வ தில்லை- அதை நிச்சயமாக அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக்கொள்கிறான். பிறகு உங்களில் ஒருவர் தமது குதிரைக் குட்டியை வளர்ப்பதைப் போன்று, அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு அவருக்காக வளர்ச்சி அடை யச்செய்கிறான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 24
1411. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مَعْبَدُ بْنُ خَالِدٍ، قَالَ سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" تَصَدَّقُوا فَإِنَّهُ يَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ يَمْشِي الرَّجُلُ بِصَدَقَتِهِ، فَلاَ يَجِدُ مَنْ يَقْبَلُهَا يَقُولُ الرَّجُلُ لَوْ جِئْتَ بِهَا بِالأَمْسِ لَقَبِلْتُهَا، فَأَمَّا الْيَوْمَ فَلاَ حَاجَةَ لِي بِهَا "".
பாடம் : 9
மறுக்கப்படுவதற்கு முன்பு தர்மம் செய்தல்
1411. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இப்போதே) தர்மம் செய்துகொள்ளுங் கள்! ஏனெனில், உங்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒருவர் தமது தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு அலைவார்; அதைப் பெறுபவர் யாரையும் அவர் காண மாட்டார். அப்போது ஒருவன், “நேற்றே இதை நீர் கொண்டுவந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக் குத் தேவையில்லை” என்று கூறுவான்.
இதை ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1411. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(இப்போதே) தர்மம் செய்துகொள்ளுங் கள்! ஏனெனில், உங்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒருவர் தமது தர்மப் பொருளை எடுத்துக்கொண்டு அலைவார்; அதைப் பெறுபவர் யாரையும் அவர் காண மாட்டார். அப்போது ஒருவன், “நேற்றே இதை நீர் கொண்டுவந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக் குத் தேவையில்லை” என்று கூறுவான்.
இதை ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1412. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضَ، حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ، وَحَتَّى يَعْرِضَهُ فَيَقُولَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ لاَ أَرَبَ لِي "".
பாடம் : 9
மறுக்கப்படுவதற்கு முன்பு தர்மம் செய்தல்
1412. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. எந்த அளவுக்கெனில், அந்நாளில் பொருளுடையவர் தமது தர்மத்தை யார்தான் வாங்கப்போகிறார் என்று கவலை கொள்வார். யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால், அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறுவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1412. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. எந்த அளவுக்கெனில், அந்நாளில் பொருளுடையவர் தமது தர்மத்தை யார்தான் வாங்கப்போகிறார் என்று கவலை கொள்வார். யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால், அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறுவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1413. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ النَّبِيلُ، أَخْبَرَنَا سَعْدَانُ بْنُ بِشْرٍ، حَدَّثَنَا أَبُو مُجَاهِدٍ، حَدَّثَنَا مُحِلُّ بْنُ خَلِيفَةَ الطَّائِيُّ، قَالَ سَمِعْتُ عَدِيَّ بْنَ حَاتِمٍ ـ رضى الله عنه ـ يَقُولُ كُنْتُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَجَاءَهُ رَجُلاَنِ أَحَدُهُمَا يَشْكُو الْعَيْلَةَ، وَالآخَرُ يَشْكُو قَطْعَ السَّبِيلِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَمَّا قَطْعُ السَّبِيلِ فَإِنَّهُ لاَ يَأْتِي عَلَيْكَ إِلاَّ قَلِيلٌ حَتَّى تَخْرُجَ الْعِيرُ إِلَى مَكَّةَ بِغَيْرِ خَفِيرٍ، وَأَمَّا الْعَيْلَةُ فَإِنَّ السَّاعَةَ لاَ تَقُومُ حَتَّى يَطُوفَ أَحَدُكُمْ بِصَدَقَتِهِ لاَ يَجِدُ مَنْ يَقْبَلُهَا مِنْهُ، ثُمَّ لَيَقِفَنَّ أَحَدُكُمْ بَيْنَ يَدَىِ اللَّهِ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ حِجَابٌ وَلاَ تُرْجُمَانٌ يُتَرْجِمُ لَهُ، ثُمَّ لَيَقُولَنَّ لَهُ أَلَمْ أُوتِكَ مَالاً فَلَيَقُولَنَّ بَلَى. ثُمَّ لَيَقُولَنَّ أَلَمْ أُرْسِلْ إِلَيْكَ رَسُولاً فَلَيَقُولَنَّ بَلَى. فَيَنْظُرُ عَنْ يَمِينِهِ فَلاَ يَرَى إِلاَّ النَّارَ، ثُمَّ يَنْظُرُ عَنْ شِمَالِهِ فَلاَ يَرَى إِلاَّ النَّارَ، فَلْيَتَّقِيَنَّ أَحَدُكُمُ النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَإِنْ لَمْ يَجِدْ فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ "".
பாடம் : 9
மறுக்கப்படுவதற்கு முன்பு தர்மம் செய்தல்
1413. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அங்கு இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் தமது வறுமையைப் பற்றி முறையிட்டார். மற்றொருவர் வழிப்பறி பற்றி முறையிட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வழிப்பறியை நீர் குறைவாகவே காண்பீர். இறுதியில், காவலரின்றி வணிக ஒட்டகங்கள் (மதீனாவிலிருந்து) மக்காவரை செல்லும் நிலை உருவாகும். வறுமையோ (ஒரு காலத்தில் முற்றாக விலகும்). நிச்சயமாக உங்களில் ஒருவர் தர்மத்தை எடுத்துக்கொண்டு அலைவார். அதை அவரிடமிருந்து பெறுவதற்கு யாரையும் அவர் காணமாட்டார். அந்நிலை ஏற்படாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது.
பிறகு உங்களில் ஒருவர் அல்லாஹ் வின் முன்னிலையில் நிற்பார். அவருக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையுமிருக் காது; மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார். அப்போது (அல்லாஹ்), “நான் உனக்குப் பொருளைத் தரவில்லையா?” எனக் கேட்பான். அவர் ‘ஆம்’ என்பார். பிறகு “உன்னிடம் ஒரு தூதரை நான் அனுப்பவில்லையா?” எனக் கேட்பான். அவர் ‘ஆம்’ என்பார்.
பிறகு தமது வலப் பக்கம் பார்ப்பார்; அங்கு நரகத்தையே காண்பார். பின்னர் இடப் பக்கத்திலும் பார்ப்பார்; அங்கும் நரகத்தையே காண்பார். எனவே, பேரீச்சம் பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது, அதுவும் கிடைக்கவில்லை யெனில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது அந்த நரகத்திலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” எனக் கூறினார்கள்.
அத்தியாயம் : 24
1413. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அப்போது அங்கு இருவர் வந்தனர். அவர்களில் ஒருவர் தமது வறுமையைப் பற்றி முறையிட்டார். மற்றொருவர் வழிப்பறி பற்றி முறையிட்டார்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வழிப்பறியை நீர் குறைவாகவே காண்பீர். இறுதியில், காவலரின்றி வணிக ஒட்டகங்கள் (மதீனாவிலிருந்து) மக்காவரை செல்லும் நிலை உருவாகும். வறுமையோ (ஒரு காலத்தில் முற்றாக விலகும்). நிச்சயமாக உங்களில் ஒருவர் தர்மத்தை எடுத்துக்கொண்டு அலைவார். அதை அவரிடமிருந்து பெறுவதற்கு யாரையும் அவர் காணமாட்டார். அந்நிலை ஏற்படாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது.
பிறகு உங்களில் ஒருவர் அல்லாஹ் வின் முன்னிலையில் நிற்பார். அவருக்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையுமிருக் காது; மொழிபெயர்ப்பாளரும் இருக்க மாட்டார். அப்போது (அல்லாஹ்), “நான் உனக்குப் பொருளைத் தரவில்லையா?” எனக் கேட்பான். அவர் ‘ஆம்’ என்பார். பிறகு “உன்னிடம் ஒரு தூதரை நான் அனுப்பவில்லையா?” எனக் கேட்பான். அவர் ‘ஆம்’ என்பார்.
பிறகு தமது வலப் பக்கம் பார்ப்பார்; அங்கு நரகத்தையே காண்பார். பின்னர் இடப் பக்கத்திலும் பார்ப்பார்; அங்கும் நரகத்தையே காண்பார். எனவே, பேரீச்சம் பழத்தின் ஒரு சிறிய துண்டை தர்மம் செய்தாவது, அதுவும் கிடைக்கவில்லை யெனில் ஒரு நல்ல வார்த்தையின் மூலமாவது அந்த நரகத்திலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” எனக் கூறினார்கள்.
அத்தியாயம் : 24
1414. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ بُرَيْدٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ يَطُوفُ الرَّجُلُ فِيهِ بِالصَّدَقَةِ مِنَ الذَّهَبِ ثُمَّ لاَ يَجِدُ أَحَدًا يَأْخُذُهَا مِنْهُ، وَيُرَى الرَّجُلُ الْوَاحِدُ يَتْبَعُهُ أَرْبَعُونَ امْرَأَةً، يَلُذْنَ بِهِ مِنْ قِلَّةِ الرِّجَالِ وَكَثْرَةِ النِّسَاءِ "".
பாடம் : 9
மறுக்கப்படுவதற்கு முன்பு தர்மம் செய்தல்
1414. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒருவர் தர்மப் பொருளான தங்கத்தை எடுத்துக்கொண்டு அலைவார். அதை அவரிடமிருந்து பெறுவதற்கு யாரையும் அவர் காணமாட்டார். மேலும், (அப்போது) ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகமாவதால் ஓர் ஆணை நாற்பது பெண்கள் பின்தொடர்ந்துவந்து, அவனைச் சார்ந்திருக்கும் நிலை காணப்படும்.4
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1414. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிச்சயமாக மக்களுக்கு ஒரு காலம் வரும். அப்போது ஒருவர் தர்மப் பொருளான தங்கத்தை எடுத்துக்கொண்டு அலைவார். அதை அவரிடமிருந்து பெறுவதற்கு யாரையும் அவர் காணமாட்டார். மேலும், (அப்போது) ஆண்கள் குறைந்து பெண்கள் அதிகமாவதால் ஓர் ஆணை நாற்பது பெண்கள் பின்தொடர்ந்துவந்து, அவனைச் சார்ந்திருக்கும் நிலை காணப்படும்.4
இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1415. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ الْحَكَمُ ـ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ الْبَصْرِيُّ ـ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ آيَةُ الصَّدَقَةِ كُنَّا نُحَامِلُ، فَجَاءَ رَجُلٌ فَتَصَدَّقَ بِشَىْءٍ كَثِيرٍ فَقَالُوا مُرَائِي. وَجَاءَ رَجُلٌ فَتَصَدَّقَ بِصَاعٍ فَقَالُوا إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنْ صَاعِ هَذَا. فَنَزَلَتِ {الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوِّعِينَ مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لاَ يَجِدُونَ إِلاَّ جُهْدَهُمْ} الآيَةَ.
பாடம்: 10
பேரீச்சம் பழத்தின் சிறிய துண் டையோ அல்லது சிறிதளவு பொருளையோ தர்மம் செய்தே னும் நரகத்திலிருந்து (உங்க ளைப்) பாதுகாத்துக்கொள் ளுங்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ்வின் அன்பை எதிர்பார்த்து, தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கையோடு தம் செல்வங்களைச் செலவிடுவோரின் நிலையானது, உயரமான இடத்தில் அமைந்துள்ள ஒரு தோட்டத் தின் நிலையை ஒத்திருக்கிறது. அதில் கனமழை பொழியும்போது இரு மடங்கு பலனைத் தருகிறது. அதில் கனமழை பெய்யாவிடினும் தூறலே (போதும்). நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்... (2:265, 266)
1415. அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
தர்மம் தொடர்பான இறைவசனம் (9:103) இறங்கியதும் (தர்மம் செய்வதற்காகப் பொருள் தேடி) நாங்கள் (சுமை தூக்கி) கூலி வேலை செய்யலானோம். அப்போது ஒருவர் வந்து, அதிகமான பொருளைத் தர்மம் செய்தார். அப்போது (நயவஞ்சகர்கள்), “அவர், பிறர் பாராட்ட வேண்டுமென்று செய்கிறார்” எனக் கூறினார்கள்.
பிறகு மற்றொருவர் வந்து, ஒரு ‘ஸாஉ’ தானியத்தைத் தர்மம் செய்தார். அப்போது (நயவஞ்சகர்கள்), “இவரது ஸாஉ (குறைந்த அளவு தானியம்) அல்லாஹ்வுக்குத் தேவையில்லை” எனக் கூறினர்.
அப்போதுதான், “(நயவஞ்சகர்களாகிய) அவர்கள், இறைநம்பிக்கையாளர்களில் கூடுதல் தர்மம் செய்வோரையும் தமது உழைப்பு தவிர வேறெதுவும் கிடைக்கப் பெறாதவர்களையும் குறைகூறுகின்றனர்” (9:79) எனும் இறைவசனம் அருளப் பெற்றது.
அத்தியாயம் : 24
1415. அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
தர்மம் தொடர்பான இறைவசனம் (9:103) இறங்கியதும் (தர்மம் செய்வதற்காகப் பொருள் தேடி) நாங்கள் (சுமை தூக்கி) கூலி வேலை செய்யலானோம். அப்போது ஒருவர் வந்து, அதிகமான பொருளைத் தர்மம் செய்தார். அப்போது (நயவஞ்சகர்கள்), “அவர், பிறர் பாராட்ட வேண்டுமென்று செய்கிறார்” எனக் கூறினார்கள்.
பிறகு மற்றொருவர் வந்து, ஒரு ‘ஸாஉ’ தானியத்தைத் தர்மம் செய்தார். அப்போது (நயவஞ்சகர்கள்), “இவரது ஸாஉ (குறைந்த அளவு தானியம்) அல்லாஹ்வுக்குத் தேவையில்லை” எனக் கூறினர்.
அப்போதுதான், “(நயவஞ்சகர்களாகிய) அவர்கள், இறைநம்பிக்கையாளர்களில் கூடுதல் தர்மம் செய்வோரையும் தமது உழைப்பு தவிர வேறெதுவும் கிடைக்கப் பெறாதவர்களையும் குறைகூறுகின்றனர்” (9:79) எனும் இறைவசனம் அருளப் பெற்றது.
அத்தியாயம் : 24
1416. حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَمَرَنَا بِالصَّدَقَةِ انْطَلَقَ أَحَدُنَا إِلَى السُّوقِ فَتَحَامَلَ فَيُصِيبُ الْمُدَّ، وَإِنَّ لِبَعْضِهِمُ الْيَوْمَ لَمِائَةَ أَلْفٍ.
பாடம்: 10
பேரீச்சம் பழத்தின் சிறிய துண் டையோ அல்லது சிறிதளவு பொருளையோ தர்மம் செய்தே னும் நரகத்திலிருந்து (உங்க ளைப்) பாதுகாத்துக்கொள் ளுங்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ்வின் அன்பை எதிர்பார்த்து, தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கையோடு தம் செல்வங்களைச் செலவிடுவோரின் நிலையானது, உயரமான இடத்தில் அமைந்துள்ள ஒரு தோட்டத் தின் நிலையை ஒத்திருக்கிறது. அதில் கனமழை பொழியும்போது இரு மடங்கு பலனைத் தருகிறது. அதில் கனமழை பெய்யாவிடினும் தூறலே (போதும்). நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்... (2:265, 266)
1416. அபூமஸ்வூத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டபோது, எங்களில் ஒருவர் கடைத்தெருவுக்குச் சென்று கூலி வேலை செய்து, இரு கையளவு தானியம் சம்பாதித்து (அதைத் தர்மம் செய்து)விடுவார். ஆனால், இன்றோ எங்களில் சிலரிடம் ஓர் இலட்சம் (திர்ஹம்/தீனார்)வரை உள்ளது.
அத்தியாயம் : 24
1416. அபூமஸ்வூத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டபோது, எங்களில் ஒருவர் கடைத்தெருவுக்குச் சென்று கூலி வேலை செய்து, இரு கையளவு தானியம் சம்பாதித்து (அதைத் தர்மம் செய்து)விடுவார். ஆனால், இன்றோ எங்களில் சிலரிடம் ஓர் இலட்சம் (திர்ஹம்/தீனார்)வரை உள்ளது.
அத்தியாயம் : 24
1417. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَعْقِلٍ، قَالَ سَمِعْتُ عَدِيَّ بْنَ حَاتِمٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ "".
பாடம்: 10
பேரீச்சம் பழத்தின் சிறிய துண் டையோ அல்லது சிறிதளவு பொருளையோ தர்மம் செய்தே னும் நரகத்திலிருந்து (உங்க ளைப்) பாதுகாத்துக்கொள் ளுங்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ்வின் அன்பை எதிர்பார்த்து, தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கையோடு தம் செல்வங்களைச் செலவிடுவோரின் நிலையானது, உயரமான இடத்தில் அமைந்துள்ள ஒரு தோட்டத் தின் நிலையை ஒத்திருக்கிறது. அதில் கனமழை பொழியும்போது இரு மடங்கு பலனைத் தருகிறது. அதில் கனமழை பெய்யாவிடினும் தூறலே (போதும்). நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்... (2:265, 266)
1417. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சம் பழத்தின் ஒரு சிறுதுண்டின் மூலமாவது நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
இதை அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1417. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பேரீச்சம் பழத்தின் ஒரு சிறுதுண்டின் மூலமாவது நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
இதை அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1418. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَتِ امْرَأَةٌ مَعَهَا ابْنَتَانِ لَهَا تَسْأَلُ، فَلَمْ تَجِدْ عِنْدِي شَيْئًا غَيْرَ تَمْرَةٍ فَأَعْطَيْتُهَا إِيَّاهَا، فَقَسَمَتْهَا بَيْنَ ابْنَتَيْهَا وَلَمْ تَأْكُلْ مِنْهَا، ثُمَّ قَامَتْ فَخَرَجَتْ، فَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْنَا، فَأَخْبَرْتُهُ فَقَالَ "" مَنِ ابْتُلِيَ مِنْ هَذِهِ الْبَنَاتِ بِشَىْءٍ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ "".
பாடம்: 10
பேரீச்சம் பழத்தின் சிறிய துண் டையோ அல்லது சிறிதளவு பொருளையோ தர்மம் செய்தே னும் நரகத்திலிருந்து (உங்க ளைப்) பாதுகாத்துக்கொள் ளுங்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
அல்லாஹ்வின் அன்பை எதிர்பார்த்து, தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கையோடு தம் செல்வங்களைச் செலவிடுவோரின் நிலையானது, உயரமான இடத்தில் அமைந்துள்ள ஒரு தோட்டத் தின் நிலையை ஒத்திருக்கிறது. அதில் கனமழை பொழியும்போது இரு மடங்கு பலனைத் தருகிறது. அதில் கனமழை பெய்யாவிடினும் தூறலே (போதும்). நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்... (2:265, 266)
1418. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி தன்னுடைய இரு பெண் குழந்தைகளுடன் யாசகம் கேட்டு வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தை களுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றுவிட்டார்.
பின்னர் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், “யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றால் சோதிக்கப்படுகிறாரோ அவருக்கு அக் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்” எனக் கூறி னார்கள்.
அத்தியாயம் : 24
1418. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு பெண்மணி தன்னுடைய இரு பெண் குழந்தைகளுடன் யாசகம் கேட்டு வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தை களுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றுவிட்டார்.
பின்னர் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், “யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றால் சோதிக்கப்படுகிறாரோ அவருக்கு அக் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்” எனக் கூறி னார்கள்.
அத்தியாயம் : 24
1419. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ، حَدَّثَنَا أَبُو زُرْعَةَ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الصَّدَقَةِ أَعْظَمُ أَجْرًا قَالَ "" أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ شَحِيحٌ، تَخْشَى الْفَقْرَ وَتَأْمُلُ الْغِنَى، وَلاَ تُمْهِلُ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ قُلْتَ لِفُلاَنٍ كَذَا، وَلِفُلاَنٍ كَذَا، وَقَدْ كَانَ لِفُلاَنٍ "".
பாடம் : 11
உடல் ஆரோக்கியமும் பணத் தேவையும் உள்ள ஒருவர் தர்மம் செய்வதன் சிறப்பு
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தானதர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்) “என் இறைவா! சிறிது காலம் எனக்கு அவகாசம் அளிக்கக் கூடாதா? அப்படியாயின், நானும் தான தர்மம் செய்து நல்லவர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவார். (63:10)
இறைநம்பிக்கை கொண்டோரே! பேரம், நட்பு, பரிந்துரை ஆகிய எதுவும் இல்லாத (மறுமை) நாள் வருவதற்கு முன்பே, நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள். (2:254)
1419. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மை தரும் தர்மம் எது?” எனக் கேட்டார்.
“நீர் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருள் தேவை உடையவராகவும், வறுமையை அஞ்சி, செல்வத்தை எதிர் பார்ப்பவராகவும் இருக்கும்போது செய்யும் தர்மமே (அதிக நன்மையுள்ளதாகும்.) எனவே (தர்மம் செய்வதை), உயிர் தொண்டைக் குழியை நெருங்கும்வரை தாமதப்படுத்த வேண்டாம்.
அந்நிலையில் இன்னாருக்கு இவ் வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று சொல்வீர். (ஆனால்), அப்போது உமது செல்வம் (வாரிசாகிய) இன்ன மனிதருக்கு உரியதாகிவிட்டிருக்கும்‘“ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 24
1419. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மை தரும் தர்மம் எது?” எனக் கேட்டார்.
“நீர் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருள் தேவை உடையவராகவும், வறுமையை அஞ்சி, செல்வத்தை எதிர் பார்ப்பவராகவும் இருக்கும்போது செய்யும் தர்மமே (அதிக நன்மையுள்ளதாகும்.) எனவே (தர்மம் செய்வதை), உயிர் தொண்டைக் குழியை நெருங்கும்வரை தாமதப்படுத்த வேண்டாம்.
அந்நிலையில் இன்னாருக்கு இவ் வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று சொல்வீர். (ஆனால்), அப்போது உமது செல்வம் (வாரிசாகிய) இன்ன மனிதருக்கு உரியதாகிவிட்டிருக்கும்‘“ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம் : 24
1420. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ فِرَاسٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ بَعْضَ، أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قُلْنَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَيُّنَا أَسْرَعُ بِكَ لُحُوقًا قَالَ "" أَطْوَلُكُنَّ يَدًا "". فَأَخَذُوا قَصَبَةً يَذْرَعُونَهَا، فَكَانَتْ سَوْدَةُ أَطْوَلَهُنَّ يَدًا، فَعَلِمْنَا بَعْدُ أَنَّمَا كَانَتْ طُولَ يَدِهَا الصَّدَقَةُ، وَكَانَتْ أَسْرَعَنَا لُحُوقًا بِهِ وَكَانَتْ تُحِبُّ الصَّدَقَةَ.
பாடம் : 11
உடல் ஆரோக்கியமும் பணத் தேவையும் உள்ள ஒருவர் தர்மம் செய்வதன் சிறப்பு
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தானதர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்) “என் இறைவா! சிறிது காலம் எனக்கு அவகாசம் அளிக்கக் கூடாதா? அப்படியாயின், நானும் தான தர்மம் செய்து நல்லவர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவார். (63:10)
இறைநம்பிக்கை கொண்டோரே! பேரம், நட்பு, பரிந்துரை ஆகிய எதுவும் இல்லாத (மறுமை) நாள் வருவதற்கு முன்பே, நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள். (2:254)
1420. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம், “உங்களது இறப்புக்குப்பின் எங்களில் யார் முதலில் உங்களை வந்து சேர்வார்?” எனக் கேட்டார். அதற்கு, “உங்களில் கை நீளமானவரே!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உடனே துணைவியர் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்துபார்க்க ஆரம்பித்தார்கள். அப்போது சவ்தா (ரலி) அவர்களின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஸைனப் (ரலி) இறந்த) பிறகுதான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். (ஸைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்ததால்தான் நபி (ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும், அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக்கூடியவராகவும் இருந்தார்.
அத்தியாயம் : 24
1420. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம், “உங்களது இறப்புக்குப்பின் எங்களில் யார் முதலில் உங்களை வந்து சேர்வார்?” எனக் கேட்டார். அதற்கு, “உங்களில் கை நீளமானவரே!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உடனே துணைவியர் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்துபார்க்க ஆரம்பித்தார்கள். அப்போது சவ்தா (ரலி) அவர்களின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஸைனப் (ரலி) இறந்த) பிறகுதான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். (ஸைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்ததால்தான் நபி (ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும், அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக்கூடியவராகவும் இருந்தார்.
அத்தியாயம் : 24
1421. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" قَالَ رَجُلٌ لأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ. فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ سَارِقٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى سَارِقٍ. فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ لأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ. فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدَىْ زَانِيَةٍ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ اللَّيْلَةَ عَلَى زَانِيَةٍ. فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ، لأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ. فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدَىْ غَنِيٍّ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى غَنِيٍّ فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ، عَلَى سَارِقٍ وَعَلَى زَانِيَةٍ وَعَلَى غَنِيٍّ. فَأُتِيَ فَقِيلَ لَهُ أَمَّا صَدَقَتُكَ عَلَى سَارِقٍ فَلَعَلَّهُ أَنْ يَسْتَعِفَّ عَنْ سَرِقَتِهِ، وَأَمَّا الزَّانِيَةُ فَلَعَلَّهَا أَنْ تَسْتَعِفَّ عَنْ زِنَاهَا، وَأَمَّا الْغَنِيُّ فَلَعَلَّهُ يَعْتَبِرُ فَيُنْفِقُ مِمَّا أَعْطَاهُ اللَّهُ "".
பாடம் : 12
வெளிப்படையாகத் தர்மம் செய்தல்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
(இறைவழியில்) தம் செல்வங்களை இரவிலும் பகலிலும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் செலவு செய் வோருக்கு, அவர்களின் இறைவனிடம் உரிய பிரதிபலன் உண்டு. அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் கவலைப்படவுமாட்டார்கள். (2:274)
பாடம் : 13
இரகசியமாகத் தர்மம் செய்தல்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
“ஒருவர் தர்மம் செய்கிறார். தமது வலக் கையால் செய்கின்ற தர்மத்தை இடக் கை அறியாதவண்ணம் அவர் மறைத்துக் கொள்கிறார்... (அவரும் இறை அரியணை யின் நிழல் பெறும் எழுவரில் அடங்கு வார்)” என நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
நீங்கள் தர்மங்களை வெளிப்படை யாகச் செய்தால் அதுவும் நன்றே. அவற்றை மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது (இன்னும்) உங்களுக்குச் சிறந்ததாகும். (2:271)
பாடம் : 14
ஒருவர் செல்வர் என அறியாமல் அவருக்குத் தர்மம் செய்தால்...?
1421. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) ஒருவர், “நான் தர்மம் செய்யப்போகிறேன்” எனக் கூறிக்கொண்டு (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து, (தெரியாமல்) ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “இன்றிரவு திருடனுக்குத் தர்மம் வழங்கப் பட்டுள்ளது” எனப் பேசிக்கொண்டனர்.
(இதைக் கேட்ட) அவர், ‘இறைவா! உனக்கே எல்லாப் புகழும். (நாளையும்) நான் தர்மம் செய்வேன்’ என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) புறப்பட்டுவந்து அதை ஒரு விபசாரியிடம் கொடுத்துவிட்டார். மறுநாள் காலை மக்கள், “இன்றிரவு விபசாரிக்குத் தர்மம் கொடுக்கப் பட்டுள்ளது” எனப் பேசிக்கொண்டார்கள். (இதைக் கேட்ட) அவர், “இறைவா! விபசாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே எல்லாப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்!” எனக் கூறினார்.
(மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் புறப்பட்டு ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “பணக்காரருக்குத் தர்மம் கொடுக்கப்பட் டுள்ளது” எனப் பேசிக்கொண்டனர். அப்போது அவர், “இறைவா! திருடன், விபசாரி, பணக்காரர் ஆகியோருக்குத் தர்மம் கொடுத்தற்காக உனக்கே எல்லாப் புகழும்” எனக் கூறினார்.
பின்னர் (கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு (பின்வருமாறு) கூறப்பட்டது:
நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைக் கைவிடக் காரணமாகலாம். விபசாரிக்கு நீ கொடுத்த தர்மம். அவள் விபசாரத்தைக் கைவிடக் காரணமாகக்கூடும். பணக்காரருக்குக் கொடுத்த தர்மம், அவர் படிப்பினை பெற்று, தமக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் காரணமாகக்கூடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1421. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முற்காலத்தில்) ஒருவர், “நான் தர்மம் செய்யப்போகிறேன்” எனக் கூறிக்கொண்டு (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து, (தெரியாமல்) ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “இன்றிரவு திருடனுக்குத் தர்மம் வழங்கப் பட்டுள்ளது” எனப் பேசிக்கொண்டனர்.
(இதைக் கேட்ட) அவர், ‘இறைவா! உனக்கே எல்லாப் புகழும். (நாளையும்) நான் தர்மம் செய்வேன்’ என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) புறப்பட்டுவந்து அதை ஒரு விபசாரியிடம் கொடுத்துவிட்டார். மறுநாள் காலை மக்கள், “இன்றிரவு விபசாரிக்குத் தர்மம் கொடுக்கப் பட்டுள்ளது” எனப் பேசிக்கொண்டார்கள். (இதைக் கேட்ட) அவர், “இறைவா! விபசாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே எல்லாப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்!” எனக் கூறினார்.
(மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் புறப்பட்டு ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “பணக்காரருக்குத் தர்மம் கொடுக்கப்பட் டுள்ளது” எனப் பேசிக்கொண்டனர். அப்போது அவர், “இறைவா! திருடன், விபசாரி, பணக்காரர் ஆகியோருக்குத் தர்மம் கொடுத்தற்காக உனக்கே எல்லாப் புகழும்” எனக் கூறினார்.
பின்னர் (கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு (பின்வருமாறு) கூறப்பட்டது:
நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைக் கைவிடக் காரணமாகலாம். விபசாரிக்கு நீ கொடுத்த தர்மம். அவள் விபசாரத்தைக் கைவிடக் காரணமாகக்கூடும். பணக்காரருக்குக் கொடுத்த தர்மம், அவர் படிப்பினை பெற்று, தமக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் காரணமாகக்கூடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1422. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، حَدَّثَنَا أَبُو الْجُوَيْرِيَةِ، أَنَّ مَعْنَ بْنَ يَزِيدَ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنَا وَأَبِي وَجَدِّي وَخَطَبَ عَلَىَّ فَأَنْكَحَنِي وَخَاصَمْتُ إِلَيْهِ ـ وَـ كَانَ أَبِي يَزِيدُ أَخْرَجَ دَنَانِيرَ يَتَصَدَّقُ بِهَا فَوَضَعَهَا عِنْدَ رَجُلٍ فِي الْمَسْجِدِ، فَجِئْتُ فَأَخَذْتُهَا فَأَتَيْتُهُ بِهَا فَقَالَ وَاللَّهِ مَا إِيَّاكَ أَرَدْتُ. فَخَاصَمْتُهُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" لَكَ مَا نَوَيْتَ يَا يَزِيدُ، وَلَكَ مَا أَخَذْتَ يَا مَعْنُ "".
பாடம் : 15
சொந்த மகனென்று தெரியாமல் அவனுக்குத் தர்மம் செய்துவிட்டால்...?
1422. மஅன் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தந்தையும் என் பாட்ட னாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்று) உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்தோம். நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பெண் பேசித் திருமணம் செய்தும்வைத்தார்கள்.
அவர்களிடம் (ஒரு தடவை) ஒரு பிரச்சினையைக் கொண்டுசென்றேன். அதாவது என் தந்தை யஸீத் பின் அல்அக்னஸ் (ரலி) அவர்கள் தர்மம் செய்வதற்காகச் சில தீனார்களை எடுத்துக் கொண்டு சென்று அதைப் பள்ளிவாசலில் இருந்த ஒருவருக்கு அருகில் வைத்து விட்டார். நான் சென்று அதை எடுத்து வந்துவிட்டேன்.
அப்போது என் தந்தை, “அல்லாஹ் வின் மீதாணையாக! நான் உன்னை எண்ணி (அதை வைத்தி)டவில்லையே!” என்றார்கள். உடனே நான் அவரை அழைத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தீர்வு கேட்டேன். அதற்கு அவர்கள் “யஸீதே! நீர் எண்ணிய (தர்மத்திற்கான நன்மையான)து உமக்குக் கிடைக்கும். மஅனே! நீர் எடுத்த (பொருளான)து உமக்கு உரியதே” எனக் கூறினார்கள்.
அத்தியாயம் : 24
1422. மஅன் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் என் தந்தையும் என் பாட்ட னாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்று) உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்தோம். நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பெண் பேசித் திருமணம் செய்தும்வைத்தார்கள்.
அவர்களிடம் (ஒரு தடவை) ஒரு பிரச்சினையைக் கொண்டுசென்றேன். அதாவது என் தந்தை யஸீத் பின் அல்அக்னஸ் (ரலி) அவர்கள் தர்மம் செய்வதற்காகச் சில தீனார்களை எடுத்துக் கொண்டு சென்று அதைப் பள்ளிவாசலில் இருந்த ஒருவருக்கு அருகில் வைத்து விட்டார். நான் சென்று அதை எடுத்து வந்துவிட்டேன்.
அப்போது என் தந்தை, “அல்லாஹ் வின் மீதாணையாக! நான் உன்னை எண்ணி (அதை வைத்தி)டவில்லையே!” என்றார்கள். உடனே நான் அவரை அழைத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தீர்வு கேட்டேன். அதற்கு அவர்கள் “யஸீதே! நீர் எண்ணிய (தர்மத்திற்கான நன்மையான)து உமக்குக் கிடைக்கும். மஅனே! நீர் எடுத்த (பொருளான)து உமக்கு உரியதே” எனக் கூறினார்கள்.
அத்தியாயம் : 24
1423. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ تَعَالَى فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ إِمَامٌ عَدْلٌ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ "".
பாடம் : 16
வலக் கரத்தால் தர்மம் செய்தல்
1423. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது (அரியணை) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில், தனது நிழலில் உயர்ந்தோன் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்; நீதி வழுவா ஆட்சியாளர். இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளை ஞன். பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்திருக்கும் இதயம் உடைய வர். அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக் காகவே பிரிந்த இருவர்.
தகுதியும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை (தவறு செய்ய) அழைத்தபோதும், “நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” எனக் கூறியவர். “தமது இடக் கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாகத் தர்மம் செய்தவர். தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்தியவர் ஆகியோர் ஆவர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24
1423. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது (அரியணை) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில், தனது நிழலில் உயர்ந்தோன் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்; நீதி வழுவா ஆட்சியாளர். இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளை ஞன். பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்திருக்கும் இதயம் உடைய வர். அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக் காகவே பிரிந்த இருவர்.
தகுதியும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை (தவறு செய்ய) அழைத்தபோதும், “நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” எனக் கூறியவர். “தமது இடக் கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாகத் தர்மம் செய்தவர். தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்தியவர் ஆகியோர் ஆவர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 24