1415. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ الْحَكَمُ ـ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ الْبَصْرِيُّ ـ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أَبِي مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا نَزَلَتْ آيَةُ الصَّدَقَةِ كُنَّا نُحَامِلُ، فَجَاءَ رَجُلٌ فَتَصَدَّقَ بِشَىْءٍ كَثِيرٍ فَقَالُوا مُرَائِي. وَجَاءَ رَجُلٌ فَتَصَدَّقَ بِصَاعٍ فَقَالُوا إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنْ صَاعِ هَذَا. فَنَزَلَتِ {الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوِّعِينَ مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لاَ يَجِدُونَ إِلاَّ جُهْدَهُمْ} الآيَةَ.
பாடம்: 10 பேரீச்சம் பழத்தின் சிறிய துண் டையோ அல்லது சிறிதளவு பொருளையோ தர்மம் செய்தே னும் நரகத்திலிருந்து (உங்க ளைப்) பாதுகாத்துக்கொள் ளுங்கள். அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் அன்பை எதிர்பார்த்து, தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கையோடு தம் செல்வங்களைச் செலவிடுவோரின் நிலையானது, உயரமான இடத்தில் அமைந்துள்ள ஒரு தோட்டத் தின் நிலையை ஒத்திருக்கிறது. அதில் கனமழை பொழியும்போது இரு மடங்கு பலனைத் தருகிறது. அதில் கனமழை பெய்யாவிடினும் தூறலே (போதும்). நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்... (2:265, 266)
1415. அபூமஸ்ஊத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

தர்மம் தொடர்பான இறைவசனம் (9:103) இறங்கியதும் (தர்மம் செய்வதற்காகப் பொருள் தேடி) நாங்கள் (சுமை தூக்கி) கூலி வேலை செய்யலானோம். அப்போது ஒருவர் வந்து, அதிகமான பொருளைத் தர்மம் செய்தார். அப்போது (நயவஞ்சகர்கள்), “அவர், பிறர் பாராட்ட வேண்டுமென்று செய்கிறார்” எனக் கூறினார்கள்.

பிறகு மற்றொருவர் வந்து, ஒரு ‘ஸாஉ’ தானியத்தைத் தர்மம் செய்தார். அப்போது (நயவஞ்சகர்கள்), “இவரது ஸாஉ (குறைந்த அளவு தானியம்) அல்லாஹ்வுக்குத் தேவையில்லை” எனக் கூறினர்.

அப்போதுதான், “(நயவஞ்சகர்களாகிய) அவர்கள், இறைநம்பிக்கையாளர்களில் கூடுதல் தர்மம் செய்வோரையும் தமது உழைப்பு தவிர வேறெதுவும் கிடைக்கப் பெறாதவர்களையும் குறைகூறுகின்றனர்” (9:79) எனும் இறைவசனம் அருளப் பெற்றது.


அத்தியாயம் : 24
1416. حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ أَبِي مَسْعُودٍ الأَنْصَارِيِّ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَمَرَنَا بِالصَّدَقَةِ انْطَلَقَ أَحَدُنَا إِلَى السُّوقِ فَتَحَامَلَ فَيُصِيبُ الْمُدَّ، وَإِنَّ لِبَعْضِهِمُ الْيَوْمَ لَمِائَةَ أَلْفٍ.
பாடம்: 10 பேரீச்சம் பழத்தின் சிறிய துண் டையோ அல்லது சிறிதளவு பொருளையோ தர்மம் செய்தே னும் நரகத்திலிருந்து (உங்க ளைப்) பாதுகாத்துக்கொள் ளுங்கள். அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் அன்பை எதிர்பார்த்து, தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கையோடு தம் செல்வங்களைச் செலவிடுவோரின் நிலையானது, உயரமான இடத்தில் அமைந்துள்ள ஒரு தோட்டத் தின் நிலையை ஒத்திருக்கிறது. அதில் கனமழை பொழியும்போது இரு மடங்கு பலனைத் தருகிறது. அதில் கனமழை பெய்யாவிடினும் தூறலே (போதும்). நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்... (2:265, 266)
1416. அபூமஸ்வூத் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டபோது, எங்களில் ஒருவர் கடைத்தெருவுக்குச் சென்று கூலி வேலை செய்து, இரு கையளவு தானியம் சம்பாதித்து (அதைத் தர்மம் செய்து)விடுவார். ஆனால், இன்றோ எங்களில் சிலரிடம் ஓர் இலட்சம் (திர்ஹம்/தீனார்)வரை உள்ளது.


அத்தியாயம் : 24
1417. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَعْقِلٍ، قَالَ سَمِعْتُ عَدِيَّ بْنَ حَاتِمٍ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ "".
பாடம்: 10 பேரீச்சம் பழத்தின் சிறிய துண் டையோ அல்லது சிறிதளவு பொருளையோ தர்மம் செய்தே னும் நரகத்திலிருந்து (உங்க ளைப்) பாதுகாத்துக்கொள் ளுங்கள். அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் அன்பை எதிர்பார்த்து, தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கையோடு தம் செல்வங்களைச் செலவிடுவோரின் நிலையானது, உயரமான இடத்தில் அமைந்துள்ள ஒரு தோட்டத் தின் நிலையை ஒத்திருக்கிறது. அதில் கனமழை பொழியும்போது இரு மடங்கு பலனைத் தருகிறது. அதில் கனமழை பெய்யாவிடினும் தூறலே (போதும்). நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்... (2:265, 266)
1417. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பேரீச்சம் பழத்தின் ஒரு சிறுதுண்டின் மூலமாவது நரகத்திலிருந்து (உங்களைப்) பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

இதை அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 24
1418. حَدَّثَنَا بِشْرُ بْنُ مُحَمَّدٍ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ حَزْمٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَتِ امْرَأَةٌ مَعَهَا ابْنَتَانِ لَهَا تَسْأَلُ، فَلَمْ تَجِدْ عِنْدِي شَيْئًا غَيْرَ تَمْرَةٍ فَأَعْطَيْتُهَا إِيَّاهَا، فَقَسَمَتْهَا بَيْنَ ابْنَتَيْهَا وَلَمْ تَأْكُلْ مِنْهَا، ثُمَّ قَامَتْ فَخَرَجَتْ، فَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْنَا، فَأَخْبَرْتُهُ فَقَالَ "" مَنِ ابْتُلِيَ مِنْ هَذِهِ الْبَنَاتِ بِشَىْءٍ كُنَّ لَهُ سِتْرًا مِنَ النَّارِ "".
பாடம்: 10 பேரீச்சம் பழத்தின் சிறிய துண் டையோ அல்லது சிறிதளவு பொருளையோ தர்மம் செய்தே னும் நரகத்திலிருந்து (உங்க ளைப்) பாதுகாத்துக்கொள் ளுங்கள். அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் அன்பை எதிர்பார்த்து, தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கையோடு தம் செல்வங்களைச் செலவிடுவோரின் நிலையானது, உயரமான இடத்தில் அமைந்துள்ள ஒரு தோட்டத் தின் நிலையை ஒத்திருக்கிறது. அதில் கனமழை பொழியும்போது இரு மடங்கு பலனைத் தருகிறது. அதில் கனமழை பெய்யாவிடினும் தூறலே (போதும்). நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்... (2:265, 266)
1418. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி தன்னுடைய இரு பெண் குழந்தைகளுடன் யாசகம் கேட்டு வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரு குழந்தை களுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றுவிட்டார்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், “யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றால் சோதிக்கப்படுகிறாரோ அவருக்கு அக் குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக இருப்பார்கள்” எனக் கூறி னார்கள்.

அத்தியாயம் : 24
1419. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ الْقَعْقَاعِ، حَدَّثَنَا أَبُو زُرْعَةَ، حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الصَّدَقَةِ أَعْظَمُ أَجْرًا قَالَ "" أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَحِيحٌ شَحِيحٌ، تَخْشَى الْفَقْرَ وَتَأْمُلُ الْغِنَى، وَلاَ تُمْهِلُ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلْقُومَ قُلْتَ لِفُلاَنٍ كَذَا، وَلِفُلاَنٍ كَذَا، وَقَدْ كَانَ لِفُلاَنٍ "".
பாடம் : 11 உடல் ஆரோக்கியமும் பணத் தேவையும் உள்ள ஒருவர் தர்மம் செய்வதன் சிறப்பு உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தானதர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்) “என் இறைவா! சிறிது காலம் எனக்கு அவகாசம் அளிக்கக் கூடாதா? அப்படியாயின், நானும் தான தர்மம் செய்து நல்லவர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவார். (63:10) இறைநம்பிக்கை கொண்டோரே! பேரம், நட்பு, பரிந்துரை ஆகிய எதுவும் இல்லாத (மறுமை) நாள் வருவதற்கு முன்பே, நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள். (2:254)
1419. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! அதிக நன்மை தரும் தர்மம் எது?” எனக் கேட்டார்.

“நீர் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருள் தேவை உடையவராகவும், வறுமையை அஞ்சி, செல்வத்தை எதிர் பார்ப்பவராகவும் இருக்கும்போது செய்யும் தர்மமே (அதிக நன்மையுள்ளதாகும்.) எனவே (தர்மம் செய்வதை), உயிர் தொண்டைக் குழியை நெருங்கும்வரை தாமதப்படுத்த வேண்டாம்.

அந்நிலையில் இன்னாருக்கு இவ் வளவு; இன்னாருக்கு இவ்வளவு என்று சொல்வீர். (ஆனால்), அப்போது உமது செல்வம் (வாரிசாகிய) இன்ன மனிதருக்கு உரியதாகிவிட்டிருக்கும்‘“ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 24
1420. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ فِرَاسٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، رضى الله عنها أَنَّ بَعْضَ، أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قُلْنَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم أَيُّنَا أَسْرَعُ بِكَ لُحُوقًا قَالَ "" أَطْوَلُكُنَّ يَدًا "". فَأَخَذُوا قَصَبَةً يَذْرَعُونَهَا، فَكَانَتْ سَوْدَةُ أَطْوَلَهُنَّ يَدًا، فَعَلِمْنَا بَعْدُ أَنَّمَا كَانَتْ طُولَ يَدِهَا الصَّدَقَةُ، وَكَانَتْ أَسْرَعَنَا لُحُوقًا بِهِ وَكَانَتْ تُحِبُّ الصَّدَقَةَ.
பாடம் : 11 உடல் ஆரோக்கியமும் பணத் தேவையும் உள்ள ஒருவர் தர்மம் செய்வதன் சிறப்பு உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தானதர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்) “என் இறைவா! சிறிது காலம் எனக்கு அவகாசம் அளிக்கக் கூடாதா? அப்படியாயின், நானும் தான தர்மம் செய்து நல்லவர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவார். (63:10) இறைநம்பிக்கை கொண்டோரே! பேரம், நட்பு, பரிந்துரை ஆகிய எதுவும் இல்லாத (மறுமை) நாள் வருவதற்கு முன்பே, நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள். (2:254)
1420. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம், “உங்களது இறப்புக்குப்பின் எங்களில் யார் முதலில் உங்களை வந்து சேர்வார்?” எனக் கேட்டார். அதற்கு, “உங்களில் கை நீளமானவரே!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

உடனே துணைவியர் ஒரு குச்சியை எடுத்துத் தங்களின் கைகளை அளந்துபார்க்க ஆரம்பித்தார்கள். அப்போது சவ்தா (ரலி) அவர்களின் கைகளே மிகவும் நீளமானவையாக இருந்தன. (ஸைனப் (ரலி) இறந்த) பிறகுதான் கை நீளமானவர் என்பது, அதிகம் தர்மம் செய்பவரைக் குறிக்கிறது என்பதை நாங்கள் அறிந்துகொண்டோம். (ஸைனப்) அவ்வாறு அதிகம் தர்மம் செய்பவராக இருந்ததால்தான் நபி (ஸல்) அவர்களை முதலில் அடைந்தார். மேலும், அவர் தர்மம் செய்வதை (மிகவும்) விரும்பக்கூடியவராகவும் இருந்தார்.

அத்தியாயம் : 24
1421. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" قَالَ رَجُلٌ لأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ. فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدِ سَارِقٍ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى سَارِقٍ. فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ لأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ. فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدَىْ زَانِيَةٍ، فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ اللَّيْلَةَ عَلَى زَانِيَةٍ. فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ عَلَى زَانِيَةٍ، لأَتَصَدَّقَنَّ بِصَدَقَةٍ. فَخَرَجَ بِصَدَقَتِهِ فَوَضَعَهَا فِي يَدَىْ غَنِيٍّ فَأَصْبَحُوا يَتَحَدَّثُونَ تُصُدِّقَ عَلَى غَنِيٍّ فَقَالَ اللَّهُمَّ لَكَ الْحَمْدُ، عَلَى سَارِقٍ وَعَلَى زَانِيَةٍ وَعَلَى غَنِيٍّ. فَأُتِيَ فَقِيلَ لَهُ أَمَّا صَدَقَتُكَ عَلَى سَارِقٍ فَلَعَلَّهُ أَنْ يَسْتَعِفَّ عَنْ سَرِقَتِهِ، وَأَمَّا الزَّانِيَةُ فَلَعَلَّهَا أَنْ تَسْتَعِفَّ عَنْ زِنَاهَا، وَأَمَّا الْغَنِيُّ فَلَعَلَّهُ يَعْتَبِرُ فَيُنْفِقُ مِمَّا أَعْطَاهُ اللَّهُ "".
பாடம் : 12 வெளிப்படையாகத் தர்மம் செய்தல் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்: (இறைவழியில்) தம் செல்வங்களை இரவிலும் பகலிலும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் செலவு செய் வோருக்கு, அவர்களின் இறைவனிடம் உரிய பிரதிபலன் உண்டு. அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் கவலைப்படவுமாட்டார்கள். (2:274) பாடம் : 13 இரகசியமாகத் தர்மம் செய்தல் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: “ஒருவர் தர்மம் செய்கிறார். தமது வலக் கையால் செய்கின்ற தர்மத்தை இடக் கை அறியாதவண்ணம் அவர் மறைத்துக் கொள்கிறார்... (அவரும் இறை அரியணை யின் நிழல் பெறும் எழுவரில் அடங்கு வார்)” என நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் தர்மங்களை வெளிப்படை யாகச் செய்தால் அதுவும் நன்றே. அவற்றை மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது (இன்னும்) உங்களுக்குச் சிறந்ததாகும். (2:271) பாடம் : 14 ஒருவர் செல்வர் என அறியாமல் அவருக்குத் தர்மம் செய்தால்...?
1421. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முற்காலத்தில்) ஒருவர், “நான் தர்மம் செய்யப்போகிறேன்” எனக் கூறிக்கொண்டு (இரவில்) தர்மத்துடன் வெளியே வந்து, (தெரியாமல்) ஒரு திருடனிடம் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “இன்றிரவு திருடனுக்குத் தர்மம் வழங்கப் பட்டுள்ளது” எனப் பேசிக்கொண்டனர்.

(இதைக் கேட்ட) அவர், ‘இறைவா! உனக்கே எல்லாப் புகழும். (நாளையும்) நான் தர்மம் செய்வேன்’ என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் (இரவில்) புறப்பட்டுவந்து அதை ஒரு விபசாரியிடம் கொடுத்துவிட்டார். மறுநாள் காலை மக்கள், “இன்றிரவு விபசாரிக்குத் தர்மம் கொடுக்கப் பட்டுள்ளது” எனப் பேசிக்கொண்டார்கள். (இதைக் கேட்ட) அவர், “இறைவா! விபசாரிக்குத் தர்மம் செய்ததற்காக உனக்கே எல்லாப் புகழும்! (நாளையும்) நான் தர்மம் செய்வேன்!” எனக் கூறினார்.

(மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் புறப்பட்டு ஒரு பணக்காரரின் கையில் கொடுத்துவிட்டார். காலையில் மக்கள், “பணக்காரருக்குத் தர்மம் கொடுக்கப்பட் டுள்ளது” எனப் பேசிக்கொண்டனர். அப்போது அவர், “இறைவா! திருடன், விபசாரி, பணக்காரர் ஆகியோருக்குத் தர்மம் கொடுத்தற்காக உனக்கே எல்லாப் புகழும்” எனக் கூறினார்.

பின்னர் (கனவில்) அவரிடம் (வானவர்) அனுப்பிவைக்கப்பட்டு (பின்வருமாறு) கூறப்பட்டது:

நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதைக் கைவிடக் காரணமாகலாம். விபசாரிக்கு நீ கொடுத்த தர்மம். அவள் விபசாரத்தைக் கைவிடக் காரணமாகக்கூடும். பணக்காரருக்குக் கொடுத்த தர்மம், அவர் படிப்பினை பெற்று, தமக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் காரணமாகக்கூடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 24
1422. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، حَدَّثَنَا أَبُو الْجُوَيْرِيَةِ، أَنَّ مَعْنَ بْنَ يَزِيدَ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أَنَا وَأَبِي وَجَدِّي وَخَطَبَ عَلَىَّ فَأَنْكَحَنِي وَخَاصَمْتُ إِلَيْهِ ـ وَـ كَانَ أَبِي يَزِيدُ أَخْرَجَ دَنَانِيرَ يَتَصَدَّقُ بِهَا فَوَضَعَهَا عِنْدَ رَجُلٍ فِي الْمَسْجِدِ، فَجِئْتُ فَأَخَذْتُهَا فَأَتَيْتُهُ بِهَا فَقَالَ وَاللَّهِ مَا إِيَّاكَ أَرَدْتُ. فَخَاصَمْتُهُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" لَكَ مَا نَوَيْتَ يَا يَزِيدُ، وَلَكَ مَا أَخَذْتَ يَا مَعْنُ "".
பாடம் : 15 சொந்த மகனென்று தெரியாமல் அவனுக்குத் தர்மம் செய்துவிட்டால்...?
1422. மஅன் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் என் தந்தையும் என் பாட்ட னாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்று) உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்தோம். நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பெண் பேசித் திருமணம் செய்தும்வைத்தார்கள்.

அவர்களிடம் (ஒரு தடவை) ஒரு பிரச்சினையைக் கொண்டுசென்றேன். அதாவது என் தந்தை யஸீத் பின் அல்அக்னஸ் (ரலி) அவர்கள் தர்மம் செய்வதற்காகச் சில தீனார்களை எடுத்துக் கொண்டு சென்று அதைப் பள்ளிவாசலில் இருந்த ஒருவருக்கு அருகில் வைத்து விட்டார். நான் சென்று அதை எடுத்து வந்துவிட்டேன்.

அப்போது என் தந்தை, “அல்லாஹ் வின் மீதாணையாக! நான் உன்னை எண்ணி (அதை வைத்தி)டவில்லையே!” என்றார்கள். உடனே நான் அவரை அழைத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து தீர்வு கேட்டேன். அதற்கு அவர்கள் “யஸீதே! நீர் எண்ணிய (தர்மத்திற்கான நன்மையான)து உமக்குக் கிடைக்கும். மஅனே! நீர் எடுத்த (பொருளான)து உமக்கு உரியதே” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 24
1423. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ تَعَالَى فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلاَّ ظِلُّهُ إِمَامٌ عَدْلٌ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ "".
பாடம் : 16 வலக் கரத்தால் தர்மம் செய்தல்
1423. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனது (அரியணை) நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில், தனது நிழலில் உயர்ந்தோன் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்; நீதி வழுவா ஆட்சியாளர். இறைவழிபாட்டிலேயே வளர்ந்த இளை ஞன். பள்ளிவாசல்களுடன் (எப்போதும்) தொடர்பு வைத்திருக்கும் இதயம் உடைய வர். அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக் காகவே பிரிந்த இருவர்.

தகுதியும் அழகும் உள்ள ஒரு பெண் தம்மை (தவறு செய்ய) அழைத்தபோதும், “நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” எனக் கூறியவர். “தமது இடக் கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாகத் தர்மம் செய்தவர். தனிமையில் அல்லாஹ்வை நினைத்து (அவனது அச்சத்தால்) கண்ணீர் சிந்தியவர் ஆகியோர் ஆவர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 24
1424. حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي مَعْبَدُ بْنُ خَالِدٍ، قَالَ سَمِعْتُ حَارِثَةَ بْنَ وَهْبٍ الْخُزَاعِيَّ ـ رضى الله عنه ـ يَقُولُ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" تَصَدَّقُوا، فَسَيَأْتِي عَلَيْكُمْ زَمَانٌ يَمْشِي الرَّجُلُ بِصَدَقَتِهِ فَيَقُولُ الرَّجُلُ لَوْ جِئْتَ بِهَا بِالأَمْسِ لَقَبِلْتُهَا مِنْكَ، فَأَمَّا الْيَوْمَ فَلاَ حَاجَةَ لِي فِيهَا "".
பாடம் : 16 வலக் கரத்தால் தர்மம் செய்தல்
1424. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இப்போதே) தர்மம் செய்துகொள் ளுங்கள்! ஏனெனில், உங்களுக்கு ஒரு காலம் வரும். அக்காலத்தில் ஒருவர் தமது தர்மப் பொருளை (வலக் கரத்தில்) எடுத்துக்கொண்டு அலைவார். அப்போது ஒரு மனிதன், நேற்றே இதை நீர் கொண்டு வந்திருந்தாலாவது நான் வாங்கியிருப்பேன்; இன்றோ அது எனக்குத் தேவையில்லையே என்று கூறுவான்.

இதை ஹாரிஸா பின் வஹ்ப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 24
1425. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ شَقِيقٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أَنْفَقَتِ الْمَرْأَةُ مِنْ طَعَامِ بَيْتِهَا غَيْرَ مُفْسِدَةٍ كَانَ لَهَا أَجْرُهَا بِمَا أَنْفَقَتْ وَلِزَوْجِهَا أَجْرُهُ بِمَا كَسَبَ، وَلِلْخَازِنِ مِثْلُ ذَلِكَ، لاَ يَنْقُصُ بَعْضُهُمْ أَجْرَ بَعْضٍ شَيْئًا "".
பாடம் : 17 ஒருவர் நேரடியாகத் தாமே தர்மம் வழங்காமல் பணியாள் மூலம் வழங்குதல் “அவரும் (தர்மத்தை விநியோகிக்கும் பணியாளரும்) தர்மம் செய்தவர்களில் ஒருவரே” என நபி (ஸல்) அவர்கள் கூறிய தாக அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
1425. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் தனது வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் (முறையோடு) தர்மம் செய்தால், அவள் செலவழித்தற்காக அவளுக்கும் (தர்மத்தின்) பலன் கிடைக்கும். அதைச் சம்பாதித்தவன் என்ற முறையில் அவளுடைய கணவனுக்கும் அதன் நன்மை கிடைக்கும்; அதைப் போன்றே, காசாளருக்கும் (நன்மை) கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் சிறிதும் குறைத்துவிடமாட் டார்கள்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 24
1426. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" خَيْرُ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرِ غِنًى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ "".
பாடம் : 18 தனக்கு மிஞ்சியே தானதர்மம் ஒருவர் தமக்கோ தம் குடும்பத்துக்கோ தேவை இருக்கும்போது, அல்லது கடனிருக்கும்போது தர்மம் செய்தால் அது திரும்பக் கொடுக்கப்பட வேண்டும். தர்மம் செய்தல், அடிமையை விடுதலை செய்தல், அன்பளிப்பு வழங்குதல் ஆகிய வற்றைவிடக் கடனை அடைப்பதே முக்கியமானதாகும். ஏனெனில், மற்றவர்களின் பொருளை அழிக்க ஒருவருக்கு உரிமையில்லை. “யார் மக்களின் பொருளைப் பெற்று அதைச் சீரழிக்க நாடுகிறானோ அவனை அல்லாஹ் சீரழிப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இருப்பினும், பொறுமைக்குப் பெயர்போனவராக ஒருவர் இருந்தால், அவர் தமக்குப் பசி இருந்தாலும் பிறருக்கு முன்னுரிமை அளிக்கலாம். அபூபக்ர் (ரலி) அவர்கள், இவ்வாறே தமது சொத்(து முழுவ)தை(யும்) தர்மம் செய்திருக்கிறாôகள். அன்சாரிகள் தங்களைவிட முஹாஜிர் (களின் தேவை)களுக்கு முன்னுரிமை அளித்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் (மக்களின்) பொருட்களை வீணாக்குவதற் குத் தடை விதித்துள்ளார்கள். எனவே, தர்மத்தைக் காரணம்காட்டி பிற மக்களின் பொருட்களை வீணடிக்க யாருக்கும் உரிமையில்லை. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! நான் செய்த தவறுக்குப் பரிகாரமாக எனது செல்வம் முழுவதையும் அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் தர்மமாக ஒப்படைத்துவிடுகிறேன்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமது செல்வத்தில் சிறிதளவை நீர் வைத்துக் கொள்ளும்; அது உமக்குச் சிறந்தது” என்றார்கள். “கைபர் போரில் கிடைத்த எனது பங்கை மட்டும் நான் எனக்காக வைத்துக்கொள்கிறேன்” என்று நான் பதிலளித்தேன்.
1426. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தேவைபோக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். முதலில் உம்முடைய வீட்டாரிடமிருந்தே (தர்மத்தைத்) தொடங்குவீராக!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 24
1427. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى، وَابْدَأْ بِمَنْ تَعُولُ، وَخَيْرُ الصَّدَقَةِ عَنْ ظَهْرِ غِنًى، وَمَنْ يَسْتَعْفِفْ يُعِفَّهُ اللَّهُ، وَمَنْ يَسْتَغْنِ يُغْنِهِ اللَّهُ ". وَعَنْ وُهَيْبٍ، قَالَ أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ بِهَذَا.
பாடம் : 18 தனக்கு மிஞ்சியே தானதர்மம் ஒருவர் தமக்கோ தம் குடும்பத்துக்கோ தேவை இருக்கும்போது, அல்லது கடனிருக்கும்போது தர்மம் செய்தால் அது திரும்பக் கொடுக்கப்பட வேண்டும். தர்மம் செய்தல், அடிமையை விடுதலை செய்தல், அன்பளிப்பு வழங்குதல் ஆகிய வற்றைவிடக் கடனை அடைப்பதே முக்கியமானதாகும். ஏனெனில், மற்றவர்களின் பொருளை அழிக்க ஒருவருக்கு உரிமையில்லை. “யார் மக்களின் பொருளைப் பெற்று அதைச் சீரழிக்க நாடுகிறானோ அவனை அல்லாஹ் சீரழிப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இருப்பினும், பொறுமைக்குப் பெயர்போனவராக ஒருவர் இருந்தால், அவர் தமக்குப் பசி இருந்தாலும் பிறருக்கு முன்னுரிமை அளிக்கலாம். அபூபக்ர் (ரலி) அவர்கள், இவ்வாறே தமது சொத்(து முழுவ)தை(யும்) தர்மம் செய்திருக்கிறாôகள். அன்சாரிகள் தங்களைவிட முஹாஜிர் (களின் தேவை)களுக்கு முன்னுரிமை அளித்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் (மக்களின்) பொருட்களை வீணாக்குவதற் குத் தடை விதித்துள்ளார்கள். எனவே, தர்மத்தைக் காரணம்காட்டி பிற மக்களின் பொருட்களை வீணடிக்க யாருக்கும் உரிமையில்லை. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! நான் செய்த தவறுக்குப் பரிகாரமாக எனது செல்வம் முழுவதையும் அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் தர்மமாக ஒப்படைத்துவிடுகிறேன்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமது செல்வத்தில் சிறிதளவை நீர் வைத்துக் கொள்ளும்; அது உமக்குச் சிறந்தது” என்றார்கள். “கைபர் போரில் கிடைத்த எனது பங்கை மட்டும் நான் எனக்காக வைத்துக்கொள்கிறேன்” என்று நான் பதிலளித்தேன்.
1427. 1428 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மேல் கையே கீழ் கையைவிடச் சிறந்ததாகும். உம்முடைய குடும்பத்தாரிட மிருந்தே (தர்மத்தைத்) தொடங்குவீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறாரோ அவரை அல்லாஹ்வும் சுயமரியாதை உள்ளவராக ஆக்குவான். யார் தன்னிறைவோடு வாழவைக்குமாறு (அல்லாஹ்விடம்) கோருவாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான்.

இதை ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தும் அறிவிக்கப்பட் டுள்ளது.


அத்தியாயம் : 24
1429. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم ح. وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ، وَذَكَرَ الصَّدَقَةَ وَالتَّعَفُّفَ وَالْمَسْأَلَةَ "" الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى، فَالْيَدُ الْعُلْيَا هِيَ الْمُنْفِقَةُ، وَالسُّفْلَى هِيَ السَّائِلَةُ "".
பாடம் : 18 தனக்கு மிஞ்சியே தானதர்மம் ஒருவர் தமக்கோ தம் குடும்பத்துக்கோ தேவை இருக்கும்போது, அல்லது கடனிருக்கும்போது தர்மம் செய்தால் அது திரும்பக் கொடுக்கப்பட வேண்டும். தர்மம் செய்தல், அடிமையை விடுதலை செய்தல், அன்பளிப்பு வழங்குதல் ஆகிய வற்றைவிடக் கடனை அடைப்பதே முக்கியமானதாகும். ஏனெனில், மற்றவர்களின் பொருளை அழிக்க ஒருவருக்கு உரிமையில்லை. “யார் மக்களின் பொருளைப் பெற்று அதைச் சீரழிக்க நாடுகிறானோ அவனை அல்லாஹ் சீரழிப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இருப்பினும், பொறுமைக்குப் பெயர்போனவராக ஒருவர் இருந்தால், அவர் தமக்குப் பசி இருந்தாலும் பிறருக்கு முன்னுரிமை அளிக்கலாம். அபூபக்ர் (ரலி) அவர்கள், இவ்வாறே தமது சொத்(து முழுவ)தை(யும்) தர்மம் செய்திருக்கிறாôகள். அன்சாரிகள் தங்களைவிட முஹாஜிர் (களின் தேவை)களுக்கு முன்னுரிமை அளித்தார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் (மக்களின்) பொருட்களை வீணாக்குவதற் குத் தடை விதித்துள்ளார்கள். எனவே, தர்மத்தைக் காரணம்காட்டி பிற மக்களின் பொருட்களை வீணடிக்க யாருக்கும் உரிமையில்லை. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! நான் செய்த தவறுக்குப் பரிகாரமாக எனது செல்வம் முழுவதையும் அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் தர்மமாக ஒப்படைத்துவிடுகிறேன்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உமது செல்வத்தில் சிறிதளவை நீர் வைத்துக் கொள்ளும்; அது உமக்குச் சிறந்தது” என்றார்கள். “கைபர் போரில் கிடைத்த எனது பங்கை மட்டும் நான் எனக்காக வைத்துக்கொள்கிறேன்” என்று நான் பதிலளித்தேன்.
1429. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை(மிம்பர்) மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகிய வற்றைப் பற்றி உபதேசம் செய்தார்கள். அப்போது மேல் கையே கீழ் கையைவிடச் சிறந்ததாகும்; மேல் கை என்பது, தர்மம் செய்யக்கூடியது; கீழ் கை என்பது யாசிக்கக்கூடியது” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 24
1430. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ، أَنَّ عُقْبَةَ بْنَ الْحَارِثِ ـ رضى الله عنه ـ حَدَّثَهُ قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم الْعَصْرَ، فَأَسْرَعَ ثُمَّ دَخَلَ الْبَيْتَ، فَلَمْ يَلْبَثْ أَنْ خَرَجَ، فَقُلْتُ أَوْ قِيلَ لَهُ فَقَالَ "" كُنْتُ خَلَّفْتُ فِي الْبَيْتِ تِبْرًا مِنَ الصَّدَقَةِ، فَكَرِهْتُ أَنْ أُبَيِّتَهُ فَقَسَمْتُهُ "".
பாடம் : 19 செய்த தர்மத்தைச் சொல்லிக்காட்டுபவர் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ்வின் வழியில் தம் செல்வங்களைச் செலவு செய்துவிட்டு, அதைத் தொடர்ந்து தாம் செலவு செய்வதைச் சொல்லிக்காட்டாமலும் புண்படுத்தாமலும் இருப்போருக்கு உரிய பிரதிபலன் அவர்களுடைய இறைவனிடம் கிடைக் கும். அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவு மாட்டார்கள். (2:262) பாடம் : 20 தர்மத்தை அன்றே விரைவாகச் செய்ய விரும்புதல்
1430. உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு அஸ்ர் தொழுகை தொழுவித்துவிட்டு, உடனே விரைந்து வீட்டினுள் சென்று, தாமதிக்காமல் வெளியே வந்தார்கள். அப்போது நான் காரணம் கேட்டேன் -அல்லது கேட்கப்பட்டது - அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் எனது வீட்டில் தர்மப் பொருளான தங்கக் கட்டியை வைத்திருந்தேன்; இரவுவரை அது என்னிடம் இருப்பதை நான் விரும்ப வில்லை. எனவே, அதைப் பகிர்ந்து அளித்துவிட்டேன்” எனக் கூறினார்கள்.

அத்தியாயம் : 24
1431. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَدِيٌّ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ عِيدٍ فَصَلَّى رَكْعَتَيْنِ لَمْ يُصَلِّ قَبْلُ وَلاَ بَعْدُ، ثُمَّ مَالَ عَلَى النِّسَاءِ وَمَعَهُ بِلاَلٌ، فَوَعَظَهُنَّ وَأَمَرَهُنَّ أَنْ يَتَصَدَّقْنَ، فَجَعَلَتِ الْمَرْأَةُ تُلْقِي الْقُلْبَ وَالْخُرْصَ.
பாடம் : 21 தர்மம் செய்யத் தூண்டுவதும் அதற்காகப் பரிந்துரைப்பதும்
1431. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பெருநாளன்று இரண்டு ரக்அத்கள் தொழு(வித்)தார்கள். அதற்கு முன்பும் பின்பும் எதையும் தொழவில்லை. பிறகு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வந்தார்கள். பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, தர்மம் செய்யுமாறு கட்டளையிட்டார்கள். உடனே பெண்கள் தங்கள் கை வளையல்களையும் காதணிகளையும் (தர்மமாக) வழங்க லானார்கள்.


அத்தியாயம் : 24
1432. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بُرْدَةَ، حَدَّثَنَا أَبُو بُرْدَةَ بْنُ أَبِي مُوسَى، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا جَاءَهُ السَّائِلُ، أَوْ طُلِبَتْ إِلَيْهِ حَاجَةٌ قَالَ "" اشْفَعُوا تُؤْجَرُوا، وَيَقْضِي اللَّهُ عَلَى لِسَانِ نَبِيِّهِ صلى الله عليه وسلم مَا شَاءَ "".
பாடம் : 21 தர்மம் செய்யத் தூண்டுவதும் அதற்காகப் பரிந்துரைப்பதும்
1432. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் யாசகர் எவரேனும் வந்தால், அல்லது அவர்களிடம் ஏதேனும் தேவை(யை நிறைவேற்றுமாறு) கோரப் பட்டால், அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), “(இவருக்காக என்னிடம்) பரிந்துரை செய்யுங்கள்; அதனால் உங்க ளுக்கும் நற்பலன் வழங்கப்படும்” என்று கூறுவார்கள்.

பிறகு “அல்லாஹ், தன் தூதரின் நாவால் தான் நாடியதை நிறைவேற்று கிறான்” என்பார்கள்.


அத்தியாயம் : 24
1433. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ فَاطِمَةَ، عَنْ أَسْمَاءَ ـ رضى الله عنها ـ قَالَتْ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ تُوكِي فَيُوكَى عَلَيْكِ "". حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، عَنْ عَبْدَةَ، وَقَالَ، "" لاَ تُحْصِي فَيُحْصِيَ اللَّهُ عَلَيْكِ ""
பாடம் : 21 தர்மம் செய்யத் தூண்டுவதும் அதற்காகப் பரிந்துரைப்பதும்
1433. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “நீ (தர்மம் செய்யாமல்) பையை முடிந்து வைத்துக்கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப் படாமல்) முடிந்து வைத்துக்கொள்ளப்படும்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “(நல்லறங்களுக்காகச் செலவழிப்பதில்) கணக்குப் பார்த்துக்கொண்டிருக்காதே! (அப்படிப் பார்த்தால்) அல்லாஹ்வும் உன் விஷயத்தில் கணக்குப் பார்ப்பான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 24
1434. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، عَنْ حَجَّاجِ بْنِ مُحَمَّدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، أَخْبَرَهُ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ أَنَّهَا جَاءَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" لاَ تُوعِي فَيُوعِيَ اللَّهُ عَلَيْكِ، ارْضَخِي مَا اسْتَطَعْتِ "".
பாடம் : 22 இயன்றளவு தர்மம் செய்தல்
1434. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அல்லாஹ் உன்மீது (தன் அருளைப் பொழியாமல்) முடிந்து வைத்துக்கொள்வான். (எனவே) உன்னால் இயன்றவரை சிறிதளவேனும் தர்மம் செய்!” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 24