990. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ اللَّيْلِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا خَشِيَ أَحَدُكُمُ الصُّبْحَ صَلَّى رَكْعَةً وَاحِدَةً، تُوتِرُ لَهُ مَا قَدْ صَلَّى "".
பாடம் : 1 வித்ர் தொழுகை தொடர்பாக வந்துள்ளவை
990. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இரவுத் தொழுகை பற்றிக் கேட்டார். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்கள் ஆகும். ஆனால், உங்களில் ஒருவர் சுப்ஹு (நேரம் வந்துவிட்டது) பற்றி அஞ்சினால், அவர் ஒரு ரக்அத் தொழட்டும். அது (முன்னர்) அவர் தொழுதவற்றை ஒற்றையாக ஆக்கிவிடும்” என்று பதிலளித்தார்கள்.2

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 14
991. وَعَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، كَانَ يُسَلِّمُ بَيْنَ الرَّكْعَةِ وَالرَّكْعَتَيْنِ فِي الْوِتْرِ، حَتَّى يَأْمُرَ بِبَعْضِ حَاجَتِهِ.
பாடம் : 1 வித்ர் தொழுகை தொடர்பாக வந்துள்ளவை
991. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், வித்ர் தொழும்போது (மூன்று ரக்அத்களில் கடைசி) ஒரு ரக்அத்திற்கும் (முந்தைய) இரு ரக்அத்களுக்கும் இடையே ‘சலாம்’ கொடுப்பார்கள். (அந்த இடைவெளியில்) தம்முடைய சில தேவைகள் பற்றி (தம் ஊழியருக்கு)க் கட்டளையிடுவார்கள்.


அத்தியாயம் : 14
992. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ مَخْرَمَةَ بْنِ سُلَيْمَانَ، عَنْ كُرَيْبٍ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَخْبَرَهُ أَنَّهُ، بَاتَ عِنْدَ مَيْمُونَةَ، وَهْىَ خَالَتُهُ، فَاضْطَجَعْتُ فِي عَرْضِ وِسَادَةٍ، وَاضْطَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَهْلُهُ فِي طُولِهَا، فَنَامَ حَتَّى انْتَصَفَ اللَّيْلُ أَوْ قَرِيبًا مِنْهُ، فَاسْتَيْقَظَ يَمْسَحُ النَّوْمَ عَنْ وَجْهِهِ، ثُمَّ قَرَأَ عَشْرَ آيَاتٍ مِنْ آلِ عِمْرَانَ، ثُمَّ قَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى شَنٍّ مُعَلَّقَةٍ، فَتَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ، ثُمَّ قَامَ يُصَلِّي فَصَنَعْتُ مِثْلَهُ فَقُمْتُ إِلَى جَنْبِهِ، فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رَأْسِي، وَأَخَذَ بِأُذُنِي يَفْتِلُهَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ رَكْعَتَيْنِ، ثُمَّ أَوْتَرَ، ثُمَّ اضْطَجَعَ حَتَّى جَاءَهُ الْمُؤَذِّنُ فَقَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ ثُمَّ، خَرَجَ فَصَلَّى الصُّبْحَ.
பாடம் : 1 வித்ர் தொழுகை தொடர்பாக வந்துள்ளவை
992. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தாயார் மைமூனா

(ரலி) அவர்களது இல்லத்தில் ஓர் இரவில் தங்கியிருந்தேன். நான் ஓர் தலையணை யின் அகலவாட்டில் தலைசாய்த்து உறங்கி னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய துணைவியாரும் அத்தலையணையின் நீளவாட்டில் தலைசாய்த்து உறங்கினர். நடு இரவு நேரம் வரை, அல்லது அதற்கு நெருக்கமான நேரம்வரை உறங்கினார்கள். அவர்கள் விழித்தெழுந்து (அமர்ந்து) தம் முகத்தி-ருந்த தூக்க(க் கலக்க)த்தை (தமது கரத்தால்) துடைக்கலானார்கள்.

பிறகு ‘ஆலு இம்ரான்’ அத்தியாயத்தின் (கடைசிப்) பத்து வசனங்களை (3:190-200) ஓதினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கட்டித் தொங்கவிடப்பட்டி ருந்த ஒரு தண்ணீர்ப் பையருகே சென்று (அதி-ருந்து தண்ணீர் சரித்து) அங்கத் தூய்மை (உளூ) செய்தார்கள். தமது உளூவைச் செம்மையாகச் செய்துகொண்டபின் அவர்கள் (இரவுத் தொழுகை) தொழுவதற்காக நின்றார்கள்.

அவர்கள் செய்ததைப் போன்று நானும் (அங்கத்தூய்மை) செய்துவிட்டு அவர்களுக்கு (இட)ப் பக்கத்தில் போய் நின்றேன். உடனே அவர்கள் தமது வலக் கரத்தை என் தலைமீது வைத்து எனது காதை திருகிப்பிடித்(து என்னைத் தமது வலப் பாகத்தில் நிறுத்திவைத்)தார்கள். அப்போது அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்பு வித்ர் தொழுதார்கள்.

பிறகு தொழுகை அறிவிப்பாளர் (‘பிலால்’ பாங்கு சொல்-விட்டு) தம்மிடம் வரும்வரை ஒருக்களித்துப் படுத்திருந் தார்கள். (அவர் வந்தவுடன்) எழுந்து சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் (சுப்ஹு டைய சுன்னத்) தொழுதார்கள். பிறகு புறப்பட்டுச் சென்று சுப்ஹு தொழுகையை (இமாமாக நின்று) தொழுதார்கள்.


அத்தியாயம் : 14
993. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" صَلاَةُ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، فَإِذَا أَرَدْتَ أَنْ تَنْصَرِفَ فَارْكَعْ رَكْعَةً تُوتِرُ لَكَ مَا صَلَّيْتَ "". قَالَ الْقَاسِمُ وَرَأَيْنَا أُنَاسًا مُنْذُ أَدْرَكْنَا يُوتِرُونَ بِثَلاَثٍ، وَإِنَّ كُلاًّ لَوَاسِعٌ أَرْجُو أَنْ لاَ يَكُونَ بِشَىْءٍ مِنْهُ بَأْسٌ.
பாடம் : 1 வித்ர் தொழுகை தொடர்பாக வந்துள்ளவை
993. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவுத் தொழுகை இரண்டிரண்டு ரக்அத்களே! (இரவுத் தொழுகையை) நீர் முடித்துக்கொள்ள விரும்பினால், ஒரு ரக்அத் தொழுது (முடித்துக்)கொள்வீராக! அது, முன்னர் நீர் தொழுததை உமக்கு ஒற்றையாக ஆக்கிவிடும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நமக்கு விவரம் தெரிந்த நாள் முதல் மக்கள் மூன்று ரக்அத்களை வித்ராகத் தொழுவதையே நாம் காண்கிறோம். (மூன்று ரக்அத், ஒரு ரக்அத் ஆகியவற்றில்) ஒவ்வொன்றுக்குமே அனுமதி உண்டு. இதில் எதைச் செய்தாலும் தவறாகாது என்றே நான் கருதுகிறேன்.


அத்தியாயம் : 14
994. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، كَانَتْ تِلْكَ صَلاَتَهُ ـ تَعْنِي بِاللَّيْلِ ـ فَيَسْجُدُ السَّجْدَةَ مِنْ ذَلِكَ قَدْرَ مَا يَقْرَأُ أَحَدُكُمْ خَمْسِينَ آيَةً قَبْلَ أَنْ يَرْفَعَ رَأْسَهُ، وَيَرْكَعُ رَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْفَجْرِ، ثُمَّ يَضْطَجِعُ عَلَى شِقِّهِ الأَيْمَنِ حَتَّى يَأْتِيَهُ الْمُؤَذِّنُ لِلصَّلاَةِ.
பாடம் : 1 வித்ர் தொழுகை தொடர்பாக வந்துள்ளவை
994. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இரவில்) பதினொன்று ரக்அத்கள் தொழு பவர்களாக இருந்தார்கள். அதுவே அவர் களது தொழுகையாக -அதாவது இரவுத் தொழுகையாக- இருந்தது. அத்தொழு கையில் ஒரு சஜ்தாவை முடித்ததும் தமது தலையை உயர்த்துவதற்குமுன், உங்களில் ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு நேரம் சஜ்தா (சிரவணக்கம்) செய்வார்கள்.

ஃபஜ்ர் தொழுகைக்குமுன் இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுவார்கள். பிறகு தொழுகை அறிவிப்பாளர் (ஃபஜ்ர்) தொழுகைக்கு (அழைக்க) தம்மிடம் வரும்வரையில் வலப் பக்கம் சாய்ந்து படுத்திருப்பார்கள்.

அத்தியாயம் : 14
995. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ سِيرِينَ، قَالَ قُلْتُ لاِبْنِ عُمَرَ أَرَأَيْتَ الرَّكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْغَدَاةِ أُطِيلُ فِيهِمَا الْقِرَاءَةَ فَقَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ مَثْنَى مَثْنَى، وَيُوتِرُ بِرَكْعَةٍ وَيُصَلِّي الرَّكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الْغَدَاةِ وَكَأَنَّ الأَذَانَ بِأُذُنَيْهِ. قَالَ حَمَّادٌ أَىْ سُرْعَةً.
பாடம் : 2 வித்ர் தொழுகையின் நேரம்3 “உறங்குவதற்குமுன் வித்ர் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத் தினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
995. அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன்னுள்ள இரண்டு ரக்அத் (சுன்னத் தொழுகை)களில் நான் நீண்ட அத்தியாயங் களை ஓதலாமா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள், இரவில் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழுவார்கள். ஒரு ரக்அத் தொழுது (முன்னர் தொழுதவற்றை) ஒற்றையாக ஆக்குவார்கள்.

வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன்னால் இகாமத் சொல்லும் சப்தம் தமது காதில் விழுவதைப் போன்று (விரைவாக) இரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழு வார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அதாவது (சுப்ஹுடைய சுன்னத்தில் நீண்ட அத்தியாயங்களை ஓதிக்கொண்டிராமல்) விரைவாக (சுருக்க மாக)த் தொழுவார்கள்.


அத்தியாயம் : 14
996. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي مُسْلِمٌ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُلَّ اللَّيْلِ أَوْتَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَانْتَهَى وِتْرُهُ إِلَى السَّحَرِ.
பாடம் : 2 வித்ர் தொழுகையின் நேரம்3 “உறங்குவதற்குமுன் வித்ர் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் எனக்கு அறிவுறுத் தினார்கள்” என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
996. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரவின் எல்லாப் பகுதியிலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வித்ர் தொழுகை தொழுதிருக்கிறார்கள். (பல சமயம்) அவர்களின் வித்ர் தொழுகை சஹர் நேரத்தில் முடியும்.

அத்தியாயம் : 14
997. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي، وَأَنَا رَاقِدَةٌ مُعْتَرِضَةً عَلَى فِرَاشِهِ، فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ أَيْقَظَنِي فَأَوْتَرْتُ.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்கள் தம் வீட்டாரை வித்ர் தொழுகைக்காக உறக்கத்தி-ருந்து எழுப்பியது
997. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களின் விரிப்பில் குறுக்கே உறங்கிக்கொண்டிருக்க, நபி (ஸல்) அவர்கள் (இரவுத் தொழுகை) தொழுதுகொண்டிருப்பார்கள். அவர்கள் வித்ர் தொழுகை தொழ எண்ணும்போது என்னைத் துயிலெழுப்புவார்கள். உடனே நானும் (எழுந்து) வித்ர் தொழுவேன்.4

அத்தியாயம் : 14
998. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، حَدَّثَنِي نَافِعٌ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" اجْعَلُوا آخِرَ صَلاَتِكُمْ بِاللَّيْلِ وِتْرًا "".
பாடம் : 4 ஒருவர் தமது நாளின் இறுதித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளட்டும்
998. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரவில் உங்களது இறுதித் தொழுகை யாக வித்ரை ஆக்கிக்கொள்ளுங்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 14
999. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُمَرَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ، عَنْ سَعِيدِ بْنِ يَسَارٍ، أَنَّهُ قَالَ كُنْتُ أَسِيرُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بِطَرِيقِ مَكَّةَ فَقَالَ سَعِيدٌ فَلَمَّا خَشِيتُ الصُّبْحَ نَزَلْتُ فَأَوْتَرْتُ، ثُمَّ لَحِقْتُهُ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ أَيْنَ كُنْتَ فَقُلْتُ خَشِيتُ الصُّبْحَ، فَنَزَلْتُ فَأَوْتَرْتُ. فَقَالَ عَبْدُ اللَّهِ أَلَيْسَ لَكَ فِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أُسْوَةٌ حَسَنَةٌ فَقُلْتُ بَلَى وَاللَّهِ. قَالَ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُوتِرُ عَلَى الْبَعِيرِ.
பாடம் : 5 ஊர்திப் பிராணியின் மீது அமர்ந்தவாறு வித்ர் தொழுகை தொழுவது
999. சயீத் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் மக்கா செல்லும் சாலையில் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களு டன் சென்றுகொண்டிருந்தேன். சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) பற்றி அஞ்சிய நான், (எனது ஊர்தியி-ருந்து) இறங்கி வித்ர் தொழுதுவிட்டுப் பிறகு அவர் களுடன் (போய்) சேர்ந்துகொண்டேன்.

அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “(இவ்வளவு நேரம்) எங்கே சென்றிருந்தீர்?” என்று கேட்டார்கள். நான், “சுப்ஹு நேரம் (நெருங்கிவிட்டது) பற்றி அஞ்சினேன். எனவே, (ஊர்தியி-ருந்து) இறங்கி வித்ர் தொழுதேன்” என்று கூறினேன்.

அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உமக்கு அழகிய முன்மாதிரி இல்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக (இருக்கிறது)” என்று சொன்னேன். அப்போது அவர்கள், “அவ்வாறாயின், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீது அமர்ந்தும் வித்ர் தொழுதிருக்கிறார்கள்” என்று கூறி னார்கள்.5

அத்தியாயம் : 14
1000. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي السَّفَرِ عَلَى رَاحِلَتِهِ، حَيْثُ تَوَجَّهَتْ بِهِ، يُومِئُ إِيمَاءً، صَلاَةَ اللَّيْلِ إِلاَّ الْفَرَائِضَ، وَيُوتِرُ عَلَى رَاحِلَتِهِ.
பாடம் : 6 பயணத்தில் வித்ர் தொழுவது
1000. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பயணத்தில் தமது வாகனத்தின் மீது அமர்ந்தவாறு வாகனம் செல்லும் திசையில் சைகை செய்து இரவுத் தொழுகையைத் தொழுவார்கள்; ஆனால், கடமையான தொழுகைகளைத் தவிர! மேலும், தமது வாகனத்தின் மீது அமர்ந்தே வித்ர் தொழுவார்கள்.6

அத்தியாயம் : 14
1001. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، قَالَ سُئِلَ أَنَسٌ أَقَنَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي الصُّبْحِ قَالَ نَعَمْ. فَقِيلَ لَهُ أَوَقَنَتَ قَبْلَ الرُّكُوعِ قَالَ بَعْدَ الرُّكُوعِ يَسِيرًا.
பாடம் : 7 (தொழுகையில்) ருகூஉவுக்கு முன்பும் பின்பும் ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதுவது7
1001. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் ‘குனூத்’ ஓதினார்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். “ருகூஉ வுக்கு முன்பா குனூத் ஓதினார்கள்?” என்று மீண்டும் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “ருகூஉவுக்குப் பின்பு சிறிது காலம் (அதாவது ஒரு மாத காலம் அவர்கள் குனூத் ஓதினார்கள்)” என்று பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 14
1002. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ الْقُنُوتِ،. فَقَالَ قَدْ كَانَ الْقُنُوتُ. قُلْتُ قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَهُ قَالَ قَبْلَهُ. قَالَ فَإِنَّ فُلاَنًا أَخْبَرَنِي عَنْكَ أَنَّكَ قُلْتَ بَعْدَ الرُّكُوعِ. فَقَالَ كَذَبَ، إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَعْدَ الرُّكُوعِ شَهْرًا ـ أُرَاهُ ـ كَانَ بَعَثَ قَوْمًا يُقَالُ لَهُمُ الْقُرَّاءُ زُهَاءَ سَبْعِينَ رَجُلاً إِلَى قَوْمٍ مِنَ الْمُشْرِكِينَ دُونَ أُولَئِكَ، وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَهْدٌ فَقَنَتَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ.
பாடம் : 7 (தொழுகையில்) ருகூஉவுக்கு முன்பும் பின்பும் ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதுவது7
1002. ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களிடம் ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்ததா என்பது) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் “(ஆம்) குனூத் இருந்தது” என்று பதிலளித்தார்கள். நான், “ருகூஉவிற்கு முன்பா? அல்லது பின்பா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ருகூஉ விற்கு முன்புதான்” என்று பதிலளித் தார்கள். உடனே நான், “தாங்கள் ருகூஉவிற்குப் பின்னர்தான் என்று சொன்னதாக இன்னார் என்னிடம் தெரிவித்தாரே?” என்று கேட்டேன்.

அதற்கு, “அவர் தவறாகக் கூறியிருக்கிறார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம்தான் ருகூஉவிற்குப் பிறகு குனூத் ஓதினார்கள். (அது எப்போது நடந்ததென்றால்,) நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் அறிஞர்கள் (குர்ரா) என்று அழைக்கப்பட்டுவந்த சுமார் எழுபது பேரை இணைவைப்பவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பிவைத்திருந்தார்கள். இவர்கள் அந்த இணை வைப்பவர்களைவிட மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர். அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் இடையே (பாதுகாப்பு) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (இவ்வாறிருக்க, அந்த எழுபது பேரையும் அந்த இணைவைப்பாளர்கள் கொன்றுவிட்டனர்.) எனவேதான், அவர்களுக்கெதிராகப் பிரார்த்திக்கும் வகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘குனூத்’ (இடர் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள்” என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.


அத்தியாயம் : 14
1003. أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا زَائِدَةُ، عَنِ التَّيْمِيِّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَنَتَ النَّبِيُّ صلى الله عليه وسلم شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ وَذَكْوَانَ.
பாடம் : 7 (தொழுகையில்) ருகூஉவுக்கு முன்பும் பின்பும் ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதுவது7
1003. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ஒரு மாத காலம் ‘குனூத்’ (எனும் இடர் காலப் பிரார்த்தனை) ஓதினார்கள். (அதில் இணைவைப்பாளர்களான) ரிஅல், தக்வான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.


அத்தியாயம் : 14
1004. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ الْقُنُوتُ فِي الْمَغْرِبِ وَالْفَجْرِ.
பாடம் : 7 (தொழுகையில்) ருகூஉவுக்கு முன்பும் பின்பும் ‘குனூத்’ (எனும் சிறப்பு துஆ) ஓதுவது7
1004. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) குனூத் (இடர் காலப் பிரார்த்தனை) மஃக்ரிப் தொழுகையிலும் ஃபஜ்ர் தொழுகையிலுமே (நடைமுறையில்) இருந்தது.8

அத்தியாயம் : 14

1005. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، قَالَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَسْتَسْقِي وَحَوَّلَ رِدَاءَهُ.
பாடம் : 1 மழை வேண்டுதலும், மழை வேண்டிப் பிரார்த்திப்பதற்காக நபி (ஸல்) அவர்கள் (ஊருக்கு வெளியிலுள்ள தொழும் திட லுக்குப்) புறப்பட்டுச் சென்ற தும்
1005. அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்திப்பதற்காக (தொழும் திடலுக்குப்) புறப்பட்டுச் சென்றார்கள். (பிரார்த்தனை புரிந்துகொண்டிருந்தபோது) தமது மேல்துண்டை (வலப் பக்கத் தோளில் இருந்த பகுதியை இடப் பக்கத் தோளின் மீது) மாற்றிப் போட்டுக்கொண்டார்கள்.

அத்தியாயம் : 15
1006. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ الآخِرَةِ يَقُولُ "" اللَّهُمَّ أَنْجِ عَيَّاشَ بْنَ أَبِي رَبِيعَةَ، اللَّهُمَّ أَنْجِ سَلَمَةَ بْنَ هِشَامٍ، اللَّهُمَّ أَنْجِ الْوَلِيدَ بْنَ الْوَلِيدِ، اللَّهُمَّ أَنْجِ الْمُسْتَضْعَفِينَ مِنَ الْمُؤْمِنِينَ، اللَّهُمَّ اشْدُدْ وَطْأَتَكَ عَلَى مُضَرَ، اللَّهُمَّ اجْعَلْهَا سِنِينَ كَسِنِي يُوسُفَ "". وَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" غِفَارُ غَفَرَ اللَّهُ لَهَا، وَأَسْلَمُ سَالَمَهَا اللَّهُ "". قَالَ ابْنُ أَبِي الزِّنَادِ عَنْ أَبِيهِ هَذَا كُلُّهُ فِي الصُّبْحِ.
பாடம் : 2 “யூசுஃப் நபியின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர் களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது
1006. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) கடைசி ரக்அத்தின் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தியதும், “இறைவா! (மக்காவில் சிக்கிக்கொண்டிருக்கும்) அய்யாஷ் பின் அபீரபீஆவைக் காப்பாற்றுவாயாக! இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்றுவாயாக! இறைவா! வலீத் பின் அல்வலீதைக் காப்பாற்று வாயாக! இறைவா! நம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுவாயாக! இறைவா! ‘முளர்’ குலத்தாரின் மீது உன் பிடியை கடுமையாக்குவாயாக! இறைவா! (இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர் களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த (ஏழு) ஆண்டுகளைப் போன்று இவர்களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக!” என்று கூறிவந்தார்கள்.

மேலும் ‘ஃகிஃபார்’ குலத்தாருக்கு இறைவன் மன்னிப்பு அளிப்பானாக! ‘அஸ்லம்’ குலத்தாருக்கு அல்லாஹ் சமாதானத்தை அளிப்பானாக!” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்தப் பிரார்த்தனை முழுவதும் சுப்ஹு தொழுகையிலேயே நடந்தது.2


அத்தியாயம் : 15
1007. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، قَالَ كُنَّا عِنْدَ عَبْدِ اللَّهِ فَقَالَ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم لَمَّا رَأَى مِنَ النَّاسِ إِدْبَارًا قَالَ "" اللَّهُمَّ سَبْعٌ كَسَبْعِ يُوسُفَ "". فَأَخَذَتْهُمْ سَنَةٌ حَصَّتْ كُلَّ شَىْءٍ حَتَّى أَكَلُوا الْجُلُودَ وَالْمَيْتَةَ وَالْجِيَفَ، وَيَنْظُرَ أَحَدُهُمْ إِلَى السَّمَاءِ فَيَرَى الدُّخَانَ مِنَ الْجُوعِ، فَأَتَاهُ أَبُو سُفْيَانَ فَقَالَ يَا مُحَمَّدُ إِنَّكَ تَأْمُرُ بِطَاعَةِ اللَّهِ وَبِصِلَةِ الرَّحِمِ وَإِنَّ قَوْمَكَ قَدْ هَلَكُوا، فَادْعُ اللَّهَ لَهُمْ قَالَ اللَّهُ تَعَالَى {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ} إِلَى قَوْلِهِ {عَائِدُونَ * يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَى} فَالْبَطْشَةُ يَوْمَ بَدْرٍ، وَقَدْ مَضَتِ الدُّخَانُ وَالْبَطْشَةُ وَاللِّزَامُ وَآيَةُ الرُّومِ.
பாடம் : 2 “யூசுஃப் நபியின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர் களுக்கும் பஞ்சம் நிறைந்த ஆண்டுகளை அளிப்பாயாக” என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தது
1007. மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

(ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் கூறினார்கள்:

மக்கள் (இஸ்லாத்தைப்) புறக்கணிப் பதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது, “இறைவா! யூசுஃப் (அலை) அவர்களது (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டு களைப் போன்று இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளை அளித்(து இவர் களைத் திருத்)திடுவாயாக!” என்று பிரார்த் தித்தார்கள்.

அவ்வாறே அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு (வளங்கள்) எல்லாவற்றையும் அழித்துவிட்டது. அவர்கள் பசியால் தோல்களையும் செத்தவற்றையும் பிணங் களையும் புசிக்க நேர்ந்தது. பசி பட்டினி யால் (கண் பஞ்சடைந்து பார்வை மங்கி) அவர்களில் ஒருவர் வானத்தை நோக்கி னால் (தமக்கும் வானத்திற்குமிடையே) அவர் புகை (போன்ற ஒன்றை)யே காண்பார்.

இந்நிலையில் (குறைஷியரின் தலைவர்) அபூசுஃப்யான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “முஹம்மதே! இறைவனுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்றும் உறவுகளைப் பேண வேண்டும் என்றும் நீர் கட்டளையிடுகிறீர். உம்முடைய சமுதாயத்தார் அழிந்து விட்டனர். (பஞ்சம் விலக) அவர்களுக்காகப் பிரார்த்திப்பீராக!” என்று கூறினார்.

பிறகு “(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானி-ருந்து வரும் நாளை எதிர்பார்ப்பீராக!” என்று தொடங்கி, “நீங்கள் (இறைமறுப்புக்கே) திரும்பிச் செல்கிறீர்கள்; கடுமையான முறையில் நாம் பிடிக்கும் அந்நாளில்” என்று முடியும் (44:10-16) வசனங்களை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.

இந்த வசனத்திலுள்ள ‘பலமான பிடி’ (பத்ஷத்) என்பது பத்ர் போரைக் குறிக்கும்.

புகையும் இறைவனின் தண்டனைப் பிடியும் அவனுடைய வேதனையும் ‘அர்ரூம்’ அத்தியாயத்திலுள்ள (பாரசீகர் களால் கிழக்கு ரோமர்கள் தோற்கடிக்கப் படுவது பற்றிய) முன்னறிவிப்பும் நடந்து முடிந்துவிட்டன.3

அத்தியாயம் : 15
1008. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ حَدَّثَنَا أَبُو قُتَيْبَةَ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِيهِ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ، يَتَمَثَّلُ بِشِعْرِ أَبِي طَالِبٍ وَأَبْيَضَ يُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ ثِمَالُ الْيَتَامَى عِصْمَةٌ لِلأَرَامِلِ
பாடம் : 3 பஞ்சம் ஏற்படும்போது மழை வேண்டிப் பிரார்த்திக்கும்படி மக்கள் இமாமிடம் கோருவது
1008. அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர்) அபூதா-ப் பாடிய (பின்வரும்) கவிதையை இப்னு உமர் (ரலி) அவர்கள் எடுத்தாள்வதை நான் கேட்டிருக்கிறேன்:

வெண்ணிறம் கொண்டவர்;

இவர் முகமதனை முன்வைத்தே

முகில்மழை வேண்டப்படும்.

அநாதைகளின் புக-டம்;

விதவைகளின் காவலர்.4


அத்தியாயம் : 15
1009. وَقَالَ عُمَرُ بْنُ حَمْزَةَ حَدَّثَنَا سَالِمٌ، عَنْ أَبِيهِ، رُبَّمَا ذَكَرْتُ قَوْلَ الشَّاعِرِ وَأَنَا أَنْظُرُ، إِلَى وَجْهِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَسْتَسْقِي، فَمَا يَنْزِلُ حَتَّى يَجِيشَ كُلُّ مِيزَابٍ. وَأَبْيَضَ يُسْتَسْقَى الْغَمَامُ بِوَجْهِهِ ثِمَالَ الْيَتَامَى عِصْمَةً لِلأَرَامِلِ وَهْوَ قَوْلُ أَبِي طَالِبٍ.
பாடம் : 3 பஞ்சம் ஏற்படும்போது மழை வேண்டிப் பிரார்த்திக்கும்படி மக்கள் இமாமிடம் கோருவது
1009. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மழைவேண்டிப் பிரார்த்தித்தபோது, அவர்களின் முகத்தை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் (சொற்பொழிவு மேடையி-ருந்து) இறங்கவில்லை. எல்லா நீர்வழிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது நான்,

“வெண்ணிறம் கொண்டவர்;

இவர் முகமதனை முன்வைத்தே

முகில்மழை வேண்டப்படும்.

அநாதைகளின் புக-டம்;

விதவைகளின் காவலர்”

எனும் கவிதையை நினைத்துக் கொள்வேன். அது அபூதா-ப் அவர்களது கவிதையாகும்.


அத்தியாயம் : 15