780. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُمَا أَخْبَرَاهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا أَمَّنَ الإِمَامُ فَأَمِّنُوا فَإِنَّهُ مَنْ وَافَقَ تَأْمِينُهُ تَأْمِينَ الْمَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "". وَقَالَ ابْنُ شِهَابٍ وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" آمِينَ "".
பாடம் : 111 (சப்தமிட்டு ஓதப்படும் தொழு கையில் அல்ஃபாத்திஹா அத்தி யாயம் ஓதியபின்) உரத்த குர -ல் இமாம் ‘ஆமீன்’ கூறுவது ‘ஆமீன்’ என்பது பிரார்த்தனையாகும் என அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.56 அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் அவர்களைப் பின் பற்றித் தொழுவோரும் பள்ளிவாசலே அதிரும் அளவுக்கு (உரத்த குர-ல்) ‘ஆமீன்’ கூறினர். அபூஹுரைரா (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவிப்பவரை அழைத்து, “ஆமீன் கூறும் வாய்ப்பு எனக்குத் தவறும்படி செய்துவிடாதீர்” என்று கூறுவார்கள்.57 நாபிஃஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு உமர் (ரலி) அவர்கள் ‘ஆமீன்’ கூறாமல் இருக்கமாட்டார்கள்; (ஆமீன் கூறும்படி) மக்களுக்கு ஆர்வமூட்டுவார்கள். ‘ஆமீன்’ கூறுவதில் நிறைய நன்மை இருப்பதாக அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்.
780. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுவிப்பவர் (இமாம்), ‘ஆமீன்’ கூறும்போது நீங்களும் ‘ஆமீன்’ (அவ்வாறே ஆகட்டும்) என்று கூறுங்கள். ஏனெனில், யார் ஆமீன் கூறு(ம் நேரமா) வது வானவர்கள் ஆமீன் கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவர் அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆமீன் கூறுபவர்களாக இருந்தார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம் : 10
781. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا قَالَ أَحَدُكُمْ آمِينَ. وَقَالَتِ الْمَلاَئِكَةُ فِي السَّمَاءِ آمِينَ. فَوَافَقَتْ إِحْدَاهُمَا الأُخْرَى، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "".
பாடம் : 112 ஆமீன் கூறுவதன் சிறப்பு
781. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ‘ஆமீன்’ என்று கூற, விண்ணுலகில் வானவர்களும் ‘ஆமீன்’ கூற, இரு சாராரின் ஆமீன் கூறலும் ஒரே நேரத்தில் அமைந்துவிட்டால், அவர் அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப் பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 10
782. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ سُمَىٍّ، مَوْلَى أَبِي بَكْرٍ عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا قَالَ الإِمَامُ {غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلاَ الضَّالِّينَ} فَقُولُوا آمِينَ. فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "". تَابَعَهُ مُحَمَّدُ بْنُ عَمْرٍو عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَنُعَيْمٌ الْمُجْمِرُ عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه.
பாடம் : 113 பின்பற்றித் தொழுபவர் (மஃமூம்) சப்தமிட்டு ஆமீன் கூறுவது
782. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையில்) இமாம், “ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்” என்று ஓதியவுடன் நீங்கள், “ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்)” என்று சொல்லுங்கள். ஏனெனில், யார் ‘ஆமீன்’ கூறு(ம் நேரமா) வது வானவர்கள் ‘ஆமீன்’ கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்து விடுகின்றதோ அவர் அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 10
783. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، عَنِ الأَعْلَمِ ـ وَهْوَ زِيَادٌ ـ عَنِ الْحَسَنِ، عَنْ أَبِي بَكْرَةَ، أَنَّهُ انْتَهَى إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ رَاكِعٌ، فَرَكَعَ قَبْلَ أَنْ يَصِلَ إِلَى الصَّفِّ، فَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" زَادَكَ اللَّهُ حِرْصًا وَلاَ تَعُدْ "".
பாடம் : 114 தொழுகை வரிசையில் சேர்வ தற்கு முன்பே ருகூஉ செய்து விட்டால்... (தொழுகை நிறை வேறுமா?)
783. அபூபக்ரா (நுஃபைஉ பின் அல்ஹாரிஸ்-ர-) அவர்கள் கூறியதாவது:

(தொழுகையில்) நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்துகொண்டிருந்தபோது, நான் சென்று வரிசையில் சேர்வதற்கு முன்பே ருகூஉ செய்துவிட்டேன். (பின்னர்) இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உனது ஆர்வத்தை அதிகப்படுத்து வானாக! இனிமேல் அப்படிச் செய்யாதீர்” என்று கூறினார்கள்.58

அத்தியாயம் : 10
784. حَدَّثَنَا إِسْحَاقُ الْوَاسِطِيُّ، قَالَ حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الْجُرَيْرِيِّ، عَنْ أَبِي الْعَلاَءِ، عَنْ مُطَرِّفٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ صَلَّى مَعَ عَلِيٍّ ـ رضى الله عنه ـ بِالْبَصْرَةِ فَقَالَ ذَكَّرَنَا هَذَا الرَّجُلُ صَلاَةً كُنَّا نُصَلِّيهَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَذَكَرَ أَنَّهُ كَانَ يُكَبِّرُ كُلَّمَا رَفَعَ وَكُلَّمَا وَضَعَ.
பாடம் : 115 ருகூஉவின்போது தக்பீரை முழுமையாகக் கூறுவது59 இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸும் இ(ந்தப் பாடத்)தில் அடங்கும்.
784. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பஸ்ரா நகரில் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களைப் பின்பற்றித் தொழுதார்கள். (தொழுது முடித்தபின் அலீ (ரலி) அவர் களைச் சுட்டிக்காட்டி) “இந்த மனிதர் நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் தொழுத தொழுகையை நினைவூட்டு(ம் வகையில் தொழுவிக்)கிறார்” என்று இம்ரான் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்கள் நிமிரும்போதும் தாழும்போதும் தக்பீர் கூறுவார்கள்” என்றும் குறிப்பிட்டார்கள்.


அத்தியாயம் : 10
785. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ كَانَ يُصَلِّي بِهِمْ، فَيُكَبِّرُ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ، فَإِذَا انْصَرَفَ قَالَ إِنِّي لأَشْبَهُكُمْ صَلاَةً بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 115 ருகூஉவின்போது தக்பீரை முழுமையாகக் கூறுவது59 இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஸும் இ(ந்தப் பாடத்)தில் அடங்கும்.
785. அபூசலமா (பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துவந்தார்கள். அவர்கள் (ஒவ்வொரு முறை) குனியும்போதும் நிமிரும்போதும் தக்பீர் கூறுவார்கள். தொழுகையை முடித்தபின், “நிச்சயமாக நான் உங்களிலேயே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகாட்டியதைப் போன்றே (மிகச் சரியாக) தொழுவிப்பவன் ஆவேன்” என்று குறிப்பிடுவார்கள்.

அத்தியாயம் : 10
786. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ غَيْلاَنَ بْنِ جَرِيرٍ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ صَلَّيْتُ خَلْفَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ أَنَا وَعِمْرَانُ بْنُ حُصَيْنٍ،، فَكَانَ إِذَا سَجَدَ كَبَّرَ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ كَبَّرَ، وَإِذَا نَهَضَ مِنَ الرَّكْعَتَيْنِ كَبَّرَ، فَلَمَّا قَضَى الصَّلاَةَ أَخَذَ بِيَدِي عِمْرَانُ بْنُ حُصَيْنٍ فَقَالَ قَدْ ذَكَّرَنِي هَذَا صَلاَةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم. أَوْ قَالَ لَقَدْ صَلَّى بِنَا صَلاَةَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم.
பாடம் : 116 சஜ்தாவின்போது தக்பீரை முழுமையாகக் கூறுவது
786. முதர்ரிஃப் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் இம்ரான் பின் ஹுஸைன்

(ரலி) அவர்களும் அலீ பின் அபீதா-ப் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். அலீ (ரலி) அவர்கள் சஜ்தா செய்யும்போது தக்பீர் கூறினார்கள்; (சஜ்தாவி-ருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறினார்கள். இரண்டாவது ரக்அத்தி-ருந்து எழும்போதும் தக்பீர் கூறினார்கள்.

தொழுகை முடிந்ததும் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக்கொண்டு, ‘இவர் எனக்கு முஹம்மத் (ஸல்) அவர்களின் தொழு கையை நினைவூட்டிவிட்டார்’ அல்லது ‘முஹம்மத் (ஸல்) அவர்கள் தொழுத முறைப்படி நமக்குத் தொழுவித்தார்’ என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 10
787. حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ عِكْرِمَةَ، قَالَ رَأَيْتُ رَجُلاً عِنْدَ الْمَقَامِ يُكَبِّرُ فِي كُلِّ خَفْضٍ وَرَفْعٍ وَإِذَا قَامَ وَإِذَا وَضَعَ، فَأَخْبَرْتُ ابْنَ عَبَّاسٍ ـ رضى الله عنه ـ قَالَ أَوَلَيْسَ تِلْكَ صَلاَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ أُمَّ لَكَ.
பாடம் : 116 சஜ்தாவின்போது தக்பீரை முழுமையாகக் கூறுவது
787. (இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான) இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(இறையில்லம் கஅபாவை ஒட்டியுள்ள) ‘மகாமு இப்ராஹீம்’ அருகில் (தொழுது கொண்டிருந்த) ஒரு மனிதரை நான் கண்டேன். அவர் ஒவ்வொரு முறை குனியும் போதும் நிமிரும்போதும் எழும்போதும் தாழும் போதும் தக்பீர் கூறினார்.

(விளக்கம் கேட்கும் விதமாக இது குறித்து) நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள், “தாயற்றுப்போவாய்! அது நபி (ஸல்) அவர்கள் தொழுத தொழுகை (போன்று) இல்லையா?” என்று கேட்டார்கள்.60

அத்தியாயம் : 10
788. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عِكْرِمَةَ، قَالَ صَلَّيْتُ خَلْفَ شَيْخٍ بِمَكَّةَ فَكَبَّرَ ثِنْتَيْنِ وَعِشْرِينَ تَكْبِيرَةً، فَقُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّهُ أَحْمَقُ. فَقَالَ ثَكِلَتْكَ أُمُّكَ، سُنَّةُ أَبِي الْقَاسِمِ صلى الله عليه وسلم. وَقَالَ مُوسَى حَدَّثَنَا أَبَانُ حَدَّثَنَا قَتَادَةُ حَدَّثَنَا عِكْرِمَةُ.
பாடம் : 117 சஜ்தாவி-ருந்து எழும்போது தக்பீர் கூறுவது
788. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் மக்காவில் ஒரு பெரியவருக்குப் பின்னால் (லுஹ்ர் தொழுகை) தொழுதேன். (அத்தொழுகையில்) அவர், இருபத்து இரண்டு தக்பீர்கள் கூறினார். இது குறித்து நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கூறுகையில், “அவர் ஓர் அறிவி-” என்றேன்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “உன் தாய் உன்னை இழக்கட் டும்; (அது) அபுல்காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்களின் வழிமுறைதான்” என்று கூறினார்கள்.61

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 10
789. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَامَ إِلَى الصَّلاَةِ يُكَبِّرُ حِينَ يَقُومُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْكَعُ، ثُمَّ يَقُولُ سَمِعَ اللَّهُ لَمِنْ حَمِدَهُ. حِينَ يَرْفَعُ صُلْبَهُ مِنَ الرَّكْعَةِ، ثُمَّ يَقُولُ وَهُوَ قَائِمٌ رَبَّنَا لَكَ الْحَمْدُ ـ قَالَ عَبْدُ اللَّهِ {بْنُ صَالِحٍ عَنِ اللَّيْثِ} وَلَكَ الْحَمْدُ ـ ثُمَّ يُكَبِّرُ حِينَ يَهْوِي، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَسْجُدُ، ثُمَّ يُكَبِّرُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ، ثُمَّ يَفْعَلُ ذَلِكَ فِي الصَّلاَةِ كُلِّهَا حَتَّى يَقْضِيَهَا، وَيُكَبِّرُ حِينَ يَقُومُ مِنَ الثِّنْتَيْنِ بَعْدَ الْجُلُوسِ.
பாடம் : 117 சஜ்தாவி-ருந்து எழும்போது தக்பீர் கூறுவது
789. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றால், நின்ற நிலையில் தக்பீர் கூறுவார்கள். பின்னர் ருகூஉ செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு ருகூஉவி-ருந்து தமது முதுகை உயர்த் தும்போது சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ் (தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கி றான்) என்று கூறுவார்கள். பிறகு நின்ற நிலையில் ‘ரப்பனா ல(க்)கல் ஹம்த்’ (எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியன) என்பார்கள்.

-(இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெற்றுள்ள) லைஸ் பின் சஅத் (ரஹ்) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘ரப்பனா வல(க்)கல் ஹம்த்’ என்று இடம்பெற்றுள்ளது.-

பின்னர் (சஜ்தாவுக்காகக்) தாழும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (சஜ்தாவி-ருந்து) தலையை உயர்த்தும்போதும் தக்பீர் கூறுவார்கள். பிறகு (இரண்டாவது) சஜ்தா செய்யும்போது தக்பீர் கூறுவார்கள். பிறகு (அந்த சஜ்தாவி-ருந்து) தலையை உயர்த்தும்போது தக்பீர் கூறுவார்கள்.

பிறகு தொழுகையை முடிக்கும்வரை தொழுகையின் எல்லா ரக்அத்களிலும் இவ்வாறே செய்வார்கள். இரண்டாவது ரக்அத்தில் (அத்தஹிய்யாத் முதல்) அமர்வை முடித்து எழும்போதும் தக்பீர் கூறுவார்கள்.

அத்தியாயம் : 10
790. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي يَعْفُورٍ، قَالَ سَمِعْتُ مُصْعَبَ بْنَ سَعْدٍ، يَقُولُ صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي فَطَبَّقْتُ بَيْنَ كَفَّىَّ ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذَىَّ، فَنَهَانِي أَبِي وَقَالَ كُنَّا نَفْعَلُهُ فَنُهِينَا عَنْهُ، وَأُمِرْنَا أَنْ نَضَعَ أَيْدِيَنَا عَلَى الرُّكَبِ.
பாடம் : 118 ருகூஉவின்போது உள்ளங்கைகளை முழங்கால்கள்மீது வைப்பது அபூஹுமைத் (அப்துர் ரஹ்மான் அஸ்ஸாஇதீ-ர-) அவர்கள் தம் தோழர் களிடையே (பேசும்போது), “நபி (ஸல்) அவர்கள் (ருகூஉவில்) தம்மிரு (உள்ளங்) கைகளை முழங்கால்கள்மீது ஊன்றிக்கொள்வார்கள்” எனக் குறிப்பிட்டார்கள்.
790. முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ்-ரலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூஉவில்) என் இரு கைகளையும் கோத்து என் இரு தொடைகளின் நடுவில் வைத்துக் கொண்டேன்.

அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, “நாங்கள் இவ்வாறு (முதலில்) செய்துகொண்டிருந் தோம். பின்னர் அவ்வாறு செய்யக் கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள்மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 10
791. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، قَالَ رَأَى حُذَيْفَةُ رَجُلاً لاَ يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ قَالَ مَا صَلَّيْتَ، وَلَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ الْفِطْرَةِ الَّتِي فَطَرَ اللَّهُ مُحَمَّدًا صلى الله عليه وسلم.
பாடம் : 119 ருகூஉவை நிறைவாகச் செய்யா விட்டால் (ஏற்படும் குற்றம்)
791. ஸைத் பின் வஹ்ப் அல்ஜுஹனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(தொழுகையில்) தமது ருகூஉவையும் சஜ்தாவையும் முழுமையாக நிறைவேற்றாத ஒரு மனிதரை ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கண்டார்கள்.

அப்போது அவர்கள் (அந்த மனிதரிடம்), “நீர் தொழவே இல்லை. (இதே நிலையில்) நீர் இறந்துவிட்டால், முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ் எந்த நெறியில் அமைத்தானோ அந்த நெறிக்கு மாற்றமான ஒன்றிலேயே இறக்கிறீர்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 10
792. حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي الْحَكَمُ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنِ الْبَرَاءِ، قَالَ كَانَ رُكُوعُ النَّبِيِّ صلى الله عليه وسلم وَسُجُودُهُ وَبَيْنَ السَّجْدَتَيْنِ وَإِذَا رَفَعَ مِنَ الرُّكُوعِ، مَا خَلاَ الْقِيَامَ وَالْقُعُودَ، قَرِيبًا مِنَ السَّوَاءِ.
பாடம் : 120 ருகூஉவில் முதுகைச் சமமாக வைப்பது அபூஹுமைத் (அப்துர் ரஹ்மான் அஸ்ஸாஇதீ-ர-) அவர்கள் தம் தோழர்களிடையே (பேசுகையில்), “நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்தார்கள். பின்னர் தமது முதுகை (சமமாக்குவதற்காகச்) சாய்த்தார்கள்” என்று கூறியுள்ளார்கள்.62 பாடம் : 121 ருகூஉவை நிறைவாக்குதல், அதில் நிலை கொள்ளல், (அசை வற்று) நிதானித்தல் ஆகியவற் றுக்கான வரம்பு
792. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தொழுகையில் நபி (ஸல்) அவர்களது) நிற்றல், (அத்தஹிய்யாத்) அமர்வு ஆகி யவை நீங்கலாக அவர்களின் ருகூஉ, அவர்களது சஜ்தா, இரு சஜ்தாக்களுக் கிடையிலான இடைவெளி, ருகூஉவி-ருந்து அவர்கள் நிமிர்தல் ஆகிய அனைத்தும் ஏறத்தாழ சம அளவில் அமைந்திருந்தன.

அத்தியாயம் : 10
793. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ أَخْبَرَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سَعِيدٌ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَرَدَّ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْهِ السَّلاَمَ فَقَالَ "" ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ "" فَصَلَّى، ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ "". ثَلاَثًا. فَقَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ فَمَا أُحْسِنُ غَيْرَهُ فَعَلِّمْنِي. قَالَ "" إِذَا قُمْتَ إِلَى الصَّلاَةِ فَكَبِّرْ، ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنَ الْقُرْآنِ، ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْتَدِلَ قَائِمًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا، ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا، ثُمَّ افْعَلْ ذَلِكَ فِي صَلاَتِكَ كُلِّهَا "".
பாடம் 122 ருகூஉவை நிறைவாகச் செய் யாத ஒருவரை திரும்பத் தொழுமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்தது
793. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது மற்றொரு மனிதரும் வந்து, (ருகூஉ, சஜ்தா ஆகியவற்றை முழுமையாக்காமல்) தொழுதார். பிறகு அவர் வந்து நபி (ஸல்) அவர்களுக்கு முகமன் (சலாம்) சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அவருக்குப் பதில் (சலாம்) சொல்-விட்டு, “திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள்.

அந்த மனிதர் (திரும்பிச் சென்று முன்பு போலவே அவசர அவசரமாகத்) தொழுது விட்டு வந்து (மீண்டும்) நபி (ஸல்) அவர்களுக்கு ‘சலாம்’ சொன்னார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “திரும்பிச் சென்று தொழுவீராக! ஏனெனில், நீர் (முறையாகத்) தொழவில்லை” என்று கூறினார்கள்.

இவ்வாறு மூன்று தடவை நடந்தது. பிறகு அந்த மனிதர், “சத்திய (மார்க்க)த் துடன் உங்களை அனுப்பியவன் மீதாணை யாக! இதைவிட அழகாக எனக்கு (தொழ)த் தெரியாது. எனவே, நீங்களே எனக்குக் கற்றுத்தாருங்கள்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்:

நீர் தொழுகைக்காக நின்றதும் (அல்லாஹு அக்பர் என) தக்பீர் கூறு வீராக! பின்னர் குர்ஆனில் உமக்குத் தெரிந்தவற்றை ஓதுவீராக! பின்னர் ருகூஉ வில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு (ஆற அமர நிதானத்துடன்) ருகூஉ செய்வீராக! பிறகு (நின்றதும் குனிந்துவிடாமல்) நிமிர்ந்து நேராக நிற்கும் அளவுக்கு உயர்வீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் சிரவணக்கம் செய்வீராக!

பின்னர் (தலையை) உயர்த்தி, (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு அமர்வில் உட்காருவீராக! பின்னர் சஜ்தாவில் (நன்கு) நிலை கொள்ளும் அளவுக்கு நீர் (மீண்டும்) சிரவணக்கம் செய்வீராக! பிறகு இதையே (இதே வழிமுறையையே) உமது தொழுகை முழுவதிலும் கடைப்பிடிப்பீராக!

அத்தியாயம் : 10
794. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ "" سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ، اللَّهُمَّ اغْفِرْ لِي "".
பாடம் : 123 ருகூஉவில் பிரார்த்திப்பது
794. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது (தொழுகை யின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் “சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க, அல்லாஹும்மஃக்ஃபிர்லீ” (இறைவா! எம் அதிபதியே! நீ தூயவன்; உன்னைப் போற்றிப் புகழ்கின்றோம்; இறைவா! என்னை மன்னிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.63

அத்தியாயம் : 10
795. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا قَالَ "" سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ "". قَالَ "" اللَّهُمَّ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ "". وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا رَكَعَ وَإِذَا رَفَعَ رَأْسَهُ يُكَبِّرُ، وَإِذَا قَامَ مِنَ السَّجْدَتَيْنِ قَالَ "" اللَّهُ أَكْبَرُ "".
பாடம் : 124 ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தியதும் இமாமும் அவ ரைப் பின்பற்றித் தொழு வோரும் கூற வேண்டியவை
795. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தொழுகையில்) ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ எனக் கூறியபின் ‘அல்லாஹும்ம ரப்பனா வ ல(க்)கல் ஹம்த்’ என்று கூறுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ருகூஉ செய்யும்போதும் (ருகூஉவி-ருந்து) தமது தலையை உயர்த்தும்போதும் (அல்லாஹு அக்பர் என) ‘தக்பீர்’ கூறுவார்கள். இரண்டு சஜ்தாக்களை முடித்து (மேலே) எழும் போதும் அல்லாஹு அக்பர் என்று (தக்பீர்) கூறுவார்கள்.

அத்தியாயம் : 10
796. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا قَالَ الإِمَامُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. فَقُولُوا اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ. فَإِنَّهُ مَنْ وَافَقَ قَوْلُهُ قَوْلَ الْمَلاَئِكَةِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ "".
பாடம் : 125 ‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்த்’ என்று கூறுவதன் சிறப்பு
796. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இமாம் (தொழுகையில்) ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினால், நீங்கள் ‘அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்த்’ (இறைவா! எம் அதிபதியே! உனக்கே புகழ் அனைத்தும் உரியன) என்று கூறுங்கள்.

ஏனெனில் (இறைவனைத் துதிக்கும்) வானவர்களின் (துதிச்) சொல்லுடன் எவரது (துதிச்)சொல் (ஒரே நேரத்தில்) ஒத்து அமைகின்றதோ அவர், அதற்குமுன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 10
797. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ لأُقَرِّبَنَّ صَلاَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم. فَكَانَ أَبُو هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقْنُتُ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِنْ صَلاَةِ الظُّهْرِ وَصَلاَةِ الْعِشَاءِ، وَصَلاَةِ الصُّبْحِ، بَعْدَ مَا يَقُولُ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ. فَيَدْعُو لِلْمُؤْمِنِينَ وَيَلْعَنُ الْكُفَّارَ.
பாடம் : 126
797. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்கள், “கிட்டத்தட்ட நபி (ஸல்) அவர்கள் தொழு வித்ததைப் போன்றே உங்களுக்கு நான் தொழுவிக்கிறேன்” என்று கூறினார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் லுஹ்ர், இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளின் இறுதி ரக்அத்தில் (ருகூஉவி-ருந்து எழுந்து) ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்கிறான்) என்று கூறியபிறகு, ‘குனூத்’ (சோதனை காலப் பிரார்த்தனை) ஓதுவார்கள்.

அதில் இறைநம்பிக்கையாளர்களுக்கு ஆதரவாகவும் (கொடுஞ்செயல் புரிந்த குறைஷி) இறைமறுப்பாளர்களைச் சபித்தும் பிரார்த்திப்பார்கள்.


அத்தியாயம் : 10
798. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ خَالِدٍ الْحَذَّاءِ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ الْقُنُوتُ فِي الْمَغْرِبِ وَالْفَجْرِ.
பாடம் : 126
798. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஆரம்பக் காலத்தில்) குனூத் (எனும் சிறப்புப் பிரார்த்தனை) மஃக்ரிப் தொழுகை யிலும் ஃபஜ்ர் தொழுகையிலும் (நடைமுறையில்) இருந்தது.


அத்தியாயம் : 10
799. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلاَّدٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ "" سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ "". قَالَ رَجُلٌ وَرَاءَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ قَالَ "" مَنِ الْمُتَكَلِّمُ "". قَالَ أَنَا. قَالَ "" رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا، أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ "".
பாடம் : 126
799. ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்) தொழுதுகொண்டிருந்தோம். அவர்கள் ருகூஉவி-ருந்து தலையை உயர்த்தியபோது, ‘சமிஅல்லாஹு -மன் ஹமிதஹ்’ (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினார்கள்.

அவர்களுக்குப் பின்னா-ருந்த ஒரு மனிதர் “ரப்பனா வ ல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ” (எங்கள் இறைவா! புகழ் அனைத் தும் உனக்கே உரியன. தூய்மையும் சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்) என்று கூறினார்.

தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், “(தொழுகையில் இந்த வார்த்தை களைச்) சொன்னவர் யார்?” என்று கேட்டார்கள். அந்த மனிதர், “நான்தான்” என்றார். “முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள், இதைத் தம்மில் முத-ல் பதிவு செய்வது யார் என(த் தமக்கிடையே) போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 10