7559. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذَهَبَ يَخْلُقُ كَخَلْقِي، فَلْيَخْلُقُوا ذَرَّةً، أَوْ لِيَخْلُقُوا حَبَّةً أَوْ شَعِيرَةً "".
பாடம்: 56 “அல்லாஹ்தான் உங்களையும் நீங்கள் செய்கின்றவற்றையும் படைத்தான்” எனும் (37:96 ஆவது) இறைவசனம் அல்லாஹ் கூறுகின்றான்: ஒவ்வொரு பொருளையும் நாம் ஓர் அளவின்படி (விதியின்படி)யே படைத்துள்ளோம். (54:49) (உயிரினங்களின் உருவங்களை) படைப்போரிடம் (மறுமையில்) “நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள்” என்று கூறப்படும். “நிச்சயமாக, உங்கள் இறைவனாகிய அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் ஆறே நாட்களில் படைத்தான். பிறகு அரியணைமீது அவன் நிலைகொண்டான். அவனே இரவால் பகலை மூடுகின்றான். அது பகலைப் பின்தொடர்ந்து விரை கின்றது. சூரியன், சந்திரன், விண்மீன்கள் ஆகியவற்றைத் தனது கட்டளைக்குக் கட்டுப்படக்கூடியவையாக அமைத்தான். அவனுக்கே படைத்தலும் பணித்தலும் உரியது. அகிலத்தாரின் அதிபதியான அல்லாஹ் வளமிக்கவன் ஆவான். (7:54) இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “அறிக, படைக்கும் ஆற்றலும் கட்டளையிடும் அதிகாரமும் அவனுக் குரியன” எனும் தனது சொல்லின் மூலம் படைத்தலும் அதற்காகக் கட்டளை யிடுவதும் (இரண்டும் தனித்தனிச் செயல்தான் என்பதை) வித்தியாசப்படுத்தி அல்லாஹ் தெளிவுபடுத்திவிட்டான். நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கை (ஈமான்) கொள்வதையும் ஒரு செயல் என்றே குறிப்பிட்டுள்ளார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்களும் அபூதர் (ரலி) அவர்களும் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் “செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வை நம்புவதும் அவனது பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் செய்துகொண்டிருந்த நன்மைக்குப் பிரதி பலனாக சொர்க்கத்தில் என்றென்றும் தங்குவார்கள். (46:14) நபி (ஸல்) அவர்களிடம் அப்துல் கைஸ் குலத்தார், “எந்தக் கட்டளைகளின் படி செயலாற்றினால் நாங்கள் சொர்க்கம் புக முடியுமோ அத்தகைய கட்டளைகள் சிலவற்றை எங்களுக்கு அளியுங்கள்” என்று கேட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் இறைநம்பிக்கை கொள்ளும்படியும் அதற்குச் சான்று பகரும்படியும் தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் வழங்கும்படியும் அவர்களுக்குக் கட்டளை யிட்டார்கள். இவையனைத்தையுமே ‘செயல்கள்’ என்றே கருதினார்கள்.
7559. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் கூறுகின்றான்:

என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிடப் பெரிய அக்கிர மக்காரன் யார் இருக்க முடியும்? இவர்கள் ஓர் அணுவைப் படைத்துக் காட்டட்டும். அல்லது ஒரு தானிய வித்தையேனும் அல்லது ஒரு தீட்டப்படாத கோதுமையையேனும் படைத்துக் காட்டட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.198

அத்தியாயம் : 97
7560. حَدَّثَنَا هُدْبَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسٌ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَثَلُ الْمُؤْمِنِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَالأُتْرُجَّةِ، طَعْمُهَا طَيِّبٌ وَرِيحُهَا طَيِّبٌ، وَالَّذِي لاَ يَقْرَأُ كَالتَّمْرَةِ، طَعْمُهَا طَيِّبٌ وَلاَ رِيحَ لَهَا، وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الرَّيْحَانَةِ، رِيحُهَا طَيِّبٌ وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ الْفَاجِرِ الَّذِي لاَ يَقْرَأُ الْقُرْآنَ كَمَثَلِ الْحَنْظَلَةِ، طَعْمُهَا مُرٌّ وَلاَ رِيحَ لَهَا "".
பாடம்: 57 பாவிகள் மற்றும் நயவஞ்சகர்கள் குர்ஆன் ஓதுவதும், அவர்களது ஓதலின் ஒலி குரல்வளையைத் தாண்டிச் செல்லாது என்பதும்
7560. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனை ஓதுகின்ற இறைநம்பிக்கை யாளரின் நிலையானது, நாரத்தைப் பழம் போன்றதாகும். அதன் சுவையும் நன்று. அதன் மணமும் நன்று. குர்ஆனை ஓதாத (இறைநம்பிக்கையாளரான ஒரு)வரின் நிலையானது, பேரீச்சம் பழத்தைப் போன்றதாகும். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணம் கிடையாது.

குர்ஆனை ஓதுகின்ற பாவியின் நிலை, துளசிச் செடியின் நிலையைப் போன்றதாகும். அதன் மணம் நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத பாவியின் நிலை, குமட்டிக்காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பானது. அதற்கு மணமும் கிடையாது.

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.199


அத்தியாயம் : 97
7561. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا هِشَامٌ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، ح وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ صَالِحٍ، حَدَّثَنَا عَنْبَسَةُ، حَدَّثَنَا يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي يَحْيَى بْنُ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ عُرْوَةَ بْنَ الزُّبَيْرِ، قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ سَأَلَ أُنَاسٌ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنِ الْكُهَّانِ فَقَالَ "" إِنَّهُمْ لَيْسُوا بِشَىْءٍ "". فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ فَإِنَّهُمْ يُحَدِّثُونَ بِالشَّىْءِ يَكُونُ حَقًّا. قَالَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" تِلْكَ الْكَلِمَةُ مِنَ الْحَقِّ يَخْطَفُهَا الْجِنِّيُّ فَيُقَرْقِرُهَا فِي أُذُنِ وَلِيِّهِ كَقَرْقَرَةِ الدَّجَاجَةِ، فَيَخْلِطُونَ فِيهِ أَكْثَرَ مِنْ مِائَةِ كَذْبَةٍ "".
பாடம்: 57 பாவிகள் மற்றும் நயவஞ்சகர்கள் குர்ஆன் ஓதுவதும், அவர்களது ஓதலின் ஒலி குரல்வளையைத் தாண்டிச் செல்லாது என்பதும்
7561. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் சிலர் சோதிடர் களைப் பற்றிக் கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், “அவர்கள் (பொருட்படுத்தத் தக்க) ஒரு பொருள் அல்லர்” என்று சொன்னார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்தச் சோதிடர்கள் (சில வேளைகளில்) ஒன்றை அறிவிக்கிறார்கள்; அது உண்மையாகி விடுகின்றதே!” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “அந்த உண்மை யான சொல், (வானவர்களிடமிருந்து) ஜின் எடுத்துக்கொண்டதாகும். அது தன் (சோதிட) நண்பனின் காதில் கோழி கொக்கரிப்பதைப் போன்று கொக்கரிக்க, அவன் அதனுடன் நூற்றுக்கும் அதிகமான பொய்களைக் கலந்துவிடுகின்றான்” என்று பதிலளித்தார்கள்.200

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 97
7562. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، سَمِعْتُ مُحَمَّدَ بْنَ سِيرِينَ، يُحَدِّثُ عَنْ مَعْبَدِ بْنِ سِيرِينَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" يَخْرُجُ نَاسٌ مِنْ قِبَلِ الْمَشْرِقِ وَيَقْرَءُونَ الْقُرْآنَ لاَ يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كَمَا يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، ثُمَّ لاَ يَعُودُونَ فِيهِ حَتَّى يَعُودَ السَّهْمُ إِلَى فُوقِهِ "". قِيلَ مَا سِيمَاهُمْ. قَالَ "" سِيمَاهُمُ التَّحْلِيقُ "". أَوْ قَالَ "" التَّسْبِيدُ "".
பாடம்: 57 பாவிகள் மற்றும் நயவஞ்சகர்கள் குர்ஆன் ஓதுவதும், அவர்களது ஓதலின் ஒலி குரல்வளையைத் தாண்டிச் செல்லாது என்பதும்
7562. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “கிழக்குத் திசையிலிருந்து (இராக்கிலிருந்து) சிலர் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள்; ஆனால், அது அவர்களின் நெஞ்செலும்புகளைத் தாண்டிச் செல்லாது. (வேட்டைக்காரனின்) அம்பு வேட்டை யாடப்பட்ட பிராணியின் உடலிலிருந்து (மறுபக்கமாக) வெளியேறிவிடுவதைப் போன்று அவர்கள் மார்க்கத்திலிருந்து வெறியேறிவிடுவார்கள். பிறகு அம்பானது வில்லின் நாண் உள்ள பகுதிக்கு (தானாக)த் திரும்பாதவரை அவர்களும் மார்க்கத்திற்குத் திரும்பி வரவேமாட்டார்கள்” என்று சொன்னார்கள்.

“அவர்களின் அடையாளம் என்ன?” என்று வினவப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “மொட்டை போடுவ(தை ஒரு மரபாகவும் வழிபாடாகவும் கொண்டிருப்ப)துதான் (அவர்களின் அடையாளம்)” என்று பதில் சொன்னார்கள்.

அத்தியாயம் : 97