7520. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الذَّنْبِ أَعْظَمُ عِنْدَ اللَّهِ قَالَ "" أَنْ تَجْعَلَ لِلَّهِ نِدًّا وَهْوَ خَلَقَكَ "". قُلْتُ إِنَّ ذَلِكَ لَعَظِيمٌ. قُلْتُ ثُمَّ أَىّ قَالَ "" ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ تَخَافُ أَنْ يَطْعَمَ مَعَكَ "". قُلْتُ ثُمَّ أَىّ قَالَ "" ثُمَّ أَنْ تُزَانِيَ بِحَلِيلَةِ جَارِكَ "".
பாடம்: 39
அல்லாஹ் (தன்னை வழிபடுமாறு) கட்டளையிடுவதன் மூல(மும் அதற்குப் பிரதிபலன் வழங்குவ தன் மூலமு)ம் தன் அடியார்களை நினைவுகூர்கின்றான்; மன்றாடிப் பிரார்த்திப்பதன் மூலமும் தூதுத்துவத்தை ஏற்றுப் பிரசாரம் செய்வதன் மூலமும் அல்லாஹ்வை அடியார்கள் நினைவுகூர்கின்றனர்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
என்னை நீங்கள் நினைவுகூருங்கள். உங்களை நான் நினைவுகூர்கின்றேன். (2:152)
மேலும், (நபியே!) இவர்களுக்கு நூஹுடைய செய்தியை எடுத்துரைப்பீராக! அவர் தம் சமுதாயத்தாரை நோக்கிக் கூறினார்: என் சமுதாயத்தாரே! நான் உங்களிடையே வாழ்வதையும் அல்லாஹ்வின் வசனங்களை (அவ்வப்போது) நான் எடுத்துரைத்து நினைவூட்டிக்கொண்டிருப்பதையும் உங்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை என்றால் அறிந்துகொள்ளுங்கள்: நான் அல்லாஹ்வையே சார்ந்திருக்கின்றேன். நீங்கள் ஏற்படுத்திக்கொண்ட கடவுளர்களின் உதவியைப் பெற்று உங்களுக்கிடையே ஒரு தீர்மானத்திற்கு வாருங்கள். பிறகு அந்தத் தீர்மானம் உங்களுக்குக் கவலையளித்திடாதவாறு பார்த்துக்கொண்டு பின்னர், அதை எனக்கு எதிராகச் செயல்படுத்துங்கள். மேலும், எனக்குச் சற்றும் அவகாசம் அளிக்காதீர்கள்.
நீங்கள் என் நல்லுரையைப் புறக்கணித்தால் (எனக்கு ஒன்றும் இழப்பு ஏற்பட்டுவிடாது). நான் உங்களிடம் கூலி எதையும் கேட்கவில்லை. என் கூலி அல்லாஹ்விடமே உள்ளது. (எவர் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும்) நான் இறைவனுக்கு அடிபணிந்து வாழ்பவனாக விளங்க வேண்டும் என்றே கட்டளையிடப்பட்டுள்ளேன் (10:71, 72).
(இந்த வசனத்தின் (10:71) மூலத்தில் உள்ள) ‘ஃகும்மத்’ எனும் சொல்லுக்கு துக்கம், துயரம் என்று பொருள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:
“எனக்கு எதிராகச் செயல்படுத்துங்கள்” என்பதற்கு, உங்கள் உள்ளங்களில் உள்ள (திட்டத்)தை எனக்கெதிராக நிறை வேற்றுங்கள் என்பது பொருள்.
(5:25 ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஃபஃப்ருக்’ எனும் சொல்லுக்கு ‘தீர்ப்பளிப்பாயாக!’ என்பது பொருள் எனக் கூறப்படுகிறது.
(நபியே!) இணைவைப்பாளர்களில் ஒருவர் உம்மிடம் வந்து அடைக்கலம் கோரினால், அவர் இறைவசனங்களைச் செவியுறும்வரை அடைக்கலம் தந்து, பின்னர் அவரைப் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவைப்பீராக! (9:6)
அதாவது ஒரு மனிதர் உங்களிடம் வந்து, நீங்கள் கூறுவதையும் இறைவன் உங்களுக்கு அருளியதையும் செவியுற்று இறைநம்பிக்கை கொண்டால் சரி; இல்லையேல், அவரை அவருக்குரிய பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பிவிடுங்கள். அங்கு அவரிடம் மகத்தான செய்தி -குர்ஆன்- வரும். அவர் இம்மையில் உண்மையே பேசி, அதன்படி செயல்படட்டும்- என முஜாஹித் (ரஹ்) அவர்கள் விளக்கமளித்துள்ளார்கள்.
பாடம்: 40
“ஆகவே, அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்” எனும் (2:22ஆவது) இறைவசனமும், அல்லாஹ் மக்களின் செயல்களையும் முயற்சிகளையும் படைப்பது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளவையும்
புகழோங்கிய அல்லாஹ் கூறுகின்றான்:
(நபியே! அவர்களிடம் கேட்பீராக:) பூமியை இரண்டே நாட்களில் படைத்த (இறை)வனை நிராகரித்து மற்றவர்களை அவனுக்கு இணையாக்குகிறீர்களா? அவன்தானே அகில உலகங்களுக்கும் இறைவன்? (41:9)
(நபியே!) உமக்கும் உமக்குமுன் வாழ்ந்தவர்களுக்கும், இறைவனுக்கு இணைகற்பித்தால் உங்கள் நற்செயல் வீணாகிவிடும்; மேலும், நீங்கள் இழப்புக்குரியவராய் ஆகிவிடுவீர்; ஆகவே, அல்லாஹ்வையே வழிபட்டு நன்றிசெலுத்துவோரின் குழுவில் சேர்ந் திருங்கள் என்று ‘வஹீ’ அறிவிக்கப்பட் டுள்ளது. (39: 65, 66)
மேலும், அவர்கள் (நல்லடியார்கள்) எத்தகையவர்கள் என்றால், அல்லாஹ் வுடன் வேறெந்த (கற்பனை)க் கடவுளையும் அழைக்கமாட்டார்கள். (25:68)
இதற்கு விரிவுரையாக இக்ரிமா (ரஹ்) அவர்கள், “அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தபடியே தான் அவன்மீது நம்பிக்கைகொள்கிறார் கள்” எனும் (12:106ஆவது) இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
மேலும், “(நபியே!) அவர்களைப் படைத்தவன் யார்? வானங்களையும் பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அவர்கள், ‘அல்லாஹ்’ என்றே சொல்வார்கள்” எனும் வசனங்களை (43:87; 31.25) ஓதி, அதுதான் அவர்களின் இறைநம்பிக்கையாகும்; அவர்கள் அல்லாஹ் அல்லாதவற்றை வழிபட்டுக்கொண்டிருப்பார்கள் என்று கூறினார்கள்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
அவனே அனைத்துப் பொருட்களையும் படைத்து, அவற்றுக்கு வேண்டியதை நிர்ணயித்தான். (25:2)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
வானவர்கள் உண்மையைக் கொண்டே இறங்குகிறார்கள் (15:8). அதாவது தூதுத் துவச் செய்தி மற்றும் வேதனையைக் கொண்டு இறங்குகிறார்கள்.
“உண்மையாளர்களிடம் அவர்களின் உண்மை குறித்து இறைவன் விசாரணை செய்ய வேண்டும் என்பதற்காக” எனும் (33:86 ஆவது) வசனத்திலுள்ள ‘உண்மை யாளர்கள்’ என்பது, அல்லாஹ்வின் செய்தியை எடுத்துரைத்து மக்களிடம் கொண்டுவந்து சேர்க்கும் இறைத்தூதர் களைக் குறிக்கும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
மேலும் நாமே அதைப் பாதுகாப்போம் (15:9). அதாவது நம்மிடம் வைத்துப் பாதுகாப்போம்.
“உண்மையைக் கொண்டுவந்தவர்” (39:33). அதாவது குர்ஆனைக் கொண்டு வந்தவர். அதை இறைநம்பிக்கையாளர் கள் உண்மை என ஏற்றார்கள். அவர்கள் மறுமை நாளில் “இதுதான் நீ அளித்தது; இதன்படியே நான் செயல்பட்டேன்” என்று கூறுவர்.
7520. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான், “அல்லாஹ்விடம் மிகப்பெரிய பாவம் எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, நீ அவனுக்கு இணைகற்பிப்பதாகும்” என்று பதிலளித்தார்கள். நான், “நிச்சயமாக அது பெரும் பாவம்தான்” என்று சொல்லிவிட்டு, “பின்னர் எது?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “உன் குழந்தை உன்னுடன் உணவு உண்ணும் என்றஞ்சி அதை நீ கொன்றுவிடுவதாகும்” என்று சொன்னார்கள்.
நான், “பிறகு எது?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “பிறகு உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்” என்று பதிலளித்தார்கள்.162
அத்தியாயம் : 97
7520. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான், “அல்லாஹ்விடம் மிகப்பெரிய பாவம் எது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, நீ அவனுக்கு இணைகற்பிப்பதாகும்” என்று பதிலளித்தார்கள். நான், “நிச்சயமாக அது பெரும் பாவம்தான்” என்று சொல்லிவிட்டு, “பின்னர் எது?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், “உன் குழந்தை உன்னுடன் உணவு உண்ணும் என்றஞ்சி அதை நீ கொன்றுவிடுவதாகும்” என்று சொன்னார்கள்.
நான், “பிறகு எது?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “பிறகு உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்” என்று பதிலளித்தார்கள்.162
அத்தியாயம் : 97
7521. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ اجْتَمَعَ عِنْدَ الْبَيْتِ ثَقَفِيَّانِ وَقُرَشِيٌّ، أَوْ قُرَشِيَّانِ وَثَقَفِيٌّ، كَثِيرَةٌ شَحْمُ بُطُونِهِمْ قَلِيلَةٌ فِقْهُ قُلُوبِهِمْ فَقَالَ أَحَدُهُمْ أَتَرَوْنَ أَنَّ اللَّهَ يَسْمَعُ مَا نَقُولُ قَالَ الآخَرُ يَسْمَعُ إِنْ جَهَرْنَا وَلاَ يَسْمَعُ إِنْ أَخْفَيْنَا وَقَالَ الآخَرُ إِنْ كَانَ يَسْمَعُ إِذَا جَهَرْنَا فَإِنَّهُ يَسْمَعُ إِذَا أَخْفَيْنَا. فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {وَمَا كُنْتُمْ تَسْتَتِرُونَ أَنْ يَشْهَدَ عَلَيْكُمْ سَمْعُكُمْ وَلاَ أَبْصَارُكُمْ وَلاَ جُلُودُكُمْ} الآيَةَ.
பாடம்: 41
“(உலகில் நீங்கள் குற்றங்களைச் செய்தபோது) உங்களின் காது களும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களைத்) தவிர்ப்பவர் களாக நீங்கள் இருக்கவில்லை. மாறாக, நீங்கள் செய்கின்ற செயல்களில் பெரும்பாலான வற்றை அல்லாஹ்கூட அறிய மாட்டான் என்றே நீங்கள் எண்ணி யிருந்தீர்கள்” எனும் (41:22 ஆவது) இறைவசனம்
7521. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(புனித கஅபா) ஆலயத்தின் அருகே ‘ஸகஃபீ குலத்தார் இருவரும் குறைஷி ஒருவரும்’ அல்லது ‘குறைஷியர் இருவரும் ஸகஃபீ ஒருவரும்’ ஒன்றுகூடினார்கள். அவர்களுக்கு வயிற்றில் சதை (தொந்தி) அதிகமாகப்போட்டிருந்தது. (ஆனால்,) அவர்களது உள்ளத்தில் புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், “அல்லாஹ் நாம் சொல்வதைக் கேட்கின்றான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?” என்று கேட்க, மற்றொருவர், “நாம் உரக்கப் பேசினால் அவன் கேட்பான்; நாம் மெதுவாகப் பேசினால் கேட்கமாட்டான்” என்று சொன்னார்.
இன்னொருவர், “நாம் உரக்கப் பேசும்போது அவன் கேட்கின்றான் என்றால், நாம் மெதுவாகப் பேசும்போதும் அவன் நிச்சயம் கேட்பான்” என்று சொன்னார்.
அப்போதுதான் உயர்ந்தோன் அல்லாஹ், “(உலகில் நீங்கள் குற்றங் களைச் செய்தபோது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களைத்) தவிர்ப்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை” எனும் (41:22ஆவது) வசனத்தை அருளி னான்.163
அத்தியாயம் : 97
7521. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(புனித கஅபா) ஆலயத்தின் அருகே ‘ஸகஃபீ குலத்தார் இருவரும் குறைஷி ஒருவரும்’ அல்லது ‘குறைஷியர் இருவரும் ஸகஃபீ ஒருவரும்’ ஒன்றுகூடினார்கள். அவர்களுக்கு வயிற்றில் சதை (தொந்தி) அதிகமாகப்போட்டிருந்தது. (ஆனால்,) அவர்களது உள்ளத்தில் புரிந்துகொள்ளும் ஆற்றல் குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், “அல்லாஹ் நாம் சொல்வதைக் கேட்கின்றான் என்று நீங்கள் கருதுகிறீர்களா?” என்று கேட்க, மற்றொருவர், “நாம் உரக்கப் பேசினால் அவன் கேட்பான்; நாம் மெதுவாகப் பேசினால் கேட்கமாட்டான்” என்று சொன்னார்.
இன்னொருவர், “நாம் உரக்கப் பேசும்போது அவன் கேட்கின்றான் என்றால், நாம் மெதுவாகப் பேசும்போதும் அவன் நிச்சயம் கேட்பான்” என்று சொன்னார்.
அப்போதுதான் உயர்ந்தோன் அல்லாஹ், “(உலகில் நீங்கள் குற்றங் களைச் செய்தபோது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களைத்) தவிர்ப்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை” எனும் (41:22ஆவது) வசனத்தை அருளி னான்.163
அத்தியாயம் : 97
7522. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ وَرْدَانَ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَيْفَ تَسْأَلُونَ أَهْلَ الْكِتَابِ عَنْ كُتُبِهِمْ وَعِنْدَكُمْ كِتَابُ اللَّهِ أَقْرَبُ الْكُتُبِ عَهْدًا بِاللَّهِ، تَقْرَءُونَهُ مَحْضًا لَمْ يُشَبْ
பாடம்: 42
“ஒவ்வொரு நாளும் அவன் (இறைவன்) ஏதேனும் ஒரு பணியில் இருக்கின்றான்” எனும் (55:29 ஆவது) இறைவசனம்
அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்குப் புதிய நினைவூட்டல் வரும்போதெல்லாம் அதை அவர்கள் விளையாட்டாகவேதான் செவியுறுகின் றனர். (21:2)
அதன் பின்னர் அல்லாஹ் ஏதேனும் ஒரு வழியை உருவாக்கக்கூடும் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (65:1)
அதாவது அல்லாஹ் ஒன்றைப் புதிதாக உருவாக்குவதும் படைப்பினங்கள் ஒன்றைப் புதிதாக உண்டாக்குவதும் ஒன்றாகாது. (இரண்டும் வெவ்வேறானவை ஆகும்.) ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் செவியுறுபவனாகவும் பார்க்கக்கூடியவனாகவும் இருக்கின்றான். (42:11)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்:
அல்லாஹ், தான் நாடுகின்றவற்றைத் தனது கட்டளையால் உருவாக்குகின்றான். அவன் புதிதாகக் கட்டளையிட்டதுதான் நீங்கள் தொழுகையில் பேசக் கூடாது என்பதும்.
7522. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வால் அருளப்பெற்ற வேதங் களிலேயே அண்மைக் காலத்தில் (புதிதாக) அருளப்பெற்ற இறைவேதம் (குர்ஆன்) உங்களிடம் இருக்க, (முந்தைய) வேதக்காரர்களிடம் அவர்களுடைய வேதங்கள் தொடர்பாக நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? அ(ந்தப் புதிய வேதத்)தைநீங்கள் கலப்படமின்றி தூய்மையான வடிவில் ஓதிக்கொண்டிருக்கிறீர்கள்.
அத்தியாயம் : 97
7522. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வால் அருளப்பெற்ற வேதங் களிலேயே அண்மைக் காலத்தில் (புதிதாக) அருளப்பெற்ற இறைவேதம் (குர்ஆன்) உங்களிடம் இருக்க, (முந்தைய) வேதக்காரர்களிடம் அவர்களுடைய வேதங்கள் தொடர்பாக நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? அ(ந்தப் புதிய வேதத்)தைநீங்கள் கலப்படமின்றி தூய்மையான வடிவில் ஓதிக்கொண்டிருக்கிறீர்கள்.
அத்தியாயம் : 97
7523. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، قَالَ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ كَيْفَ تَسْأَلُونَ أَهْلَ الْكِتَابِ عَنْ شَىْءٍ وَكِتَابُكُمُ الَّذِي أَنْزَلَ اللَّهُ عَلَى نَبِيِّكُمْ صلى الله عليه وسلم أَحْدَثُ الأَخْبَارِ بِاللَّهِ مَحْضًا لَمْ يُشَبْ وَقَدْ حَدَّثَكُمُ اللَّهُ أَنَّ أَهْلَ الْكِتَابِ قَدْ بَدَّلُوا مِنْ كُتُبِ اللَّهِ وَغَيَّرُوا فَكَتَبُوا بِأَيْدِيهِمْ، قَالُوا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ. لِيَشْتَرُوا بِذَلِكَ ثَمَنًا قَلِيلاً، أَوَ لاَ يَنْهَاكُمْ مَا جَاءَكُمْ مِنَ الْعِلْمِ عَنْ مَسْأَلَتِهِمْ، فَلاَ وَاللَّهِ مَا رَأَيْنَا رَجُلاً مِنْهُمْ يَسْأَلُكُمْ عَنِ الَّذِي أُنْزِلَ عَلَيْكُمْ.
பாடம்: 42
“ஒவ்வொரு நாளும் அவன் (இறைவன்) ஏதேனும் ஒரு பணியில் இருக்கின்றான்” எனும் (55:29 ஆவது) இறைவசனம்
அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்குப் புதிய நினைவூட்டல் வரும்போதெல்லாம் அதை அவர்கள் விளையாட்டாகவேதான் செவியுறுகின் றனர். (21:2)
அதன் பின்னர் அல்லாஹ் ஏதேனும் ஒரு வழியை உருவாக்கக்கூடும் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். (65:1)
அதாவது அல்லாஹ் ஒன்றைப் புதிதாக உருவாக்குவதும் படைப்பினங்கள் ஒன்றைப் புதிதாக உண்டாக்குவதும் ஒன்றாகாது. (இரண்டும் வெவ்வேறானவை ஆகும்.) ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் செவியுறுபவனாகவும் பார்க்கக்கூடியவனாகவும் இருக்கின்றான். (42:11)
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்:
அல்லாஹ், தான் நாடுகின்றவற்றைத் தனது கட்டளையால் உருவாக்குகின்றான். அவன் புதிதாகக் கட்டளையிட்டதுதான் நீங்கள் தொழுகையில் பேசக் கூடாது என்பதும்.
7523. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம் மக்களே! வேதக்காரர்களிடம் நீங்கள் எதைப் பற்றியும் ஏன் கேட்கிறீர் கள்? உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளியுள்ள வேதம்தான் இறைச்செய்திகளிலேயே புதியதும் கலப்படமில்லாத தூய்மையானதும் ஆகும். வேதக்காரர்களோ இறைவேதங்களை மாற்றி, திரித்து, தம் கரங்களால் எழுதிக் கொண்ட ஏடுகளை அல்லாஹ்விடமிருந்து வந்தவை என, அதன்மூலம் அற்ப விலையைப் பெறுவதற்காகக் கூறுகிறார்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு அறிவித் துள்ளான். உங்களுக்குக் கிடைத்துள்ள ஞானம், வேதக்காரர்களிடம் கேட்டுத் தெரிவதிலிருந்து உங்களைத் தடுக்க வில்லையா?
(அதே நேரத்தில்) அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த வேதக்காரர்களில் ஒருவர்கூட உங்களுக்கு அருளப்பெற்றுள்ள (வேதத்)தைப் பற்றிக் கேட்பதை நாம் கண்டதில்லை.
அத்தியாயம் : 97
7523. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஸ்லிம் மக்களே! வேதக்காரர்களிடம் நீங்கள் எதைப் பற்றியும் ஏன் கேட்கிறீர் கள்? உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளியுள்ள வேதம்தான் இறைச்செய்திகளிலேயே புதியதும் கலப்படமில்லாத தூய்மையானதும் ஆகும். வேதக்காரர்களோ இறைவேதங்களை மாற்றி, திரித்து, தம் கரங்களால் எழுதிக் கொண்ட ஏடுகளை அல்லாஹ்விடமிருந்து வந்தவை என, அதன்மூலம் அற்ப விலையைப் பெறுவதற்காகக் கூறுகிறார்கள் என்று அல்லாஹ் உங்களுக்கு அறிவித் துள்ளான். உங்களுக்குக் கிடைத்துள்ள ஞானம், வேதக்காரர்களிடம் கேட்டுத் தெரிவதிலிருந்து உங்களைத் தடுக்க வில்லையா?
(அதே நேரத்தில்) அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த வேதக்காரர்களில் ஒருவர்கூட உங்களுக்கு அருளப்பெற்றுள்ள (வேதத்)தைப் பற்றிக் கேட்பதை நாம் கண்டதில்லை.
அத்தியாயம் : 97
7524. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ تَعَالَى {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ} قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُعَالِجُ مِنَ التَّنْزِيلِ شِدَّةً، وَكَانَ يُحَرِّكُ شَفَتَيْهِ ـ فَقَالَ لِي ابْنُ عَبَّاسٍ أُحَرِّكُهُمَا لَكَ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُحَرِّكُهُمَا فَقَالَ سَعِيدٌ أَنَا أُحَرِّكُهُمَا كَمَا كَانَ ابْنُ عَبَّاسٍ يُحَرِّكُهُمَا فَحَرَّكَ شَفَتَيْهِ ـ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ * إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ} قَالَ جَمْعُهُ فِي صَدْرِكَ ثُمَّ تَقْرَؤُهُ. {فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} قَالَ فَاسْتَمِعْ لَهُ وَأَنْصِتْ ثُمَّ إِنَّ عَلَيْنَا أَنْ تَقْرَأَهُ. قَالَ فَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ جِبْرِيلُ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ اسْتَمَعَ فَإِذَا انْطَلَقَ جِبْرِيلُ قَرَأَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم كَمَا أَقْرَأَهُ.
பாடம்: 43
“(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்” எனும் (75:16ஆவது) இறைவசனமும், வஹீ அருளப்பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் நடந்துகொண்ட விதமும்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகக் கூறியதாவது:
அல்லாஹ் கூறுகின்றான்: என் அடி யான் என்னை நினைவுகூரும்போதும், (என்னைப் பற்றிப் பேசி) அவனுடைய உதடுகள் அசையும்போதும் நான் அவனுடனேயே இருக்கிறேன்.
7524. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(நபியே!) இந்த வஹீயை அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்” எனும் (75:16ஆவது) இறைவசனம் குறித்து விளக்கும்போது, “நபி (ஸல்) அவர்கள் தமக்கு வஹீ அருளப்பெறும்போது கடும் சிரத்தை எடுத்துக்கொள்வார்கள். (எங்கே வசனங்கள் மறந்துவிடுமோ என்ற அச்சத்தால்) தம் உதடுகளை அசைத்துக்கொண்டிருப்பார்கள்” என்று கூறினார்கள்.
-இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதைப் பற்றி என்னிடம் அறிவிக்கையில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் உதடுகளை அசைத்ததைப் போன்று உங்களுக்கு நான் அசைத்துக் காட்டுகிறேன்” என்று கூறி (தம் உதடுகளை அசைத்துக் காட்டி)னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அசைத்துக் காட்டியதைப் போன்று நானும் அசைத்துக் காட்டுகிறேன் (பாருங்கள்).-
அப்போதுதான் அல்லாஹ், “(நபியே!) இந்த வஹீயை (வேதஅறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர். அதை (உமது மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீர்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும்” எனும் (75:16,17) வசனங்களை அருளினான். மேலும், “நாம் இதை ஓதிவிட்டோமாயின், நீர் ஓதுவதைத் தொடர்வீராக!” எனும் (75:18) வசனத்தையும் அருளினான். அதாவது அதை நீர் காதுதாழ்த்தி மௌனமாக இருந்து கேட்பீராக! “பின்னர் உம்மை ஓதச்செய்வது நமது பொறுப்பாகும்”.
(இதன்பின்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் வந்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காது தாழ்த்திக் கேட்பார்கள். ஜிப்ரீல் சென்ற பின்னால், அவர் ஓதிக்காட்டியதைப் போன்றே ஓதுவார்கள்.164
அத்தியாயம் : 97
7524. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(நபியே!) இந்த வஹீயை அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர்” எனும் (75:16ஆவது) இறைவசனம் குறித்து விளக்கும்போது, “நபி (ஸல்) அவர்கள் தமக்கு வஹீ அருளப்பெறும்போது கடும் சிரத்தை எடுத்துக்கொள்வார்கள். (எங்கே வசனங்கள் மறந்துவிடுமோ என்ற அச்சத்தால்) தம் உதடுகளை அசைத்துக்கொண்டிருப்பார்கள்” என்று கூறினார்கள்.
-இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதைப் பற்றி என்னிடம் அறிவிக்கையில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் உதடுகளை அசைத்ததைப் போன்று உங்களுக்கு நான் அசைத்துக் காட்டுகிறேன்” என்று கூறி (தம் உதடுகளை அசைத்துக் காட்டி)னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அசைத்துக் காட்டியதைப் போன்று நானும் அசைத்துக் காட்டுகிறேன் (பாருங்கள்).-
அப்போதுதான் அல்லாஹ், “(நபியே!) இந்த வஹீயை (வேதஅறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உமது நாவை அசைக்காதீர். அதை (உமது மனத்தில்) ஒன்றுசேர்த்து, அதை (நீர்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும்” எனும் (75:16,17) வசனங்களை அருளினான். மேலும், “நாம் இதை ஓதிவிட்டோமாயின், நீர் ஓதுவதைத் தொடர்வீராக!” எனும் (75:18) வசனத்தையும் அருளினான். அதாவது அதை நீர் காதுதாழ்த்தி மௌனமாக இருந்து கேட்பீராக! “பின்னர் உம்மை ஓதச்செய்வது நமது பொறுப்பாகும்”.
(இதன்பின்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் வந்தால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காது தாழ்த்திக் கேட்பார்கள். ஜிப்ரீல் சென்ற பின்னால், அவர் ஓதிக்காட்டியதைப் போன்றே ஓதுவார்கள்.164
அத்தியாயம் : 97
7525. حَدَّثَنِي عَمْرُو بْنُ زُرَارَةَ، عَنْ هُشَيْمٍ، أَخْبَرَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ فِي قَوْلِهِ تَعَالَى {وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا} قَالَ نَزَلَتْ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مُخْتَفٍ بِمَكَّةَ، فَكَانَ إِذَا صَلَّى بِأَصْحَابِهِ رَفَعَ صَوْتَهُ بِالْقُرْآنِ، فَإِذَا سَمِعَهُ الْمُشْرِكُونَ سَبُّوا الْقُرْآنَ وَمَنْ أَنْزَلَهُ وَمَنْ جَاءَ بِهِ، فَقَالَ اللَّهُ لِنَبِيِّهِ صلى الله عليه وسلم {وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ} أَىْ بِقِرَاءَتِكَ، فَيَسْمَعَ الْمُشْرِكُونَ، فَيَسُبُّوا الْقُرْآنَ {وَلاَ تُخَافِتْ بِهَا} عَنْ أَصْحَابِكَ فَلاَ تُسْمِعُهُمْ {وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلاً}
பாடம்: 44
“மேலும், நீங்கள் இரகசியமாகப் பேசினாலும் சரி; வெளிப்படை யாகப் பேசினாலும் சரி (அல்லாஹ் வைப் பொறுத்தமட்டில் இரண்டும் சமம்தான்). நிச்சயமாக, அவன் இதயங்களில் இருப்பவற்றையும் நன்கறிகின்றான். எவன் படைத்திருக்கின்றானோ அவன் அறியமாட்டானா என்ன? அவன் நுணுக்கமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்” எனும் (67:13,14 ஆகிய) இறைவசனங்கள்
(20:103 ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ள) ‘யத்தகாஃபத்தூன்’ என்பதற்கு ‘இரகசியமாகப் பேசிக்கொள்கிறார்கள்’ என்பது பொருள்.
7525. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(நபியே!) உமது தொழுகையில் நீர் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்” எனும் (17:110ஆவது) வசனம் தொடர்பாக(ப் பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுதுகொண்டு) இருந்தார்கள். தம் தோழர்களுடன் தொழும்போது உரத்த குரலில் குர்ஆனை ஓதுவார்கள். அதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிடும்போது குர்ஆனையும் அதை அருளிய (இறை) வனையும் அதை (மக்கள்முன்) கொண்டு வந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள்.
ஆகவே, அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “நீர் உமது தொழுகையில் குரலை உயர்த்தி ஓதாதீர்! -ஏனெனில், அதைக் கேட்கும் இணை வைப்பாளர்கள் குர்ஆனை ஏசுவார்கள். அதற்காக (உடன் தொழுகின்ற) உம்முடைய நண்பர்களுக்கே கேட்காத அளவுக்கு- (ஒரேயடியாய்) குரலைத் தாழ்த்தவும் வேண்டாம். இரண்டுக்குமிடையே மிதமான போக்கைக் கையாள்வீராக!” எனக் கட்டளையிட்டான்.165
அத்தியாயம் : 97
7525. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(நபியே!) உமது தொழுகையில் நீர் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்” எனும் (17:110ஆவது) வசனம் தொடர்பாக(ப் பின்வருமாறு) கூறினார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருத்தில் கொண்டு) மக்காவில் மறைவாக(த் தொழுதுகொண்டு) இருந்தார்கள். தம் தோழர்களுடன் தொழும்போது உரத்த குரலில் குர்ஆனை ஓதுவார்கள். அதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிடும்போது குர்ஆனையும் அதை அருளிய (இறை) வனையும் அதை (மக்கள்முன்) கொண்டு வந்த (நபிய)வர்களையும் ஏசுவார்கள்.
ஆகவே, அல்லாஹ் தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “நீர் உமது தொழுகையில் குரலை உயர்த்தி ஓதாதீர்! -ஏனெனில், அதைக் கேட்கும் இணை வைப்பாளர்கள் குர்ஆனை ஏசுவார்கள். அதற்காக (உடன் தொழுகின்ற) உம்முடைய நண்பர்களுக்கே கேட்காத அளவுக்கு- (ஒரேயடியாய்) குரலைத் தாழ்த்தவும் வேண்டாம். இரண்டுக்குமிடையே மிதமான போக்கைக் கையாள்வீராக!” எனக் கட்டளையிட்டான்.165
அத்தியாயம் : 97
7526. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ نَزَلَتْ هَذِهِ الآيَةُ {وَلاَ تَجْهَرْ بِصَلاَتِكَ وَلاَ تُخَافِتْ بِهَا} فِي الدُّعَاءِ.
பாடம்: 44
“மேலும், நீங்கள் இரகசியமாகப் பேசினாலும் சரி; வெளிப்படை யாகப் பேசினாலும் சரி (அல்லாஹ் வைப் பொறுத்தமட்டில் இரண்டும் சமம்தான்). நிச்சயமாக, அவன் இதயங்களில் இருப்பவற்றையும் நன்கறிகின்றான். எவன் படைத்திருக்கின்றானோ அவன் அறியமாட்டானா என்ன? அவன் நுணுக்கமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்” எனும் (67:13,14 ஆகிய) இறைவசனங்கள்
(20:103 ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ள) ‘யத்தகாஃபத்தூன்’ என்பதற்கு ‘இரகசியமாகப் பேசிக்கொள்கிறார்கள்’ என்பது பொருள்.
7526. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(நபியே!) உமது தொழுகையில் நீர் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்” எனும் இந்த (17:110ஆவது) வசனம் பிரார்த்தனை (துஆ) தொடர்பாக அருளப்பெற்றது.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.166
அத்தியாயம் : 97
7526. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“(நபியே!) உமது தொழுகையில் நீர் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்” எனும் இந்த (17:110ஆவது) வசனம் பிரார்த்தனை (துஆ) தொடர்பாக அருளப்பெற்றது.
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.166
அத்தியாயம் : 97
7527. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَتَغَنَّ بِالْقُرْآنِ "". وَزَادَ غَيْرُهُ "" يَجْهَرُ بِهِ "".
பாடம்: 44
“மேலும், நீங்கள் இரகசியமாகப் பேசினாலும் சரி; வெளிப்படை யாகப் பேசினாலும் சரி (அல்லாஹ் வைப் பொறுத்தமட்டில் இரண்டும் சமம்தான்). நிச்சயமாக, அவன் இதயங்களில் இருப்பவற்றையும் நன்கறிகின்றான். எவன் படைத்திருக்கின்றானோ அவன் அறியமாட்டானா என்ன? அவன் நுணுக்கமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்” எனும் (67:13,14 ஆகிய) இறைவசனங்கள்
(20:103 ஆவது வசனத்தில் இடம்பெற்றுள்ள) ‘யத்தகாஃபத்தூன்’ என்பதற்கு ‘இரகசியமாகப் பேசிக்கொள்கிறார்கள்’ என்பது பொருள்.
7527. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை (முறைப்படி) இராகத்துடன் (இனிய குரலில்) ஓதாதவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பில், ‘இராகமிட்டு உரத்த குரலில் ஓதாதவர்’ எனக் கூடுதலாக வந்துள்ளது.
அத்தியாயம் : 97
7527. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை (முறைப்படி) இராகத்துடன் (இனிய குரலில்) ஓதாதவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
மற்றோர் அறிவிப்பில், ‘இராகமிட்டு உரத்த குரலில் ஓதாதவர்’ எனக் கூடுதலாக வந்துள்ளது.
அத்தியாயம் : 97
7528. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَحَاسُدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْقُرْآنَ فَهْوَ يَتْلُوهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ، فَهْوَ يَقُولُ لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ هَذَا، لَفَعَلْتُ كَمَا يَفْعَلُ. وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً فَهْوَ يُنْفِقُهُ فِي حَقِّهِ فَيَقُولُ لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ عَمِلْتُ فِيهِ مِثْلَ مَا يَعْمَلُ "".
பாடம்: 45
“(இரண்டு பேர் பொறாமை கொள்ளத் தக்கவர்கள்.) அவர் களில் ஒருவர் யாரென்றால், அல்லாஹ் அவருக்கு குர்ஆனின் ஞானத்தை அருளினான். அவர் அல்லும்பகலும் (அதை ஓதி) அதன்படி செயல்படுகிறார். இதைக் காணும் மற்றொருவர், இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்று எனக்கும் வழங்கப்படுமாயின் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே! என்று கூறுகிறார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
குர்ஆனை ஓதி அதன்படி செயல்படுவதென்பது, (மற்றச் செயல்களைப் போன்றே) அந்த மனிதரின் செயல்தான் என அல்லாஹ் விவரிக்கின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்: வானங்கள் மற்றும் பூமியைப் படைத்ததும், உங்கள் மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் அடங்கும். (30:22)
புகழோங்கிய இறைவன் கூறுகின் றான்:
நன்மை செய்யுங்கள்; நீங்கள் வெற்றியடையலாம். (22:77)
7528. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களில் தவிர வேறெதற்காகவும் பொறாமைப்படக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் ஞானத்தை வழங்கினான். அதை அவர் அல்லும்பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு)வருகிறார். (இதைக் கண்ட) மற்றொருவர், “இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்றே எனக்கும் வழங்கப்படுமானால் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே!” என்று (ஆதங்கத்துடன்) கூறினார்.
2. மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர் உரிய வழியில் செலவிடுகிறார். (இதைக் காணும்) மற்றொருவர், “இவருக்கு வழங்கப்பட்ட (செல்வத்)தைப் போன்று எனக்கும் வழங்கப்பட்டால், இவரைப் போன்றே நானும் செயல்படுவேன்” என்கிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.167
அத்தியாயம் : 97
7528. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களில் தவிர வேறெதற்காகவும் பொறாமைப்படக் கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் ஞானத்தை வழங்கினான். அதை அவர் அல்லும்பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு)வருகிறார். (இதைக் கண்ட) மற்றொருவர், “இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்றே எனக்கும் வழங்கப்படுமானால் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே!” என்று (ஆதங்கத்துடன்) கூறினார்.
2. மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர் உரிய வழியில் செலவிடுகிறார். (இதைக் காணும்) மற்றொருவர், “இவருக்கு வழங்கப்பட்ட (செல்வத்)தைப் போன்று எனக்கும் வழங்கப்பட்டால், இவரைப் போன்றே நானும் செயல்படுவேன்” என்கிறார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.167
அத்தியாயம் : 97
7529. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الزُّهْرِيُّ عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ حَسَدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْقُرْآنَ فَهْوَ يَتْلُوهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً فَهْوَ يُنْفِقُهُ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ "". سَمِعْتُ سُفْيَانَ مِرَارًا لَمْ أَسْمَعْهُ يَذْكُرُ الْخَبَرَ وَهْوَ مِنْ صَحِيحِ حَدِيثِهِ.
பாடம்: 45
“(இரண்டு பேர் பொறாமை கொள்ளத் தக்கவர்கள்.) அவர் களில் ஒருவர் யாரென்றால், அல்லாஹ் அவருக்கு குர்ஆனின் ஞானத்தை அருளினான். அவர் அல்லும்பகலும் (அதை ஓதி) அதன்படி செயல்படுகிறார். இதைக் காணும் மற்றொருவர், இவருக்கு வழங்கப்பட்டதைப் போன்று எனக்கும் வழங்கப்படுமாயின் இவரைப் போன்றே நானும் செயல்படுவேனே! என்று கூறுகிறார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியது
குர்ஆனை ஓதி அதன்படி செயல்படுவதென்பது, (மற்றச் செயல்களைப் போன்றே) அந்த மனிதரின் செயல்தான் என அல்லாஹ் விவரிக்கின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்: வானங்கள் மற்றும் பூமியைப் படைத்ததும், உங்கள் மொழிகளும் நிறங்களும் வேறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் அடங்கும். (30:22)
புகழோங்கிய இறைவன் கூறுகின் றான்:
நன்மை செய்யுங்கள்; நீங்கள் வெற்றியடையலாம். (22:77)
7529. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டில் தவிர வேறெதிலும் பொறாமை கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள, அவர் அதை அல்லும்பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு)வருகிறார். 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க, அவர் அதை அல்லும்பகலும் தானம் செய்கிறார்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.168
(இதன் அறிவிப்பாளர்) அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:
நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம் பலமுறை (ஹதீஸ்களைக்) கேட்டுள்ளேன். ஆனால், ‘எனக்கு இன்னார் அறிவித்தார்’ (அக்பரனா அல்லது ஹத்தஸனா) என்று அவர் சொன்னதில்லை. (இன்னார் கூறினார் (கால) என்றே சொல்வார்.) அப்படியிருந்தாலும், அது அவரது ஆதாரபூர்வமான அறிவிப்புதான்.
அத்தியாயம் : 97
7529. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டில் தவிர வேறெதிலும் பொறாமை கூடாது. 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆன் ஞானத்தை அருள, அவர் அதை அல்லும்பகலும் ஓதி (அதன்படி செயல்பட்டு)வருகிறார். 2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்க, அவர் அதை அல்லும்பகலும் தானம் செய்கிறார்.
இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.168
(இதன் அறிவிப்பாளர்) அலீ பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:
நான் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம் பலமுறை (ஹதீஸ்களைக்) கேட்டுள்ளேன். ஆனால், ‘எனக்கு இன்னார் அறிவித்தார்’ (அக்பரனா அல்லது ஹத்தஸனா) என்று அவர் சொன்னதில்லை. (இன்னார் கூறினார் (கால) என்றே சொல்வார்.) அப்படியிருந்தாலும், அது அவரது ஆதாரபூர்வமான அறிவிப்புதான்.
அத்தியாயம் : 97
7530. حَدَّثَنَا الْفَضْلُ بْنُ يَعْقُوبَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الثَّقَفِيُّ، حَدَّثَنَا بَكْرُ بْنُ عَبْدِ اللَّهِ الْمُزَنِيُّ، وَزِيَادُ بْنُ جُبَيْرِ بْنِ حَيَّةَ، عَنْ جُبَيْرِ بْنِ حَيَّةَ، قَالَ الْمُغِيرَةُ أَخْبَرَنَا نَبِيُّنَا، صلى الله عليه وسلم عَنْ رِسَالَةِ، رَبِّنَا "" أَنَّهُ مَنْ قُتِلَ مِنَّا صَارَ إِلَى الْجَنَّةِ "".
பாடம்: 46
“இறைத்தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அரு ளப்பட்டுள்ள (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைப்பீராக! (இந்தப் பணியை) நீர் செய்யாவிட்டால் அவனது தூதை நீர் எடுத்துரைக்க வில்லை என்றாகிவிடும்” எனும் (5:67 ஆவது) இறைவசனம்
ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடமிருந்து தூது வந்தது; அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துச்சொன்னார்கள். நாம் அதை ஏற்றுச் செயல்பட வேண்டும்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
அந்தத் தூதர்கள் தங்கள் இறைவனின் தூதுச் செய்திகளை சேர்த்துவிட்டார்களா என்று அறிந்துகொள்வதற்காக (அவர்களுக்கு முன்பும் பின்பும் கண்காணிப்பாளரை அல்லாஹ் நியமிக்கின்றான்). (72:28)
மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
(நூஹ் கூறினார்:) நான் என் இறைவனின் தூதையே உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். (7:62)
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (தபூக் போரில்) நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொள்ளாமல் பின்தங்கிவிட்ட போது அல்லாஹ் கூறினான்:
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுடைய செயல்பாடுகளைப் பார்ப்பார்கள். (9:105)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அதாவது ஒருவரது நற்செயல் உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால், “செயல் படுங்கள்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள்” என்று சொல்லுங்கள். (பிறரை அவசரப்பட்டுப் பாராட்டுவதன் மூலம்) உங்களை எவரும் குறைத்து மதிப்பிட இடமளித்துவிட வேண்டாம்.
மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (2:2ஆவது வசனத்திலுள்ள) ‘அந்த வேதம்’ (‘தாலிக்கல் கிதாபு’) என்பது இந்த குர்ஆனைக் குறிக்கிறது. “இறையச்சமுடை யோருக்கு நல்வழியாகும்” என்பதற்கு தெளிவுரையாகும்; வழிகாட்டியாகும் என்று பொருள்.
இது, (60:10ஆவது வசனத்திலுள்ள) “இதுவே அல்லாஹ்வின் தீர்ப்பாகும்” (தாóக்கும் ஹுக்முல்லாஹ்) என்பதைப் போன்றே. இவ்வாறு தொலைவைச் சுட்டும் சொற்களால் அண்மையைச் சுட்டுவது குர்ஆனின் மரபுகளில் ஒன்றாகும். (10:22ஆவது வசனத்தில்) முன்னிலைக்குப் பதிலாகப் படர்க்கை ஆளப்பட்டுள்ளது.
“நீங்கள் (கடலில் பயணிக்கும்போது) கப்பல்களில் இருப்பீர்கள். அவை இதமான காற்றால் (பயணிகளான) அவர்களைக் கொண்டுசெல்கின்றன” என்று அந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.
(இங்கு ‘உங்களை’ என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் ‘அவர்களை’ என குறிப்பிட்டுள்ளான்.)
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்:
நபி (ஸல்) அவர்கள், என் தாய் மாமன் ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களை அவர்களின் குலத்தாரிடம் அனுப்பி னார்கள். அங்கு சென்று ஹராம் (ரலி) அவர்கள் (தம் மக்களிடம்), “நீங்கள் என்னை நம்புவீர்களா? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியனுப்பிய செய்தியை எடுத்துரைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவர்களிடம் பேசலானார்கள்.
7530. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “நம்மில் எவர் (இறைவழியில்) கொல்லப் படுகின்றாரோ அவர் சொர்க்கத்திற்குச் செல்கின்றார்” எனும் தம் இறைவனின் செய்தியை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.169
இதை ஜுபைர் பின் ஹய்யா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 97
7530. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், “நம்மில் எவர் (இறைவழியில்) கொல்லப் படுகின்றாரோ அவர் சொர்க்கத்திற்குச் செல்கின்றார்” எனும் தம் இறைவனின் செய்தியை எங்களுக்குத் தெரிவித்தார்கள்.169
இதை ஜுபைர் பின் ஹய்யா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 97
7531. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم كَتَمَ شَيْئًا وَقَالَ مُحَمَّدٌ حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ عَنِ الشَّعْبِيِّ عَنْ مَسْرُوقٍ عَنْ عَائِشَةَ قَالَتْ مَنْ حَدَّثَكَ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَتَمَ شَيْئًا مِنَ الْوَحْىِ، فَلاَ تُصَدِّقْهُ، إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ {يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ}
பாடம்: 46
“இறைத்தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அரு ளப்பட்டுள்ள (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைப்பீராக! (இந்தப் பணியை) நீர் செய்யாவிட்டால் அவனது தூதை நீர் எடுத்துரைக்க வில்லை என்றாகிவிடும்” எனும் (5:67 ஆவது) இறைவசனம்
ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடமிருந்து தூது வந்தது; அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துச்சொன்னார்கள். நாம் அதை ஏற்றுச் செயல்பட வேண்டும்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
அந்தத் தூதர்கள் தங்கள் இறைவனின் தூதுச் செய்திகளை சேர்த்துவிட்டார்களா என்று அறிந்துகொள்வதற்காக (அவர்களுக்கு முன்பும் பின்பும் கண்காணிப்பாளரை அல்லாஹ் நியமிக்கின்றான்). (72:28)
மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
(நூஹ் கூறினார்:) நான் என் இறைவனின் தூதையே உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். (7:62)
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (தபூக் போரில்) நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொள்ளாமல் பின்தங்கிவிட்ட போது அல்லாஹ் கூறினான்:
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுடைய செயல்பாடுகளைப் பார்ப்பார்கள். (9:105)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அதாவது ஒருவரது நற்செயல் உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால், “செயல் படுங்கள்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள்” என்று சொல்லுங்கள். (பிறரை அவசரப்பட்டுப் பாராட்டுவதன் மூலம்) உங்களை எவரும் குறைத்து மதிப்பிட இடமளித்துவிட வேண்டாம்.
மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (2:2ஆவது வசனத்திலுள்ள) ‘அந்த வேதம்’ (‘தாலிக்கல் கிதாபு’) என்பது இந்த குர்ஆனைக் குறிக்கிறது. “இறையச்சமுடை யோருக்கு நல்வழியாகும்” என்பதற்கு தெளிவுரையாகும்; வழிகாட்டியாகும் என்று பொருள்.
இது, (60:10ஆவது வசனத்திலுள்ள) “இதுவே அல்லாஹ்வின் தீர்ப்பாகும்” (தாóக்கும் ஹுக்முல்லாஹ்) என்பதைப் போன்றே. இவ்வாறு தொலைவைச் சுட்டும் சொற்களால் அண்மையைச் சுட்டுவது குர்ஆனின் மரபுகளில் ஒன்றாகும். (10:22ஆவது வசனத்தில்) முன்னிலைக்குப் பதிலாகப் படர்க்கை ஆளப்பட்டுள்ளது.
“நீங்கள் (கடலில் பயணிக்கும்போது) கப்பல்களில் இருப்பீர்கள். அவை இதமான காற்றால் (பயணிகளான) அவர்களைக் கொண்டுசெல்கின்றன” என்று அந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.
(இங்கு ‘உங்களை’ என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் ‘அவர்களை’ என குறிப்பிட்டுள்ளான்.)
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்:
நபி (ஸல்) அவர்கள், என் தாய் மாமன் ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களை அவர்களின் குலத்தாரிடம் அனுப்பி னார்கள். அங்கு சென்று ஹராம் (ரலி) அவர்கள் (தம் மக்களிடம்), “நீங்கள் என்னை நம்புவீர்களா? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியனுப்பிய செய்தியை எடுத்துரைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவர்களிடம் பேசலானார்கள்.
7531. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) வேத அறிவிப்பிலிருந்து எதையும் மறைத்தார்கள் என உங்களிடம் யாரேனும் சொன்னால் அவரை நீங்கள் நம்பாதீர்கள். ஏனெனில், அல்லாஹ், “(எம்) தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக! அவ்வாறு நீர் செய்யாவிட்டால், அவனது தூதை நீர் எடுத்துரைக்கவில்லை என்றாகிவிடும்” எனக் கூறுகின்றான் (5:67).170
இதை மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 97
7531. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) வேத அறிவிப்பிலிருந்து எதையும் மறைத்தார்கள் என உங்களிடம் யாரேனும் சொன்னால் அவரை நீங்கள் நம்பாதீர்கள். ஏனெனில், அல்லாஹ், “(எம்) தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்துவிடுவீராக! அவ்வாறு நீர் செய்யாவிட்டால், அவனது தூதை நீர் எடுத்துரைக்கவில்லை என்றாகிவிடும்” எனக் கூறுகின்றான் (5:67).170
இதை மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 97
7532. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَىُّ الذَّنْبِ أَكْبَرُ عِنْدَ اللَّهِ قَالَ "" أَنْ تَدْعُوَ لِلَّهِ نِدًّا، وَهْوَ خَلَقَكَ "". قَالَ ثُمَّ أَىّ قَالَ "" ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ، أَنْ يَطْعَمَ مَعَكَ "". قَالَ ثُمَّ أَىّ قَالَ "" أَنْ تُزَانِيَ حَلِيلَةَ جَارِكَ "". فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَهَا {وَالَّذِينَ لاَ يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلاَ يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلاَّ بِالْحَقِّ وَلاَ يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ} الآيَةَ.
பாடம்: 46
“இறைத்தூதரே! உம்முடைய இறைவனிடமிருந்து உமக்கு அரு ளப்பட்டுள்ள (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைப்பீராக! (இந்தப் பணியை) நீர் செய்யாவிட்டால் அவனது தூதை நீர் எடுத்துரைக்க வில்லை என்றாகிவிடும்” எனும் (5:67 ஆவது) இறைவசனம்
ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடமிருந்து தூது வந்தது; அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துச்சொன்னார்கள். நாம் அதை ஏற்றுச் செயல்பட வேண்டும்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
அந்தத் தூதர்கள் தங்கள் இறைவனின் தூதுச் செய்திகளை சேர்த்துவிட்டார்களா என்று அறிந்துகொள்வதற்காக (அவர்களுக்கு முன்பும் பின்பும் கண்காணிப்பாளரை அல்லாஹ் நியமிக்கின்றான்). (72:28)
மேலும், உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
(நூஹ் கூறினார்:) நான் என் இறைவனின் தூதையே உங்களுக்குத் தெரிவிக்கின்றேன். (7:62)
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (தபூக் போரில்) நபி (ஸல்) அவர்களுடன் கலந்துகொள்ளாமல் பின்தங்கிவிட்ட போது அல்லாஹ் கூறினான்:
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களுடைய செயல்பாடுகளைப் பார்ப்பார்கள். (9:105)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:
அதாவது ஒருவரது நற்செயல் உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தால், “செயல் படுங்கள்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் இறைநம்பிக்கையாளர்களும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள்” என்று சொல்லுங்கள். (பிறரை அவசரப்பட்டுப் பாராட்டுவதன் மூலம்) உங்களை எவரும் குறைத்து மதிப்பிட இடமளித்துவிட வேண்டாம்.
மஅமர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (2:2ஆவது வசனத்திலுள்ள) ‘அந்த வேதம்’ (‘தாலிக்கல் கிதாபு’) என்பது இந்த குர்ஆனைக் குறிக்கிறது. “இறையச்சமுடை யோருக்கு நல்வழியாகும்” என்பதற்கு தெளிவுரையாகும்; வழிகாட்டியாகும் என்று பொருள்.
இது, (60:10ஆவது வசனத்திலுள்ள) “இதுவே அல்லாஹ்வின் தீர்ப்பாகும்” (தாóக்கும் ஹுக்முல்லாஹ்) என்பதைப் போன்றே. இவ்வாறு தொலைவைச் சுட்டும் சொற்களால் அண்மையைச் சுட்டுவது குர்ஆனின் மரபுகளில் ஒன்றாகும். (10:22ஆவது வசனத்தில்) முன்னிலைக்குப் பதிலாகப் படர்க்கை ஆளப்பட்டுள்ளது.
“நீங்கள் (கடலில் பயணிக்கும்போது) கப்பல்களில் இருப்பீர்கள். அவை இதமான காற்றால் (பயணிகளான) அவர்களைக் கொண்டுசெல்கின்றன” என்று அந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான்.
(இங்கு ‘உங்களை’ என்று குறிப்பிட வேண்டிய இடத்தில் ‘அவர்களை’ என குறிப்பிட்டுள்ளான்.)
அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார் கள்:
நபி (ஸல்) அவர்கள், என் தாய் மாமன் ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களை அவர்களின் குலத்தாரிடம் அனுப்பி னார்கள். அங்கு சென்று ஹராம் (ரலி) அவர்கள் (தம் மக்களிடம்), “நீங்கள் என்னை நம்புவீர்களா? நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியனுப்பிய செய்தியை எடுத்துரைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அவர்களிடம் பேசலானார்கள்.
7532. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! உயர்ந்தோன் அல்லாஹ் விடம் மிகப் பெரிய பாவம் எது?” என்று ஒருவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைகற்பித்து வழிபடுவ தாகும்” என்று பதிலளித்தார்கள். அவர், “பிறகு எது?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “பிறகு உன் குழந்தை உன்னுடன் உணவு உண்பதை அஞ்சி அதை நீ கொன்றுவிடுவதாகும்” என்று பதிலளித்தார்கள்.
அவர், “பிறகு எது?” என்று கேட்க, நபியவர்கள் “உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் அல்லாஹ், “அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள். அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்யமாட்டார்கள்; விபசாரம் செய்யமாட்டார்கள். யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அதற்குரிய தண்டனையைப் பெற்றே தீருவார். மறுமை நாளில் அவருக்கு இரட்டிப்பு வேதனை அளிக்கப்படும்” எனும் வசனத்தை (25:68) அருளினான்.171
அத்தியாயம் : 97
7532. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! உயர்ந்தோன் அல்லாஹ் விடம் மிகப் பெரிய பாவம் எது?” என்று ஒருவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணைகற்பித்து வழிபடுவ தாகும்” என்று பதிலளித்தார்கள். அவர், “பிறகு எது?” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், “பிறகு உன் குழந்தை உன்னுடன் உணவு உண்பதை அஞ்சி அதை நீ கொன்றுவிடுவதாகும்” என்று பதிலளித்தார்கள்.
அவர், “பிறகு எது?” என்று கேட்க, நபியவர்கள் “உன் அண்டை வீட்டாரின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவதாகும்” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் அல்லாஹ், “அவர்கள் அல்லாஹ்வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள். அல்லாஹ் தடை விதித்துள்ள எந்த உயிரையும் நியாயமின்றி அவர்கள் கொலை செய்யமாட்டார்கள்; விபசாரம் செய்யமாட்டார்கள். யாரேனும் இச்செயல்களைச் செய்தால் அதற்குரிய தண்டனையைப் பெற்றே தீருவார். மறுமை நாளில் அவருக்கு இரட்டிப்பு வேதனை அளிக்கப்படும்” எனும் வசனத்தை (25:68) அருளினான்.171
அத்தியாயம் : 97
7533. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي سَالِمٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّمَا بَقَاؤُكُمْ فِيمَنْ سَلَفَ مِنَ الأُمَمِ كَمَا بَيْنَ صَلاَةِ الْعَصْرِ إِلَى غُرُوبِ الشَّمْسِ، أُوتِيَ أَهْلُ التَّوْرَاةِ التَّوْرَاةَ فَعَمِلُوا بِهَا حَتَّى انْتَصَفَ النَّهَارُ، ثُمَّ عَجَزُوا فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِيَ أَهْلُ الإِنْجِيلِ الإِنْجِيلَ فَعَمِلُوا بِهِ حَتَّى صُلِّيَتِ الْعَصْرُ، ثُمَّ عَجَزُوا فَأُعْطُوا قِيرَاطًا قِيرَاطًا، ثُمَّ أُوتِيتُمُ الْقُرْآنَ فَعَمِلْتُمْ بِهِ حَتَّى غَرَبَتِ الشَّمْسُ، فَأُعْطِيتُمْ قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، فَقَالَ أَهْلُ الْكِتَابِ هَؤُلاَءِ أَقَلُّ مِنَّا عَمَلاً وَأَكْثَرُ أَجْرًا. قَالَ اللَّهُ هَلْ ظَلَمْتُكُمْ مِنْ حَقِّكُمْ شَيْئًا قَالُوا لاَ. قَالَ فَهْوَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ "".
பாடம்: 47
“(நபியே!) கூறுக: (யூதர்களே!) தவ்ராத்தைக் கொண்டுவந்து அதை ஓதிக்காட்டுங்கள்” எனும் (3:59ஆவது) இறைவசனம்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அதன்படி அவர்கள் செயல்பட்டார்கள். ‘இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் அதன்படி செயல்பட்டார்கள். உங்களுக்கு குர்ஆன் வழங்கப்பெற்றது. நீங்கள் அதன்படி செயல்பட்டீர்கள்.172
“அதை ஓத வேண்டிய முறைப்படி ஓதுகிறார்கள்” எனும் (2:121ஆவது) வசனத்திற்கு அபூரஸீன் (ரஹ்) அவர்கள் விளக்கமளிக்கையில், “அதைப் பின்பற்றி முறையாக அதன்படி செயல்படுவார்கள்” என்று கூறியுள்ளார்கள்.
‘யுத்லா’ எனும் சொல்லுக்கு ‘ஓதப்படுதல்’ என்பது பொருள். ‘ஹசனுத் திலாவத்’ என்றால், குர்ஆனை அழகிய முறையில் ஓதுதல் என்பது பொருள். குர்ஆன்மீது (உண்மையான) நம்பிக்கை கொண்டவர்தான் அதன் சுவையையும் பயனையும் அடைவார். அதை உறுதியோடு நம்பியவர்தான் உரிய முறையில் அதைச் சுமப்பார்.
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
தவ்ராத் வேதத்தைச் செயல்படுத்தும் (பொறுப்புச்) சுமை வழங்கப்பட்டு அதைச் சுமக்கத் தவறியவர்கள் ஏடுகளைச் சுமக்கும் கழுதை போன்றவர்கள். அல்லாஹ்வின் வசனங்களை நம்ப மறுத்துவிட்டவர்களின் நிலை மிகவும் கெட்டது. அக்கிரமக்கார மக்களை அல்லாஹ் நல்வழியில் செலுத்துவதில்லை (62:5).
நபி (ஸல்) அவர்கள் கீழ்ப்படிதல் (இஸ்லாம்), நம்பிக்கை (ஈமான்), தொழுகை ஆகிய அனைத்தையும் ‘செயல்’ (அமல்) என்றே குறிப்பிட்டார்கள்.
பிலால் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் இஸ்லாத்தை ஏற்றபின் அதிகமான நன்மையை எதிர்பார்த்துச் செய்த நல்லறம் எது?” என்று கேட்டார்கள். அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “அதிக நன்மையை எதிர்பார்த்து நான் செய்த நற்செயல் எதுவெனில், நான் அங்கத் தூய்மை (உளூ) செய்து தூய்மையாகிக் கொள்ளும்போதெல்லாம் (இரண்டு ரக்அத்கள்) தொழுதுகொள்வேன்” என்று பதில் சொன்னார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்களிடம், “நற்செயல் களில் சிறந்தது எது?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்மீதும் நம்பிக்கை கொள்வதும், பின்னர் அறப்போர் புரிவதும், பின்னர் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் ஹஜ்ஜும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.173
7533. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்துடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவேயாகும். ‘தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் (காலை முதல்) நண்பகல்வரை அதன்படி செயல்பட்டார்கள். பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு(க் கூலியாக) ஒவ்வொருவருக்கும் ஒரு ‘கீராத்’ வழங்கப்பெற்றது. பின்னர் ‘இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் (நண்பகல் முதல்) அஸ்ர் தொழுகைவரை அதன்படி செயல்பட்டார்கள். பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு(க் கூலியாக) ஒவ்வொரு ‘கீராத்’ வழங்கப் பெற்றது.
பிறகு உங்களுக்கு குர்ஆன் வழங்கப்பெற்றது. நீங்கள் (அஸ்ர் முதல்) சூரியன் மறையும்வரை அதன்படி செயல்பட்டீர்கள். உங்களுக்கு(க் கூலியாக) இரண்டிரண்டு “கீராத்’கள் வழங்கப்பட்டன. அப்போது வேதக்காரர்கள், “இவர்கள் வேலை செய்ததோ நம்மைவிடக் குறைந்த நேரம்; கூலியோ அதிகம்” என்று கூறினர். அதற்கு அல்லாஹ், “நான் உங்களுக்குரிய உரிமை (கூலி)யில் சிறிதேனும் (குறைத்து) அநீதியிழைத்தேனா?” என்று கேட்க, அவர்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். அல்லாஹ், “அது (முஸ்லிம்களுக்கு அதிகக் கூலி கொடுத்தது) என் அருளாகும். நான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறேன்” என்று சொன்னான்.174
அத்தியாயம் : 97
7533. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்துடன் நீங்கள் வாழும் காலத்தை ஒப்பிடும்போது நீங்கள் (இவ்வுலகில்) வாழ்வது அஸ்ர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையிலான (குறுகிய) கால அளவேயாகும். ‘தவ்ராத்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் (காலை முதல்) நண்பகல்வரை அதன்படி செயல்பட்டார்கள். பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு(க் கூலியாக) ஒவ்வொருவருக்கும் ஒரு ‘கீராத்’ வழங்கப்பெற்றது. பின்னர் ‘இன்ஜீல்’ வேதக்காரர்களுக்கு அந்த வேதம் வழங்கப்பெற்றது. அவர்கள் (நண்பகல் முதல்) அஸ்ர் தொழுகைவரை அதன்படி செயல்பட்டார்கள். பின்னர் சக்தி இழந்துவிட்டார்கள். அவர்களுக்கு(க் கூலியாக) ஒவ்வொரு ‘கீராத்’ வழங்கப் பெற்றது.
பிறகு உங்களுக்கு குர்ஆன் வழங்கப்பெற்றது. நீங்கள் (அஸ்ர் முதல்) சூரியன் மறையும்வரை அதன்படி செயல்பட்டீர்கள். உங்களுக்கு(க் கூலியாக) இரண்டிரண்டு “கீராத்’கள் வழங்கப்பட்டன. அப்போது வேதக்காரர்கள், “இவர்கள் வேலை செய்ததோ நம்மைவிடக் குறைந்த நேரம்; கூலியோ அதிகம்” என்று கூறினர். அதற்கு அல்லாஹ், “நான் உங்களுக்குரிய உரிமை (கூலி)யில் சிறிதேனும் (குறைத்து) அநீதியிழைத்தேனா?” என்று கேட்க, அவர்கள் ‘இல்லை’ என்று பதிலளித்தார்கள். அல்லாஹ், “அது (முஸ்லிம்களுக்கு அதிகக் கூலி கொடுத்தது) என் அருளாகும். நான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறேன்” என்று சொன்னான்.174
அத்தியாயம் : 97
7534. حَدَّثَنِي سُلَيْمَانُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْوَلِيدِ،. وَحَدَّثَنِي عَبَّادُ بْنُ يَعْقُوبَ الأَسَدِيُّ، أَخْبَرَنَا عَبَّادُ بْنُ الْعَوَّامِ، عَنِ الشَّيْبَانِيِّ، عَنِ الْوَلِيدِ بْنِ الْعَيْزَارِ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الأَعْمَالِ أَفْضَلُ قَالَ "" الصَّلاَةُ لِوَقْتِهَا، وَبِرُّ الْوَالِدَيْنِ، ثُمَّ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம்: 48
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை ‘செயல்’ (அமல்) எனக் குறிப்பிட்டதும், “அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதாதவருக்குத் தொழுகையே கிடையாது” என நபி (ஸல்) அவர்கள் கூறியதும்
7534. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “நற்செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதும், பெற்றோருக்கு நன்மை புரிவதும், பின்னர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.175
இதை அபூஅம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 97
7534. இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “நற்செயல்களில் சிறந்தது எது?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதும், பெற்றோருக்கு நன்மை புரிவதும், பின்னர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள்.175
இதை அபூஅம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 97
7535. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ، عَنِ الْحَسَنِ، حَدَّثَنَا عَمْرُو بْنُ تَغْلِبَ، قَالَ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم مَالٌ فَأَعْطَى قَوْمًا وَمَنَعَ آخَرِينَ فَبَلَغَهُ أَنَّهُمْ عَتَبُوا فَقَالَ "" إِنِّي أُعْطِي الرَّجُلَ وَأَدَعُ الرَّجُلَ، وَالَّذِي أَدَعُ أَحَبُّ إِلَىَّ مِنَ الَّذِي أُعْطِي، أُعْطِي أَقْوَامًا لِمَا فِي قُلُوبِهِمْ مِنَ الْجَزَعِ وَالْهَلَعِ، وَأَكِلُ أَقْوَامًا إِلَى مَا جَعَلَ اللَّهُ فِي قُلُوبِهِمْ مِنَ الْغِنَى وَالْخَيْرِ مِنْهُمْ عَمْرُو بْنُ تَغْلِبَ "". فَقَالَ عَمْرٌو مَا أُحِبُّ أَنَّ لِي بِكَلِمَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حُمْرَ النَّعَمِ.
பாடம்: 49
“நிச்சயமாக, மனிதன் பதற்றமிக்க வனாகவே படைக்கப்பட்டிருக் கிறான். அவனுக்குத் துன்பம் நேரும்போது பொறுமை இழந்து விடுகிறான்; நன்மை ஏற்படும் போது (அது பிறருக்குக் கிடைக் காதவாறு) தடுத்துவிடுகிறான்” எனும் (70:19-21) வசனங்கள்
இந்த வசனத்தின் (70:19) மூலத்தில் இடம்பெறும் ‘ஹலூஉ’ எனும் சொல்லுக்கு ‘பதற்றமிக்கவன்’ என்பது பொருள்.
7535. அம்ர் பின் தஃக்லிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு செல்வம் வந்தது. அதை அவர்கள் சிலருக்குக் கொடுத்தார்கள். வேறுசிலருக்குக் கொடுக்கவில்லை. (பங்கு கிடைக்காத) அந்த மற்ற வர்கள் தம்மைக் குறைகூறுவதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது.
அப்போது அவர்கள், “நான் ஒருவருக் குக் கொடுக்கின்றேன். மற்றொருவரை விட்டுவிடுகின்றேன். நான் எவருக்குக் கொடுக்கின்றேனோ அவரைவிட நான் எவரை விட்டுவிடுகின்றானோ அவர்தான் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார். பதற்றமுள்ள மனம் படைத்தோருக்கு நான் கொடுக்கின்றேன். இன்னும் சிலருக்கு, அவர்களது உள்ளத்தில் அல்லாஹ் விதைத்துள்ள நன்மையையும் தன்னிறைவான (போதுமென்ற) பண்பையும் நம்பிக் கொடுக்காமல் விட்டுவிடுகின்றேன். அத்தகைய (உயர் பண்புடைய)வர்களில் ஒருவர்தான் அம்ர் பின் தஃக்லிப்” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பற்றி இவ்வாறு (புகழ்ந்து) கூறியதற்குப் பதிலாக (விலையுயர்ந்த செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் எனக்குக் கிடைப்பதாக இருந்தாலும் நான் அவற்றை விரும்பியிருக்கமாட்டேன்.176
அத்தியாயம் : 97
7535. அம்ர் பின் தஃக்லிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு செல்வம் வந்தது. அதை அவர்கள் சிலருக்குக் கொடுத்தார்கள். வேறுசிலருக்குக் கொடுக்கவில்லை. (பங்கு கிடைக்காத) அந்த மற்ற வர்கள் தம்மைக் குறைகூறுவதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது.
அப்போது அவர்கள், “நான் ஒருவருக் குக் கொடுக்கின்றேன். மற்றொருவரை விட்டுவிடுகின்றேன். நான் எவருக்குக் கொடுக்கின்றேனோ அவரைவிட நான் எவரை விட்டுவிடுகின்றானோ அவர்தான் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார். பதற்றமுள்ள மனம் படைத்தோருக்கு நான் கொடுக்கின்றேன். இன்னும் சிலருக்கு, அவர்களது உள்ளத்தில் அல்லாஹ் விதைத்துள்ள நன்மையையும் தன்னிறைவான (போதுமென்ற) பண்பையும் நம்பிக் கொடுக்காமல் விட்டுவிடுகின்றேன். அத்தகைய (உயர் பண்புடைய)வர்களில் ஒருவர்தான் அம்ர் பின் தஃக்லிப்” என்று கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பற்றி இவ்வாறு (புகழ்ந்து) கூறியதற்குப் பதிலாக (விலையுயர்ந்த செல்வமான) சிவப்பு ஒட்டகங்கள் எனக்குக் கிடைப்பதாக இருந்தாலும் நான் அவற்றை விரும்பியிருக்கமாட்டேன்.176
அத்தியாயம் : 97
7536. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا أَبُو زَيْدٍ، سَعِيدُ بْنُ الرَّبِيعِ الْهَرَوِيُّ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَرْوِيهِ عَنْ رَبِّهِ، قَالَ "" إِذَا تَقَرَّبَ الْعَبْدُ إِلَىَّ شِبْرًا تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِذَا تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا، وَإِذَا أَتَانِي مَشْيًا أَتَيْتُهُ هَرْوَلَةً "".
பாடம்: 50
நபி (ஸல்) அவர்கள் தம் இறை வனைப் பற்றிக் குறிப்பிட்டதும் அறிவித்ததும் (ஹதீஸ் குத்ஸீ)
7536. நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவிக்கிறார்கள்:
(என்) அடியான் என்னை ஒரு சாண் அளவுக்கு நெருங்கினால் நான் அவனை ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச்செல்கிறேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 97
7536. நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனிடமிருந்து அறிவிக்கிறார்கள்:
(என்) அடியான் என்னை ஒரு சாண் அளவுக்கு நெருங்கினால் நான் அவனை ஒரு முழம் அளவுக்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு நெருங்குகிறேன். அவன் என்னிடம் நடந்துவந்தால் நான் அவனிடம் ஓடிச்செல்கிறேன்.
இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 97
7537. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنِ التَّيْمِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ ـ رُبَّمَا ذَكَرَ النَّبِيَّ صلى الله عليه وسلم ـ قَالَ "" إِذَا تَقَرَّبَ الْعَبْدُ مِنِّي شِبْرًا تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا وَإِذَا تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا أَوْ بُوعًا "".
وَقَالَ مُعْتَمِرٌ سَمِعْتُ أَبِي، سَمِعْتُ أَنَسًا، {عَنْ أَبِي هُرَيْرَةَ،} عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَرْوِيهِ عَنْ رَبِّهِ، عَزَّ وَجَلَّ.
பாடம்: 50
நபி (ஸல்) அவர்கள் தம் இறை வனைப் பற்றிக் குறிப்பிட்டதும் அறிவித்ததும் (ஹதீஸ் குத்ஸீ)
7537. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அடியான் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் ஒரு முழம் நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு நெருங்குகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.177
இதே ஹதீஸ் அனஸ் (ரலி) அவர் களிடமிருந்து “நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்புமிக்க தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 97
7537. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அடியான் என்னிடம் ஒரு சாண் அளவுக்கு நெருங்கினால் நான் அவனிடம் ஒரு முழம் நெருங்குகிறேன். அவன் என்னிடம் ஒரு முழம் நெருங்கினால் நான் அவனிடம் (விரித்த) இரு கைகளின் நீள அளவுக்கு நெருங்குகிறேன்” என்று அல்லாஹ் கூறுவதாக ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.177
இதே ஹதீஸ் அனஸ் (ரலி) அவர் களிடமிருந்து “நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்புமிக்க தம் இறைவனிடமிருந்து அறிவித்தார்கள்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 97
7538. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَرْوِيهِ عَنْ رَبِّكُمْ، قَالَ "" لِكُلِّ عَمَلٍ كَفَّارَةٌ، وَالصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ، وَلَخَلُوفُ فَمِ الصَّائِمِ أَطْيَبُ عِنْدَ اللَّهِ مِنْ رِيحِ الْمِسْكِ "".
பாடம்: 50
நபி (ஸல்) அவர்கள் தம் இறை வனைப் பற்றிக் குறிப்பிட்டதும் அறிவித்ததும் (ஹதீஸ் குத்ஸீ)
7538. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உங்கள் இறைவனி டமிருந்து அறிவித்தார்கள்: இறைவன் கூறுகின்றான்: ஒவ்வொரு (தீய) செயலுக்கும் ஒரு பரிகாரம் உண்டு. நோன்பு எனக்காகவே நிறைவேற்றப்படுவதாகும். நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையைவிட அல்லாஹ்விடம் மணமிக்கதாகும்.178
அத்தியாயம் : 97
7538. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உங்கள் இறைவனி டமிருந்து அறிவித்தார்கள்: இறைவன் கூறுகின்றான்: ஒவ்வொரு (தீய) செயலுக்கும் ஒரு பரிகாரம் உண்டு. நோன்பு எனக்காகவே நிறைவேற்றப்படுவதாகும். நானே அதற்குப் பிரதிபலன் வழங்குவேன். நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை கஸ்தூரி வாசனையைவிட அல்லாஹ்விடம் மணமிக்கதாகும்.178
அத்தியாயம் : 97
7539. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ،. وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ سَعِيدٍ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْعَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا يَرْوِيهِ عَنْ رَبِّهِ قَالَ "" لاَ يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ إِنَّهُ خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى "". وَنَسَبَهُ إِلَى أَبِيهِ.
பாடம்: 50
நபி (ஸல்) அவர்கள் தம் இறை வனைப் பற்றிக் குறிப்பிட்டதும் அறிவித்ததும் (ஹதீஸ் குத்ஸீ)
7539. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனிட மிருந்து அறிவித்துள்ள ஒன்றுதான் இதுவும்: எந்த அடியாரும், தான் (இறைத்தூதர்) யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடவும் சிறந்தவர் என்று சொல்வது அவருக்குத் தகாது. இவ்வாறு (யூனுஸ் பின் மத்தா - மத்தாவின் புதல்வர் யூனுஸ் என) அவர்களை அவர்களுடைய தந்தையுடன் இணைத்துக் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.179
அத்தியாயம் : 97
7539. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனிட மிருந்து அறிவித்துள்ள ஒன்றுதான் இதுவும்: எந்த அடியாரும், தான் (இறைத்தூதர்) யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடவும் சிறந்தவர் என்று சொல்வது அவருக்குத் தகாது. இவ்வாறு (யூனுஸ் பின் மத்தா - மத்தாவின் புதல்வர் யூனுஸ் என) அவர்களை அவர்களுடைய தந்தையுடன் இணைத்துக் கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.179
அத்தியாயம் : 97