7218. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قِيلَ لِعُمَرَ أَلاَ تَسْتَخْلِفُ قَالَ إِنْ أَسْتَخْلِفْ فَقَدِ اسْتَخْلَفَ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي أَبُو بَكْرٍ، وَإِنْ أَتْرُكْ فَقَدْ تَرَكَ مَنْ هُوَ خَيْرٌ مِنِّي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَثْنَوْا عَلَيْهِ فَقَالَ رَاغِبٌ رَاهِبٌ، وَدِدْتُ أَنِّي نَجَوْتُ مِنْهَا كَفَافًا لاَ لِي وَلاَ عَلَىَّ لاَ أَتَحَمَّلُهَا حَيًّا وَمَيِّتًا.
பாடம்: 51 ஆட்சித் தலைவர் (தமக்குப் பிறகு ஓர் ஆட்சித் தலைவரையோ, அல்லது அவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு குழுவையோ) நியமிப்பது 7217காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி நாட்களில் நோயுற்றிருந்தபோது) ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! என் தலை(வலி)யே!” என்று (தமக்கு ஏற்பட்ட தலைவலியின் கடுமையால்) சொல்ல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உயிரோடிருக்கும்போதே உனக்கு அது (இறப்பு) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காகப் பிரார்த்திப்பேன்” என்று சொன்னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்துபோக வேண்டுமென்றே நீங்கள் விருப்பப்படுவதாக நான் எண்ணுகிறேன். நான் இறந்து போய்விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (எனது இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள் (என்னை மறந்துவிடுவீர்கள்)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (புன்னகைத்துவிட்டு), “இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) ‘என் தலை(வலி)யே! என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன்மீதும் உன் குடும்பத்தார்மீதும் நான் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனாலேயே உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப்பின் என் பிரதிநிதியாக) அறிவித்துவிட விரும்பி னேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆக வேண்டும் என) எவரும் ஆசைப்படவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு அறிவிக்க விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூபக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்கமாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன். (ஆகவே தான் அறிவிக்கவில்லை)” என்று சொன்னார்கள்.81
7218. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்களிடம் (அன்னார் தாக்கப்பட்டபோது), “நீங்கள் உங்களுக்குப்பின் யாரையாவது உங்கள் பிரதிநிதியாக (ஆட்சித் தலைவராக) நியமிக்கக் கூடாதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “நான் எவரையேனும் எனக்குப் பின் ஆட்சித் தலைவராக நியமித்தால் (அது தவறாகாது); ஏனென்றால், (எனக்கு முன்பு) என்னைவிடச் சிறந்தவரான அபூபக்ர் (ரலி) அவர்கள் அவ்வாறு ஆட்சித் தலைவரை (என்னை) நியமித்துச் சென்றிருக்கிறார்கள். (எவரையும் ஆட்சித் தலைவராக நியமிக்காமல்) அப்படியே நான் விட்டுவிட்டாலும் (அதுவும் தவறாகாது); ஏனெனில், என்னைவிடச் சிறந்தவர்களான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விதம்தான் (யாரையும் நியமிக்காமல்) விட்டுச்சென்றிருக்கிறார்கள்” என்று சொன்னார்கள்.

உடனே நபித்தோழர்கள் உமர் (ரலி) அவர்களைப் பாராட்டினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், “(என் கருத்து) பிடித்தோ பிடிக்காமலோ (என்னை நீங்கள் பாராட்டுகிறீர்கள். நான் வகித்த இந்தப் பதவி இறைவனிடம்) எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்த நிலையில் இதிóருந்து நான் தப்பித்தாலே போதும் என்றே விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போது(தான் பதவியைச் சுமந் தேன் என்றால், எனக்குப்பின் ஒருவரை நியமிப்பதன் மூல)ம் இறந்தபிறகும் இதைச் சுமக்க நான் தயாராயில்லை” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 93
7219. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ سَمِعَ خُطْبَةَ، عُمَرَ الآخِرَةَ حِينَ جَلَسَ عَلَى الْمِنْبَرِ، وَذَلِكَ الْغَدُ مِنْ يَوْمٍ تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَتَشَهَّدَ وَأَبُو بَكْرٍ صَامِتٌ لاَ يَتَكَلَّمُ قَالَ كُنْتُ أَرْجُو أَنْ يَعِيشَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى يَدْبُرَنَا ـ يُرِيدُ بِذَلِكَ أَنْ يَكُونَ آخِرَهُمْ ـ فَإِنْ يَكُ مُحَمَّدٌ صلى الله عليه وسلم قَدْ مَاتَ، فَإِنَّ اللَّهَ تَعَالَى قَدْ جَعَلَ بَيْنَ أَظْهُرِكُمْ نُورًا تَهْتَدُونَ بِهِ بِمَا هَدَى اللَّهُ مُحَمَّدًا صلى الله عليه وسلم وَإِنَّ أَبَا بَكْرٍ صَاحِبُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثَانِي اثْنَيْنِ، فَإِنَّهُ أَوْلَى الْمُسْلِمِينَ بِأُمُورِكُمْ، فَقُومُوا فَبَايِعُوهُ. وَكَانَتْ طَائِفَةٌ مِنْهُمْ قَدْ بَايَعُوهُ قَبْلَ ذَلِكَ فِي سَقِيفَةِ بَنِي سَاعِدَةَ، وَكَانَتْ بَيْعَةُ الْعَامَّةِ عَلَى الْمِنْبَرِ. قَالَ الزُّهْرِيُّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ سَمِعْتُ عُمَرَ يَقُولُ لأَبِي بَكْرٍ يَوْمَئِذٍ اصْعَدِ الْمِنْبَرَ. فَلَمْ يَزَلْ بِهِ حَتَّى صَعِدَ الْمِنْبَرَ، فَبَايَعَهُ النَّاسُ عَامَّةً.
பாடம்: 51 ஆட்சித் தலைவர் (தமக்குப் பிறகு ஓர் ஆட்சித் தலைவரையோ, அல்லது அவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு குழுவையோ) நியமிப்பது 7217காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி நாட்களில் நோயுற்றிருந்தபோது) ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! என் தலை(வலி)யே!” என்று (தமக்கு ஏற்பட்ட தலைவலியின் கடுமையால்) சொல்ல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உயிரோடிருக்கும்போதே உனக்கு அது (இறப்பு) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காகப் பிரார்த்திப்பேன்” என்று சொன்னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்துபோக வேண்டுமென்றே நீங்கள் விருப்பப்படுவதாக நான் எண்ணுகிறேன். நான் இறந்து போய்விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (எனது இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள் (என்னை மறந்துவிடுவீர்கள்)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (புன்னகைத்துவிட்டு), “இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) ‘என் தலை(வலி)யே! என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன்மீதும் உன் குடும்பத்தார்மீதும் நான் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனாலேயே உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப்பின் என் பிரதிநிதியாக) அறிவித்துவிட விரும்பி னேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆக வேண்டும் என) எவரும் ஆசைப்படவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு அறிவிக்க விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூபக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்கமாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன். (ஆகவே தான் அறிவிக்கவில்லை)” என்று சொன்னார்கள்.81
7219. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இறந்த நாளுக்கு மறுநாள் (அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு பனூ சாஇதா மண்டபத்தில் பிரமுகர்கள் வாக்களித்து ‘பைஅத்’ செய்தபிறகு பள்ளிவாசல் வந்து) சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது அமர்ந்தபடி உமர் (ரலி) அவர்கள் ஆற்றிய இரண்டாம் உரையை நான் செவியுற்றேன். உமர் (ரலி) அவர்கள் ஓரிறை உறுதிமொழி கூறினார்கள். (அப்போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் ஏதும் பேசாமல் மௌனமாயிருந்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நமக்கெல்லாம் இறுதியாகத்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பார்கள்; அதுவரை உயிர் வாழ்வார் கள் என்றே நான் எதிர்பார்த்திருந்தேன். ஆனால், முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்; என்றாலும், உயர்ந்தோன் அல்லாஹ் நீங்கள் நல்வழியில் செல்ல உங்களிடையே (குர்ஆன் எனும்) ஓர் ஒளியை அமைத்துள்ளான்; முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு அதன் மூலமே அல்லாஹ் நல்வழி காட்டினான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழரும் (ஸவ்ர் மலைக் குகையில் இருந்த) இரண்டு பேரில் இரண்டாமவருமான அபூபக்ர் (ரலி) அவர்களே உங்களின் (ஆட்சியதிகார) விவகாரங்களுக்கு மக்களிலேயே மிகவும் தகுதி வாய்ந்தவர் ஆவார்கள். எனவே, அன்னாரிடம் (ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்து) விசுவாசப் பிரமாணம் செய்துகொடுங்கள்.

நபித்தோழர்களில் ஒரு சாரார் அதற்கு முன்பே பனூ சாஇதா மண்டபத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்துவிட்டிருந் தார்கள். ஆனால், பொதுமக்களின் விசுவாசப் பிரமாணம் (இரண்டாம் நாள்) சொற்பொழிவு மேடையில் வைத்தே நடந்தது.

அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில், “அன்றைய தினம் உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம், சொற்பொழிவு மேடையில் ஏறுங்கள் என்று வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள்; இறுதியில், அபூபக்ர் (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை யில் ஏற, அவர்களுக்குப் பொதுமக்கள் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள் என்று கூறப்பட்டுள்ளது.


அத்தியாயம் : 93
7220. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، قَالَ أَتَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم امْرَأَةٌ فَكَلَّمَتْهُ فِي شَىْءٍ فَأَمَرَهَا أَنْ تَرْجِعَ إِلَيْهِ، قَالَتْ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ إِنْ جِئْتُ وَلَمْ أَجِدْكَ، كَأَنَّهَا تُرِيدُ الْمَوْتَ، قَالَ "" إِنْ لَمْ تَجِدِينِي فَأْتِي أَبَا بَكْرٍ "".
பாடம்: 51 ஆட்சித் தலைவர் (தமக்குப் பிறகு ஓர் ஆட்சித் தலைவரையோ, அல்லது அவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு குழுவையோ) நியமிப்பது 7217காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி நாட்களில் நோயுற்றிருந்தபோது) ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! என் தலை(வலி)யே!” என்று (தமக்கு ஏற்பட்ட தலைவலியின் கடுமையால்) சொல்ல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உயிரோடிருக்கும்போதே உனக்கு அது (இறப்பு) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காகப் பிரார்த்திப்பேன்” என்று சொன்னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்துபோக வேண்டுமென்றே நீங்கள் விருப்பப்படுவதாக நான் எண்ணுகிறேன். நான் இறந்து போய்விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (எனது இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள் (என்னை மறந்துவிடுவீர்கள்)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (புன்னகைத்துவிட்டு), “இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) ‘என் தலை(வலி)யே! என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன்மீதும் உன் குடும்பத்தார்மீதும் நான் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனாலேயே உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப்பின் என் பிரதிநிதியாக) அறிவித்துவிட விரும்பி னேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆக வேண்டும் என) எவரும் ஆசைப்படவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு அறிவிக்க விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூபக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்கமாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன். (ஆகவே தான் அறிவிக்கவில்லை)” என்று சொன்னார்கள்.81
7220. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒருபெண் வந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு விஷயம் குறித்துப் பேசினார். நபி (ஸல்) அவர்கள் மறுபடியும் தம்மிடம் வருமாறு அவளுக்குக் கட்டளையிட்டார்கள். அவள், “அல்லாஹ்வின் தூதரே! சொல்லுங்கள். நான் வந்து உங்களைக் காணவில்லையென்றால்..?” என்று -தான் வருவதற்குள் நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டால் என்ன செய்வது என்ற கருத்தில்- கேட்டாள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீ என்னைக் காணவில்லை என்றால் அபூபக்ரிடம் செல்” என்று பதிலளித்தார்கள்.82


அத்தியாயம் : 93
7221. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي قَيْسُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ قَالَ لِوَفْدِ بُزَاخَةَ تَتْبَعُونَ أَذْنَابَ الإِبِلِ حَتَّى يُرِيَ اللَّهُ خَلِيفَةَ نَبِيِّهِ صلى الله عليه وسلم وَالْمُهَاجِرِينَ أَمْرًا يَعْذِرُونَكُمْ بِهِ.
பாடம்: 51 ஆட்சித் தலைவர் (தமக்குப் பிறகு ஓர் ஆட்சித் தலைவரையோ, அல்லது அவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு குழுவையோ) நியமிப்பது 7217காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி நாட்களில் நோயுற்றிருந்தபோது) ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! என் தலை(வலி)யே!” என்று (தமக்கு ஏற்பட்ட தலைவலியின் கடுமையால்) சொல்ல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உயிரோடிருக்கும்போதே உனக்கு அது (இறப்பு) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காகப் பிரார்த்திப்பேன்” என்று சொன்னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்துபோக வேண்டுமென்றே நீங்கள் விருப்பப்படுவதாக நான் எண்ணுகிறேன். நான் இறந்து போய்விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (எனது இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள் (என்னை மறந்துவிடுவீர்கள்)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (புன்னகைத்துவிட்டு), “இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) ‘என் தலை(வலி)யே! என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன்மீதும் உன் குடும்பத்தார்மீதும் நான் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனாலேயே உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப்பின் என் பிரதிநிதியாக) அறிவித்துவிட விரும்பி னேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆக வேண்டும் என) எவரும் ஆசைப்படவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு அறிவிக்க விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூபக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்கமாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன். (ஆகவே தான் அறிவிக்கவில்லை)” என்று சொன்னார்கள்.81
7221. தாரிக் பின் ஷிஹாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் ‘புஸாகா’ எனும் குலத்தாரின் தூதுக் குழுவிடம் “உங்களை மன்னிப்பதற்கான காரணம் ஒன்றை இறைத்தூதரின் பிரதிநிதி(யான என)க்கும் முஹாஜிர்களுக்கும் அல்லாஹ் காட்டும்வரை நீங்கள் ஒட்ட கங்களின் வால்களைப் பின்தொடர்ந்து (நாடோடிகளாகச்) சென்றுகொண்டிருங்கள்” என்று கூறினார்கள்.83


அத்தியாயம் : 93
7222. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ " يَكُونُ اثْنَا عَشَرَ أَمِيرًا ـ فَقَالَ كَلِمَةً لَمْ أَسْمَعْهَا فَقَالَ أَبِي إِنَّهُ قَالَ ـ كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ ".
பாடம்: 51 ஆட்சித் தலைவர் (தமக்குப் பிறகு ஓர் ஆட்சித் தலைவரையோ, அல்லது அவரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு குழுவையோ) நியமிப்பது 7217காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்கள் தம் இறுதி நாட்களில் நோயுற்றிருந்தபோது) ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! என் தலை(வலி)யே!” என்று (தமக்கு ஏற்பட்ட தலைவலியின் கடுமையால்) சொல்ல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உயிரோடிருக்கும்போதே உனக்கு அது (இறப்பு) ஏற்பட்டுவிட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி உனக்காகப் பிரார்த்திப்பேன்” என்று சொன்னார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “அந்தோ! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (விரைவில்) இறந்துபோக வேண்டுமென்றே நீங்கள் விருப்பப்படுவதாக நான் எண்ணுகிறேன். நான் இறந்து போய்விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே (எனது இல்லம் சென்று) நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள் (என்னை மறந்துவிடுவீர்கள்)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (புன்னகைத்துவிட்டு), “இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது); நான்தான் (இப்போது) ‘என் தலை(வலி)யே! என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன்மீதும் உன் குடும்பத்தார்மீதும் நான் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனாலேயே உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப்பின் என் பிரதிநிதியாக) அறிவித்துவிட விரும்பி னேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லிவிடவோ, (தாமே கலீஃபாவாக ஆக வேண்டும் என) எவரும் ஆசைப்படவோ கூடாது என்பதற்காகவே (இவ்வாறு அறிவிக்க விரும்பினேன்). ஆனால், பின்னர் (அபூபக்ரைத் தவிர வேறொருவரைப் பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்கமாட்டான்; இறைநம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்கமாட்டார்கள் என (எனக்கு நானே) சொல்லிக்கொண்டேன். (ஆகவே தான் அறிவிக்கவில்லை)” என்று சொன்னார்கள்.81
7222. ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள், “பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் வருவார்கள்” என்று சொல்ல நான் கேட்டேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், நான் (சரிவரக்) கேட்காத ஒரு சொல்லையும் சொன்னார்கள். (அது என்னவென்று விசாரித்தபோது) என் தந்தை (சமுரா-ரலி) அவர்கள், “அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்” என்று (நபி (ஸல்) அவர்கள்) சொன்னார்கள் எனக் கூறினார்கள்.84

அத்தியாயம் : 93
7224. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِحَطَبٍ يُحْتَطَبُ، ثُمَّ آمُرَ بِالصَّلاَةِ فَيُؤَذَّنَ لَهَا، ثُمَّ آمُرَ رَجُلاً فَيَؤُمَّ النَّاسَ، ثُمَّ أُخَالِفَ إِلَى رِجَالٍ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ يَعْلَمُ أَحَدُكُمْ أَنَّهُ يَجِدُ عَرْقًا سَمِينًا أَوْ مَرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ لَشَهِدَ الْعِشَاءَ "". قَالَ مُحَمَّدُ بْنُ يُوسُفَ قَالَ يُونُسُ قَالَ مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ مِرْمَاةٌ مَا بَيْنَ ظِلْفِ الشَّاةِ مِنَ اللَّحْمِ مِثْلُ مِنْسَاةٍ وَمِيضَاةٍ. الْمِيمُ مَخْفُوضَةٌ.
பாடம்: 52 (வெளிப்படையாகத்) தெரிந்து கொண்டபிறகு சச்சரவு செய் வோரையும் சந்தேகத்திற்குரி யோரையும் வீட்டிலிருந்து வெளியேற்றுவது அபூபக்ர் (ரலி) அவர்களின் சகோதரி (அபூபக்ர் (ரலி) அவர்கள் இறந்துவிட்ட தற்காக) ஒப்பாரிவைத்தபோது, அவரை உமர் (ரலி) அவர்கள் (வீட்டைவிட்டு) வெளியேற்றினார்கள்.
7224. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டுவந்து சுள்ளிகளாக உடைக்கும் படி நான் உத்தரவு பிறப்பித்துவிட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்புச் செய்யும்படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுவிக்கும்படி ஒருவருக்குக் கட்டளையிட்டுவிட்டு, (கூட்டுத் தொழுகைக்கு வராமல் இருக் கும்) மனிதர்களைத் தேடிச்சென்று, அவர்களின் வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்துவிட வேண்டுமென நான் எண்ணியதுண்டு.85

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஒரு எலும்போ அல்லது ஆட்டின் இரு குளம்புகளுக்கிடையேயுள்ள இறைச்சித் துண்டுகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் ‘இஷா’ தொழுகையில் கலந்துகொள்வார்.

முஹம்மத் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘மிர்மாத்’ என்பது ஆட்டின் குளம்புகளுக்கிடையே உள்ள இறைச்சியைக் குறிக்கும். இது (வாய்ப்பாட்டில்) ‘மின்ஸாத்’ மற்றும் ‘மீளாத்’ போன்றதாகும். இதிலுள்ள ‘மீம்’ எனும் எழுத்துக்கு ‘இகர’ அடையாளம் (‘கஸர்’) உண்டு.

அத்தியாயம் : 93
7225. حَدَّثَنِي يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ كَعْبِ بْنِ مَالِكٍ ـ وَكَانَ قَائِدَ كَعْبٍ مِنْ بَنِيهِ حِينَ عَمِيَ ـ قَالَ سَمِعْتُ كَعْبَ بْنَ مَالِكٍ، قَالَ لَمَّا تَخَلَّفَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ ـ فَذَكَرَ حَدِيثَهُ ـ وَنَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمُسْلِمِينَ عَنْ كَلاَمِنَا، فَلَبِثْنَا عَلَى ذَلِكَ خَمْسِينَ لَيْلَةً، وَآذَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِتَوْبَةِ اللَّهِ عَلَيْنَا.
பாடம்: 53 தலைவர் குற்றவாளிகளையும் பாவிகளையும் தம்முடன் பேசுவது, தம்மைச் சந்திப்பது போன்றவற்றிலிருந்து தடை செய்யலாமா?
7225. கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தபூக் போருக்குச் செல் லாமல் பின்வாங்கியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களுடன் பேச வேண்டாம் என்று முஸ்லிம்களுக்குத் தடை விதித்தார்கள். இந்த நிலையிலேயே நாங்கள் ஐம்பது நாட்கள் இருந்தோம். பிறகு அல்லாஹ் எங்களை மன்னித்த செய்தியை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களிட மிருந்து அவர்களின் புதல்வர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கிறார்கள். அன்னார்தான் தம் தந்தை கஅப் (ரலி) அவர்கள் (முதுமையடைந்து) கண்பார்வை இழந்துவிட்டபோது அவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் செல்பவர்களாக இருந்தார்கள்.86

அத்தியாயம் : 93

7226. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، حَدَّثَنِي اللَّيْثُ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْلاَ أَنَّ رِجَالاً يَكْرَهُونَ أَنْ يَتَخَلَّفُوا بَعْدِي وَلاَ أَجِدُ مَا أَحْمِلُهُمْ مَا تَخَلَّفْتُ، لَوَدِدْتُ أَنِّي أُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ، ثُمَّ أُحْيَا ثُمَّ أُقْتَلُ، ثُمَّ أُحْيَا ثُمَّ أُقْتَلُ، ثُمَّ أُحْيَا ثُمَّ أُقْتَلُ "".
பாடம்: 1 எதிர்பார்ப்பு குறித்து வந்துள்ள வையும், (இறைவழியில்) உயிர்த்தியாகம் செய்வதை எதிர்பார்ப்பதும்
7226. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! என்னுடன் (அறப்போரில்) கலந்துகொள்ளாமல் பின்தங்கிவிடுவதைப் பலரும் விரும்ப மாட்டார்கள்; (அதே நேரத்தில்) அவர்கள் அனைவரையும் ஏற்றிச் செல்வ தற்கு என்னிடம் வாகன வசதி கிடையாது. இந்நிலை மட்டும் இல்லாதிருப்பின், நான் (எந்தப் போரிலும்) கலந்துகொள்ளாமல் பின்தங்கியிருக்கமாட்டேன். (ஒன்றுவிடாமல் அனைத்திலும் கலந்து கொண்டிருப்பேன்.)

நான் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டுப் பிறகு உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப் பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மீண்டும் கொல்லப்பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மறுபடியும் கொல்லப் படுவதையே நான் விரும்புகிறேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 94
7227. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" وَالَّذِي نَفْسِي بِيَدِهِ وَدِدْتُ أَنِّي لأُقَاتِلُ فِي سَبِيلِ اللَّهِ فَأُقْتَلُ ثُمَّ أُحْيَا ثُمَّ أُقْتَلُ، ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ، ثُمَّ أُحْيَا، ثُمَّ أُقْتَلُ، ثُمَّ أُحْيَا "". فَكَانَ أَبُو هُرَيْرَةَ يَقُولُهُنَّ ثَلاَثًا أَشْهَدُ بِاللَّهِ.
பாடம்: 1 எதிர்பார்ப்பு குறித்து வந்துள்ள வையும், (இறைவழியில்) உயிர்த்தியாகம் செய்வதை எதிர்பார்ப்பதும்
7227. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நான் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப் பட்டுப் பிறகு உயிர் கொடுக்கப்பட்டு, பிறகு கொல்லப்பட்டு மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு, மறுபடியும் கொல்லப்படுவதையே விரும்புகிறேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃரஜ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் இந்தச் சொற்களை மும்முறை கூறினார்கள் என்பதற்கு நான் அல்லாஹ்வை முன்வைத்து சாட்சியம் கூறுகிறேன்.

அத்தியாயம் : 94
7228. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لَوْ كَانَ عِنْدِي أُحُدٌ ذَهَبًا، لأَحْبَبْتُ أَنْ لاَ يَأْتِيَ ثَلاَثٌ وَعِنْدِي مِنْهُ دِينَارٌ، لَيْسَ شَىْءٌ أُرْصِدُهُ فِي دَيْنٍ عَلَىَّ أَجِدُ مَنْ يَقْبَلُهُ "".
பாடம்: 2 நன்மையை எதிர்பார்த்தல் ‘உஹுத் மலை அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்தாலும்...’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.3
7228. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னிடம் உஹுத் மலை அளவுக்குத் தங்கம் இருந்தாலும், அதிலிருந்து ஒரு பொற்காசு என்னிடம் (எஞ்சி) இருந்து அதைப் பெற்றுக்கொள்பவரை நான் அடையும் நிலையில் மூன்று நாட்கள் கழிவதைக்கூட நான் விரும்பமாட்டேன்; கடனை அடைப்பதற்காக நான் (அதிóருந்து) எடுத்துவைக்கும் சிறிதளவு (தங்கத்தைத்) தவிர.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 94
7229. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي عُرْوَةُ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا سُقْتُ الْهَدْىَ، وَلَحَلَلْتُ مَعَ النَّاسِ حِينَ حَلُّوا "".
பாடம்: 3 “பின்னால் நான் அறிந்துகொண் டதை முன்பே அறிந்திருந்தால்...” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது4
7229. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் பின்னால் அறிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால் (என்னுடன்) குர்பானி பிராணியைக் கொண்டு வந்திருக்கமாட்டேன்; மேலும், மக்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டபோதே நானும் (இஹ்ராமிலிருந்து) விடுபட்டிருப்பேன்.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 94
7230. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا يَزِيدُ، عَنْ حَبِيبٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَبَّيْنَا بِالْحَجِّ وَقَدِمْنَا مَكَّةَ لأَرْبَعٍ خَلَوْنَ مِنْ ذِي الْحِجَّةِ، فَأَمَرَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ نَطُوفَ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ، وَأَنْ نَجْعَلَهَا عُمْرَةً وَلْنَحِلَّ، إِلاَّ مَنْ كَانَ مَعَهُ هَدْىٌ قَالَ وَلَمْ يَكُنْ مَعَ أَحَدٍ مِنَّا هَدْىٌ غَيْرَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَطَلْحَةَ، وَجَاءَ عَلِيٌّ مِنَ الْيَمَنِ مَعَهُ الْهَدْىُ فَقَالَ أَهْلَلْتُ بِمَا أَهَلَّ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا نَنْطَلِقُ إِلَى مِنًى وَذَكَرُ أَحَدِنَا يَقْطُرُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنِّي لَوِ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ مَا أَهْدَيْتُ، وَلَوْلاَ أَنَّ مَعِي الْهَدْىَ لَحَلَلْتُ "". قَالَ وَلَقِيَهُ سُرَاقَةُ وَهْوَ يَرْمِي جَمْرَةَ الْعَقَبَةِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَلَنَا هَذِهِ خَاصَّةً قَالَ "" لاَ بَلْ لأَبَدٍ "". قَالَ وَكَانَتْ عَائِشَةُ قَدِمَتْ مَكَّةَ وَهْىَ حَائِضٌ، فَأَمَرَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تَنْسُكَ الْمَنَاسِكَ كُلَّهَا، غَيْرَ أَنَّهَا لاَ تَطُوفُ وَلاَ تُصَلِّي حَتَّى تَطْهُرَ، فَلَمَّا نَزَلُوا الْبَطْحَاءَ قَالَتْ عَائِشَةُ يَا رَسُولَ اللَّهِ أَتَنْطَلِقُونَ بِحَجَّةٍ وَعُمْرَةٍ وَأَنْطَلِقُ بِحَجَّةٍ. قَالَ ثُمَّ أَمَرَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ أَنْ يَنْطَلِقَ مَعَهَا إِلَى التَّنْعِيمِ، فَاعْتَمَرَتْ عُمْرَةً فِي ذِي الْحَجَّةِ بَعْدَ أَيَّامِ الْحَجِّ.
பாடம்: 3 “பின்னால் நான் அறிந்துகொண் டதை முன்பே அறிந்திருந்தால்...” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது4
7230. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜுக்காக (இஹ்ராம் கட்டி) ‘தல்பியா’ சொன்னோம். துல்ஹிஜ்ஜா மாதம் நான்காம் நாள் நாங்கள் மக்கா வந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இறையில்லம் கஅபாவையும் ஸஃபா-மர்வாவையும் சுற்றி (தவாஃபும் சஃயும் செய்து)விட்டு, தம்முடன் குர்பானி பிராணி கொண்டுவந்தவர்களைத் தவிர மற்றவர்கள் அந்த ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கி, இஹ்ராமிóருந்து விடுபட்டுக்கொள்ளுமாறு உத்தர விட்டார்கள்.

நபி (ஸல்) அவர்களையும் தல்ஹா (ரலி) அவர்களையும் தவிர எங்களில் வேறு யாரிடமும் குர்பானி பிராணி இருக்கவில்லை. அலீ (ரலி) அவர்கள் குர்பானி பிராணியுடன் யமன் நாட்டி óருந்து வந்தார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்-உம்ரா ஆகிய இரண்டில்) எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காக நானும் இஹ்ராம் கட்டினேன்” என அவர்கள் கூறினார்கள். அப்போது மக்கள் (சிலர்), “தாம்பத்திய உறவு கொண்ட கையோடு நாங்கள் ‘மினா’விற்குச் செல்ல வேண்டுமா?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(ஹஜ் பருவத்தில் உம்ரா செய்யலாம் என) நான் இப்போது அறிந்ததை முன்கூட்டியே அறிந்திருந்தால் (பலியிட) குர்பானி பிராணி கொண்டுவந்திருக்கமாட்டேன்; நான் என்னுடன் குர்பானி பிராணியை கொண்டுவந்திருக்காவிடில் இஹ்ராமிலிருந்து நான் விடுபட்டிருப்பேன்” என்று கூறினார்கள்.

(இதையடுத்து) ஜம்ரத்துல் அகபாவில் நபி (ஸல்) அவர்கள் கல்லெறிந்து கொண்டிருக்கையில் அவர்களை சுராக்கா பின் மாலிக் (ரலி) அவர்கள் சந்தித்து, “அல்லாஹ்வின் தூதரே! இ(வ்வாறு ஹஜ்ஜை உம்ராவாக மாற்றிக்கொள்வ)து, எங்களுக்கு மட்டும் உரியதா? (எல்லாத் தலைமுறையினருக்கும் பொதுவானதா)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், “இல்லை! எல்லாக் காலத்து (மக்களு)க் கும் உரியது” என்று பதிலளித்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் மாத விடாயோடு மக்காவிற்கு நபி (ஸல்) அவர்களுடன் வந்திருந்தார்கள். “ஹஜ்ஜுக் கிரியைகள் அனைத்தையும் செய்யலாம்; ஆனால், மாதவிடாயிலிருந்து தூய்மையடையும்வரை இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாது; தொழக் கூடாது” என்று ஆயிஷாவுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். நபியவர்களும் மக்களும் ‘அல்பத்ஹா’ எனும் இடத்தில் தங்கியபோது ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (எல்லாரும்) ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றிச் செல்ல, நான் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றிச் செல்வதா?” என்று (மனக்குறையுடன்) கேட்டார்கள்.

ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்களை(த் தம் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களுடன் ‘தன்யீம்’ என்ற இடத்திற்குச் செல்லுமாறு கட்டளையிட்டார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (அங்கு சென்று உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிக்கொண்டு) துல்ஹிஜ்ஜா மாதத்தில் ஹஜ் நாட்கள் கழிந்தபின் ஓர் உம்ராவை நிறைவேற்றினார்கள்.5

அத்தியாயம் : 94
7231. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَامِرِ بْنِ رَبِيعَةَ، قَالَ قَالَتْ عَائِشَةُ أَرِقَ النَّبِيُّ صلى الله عليه وسلم ذَاتَ لَيْلَةٍ فَقَالَ "" لَيْتَ رَجُلاً صَالِحًا مِنْ أَصْحَابِي يَحْرُسُنِي اللَّيْلَةَ "". إِذْ سَمِعْنَا صَوْتَ السِّلاَحِ قَالَ "" مَنْ هَذَا "". قِيلَ سَعْدٌ يَا رَسُولَ اللَّهِ جِئْتُ أَحْرُسُكَ. فَنَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى سَمِعْنَا غَطِيطَهُ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ وَقَالَتْ عَائِشَةُ قَالَ بِلاَلٌ أَلاَ لَيْتَ شِعْرِي هَلْ أَبِيتَنَّ لَيْلَةً بِوَادٍ وَحَوْلِي إِذْخِرٌ وَجَلِيلُ فَأَخْبَرْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم.
பாடம்: 4 நபி (ஸல்) அவர்கள் இன்னின்னவாறு இருக்கக் கூடாதா என்று (ஆதங்கப்பட்டுச்) சொன்னது6
7231. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு வந்த புதிதில்) ஓர் இரவில் கண் விழித்திருந்தார்கள். பின்னர் (ஒருநாள்), “என்னை இரவில் காவல் காப்பதற்கு என் தோழர்களில் ஏற்ற ஒருவர் வேண்டுமே?” என்று கூறினார்கள், அப்போது நாங்கள் ஆயுதத்தின் ஓசையைக் கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், “யார் அங்கே?” என்று கேட்டார்கள். வந்தவர், “நான்தான் சஅத், அல்லாஹ்வின் தூதரே! தங்களைக் காவல் காப்பதற்காக வந்தேன்” என்று கூறினார்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், நாங்கள் அவர்களின் குறட்டைச் சப்தத்தை கேட்குமளவுக்கு (நிம்மதியாக) உறங்கி னார்கள்.7

அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகின் றேன்:

பிலால் (ரலி) அவர்கள் (மதீனாவில் காய்ச்சல்கண்டு நிவாரணமடைந்த போது),

‘இத்கிர்’ (நறுமணப்) புல்லும்’ஜலீல்’ (கூரைப்) புல்லும்என்னைச் சூழ்ந்திருக்க ...(மக்காவின்) பள்ளத்தாக்கில்ஓர் இராப் பொழுதையேனும்நான் கழிப்பேனா?”

என்ற கவிதையைக் கூறினார்கள். அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.8

அத்தியாயம் : 94
7232. حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تَحَاسُدَ إِلاَّ فِي اثْنَتَيْنِ رَجُلٌ آتَاهُ اللَّهُ الْقُرْآنَ، فَهْوَ يَتْلُوهُ آنَاءَ اللَّيْلِ وَالنَّهَارِ يَقُولُ لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ هَذَا لَفَعَلْتُ كَمَا يَفْعَلُ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالاً يُنْفِقُهُ فِي حَقِّهِ فَيَقُولُ لَوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ لَفَعَلْتُ كَمَا يَفْعَلُ "". حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا جَرِيرٌ، بِهَذَا.
பாடம்: 5 குர்ஆனையும் கல்வியறிவையும் பெறுவதற்கு ஆசைப்படுவது
7232. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமைப்படலாகாது: 1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் குர்ஆனின் அறிவை வழங்கினான். அவர் அதைக் காலையும் மாலையும் ஓதிவருகிறார். (இதைக் கண்ட) மற்றொருவர், “இவருக்குக் கொடுக்கப்பட்டதைப் போன்று எனக்கும் கொடுக்கப்பட்டிருந்தால் இவர் செய்வதைப் போன்று நானும் செய்திருப்பேன்” என்று (ஆதங்கத்துடன்) சொல்கிறார்.

2. மற்றொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அவர் அதை உரிய வழியில் செலவிடுகிறார். (இதைக் காணும்) மற்றொருவர், “இவருக்குக் கொடுக்கப்பட்டதைப் போன்று எனக்கும் கொடுக்கப்பட்டிருந்தால் இவர் செய்வ தைப் போன்று நானும் செய்திருப்பேன்” என்று (ஆதங்கத்துடன்) சொல்கிறார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.9

-ஜரீர் பின் அப்தில் ஹமீத் (ரஹ்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை குதைபா (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

அத்தியாயம் : 94
7233. حَدَّثَنَا حَسَنُ بْنُ الرَّبِيعِ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ عَاصِمٍ، عَنِ النَّضْرِ بْنِ أَنَسٍ، قَالَ قَالَ أَنَسٌ ـ رضى الله عنه ـ لَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" لاَ تَتَمَنَّوُا الْمَوْتَ "" لَتَمَنَّيْتُ.
பாடம்: 6 விரும்பத் தகாத எதிர்பார்ப்பு (அல்லாஹ் கூறுகின்றான்:) உங்களில் சிலரைவிட வேறுசிலரை எதில் அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளானோ அதன் மேல் நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் தேடிக் கொண்டதில் (உரிய) பங்கு உண்டு. பெண்களுக்கும் அவர்கள் தேடிக்கொண்டதில் (உரிய) பங்கு உண்டு. அல்லாஹ்விடமே அவனது அருளைக் கேளுங்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (4:32)
7233. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“இறப்பை (எதிர்பார்த்து) ஆசைப் படாதீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றிருக்காவிட்டால், (இறப்பின் மீது) ஆசைகொண்டிருப் பேன்.

இதை நள்ர் பின் அனஸ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 94
7234. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنِ ابْنِ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسٍ، قَالَ أَتَيْنَا خَبَّابَ بْنَ الأَرَتِّ نَعُودُهُ وَقَدِ اكْتَوَى سَبْعًا فَقَالَ لَوْلاَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَانَا أَنْ نَدْعُوَ بِالْمَوْتِ لَدَعَوْتُ بِهِ.
பாடம்: 6 விரும்பத் தகாத எதிர்பார்ப்பு (அல்லாஹ் கூறுகின்றான்:) உங்களில் சிலரைவிட வேறுசிலரை எதில் அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளானோ அதன் மேல் நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் தேடிக் கொண்டதில் (உரிய) பங்கு உண்டு. பெண்களுக்கும் அவர்கள் தேடிக்கொண்டதில் (உரிய) பங்கு உண்டு. அல்லாஹ்விடமே அவனது அருளைக் கேளுங்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (4:32)
7234. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்களை உடல்நலம் விசாரிக்கச் சென்றோம். (கடும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெறுவதற்காகத் தமது வயிற்றில்) அவர்கள் ஏழு முறை சூடுபோட்டி ருந்தார்கள். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரணத்தை வேண்டிப் பிரார்த்தனை செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்திருக்காவிட்டால், அதை வேண்டி நான் பிரார்த்தனை புரிந்திருப்பேன்” என்று சொன்னார்கள்.10


அத்தியாயம் : 94
7235. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي عُبَيْدٍ ـ اسْمُهُ سَعْدُ بْنُ عُبَيْدٍ مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَزْهَرَ ـ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَتَمَنَّى أَحَدُكُمُ الْمَوْتَ إِمَّا مُحْسِنًا فَلَعَلَّهُ يَزْدَادُ، وَإِمَّا مُسِيئًا فَلَعَلَّهُ يَسْتَعْتِبُ "".
பாடம்: 6 விரும்பத் தகாத எதிர்பார்ப்பு (அல்லாஹ் கூறுகின்றான்:) உங்களில் சிலரைவிட வேறுசிலரை எதில் அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளானோ அதன் மேல் நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் தேடிக் கொண்டதில் (உரிய) பங்கு உண்டு. பெண்களுக்கும் அவர்கள் தேடிக்கொண்டதில் (உரிய) பங்கு உண்டு. அல்லாஹ்விடமே அவனது அருளைக் கேளுங்கள். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான். (4:32)
7235. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் மரணத்தை விரும்ப வேண்டாம். ஒன்று அவர் நல்லவராக இருப்பார்; (அவர் உயிர்வாழ்வதன் மூலம் நன்மையை) அவர் அதிகமாக்கிக் கொள்ளலாம். அல்லது அவர் தீயவராக இருப்பார்; அவர் (உயிர்வாழ்வதால்) மனம் திருந்தக்கூடும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.11

அத்தியாயம் : 94
7236. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَنْقُلُ مَعَنَا التُّرَابَ يَوْمَ الأَحْزَابِ، وَلَقَدْ رَأَيْتُهُ وَارَى التُّرَابُ بَيَاضَ بَطْنِهِ يَقُولُ "" لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا نَحْنُ، وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا، فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا، إِنَّ الأُلَى وَرُبَّمَا قَالَ الْمَلاَ قَدْ بَغَوْا عَلَيْنَا، إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا "" أَبَيْنَا يَرْفَعُ بِهَا صَوْتَهُ.
பாடம்: 7 “அல்லாஹ் இல்லாவிட்டால் நாங்கள் நல்வழி அடைந்திருக்க மாட்டோம்” என்று ஒருவர் சொல்வது
7236. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின்போது எங்களுடன் நபி (ஸல்) அவர்களும் மண்ணைச் சுமந்து எடுத்துவந்தார்கள். அவர்கள் (சுமந்துவந்த) மண் அவர்களது வயிற்றின் வெண்மையை மறைத்திருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவர்கள்,

“(இறைவா!) நீ இல்லாவிட்டால்நாங்கள் நல்வழி அடைந்திருக்கமாட்டோம்.நாங்கள் தர்மம் செய்யதிருக்கவுமாட்டோம்;தொழுதிருக்கவுமாட்டோம்.ஆகவே, எங்கள்மீது அமைதியை இறக்கியருள்வாயாக!

‘இவர்கள்’ அல்லது ‘(குறைஷித்) தலைவர்கள்’ எங்கள்மீது அக்கிரமம் புரிந்துவிட்டார்கள்.

இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால்

அதற்கு நாங்கள் இடமளிக்கமாட்டோம்”

என்று (இறுதி வரியைக்) குரலை உயர்த்தி (பாடலில்) கூறினார்கள்.12

அத்தியாயம் : 94