5467. حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ حَدَّثَنِي بُرَيْدٌ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ وُلِدَ لِي غُلاَمٌ، فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَمَّاهُ إِبْرَاهِيمَ، فَحَنَّكَهُ بِتَمْرَةٍ، وَدَعَا لَهُ بِالْبَرَكَةِ وَدَفَعَهُ إِلَىَّ، وَكَانَ أَكْبَرَ وَلَدِ أَبِي مُوسَى.
பாடம்: 1 அகீகா கொடுக்கப்படாத குழந்தைக்கு, அது பிறந்த நாளன்றே பெயர் சூட்டுவதும் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும்2
5467. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். அப்போது அவர்கள் ‘இப்ராஹீம்’ என அக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள். பிறகு, பேரீச்சம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் அதை இட்டார்கள். மேலும், அதற்காக வளம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தித்தார் கள். பிறகு என்னிடம் கொடுத்து விட்டார் கள்.

அக்குழந்தையே அபூமூசா (ரலி) அவர்களின் மூத்த குழந்தையாகும்.


அத்தியாயம் : 71
5468. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ أُتِيَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِصَبِيٍّ يُحَنِّكُهُ، فَبَالَ عَلَيْهِ، فَأَتْبَعَهُ الْمَاءَ.
பாடம்: 1 அகீகா கொடுக்கப்படாத குழந்தைக்கு, அது பிறந்த நாளன்றே பெயர் சூட்டுவதும் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும்2
5468. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் இனிப்புப் பொருளை மென்று வாயிலிடு வதற்காக ஆண் குழந்தை ஒன்று கொண்டு வரப்பட்டது. அது அவர்கள்மீது சிறுநீர் கழித்துவிட்டது. (சிறுநீர் கழித்த) இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் ஊற்றும்படி செய்தார்கள்.3


அத்தியாயம் : 71
5469. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ـ رضى الله عنهما ـ أَنَّهَا حَمَلَتْ بِعَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ بِمَكَّةَ قَالَتْ فَخَرَجْتُ وَأَنَا مُتِمٌّ، فَأَتَيْتُ الْمَدِينَةَ فَنَزَلْتُ قُبَاءً فَوَلَدْتُ بِقُبَاءٍ، ثُمَّ أَتَيْتُ بِهِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَوَضَعْتُهُ فِي حَجْرِهِ، ثُمَّ دَعَا بِتَمْرَةٍ فَمَضَغَهَا، ثُمَّ تَفَلَ فِي فِيهِ فَكَانَ أَوَّلَ شَىْءٍ دَخَلَ جَوْفَهُ رِيقُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ حَنَّكَهُ بِالتَّمْرَةِ، ثُمَّ دَعَا لَهُ فَبَرَّكَ عَلَيْهِ، وَكَانَ أَوَّلَ مَوْلُودٍ وُلِدَ فِي الإِسْلاَمِ، فَفَرِحُوا بِهِ فَرَحًا شَدِيدًا، لأَنَّهُمْ قِيلَ لَهُمْ إِنَّ الْيَهُودَ قَدْ سَحَرَتْكُمْ فَلاَ يُولَدُ لَكُمْ.
பாடம்: 1 அகீகா கொடுக்கப்படாத குழந்தைக்கு, அது பிறந்த நாளன்றே பெயர் சூட்டுவதும் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும்2
5469. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவில் (என் புதல்வர்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரை நான் கருவுற்றேன். கர்ப்ப காலம் முழுமையடைந்துவிட்ட நிலையில் புறப்பட்டு நான் மதீனா சென்றேன். (வழியில்) ‘குபா’வில் தங்கினேன். குபாவிலேயே எனக்குப் பிரசவமாகிவிட்டது. பிறகு குழந்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று அவர்களுடைய மடியில் வைத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம்பழத்தைக் கொண்டுவரச் சொல்லி அதை மென்று குழந்தையின் வாயில் உமிழ்ந்தார்கள். அப்துல்லாஹ்வின் வயிற்றுக்குள் சென்ற முதல் (உணவுப்) பொருள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உமிழ் நீராகத்தான் இருந்தது.

பிறகு, அவர்கள் பேரீச்சம்பழத்தை மென்று அப்துல்லாஹ்வின் வாயில் அதை இட்டார்கள். பின்னர், அப்துல்லாஹ்வுக்கு வளம் (பரக்கத்) வேண்டிப் பிரார்த்தனை செய்தார்கள். (என் புதல்வர்) அப்துல்லாஹ்தான் இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தையாவார். ஆகவே, முஸ்லிம்கள் அவர் பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஏனெனில், அவர்களிடம், ‘‘யூதர்கள் உங்களுக்குச் சூனியம் வைத்துவிட்டார்கள். ஆகவே, உங்களுக்கு (இனி) குழந்தை பிறக்காது” எனக் கூறப்பட்டுவந்தது.4


அத்தியாயம் : 71
5470. حَدَّثَنَا مَطَرُ بْنُ الْفَضْلِ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَوْنٍ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ ابْنٌ لأَبِي طَلْحَةَ يَشْتَكِي، فَخَرَجَ أَبُو طَلْحَةَ، فَقُبِضَ الصَّبِيُّ فَلَمَّا رَجَعَ أَبُو طَلْحَةَ قَالَ مَا فَعَلَ ابْنِي قَالَتْ أُمُّ سُلَيْمٍ هُوَ أَسْكَنُ مَا كَانَ. فَقَرَّبَتْ إِلَيْهِ الْعَشَاءَ فَتَعَشَّى، ثُمَّ أَصَابَ مِنْهَا، فَلَمَّا فَرَغَ قَالَتْ وَارِ الصَّبِيَّ. فَلَمَّا أَصْبَحَ أَبُو طَلْحَةَ أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ فَقَالَ "" أَعْرَسْتُمُ اللَّيْلَةَ "". قَالَ نَعَمْ. قَالَ "" اللَّهُمَّ بَارِكْ لَهُمَا "". فَوَلَدَتْ غُلاَمًا قَالَ لِي أَبُو طَلْحَةَ احْفَظْهُ حَتَّى تَأْتِيَ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَتَى بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَرْسَلَتْ مَعَهُ بِتَمَرَاتٍ، فَأَخَذَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَمَعَهُ شَىْءٌ "". قَالُوا نَعَمْ تَمَرَاتٌ. فَأَخَذَهَا النَّبِيُّ صلى الله عليه وسلم فَمَضَغَهَا، ثُمَّ أَخَذَ مِنْ فِيهِ فَجَعَلَهَا فِي فِي الصَّبِيِّ، وَحَنَّكَهُ بِهِ، وَسَمَّاهُ عَبْدَ اللَّهِ. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنِ ابْنِ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ، وَسَاقَ الْحَدِيثَ،.
பாடம்: 1 அகீகா கொடுக்கப்படாத குழந்தைக்கு, அது பிறந்த நாளன்றே பெயர் சூட்டுவதும் இனிப்பான பொருளை மென்று அதன் வாயிலிடுவதும்2
5470. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தாயார் உம்மு சுலைம் அவர்களின் இரண்டாவது கணவரான) அபூதல்ஹா (ரலி) அவர்களின் புதல்வர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இருந்தார். (ஒருமுறை) அபூதல்ஹா (ரலி) அவர்கள் வெளியே செல்ல அப்போது அந்தப் பையன்இறந்துவிட்டான். அபூதல்ஹா (ரலி) அவர்கள் திரும்பி வந்தபோது ‘‘என் மகன் என்ன ஆனான்?” என்று கேட்டார்கள். (அவருடைய துணைவியார்) உம்மு சுலைம் (துக்கத்தை வெளிக்காட்டாமல்), ‘‘அவன் முன்பைவிட நிம்மதியாக இருக்கிறான்” என்று பதிலளித்துவிட்டு, அவர்களுக்கு முன்னால் இரவு உணவை வைத்தார். அபூதல்ஹா (ரலி) அவர்கள் இரவு உணவை அருந்தினார்கள். பிறகு உம்மு சுலைம் அவர்களுடன் (அன்றிரவு) தாம்பத்திய உறவு கொண்டார்கள்.

உறவு கொண்டு முடித்தபோது, உம்மு சுலைம் அவர்கள் (தம் கணவரிடம் மகன் இறந்த விவரத்தைக் கூறி) ‘‘பையனை அடக்கம் செய்(ய ஏற்பாடு செய்)யுங்கள்” என்று கூறினார்கள். விடிந்ததும் அபூதல்ஹா (ரலி) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று (நடந்ததைத்) தெரிவித்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இன்றிரவு தாம்பத்திய உறவுகொண்டீர்களா?” எனக் கேட்டார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘ஆம்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! அவர்களின் இரவில் அவர்கள் இருவருக்கும் வளம் வழங்குவாயாக” என்று பிரார்த்தித் தார்கள்.5

பின்னர் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்கள். என்னிடம் அபூதல்ஹா (ரலி) அவர்கள், ‘‘குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் பத்திரமாகக் கொண்டுசெல்” என்று கூறினார்கள். அவ்வாறே நான் குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றேன். என்னிடம் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் பேரீச்சம்பழங்கள் சிலவற்றைக் கொடுத்தனுப்பி யிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் குழந்தையை வாங்கிக்கொண்டு, ‘‘இக்குழந்தையுடன் ஏதேனும் (இனிப்புப்) பொருள் உள்ளதா?” என்று கேட்டார்கள். (அங்கிருந்த) மக்கள் ‘‘ஆம்; பேரீச்சம்பழங்கள் உள்ளன” என்று பதிலளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அதை வாங்கி (தம் வாயால்) மென்று பிறகு தமது வாயிலிருந்து அதை எடுத்துக் குழந்தையின் வாயில் வைத்து அதைத் தடவினார்கள். குழந்தைக்கு ‘அப்துல்லாஹ்’ எனப் பெயர் சூட்டினார் கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 71
5471. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ، قَالَ مَعَ الْغُلاَمِ عَقِيقَةٌ. وَقَالَ حَجَّاجٌ حَدَّثَنَا حَمَّادٌ أَخْبَرَنَا أَيُّوبُ وَقَتَادَةُ وَهِشَامٌ وَحَبِيبٌ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ سَلْمَانَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்: 2 அகீகா கொடுக்கும்போது பையனின் (பிறந்த முடி களைந்து) பாரத்தை இறக்குவது
5471. சல்மான் பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பையன் (பிறந்த) உடன் ‘அகீகா’ (கொடுக்கப்படல்) உண்டு.

இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து சல்மான் பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் அறிவிக்கிறார்கள்.

இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் வழியாக வரும் சல்மான் (ரலி) அவர்களின் இந்த ஹதீஸை யஸீத் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களும் அறிவித்துள்ளார்கள்.

ஆக மொத்தம் இந்த ஹதீஸ் எட்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 71
5472. وَقَالَ غَيْرُ وَاحِدٍ عَنْ عَاصِمٍ، وَهِشَامٍ، عَنْ حَفْصَةَ بِنْتِ سِيرِينَ، عَنِ الرَّبَابِ، عَنْ سَلْمَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَرَوَاهُ يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ عَنِ ابْنِ سِيرِينَ عَنْ سَلْمَانَ قَوْلَهُ. وَقَالَ أَصْبَغُ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ عَنْ جَرِيرِ بْنِ حَازِمٍ عَنْ أَيُّوبَ السَّخْتِيَانِيِّ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ حَدَّثَنَا سَلْمَانُ بْنُ عَامِرٍ الضَّبِّيُّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَعَ الْغُلاَمِ عَقِيقَةٌ، فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا وَأَمِيطُوا عَنْهُ الأَذَى "". حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا قُرَيْشُ بْنُ أَنَسٍ، عَنْ حَبِيبِ بْنِ الشَّهِيدِ، قَالَ أَمَرَنِي ابْنُ سِيرِينَ أَنْ أَسْأَلَ الْحَسَنَ، مِمَّنْ سَمِعَ حَدِيثَ الْعَقِيقَةِ، فَسَأَلْتُهُ فَقَالَ مِنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ.
பாடம்: 2 அகீகா கொடுக்கும்போது பையனின் (பிறந்த முடி களைந்து) பாரத்தை இறக்குவது
5472. சல்மான் பின் ஆமிர் அள்ளப்பீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘பையன் (பிறந்த) உடன் ‘அகீகா’ (கொடுக்கப்படல்) உண்டு. ஆகவே, அவனுக்காக (ஆடு அறுத்து) ‘குர்பானி’ கொடுங்கள். அவன் (தலைமுடி களைந்து) பாரத்தை இறக்கிடுங்கள்” என்று சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

ஹபீப் பின் அஷ்ஷஹீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹசன் அல்பளி (ரஹ்) அவர்களிடம், ‘‘அவர்கள் யாரிடமிருந்து அகீகா பற்றிய ஹதீஸைக் கேட்டார்கள்” என்று வினவும் படி என்னை இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் பணித்தார்கள். அவ்வாறே நான் அவர்களிடம் கேட்டேன். அவர்கள், ‘‘சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிட மிருந்து நான் (அகீகா பற்றிய ஹதீஸைச்) செவியுற்றேன்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 71
5473. حَدَّثَنَا عَبْدَانُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، أَخْبَرَنَا الزُّهْرِيُّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ فَرَعَ وَلاَ عَتِيرَةَ "". وَالْفَرَعُ أَوَّلُ النِّتَاجِ، كَانُوا يَذْبَحُونَهُ لَطِوَاغِيتِهِمْ، وَالْعَتِيرَةُ فِي رَجَبٍ.
பாடம்: 3 ‘அல்ஃபரஉ’ (ஆடு, அல்லது ஒட்டகத்தின் முதலாவது குட்டியைப் பலியிடுவது)6
5473. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இனி,) தலைக் குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை. (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களில்) பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஆடு மற்றும் ஒட்டகம் ஆகியவை ஈனும்) முதலாவது குட்டி ‘ஃபரஉ’ ஆகும்; அதை (அறியாமைக் கால) மக்கள் தம் தெய்வச் சிலைகளுக்காகப் பயிட்டு வந்தனர். ரஜப் மாதத்தி(ன் முதல் பத்து நாட்களி)ல் பலியிடப்படும் பிராணி ‘அத்தீரா’ ஆகும்.

அத்தியாயம் : 71
5474. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ الزُّهْرِيُّ حَدَّثَنَا عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ فَرَعَ وَلاَ عَتِيرَةَ "". قَالَ وَالْفَرَعَ أَوَّلُ نِتَاجٍ كَانَ يُنْتَجُ لَهُمْ، كَانُوا يَذْبَحُونَهُ لِطَوَاغِيتِهِمْ، وَالْعَتِيرَةُ فِي رَجَبٍ.
பாடம்: 4 ‘அத்தீரா’ (ரஜப் மாதத்தின் முதல் பத்து நாட்களில் பிராணிகளைப் பலியிடல்)7
5474. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(இனி,) தலைக் குட்டி(யைப் பலியிடும் அறியாமைக் காலச் செய்கை)யும் இல்லை. ரஜப் மாதத்தி(ன் முதல் பத்து நாட்களி)ல் பிராணிகளைப் பலியிடுவதும் இல்லை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(அறியாமைக் கால) மக்களுடைய (ஆடு ஒட்டகம் ஆகியவை ஈனும்) முதலாவது குட்டியே ‘ஃபரஉ’ ஆகும்; அதை அம்மக்கள் தம் தெய்வச் சிலை களுக்காகப் பயிட்டுவந்தனர். ரஜப் மாதத்தி(ன் முதல் பத்து நாட்களி)ல் பலியிடப்படும் பிராணி ‘அத்தீரா’ ஆகும்.8

அத்தியாயம் : 71

5475. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ صَيْدِ الْمِعْرَاضِ قَالَ "" مَا أَصَابَ بِحَدِّهِ فَكُلْهُ، وَمَا أَصَابَ بِعَرْضِهِ فَهْوَ وَقِيذٌ "". وَسَأَلْتُهُ عَنْ صَيْدِ الْكَلْبِ فَقَالَ "" مَا أَمْسَكَ عَلَيْكَ فَكُلْ، فَإِنَّ أَخْذَ الْكَلْبِ ذَكَاةٌ، وَإِنْ وَجَدْتَ مَعَ كَلْبِكَ أَوْ كِلاَبِكَ كَلْبًا غَيْرَهُ فَخَشِيتَ أَنْ يَكُونَ أَخَذَهُ مَعَهُ، وَقَدْ قَتَلَهُ، فَلاَ تَأْكُلْ، فَإِنَّمَا ذَكَرْتَ اسْمَ اللَّهِ عَلَى كَلْبِكَ وَلَمْ تَذْكُرْهُ عَلَى غَيْرِهِ "".
பாடம்: 1 வேட்டைப் பிராணியின் மீது (அம்பு எய்யும்போது) அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) கூறுவது உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! (நீங்கள் ‘இஹ்ராம்’ கட்டியிருக்கும்போது) உங்கள் கைகளுக்கும் உங்கள் ஈட்டி களுக்கும் எட்டுகின்ற வகையில் சில வேட்டைப் பிராணிகளை (காட்டுவதை)க் கொண்டு உங்களை அல்லாஹ் நிச்சயமாகச் சோதிப்பான். (5:94)2 (இறைநம்பிக்கையாளர்களே!) உங்கள்மீது (தடை விதித்துக்) கூறப்பட்டிருப்பவை தவிர மற்ற கால்நடைகள் உங்களுக்கு (உணவிற்காக) அனுமதிக்கப்பட்டுள்ளன.(5:1) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (5:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்உகூத்’ (ஒப்பந்தங்கள்) எனும் சொல் அனுமதிக்கப்பட்டவை (ஹலால்) என்றும், தடை விதிக்கப்பட்டவை (ஹராம்) என்றும் அறியப்பட்டவற்றைக் குறிக்கும். (இதே வசனத்தில் இடம்பெற்றுள்ள) ‘உங்கள்மீது (தடை விதித்துக்) கூறப்பட் டவை’ என்பது பன்றியைக் குறிக்கும். (5:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யஜ்ரிமன்னகும் ‘னஆனு கவ்மின்’ எனும் தொடருக்கு ‘அந்த மக்கள்மீதுள்ள பகைமை உங்களைத் தூண்டிவிட வேண்டாம்’ என்பது பொருள். (5:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முன்கனிக்கா” எனும் சொல்லுக்கு ‘கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டது’ என்பது பொருள். ‘அல்மவ்கூதா’ என்பது தடியால் பலமாக அடித்துக் கொல்லப்பட்டதைக் குறிக்கும். ‘அல்முத்தரத்தியா’ என்பது மலையிலிருந்து விழுந்து செத்துப்போனதைக் குறிக்கும். ‘அந்நத்தீஹா’ என்பது மற்ற விலங்குகளின் கொம்பால் குத்தப்பட்டு இறந்த தாகும். ஆனால், (இந்தப் பிராணிகளில்) இன்னும் தனது வாலையோ அல்லது கண்களையோ அசைத்துக்கொண்டு (குற்றுயிராக) இருக்கும் பிராணியை நீங்கள் கண்டால் அதை (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுத்து நீங்கள் சாப்பிடலாம்.
5475. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறகு இல்லாத அம்பின் (‘மிஅராள்’) மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள். ‘‘பிராணி அம்பின் முனையால் கொல்லப்பட்டிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்ட(து போன்ற)தேயாகும். (எனவே, அதைச் சாப்பிடா தீர்கள்)” என்று பதிலளித்தார்கள்.

நான் அவர்களிடம் (பயிற்சியளிக் கப்பட்ட) நாய், வேட்டையாடிய பிராணி குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘உங்களுக்காக அது கவ்விக் கொண்டு வருவதை நீங்கள் சாப்பிடுங்கள். ஏனெனில், (பழக்கப்படுத்தப்பட்ட) நாய் (வேட்டைப் பிராணியைக்) கவ்விப் பிடிப்பதும் (அதை முறைப்படி) அறுப்பதாகவே அமையும்.

‘உங்களது நாயுடன்’ அல்லது ‘உங்கள் நாய்களுடன்’ வேறொரு நாயையும் நீங்கள் கண்டு அந்த நாயும் உங்களது நாயுடன் சேர்ந்து வேட்டைப் பிராணியைப் பிடித்துக் கொன்றிருக்குமோ என்று நீங்கள் அஞ்சினால் அதை உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொன்னது உங்களது நாயை அனுப்பியபோதுதான். வேறொரு நாய்க்காக அல்ல” என்று பதிலளித்தார்கள்.3

அத்தியாயம் : 72
5476. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي السَّفَرِ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ سَمِعْتُ عَدِيَّ بْنَ حَاتِمٍ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ الْمِعْرَاضِ فَقَالَ "" إِذَا أَصَبْتَ بِحَدِّهِ فَكُلْ، فَإِذَا أَصَابَ بِعَرْضِهِ فَقَتَلَ فَإِنَّهُ وَقِيذٌ، فَلاَ تَأْكُلْ "". فَقُلْتُ أُرْسِلُ كَلْبِي. قَالَ "" إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ وَسَمَّيْتَ، فَكُلْ "". قُلْتُ فَإِنْ أَكَلَ قَالَ "" فَلاَ تَأْكُلْ، فَإِنَّهُ لَمْ يُمْسِكْ عَلَيْكَ، إِنَّمَا أَمْسَكَ عَلَى نَفْسِهِ "". قُلْتُ أُرْسِلُ كَلْبِي فَأَجِدُ مَعَهُ كَلْبًا آخَرَ. قَالَ "" لاَ تَأْكُلْ، فَإِنَّكَ إِنَّمَا سَمَّيْتَ عَلَى كَلْبِكَ، وَلَمْ تُسَمِّ عَلَى آخَرَ "".
பாடம்: 2 இறகு இல்லாத அம்பால் (‘மிஅராள்’) வேட்டையாடப்பட்ட பிராணி களிமண் குண்டு, அல்லது ஈயக்குண்டு (‘அல்புந்துகா’) மூலம் (வேட்டையாடிக்) கொல்லப்பட்ட பிராணி குறித்து இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறும்போது, ‘‘அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது (‘மவ்கூதா’) போன்றே (விலக்கப்பட்டது) ஆகும்” என்று குறிப்பிட்டார்கள். இந்தக் குண்டுகளால் கொல்லப்பட்ட பிராணியை உண்பதை சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்), காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்), முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்), இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்), அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்), ஹசன் அல்பளி (ரஹ்) ஆகியோர் வெறுத்துள்ளனர். ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் சிற்றூர்களிலும் நகரங்களிலும் இந்தக் குண்டை எறி(ந்து வேட்டையாடு)வதை விரும்பவில்லை. (மனித நடமாட்டமில்லாத) மற்ற இடங்களில் அதை உபயோகிப்பதை அவர்கள் தவறாகக் கருதவில்லை.
5476. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் இறகு இல்லாத அம்பு (‘மிஅராள்’ மூலம் வேட்டையாடப்பட்ட பிராணி) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அதன் முனையால் (அந்தப் பிராணியை) நீங்கள் தாக்கியிருந்தால் அதைச் சாப்பிடுங்கள். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கிக் கொன்றிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது(போல்)தான். எனவே, (அதைச்) சாப்பிடாதீர்கள்” என்று சொன்னார்கள்.

நான், ‘‘எனது நாயை (வேட்டைக்காக) அவிழ்த்துவிட்டேன். (அது வேட்டையாடிக் கொண்டுவருவதை நான் சாப்பிடலாமா)?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அந்த நாயை அவிழ்த்துவிட்டிருந்தால் (அது வேட்டையாடிக் கொண்டுவருவதை) நீங்கள் சாப்பிடுங்கள்” என்று பதிலளித்தார்கள்.

நான், ‘‘அந்த நாய் வேட்டைப் பிராணியைத் தின்றிருந்தால்...?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘அப்படியென்றால், அதை உண்ணாதீர்கள். ஏனெனில், அது உங்களுக்காக அதைக் கொண்டு வரவில்லை; தனக்காகவே கவ்விப் பிடித்திருக்கிறது” என்று பதிலளித்தார்கள்.

‘‘நான் எனது நாயை அனுப்புகிறேன். (வேட்டையாடித் திரும்பி வரும்போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன் என்றால்... (இப்போது என்ன செய்வது? அது வேட்டையாடி கொண்டு வந்த பிராணியை நான் உண்ணலாமா?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியது உங்களது நாய்க்காகத்தான்; மற்றொரு நாய்க்கு நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறவில்லை” என்று பதிலளித்தார்கள்.4

அத்தியாயம் : 72
5477. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ هَمَّامِ بْنِ الْحَارِثِ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُرْسِلُ الْكِلاَبَ الْمُعَلَّمَةَ. قَالَ "" كُلْ مَا أَمْسَكْنَ عَلَيْكَ "". قُلْتُ وَإِنْ قَتَلْنَ قَالَ "" وَإِنْ قَتَلْنَ "". قُلْتُ وَإِنَّا نَرْمِي بِالْمِعْرَاضِ. قَالَ "" كُلْ مَا خَزَقَ، وَمَا أَصَابَ بِعَرْضِهِ فَلاَ تَأْكُلْ "".
பாடம்: 3 இறகு இல்லாத அம்பின் பக்கவாட்டினால் வேட்டையாடப்பட்ட பிராணி
5477. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை (வேட்டைக்காக) அனுப்புகிறோம். (அவை வேட்டையாடிக் கொண்டுவருகின்றவற்றை நாங்கள் உண்ணலாமா?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவை உங்களுக்காக (வேட்டையாடி)க் கவ்விப்பிடித்தவற்றை நீங்கள் சாப்பிடுங்கள்” என்று பதிலளித்தார்கள்.

நான், ‘‘(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலுமா?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலும் சரியே” என்று பதிலளித்தார்கள்.

நான், ‘‘நாங்கள் இறகு இல்லாத அம்பை (வேட்டைப் பிராணிகள்மீது) எய்கிறோமே! (அதன் சட்டம் என்ன?)” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அது (தனது முனையால்) குத்தி (வீழ்த்தி)யதைச் சாப்பிடுங்கள். அந்த அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டதைச் சாப்பிடாதீர்கள்” என்று சொன்னார்கள்.5

அத்தியாயம் : 72
5478. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا حَيْوَةُ، قَالَ أَخْبَرَنِي رَبِيعَةُ بْنُ يَزِيدَ الدِّمَشْقِيُّ، عَنْ أَبِي إِدْرِيسَ، عَنْ أَبِي ثَعْلَبَةَ الْخُشَنِيِّ، قَالَ قُلْتُ يَا نَبِيَّ اللَّهِ إِنَّا بِأَرْضِ قَوْمٍ أَهْلِ الْكِتَابِ، أَفَنَأْكُلُ فِي آنِيَتِهِمْ وَبِأَرْضِ صَيْدٍ، أَصِيدُ بِقَوْسِي وَبِكَلْبِي الَّذِي لَيْسَ بِمُعَلَّمٍ، وَبِكَلْبِي الْمُعَلَّمِ، فَمَا يَصْلُحُ لِي قَالَ "" أَمَّا مَا ذَكَرْتَ مِنْ أَهْلِ الْكِتَابِ فَإِنْ وَجَدْتُمْ غَيْرَهَا فَلاَ تَأْكُلُوا فِيهَا، وَإِنْ لَمْ تَجِدُوا فَاغْسِلُوهَا وَكُلُوا فِيهَا، وَمَا صِدْتَ بِقَوْسِكَ فَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَكُلْ، وَمَا صِدْتَ بِكَلْبِكَ الْمُعَلَّمِ فَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَكُلْ، وَمَا صِدْتَ بِكَلْبِكَ غَيْرَ مُعَلَّمٍ فَأَدْرَكْتَ ذَكَاتَهُ فَكُلْ "".
பாடம்: 4 வில்லால் வேட்டையாடுவது ஹசன் அல்பளி (ரஹ்), இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: (அம்பு போன்ற ஆயுதத்தால்) ஒரு வேட்டைப் பிராணியைத் தாக்கியதால் அதன் கை, அல்லது கால் துண்டாகி விழுந்துவிட்டால் துண்டான உறுப்பைச் சாப்பிடாதீர்கள்! உடலின் மற்ற பகுதிகளைச் சாப்பிடுங்கள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், ‘‘நீங்கள் வேட்டைப் பிராணியின் கழுத்தையோ அதன் நடுப் பகுதியையோ தாக்கியிருந்தால் அதை உண்ணுங்கள்” என்றார்கள். ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதருக்கு (அவர் வேட்டையாடச் சென்ற காட்டு)க் கழுதை ஒன்று அடங்க மறுத்தது. ஆகவே, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்) அவர்களால் இயன்ற முறையில் அதைத் தாக்கும்படி கட்டளையிட்டு, ‘‘அதிலிருந்து (துண்டாகி) விழுவதை விட்டுவிடுங்கள். (மற்றதை) உண்ணுங்கள்” என்று சொன்னார்கள்.
5478. அபூஸஅலபா அல்குஷனீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், ‘‘அல்லாஹ்வின் நபியே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் இருக்கிறோம். அவர்களுடைய பாத்திரத்தில் நாங்கள் சாப்பிடலாமா?6 மேலும், வேட்டைப் பிராணிகள் உள்ள ஒரு நாட்டில் நாங்கள் இருக்கின்றோம். நான் எனது வில்லாலும், பயிற்சியளிக்கப்படாத மற்றும் பயிற்சி யளிக்கப்பட்ட எனது நாயை ஏவியும் வேட்டையாடுவேன்; (இவற்றில்) எது எனக்கு (சட்டப்படி) தகும்?” என்று கேட்டேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் குறிப்பிட்ட வேதக்காரர்களின் (பாத்திரத்தில் உண்ணும்) விஷயம் எப்படியெனில், அவர்களின் பாத்திரமல்லாத வேறு பாத்திரம் உங்களுக்குக் கிடைத்தால் அவர்களின் பாத்திரத்தில் நீங்கள் சாப்பிடாதீர்கள். வேறு பாத்திரம் கிடைக்கா விட்டால் கழுவிவிட்டு அவர்களின் பாத்திரங்களில் உண்ணுங்கள்.

அல்லாஹ்வின் பெயர் கூறி உங்கள் வில்லால் நீங்கள் வேட்டையாடிய பிராணியை உண்ணுங்கள். பயிற்சியளிக்கப்பட்ட உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பி வேட்டையாடிய பிராணியையும் சாப்பிடுங்கள். பயிற்சியளிக்கப்படாத உங்கள் நாயை அனுப்பி நீங்கள் வேட்யைôடிய பிராணியை (அது இறப்பதற்கு முன்பாக) நீங்கள் (அல்லாஹ்வின் பெயர் கூறி) அறுக்க முடிந்தால் (அதைச்) சாப்பிடுங்கள்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 72
5479. حَدَّثَنَا يُوسُفُ بْنُ رَاشِدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، وَيَزِيدُ بْنُ هَارُونَ ـ وَاللَّفْظُ لِيَزِيدَ ـ عَنْ كَهْمَسِ بْنِ الْحَسَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ، أَنَّهُ رَأَى رَجُلاً يَخْذِفُ فَقَالَ لَهُ لاَ تَخْذِفْ فَإِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنِ الْخَذْفِ ـ أَوْ كَانَ يَكْرَهُ الْخَذْفَ ـ وَقَالَ "" إِنَّهُ لاَ يُصَادُ بِهِ صَيْدٌ وَلاَ يُنْكَى بِهِ عَدُوٌّ، وَلَكِنَّهَا قَدْ تَكْسِرُ السِّنَّ وَتَفْقَأُ الْعَيْنَ "". ثُمَّ رَآهُ بَعْدَ ذَلِكَ يَخْذِفُ فَقَالَ لَهُ أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ نَهَى عَنِ الْخَذْفِ. أَوْ كَرِهَ الْخَذْفَ، وَأَنْتَ تَخْذِفُ لاَ أُكَلِّمُكَ كَذَا وَكَذَا.
பாடம்: 5 சிறு கற்களாலும் களிமண் குண்டு அல்லது ஈயக்குண்டாலும் வேட்டையாடுவது7
5479. அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் சிறு கற்களை எறிந்து (வேட்டை யாடிக்)கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், ‘‘சிறு கற்களை எறியாதே. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்’ அல்லது ‘சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்’. மேலும், நபி அவர்கள் ‘அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்துவிடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)’ என்று சொன்னார்கள்” எனக் கூறினேன்.

அதன் பிறகு ஒருமுறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்து கொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்’ அல்லது ‘சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்’ என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு) சிறு கற்களை எறிகிறாயே? நான் உன்னிடம் இவ்வளவு இவ்வளவு காலம் பேசமாட்டேன்” என்று சொன்னேன்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 72
5480. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ، قَالَ سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنِ اقْتَنَى كَلْبًا لَيْسَ بِكَلْبِ مَاشِيَةٍ أَوْ ضَارِيَةٍ، نَقَصَ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطَانِ "".
பாடம்: 6 வேட்டையாடுவதற்காகவோ கால்நடைகளைப் பாதுகாப்பதற் காகவோ அல்லாமல் (தக்க காரண மின்றி) நாய் வைத்திருப்பது
5480. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கால்நடைகளைப் பாதுகாப்பதற் காகவோ வேட்டையாடுவதற்காகவோ அல்லாமல் எவர் நாய் வைத்திருக்கிறாரோ அவருடைய நற்செய(ன் நன்மை ‘)ருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் அளவு குறைந்துவிடும்.8

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 72
5481.
பாடம்: 6 வேட்டையாடுவதற்காகவோ கால்நடைகளைப் பாதுகாப்பதற் காகவோ அல்லாமல் (தக்க காரண மின்றி) நாய் வைத்திருப்பது
5481. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நாய் வைத்திருக்கிறாரோ அவருடைய (நற்செயல்களுக்குரிய) நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் அளவு குறைந்துவிடும்; பிராணிகளை வேட்டையாடும் நாயையும், கால்நடைகளைப் பாதுகாக்கும் நாயையும் தவிர.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் :
5482. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنِ اقْتَنَى كَلْبًا إِلاَّ كَلْبَ مَاشِيَةٍ أَوْ ضَارٍ، نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطَانِ "".
பாடம்: 6 வேட்டையாடுவதற்காகவோ கால்நடைகளைப் பாதுகாப்பதற் காகவோ அல்லாமல் (தக்க காரண மின்றி) நாய் வைத்திருப்பது
5482. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் நாய் வைத்திருக்கிறாரோ அவருடைய நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் அளவுக்குக் குறைந்துவிடும்; கால்நடைகளைப் பாதுகாக்கும் நாயையும் வேட்டையாடும் நாயையும் தவிர!

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 72
5483. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ بَيَانٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ إِنَّا قَوْمٌ نَصِيدُ بِهَذِهِ الْكِلاَبِ. فَقَالَ "" إِذَا أَرْسَلْتَ كِلاَبَكَ الْمُعَلَّمَةَ وَذَكَرْتَ اسْمَ اللَّهِ، فَكُلْ مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ، وَإِنْ قَتَلْنَ إِلاَّ أَنْ يَأْكُلَ الْكَلْبُ، فَإِنِّي أَخَافُ أَنْ يَكُونَ إِنَّمَا أَمْسَكَهُ عَلَى نَفْسِهِ، وَإِنْ خَالَطَهَا كِلاَبٌ مِنْ غَيْرِهَا فَلاَ تَأْكُلْ "".
பாடம்: 7 வேட்டை நாய் (தான் வேட்டை யாடிய பிராணியைத்) தின்று விட்டால் (அப்பிராணியை உண்பது கூடாது). உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) தமக்கு (உண்ண) அனுமதிக் கப்பட்டவை எவை என அவர்கள் உம்மி டம் வினவுகின்றார்கள். நீர் கூறுவீராக: தூய்மையான பொருட்கள் (அனைத்தும்) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக் கொடுத்ததிலிருந்து நீங்கள் கற்பித்துப் பயிற்சியளித்த (வேட்டை விலங்கு முதலான)வை எதை உங்களுக்காகக் கவ்விக் கொண்டுவந்தனவோ அதையும் நீங்கள் உண்ணுங்கள். அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயர் கூறுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள். நிச்சயம் அல்லாஹ் கணக்குக் கேட்பதில் மிக விரைவானவன் (5:4). (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜவாரிஹ்’ எனும் சொல்லுக்கு ‘வேட்டையாடி உழைக்கும் நாய்கள்’ என்பது பொருள். (இதன் வினைச்சொல்லும், 45:21 ஆவது வசனத்தின் மூலத்திலுள்ளதுமான) ‘இஜ்தரஹூ’ எனும் சொல்லுக்கு ‘செய்தவர்கள்’ என்பது பொருள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: வேட்டைப் பிராணியை வேட்டை நாய் தின்றுவிட்டால் அது அதைக் கெடுத்துவிட்டது (என்று பொருள்). அது தனக்காகவே அதைப் பிடித்து வைத்துக்கொண்டுள்ளது. (எனவே, அதை உண்ணலாகாது.) ‘‘உங்களுக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்ததிலிருந்து அதற்கு நீங்கள் கற்றுத்தந்திருக்கிறீர்கள்” என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆகவே, வேட்டை நாயை அடித்துத் திருத்தி அப்பிராணியை அது (தன் எசமானுக்காக) விட்டுவிடும்வரை அதற்குப் பயிற்சியளிக்க வேண்டும். நாய் தின்ற வேட்டைப் பிராணியை (உண்பதை) இப்னு உமர் (ரலி) அவர்கள் வெறுத்திருக்கிறார்கள். அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள், ‘‘வேட்டை நாய், தான் வேட்டை யாடிய பிராணியின் இரத்தத்தை மட்டுமே குடித்திருந்து (இறைச்சியைத்) தின்னாமல் இருந்தால் அப்போது அந்தப் பிராணியை உண்ணலாம்” என்று கூறுகிறார்கள்.
5483. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘‘நாங்கள் இந்த (வேட்டை) நாய்களின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம்” என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன்.

அதற்கு அவர்கள், ‘‘பயிற்சியளிக்கப் பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை அல்லாஹ்வின் பெயர் சொல்லி (வேட்டை யாட) நீங்கள் அனுப்பியிருந்தால் உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்; அவை அதைக் கொன்றுவிட்டாலும் சரியே!

நாய் தின்றுவிட்டதை மட்டும் உண்ணாதீர்கள்! ஏனென்றால், அது தனக்காக அதைப் பிடித்துவைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் அதனுடன் கலந்துவிட்டிருந்தாலும் (அது வேட்டையாடிக் கொண்டுவரும் பிராணியை) உண்ணாதீர்கள்” என்று கூறினார்கள்.9

அத்தியாயம் : 72
5484. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا ثَابِتُ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا عَاصِمٌ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ وَسَمَّيْتَ فَأَمْسَكَ وَقَتَلَ، فَكُلْ، وَإِنْ أَكَلَ فَلاَ تَأْكُلْ، فَإِنَّمَا أَمْسَكَ عَلَى نَفْسِهِ، وَإِذَا خَالَطَ كِلاَبًا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهَا فَأَمْسَكْنَ وَقَتَلْنَ فَلاَ تَأْكُلْ، فَإِنَّكَ لاَ تَدْرِي أَيُّهَا قَتَلَ، وَإِنْ رَمَيْتَ الصَّيْدَ فَوَجَدْتَهُ بَعْدَ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ، لَيْسَ بِهِ إِلاَّ أَثَرُ سَهْمِكَ، فَكُلْ، وَإِنْ وَقَعَ فِي الْمَاءِ فَلاَ تَأْكُلْ "".
பாடம்: 8 (காயமடைந்த) வேட்டைப் பிராணி இரண்டு மூன்று நாட்கள் கழித்து (இறந்த நிலையில்) காணப்பட்டால்...?
5484. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி, உங்களது (வேட்டை) நாயை (வேட்டையாட) அனுப்பி, அது வேட்டைப் பிராணியைக் கவ்விப் பிடித்துவைத்துக் கொன்றுவிட்டிருந்தால் அதை நீங்கள் உண்ணலாம். அது (அந்தப் பிராணியைத்) தின்றிருந்தால் நீங்கள் அதை உண்ணாதீர் கள். ஏனெனில், அப்போது அது அந்தப் பிராணியைத் தனக்காகவே பிடித்து வைத்துக்கொண்டுள்ளது.

அல்லாஹ்வின் பெயர் கூறி அனுப்பப் படாத பல நாய்களுடன் உங்கள் வேட்டை நாயும் கலந்துவிட அவை (அப்பிராணி யைப்) பிடித்துவைத்துக் கொன்றுவிட்டி ருந்தால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். ஏனெனில், அவற்றில் எது அப்பிராணி யைக் கொன்றது என்பது உங்களுக்குத் தெரியாது.

நீங்கள் வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் கழித்து அதன் மீது உங்கள் அம்பின் அடையாளத்தைத் தவிர வேறெதுவுமில்லாதிருக்க நீங்கள் அதைக் கண்டால், அதை நீங்கள் உண்ணலாம். அது தண்ணீரில் விழுந்துவிட்டால் அதை நீங்கள் உண்ணாதீர்கள். (ஏனெனில், அது தண்ணீரில் விழுந்ததால் இறந்திருக்கலாம்.)

இதை அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 72
5485. وَقَالَ عَبْدُ الأَعْلَى عَنْ دَاوُدَ، عَنْ عَامِرٍ، عَنْ عَدِيٍّ، أَنَّهُ قَالَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم، يَرْمِي الصَّيْدَ فَيَقْتَفِرُ أَثَرَهُ الْيَوْمَيْنِ وَالثَّلاَثَةَ، ثُمَّ يَجِدُهُ مَيِّتًا وَفِيهِ سَهْمُهُ قَالَ "" يَأْكُلُ إِنْ شَاءَ "".
பாடம்: 8 (காயமடைந்த) வேட்டைப் பிராணி இரண்டு மூன்று நாட்கள் கழித்து (இறந்த நிலையில்) காணப்பட்டால்...?
5485. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், ‘‘ஒருவர் ஒரு வேட்டைப் பிராணியின் மீது அம்பெய்து, (அது தலைமறை வாகிவிட) இரண்டு அல்லது மூன்று நாட்கள் அவர் அதன் கால்சுவட்டைத் தொடர்ந்து சென்று தமது அம்பு அதன் உடல் இருக்க, அது இறந்திருக்கக் கண்டால் (அவர் அதை உண்ணலாமா?)” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(கெட்டுப்போகாமல் இருக்கையில்) அவர் விரும்பினால் உண்ணலாம்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 72
5486. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي السَّفَرِ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي أُرْسِلُ كَلْبِي وَأُسَمِّي فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِذَا أَرْسَلْتَ كَلْبَكَ وَسَمَّيْتَ، فَأَخَذَ فَقَتَلَ فَأَكَلَ فَلاَ تَأْكُلْ، فَإِنَّمَا أَمْسَكَ عَلَى نَفْسِهِ "". قُلْتُ إِنِّي أُرْسِلُ كَلْبِي أَجِدُ مَعَهُ كَلْبًا آخَرَ، لاَ أَدْرِي أَيُّهُمَا أَخَذَهُ. فَقَالَ "" لاَ تَأْكُلْ فَإِنَّمَا سَمَّيْتَ عَلَى كَلْبِكَ وَلَمْ تُسَمِّ عَلَى غَيْرِهِ "". وَسَأَلْتُهُ عَنْ صَيْدِ الْمِعْرَاضِ فَقَالَ "" إِذَا أَصَبْتَ بِحَدِّهِ، فَكُلْ، وَإِذَا أَصَبْتَ بِعَرْضِهِ فَقَتَلَ، فَإِنَّهُ وَقِيذٌ، فَلاَ تَأْكُلْ "".
பாடம்: 9 வேட்டைப்பிராணியுடன் மற்றொரு நாயைக் கண்டால்...?
5486. அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பெயர் கூறி எனது (வேட்டை) நாயை (வேட்யைôடி வர) அனுப்புகிறேன் (என்றால் அதன் சட்டம் என்ன?)” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் உங்கள் நாயை அல்லாஹ்வின் பெயர் சொல்லி அனுப்ப, அது (ஒரு பிராணியைப்) பிடித்து அதைக் கொன்றது மட்டுமன்றி, (அதிலிருந்து சிறிது) தின்றுவிட்டால், அதை நீங்கள் உண்ணாதீர்கள்! ஏனெனில், அப்போது அது (அப்பிராணியைத்) தனக்காகவே கவ்விக்கொண்டுள்ளது” என்று பதிலளித்தார்கள்.

‘‘நான் எனது நாயை (வேட்டையாட) அனுப்புகிறேன். (வேட்டையாடித் திரும்பும் போது) அதனுடன் வேறொரு நாயையும் பார்க்கிறேன். அவ்விரு நாய்களில் எந்த நாய் அந்தப் பிராணியைப் பிடித்தது என்பது எனக்குத் தெரியாது (இந்நிலையில் என்ன செய்வது?)” என்று நான் கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘(அதை) நீங்கள் உண்ணாதீர்கள்! ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியது உங்களது நாயின் மீதுதான்; மற்றதன்மீது நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லவில்லை” என்று பதிலளித்தார்கள்.

இறகு இல்லாத அம்பின் (‘மிஅராள்’) மூலம் வேட்டையாடுவது குறித்து நான் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அம்பின் முனையால் அதை நீங்கள் தாக்கிக் கொன்றிருந்தால், (அதை) நீங்கள் உண்ணலாம். அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கியிருந்தால் அது தடியால் அடித்துக் கொல்லப்பட்டது தான் (என்றே கருதப்படும்). ஆகவே, நீங்கள் (அதை) உண்ணாதீர்கள்” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 72