527. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ الْوَلِيدُ بْنُ الْعَيْزَارِ أَخْبَرَنِي قَالَ سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ، يَقُولُ حَدَّثَنَا صَاحِبُ، هَذِهِ الدَّارِ وَأَشَارَ إِلَى دَارِ عَبْدِ اللَّهِ قَالَ سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم أَىُّ الْعَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ قَالَ "" الصَّلاَةُ عَلَى وَقْتِهَا "". قَالَ ثُمَّ أَىُّ قَالَ "" ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ "". قَالَ ثُمَّ أَىُّ قَالَ "" الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ "". قَالَ حَدَّثَنِي بِهِنَّ وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي.
பாடம் : 5 தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதன் சிறப்பு
527. வலீத் பின் அல்அய்ஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் இல்லத்தை நோக்கி சைகை செய்தவாறு அபூஅம்ர் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதோ இந்த வீட்டுக்காரர் (பின்வருமாறு) என்னிடம் தெரிவித்தார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?” என்று கேட்டேன். அவர்கள், “உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது” என்றார்கள். “பிறகு எது?” என்று கேட்டேன். “தாய் தந்தையருக்கு நன்மை புரிவது” என்றார்கள். “பிறகு எது?” என்றேன். அவர்கள், “அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது” என்று பதிலளித்தார்கள்.

இ(ம் மூ)வற்றை மட்டுமே என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக (இது குறித்து) நான் கேட்டிருந்தால், எனக்கு இன்னும் அதிகமாகப் பதிலளித்திருப்பார்கள்.

அத்தியாயம் : 9
528. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ حَمْزَةَ، قَالَ حَدَّثَنِي ابْنُ أَبِي حَازِمٍ، وَالدَّرَاوَرْدِيُّ، عَنْ يَزِيدَ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" أَرَأَيْتُمْ لَوْ أَنَّ نَهَرًا بِبَابِ أَحَدِكُمْ، يَغْتَسِلُ فِيهِ كُلَّ يَوْمٍ خَمْسًا، مَا تَقُولُ ذَلِكَ يُبْقِي مِنْ دَرَنِهِ "". قَالُوا لاَ يُبْقِي مِنْ دَرَنِهِ شَيْئًا. قَالَ "" فَذَلِكَ مِثْلُ الصَّلَوَاتِ الْخَمْسِ، يَمْحُو اللَّهُ بِهَا الْخَطَايَا "".
பாடம் : 6 ஐவேளைத் தொழுகைகள் பாவங்களுக்குப் பரிகாரமாகும்.
528. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உங்களில் ஒருவரது (வீட்டு) வாச-ல் ஆறு ஒன்று (ஓடிக்கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அ(வ்வாறு நீராடுவ)து அவரது (மேனியிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?” என்று கேட்டார்கள். “அவரது (மேனியிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்க விடாது” என்று மக்கள் பதிலளித்தார்கள்.

“இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இ(வற்றை நிறைவேற்றுவ)தன் மூலம் அல்லாஹ் குற்றங்களைக் களைகிறான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 9
529. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا مَهْدِيٌّ، عَنْ غَيْلاَنَ، عَنْ أَنَسٍ، قَالَ مَا أَعْرِفُ شَيْئًا مِمَّا كَانَ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم. قِيلَ الصَّلاَةُ. قَالَ أَلَيْسَ ضَيَّعْتُمْ مَا ضَيَّعْتُمْ فِيهَا.
பாடம் : 7 உரிய நேரத்தில் தொழாமல் தொழுகையைப் பாழாக்குவது
529. ஃகைலான் பின் ஜரீர் அல்மஅவலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களது காலத்தில் இருந்தவற்றில் எதையும் (இன்று) என்னால் காண முடியவில்லை” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். “தொழுகை இருக்கிறதே” என்று (அவர்களிடம்) கேட்கப்பட்டது.

அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “(உரிய நேரத்தில் நிறைவேற்றாமல்) தொழுகையைக்கூட நீங்கள் வீணாக்கிவிடவில்லையா?” என்று கேட்டார்கள்.


அத்தியாயம் : 9
530. حَدَّثَنَا عَمْرُو بْنُ زُرَارَةَ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ وَاصِلٍ أَبُو عُبَيْدَةَ الْحَدَّادُ، عَنْ عُثْمَانَ بْنِ أَبِي رَوَّادٍ، أَخِي عَبْدِ الْعَزِيزِ قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، يَقُولُ دَخَلْتُ عَلَى أَنَسِ بْنِ مَالِكٍ بِدِمَشْقَ وَهُوَ يَبْكِي فَقُلْتُ مَا يُبْكِيكَ فَقَالَ لاَ أَعْرِفُ شَيْئًا مِمَّا أَدْرَكْتُ إِلاَّ هَذِهِ الصَّلاَةَ، وَهَذِهِ الصَّلاَةُ قَدْ ضُيِّعَتْ. وَقَالَ بَكْرٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ الْبُرْسَانِيُّ أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ أَبِي رَوَّادٍ نَحْوَهُ.
பாடம் : 7 உரிய நேரத்தில் தொழாமல் தொழுகையைப் பாழாக்குவது
530. முஹம்மத் பின் முஸ்-ம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

திமஷ்க் (டமாஸ்கஸ்) நகரி-ருந்த அனஸ் (ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் அழுதுகொண்டிருந்தார்கள். அப்போது நான் அவர்களிடம், “ஏன் அழுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “(நபி (ஸல்) அவர்களது காலத் தில் நடைமுறைப்படுத்தப்பட்டு) நான் கண்டவற்றில் இந்தத் தொழுகையைத் தவிர வேறெதையும் (முறையாக நடை முறைப்படுத்தப்படுவதை இன்று) என்னால் காண முடியவில்லை; இந்தத் தொழுகை கூட (உரிய நேரத்தில் நிறைவேற்றப் படாமல்) வீணடிக்கப்பட்டுவிட்டது” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 9
531. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ أَحَدَكُمْ إِذَا صَلَّى يُنَاجِي رَبَّهُ فَلاَ يَتْفِلَنَّ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ تَحْتَ قَدَمِهِ الْيُسْرَى "". وَقَالَ سَعِيدٌ عَنْ قَتَادَةَ لاَ يَتْفِلُ قُدَّامَهُ أَوْ بَيْنَ يَدَيْهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمَيْهِ. وَقَالَ شُعْبَةُ لاَ يَبْزُقُ بَيْنَ يَدَيْهِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ. وَقَالَ حُمَيْدٌ عَنْ أَنَسٍ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم "" لاَ يَبْزُقْ فِي الْقِبْلَةِ وَلاَ عَنْ يَمِينِهِ، وَلَكِنْ عَنْ يَسَارِهِ أَوْ تَحْتَ قَدَمِهِ "".
பாடம் : 8 தொழுதுகொண்டிருப்பவர் வல் லமையும் மாண்பும் மிக்க இறை வனுடன் இரகசியமாக உரை யாடுகிறார்.
531. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழுதுகொண்டிருக்கையில் தம் இறைவனுடன் இரகசியமாக உரையாடுகிறார். எனவே, (தொழுதுகொண்டிருக்கும்போது எச்சில் வந்துவிட்டால்) அவர் தமக்கு வலப் பக்கத்தில் உமிழ வேண்டாம். மாறாக, தமது இடப் பாதத்திற்குக் கீழே உமிழட்டும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சயீத் பின் அபீஅரூபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “தமக்கு முன்புறமாகத் துப்பலாகாது. எனினும் தமது இடப் பக்கமோ அல்லது பாதத்துக்குக் கீழேயோ துப்புக” என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) இடம்பெற்றுள்ளது.

ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “தமக்கு முன்புறமோ, வலப் பக்கமோ துப்பலாகாது. எனினும், தமது இடப் பக்கமோ அல்லது பாதத்துக்குக் கீழேயோ துப்புக!” என்று (நபி (ஸல்) அவர்கள் கூறியதாக) காணப் படுகிறது.

ஹுமைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “கிப்லா (கஅபா) திசையில் அவர் துப்பலாகாது; தமக்கு வலப் புறமாகவும் துப்பலாகாது. எனினும், அவர் தமக்கு இடப் பக்கமோ அல்லது தமது பாதத்துக்குக் கீழேயோ துப்பட்டும்” என்று கூறப்பட்டுள்ளது.3


அத்தியாயம் : 9
532. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" اعْتَدِلُوا فِي السُّجُودِ، وَلاَ يَبْسُطْ ذِرَاعَيْهِ كَالْكَلْبِ، وَإِذَا بَزَقَ فَلاَ يَبْزُقَنَّ بَيْنَ يَدَيْهِ وَلاَ عَنْ يَمِينِهِ، فَإِنَّهُ يُنَاجِي رَبَّهُ "".
பாடம் : 8 தொழுதுகொண்டிருப்பவர் வல் லமையும் மாண்பும் மிக்க இறை வனுடன் இரகசியமாக உரை யாடுகிறார்.
532. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

முறைப்படி சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள். நாயைப் போன்று கைகளைப் படுக்க வைக்கலாகாது. (தொழும்போது எச்சில் வந்துவிட்டால்) தமக்கு முன்புறமோ, வலப் புறமோ துப்பலாகாது. ஏனெனில், தொழுதுகொண்டிருப்பவர், தம் இறைவனுடன் இரகசியமாக உரையாடிக் கொண்டிருக்கிறார்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 9
533. حَدَّثَنَا أَيُّوبُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا أَبُو بَكْرٍ، عَنْ سُلَيْمَانَ، قَالَ صَالِحُ بْنُ كَيْسَانَ حَدَّثَنَا الأَعْرَجُ عَبْدُ الرَّحْمَنِ، وَغَيْرُهُ، عَنْ أَبِي هُرَيْرَةَ.وَنَافِعٌ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ " إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ ".
பாடம் : 9 கடுமையான வெயில் நேரத்தில் (வெப்பம் தணியும்வரை) லுஹ்ரைத் தாமதப்படுத்துவது4
533. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெப்பம் கடுமையாகும்போது, வெப்பம் தணியும்வரை (லுஹ்ர்) தொழுகையைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில், கடுமை யான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச் சால் உண்டாகிறது.5

இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 9
535. حَدَّثَنَا ابْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمُهَاجِرِ أَبِي الْحَسَنِ، سَمِعَ زَيْدَ بْنَ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ أَذَّنَ مُؤَذِّنُ النَّبِيِّ صلى الله عليه وسلم الظُّهْرَ فَقَالَ "" أَبْرِدْ أَبْرِدْ ـ أَوْ قَالَ ـ انْتَظِرِ انْتَظِرْ "". وَقَالَ "" شِدَّةُ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا عَنِ الصَّلاَةِ "". حَتَّى رَأَيْنَا فَىْءَ التُّلُولِ.
பாடம் : 9 கடுமையான வெயில் நேரத்தில் (வெப்பம் தணியும்வரை) லுஹ்ரைத் தாமதப்படுத்துவது4
535. அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை நாங்கள் பயணத்தில் இருந்தோம். அப்போது) நபி (ஸல்) அவர்களின் தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின் பிலால் (ரலி) அவர்கள்) லுஹ்ர் தொழுகைக்கு ‘பாங்கு’ சொல்ல முற்பட்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘வெப்பம் தணியட்டும்; வெப்பம் தணியட் டும்’ அல்லது ‘பொறுப்பீராக; பொறுப்பீராக’ என்று கூறிவிட்டு, “கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டா கிறது. வெப்பம் கடுமையாகும்போது (லுஹ்ர்) தொழுகையை வெப்பம் தணிந்தபின் தொழுங்கள்” என்று கூறினார்கள்.

(எனவே நாங்கள் லுஹ்ர் தொழுகையைத் தாமதப்படுத்தினோம்). எந்த அளவுக்கென்றால் மணல் மேடுகளிலிருந்து நிழல் படிவதை நாங்கள் பார்த்தோம்.


அத்தியாயம் : 9
536. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَفِظْنَاهُ مِنَ الزُّهْرِيِّ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلاَةِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ ".
பாடம் : 9 கடுமையான வெயில் நேரத்தில் (வெப்பம் தணியும்வரை) லுஹ்ரைத் தாமதப்படுத்துவது4
536. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வெப்பம் கடுமையாகிவிடும்போது (லுஹ்ர்) தொழுகையை வெப்பம் தணிந்தபின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 9
537. وَاشْتَكَتِ النَّارُ إِلَى رَبِّهَا فَقَالَتْ يَا رَبِّ أَكَلَ بَعْضِي بَعْضًا. فَأَذِنَ لَهَا بِنَفَسَيْنِ نَفَسٍ فِي الشِّتَاءِ، وَنَفَسٍ فِي الصَّيْفِ، فَهُوَ أَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الْحَرِّ، وَأَشَدُّ مَا تَجِدُونَ مِنَ الزَّمْهَرِيرِ .
பாடம் : 9 கடுமையான வெயில் நேரத்தில் (வெப்பம் தணியும்வரை) லுஹ்ரைத் தாமதப்படுத்துவது4
537. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நரகம் தன் இறைவனிடம், “இறைவா! என்னுடைய ஒரு பகுதி மறு பகுதியைத் தின்கிறதே!” என முறையிட்டது. ஆகவே, அதற்கு அல்லாஹ் (ஓய்வு தரும் வகை யில்) குளிர் காலத்தில் ஒரு மூச்சும், கோடை காலத்தில் மற்றொரு மூச்சுமாக இரு மூச்சுகள் விட்டுக்கொள்ள அனுமதி யளித்தான்.

அவைதான் நீங்கள் கோடை காலத்தில் அனுபவிக்கும் கடுமையான வெப்பமும் குளிர் காலத்தில் அனுபவிக்கும் கடுமை யான குளிரும் ஆகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 9
538. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَبْرِدُوا بِالظُّهْرِ، فَإِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ "". تَابَعَهُ سُفْيَانُ وَيَحْيَى وَأَبُو عَوَانَةَ عَنِ الأَعْمَشِ.
பாடம் : 9 கடுமையான வெயில் நேரத்தில் (வெப்பம் தணியும்வரை) லுஹ்ரைத் தாமதப்படுத்துவது4
538. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லுஹ்ர் தொழுகையை வெப்பம் தணிந்தபின் தொழுங்கள். ஏனெனில், கடுமையான வெப்பம், நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகிறது.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 9
539. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا مُهَاجِرٌ أَبُو الْحَسَنِ، مَوْلًى لِبَنِي تَيْمِ اللَّهِ قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ، عَنْ أَبِي ذَرٍّ الْغِفَارِيِّ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي سَفَرٍ، فَأَرَادَ الْمُؤَذِّنُ أَنْ يُؤَذِّنَ لِلظُّهْرِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَبْرِدْ "". ثُمَّ أَرَادَ أَنْ يُؤَذِّنَ فَقَالَ لَهُ "" أَبْرِدْ "". حَتَّى رَأَيْنَا فَىْءَ التُّلُولِ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ شِدَّةَ الْحَرِّ مِنْ فَيْحِ جَهَنَّمَ، فَإِذَا اشْتَدَّ الْحَرُّ فَأَبْرِدُوا بِالصَّلاَةِ "". وَقَالَ ابْنُ عَبَّاسٍ تَتَفَيَّأُ تَتَمَيَّلُ.
பாடம் : 10 பயணத்தின்போது வெப்பம் தணிந்தபின் லுஹ்ரை தொழுவது
539. அபூதர் அல்ஃகிஃபாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது தொழுகை அறிவிப்பாளர் (பிலால் (ரலி) அவர்கள்), லுஹ்ர் தொழுகைக்காக பாங்கு சொல்ல முற்பட்டபோது, (அவரிடம்) நபி (ஸல்) அவர்கள், “வெப்பம் தணியட்டும்” என்று கூறினார்கள். பிறகு (சிறிது நேரம் கழித்து) மீண்டும் அவர் ‘பாங்கு’ சொல்ல முற்பட்டபோது அவரிடம், “வெப்பம் தணியட்டும்” என்று மணல் மேடுகளிலி ருந்து நிழல் படிவதை நாங்கள் பார்க்கும் வரை (இவ்வாறு) கூறினார்கள்.

பிறகு, “கடுமையான வெப்பம் நரக நெருப்பின் பெருமூச்சால் உண்டாகிறது. எனவே, வெப்பம் கடுமையாகும்போது (லுஹ்ர்) தொழுகையை வெப்பம் தணிந்த பின் தொழுங்கள்” என்று சொன்னார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

‘நிழல் படிதல்’ (‘தத்தஃபய்யஉ’) என்றால், ‘நிழல் சாய்தல்’ (தத்தமய்யலு) என்று பொருள்.

அத்தியாயம் : 9
540. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي أَنَسُ بْنُ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَرَجَ حِينَ زَاغَتِ الشَّمْسُ فَصَلَّى الظُّهْرَ، فَقَامَ عَلَى الْمِنْبَرِ، فَذَكَرَ السَّاعَةَ، فَذَكَرَ أَنَّ فِيهَا أُمُورًا عِظَامًا ثُمَّ قَالَ "" مَنْ أَحَبَّ أَنْ يَسْأَلَ عَنْ شَىْءٍ فَلْيَسْأَلْ، فَلاَ تَسْأَلُونِي عَنْ شَىْءٍ إِلاَّ أَخْبَرْتُكُمْ مَا دُمْتُ فِي مَقَامِي هَذَا "". فَأَكْثَرَ النَّاسُ فِي الْبُكَاءِ، وَأَكْثَرَ أَنْ يَقُولَ "" سَلُونِي "". فَقَامَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ السَّهْمِيُّ فَقَالَ مَنْ أَبِي قَالَ "" أَبُوكَ حُذَافَةُ "". ثُمَّ أَكْثَرَ أَنْ يَقُولَ "" سَلُونِي "". فَبَرَكَ عُمَرُ عَلَى رُكْبَتَيْهِ فَقَالَ رَضِينَا بِاللَّهِ رَبًّا، وَبِالإِسْلاَمِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا. فَسَكَتَ ثُمَّ قَالَ "" عُرِضَتْ عَلَىَّ الْجَنَّةُ وَالنَّارُ آنِفًا فِي عُرْضِ هَذَا الْحَائِطِ فَلَمْ أَرَ كَالْخَيْرِ وَالشَّرِّ "".
பாடம் : 11 உச்சிப்பொழுதுக்குப் பிறகே ‘லுஹ்ர்’ நேரம் (ஆரம்பமாகிறது.) (கடுமையான வெப்பம் போன்ற காரணம் இல்லாதபோது) நபி (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் (லுஹ்ர்) தொழுபவர்களாக இருந்தார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.6
540. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த (நண்பகலின்)போது (தமது இல்லத்தி-ருந்து) புறப்பட்டு வந்து லுஹ்ர் தொழு(வித்) தார்கள். பிறகு சொற்பொழிவுமேடை (மிம்பர்) மீதேறி நின்று மறுமை நாளை நினைவூட்டிப் பேசினார்கள். அந்நாளில் அதிர்ச்சியூட்டும் பல சம்பவங்கள் நிகழும் என்று குறிப்பிட்டார்கள்.

பிறகு (அவர்கள் விரும்பாத பல்வேறு கேள்விகளை மக்கள் வற்புறுத்திக் கேட்டபோது), “(இன்று) யார் எது குறித்துக் கேட்க விரும்பினாலும் கேட்கட்டும். இந்த இடத்தில் நான் இருக்கும்வரை எது குறித்து நீங்கள் என்னிடம் கேட்டாலும் அது குறித்து உங்களுக்கு நான் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன்” என்று (கோபத்துடன்) கூறினார்கள். எனவே, மக்கள் அதிகமாக அழலாயினர். நபி (ஸல்) அவர்களோ, “கேளுங்கள் என்னிடம்” என்று அடிக்கடி கூறிக்கொண்டி ருந்தார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்கள் எழுந்து, “என் தந்தை யார்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “ஹுதாஃபாதான் உம்முடைய தந்தை” என்று பதிலளித்துவிட்டு மீண்டும், “கேளுங்கள் என்னிடம்” என்று அடிக்கடி கூறலானார்கள்.

(நபியவர்களின் கோபத்தை அறிந்துகொண்ட) உமர் (ரலி) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து, “அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டோம்” என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள் அமைதியானார்கள்.

பிறகு, நபி (ஸல்) அவர்கள், “சற்றுமுன் (நான் தொழுதுகொண்டிருந்தபோது) இதோ இந்தச் சுவரில் சொர்க்கமும் நரகமும் எனக்கு எடுத்துக்காட்டப்பட்டன. (இந்த இடத்தில் நான் கண்ட காட்சியைப் போன்று) நன்மையிலும் தீமையிலும் வேறெந்தக் காட்சியையும் நான் (ஒருபோதும்) கண்டதில்லை” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 9
541. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنْ أَبِي بَرْزَةَ، كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي الصُّبْحَ وَأَحَدُنَا يَعْرِفُ جَلِيسَهُ، وَيَقْرَأُ فِيهَا مَا بَيْنَ السِّتِّينَ إِلَى الْمِائَةِ، وَيُصَلِّي الظُّهْرَ إِذَا زَالَتِ الشَّمْسُ، وَالْعَصْرَ وَأَحَدُنَا يَذْهَبُ إِلَى أَقْصَى الْمَدِينَةِ ثُمَّ يَرْجِعُ وَالشَّمْسُ حَيَّةٌ، وَنَسِيتُ مَا قَالَ فِي الْمَغْرِبِ، وَلاَ يُبَالِي بِتَأْخِيرِ الْعِشَاءِ إِلَى ثُلُثِ اللَّيْلِ. ثُمَّ قَالَ إِلَى شَطْرِ اللَّيْلِ. وَقَالَ مُعَاذٌ قَالَ شُعْبَةُ ثُمَّ لَقِيتُهُ مَرَّةً فَقَالَ أَوْ ثُلُثِ اللَّيْلِ.
பாடம் : 11 உச்சிப்பொழுதுக்குப் பிறகே ‘லுஹ்ர்’ நேரம் (ஆரம்பமாகிறது.) (கடுமையான வெப்பம் போன்ற காரணம் இல்லாதபோது) நபி (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் (லுஹ்ர்) தொழுபவர்களாக இருந்தார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.6
541. அபூபர்ஸா நள்லா பின் உபைத் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களில் ஒருவர் தம் பக்கத்தி-ருப்ப வரை அறிந்துகொள்ளும் (அளவுக்கு வெளிச்சம் வந்துவிடும்) நேரத்தில் நபி (ஸல்) அவர்களை சுப்ஹு தொழுவிப்ப வராக இருந்தார்கள். அறுபது (வசனங்கள்) முதல் நூறு (வசனங்கள்)வரை சுப்ஹு தொழுகையில் ஓதுவார்கள்.

சூரியன் உச்சியிலிருந்து சாயும் (நண்பகல் நேரத்தின்)போது லுஹ்ரை தொழுவிப்பார்கள்.

அடுத்து எங்களில் ஒருவர் (தொழுது விட்டு) மதீனாவின் கோடியிலுள்ள (தமது இல்லத்துக்குத்) திரும்பிச் சென்றுவிடுவார். அப்போதும் சூரியன் (வெப்பம் தணியாமல் வெளிச்சம் குறையாமல்) தெளிவாக இருந்துகொண்டிருக்கும். (அந்த அளவுக்கு நேரம் இருக்கும்போது) அஸ்ர் தொழுவிப்பார்கள்.

-இதன் அறிவிப்பாளரான அபுல் மின்ஹால் (சய்யார் பின் சலாமா அல்பஸ்ரீ-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மஃக்ரிப் தொழுகை(யின் நேரம்) பற்றி அபூபர்ஸா (ரலி) அவர்கள் (கூறினார்கள். ஆனால், அவர்கள்) கூறியதை நான் மறந்துவிட்டேன். “இஷா தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதி(யில் முதல் பகுதி)வரை தாமதப்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் குறையாகக் கருதமாட்டார்கள்” என்று அபுல்மின்ஹால் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்கள். பின்னர் (ஒரு முறை) ‘பாதி இரவுவரை’ என்று அபுல்மின்ஹால் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஓர் அறிவிப்பில், முஆத் பின் முஆத் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார் கள்: “பின்னர் ஒரு முறை அபுல்மின்ஹால் (ரஹ்) அவர்களைச் சந்தித்தேன். அப்போது அவர் ‘அல்லது இரவில் மூன்றில் ஒரு பகுதிவரை’ என்று (ஐயப்பாட்டுடன்) அறிவித்தார்” என ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 9
542. حَدَّثَنَا مُحَمَّدٌ ـ يَعْنِي ابْنَ مُقَاتِلٍ ـ قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَنِي غَالِبٌ الْقَطَّانُ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كُنَّا إِذَا صَلَّيْنَا خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالظَّهَائِرِ فَسَجَدْنَا عَلَى ثِيَابِنَا اتِّقَاءَ الْحَرِّ.
பாடம் : 11 உச்சிப்பொழுதுக்குப் பிறகே ‘லுஹ்ர்’ நேரம் (ஆரம்பமாகிறது.) (கடுமையான வெப்பம் போன்ற காரணம் இல்லாதபோது) நபி (ஸல்) அவர்கள் நண்பகல் நேரத்தில் (லுஹ்ர்) தொழுபவர்களாக இருந்தார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.6
542. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நண்பகல் நேரங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக் குப்பின் (லுஹ்ர்) தொழும்போது, வெப்பத் தைத் தவிர்ப்பதற்காக எங்கள் ஆடையின் (ஒரு பகுதியின்) மீது சிரவணக்கம் (சஜ்தா) செய்பவர்களாக இருந்தோம்.

அத்தியாயம் : 9
543. حَدَّثَنَا أَبُو النُّعْمَانِ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ ـ هُوَ ابْنُ زَيْدٍ ـ عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى بِالْمَدِينَةِ سَبْعًا وَثَمَانِيًا الظُّهْرَ وَالْعَصْرَ، وَالْمَغْرِبَ وَالْعِشَاءَ. فَقَالَ أَيُّوبُ لَعَلَّهُ فِي لَيْلَةٍ مَطِيرَةٍ. قَالَ عَسَى.
பாடம் : 12 லுஹ்ர் தொழுகையை அஸ்ர் தொழுகை(யின் ஆரம்ப நேரம்) வரை தாமதப்படுத்துவது7
543. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும் அஸ்ரையும் (சேர்த்து) எட்டு ரக்அத்களாகவும் மஃக்ரிபையும் இஷா வையும் (சேர்த்து) ஏழு ரக்அத்களாகவும் தொழு(வித்)தார்கள்.

இதன் அறிவிப்பாளரான ஜாபிர் பின் ஸைத் (ரஹ்) அவர்களிடம் அய்யூப் அஸ் ஸக்தியானீ (ரஹ்) அவர்கள், “இ(வ்வாறு சேர்த்துத் தொழுத)து மழைக் காலத்தில் நடந்திருக்கலாமோ?” என்று கேட்டார்கள். அதற்கு ஜாபிர் (ரஹ்) அவர்கள் ‘இருக் கலாம்’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 9
544. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ لَمْ تَخْرُجْ مِنْ حُجْرَتِهَا. وَقَالَ أَبُو أُسَامَةَ عَنْ هِشَامٍ مِنْ قَعْرِ حُجْرَتِهَا.
பாடம் : 13 அஸ்ர் தொழுகையின் நேரம்
544. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனது அறையி-ருந்து சூரிய ஒளி (முற்றாக) அகலாத நிலையில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர் களது அறிவிப்பில், ‘எனது அறையின் மத்தியிலிருந்து விலகாத நிலையில்’ என்று காணப்படுகிறது.


அத்தியாயம் : 9
545. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم صَلَّى الْعَصْرَ وَالشَّمْسُ فِي حُجْرَتِهَا، لَمْ يَظْهَرِ الْفَىْءُ مِنْ حُجْرَتِهَا.
பாடம் : 13 அஸ்ர் தொழுகையின் நேரம்
545. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

சூரிய ஒளி எனது அறைக்குள் இருந்துகொண்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்; அப்போது எனது அறையில் நிழல் படிந்திருக்காது.


அத்தியாயம் : 9
546. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي صَلاَةَ الْعَصْرِ وَالشَّمْسُ طَالِعَةٌ فِي حُجْرَتِي لَمْ يَظْهَرِ الْفَىْءُ بَعْدُ. وَقَالَ مَالِكٌ وَيَحْيَى بْنُ سَعِيدٍ وَشُعَيْبٌ وَابْنُ أَبِي حَفْصَةَ وَالشَّمْسُ قَبْلَ أَنْ تَظْهَرَ.
பாடம் : 13 அஸ்ர் தொழுகையின் நேரம்
546. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

சூரிய ஒளி எனது அறைக்குள் விழுந்துகொண்டும் நிழல் இன்னும் (கிழக்குப் பக்கச் சுவரில்) விழாமலும் உள்ள நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுவார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் மா-க் (ரஹ்), யஹ்யா பின் சயீத் (ரஹ்), ஷுஐப் பின் அபீஹம்ஸா (ரஹ்), இப்னு அபீஹஃப்ஸா (முஹம்மத் பின் மைஸரா அல்பஸரீ- ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், ‘சூரிய ஒளி (முற்றாக) அகலாத நிலையில்’ என்று இடம்பெற்றுள்ளது.8


அத்தியாயம் : 9