4861. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، سَمِعْتُ عُرْوَةَ، قُلْتُ لِعَائِشَةَ ـ رضى الله عنها ـ فَقَالَتْ إِنَّمَا كَانَ مَنْ أَهَلَّ بِمَنَاةَ الطَّاغِيَةِ الَّتِي بِالْمُشَلَّلِ لاَ يَطُوفُونَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ} فَطَافَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَالْمُسْلِمُونَ. قَالَ سُفْيَانُ مَنَاةُ بِالْمُشَلَّلِ مِنْ قُدَيْدٍ. وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ قَالَ عُرْوَةُ قَالَتْ عَائِشَةُ نَزَلَتْ فِي الأَنْصَارِ كَانُوا هُمْ وَغَسَّانُ قَبْلَ أَنْ يُسْلِمُوا يُهِلُّونَ لِمَنَاةَ. مِثْلَهُ. وَقَالَ مَعْمَرٌ عَنِ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ كَانَ رِجَالٌ مِنَ الأَنْصَارِ مِمَّنْ كَانَ يُهِلُّ لِمَنَاةَ ـ وَمَنَاةُ صَنَمٌ بَيْنَ مَكَّةَ وَالْمَدِينَةِ ـ قَالُوا يَا نَبِيَّ اللَّهِ كُنَّا لاَ نَطُوفُ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ تَعْظِيمًا لِمَنَاةَ. نَحْوَهُ.
பாடம்: 6
மேலும், மூன்றாவதான ‘மனாத்’ (எனும் விக்ரகத்தைப்) பற்றியும் (நீங்கள் சிந்தித்ததுண்டா? எனும் 53:20ஆவது இறைவசனம்)
4861. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (‘‘ஹஜ்ஜில் ஸஃபா - மர்வாவுக்கிடையே சுற்றிவராவிட்டாலும் குற்றமில்லைதானே? அப்படித்தானே 2:158ஆவது இறைவசனம் தெரிவிக்கிறது. தங்கள் கருத்து என்ன?” என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘முஷல்லல் எனும் குன்றில் இருந்த ‘மனாத்’ எனும் சிலைக்காக ‘இஹ்ராம்’ கட்டியவர்கள் (ஹஜ்ஜில்) ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையில் சுற்றிவராமலிருந்தார்கள்.
அப்போதுதான் ‘‘நிச்சயமாக ‘ஸஃபா’, ‘மர்வா’ (எனும் இரு குன்றுகள்) அல்லாஹ் வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும்...” எனும் (2:158 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் சுற்றிவந்தனர்” என்று சொன்னார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ‘‘மனாத் என்பது, (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையில்) ‘குதைத்’ எனும் இடத்தில் ‘முஷல்லல்’ எனும் குன்றிலிருந்த சிலையாகும்” என்று கூறினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பில், ‘‘இந்த (2:158ஆவது) இறைவசனம் அன்சாரிகள் குறித்து அருளப்பட்டது; அன்சாரிகளும் ‘ஃகஸ்ஸான்’ குலத்தாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்முன் ‘மனாத்’ சிலைக்காக, இஹ்ராம் கட்டிவந்தனர்” என்று தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகிறது.
ஆயிஷா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘‘மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையிலிருந்த ‘மனாத்’ எனும் சிலைக்காக ‘இஹ்ராம்’ கட்டிவந்தவர்களில் சில அன்சாரிகளும் இருந்தனர். அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! மனாத்திற்கு மரியாதை செய்யும் முகமாக நாங்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே சுற்றி வராமலிருந்தோம்...’ என்று கூறினர்” எனத் தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகிறது.9
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4861. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (‘‘ஹஜ்ஜில் ஸஃபா - மர்வாவுக்கிடையே சுற்றிவராவிட்டாலும் குற்றமில்லைதானே? அப்படித்தானே 2:158ஆவது இறைவசனம் தெரிவிக்கிறது. தங்கள் கருத்து என்ன?” என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘முஷல்லல் எனும் குன்றில் இருந்த ‘மனாத்’ எனும் சிலைக்காக ‘இஹ்ராம்’ கட்டியவர்கள் (ஹஜ்ஜில்) ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையில் சுற்றிவராமலிருந்தார்கள்.
அப்போதுதான் ‘‘நிச்சயமாக ‘ஸஃபா’, ‘மர்வா’ (எனும் இரு குன்றுகள்) அல்லாஹ் வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும்...” எனும் (2:158 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் சுற்றிவந்தனர்” என்று சொன்னார்கள்.
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ‘‘மனாத் என்பது, (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையில்) ‘குதைத்’ எனும் இடத்தில் ‘முஷல்லல்’ எனும் குன்றிலிருந்த சிலையாகும்” என்று கூறினார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பில், ‘‘இந்த (2:158ஆவது) இறைவசனம் அன்சாரிகள் குறித்து அருளப்பட்டது; அன்சாரிகளும் ‘ஃகஸ்ஸான்’ குலத்தாரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும்முன் ‘மனாத்’ சிலைக்காக, இஹ்ராம் கட்டிவந்தனர்” என்று தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகிறது.
ஆயிஷா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், ‘‘மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையிலிருந்த ‘மனாத்’ எனும் சிலைக்காக ‘இஹ்ராம்’ கட்டிவந்தவர்களில் சில அன்சாரிகளும் இருந்தனர். அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதரே! மனாத்திற்கு மரியாதை செய்யும் முகமாக நாங்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே சுற்றி வராமலிருந்தோம்...’ என்று கூறினர்” எனத் தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகிறது.9
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4862. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ سَجَدَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِالنَّجْمِ وَسَجَدَ مَعَهُ الْمُسْلِمُونَ وَالْمُشْرِكُونَ وَالْجِنُّ وَالإِنْسُ. تَابَعَهُ ابْنُ طَهْمَانَ عَنْ أَيُّوبَ. وَلَمْ يَذْكُرِ ابْنُ عُلَيَّةَ ابْنَ عَبَّاسٍ.
பாடம்: 7
ஆகவே, அல்லாஹ்விற்கு நீங்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்திடுங்கள்; அவனையே வழிபடுங்கள் (எனும் 53:62ஆவது இறைவசனம்)
4862. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (53ஆவது அத்தியாயமான) ‘அந்நஜ்ம்’ அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தா செய்தனர்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.10
இப்னு உலய்யா (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை (அவர்கள் அறிவித்ததாக)க் குறிப்பிடவில்லை.11
அத்தியாயம் : 65
4862. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (53ஆவது அத்தியாயமான) ‘அந்நஜ்ம்’ அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தா செய்தனர்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.10
இப்னு உலய்யா (ரஹ்) அவர்கள் தமது அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை (அவர்கள் அறிவித்ததாக)க் குறிப்பிடவில்லை.11
அத்தியாயம் : 65
4863. حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ، أَخْبَرَنِي أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ أَوَّلُ سُورَةٍ أُنْزِلَتْ فِيهَا سَجْدَةٌ {وَالنَّجْمِ}. قَالَ فَسَجَدَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَسَجَدَ مَنْ خَلْفَهُ، إِلاَّ رَجُلاً رَأَيْتُهُ أَخَذَ كَفًّا مِنْ تُرَابٍ فَسَجَدَ عَلَيْهِ، فَرَأَيْتُهُ بَعْدَ ذَلِكَ قُتِلَ كَافِرًا، وَهْوَ أُمَيَّةُ بْنُ خَلَفٍ.
பாடம்: 7
ஆகவே, அல்லாஹ்விற்கு நீங்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்திடுங்கள்; அவனையே வழிபடுங்கள் (எனும் 53:62ஆவது இறைவசனம்)
4863. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஓதலுக்குரிய) ‘சஜ்தா’ அருளப்பெற்ற முதல் அத்தியாயம் ‘அந்நஜ்ம்’ ஆகும். அதை ஓதியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுக்குப் பின்னால் இருந்த அனைவரும் (அவர்களுடன் சேர்ந்து) ‘சஜ்தா’ செய்தார்கள். ஒரேயொரு மனிதனைத் தவிர!
அம்மனிதன் ஒரு பிடி மண்ணை எடுத்து (தன் நெற்றிக்குக் கொண்டுசென்று) அதன் மீது சஜ்தாச் செய்ததை நான் கண்டேன். பின்னர் அவன் (பத்ர் போரின்போது) இறைமறுப்பாளனாகக் கொல்லப்பட்டதை நான் கண்டேன். அவன்தான் உமய்யா பின் கலஃப் ஆவான்.12
அத்தியாயம் : 65
4863. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஓதலுக்குரிய) ‘சஜ்தா’ அருளப்பெற்ற முதல் அத்தியாயம் ‘அந்நஜ்ம்’ ஆகும். அதை ஓதியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுக்குப் பின்னால் இருந்த அனைவரும் (அவர்களுடன் சேர்ந்து) ‘சஜ்தா’ செய்தார்கள். ஒரேயொரு மனிதனைத் தவிர!
அம்மனிதன் ஒரு பிடி மண்ணை எடுத்து (தன் நெற்றிக்குக் கொண்டுசென்று) அதன் மீது சஜ்தாச் செய்ததை நான் கண்டேன். பின்னர் அவன் (பத்ர் போரின்போது) இறைமறுப்பாளனாகக் கொல்லப்பட்டதை நான் கண்டேன். அவன்தான் உமய்யா பின் கலஃப் ஆவான்.12
அத்தியாயம் : 65
4864. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، وَسُفْيَانَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ انْشَقَّ الْقَمَرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِرْقَتَيْنِ، فِرْقَةً فَوْقَ الْجَبَلِ وَفِرْقَةً دُونَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " اشْهَدُوا ".
பாடம்:
54. ‘இக்தரபத்திஸ் ஸாஅத்’ (அல்கமர்) அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(54:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தமிர்’ எனும் சொல்லுக்கு ‘நிலைத்து நில்லாமல் சென்றுவிடுகின்ற’ என்பது பொருள்.
(54:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தஜர்’ எனும் சொல்லுக்கு ‘உச்சகட்ட எச்சரிக்கை’ என்பது பொருள். (54:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஸ்துஜிர்’ என்பதற்கு, ‘இவருக்குப் பைத்தியம் பிடித்து ஆட்டுகிறது’ என்று பொருள்.
(54:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துஸுர் ‘ எனும் சொல், மரக்கலத்தின் (ஆணி, கயிறு போன்ற) உதிரி பாகங்களைக் குறிக்கும்.
(54:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லிமன் கான குஃபிர்’ எனும் சொற்றொடருக்கு ‘அவமரியாதை செய்யப்பட்ட அந்த மனிதரின் நிமித்தம் நாம் அளித்த பிரதிபலனாகும் இது’ என்று பொருள்.
(54:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஹ்தளர்’ எனும் சொல், ஒவ்வொருவரும் தமது முறை வரும் நாளில் (தண்ணீருக்காக) வரவேண்டும்’ என்பதைக் குறிக்கும்.
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(54:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஹ்திஈன’ (ஓடிக்கொண்டிருப்பவர்கள்) என்பது, தலையைத் தாழ்த்திய வண்ணம் வேகமாக ஓடுவோரைக் குறிக்கும்.
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்:
(54:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபதஆத்தா’ எனும் சொல்லுக்கு ‘தமது கரத்தால் அறுத்துவிட்டார்’ என்பது பொருள்.
(54:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முஹ்தழிர்’ எனும் சொல்லுக்கு ‘கரிந்து போன மரத்துண்டைப் போல’ என்று பொருள்.
(54:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஸ்துஜிர’ எனும் சொல்லுக்கு ‘கண்டித்து விரட்டப்பட்டார்’ என்று பொருள்.
(54:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குஃபிர்’ (நிராகரிக்கப்பட்டவர்) என்பதன் கருத்தாவது: நூஹ் (அலை) அவர்களுக்கும் அன்னாருடைய தோழர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமரியாதைக்குப் பிரதிபலனாகவே அவர்களைக் காப்பாற்றி, மற்றவர்களை வெள்ளத்தில் மூழ்கடித்தோம்.
(54:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தகிர்’ எனும் சொல்லுக்கு ‘நிலையான வேதனை’ என்று பொருள்.
(54:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஷிர்’ எனும் சொல்லுக்கு ‘அகந்தையும் ஆணவமும்’ உள்ளவன்’ என்று பொருள்.
பாடம்: 1
நிலவு பிளந்துவிட்டது. ஆனால் (இந்த மக்களின் நிலைமை என்ன வெனில்), எந்தச் சான்றைப் பார்த் தாலும் புறக்கணிக்கிறார்கள் (எனும் 54:1,2 ஆகிய வசனங்களின் தொடர்)
4864. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள். என்று சொன்னார்கள்.2
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4864. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள். என்று சொன்னார்கள்.2
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 65
4865. حَدَّثَنَا عَلِيٌّ، حَدَّثَنَا سُفْيَانُ، أَخْبَرَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي مَعْمَرٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ انْشَقَّ الْقَمَرُ وَنَحْنُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَصَارَ فِرْقَتَيْنِ، فَقَالَ لَنَا " اشْهَدُوا، اشْهَدُوا ".
பாடம்:
54. ‘இக்தரபத்திஸ் ஸாஅத்’ (அல்கமர்) அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(54:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தமிர்’ எனும் சொல்லுக்கு ‘நிலைத்து நில்லாமல் சென்றுவிடுகின்ற’ என்பது பொருள்.
(54:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தஜர்’ எனும் சொல்லுக்கு ‘உச்சகட்ட எச்சரிக்கை’ என்பது பொருள். (54:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஸ்துஜிர்’ என்பதற்கு, ‘இவருக்குப் பைத்தியம் பிடித்து ஆட்டுகிறது’ என்று பொருள்.
(54:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துஸுர் ‘ எனும் சொல், மரக்கலத்தின் (ஆணி, கயிறு போன்ற) உதிரி பாகங்களைக் குறிக்கும்.
(54:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லிமன் கான குஃபிர்’ எனும் சொற்றொடருக்கு ‘அவமரியாதை செய்யப்பட்ட அந்த மனிதரின் நிமித்தம் நாம் அளித்த பிரதிபலனாகும் இது’ என்று பொருள்.
(54:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஹ்தளர்’ எனும் சொல், ஒவ்வொருவரும் தமது முறை வரும் நாளில் (தண்ணீருக்காக) வரவேண்டும்’ என்பதைக் குறிக்கும்.
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(54:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஹ்திஈன’ (ஓடிக்கொண்டிருப்பவர்கள்) என்பது, தலையைத் தாழ்த்திய வண்ணம் வேகமாக ஓடுவோரைக் குறிக்கும்.
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்:
(54:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபதஆத்தா’ எனும் சொல்லுக்கு ‘தமது கரத்தால் அறுத்துவிட்டார்’ என்பது பொருள்.
(54:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முஹ்தழிர்’ எனும் சொல்லுக்கு ‘கரிந்து போன மரத்துண்டைப் போல’ என்று பொருள்.
(54:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஸ்துஜிர’ எனும் சொல்லுக்கு ‘கண்டித்து விரட்டப்பட்டார்’ என்று பொருள்.
(54:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குஃபிர்’ (நிராகரிக்கப்பட்டவர்) என்பதன் கருத்தாவது: நூஹ் (அலை) அவர்களுக்கும் அன்னாருடைய தோழர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமரியாதைக்குப் பிரதிபலனாகவே அவர்களைக் காப்பாற்றி, மற்றவர்களை வெள்ளத்தில் மூழ்கடித்தோம்.
(54:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தகிர்’ எனும் சொல்லுக்கு ‘நிலையான வேதனை’ என்று பொருள்.
(54:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஷிர்’ எனும் சொல்லுக்கு ‘அகந்தையும் ஆணவமும்’ உள்ளவன்’ என்று பொருள்.
பாடம்: 1
நிலவு பிளந்துவிட்டது. ஆனால் (இந்த மக்களின் நிலைமை என்ன வெனில்), எந்தச் சான்றைப் பார்த் தாலும் புறக்கணிக்கிறார்கள் (எனும் 54:1,2 ஆகிய வசனங்களின் தொடர்)
4865. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்துகொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், ‘‘நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (இரு முறை) கூறினார்கள்.
அத்தியாயம் : 65
4865. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்துகொண்டிருந்தபோது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், ‘‘நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள்” என்று (இரு முறை) கூறினார்கள்.
அத்தியாயம் : 65
4866. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنِي بَكْرٌ، عَنْ جَعْفَرٍ، عَنْ عِرَاكِ بْنِ مَالِكٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ انْشَقَّ الْقَمَرُ فِي زَمَانِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம்:
54. ‘இக்தரபத்திஸ் ஸாஅத்’ (அல்கமர்) அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(54:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தமிர்’ எனும் சொல்லுக்கு ‘நிலைத்து நில்லாமல் சென்றுவிடுகின்ற’ என்பது பொருள்.
(54:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தஜர்’ எனும் சொல்லுக்கு ‘உச்சகட்ட எச்சரிக்கை’ என்பது பொருள். (54:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஸ்துஜிர்’ என்பதற்கு, ‘இவருக்குப் பைத்தியம் பிடித்து ஆட்டுகிறது’ என்று பொருள்.
(54:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துஸுர் ‘ எனும் சொல், மரக்கலத்தின் (ஆணி, கயிறு போன்ற) உதிரி பாகங்களைக் குறிக்கும்.
(54:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லிமன் கான குஃபிர்’ எனும் சொற்றொடருக்கு ‘அவமரியாதை செய்யப்பட்ட அந்த மனிதரின் நிமித்தம் நாம் அளித்த பிரதிபலனாகும் இது’ என்று பொருள்.
(54:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஹ்தளர்’ எனும் சொல், ஒவ்வொருவரும் தமது முறை வரும் நாளில் (தண்ணீருக்காக) வரவேண்டும்’ என்பதைக் குறிக்கும்.
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(54:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஹ்திஈன’ (ஓடிக்கொண்டிருப்பவர்கள்) என்பது, தலையைத் தாழ்த்திய வண்ணம் வேகமாக ஓடுவோரைக் குறிக்கும்.
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்:
(54:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபதஆத்தா’ எனும் சொல்லுக்கு ‘தமது கரத்தால் அறுத்துவிட்டார்’ என்பது பொருள்.
(54:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முஹ்தழிர்’ எனும் சொல்லுக்கு ‘கரிந்து போன மரத்துண்டைப் போல’ என்று பொருள்.
(54:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஸ்துஜிர’ எனும் சொல்லுக்கு ‘கண்டித்து விரட்டப்பட்டார்’ என்று பொருள்.
(54:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குஃபிர்’ (நிராகரிக்கப்பட்டவர்) என்பதன் கருத்தாவது: நூஹ் (அலை) அவர்களுக்கும் அன்னாருடைய தோழர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமரியாதைக்குப் பிரதிபலனாகவே அவர்களைக் காப்பாற்றி, மற்றவர்களை வெள்ளத்தில் மூழ்கடித்தோம்.
(54:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தகிர்’ எனும் சொல்லுக்கு ‘நிலையான வேதனை’ என்று பொருள்.
(54:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஷிர்’ எனும் சொல்லுக்கு ‘அகந்தையும் ஆணவமும்’ உள்ளவன்’ என்று பொருள்.
பாடம்: 1
நிலவு பிளந்துவிட்டது. ஆனால் (இந்த மக்களின் நிலைமை என்ன வெனில்), எந்தச் சான்றைப் பார்த் தாலும் புறக்கணிக்கிறார்கள் (எனும் 54:1,2 ஆகிய வசனங்களின் தொடர்)
4866. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவுபட்டது.3
அத்தியாயம் : 65
4866. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவுபட்டது.3
அத்தியாயம் : 65
4867. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ سَأَلَ أَهْلُ مَكَّةَ أَنْ يُرِيَهُمْ آيَةً فَأَرَاهُمُ انْشِقَاقَ الْقَمَرِ.
பாடம்:
54. ‘இக்தரபத்திஸ் ஸாஅத்’ (அல்கமர்) அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(54:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தமிர்’ எனும் சொல்லுக்கு ‘நிலைத்து நில்லாமல் சென்றுவிடுகின்ற’ என்பது பொருள்.
(54:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தஜர்’ எனும் சொல்லுக்கு ‘உச்சகட்ட எச்சரிக்கை’ என்பது பொருள். (54:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஸ்துஜிர்’ என்பதற்கு, ‘இவருக்குப் பைத்தியம் பிடித்து ஆட்டுகிறது’ என்று பொருள்.
(54:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துஸுர் ‘ எனும் சொல், மரக்கலத்தின் (ஆணி, கயிறு போன்ற) உதிரி பாகங்களைக் குறிக்கும்.
(54:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லிமன் கான குஃபிர்’ எனும் சொற்றொடருக்கு ‘அவமரியாதை செய்யப்பட்ட அந்த மனிதரின் நிமித்தம் நாம் அளித்த பிரதிபலனாகும் இது’ என்று பொருள்.
(54:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஹ்தளர்’ எனும் சொல், ஒவ்வொருவரும் தமது முறை வரும் நாளில் (தண்ணீருக்காக) வரவேண்டும்’ என்பதைக் குறிக்கும்.
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(54:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஹ்திஈன’ (ஓடிக்கொண்டிருப்பவர்கள்) என்பது, தலையைத் தாழ்த்திய வண்ணம் வேகமாக ஓடுவோரைக் குறிக்கும்.
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்:
(54:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபதஆத்தா’ எனும் சொல்லுக்கு ‘தமது கரத்தால் அறுத்துவிட்டார்’ என்பது பொருள்.
(54:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முஹ்தழிர்’ எனும் சொல்லுக்கு ‘கரிந்து போன மரத்துண்டைப் போல’ என்று பொருள்.
(54:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஸ்துஜிர’ எனும் சொல்லுக்கு ‘கண்டித்து விரட்டப்பட்டார்’ என்று பொருள்.
(54:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குஃபிர்’ (நிராகரிக்கப்பட்டவர்) என்பதன் கருத்தாவது: நூஹ் (அலை) அவர்களுக்கும் அன்னாருடைய தோழர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமரியாதைக்குப் பிரதிபலனாகவே அவர்களைக் காப்பாற்றி, மற்றவர்களை வெள்ளத்தில் மூழ்கடித்தோம்.
(54:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தகிர்’ எனும் சொல்லுக்கு ‘நிலையான வேதனை’ என்று பொருள்.
(54:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஷிர்’ எனும் சொல்லுக்கு ‘அகந்தையும் ஆணவமும்’ உள்ளவன்’ என்று பொருள்.
பாடம்: 1
நிலவு பிளந்துவிட்டது. ஆனால் (இந்த மக்களின் நிலைமை என்ன வெனில்), எந்தச் சான்றைப் பார்த் தாலும் புறக்கணிக்கிறார்கள் (எனும் 54:1,2 ஆகிய வசனங்களின் தொடர்)
4867. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்காவாசிகள் (நபி (ஸல்) அவர்களி டம்) ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள்.4
அத்தியாயம் : 65
4867. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மக்காவாசிகள் (நபி (ஸல்) அவர்களி டம்) ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே, சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள்.4
அத்தியாயம் : 65
4868. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ انْشَقَّ الْقَمَرُ فِرْقَتَيْنِ.
பாடம்:
54. ‘இக்தரபத்திஸ் ஸாஅத்’ (அல்கமர்) அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(54:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தமிர்’ எனும் சொல்லுக்கு ‘நிலைத்து நில்லாமல் சென்றுவிடுகின்ற’ என்பது பொருள்.
(54:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தஜர்’ எனும் சொல்லுக்கு ‘உச்சகட்ட எச்சரிக்கை’ என்பது பொருள். (54:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஸ்துஜிர்’ என்பதற்கு, ‘இவருக்குப் பைத்தியம் பிடித்து ஆட்டுகிறது’ என்று பொருள்.
(54:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துஸுர் ‘ எனும் சொல், மரக்கலத்தின் (ஆணி, கயிறு போன்ற) உதிரி பாகங்களைக் குறிக்கும்.
(54:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லிமன் கான குஃபிர்’ எனும் சொற்றொடருக்கு ‘அவமரியாதை செய்யப்பட்ட அந்த மனிதரின் நிமித்தம் நாம் அளித்த பிரதிபலனாகும் இது’ என்று பொருள்.
(54:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஹ்தளர்’ எனும் சொல், ஒவ்வொருவரும் தமது முறை வரும் நாளில் (தண்ணீருக்காக) வரவேண்டும்’ என்பதைக் குறிக்கும்.
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(54:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஹ்திஈன’ (ஓடிக்கொண்டிருப்பவர்கள்) என்பது, தலையைத் தாழ்த்திய வண்ணம் வேகமாக ஓடுவோரைக் குறிக்கும்.
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்:
(54:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபதஆத்தா’ எனும் சொல்லுக்கு ‘தமது கரத்தால் அறுத்துவிட்டார்’ என்பது பொருள்.
(54:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முஹ்தழிர்’ எனும் சொல்லுக்கு ‘கரிந்து போன மரத்துண்டைப் போல’ என்று பொருள்.
(54:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஸ்துஜிர’ எனும் சொல்லுக்கு ‘கண்டித்து விரட்டப்பட்டார்’ என்று பொருள்.
(54:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குஃபிர்’ (நிராகரிக்கப்பட்டவர்) என்பதன் கருத்தாவது: நூஹ் (அலை) அவர்களுக்கும் அன்னாருடைய தோழர்களுக்கும் இழைக்கப்பட்ட அவமரியாதைக்குப் பிரதிபலனாகவே அவர்களைக் காப்பாற்றி, மற்றவர்களை வெள்ளத்தில் மூழ்கடித்தோம்.
(54:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்தகிர்’ எனும் சொல்லுக்கு ‘நிலையான வேதனை’ என்று பொருள்.
(54:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஷிர்’ எனும் சொல்லுக்கு ‘அகந்தையும் ஆணவமும்’ உள்ளவன்’ என்று பொருள்.
பாடம்: 1
நிலவு பிளந்துவிட்டது. ஆனால் (இந்த மக்களின் நிலைமை என்ன வெனில்), எந்தச் சான்றைப் பார்த் தாலும் புறக்கணிக்கிறார்கள் (எனும் 54:1,2 ஆகிய வசனங்களின் தொடர்)
4868. அனஸ் (பின் மாலிக் -ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது.
அத்தியாயம் : 65
4868. அனஸ் (பின் மாலிக் -ரலி) அவர்கள் கூறியதாவது:
(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது.
அத்தியாயம் : 65
4869. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْرَأُ {فَهَلْ مِنْ مُدَّكِرٍ}
பாடம்: 2
எவர் (அவர்களால்) அவமரியாதை செய்யப்பட்டுவந்தாரோ அவருக் குப் பிரதிபலனாக நம் கண்முன்னே அது (மரக்கலம்) மிதந்து சென்று கொண்டிருந்தது. அதனை நாம் (எதிர்காலத்திற்கு) ஒரு சான்றாக விட்டுவைத்தோம். (இதன்மூலம்) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:14, 15 ஆகிய இறை வசனங்கள்)
‘‘நூஹ் (அலை) அவர்களது மரக்கலத்தை அல்லாஹ் அப்படியே விட்டுவைத்தான். அதை இந்தச் சமுதாயத்தின் முன்னோர்கள் கண்டனர்” என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.5
4869. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர் (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி (ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (‘முஸ்தகிர்’ என்றோ, ‘முஸ்ஸகிர் என்றோ ஓதவில்லை.)6
அத்தியாயம் : 65
4869. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர் (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி (ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (‘முஸ்தகிர்’ என்றோ, ‘முஸ்ஸகிர் என்றோ ஓதவில்லை.)6
அத்தியாயம் : 65
4870. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. أَنَّهُ كَانَ يَقْرَأُ {فَهَلْ مِنْ مُدَّكِرٍ}.
பாடம்: 3
(மக்கள்) நல்லுணர்வு பெறுவதற் காகவே இந்த குர்ஆனை நாம் எளிதாக்கியுள்ளோம். எனவே, நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:17, 22, 32, 40 ஆகிய வசனங்கள்)
‘‘இந்த வசனத்தின் மூலத்திலுள்ள ‘யஸ்ஸர்னா’ எனும் சொல்லுக்கு ‘இந்த குர்ஆனை ஓதுவதை நாம் எளிதாக்கி யுள்ளோம்’ என்று பொருள்” என முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
4870. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ‘ஃஹல் மின்(ம்) முத்தகிர்’ (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி (ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (‘முஸ்தகிர்’ என்றோ, ‘முஸ்ஸகிர்’ என்றோ ஓதவில்லை.)
அத்தியாயம் : 65
4870. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ‘ஃஹல் மின்(ம்) முத்தகிர்’ (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி (ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (‘முஸ்தகிர்’ என்றோ, ‘முஸ்ஸகிர்’ என்றோ ஓதவில்லை.)
அத்தியாயம் : 65
4871. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، أَنَّهُ سَمِعَ رَجُلاً، سَأَلَ الأَسْوَدَ فَهَلْ مِنْ مُدَّكِرٍ أَوْ مُذَّكِرٍ فَقَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ يَقْرَؤُهَا {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} قَالَ وَسَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَؤُهَا {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} دَالاً.
பாடம்: 4
வேரோடு வீழ்ந்த பேரீச்சமரங்களின் அடிப்பாகங்களைப்போல் (அக்காற்று) மனிதர்களைப் பிடுங்கி எறிந்துவிட்டது. (பார்த்தீர்களா?) நான் அனுப்பிய வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (எனும் 54:20,21 ஆகிய வசனங்கள்)
4871. அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடம் (54ஆவது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ‘ஃபஹல் மின் (ம்) முத்தகிர்’ என்று ஓத வேண்டுமா? அல்லது ‘முஃதக்கிர்’ என்று ஓத வேண்டுமா? என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், ‘ஃபஹல் மின் முத்தகிர்’ என்றே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதக் கேட்டேன். மேலும், ‘‘நபி (ஸல்) அவர்கள், ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ என ‘தால்’ (எனும் எழுத்து)கொண்டே ஓதியதை நான் கேட்டேன் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 65
4871. அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடம் (54ஆவது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ‘ஃபஹல் மின் (ம்) முத்தகிர்’ என்று ஓத வேண்டுமா? அல்லது ‘முஃதக்கிர்’ என்று ஓத வேண்டுமா? என்று கேட்டார்.
அதற்கு அவர்கள், ‘ஃபஹல் மின் முத்தகிர்’ என்றே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதக் கேட்டேன். மேலும், ‘‘நபி (ஸல்) அவர்கள், ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ என ‘தால்’ (எனும் எழுத்து)கொண்டே ஓதியதை நான் கேட்டேன் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்” என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 65
4872. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَرَأَ {فَهَلْ مِنْ مُدَّكِرٍ} الآيَةَ.
பாடம்: 5
உடனே அவர்கள், மிதிபட்ட காய்ந்த வைக்கோல்போல் ஆகிவிட்டார்கள். (மக்கள்) நல்லுணர்வு பெறுவதற்காகவே இந்த குர்ஆனை நாம் எளிதாக்கி யுள்ளோம். எனவே, நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:31,32 ஆகிய வசனங்கள்)
4872. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(54ஆவது அத்தியாயத்தின் மூலத்தி லுள்ள இத்தொடரை) நபி (ஸல்) அவர்கள் ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ என்றே ஓதினார்கள்.
அத்தியாயம் : 65
4872. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(54ஆவது அத்தியாயத்தின் மூலத்தி லுள்ள இத்தொடரை) நபி (ஸல்) அவர்கள் ‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர்’ என்றே ஓதினார்கள்.
அத்தியாயம் : 65
4873. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَرَأَ {فَهَلْ مِنْ مُدَّكِرٍ، ولقد أهلكنا أشياعكم فهل من مُدَّكِرٍ}
பாடம்: 6
அதிகாலையில் ஒரு நிலையான வேதனை அவர்களை வந்தடைந்தது. அப்போது, நான் அனுப்பிய வேதனையையும் எச்சரிக்கையையும் சுவையுங்கள் (என்று நாம் கூறினோம் எனும் 54:38,39 ஆகிய வசனங்கள்)
4873. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (54ஆவது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ‘ஃபஹல் மின்(ம்) முத்தக்கிர்’ என்றே ஓதினார்கள்.
அத்தியாயம் : 65
4873. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (54ஆவது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ‘ஃபஹல் மின்(ம்) முத்தக்கிர்’ என்றே ஓதினார்கள்.
அத்தியாயம் : 65
4874. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ قَرَأْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَهَلْ مِنْ مُذَّكِرٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم {فَهَلْ مِنْ مُدَّكِرٍ}
பாடம்
உங்களைப் போன்ற பலரை நாம் அழித்துவிட்டிருக்கின்றோம். எனவே, (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:51ஆவது இறைவசனம்)
4874. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் ‘ஃபஹல் மின்(ம்) முஸ்ஸகிர்’ என்று நான் ஓதிக்காட்டினேன். அப்போது அவர்கள், ‘‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர் (என்றே ஓதுக!)” என்றார்கள்.7
அத்தியாயம் : 65
4874. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் ‘ஃபஹல் மின்(ம்) முஸ்ஸகிர்’ என்று நான் ஓதிக்காட்டினேன். அப்போது அவர்கள், ‘‘ஃபஹல் மின்(ம்) முத்தகிர் (என்றே ஓதுக!)” என்றார்கள்.7
அத்தியாயம் : 65
4875.
பாடம்: 7
‘‘அதிவிரைவில் இக்குழுவினர் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்” எனும் (54:45 ஆவது) இறைவசனம்
4875. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ர் போரின்போது கூடாரமொன்றில் இருந்தபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(இறைவா! எங்களுக்கு வெற்றி அளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதிமொழியையும் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் நான் கோருகிறேன். இறைவா! (இந்த இறைநம்பிக்கையாளர்களை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் (இப்புவியில்) இன்றைக்குப் பிறகு இல்லாமல் போய்விடுவர்” என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களது கையைப் பிடித்துக்கொண்டு, ‘‘போதும்! அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடையுடன் எழுந்து, ‘‘இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்” எனும் (54:45ஆவது) வசனத்தை ஓதியபடி அங்கிருந்து வெளியேறினார்கள்.8
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் :
4875. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ர் போரின்போது கூடாரமொன்றில் இருந்தபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(இறைவா! எங்களுக்கு வெற்றி அளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதிமொழியையும் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் நான் கோருகிறேன். இறைவா! (இந்த இறைநம்பிக்கையாளர்களை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் (இப்புவியில்) இன்றைக்குப் பிறகு இல்லாமல் போய்விடுவர்” என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களது கையைப் பிடித்துக்கொண்டு, ‘‘போதும்! அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்” என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடையுடன் எழுந்து, ‘‘இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்” எனும் (54:45ஆவது) வசனத்தை ஓதியபடி அங்கிருந்து வெளியேறினார்கள்.8
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் :
4876. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي يُوسُفُ بْنُ مَاهَكَ، قَالَ إِنِّي عِنْدَ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ لَقَدْ أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ صلى الله عليه وسلم بِمَكَّةَ، وَإِنِّي لَجَارِيَةٌ أَلْعَبُ {بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ}
பாடம்: 8
‘‘தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும்; மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக்கூடியதும் மிகவும் கசப்பானதும் ஆகும்” எனும் (54:46 ஆவது) இறைவசனம்
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அமர்ரு’ (மிகவும் கசப்பானது) எனும் சொல், ‘மராரத்’ (கசப்பு) எனும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
4876. யூசுப் பின் மாஹக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தேன். அவர்கள், ‘‘நான் விளையாடும் சிறுமியாக இருந்தபோது, மக்காவில் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு, ‘‘தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக்கூடியதும் மிகவும் கசப்பானதும் ஆகும்” எனும் (54:46 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 65
4876. யூசுப் பின் மாஹக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் இறைநம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தேன். அவர்கள், ‘‘நான் விளையாடும் சிறுமியாக இருந்தபோது, மக்காவில் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு, ‘‘தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக்கூடியதும் மிகவும் கசப்பானதும் ஆகும்” எனும் (54:46 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 65
4877. حَدَّثَنِي إِسْحَاقُ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ وَهْوَ فِي قُبَّةٍ لَهُ يَوْمَ بَدْرٍ " أَنْشُدُكَ عَهْدَكَ وَوَعْدَكَ، اللَّهُمَّ إِنْ شِئْتَ لَمْ تُعْبَدْ بَعْدَ الْيَوْمِ أَبَدًا ". فَأَخَذَ أَبُو بَكْرٍ بِيَدِهِ وَقَالَ حَسْبُكَ يَا رَسُولَ اللَّهِ فَقَدْ أَلْحَحْتَ عَلَى رَبِّكَ. وَهْوَ فِي الدِّرْعِ فَخَرَجَ وَهْوَ يَقُولُ " {سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ * بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ أَدْهَى وَأَمَرُّ}"
பாடம்: 8
‘‘தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும்; மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக்கூடியதும் மிகவும் கசப்பானதும் ஆகும்” எனும் (54:46 ஆவது) இறைவசனம்
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அமர்ரு’ (மிகவும் கசப்பானது) எனும் சொல், ‘மராரத்’ (கசப்பு) எனும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும்.
4877. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பத்ர் போரின்போது தமது கூடாரமொன்றில் இருந்தபடி, ‘‘(இறைவா! எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதிமொழியையும் உன் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் நான் கோருகிறேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் இனி ஒருபோதும் (உலகில்) இருக்கப்போவதில்லை” என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது கையைப் பிடித்துக் கொண்டு, ‘‘போதும்! அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்” என்று சொன்னார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடையில் இருந்தார்கள். பிறகு, ‘‘இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக்கூடியதும் மிகவும் கசப்பானதும் ஆகும்” எனும் (54:45,46) வசனங்களை ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள்.9
அத்தியாயம் : 65
4877. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பத்ர் போரின்போது தமது கூடாரமொன்றில் இருந்தபடி, ‘‘(இறைவா! எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதிமொழியையும் உன் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் நான் கோருகிறேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடுவோர் இனி ஒருபோதும் (உலகில்) இருக்கப்போவதில்லை” என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது கையைப் பிடித்துக் கொண்டு, ‘‘போதும்! அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள்” என்று சொன்னார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடையில் இருந்தார்கள். பிறகு, ‘‘இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக்கூடியதும் மிகவும் கசப்பானதும் ஆகும்” எனும் (54:45,46) வசனங்களை ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள்.9
அத்தியாயம் : 65
4878.
பாடம்:
55. ‘அர்ரஹ்மான்’ அத்தியாயம்1
(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(55:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி ஹுஸ்பான்’ எனும் சொல்லுக்கு ‘சூரியனும் சந்திரனும் திரிகையைப் போல் (சுழன்றுகொண்டிருக்கின்றன)” என்று பொருள். (இச்சொல்லுக்கு ‘‘குறிப்பிட்ட கணக்கின்படி அவை இரண்டும் இயங்குகின்றன” என்ற பொருளும் உண்டு.)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (55:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ அக்கீமுல் வஸ்ன’ (மேலும், நீதியோடு நிறுவையை மேற்கொள்ளுங்கள்) எனும் தொடரை ‘தராசின் முள்ளை (சரியாகக் கவனித்து நிறுங்கள்’ என்பதை)க் கருத்தில் கொண்டே இறைவன் குறிப்பிடுகின்றான்.
(55:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்அஸ்ஃப்’ எனும் சொல்லுக்கு ‘பருவத்திற்குமுன் பறிக்கப்படும் பயிரின் தழை’ என்பது பொருள். அரபியரின் மொழிவழக்கில் ‘ரைஹான்’ எனும் சொல்லுக்கு ‘உணவு’ என்பது பொருள்.
‘உணவு தானியங்களின் இலை’க்கும் ‘ரைஹான்’ என்பர். மனிதன் உணவாகக்கொள்கின்ற தானியங்களுக்கு ‘ஹப்பு’ என்பர்.
மற்ற (அறிஞர்) சிலர், உணவாக உட்கொள்ளப்படுகின்ற தானியங்களுக்கு ‘அஸ்ஃப்’ என்றும், பச்சையாக உண்ண முடியாதவற்றுக்கு ‘ரைஹான்’ என்றும் கூறினர்.
மற்றவர்கள் கூறுகிறார்கள்: ‘அல்அஸ்ஃப்’ எனும் சொல்லுக்கு ‘கோதுமைப் பயிர்’ என்பது பொருள்.
ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள், ‘‘ ‘அல்அஸ்ஃப்’ எனும் சொல்லுக்கு ‘வைக்கோல்’ எனப் பொருள்” என்று கூறினார்கள்.
அபூமாலிக் அல்ஃகிஃபாரீ (ரஹ்) அவர்கள், ‘‘முதன் முதலாக முளைத்து வரும் நாற்றே ‘அல்அஸ்ஃப்’ ஆகும்; இதனை விவசாயிகள் ‘ஹபூர்’ என்றழைப்பர்” என்று கூறினார்கள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள், ‘அல்அஸ்ஃப்’ என்பதற்கு ‘கோதுமைப் பயிர்’ என்பது பொருள்; ‘ரைஹான்’ என்பதற்கு, ‘உணவு’ என்பது பொருள்” என்று கூறுகிறார்கள்.
(55:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மாரிஜ்’ எனும் சொல், நெருப்புப் பற்ற வைக்கும்போது மேலேயெழுந்து பச்சை மற்றும் மஞ்சள் நிறங்களில் எரியும் தீச்சுவாலையைக் குறிக்கும்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (55:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரப்புல் மஷ்ரிகைனி’ (இரு கீழ்த்திசைகளின் அதிபதி) என்பது, சூரியன் குளிர் காலத்தில் உதயமாகும் கிழக்கையும், கோடை காலத்தில் உதயமாகும் கிழக்கையும் குறிக்கும்.
இதைப் போன்றே ‘ரப்புல் மஃக்ரிபைனி’ (இரு மேல் திசைகளின் அதிபதி) என்பது, சூரியன் குளிர் காலத்தில் மறைகின்ற மேற்கையும், கோடை காலத்தில் மறைகின்ற மேற்கையும் குறிக்கும்.
(55:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லா யப்ஃகியானி’ எனும் சொல்லுக்கு, ‘அவை ஒன்றோடொன்று கலக்காது’ என்று பொருள்.
(55:24ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முன்ஷஆத்’ எனும் சொல், ‘ பாய் உயர்த்திக் கட்டப்பட்ட கப்பல்களைக் குறிக்கும். எந்தக் கப்பலின் பாய் உயர்த்திக் கட்டப்படுவதில்லையோ அந்தக் கப்பல் ‘அல்முன்ஷஅத்’ அன்று.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(55:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கல் ஃபக்கார்’ எனும் சொல்லுக்கு ‘சுட்ட மண்பாண்டம் தயாரிக்கப்படுவதைப் போன்று (இறைவன் முதல் மனிதரைப் படைத்தான்)’ என்று பொருள்.
(55:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஷ்ஷுவால்’ எனும் சொல்லுக்கு ‘தீச்சுவாலை’ என்று பொருள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(55:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நுஹாஸ்’ எனும் சொல்லுக்கு ‘பித்தளை’ என்பது பொருள்; இதை உருக்கி நரகவாசிகளின் தலைகள்மீது ஊற்றி வேதனை செய்யப்படும்.
(55:46ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காஃப மகாம ரப்பிஹி’ (தம்இறைவன்முன் (விசாரணைக்காக) நிற்கவேண்டும் என்பதை அஞ்சியவருக்கு) என்பதன் கருத்தாவது: பாவம் செய்ய முற்படும்போது இறைவனை நினைத்து (அஞ்சி) அதைக் கைவிடுவதாகும்.
(55:64ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முத்ஹாம்மத்தானி’ (அடர்த்தியான பச்சை நிறமுடைய இரு சொர்க்கங்கள்) எனும் சொல், அடர்த்தி கூடிய காரணத்தால் கரும்பச்சை நிறத்தில் காட்சியளிக்கும் இரு சோலைகளைக் குறிக்கும்.
(55:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸல்ஸால்’ (தட்டினால் ஓசையெழுப்பக்கூடிய களிமண்) எனும் சொல், மணலோடு கலக்கப்பட்ட களிமண், சுட்ட மண்பாண்டங்களைப் போல் தட்டினால் ஓசையெழுப்புவதைக் குறிக்கும்.
‘ஸல்ஸால்’ என்பதற்கு, ‘நாற்றமடிக்கும் களிமண்’ என்பது பொருள் என்றும் கூறப்படுகிறது. (‘ஸல்ல’ எனும் சொல்லுக்கும், ‘ஸல்ஸல’ எனும் சொல்லுக்கும் ஒரே பொருள் கொள்ளப்படுகிறது.
இதைப் போன்றே ‘ஸர்ர’ எனும் சொல்லுக்கும், ‘ஸர்ஸர’ எனும் சொல்லுக்கும் பொருள் ஒன்றே.) ‘ஸர்ரல் பாப்’ எனும் வாக்கியத்திற்கு ‘பூட்டப்படும் போது கதவு ஓசையிட்டது’ என்று பொருள். ஸர்ஸரல் பாப் என்பதற்கும் இதுவே பொருள்.
‘கப்கப’ எனும் சொல்லுக்கும் ‘கப்ப’ எனும் சொல்லுக்கும் ‘தலைகீழாகக் கவிழ்ந்தது’ என்ற ஒரே பொருள் இருப்பது போலவே (‘ஸல்ல’வும், ‘ஸல்ஸல’வும்) அமைந்துள்ளன.
(55:68ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபாக்ஹித்துன் வ நஃக்லுன் வ ரும்மான்’ (ஏராளமான கனிகளும் பேரீச்சம்பழங்களும் மாதுளைகளும்) எனும் சொற்றொடரில் (அறிஞர்) சிலர், ‘‘பேரீச்சமும் மாதுளையும், ‘ஃபாக்கிஹத்’ (கனி) வர்க்கத்தில் கட்டுப்பட்டதல்ல” என்று கூறுகின்றனர். ஆனால், அவை இரண்டும் கனி வர்க்கத்தில் கட்டுப்பட்டதாகவே அரபியர் கருதுகின்றனர்.
(அப்படியானால், ‘கனிகள்’ (ஃபாக்கிஹத்) என்பதில் பேரீச்சமும் மாதுளையும் அடங்கிவிடுமே! இரண்டையும் தனியாகக் குறிப்பிடக்காரணம் என்ன? பதில்:) இது, 2:238ஆவது வசனத்தைப் போன்றதாகும். அதில் பொதுவாக எல்லாத் தொழுகைகளையும் பேணித் தொழுதிடுமாறு அல்லாஹ் கட்டளையிட்டபிறகு, நடுத்தொழுகையான அஸ்ர் தொழுகையைத் தனியாகக் குறிப்பிட்டு (அதன் சிறப்பைக் கருதி) வலியுறுத்தியுள்ளான்.
இதைப் போன்றே, 22:18ஆவது வசனத்தையும் குறிப்பிடலாம். இதில் ‘‘வானங்கள் மற்றும் பூமியிலுள்ளவர்கள் அல்லாஹ்விற்குச் சிரவணக்கம் (சஜ்தா) செய்கின்றனர்”எனப் பொதுவாகக் கூறிவிட்டு, இதில் அடங்குபவர்களான மனிதர்களை (அவர்களின் சிறப்பைக் கருதி) தனியாகக் குறிப்பிட்டுள்ளான்: மனிதர்களில் பலரும் அவனுக்குச் சிரவணக்கம் புரிகின்றனர்.
(இதைப் போன்றுதான், பேரீச்சம் பழத்தையும் மாதுளையையும் அவற்றின்சிறப்பைக் கருதித் தனியாகக் குறிப்பிட்டுள்ளான்.)
முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்:
(55:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஃப்னான்’ எனும் சொல்லுக்கு ‘பல கிளைகள்’ என்று பொருள்.
(55:54ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ ஜனல் ஜன்னத்தைனி தான்’ (இரு சோலைகளிலும் பறிப்பதற்கேற்பப் பழங்கள் அருகிலிருக்கும்) என்பதன் கருத்தாவது: பறிக்கப்படும் பழங்கள் (பறிப்போருக்கு வசதியாக) மிக அருகிலேயே இருக்கும்.
ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(55:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆலாஃ’ எனும் சொல்லுக்கு ‘இறைவனின் அருட்கொடைகள்’ என்பது பொருள்.
கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
‘ரப்பிக்குமா துகஃத்திபான்’ (நீங்கள் எதனைப் பொய்யெனக் கூறுவீர்கள்?) எனும் சொற்றொடர், ஜின்கள் மற்றும் மனிதர்களை முன்னிலைப்படுத்திக் கூறப் பட்டுள்ளது.
அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(55:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘குல்ல யவ்மின் ஹுவ ஃபீ ஷஃன்’ (ஒவ்வொரு நாளிலும் அவன் தன் பொறுப்பில் இருக்கிறான்) என்பதன் கருத்தாவது: பாவங்களை மன்னிக்கின்றான்; துன்பங்களை அகற்றுகின்றான்; சிலருக்கு உயர்வைத் தருகின்றான்; சிலருக்குத் தாழ்வைத் தருகின்றான்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(55:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பர்ஸக்’ எனும் சொல்லுக்கு ‘தடுப்பு’ என்பது பொருள்.
(55:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்அநாம்’ எனும் சொல்லுக்கு ‘படைப்பினம்’ என்பது பொருள்.
(55:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நள்ளாகத்தான்’ எனும் சொல்லுக்கு ‘பீறிட்டுப் பொங்கிக்கொண்டிருக்கும்’ என்று பொருள்.
(55:78ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃதுல் ஜலால்’ எனும் சொல்லுக்கு ‘மாண்புடையோன்’ என்று பொருள்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (55:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மாரிஜ்’ எனும் சொல்லுக்கு, ‘(புகை கலக்காத) தூய நெருப்பு’ என்று பொருள். (இதன் இறந்தகால வினைச் சொல்லான ‘மரஜ’ எனும் சொல்லுக்குப் பல பொருள்கள் உள்ளன. அவையாவன:) ‘மரஜல் அமீரு ரஇய்யத்தஹு’ என்பதற்கு, ‘அரசன், மக்களில் சிலர் சிலருக்கு அநீதியிழைக்க விட்டுவிட்டான்’ என்று பொருள்.
‘மரஜ அம்ருந் நாஸ்’ என்பதற்கு ‘மக்கள் குழப்பத்திற்கு உள்ளாகிவிட்டனர்’ என்று பொருள்.
‘மரீஜ்’ எனும் சொல்லுக்கு ‘குழப்பமான’ என்று பொருள். ‘மரஜல் பஹ்ரானி’ என்பதற்கு ‘இரு கடல்கள் சங்கமித்துவிட்டன’ என்று பொருள்.
‘மரஜ்த்த தாப்பத்தக்க’ எனும் வாக்கியத்திற்கு, ‘ நீ உனது கால்நடையை (மேய்வதற்காக) விட்டுவிட்டாய்’ என்று பொருள்.
(55:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸ நஃப்ருஃகு லக்கும்’ (அதிவிரைவில் நாம் உங்களுக்காக நேரம் எடுத்துக்கொள்வோம்) என்பதற்கு ‘உங்களைக் கேள்வி கணக்குக் கேட்போம்’ என்று பொருள். மற்றபடி, அல்லாஹ் ஒன்றைக் கவனிப்பதால், மற்றொன்றுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது என்பது பொருளாகாது.
இது அரபியரின் வழக்கிலுள்ள ஒரு சொல்லாக்கம் ஆகும். எல்லா வேலையையும் விட்டுவிட்டு உனக்காக நேரம் எடுத்துக்கொள்கிறேன் என்பதைக் குறிக்க இதனை ஆள்வார்கள். நீ கவனமற்று இருப்பதால் உன்னை நான் (கடுமையாகப்) பிடிக்கப்போகிறேன் என்று கூறுவதுபோல் (ஓர் எச்சரிக்கையாகவே இதைக் கூறுவர்.)
பாடம்: 1
‘‘அவ்விரு சோலைகள் நீங்கலாக வேறிரு சோலைகளும் (அங்கு) இருக்கும்” எனும் (55:62ஆவது) இறைவசனம்
4878. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை; (வேறு) இரு சொர்க்கங்களும் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருள்களும் பொன்னால் ஆனவையாகும்.2
‘அத்ன்’ எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன்மீதுள்ள ‘பெருமை’ எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.3
இதை அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் :
4878. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை; (வேறு) இரு சொர்க்கங்களும் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருள்களும் பொன்னால் ஆனவையாகும்.2
‘அத்ன்’ எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன்மீதுள்ள ‘பெருமை’ எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.3
இதை அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் :
4879. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الصَّمَدِ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ الْجَوْنِيُّ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ فِي الْجَنَّةِ خَيْمَةً مِنْ لُؤْلُؤَةٍ مُجَوَّفَةٍ، عَرْضُهَا سِتُّونَ مِيلاً، فِي كُلِّ زَاوِيَةٍ مِنْهَا أَهْلٌ، مَا يَرَوْنَ الآخَرِينَ يَطُوفُ عَلَيْهِمُ الْمُؤْمِنُونَ ". " وَجَنَّتَانِ مِنْ فِضَّةٍ، آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا،
பாடம்: 2
கூடாரங்களி(ன் வடிவிலுள்ள மாளிகைகளி)ல் தங்கவைக்கப் பெற்ற ‘ஹூர்’ எனும் பேரழகிகளும் (அங்கு) இருப்பார்கள் (எனும் 55:72ஆவது இறைவசனம்)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த வசனத்திலுள்ள) ‘ஹூர்’ எனும் சொல்லுக்கு ‘‘கன்னங்கரு விழியாள்” என்பது பொருள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மக்ஸூராத்’ எனும் சொல்லுக்கு ‘தடுத்துவைக்கப்பட்டவர்கள்’ என்பது பொருள். அதாவது அவர்கள் தங்களது பார்வையையும், தங்களையும் தங்க ளுடைய துணைவர்கள் அல்லாத மற்றவர்களைவிட்டு தடுத்துப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பெண்கள்; தங்கள் துணைவர்கள் அல்லாத வேறு யாரையும் விரும்பாத பெண்கள் என்று பொருள்.
4879. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் (இறைநம்பிக்கையாளருக்கு) துணைவியர் இருப்பார்கள். ஒரு மூலையிலுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர்.4
அத்தியாயம் : 65
4879. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் (இறைநம்பிக்கையாளருக்கு) துணைவியர் இருப்பார்கள். ஒரு மூலையிலுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது. இறைநம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர்.4
அத்தியாயம் : 65
4880. وَجَنَّتَانِ مِنْ كَذَا آنِيَتُهُمَا، وَمَا فِيهِمَا، وَمَا بَيْنَ الْقَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ إِلاَّ رِدَاءُ الْكِبْرِ عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ ".
பாடம்: 2
கூடாரங்களி(ன் வடிவிலுள்ள மாளிகைகளி)ல் தங்கவைக்கப் பெற்ற ‘ஹூர்’ எனும் பேரழகிகளும் (அங்கு) இருப்பார்கள் (எனும் 55:72ஆவது இறைவசனம்)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த வசனத்திலுள்ள) ‘ஹூர்’ எனும் சொல்லுக்கு ‘‘கன்னங்கரு விழியாள்” என்பது பொருள்.
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்:
(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மக்ஸூராத்’ எனும் சொல்லுக்கு ‘தடுத்துவைக்கப்பட்டவர்கள்’ என்பது பொருள். அதாவது அவர்கள் தங்களது பார்வையையும், தங்களையும் தங்க ளுடைய துணைவர்கள் அல்லாத மற்றவர்களைவிட்டு தடுத்துப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பெண்கள்; தங்கள் துணைவர்கள் அல்லாத வேறு யாரையும் விரும்பாத பெண்கள் என்று பொருள்.
4880. மேலும், இரு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை. (வேறு) இரு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் பொன்னால் ஆனவை. ‘அத்ன்’ எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள், தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மீதுள்ள ‘பெருமை’ எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.
இதை அப்துல்லாஹ் பின் கைஸ் (அபூமூசா அல்அஷ்அரீ -ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5
அத்தியாயம் : 65
4880. மேலும், இரு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை. (வேறு) இரு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் பொன்னால் ஆனவை. ‘அத்ன்’ எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள், தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மீதுள்ள ‘பெருமை’ எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.
இதை அப்துல்லாஹ் பின் கைஸ் (அபூமூசா அல்அஷ்அரீ -ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.5
அத்தியாயம் : 65