4727. حَدَّثَنِي قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنِي سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ قُلْتُ لاِبْنِ عَبَّاسٍ إِنَّ نَوْفًا الْبَكَالِيَّ يَزْعُمُ أَنَّ مُوسَى بَنِي إِسْرَائِيلَ لَيْسَ بِمُوسَى الْخَضِرِ. فَقَالَ كَذَبَ عَدُوُّ اللَّهِ حَدَّثَنَا أُبَىُّ بْنُ كَعْبٍ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " قَامَ مُوسَى خَطِيبًا فِي بَنِي إِسْرَائِيلَ فَقِيلَ لَهُ أَىُّ النَّاسِ أَعْلَمُ قَالَ أَنَا، فَعَتَبَ اللَّهُ عَلَيْهِ، إِذْ لَمْ يَرُدَّ الْعِلْمَ إِلَيْهِ، وَأَوْحَى إِلَيْهِ بَلَى عَبْدٌ مِنْ عِبَادِي بِمَجْمَعِ الْبَحْرَيْنِ، هُوَ أَعْلَمُ مِنْكَ قَالَ أَىْ رَبِّ كَيْفَ السَّبِيلُ إِلَيْهِ قَالَ تَأْخُذُ حُوتًا فِي مِكْتَلٍ فَحَيْثُمَا فَقَدْتَ الْحُوتَ فَاتَّبِعْهُ قَالَ فَخَرَجَ مُوسَى، وَمَعَهُ فَتَاهُ يُوشَعُ بْنُ نُونٍ، وَمَعَهُمَا الْحُوتُ حَتَّى انْتَهَيَا إِلَى الصَّخْرَةِ، فَنَزَلاَ عِنْدَهَا قَالَ فَوَضَعَ مُوسَى رَأْسَهُ فَنَامَ ـ قَالَ سُفْيَانُ وَفِي حَدِيثِ غَيْرِ عَمْرٍو قَالَ ـ وَفِي أَصْلِ الصَّخْرَةِ عَيْنٌ يُقَالُ لَهَا الْحَيَاةُ لاَ يُصِيبُ مِنْ مَائِهَا شَىْءٌ إِلاَّ حَيِيَ، فَأَصَابَ الْحُوتَ مِنْ مَاءِ تِلْكَ الْعَيْنِ، قَالَ فَتَحَرَّكَ، وَانْسَلَّ مِنَ الْمِكْتَلِ، فَدَخَلَ الْبَحْرَ فَلَمَّا اسْتَيْقَظَ مُوسَى {قَالَ لِفَتَاهُ آتِنَا غَدَاءَنَا} الآيَةَ قَالَ وَلَمْ يَجِدِ النَّصَبَ حَتَّى جَاوَزَ مَا أُمِرَ بِهِ، قَالَ لَهُ فَتَاهُ يُوشَعُ بْنُ نُونٍ {أَرَأَيْتَ إِذْ أَوَيْنَا إِلَى الصَّخْرَةِ فَإِنِّي نَسِيتُ الْحُوتَ} الآيَةَ قَالَ فَرَجَعَا يَقُصَّانِ فِي آثَارِهِمَا، فَوَجَدَا فِي الْبَحْرِ كَالطَّاقِ مَمَرَّ الْحُوتِ، فَكَانَ لِفَتَاهُ عَجَبًا، وَلِلْحُوتِ سَرَبًا قَالَ فَلَمَّا انْتَهَيَا إِلَى الصَّخْرَةِ، إِذْ هُمَا بِرَجُلٍ مُسَجًّى بِثَوْبٍ، فَسَلَّمَ عَلَيْهِ مُوسَى قَالَ وَأَنَّى بِأَرْضِكَ السَّلاَمُ فَقَالَ أَنَا مُوسَى. قَالَ مُوسَى بَنِي إِسْرَائِيلَ قَالَ نَعَمْ هَلْ أَتَّبِعُكَ عَلَى أَنْ تُعَلِّمَنِي مِمَّا عُلِّمْتَ رَشَدًا. قَالَ لَهُ الْخَضِرُ يَا مُوسَى إِنَّكَ عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَكَهُ اللَّهُ لاَ أَعْلَمُهُ، وَأَنَا عَلَى عِلْمٍ مِنْ عِلْمِ اللَّهِ عَلَّمَنِيهِ اللَّهُ لاَ تَعْلَمُهُ. قَالَ بَلْ أَتَّبِعُكَ. قَالَ فَإِنِ اتَّبَعْتَنِي فَلاَ تَسْأَلْنِي عَنْ شَىْءٍ حَتَّى أُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا، فَانْطَلَقَا يَمْشِيَانِ عَلَى السَّاحِلِ فَمَرَّتْ بِهِمَا سَفِينَةٌ فَعُرِفَ الْخَضِرُ فَحَمَلُوهُمْ فِي سَفِينَتِهِمْ بِغَيْرِ نَوْلٍ ـ يَقُولُ بِغَيْرِ أَجْرٍ ـ فَرَكِبَا السَّفِينَةَ قَالَ وَوَقَعَ عُصْفُورٌ عَلَى حَرْفِ السَّفِينَةِ، فَغَمَسَ مِنْقَارَهُ الْبَحْرَ فَقَالَ الْخَضِرُ لِمُوسَى مَا عِلْمُكَ وَعِلْمِي وَعِلْمُ الْخَلاَئِقِ فِي عِلْمِ اللَّهِ إِلاَّ مِقْدَارُ مَا غَمَسَ هَذَا الْعُصْفُورُ مِنْقَارَهُ قَالَ فَلَمْ يَفْجَأْ مُوسَى، إِذْ عَمَدَ الْخَضِرُ إِلَى قَدُومٍ فَخَرَقَ السَّفِينَةَ، فَقَالَ لَهُ مُوسَى قَوْمٌ حَمَلُونَا بِغَيْرِ نَوْلٍ، عَمَدْتَ إِلَى سَفِينَتِهِمْ فَخَرَقْتَهَا {لِتُغْرِقَ أَهْلَهَا لَقَدْ جِئْتَ} الآيَةَ فَانْطَلَقَا إِذَا هُمَا بِغُلاَمٍ يَلْعَبُ مَعَ الْغِلْمَانِ، فَأَخَذَ الْخَضِرُ بِرَأْسِهِ فَقَطَعَهُ. قَالَ لَهُ مُوسَى {أَقَتَلْتَ نَفْسًا زَكِيَّةً بِغَيْرِ نَفْسٍ لَقَدْ جِئْتَ شَيْئًا نُكْرًا * قَالَ أَلَمْ أَقُلْ لَكَ إِنَّكَ لَنْ تَسْتَطِيعَ مَعِيَ صَبْرًا} إِلَى قَوْلِهِ {فَأَبَوْا أَنْ يُضَيِّفُوهُمَا فَوَجَدَا فِيهَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ} فَقَالَ بِيَدِهِ هَكَذَا فَأَقَامَهُ، فَقَالَ لَهُ مُوسَى إِنَّا دَخَلْنَا هَذِهِ الْقَرْيَةَ، فَلَمْ يُضَيِّفُونَا وَلَمْ يُطْعِمُونَا، لَوْ شِئْتَ لاَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا. قَالَ هَذَا فِرَاقُ بَيْنِي وَبَيْنِكَ سَأُنَبِّئُكَ بِتَأْوِيلِ مَا لَمْ تَسْتَطِعْ عَلَيْهِ صَبْرًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَدِدْنَا أَنَّ مُوسَى صَبَرَ حَتَّى يُقَصَّ عَلَيْنَا مِنْ أَمْرِهِمَا ". قَالَ وَكَانَ ابْنُ عَبَّاسٍ يَقْرَأُ وَكَانَ أَمَامَهُمْ مَلِكٌ يَأْخُذُ كُلَّ سَفِينَةٍ صَالِحَةٍ غَصْبًا، وَأَمَّا الْغُلاَمُ فَكَانَ كَافِرًا.
பாடம் : 4 ‘‘அவ்விருவரும் (அவ்விடத்தைக்) கடந்து சென்றபோது மூசா தம் பணியாளரிடம், ‘நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவா! நாம் நமது இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்துவிட்டோம்’ என்று கூறினார். அதற்குப் பணியாளர், ‘நாம் அந்தப் பாறையில் (ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா? அங்குதான் நான் மீனை மறந்து (தவறவிட்டு)விட்டேன்’ என்று சொன்னார்” எனும் (18:62, 63 ஆகிய) இறைவசனங்கள் (18:104ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸுன்உ’ எனும் சொல்லுக்கு ‘செயல்’ என்பது பொருள். (18:108ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹிவல்’ எனும் சொல்லுக்கு ‘திரும்புதல்’ என்பது பொருள். (18:71ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இம்ர்’ எனும் சொல்லுக்கும் (18:74ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நுக்ர்’ எனும் சொல்லுக்கும் ‘அதிர்ச்சியளிப்பது’ என்று பொருள். (18:77ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யன்கள்ள’ எனும் சொல்லும், ‘யன்காளு’ எனும் சொல்லும் (‘விழுந்துவிடுகின்ற நிலையில் உள்ளது’ எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும். ‘யன்காளுஸ் ஸின்னு’ (பல் விழப்போகிறது) என்பதைப் போல. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லத்தக்கஃத்த’ எனும் சொல்லும் (மற்றோர் ஓதல்முறையில் வந்துள்ள) ‘ல தகிஃத்த’ எனும் சொல்லும் (‘பெறுதல்’ எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும். (18:81ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ருஹ்ம்’ (அதிக பாசமிக்கவர்) எனும் சொல் ‘ரஹ்மத்’ (அன்பு) எனும் சொல்லைவிட மிகையான பொருளைக் கொண்டதாகும். இது ‘ரஹீம்’ (நிகரிலா அன்புடையோன்) எனும் சொல்லிலிருந்து வந்தது எனவும் கருதப்படுகிறது. இறையருள் பொழிவதால் மக்கா நகர் ‘உம்மு ருஹ்ம்’ (அருளின் அன்னை) என அழைக்கப்படுவதுண்டு.
4727. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘இறைத்தூதரான மூசா (அலை) அவர்கள், களிர் (அலை) அவர்களைச் சந்தித்த மூசா அல்லர் (அவர் வேறொரு மூசா) என்று (பேச்சாளர்) நவ்ஃப் அல்பிகாலி கூறுகிறார்” என்றேன்.

அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் விரோதி பொய் சொல்லிவிட்டார். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து எமக்கு (பின்வருமாறு) அறிவித்தார்கள் என்றார்:

(ஒருமுறை) மூசா (அலை) அவர்கள், பனூ இஸ்ராயீல்களிடையே நின்று சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், ‘‘மக்களில் மிகவும் அறிந்தவர் யார்?” என்று வினவப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘நான்தான்” என்று பதிலளித்துவிட்டார்கள்.

ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள், ‘‘(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு” என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஆகவே, அல்லாஹ் மூசா (அலை) அவர்களுக்கு, ‘‘இல்லை; இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மைவிட அதிகமாக அறிந்தவர்” என்று அறிவித்தான்.

மூசா (அலை) அவர்கள், ‘‘என் இறைவா! அவரைச் சந்திப்பதற்கு (எனக்கு) வழி எப்படி?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ், ‘‘நீங்கள் ஒரு மீனைப் பிடித்து அதை ஒரு கூடையில் போட்டுக்கொள்ளுங்கள். (அப்படியே கடலோரமாக நடந்து பயணம் செய்யுங் கள்.) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறீர்களோ அங்கேதான் அவர் இருப்பார். அவரைப் பின்பற்றிச் செல்லுங்கள்” என்று சொன்னான்.

எனவே, மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளர் ‘யூஷஉ பின் நூனுடன்’ அந்த மீன் சகிதமாகப் புறப்பட்டு (இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்திற்கு அருகிலிருந்த) பாறைக்கு வந்து சேர்ந்து அதனருகில் ஓய்வெடுத்தார்கள். உடனே மூசா (அலை) அவர்கள் தம் தலையை வைத்து (படுத்து) உறங்கியும்விட்டார்கள்.

அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அம்ர் பின் தீனார் (ரஹ்) அல்லாதோரின் அறிவிப்பில், ‘‘மேலும் அந்தப் பாறைக் கடியில் ஒரு நீரூற்று இருந்தது. அதற்கு ‘ஜீவ நீரூற்று’ என்று பெயர். அதன் நீர் பட்ட எந்தப் பொருளும் உயிர் பெறாமல் இருக்காது. அவ்வாறே அந்த மீனின் மீதும் அந்த ஊற்றின் நீர் பட்டது” என்று காணப்படுகிறது.

உடனே அந்த மீன் (உயிர் பெற்று) அசைந்து, கூடையிலிருந்து நழுவி கடலுக்குள் புகுந்தது.

மூசா (அலை) அவர்கள் கண் விழித்த போது தம் உதவியாளரை நோக்கி, ‘‘நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவா! நாம் நமது இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்துவிட்டோம்” என்று சொன்னார்கள். (18:62)

தமக்குக் கட்டளையிடப்பட்ட (இடத்)தைத் தாண்டிச் செல்லும்வரை மூசா (அலை) அவர்கள் களைப்பை உணர வில்லை.

உதவியாளர் யூஷஉ பின் நூன் மூசா (அலை) அவர்களிடம், ‘‘நாம் அந்தப் பாறையில் (ஓய்வெடுக்க) ஒதுங்கினோமே பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்து (தவறவிட்டு)விட்டேன். அதை நான் (உங்களுக்குக்) கூறுவதை ஷைத்தானே எனக்கு மறக்கடித்துவிட்டான். (அவ்விடத்தில் அது, கடலில் செல்ல) விந்தையான விதத்தில் தன் வழியை அமைத்துக்கொண்டது” என்று கூறினார். அதற்கு மூசா, ‘‘நாம் தேடி வந்த இடம் அதுதான்” என்று கூறினார். (18:63, 64)

ஆகவே, அவர்களிருவரும் தங்கள் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். (மீன் நழுவிய பாறைக்கு அருகிலிருந்த கடற்பகுதிக்கு அவர்கள் வந்து சேர்ந்தபோது) மீன் (நீந்திச்) சென்ற இடத்தில் (இருந்த தண்ணீர்) வளையம் போலிருக்கக் கண்டனர்.

மூசா (அலை) அவர்களின் உதவியாளருக்கு அது வியப்பாகவும், மீனுக்கு அது (தப்பும்) வழியாகவும் இருந்தது.

அவர்கள் இருவரும் அந்தப் பாறைக்குப் போய்ச் சேர்ந்தபோது அங்கே தம்மை முழுவதுமாக ஆடையால் (போர்த்தி) மூடிக்கொண்டபடி ஒரு மனிதர் (களிர்) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்) சொல்ல, அம்மனிதர், ‘‘உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்? நீங்கள் யார்)?” என்று வினவினார்.

அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘நான்தான் மூசா” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், ‘‘பனூ இஸ்ராயீல்களின் (இறைத்தூதரான) மூசாவா?” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்துவிட்டு, ‘‘உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தருவதற்காக உங்களைப் பின்தொடர்ந்து வரட்டுமா?” என்று கேட்டார்கள்.

அதற்கு களிர் (அலை) அவர்கள், மூசா (அலை) அவர்களிடம், ‘‘மூசாவே! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன். அல்லாஹ் எனக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று கூறினார்கள்.

(மீண்டும்) மூசா (அலை) அவர்கள், ‘‘இல்லை; நான் உங்களைத் தொடர்ந்து வருவேன்” என்று கூறினார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், ‘‘நீர் என்னைப் பின்தொடர்ந்து வருவதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும், நானாக உமக்கு அறிவிக்கும்வரையில் நீர் என்னிடம் அதைப் பற்றி (ஏன், எதற்கு என்று) கேட்கலாகாது” என்று கூறினார்.

பிறகு (மூசா, களிர்) இருவரும் கடற்கரையோரமாக நடந்து சென்றார்கள். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. அப்போது (ஏழைகளான மரக்கல உரிமையாளர்களால்) களிர் (அலை) அவர்கள் அடையாளம் கண்டுகொள்ளப்பட்டு அவர்களைத் தங்கள் மரக்கலத்தில் அவர்கள் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக்கொண்டனர்.அவர்களிருவரும் மரக்கலத்தில் பயணம் மேற்கொண்டனர்.

அப்போது சிட்டுக்குருவியொன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்து, தன் (சின்னஞ் சிறிய) அலகைக் கடலில் அமிழ்த்தி (ஓரிரு ‘மிடறு’ நீர்அருந்தி)யது. அப்போது மூசா (அலை) அவர்களிடம் களிர் (அலை) அவர்கள், ‘‘உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும், (ஏன்) படைப்பினங்கள் யாவற்றின் அறிவும் அல்லாஹ்வின் அறிவோடு ஒப்பிடுகையில், இந்தச் சிட்டுக்குருவி தன் அலகை (கடலுக்குள்) அமிழ்த்தி (நீர் எடுத்தி)ட்ட அளவுதான்” என்று சொன்னார்கள்.

மூசா (அலை) அவர்கள் மரக்கலத்தில் ஏறிச் சிறிது நேரம்தான் கழிந்திருக்கும். களிர் (அலை) அவர்கள் வாய்ச்சி ஒன்றை எடுத்து மரக்கலத்தை ஓட்டையாக்கி (அதை முளைக்குச்சியால் அடைத்து)விட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள், களிரை நோக்கி, ‘‘கட்டணம் இல்லாமலேயே நம்மை ஏற்றி வந்தவர்களின் மரக்கலத்தை வேண்டு மென்றே ஓட்டையாக்கிவிட்டீர்களே! இதில் பயணம் செய்பவர்களை மூழ்கடிக்கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் பெரிய (அபாயமான) செயலைச் செய்துவிட்டீர்கள்” என்று கூறினார்கள்.

பிறகு இருவரும் (மரக்கலத்திலிருந்து இறங்கி,) நடந்து, சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனுக்கருகில் சென்றனர். அப்போது களிர் (அலை) அவர்கள், அச்சிறுவனின் தலையைப் பிடித்துத் துண்டாக்கி(த் தனியே எடுத்து)விட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள், களிர் (அலை) அவர்களிடம், ‘‘ஒரு பாவமும் அறியாத (பச்சிளம்) உயிரையா நீங்கள் பறித்துவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே! நீங்கள் மிகக் கேடான செயலைச் செய்துவிட்டீர்கள்!” என்று கூறினார்கள்.

அதற்கு களிர் (அலை) அவர்கள்,” நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று முன்பே நான் சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். மூசா (அலை) அவர்கள், ‘‘இதற்குப் பின்னால் நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால், என்னை உங்களுடன் சேர்த்துக்கொள்ளாதீர்கள். என்னிடமிருந்து (பிரிந்து செல்ல) உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்துவிட்டது” என்றார்கள்.

தொடர்ந்து இருவரும் நடந்தார்கள். இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள். அந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டார்கள். ஆனால், அவர்கள் அவ்விருவருக்கும் விருந்தோம்பல் செய்ய மறுத்துவிட்டார்கள். (இந்நிலையில்) அந்த ஊரில் சாய்ந்தவாறு கீழே விழலாமா என யோசித்துக்கொண்டிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள். (அதைப் பார்த்த) உடன் களிர் (அலை) அவர்கள் இவ்வாறு தமது கரத்தால் அதைச் செப்பனிட்டார்கள்.

அப்போது மூசா (அலை) அவர்கள் களிரிடம், ‘‘இந்த ஊருக்குள் நாம் வந்து(உணவு கேட்டு)ம், இவர்கள் நமக்கு விருந்தோம்பல் செய்யவில்லை; நமக்கு உணவளிக்கவுமில்லை. (அவ்வாறிருந்தும் வேண்டுமென்றே நீங்கள் அவர்களது சுவரைச் செப்பனிட்டுள்ளீர்கள்.) நீங்கள் நினைத்திருந்தால் அதற்குக் கூலி பெற்றுக் கொண்டிருக்கலாமே!” என்றார்கள்.

களிர் (அலை) அவர்கள், ‘‘இதுதான் நானும் நீங்களும் பிரிய வேண்டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்க முடியாத (இம்மூன்று) விஷயங்களின் விளக்கத்தை நான் உங்களுக்கு (இப்போது) அறிவித்து விடுகிறேன்” என்று கூறினார்கள்.

(இந்த நிகழ்ச்சியைக் கூறி முடித்தபின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மூசா பொறுமையாக இருந்திப்பாரே யானால் அவ்விருவர் பற்றி(ய நிறைய செய்திகள்) நமக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் என நாம் விரும்பினோம்” என்று கூறினார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (18:79ஆவது வசனத்தின் மூலத்தில்) ‘‘வ கான அமாமஹும் மலிக்குன் யஃகுது குல்ல சஃபீனத்தின் ஸாலிஹத்தின் ஃகஸ்பா” என்று ஓதுவார்கள். (பொருள்: அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் பழுதில்லா நல்ல மரக்கலங்கள் ஒவ்வொன்றையும் அபகரித்துக்கொண்டிருந்தான்.)

மேலும், (18:80ஆவது வசனத்தின் மூலத்தில்) ‘‘வ அம்மல் ஃகுலாமு ஃப கான காஃபிரன்” என்று ஓதுவார்கள். (பொருள்: அந்தச் சிறுவன் இறைமறுப்பாளனாக இருந்தான்.)9

அத்தியாயம் : 65
4728. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ مُصْعَبٍ، قَالَ سَأَلْتُ أَبِي {قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالأَخْسَرِينَ أَعْمَالاً} هُمُ الْحَرُورِيَّةُ قَالَ لاَ، هُمُ الْيَهُودُ وَالنَّصَارَى، أَمَّا الْيَهُودُ فَكَذَّبُوا مُحَمَّدًا صلى الله عليه وسلم وَأَمَّا النَّصَارَى كَفَرُوا بِالْجَنَّةِ وَقَالُوا لاَ طَعَامَ فِيهَا وَلاَ شَرَابَ، وَالْحَرُورِيَّةُ الَّذِينَ يَنْقُضُونَ عَهْدَ اللَّهِ مِنْ بَعْدِ مِيثَاقِهِ، وَكَانَ سَعْدٌ يُسَمِّيهِمُ الْفَاسِقِينَ.
பாடம் : 5 ‘‘தம் செயல்களில் பெரும் இழப்பிற்கு ஆளானவர்கள் யார் என்பதை நாம் உங்களுக்கு அறிவிக்கட்டுமா என்று (நபியே!) கேட்பீராக” எனும் (18:103ஆவது) இறைவசனம்
4728. முஸ்அப் பின் சஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் என் தந்தை (சஅத் பின் அபீ வக்காஸ்) அவர்களிடம் ‘‘இந்த (18:103ஆவது) வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்கள், ‘ஹரூரிய்யாக்களா? என்று கேட்டேன்.10

அதற்கு அவர்கள், ‘‘(ஹரூரிய்யாக்கள்) இல்லை; யூதர்களும் கிறித்தவர்களும்தான் அவர்கள். யூதர்கள், முஹம்மத் (ஸல்) அவர்களை ஏற்க மறுத்தார்கள். கிறித்தவர் களோ சொர்க்கத்தை நிராகரித்தார்கள்; அங்கு உணவோ பானமோ கிடையாது என்று சொன்னார்கள்.11

‘ஹரூரிய்யாக்களோ’, அல்லாஹ்விடம் வாக்குறுதி அளித்தபின் அவனுடன் தாங்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முறிப்பவர்கள் ஆவார்கள்” என்று சொன்னார்கள்.

(என் தந்தை) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் ஹரூரிய்யாக்களை ‘பாவிகள்’ என்று குறிப்பிட்டுவந்தார்கள். (‘இறைமறுப்பாளர்கள்’ என்று கூறுவதில்லை.)

அத்தியாயம் : 65
4729. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا الْمُغِيرَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّهُ لَيَأْتِي الرَّجُلُ الْعَظِيمُ السَّمِينُ يَوْمَ الْقِيَامَةِ لاَ يَزِنُ عِنْدَ اللَّهِ جَنَاحَ بَعُوضَةٍ وَقَالَ اقْرَءُوا {فَلاَ نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا} ". وَعَنْ يَحْيَى بْنِ بُكَيْرٍ عَنِ الْمُغِيرَةِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي الزِّنَادِ مِثْلَهُ.
பாடம் : 6 ‘‘அவர்கள்தான் தம் இறைவனின் வசனங்களையும் (மறுமையில்) அவனது சந்திப்பையும் ஏற்க மறுத்தவர்கள் ஆவர். ஆகவே, அவர்களின் செயல்கள் வீணாகி விட்டன. மேலும், மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பை யும் அளிக்கமாட்டோம்” எனும் (18:105ஆவது) இறைவசனம்
4729. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் உடல் பருத்த கொழுத்த மனிதன் ஒருவன் வருவான். அல்லாஹ்விடம் கொசுவின் இறக்கை யளவு எடைகூட அவன் (மதிப்பு) பெற மாட்டான். ‘‘மறுமை நாளில் அவர்களுக்கு எத்தகைய மதிப்பையும் அளிக்கமாட்டோம்” எனும் (18:105ஆவது) இறைவசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4730. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يُؤْتَى بِالْمَوْتِ كَهَيْئَةِ كَبْشٍ أَمْلَحَ فَيُنَادِي مُنَادٍ يَا أَهْلَ الْجَنَّةِ، فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ فَيَقُولُ هَلْ تَعْرِفُونَ هَذَا فَيَقُولُونَ نَعَمْ هَذَا الْمَوْتُ، وَكُلُّهُمْ قَدْ رَآهُ، ثُمَّ يُنَادِي يَا أَهْلَ النَّارِ، فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ، فَيَقُولُ هَلْ تَعْرِفُونَ هَذَا فَيَقُولُونَ نَعَمْ هَذَا الْمَوْتُ، وَكُلُّهُمْ قَدْ رَآهُ، فَيُذْبَحُ ثُمَّ يَقُولُ يَا أَهْلَ الْجَنَّةِ، خُلُودٌ فَلاَ مَوْتَ، وَيَا أَهْلَ النَّارِ، خُلُودٌ فَلاَ مَوْتَ ثُمَّ قَرَأَ {وَأَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ} وَهَؤُلاَءِ فِي غَفْلَةٍ أَهْلُ الدُّنْيَا {وَهُمْ لاَ يُؤْمِنُونَ}"
பாடம்: 19. ‘காஃப், ஹா, யா, ஐன், ஸாத்’ (‘மர்யம்’) அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்..) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘அவர்கள் நம்மிடம் வரும் நாளில் அவர்களின் கேள்விதான் என்ன! பார்வைதான் என்ன!! ஆயினும், இன்றோ அந்த அக்கிரமக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே உள்ளனர்” எனும் (19:38ஆவது) வசனத்தின் கருத்தாவது: இறைமறுப்பாளர்கள் இன்று (இவ்வுலகில் நல்லதைக்) கேட்பதுமில்லை; பார்ப்பதுமில்லை. அன்று (மறுமையில்) நன்றாகவே கேட்பார்கள்; நன்றாகவே பார்ப்பார்கள். (ஆனால், அதனால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை.) (19:46ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல அர்ஜுமன்னக்க’ எனும் சொல்லுக்கு ‘உன்னை நான் ஏசுவேன்’ என்பது பொருள். (இச்சொல்லுக்கு ‘உன்னை நான் கல்லால் அடிப்பேன்’ என்றும், ‘கல்லெறிந்து கொல்வேன்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.) (19:74ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரிஃயு’ எனும் சொல்லுக்கு ‘தோற்றம்’ என்பது பொருள். அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘இறையச்சமுள்ளவர் நல்லறிவுபடைத்தவராகவே இருப்பார்’ என மர்யம் விளங்கிக்கொண்டார்கள். எனவேதான், (மனித உருவில் வந்த வானவர் ஜிப்ரீலை நோக்கி:) ‘‘உம்மைவிட்டுக் கருணைமிக்க இறைவனிடம் நான் பாதுகாப்புக் கோருகின்றேன், நீர் இறையச்சம் உள்ளவராயின்!” (19:18) என்று மர்யம் (அலை) அவர்கள் சொன்னார்கள். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (19:83ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஉஸ்ஸுஹும் அஸ்ஸா’ எனும் சொற்றொடருக்கு, ‘முழு முனைப்புடன் பாவங்களைச் செய்யுமாறு தூண்டிக் கொண்டிருக்கிறார்கள்’ என்று பொருள். (19:89ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இத்து’ எனும் சொல்லுக்கு ‘கோணலானது’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (19:86ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘விர்த்’ எனும் சொல்லுக்கு ‘தாகித்தவர்கள்’ என்பது பொருள். (19:74ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸாஸ்’ எனும் சொல்லுக்கு ‘செல்வம்’ என்பது பொருள். (இச்சொல்லுக்கு ‘தளவாடம்’, ‘சாதனம்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.) (19:89ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இத்து’ எனும் சொல்லுக்கு ‘அபாண்டமான கூற்று’ என்று பொருள். (19:98ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ரிக்ஸ்’ எனும் சொல்லுக்கு ‘சப்தம்’ என்று பொருளாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றனர்: (19:59ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகய்யு’ எனும் சொல்லுக்கு ‘இழப்பு’ என்பது பொருள். (19:58ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘புகிய்யா’ (அழுதவர்களாக) எனும் சொல் ‘பாக்கின்’ என்பதன் பன்மையாகும். (19:70ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸிலிய்யு’ (நரகத்தில் நுழைதல்) எனும் வேர்ச்சொல்லின் வினைச் சொற்களே ஸலிய, யஸ்லா ஆகியன. (19:73ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நதிய்யு’ எனும் சொல்லும் ‘நாதி’ எனும் சொல்லும் (‘சபை; அவை’ எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும். பாடம் : 1 ‘‘(நபியே!) துக்கத்திற்குரிய அந்த (மறுமை) நாளைக் குறித்து இவர்களை எச்சரிப்பீராக!” (எனும் 19:39ஆவது வசனத்தொடர்)
4730. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்களில்) ஒருவர், ‘சொர்க்கவாசிகளே!’ என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அறிவிப்புச் செய்பவர், ‘‘இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்பார். அவர்கள், ‘‘ஆம்! இதுதான் மரணம்” என்று பதிலளிப் பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள்.

பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: ‘நரகவாசிகளே!’ என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் ‘‘இதை நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்பார். அவர்கள், ‘‘ஆம் (அறிவோம்); இதுதான் மரணம்” என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டுவிடும். பிறகு அவர், ‘‘சொர்க்கவாசிகளே! நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை” என்று கூறுவார்.

இதை அறிவித்த அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

இதைக் கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கள், ‘‘(நபியே!) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீர் அவர்களை எச்சரிப்பீராக! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர். ஆதலால் இவர்கள் நம்பிக்கை கொள்ளவேமாட்டார்கள்” எனும் (19:39ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், ‘‘இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அலட்சியமாக உள்ளனர். ஆகவே, இவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்” என்றும் சொன்னார்கள்.

அத்தியாயம் : 65
4731. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ ذَرٍّ، قَالَ سَمِعْتُ أَبِي، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِجِبْرِيلَ " مَا يَمْنَعُكَ أَنْ تَزُورَنَا أَكْثَرَ مِمَّا تَزُورُنَا فَنَزَلَتْ {وَمَا نَتَنَزَّلُ إِلاَّ بِأَمْرِ رَبِّكَ لَهُ مَا بَيْنَ أَيْدِينَا وَمَا خَلْفَنَا}"
பாடம்: 2 ‘‘(வானவர்கள் கூறுகின்றனர்: நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவுப்படியே தவிர நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப் பவையும், இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்கே உரியவையாகும்.! (இதில் எதையும்) உங்கள் இறைவன் மறப்பவன் அல்லன்” எனும் (19:64ஆவது) இறைவசனம்
4731. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களிடம், ‘‘நீங்கள் இப்போது என்னைச் சந்திப்பதைவிட அதிகமாகச் சந்திக்கத் தடையாக இருப்பதென்ன?” என்று கேட்டார்கள்.2

அப்போதுதான் ‘‘(நபியே!) உங்கள் இறைவனின் உத்தரவுப்படியே தவிர நாங்கள் இறங்குவதில்லை. எங்களுக்கு முன்னிருப்பவையும், பின்னிருப்பவையும், இரண்டுக்குமிடையே இருப்பவையும் அவனுக்கே உரியவையாகும். (இதில் எதையும்) உங்கள் இறைவன் மறப்பவன் அல்லன்” எனும் (19:64ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

அத்தியாயம் : 65
4732. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، قَالَ سَمِعْتُ خَبَّابًا، قَالَ جِئْتُ الْعَاصِيَ بْنَ وَائِلٍ السَّهْمِيَّ أَتَقَاضَاهُ حَقًّا لِي عِنْدَهُ، فَقَالَ لاَ أُعْطِيكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ فَقُلْتُ لاَ حَتَّى تَمُوتَ ثُمَّ تُبْعَثَ. قَالَ وَإِنِّي لَمَيِّتٌ ثُمَّ مَبْعُوثٌ قُلْتُ نَعَمْ. قَالَ إِنَّ لِي هُنَاكَ مَالاً وَوَلَدًا فَأَقْضِيكَهُ، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ {أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لأُوتَيَنَّ مَالاً وَوَلَدًا} رَوَاهُ الثَّوْرِيُّ وَشُعْبَةُ وَحَفْصٌ وَأَبُو مُعَاوِيَةَ وَوَكِيعٌ عَنِ الأَعْمَشِ.
பாடம் : 3 ‘‘(நபியே!) நம் வசனங்களை மறுத்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று கூறினானே அவனை நீர் பார்த்தீரா?” எனும் (19:77ஆவது) இறைவசனம்
4732. கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘ஆஸ் பின் வாயில் அஸ்ஸஹ்மீ’ என்பவர்3 எனக்குத் தர வேண்டியிருந்த ஒரு கடனைக் கேட்டு அவரிடம் நான் சென்றேன். ‘‘நீ முஹம்மதை நிராகரிக்காமல் (ஏற்றுக்கொண்டு) இருக்கும்வரை, நான் உனக்குத் தரமாட்டேன்” என்று அவர் சொன்னார். நான், ‘‘நீ இறந்து உயிருடன் எழுப்பப்படும்வரை நான் முஹம்மதை நிராகரிக்கமாட்டேன்” எனக் கூறினேன். அவர் ‘‘நான் இறந்து மீண்டும் எழுப்பப்படுவேனா?” என்று கேட்டார். நான் ‘ஆம்’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர், ‘‘அப்படியாயின், எனக்கு அங்கேயும் செல்வமும் சந்ததியும் கிடைக்கும். அப்போது உனக்குத் தரவேண்டிய கடனை நான் செலுத்திவிடுகிறேன்” என்று சொன்னார்.

அப்போதுதான் ‘‘(நபியே!) நம் வசனங்களை மறுத்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று கூறினானே அவனை நீர் பார்த்தீரா?” எனும் (19:77ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.4

இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 65
4733. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ خَبَّابٍ، قَالَ كُنْتُ قَيْنًا بِمَكَّةَ، فَعَمِلْتُ لِلْعَاصِي بْنِ وَائِلِ السَّهْمِيِّ سَيْفًا، فَجِئْتُ أَتَقَاضَاهُ فَقَالَ لاَ أُعْطِيكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ. قُلْتُ لاَ أَكْفُرُ بِمُحَمَّدٍ صلى الله عليه وسلم حَتَّى يُمِيتَكَ اللَّهُ، ثُمَّ يُحْيِيَكَ. قَالَ إِذَا أَمَاتَنِي اللَّهُ ثُمَّ بَعَثَنِي، وَلِي مَالٌ وَوَلَدٌ فَأَنْزَلَ اللَّهُ {أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لأُوتَيَنَّ مَالاً وَوَلَدًا * أَطَّلَعَ الْغَيْبَ أَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمَنِ عَهْدًا}. قَالَ مَوْثِقًا. لَمْ يَقُلِ الأَشْجَعِيُّ عَنْ سُفْيَانَ سَيْفًا وَلاَ مَوْثِقًا.
பாடம் : 4 ‘‘மறைவானவற்றை அவன் அறிந்துகொண்டானா? அல்லது கருணையாளனிடத்தில் அவன் உறுதிமொழி ஏதேனும் வாங்கியுள் ளானா?” எனும் (19:78ஆவது) இறைவசனம்
4733. கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மக்காவில் (அறியாமைக் காலத் தில்) கொல்லனாக (தொழில் செய்துகொண்டு) இருந்தேன். அப்போது ‘ஆஸ் பின் வாயில் அஸ்ஸஹ்மீ’ என்பவருக்கு வாள் ஒன்றைச் செய்து கொடுத்தேன். பின்னர் அதற்கான கூலியைத் தரும்படி கேட்டு அவரிடம் நான் சென்றேன். அவர், ‘‘நீ முஹம்மதை நிராகரிக்காத வரை உனக்குத் தரமாட்டேன்” என்று சொன்னார். நான், ‘‘உன்னை அல்லாஹ் மரணிக்கச் செய்து, பிறகு உயிர்கொடுக்கும்வரை நான் முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரிக்கமாட்டேன்” என்று சொன்னேன்.

அதற்கு அவர் ‘‘என்னை அல்லாஹ் மரணிக்கச் செய்து பிறகு என்னை எழுப்பினால், அப்போதும் எனக்குச் செல்வமும் சந்ததியும் இருக்கும்” என்று சொன்னார்.

உடனே அல்லாஹ்: ‘‘நம் வசனங்களை மறுத்ததுடன் (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீர் பார்த்தீரா? மறைவானவற்றை அவன் அறிந்துகொண்டானா? அல்லது கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா?” எனும் (19:77,78) வசனங்களை அருளினான்.

இந்த ஹதீஹ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘வாள்’ மற்றும் ‘அஹ்த்’ எனும் சொல்லுக்கான ‘உறுதிமொழி’ எனும் பொருள் ஆகியவை இடம் பெறவில்லை.

அத்தியாயம் : 65
4734. حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، سَمِعْتُ أَبَا الضُّحَى، يُحَدِّثُ عَنْ مَسْرُوقٍ، عَنْ خَبَّابٍ، قَالَ كُنْتُ قَيْنًا فِي الْجَاهِلِيَّةِ، وَكَانَ لِي دَيْنٌ عَلَى الْعَاصِي بْنِ وَائِلٍ قَالَ فَأَتَاهُ يَتَقَاضَاهُ، فَقَالَ لاَ أُعْطِيكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ فَقَالَ وَاللَّهِ لاَ أَكْفُرُ حَتَّى يُمِيتَكَ اللَّهُ ثُمَّ تُبْعَثَ. قَالَ فَذَرْنِي حَتَّى أَمُوتَ ثُمَّ أُبْعَثَ، فَسَوْفَ أُوتَى مَالاً وَوَلَدًا، فَأَقْضِيكَ فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ {أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لأُوتَيَنَّ مَالاً وَوَلَدًا}
பாடம் : 5 ‘‘இல்லை, அவன் சொல்வதை நாம் எழுதிவைப்போம். (மறுமையில்) நீண்ட நெடும் வேதனையை நாம் அவனுக்கு அளிப்போம்” (எனும் 19:79ஆவது இறைவசனம்)
4734. கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அறியாமைக் காலத்தில் கொல்லனாக (தொழில் செய்துகொண்டு) இருந்தேன். ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. நான் திருப்பித் தரும்படி கேட்டு அவரிடம் சென்றேன். அவர் ‘‘நீ முஹம்மதை நிராகரிக்காத வரை நான் உனக்குத் தரமாட்டேன்” என்று சொன்னார். நான் ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் உன்னை மரணிக்கச் செய்து, பிறகு நீ மறுமையில் உயிரூட்டப்பட்டு எழுப்பப்படும்வரை நான் முஹம்மத் (ஸல்) அவர்களை நிராகரிக்கமாட்டேன்” என்றேன்.

அவர், ‘‘அப்படியாயின், நான் இறந்து மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப்படும் வரை என்னை விட்டுவிடு! பின்பு மறுமையில், எனக்குச் செல்வமும் சந்ததியும் கொடுக்கப்படும். அப்போது நான் உனது கடனைச் செலுத்துவேன்” என்று சொன்னார்.

அப்போதுதான் ‘‘நம் வசனங்களை மறுத்து (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீர் பார்த்தீரா? மறைவானவற்றை அவன் அறிந்துகொண்டானா? அல்லது கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா? எனும் (19:77, 78ஆவது) வசனங்கள் இறங்கின.

அத்தியாயம் : 65
4735. حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ خَبَّابٍ، قَالَ كُنْتُ رَجُلاً قَيْنًا، وَكَانَ لِي عَلَى الْعَاصِي بْنِ وَائِلٍ دَيْنٌ فَأَتَيْتُهُ أَتَقَاضَاهُ، فَقَالَ لِي لاَ أَقْضِيكَ حَتَّى تَكْفُرَ بِمُحَمَّدٍ. قَالَ قُلْتُ لَنْ أَكْفُرَ بِهِ حَتَّى تَمُوتَ ثُمَّ تُبْعَثَ. قَالَ وَإِنِّي لَمَبْعُوثٌ مِنْ بَعْدِ الْمَوْتِ فَسَوْفَ أَقْضِيكَ إِذَا رَجَعْتُ إِلَى مَالٍ وَوَلَدٍ. قَالَ فَنَزَلَتْ {أَفَرَأَيْتَ الَّذِي كَفَرَ بِآيَاتِنَا وَقَالَ لأُوتَيَنَّ مَالاً وَوَلَدًا * أَطَّلَعَ الْغَيْبَ أَمِ اتَّخَذَ عِنْدَ الرَّحْمَنِ عَهْدًا * كَلاَّ سَنَكْتُبُ مَا يَقُولُ وَنَمُدُّ لَهُ مِنَ الْعَذَابِ مَدًّا * وَنَرِثُهُ مَا يَقُولُ وَيَأْتِينَا فَرْدًا}.
பாடம் : 6 ‘‘அவன் (தன் உடைமைகள் எனப் பெருமையடித்துப்) பேசிக்கொண்டி ருப்பவை (அனைத்தும் இறுதியில்) நமக்கே உரியனவாகிவிடும். அவன் தனியாகவே நம்மிடம் வருவான்” எனும் (19:80ஆவது) இறைவசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (19:90ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தகிர்ருல் ஜிபாலு ஹத்தா’ எனும் வாக்கியத்திற்கு ‘‘மலைகள் இடிந்து சரிந்து விழக்கூடும்” என்று பொருள்.
4735. கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நான் (அறியாமைக் காலத்தில்) கொல்லனாக (தொழில் செய்துகொண்டு) இருந்தேன். ஆஸ் பின் வாயில் என்பவர் எனக்குக் கடன் தரவேண்டியிருந்தது. ஆகவே, அதைத் திருப்பித் தரும்படி கேட்டு நான் அவரிடம் சென்றேன். அவர் என்னிடம் ‘‘நீ முஹம்மதை நிராகரிக்காத வரை நான் உனது கடனைச் செலுத்தமாட்டேன்” என்று சொன்னார். நான், ‘‘நீர் இறந்து உயிருடன் எழுப்பப்படும் வரை நான் அவரை ஒருபோதும் நிராகரிக்கமாட்டேன்” என்று சொன்னேன்.

அதற்கு அவர் ‘‘இறந்த பிறகு நான் உயிருடன் எழுப்பப்படுவேனா? அப்படியானால், செல்வமும் மக்களும் அங்கே திரும்பக் கிடைக்கும்போது உன் கடனை நிறைவேற்றிவிடுகிறேன்” என்று சொன்னார்.

அப்போதுதான் ‘‘நம் வசனங்களை நிராகரித்து (மறுமையிலும்) தனக்குச் செல்வமும் சந்ததியும் வழங்கப்படும் என்று சொன்னவனை நீர் பார்த்தீரா? அவன் மறைவானவற்றை அறிந்துகொண்டானா? அல்லது கருணையாளனிடம் உறுதிமொழி ஏதேனும் வாங்கியிருக்கிறானா? இல்லை; அவன் சொல்வதை நாம் எழுதிவைப்போம். (மறுமையில்) நீண்ட நெடும் வேதனையை நாம் அவனுக்கு அளிப்போம். அவன் (தன் உடைமைகள் எனப் பெருமையடித்துப்) பேசிக்கொண்டிருப்பவை (அனைத்தும் இறுதியில்) நமக்கே உரியனவாகிவிடும். அவன் (செல்வம், சந்ததி எதுவுமின்றி) தனியாகவே நம்மிடம் வருவான்” எனும் (19:77-80) இறைவசனங்கள் அருளப்பெற்றன.5

அத்தியாயம் : 65
4736. حَدَّثَنَا الصَّلْتُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مَهْدِيُّ بْنُ مَيْمُونٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْتَقَى آدَمُ وَمُوسَى، فَقَالَ مُوسَى لآدَمَ أَنْتَ الَّذِي أَشْقَيْتَ النَّاسَ وَأَخْرَجْتَهُمْ مِنَ الْجَنَّةِ قَالَ لَهُ آدَمُ أَنْتَ الَّذِي اصْطَفَاكَ اللَّهُ بِرِسَالَتِهِ، وَاصْطَفَاكَ لِنَفْسِهِ وَأَنْزَلَ عَلَيْكَ التَّوْرَاةَ قَالَ نَعَمْ. قَالَ فَوَجَدْتَهَا كُتِبَ عَلَىَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي قَالَ نَعَمْ. فَحَجَّ آدَمُ مُوسَى ". الْيَمُّ الْبَحْرُ.
பாடம்: 20. ‘தாஹா’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) சயீத் பின் ஜுபைர், ளஹ்ஹாக் பின் முஸாஹிம் (ரஹ்)2 ஆகியோர் கூறுகின்றனர்: ‘நப்த்தீ’ மொழிவழக்கில்3 ‘தாஹா’ எனும் சொல்லுக்கு ‘மனிதரே!’ என்பது பொருள். முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (20:87ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘‘அல்கா’ (எறிந்தான்) என்பதற்கு ‘உருவாக்கினான்’ என்று பொருள். (‘என் நாவிலுள்ள முடிச்சை அவிழ்ப்பாயாக!” எனும் 20:27ஆவது வசனத்திலுள்ள) ‘முடிச்சு’ (உக்தத்) என்பதன் பொருளாவது: ஓரிரு எழுத்துகள்கூட நாவிலிருந்து (முழுமையாக) வெளிவர முடியாத நிலை. அல்லது (பேசும்போது அடிக்கடி) தா... தா... என்றோ, ஃபா... ஃபா... என்றோ திக்கிக்கொண்டேயிருக்கும் (கொண்ணல்) நிலை. (20:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அளி’ எனும் சொல்லுக்கு ‘என் முதுகு’ என்பது பொருள். (20:61ஆவது வசனத்தின் மூலத்தில்-ஓர் ஓதல் முறைப்படி உள்ள) ‘ஃப யுஸ்ஹித்தகும்’ எனும் சொல்லுக்கு ‘உங்களை அழித்துவிடுவான்’ என்பது பொருள். (20:63ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முஸ்லா’ (மிக மேலானது) எனும் சொல் ‘அல்அம்ஸல்’ என்பதன் பெண்பாலாகும். ‘தரீகத்’ எனும் சொல்லுக்கு ‘மார்க்கம்’ என்பது பொருள். ‘குஃதில் முஸ்லா’ என்று (வழக்கில்) கூறப்படுவதுண்டு. இதற்கு ‘குஃதில் அம்ஸல்’ (உயர்வானதை எடுத்துக்கொள்) என்பது பொருள். (20:64ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஸஃப்பா’ எனும் சொல்லுக்கு ‘அணி அணியாக’ என்பது பொருள். தொழுமிடத்தையும் ‘ஸஃப்பு’ என்பர். (20:67ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவ்ஜஸ’ எனும் சொல்லுக்கு ‘உள்ளூர ஊசாடியது’ என்று பொருள். ‘கீஃபத்’ எனும் சொல்லுக்கு ‘பயம்’ என்று பொருள். (அதன் அசல் வடிவம் ‘கிவ்ஃபத்’ என்பதாகும்.) முதல் எழுத்து ‘கி’ இகரம் பெற்றிருப்பதனால் இரண்டாம் எழுத்தான ‘வ்’ ஆனது இகரத்திற்கு இயைந்த ‘ய்’ ஆக (சொல் இலக்கண விதிப்படித்) திரிந்துவிட்டது. (20:71ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபீ ஜுதூஇந் நக்லி’ (பேரீச்ச மரங்களில்) என்பதற்கு ‘அலா ஜுதூஇந் நக்லி’ (‘பேரீச்ச மரங்கள்மீது) என்று பொருள். (20:95ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கத்புக்க’ எனும் சொல்லுக்கு ‘உனது நிலை’ என்பது பொருள். (20:97ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மிஸாஸ்’ (தீண்டல்) எனும் சொல் ‘மாஸ்ஸஹு’ என்பதன் வேர்ச்சொல்லாகும். ‘ல நன்ஸிஃபன்னஹு’ எனும் சொல்லுக்கு ‘நாம் அதனை (சாம்பலாக்கி)த் தூற்றுவோம்’ என்று பொருள். (20:106ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காஉ’ எனும் சொல்லுக்கு ‘மேற்பரப்பில் தண்ணீர் ஓடத்தக்க’ என்று பொருள். ‘ஸஃப்ஸஃப்’ எனும் சொல்லுக்கு ‘சமதளம்’ என்பது பொருள். முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (20:87ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவ்ஸார்’ எனும் சொல்லுக்கு ‘சுமைகள்’ என்று பொருள். இது, ‘ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரிடமிருந்து (இஸ்ராயீலின் சந்ததியான) அவர்கள் இரவலாகப் பெற்ற ஆபரணங்களைக் குறிக்கும். ‘ஃப கதஃப்துஹா’ எனும் சொல்லுக்கு ‘அதை நான் போட்டேன்’ என்று பொருள். ‘அல்க்கா’ எனும் சொல்லுக்கு ‘(அவர்களைப் போன்றே) அவன் செய்தான் (போட்டான்)’ என்று பொருள். (20:88ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃப நசிய’ எனும் சொல்லுக்கு ‘அவர் -மூசா- மறந்துவிட்டார்’ என்று பொருள். அதாவது ‘‘(காளைக்கன்று எனும்) தம் இறைவனுக்கு மாறுசெய்துவிட்டார் மூசா” என்று சாமிரீயும் அவனுடைய பக்தர்களும் கூறினர். ‘லா யர்ஜிஉ’ (அது பதிலளிக்காது) என்றால் ‘காளைமாடு பதிலளிக்காது’ என்று பொருள். (20:108ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹம்ஸ்’ எனும் சொல்லுக்கு ‘காலடி ஓசை’ என்பது பொருள். ‘‘என் இறைவா! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்? என்று கூறுவான்” எனும் (20:125ஆவது) வசனத்தின் கருத்தாவது: உலகில் நான் எதை எனக்கு ஆதாரம் என்று நம்பியிருந்தேனோ அதனை ஏன் இங்கு இல்லாமல் செய்துவிட்டாய்? என்று கேட்பான். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (20:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கபஸ்’ (எரிகொள்ளி) என்பதன் விளக்கம் பின்வருமாறு: மூசா (அலை) அவர்களும், அன்னாருடைய குடும்பத்தாரும் எகிப்தை நோக்கிக் குளிர் காலத்தில் வந்தபோது பாதை மாறிப்போய்விட்டனர். (இருள் கப்பிய அந்த இரவில்) அப்போது மூசா (அலை) அவர்கள் (தம் குடும்பத்தாரை நோக்கி, ‘‘சற்று நேரம் நீங்கள் இங்கேயே இருங்கள்! நான் (மலைமீது) ஏதோ நெருப்பைக் காண்கிறேன்.) அங்கு நமக்குப் பாதை காட்டக்கூடிய ஒருவரையும் நான் காணவில்லையாயின் நீங்கள் தீ மூட்டுவதற்காக எரிகொள்ளியையாவது உங்களிடம் எடுத்து வருகிறேன்”என்று சொன்னார்கள். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (20:104ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அம்ஸலுஹும் தரீக்கத்தன்’ எனும் சொற்றொடருக்கு ‘‘நேர்மையான வழியில் செல்பவர்கள்’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘அவன் குறைக்கப்படுவதையும் அஞ்சான்’ எனும் (20:112ஆவது வசனத்)தொடருக்கு ‘அவனுடைய நன்மைகளைக் குறைத்து அவனுக்கு அநியாயம் செய்யப்படாது’ என்று பொருள். (20:107ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இவஜ்’ (பள்ளம்) எனும் சொல்லுக்கு ‘ஓடை’ என்றும், ‘அம்த்’ எனும் சொல்லுக்கு ‘மேடு’ என்றும் பொருள். (20:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘சீரத்தஹா’ எனும் சொல்லுக்கு ‘அதன் (முன்னைய) நிலை’ என்று பொருள். (20:128ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அந்நுஹா’ (அறிவு) எனும் சொல்லுக்கு ‘இறையச்சம்’ என்பது பொருள். (20:124ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ளன்க்’ (நெருக்கடி) என்பதற்கு ‘துர்பாக்கியமான’ என்பது பொருள். (20:81ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹவா’ (வீழ்வான்) எனும் சொல்லுக்கு ‘பாக்கியமற்றவனாகிவிடுவான்’ என்று பொருள். (இச்சொல்லுக்கு ‘அழிந்துவிடுவான்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.) (20:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்வாதில் முகத்தஸ்’ (பரிசுத்தப் பள்ளத்தாக்கு) என்பதற்கு ‘அருள்பாலிக்கப்பட்ட பள்ளத்தாக்கு’ என்று பொருள். ‘துவா’ என்பது அப்பள்ளத்தாக்கின் பெயராகும். (20:87ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘பி மல்க்கினா’ எனும் சொல் மற்றோர் ஓதல் முறையில் ‘பி மில்கினா’ என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) ‘பி மில்க்கினா’ எனும் சொல்லுக்கு ‘எங்கள் கட்டளைப் பிரகாரம்’ என்று பொருள். (20:58ஆவது வசனத்தின் மூலத்தில் மற்றோர் ஓதல் முறைப்படியுள்ள) ‘மகானன்சிவா’ (சமதூரமுள்ள) என்பதற்கு ‘அவர்களிடையே பொதுவாக அமைந்துள்ள இடம்’ என்று பொருள். (20:77ஆவது வசனத்திலுள்ள) ‘உலர்ந்தது’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘யபஸ்’ எனும் சொல்லுக்குரியதாகும். (20:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கத்ர்’ எனும் சொல்லுக்கு ‘குறித்த நேரம்’ என்பது பொருள். (20:42ஆவது வசனத்திலுள்ள) ‘நீங்கள் இருவரும் சோர்வடைந்துவிடாதீர்கள்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘லா தனியா’ எனும் சொல்லுக்குரியதாகும். (20:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஃப்ருத்த’ எனும் சொல்லுக்கு ‘(நாங்கள் எங்கள் அறிவுரையை சொல்லி முடிப்பதற்குள்) அவன் எங்களை வரம்புமீறி தண்டித்துவிடுவான்’ என்பது பொருள். பாடம் : 1 ‘‘(மூசாவே!) எனக்காக உம்மை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன்” எனும் (20:41 ஆவது) இறைவசனம்
4736. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் சந்தித்துக் கொண்டனர். அப்போது மூசா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம், ‘‘நீங்கள்தான் மக்களைத் துர்பாக்கியவான்களாக்கி, அவர்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியவரா?” என்று கேட்டார்கள். ஆதம் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், ‘‘அல்லாஹ் தன் தூதர் பதவிக்காகவும் தனக்காகவும் தேர்ந்தெடுத்துக்கொண்டு தவ்ராத்தையும் அருளினானே அவரா நீங்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள், ‘‘என்னைப் படைப்பதற்கு முன்பாகவே (நீங்கள் குறிப்பிட்டபடி நான் செய்வேன் என) என்மீது விதிக்கப்பட்டிருந்ததாக, தவ்ராத்தில் நீங்கள் கண்டீர்களா?” என்று கேட்டார்கள். மூசா (அலை) அவர்கள் ‘ஆம்’ (கண்டேன்) என்றார்கள். இப்படி(ப் பேசி) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் (வாதத்தில்) வென்றார்கள்.4

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(20:39ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்யம்மு’ எனும் சொல்லுக்கு ‘கடல்’ என்பது பொருள்.5

அத்தியாயம் : 65
4737. حَدَّثَنِي يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَدِينَةَ، وَالْيَهُودُ تَصُومُ عَاشُورَاءَ، فَسَأَلَهُمْ، فَقَالُوا هَذَا الْيَوْمُ الَّذِي ظَهَرَ فِيهِ مُوسَى عَلَى فِرْعَوْنَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " نَحْنُ أَوْلَى بِمُوسَى مِنْهُمْ فَصُومُوهُ ".
பாடம் : 2 நாம் மூசாவிற்கு வஹீ (செய்தி) அனுப்பினோம்: நீர் இரவோடு இரவாக என் அடியார்களை அழைத்துக்கொண்டு சென்று, கடலில் அவர்களுக்காக உலர்ந்த பாதையை அமைப்பீராக! உம்மை யாரேனும் பின்தொடர்வார்களோ எனச் சற்றும் நீர் அஞ்சத் தேவை யில்லை; (கடலைக் கடந்து செல்லும்போது) உமக்குப் பயமும் ஏற்பட வேண்டியதில்லை. ஃபிர்அவ்ன் தன் படைகளுடன் அவர்களைப் பின்தொடர்ந்தான். பிறகு அவர்களைக் கடல் எவ்வாறு மூழ்கடிக்க வேண்டுமோ அவ்வாறு மூழ்கடித்தது. ஃபிர்அவ்ன் தன்னு டைய சமுதாயத்தை வழிகெடுத்தே இருந்தான்; அவர்களுக்குச் சரியான வழியைக் காட்டியிருக்கவில்லை (எனும் 20:77-79 வசனங்கள்)
4737. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றுக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் அது பற்றி விசாரித்தார்கள். அதற்கு அவர்கள் ‘‘இதுதான் மூசா (அலை) அவர்கள் ஃபிர்அவ்னை வெற்றி கொண்ட நாள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘‘இவர்களைவிட மூசா (அலை) அவர்களுக்கு நாமே அதிக உரிமையுடையவர்கள். ஆகவே, நீங்கள் இந்நாளில் நோன்பு நோறுங்கள்” என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள்.6

அத்தியாயம் : 65
4738. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا أَيُّوبُ بْنُ النَّجَّارِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " حَاجَّ مُوسَى آدَمَ، فَقَالَ لَهُ أَنْتَ الَّذِي أَخْرَجْتَ النَّاسَ مِنَ الْجَنَّةِ بِذَنْبِكَ وَأَشْقَيْتَهُمْ. قَالَ قَالَ آدَمُ يَا مُوسَى أَنْتَ الَّذِي اصْطَفَاكَ اللَّهُ بِرِسَالَتِهِ وَبِكَلاَمِهِ أَتَلُومُنِي عَلَى أَمْرٍ كَتَبَهُ اللَّهُ عَلَىَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي أَوْ قَدَّرَهُ عَلَىَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي ". قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " فَحَجَّ آدَمُ مُوسَى ".
பாடம் : 3 ‘‘ஆதமே! இவன் (இப்லீஸ்) உமக்கும் உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான். ஆதலால், இவன் உங்களிருவரையும் சொர்க்கத்தி óருந்து வெளியேற்றிவிட (இட மளிக்க) வேண்டாம்; (அப்படி வெளியேற்றிவிட்டால்) நீங்கள் இன்னலுக்குள்ளாகிவிடுவீர்கள்” என்று நாம் கூறினோம் எனும் (20:117ஆவது) இறைவசனம்
4738. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூசா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் வாதிட்டார்கள். அப்போது ‘‘உங்கள் பாவத்தின் காரணமாக மக்களைச் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி அவர்களைத் துர்பாக்கியசாலிகளாய் ஆக்கியவர்கள் நீங்கள்தானே!” என்று மூசா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்களிடம் கேட்டார்கள்.

(பதிலுக்கு) ஆதம் (அலை) அவர்கள் ‘‘மூசா! தன் தூதுச் செய்திகளை (மக்களிடம்) எடுத்துரைப்பதற்காகவும் தன்னுடன் உரையாடுவதற்காகவும் அல்லாஹ் தேர்ந்தெடுத்த மனிதர் நீங்கள்தானே? என்னைப் படைப்பதற்கு முன்பே என்மீது அல்லாஹ் ‘எழுதிவிட்ட அல்லது விதித்துவிட்ட’ ஒரு விஷயத்திற்காகவா என்னை நீங்கள் குறை கூறுகிறீர்கள்?” என்று திருப்பிக் கேட்டார்கள். இதைக் கூறிவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘ஆதம் (அலை) அவர்கள் (தமது இந்த பதிலால்) மூசா (அலை) அவர்களைத் தோற்கடித்துவிட்டார்கள்” என்று சொன்னார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.7

அத்தியாயம் : 65
4739. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ بَنِي إِسْرَائِيلَ وَالْكَهْفُ وَمَرْيَمُ وَطَهَ وَالأَنْبِيَاءُ هُنَّ مِنَ الْعِتَاقِ الأُوَلِ، وَهُنَّ مِنْ تِلاَدِي. وَقَالَ قَتَادَةُ {جُذَاذًا} قَطَّعَهُنَّ. وَقَالَ الْحَسَنُ {فِي فَلَكٍ} مِثْلِ فَلْكَةِ الْمِغْزَلِ {يَسْبَحُونَ} يَدُورُونَ. قَالَ ابْنُ عَبَّاسٍ {نَفَشَتْ} رَعَتْ {يُصْحَبُونَ} يُمْنَعُونَ. {أُمَّتُكُمْ أُمَّةً وَاحِدَةً} قَالَ دِينُكُمْ دِينٌ وَاحِدٌ. وَقَالَ عِكْرِمَةُ. {حَصَبُ} حَطَبُ بِالْحَبَشِيَّةِ. وَقَالَ غَيْرُهُ {أَحَسُّوا} تَوَقَّعُوهُ مِنْ أَحْسَسْتُ. {خَامِدِينَ} هَامِدِينَ. حَصِيدٌ مُسْتَأْصَلٌ يَقَعُ عَلَى الْوَاحِدِ وَالاِثْنَيْنِ وَالْجَمِيعِ. {لاَ يَسْتَحْسِرُونَ} لاَ يُعْيُونَ، وَمِنْهُ حَسِيرٌ، وَحَسَرْتُ بَعِيرِي. عَمِيقٌ بَعِيدٌ. {نُكِسُوا} رُدُّوا. {صَنْعَةَ لَبُوسٍ} الدُّرُوعُ. {تَقَطَّعُوا أَمْرَهُمْ} اخْتَلَفُوا، الْحَسِيسُ وَالْحِسُّ وَالْجَرْسُ وَالْهَمْسُ وَاحِدٌ، وَهْوَ مِنَ الصَّوْتِ الْخَفِيِّ {آذَنَّاكَ} أَعْلَمْنَاكَ {آذَنْتُكُمْ} إِذَا أَعْلَمْتَهُ فَأَنْتَ وَهْوَ عَلَى سَوَاءٍ لَمْ تَغْدِرْ. وَقَالَ مُجَاهِدٌ {لَعَلَّكُمْ تُسْأَلُونَ} تُفْهَمُونَ {ارْتَضَى} رَضِيَ. {التَّمَاثِيلُ} الأَصْنَامُ، السِّجِلُّ الصَّحِيفَةُ.
பாடம்: 21. ‘அல்அன்பியா’ அத்தியாயம்1 பாடம் : 1
4739. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ இஸ்ராயீல், அல்கஹ்ஃப், மர்யம், தாஹா மற்றும் அல்அன்பியா ஆகிய அத்தியாயங்கள் அதிசயமான முதல் தர அத்தியாயங்களில் அடங்கும். மேலும், இவை நான் மனனம் செய்த பழைய அத்தியாயங்களில் உள்ளவையாகும்.2

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:

(21:58ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜுஃதாதன்’ எனும் சொல்லுக்கு ‘துண்டு துண்டாக்கினார்’ என்று பொருள்.

(21:33ஆவது வசனத்தின் மூலத்தி லுள்ள) ‘ஃபலக்’ எனும் சொல்லி(ன் விளக்கவுரையி)ல் ஹசன் அல்பளி (ரஹ்) அவர்கள், ‘‘நூற்பு இயந்திரத்தின் தகளி போல் (சுழன்றபடி கோள்கள் அனைத்தும் அதனதன் நீள்வட்டப் பாதையில் நீந்திச் செல்கின்றன)” என்று சொன்னார்கள். ‘யஸ்பஹூன்’ எனும் சொல்லுக்கு ‘சுற்றுகின்றன’ என்பது பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(21:78ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நஃபஷத்’ எனும் சொல்லுக்கு ‘மேய்ந்தது’ என்பது பொருள்.

(21:43ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘வ லா ஹும் மின்னா) யுஸ்ஹபூன்’ எனும் சொல்லுக்கு ‘(எமது வேதனையிலிருந்து) அவர்கள் தடுக்கப்படமாட்டார்கள்’ என்று பொருள்.

(21:92ஆவது வசனத்திலுள்ள) ‘நீங்கள் யாவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே’ என்பதற்கு ‘நீங்கள் யாவரும் ஒரே மார்க்கத்தைச் சேர்ந்தவர் களே’ என்று பொருள்.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(21:98ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹஸப்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் ‘விறகு’ என்பது பொருள்.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றனர்:

(21:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஹஸ்ஸூ’ (உணர்ந்தனர்) எனும் சொல்லுக்கு ‘அதை எதிர்பார்த்தனர்’ என்று பொருள். இச்சொல் ‘அஹ்ஸஸ்த்து (இஹ்ஸாஸன்)’ எனும் சொல்லிலிருந்து பிரிந்ததாகும். (இதற்கு ‘ஐம்புலன்களால் உணர்ந்தேன்’ என்பது பொருள்.)

(21:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘காமிதீன்’ எனும் சொல்லுக்கு ‘அணைந்து போனவர்கள்’ என்பது பொருள். ‘ஹஸீத்’ எனும் சொல்லுக்கு ‘வேரோடு அறுவடை செய்யப்பட்டது’ என்று பொருள். இச்சொல்லே ஒருமை, இருமை, பன்மை ஆகிய மூன்று நிலைகளுக்கும் பொருந்தும்.

(21:19ஆவது வசனத்திலுள்ள) ‘அவர்கள் சோர்வடையமாட்டார்கள்’ எனும் பொருள், மூலத்திலுள்ள ‘லா யஸ்தஸ்ஹிரூன்’ எனும் சொல்லுக்குரியதாகும். ‘ஹஸீர்’ (சோர்வடைந்தவன்), ‘ஹஸர்த்து பஈரீ’ (என் ஒட்டகத்தைக் களைப்படையச் செய்தேன்) ஆகிய சொற்கள் இதில் அடங்கும்.

(அடுத்த அத்தியாயத்தில் வரும் 22:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அமீக்’ எனும் சொல்லுக்கு ‘தொலைவு’ என்பது பொருள்.

(21:65ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘நுகிசூ’ எனும் சொல்லுக்கு ‘அவர்கள் மீண்டும் (இறைமறுப்பின் பக்கமே) திருப்பப்பட்டனர்’ என்று பொருள். (இச்சொல்லுக்கு ‘வெட்கத்தால் தலைகுனிந்தனர்’ என்றும் பொருள் கொள்ளப்படுவதுண்டு.)

(21:80ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஸன்அத்த லபூஸ்’ எனும் சொல்லுக்கு ‘கவசங்கள் தயாரிப்பு’ என்று பொருள்.

(21:93ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தகத்தஊ அம்ரஹும்’ எனும் வாக்கியத்திற்கு ‘தங்களின் (மார்க்க) விஷயங்களில் பிளவுபட்டனர்’ என்று பொருள்.

(21:102ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹஸீஸ்’ எனும் சொல்லும் அல்ஹிஸ்ஸு, அல்ஜர்ஸ், அல்ஹம்ஸ் ஆகிய சொற்களும் ஒரே பொருள் கொண்டவையாகும். இவற்றுக்கு ‘மெல்லிய ஒலி’ என்பது பொருள்.

(21:109ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆஃதன்த்துகும்’ எனும் சொல்லுக்கு ‘உங்களுக்கு நான் அறிவித்துவிட்டேன்’ என்று பொருள். (இதைப் போன்றே 41:47ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஆஃதன்னாக்க’ எனும் சொல்லுக்கு ‘உமக்கு நாங்கள் அறிவிக்கிறோம்’ என்று பொருள். ‘‘ஒளிவு மறைவின்றி நீயும் எதிராளியும் சம நிலையில் இருக்கும் வகையில் போர்ப் பிரகடனம் செய்வதை” இது (21:109ஆவது வசனம்) குறிக்கும்.

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(21:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லஅல்லக்கும் துஸ்அலூன்’ எனும் சொற்றொடருக்கு ‘நீங்கள் (மற்றவர்களால்) புரிந்துக்கொள்ளப்படலாம்’ என்பது பொருள்.

(21:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘இர்தளா’ எனும் சொல்லுக்கு ‘அவன் விரும்பினான்’ (‘ரளிய’) என்று பொருள்.

(21:52ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்தமாஸீல்’ எனும் சொல்லுக்கு ‘சிலைகள்’ என்பது பொருள்.

(21:104ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஸ்ஸிஜில்லு’ எனும் சொல்லுக்கு ‘ஏடு’ என்பது பொருள்.

அத்தியாயம் : 65
4740. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْمُغِيرَةِ بْنِ النُّعْمَانِ، شَيْخٍ مِنَ النَّخَعِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَطَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ " إِنَّكُمْ مَحْشُورُونَ إِلَى اللَّهِ حُفَاةً عُرَاةً غُرْلاً {كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ} ثُمَّ إِنَّ أَوَّلَ مَنْ يُكْسَى يَوْمَ الْقِيَامَةِ إِبْرَاهِيمُ، أَلاَ إِنَّهُ يُجَاءُ بِرِجَالٍ مِنْ أُمَّتِي، فَيُؤْخَذُ بِهِمْ ذَاتَ الشِّمَالِ، فَأَقُولُ يَا رَبِّ أَصْحَابِي فَيُقَالُ لاَ تَدْرِي مَا أَحْدَثُوا بَعْدَكَ فَأَقُولُ كَمَا قَالَ الْعَبْدُ الصَّالِحُ {وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ} إِلَى قَوْلِهِ {شَهِيدٌ} فَيُقَالُ إِنَّ هَؤُلاَءِ لَمْ يَزَالُوا مُرْتَدِّينَ عَلَى أَعْقَابِهِمْ مُنْذُ فَارَقْتَهُمْ ".
பாடம் : 2 முதலில் (அவர்களை) நாம் படைத் ததைப் போன்றே (அந்நாளில்) அவர்களை மீண்டும் படைப்போம். இது நமது வாக்குறுதியாகும் (எனும் 21:104ஆவது வசனத்தொடர்)
4740. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்களிடையே) உரையாற்றினார்கள். அப்போது, ‘‘(மனிதர்களே!) நீங்கள் அல்லாஹ்விடம் (காலணி அணியாத) வெறுங்காலுடைய வர்களாக, உடையணியாதவர்களாக, ‘விருத்த சேதனம்’ செய்யப்படாதவர்களாக மறுமையில் எழுப்பப்படுவீர்கள்” என்று கூறிவிட்டு, ‘‘முதலில் நாம் (அவர்களைப்) படைத்ததைப் போன்றே (மறுமை நாளில்) நாம் அவர்களை மீண்டும் படைப்போம். இது நமது வாக்குறுதியாகும். நாம் இதனைச் செய்தே தீருவோம்” எனும் (21:104ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

பிறகு மறுமை நாளில் உடை அணிவிக்கப்படும் முதல் மனிதர் (இறைத்தூதர்) இப்ராஹீம் அவர்கள்தான். அறிந்துகொள்ளுங்கள்: என்னுடைய சமுதாயத்தாரில் சிலபேர் கொண்டுவரப்பட்டு அவர்கள் இடப்பக்கம் (நரகத்தை நோக்கிக்) கொண்டுசெல்லப்படுவர். அப்போது நான், ‘‘என் இறைவா! (இவர்கள்) என் தோழர்கள்” என்று சொல்வேன். அதற்கு, ‘‘இவர்கள் உங்களு(டைய இறப்பு)க்குப்பின் என்னவெல்லாம் புதிது புதிதாக உருவாக்கினார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது” என்று சொல்லப்படும்.

அப்போது நான், நல்லடியார் ஈசா (அலை) அவர்கள் சொன்னதைப் போன்று ‘‘நான் அவர்களிடையே (வாழ்ந்துகொண்டு) இருந்த வரை நான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். நீ என்னை அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களைக் கண்காணிப்பவன் ஆகிவிட்டாய்” என்று பதிலளிப்பேன். அதற்கு, ‘‘இவர்களை நீங்கள் பிரிந்து வந்ததிóருந்து இவர்கள் தங்கள் குதிகால் (சுவடு)களின் வழியே தமது மார்க்கத்திóருந்து விலகிச் சென்றுகொண்டேயிருந்தார்கள்” என்று கூறப்படும்.3

அத்தியாயம் : 65
4741. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ يَوْمَ الْقِيَامَةِ يَا آدَمُ. يَقُولُ لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ، فَيُنَادَى بِصَوْتٍ إِنَّ اللَّهَ يَأْمُرُكَ أَنْ تُخْرِجَ مِنْ ذُرِّيَّتِكَ بَعْثًا إِلَى النَّارِ. قَالَ يَا رَبِّ وَمَا بَعْثُ النَّارِ قَالَ مِنْ كُلِّ أَلْفٍ ـ أُرَاهُ قَالَ ـ تِسْعَمِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ فَحِينَئِذٍ تَضَعُ الْحَامِلُ حَمْلَهَا وَيَشِيبُ الْوَلِيدُ {وَتَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ} ". فَشَقَّ ذَلِكَ عَلَى النَّاسِ حَتَّى تَغَيَّرَتْ وُجُوهُهُمْ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " مِنْ يَأْجُوجَ وَمَأْجُوجَ تِسْعَمِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ، وَمِنْكُمْ وَاحِدٌ، ثُمَّ أَنْتُمْ فِي النَّاسِ كَالشَّعْرَةِ السَّوْدَاءِ فِي جَنْبِ الثَّوْرِ الأَبْيَضِ، أَوْ كَالشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي جَنْبِ الثَّوْرِ الأَسْوَدِ، وَإِنِّي لأَرْجُو أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ ". فَكَبَّرْنَا ثُمَّ قَالَ " ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ ". فَكَبَّرْنَا ثُمَّ قَالَ " شَطْرَ أَهْلِ الْجَنَّةِ ". فَكَبَّرْنَا. قَالَ أَبُو أُسَامَةَ عَنِ الأَعْمَشِ {تَرَى النَّاسَ سُكَارَى وَمَا هُمْ بِسُكَارَى} وَقَالَ مِنْ كُلِّ أَلْفٍ تِسْعَمِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ. وَقَالَ جَرِيرٌ وَعِيسَى بْنُ يُونُسَ وَأَبُو مُعَاوِيَةَ {سَكْرَى وَمَا هُمْ بِسَكْرَى}.
பாடம்: 22. ‘அல்ஹஜ்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (22:34ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்முக்பித்தீன்’ எனும் சொல்லுக்கு ‘(எல்லா நிலைகளிலும் இறைவிதியின் மீது) ‘நிம்மதி கொள்வோர்’, ‘திருப்தியடைவோர்’ என்பது பொருள். (இதற்கு இசைவான வேறுபல பொருள்களும் இச்சொல்லுக்கு உண்டு.) ‘‘(நபியே! உமக்குமுன் நாம் அனுப்பிய ஒவ்வொரு தூதருடையவும் நபியுடையவும் விருப்பத்தில் ஷைத்தான் குழப்பத்தை உண்டுபண்ண முயலாது இருந்ததில்லை” எனும் (22:52ஆவது) வசனத்தி(ன் விளக்கவுரையி)ல்இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நபியவர்கள் பேசினால், அவர்களின் பேச்சினூடே ஷைத்தான் (நுழைந்து) குழப்பத்தை விளைவிப்பான். உடனே அல்லாஹ் ஷைத்தான் விளைவிக்கும் குழப்பங்களை முறியடித்து, தன் வசனங்களை நிலைநிறுத்திவிடுவான். (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உம்னிய்யத்’ எனும் சொல்லுக்கு ‘ஓதுதல்’ என்று பொருள் எனக்கூறப்படுகிறது. (2:78ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அமானிய்யு’ என்னும் சொல்லுக்கு ‘ஓதுவார்கள்; ஆனால் எழுதமாட்டார்கள்’ என்று பொருள் (கொள்ளப்பட்டிருப்பது இதற்குச் சான்றாகும்). முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: (22:45ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘கஸ்ரின்) மஷீத்’ எனும் சொல்லுக்கு ‘காரையினால் உறுதியாக்கப்பட்ட (எத்தனையோ மாடமாளிகைகள்)’ என்று பொருள். முஜாஹித் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றனர்: (22:72ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஸ்த்தூன’ எனும் சொல்லுக்கு ‘எல்லை மீறி (அடக்கு முறையை அவிழ்த்து)விடுவர்’ என்று பொருள். இச்சொல் ‘சத்வத்’ (அடக்கியாளுதல்) எனும் வேர்ச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். (‘யஸ்த்தூன’ எனும்) இச்சொல்லுக்கு ‘பாய்ந்து (தாக்கி)விடுவார்கள்’ என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. ‘பரிசுத்தமான வாக்கியத்தின் பக்கம் அவர்களுக்கு வழிகாட்டப்பட்டது’ எனும் (22:24ஆவது) வசனத்திற்குப் ‘பரிசுத்தமான வாக்கியம் அவர்களது உள்ளுணர்வில் வைக்கப்பட்டது’ என்று பொருள். (இதே வசனத்திலுள்ள) ‘மிக்க புகழுக்குரிய பாதை’ என்பது இஸ்லாமாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (22:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘பி சபபின் இலஸ் ஸமாயி’ எனும் சொற்றொடருக்கு ‘வீட்டின் கூரையில் ஒரு கயிற்றைக் கட்டி’ என்று பொருள். (22:20ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘தஃத்ஹலு’ எனும் சொல்லுக்கு ‘மறக்கடிக்கப்படுவாள்’ என்று பொருள். பாடம் : 1 மேலும், (மறுமை நாளில்) மக்களை போதையுற்றோராய்க் காண்பீர். (உண்மையில்) அவர்கள் போதையில் இருக்கமாட்டார்கள். ஆயினும், (அந்த அளவுக்கு) அல்லாஹ்வின் வேதனை கடுமை யாய் இருக்கும் (எனும் 22:2ஆவது வசனத்தொடர்)
4741. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஆதி மனிதரை நோக்கி,) ‘ஆதமே!’ என்பான். அதற்கு அவர்கள், ‘‘என் இறைவா! இதோ வந்துவிட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன்” என்று கூறுவார்கள். அப்போது ‘‘நீங்கள் உங்கள் வழித்தோன்றல்களிருந்து நரகத்திற்கு அனுப்பப்படவிருப்பவர்களை (மற்றவர்களிóருந்து) தனியாகப் பிரிக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு ஆணையிடு கிறான்” என்று ஒருவர் அறைகூவல் விடுப்பார்.

ஆதம் (அலை) அவர்கள், ‘‘எத்தனை நரகவாசிகளை?” என்று கேட்பார்கள். அதற்கு அவர், ‘‘ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (வெளியே கொண்டுவாருங்கள்)” என்று பதிலளிப்பார்.

இப்படி அவர் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) கர்ப்பம் கொண்ட பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தை (பீதியின் காரணத்தால் அரைகுறையாகப்) பிரசவித்துவிடுவாள்; பாலகன்கூட நரைத்து (மூப்படைந்து)விடுவான். மக்களை போதையுற்றவர்களாய் நீர் காண்பீர். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்கமாட்டார் கள். ஆனால், (அந்த அளவுக்கு) அல்லாஹ்வின் வேதனை கடுமையாய் இருக்கும்”.

நபியவர்கள் இவ்வாறு கூறியது (அங்கு கூடியிருந்த) மக்களுக்குச் சிரமமாக இருந்தது. (அச்சத்தினால்) அவர்களின் முகங்கள் நிறம் மாறிவிட்டன.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரில் ஓராயிரம் பேர் (தனியாகப் பிரிக்கப்படாமல், நரகம் செல்லும் குழுவிலேயே) இருப்பார்கள்” என்று கூறிவிட்டு பிறகு, ‘‘ ‘நீங்கள் (மறுமை நாளில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கறுப்பு முடியைப் போலத்தான்’ அல்லது ‘கருநிறக் காளையின் மேனியில் உள்ள வெண்ணிற முடியைப் போலத்தான்’ (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்” என்று கூறினார்கள்.

பின்னர் ‘‘(என் சமுதாயத்தாராகிய) நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார்கள். உடனே நாங்கள் (மகிழ்ச்சியூட்டும் இந்த நற்செய்தி கேட்டு) ‘‘அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினோம். பிறகு நபியவர்கள், ‘‘சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும்” என்று கூறினார்கள். நாங்கள் (பெரும் மகிழ்ச்சியால் மீண்டும்,) ‘‘அல்லாஹு அக்பர்” என்று கூறினோம்.

பிறகு நபியவர்கள், ‘‘சொர்க்கவாசிகளில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும்” என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்) ‘‘அல்லாஹு அக்பர்” என்று கூறினோம்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூஉசாமா (ரஹ்) அவர்களின் அறிவிப்பி லும் இவ்வாறே காணப்படுகிறது.

ஜரீர் பின் அப்தில் ஹமீத், ஈசா பின் யூனுஸ், அபூமுஆவியா (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில், (இந்த 22:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘சுகாரா’ எனும் சொல்லுக்குப் பதிலாக) ‘சக்ரா’ என்று காணப்படுகிறது. (பொருள் ஒன்றே).

அத்தியாயம் : 65
4742. حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي بُكَيْرٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ {وَمِنَ النَّاسِ مَنْ يَعْبُدُ اللَّهَ عَلَى حَرْفٍ} قَالَ كَانَ الرَّجُلُ يَقْدَمُ الْمَدِينَةَ، فَإِنْ وَلَدَتِ امْرَأَتُهُ غُلاَمًا، وَنُتِجَتْ خَيْلُهُ قَالَ هَذَا دِينٌ صَالِحٌ. وَإِنْ لَمْ تَلِدِ امْرَأَتُهُ وَلَمْ تُنْتَجْ خَيْلُهُ قَالَ هَذَا دِينُ سُوءٍ.
பாடம்: 2 மேலும், மனிதர்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் விளிம்பில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வழிபடுகிறார்கள். தங்களுக்கு ஏதேனும் ஆதாயம் கிடைக்குமாயின் அதைக் கொண்டு மனநிறைவு கொள்கிறார்கள். துன்பம் ஏற்படுமாயின் தலை கீழாக மாறிவிடுகிறார்கள். அவர்கள் இம்மையையும் இழந்து விட்டார்கள்; மறுமையையும் இழந்துவிட்டார்கள். இதுதான் வெளிப்படையான இழப்பாகும் (எனும் 22:11, 12 ஆகிய இறை வசனங்கள்) (முதல் வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹர்ஃப்’ (விளிம்பு) என்பதற்கு ‘சந்தேகம்’ என்பது கருத்தாகும். (அடுத்த அத்தியாயத்தில் 23:33ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அத்ரஃப்னாஹும்’ என்பதற்கு ‘ஆடம்பரமான வாழ்க்கையை அவர்களுக்கு நாம் வழங்கியிருந்தோம்’ என்பது பொருள்.
4742. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘விளிம்பில் நின்றுகொண்டு அல்லாஹ்வை வழிபடுகின்ற சிலரும் மக்களிடையே உள்ளனர்” எனும் (22:11 ஆவது) இறைவசனம் தொடர்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகையில், ‘‘சிலர் மதீனாவுக்கு வருவர். (இஸ்லாத்தையும் ஏற்றுக்கொள்வர்.) அவர்கள் தம் மனைவியர் ஆண் பிள்ளைகள் பெற்றெடுத்தால், அவர்களின் குதிரைகள் குட்டி ஈன்றால் அப்போது, ‘‘இது (இஸ்லாம்) நல்ல மார்க்கம்” என்று கூறுவார்கள்.

அவர்களுடைய மனைவியர் ஆண் குழந்தைகள் பெறவில்லையென்றால், அவர்களின் குதிரைகள் குட்டி ஈனவில்லை யென்றால், ‘‘இது கெட்ட மார்க்கம்” என்று சொல்வார்கள். (இவர்கள் தொடர்பாக இந்த இறைவசனம் அருளப்பெற்றது)” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 65
4743. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو هَاشِمٍ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عُبَادٍ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ أَنَّهُ كَانَ يُقْسِمُ فِيهَا إِنَّ هَذِهِ الآيَةَ {هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ} نَزَلَتْ فِي حَمْزَةَ وَصَاحِبَيْهِ، وَعُتْبَةَ وَصَاحِبَيْهِ يَوْمَ بَرَزُوا فِي يَوْمِ بَدْرٍ رَوَاهُ سُفْيَانُ عَنْ أَبِي هَاشِمٍ. وَقَالَ عُثْمَانُ عَنْ جَرِيرٍ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي هَاشِمٍ عَنْ أَبِي مِجْلَزٍ قَوْلَهُ.
பாடம் : 3 ‘‘இவர்கள் தங்களுடைய இறை வனின் (மார்க்க) விஷயத்தில் தர்க்கித்துக்கொண்ட இரு பிரிவி னர் ஆவர்” எனும் (22:19ஆவது) வசனத்தொடர்
4743. கைஸ் பின் உபாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூதர் (ரலி) அவர்கள், ‘‘இவர்கள் தங்களுடைய இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்க்கித்துக்கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் இந்த (22:19 ஆவது) வசனம், பத்ர் போரன்று (படைக்கு முன்னால் வந்து) தனித்து நின்று போராடிய (இஸ்லாமிய வீரர்களான) ஹம்ஸா மற்றும் அவர்களுடைய இரு நண்பர்கள் (அலீ, உபைதா) தொடர்பாகவும், (இறைமறுப்பாளர்களான) உத்பா மற்றும் அவருடைய இரு நண்பர்கள் (ஷைபா, வலீத்) தொடர்பாகவுமே அருளப்பெற்றது” எனச் சத்தியமிட்டுக் கூறிவந்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.3


அத்தியாயம் : 65
4744. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا مُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، قَالَ سَمِعْتُ أَبِي قَالَ، حَدَّثَنَا أَبُو مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عُبَادٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ قَالَ أَنَا أَوَّلُ، مَنْ يَجْثُو بَيْنَ يَدَىِ الرَّحْمَنِ لِلْخُصُومَةِ يَوْمَ الْقِيَامَةِ. قَالَ قَيْسٌ وَفِيهِمْ نَزَلَتْ {هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ} قَالَ هُمُ الَّذِينَ بَارَزُوا يَوْمَ بَدْرٍ عَلِيٌّ وَحَمْزَةُ وَعُبَيْدَةُ وَشَيْبَةُ بْنُ رَبِيعَةَ وَعُتْبَةُ بْنُ رَبِيعَةَ وَالْوَلِيدُ بْنُ عُتْبَةَ.
பாடம் : 3 ‘‘இவர்கள் தங்களுடைய இறை வனின் (மார்க்க) விஷயத்தில் தர்க்கித்துக்கொண்ட இரு பிரிவி னர் ஆவர்” எனும் (22:19ஆவது) வசனத்தொடர்
4744. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இறைமறுப்பாளர்கள் போரிட்டது தொடர்பாக) மறுமை நாளில், (அளவிலா அருளாளன்) ரஹ்மானுக்கு முன்னால் வழக்காடுவதற்காக மண்டியிடுபவர்களில் (இந்தச் சமுதாயத்திலேயே) நான்தான் முதல் ஆளாக இருப்பேன்.

அறிவிப்பாளர் கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இவர்களைக் குறித்தே, ‘‘இவர்கள் தங்களுடைய இறைவனின் (மார்க்க) விஷயத்தில் தர்க்கித்துக்கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் (22:19ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. அவர்கள் பத்ர் போரின்போது (களத்தில் இறங்கி) தனித்து நின்று போராடிய (முஸ்லிம்களான) அலீ, ஹம்ஸா, உபைதா (ரலி) ஆகியோரும் (இறைமறுப்பாளர்களான) ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா ஆகியோரும் ஆவர்.4

அத்தியாயம் : 65
4745. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي الزُّهْرِيُّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ عُوَيْمِرًا، أَتَى عَاصِمَ بْنَ عَدِيٍّ وَكَانَ سَيِّدَ بَنِي عَجْلاَنَ فَقَالَ كَيْفَ تَقُولُونَ فِي رَجُلٍ وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً، أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَصْنَعُ سَلْ لِي رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَأَتَى عَاصِمٌ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، فَكَرِهَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الْمَسَائِلَ، فَسَأَلَهُ عُوَيْمِرٌ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَرِهَ الْمَسَائِلَ وَعَابَهَا، قَالَ عُوَيْمِرٌ وَاللَّهِ لاَ أَنْتَهِي حَتَّى أَسْأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ فَجَاءَ عُوَيْمِرٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ رَجُلٌ وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلاً، أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَصْنَعُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَدْ أَنْزَلَ اللَّهُ الْقُرْآنَ فِيكَ وَفِي صَاحِبَتِكَ ". فَأَمَرَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالْمُلاَعَنَةِ بِمَا سَمَّى اللَّهُ فِي كِتَابِهِ، فَلاَعَنَهَا ثُمَّ قَالَ يَا رَسُولَ اللَّهِ، إِنْ حَبَسْتُهَا فَقَدْ ظَلَمْتُهَا، فَطَلَّقَهَا، فَكَانَتْ سُنَّةً لِمَنْ كَانَ بَعْدَهُمَا فِي الْمُتَلاَعِنَيْنِ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " انْظُرُوا فَإِنْ جَاءَتْ بِهِ أَسْحَمَ أَدْعَجَ الْعَيْنَيْنِ عَظِيمَ الأَلْيَتَيْنِ خَدَلَّجَ السَّاقَيْنِ فَلاَ أَحْسِبُ عُوَيْمِرًا إِلاَّ قَدْ صَدَقَ عَلَيْهَا، وَإِنْ جَاءَتْ بِهِ أُحَيْمِرَ كَأَنَّهُ وَحَرَةٌ فَلاَ أَحْسِبُ عُوَيْمِرًا، إِلاَّ قَدْ كَذَبَ عَلَيْهَا ". فَجَاءَتْ بِهِ عَلَى النَّعْتِ الَّذِي نَعَتَ بِهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ تَصْدِيقِ عُوَيْمِرٍ، فَكَانَ بَعْدُ يُنْسَبُ إِلَى أُمِّهِ.
பாடம்: 23. ‘அல்முஃமினூன்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (23:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சப்அ தராயிக்’ (ஏழு அடுக்குகள்) என்பதற்கு ‘ஏழு வானங்கள்’ என்பது பொருள். (23:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாபிகூன்’ (ஒருவரையொருவர் முந்திக்கொள்பவர்கள்) என்பதற்கு ‘‘(அல்லாஹ்விடமிருந்து) அவர்களுக்கு நற்பேறு முந்திவிட்டிருக்கிறது. (எனவே, அவர்கள் நன்மையான காரியங்களில் போட்டியிட்டு ஒருவரையொருவர் முந்துகின்றனர்)” என்று பொருள். (23:60ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வஜிலத் குலூபுஹும்’ எனும் சொற்றொடருக்கு ‘அஞ்சுபவர்கள்’ என்பது பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (23:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஹய்ஹாத்த, ஹய்ஹாத்த’ எனும் சொற்றொடருக்கு ‘வெகுதூரம், வெகுதூரம்’ (அசாத்தியம்) என்று பொருள். (23:113ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஆத்தீன்’ (கணக்கு வைத்திருப்பவர்கள்) எனும் சொல், வானவர்களைக் குறிக்கின்றது. (23:74ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ல நாக்கிபூன்’ எனும் சொல்லுக்கு ‘புறக்கணித்தவர்கள்’ என்பது பொருள். (23:104ஆவது வசனத்திலுள்ள) ‘முகம் விகாரமானவர்கள்’ எனும் பொருள் மூலத்திலுள்ள ‘காலிஹூன்’ எனும் சொல்லுக்குரியதாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: (23:12ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சுலாலத்’ (‘சத்து’) என்பதில் (மனிதனிóருந்து பிரியும்) விந்தும், (அதிலிருந்து உருவாகும்) குழந்தையும் அடங்கும்.2 (23:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஜின்னத்’ எனும் சொல்லும், ‘அல்ஜுனூன்’ எனும் சொல்லும் (‘பைத்தியம்’ எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும். (23:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகுஸாஉ’ எனும் சொல்லுக்கு ‘வெள்ளத்தின் மேலே செல்லும் நுரை மற்றும் பயனற்ற குப்பைக்கூளங்கள்’ என்று பொருள். (23:65ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யஜ்அரூன்’ எனும் சொல்லுக்கு ‘மாடு போலக் கத்துவார்கள்’ என்பது பொருள். (23:66ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அலா அஉகாபிக்கும்’ எனும் சொல்லுக்கு ‘புறங்காட்டி (வந்த வழியே) சென்றான்’ என்பது பொருள். (23:67ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சாமிர்’ (நிலவொளியில் இராக்கதை பேசுபவர்) எனும் சொல் ‘சமர்’ எனும் வேர்ச்சொல்லிலிருந்து பிரிந்ததாகும். பன்மை: சும்மார். சாமிர் எனும் இச்சொல் இந்த வசனத்தில் பன்மையின் இடத்தில் ஆளப்பட்டுள்ளது. (23:89ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘துஸ்ஹரூன்’ எனும் சொல்லுக்கு ‘அறிவை இழந்துவிட்டிருக்கிறீர்கள்’ என்பது பொருள். இச்சொல் ‘சிஹ்ர்’ (சூனியம்) எனும் மூலச்சொல்லிலிருந்து தோன்றியதாகும். பாடம்: 24. ‘அந்நூர்’ அத்தியாயம்1 (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...) (24:43ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மின் கிலாலிஹி’ (அதற்கிடையிóருந்து) என்பதற்கு ‘அடுக்கடுக்கான மேகங்களுக்கிடையேயிருந்து’ என்பது கருத்து. (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சனா பர்கிஹி’ எனும் சொல்லுக்கு ‘(மின்) ஒளி’ என்பது பொருள். (24:49ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முத்இனீன்’ எனும் சொல்லுக்கு ‘பணிந்தவர்களாக’ என்பது பொருள். (24:61ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஷ்த்தாத்’ எனும் சொல்லும் ‘ஷத்தா’, ‘ஷதாத்’, ‘ஷத்து’ எனும் சொற்களும் (‘தனித்தனியானவை’ எனும்) ஒரே பொருள் கொண்டவையாகும். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (24:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘சூரத்துன் அன்ஸல்னாஹா’ எனும் சொற்றொடருக்கு ‘நாமே இதனை (இறக்கி)த் தெளிவுபடுத்தினோம்’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அல்லாதோர் கூறுகிறார்கள்: பல அத்தியாயங்கள் ஒன்றுசேர்க்கப்பட்டிருப்பதால்தான் குர்ஆனுக்கு ‘குர்ஆன்’ (ஒன்றுசேர்க்கப்பட்டது) என்று பெயர் சூட்டப்பட்டது. அத்தியாயத்திற்கு ‘சூரா’ (பிரிக்கப்பட்டது) என்று பெயரிடப்படக் காரணம், ஓர் அத்தியாயத்திலிருந்து மற்றோர் அத்தியாயம் தனியாகப் பிரிக்கப்பட்டிருப்பதேயாகும். (தனித்தனியாகப் பிரிக்கப்பட்ட அத்தியாயங்களில்) ஒன்றை ஒன்றோடு சேர்த்தபோது குர்ஆனுக்கு ‘அல்குர்ஆன்’ (ஒன்றுசேர்க்கப்பட்டது) என்று பெயர் வழங்கப்பட்டது. சஅத் பின் இயாள் அஸ்ஸுமாலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:2 (24:35ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மிஷ்காத்’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் ‘மாடம்’ என்பது பொருள். (75:17ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘வ குர்ஆனஹு’ எனும் சொல்லுக்கு ‘அதில் ஒன்றை மற்றொன்றுடன் சேர்ப்பது’ என்று பொருள். (75:18ஆவது வசனத் தின் மூலத்திலுள்ள) ‘ஃப இதா கரஃனாஹு’ எனும் சொற்றொடருக்கு, ‘அதனை நாம் ஒருங்கிணைத்து ஒன்றுசேர்த்தால்’ என்று பொருள். ‘ஃபத்தபிஉ குர்ஆனஹு’ எனும் வாக்கியத்திற்கு ‘அதில் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதன்படி செயலாற்று; (அதாவது) அல்லாஹ் உனக்கிட்டுள்ள கட்டளைப்படி செயலாற்று; அவன் தடை செய்தவையிலிலிருந்து விலகியிரு!” என்று பொருள். ‘‘அவனது கவிதையில் ‘குர்ஆன்’ இல்லை” என்றால், ‘ஒருங்கிணைப்பு’ இல்லை என்று பொருள். சத்தியத்தையும் அசத்தியத்தையும் பாகுபடுத்திக்காட்டுவதால்தான் (குர்ஆனுக்கு) ஃபுர்கான் (பாகுபடுத்தக்கூடியது) என்று பெயர் வந்தது. ‘‘ஒரு பெண், தன் வயிற்றில் சிசுவை ஒன்றுசேர்க்கவில்லை” என்பதைக் குறிக்க ‘மா கரஅத்’ எனும் சொல் ஆளப்படுவதுண்டு. (24:1ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘ஃபரள்னாஹா’ எனும் சொல் மற்றோர் ஓதலில் ‘ஃபர்ரள்னாஹா’ என்று ஓதப்பட்டுள்ளது. அந்த) ‘ஃபர்ரள்னாஹா’ எனும் சொல்லுக்கு ‘இதில் நாம் பல்வேறு விதமான விதிகளை அருளியுள்ளோம்’ என்பது பொருள். (அதே சொல்லை) ‘ஃபரள்னாஹா’ என்று ஓதியவர்கள், ‘உங்களுக்கும் விதியாக்கினோம்; உங்களுக்குப் பின்னால் வருபவர்களுக்கும் விதியாக்கினோம்’ என்று (பொருள்) கூறுகிறார்கள். முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (24:31ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அவித் திஃப்லில்லஃதீன லம் யழ்ஹரூ அலா அவ்ராத்திந் நிசா’ எனும் சொற்றொடர், வயது சிறியதாயிருப்பதனால் பெண்களின் மறைவான உறுப்புகள் குறித்து அறிந்திராத சிறுவர்களைக் குறிக்கிறது. ‘அபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இதே வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகைரி உலில் இர்பத்’ எனும் சொல், பெண் தேவையற்ற (வயோதிகர்கள், பாலுணர்வற்றவர்கள் போன்ற) ஆண்களைக் குறிக்கிறது. முஜாஹித் (ரஹ்) அவர்கள், ‘‘தம் வயிற்றைக் குறித்த எண்ணத்தைத் தவிர (உணவைத் தவிர) வேறு எண்ணம் வராத (இவனால் பெண்களுக்குப் பாலியல் தொல்லை ஏதும் நேருமோ என்று) பெண்கள் விஷயத்தில் அஞ்சப்படாத ஆணைக் குறிக்கும்” எனக் கூறுகிறார்கள். தாவூஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பெண் வேட்கையற்ற வெகுளியே ‘ஃகைரு உலில் இர்பத்’ ஆவான். பாடம் : 1 ‘‘யார் தம்முடைய மனைவியர்மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தம்மையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லையோ அத்தகையோரில் ஒருவர், நிச்சயமாக தாம் (தமது குற்றச் சாட்டில்) உண்மையாளர்தான் என அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்க வேண்டும்” எனும் (24:6ஆவது) இறைவசனம்
4745. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘பனூ அஜ்லான்’ குலத்தாரின் தûலைவராயிருந்த ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்களிடம் (அதே குலத்தைச் சேர்ந்த) ‘உவைமிர்’ என்பவர்3 வந்து ‘‘தன் மனைவியுடன் வேறொரு அந்நிய ஆடவன் (தகாத உறவுகொண்டபடி) இருக்கக் கண்ட ஒரு மனிதனின் விஷயத்தில் என்ன கூறுகிறீர்கள்? அவன் அந்த அந்நிய ஆடவனைக் கொன்றுவிடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால், (பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? எனக்காக இந்த விவகாரம் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நீங்கள் கேட்டுச் சொல்லுங்கள்” என்று சொன்னார்.

ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே!” என்று (விஷயத்தைச் சொல்லி) கேட்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்விகளை விரும்பவில்லை (என்பதை உணர்ந்துகொண்டு திரும்பி வந்துவிட்டார்).

நபி (ஸல்) அவர்கள் என்ன சொன்னார் கள் என்று ஆஸிம் (ரலி) அவர்களிடம் உவைமிர் (ரலி) அவர்கள் கேட்க, அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இத்தகைய கேள்விகளை விரும்பவில்லை; மேலும், இப்படிக் கேட்பதை அவர்கள் அநாகரிகமாகக் கருதுகிறார்கள்” என்று பதில் சொன்னார்கள்.

உடனே உவைமிர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றிக் கேட்காமல் ஓயமாட்டேன்” என்று கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் இருக்கக் கண்டால் அவன் அம்மனிதனைக் கொல்லலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப்பழியாக) நீங்கள் அம்மனிதனைக் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘‘அல்லாஹ் உமது விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் குர்ஆன் வசனத்தை அருளியுள்ளான்” என்று கூறி, அவ்விருவருக்கும் அல்லாஹ் தன் வேதத்தில் குறிப்பிட்டுள்ள (‘லிஆன்’ எனும்) சாப அழைப்புப் பிரமாணம் செய்யும்படி கட்டளையிட்டார்கள்.4

அவ்வாறே, தம் மனைவிமீது (குற்றம் சாட்டி) உவைமிர் (ரலி) அவர்கள் ‘லிஆன்’ செய்தார்கள். பிறகு ‘‘அல்லாஹ்வின் தூதரே! நான் இவளை (மணவிலக்குச் செய்யாமல் என் மனைவியாகவே) வைத்திருந்தால், இவளுக்கு அநீதி இழைத்தவனாகிவிடுவேன்” என்று கூறிவிட்டு, அவளை மணவிலக்குச் செய்துவிட்டார். இந்த வழிமுறையே அவர்களுக்குப்பின் ‘லிஆன்’ செய்யும் கணவன் மனைவியருக்கு முன்மாதிரியாகி விட்டது.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘கவனியுங்கள்! கரு நிறமும் கன்னங்கரிய கருவிழியும், பெருத்த புட்டங்களும், தடித்த கால்களும் உடைய பிள்ளையை இவள் பெற்றெடுத்தால், உவைமிர் அவளைப் பற்றி உண்மை பேசியதாகவே நான் கருதுகிறேன். அரணையைப் போல், சிவப்பான பிள்ளையை அவள் பெற்றெடுத்தால், உவைமிர் அவளைப் பற்றிப் பொய் பேசியதாகவே நான் கருதுவேன்” என்று சொன்னார்கள்.

பின்னர் உவைமிர் சொன்னதை மெய்ப்பிக்கும் விதத்தில் அவள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வர்ணித்த தோற்றத்திலேயே (கருநிறமும், கன்னங்கரிய கருவிழியும் தடித்த கால்களும் உடைய) பிள்ளையைப் பெற்றெடுத்தாள். இதனால் அக்குழந்தை தன் தாயுடன் இணைத்தே (‘இன்னவளின் மகன்’ என்று) அழைக்கப்படலாயிற்று.

அத்தியாயம் : 65
4746. حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ دَاوُدَ أَبُو الرَّبِيعِ، حَدَّثَنَا فُلَيْحٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، أَنَّ رَجُلاً، أَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ رَجُلاً رَأَى مَعَ امْرَأَتِهِ رَجُلاً أَيَقْتُلُهُ فَتَقْتُلُونَهُ أَمْ كَيْفَ يَفْعَلُ فَأَنْزَلَ اللَّهُ فِيهِمَا مَا ذُكِرَ فِي الْقُرْآنِ مِنَ التَّلاَعُنِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " قَدْ قُضِيَ فِيكَ وَفِي امْرَأَتِكَ ". قَالَ فَتَلاَعَنَا، وَأَنَا شَاهِدٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَفَارَقَهَا فَكَانَتْ سُنَّةً أَنْ يُفَرَّقَ بَيْنَ الْمُتَلاَعِنَيْنِ وَكَانَتْ حَامِلاً، فَأَنْكَرَ حَمْلَهَا وَكَانَ ابْنُهَا يُدْعَى إِلَيْهَا، ثُمَّ جَرَتِ السُّنَّةُ فِي الْمِيرَاثِ أَنْ يَرِثَهَا، وَتَرِثَ مِنْهُ مَا فَرَضَ اللَّهُ لَهَا.
பாடம் : 2 மேலும், ஐந்தாவது தடவை (தன்னுடைய குற்றச்சாட்டில்) தான் பொய்யனாக இருந்தால் ‘அல்லாஹ்வின் சாபம் தன்மீது உண்டாகட்டும்!’ என்று கூற வேண்டும் (எனும் 24:7ஆவது இறைவசனம்)
4746. சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! தன் மனைவியுடன் வேறோர் ஆடவனைக் கண்ட ஒரு மனிதன் அவனைக் கொன்றுவிடலாமா? (அப்படிக் கொன்றுவிட்டால், பழிக்குப்பழியாக) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அப்போது அல்லாஹ், அந்தக் கணவன் மனைவி தொடர்பாக குர்ஆனில் தான் கூறியுள்ள ‘லிஆன்’ எனும் சாப அழைப்புப் பிரமாணச் சட்டத்தை அருளினான்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அம்மனிதரிடம், ‘‘உமது விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் தீர்ப்பளிக்கப்பட்டுவிட்டது” என்று சொன்னார்கள். பிறகு அந்த (கணவன், மனைவி) இருவரும் ‘லிஆன்’ செய்தார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அந்த மனிதர் தம் மனைவியிடமிருந்து பிரிந்துவிட்டார். (அன்றிலிருந்து) அந்த நிகழ்ச்சியே ‘லிஆன்’ செய்யும் கணவன் மனைவியரைப் பிரித்துவைப்பதற்கு முன்மாதிரியாகிவிட்டது.

அப்பெண் கருவுற்றிருந்தாள். அவளுடைய கணவர் அக்கருவை (‘தனக்குரியது’ என) ஏற்க மறுத்தார். (பின்னர் அவளுக்குப் பிறந்த) அவளுடைய மகன் அவளுடன் இணைத்தே (இன்னவளின் மகன்) என்று அழைக்கப்பட்டுவந்தான். பிறகு அவன் அவளிடமிருந்தும், அவள் அவனிடமிருந்தும் அல்லாஹ் ஏற்படுத்திய பங்கினைப் பெறுகின்ற வாரிசுரிமைச்சட்டம் நடைமுறைக்கு வந்தது.

அத்தியாயம் : 65