4176. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ بَزِيعٍ، حَدَّثَنَا شَاذَانُ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ سَأَلْتُ عَائِذَ بْنَ عَمْرٍو ـ رضى الله عنه ـ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ هَلْ يُنْقَضُ الْوِتْرُ قَالَ إِذَا أَوْتَرْتَ مِنْ أَوَّلِهِ، فَلاَ تُوتِرْ مِنْ آخِرِهِ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4176. அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான், நபித்தோழர்களில் ஒருவரும், அந்த மரத்தின(டியில் “பைஅத்துர் ரிள்வான்' உடன்படிக்கை செய்தவ)ர்களில் ஒருவருமான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்களிடம், “வித்ர் தொழுகை உடைக்கப்படுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆரம்பத்திலேயே நீ வித்ர் தொழுதிருந்தால் இறுதியில் நீ வித்ர் தொழ வேண்டாம்” என்று பதிலளித்தார்கள்.238
அத்தியாயம் : 64
4176. அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான், நபித்தோழர்களில் ஒருவரும், அந்த மரத்தின(டியில் “பைஅத்துர் ரிள்வான்' உடன்படிக்கை செய்தவ)ர்களில் ஒருவருமான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்களிடம், “வித்ர் தொழுகை உடைக்கப்படுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆரம்பத்திலேயே நீ வித்ர் தொழுதிருந்தால் இறுதியில் நீ வித்ர் தொழ வேண்டாம்” என்று பதிலளித்தார்கள்.238
அத்தியாயம் : 64
4177. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَسِيرُ فِي بَعْضِ أَسْفَارِهِ، وَعُمَرُ بْنُ الْخَطَّابِ يَسِيرُ مَعَهُ لَيْلاً، فَسَأَلَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ عَنْ شَىْءٍ فَلَمْ يُجِبْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ سَأَلَهُ فَلَمْ يُجِبْهُ، ثُمَّ سَأَلَهُ فَلَمْ يُجِبْهُ وَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ثَكِلَتْكَ أُمُّكَ يَا عُمَرُ، نَزَرْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَ مَرَّاتٍ، كُلُّ ذَلِكَ لاَ يُجِيبُكَ. قَالَ عُمَرُ فَحَرَّكْتُ بَعِيرِي ثُمَّ تَقَدَّمْتُ أَمَامَ الْمُسْلِمِينَ، وَخَشِيتُ أَنْ يَنْزِلَ فِيَّ قُرْآنٌ، فَمَا نَشِبْتُ أَنْ سَمِعْتُ صَارِخًا يَصْرُخُ بِي ـ قَالَ ـ فَقُلْتُ لَقَدْ خَشِيتُ أَنْ يَكُونَ نَزَلَ فِيَّ قُرْآنٌ. وَجِئْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ "" لَقَدْ أُنْزِلَتْ عَلَىَّ اللَّيْلَةَ سُورَةٌ لَهِيَ أَحَبُّ إِلَىَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ، ثُمَّ قَرَأَ {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا}.""
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4177. (உமர் (ரலி) அவர்களால் விடுதலைசெய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமை) அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஓர் இரவில் பயணம் செய்து கொண்டி ருந்தார்கள்.239 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் நபியவர்களுடன் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. மீண்டும் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபிகளார் பதிலளிக்கவில்லை. பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை.
“உமரே! உன்னை உன் தாய் இழக்கட்டும். மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்குப் பதிலளிக்க வில்லையே” (என்று தம்மைத்தாமே) உமர் (ரலி) அவர்கள் (கடிந்து) கூறினார்கள்.
மேலும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதற்குப் பிறகு நான் எனது ஒட்டகத்தைச் செலுத்தி முஸ்óம் களுக்கு முன்னால் வந்து சேர்ந்தேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இப்படி நான் நடந்துகொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) அருளப்பெற்றுவிடுமோ என்று அஞ்சினேன். சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் அழைப்பதைக் கேட்டேன். (நான் நினைத்ததைப் போன்றே) என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) அருளப்பெற்றிருக்கும் என அஞ்சினேன் என்று சொல்லிக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன்.
அப்போது அவர்கள், “இந்த இரவு எனக்கு ஒரு (குர்ஆன்) அத்தியாயம் அருளப்பெற்றுள்ளது. சூரியன் எதன் மீது உதயமாகிறதோ அ(ந்த உலகத்)தைவிட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும்” என்று கூறினார்கள். பிறகு, “உங்களுக்கு நாம் வெளிப்படையானதொரு வெற்றியை அளித்துள்ளோம்” என்று (தொடங்கும் - 48:1ஆம் வசனத்தை) ஓதினார்கள்.
அத்தியாயம் : 64
4177. (உமர் (ரலி) அவர்களால் விடுதலைசெய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமை) அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஓர் இரவில் பயணம் செய்து கொண்டி ருந்தார்கள்.239 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் நபியவர்களுடன் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. மீண்டும் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபிகளார் பதிலளிக்கவில்லை. பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை.
“உமரே! உன்னை உன் தாய் இழக்கட்டும். மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்குப் பதிலளிக்க வில்லையே” (என்று தம்மைத்தாமே) உமர் (ரலி) அவர்கள் (கடிந்து) கூறினார்கள்.
மேலும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதற்குப் பிறகு நான் எனது ஒட்டகத்தைச் செலுத்தி முஸ்óம் களுக்கு முன்னால் வந்து சேர்ந்தேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இப்படி நான் நடந்துகொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) அருளப்பெற்றுவிடுமோ என்று அஞ்சினேன். சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் அழைப்பதைக் கேட்டேன். (நான் நினைத்ததைப் போன்றே) என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) அருளப்பெற்றிருக்கும் என அஞ்சினேன் என்று சொல்லிக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன்.
அப்போது அவர்கள், “இந்த இரவு எனக்கு ஒரு (குர்ஆன்) அத்தியாயம் அருளப்பெற்றுள்ளது. சூரியன் எதன் மீது உதயமாகிறதோ அ(ந்த உலகத்)தைவிட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும்” என்று கூறினார்கள். பிறகு, “உங்களுக்கு நாம் வெளிப்படையானதொரு வெற்றியை அளித்துள்ளோம்” என்று (தொடங்கும் - 48:1ஆம் வசனத்தை) ஓதினார்கள்.
அத்தியாயம் : 64
4178. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ، حِينَ حَدَّثَ هَذَا الْحَدِيثَ،، حَفِظْتُ بَعْضَهُ، وَثَبَّتَنِي مَعْمَرٌ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، وَمَرْوَانَ بْنِ الْحَكَمِ، يَزِيدُ أَحَدُهُمَا عَلَى صَاحِبِهِ قَالاَ خَرَجَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَامَ الْحُدَيْبِيَةِ فِي بِضْعَ عَشْرَةَ مِائَةً مِنْ أَصْحَابِهِ، فَلَمَّا أَتَى ذَا الْحُلَيْفَةِ قَلَّدَ الْهَدْىَ، وَأَشْعَرَهُ، وَأَحْرَمَ مِنْهَا بِعُمْرَةٍ، وَبَعَثَ عَيْنًا لَهُ مِنْ خُزَاعَةَ، وَسَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى كَانَ بِغَدِيرِ الأَشْطَاطِ، أَتَاهُ عَيْنُهُ قَالَ إِنَّ قُرَيْشًا جَمَعُوا لَكَ جُمُوعًا، وَقَدْ جَمَعُوا لَكَ الأَحَابِيشَ، وَهُمْ مُقَاتِلُوكَ وَصَادُّوكَ عَنِ الْبَيْتِ وَمَانِعُوكَ. فَقَالَ " أَشِيرُوا أَيُّهَا النَّاسُ عَلَىَّ، أَتَرَوْنَ أَنْ أَمِيلَ إِلَى عِيَالِهِمْ وَذَرَارِيِّ هَؤُلاَءِ الَّذِينَ يُرِيدُونَ أَنْ يَصُدُّونَا عَنِ الْبَيْتِ، فَإِنْ يَأْتُونَا كَانَ اللَّهُ عَزَّ وَجَلَّ قَدْ قَطَعَ عَيْنًا مِنَ الْمُشْرِكِينَ، وَإِلاَّ تَرَكْنَاهُمْ مَحْرُوبِينَ ". قَالَ أَبُو بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ، خَرَجْتَ عَامِدًا لِهَذَا الْبَيْتِ، لاَ تُرِيدُ قَتْلَ أَحَدٍ وَلاَ حَرْبَ أَحَدٍ، فَتَوَجَّهْ لَهُ، فَمَنْ صَدَّنَا عَنْهُ قَاتَلْنَاهُ. قَالَ " امْضُوا عَلَى اسْمِ اللَّهِ ".
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4178. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் அல்ஹகம் ஆகியஇருவரும்-ஒருவர் மற்றவரைவிடக் கூடுதலாகக்- கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் “ஹுதைபியா' ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு துல்ஹுலைஃபாவுக்கு வந்ததும் குர்பானி பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்கவிட்டு அதற்கு அடையாளமும் இட்டார்கள். பின்னர் அங்கிருந்து உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் “குஸாஆ' குலத்தாரில் (புஸ்ர் பின் சுஃப்யான் என்ற) ஒருவரை உளவாளியாக அனுப்பிவைத்தார்கள்.
“ஃகதீருல் அஷ்தாத்' எனும் இடத்தில் நபியவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களின் உளவாளி வந்து, “குறைஷியர் உங்களைத் தாக்குவதற்காகப் பெரும் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்; பல்வேறு குலத்தாரை (ஓரிடத்தில்) ஒன்றுதிரட்டி வைத்துள்ளனர். அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் (கஅபாவிற்குச்) செல்ல(வோ, மக்காவிற்குள் நுழையவோ) விடாமல் தடுப்பார்கள்” என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களே! இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் நம்மைத் தடுக்க நினைக்கும் இவர்களின் குடும்பத்தாரிடமும் சந்ததி களிடமும் நான் (போர் தொடுக்கச்) செல்ல வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்களா? நம்மிடம் அவர்கள் (போர் புரிய) வந்தால், (அதற்கு நாம் பொறுப்பல்ல. நாம் அனுப்பி வைத்த) உளவாளியை(யும்) அந்த இணைவைப்பாளர்களுக்குத் தெரியாமல் அல்லாஹ் ஆக்கிவிட்டான்.240 அவ்வாறு அவர்கள் வராவிட்டால் அவர்களை நாம் இழப்புக்குள்ளாக்கிவிட்டுச் செல்வோம்.” என்று கூறினார்கள்.
(அப்போது) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்த இறையில்லத்தை நாடித்தானே நீங்கள் புறப்பட்டு வந்தீர்கள். யாரையும் கொல்லவோ எவரிடத்திலும் போரிடவோ நீங்கள் வரவில்லையே. எனவே, இறையில்லத்தை நோக்கிச் செல்லுங்கள். இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் நம்மை எவன் தடுக்கின் றானோ அவனுடன் நாம் போரிடுவோம்” என்று (ஆலோசனை) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் பெயரால் பயணத்தைத் தொடருங்கள்” என்று கூறினார்கள்.241
4180, 4181 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) மர்வான் பின் அல் ஹகம் ஆகிய இருவரும் ஹுதைபியா (ஆண்டில் நடந்த)”உம்ரா' (நிகழ்ச்சி) குறித்துக் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா தினத்தன்று (குறைஷியரின் தலைவரான) சுஹைல் பின் அம்ரிடம் ஒரு (குறிப்பிட்ட) கால வரம்பிட்டுச் சமாதான ஒப்பந்தம் (செய்துகொள்வதாகப் பத்திரம்) எழுதியபோது, சுஹைல் பின் அம்ர் (பின்வரும்) சில நிபந்தனைகளையும் விதித்தார்:
எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் திருப்பி அனுப்பியே ஆக வேண்டும்; அவரைவிட்டு நீங்கள் ஒதுங்கிவிட வேண்டும். இந்த நிபந்தனைகள்மீதே தவிர (வேறெதன் மீதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்ய சுஹைல் மறுத்தார். (ஆனால், தங்களுக்குப் பாதகமான) இதை இறைநம்பிக்கை யாளர்கள் வெறுத்தார்கள். மேலும், (இதற்குச் சம்மதிக்கச்) சிரமப்பட்டார்கள். அதுபற்றி (வியந்து) பேசவும் செய்தார்கள்.
சுஹைல் இந்த நிபந்தனைகள்மீதே தவிர (வேறெதன் மீதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்ய மறுத்துவிட்டபோது (அந்த நிபந்தனை களை ஏற்று) அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒப்பந்தப் பத்திரத்தை) எழுதினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மிடம் வந்து சேர்ந்த) சுஹைலின் மகன் அபூஜந்தலை அன்றைய தினமே அவருடைய தந்தை சுஹைல் பின் அம்ரிடம் திரும்ப ஒப்படைத்தார்கள்.
மேலும், அந்த (ஒப்பந்த)க் காலத்தில் தம்மிடம் வந்த எந்த ஆண் மகனையும் -அவர் முஸ்லிமாக இருந்தாலும்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள். (அப்போது) இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்தவர்களாக வந்தனர். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் புறப்பட்டு (ஹிஜ்ரத் செய்து) வந்தவர்களில் உக்பா பின் அபீமுஐத்தின் மகள் உம்மு குல்ஸூமும் இருந்தார்.
அவர் இளம் பெண்ணாக இருந்தார். அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பிவிட வேண்டுமெனக் கோரியபடி அவர்களின் குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது, இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் விஷயத்தில் தனது (60:10ஆம்) வசனத்தை அல்லாஹ் அருளினான்.242
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 64
4178. மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), மர்வான் பின் அல்ஹகம் ஆகியஇருவரும்-ஒருவர் மற்றவரைவிடக் கூடுதலாகக்- கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் “ஹுதைபியா' ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு துல்ஹுலைஃபாவுக்கு வந்ததும் குர்பானி பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்கவிட்டு அதற்கு அடையாளமும் இட்டார்கள். பின்னர் அங்கிருந்து உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் “குஸாஆ' குலத்தாரில் (புஸ்ர் பின் சுஃப்யான் என்ற) ஒருவரை உளவாளியாக அனுப்பிவைத்தார்கள்.
“ஃகதீருல் அஷ்தாத்' எனும் இடத்தில் நபியவர்கள் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களின் உளவாளி வந்து, “குறைஷியர் உங்களைத் தாக்குவதற்காகப் பெரும் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்; பல்வேறு குலத்தாரை (ஓரிடத்தில்) ஒன்றுதிரட்டி வைத்துள்ளனர். அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் (கஅபாவிற்குச்) செல்ல(வோ, மக்காவிற்குள் நுழையவோ) விடாமல் தடுப்பார்கள்” என்று கூறினார்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “மக்களே! இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் நம்மைத் தடுக்க நினைக்கும் இவர்களின் குடும்பத்தாரிடமும் சந்ததி களிடமும் நான் (போர் தொடுக்கச்) செல்ல வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்களா? நம்மிடம் அவர்கள் (போர் புரிய) வந்தால், (அதற்கு நாம் பொறுப்பல்ல. நாம் அனுப்பி வைத்த) உளவாளியை(யும்) அந்த இணைவைப்பாளர்களுக்குத் தெரியாமல் அல்லாஹ் ஆக்கிவிட்டான்.240 அவ்வாறு அவர்கள் வராவிட்டால் அவர்களை நாம் இழப்புக்குள்ளாக்கிவிட்டுச் செல்வோம்.” என்று கூறினார்கள்.
(அப்போது) அபூபக்ர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! இந்த இறையில்லத்தை நாடித்தானே நீங்கள் புறப்பட்டு வந்தீர்கள். யாரையும் கொல்லவோ எவரிடத்திலும் போரிடவோ நீங்கள் வரவில்லையே. எனவே, இறையில்லத்தை நோக்கிச் செல்லுங்கள். இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் நம்மை எவன் தடுக்கின் றானோ அவனுடன் நாம் போரிடுவோம்” என்று (ஆலோசனை) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வின் பெயரால் பயணத்தைத் தொடருங்கள்” என்று கூறினார்கள்.241
4180, 4181 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) மர்வான் பின் அல் ஹகம் ஆகிய இருவரும் ஹுதைபியா (ஆண்டில் நடந்த)”உம்ரா' (நிகழ்ச்சி) குறித்துக் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா தினத்தன்று (குறைஷியரின் தலைவரான) சுஹைல் பின் அம்ரிடம் ஒரு (குறிப்பிட்ட) கால வரம்பிட்டுச் சமாதான ஒப்பந்தம் (செய்துகொள்வதாகப் பத்திரம்) எழுதியபோது, சுஹைல் பின் அம்ர் (பின்வரும்) சில நிபந்தனைகளையும் விதித்தார்:
எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் திருப்பி அனுப்பியே ஆக வேண்டும்; அவரைவிட்டு நீங்கள் ஒதுங்கிவிட வேண்டும். இந்த நிபந்தனைகள்மீதே தவிர (வேறெதன் மீதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்ய சுஹைல் மறுத்தார். (ஆனால், தங்களுக்குப் பாதகமான) இதை இறைநம்பிக்கை யாளர்கள் வெறுத்தார்கள். மேலும், (இதற்குச் சம்மதிக்கச்) சிரமப்பட்டார்கள். அதுபற்றி (வியந்து) பேசவும் செய்தார்கள்.
சுஹைல் இந்த நிபந்தனைகள்மீதே தவிர (வேறெதன் மீதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்ய மறுத்துவிட்டபோது (அந்த நிபந்தனை களை ஏற்று) அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒப்பந்தப் பத்திரத்தை) எழுதினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மிடம் வந்து சேர்ந்த) சுஹைலின் மகன் அபூஜந்தலை அன்றைய தினமே அவருடைய தந்தை சுஹைல் பின் அம்ரிடம் திரும்ப ஒப்படைத்தார்கள்.
மேலும், அந்த (ஒப்பந்த)க் காலத்தில் தம்மிடம் வந்த எந்த ஆண் மகனையும் -அவர் முஸ்லிமாக இருந்தாலும்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள். (அப்போது) இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்தவர்களாக வந்தனர். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் புறப்பட்டு (ஹிஜ்ரத் செய்து) வந்தவர்களில் உக்பா பின் அபீமுஐத்தின் மகள் உம்மு குல்ஸூமும் இருந்தார்.
அவர் இளம் பெண்ணாக இருந்தார். அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பிவிட வேண்டுமெனக் கோரியபடி அவர்களின் குடும்பத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது, இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் விஷயத்தில் தனது (60:10ஆம்) வசனத்தை அல்லாஹ் அருளினான்.242
இதை உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 64
4182. قَالَ ابْنُ شِهَابٍ وَأَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَمْتَحِنُ مَنْ هَاجَرَ مِنَ الْمُؤْمِنَاتِ بِهَذِهِ الآيَةِ {يَا أَيُّهَا النَّبِيُّ إِذَا جَاءَكَ الْمُؤْمِنَاتُ}. وَعَنْ عَمِّهِ قَالَ بَلَغَنَا حِينَ أَمَرَ اللَّهُ رَسُولَهُ صلى الله عليه وسلم أَنْ يَرُدَّ إِلَى الْمُشْرِكِينَ مَا أَنْفَقُوا عَلَى مَنْ هَاجَرَ مِنْ أَزْوَاجِهِمْ، وَبَلَغَنَا أَنَّ أَبَا بَصِيرٍ. فَذَكَرَهُ بِطُولِهِ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4182. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
“நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தால்...' என்று தொடங்கும் இந்த (60:12ஆம்) வசனத்தின் காரணத்தால் (தம்மிடம்) ஹிஜ்ரத் செய்து வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரிசோதித்துவந்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் தம் தந்தையின் சகோதரரிடமிருந்து பின்வருமாறு அறிவிக் கின்றார்கள்:
இணைவைப்பாளர்களின் மனைவியரில் எவர் ஹிஜ்ரத் செய்து வந்து (முஸ்லிம்களை மணமுடித்துக்கொண்டு) விட்டார்களோ அவர்களுக்காக அவர் களுடைய (இணை வைப்பாளர்களான) கணவன்மார்கள் (மணக்கொடையாகச்) செலவிட்டதை அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என அல்லாஹ் தன் தூதருக்குக் கட்டளையிட்டான். இதைக் கூறிவிட்டு, தொடர்ந்து அபூபஸீர் (ரலி) அவர்கள் தொடர்பான அறிவிப்பையும் முழுமையாகக் கூறினார்கள்.243
அத்தியாயம் : 64
4182. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
“நபியே! இறைநம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தால்...' என்று தொடங்கும் இந்த (60:12ஆம்) வசனத்தின் காரணத்தால் (தம்மிடம்) ஹிஜ்ரத் செய்து வந்த இறைநம்பிக்கை கொண்ட பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரிசோதித்துவந்தார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் தம் தந்தையின் சகோதரரிடமிருந்து பின்வருமாறு அறிவிக் கின்றார்கள்:
இணைவைப்பாளர்களின் மனைவியரில் எவர் ஹிஜ்ரத் செய்து வந்து (முஸ்லிம்களை மணமுடித்துக்கொண்டு) விட்டார்களோ அவர்களுக்காக அவர் களுடைய (இணை வைப்பாளர்களான) கணவன்மார்கள் (மணக்கொடையாகச்) செலவிட்டதை அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என அல்லாஹ் தன் தூதருக்குக் கட்டளையிட்டான். இதைக் கூறிவிட்டு, தொடர்ந்து அபூபஸீர் (ரலி) அவர்கள் தொடர்பான அறிவிப்பையும் முழுமையாகக் கூறினார்கள்.243
அத்தியாயம் : 64
4183. حَدَّثَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ خَرَجَ مُعْتَمِرًا فِي الْفِتْنَةِ فَقَالَ إِنْ صُدِدْتُ عَنِ الْبَيْتِ، صَنَعْنَا كَمَا صَنَعْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. فَأَهَلَّ بِعُمْرَةٍ مِنْ أَجْلِ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ أَهَلَّ بِعُمْرَةٍ عَامَ الْحُدَيْبِيَةِ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4183. (இப்னு உமர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அன்னாரின் முன்னாள் அடிமை) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், குழப்ப(ம் நிறைந்த கால)த்தில் உம்ராவிற்காக (மக்காவிற்குப்) புறப்பட்டுச் சென்றார்கள்.244 அப்போது அவர்கள், “நான் கஅபாவிற்குச் செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டால், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (சென்று தடுக்கப்பட்ட ஹுதைபியா சம்பவத்தின் போது) செய்ததைப் போன்று செய்வோம்” என்று கூறிவிட்டு, உம்ராவிற்காக (இஹ்ராம் கட்டி) “தல்பியா' சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா ஆண்டில் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியதே இதற்குக் காரணமாகும்.245
அத்தியாயம் : 64
4183. (இப்னு உமர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அன்னாரின் முன்னாள் அடிமை) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், குழப்ப(ம் நிறைந்த கால)த்தில் உம்ராவிற்காக (மக்காவிற்குப்) புறப்பட்டுச் சென்றார்கள்.244 அப்போது அவர்கள், “நான் கஅபாவிற்குச் செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டால், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (சென்று தடுக்கப்பட்ட ஹுதைபியா சம்பவத்தின் போது) செய்ததைப் போன்று செய்வோம்” என்று கூறிவிட்டு, உம்ராவிற்காக (இஹ்ராம் கட்டி) “தல்பியா' சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா ஆண்டில் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியதே இதற்குக் காரணமாகும்.245
அத்தியாயம் : 64
4184. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ أَهَلَّ وَقَالَ إِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَهُ لَفَعَلْتُ كَمَا فَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم حِينَ حَالَتْ كُفَّارُ قُرَيْشٍ بَيْنَهُ. وَتَلاَ {لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ}
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4184. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (குழப்பம் நிறைந்த காலத்தில் உம்ராவிற்காக) இஹ்ராம் கட்டியிருந்தார்கள். மேலும், (இறையில்லத்திற்குச் செல்ல முடியாமல்) நான் தடுக்கப்பட்டால், இறை யில்லம் செல்ல விடாமல் (ஹுதைபியா ஆண்டு) நபி (ஸல்) அவர்களை குறைஷியர் தடுத்தபோது நபி (ஸல்) அவர்கள் செய்தது போல நானும் செய்வேன்”246 என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது” (33:21) எனும் வசனத்தை ஓதினார்கள்.
அத்தியாயம் : 64
4184. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (குழப்பம் நிறைந்த காலத்தில் உம்ராவிற்காக) இஹ்ராம் கட்டியிருந்தார்கள். மேலும், (இறையில்லத்திற்குச் செல்ல முடியாமல்) நான் தடுக்கப்பட்டால், இறை யில்லம் செல்ல விடாமல் (ஹுதைபியா ஆண்டு) நபி (ஸல்) அவர்களை குறைஷியர் தடுத்தபோது நபி (ஸல்) அவர்கள் செய்தது போல நானும் செய்வேன்”246 என்று கூறிவிட்டு, “அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது” (33:21) எனும் வசனத்தை ஓதினார்கள்.
அத்தியாயம் : 64
4185. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، وَسَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، أَخْبَرَاهُ أَنَّهُمَا، كَلَّمَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ. وَحَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، أَنَّ بَعْضَ بَنِي عَبْدِ اللَّهِ، قَالَ لَهُ لَوْ أَقَمْتَ الْعَامَ، فَإِنِّي أَخَافُ أَنْ لاَ تَصِلَ إِلَى الْبَيْتِ. قَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ دُونَ الْبَيْتِ، فَنَحَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم هَدَايَاهُ، وَحَلَقَ وَقَصَّرَ أَصْحَابُهُ، وَقَالَ "" أُشْهِدُكُمْ أَنِّي أَوْجَبْتُ عُمْرَةً "". فَإِنْ خُلِّيَ بَيْنِي وَبَيْنَ الْبَيْتِ طُفْتُ، وَإِنْ حِيلَ بَيْنِي وَبَيْنَ الْبَيْتِ صَنَعْتُ كَمَا صَنَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَسَارَ سَاعَةً ثُمَّ قَالَ مَا أُرَى شَأْنَهُمَا إِلاَّ وَاحِدًا، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ حَجَّةً مَعَ عُمْرَتِي. فَطَافَ طَوَافًا وَاحِدًا وَسَعْيًا وَاحِدًا، حَتَّى حَلَّ مِنْهُمَا جَمِيعًا.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4185. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
(அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை ஹஜ்ஜாஜின் ராணுவம் முற்றுகையிட்டிருந்த குழப்பமான கால கட்டத்தில், உம்ராவிற்காக மக்காவிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்த) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் அவர்களின் புதல்வர்களில் ஒருவர்-உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ், சாலிம் பின் அப்தில்லாஹ் ஆகிய இருவரும் என ஓர் அறிவிப்பில் காணப்படுகிறது- “இந்த வருடம் தாங்கள் (உம்ராவிற்குச் செல்லாமல் இங்கேயே) தங்கிவிடலாமே. ஏனென்றால், நீங்கள் கஅபாவிற்குப் போய் சேரமாட்டீர்கள் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்.
அதற்கு அவர்கள், “நாங்கள் (ஹுதைபியா ஆண்டு) நபி (ஸல்) அவர்களுடன் (உம்ரா செய்வதற்காக மக்கா) புறப்பட்டுச் சென்றோம்; அப்போது, குறைஷி குல இறைமறுப்பாளர்கள் எங்களை கஅபாவுக்குச் செல்ல விடாமல் தடுத்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி பிராணிகளை அறுத்துவிட்டுத் (தமது) தலையை மழித்துக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் தலைமுடியைக் குறைத்துக்கொண்டனர். (அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்)” என்று கூறினார்கள்.
தொடர்ந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “நான் உம்ரா செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன். கஅபாவிற்குச் செல்ல எனக்கு வழி விடப்பட்டால் “தவாஃப்' செய்வேன். அங்கு செல்ல முடியாதவாறு நான் தடுக்கப்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தது போல நானும் செய்வேன்” என்று கூறினார்கள்.
பின்னர் சிறிது நேரம் நடந்துவிட்டு, “(இஹ்ராமிலிருந்து விடுபடுகிற விஷயத்தில் ஹஜ், உம்ரா ஆகிய) அந்த இரண்டையும் நான் ஒன்று போலவே கருதுகிறேன். நான் என் உம்ராவுடன் ஹஜ்ஜையும் (என்மீது) கடமையாக்கிக்கொண்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள். (பிறகு மக்காவிற்குப் போனபோது) ஒரேயொரு தவாஃபும் ஒரேயொரு சஃயும் செய்து (ஹஜ் உம்ரா ஆகிய) இரண்டிலிருந்தும் விடுபட்டார் கள்.247
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
4185. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
(அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களை ஹஜ்ஜாஜின் ராணுவம் முற்றுகையிட்டிருந்த குழப்பமான கால கட்டத்தில், உம்ராவிற்காக மக்காவிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்த) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் அவர்களின் புதல்வர்களில் ஒருவர்-உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ், சாலிம் பின் அப்தில்லாஹ் ஆகிய இருவரும் என ஓர் அறிவிப்பில் காணப்படுகிறது- “இந்த வருடம் தாங்கள் (உம்ராவிற்குச் செல்லாமல் இங்கேயே) தங்கிவிடலாமே. ஏனென்றால், நீங்கள் கஅபாவிற்குப் போய் சேரமாட்டீர்கள் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறினார்.
அதற்கு அவர்கள், “நாங்கள் (ஹுதைபியா ஆண்டு) நபி (ஸல்) அவர்களுடன் (உம்ரா செய்வதற்காக மக்கா) புறப்பட்டுச் சென்றோம்; அப்போது, குறைஷி குல இறைமறுப்பாளர்கள் எங்களை கஅபாவுக்குச் செல்ல விடாமல் தடுத்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் தமது குர்பானி பிராணிகளை அறுத்துவிட்டுத் (தமது) தலையை மழித்துக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் தலைமுடியைக் குறைத்துக்கொண்டனர். (அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்)” என்று கூறினார்கள்.
தொடர்ந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “நான் உம்ரா செய்ய முடிவு செய்துவிட்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன். கஅபாவிற்குச் செல்ல எனக்கு வழி விடப்பட்டால் “தவாஃப்' செய்வேன். அங்கு செல்ல முடியாதவாறு நான் தடுக்கப்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தது போல நானும் செய்வேன்” என்று கூறினார்கள்.
பின்னர் சிறிது நேரம் நடந்துவிட்டு, “(இஹ்ராமிலிருந்து விடுபடுகிற விஷயத்தில் ஹஜ், உம்ரா ஆகிய) அந்த இரண்டையும் நான் ஒன்று போலவே கருதுகிறேன். நான் என் உம்ராவுடன் ஹஜ்ஜையும் (என்மீது) கடமையாக்கிக்கொண்டேன் என்பதற்கு உங்களைச் சாட்சியாக்குகிறேன்” என்று கூறினார்கள். (பிறகு மக்காவிற்குப் போனபோது) ஒரேயொரு தவாஃபும் ஒரேயொரு சஃயும் செய்து (ஹஜ் உம்ரா ஆகிய) இரண்டிலிருந்தும் விடுபட்டார் கள்.247
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
4186. حَدَّثَنِي شُجَاعُ بْنُ الْوَلِيدِ، سَمِعَ النَّضْرَ بْنَ مُحَمَّدٍ، حَدَّثَنَا صَخْرٌ، عَنْ نَافِعٍ، قَالَ إِنَّ النَّاسَ يَتَحَدَّثُونَ أَنَّ ابْنَ عُمَرَ، أَسْلَمَ قَبْلَ عُمَرَ، وَلَيْسَ كَذَلِكَ، وَلَكِنْ عُمَرُ يَوْمَ الْحُدَيْبِيَةِ أَرْسَلَ عَبْدَ اللَّهِ إِلَى فَرَسٍ لَهُ عِنْدَ رَجُلٍ مِنَ الأَنْصَارِ يَأْتِي بِهِ لِيُقَاتِلَ عَلَيْهِ، وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُبَايِعُ عِنْدَ الشَّجَرَةِ، وَعُمَرُ لاَ يَدْرِي بِذَلِكَ، فَبَايَعَهُ عَبْدُ اللَّهِ، ثُمَّ ذَهَبَ إِلَى الْفَرَسِ، فَجَاءَ بِهِ إِلَى عُمَرَ، وَعُمَرُ يَسْتَلْئِمُ لِلْقِتَالِ، فَأَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يُبَايِعُ تَحْتَ الشَّجَرَةِ ـ قَالَ ـ فَانْطَلَقَ فَذَهَبَ مَعَهُ حَتَّى بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، فَهِيَ الَّتِي يَتَحَدَّثُ النَّاسُ أَنَّ ابْنَ عُمَرَ أَسْلَمَ قَبْلَ عُمَرَ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4186. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“உமர் (ரலி) அவர்களுக்கு முன்பே (அவர்களுடைய புதல்வரான) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் முஸ்óமாகிவிட்டார்கள்' என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். (நடந்தது) அவ்வாறல்ல. மாறாக, ஹுதைபியா தினத்தில் உமர் (ரலி) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரிடமிருந்த தமது குதிரையை அதன் மீது (அமர்ந்து) போர் புரிவதற்காக வாங்கி வருமாறு (தம் புதல்வர்) அப்துல்லாஹ்வை அனுப்பினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மரத்தின் கீழ் (தம் தோழர்களிடம்) உறுதிமொழி வாங்கிக்கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்களுக்கு இது தெரியவில்லை. அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தார்கள். பிறகு போய் அந்தக் குதிரையை வாங்கி, அதை உமர் (ரலி) அவர்களிடம் கொண்டுவந்தார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் போருக்காக (தமது உருக்குச் சட்டையை) அணிந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மரத்தின் கீழ் உறுதிமொழி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுடன் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தார்கள். இதைத்தான் மக்கள், “உமர் அவர்களுக்கு முன்பாகவே (அவர்களுடைய புதல்வர்) இப்னு உமர் முஸ்லிமாகிவிட்டார்' என்று பேசிக்கொள்கிறார்கள்.
அத்தியாயம் : 64
4186. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“உமர் (ரலி) அவர்களுக்கு முன்பே (அவர்களுடைய புதல்வரான) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் முஸ்óமாகிவிட்டார்கள்' என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். (நடந்தது) அவ்வாறல்ல. மாறாக, ஹுதைபியா தினத்தில் உமர் (ரலி) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரிடமிருந்த தமது குதிரையை அதன் மீது (அமர்ந்து) போர் புரிவதற்காக வாங்கி வருமாறு (தம் புதல்வர்) அப்துல்லாஹ்வை அனுப்பினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மரத்தின் கீழ் (தம் தோழர்களிடம்) உறுதிமொழி வாங்கிக்கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்களுக்கு இது தெரியவில்லை. அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தார்கள். பிறகு போய் அந்தக் குதிரையை வாங்கி, அதை உமர் (ரலி) அவர்களிடம் கொண்டுவந்தார்கள்.
அப்போது உமர் (ரலி) அவர்கள் போருக்காக (தமது உருக்குச் சட்டையை) அணிந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மரத்தின் கீழ் உறுதிமொழி வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுடன் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தார்கள். இதைத்தான் மக்கள், “உமர் அவர்களுக்கு முன்பாகவே (அவர்களுடைய புதல்வர்) இப்னு உமர் முஸ்லிமாகிவிட்டார்' என்று பேசிக்கொள்கிறார்கள்.
அத்தியாயம் : 64
4187. وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدٍ الْعُمَرِيُّ، أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّاسَ، كَانُوا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ الْحُدَيْبِيَةِ، تَفَرَّقُوا فِي ظِلاَلِ الشَّجَرِ، فَإِذَا النَّاسُ مُحْدِقُونَ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا عَبْدَ اللَّهِ، انْظُرْ مَا شَأْنُ النَّاسِ قَدْ أَحْدَقُوا بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَوَجَدَهُمْ يُبَايِعُونَ، فَبَايَعَ ثُمَّ رَجَعَ إِلَى عُمَرَ فَخَرَجَ فَبَايَعَ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4187. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா நாளில் நபி (ஸல்) அவர்களுடனிருந்த மக்கள், பல்வேறு மரங்களின் நிழலில் பிரிந்து சென்று (ஓய்வெடுத்துக்கொண்டு) இருந்தனர். அப்போது சிலர் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வரை நோக்கி), “அப்துல்லாஹ்வே! மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். என்ன விஷயம் என்று பார்” என்று கூறினார்கள். (அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் போய்ப் பார்த்தபோது அல்லாஹ்வின் தூதரிடம்) மக்கள் உறுதிமொழி கொடுத்துக்கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
உடனே அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்துவிட்டுப் பின்னர் உமர் (ரலி) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். (அவர்களிடம் விவரத்தைக் கூறவே) உடனே உமர் (ரலி) அவர்களும் புறப்பட்டுச் சென்று உறுதிமொழி அளித்தார்கள்.
அத்தியாயம் : 64
4187. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா நாளில் நபி (ஸல்) அவர்களுடனிருந்த மக்கள், பல்வேறு மரங்களின் நிழலில் பிரிந்து சென்று (ஓய்வெடுத்துக்கொண்டு) இருந்தனர். அப்போது சிலர் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வரை நோக்கி), “அப்துல்லாஹ்வே! மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். என்ன விஷயம் என்று பார்” என்று கூறினார்கள். (அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் போய்ப் பார்த்தபோது அல்லாஹ்வின் தூதரிடம்) மக்கள் உறுதிமொழி கொடுத்துக்கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
உடனே அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்துவிட்டுப் பின்னர் உமர் (ரலி) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். (அவர்களிடம் விவரத்தைக் கூறவே) உடனே உமர் (ரலி) அவர்களும் புறப்பட்டுச் சென்று உறுதிமொழி அளித்தார்கள்.
அத்தியாயம் : 64
4188. حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا يَعْلَى، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما ـ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم حِينَ اعْتَمَرَ فَطَافَ فَطُفْنَا مَعَهُ، وَصَلَّى وَصَلَّيْنَا مَعَهُ، وَسَعَى بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، فَكُنَّا نَسْتُرُهُ مِنْ أَهْلِ مَكَّةَ، لاَ يُصِيبُهُ أَحَدٌ بِشَىْءٍ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4188. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோது நாங்களும் அவர்களுடனிருந்தோம். (மக்காவில் நுழைந்ததும் புனித கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வந்தார்கள். நாங்களும் அவர்களுடன் சுற்றி (தவாஃப்) வந்தோம். அவர்கள் தொழுதார்கள். நாங்களும் அவர்களுடன் தொழுதோம். அவர்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையே தொங்கோட்டம் ஓடினார்கள். (நாங்களும் ஓடினோம்.)
அப்போது (இணைவைக்கும்) மக்காவாசிகளில் எவரும் அவர்களை எந்த விதத்திலும் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக அவர்களை மறைத்துக் கொண்டு (அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக) இருந்தோம்.248
அத்தியாயம் : 64
4188. அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்தபோது நாங்களும் அவர்களுடனிருந்தோம். (மக்காவில் நுழைந்ததும் புனித கஅபாவைச்) சுற்றி (தவாஃப்) வந்தார்கள். நாங்களும் அவர்களுடன் சுற்றி (தவாஃப்) வந்தோம். அவர்கள் தொழுதார்கள். நாங்களும் அவர்களுடன் தொழுதோம். அவர்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையே தொங்கோட்டம் ஓடினார்கள். (நாங்களும் ஓடினோம்.)
அப்போது (இணைவைக்கும்) மக்காவாசிகளில் எவரும் அவர்களை எந்த விதத்திலும் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக அவர்களை மறைத்துக் கொண்டு (அவர்களுக்குப் பாதுகாப்பு அரணாக) இருந்தோம்.248
அத்தியாயம் : 64
4189. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ، قَالَ سَمِعْتُ أَبَا حَصِينٍ، قَالَ قَالَ أَبُو وَائِلٍ لَمَّا قَدِمَ سَهْلُ بْنُ حُنَيْفٍ مِنْ صِفِّينَ أَتَيْنَاهُ نَسْتَخْبِرُهُ فَقَالَ اتَّهِمُوا الرَّأْىَ، فَلَقَدْ رَأَيْتُنِي يَوْمَ أَبِي جَنْدَلٍ وَلَوْ أَسْتَطِيعُ أَنْ أَرُدَّ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَمْرَهُ لَرَدَدْتُ، وَاللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، وَمَا وَضَعْنَا أَسْيَافَنَا عَلَى عَوَاتِقِنَا لأَمْرٍ يُفْظِعُنَا إِلاَّ أَسْهَلْنَ بِنَا إِلَى أَمْرٍ نَعْرِفُهُ قَبْلَ هَذَا الأَمْرِ، مَا نَسُدُّ مِنْهَا خُصْمًا إِلاَّ انْفَجَرَ عَلَيْنَا خُصْمٌ مَا نَدْرِي كَيْفَ نَأْتِي لَهُ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4189. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“ஸிஃப்பீன் சண்டையிலிருந்து சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் திரும்பி வந்தபோது நாங்கள் அவர்களிடம் (அவர் சண்டையில் ஈடுபாடு காட்டாதது பற்றி) செய்தி அறியச் சென்றோம். அப்போது அவர்கள், “(நான் இந்தப் போரில் ஈடுபாடு கொள்ளாதது குறித்து என்னைக் குற்றம் சாட்டாதீர்கள். உங்கள்) எண்ணத்தையே குற்றம் சாட்டுங்கள். அபூஜந்தல் (அபயம் தேடி வந்த ஹுதைபியா உடன்படிக்கையின்) நாளில், நபி (ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் ஏற்க மறுத்திருப்பேன் - அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் - (அத்தகைய மன நிலையில் அன்று நான் இருந்தேன். அன்று) எங்கள் தோள்களில் நாங்கள் எங்கள் வாட்களை (முடக்கி) வைத்துக்கொண்டது எங்களுக்குச் சிரமம் தரக்கூடிய விஷயமான போருக்கு அஞ்சியல்ல. நாங்கள் அறிந்த எளிய விஷயமான சமாதானத்தை அடைய (முடக்கப்பட்ட) அந்த வாட்களே வழி வகுத்தன.
ஆனால், இதுவெல்லாம் ஸிஃப்பீன் போருக்கு முன்னால்தான். (ஆனால், முஸ்லிம்களுக்கிடையிலேயே போர் மூண்டுவிட்ட இந்தச் சூழ்நிலையில்) நாங்கள் குழப்பத்தின் ஒரு மூலையை அடைக்கப்போனால் இன்னொரு மூலை பீறிட்டு வெடிக்கிறது. இதை எப்படிச் சமாளிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள்.249
அத்தியாயம் : 64
4189. அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“ஸிஃப்பீன் சண்டையிலிருந்து சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் திரும்பி வந்தபோது நாங்கள் அவர்களிடம் (அவர் சண்டையில் ஈடுபாடு காட்டாதது பற்றி) செய்தி அறியச் சென்றோம். அப்போது அவர்கள், “(நான் இந்தப் போரில் ஈடுபாடு கொள்ளாதது குறித்து என்னைக் குற்றம் சாட்டாதீர்கள். உங்கள்) எண்ணத்தையே குற்றம் சாட்டுங்கள். அபூஜந்தல் (அபயம் தேடி வந்த ஹுதைபியா உடன்படிக்கையின்) நாளில், நபி (ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் ஏற்க மறுத்திருப்பேன் - அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் - (அத்தகைய மன நிலையில் அன்று நான் இருந்தேன். அன்று) எங்கள் தோள்களில் நாங்கள் எங்கள் வாட்களை (முடக்கி) வைத்துக்கொண்டது எங்களுக்குச் சிரமம் தரக்கூடிய விஷயமான போருக்கு அஞ்சியல்ல. நாங்கள் அறிந்த எளிய விஷயமான சமாதானத்தை அடைய (முடக்கப்பட்ட) அந்த வாட்களே வழி வகுத்தன.
ஆனால், இதுவெல்லாம் ஸிஃப்பீன் போருக்கு முன்னால்தான். (ஆனால், முஸ்லிம்களுக்கிடையிலேயே போர் மூண்டுவிட்ட இந்தச் சூழ்நிலையில்) நாங்கள் குழப்பத்தின் ஒரு மூலையை அடைக்கப்போனால் இன்னொரு மூலை பீறிட்டு வெடிக்கிறது. இதை எப்படிச் சமாளிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று கூறினார்கள்.249
அத்தியாயம் : 64
4190. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُجَاهِدٍ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ أَتَى عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم زَمَنَ الْحُدَيْبِيَةِ، وَالْقَمْلُ يَتَنَاثَرُ عَلَى وَجْهِي فَقَالَ {أَيُؤْذِيكَ هَوَامُّ رَأْسِكَ}. قُلْتُ نَعَمْ. قَالَ "" فَاحْلِقْ، وَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ، أَوْ أَطْعِمْ سِتَّةَ مَسَاكِينَ، أَوِ انْسُكْ نَسِيكَةً "". قَالَ أَيُّوبُ لاَ أَدْرِي بِأَىِّ هَذَا بَدَأَ.
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4190. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா சமயத்தில் (உம்ராவுக்காக நான் “இஹ்ராம்' கட்டியிருந்தபோது) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (அப்போது என் தலையிலிருந்து) பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்துகொண்டிருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்று கூறினேன்.
அதற்கு, “உனது தலையை மழித்துக்கொள். பின்பு மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளி. அல்லது (உன்னால் முடிந்த) ஏதாவது ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துக் குர்பானி செய். (இதுவே இஹ்ராம் கட்டிய நிலையில் தலையை மழித்ததற்கான பரிகாரமாகும்)” என்று கூறினார்கள்.250
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த மூன்றில்) எதை முதலில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.
அத்தியாயம் : 64
4190. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹுதைபியா சமயத்தில் (உம்ராவுக்காக நான் “இஹ்ராம்' கட்டியிருந்தபோது) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (அப்போது என் தலையிலிருந்து) பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்துகொண்டிருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், “உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்று கூறினேன்.
அதற்கு, “உனது தலையை மழித்துக்கொள். பின்பு மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளி. அல்லது (உன்னால் முடிந்த) ஏதாவது ஒரு குர்பானிப் பிராணியை அறுத்துக் குர்பானி செய். (இதுவே இஹ்ராம் கட்டிய நிலையில் தலையை மழித்ததற்கான பரிகாரமாகும்)” என்று கூறினார்கள்.250
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
(இந்த மூன்றில்) எதை முதலில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.
அத்தியாயம் : 64
4191. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ هِشَامٍ أَبُو عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ أَبِي بِشْرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِالْحُدَيْبِيَةِ وَنَحْنُ مُحْرِمُونَ، وَقَدْ حَصَرَنَا الْمُشْرِكُونَ ـ قَالَ ـ وَكَانَتْ لِي وَفْرَةٌ فَجَعَلَتِ الْهَوَامُّ تَسَّاقَطُ عَلَى وَجْهِي، فَمَرَّ بِي النَّبِيُّ صلى الله عليه وسلم فَقَالَ "" أَيُؤْذِيكَ هَوَامُّ رَأْسِكَ "". قُلْتُ نَعَمْ. قَالَ وَأُنْزِلَتْ هَذِهِ الآيَةُ {فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ بِهِ أَذًى مِنْ رَأْسِهِ فَفِدْيَةٌ مِنْ صِيَامٍ أَوْ صَدَقَةٍ أَوْ نُسُكٍ}
பாடம் : 36
ஹுதைபியா போர்221
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
(நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4191. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் “இஹ்ராம்' கட்டியவர்களாக ஹுதைபியாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களை (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) இணைவைப்பாளர்கள் தடுத்துவிட்டிருந்தனர். எனக்கு (காது சோணைவரை) நிறைய தலைமுடி இருந்தது. (அதிலிருந்த) பேன்கள் என் முகத்தின் மீது (உதிர்ந்து) விழத் தொடங்கின. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்று கூறினேன்.
(அப்போதுதான், “இஹ்ராம்' கட்டியவர் “இஹ்ராம்' கட்டியிருக்கும்போது செய்யக் கூடாத காரியங்களைச் செய்துவிட்டால் அதற்கான பரிகாரம் என்ன என்பது தொடர்பாக), “உங்களில் யாரேனும் நோயாளியாக இருந்தால், அல்லது அவரது தலையில் துன்பம் தரும் (பேன், பொடுகு, காயம் அல்லது நோய்) ஏதும் இருந்தால் (அதன் காரணத்தால் இஹ்ராம் கட்டிய நிலையிலேயே அவர் தமது தலையை மழித்துக்கொள்ள நேரிட்டால் அதற்குப்) பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும்; அல்லது குர்பானி கொடுக்க வேண்டும்” எனும் இந்த (2:196ஆம்) வசனம் அருளப்பெற்றது.251
அத்தியாயம் : 64
4191. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் “இஹ்ராம்' கட்டியவர்களாக ஹுதைபியாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களை (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) இணைவைப்பாளர்கள் தடுத்துவிட்டிருந்தனர். எனக்கு (காது சோணைவரை) நிறைய தலைமுடி இருந்தது. (அதிலிருந்த) பேன்கள் என் முகத்தின் மீது (உதிர்ந்து) விழத் தொடங்கின. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்று கூறினேன்.
(அப்போதுதான், “இஹ்ராம்' கட்டியவர் “இஹ்ராம்' கட்டியிருக்கும்போது செய்யக் கூடாத காரியங்களைச் செய்துவிட்டால் அதற்கான பரிகாரம் என்ன என்பது தொடர்பாக), “உங்களில் யாரேனும் நோயாளியாக இருந்தால், அல்லது அவரது தலையில் துன்பம் தரும் (பேன், பொடுகு, காயம் அல்லது நோய்) ஏதும் இருந்தால் (அதன் காரணத்தால் இஹ்ராம் கட்டிய நிலையிலேயே அவர் தமது தலையை மழித்துக்கொள்ள நேரிட்டால் அதற்குப்) பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும்; அல்லது குர்பானி கொடுக்க வேண்டும்” எனும் இந்த (2:196ஆம்) வசனம் அருளப்பெற்றது.251
அத்தியாயம் : 64
4192. حَدَّثَنِي عَبْدُ الأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، أَنَّ أَنَسًا ـ رضى الله عنه ـ حَدَّثَهُمْ أَنَّ نَاسًا مِنْ عُكْلٍ وَعُرَيْنَةَ قَدِمُوا الْمَدِينَةَ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَتَكَلَّمُوا بِالإِسْلاَمِ فَقَالُوا يَا نَبِيَّ اللَّهِ إِنَّا كُنَّا أَهْلَ ضَرْعٍ، وَلَمْ نَكُنْ أَهْلَ رِيفٍ. وَاسْتَوْخَمُوا الْمَدِينَةَ، فَأَمَرَهُمْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِذَوْدٍ وَرَاعٍ، وَأَمَرَهُمْ أَنْ يَخْرُجُوا فِيهِ، فَيَشْرَبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا، فَانْطَلَقُوا حَتَّى إِذَا كَانُوا نَاحِيَةَ الْحَرَّةِ كَفَرُوا بَعْدَ إِسْلاَمِهِمْ، وَقَتَلُوا رَاعِيَ النَّبِيِّ صلى الله عليه وسلم، وَاسْتَاقُوا الذَّوْدَ، فَبَلَغَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَبَعَثَ الطَّلَبَ فِي آثَارِهِمْ فَأَمَرَ بِهِمْ فَسَمَرُوا أَعْيُنَهُمْ، وَقَطَعُوا أَيْدِيَهُمْ، وَتُرِكُوا فِي نَاحِيَةِ الْحَرَّةِ حَتَّى مَاتُوا عَلَى حَالِهِمْ. قَالَ قَتَادَةُ بَلَغَنَا أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم بَعْدَ ذَلِكَ كَانَ يَحُثُّ عَلَى الصَّدَقَةِ، وَيَنْهَى عَنِ الْمُثْلَةِ. وَقَالَ شُعْبَةُ وَأَبَانُ وَحَمَّادٌ عَنْ قَتَادَةَ مِنْ عُرَيْنَةَ. وَقَالَ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ وَأَيُّوبُ عَنْ أَبِي قِلاَبَةَ عَنْ أَنَسٍ قَدِمَ نَفَرٌ مِنْ عُكْلٍ.
பாடம் : 37
“உக்ல்' மற்றும் “உரைனா' குலத்தாரின் நிகழ்ச்சி252
4192. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
“உக்ல்' மற்றும் “உரைனா' குலத்தாரில் சிலர் மதீனாவிற்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம், தாங்கள் இஸ்லாத்தை ஏற்பதாகப் பேசினர். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பால் தரும் கால்நடைகள் வைத்திருப்பவர்கள். நாங்கள் விளைநிலங்கள் வைத்திருப்பவர்கள் அல்லர். (நாங்கள் பால் தரும் கால்நடை களைக் காடுகளில் மேய்த்து அதன் பாலை அருந்துபவர்களாய் இருந்தோம்)” என்று கூறினர். அவர்களுக்கு மதீனா(வின் தட்ப வெப்பம்) ஒத்துக்கொள்ளவில்லை.
எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பத்துக்குட்பட்ட) ஒட்டகங்களை யும் ஒரு மேய்ப்பரையும் அவர்களு(டைய உபயோகத்து)க்காக வழங்கும்படி உத்தரவிட்டார்கள். மேலும் “ஒட்டகங்கள் (மேயும்) இடத்திற்குச் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் பருகிக்கொள்ளுங்கள் (இன்ஷா அல்லாஹ் நிவாரணம் கிடைக்கும்)” என்று உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்கள் சென்றனர். (அவற்றின் பாலை அருந்தி நிவாரணமும் பெற்றனர்.)
அவர்கள் (கருங்கற்கள் நிறைந்த) “அல்ஹர்ரா' பகுதியில் இருந்தபோது இஸ்லாத்திலிருந்து விலகி இறை மறுப்பாளர்களாக (மதம்) மாறிவிட்டனர். மேலும், நபி (ஸல்) அவர்களின் கால்நடை மேய்ப்பாளர் (யசார்-ரலி) அவர்களைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களை (தங்களுடன்) ஓட்டிச் சென்றுவிட்டனர். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, (அவர்களைப் பிடித்து வர) அவர்களைத் தொடர்ந்து ஆளனுப்பினார்கள். (அவர்கள் பிடிபட்டு மதீனாவுக்குக் கொண்டுவரப்பட்டபோது) அவர்களுக்கு தண்டனை கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
(மக்கள்) அவர்களுடைய கண்களில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால் சூடு போட்டார்கள். அவர்களுடைய கை(கால்)கள் வெட்டப்பட்டு, (மதீனாவின் புறநகரான) “அல்ஹர்ரா' பகுதியில் அவர்கள் விடப்பட்டனர். அவர்கள் அந்த நிலையிலேயே மாண்டுபோயினர்.253
அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் (மக்களைத்) தர்மம் செய்யுமாறு தூண்டிக்கொண்டும் சித்திரவதை செய்ய வேண்டாமென தடுத்துக்கொண்டும் இருந்தார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் கத்தாதா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், (நபி (ஸல்) அவர்களிடம் வந்தவர்கள்) உரைனா குலத்தார் (மட்டுமே) என்று காணப்படுகிறது.
மற்றோர் அறிவிப்பில், “உக்ல் குலத்தாரில் சிலர் வந்தனர்” என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 64
4192. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
“உக்ல்' மற்றும் “உரைனா' குலத்தாரில் சிலர் மதீனாவிற்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம், தாங்கள் இஸ்லாத்தை ஏற்பதாகப் பேசினர். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பால் தரும் கால்நடைகள் வைத்திருப்பவர்கள். நாங்கள் விளைநிலங்கள் வைத்திருப்பவர்கள் அல்லர். (நாங்கள் பால் தரும் கால்நடை களைக் காடுகளில் மேய்த்து அதன் பாலை அருந்துபவர்களாய் இருந்தோம்)” என்று கூறினர். அவர்களுக்கு மதீனா(வின் தட்ப வெப்பம்) ஒத்துக்கொள்ளவில்லை.
எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பத்துக்குட்பட்ட) ஒட்டகங்களை யும் ஒரு மேய்ப்பரையும் அவர்களு(டைய உபயோகத்து)க்காக வழங்கும்படி உத்தரவிட்டார்கள். மேலும் “ஒட்டகங்கள் (மேயும்) இடத்திற்குச் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் சிறுநீரையும் பருகிக்கொள்ளுங்கள் (இன்ஷா அல்லாஹ் நிவாரணம் கிடைக்கும்)” என்று உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர்கள் சென்றனர். (அவற்றின் பாலை அருந்தி நிவாரணமும் பெற்றனர்.)
அவர்கள் (கருங்கற்கள் நிறைந்த) “அல்ஹர்ரா' பகுதியில் இருந்தபோது இஸ்லாத்திலிருந்து விலகி இறை மறுப்பாளர்களாக (மதம்) மாறிவிட்டனர். மேலும், நபி (ஸல்) அவர்களின் கால்நடை மேய்ப்பாளர் (யசார்-ரலி) அவர்களைக் கொலை செய்துவிட்டு ஒட்டகங்களை (தங்களுடன்) ஓட்டிச் சென்றுவிட்டனர். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது, (அவர்களைப் பிடித்து வர) அவர்களைத் தொடர்ந்து ஆளனுப்பினார்கள். (அவர்கள் பிடிபட்டு மதீனாவுக்குக் கொண்டுவரப்பட்டபோது) அவர்களுக்கு தண்டனை கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
(மக்கள்) அவர்களுடைய கண்களில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால் சூடு போட்டார்கள். அவர்களுடைய கை(கால்)கள் வெட்டப்பட்டு, (மதீனாவின் புறநகரான) “அல்ஹர்ரா' பகுதியில் அவர்கள் விடப்பட்டனர். அவர்கள் அந்த நிலையிலேயே மாண்டுபோயினர்.253
அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் (மக்களைத்) தர்மம் செய்யுமாறு தூண்டிக்கொண்டும் சித்திரவதை செய்ய வேண்டாமென தடுத்துக்கொண்டும் இருந்தார்கள்.
இந்த ஹதீஸ் ஆறு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் கத்தாதா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில், (நபி (ஸல்) அவர்களிடம் வந்தவர்கள்) உரைனா குலத்தார் (மட்டுமே) என்று காணப்படுகிறது.
மற்றோர் அறிவிப்பில், “உக்ல் குலத்தாரில் சிலர் வந்தனர்” என்று இடம் பெற்றுள்ளது.
அத்தியாயம் : 64
4193. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ أَبُو عُمَرَ الْحَوْضِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا أَيُّوبُ، وَالْحَجَّاجُ الصَّوَّافُ، قَالَ حَدَّثَنِي أَبُو رَجَاءٍ، مَوْلَى أَبِي قِلاَبَةَ وَكَانَ مَعَهُ بِالشَّأْمِ أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، اسْتَشَارَ النَّاسَ يَوْمًا قَالَ مَا تَقُولُونَ فِي هَذِهِ الْقَسَامَةِ فَقَالُوا حَقٌّ، قَضَى بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَقَضَتْ بِهَا الْخُلَفَاءُ، قَبْلَكَ. قَالَ وَأَبُو قِلاَبَةَ خَلْفَ سَرِيرِهِ فَقَالَ عَنْبَسَةُ بْنُ سَعِيدٍ فَأَيْنَ حَدِيثُ أَنَسٍ فِي الْعُرَنِيِّينَ قَالَ أَبُو قِلاَبَةَ إِيَّاىَ حَدَّثَهُ أَنَسُ بْنُ مَالِكٍ. قَالَ عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ عَنْ أَنَسٍ مِنْ عُرَيْنَةَ. وَقَالَ أَبُو قِلاَبَةَ عَنْ أَنَسٍ مِنْ عُكْلٍ. ذَكَرَ الْقِصَّةَ.
பாடம் : 37
“உக்ல்' மற்றும் “உரைனா' குலத்தாரின் நிகழ்ச்சி252
4193. (அபூகிலாபா (ரஹ்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அன்னாரின் முன்னாள் அடிமை) அபூரஜாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் உரிமையாளர் அபூகிலாபா அவர்களுடன் ஷாம் நாட்டில் இருந்தேன். (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஒருநாள் மக்களிடம், “இந்த “கசாமா' (சத்திய முறை) தொடர்பாக நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று ஆலோசனை கேட்டார்கள்.254
“அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உங்களுக்குமுன் (வாழ்ந்த) கலீஃபாக்களும் தீர்ப்பளித்த உண்மை (விதி)தான்” என்று மக்கள் பதிலளித்தனர். அபூகிலாபா (ரஹ்) அவர்கள், அப்போது உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் அரியணைக்குப் பின்னால் இருந்தார்கள். அப்போது அன்பசா பின் சயீத் (ரஹ்) அவர்கள், “உரைனா குலத்தார் பற்றிய அனஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ் எங்கே (போயிற்று)?” என்று கேட்டார்கள்.255
அப்போது அபூகிலாபா (ரஹ்) அவர்கள், “(உரைனா குலத்தார் பற்றி) எனக்கும் அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “உரைனா குலத்தாரில் சிலர்' என்று காணப்படுகிறது.
மற்றோர் அறிவிப்பில், “உக்ல் குலத் தாரில் சிலர்' (என்று கூறிவிட்டு) முழு நிகழ்ச்சியையும் கூறியுள்ளார்கள்.
அத்தியாயம் : 64
4193. (அபூகிலாபா (ரஹ்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அன்னாரின் முன்னாள் அடிமை) அபூரஜாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் என் உரிமையாளர் அபூகிலாபா அவர்களுடன் ஷாம் நாட்டில் இருந்தேன். (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஒருநாள் மக்களிடம், “இந்த “கசாமா' (சத்திய முறை) தொடர்பாக நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று ஆலோசனை கேட்டார்கள்.254
“அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உங்களுக்குமுன் (வாழ்ந்த) கலீஃபாக்களும் தீர்ப்பளித்த உண்மை (விதி)தான்” என்று மக்கள் பதிலளித்தனர். அபூகிலாபா (ரஹ்) அவர்கள், அப்போது உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் அரியணைக்குப் பின்னால் இருந்தார்கள். அப்போது அன்பசா பின் சயீத் (ரஹ்) அவர்கள், “உரைனா குலத்தார் பற்றிய அனஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ் எங்கே (போயிற்று)?” என்று கேட்டார்கள்.255
அப்போது அபூகிலாபா (ரஹ்) அவர்கள், “(உரைனா குலத்தார் பற்றி) எனக்கும் அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “உரைனா குலத்தாரில் சிலர்' என்று காணப்படுகிறது.
மற்றோர் அறிவிப்பில், “உக்ல் குலத் தாரில் சிலர்' (என்று கூறிவிட்டு) முழு நிகழ்ச்சியையும் கூறியுள்ளார்கள்.
அத்தியாயம் : 64
4194. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، قَالَ سَمِعْتُ سَلَمَةَ بْنَ الأَكْوَعِ، يَقُولُ خَرَجْتُ قَبْلَ أَنْ يُؤَذَّنَ، بِالأُولَى، وَكَانَتْ لِقَاحُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَرْعَى بِذِي قَرَدٍ ـ قَالَ ـ فَلَقِيَنِي غُلاَمٌ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فَقَالَ أُخِذَتْ لِقَاحُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قُلْتُ مَنْ أَخَذَهَا قَالَ غَطَفَانُ. قَالَ فَصَرَخْتُ ثَلاَثَ صَرَخَاتٍ ـ يَا صَبَاحَاهْ ـ قَالَ فَأَسْمَعْتُ مَا بَيْنَ لاَبَتَىِ الْمَدِينَةِ، ثُمَّ انْدَفَعْتُ عَلَى وَجْهِي حَتَّى أَدْرَكْتُهُمْ وَقَدْ أَخَذُوا يَسْتَقُونَ مِنَ الْمَاءِ، فَجَعَلْتُ أَرْمِيهِمْ بِنَبْلِي، وَكُنْتُ رَامِيًا، وَأَقُولُ أَنَا ابْنُ الأَكْوَعْ، الْيَوْمُ يَوْمُ الرُّضَّعْ. وَأَرْتَجِزُ حَتَّى اسْتَنْقَذْتُ اللِّقَاحَ مِنْهُمْ، وَاسْتَلَبْتُ مِنْهُمْ ثَلاَثِينَ بُرْدَةً، قَالَ وَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَالنَّاسُ فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ قَدْ حَمَيْتُ الْقَوْمَ الْمَاءَ وَهُمْ عِطَاشٌ، فَابْعَثْ إِلَيْهِمُ السَّاعَةَ. فَقَالَ "" يَا ابْنَ الأَكْوَعِ، مَلَكْتَ فَأَسْجِحْ "". قَالَ ثُمَّ رَجَعْنَا وَيُرْدِفُنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى نَاقَتِهِ حَتَّى دَخَلْنَا الْمَدِينَةَ.
பாடம் : 38
“தாத்துல் கரத்' போர்
அது, கைபருக்கு மூன்று (நாட்களு)க்கு முன்னால், நபி (ஸல்) அவர்களின் பால் தரும் ஒட்டகங்களை எதிரிகள் கடத்திச் சென்றபோது நடந்த போராகும்.256
4194. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
முதல் தொழுகை(யான ஃபஜ்ரு)க்கு அழைப்புக் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே நான் (மதீனாவிலிருந்து சிரியா வழியிலுள்ள ஃகாபாவை நோக்கிப்) புறப்பட்டேன். “தூ கரத்' எனுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்குரிய ஒர் அடிமை (வந்து) என்னைச் சந்தித்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பால் தரும் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப் பட்டுவிட்டன” என்று கூறினார். நான், “அவற்றை யார் பிடித்துச் சென்றார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “கத்ஃபான் குலத்தார்” என்று பதில் சொன்னார்.
உடனே நான் உரக்கச் சப்தமிட்டு, “யா ஸபாஹா! (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று மதீனாவின் இரு மலை களுக்கிடையிóருந்த அனைவருக்கும் கேட்கும்படி மும்முறை கத்தினேன். பிறகு முகத்தைத் திருப்பாமல் நேராக விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற ஒட்டகங்களைக்) கையில் பிடித்துக்கொண்டு நீர் புகட்டிக் கொண்டிருந்தனர்.
“அக்வஇன் மகன் நான்!இன்று அற்பர்கள் (அழியும்) நாள்”
என்று (பாடியபடி) கூறிக்கொண்டே அவர்கள்மீது அம்பெய்யத் தொடங்கினேன். நான் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தேன். மேலும், நான் ஈரசைச்சீர் பாடலை பாடிக்கொண்டே அவர்களிடமிருந்து (சில) ஒட்டகங்களை விடுவித்தேன். (அவர்களை நான் விரட்டிச் சென்றபோது) அவர்கள் விட்டுவிட்டுப் போன முப்பது சால்வைகளை நான் எடுத்துக்கொண்டேன்.
(அப்போது) நபி (ஸல்) அவர்களும் மக்களும் (அங்கு) வந்(து சேர்ந்த)னர். நான், “அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கூட்டத்தார் தாகமுடன் இருந்தபோதும் அவர்கள் தண்ணீர் குடிக்க விடாமல் நான் தடுத்துவிட்டேன். எனவே, (அவர்கள் ஓட்டிச்சென்ற மற்ற ஒட்டகங்களையும் விடுவிக்க) அவர்களை நோக்கி ஒரு படையை இப்போதே அனுப்புங்கள்” என்று கூறினேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “அக்வஉ உடைய மகனே! (அவர்களை) நீ தோற்கடித்துவிட்டாய். ஆகவே, மென்மை யாக நடந்துகொள்” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவிற்குத்) திரும்பி வந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவிற்குள் நுழையும்வரையில் என்னைத் தமக்குப் பின்னே தம் ஒட்டகத்தின் மீது அமர்த்திக் கொண்டார்கள்.257
அத்தியாயம் : 64
4194. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:
முதல் தொழுகை(யான ஃபஜ்ரு)க்கு அழைப்புக் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே நான் (மதீனாவிலிருந்து சிரியா வழியிலுள்ள ஃகாபாவை நோக்கிப்) புறப்பட்டேன். “தூ கரத்' எனுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருந்தன.
அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்குரிய ஒர் அடிமை (வந்து) என்னைச் சந்தித்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பால் தரும் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப் பட்டுவிட்டன” என்று கூறினார். நான், “அவற்றை யார் பிடித்துச் சென்றார்?” என்று கேட்டேன். அதற்கு அவர், “கத்ஃபான் குலத்தார்” என்று பதில் சொன்னார்.
உடனே நான் உரக்கச் சப்தமிட்டு, “யா ஸபாஹா! (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று மதீனாவின் இரு மலை களுக்கிடையிóருந்த அனைவருக்கும் கேட்கும்படி மும்முறை கத்தினேன். பிறகு முகத்தைத் திருப்பாமல் நேராக விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற ஒட்டகங்களைக்) கையில் பிடித்துக்கொண்டு நீர் புகட்டிக் கொண்டிருந்தனர்.
“அக்வஇன் மகன் நான்!இன்று அற்பர்கள் (அழியும்) நாள்”
என்று (பாடியபடி) கூறிக்கொண்டே அவர்கள்மீது அம்பெய்யத் தொடங்கினேன். நான் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தேன். மேலும், நான் ஈரசைச்சீர் பாடலை பாடிக்கொண்டே அவர்களிடமிருந்து (சில) ஒட்டகங்களை விடுவித்தேன். (அவர்களை நான் விரட்டிச் சென்றபோது) அவர்கள் விட்டுவிட்டுப் போன முப்பது சால்வைகளை நான் எடுத்துக்கொண்டேன்.
(அப்போது) நபி (ஸல்) அவர்களும் மக்களும் (அங்கு) வந்(து சேர்ந்த)னர். நான், “அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கூட்டத்தார் தாகமுடன் இருந்தபோதும் அவர்கள் தண்ணீர் குடிக்க விடாமல் நான் தடுத்துவிட்டேன். எனவே, (அவர்கள் ஓட்டிச்சென்ற மற்ற ஒட்டகங்களையும் விடுவிக்க) அவர்களை நோக்கி ஒரு படையை இப்போதே அனுப்புங்கள்” என்று கூறினேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், “அக்வஉ உடைய மகனே! (அவர்களை) நீ தோற்கடித்துவிட்டாய். ஆகவே, மென்மை யாக நடந்துகொள்” என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவிற்குத்) திரும்பி வந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவிற்குள் நுழையும்வரையில் என்னைத் தமக்குப் பின்னே தம் ஒட்டகத்தின் மீது அமர்த்திக் கொண்டார்கள்.257
அத்தியாயம் : 64
4195. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، أَنَّ سُوَيْدَ بْنَ النُّعْمَانِ، أَخْبَرَهُ أَنَّهُ، خَرَجَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَامَ خَيْبَرَ، حَتَّى إِذَا كُنَّا بِالصَّهْبَاءِ ـ وَهْىَ مِنْ أَدْنَى خَيْبَرَ ـ صَلَّى الْعَصْرَ، ثُمَّ دَعَا بِالأَزْوَادِ فَلَمْ يُؤْتَ إِلاَّ بِالسَّوِيقِ، فَأَمَرَ بِهِ فَثُرِّيَ، فَأَكَلَ وَأَكَلْنَا، ثُمَّ قَامَ إِلَى الْمَغْرِبِ، فَمَضْمَضَ وَمَضْمَضْنَا، ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ.
பாடம் : 39
கைபர் போர்258
4195. சுவைத் பின் அந்நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் நடந்த ஆண்டு, நபி (ஸல்) அவர்களுடன் நானும் புறப்பட்டேன். கைபருக்கு அருகிலுள்ள “ஸஹ்பா' என்ற இடத்தை அடைந்ததும் நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர், பயண உணவுகளைக் கொண்டு வரும்படி கூறினார்கள். அப்போது, மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டுவரப்படவில்லை. அதைக் குழைக்கும்படி கட்டளையிட்டார்கள். அது குழைக்கப்பட்டதும் அதை நபி (ஸல்) அவர்களும் நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் மஃக்ரிப் தொழுகைக்காகச் சென்றார்கள். அப்போது வாயை (மட்டும்) கொப்புளித்தார்கள். நாங்களும் வாய் கொப்புளித்தோம். பின்னர் (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே தொழுதார்கள்.259
அத்தியாயம் : 64
4195. சுவைத் பின் அந்நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
கைபர் போர் நடந்த ஆண்டு, நபி (ஸல்) அவர்களுடன் நானும் புறப்பட்டேன். கைபருக்கு அருகிலுள்ள “ஸஹ்பா' என்ற இடத்தை அடைந்ததும் நபி (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர், பயண உணவுகளைக் கொண்டு வரும்படி கூறினார்கள். அப்போது, மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டுவரப்படவில்லை. அதைக் குழைக்கும்படி கட்டளையிட்டார்கள். அது குழைக்கப்பட்டதும் அதை நபி (ஸல்) அவர்களும் நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் மஃக்ரிப் தொழுகைக்காகச் சென்றார்கள். அப்போது வாயை (மட்டும்) கொப்புளித்தார்கள். நாங்களும் வாய் கொப்புளித்தோம். பின்னர் (புதிதாக) அங்கத் தூய்மை செய்யாமலேயே தொழுதார்கள்.259
அத்தியாயம் : 64