4159. حَدَّثَنَا الْحَسَنُ بْنُ خَلَفٍ، قَالَ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِي بِشْرٍ، وَرْقَاءَ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى، عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَآهُ وَقَمْلُهُ يَسْقُطُ عَلَى وَجْهِهِ فَقَالَ "" أَيُؤْذِيكَ هَوَامُّكَ "". قَالَ نَعَمْ. فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يَحْلِقَ وَهْوَ بِالْحُدَيْبِيَةِ، لَمْ يُبَيِّنْ لَهُمْ أَنَّهُمْ يَحِلُّونَ بِهَا، وَهُمْ عَلَى طَمَعٍ أَنْ يَدْخُلُوا مَكَّةَ، فَأَنْزَلَ اللَّهُ الْفِدْيَةَ، فَأَمَرَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُطْعِمَ فَرَقًا بَيْنَ سِتَّةِ مَسَاكِينَ، أَوْ يُهْدِيَ شَاةً، أَوْ يَصُومَ ثَلاَثَةَ أَيَّامٍ.
பாடம் : 36 ஹுதைபியா போர்221 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4159. கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நான் ஹுதைபியா ஆண்டில் “உம்ரா'வுக்காக “இஹ்ராம்' கட்டியிருந்தபோது) என் முகத்தில் பேன்கள் விழுந்துகொண்டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது, “உம் (தலையிலுள்ள) பேன்கள் உமக்குத் துன்பம் தருகின்றனவா?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்றேன். அப்போது ஹுதைபியாவிலிருந்த நபி (ஸல்) அவர்கள் என் தலையை மழிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். மக்காவிற்குள் நுழைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்ததால் அவர்கள் ஹுதைபியாவிலேயே இஹ்ராமிóருந்து விடுபட வேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை.

அப்போது அல்லாஹ் (குற்றப்) பரிகாரம் சம்பந்தப்பட்ட (2:196ஆவது) வசனத்தை அருளினான். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஒரு “ஃபரக்' தானியத்தை ஆறு பேருக்கு வழங்க வேண்டும்; அல்லது ஓர் ஆட்டை குர்பானி செய்ய வேண்டும்; அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்” என்று எனக்குக் கட்டளையிட்டார்கள்.232


அத்தியாயம் : 64
4160. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ خَرَجْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ إِلَى السُّوقِ، فَلَحِقَتْ عُمَرَ امْرَأَةٌ شَابَّةٌ فَقَالَتْ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ هَلَكَ زَوْجِي وَتَرَكَ صِبْيَةً صِغَارًا، وَاللَّهِ مَا يُنْضِجُونَ كُرَاعًا، وَلاَ لَهُمْ زَرْعٌ وَلاَ ضَرْعٌ، وَخَشِيتُ أَنْ تَأْكُلَهُمُ الضَّبُعُ، وَأَنَا بِنْتُ خُفَافِ بْنِ إِيمَاءَ الْغِفَارِيِّ، وَقَدْ شَهِدَ أَبِي الْحُدَيْبِيَةَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم، فَوَقَفَ مَعَهَا عُمَرُ، وَلَمْ يَمْضِ، ثُمَّ قَالَ مَرْحَبًا بِنَسَبٍ قَرِيبٍ. ثُمَّ انْصَرَفَ إِلَى بَعِيرٍ ظَهِيرٍ كَانَ مَرْبُوطًا فِي الدَّارِ، فَحَمَلَ عَلَيْهِ غِرَارَتَيْنِ مَلأَهُمَا طَعَامًا، وَحَمَلَ بَيْنَهُمَا نَفَقَةً وَثِيَابًا، ثُمَّ نَاوَلَهَا بِخِطَامِهِ ثُمَّ قَالَ اقْتَادِيهِ فَلَنْ يَفْنَى حَتَّى يَأْتِيَكُمُ اللَّهُ بِخَيْرٍ. فَقَالَ رَجُلٌ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَكْثَرْتَ لَهَا. قَالَ عُمَرُ ثَكِلَتْكَ أُمُّكَ، وَاللَّهِ إِنِّي لأَرَى أَبَا هَذِهِ وَأَخَاهَا قَدْ حَاصَرَا حِصْنًا زَمَانًا، فَافْتَتَحَاهُ، ثُمَّ أَصْبَحْنَا نَسْتَفِيءُ سُهْمَانَهُمَا فِيهِ.
பாடம் : 36 ஹுதைபியா போர்221 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4160. (உமர் (ரலி) அவர் களால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள்அடிமை) அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

நான் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் கடைத்தெருவிற்குச் சென்றேன். அப்போது ஓர் இளம் பெண் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! சின்னஞ்சிறு சிறுவர்களை விட்டுவிட்டு என் கணவர் இறந்துபோய்விட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆட்டுக் கால் குளம்பைச் சமைப்பதற்குக்கூட அவர்களால் முடியாது. மேலும், எந்தவித விளைநிலமோ, (பால் கறப்பதற்குக்) கால்நடையோ அவர்களிடம் இல்லை. (பசியும்) பஞ்சமும் அவர்களை அழித்துவிடுமோ என்று நான் அஞ்சுகிறேன். நான் குஃபாஃப் பின் ஈமா அல்ஃகிஃபாரீ என்பவரின் மகளாவேன். என் தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுதைபியாவில் கலந்துகொண்டார்கள்” என்று கூறினார்.

அங்கிருந்து நகராமல் அப்பெண்ணுடனே நின்றிருந்த உமர் (ரலி) அவர்கள், “நெருங்கிய உறவே வருக!” என்று வாழ்த்துக் கூறினார்கள். பிறகு தம் வீட்டில் கட்டிவைக்கப்பட்டிருந்த திடகாத் திரமான ஒட்டகம் ஒன்றை நோக்கித் திரும்பிச் சென்றார்கள். பின்பு உணவு தானியங்களை இரு மூட்டைகளில் நிரப்பி, அந்த இரண்டையும் அந்த ஒட்டகத்தின் மீது ஏற்றிவைத்தார்கள். அந்த இரு மூட்டைகளுக்கிடையே (செலவுக்குத் தேவையான) காசுகளையும் ஆடைகளையும் ஏற்றினார்கள். பிறகு அதன் மூக்கணாங்கயிற்றைப் பிடித்துக் கொண்டு, “(தற்போது) இதை ஓட்டிச் செல். இது தீர்ந்துபோவதற்குள் அல்லாஹ் உங்களுக்கு நன்மையைத் தருவான்” என்று (அப்பெண்மணியிடம்) கூறினார்கள்.

அப்போது ஒருவர், “இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே! இந்தப் பெண்ணுக்கு அதிகமாகவே வழங்கி விட்டீர்கள்” என்று கூறினார். (அதற்கு) உமர் (ரலி) அவர்கள், “உன்னை உன் தாய் இழக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தப் பெண்ணின் தந்தையும் சகோதரரும், சிறிது காலம் ஒரு கோட்டையை முற்றுகையிட்டு அதை அவர்களிருவரும் வெற்றி கொண்டதை நான் பார்த்தேன். பிறகு அதில் (கிடைத்த போர்ச் செல்வத்தில்) நமக்குரிய பங்குகளைக் கோரலானோம்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 64
4162. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا شَبَابَةُ بْنُ سَوَّارٍ أَبُو عَمْرٍو الْفَزَارِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، قَالَ لَقَدْ رَأَيْتُ الشَّجَرَةَ، ثُمَّ أَتَيْتُهَا بَعْدُ فَلَمْ أَعْرِفْهَا. قَالَ مَحْمُودٌ ثُمَّ أُنْسِيتُهَا بَعْدُ.
பாடம் : 36 ஹுதைபியா போர்221 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4162. முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பைஅத்துர் ரிள்வான் எனும் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) அந்த மரத்தை நான் பார்த்திருந்தேன். பின்பு (ஒருமுறை) அங்கு நான் வந்தேன். அப்போது என்னால் அதை அறிய முடியவில்லை.

மஹ்மூத் பின் ஃகைலான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “பிறகு அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது” என முசய்யப் (பின் ஹஸ்ன்-ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.


அத்தியாயம் : 64
4163. حَدَّثَنَا مَحْمُودٌ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ طَارِقِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ انْطَلَقْتُ حَاجًّا فَمَرَرْتُ بِقَوْمٍ يُصَلُّونَ قُلْتُ مَا هَذَا الْمَسْجِدُ قَالُوا هَذِهِ الشَّجَرَةُ، حَيْثُ بَايَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بَيْعَةَ الرُّضْوَانِ. فَأَتَيْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ فَأَخْبَرْتُهُ فَقَالَ سَعِيدٌ حَدَّثَنِي أَبِي أَنَّهُ كَانَ فِيمَنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَحْتَ الشَّجَرَةِ، قَالَ فَلَمَّا خَرَجْنَا مِنَ الْعَامِ الْمُقْبِلِ نَسِينَاهَا، فَلَمْ نَقْدِرْ عَلَيْهَا. فَقَالَ سَعِيدٌ إِنَّ أَصْحَابَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم لَمْ يَعْلَمُوهَا وَعَلِمْتُمُوهَا أَنْتُمْ، فَأَنْتُمْ أَعْلَمُ.
பாடம் : 36 ஹுதைபியா போர்221 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4163. தாரிக் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஹஜ்ஜுக்குச் சென்றுகொண்டி ருந்தபோது, தொழுதுகொண்டிருந்த ஒரு கூட்டத்தாரைக் கடந்து சென்றேன். “இது என்ன தொழுமிடம்?” என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், “இதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “பைஅத்துர் ரிள்வான்' எனும் உறுதிப் பிரமாணம் வாங்கிய மரம் இருந்த இடம்” என்று கூறினர். பின்பு நான் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடம் வந்து இது பற்றித் தெரிவித்தேன்.

அப்போது அவர்கள், “அந்த மரத் தின் கீழ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தவர்களில் ஒருவரான என் தந்தை (முசய்யப் - ரலி) அவர்கள், “(உறுதிப் பிரமாணம் நடந்து முடிந்த) மறு ஆண்டு நாங்கள் அங்கு சென்றபோது அந்த மரத்தை நாங்கள் மறந்துவிட்டோம். எங்களால் அதை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை” என்று கூறினார்கள் எனத் தெரிவித்துவிட்டு, பிறகு சயீத் (ரஹ்) அவர்கள், “முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களே அதை அறியவில்லை. நீங்கள் அறிந்துவிட்டீர்களா? அப்படியானால், நீங்களே அதிகம் தெரிந்தவர்கள்” என்று (பரிகாசமாகக்) கூறினார்கள்.


அத்தியாயம் : 64
4164. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا طَارِقٌ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ مِمَّنْ بَايَعَ تَحْتَ الشَّجَرَةِ، فَرَجَعْنَا إِلَيْهَا الْعَامَ الْمُقْبِلَ فَعَمِيَتْ عَلَيْنَا.
பாடம் : 36 ஹுதைபியா போர்221 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4164. அந்த மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிப் பிரமாணம் செய்தவர் களில் ஒருவரான முசய்யப் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மறு ஆண்டு அந்த இடத்திற்குத் திரும்பவும் சென்றோம். அப்போது அந்த இடம் (அடையாளம் காண முடியாதவாறு) எங்களுக்குக் குழம்பிவிட்டது.


அத்தியாயம் : 64
4165. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ طَارِقٍ، قَالَ ذُكِرَتْ عِنْدَ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ الشَّجَرَةُ فَضَحِكَ فَقَالَ أَخْبَرَنِي أَبِي وَكَانَ، شَهِدَهَا.
பாடம் : 36 ஹுதைபியா போர்221 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4165. தாரிக் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்களிடம் அந்த மரத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டது. அப்போது சயீத் அவர்கள் சிரித்துவிட்டு, அ(ந்தப் பிரமாணத்)தில் கலந்துகொண்டவரான என் தந்தை (அடுத்த ஆண்டே அந்த மரத்தை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று) தெரிவித்ததாகக் கூறினார்.


அத்தியாயம் : 64
4166. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ـ وَكَانَ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا أَتَاهُ قَوْمٌ بِصَدَقَةٍ قَالَ "" اللَّهُمَّ صَلِّ عَلَيْهِمْ "". فَأَتَاهُ أَبِي بِصَدَقَتِهِ فَقَالَ "" اللَّهُمَّ صَلِّ عَلَى آلِ أَبِي أَوْفَى "".
பாடம் : 36 ஹுதைபியா போர்221 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4166. அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அந்த மரத்தின(டியில் பைஅத்துர் ரிள்வான் செய்தவ)ர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்:

எவரேனும் ஒரு கூட்டத்தார் தம் ஸகாத் பொருள்களைக் கொண்டுவந்தால் நபி (ஸல்) அவர்கள், “இறைவா! இவர்கள் மீது கருணை புரிவாயாக!” என்று பிரார்த்திப்பது வழக்கம். என் தந்தை (அபூஅவ்ஃபா-ரலி) தமது ஸகாத்தைக் கொண்டுசென்றார். அப்போது, “இறைவா!அபூஅவ்ஃபாவின் குடும்பத்தாருக்குக் கருணை புரிவாயாக!” என்று பிரார்த்தித் தார்கள்.233


அத்தியாயம் : 64
4167. حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَخِيهِ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، قَالَ لَمَّا كَانَ يَوْمُ الْحَرَّةِ وَالنَّاسُ يُبَايِعُونَ لِعَبْدِ اللَّهِ بْنِ حَنْظَلَةَ فَقَالَ ابْنُ زَيْدٍ عَلَى مَا يُبَايِعُ ابْنُ حَنْظَلَةَ النَّاسَ قِيلَ لَهُ عَلَى الْمَوْتِ. قَالَ لاَ أُبَايِعُ عَلَى ذَلِكَ أَحَدًا بَعْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. وَكَانَ شَهِدَ مَعَهُ الْحُدَيْبِيَةَ.
பாடம் : 36 ஹுதைபியா போர்221 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4167. அப்பாத் பின் தமீம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“அல்ஹர்ரா' போரின்போது அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி) அவர்களிடம் மக்கள் உறுதிமொழி கொடுத்துக்கொண்டிருந்தபோது (அப்துல்லாஹ்) இப்னு ஸைத் (ரலி) அவர்கள் மக்களிடம், “எதற்காக இப்னு ஹன்ழலா உறுதிமொழி வாங்குகிறார்?” என்று கேட்டார்கள். “மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருக்கும்படி (உறுதிமொழி வாங்குகிறார்)” என்று அவர்களிடம் கூறப்பட்டது.

(அப்போது) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஹுதைபியாவில் அளித்த உறுதி மொழிக்குப்) பின்னர் வேறெவரிடமும் இதற்காக நான் உறுதிமொழியளிக்க மாட்டேன்” என்று கூறினார்கள்.234

இப்னு ஸைத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுதைபியாவில் கலந்துகொண்ட வராவார்.


அத்தியாயம் : 64
4168. حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى الْمُحَارِبِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي، حَدَّثَنَا إِيَاسُ بْنُ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ، قَالَ حَدَّثَنِي ـ أَبِي وَكَانَ، مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ ـ قَالَ كُنَّا نُصَلِّي مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم الْجُمُعَةَ ثُمَّ نَنْصَرِفُ، وَلَيْسَ لِلْحِيطَانِ ظِلٌّ نَسْتَظِلُّ فِيهِ.
பாடம் : 36 ஹுதைபியா போர்221 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4168. இயாஸ் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (சலமா பின் அல் அக்வஉ -ரலி) அவர்கள் அந்த மரத்தின(டியில் “பைஅத்துர் ரிள்வான்' செய்தவ)ர்களில் ஒருவராவார். அவர்கள் என்னிடம், “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (வெள்ளிக்கிழமை) “ஜுமுஆ' தொழுதுவிட்டு (வீட்டிற்கு)த்திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவில்கூட, சுவர்களுக்கு நிழல் படிந்திருக்காது” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 64
4169. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَاتِمٌ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي عُبَيْدٍ، قَالَ قُلْتُ لِسَلَمَةَ بْنِ الأَكْوَعِ عَلَى أَىِّ شَىْءٍ بَايَعْتُمْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْحُدَيْبِيَةِ. قَالَ عَلَى الْمَوْتِ.
பாடம் : 36 ஹுதைபியா போர்221 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4169. யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்கள் கூறியதவாது:

நான், சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடம், “ஹுதைபியா தினத்தன்று (நபித்தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்?” என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள், “மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்” என்று பதிலளித்தார்கள்.235


அத்தியாயம் : 64
4170. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ إِشْكَابٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنِ الْعَلاَءِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِيهِ، قَالَ لَقِيتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ فَقُلْتُ طُوبَى لَكَ صَحِبْتَ النَّبِيَّ صلى الله عليه وسلم وَبَايَعْتَهُ تَحْتَ الشَّجَرَةِ. فَقَالَ يَا ابْنَ أَخِي إِنَّكَ لاَ تَدْرِي مَا أَحْدَثْنَا بَعْدَهُ.
பாடம் : 36 ஹுதைபியா போர்221 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4170. முசய்யப் பின் ராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களைச் சந்தித்து, “தங்களுக்கு நல்வாழ்வு கிடைக்கட்டும். தாங்கள் நபி (ஸல்) அவர்களின் நட்பைப் பெற்றதோடு, அவர்களிடம் அந்த மரத்தின் கீழ் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிப் பிரமாணமும் செய்து கொடுத்தீர்கள்” என்று கூறினேன். அப்போது அவர்கள், “என் சகோதரர் மகனே! (நபி -ஸல்) அவர்களுக்குப் பிறகு நாங்கள் உருவாக்கி விட்டதை (எல்லாம்) நீ அறியமாட்டாய்” என்று (பணிவுடன்) கூறினார்கள்.236


அத்தியாயம் : 64
4171. حَدَّثَنَا إِسْحَاقُ، حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، قَالَ حَدَّثَنَا مُعَاوِيَةُ ـ هُوَ ابْنُ سَلاَّمٍ ـ عَنْ يَحْيَى، عَنْ أَبِي قِلاَبَةَ، أَنَّ ثَابِتَ بْنَ الضَّحَّاكِ، أَخْبَرَهُ أَنَّهُ، بَايَعَ النَّبِيَّ صلى الله عليه وسلم تَحْتَ الشَّجَرَةِ.
பாடம் : 36 ஹுதைபியா போர்221 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4171. “அந்த மரத்தின் கீழ் நான் நபி (ஸல்) அவர்களிடம் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தேன்” என்று ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

இதை அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 64
4172. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا} قَالَ الْحُدَيْبِيَةُ. قَالَ أَصْحَابُهُ هَنِيئًا مَرِيئًا فَمَا لَنَا فَأَنْزَلَ اللَّهُ {لِيُدْخِلَ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ} قَالَ شُعْبَةُ فَقَدِمْتُ الْكُوفَةَ فَحَدَّثْتُ بِهَذَا كُلِّهِ عَنْ قَتَادَةَ ثُمَّ رَجَعْتُ فَذَكَرْتُ لَهُ فَقَالَ أَمَّا {إِنَّا فَتَحْنَا لَكَ} فَعَنْ أَنَسٍ، وَأَمَّا هَنِيئًا مَرِيئًا فَعَنْ عِكْرِمَةَ.
பாடம் : 36 ஹுதைபியா போர்221 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4172. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“நிச்சயமாக, நாம் உங்களுக்கு ஒரு வெளிப்படையான வெற்றியை அளித்துள்ளோம்” (48:1) எனும் வசனம் ஹுதைபியா (சமாதான ஒப்பந்தத்தைக் குறிக்கக்கூடியது) ஆகும்” என்று நான் கூறினேன். (அப்போது) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், “(நபியவர்களே,) தங்களுக்கு இனிய வாழ்த்துகள். (தங்கள் பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்துவிட்டதாக அந்த வசனத்தின் தொடர்ச்சியில் கூறுகின்றானே, அந்த வெற்றியால்) எங்களுக்கு என்ன (பயன்)?” என்று கேட்டனர்.

அப்போது, “இறைநம்பிக்கையாளர் களான ஆண்களையும் பெண்களையும் சொர்க்கங்களில் நுழையச் செய்வதற்காகவே (இவ்வாறு நாம் வெற்றியளித்தோம்); அந்தச் சொர்க்கங்களுக்கிடையே நதிகள் ஓடிக்கொண்டிருக்கும்” (48:5) எனும்வசனத்தை அல்லாஹ் அருளினான்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

பிறகு நான் கூஃபாவுக்கு வந்து, இந்த ஹதீஸையெல்லாம் கத்தாதா (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதாக (அங்குள்ளவர்களிடம்) அறிவித்தேன். பிறகு நான் கூஃபாவிலிருந்து திரும்பி (கத்தாதா (ரஹ்) அவர்களிடம்) வந்து அவர்களிடம் இது பற்றிக் கூறினேன்.

அப்போது அவர்கள், “நாம் உங்களுக்கு வெற்றியளித்தோம் எனும் வசனம் ஹுதைபியாவைக் குறிக்கிறது என்பதை எனக்கு அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். தங்களுக்கு இனிய வாழ்த்துகள் என்று (தொடங்கும் ஹதீஸை) இக்ரிமா (ரஹ்) அவர்களே எனக்கு அறிவித்தார்கள் (முழு ஹதீஸையும் ஒரே நபரிடமிருந்து நான் கேட்டு அறிவிக்கவில்லை)” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 64
4173. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا أَبُو عَامِرٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ مَجْزَأَةَ بْنِ زَاهِرٍ الأَسْلَمِيِّ، عَنْ أَبِيهِ ـ وَكَانَ مِمَّنْ شَهِدَ الشَّجَرَةَ ـ قَالَ إِنِّي لأُوقِدُ تَحْتَ الْقِدْرِ بِلُحُومِ الْحُمُرِ إِذْ نَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَنْهَاكُمْ عَنْ لُحُومِ الْحُمُرِ.
பாடம் : 36 ஹுதைபியா போர்221 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4173. மஜ்ஸஆ பின் ஸாஹிர் அல்அஸ்லமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை ஸாஹிர் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்கள் அந்த மரத்தின் கீழ் (நடந்த “பைஅத்துர் ரிள்வான்' உறுதிமொழி ஏற்பில்) கலந்துகொண்டவர்களாவார். அன்னார் கூறினார்கள்:

(நாட்டுக்)கழுதை இறைச்சி (வெந்துகொண்டிருந்த) சட்டிக்குக் கீழே நான் (நெருப்பு) மூட்டிக்கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய அறிவிப்பாளர், “கழுதை இறைச்சியை (உண்ண வேண்டாமென) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குத் தடை விதிக்கிறார்கள்” என்று அறிவித்தார்.


அத்தியாயம் : 64
4174. وَعَنْ مَجْزَأَةَ، عَنْ رَجُلٍ، مِنْهُمْ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ اسْمُهُ أُهْبَانُ بْنُ أَوْسٍ وَكَانَ اشْتَكَى رُكْبَتَهُ، وَكَانَ إِذَا سَجَدَ جَعَلَ تَحْتَ رُكْبَتِهِ وِسَادَةً.
பாடம் : 36 ஹுதைபியா போர்221 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4174. மஜ்ஸஆ பின் ஸாஹிர் பின் அல்அஸ்லமீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

என்னுடைய (பனூ அஸ்லம்) குலத்தைச் சேர்ந்தவரும், அந்த மரத்தின(டியில் “பைஅத்துர் ரிள்வான்' செய்தவ)ர்களில் ஒருவருமான உஹ்பான் பின் அவ்ஸ் (ரலி) அவர்களுக்கு முழங்காலில் வலி ஏற்பட்டிருந்தது. அவர்கள் (தொழுகையில் தரையில் முழங்கால் மூட்டு அழுந்தாமலிருப்பதற்காக) சஜ்தா செய்யும்போது தமது முழங்காலுக்குக் கீழே தலையணை ஒன்றை வைத்துக்கொள்வார்கள்.


அத்தியாயம் : 64
4175. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سُوَيْدِ بْنِ النُّعْمَانِ ـ وَكَانَ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ ـ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَصْحَابُهُ أُتُوا بِسَوِيقٍ فَلاَكُوهُ. تَابَعَهُ مُعَاذٌ عَنْ شُعْبَةَ.
பாடம் : 36 ஹுதைபியா போர்221 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4175. புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அந்த மரத்தின(டியில் “பைஅத்துர் ரிள்வான்' உடன்படிக்கை செய்தவ)ர்களில் ஒருவரான சுவைத் பின் அந்நுஅமான் (ரலி) அவர்கள், “(கைபருக்கு அருகிலுள்ள “ஸஹ்பா' என்னுமிடத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களிடமும் மாவு கொண்டுவரப்பட்டது. அப்போது அதை அவர்கள் சாப்பிட்டார்கள்” என்று கூறினார்கள்.237

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 64
4176. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ بَزِيعٍ، حَدَّثَنَا شَاذَانُ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي جَمْرَةَ، قَالَ سَأَلْتُ عَائِذَ بْنَ عَمْرٍو ـ رضى الله عنه ـ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ هَلْ يُنْقَضُ الْوِتْرُ قَالَ إِذَا أَوْتَرْتَ مِنْ أَوَّلِهِ، فَلاَ تُوتِرْ مِنْ آخِرِهِ.
பாடம் : 36 ஹுதைபியா போர்221 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4176. அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், நபித்தோழர்களில் ஒருவரும், அந்த மரத்தின(டியில் “பைஅத்துர் ரிள்வான்' உடன்படிக்கை செய்தவ)ர்களில் ஒருவருமான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்களிடம், “வித்ர் தொழுகை உடைக்கப்படுமா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆரம்பத்திலேயே நீ வித்ர் தொழுதிருந்தால் இறுதியில் நீ வித்ர் தொழ வேண்டாம்” என்று பதிலளித்தார்கள்.238


அத்தியாயம் : 64
4177. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَسِيرُ فِي بَعْضِ أَسْفَارِهِ، وَعُمَرُ بْنُ الْخَطَّابِ يَسِيرُ مَعَهُ لَيْلاً، فَسَأَلَهُ عُمَرُ بْنُ الْخَطَّابِ عَنْ شَىْءٍ فَلَمْ يُجِبْهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ سَأَلَهُ فَلَمْ يُجِبْهُ، ثُمَّ سَأَلَهُ فَلَمْ يُجِبْهُ وَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ ثَكِلَتْكَ أُمُّكَ يَا عُمَرُ، نَزَرْتَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَ مَرَّاتٍ، كُلُّ ذَلِكَ لاَ يُجِيبُكَ. قَالَ عُمَرُ فَحَرَّكْتُ بَعِيرِي ثُمَّ تَقَدَّمْتُ أَمَامَ الْمُسْلِمِينَ، وَخَشِيتُ أَنْ يَنْزِلَ فِيَّ قُرْآنٌ، فَمَا نَشِبْتُ أَنْ سَمِعْتُ صَارِخًا يَصْرُخُ بِي ـ قَالَ ـ فَقُلْتُ لَقَدْ خَشِيتُ أَنْ يَكُونَ نَزَلَ فِيَّ قُرْآنٌ. وَجِئْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ "" لَقَدْ أُنْزِلَتْ عَلَىَّ اللَّيْلَةَ سُورَةٌ لَهِيَ أَحَبُّ إِلَىَّ مِمَّا طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ، ثُمَّ قَرَأَ {إِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُبِينًا}.""
பாடம் : 36 ஹுதைபியா போர்221 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியே!) இறைநம்பிக்கையாளர்கள் அந்த மரத்தின் கீழ் உம்மிடம் உறுதிப் பிரமாணம் எடுத்துக்கொண்டபோது, அவர்கள்மீது அல்லாஹ் உறுதியாக அன்பு கொண்டான். (48:18)
4177. (உமர் (ரலி) அவர்களால் விடுதலைசெய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமை) அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஓர் இரவில் பயணம் செய்து கொண்டி ருந்தார்கள்.239 உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களும் நபியவர்களுடன் சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. மீண்டும் உமர் (ரலி) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபிகளார் பதிலளிக்கவில்லை. பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை.

“உமரே! உன்னை உன் தாய் இழக்கட்டும். மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்குப் பதிலளிக்க வில்லையே” (என்று தம்மைத்தாமே) உமர் (ரலி) அவர்கள் (கடிந்து) கூறினார்கள்.

மேலும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதற்குப் பிறகு நான் எனது ஒட்டகத்தைச் செலுத்தி முஸ்óம் களுக்கு முன்னால் வந்து சேர்ந்தேன். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இப்படி நான் நடந்துகொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) அருளப்பெற்றுவிடுமோ என்று அஞ்சினேன். சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் அழைப்பதைக் கேட்டேன். (நான் நினைத்ததைப் போன்றே) என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) அருளப்பெற்றிருக்கும் என அஞ்சினேன் என்று சொல்லிக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன்.

அப்போது அவர்கள், “இந்த இரவு எனக்கு ஒரு (குர்ஆன்) அத்தியாயம் அருளப்பெற்றுள்ளது. சூரியன் எதன் மீது உதயமாகிறதோ அ(ந்த உலகத்)தைவிட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும்” என்று கூறினார்கள். பிறகு, “உங்களுக்கு நாம் வெளிப்படையானதொரு வெற்றியை அளித்துள்ளோம்” என்று (தொடங்கும் - 48:1ஆம் வசனத்தை) ஓதினார்கள்.


அத்தியாயம் : 64