4056. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، قَالَ سَمِعْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ، قَالَ سَمِعْتُ سَعْدًا، يَقُولُ جَمَعَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَبَوَيْهِ يَوْمَ أُحُدٍ.
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4056. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்காகத் தம் தாயையும் தந்தையையும் ஒன்றுசேர்த்து, (“என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று) கூறி (போர் புரிய உற்சாகமூட்டி)னார்கள்.123
அத்தியாயம் : 64
4056. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்காகத் தம் தாயையும் தந்தையையும் ஒன்றுசேர்த்து, (“என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று) கூறி (போர் புரிய உற்சாகமூட்டி)னார்கள்.123
அத்தியாயம் : 64
4057. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا لَيْثٌ، عَنْ يَحْيَى، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، أَنَّهُ قَالَ قَالَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ ـ رضى الله عنه ـ لَقَدْ جَمَعَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ أَبَوَيْهِ كِلَيْهِمَا. يُرِيدُ حِينَ قَالَ "" فِدَاكَ أَبِي وَأُمِّي "". وَهُوَ يُقَاتِلُ.
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4057. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையுமே ஒன்று சேர்த்து எனக்காக (அர்ப்பணிப்பதாக)க் கூறினார்கள்.
அறிவிப்பாளர் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
தாம் போர் புரிந்துகொண்டிருந்தபோது, “என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று தம்மிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் பற்றியே இவ்வாறு சஅத் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அத்தியாயம் : 64
4057. சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையுமே ஒன்று சேர்த்து எனக்காக (அர்ப்பணிப்பதாக)க் கூறினார்கள்.
அறிவிப்பாளர் சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
தாம் போர் புரிந்துகொண்டிருந்தபோது, “என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று தம்மிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் பற்றியே இவ்வாறு சஅத் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
அத்தியாயம் : 64
4058. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مِسْعَرٌ، عَنْ سَعْدٍ، عَنِ ابْنِ شَدَّادٍ، قَالَ سَمِعْتُ عَلِيًّا ـ رضى الله عنه ـ يَقُولُ مَا سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَجْمَعُ أَبَوَيْهِ لأَحَدٍ غَيْرَ سَعْدٍ.
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4058. அலீ (பின் அபீதாலிப் -ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்டதில்லை.
அத்தியாயம் : 64
4058. அலீ (பின் அபீதாலிப் -ரலி) அவர்கள் கூறியதாவது :
நபி (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்டதில்லை.
அத்தியாயம் : 64
4059. حَدَّثَنَا يَسَرَةُ بْنُ صَفْوَانَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ، عَنْ عَلِيٍّ ـ رضى الله عنه ـ قَالَ مَا سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم جَمَعَ أَبَوَيْهِ لأَحَدٍ إِلاَّ لِسَعْدِ بْنِ مَالِكٍ، فَإِنِّي سَمِعْتُهُ يَقُولُ يَوْمَ أُحُدٍ "" يَا سَعْدُ ارْمِ، فِدَاكَ أَبِي وَأُمِّي "".
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4059. அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து சஅத் பின்மாலிக் (ரலி) அவர்களைத் தவிர124 வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்டதில்லை. ஏனெனில், நான் உஹுத் (போர் நடந்த) நாளில், “சஅதே! அம்பெய்யுங்கள். என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் (சஅத் அவர்களிடம்) கூறியதைக் கேட்டேன்.
அத்தியாயம் : 64
4059. அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நபி (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்றுசேர்த்து சஅத் பின்மாலிக் (ரலி) அவர்களைத் தவிர124 வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்டதில்லை. ஏனெனில், நான் உஹுத் (போர் நடந்த) நாளில், “சஅதே! அம்பெய்யுங்கள். என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் (சஅத் அவர்களிடம்) கூறியதைக் கேட்டேன்.
அத்தியாயம் : 64
4060. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُعْتَمِرٍ، عَنْ أَبِيهِ، قَالَ زَعَمَ أَبُو عُثْمَانَ أَنَّهُ لَمْ يَبْقَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي بَعْضِ تِلْكَ الأَيَّامِ الَّتِي يُقَاتِلُ فِيهِنَّ غَيْرُ طَلْحَةَ وَسَعْدٍ. عَنْ حَدِيثِهِمَا.
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4060. அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (உஹுதில்) போரிட்டுவந்த அந்த நாட்களில் ஒன்றில், தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களையும், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களையும் தவிர்த்து (முஹாஜிர்களில் வேறு யாரும்) அவர்களுடன் எஞ்சியிருக்கவில்லை.
இது குறித்து தல்ஹா (ரலி) அவர்களும், சஅத் (ரலி) அவர்களும் (நேரடியாக) அறிவித்த ஹதீஸையும் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.125
அத்தியாயம் : 64
4060. அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (உஹுதில்) போரிட்டுவந்த அந்த நாட்களில் ஒன்றில், தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களையும், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களையும் தவிர்த்து (முஹாஜிர்களில் வேறு யாரும்) அவர்களுடன் எஞ்சியிருக்கவில்லை.
இது குறித்து தல்ஹா (ரலி) அவர்களும், சஅத் (ரலி) அவர்களும் (நேரடியாக) அறிவித்த ஹதீஸையும் அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.125
அத்தியாயம் : 64
4062. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي الأَسْوَدِ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ مُحَمَّدِ بْنِ يُوسُفَ، قَالَ سَمِعْتُ السَّائِبَ بْنَ يَزِيدَ، قَالَ صَحِبْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَوْفٍ وَطَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ وَالْمِقْدَادَ وَسَعْدًا رضى الله عنهم فَمَا سَمِعْتُ أَحَدًا مِنْهُمْ يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم، إِلاَّ أَنِّي سَمِعْتُ طَلْحَةَ يُحَدِّثُ عَنْ يَوْمِ أُحُدٍ
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4062. சாயிப் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப், தல்ஹா பின் உபைதில்லாஹ், மிக்தாத் பின் அல்அஸ்வத், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோருடன் நான் தோழமை கொண்டிருந்தேன். அவர்களில் ஒருவரும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (நபிமொழி எதையும்) அறிவிப்பதை நான் கேட்டதில்லை.
ஆயினும், தல்ஹா (ரலி) அவர்கள் (மட்டும்) உஹுத் போர் நாள் பற்றி அறிவிப்பதை நான் கேட்டுள்ளேன்.126
அத்தியாயம் : 64
4062. சாயிப் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப், தல்ஹா பின் உபைதில்லாஹ், மிக்தாத் பின் அல்அஸ்வத், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) ஆகியோருடன் நான் தோழமை கொண்டிருந்தேன். அவர்களில் ஒருவரும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (நபிமொழி எதையும்) அறிவிப்பதை நான் கேட்டதில்லை.
ஆயினும், தல்ஹா (ரலி) அவர்கள் (மட்டும்) உஹுத் போர் நாள் பற்றி அறிவிப்பதை நான் கேட்டுள்ளேன்.126
அத்தியாயம் : 64
4063. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، قَالَ رَأَيْتُ يَدَ طَلْحَةَ شَلاَّءَ، وَقَى بِهَا النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ.
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4063. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களின் செயலிழந்துபோன கையைப் பார்த்தேன். உஹுத் நாளில் அந்தக் கையால் நபி (ஸல்) அவர்களை அன்னார் காத்த(போது எதிரிகளால் வெட்டப்பட்ட)ôர்கள்.127
அத்தியாயம் : 64
4063. கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களின் செயலிழந்துபோன கையைப் பார்த்தேன். உஹுத் நாளில் அந்தக் கையால் நபி (ஸல்) அவர்களை அன்னார் காத்த(போது எதிரிகளால் வெட்டப்பட்ட)ôர்கள்.127
அத்தியாயம் : 64
4064. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ انْهَزَمَ النَّاسُ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَبُو طَلْحَةَ بَيْنَ يَدَىِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُجَوِّبٌ عَلَيْهِ بِحَجَفَةٍ لَهُ، وَكَانَ أَبُو طَلْحَةَ رَجُلاً رَامِيًا شَدِيدَ النَّزْعِ، كَسَرَ يَوْمَئِذٍ قَوْسَيْنِ أَوْ ثَلاَثًا، وَكَانَ الرَّجُلُ يَمُرُّ مَعَهُ بِجَعْبَةٍ مِنَ النَّبْلِ فَيَقُولُ انْثُرْهَا لأَبِي طَلْحَةَ. قَالَ وَيُشْرِفُ النَّبِيُّ صلى الله عليه وسلم يَنْظُرُ إِلَى الْقَوْمِ، فَيَقُولُ أَبُو طَلْحَةَ بِأَبِي أَنْتَ وَأُمِّي، لاَ تُشْرِفْ يُصِيبُكَ سَهْمٌ مِنْ سِهَامِ الْقَوْمِ، نَحْرِي دُونَ نَحْرِكَ. وَلَقَدْ رَأَيْتُ عَائِشَةَ بِنْتَ أَبِي بَكْرٍ وَأُمَّ سُلَيْمٍ، وَإِنَّهُمَا لَمُشَمِّرَتَانِ أَرَى خَدَمَ سُوقِهِمَا تَنْقُزَانِ الْقِرَبَ عَلَى مُتُونِهِمَا، تُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ الْقَوْمِ ثُمَّ تَرْجِعَانِ فَتَمْلآنِهَا، ثُمَّ تَجِيئَانِ فَتُفْرِغَانِهِ فِي أَفْوَاهِ الْقَوْمِ، وَلَقَدْ وَقَعَ السَّيْفُ مِنْ يَدَىْ أَبِي طَلْحَةَ إِمَّا مَرَّتَيْنِ وَإِمَّا ثَلاَثًا.
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4064. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்களை (தனியே) விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி)விட்டனர். அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தமது தோல் கேடயத்தால் மறைத்துக்கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.
மேலும், அபூதல்ஹா (ரலி) அவர்கள் வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அன்று அவர்கள், இரண்டு அல்லது மூன்று வில்களை உடைத்துவிட்டார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், “அதை அபூதல்ஹாவிடம் போடு” என்று சொல்வார்கள்.
அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து மக்களை (தலையை உயர்த்தி) எட்டிப் பார்க்க, அபூதல்ஹா அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கிவிடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும்” என்று சொன்னார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் (காயமுற்றவர்களுக்கு) மும்முரமாக (பணிவிடைகள் செய்துகொண்டு) இருப்பதை நான் கண்டேன்.
அவர்கள் (தண்ணீர் நிரம்பிய தோல்பைகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்துகொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்துகிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டுவந்து, அவர்களுடைய வாய்களில் மீண்டும் ஊற்றிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கால் கொலுசுகளை நான் கண்டேன். அபூதல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.128
அத்தியாயம் : 64
4064. அனஸ் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்களை (தனியே) விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி)விட்டனர். அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தமது தோல் கேடயத்தால் மறைத்துக்கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.
மேலும், அபூதல்ஹா (ரலி) அவர்கள் வில்லின் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக்கூடியவர்களாக இருந்தார்கள். அன்று அவர்கள், இரண்டு அல்லது மூன்று வில்களை உடைத்துவிட்டார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், “அதை அபூதல்ஹாவிடம் போடு” என்று சொல்வார்கள்.
அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து மக்களை (தலையை உயர்த்தி) எட்டிப் பார்க்க, அபூதல்ஹா அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கிவிடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும்” என்று சொன்னார்கள்.
அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் (காயமுற்றவர்களுக்கு) மும்முரமாக (பணிவிடைகள் செய்துகொண்டு) இருப்பதை நான் கண்டேன்.
அவர்கள் (தண்ணீர் நிரம்பிய தோல்பைகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்துகொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்துகிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டுவந்து, அவர்களுடைய வாய்களில் மீண்டும் ஊற்றிக்கொண்டிருக்கும் நிலையில் அவர்களின் கால் கொலுசுகளை நான் கண்டேன். அபூதல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.128
அத்தியாயம் : 64
4065. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ لَمَّا كَانَ يَوْمَ أُحُدٍ هُزِمَ الْمُشْرِكُونَ، فَصَرَخَ إِبْلِيسُ لَعْنَةُ اللَّهِ عَلَيْهِ أَىْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ. فَرَجَعَتْ أُولاَهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ فَبَصُرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ الْيَمَانِ فَقَالَ أَىْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي. قَالَ قَالَتْ فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ فَقَالَ حُذَيْفَةُ يَغْفِرُ اللَّهُ لَكُمْ. قَالَ عُرْوَةُ فَوَاللَّهِ مَا زَالَتْ فِي حُذَيْفَةَ بَقِيَّةُ خَيْرٍ حَتَّى لَحِقَ بِاللَّهِ. بَصُرْتُ عَلِمْتُ، مِنَ الْبَصِيرَةِ فِي الأَمْرِ، وَأَبْصَرْتُ مِنْ بَصَرِ الْعَيْنِ وَيُقَالُ بَصُرْتُ وَأَبْصَرْتُ وَاحِدٌ.
பாடம் : 18
“அப்போது உங்களில் இரு குழுவினர் தைரியமிழந்து (திரும்பி)விட நினைத்தனர். ஆனால், அவர்களுக்கு அல்லாஹ் உதவியாள(னாய் இருந்தா)ன். இறைநம்பிக்கை கொண்ட (அ)வர்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கட்டும்” (எனும் (3:122ஆவது) இறைவசனம்119
4065. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப் பட்டனர். அப்போது இப்லீஸ்,-அல்லாஹ் அவனைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!- “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால்இருப்பவர்களைக் கவனியுங்கள்” என்று கத்தினான். உடனே, முஸ்óம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின்அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின்அணியினருடன் (மோதலேற் பட்டுப்) போரிட்டுக்கொண்டனர்.
அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், தம் தந்தை “அல்யமான்' அவர்கள் அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். ஆகவே, “அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!” என்று (உரக்கக்) கூவினார்கள்.
(ஆனால்) அல்லாஹ்வின் மீதாணை யாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டு) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), “அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா (ரலி) அவர்கள் (இவ்வாறு மன்னித்ததால் அவர்கள்) அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை அவர்களிடம் நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது.129
(இங்கு ஹ‚தைஃபா (ரலி) அவர்கள் தம் தந்தையை “கண்டார்கள்' என்பதைக் குறிக்க “பஸ‚ர' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.)
“பஸ‚ர்த்து' என்பது ஒரு காரியத்தில் ஒருவருக்குள்ள “அகப் பார்வையை'க் குறிக்கும். “அப்ஸர்த்து' என்பது கண்ணால் பார்க்கும் “புறப் பார்வையை'க் குறிக்கும். சிலர், பஸ‚ர்த்து, அப்ஸர்த்து இரண்டும் ஒன்றே என்பர்.
அத்தியாயம் : 64
4065. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப் பட்டனர். அப்போது இப்லீஸ்,-அல்லாஹ் அவனைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக!- “அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால்இருப்பவர்களைக் கவனியுங்கள்” என்று கத்தினான். உடனே, முஸ்óம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின்அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின்அணியினருடன் (மோதலேற் பட்டுப்) போரிட்டுக்கொண்டனர்.
அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், தம் தந்தை “அல்யமான்' அவர்கள் அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். ஆகவே, “அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!” என்று (உரக்கக்) கூவினார்கள்.
(ஆனால்) அல்லாஹ்வின் மீதாணை யாக! அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டு) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), “அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!” என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா (ரலி) அவர்கள் (இவ்வாறு மன்னித்ததால் அவர்கள்) அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை அவர்களிடம் நல்ல பலன் இருந்துகொண்டேயிருந்தது.129
(இங்கு ஹ‚தைஃபா (ரலி) அவர்கள் தம் தந்தையை “கண்டார்கள்' என்பதைக் குறிக்க “பஸ‚ர' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.)
“பஸ‚ர்த்து' என்பது ஒரு காரியத்தில் ஒருவருக்குள்ள “அகப் பார்வையை'க் குறிக்கும். “அப்ஸர்த்து' என்பது கண்ணால் பார்க்கும் “புறப் பார்வையை'க் குறிக்கும். சிலர், பஸ‚ர்த்து, அப்ஸர்த்து இரண்டும் ஒன்றே என்பர்.
அத்தியாயம் : 64
4066. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ، عَنْ عُثْمَانَ بْنِ مَوْهَبٍ، قَالَ جَاءَ رَجُلٌ حَجَّ الْبَيْتَ فَرَأَى قَوْمًا جُلُوسًا فَقَالَ مَنْ هَؤُلاَءِ الْقُعُودُ قَالُوا هَؤُلاَءِ قُرَيْشٌ. قَالَ مَنِ الشَّيْخُ قَالُوا ابْنُ عُمَرَ. فَأَتَاهُ فَقَالَ إِنِّي سَائِلُكَ عَنْ شَىْءٍ أَتُحَدِّثُنِي، قَالَ أَنْشُدُكَ بِحُرْمَةِ هَذَا الْبَيْتِ أَتَعْلَمُ أَنَّ عُثْمَانَ بْنَ عَفَّانَ فَرَّ يَوْمَ أُحُدٍ قَالَ نَعَمْ. قَالَ فَتَعْلَمُهُ تَغَيَّبَ عَنْ بَدْرٍ فَلَمْ يَشْهَدْهَا قَالَ نَعَمْ. قَالَ فَتَعْلَمُ أَنَّهُ تَخَلَّفَ عَنْ بَيْعَةِ الرُّضْوَانِ فَلَمْ يَشْهَدْهَا قَالَ نَعَمْ. قَالَ فَكَبَّرَ. قَالَ ابْنُ عُمَرَ تَعَالَ لأُخْبِرَكَ وَلأُبَيِّنَ لَكَ عَمَّا سَأَلْتَنِي عَنْهُ، أَمَّا فِرَارُهُ يَوْمَ أُحُدٍ فَأَشْهَدُ أَنَّ اللَّهَ عَفَا عَنْهُ، وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَدْرٍ فَإِنَّهُ كَانَ تَحْتَهُ بِنْتُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكَانَتْ مَرِيضَةً، فَقَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ لَكَ أَجْرَ رَجُلٍ مِمَّنْ شَهِدَ بَدْرًا وَسَهْمَهُ "". وَأَمَّا تَغَيُّبُهُ عَنْ بَيْعَةِ الرُّضْوَانِ فَإِنَّهُ لَوْ كَانَ أَحَدٌ أَعَزَّ بِبَطْنِ مَكَّةَ مِنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ لَبَعَثَهُ مَكَانَهُ، فَبَعَثَ عُثْمَانَ، وَكَانَ بَيْعَةُ الرُّضْوَانِ بَعْدَ مَا ذَهَبَ عُثْمَانُ إِلَى مَكَّةَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ الْيُمْنَى "" هَذِهِ يَدُ عُثْمَانَ "". فَضَرَبَ بِهَا عَلَى يَدِهِ فَقَالَ "" هَذِهِ لِعُثْمَانَ "". اذْهَبْ بِهَذَا الآنَ مَعَكَ.
பாடம் : 19
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்:
“ஈரணிகள் மோதிக்கொண்ட நாளில் உங்களில் யார் பின்வாங்கி (ஓடி)னார்களோ அவர்களை, அவர்கள் செய்த (தவறுகள்) சிலவற்றின் காரணத்தால் ஷைத்தான்தான் அடிபிறழச் செய்தான். அவர்களை அல்லாஹ் மன்னித்துவிட்டான். அல்லாஹ் மன்னிப்பவனும் சகிப்புத் தன்மை மிக்கவனும் ஆவான்” எனும் (3:155) இறைவசனம்
4066. உஸ்மான் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்ய (எகிப்துவாசியான) ஒரு மனிதர் வந்தார். அப்போது ஒரு கூட்டத்தார் (அங்கே) அமர்ந்திருப்பதைக் கண்டு, “இந்தக் கூட்டத்தார் யார்?” என்று கேட்டார். மக்கள், “இவர்கள் குறைஷிகள்” என்று கூறினர். அவர், “(இவர்களில்) முதிர்ந்த அறிஞர் யார்?” என்று கேட்டார். மக்கள், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்” என்று பதிலளித்தனர்.
பிறகு அவர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சென்று, “(இப்னு உமர் அவர்களே!) நான் தங்களிடம் ஒரு விஷயம் பற்றிக் கேட்பேன். நீங்கள் எனக்கு அதைப் பற்றி (பதில்) சொல்வீர்களா? இந்த இறையில்லத்தின் புனிதத்தை முன்வைத்து தங்களிடம் கேட்கிறேன்: உஸ்மான் பின் அஃப்பான் உஹுத் நாளில் (போர்க்களத்திலிருந்து) வெருண்டோடியதைத் தாங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (அறிவேன்)” என்று பதிலளித்தார்கள்.
அவர், “உஸ்மான் (ரலி) அவர்கள், பத்ர் போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், “அவர் (ஹுதைபியாவில் நடந்த) “பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாணத்திலும் கலந்துகொள்ளவில்லை என்பது உங்களுக் குத் தெரியுமா?” என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள்.
(இவற்றைக் கேட்டுவிட்டு) அந்த மனிதர், (உஸ்மான் (ரலி) அவர்கள், தாம் நினைத்திருந்தது போன்றே இவ்வளவு குறைகளையும் கொண்டவர்கள்தான் என்று தொனிக்கும்படி) “அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னார்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: “வா! (இவற்றிலெல்லாம் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏன் பங்கு பெறவில்லையென்று) நீ கேட்டது பற்றி உனக்கு நான் விளக்குகிறேன்.
உஸ்மான் (ரலி) அவர்கள் உஹுத் போரின்போது வெருண்டோடிய சம்பவமோ, அது சம்பந்தமாக அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான் என்று நானே சாட்சியம் கூறுகின்றேன்.
பத்ர் போரில் அவர்கள் கலந்துகொள்ளாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகள் (ருகய்யா (ரலி) அவர்கள்) உஸ்மானுடைய மனைவியாக இருந்தார்கள். அப்போது அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களிடம், “பத்ர் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதருக்குரிய (மறுமைப்) பலனும் (போர்ச் செல்வத்தில்) அவரது பங்கும் உங்களுக்குக் கிடைக்கும் (நீங்கள் உங்கள் மனைவியைப் போய்க் கவனியுங்கள்)' என்று சொன்னார்கள். (எனவேதான், அவர்கள் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.)
“பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், உஸ்மான் (ரலி) அவர்களைவிட கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந்திருந்தால் உஸ்மான் அவர்களுக்குப் பதிலாக அவரை நபி (ஸல்) அவர்கள் (குறைஷியரிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை;) எனவேதான், உஸ்மான் (ரலி) அவர்களை அனுப்பினார்கள். மேலும், இந்தச் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்குப் போன பின்புதான் நடைபெற்றது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக் கையைச் சுட்டிக்காட்டி, “இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் இடக் கையின் மீது தட்டினார்கள். பிறகு, “(இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்' என்று சொன்னார்கள்.” (இவ்வாறு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, உஸ்மான் (ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணிவைத்திருந்த) அந்த மனிதரிடம், “நான் சொன்ன இந்தப் பதில்களை எடுத்துக்கொண்டு இப்போது நீ போகலாம்” என்று சொன்னார்கள்.130
அத்தியாயம் : 64
4066. உஸ்மான் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்ய (எகிப்துவாசியான) ஒரு மனிதர் வந்தார். அப்போது ஒரு கூட்டத்தார் (அங்கே) அமர்ந்திருப்பதைக் கண்டு, “இந்தக் கூட்டத்தார் யார்?” என்று கேட்டார். மக்கள், “இவர்கள் குறைஷிகள்” என்று கூறினர். அவர், “(இவர்களில்) முதிர்ந்த அறிஞர் யார்?” என்று கேட்டார். மக்கள், “அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள்” என்று பதிலளித்தனர்.
பிறகு அவர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சென்று, “(இப்னு உமர் அவர்களே!) நான் தங்களிடம் ஒரு விஷயம் பற்றிக் கேட்பேன். நீங்கள் எனக்கு அதைப் பற்றி (பதில்) சொல்வீர்களா? இந்த இறையில்லத்தின் புனிதத்தை முன்வைத்து தங்களிடம் கேட்கிறேன்: உஸ்மான் பின் அஃப்பான் உஹுத் நாளில் (போர்க்களத்திலிருந்து) வெருண்டோடியதைத் தாங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (அறிவேன்)” என்று பதிலளித்தார்கள்.
அவர், “உஸ்மான் (ரலி) அவர்கள், பத்ர் போரில் கலந்துகொள்ளாமல் இருந்துவிட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், “அவர் (ஹுதைபியாவில் நடந்த) “பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாணத்திலும் கலந்துகொள்ளவில்லை என்பது உங்களுக் குத் தெரியுமா?” என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆம் (தெரியும்)” என்று பதிலளித்தார்கள்.
(இவற்றைக் கேட்டுவிட்டு) அந்த மனிதர், (உஸ்மான் (ரலி) அவர்கள், தாம் நினைத்திருந்தது போன்றே இவ்வளவு குறைகளையும் கொண்டவர்கள்தான் என்று தொனிக்கும்படி) “அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று சொன்னார்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறி னார்கள்: “வா! (இவற்றிலெல்லாம் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏன் பங்கு பெறவில்லையென்று) நீ கேட்டது பற்றி உனக்கு நான் விளக்குகிறேன்.
உஸ்மான் (ரலி) அவர்கள் உஹுத் போரின்போது வெருண்டோடிய சம்பவமோ, அது சம்பந்தமாக அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான் என்று நானே சாட்சியம் கூறுகின்றேன்.
பத்ர் போரில் அவர்கள் கலந்துகொள்ளாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகள் (ருகய்யா (ரலி) அவர்கள்) உஸ்மானுடைய மனைவியாக இருந்தார்கள். அப்போது அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களிடம், “பத்ர் போரில் கலந்துகொண்ட ஒரு மனிதருக்குரிய (மறுமைப்) பலனும் (போர்ச் செல்வத்தில்) அவரது பங்கும் உங்களுக்குக் கிடைக்கும் (நீங்கள் உங்கள் மனைவியைப் போய்க் கவனியுங்கள்)' என்று சொன்னார்கள். (எனவேதான், அவர்கள் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.)
“பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், உஸ்மான் (ரலி) அவர்களைவிட கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந்திருந்தால் உஸ்மான் அவர்களுக்குப் பதிலாக அவரை நபி (ஸல்) அவர்கள் (குறைஷியரிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை;) எனவேதான், உஸ்மான் (ரலி) அவர்களை அனுப்பினார்கள். மேலும், இந்தச் சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்குப் போன பின்புதான் நடைபெற்றது.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வலக் கையைச் சுட்டிக்காட்டி, “இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் இடக் கையின் மீது தட்டினார்கள். பிறகு, “(இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்' என்று சொன்னார்கள்.” (இவ்வாறு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, உஸ்மான் (ரலி) அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணிவைத்திருந்த) அந்த மனிதரிடம், “நான் சொன்ன இந்தப் பதில்களை எடுத்துக்கொண்டு இப்போது நீ போகலாம்” என்று சொன்னார்கள்.130
அத்தியாயம் : 64
4067. حَدَّثَنِي عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ جَعَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَى الرَّجَّالَةِ يَوْمَ أُحُدٍ عَبْدَ اللَّهِ بْنَ جُبَيْرٍ، وَأَقْبَلُوا مُنْهَزِمِينَ، فَذَاكَ إِذْ يَدْعُوهُمُ الرَّسُولُ فِي أُخْرَاهُمْ.
பாடம் : 20
(அல்லாஹ் கூறுகின்றான்:)
“(போர்க் களத்தில்) இத்தூதர் உங்களுக்குப் பின்னாóருந்து உங்களை அழைத்துக்கொண்டிருக்கையில், ஒருவரையும் திரும்பிப் பார்க்காமல் நீங்கள் (மலைமீது) ஏறிச் சென்றதை எண்ணிப் பாருங்கள். அதனால் உங்களுக்குத் துக்கத்திற்குமேல் துக்கத்தை அல்லாஹ் பரிசளித்தான். உங்களைவிட்டு (வெற்றி) தவறிப்போனதற்காகவும், உங்களுக்கு(த் துன்பம்) நேர்ந்ததற்காகவும் நீங்கள் கவலைப்படலாகாது என்பதற்காகவே (இவ்வாறு அதைவிடப் பெரிய துக்கத்தை அவன் அளித்தான்). நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்.” (என்ற 3:153ஆவது இறைவசனம்)
(இவ்வசனத்தில் “ஏறிச்செல்வது' என்பதைக் குறிக்க மூலத்தில்) “துஸ்இதூன' எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு “நீங்கள் போய்க்கொண்டிருந்தீர்கள்' என்பது பொருள். அஸ்அத, ஸஇத இரு சொற்களும் “வீட்டின் மேல் ஏறுவதை'க் குறிக்கும்.
4067. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்கள், (அம்பெய்யும்) காலாட் படையினருக்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களை (தலைவராக)ஆக்கினார்கள். மேலும், அப்படையினர் தோற்றுப்போய் ஓடிவிட்டார்கள். அதுதான், அவர்களுக்குப் பின்னால் இருந்து அவர்களை இறைத்தூதர் அழைத்த நேரமாகும்.131
அத்தியாயம் : 64
4067. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது நபி (ஸல்) அவர்கள், (அம்பெய்யும்) காலாட் படையினருக்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களை (தலைவராக)ஆக்கினார்கள். மேலும், அப்படையினர் தோற்றுப்போய் ஓடிவிட்டார்கள். அதுதான், அவர்களுக்குப் பின்னால் இருந்து அவர்களை இறைத்தூதர் அழைத்த நேரமாகும்.131
அத்தியாயம் : 64
4068. وَقَالَ لِي خَلِيفَةُ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنْ أَبِي طَلْحَةَ ـ رضى الله عنهما ـ قَالَ كُنْتُ فِيمَنْ تَغَشَّاهُ النُّعَاسُ يَوْمَ أُحُدٍ، حَتَّى سَقَطَ سَيْفِي مِنْ يَدِي مِرَارًا، يَسْقُطُ وَآخُذُهُ، وَيَسْقُطُ فَآخُذُهُ.
பாடம் : 21
(அல்லாஹ் கூறுகின்றான்:)
“பின்னர் இத்துயரத்திற்குப் பிறகு மனஅமைதி அளிக்கும் சிற்றுறக்கத்தை உங்களுக்கு அல்லாஹ் அருளினான். அது உங்களில் ஒரு பிரிவினரைத் தழுவிக் கொண்டது. மற்றொரு பிரிவினருக்கோ தம்மைப் பற்றிய கவலைதான். அவர்கள் உண்மைக்கு மாறாக அல்லாஹ்வைப் பற்றி அறியாமைக்கால எண்ணம் கொண்டி ருந்தனர். “நமக்கு இந்த விவகாரத்தில் அதிகாரம் ஏதும் உண்டா?” என்று அவர்கள் கேட்கின்றனர். “அதிகாரங்கள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியன” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
உம்மிடம் அவர்கள் வெளிப்படுத்தாத (பல)வற்றைத் தம் உள்ளங்களில் மறைத்துவைத்துள்ளனர். “நமக்கு (மட்டும்) இந்த விவகாரத்தில் அதிகாரம் ஏதும் இருந்திருந்தால், இங்கு நாம் கொல்லப்பட்டிருக்கமாட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர். “நீங்கள் உங்கள் இல்லங்களில் (தங்கி) இருந்தாலும் உயிரிழப்பு யார்மீது விதிக்கப்பட்டுள்ளதோ அவர்கள் தமது (மரணப்) படுக்கைக்கு வந்தே தீருவார்கள்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. உங்கள் நெஞ்சங்களில் உள்ளதைச் சோதிப்பதற்காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளதைத் தூய்மைப் படுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இவ்வாறு செய்தான்). உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன் ஆவான்.” (என்ற 3:154வது இறைவசனம்)
4068. அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல் -ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது சிற்றுறக்கம் ஆட்கொண்டவர்களில் நானும் ஒருவனாகஇருந்தேன். எந்த அளவுக்கென்றால் எனது வாள் எனது கையிலிருந்து பலமுறை (நழுவி) விழுந்துவிட்டது. அது விழ, நான் அதை எடுப்பேன். (மீண்டும்) அது விழ, அப்போதும் நான் அதை எடுப்பேன்.132
அத்தியாயம் : 64
4068. அபூதல்ஹா (ஸைத் பின் சஹ்ல் -ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரின்போது சிற்றுறக்கம் ஆட்கொண்டவர்களில் நானும் ஒருவனாகஇருந்தேன். எந்த அளவுக்கென்றால் எனது வாள் எனது கையிலிருந்து பலமுறை (நழுவி) விழுந்துவிட்டது. அது விழ, நான் அதை எடுப்பேன். (மீண்டும்) அது விழ, அப்போதும் நான் அதை எடுப்பேன்.132
அத்தியாயம் : 64
4069. حَدَّثَنَا يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ السُّلَمِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي سَالِمٌ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ مِنَ الرَّكْعَةِ الآخِرَةِ مِنَ الْفَجْرِ يَقُولُ "" اللَّهُمَّ الْعَنْ فُلاَنًا وَفُلاَنًا وَفُلاَنًا "". بَعْدَ مَا يَقُولُ "" سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ "". فَأَنْزَلَ اللَّهُ {لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَىْءٌ} إِلَى قَوْلِهِ { فَإِنَّهُمْ ظَالِمُونَ}
பாடம் : 22
(அல்லாஹ் கூறுகின்றான்:)
“(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை. ஒன்று அவர்களை அல்லாஹ் மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில், அவர்கள் அநீதி இழைத்தவர்களாவர்” (என்ற 3:128ஆவது இறைவசனம்)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரன்று நபி (ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்டார்கள். அப்போது, “தம் நபியையே காயப்படுத்திவிட்ட ஒரு சமூகம் எப்படி உருப்படும்?” என்று (மனமுடைந்தவர்களாக) நபிகளார் கூறினார்கள். அப்போதுதான், “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று தொடங்கும் வசனம் (3:128) அருளப்பெற்றது.133
4069. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(உஹுத் போரில் காயம் ஏற்பட்டதற்குப் பிறகு) ஃபஜ்ர் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்; ரப்பனா வல(க்)கல் ஹம்து' என்று கூறியதற்குப் பின்னால், நபி (ஸல்) அவர்கள், “இறைவா! இன்னான்,இன்னான், இன்னானை உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை. ஒன்று அவர்களை அல்லாஹ் மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில், அவர்கள் அநீதி இழைத்தவர்களாவர்.” எனும் (3:128) வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 64
4069. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(உஹுத் போரில் காயம் ஏற்பட்டதற்குப் பிறகு) ஃபஜ்ர் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, “சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்; ரப்பனா வல(க்)கல் ஹம்து' என்று கூறியதற்குப் பின்னால், நபி (ஸல்) அவர்கள், “இறைவா! இன்னான்,இன்னான், இன்னானை உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!” என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ், “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை. ஒன்று அவர்களை அல்லாஹ் மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில், அவர்கள் அநீதி இழைத்தவர்களாவர்.” எனும் (3:128) வசனத்தை அருளினான்.
அத்தியாயம் : 64
4070. وَعَنْ حَنْظَلَةَ بْنِ أَبِي سُفْيَانَ، سَمِعْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَدْعُو عَلَى صَفْوَانَ بْنِ أُمَيَّةَ وَسُهَيْلِ بْنِ عَمْرٍو وَالْحَارِثِ بْنِ هِشَامٍ فَنَزَلَتْ {لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَىْءٌ} إِلَى قَوْلِهِ {فَإِنَّهُمْ ظَالِمُونَ}.
பாடம் : 22
(அல்லாஹ் கூறுகின்றான்:)
“(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை. ஒன்று அவர்களை அல்லாஹ் மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில், அவர்கள் அநீதி இழைத்தவர்களாவர்” (என்ற 3:128ஆவது இறைவசனம்)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
உஹுத் போரன்று நபி (ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்டார்கள். அப்போது, “தம் நபியையே காயப்படுத்திவிட்ட ஒரு சமூகம் எப்படி உருப்படும்?” என்று (மனமுடைந்தவர்களாக) நபிகளார் கூறினார்கள். அப்போதுதான், “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” என்று தொடங்கும் வசனம் (3:128) அருளப்பெற்றது.133
4070. சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுத் போரில் காயப்படுத்தப்பட்ட போது எதிரிகளான) ஸஃப்வான் பின் உமய்யா, சுஹைல் பின் அம்ர், ஹாரிஸ் பின் ஹிஷாம் ஆகியோருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.
அப்போது, “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை. ஒன்று அவர்களை அல்லாஹ் மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில், அவர்கள் அநீதி இழைத்தவர் களாவர்.” என்ற (3:128) எனும் வசனம் அருளப்பெற்றது.134
அத்தியாயம் : 64
4070. சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுத் போரில் காயப்படுத்தப்பட்ட போது எதிரிகளான) ஸஃப்வான் பின் உமய்யா, சுஹைல் பின் அம்ர், ஹாரிஸ் பின் ஹிஷாம் ஆகியோருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.
அப்போது, “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை. ஒன்று அவர்களை அல்லாஹ் மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில், அவர்கள் அநீதி இழைத்தவர் களாவர்.” என்ற (3:128) எனும் வசனம் அருளப்பெற்றது.134
அத்தியாயம் : 64
4071. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، وَقَالَ ثَعْلَبَةُ بْنُ أَبِي مَالِكٍ إِنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ قَسَمَ مُرُوطًا بَيْنَ نِسَاءٍ مِنْ نِسَاءِ أَهْلِ الْمَدِينَةِ، فَبَقِيَ مِنْهَا مِرْطٌ جَيِّدٌ، فَقَالَ لَهُ بَعْضُ مَنْ عِنْدَهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ أَعْطِ هَذَا بِنْتَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الَّتِي عِنْدَكَ. يُرِيدُونَ أُمَّ كُلْثُومٍ بِنْتَ عَلِيٍّ. فَقَالَ عُمَرُ أُمُّ سَلِيطٍ أَحَقُّ بِهِ. وَأُمُّ سَلِيطٍ مِنْ نِسَاءِ الأَنْصَارِ مِمَّنْ بَايَعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، قَالَ عُمَرُ فَإِنَّهَا كَانَتْ تُزْفِرُ لَنَا الْقِرَبَ يَوْمَ أُحُدٍ.
பாடம் : 23
உம்மு சலீத் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு135
4071. ஸஅலபா பின் அபீமாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவாசிகளான பெண்களில் சிலரிடையே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பட்டாடைகளை (அல்லது கம்பளி ஆடைகளை)ப் பங்கிட்டார்கள். அதில் தரமானதோர் ஆடை எஞ்சிவிட்டது. உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த சிலர், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இதைத் தங்களிடமிருக்கும் (தங்களின் துணைவியாரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (மகளின்) மகளுக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினர்.
-அலீ (ரலி) அவர்களின் மகளான உம்மு குல்ஸூம் (ரலி) அவர்களைக் கருத்தில்கொண்டே (இப்படிக்) கூறினர்-
அப்போது உமர் (ரலி) அவர்கள், “உம்மு குல்ஸூமைவிட உம்மு சலீத் அவர்களே இதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள். மேலும், உம்மு சலீத் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்துகொடுத்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்” என்று கூறினார்கள். (மேலும்) “அவர் எங்களுக்காக உஹுத் போர் நடந்த நாளில் தோலால் ஆன தண்ணீர் பைகளைச் சுமந்துகொண்டு வந்துகொண்டிருந்தார்” என்றும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.136
அத்தியாயம் : 64
4071. ஸஅலபா பின் அபீமாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதீனாவாசிகளான பெண்களில் சிலரிடையே உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் பட்டாடைகளை (அல்லது கம்பளி ஆடைகளை)ப் பங்கிட்டார்கள். அதில் தரமானதோர் ஆடை எஞ்சிவிட்டது. உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த சிலர், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! இதைத் தங்களிடமிருக்கும் (தங்களின் துணைவியாரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (மகளின்) மகளுக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினர்.
-அலீ (ரலி) அவர்களின் மகளான உம்மு குல்ஸூம் (ரலி) அவர்களைக் கருத்தில்கொண்டே (இப்படிக்) கூறினர்-
அப்போது உமர் (ரலி) அவர்கள், “உம்மு குல்ஸூமைவிட உம்மு சலீத் அவர்களே இதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள். மேலும், உம்மு சலீத் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்துகொடுத்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார்” என்று கூறினார்கள். (மேலும்) “அவர் எங்களுக்காக உஹுத் போர் நடந்த நாளில் தோலால் ஆன தண்ணீர் பைகளைச் சுமந்துகொண்டு வந்துகொண்டிருந்தார்” என்றும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.136
அத்தியாயம் : 64
4072. حَدَّثَنِي أَبُو جَعْفَرٍ، مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا حُجَيْنُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْفَضْلِ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ جَعْفَرِ بْنِ عَمْرِو بْنِ أُمَيَّةَ الضَّمْرِيِّ، قَالَ خَرَجْتُ مَعَ عُبَيْدِ اللَّهِ بْنِ عَدِيِّ بْنِ الْخِيَارِ، فَلَمَّا قَدِمْنَا حِمْصَ قَالَ لِي عُبَيْدُ اللَّهِ هَلْ لَكَ فِي وَحْشِيٍّ نَسْأَلُهُ عَنْ قَتْلِ حَمْزَةَ قُلْتُ نَعَمْ. وَكَانَ وَحْشِيٌّ يَسْكُنُ حِمْصَ فَسَأَلْنَا عَنْهُ فَقِيلَ لَنَا هُوَ ذَاكَ فِي ظِلِّ قَصْرِهِ، كَأَنَّهُ حَمِيتٌ. قَالَ فَجِئْنَا حَتَّى وَقَفْنَا عَلَيْهِ بِيَسِيرٍ، فَسَلَّمْنَا، فَرَدَّ السَّلاَمَ، قَالَ وَعُبَيْدُ اللَّهِ مُعْتَجِرٌ بِعِمَامَتِهِ، مَا يَرَى وَحْشِيٌّ إِلاَّ عَيْنَيْهِ وَرِجْلَيْهِ، فَقَالَ عُبَيْدُ اللَّهِ يَا وَحْشِيُّ أَتَعْرِفُنِي قَالَ فَنَظَرَ إِلَيْهِ ثُمَّ قَالَ لاَ وَاللَّهِ إِلاَّ أَنِّي أَعْلَمُ أَنَّ عَدِيَّ بْنَ الْخِيَارِ تَزَوَّجَ امْرَأَةً يُقَالُ لَهَا أُمُّ قِتَالٍ بِنْتُ أَبِي الْعِيصِ، فَوَلَدَتْ لَهُ غُلاَمًا بِمَكَّةَ، فَكُنْتُ أَسْتَرْضِعُ لَهُ، فَحَمَلْتُ ذَلِكَ الْغُلاَمَ مَعَ أُمِّهِ، فَنَاوَلْتُهَا إِيَّاهُ، فَلَكَأَنِّي نَظَرْتُ إِلَى قَدَمَيْكَ. قَالَ فَكَشَفَ عُبَيْدُ اللَّهِ عَنْ وَجْهِهِ ثُمَّ قَالَ أَلاَ تُخْبِرُنَا بِقَتْلِ حَمْزَةَ قَالَ نَعَمْ، إِنَّ حَمْزَةَ قَتَلَ طُعَيْمَةَ بْنَ عَدِيِّ بْنِ الْخِيَارِ بِبَدْرٍ، فَقَالَ لِي مَوْلاَىَ جُبَيْرُ بْنُ مُطْعِمٍ إِنْ قَتَلْتَ حَمْزَةَ بِعَمِّي فَأَنْتَ حُرٌّ، قَالَ فَلَمَّا أَنْ خَرَجَ النَّاسُ عَامَ عَيْنَيْنِ ـ وَعَيْنَيْنِ جَبَلٌ بِحِيَالِ أُحُدٍ، بَيْنَهُ وَبَيْنَهُ وَادٍ ـ خَرَجْتُ مَعَ النَّاسِ إِلَى الْقِتَالِ، فَلَمَّا اصْطَفُّوا لِلْقِتَالِ خَرَجَ سِبَاعٌ فَقَالَ هَلْ مِنْ مُبَارِزٍ قَالَ فَخَرَجَ إِلَيْهِ حَمْزَةُ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ فَقَالَ يَا سِبَاعُ يَا ابْنَ أُمِّ أَنْمَارٍ مُقَطِّعَةِ الْبُظُورِ، أَتُحَادُّ اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم قَالَ ثُمَّ شَدَّ عَلَيْهِ فَكَانَ كَأَمْسِ الذَّاهِبِ ـ قَالَ ـ وَكَمَنْتُ لِحَمْزَةَ تَحْتَ صَخْرَةٍ فَلَمَّا دَنَا مِنِّي رَمَيْتُهُ بِحَرْبَتِي، فَأَضَعُهَا فِي ثُنَّتِهِ حَتَّى خَرَجَتْ مِنْ بَيْنِ وَرِكَيْهِ ـ قَالَ ـ فَكَانَ ذَاكَ الْعَهْدَ بِهِ، فَلَمَّا رَجَعَ النَّاسُ رَجَعْتُ مَعَهُمْ فَأَقَمْتُ بِمَكَّةَ، حَتَّى فَشَا فِيهَا الإِسْلاَمُ، ثُمَّ خَرَجْتُ إِلَى الطَّائِفِ، فَأَرْسَلُوا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم رَسُولاً، فَقِيلَ لِي إِنَّهُ لاَ يَهِيجُ الرُّسُلَ ـ قَالَ ـ فَخَرَجْتُ مَعَهُمْ حَتَّى قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَلَمَّا رَآنِي قَالَ "" آنْتَ وَحْشِيٌّ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" أَنْتَ قَتَلْتَ حَمْزَةَ "". قُلْتُ قَدْ كَانَ مِنَ الأَمْرِ مَا بَلَغَكَ. قَالَ "" فَهَلْ تَسْتَطِيعُ أَنْ تُغَيِّبَ وَجْهَكَ عَنِّي "". قَالَ فَخَرَجْتُ، فَلَمَّا قُبِضَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَخَرَجَ مُسَيْلِمَةُ الْكَذَّابُ قُلْتُ لأَخْرُجَنَّ إِلَى مُسَيْلِمَةَ لَعَلِّي أَقْتُلُهُ فَأُكَافِئَ بِهِ حَمْزَةَ ـ قَالَ ـ فَخَرَجْتُ مَعَ النَّاسِ، فَكَانَ مِنْ أَمْرِهِ مَا كَانَ ـ قَالَ ـ فَإِذَا رَجُلٌ قَائِمٌ فِي ثَلْمَةِ جِدَارٍ، كَأَنَّهُ جَمَلٌ أَوْرَقُ ثَائِرُ الرَّأْسِ ـ قَالَ ـ فَرَمَيْتُهُ بِحَرْبَتِي، فَأَضَعُهَا بَيْنَ ثَدْيَيْهِ حَتَّى خَرَجَتْ مِنْ بَيْنِ كَتِفَيْهِ ـ قَالَ ـ وَوَثَبَ إِلَيْهِ رَجُلٌ مِنَ الأَنْصَارِ، فَضَرَبَهُ بِالسَّيْفِ عَلَى هَامَتِهِ. قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْفَضْلِ فَأَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ يَسَارٍ أَنَّهُ سَمِعَ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ فَقَالَتْ جَارِيَةٌ عَلَى ظَهْرِ بَيْتٍ وَا أَمِيرَ الْمُؤْمِنِينَ، قَتَلَهُ الْعَبْدُ الأَسْوَدُ.
பாடம் : 24
ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி137
4072. ஜஅஃபர் பின் அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
நான் (ஒரு பயணத்தில்) உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நாங்கள் ஹிம்ஸு (நகரு)க்கு138 வந்து சேர்ந்தபோது என்னிடம், உபைதுல்லாஹ் பின் அதீ அவர்கள், “(உஹுத் போரின்போது ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றவரான) வஹ்ஷீ (ரலி) அவர்களைச் சந்திக்க உங்களுக்கு விருப்பமுண்டா? (நாம் அவர்களைச் சந்தித்து) ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றது பற்றிக் கேட்போமே!” என்று கூறினார்கள்.
நான், சரி என்றேன். வஹ்ஷீ (ரலி) அவர்கள் ஹிம்ஸில் வசித்துக்கொண்டி ருந்தார். (நாங்கள் அங்கு போய் அங்குள்ளவர்களிடம்) அவரைப் பற்றி விசாரித்தோம். “அவர் தமது அந்தக் கோட்டைக்குள் இருக்கிறார்; அவர் தண்ணீரால் நிரப்பப்பட்ட பெரிய தோல் பை போன்று (பருமனாக) இருப்பார்” என்று எங்களிடம் கூறப்பட்டது.
பிறகு நாங்கள் (அவரிடம்) வந்தோம். சிறிது நேரம் அவரருகில் நின்றோம். பிறகு அவருக்கு நாங்கள் சலாம் சொன்னபோது, அவர் (எங்களுக்கு) பதில் சலாம் சொன்னார்.
உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் தமது தலைப்பாகைத் துணியால், தம் இரு கண்களையும் கால்களையும் தவிர வேறெதையும் வஹ்ஷீ (ரலி) அவர்கள் பார்க்க முடியாத அளவுக்குச் சுற்றிக் கட்டியிருந்தார். அப்போது, உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், “வஹ்ஷீ அவர்களே! என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?” என்று கேட்டார்கள்.
அப்போது வஹ்ஷீ (ரலி) அவர்கள், உபைதுல்லாஹ் அவர்களைப் பார்த்தார். பிறகு “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை. (உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை.) ஆயினும், எனக்கு இது தெரியும்: அதீ பின் அல்கியார் ஒரு பெண்ணைத் மணமுடித்தார்.139 அந்தப் பெண், “உம்மு கித்தால் பின்த் அபில்ஈஸ்' என்று அழைக்கப்பட்டார். அதீ அவர்களுக்கு (மனைவி) உம்மு கித்தால் மக்காவில் வைத்து ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்தார். அப்போது, அந்தக் குழந்தைக்குப் பாலூட்டும் செவிலித் தாயை நானே தேடினேன். (பாலூட்டுபவளைக் கண்டு பிடித்த பிறகு) நான் அந்தக் குழந்தையைச் சுமந்துகொண்டு, அதன் தாயுடன் சென்று அந்தக் குழந்தையைப் பாலூட்டுபவளிடம் ஒப்படைத்தேன். (அந்தக் குழந்தையின் பாதங்களை அப்போது நான் பார்த்தேன்.) உம்முடைய இரு பாதங்களைப் பார்த்தால் அது போலவே இருக்கிறது” என்று கூறினார்.
அப்போது உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், மூடியிருந்த தமது முகத்தைத் திறந்தார்கள். பிறகு, “ஹம்ஸா (ரலி) அவர்களை நீங்கள் கொன்றது பற்றி எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். வஹ்ஷீ (ரலி), “சரி (சொல்கிறேன்)” என்று கூறினார். (பிறகு, கொலைச் சம்பவத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்:)
ஹம்ஸா (ரலி) அவர்கள் பத்ர் போரில் (என் எசமான் ஜுபைருடைய தந்தையின் சகோதரரான) துஐமா பின் அதீ பின் அல்கியார் என்பாரைக் கொலை செய்திருந்தார். எனவே, என் எசமான் ஜுபைர் பின் முத்இம் என்னிடம், “என் சிறிய தந்தை(யின் கொலை)க்குப் பதிலாக ஹம்ஸாவை நீ கொன்றால் நீ (அடிமைத் தளையிலிருந்து) விடுதலையாவாய்” என்று கூறினார்.
ஆகவே, அய்னைன் (உஹுத்) ஆண்டில் -அய்னைன் என்பது உஹுத் மலைக்கருகிலுள்ள ஒரு மலையாகும். இந்த இரு மலைகளுக்குமிடையில் ஒரு பள்ளத்தாக்கு உண்டு - (குறைஷி) மக்கள் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றபோது அம்மக்களுடன் போர்(க் களம்) நோக்கி நானும் சென்றேன். மக்கள் போருக்காக அணிவகுத்து நின்றபோது சிபாஉ பின் அப்தில் உஸ்ஸா என்பவன் (அணியை விட்டு) முன்னால் வந்து, “(என்னோடு) தனியே மோதுபவர் உண்டா?” என்று கேட்டான். அவனை நோக்கி ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் கிளம்பி வந்து, பெண்களுக்கு விருத்தசேதனம் செய்யும் உம்மு அன்மாரின் மகனே! சிபாஉவே! நீ அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுடனும் (பகைத்துக்கொண்டு) மோத வந்திருக்கி றாயா?” என்று கேட்டார்கள்.
பிறகு ஹம்ஸா (ரலி) அவர்கள் அவன் மீது (பாய்ந்து) கடுமையாகத் தாக்கினார்கள்.அவன் கழிந்து போய்விட்ட நேற்றையதினம் போல் (மடிந்தவனாக) ஆகிவிட்டான். நான் ஹம்ஸா (அவர்களைக் கொல்லத் தருணம் எதிர்பார்த்து) அவர்களுக்காக ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்துகொண்டேன். ஹம்ஸா அவர்கள் என்னை(க் கவனிக்காமல்) நெருங்கி வந்தபோது, எனது ஈட்டியை அவரது மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன்.
அது (பாய்ந்து) அவரது புட்டத்திற்கிடையிலிருந்து வெளியேறியது. அதுதான் ஹம்ஸா அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. பிறகு குறைஷியர் (உஹுதிலிருந்து மக்காவை நோக்கி) திரும்பிச் சென்றபோது நானும் அவர்களுடன் திரும்பினேன்.
மக்காவிற்குப் போய் அங்கு (வெற்றி கிடைத்து) இஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன். (மக்கா வெற்றி கொள்ளப்பட்டபின்) அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்கு (ஓடிச்) சென்றுவிட்டேன். தாயிஃப்வாசிகள் (இஸ்லாத்தை அறிந்துகொள்ளவும், அதை ஏற்று நடக்கவும் கருதி) தங்கள் தூதுக் குழுவினரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர்.140
அப்போது, என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மிடம் வரும்) தூதுவர்களுக்குத் தொல்லை தரமாட்டார் கள்; (எனவே, தூதுக் குழுவினருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்)” என்று கூறப்பட்டது. எனவே, தூதுக் குழுவின ருடன் நானும் புறப்பட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தேன்.
என்னை அவர்கள் கண்டபோது, “நீர் வஹ்ஷீதானே?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்று கூறினேன். “நீர் தானே ஹம்ஸாவைக் கொன்றீர்?” என்று கேட்டார்கள். நான், “உங்களுக்குக் கிடைத்த தகவலின்படி விஷயம் நடந்தது உண்மைதான்” என்று கூறினேன். அப்போது அவர்கள், “(உம்மைக் காணும்போது என் தந்தையின் சகோதரர் ஹம்ஸாவின் நினைவு வரும், எனவே,) என்னைவிட்டு உன் முகத்தை மறைத்துக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார்கள். உடனே, நான் (அங்கிருந்து) புறப்பட்டுவிட்டேன்.
நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டபோது, (தன்னை ஒரு நபி என்று வாதிட்ட வண்ணம்) பெரும் பொய்யன் முசைலிமா கிளம்பினான். (அவன் நபித்தோழர்களுடன் போர் புரிவதற்காகப் பெரும்படை ஒன்றைத் திரட்டலானான். அவனை முறியடிப்பதற்காக அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களும் படை திரட்டி அதற்கு காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள்) நான் (என் மனத்திற்குள்), “நிச்சயம் நான் முசைலிமாவை நோக்கிப் புறப்பட்டுச் செல்வேன். அவனை நான் கொல்ல (வாய்ப்புக் கிடைக்க)லாம். அதன் மூலம், (முன்பு) நான் ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றதற்கு(ப் பிரயாசித்தம் தேடி) ஈடு செய்யலாம்” என்று கூறிக்கொண்டேன். (அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிய போர்ப்படையிóருந்த) மக்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன். அப்போதுதான் அவனுடைய விஷயத்தில் நடக்க வேண்டியது நடந்து முடிந்தது.141
அப்(போரின்)போது ஒரு மனிதன் ஒரு சுவரின் இடைவெளியில் நின்று கொண்டிருந்தான். அவன் தலைவிரி கோலத்துடன் (போரின் புழுதி படிந்து) சாம்பல் நிற ஒட்டகம் போன்றிருந்தான். அவன்மீது (ஹம்ஸா அவர்களைக் கொலை செய்த அதே) எனது ஈட்டியை எறிந்தேன்.
நான் அந்த ஈட்டியை அவனது இரு மார்புகளுக்கு மத்தியில் பாய்ச்சினேன். அது அவனது பின்தோள்களுக்கிடையிóருந்து வெளியேறியது. அவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடிவந்தார். தமது வாளால் அவனது உச்சந்தலைமீது ஓங்கி வெட்டிவிட்டார். (அவன்தான் முசைóமா.)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(முசைலிமா கொல்லப்பட்டபோது) ஒரு சிறுமி வீட்டின் முகட்டிலிருந்துகொண்டு, “அந்தோ! நம்பிக்கையாளர்களின் தலைவரை ஒரு கறுப்பு அடிமை (வஹ்ஷீ) கொலை செய்துவிட்டான்” என்று (உரக்கச் சப்தமிட்டுச்) சொன்னாள்.
அத்தியாயம் : 64
4072. ஜஅஃபர் பின் அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரஹ்) அவர்கள் கூறிய தாவது:
நான் (ஒரு பயணத்தில்) உபைதுல்லாஹ் பின் அதீ பின் அல்கியார் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நாங்கள் ஹிம்ஸு (நகரு)க்கு138 வந்து சேர்ந்தபோது என்னிடம், உபைதுல்லாஹ் பின் அதீ அவர்கள், “(உஹுத் போரின்போது ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றவரான) வஹ்ஷீ (ரலி) அவர்களைச் சந்திக்க உங்களுக்கு விருப்பமுண்டா? (நாம் அவர்களைச் சந்தித்து) ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றது பற்றிக் கேட்போமே!” என்று கூறினார்கள்.
நான், சரி என்றேன். வஹ்ஷீ (ரலி) அவர்கள் ஹிம்ஸில் வசித்துக்கொண்டி ருந்தார். (நாங்கள் அங்கு போய் அங்குள்ளவர்களிடம்) அவரைப் பற்றி விசாரித்தோம். “அவர் தமது அந்தக் கோட்டைக்குள் இருக்கிறார்; அவர் தண்ணீரால் நிரப்பப்பட்ட பெரிய தோல் பை போன்று (பருமனாக) இருப்பார்” என்று எங்களிடம் கூறப்பட்டது.
பிறகு நாங்கள் (அவரிடம்) வந்தோம். சிறிது நேரம் அவரருகில் நின்றோம். பிறகு அவருக்கு நாங்கள் சலாம் சொன்னபோது, அவர் (எங்களுக்கு) பதில் சலாம் சொன்னார்.
உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் தமது தலைப்பாகைத் துணியால், தம் இரு கண்களையும் கால்களையும் தவிர வேறெதையும் வஹ்ஷீ (ரலி) அவர்கள் பார்க்க முடியாத அளவுக்குச் சுற்றிக் கட்டியிருந்தார். அப்போது, உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், “வஹ்ஷீ அவர்களே! என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?” என்று கேட்டார்கள்.
அப்போது வஹ்ஷீ (ரலி) அவர்கள், உபைதுல்லாஹ் அவர்களைப் பார்த்தார். பிறகு “அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை. (உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை.) ஆயினும், எனக்கு இது தெரியும்: அதீ பின் அல்கியார் ஒரு பெண்ணைத் மணமுடித்தார்.139 அந்தப் பெண், “உம்மு கித்தால் பின்த் அபில்ஈஸ்' என்று அழைக்கப்பட்டார். அதீ அவர்களுக்கு (மனைவி) உம்மு கித்தால் மக்காவில் வைத்து ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்தார். அப்போது, அந்தக் குழந்தைக்குப் பாலூட்டும் செவிலித் தாயை நானே தேடினேன். (பாலூட்டுபவளைக் கண்டு பிடித்த பிறகு) நான் அந்தக் குழந்தையைச் சுமந்துகொண்டு, அதன் தாயுடன் சென்று அந்தக் குழந்தையைப் பாலூட்டுபவளிடம் ஒப்படைத்தேன். (அந்தக் குழந்தையின் பாதங்களை அப்போது நான் பார்த்தேன்.) உம்முடைய இரு பாதங்களைப் பார்த்தால் அது போலவே இருக்கிறது” என்று கூறினார்.
அப்போது உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், மூடியிருந்த தமது முகத்தைத் திறந்தார்கள். பிறகு, “ஹம்ஸா (ரலி) அவர்களை நீங்கள் கொன்றது பற்றி எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா?” என்று கேட்டார்கள். வஹ்ஷீ (ரலி), “சரி (சொல்கிறேன்)” என்று கூறினார். (பிறகு, கொலைச் சம்பவத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்:)
ஹம்ஸா (ரலி) அவர்கள் பத்ர் போரில் (என் எசமான் ஜுபைருடைய தந்தையின் சகோதரரான) துஐமா பின் அதீ பின் அல்கியார் என்பாரைக் கொலை செய்திருந்தார். எனவே, என் எசமான் ஜுபைர் பின் முத்இம் என்னிடம், “என் சிறிய தந்தை(யின் கொலை)க்குப் பதிலாக ஹம்ஸாவை நீ கொன்றால் நீ (அடிமைத் தளையிலிருந்து) விடுதலையாவாய்” என்று கூறினார்.
ஆகவே, அய்னைன் (உஹுத்) ஆண்டில் -அய்னைன் என்பது உஹுத் மலைக்கருகிலுள்ள ஒரு மலையாகும். இந்த இரு மலைகளுக்குமிடையில் ஒரு பள்ளத்தாக்கு உண்டு - (குறைஷி) மக்கள் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்றபோது அம்மக்களுடன் போர்(க் களம்) நோக்கி நானும் சென்றேன். மக்கள் போருக்காக அணிவகுத்து நின்றபோது சிபாஉ பின் அப்தில் உஸ்ஸா என்பவன் (அணியை விட்டு) முன்னால் வந்து, “(என்னோடு) தனியே மோதுபவர் உண்டா?” என்று கேட்டான். அவனை நோக்கி ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள் கிளம்பி வந்து, பெண்களுக்கு விருத்தசேதனம் செய்யும் உம்மு அன்மாரின் மகனே! சிபாஉவே! நீ அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுடனும் (பகைத்துக்கொண்டு) மோத வந்திருக்கி றாயா?” என்று கேட்டார்கள்.
பிறகு ஹம்ஸா (ரலி) அவர்கள் அவன் மீது (பாய்ந்து) கடுமையாகத் தாக்கினார்கள்.அவன் கழிந்து போய்விட்ட நேற்றையதினம் போல் (மடிந்தவனாக) ஆகிவிட்டான். நான் ஹம்ஸா (அவர்களைக் கொல்லத் தருணம் எதிர்பார்த்து) அவர்களுக்காக ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்துகொண்டேன். ஹம்ஸா அவர்கள் என்னை(க் கவனிக்காமல்) நெருங்கி வந்தபோது, எனது ஈட்டியை அவரது மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன்.
அது (பாய்ந்து) அவரது புட்டத்திற்கிடையிலிருந்து வெளியேறியது. அதுதான் ஹம்ஸா அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. பிறகு குறைஷியர் (உஹுதிலிருந்து மக்காவை நோக்கி) திரும்பிச் சென்றபோது நானும் அவர்களுடன் திரும்பினேன்.
மக்காவிற்குப் போய் அங்கு (வெற்றி கிடைத்து) இஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன். (மக்கா வெற்றி கொள்ளப்பட்டபின்) அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்கு (ஓடிச்) சென்றுவிட்டேன். தாயிஃப்வாசிகள் (இஸ்லாத்தை அறிந்துகொள்ளவும், அதை ஏற்று நடக்கவும் கருதி) தங்கள் தூதுக் குழுவினரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர்.140
அப்போது, என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மிடம் வரும்) தூதுவர்களுக்குத் தொல்லை தரமாட்டார் கள்; (எனவே, தூதுக் குழுவினருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்)” என்று கூறப்பட்டது. எனவே, தூதுக் குழுவின ருடன் நானும் புறப்பட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தேன்.
என்னை அவர்கள் கண்டபோது, “நீர் வஹ்ஷீதானே?” என்று கேட்டார்கள். நான், “ஆம்' என்று கூறினேன். “நீர் தானே ஹம்ஸாவைக் கொன்றீர்?” என்று கேட்டார்கள். நான், “உங்களுக்குக் கிடைத்த தகவலின்படி விஷயம் நடந்தது உண்மைதான்” என்று கூறினேன். அப்போது அவர்கள், “(உம்மைக் காணும்போது என் தந்தையின் சகோதரர் ஹம்ஸாவின் நினைவு வரும், எனவே,) என்னைவிட்டு உன் முகத்தை மறைத்துக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார்கள். உடனே, நான் (அங்கிருந்து) புறப்பட்டுவிட்டேன்.
நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்டபோது, (தன்னை ஒரு நபி என்று வாதிட்ட வண்ணம்) பெரும் பொய்யன் முசைலிமா கிளம்பினான். (அவன் நபித்தோழர்களுடன் போர் புரிவதற்காகப் பெரும்படை ஒன்றைத் திரட்டலானான். அவனை முறியடிப்பதற்காக அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களும் படை திரட்டி அதற்கு காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள்) நான் (என் மனத்திற்குள்), “நிச்சயம் நான் முசைலிமாவை நோக்கிப் புறப்பட்டுச் செல்வேன். அவனை நான் கொல்ல (வாய்ப்புக் கிடைக்க)லாம். அதன் மூலம், (முன்பு) நான் ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றதற்கு(ப் பிரயாசித்தம் தேடி) ஈடு செய்யலாம்” என்று கூறிக்கொண்டேன். (அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பிய போர்ப்படையிóருந்த) மக்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன். அப்போதுதான் அவனுடைய விஷயத்தில் நடக்க வேண்டியது நடந்து முடிந்தது.141
அப்(போரின்)போது ஒரு மனிதன் ஒரு சுவரின் இடைவெளியில் நின்று கொண்டிருந்தான். அவன் தலைவிரி கோலத்துடன் (போரின் புழுதி படிந்து) சாம்பல் நிற ஒட்டகம் போன்றிருந்தான். அவன்மீது (ஹம்ஸா அவர்களைக் கொலை செய்த அதே) எனது ஈட்டியை எறிந்தேன்.
நான் அந்த ஈட்டியை அவனது இரு மார்புகளுக்கு மத்தியில் பாய்ச்சினேன். அது அவனது பின்தோள்களுக்கிடையிóருந்து வெளியேறியது. அவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடிவந்தார். தமது வாளால் அவனது உச்சந்தலைமீது ஓங்கி வெட்டிவிட்டார். (அவன்தான் முசைóமா.)
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(முசைலிமா கொல்லப்பட்டபோது) ஒரு சிறுமி வீட்டின் முகட்டிலிருந்துகொண்டு, “அந்தோ! நம்பிக்கையாளர்களின் தலைவரை ஒரு கறுப்பு அடிமை (வஹ்ஷீ) கொலை செய்துவிட்டான்” என்று (உரக்கச் சப்தமிட்டுச்) சொன்னாள்.
அத்தியாயம் : 64
4073. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامٍ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى قَوْمٍ فَعَلُوا بِنَبِيِّهِ ـ يُشِيرُ إِلَى رَبَاعِيَتِهِ ـ اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى رَجُلٍ يَقْتُلُهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம் : 25
உஹுத் நாளில் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள்.142
4073. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உஹுத் போரில் உடைக்கப்பட்ட) தமது (முன்வாய்ப் பற்களில், கீழ் வரிசையில் வலப்புறம் இருந்த) பல்லைச் சுட்டிக்காட்டி143 “நபியை (இப்படிச்) செய்துவிட்ட சமுதாயத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது” என்று கூறினார்கள். (மேலும்,) “அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் எவனைக் கொன்றுவிடுவார்களோ அவன்மீது(ம்) அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகி விட்டது” என்று கூறினார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 64
4073. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உஹுத் போரில் உடைக்கப்பட்ட) தமது (முன்வாய்ப் பற்களில், கீழ் வரிசையில் வலப்புறம் இருந்த) பல்லைச் சுட்டிக்காட்டி143 “நபியை (இப்படிச்) செய்துவிட்ட சமுதாயத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது” என்று கூறினார்கள். (மேலும்,) “அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் எவனைக் கொன்றுவிடுவார்களோ அவன்மீது(ம்) அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகி விட்டது” என்று கூறினார்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 64
4074. حَدَّثَنِي مَخْلَدُ بْنُ مَالِكٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأُمَوِيُّ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى مَنْ قَتَلَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي سَبِيلِ اللَّهِ، اشْتَدَّ غَضَبُ اللَّهِ عَلَى قَوْمٍ دَمَّوْا وَجْهَ نَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 25
உஹுத் நாளில் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள்.142
4074. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் பாதையில் நபி (ஸல்) அவர்கள் எவனைக் கொன்று விட்டார் களோ அவன்மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது. (மேலும்,) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் இரத்தக் காயம் ஏற்படுத்தியவர்கள்மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது.144
அத்தியாயம் : 64
4074. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் பாதையில் நபி (ஸல்) அவர்கள் எவனைக் கொன்று விட்டார் களோ அவன்மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது. (மேலும்,) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் இரத்தக் காயம் ஏற்படுத்தியவர்கள்மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது.144
அத்தியாயம் : 64
4075. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، عَنْ أَبِي حَازِمٍ، أَنَّهُ سَمِعَ سَهْلَ بْنَ سَعْدٍ، وَهْوَ يُسْأَلُ عَنْ جُرْحِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَمَا وَاللَّهِ إِنِّي لأَعْرِفُ مَنْ كَانَ يَغْسِلُ جُرْحَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَنْ كَانَ يَسْكُبُ الْمَاءَ وَبِمَا دُووِيَ ـ قَالَ كَانَتْ فَاطِمَةُ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ بِنْتُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَغْسِلُهُ وَعَلِيٌّ يَسْكُبُ الْمَاءَ بِالْمِجَنِّ، فَلَمَّا رَأَتْ فَاطِمَةُ أَنَّ الْمَاءَ لاَ يَزِيدُ الدَّمَ إِلاَّ كَثْرَةً أَخَذَتْ قِطْعَةً مِنْ حَصِيرٍ، فَأَحْرَقَتْهَا وَأَلْصَقَتْهَا فَاسْتَمْسَكَ الدَّمُ، وَكُسِرَتْ رَبَاعِيَتُهُ يَوْمَئِذٍ، وَجُرِحَ وَجْهُهُ، وَكُسِرَتِ الْبَيْضَةُ عَلَى رَأْسِهِ.
பாடம் : 25
உஹுத் நாளில் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள்.142
4075. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (உஹுத் போரின்போது) ஏற்பட்ட காயங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காயத்தைக் கழுவிவிட்டவரையும், (கழுவு வதற்காகத்) தண்ணீரை ஊற்றிவிட்டுக் கொண்டிருந்தவரையும், சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருளையும் நான் அறிவேன்” என்று கூறிவிட்டு (பின்வருமாறு விளக்கிச்) சொன்னார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அந்தக் காயத்தைக் கழுவி விட்டுக்கொண்டிருந்தார்கள். அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (தமது) கேடயத்தில் (தண்ணீர் நிரப்பி வந்து அந்தக் காயத்தைக் கழுவுவதற்காக) நீர் ஊற்றிக்கொண்டிருந்தார்கள். தண்ணீர் மேன்மேலும் இரத்தத்தை அதிகமாக்குவதையே கண்டபோது, ஃபாத்திமா (ரலி) அவர்கள் பாயின் ஒரு பகுதியை எடுத்துவந்து (சாம்பலாகும்வரை) அதைக் கரித்து, அதைக் காயத்தின் மீது அழுத்திவைத்தார்கள். இரத்தம் (வருவது) நின்றுவிட்டது.
அன்றைய (உஹுத் போர்) தினத்தில் நபி (ஸல்) அவர்களின் கீழ்ப்பல் உடைக்கப் பட்டது. மேலும், அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. மேலும், (அவர்களது) தலைக் கவசம் அவர்களுடைய தலையின் மீதே வைத்து நொறுக்கப்பட்டது.
அத்தியாயம் : 64
4075. அபூஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (உஹுத் போரின்போது) ஏற்பட்ட காயங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காயத்தைக் கழுவிவிட்டவரையும், (கழுவு வதற்காகத்) தண்ணீரை ஊற்றிவிட்டுக் கொண்டிருந்தவரையும், சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்ட பொருளையும் நான் அறிவேன்” என்று கூறிவிட்டு (பின்வருமாறு விளக்கிச்) சொன்னார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அந்தக் காயத்தைக் கழுவி விட்டுக்கொண்டிருந்தார்கள். அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் (தமது) கேடயத்தில் (தண்ணீர் நிரப்பி வந்து அந்தக் காயத்தைக் கழுவுவதற்காக) நீர் ஊற்றிக்கொண்டிருந்தார்கள். தண்ணீர் மேன்மேலும் இரத்தத்தை அதிகமாக்குவதையே கண்டபோது, ஃபாத்திமா (ரலி) அவர்கள் பாயின் ஒரு பகுதியை எடுத்துவந்து (சாம்பலாகும்வரை) அதைக் கரித்து, அதைக் காயத்தின் மீது அழுத்திவைத்தார்கள். இரத்தம் (வருவது) நின்றுவிட்டது.
அன்றைய (உஹுத் போர்) தினத்தில் நபி (ஸல்) அவர்களின் கீழ்ப்பல் உடைக்கப் பட்டது. மேலும், அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. மேலும், (அவர்களது) தலைக் கவசம் அவர்களுடைய தலையின் மீதே வைத்து நொறுக்கப்பட்டது.
அத்தியாயம் : 64