3956. حَدَّثَنِي مَحْمُودٌ، حَدَّثَنَا وَهْبٌ، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ اسْتُصْغِرْتُ أَنَا وَابْنُ عُمَرَ يَوْمَ بَدْرٍ، وَكَانَ الْمُهَاجِرُونَ يَوْمَ بَدْرٍ نَيِّفًا عَلَى سِتِّينَ، وَالأَنْصَارُ نَيِّفًا وَأَرْبَعِينَ وَمِائَتَيْنِ.
பாடம் : 6
பத்ர் போரில் கலந்துகொண்டவர் களின் எண்ணிக்கை
3956. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் இப்னு உமர் (ரலி) அவர்களும் பத்ர் போரின்போது சிறுவர்களாகக் கருதப் பட்டோம். பத்ர் போரில் அறுபதுக்கும் சற்றுக் கூடுதலான முஹாஜிர்களும் இரு நூற்று நாற்பதுக்கும் சற்றுக் கூடுதலான அன்சாரிகளும் இருந்தனர்.8
அத்தியாயம் : 64
3956. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் இப்னு உமர் (ரலி) அவர்களும் பத்ர் போரின்போது சிறுவர்களாகக் கருதப் பட்டோம். பத்ர் போரில் அறுபதுக்கும் சற்றுக் கூடுதலான முஹாஜிர்களும் இரு நூற்று நாற்பதுக்கும் சற்றுக் கூடுதலான அன்சாரிகளும் இருந்தனர்.8
அத்தியாயம் : 64
3957. حَدَّثَنَا عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ يَقُولُ حَدَّثَنِي أَصْحَابُ، مُحَمَّدٍ صلى الله عليه وسلم مِمَّنْ شَهِدَ بَدْرًا أَنَّهُمْ كَانُوا عِدَّةَ أَصْحَابِ طَالُوتَ الَّذِينَ جَازُوا مَعَهُ النَّهَرَ، بِضْعَةَ عَشَرَ وَثَلاَثَمِائَةٍ. قَالَ الْبَرَاءُ لاَ وَاللَّهِ مَا جَاوَزَ مَعَهُ النَّهَرَ إِلاَّ مُؤْمِنٌ.
பாடம் : 6
பத்ர் போரில் கலந்துகொண்டவர் களின் எண்ணிக்கை
3957. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ர் போரில் கலந்துகொண்ட நபித் தோழர்கள் என்னிடம் கூறினார்கள்: தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்றவர்களான முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலான அவர்களுடைய தோழர்களின் எண்ணிக்கையில் நாங்கள் இருந்தோம்.9
மேலும், பராஉ (ரலி) அவர்கள் கூறி னார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! தாலூத் அவர்களுடன் இறைநம்பிக்கை யாளர்களைத் தவிர வேறெவரும் ஆற்றைக் கடக்கவில்லை.
அத்தியாயம் : 64
3957. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ர் போரில் கலந்துகொண்ட நபித் தோழர்கள் என்னிடம் கூறினார்கள்: தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்றவர்களான முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலான அவர்களுடைய தோழர்களின் எண்ணிக்கையில் நாங்கள் இருந்தோம்.9
மேலும், பராஉ (ரலி) அவர்கள் கூறி னார்கள்:
அல்லாஹ்வின் மீதாணையாக! தாலூத் அவர்களுடன் இறைநம்பிக்கை யாளர்களைத் தவிர வேறெவரும் ஆற்றைக் கடக்கவில்லை.
அத்தியாயம் : 64
3958. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ، قَالَ كُنَّا أَصْحَابَ مُحَمَّدٍ صلى الله عليه وسلم نَتَحَدَّثُ أَنَّ عِدَّةَ أَصْحَابِ بَدْرٍ عَلَى عِدَّةِ أَصْحَابِ طَالُوتَ الَّذِينَ جَاوَزُوا مَعَهُ النَّهَرَ، وَلَمْ يُجَاوِزْ مَعَهُ إِلاَّ مُؤْمِنٌ، بِضْعَةَ عَشَرَ وَثَلاَثَمِائَةٍ.
பாடம் : 6
பத்ர் போரில் கலந்துகொண்டவர் களின் எண்ணிக்கை
3958. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர் களான நாங்கள் பேசிக்கொள்வோம்:
பத்ர் போரில் கலந்துகொண்டவர் களின் எண்ணிக்கையும், தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களுடைய தோழர்களின் எண்ணிக்கையும் முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலேயாகும். அவர்களுடன் இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் ஆற்றைக் கடக்கவில்லை.
அத்தியாயம் : 64
3958. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர் களான நாங்கள் பேசிக்கொள்வோம்:
பத்ர் போரில் கலந்துகொண்டவர் களின் எண்ணிக்கையும், தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களுடைய தோழர்களின் எண்ணிக்கையும் முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலேயாகும். அவர்களுடன் இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் ஆற்றைக் கடக்கவில்லை.
அத்தியாயம் : 64
3959. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ،. وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ كُنَّا نَتَحَدَّثُ أَنَّ أَصْحَابَ بَدْرٍ ثَلاَثُمِائَةٍ وَبِضْعَةَ عَشَرَ، بِعِدَّةِ أَصْحَابِ طَالُوتَ الَّذِينَ جَاوَزُوا مَعَهُ النَّهَرَ، وَمَا جَاوَزَ مَعَهُ إِلاَّ مُؤْمِنٌ.
பாடம் : 6
பத்ர் போரில் கலந்துகொண்டவர் களின் எண்ணிக்கை
3959. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலாயிருந்த பத்ர் போர் வீரர்களின் எண்ணிக்கை, தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களுடைய தோழர்களின் எண்ணிக்கையே ஆகும். இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் அவர்களுடன் ஆற்றைக் கடக்கவில்லை” என்று நாங்கள் பேசிக் கொள்வது வழக்கம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
3959. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“முன்னூற்றுப் பத்துக்கும் சற்றுக் கூடுதலாயிருந்த பத்ர் போர் வீரர்களின் எண்ணிக்கை, தாலூத் அவர்களுடன் ஆற்றைக் கடந்து சென்ற அவர்களுடைய தோழர்களின் எண்ணிக்கையே ஆகும். இறைநம்பிக்கையாளர்களைத் தவிர வேறெவரும் அவர்களுடன் ஆற்றைக் கடக்கவில்லை” என்று நாங்கள் பேசிக் கொள்வது வழக்கம்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
3960. حَدَّثَنِي عَمْرُو بْنُ خَالِدٍ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ اسْتَقْبَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْكَعْبَةَ فَدَعَا عَلَى نَفَرٍ مِنْ قُرَيْشٍ، عَلَى شَيْبَةَ بْنِ رَبِيعَةَ، وَعُتْبَةَ بْنِ رَبِيعَةَ وَالْوَلِيدِ بْنِ عُتْبَةَ، وَأَبِي جَهْلِ بْنِ هِشَامٍ. فَأَشْهَدُ بِاللَّهِ لَقَدْ رَأَيْتُهُمْ صَرْعَى، قَدْ غَيَّرَتْهُمُ الشَّمْسُ، وَكَانَ يَوْمًا حَارًّا.
பாடம் : 7
குறைஷி குல இறைமறுப்பாளர் க(ளின் தலைவர்க)ளான ஷைபா, உத்பா, வலீத், அபூஜஹ்ல் பின் ஹிஷாம் போன்றோர்க்கெதிராக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்ததும் அவர்கள் (அனைவரும்) அழிந்துபோனதும்10
3960. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவை நோக்கி, குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, அபூஜஹ்ல் பின் ஹிஷாம் போன்ற சிலருக்கெதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் (நால்வரும்) சூரிய வெப்பத்தால் (உடல் உப்பி, நிறம் மாறி) உருமாறி (பத்ர் போர்க்களத்தில்) மாண்டு கிடந்ததை நான் கண்டேன். அன்றைய தினம் வெப்பம் நிறைந்த நாளாக இருந்தது.11
அத்தியாயம் : 64
3960. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவை நோக்கி, குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, அபூஜஹ்ல் பின் ஹிஷாம் போன்ற சிலருக்கெதிராகப் பிரார்த்தனை புரிந்தார்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் (நால்வரும்) சூரிய வெப்பத்தால் (உடல் உப்பி, நிறம் மாறி) உருமாறி (பத்ர் போர்க்களத்தில்) மாண்டு கிடந்ததை நான் கண்டேன். அன்றைய தினம் வெப்பம் நிறைந்த நாளாக இருந்தது.11
அத்தியாயம் : 64
3961. حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، أَخْبَرَنَا قَيْسٌ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه أَنَّهُ أَتَى أَبَا جَهْلٍ وَبِهِ رَمَقٌ يَوْمَ بَدْرٍ، فَقَالَ أَبُو جَهْلٍ هَلْ أَعْمَدُ مِنْ رَجُلٍ قَتَلْتُمُوهُ
பாடம் : 8
அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3961. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ர் போரில் அபூஜஹ்லின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தபோது நான் அவனிடம் வந்தேன். அப்போது அவன், “நீங்கள் எவனைக் கொலை செய்தீர்களோ அவனைவிடச் சிறந்தவன் ஒருவன் உண்டா?” என்று (தன்னைத்தானே புகழ்ந்தபடி) சொன்னான்.13
அத்தியாயம் : 64
3961. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ர் போரில் அபூஜஹ்லின் உயிர் ஊசலாடிக்கொண்டிருந்தபோது நான் அவனிடம் வந்தேன். அப்போது அவன், “நீங்கள் எவனைக் கொலை செய்தீர்களோ அவனைவிடச் சிறந்தவன் ஒருவன் உண்டா?” என்று (தன்னைத்தானே புகழ்ந்தபடி) சொன்னான்.13
அத்தியாயம் : 64
3962. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، أَنَّ أَنَسًا، حَدَّثَهُمْ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ح وَحَدَّثَنِي عَمْرُو بْنُ خَالِدٍ حَدَّثَنَا زُهَيْرٌ عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ يَنْظُرُ مَا صَنَعَ أَبُو جَهْلٍ "" فَانْطَلَقَ ابْنُ مَسْعُودٍ، فَوَجَدَهُ قَدْ ضَرَبَهُ ابْنَا عَفْرَاءَ حَتَّى بَرَدَ قَالَ آأَنْتَ أَبُو جَهْلٍ قَالَ فَأَخَذَ بِلِحْيَتِهِ. قَالَ وَهَلْ فَوْقَ رَجُلٍ قَتَلْتُمُوهُ أَوْ رَجُلٍ قَتَلَهُ قَوْمُهُ? قَالَ أَحْمَدُ بْنُ يُونُسَ أَنْتَ أَبُو جَهْلٍ?
பாடம் : 8
அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3962. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அபூஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் (பத்ர் போர் முடிந்தபோது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள்.
அப்போது அவனை அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே, அவன் குற்றுயிராகக் கிடக்கக் கண்டார் கள். அப்போது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அவனது தாடியைப் பிடித்துக் கொண்டு, “அபூஜஹ்ல் நீதானே!” என்று கேட்டார்கள்.
“நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனித னுக்கு மேலாக' அல்லது “தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப் பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக' ஒருவன் உண்டா?” என்று (தன்னைத் தானே பெருமைப்படுத்தியபடி) அவன் கேட்டான்.14
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
3962. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“அபூஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் (பத்ர் போர் முடிந்தபோது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள்.
அப்போது அவனை அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே, அவன் குற்றுயிராகக் கிடக்கக் கண்டார் கள். அப்போது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அவனது தாடியைப் பிடித்துக் கொண்டு, “அபூஜஹ்ல் நீதானே!” என்று கேட்டார்கள்.
“நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனித னுக்கு மேலாக' அல்லது “தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப் பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக' ஒருவன் உண்டா?” என்று (தன்னைத் தானே பெருமைப்படுத்தியபடி) அவன் கேட்டான்.14
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
3963. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ سُلَيْمَانَ التَّيْمِيِّ، عَنْ أَنَسٍ، رضى الله عنه قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ بَدْرٍ "" مَنْ يَنْظُرُ مَا فَعَلَ أَبُو جَهْلٍ "". فَانْطَلَقَ ابْنُ مَسْعُودٍ، فَوَجَدَهُ قَدْ ضَرَبَهُ ابْنَا عَفْرَاءَ حَتَّى بَرَدَ، فَأَخَذَ بِلِحْيَتِهِ فَقَالَ أَنْتَ أَبَا جَهْلٍ قَالَ وَهَلْ فَوْقَ رَجُلٍ قَتَلَهُ قَوْمُهُ أَوْ قَالَ قَتَلْتُمُوهُ.
பாடம் : 8
அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3963. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ர் போர் (நடந்த) நாளில், “அபூஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்து வரப்) போனார்கள். அவனை அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே அவன் குற்றுயிராகக் கிடக்கக் கண்டார்கள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அவனது தாடியைப் பிடித்துக்கொண்டு, “அபூஜஹ்லே! நீயா?” என்று கேட்டார்கள்.
(அப்போது) அவன், “ “தம் (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக' அல்லது “நீங்களே கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக' ஒருவன் உண்டா?” என்று கேட்டான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
3963. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
பத்ர் போர் (நடந்த) நாளில், “அபூஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அவனைப் பார்த்து வரப்) போனார்கள். அவனை அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும் பலமாகத்) தாக்கிவிடவே அவன் குற்றுயிராகக் கிடக்கக் கண்டார்கள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அவனது தாடியைப் பிடித்துக்கொண்டு, “அபூஜஹ்லே! நீயா?” என்று கேட்டார்கள்.
(அப்போது) அவன், “ “தம் (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக' அல்லது “நீங்களே கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக' ஒருவன் உண்டா?” என்று கேட்டான்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
3964. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ كَتَبْتُ عَنْ يُوسُفَ بْنِ الْمَاجِشُونِ، عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، فِي بَدْرٍ. يَعْنِي حَدِيثَ ابْنَىْ عَفْرَاءَ.
பாடம் : 8
அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3964. பத்ர் போரில் அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகியோர் அபூஜஹ்லைக் கொன்றது) தொடர்பான தகவல் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் வாயிலாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
3964. பத்ர் போரில் அஃப்ராவின் இரு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகியோர் அபூஜஹ்லைக் கொன்றது) தொடர்பான தகவல் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் வாயிலாகவும் வந்துள்ளது.
அத்தியாயம் : 64
3965. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الرَّقَاشِيُّ، حَدَّثَنَا مُعْتَمِرٌ، قَالَ سَمِعْتُ أَبِي يَقُولُ، حَدَّثَنَا أَبُو مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عُبَادٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ أَنَا أَوَّلُ، مَنْ يَجْثُو بَيْنَ يَدَىِ الرَّحْمَنِ لِلْخُصُومَةِ يَوْمَ الْقِيَامَةِ. وَقَالَ قَيْسُ بْنُ عُبَادٍ وَفِيهِمْ أُنْزِلَتْ {هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ} قَالَ هُمُ الَّذِينَ تَبَارَزُوا يَوْمَ بَدْرٍ حَمْزَةُ وَعَلِيٌّ وَعُبَيْدَةُ أَوْ أَبُو عُبَيْدَةَ بْنُ الْحَارِثِ وَشَيْبَةُ بْنُ رَبِيعَةَ وَعُتْبَةُ وَالْوَلِيدُ بْنُ عُتْبَةَ.
பாடம் : 8
அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3965. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இறைமறுப்பாளர்கள் போரிட்டது தொடர்பாக) மறுமை நாளில் (பெருங் கருணையாளன்) ரஹ்மானுக்கு முன்னால் வழக்காடுவதற்காக மண்டியிடுபவர்களில் (இந்தச் சமுதாயத்திலேயே) நான்தான் முதல் நபராக இருப்பேன்.15
கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“இவர்கள் தம்முடைய இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் (22:19) இறைவசனம், பத்ர் போரின்போது (களத்தில் இறங்கித்) தனித்து நின்று போராடிய (இஸ்லாமிய வீரர்களான) அலீ, ஹம்ஸா, உபைதா பின் அல்ஹாரிஸ் (ரலி) ஆகியோர் மற்றும் (இறைமறுப்பாளர்களான) ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா ஆகியோர் தொடர்பாகவே அருளப்பட்டது.16
அத்தியாயம் : 64
3965. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(இறைமறுப்பாளர்கள் போரிட்டது தொடர்பாக) மறுமை நாளில் (பெருங் கருணையாளன்) ரஹ்மானுக்கு முன்னால் வழக்காடுவதற்காக மண்டியிடுபவர்களில் (இந்தச் சமுதாயத்திலேயே) நான்தான் முதல் நபராக இருப்பேன்.15
கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“இவர்கள் தம்முடைய இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் (22:19) இறைவசனம், பத்ர் போரின்போது (களத்தில் இறங்கித்) தனித்து நின்று போராடிய (இஸ்லாமிய வீரர்களான) அலீ, ஹம்ஸா, உபைதா பின் அல்ஹாரிஸ் (ரலி) ஆகியோர் மற்றும் (இறைமறுப்பாளர்களான) ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா ஆகியோர் தொடர்பாகவே அருளப்பட்டது.16
அத்தியாயம் : 64
3966. حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عُبَادٍ، عَنْ أَبِي ذَرٍّ ـ رضى الله عنه ـ قَالَ نَزَلَتْ {هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ} فِي سِتَّةٍ مِنْ قُرَيْشٍ عَلِيٍّ وَحَمْزَةَ وَعُبَيْدَةَ بْنِ الْحَارِثِ وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ وَعُتْبَةَ بْنِ رَبِيعَةَ وَالْوَلِيدِ بْنِ عُتْبَةَ.
பாடம் : 8
அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3966. அபூதர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஆறு நபர்களான அலீ, ஹம்ஸா, உபைதா பின் அல்ஹாரிஸ் (ரலி- ஆகிய முஸ்லிம்கள்), மற்றும் ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா (ஆகிய இறைமறுப்பாளர்கள்) தொடர்பாகவே, “இவர்கள் தம் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக்கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் (22:19) இறைவசனம் அருளப்பட்டது.
அத்தியாயம் : 64
3966. அபூதர் (ரலி) அவர்கள் கூறிய தாவது:
குறைஷிக் குலத்தைச் சேர்ந்த ஆறு நபர்களான அலீ, ஹம்ஸா, உபைதா பின் அல்ஹாரிஸ் (ரலி- ஆகிய முஸ்லிம்கள்), மற்றும் ஷைபா பின் ரபீஆ, உத்பா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா (ஆகிய இறைமறுப்பாளர்கள்) தொடர்பாகவே, “இவர்கள் தம் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக்கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் (22:19) இறைவசனம் அருளப்பட்டது.
அத்தியாயம் : 64
3967. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الصَّوَّافُ، حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ ـ كَانَ يَنْزِلُ فِي بَنِي ضُبَيْعَةَ وَهْوَ مَوْلًى لِبَنِي سَدُوسَ ـ حَدَّثَنَا سُلَيْمَانُ التَّيْمِيُّ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عُبَادٍ، قَالَ قَالَ عَلِيٌّ ـ رضى الله عنه فِينَا نَزَلَتْ هَذِهِ الآيَةُ {هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ }
பாடம் : 8
அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3967. அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
“இவர்கள் தம் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக்கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் இந்த (22:19) இறைவசனம் எங்கள் தொடர்பாகவே அருளப்பட்டது.
அத்தியாயம் : 64
3967. அலீ (ரலி) அவர்கள் கூறிய தாவது:
“இவர்கள் தம் இறைவனின் (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக்கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் இந்த (22:19) இறைவசனம் எங்கள் தொடர்பாகவே அருளப்பட்டது.
அத்தியாயம் : 64
3968. حَدَّثَنَا يَحْيَى بْنُ جَعْفَرٍ، أَخْبَرَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي هَاشِمٍ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسِ بْنِ عُبَادٍ، سَمِعْتُ أَبَا ذَرٍّ ـ رضى الله عنه ـ يُقْسِمُ لَنَزَلَتْ هَؤُلاَءِ الآيَاتُ فِي هَؤُلاَءِ الرَّهْطِ السِّتَّةِ يَوْمَ بَدْرٍ. نَحْوَهُ.
பாடம் : 8
அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3968. கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“இந்த வசனங்கள் (22: 19, 20, 21) பத்ர் போரின்போது (முன்னின்று போரிட்ட) ஆறு பேர்கள் குறித்து அருளப்பட்டன” என்று அபூதர் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுச் சொன்னார்கள்.17
அத்தியாயம் : 64
3968. கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“இந்த வசனங்கள் (22: 19, 20, 21) பத்ர் போரின்போது (முன்னின்று போரிட்ட) ஆறு பேர்கள் குறித்து அருளப்பட்டன” என்று அபூதர் (ரலி) அவர்கள் (அல்லாஹ்வின் மீது) ஆணையிட்டுச் சொன்னார்கள்.17
அத்தியாயம் : 64
3969. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا أَبُو هَاشِمٍ، عَنْ أَبِي مِجْلَزٍ، عَنْ قَيْسٍ، قَالَ سَمِعْتُ أَبَا ذَرٍّ، يُقْسِمُ قَسَمًا إِنَّ هَذِهِ الآيَةَ {هَذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ } نَزَلَتْ فِي الَّذِينَ بَرَزُوا يَوْمَ بَدْرٍ حَمْزَةَ وَعَلِيٍّ وَعُبَيْدَةَ بْنِ الْحَارِثِ وَعُتْبَةَ وَشَيْبَةَ ابْنَىْ رَبِيعَةَ وَالْوَلِيدِ بْنِ عُتْبَةَ.
பாடம் : 8
அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3969. கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“இவர்கள் தம் இறைவனுடைய (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் இந்த (22:19) வசனம் பத்ர் போரன்று (படைக்கு முன்னால் வந்து) தனித்து நின்று போராடிய ஹம்ஸா, அலீ, உபைதா பின் அல்ஹாரிஸ் (ரலி) ஆகியோர் மற்றும் (இறைமறுப்பாளர்களான) உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா ஆகியோர் தொடர்பாகவே அருளப்பட்டது.
அத்தியாயம் : 64
3969. கைஸ் பின் உபாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
“இவர்கள் தம் இறைவனுடைய (மார்க்க) விஷயத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரு பிரிவினர் ஆவர்” எனும் இந்த (22:19) வசனம் பத்ர் போரன்று (படைக்கு முன்னால் வந்து) தனித்து நின்று போராடிய ஹம்ஸா, அலீ, உபைதா பின் அல்ஹாரிஸ் (ரலி) ஆகியோர் மற்றும் (இறைமறுப்பாளர்களான) உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா ஆகியோர் தொடர்பாகவே அருளப்பட்டது.
அத்தியாயம் : 64
3970. حَدَّثَنِي أَحْمَدُ بْنُ سَعِيدٍ أَبُو عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ يُوسُفَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، سَأَلَ رَجُلٌ الْبَرَاءَ وَأَنَا أَسْمَعُ، قَالَ أَشَهِدَ عَلِيٌّ بَدْرًا قَالَ بَارَزَ وَظَاهَرَ.
பாடம் : 8
அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3970. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒருவர், “அலீ (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொண்டார்களா?” என்று கேட்டார். (“ஆம். கலந்துகொண்டார்கள்) கவசத்திற்குமேல் கவசம் அணிந்து கொண்டு (களத்தில் இறங்கி) தனித்துப் போராடினார்கள்” என்று பராஉ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 64
3970. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம் ஒருவர், “அலீ (ரலி) அவர்கள் பத்ர் போரில் கலந்துகொண்டார்களா?” என்று கேட்டார். (“ஆம். கலந்துகொண்டார்கள்) கவசத்திற்குமேல் கவசம் அணிந்து கொண்டு (களத்தில் இறங்கி) தனித்துப் போராடினார்கள்” என்று பராஉ (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 64
3971. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي يُوسُفُ بْنُ الْمَاجِشُونِ، عَنْ صَالِحِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ كَاتَبْتُ أُمَيَّةَ بْنَ خَلَفٍ، فَلَمَّا كَانَ يَوْمُ بَدْرٍ، فَذَكَرَ قَتْلَهُ وَقَتْلَ ابْنِهِ، فَقَالَ بِلاَلٌ لاَ نَجَوْتُ إِنْ نَجَا أُمَيَّةُ.
பாடம் : 8
அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3971. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் (மக்கா இறைமறுப்பாளர்களின் தலைவனான) உமய்யா பின் கலஃபும் (பரஸ்பரம் சொத்தையும், உறவினர் களையும் காப்பதென எங்களுக்குள்) எழுத்துபூர்வமான ஒப்பந்தம் செய்து கொண்டோம்.
பிறகு பத்ர் போரில் உமய்யா கொல்லப் பட்டதையும் அவருடைய மகன் (அலீ பின் உமய்யா) கொல்லப்பட்டதையும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுவிட்டு, அப்போது பிலால் (ரலி) அவர்கள், “உமய்யா பிழைத்துக்கொண்டால் நான் பிழைக்கப்போவதில்லை” என்று கூறியதாகவும் குறிப்பிட்டார்கள்.18
அத்தியாயம் : 64
3971. அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நானும் (மக்கா இறைமறுப்பாளர்களின் தலைவனான) உமய்யா பின் கலஃபும் (பரஸ்பரம் சொத்தையும், உறவினர் களையும் காப்பதென எங்களுக்குள்) எழுத்துபூர்வமான ஒப்பந்தம் செய்து கொண்டோம்.
பிறகு பத்ர் போரில் உமய்யா கொல்லப் பட்டதையும் அவருடைய மகன் (அலீ பின் உமய்யா) கொல்லப்பட்டதையும் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுவிட்டு, அப்போது பிலால் (ரலி) அவர்கள், “உமய்யா பிழைத்துக்கொண்டால் நான் பிழைக்கப்போவதில்லை” என்று கூறியதாகவும் குறிப்பிட்டார்கள்.18
அத்தியாயம் : 64
3972. حَدَّثَنَا عَبْدَانُ بْنُ عُثْمَانَ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ شُعْبَةَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَرَأَ {وَالنَّجْمِ} فَسَجَدَ بِهَا، وَسَجَدَ مَنْ مَعَهُ، غَيْرَ أَنَّ شَيْخًا أَخَذَ كَفًّا مِنْ تُرَابٍ فَرَفَعَهُ إِلَى جَبْهَتِهِ فَقَالَ يَكْفِينِي هَذَا. قَالَ عَبْدُ اللَّهِ فَلَقَدْ رَأَيْتُهُ بَعْدُ قُتِلَ كَافِرًا.
பாடம் : 8
அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3972. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மக்காவில்) “அந்நஜ்ம்' எனும் (53வது) அத்தியாயத்தை ஒதினார்கள். (ஓதி முடித்த) உடன் நபி (ஸல்) அவர்கள் “சஜ்தா' செய்தார்கள். அங்கிருந்த முதியவர் ஒருவரை தவிர மற்ற அனைவரும் நபி (ஸல்) அவர்களுடன் “சஜ்தா' செய்தனர். அவர் ஒரு பிடி மண்ணை அள்ளித் தமது நெற்றிக்குக் கொண்டுசென்றுவிட்டு, “இது எனக்குப் போதும்” என்று (சஜ்தாவைக் கேலி செய்து) சொன்னார். பிறகு, அந்த மனிதர் இறைமறுப்பாளராகவே (பத்ரில்) கொல்லப்பட்டதை நான் கண்டேன்.19
அத்தியாயம் : 64
3972. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மக்காவில்) “அந்நஜ்ம்' எனும் (53வது) அத்தியாயத்தை ஒதினார்கள். (ஓதி முடித்த) உடன் நபி (ஸல்) அவர்கள் “சஜ்தா' செய்தார்கள். அங்கிருந்த முதியவர் ஒருவரை தவிர மற்ற அனைவரும் நபி (ஸல்) அவர்களுடன் “சஜ்தா' செய்தனர். அவர் ஒரு பிடி மண்ணை அள்ளித் தமது நெற்றிக்குக் கொண்டுசென்றுவிட்டு, “இது எனக்குப் போதும்” என்று (சஜ்தாவைக் கேலி செய்து) சொன்னார். பிறகு, அந்த மனிதர் இறைமறுப்பாளராகவே (பத்ரில்) கொல்லப்பட்டதை நான் கண்டேன்.19
அத்தியாயம் : 64
3973. أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، حَدَّثَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، عَنْ مَعْمَرٍ، عَنْ هِشَامٍ، عَنْ عُرْوَةَ، قَالَ كَانَ فِي الزُّبَيْرِ ثَلاَثُ ضَرَبَاتٍ بِالسَّيْفِ، إِحْدَاهُنَّ فِي عَاتِقِهِ، قَالَ إِنْ كُنْتُ لأُدْخِلُ أَصَابِعِي فِيهَا. قَالَ ضُرِبَ ثِنْتَيْنِ يَوْمَ بَدْرٍ، وَوَاحِدَةً يَوْمَ الْيَرْمُوكِ. قَالَ عُرْوَةُ وَقَالَ لِي عَبْدُ الْمَلِكِ بْنُ مَرْوَانَ حِينَ قُتِلَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ يَا عُرْوَةُ، هَلْ تَعْرِفُ سَيْفَ الزُّبَيْرِ قُلْتُ نَعَمْ. قَالَ فَمَا فِيهِ قُلْتُ فِيهِ فَلَّةٌ فُلَّهَا يَوْمَ بَدْرٍ. قَالَ صَدَقْتَ. بِهِنَّ فُلُولٌ مِنْ قِرَاعِ الْكَتَائِبِ ثُمَّ رَدَّهُ عَلَى عُرْوَةَ. قَالَ هِشَامٌ فَأَقَمْنَاهُ بَيْنَنَا ثَلاَثَةَ آلاَفٍ، وَأَخَذَهُ بَعْضُنَا، وَلَوَدِدْتُ أَنِّي كُنْتُ أَخَذْتُهُ.
பாடம் : 8
அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3973. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களி(ன் உடலி)ல் வாளால் ஏற்பட்ட மூன்று காயங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று அவர்களது தோள்பட்டையில் இருந்தது. நான் (சிறுவனாயிருந்தபோது) எனது விரல்களை (விளையாட்டாக) அந்தக் காயத்துக்குள் நுழைப்பவனாக இருந்தேன். (இதில்) இரு காயங்கள் பத்ர் போரிலும் இன்னொன்று “யர்மூக்' போரிலும் ஏற்பட்டவையாகும்.
(என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் அவர்கள் கொல்லப்பட்ட சமயத்தில் (அவர்களது வாள் கலீஃபா அப்துல் மலிக் பின் மர்வானிடம் இருந்தது.) என்னிடம் அப்துல் மலிக் பின் மர்வான், “உர்வாவே! ஸுபைர் அவர்களின் வாளைத் தங்களுக்கு (அடையாளம்) தெரியுமா?” என்று கேட்டார்.
நான், “ஆம்' (தெரியும்) என்றேன். “அதில் என்ன (அடையாளம்) உள்ளது?” என்று கேட்டார். “பத்ர் போரில் அதன் முனை முறிந்துபோய்விட்டது. அந்த முறிவுதான் (அடையாளம்)” என்றேன். “உண்மை சொன்னீர்” என்று அப்துல் மலிக் பின் மர்வான் கூறினார். பிறகு, “அவர்களுடைய வாட்கள் பல்வேறு படைகளில் -கலந்துகொண்டு எதிரிகளின் வாட்களுடன்- மோதி முனைகள் முறிந்திருந்தன” எனும் (நாபிஃகாவின் பிரபல கவிதையிலிருந்து ஓர்) அடியைக் கூறினார். பிறகு அந்த வாளை என்னிடம் அப்துல் மலிக் பின் மர்வான் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் (பின் உர்வா-ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
பிறகு அந்த வாளை எங்கள் மத்தியில் மூவாயிரம் (திர்ஹம் / தீனாருக்கு) விலை மதிப்பிட்டோம். எங்களில் ஒருவர் (என் சகோதரர் உஸ்மான்) அதை வாங்கிக்கொண்டார். அதை நான் வாங்கியிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
அத்தியாயம் : 64
3973. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களி(ன் உடலி)ல் வாளால் ஏற்பட்ட மூன்று காயங்கள் இருந்தன. அவற்றில் ஒன்று அவர்களது தோள்பட்டையில் இருந்தது. நான் (சிறுவனாயிருந்தபோது) எனது விரல்களை (விளையாட்டாக) அந்தக் காயத்துக்குள் நுழைப்பவனாக இருந்தேன். (இதில்) இரு காயங்கள் பத்ர் போரிலும் இன்னொன்று “யர்மூக்' போரிலும் ஏற்பட்டவையாகும்.
(என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் அவர்கள் கொல்லப்பட்ட சமயத்தில் (அவர்களது வாள் கலீஃபா அப்துல் மலிக் பின் மர்வானிடம் இருந்தது.) என்னிடம் அப்துல் மலிக் பின் மர்வான், “உர்வாவே! ஸுபைர் அவர்களின் வாளைத் தங்களுக்கு (அடையாளம்) தெரியுமா?” என்று கேட்டார்.
நான், “ஆம்' (தெரியும்) என்றேன். “அதில் என்ன (அடையாளம்) உள்ளது?” என்று கேட்டார். “பத்ர் போரில் அதன் முனை முறிந்துபோய்விட்டது. அந்த முறிவுதான் (அடையாளம்)” என்றேன். “உண்மை சொன்னீர்” என்று அப்துல் மலிக் பின் மர்வான் கூறினார். பிறகு, “அவர்களுடைய வாட்கள் பல்வேறு படைகளில் -கலந்துகொண்டு எதிரிகளின் வாட்களுடன்- மோதி முனைகள் முறிந்திருந்தன” எனும் (நாபிஃகாவின் பிரபல கவிதையிலிருந்து ஓர்) அடியைக் கூறினார். பிறகு அந்த வாளை என்னிடம் அப்துல் மலிக் பின் மர்வான் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் (பின் உர்வா-ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
பிறகு அந்த வாளை எங்கள் மத்தியில் மூவாயிரம் (திர்ஹம் / தீனாருக்கு) விலை மதிப்பிட்டோம். எங்களில் ஒருவர் (என் சகோதரர் உஸ்மான்) அதை வாங்கிக்கொண்டார். அதை நான் வாங்கியிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.
அத்தியாயம் : 64
3974. حَدَّثَنَا فَرْوَةُ، عَنْ عَلِيٍّ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، قَالَ كَانَ سَيْفُ الزُّبَيْرِ مُحَلًّى بِفِضَّةٍ. قَالَ هِشَامٌ وَكَانَ سَيْفُ عُرْوَةَ مُحَلًّى بِفِضَّةٍ.
பாடம் : 8
அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3974. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களின் வாள் வெள்ளியால் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
(என் தந்தை) உர்வா (ரஹ்) அவர்களின் வாள் வெள்ளியால் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்தியாயம் : 64
3974. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களின் வாள் வெள்ளியால் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அறிவிப்பாளர் ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
(என் தந்தை) உர்வா (ரஹ்) அவர்களின் வாள் வெள்ளியால் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அத்தியாயம் : 64
3975. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ أَصْحَابَ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالُوا لِلزُّبَيْرِ يَوْمَ الْيَرْمُوكِ أَلاَ تَشُدُّ فَنَشُدَّ مَعَكَ فَقَالَ إِنِّي إِنْ شَدَدْتُ كَذَبْتُمْ. فَقَالُوا لاَ نَفْعَلُ، فَحَمَلَ عَلَيْهِمْ حَتَّى شَقَّ صُفُوفَهُمْ، فَجَاوَزَهُمْ وَمَا مَعَهُ أَحَدٌ، ثُمَّ رَجَعَ مُقْبِلاً، فَأَخَذُوا بِلِجَامِهِ، فَضَرَبُوهُ ضَرْبَتَيْنِ عَلَى عَاتِقِهِ بَيْنَهُمَا ضَرْبَةٌ ضُرِبَهَا يَوْمَ بَدْرٍ. قَالَ عُرْوَةُ كُنْتُ أُدْخِلُ أَصَابِعِي فِي تِلْكَ الضَّرَبَاتِ أَلْعَبُ وَأَنَا صَغِيرٌ. قَالَ عُرْوَةُ وَكَانَ مَعَهُ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ يَوْمَئِذٍ وَهْوَ ابْنُ عَشْرِ سِنِينَ، فَحَمَلَهُ عَلَى فَرَسٍ وَكَّلَ بِهِ رَجُلاً.
பாடம் : 8
அபூஜஹ்ல் கொல்லப்பட்டது12
3975. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யர்மூக் போரின்போது20 ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களிடம், “(கிழக்கு ரோமானியரான பைஸாந்தியர்மீது) நீங்கள் தாக்குதல் தொடுக்கக் கூடாதா? நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்குதல் தொடுப்போமே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் கூறினர். அப்போது ஸுபைர் (ரலி) அவர்கள், “நான் தாக்குதல் தொடுக்கும்போது நீங்கள் வாக்கைக் காப்பாற்றமாட்டீர்கள் (நீங்களும் என்னோடு சேர்ந்து போரிடமாட்டீர்கள்)” என்று கூறினார்கள். “இல்லை. அப்படி நாங்கள் செய்யமாட்டோம்” என்று அவர்கள் கூறினர்.
பிறகு ஸுபைர் (ரலி) அவர்கள் பைஸாந்தியர்மீது தாக்குதல் தொடுத்து, அவர்களின் அணிகளைச் சிதறடித்து, அவர்களைக் கடந்து சென்றார்கள். (ஒத்துழைப்பதாகச் சொன்ன) யாரும் (அப்போது) அவருடன் இருக்கவில்லை. பிறகு (தோழர்களை நோக்கி) அவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்தபோது அவர்களது குதிரையின் கடிவாளத்தை பைஸாந்தியர் பிடித்துக்கொண்டு அவர்களது தோள்மீது வெட்டி இரண்டு காயங்களை ஏற்படுத்தினர்.
(ஏற்கெனவே) பத்ர் போரில் ஏற்பட்ட ஒரு காயம் அந்த இரண்டுக்கும் மத்தியில் இருந்தது. நான் சிறுவனாக இருந்தபோது அந்த(க் காயத்தின்) தழும்புகளில் என் விரல்களை விட்டு விளையாடுபவனாயிருந்தேன். (யர்மூக் போர் நடந்த) அன்று ஸுபைர் (ரலி) அவர் களுடன் பத்து வயதுடைய (அவர்களின் மகன்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் இருந்தார். அவரை ஒரு குதிரையில் அமர்த்தி அவருக்கு(ப் பாதுகாப்பாக) ஓர் ஆளையும் ஸுபைர் (ரலி) அவர்கள் நியமித்திருந்தார்கள்.
அத்தியாயம் : 64
3975. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
யர்மூக் போரின்போது20 ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களிடம், “(கிழக்கு ரோமானியரான பைஸாந்தியர்மீது) நீங்கள் தாக்குதல் தொடுக்கக் கூடாதா? நாங்களும் உங்களுடன் சேர்ந்து தாக்குதல் தொடுப்போமே” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் கூறினர். அப்போது ஸுபைர் (ரலி) அவர்கள், “நான் தாக்குதல் தொடுக்கும்போது நீங்கள் வாக்கைக் காப்பாற்றமாட்டீர்கள் (நீங்களும் என்னோடு சேர்ந்து போரிடமாட்டீர்கள்)” என்று கூறினார்கள். “இல்லை. அப்படி நாங்கள் செய்யமாட்டோம்” என்று அவர்கள் கூறினர்.
பிறகு ஸுபைர் (ரலி) அவர்கள் பைஸாந்தியர்மீது தாக்குதல் தொடுத்து, அவர்களின் அணிகளைச் சிதறடித்து, அவர்களைக் கடந்து சென்றார்கள். (ஒத்துழைப்பதாகச் சொன்ன) யாரும் (அப்போது) அவருடன் இருக்கவில்லை. பிறகு (தோழர்களை நோக்கி) அவர்கள் திரும்பி வந்துகொண்டிருந்தபோது அவர்களது குதிரையின் கடிவாளத்தை பைஸாந்தியர் பிடித்துக்கொண்டு அவர்களது தோள்மீது வெட்டி இரண்டு காயங்களை ஏற்படுத்தினர்.
(ஏற்கெனவே) பத்ர் போரில் ஏற்பட்ட ஒரு காயம் அந்த இரண்டுக்கும் மத்தியில் இருந்தது. நான் சிறுவனாக இருந்தபோது அந்த(க் காயத்தின்) தழும்புகளில் என் விரல்களை விட்டு விளையாடுபவனாயிருந்தேன். (யர்மூக் போர் நடந்த) அன்று ஸுபைர் (ரலி) அவர் களுடன் பத்து வயதுடைய (அவர்களின் மகன்) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களும் இருந்தார். அவரை ஒரு குதிரையில் அமர்த்தி அவருக்கு(ப் பாதுகாப்பாக) ஓர் ஆளையும் ஸுபைர் (ரலி) அவர்கள் நியமித்திருந்தார்கள்.
அத்தியாயம் : 64