334. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَعْضِ أَسْفَارِهِ، حَتَّى إِذَا كُنَّا بِالْبَيْدَاءِ ـ أَوْ بِذَاتِ الْجَيْشِ ـ انْقَطَعَ عِقْدٌ لِي، فَأَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى الْتِمَاسِهِ، وَأَقَامَ النَّاسُ مَعَهُ، وَلَيْسُوا عَلَى مَاءٍ، فَأَتَى النَّاسُ إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ فَقَالُوا أَلاَ تَرَى مَا صَنَعَتْ عَائِشَةُ أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّاسِ، وَلَيْسُوا عَلَى مَاءٍ، وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ. فَجَاءَ أَبُو بَكْرٍ وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي قَدْ نَامَ فَقَالَ حَبَسْتِ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَالنَّاسَ، وَلَيْسُوا عَلَى مَاءٍ، وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ. فَقَالَتْ عَائِشَةُ فَعَاتَبَنِي أَبُو بَكْرٍ، وَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ، وَجَعَلَ يَطْعُنُنِي بِيَدِهِ فِي خَاصِرَتِي، فَلاَ يَمْنَعُنِي مِنَ التَّحَرُّكِ إِلاَّ مَكَانُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى فَخِذِي، فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ أَصْبَحَ عَلَى غَيْرِ مَاءٍ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ فَتَيَمَّمُوا. فَقَالَ أُسَيْدُ بْنُ الْحُضَيْرِ مَا هِيَ بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ أَبِي بَكْرٍ. قَالَتْ فَبَعَثْنَا الْبَعِيرَ الَّذِي كُنْتُ عَلَيْهِ، فَأَصَبْنَا الْعِقْدَ تَحْتَهُ.
பாடம் : 1
334. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பயணம் ஒன்றில் (பனூ முஸ்த-க் போரின் பயணத்தில்) அவர் களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் (மதீனாவுக்கருகில் உள்ள) ‘பைதா’ அல்லது ‘தாத்துல் ஜைஷ்’ எனுமிடத்தில் (வந்து கொண்டு) இருந்தபோது. எனது கழுத்தணி அவிழ்ந்து (காணாமற்போய்)விட்டது. அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு முகாமிட் டுத்) தங்கினார்கள். அவர்களுடன் மக்க ளும் (முகாமிட்டுத்) தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர்நிலை அருகிலும் இருக்கவில்லை; (அவர்களிடமும் தண்ணீர் எதுவும் இருக்கவில்லை.)

அப்போது மக்கள் (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களிடம் சென்று, “(உங்கள் புதல்வி) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (இங்கு) தங்கும்படி செய்துவிட்டார்கள். இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை” என்று முறையிட்டனர்.

உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது தலைவைத்து உறங்கிக்கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர்

(ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), “அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்துவிட்டாயே! இங்கும் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை” என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்- என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது (தலைவைத்துப் படுத்து) இருந்ததுதான் என்னை அசையவிடாமல் (அடிவாங்கிக் கொண்டிருக்கும்படி) செய்துவிட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்தபோதும் தண்ணீர் இருக்கவில்லை. அப்போதுதான் ‘தயம்மும்’ உடைய (5:6ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

(இது குறித்து) உசைத் பின் ஹுளைர்

(ரலி) அவர்கள், “அபூபக்ரின் குடும்பத் தாரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத் (சமுதாய நலன்)களில் இது (தயம்மும் எனும் சலுகை) முதலாவதாக இல்லை. (எத்தனையோ நலன்கள் இதற்கு முன்பும் உங்கள் மூலம் ஏற்பட்டுள்ளன)” என்று கூறினார்கள்.

(பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பியபோது, அதன் அடியில் (காணா மற்போன) அந்தக் கழுத்தணி கிடந்தது.


அத்தியாயம் : 7
335. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، ح قَالَ وَحَدَّثَنِي سَعِيدُ بْنُ النَّضْرِ، قَالَ أَخْبَرَنَا هُشَيْمٌ، قَالَ أَخْبَرَنَا سَيَّارٌ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ ـ هُوَ ابْنُ صُهَيْبٍ الْفَقِيرُ ـ قَالَ أَخْبَرَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِيَ الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاَةُ فَلْيُصَلِّ، وَأُحِلَّتْ لِيَ الْمَغَانِمُ وَلَمْ تَحِلَّ لأَحَدٍ قَبْلِي، وَأُعْطِيتُ الشَّفَاعَةَ، وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً، وَبُعِثْتُ إِلَى النَّاسِ عَامَّةً "".
பாடம் : 1
335. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத் தூதர்கள்) எவருக்கும் வழங்கப்பெறாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப் பெற்றுள்ளன.

1. (எதிரிகளுக்கும் எனக்கும் இடையே) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந் தாலும் (அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது.

2. எனக்கு பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் ஆக்கப்பட்டுள்ளது. என் சமுதாயத்தாரில் யாருக்கேனும் தொழுகை(யின் நேரம்) வந்துவிட்டால், (அவர் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்தில்) தொழுதுகொள்ளட்டும்.

3. போரில் கிடைக்கும் செல்வங்கள் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத்தூதர்கள்) எவருக்கும் அவை அனுமதிக்கப் படவில்லை.

4. (மறுமையில் என் சமுதாயத்தாருக் காக) பரிந்துரை செய்யும் வாய்ப்பு அளிக்கப்பெற்றுள்ளேன்.

5. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமுதாயத்தாருக்கு மட்டுமே (தூதராக நியமிக்கப்பட்டு) அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான், மனித இனம் முழுவதற் கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள் ளேன்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ்

(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 7
336. حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ، قَالَ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا اسْتَعَارَتْ مِنْ أَسْمَاءَ قِلاَدَةً فَهَلَكَتْ، فَبَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَجُلاً، فَوَجَدَهَا فَأَدْرَكَتْهُمُ الصَّلاَةُ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ فَصَلَّوْا، فَشَكَوْا ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ. فَقَالَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ لِعَائِشَةَ جَزَاكِ اللَّهُ خَيْرًا، فَوَاللَّهِ مَا نَزَلَ بِكِ أَمْرٌ تَكْرَهِينَهُ إِلاَّ جَعَلَ اللَّهُ ذَلِكِ لَكِ وَلِلْمُسْلِمِينَ فِيهِ خَيْرًا.
பாடம் : 2 (சுத்தம் செய்ய) தண்ணீரோ மண்ணோ கிடைக்கவில்லையானால் (என்ன செய்ய வேண்டும்)?
336. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் (தம் சகோதரி) அஸ்மா (ரலி) அவர்களிடமிருந்து (கழுத்து) மாலையொன்றை இரவல் வாங்கினார்கள். அது (பனூ முஸ்த-க் போர் பயணத்தில் எப்படியோ) தொலைந்து போய்விட்டது. (இதையறிந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அதைத் தேடுவதற்காக) ஒருவரை (நண்பர்களுடன்) அனுப்பிவைத்தார்கள். அவரும் அதை(த் தேடி)க் கண்டுபிடித்தார்.

(இதற்கிடையே தேடிப்போன) அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்துவிட்டது. அப்போது அவர்களிடம் தண்ணீர் இருக்கவில்லை. (தண்ணீர் கிடைக்காததால்) அவர்கள் (அங்கத் தூய்மை செய்யாமலேயே) தொழுதுவிட்டார்கள். (திரும்பி வந்ததும்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இது குறித்து முறையிட்டனர். அப்போதுதான் ‘தயம்மும்’ தொடர்பான வசனத்தை (4:43) அல்லாஹ் அருளினான்.

ஆகவே, (இந்தச் சலுகை கிடைக்கக் காரணமாய் அமைந்த) ஆயிஷா

(ரலி) அவர்களிடம் உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், “அல்லாஹ் உங்களுக்கு நற்பலன் அளிக்கட்டும்! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் வெறுக்கும் ஒன்று உங்களுக்கு நேரும்போதெல்லாம் அதில் உங்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஒரு நன்மையை அல்லாஹ் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை” என்று சொன்னார்கள்.2

அத்தியாயம் : 7
337. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ جَعْفَرِ بْنِ رَبِيعَةَ، عَنِ الأَعْرَجِ، قَالَ سَمِعْتُ عُمَيْرًا، مَوْلَى ابْنِ عَبَّاسٍ قَالَ أَقْبَلْتُ أَنَا وَعَبْدُ اللَّهِ بْنُ يَسَارٍ، مَوْلَى مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم حَتَّى دَخَلْنَا عَلَى أَبِي جُهَيْمِ بْنِ الْحَارِثِ بْنِ الصِّمَّةِ الأَنْصَارِيِّ فَقَالَ أَبُو الْجُهَيْمِ أَقْبَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ نَحْوِ بِئْرِ جَمَلٍ، فَلَقِيَهُ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ، فَلَمْ يَرُدَّ عَلَيْهِ النَّبِيُّ صلى الله عليه وسلم حَتَّى أَقْبَلَ عَلَى الْجِدَارِ، فَمَسَحَ بِوَجْهِهِ وَيَدَيْهِ، ثُمَّ رَدَّ عَلَيْهِ السَّلاَمَ.
பாடம் : 3 சொந்த ஊரில் தங்கியிருக்கும் போது தண்ணீர் கிடைக்காம-ருந்து தொழுகையின் நேரம் தவறிவிடுமோ என்று அஞ்சி னால் ‘தயம்மும்’ செய்து கொள்ளலாம். இவ்வாறே அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நோயாளியிடம் தண்ணீர் இருந்தும் அதை அவருக்கு ஊற்றித்தர ஆள் கிடைக்காதபோது, அவர் ‘தயம்மும்’ செய்துகொள்ளலாம். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (மதீனாவின் புறநகரான) ‘ஜுருஃப்’ எனும் இடத்திலிருந்த தமது நிலத்தி-ருந்து (மதீனாவை நோக்கி) வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் (மதீனாவிற்கு அருகில் ஒரு மைல் தொலைவி-ருந்த) ‘மர்பதுந் நஅம்’ எனுமிடத்தை அடைந்தபோது, அஸ்ர் தொழுகையின் நேரம் வந்துவிட்டது. உடனே (தண்ணீர் கிடைக்காததால் ‘தயம்மும்’ செய்து) தொழுதார்கள். பிறகு மதீனாவிற்குள் வந்தார்கள். அப்போது சூரியன் உயர்ந்தே இருந்தது (மறையவில்லை). ஆயினும், அவர்கள் அந்த அஸ்ர் தொழுகையைத் திரும்பத் தொழவில்லை.3
337. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமையான உமைர் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான மைமூனா (ரலி) அவர்களின் (முன்னாள்) அடிமையான அப்துல்லாஹ் பின் யசார் (ரஹ்) அவர்களும் நானும் அபுல்ஜுஹைம் பின் அல்ஹாரிஸ் பின் ஸிம்மா அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் சென்றோம்.

அப்போது அபுல்ஜுஹைம் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலுள்ள) ‘பிஃரு ஜமல்’ பகுதியி-ருந்து வந்துகொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை ஒருவர் சந்தித்து முகமன் (சலாம்) சொன்னார்.

அவருக்கு நபி (ஸல்) அவர்கள் உடனடியாக பதில் முகமன் சொல்லாமல், ஒரு சுவர் பக்கம் போய் (அதில் தமது கையை அடித்து) தமது முகத்தையும் இரு கைகளையும் தடவி (தயம்மும் செய்து)கொண்ட பின்னர் அவருக்கு பதில் முகமன் கூறினார்கள்.4

அத்தியாயம் : 7
338. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا الْحَكَمُ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقَالَ إِنِّي أَجْنَبْتُ فَلَمْ أُصِبِ الْمَاءَ. فَقَالَ عَمَّارُ بْنُ يَاسِرٍ لِعُمَرَ بْنِ الْخَطَّابِ أَمَا تَذْكُرُ أَنَّا كُنَّا فِي سَفَرٍ أَنَا وَأَنْتَ فَأَمَّا أَنْتَ فَلَمْ تُصَلِّ، وَأَمَّا أَنَا فَتَمَعَّكْتُ فَصَلَّيْتُ، فَذَكَرْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّمَا كَانَ يَكْفِيكَ هَكَذَا "". فَضَرَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَفَّيْهِ الأَرْضَ، وَنَفَخَ فِيهِمَا ثُمَّ مَسَحَ بِهِمَا وَجْهَهُ وَكَفَّيْهِ.
பாடம் : 4 தயம்மும் செய்பவர் (மண்ணில் அடித்தபின்) இரு கைகளிலும் (உள்ள புழுதியை) ஊதிவிட வேண்டுமா?
338. அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, எனக்குப் பெருந் துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விட்டது. ஆனால், (குளிப்பதற்கு) எனக் குத் தண்ணீர் கிடைக்கவில்லை (இந் நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்?)” என்று கேட்டார்.

அப்போது (அங்கிருந்த) அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம், “நானும் நீங்களும் ஒரு (போர்ப்) பயணத்தில் இருந்தோம்; அப்போது (பெருந்துடக்கு ஏற்பட்ட நமக்குக் குளிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை. ஆகவே,) நீங்கள் தொழவில்லை; நானோ (உளூவிற்குப் பதிலாக ‘தயம்மும்’ செய்வதைப் போன்று, குளியலுக்குப் பதிலாக) மண்ணில் புரண்டெழுந்து தொழுதேன்.

இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னபோது நபி (ஸல்) அவர்கள், தம்மிரு கைகளையும் தரையில் அடித்து அவற்றில் ஊதிவிட்டு அவ்விரு கைகளால் தமது முகத்தையும் (மணிக்கட்டுகள்வரை) இரு கைகளையும் தடவிக் காண்பித்து ‘இவ்வாறு செய்திருந்தால் அது உமக்குப் போதுமே’ எனக் கூறியது உங்களுக்கு நினைவில்லையா?” என்று கேட்டார்கள்.5

அத்தியாயம் : 7
339. حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ أَخْبَرَنَا شُعْبَةُ، أَخْبَرَنِي الْحَكَمُ، عَنْ ذَرٍّ، عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، قَالَ عَمَّارٌ بِهَذَا، وَضَرَبَ شُعْبَةُ بِيَدَيْهِ الأَرْضَ، ثُمَّ أَدْنَاهُمَا مِنْ فِيهِ، ثُمَّ مَسَحَ وَجْهَهُ وَكَفَّيْهِ. وَقَالَ النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ عَنِ الْحَكَمِ قَالَ سَمِعْتُ ذَرًّا يَقُولُ عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى قَالَ الْحَكَمُ وَقَدْ سَمِعْتُهُ مِنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ قَالَ قَالَ عَمَّارٌ.
பாடம் : 5 முகத்தையும் (மணிக்கட்டு வரை) இரு கைகளையும் தடவுவதுதான் தயம்மும்.6
339. அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ் இங்கே இடம்பெறுகிறது.

மேலும், அறிவிப்பாளர்களில் ஒருவ ரான ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் தம்மிரு கைகளால் தரையில் அடித்து அவ்விரு கைகளையும் தம் வாயருகே கொண்டுசென்று (ஊதிவிட்டுப்) பின்னர் தமது முகத்தையும் (மணிக்கட்டு வரை) இரு கைகளையும் தடவி(க்காட்டி) னார்கள் என்பதும் இந்த அறிவிப்பில் கூடுதலாக இடம்பெறுகிறது.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில், “தூய்மையான மண் ஒரு முஸ்லிம் அங்கத் தூய்மை செய்வதற்கான பொருளாகும். தண்ணீர் இல்லாதபோது அதுவே அவருக்குப் போதும்” என அம்மார் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.


அத்தியாயம் : 7
340. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، أَنَّهُ شَهِدَ عُمَرَ وَقَالَ لَهُ عَمَّارٌ كُنَّا فِي سَرِيَّةٍ فَأَجْنَبْنَا، وَقَالَ تَفَلَ فِيهِمَا.
பாடம் : 5 முகத்தையும் (மணிக்கட்டு வரை) இரு கைகளையும் தடவுவதுதான் தயம்மும்.6
340. அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அப்போது அம்மார் (பின் யாசிர்-ர-) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “நாம் ஒரு படைப் பிரிவில் இருந்தோம். அப்போது நமக்கு பெருந் துடக்கு ஏற்பட்டது என(த் தொடங்கி மேற்கண்ட ஹதீஸிலுள்ளதைப் போன்றே) கூறினார்கள்.

மேலும், (அவ்விரு கைகளிலும் ‘ஊதினார்கள்’ என்பதற்குப் பதிலாக) தம்மிரு கைகளிலும் துப்பி(யதைப் போன்று வேகமாக ஊதி)னார்கள்’ என இடம் பெற்றுள்ளது.

இதை சயீத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 7
341. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ قَالَ عَمَّارٌ لِعُمَرَ تَمَعَّكْتُ فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" يَكْفِيكَ الْوَجْهُ وَالْكَفَّانِ "".
பாடம் : 5 முகத்தையும் (மணிக்கட்டு வரை) இரு கைகளையும் தடவுவதுதான் தயம்மும்.6
341. அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அம்மார் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், “மண்ணில் புரண்ட நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்(து நடந்த தைத் தெரிவித்)தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “முகமும் (மணிக்கட்டுவரை) இரு கைகளும் உமக்கு (தயம்மும் செய்யப்) போதும்” என்று சொன்னார்கள் எனக் கூறினார்கள்.


அத்தியாயம் : 7
342. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ شَهِدْتُ عُمَرَ فَقَالَ لَهُ عَمَّارٌ. وَسَاقَ الْحَدِيثَ.
பாடம் : 5 முகத்தையும் (மணிக்கட்டு வரை) இரு கைகளையும் தடவுவதுதான் தயம்மும்.6
342. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.


அத்தியாயம் : 7
343. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ ذَرٍّ، عَنِ ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ عَمَّارٌ فَضَرَبَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِيَدِهِ الأَرْضَ، فَمَسَحَ وَجْهَهُ وَكَفَّيْهِ.
பாடம் : 5 முகத்தையும் (மணிக்கட்டு வரை) இரு கைகளையும் தடவுவதுதான் தயம்மும்.6
343. அம்மார் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கையைத் தரையில் அடித்துத் தமது முகத்தையும் (மணிக்கட்டுவரை) இரு கைகளையும் தடவி(க்காட்டி)னார்கள்.

அத்தியாயம் : 7
344. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا عَوْفٌ، قَالَ حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، عَنْ عِمْرَانَ، قَالَ كُنَّا فِي سَفَرٍ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَإِنَّا أَسْرَيْنَا، حَتَّى كُنَّا فِي آخِرِ اللَّيْلِ، وَقَعْنَا وَقْعَةً وَلاَ وَقْعَةَ أَحْلَى عِنْدَ الْمُسَافِرِ مِنْهَا، فَمَا أَيْقَظَنَا إِلاَّ حَرُّ الشَّمْسِ، وَكَانَ أَوَّلَ مَنِ اسْتَيْقَظَ فُلاَنٌ ثُمَّ فُلاَنٌ ثُمَّ فُلاَنٌ ـ يُسَمِّيهِمْ أَبُو رَجَاءٍ فَنَسِيَ عَوْفٌ ـ ثُمَّ عُمَرُ بْنُ الْخَطَّابِ الرَّابِعُ، وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا نَامَ لَمْ يُوقَظْ حَتَّى يَكُونَ هُوَ يَسْتَيْقِظُ، لأَنَّا لاَ نَدْرِي مَا يَحْدُثُ لَهُ فِي نَوْمِهِ، فَلَمَّا اسْتَيْقَظَ عُمَرُ، وَرَأَى مَا أَصَابَ النَّاسَ، وَكَانَ رَجُلاً جَلِيدًا، فَكَبَّرَ وَرَفَعَ صَوْتَهُ بِالتَّكْبِيرِ، فَمَا زَالَ يُكَبِّرُ وَيَرْفَعُ صَوْتَهُ بِالتَّكْبِيرِ حَتَّى اسْتَيْقَظَ لِصَوْتِهِ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلَمَّا اسْتَيْقَظَ شَكَوْا إِلَيْهِ الَّذِي أَصَابَهُمْ قَالَ "" لاَ ضَيْرَ ـ أَوْ لاَ يَضِيرُ ـ ارْتَحِلُوا "". فَارْتَحَلَ فَسَارَ غَيْرَ بَعِيدٍ ثُمَّ نَزَلَ، فَدَعَا بِالْوَضُوءِ، فَتَوَضَّأَ وَنُودِيَ بِالصَّلاَةِ فَصَلَّى بِالنَّاسِ، فَلَمَّا انْفَتَلَ مِنْ صَلاَتِهِ إِذَا هُوَ بِرَجُلٍ مُعْتَزِلٍ لَمْ يُصَلِّ مَعَ الْقَوْمِ قَالَ "" مَا مَنَعَكَ يَا فُلاَنُ أَنْ تُصَلِّيَ مَعَ الْقَوْمِ "". قَالَ أَصَابَتْنِي جَنَابَةٌ وَلاَ مَاءَ. قَالَ "" عَلَيْكَ بِالصَّعِيدِ، فَإِنَّهُ يَكْفِيكَ "". ثُمَّ سَارَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَاشْتَكَى إِلَيْهِ النَّاسُ مِنَ الْعَطَشِ فَنَزَلَ، فَدَعَا فُلاَنًا ـ كَانَ يُسَمِّيهِ أَبُو رَجَاءٍ نَسِيَهُ عَوْفٌ ـ وَدَعَا عَلِيًّا فَقَالَ "" اذْهَبَا فَابْتَغِيَا الْمَاءَ "". فَانْطَلَقَا فَتَلَقَّيَا امْرَأَةً بَيْنَ مَزَادَتَيْنِ ـ أَوْ سَطِيحَتَيْنِ ـ مِنْ مَاءٍ عَلَى بَعِيرٍ لَهَا، فَقَالاَ لَهَا أَيْنَ الْمَاءُ قَالَتْ عَهْدِي بِالْمَاءِ أَمْسِ هَذِهِ السَّاعَةَ، وَنَفَرُنَا خُلُوفًا. قَالاَ لَهَا انْطَلِقِي إِذًا. قَالَتْ إِلَى أَيْنَ قَالاَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. قَالَتِ الَّذِي يُقَالُ لَهُ الصَّابِئُ قَالاَ هُوَ الَّذِي تَعْنِينَ فَانْطَلِقِي. فَجَاءَا بِهَا إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَحَدَّثَاهُ الْحَدِيثَ قَالَ فَاسْتَنْزَلُوهَا عَنْ بَعِيرِهَا وَدَعَا النَّبِيُّ صلى الله عليه وسلم بِإِنَاءٍ، فَفَرَّغَ فِيهِ مِنْ أَفْوَاهِ الْمَزَادَتَيْنِ ـ أَوِ السَّطِيحَتَيْنِ ـ وَأَوْكَأَ أَفْوَاهَهُمَا، وَأَطْلَقَ الْعَزَالِيَ، وَنُودِيَ فِي النَّاسِ اسْقُوا وَاسْتَقُوا. فَسَقَى مَنْ شَاءَ، وَاسْتَقَى مَنْ شَاءَ، وَكَانَ آخِرَ ذَاكَ أَنْ أَعْطَى الَّذِي أَصَابَتْهُ الْجَنَابَةُ إِنَاءً مِنْ مَاءٍ قَالَ "" اذْهَبْ، فَأَفْرِغْهُ عَلَيْكَ "". وَهْىَ قَائِمَةٌ تَنْظُرُ إِلَى مَا يُفْعَلُ بِمَائِهَا، وَايْمُ اللَّهِ لَقَدْ أُقْلِعَ عَنْهَا، وَإِنَّهُ لَيُخَيَّلُ إِلَيْنَا أَنَّهَا أَشَدُّ مِلأَةً مِنْهَا حِينَ ابْتَدَأَ فِيهَا، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" اجْمَعُوا لَهَا "". فَجَمَعُوا لَهَا مِنْ بَيْنِ عَجْوَةٍ وَدَقِيقَةٍ وَسَوِيقَةٍ، حَتَّى جَمَعُوا لَهَا طَعَامًا، فَجَعَلُوهَا فِي ثَوْبٍ، وَحَمَلُوهَا عَلَى بَعِيرِهَا، وَوَضَعُوا الثَّوْبَ بَيْنَ يَدَيْهَا قَالَ لَهَا "" تَعْلَمِينَ مَا رَزِئْنَا مِنْ مَائِكِ شَيْئًا، وَلَكِنَّ اللَّهَ هُوَ الَّذِي أَسْقَانَا "". فَأَتَتْ أَهْلَهَا، وَقَدِ احْتَبَسَتْ عَنْهُمْ قَالُوا مَا حَبَسَكِ يَا فُلاَنَةُ قَالَتِ الْعَجَبُ، لَقِيَنِي رَجُلاَنِ فَذَهَبَا بِي إِلَى هَذَا الَّذِي يُقَالُ لَهُ الصَّابِئُ، فَفَعَلَ كَذَا وَكَذَا، فَوَاللَّهِ إِنَّهُ لأَسْحَرُ النَّاسِ مِنْ بَيْنِ هَذِهِ وَهَذِهِ. وَقَالَتْ بِإِصْبَعَيْهَا الْوُسْطَى وَالسَّبَّابَةِ، فَرَفَعَتْهُمَا إِلَى السَّمَاءِ ـ تَعْنِي السَّمَاءَ وَالأَرْضَ ـ أَوْ إِنَّهُ لَرَسُولُ اللَّهِ حَقًّا، فَكَانَ الْمُسْلِمُونَ بَعْدَ ذَلِكَ يُغِيرُونَ عَلَى مَنْ حَوْلَهَا مِنَ الْمُشْرِكِينَ، وَلاَ يُصِيبُونَ الصِّرْمَ الَّذِي هِيَ مِنْهُ، فَقَالَتْ يَوْمًا لِقَوْمِهَا مَا أُرَى أَنَّ هَؤُلاَءِ الْقَوْمَ يَدَعُونَكُمْ عَمْدًا، فَهَلْ لَكُمْ فِي الإِسْلاَمِ فَأَطَاعُوهَا فَدَخَلُوا فِي الإِسْلاَمِ.
பாடம் : 6 தண்ணீருக்குப் பகரமாகத் தூய்மையான மண் ஒரு முஸ்-முக்குத் தூய்மை செய்யப் போதுமானதாகும். ஒரு தடவை ஒருவர் ‘தயம்மும்’ செய்துவிட்டால், சிறு துடக்கு (எனும் உளூவை முறிக்கும் காரியங்கள்) ஏற்படாத வரை அந்த ‘தயம்மும்’ அவருக்குப் போதுமானதாக அமையும் (ஒவ்வொரு தொழுகைக்கும் தனித்தனியாக தயம்மும் செய்ய வேண்டியதில்லை) என ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள் ளார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தயம்மும் செய்துகொண்டு (உளூ செய்தி ருக்கும் மக்களுக்கு) இமாமாக நின்று தொழுகை நடத்தினார்கள். யஹ்யா பின் சயீத் (ரஹ்) அவர்கள், “(எதையும் முளைக்கச் செய்யாத உப்புத் தன்மை கொண்ட) உவர் நிலத்தில் தொழுவதோ, அந்நிலத்தில் தயம்மும் செய்வதோ குற்றமாகாது” என்று கூறியுள்ளார்கள்.
344. இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு பயணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். இரவில் பயணத்தைத் தொடர்ந்த நாங்கள் இரவின் இறுதி நேரத்தில் (ஓரிடத்தில் இறங்கி) சிறிது நேரம் உறங்கினோம். ஒரு பயணிக்கு அதைவிட இனிமையான உறக்கம் வேறெதுவும் இருக்க முடியாது.

(அந்த உறக்கத்தி-ருந்து) எங்களை (காலை நேர) சூரிய வெப்பம்தான் விழித்தெழச் செய்தது. அப்போது முதன் முதலில் விழித்தெழுந்தவர் இன்னவர் ஆவார். அதற்கடுத்து இன்னவர். அதற்கடுத்து இன்னவர்.

-(இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூரஜாஉ (இம்ரான் அல்உதாரிதீ-ரஹ்) அவர்கள் அம்மூவரின் பெயரையும் குறிப்பிட்டார்கள். ஆனால், அவரிடமிருந்து கேட்டு அறிவிப்பவரான அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அவர்களின் பெயர்களை மறந்துவிட்டார்கள்.-

நான்காவதாக உறக்கத்தி-ருந்து எழுந்தவர் உமர் பின் அல்கத்தாப்

(ரலி) அவர்கள் ஆவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் உறங்கிவிட்டால் அவர்கள் தாமாகக் கண்விழிக்காத வரை அவர்களை உறக்கத்தி-ருந்து யாரும் எழுப்பமாட்டார்கள். ஏனெனில், அவர்கள் உறங்கிக்கொண்டிருக்கும்போது அவர்களுக்கு என்ன நடக்கிறது (இறைச் செய்தி ஏதேனும் வருகிறதா?) என்பது எங்களுக் குத் தெரியாது. (எனவேதான், அவர்களை யாரும் எழுப்பமாட்டார்கள்.)

உறக்கத்தி-ருந்து உமர் (ரலி) அவர்கள் எழுந்து, மக்களுக்கு ஏற்பட்டு விட்ட (அதிகாலைத் தொழுகை தவறிப்போன துயர) நிலையைப் பார்த்தபோது, (எல்லாரையும் எழுப்ப) ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் பெரியவன்) என்று உரத்த குர-ல் ‘தக்பீர்’ சொன்னார்கள். - உமர்

(ரலி) அவர்கள் நெஞ்சுரம் வாய்ந்த மனிதராய் இருந்தார்கள்.- எனவே, தொடர்ந்து உரத்த குர-ல் ‘தக்பீர்’ சொல்-க்கொண்டேயிருந்தார்கள். அவர்களது சப்தத்தைக் கேட்டு நபி (ஸல்) அவர்களும் விழித்தெழுந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் விழித்தெழுந்ததும் மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட இந்நிலையை அவர்களிடம் முறையிட்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘பிரச்சினையில்லை’ அல்லது ‘பிரச்சினை ஏற்படாது’; இங்கிருந்து புறப்படுங்கள் என்று கூறிவிட்டுப் புறப்பட்டுச் சற்று தூரம் சென்றதும் நபி (ஸல்) அவர்கள் (தமது வாகனத்தி-ருந்து) இறங்கினார்கள்.

அங்கத் தூய்மை செய்வதற்காகத் தண்ணீர் கொண்டுவரச் சொல்- அங்கத் தூய்மை செய்தார்கள். (சுப்ஹு) தொழுகைக்காக (பாங்கு சொல்-) அறிவிப்பு செய்யப்பட்டபின் (தவறிய அந்தத் தொழுகையை) மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்துத் திரும்பியபோது, அங்கு ஒரு மனிதர் மக்களுடன் தொழாமல் அவர்களைவிட்டு ஒதுங்கியிருந்தார். நபி (ஸல்) அவர்கள், “இன்ன மனிதரே! மக்களுடன் சேர்ந்து நீங்கள் ஏன் தொழவில்லை?” என்று கேட்டார்கள். அவர், “எனக்குப் பெருந் துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விட்டது. (குளியலுக்குத்) தண்ணீர் இல்லை” என்றார். நபி (ஸல்) அவர்கள் மண்ணில் ‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள். அது போதும் உங்களுக்கு” என்று சொன் னார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் பயணத் தைத் தொடர்ந்தார்கள். அவர்களிடம் மக்கள் தங்களுக்குத் தாகம் ஏற்பட்டுள்ள தாக முறையிட்டனர். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தி-ருந்து இறங்கி, இன்ன மனிதரை அழைத்தார்கள் - அவருடைய பெயரை அறிவிப்பாளர் அபூரஜாஉ (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டார்கள். ஆனால், அடுத்த அறிவிப் பாளர் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் அதை மறந்துவிட்டார் - (அவருடன்) அலீ

(ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் அழைத்து, “நீங்கள் இருவரும் சென்று, தண்ணீர் கிடைக்குமா என்று தேடிப்பாருங்கள்” என்றார்கள்.

அவ்வாறே, அவர்கள் இருவரும் நடந்து போய்க்கொண்டிருந்தபோது, தண்ணீருள்ள இரு பெரும் தோல் பைகளுக்கிடையே (கால்களை தொங்கவிட்டபடி) தமது ஒட்டகத்தில் வந்துகொண்டிருந்த ஒரு பெண்ணை (வழியில்) சந்தித்தார்கள். அப்பெண்ணிடம் அவர்கள் இருவரும், “தண்ணீர் எங்கே (உள்ளது)?” என்று கேட்டார்கள்.

அதற்கு அப்பெண், “நேற்று இதே நேரத்தில் இந்தத் தண்ணீர் எனக்குக் கிடைத்தது. (இந்தத் தண்ணீருக்காக ஒரு நாள் பயணம் மேற்கொண்டேன்.) எங்கள் ஆட்கள் தண்ணீரைத் தேடிச் சென்றதால் (என்னுடன் வராமல்) பின்தங்கிவிட்டனர்” என்று கூறினாள்.

“அப்படியானால் நீ நட!” என்று அவர்கள் இருவரும் அப்பெண்ணிடம் கூறினர். அதற்கு அப்பெண் ‘எங்கே?’ என்று கேட்டாள். அவர்கள் இருவரும் ‘அல்லாஹ்வின் தூதரிடம்’ என்று கூறினர். “மதம் மாறியவர் (ஸாபிஉ) என்று கூறப்படுகிறாரே அவரிடமா?” என்று அப்பெண் கேட்டாள். “நீ நினைக்கின்ற அந்த மனிதரிடத்தில் தான்; நட” என்று கூறிவிட்டு, அப்பெண்ணை அவர்களிருவரும் நபி (ஸல்) அவர்களிடம் அழைத்து வந்து, நடந்ததை அவர்கள் நபியவர்களிடம் கூறினர்.

மக்கள் அந்தப் பெண்ணை ஒட்டகத் தி-ருந்து இறங்குமாறு கூறினர். நபி (ஸல்) அவர்கள் ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்- அவ்விரு தோல் பைகளின் வாய் வழியாகத் தண்ணீரைப் பாத்திரத்தி னுள் நிரப்பினார்கள். பிறகு அந்தத் தோல் பைகளின் மேல்வாய்களைக் கட்டிவிட்டு, தண்ணீர் ஊற்றியெடுக்கும் கீழ் வாய் களைக் கட்டாமல் திறந்துவிட்டார்கள். மக்களிடையே “தண்ணீர் புகட்டுங்கள்; நீங்களும் பருகுங்கள்” என அறிவிக்கப் பட்டது.

அவ்வாறே நாடிய சிலர் பிறர் பருகுவதற்காக எடுத்துக்கொண்டனர். நாடிய சிலர் தாமே பருகினர். அதன் இறுதியாக பெருந்துடக்கு ஏற்பட்ட அந்த மனிதருக்கு ஒரு பாத்திரம் தண்ணீர் வழங்கி, “(இந்தத் தண்ணீரை எடுத்துச்) சென்று, உங்கள்மீது ஊற்றிக்(குளித்துக்)கொள்ளுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையெல்லாம் அந்தப் பெண் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அதிலிருந்து தண்ணீர் ஊற்றுவது நிறுத்தப்பட்டது. அதில் தண்ணீர் எடுக்க ஆரம்பித்தபோது இருந்ததைவிடக் கூடுதலான தண்ணீர் நிரம்பியிருப்பதைப் போன்று எங்களுக்குத் தோன்றியது. (தோல் பையி-ருந்த தண்ணீர் குறையாமல் இருந்தது.) அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்) “இந்தப் பெண்ணுக்காக (ஏதேனும் பொருட்களை) திரட்டுங்கள்” என்று கூறினார்கள்.

அவ்வாறே அவர்கள், அந்தப் பெண்ணுக்காக மதீனாவின் செறிவுமிகு பேரீச்சங் கனிகள் (அஜ்வா), மாவு, குழைத்த மாவு உட்பட (ஏராளமான) உணவுப் பண்டங்களைத் திரட்டி(க் கொண்டுவந்து), அவற்றை ஒரு துணியி-ட்டனர். அந்தப் பெண்ணை அவளது ஒட்டகத்தில் அமர்த்தி அந்தத் துணியை அவளுக்கு முன்னால் வைத்தனர்.

பிறகு அப்பெண்ணிடம் நபி (ஸல்) அவர்கள், “தெரிந்துகொள்: உனது தண்ணீரி-ருந்து நாங்கள் சிறிதளவுகூட குறைக்கவில்லை; (நாங்கள் எடுத்த தண்ணீர் அல்லாஹ் எங்களுக்கு வழங்கி யதாகும்.) அல்லாஹ்தான் எங்களுக்குத் தண்ணீர் பருகக்கொடுத்தான்” என்று கூறினார்கள்.

பிறகு அப்பெண் தன் குடும்பத்தாரி டம் தாமதமாக வந்துசேர்ந்தார். அவர்கள், “இன்னவளே! ஏன் இவ்வளவு நேரம் கழித்துவருகிறாய்?” என்று கேட்டனர்.

அதற்கு அந்தப் பெண், “ஓர் அதிசயம் (என்னை விரைவாக வரவிடாமல் தடுத்து நிறுத்திவிட்டது). இரு ஆண்கள் என்னைச் சந்தித்து ‘மதம் மாறியவர்’ என்று கூறப்படுகிறதே அந்த மனிதரிடம் என்னை அழைத்துச் சென்றனர். அவர் இப்படி இப்படிச் செய்தார்” என்று கூறிவிட்டு, அப்பெண் தனது கையின் நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும் வானை நோக்கி உயர்த்திக் காட்டி, “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த வானிற்கும் பூமிக்குமிடையே உள்ளவர்களில் மிக வசீகரமான ஒரு மனிதராக அவர் இருந்தார்” அல்லது “உண்மையாக அவர் இறைவனின் தூதராவார்” என்று கூறினாள்.

அதற்குப் பிறகு (ஒரு சமயம்) அந்தப் பெண்ணைச் சுற்றி வாழ்ந்த இணை வைப்பாளர்களுக்கும் முஸ்-ம்களுக்கும் இடையே போர் நடந்தபோது, அந்தப் பெண் சார்ந்திருந்த தொகுப்பு வீடுகளை முஸ்லிம்கள் ஒன்றும் செய்யவில்லை.

ஆகவே, ஒரு நாள் அப்பெண் தன் கூட்டத்தாரிடம், “இந்த மக்கள் வேண்டு மென்றே (உங்களைத் தாக்காமல்) விட்டுவிடுகிறார்கள் என்பதே என் எண்ணம். இஸ்லாத்தில் (இணைய) உங்களுக்கு விருப்பம் உண்டா?” என்று கேட்டாள். அவர்கள் அனைவரும் அவளு(டைய சொல்லு)க்கு இணங்கி இஸ்லாத்தில் இணைந்தனர்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகின்றேன்:

(இந்த ஹதீஸின் மூலத்தில் இடம் பெற்றுள்ள ‘ஸாபிஉ’ எனும் சொல்-ன் வினைச் சொல்லான) ‘ஸபஅ’ என்பதற்கு ‘ஒரு மதத்தி-ருந்து வெளியேறி இன்னொரு மதத்திற்குச் சென்றார் (மதம் மாறினார்)’ என்பது பொருளாகும்.

அபுல்ஆ-யா (ரஃபீஉ பின் மிஹ்ரான் -ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

‘ஸாபியீன்’ என்போர், ‘ஸபூர்’ (வேதத்தை) வாசித்துவந்த வேதக்காரர் களில் ஒரு பிரிவினர் ஆவர்.

அத்தியாயம் : 7
345. حَدَّثَنَا بِشْرُ بْنُ خَالِدٍ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدٌ ـ هُوَ غُنْدَرٌ ـ عَنْ شُعْبَةَ، عَنْ سُلَيْمَانَ، عَنْ أَبِي وَائِلٍ، قَالَ قَالَ أَبُو مُوسَى لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ إِذَا لَمْ يَجِدِ الْمَاءَ لاَ يُصَلِّي. قَالَ عَبْدُ اللَّهِ لَوْ رَخَّصْتُ لَهُمْ فِي هَذَا، كَانَ إِذَا وَجَدَ أَحَدُهُمُ الْبَرْدَ قَالَ هَكَذَا ـ يَعْنِي تَيَمَّمَ وَصَلَّى ـ قَالَ قُلْتُ فَأَيْنَ قَوْلُ عَمَّارٍ لِعُمَرَ قَالَ إِنِّي لَمْ أَرَ عُمَرَ قَنِعَ بِقَوْلِ عَمَّارٍ.
பாடம் : 7 பெருந்துடக்கு உள்ளவர் (தண்ணீரைப் பயன்படுத்தினால்) தமக்கு நோயோ மரணமோ ஏற்பட்டுவிடுமென அஞ்சினாலோ, (இருக்கும் தண்ணீரில் குளித்துவிட்டால்) தாகத்துக்குத் தண்ணீர் கிடைக்காது என அஞ்சினாலோ ‘தயம்மும்’ செய்யலாம். அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுக்கு, (தாத்துஸ் ஸலாஸில் போரின்போது) குளிரான ஓர் இரவில் பெருந்துடக்கு ஏற்பட்டுவிட்டது. ஆகவே, அவர்கள் (குளிக்காமல்) தயம்மும் செய்துகொண்டார்கள். (பிறகு இது பற்றி அவர்கள் தம் தோழர்களிடம் குறிப்பிடுகையில்) “உங்களை நீங்களே கொலை செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களிடம் மிகவும் கருணை உடையவனாக இருக்கின்றான்” (4:29) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் (மதீனா திரும்பியதும்) இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது, அவரை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
345. அபூவாயில் (ஷகீக் பின் சலமா- ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “(குளியல் கடமை யான ஒருவருக்குத்) தண்ணீர் கிடைக்கா விட்டால், அவர் தொழ வேண்டா மல்லவா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “(ஆம்; தொழ வேண்டிய தில்லை.) இந்த விஷயத்தில் நான் சலுகையளித்தால், சிறிது குளிர் இருந்தால் கூட (அதைக் காரணம் காட்டி) மக்கள் இப்படி - தயம்மும் - செய்து கொண்டு தொழ ஆரம்பித்துவிடுவார்கள்” என்று கூறினார்கள்.

அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள், “அப்படியானால், அம்மார் (பின் யாசிர்-

ர-) அவர்கள், உமர் (பின் அல்கத்தாப் -ர-) அவர்களிடம் சொன்ன (‘தண்ணீர் கிடைக்காதபோது தயம்மும் செய்தால் போதும்’ என்பது பற்றிய) கூற்று எங்கே?” என்று கேட்டார்கள்.

அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “அம்மாரின் சொல்லைக் கேட்டு உமர் (ரலி) அவர்கள் மனநிறைவு கொள்ளவில்லை என்றே நான் கருதுகிறேன்” என்றார்கள்.


அத்தியாயம் : 7
346. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ سَمِعْتُ شَقِيقَ بْنَ سَلَمَةَ، قَالَ كُنْتُ عِنْدَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى فَقَالَ لَهُ أَبُو مُوسَى أَرَأَيْتَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِذَا أَجْنَبَ فَلَمْ يَجِدْ، مَاءً كَيْفَ يَصْنَعُ فَقَالَ عَبْدُ اللَّهِ لاَ يُصَلِّي حَتَّى يَجِدَ الْمَاءَ. فَقَالَ أَبُو مُوسَى فَكَيْفَ تَصْنَعُ بِقَوْلِ عَمَّارٍ حِينَ قَالَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم "" كَانَ يَكْفِيكَ "" قَالَ أَلَمْ تَرَ عُمَرَ لَمْ يَقْنَعْ بِذَلِكَ. فَقَالَ أَبُو مُوسَى فَدَعْنَا مِنْ قَوْلِ عَمَّارٍ، كَيْفَ تَصْنَعُ بِهَذِهِ الآيَةِ فَمَا دَرَى عَبْدُ اللَّهِ مَا يَقُولُ فَقَالَ إِنَّا لَوْ رَخَّصْنَا لَهُمْ فِي هَذَا لأَوْشَكَ إِذَا بَرَدَ عَلَى أَحَدِهِمُ الْمَاءُ أَنْ يَدَعَهُ وَيَتَيَمَّمَ. فَقُلْتُ لِشَقِيقٍ فَإِنَّمَا كَرِهَ عَبْدُ اللَّهِ لِهَذَا قَالَ نَعَمْ.
பாடம் : 7 பெருந்துடக்கு உள்ளவர் (தண்ணீரைப் பயன்படுத்தினால்) தமக்கு நோயோ மரணமோ ஏற்பட்டுவிடுமென அஞ்சினாலோ, (இருக்கும் தண்ணீரில் குளித்துவிட்டால்) தாகத்துக்குத் தண்ணீர் கிடைக்காது என அஞ்சினாலோ ‘தயம்மும்’ செய்யலாம். அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுக்கு, (தாத்துஸ் ஸலாஸில் போரின்போது) குளிரான ஓர் இரவில் பெருந்துடக்கு ஏற்பட்டுவிட்டது. ஆகவே, அவர்கள் (குளிக்காமல்) தயம்மும் செய்துகொண்டார்கள். (பிறகு இது பற்றி அவர்கள் தம் தோழர்களிடம் குறிப்பிடுகையில்) “உங்களை நீங்களே கொலை செய்யாதீர்கள். அல்லாஹ் உங்களிடம் மிகவும் கருணை உடையவனாக இருக்கின்றான்” (4:29) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டினார்கள். அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் (மதீனா திரும்பியதும்) இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது, அவரை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
346. ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூமூசா (ரலி) ஆகியோர் அருகில் நான் இருந்தேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

(ரலி) அவர்களிடம், “அபூஅப்திர் ரஹ்மானே! பெருந்துடக்கு ஏற்பட்ட ஒருவருக்கு (குளிக்க) தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “தண்ணீர் கிடைக்கும்வரை அவர் தொழ வேண்டியதில்லை” என்று பதிலளித்தார்கள். (இதைக் கேட்ட) உடன் அபூமூசா (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களிடம் ‘(தண்ணீர் கிடைக்காதபோது தயம்மும் செய்திருந்தால்) உமக்குப் போதுமானதாக இருந்திருக்கும்’ என்று சொன்னதாக அம்மார் (ரலி) அவர்கள் கூறிய செய்தியை நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “அம்மார் (ரலி) அவர்கள் அச்செய்தியைத் தம்மிடம் கூறியபோது உமர் (ரலி) அவர்கள் அதைக் கேட்டு மனநிறைவு அடையவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள், “அம்மாரின் சொல்லை விடுங்கள். (“உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காதபோது, சுத்தமான மண்ணால் ‘தயம்மும்’ செய்துகொள்ளுங்கள்” எனும்) இந்த (5:6) இறைவசனத்தை என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இருந்தாலும், பெருந்துடக்குடையவர் தண்ணீர் கிடைக்காதபோது தயம்மும் செய்துகொள்ளலாம்’ எனும்) இவ்விஷயத்தில் மக்களுக்கு நாம் சலுகையளித்தால், யாருக்காவது தண்ணீர் குளிராகத் தெரிந்தால்கூட அங்கத் தூய்மை செய்வதை விட்டுவிட்டு ‘தயம்மும்’ செய்யத் தொடங்கிவிடுவார்கள்” என்று சொன்னார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அப்படியானால் “(மக்கள் குளிருக்காக ‘தயம்மும்’ செய்துவிடுவார்கள் எனும்) இந்தக் காரணத்தை முன்னிட்டுத்தான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (அந்தச் சலுகையை வழங்க) வெறுத்தார்கள் என்கிறீர்களா?” என்று ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம் (அதற்காகத்தான் வெறுத்தார்கள்)” என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 7
347. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلاَمٍ، قَالَ أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ شَقِيقٍ، قَالَ كُنْتُ جَالِسًا مَعَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى الأَشْعَرِيِّ فَقَالَ لَهُ أَبُو مُوسَى لَوْ أَنَّ رَجُلاً أَجْنَبَ، فَلَمْ يَجِدِ الْمَاءَ شَهْرًا، أَمَا كَانَ يَتَيَمَّمُ وَيُصَلِّي فَكَيْفَ تَصْنَعُونَ بِهَذِهِ الآيَةِ فِي سُورَةِ الْمَائِدَةِ {فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا} فَقَالَ عَبْدُ اللَّهِ لَوْ رُخِّصَ لَهُمْ فِي هَذَا لأَوْشَكُوا إِذَا بَرَدَ عَلَيْهِمُ الْمَاءُ أَنْ يَتَيَمَّمُوا الصَّعِيدَ. قُلْتُ وَإِنَّمَا كَرِهْتُمْ هَذَا لِذَا قَالَ نَعَمْ. فَقَالَ أَبُو مُوسَى أَلَمْ تَسْمَعْ قَوْلَ عَمَّارٍ لِعُمَرَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَاجَةٍ فَأَجْنَبْتُ، فَلَمْ أَجِدِ الْمَاءَ، فَتَمَرَّغْتُ فِي الصَّعِيدِ كَمَا تَمَرَّغُ الدَّابَّةُ، فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَصْنَعَ هَكَذَا "". فَضَرَبَ بِكَفِّهِ ضَرْبَةً عَلَى الأَرْضِ ثُمَّ نَفَضَهَا، ثُمَّ مَسَحَ بِهَا ظَهْرَ كَفِّهِ بِشِمَالِهِ، أَوْ ظَهْرَ شِمَالِهِ بِكَفِّهِ، ثُمَّ مَسَحَ بِهِمَا وَجْهَهُ فَقَالَ عَبْدُ اللَّهِ أَفَلَمْ تَرَ عُمَرَ لَمْ يَقْنَعْ بِقَوْلِ عَمَّارٍ وَزَادَ يَعْلَى عَنِ الأَعْمَشِ عَنْ شَقِيقٍ كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ وَأَبِي مُوسَى فَقَالَ أَبُو مُوسَى أَلَمْ تَسْمَعْ قَوْلَ عَمَّارٍ لِعُمَرَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَنِي أَنَا وَأَنْتَ فَأَجْنَبْتُ فَتَمَعَّكْتُ بِالصَّعِيدِ، فَأَتَيْنَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَأَخْبَرْنَاهُ فَقَالَ "" إِنَّمَا كَانَ يَكْفِيكَ هَكَذَا "". وَمَسَحَ وَجْهَهُ وَكَفَّيْهِ وَاحِدَةً
பாடம் : 8 தயம்மும் என்பது (இரு கைக ளால்) ஒரு முறை (மண்ணில்) அடிப்பதாகும்.
347. ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்

(ரலி), அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், “பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்ட ஒரு மனித ருக்கு ஒரு மாத காலம்வரை தண்ணீர் கிடைக்காவிட்டாலும் ‘தயம்மும்’ செய்யா மலும் தொழாமலும் இருந்துவிட வேண்டி யதுதானா? அப்படியானால் ‘அல்மாயிதா’ அத்தியாத்தில் வரும் “உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காதபோது, சுத்தமான மண்ணால் ‘தயம்மும்’ செய்து கொள்ளுங் கள்” எனும் இந்த (5:6ஆவது) வசனத்தை என்ன செய்வீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “இந்த விஷயத்தில் (மக்களுக்குப் பொதுவாக) அனுமதி அளிக்கப்பட்டுவிடுமானால், தண்ணீர் அவர்களுக்குக் குளிராகத் தெரிந்தால்கூட தயம்மும் செய்யத் தொடங்கிவிடுவார்கள்” என்றார்கள்.

-(அறிவிப்பாளர் அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஷகீக் (ரஹ்) அவர்களிடம்,) “இதற்காகத்தான் ‘தயம்மும்’ செய்வதை நீங்கள் வெறுக்கிறீர்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு ஷகீக் (ரஹ்) அவர்கள் ‘ஆம்’ என்று பதிலளித் தார்கள்.-

உடனே அபூமூசா (ரலி) அவர்கள் கேட்டார்கள்: உமர் (ரலி) அவர்களிடம் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் சொன்ன செய்தியை நீங்கள் கேள்விப்பட வில்லையா? (அச்செய்தி வருமாறு:)

அம்மார் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என்னை ஒரு தேவைக்காக (படைப்பிரி வொன்றில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். அப்போது எனக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது. ஆனால், தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, நான் (குளியலுக்குத் தயம்மும் செய்வதற்காகப்) பிராணிகள் புரள்வதைப் போன்று மண்ணில் புரண்டேன்.

(ஊர் திரும்பியதும்) இந்தச் செய்தியை நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன் னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கையை பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் அதை உதறிவிட்டு, ‘தமது வலக் கரத்தால் இடது புறங்கையை’ அல்லது ‘தமது இடக் கரத்தால் வலது புறங்கையைத்’ தடவினார்கள். பிறகு இரு கைகளால் தமது முகத்தையும் தடவிவிட்டு, “இப்படி நீர் செய்திருந்தால் உமக்குப் போதுமான தாயிருந்திருக்கும்” என்று கூறினார்கள்.

(இந்நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “அம்மார் சொன்னதில் உமர் (ரலி) அவர்களுக்கு மனநிறைவு ஏற்படவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று (அபூமூசா (ரலி) அவர்களிடம்) கேட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஒன்றில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் பின்வரும் கூடுதலான தகவலையும் குறிப்பிட்டுள்ளார்கள்:

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூமூசா (ரலி) ஆகியோருடன் இருந்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் அபூமூசா (ரலி) அவர்கள், “உமர் (ரலி) அவர்களிடம் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் ‘என்னையும் உங்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (படைப் பிரிவொன்றில்) அனுப்பிவைத்தார்கள். எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது. அப்போது நான் மண்ணில் (கிடந்து) புரண்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாம் வந்து விஷயத்தைத் தெரிவித்தபோது அவர்கள் தமது முகத்தையும் (மணிக்கட்டு வரை) இரு கைகளையும் ஒரேயொரு தடவை தடவிவிட்டு, ‘இப்படி நீர் செய்திருந்தால் உமக்குப் போதுமான தாயிருந்திருக்கும்’ என்று சொன்ன செய்தியை நீங்கள் கேள்விப்படவில் லையா?” என்றார்கள்.

அத்தியாயம் : 7
348. حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا عَوْفٌ، عَنْ أَبِي رَجَاءٍ، قَالَ حَدَّثَنَا عِمْرَانُ بْنُ حُصَيْنٍ الْخُزَاعِيُّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم رَأَى رَجُلاً مُعْتَزِلاً لَمْ يُصَلِّ فِي الْقَوْمِ فَقَالَ "" يَا فُلاَنُ مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ فِي الْقَوْمِ "". فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، أَصَابَتْنِي جَنَابَةٌ وَلاَ مَاءَ. قَالَ "" عَلَيْكَ بِالصَّعِيدِ فَإِنَّهُ يَكْفِيكَ "".
பாடம் : 9
348. இம்ரான் பின் ஹுஸைன் அல்குஸாஈ (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் மக்களுடன் சேர்ந்து தொழாமல் தனியே விலகி இருப்பதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ன மனிதரே! மக்களுடன் சேர்ந்து நீர் ஏன் தொழவில்லை?” என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த மனிதர், “அல்லாஹ்வின் தூதரே! எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விட்டது; (குளிக்க) தண்ணீர் இல்லை (எனவேதான், மக்களைவிட்டு விலகியிருக்கிறேன்)” என்று சொன்னார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “மண்ணைப் பயன்படுத்துவீராக. அ(தனால் தயம்மும் செய்வ)தே உமக்குப் போதும்” என்றார்கள்.

அத்தியாயம் : 7

349. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ كَانَ أَبُو ذَرٍّ يُحَدِّثُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" فُرِجَ عَنْ سَقْفِ بَيْتِي وَأَنَا بِمَكَّةَ، فَنَزَلَ جِبْرِيلُ فَفَرَجَ صَدْرِي، ثُمَّ غَسَلَهُ بِمَاءِ زَمْزَمَ، ثُمَّ جَاءَ بِطَسْتٍ مِنْ ذَهَبٍ مُمْتَلِئٍ حِكْمَةً وَإِيمَانًا، فَأَفْرَغَهُ فِي صَدْرِي ثُمَّ أَطْبَقَهُ، ثُمَّ أَخَذَ بِيَدِي فَعَرَجَ بِي إِلَى السَّمَاءِ الدُّنْيَا، فَلَمَّا جِئْتُ إِلَى السَّمَاءِ الدُّنْيَا قَالَ جِبْرِيلُ لِخَازِنِ السَّمَاءِ افْتَحْ. قَالَ مَنْ هَذَا قَالَ هَذَا جِبْرِيلُ. قَالَ هَلْ مَعَكَ أَحَدٌ قَالَ نَعَمْ مَعِي مُحَمَّدٌ صلى الله عليه وسلم. فَقَالَ أُرْسِلَ إِلَيْهِ قَالَ نَعَمْ. فَلَمَّا فَتَحَ عَلَوْنَا السَّمَاءَ الدُّنْيَا، فَإِذَا رَجُلٌ قَاعِدٌ عَلَى يَمِينِهِ أَسْوِدَةٌ وَعَلَى يَسَارِهِ أَسْوِدَةٌ، إِذَا نَظَرَ قِبَلَ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ يَسَارِهِ بَكَى، فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالاِبْنِ الصَّالِحِ. قُلْتُ لِجِبْرِيلَ مَنْ هَذَا قَالَ هَذَا آدَمُ. وَهَذِهِ الأَسْوِدَةُ عَنْ يَمِينِهِ وَشِمَالِهِ نَسَمُ بَنِيهِ، فَأَهْلُ الْيَمِينِ مِنْهُمْ أَهْلُ الْجَنَّةِ، وَالأَسْوِدَةُ الَّتِي عَنْ شِمَالِهِ أَهْلُ النَّارِ، فَإِذَا نَظَرَ عَنْ يَمِينِهِ ضَحِكَ، وَإِذَا نَظَرَ قِبَلَ شِمَالِهِ بَكَى، حَتَّى عَرَجَ بِي إِلَى السَّمَاءِ الثَّانِيَةِ فَقَالَ لِخَازِنِهَا افْتَحْ. فَقَالَ لَهُ خَازِنُهَا مِثْلَ مَا قَالَ الأَوَّلُ فَفَتَحَ "". قَالَ أَنَسٌ فَذَكَرَ أَنَّهُ وَجَدَ فِي السَّمَوَاتِ آدَمَ وَإِدْرِيسَ وَمُوسَى وَعِيسَى وَإِبْرَاهِيمَ ـ صَلَوَاتُ اللَّهِ عَلَيْهِمْ ـ وَلَمْ يُثْبِتْ كَيْفَ مَنَازِلُهُمْ، غَيْرَ أَنَّهُ ذَكَرَ أَنَّهُ وَجَدَ آدَمَ فِي السَّمَاءِ الدُّنْيَا، وَإِبْرَاهِيمَ فِي السَّمَاءِ السَّادِسَةِ. قَالَ أَنَسٌ فَلَمَّا مَرَّ جِبْرِيلُ بِالنَّبِيِّ صلى الله عليه وسلم بِإِدْرِيسَ قَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ. فَقُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا إِدْرِيسُ. ثُمَّ مَرَرْتُ بِمُوسَى فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالأَخِ الصَّالِحِ. قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا مُوسَى. ثُمَّ مَرَرْتُ بِعِيسَى فَقَالَ مَرْحَبًا بِالأَخِ الصَّالِحِ وَالنَّبِيِّ الصَّالِحِ. قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا عِيسَى. ثُمَّ مَرَرْتُ بِإِبْرَاهِيمَ فَقَالَ مَرْحَبًا بِالنَّبِيِّ الصَّالِحِ وَالاِبْنِ الصَّالِحِ. قُلْتُ مَنْ هَذَا قَالَ هَذَا إِبْرَاهِيمُ صلى الله عليه وسلم "". قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي ابْنُ حَزْمٍ أَنَّ ابْنَ عَبَّاسٍ وَأَبَا حَبَّةَ الأَنْصَارِيَّ كَانَا يَقُولاَنِ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" ثُمَّ عُرِجَ بِي حَتَّى ظَهَرْتُ لِمُسْتَوًى أَسْمَعُ فِيهِ صَرِيفَ الأَقْلاَمِ "". قَالَ ابْنُ حَزْمٍ وَأَنَسُ بْنُ مَالِكٍ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَفَرَضَ اللَّهُ عَلَى أُمَّتِي خَمْسِينَ صَلاَةً، فَرَجَعْتُ بِذَلِكَ حَتَّى مَرَرْتُ عَلَى مُوسَى فَقَالَ مَا فَرَضَ اللَّهُ لَكَ عَلَى أُمَّتِكَ قُلْتُ فَرَضَ خَمْسِينَ صَلاَةً. قَالَ فَارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ. فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَى مُوسَى قُلْتُ وَضَعَ شَطْرَهَا. فَقَالَ رَاجِعْ رَبَّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ، فَرَاجَعْتُ فَوَضَعَ شَطْرَهَا، فَرَجَعْتُ إِلَيْهِ فَقَالَ ارْجِعْ إِلَى رَبِّكَ، فَإِنَّ أُمَّتَكَ لاَ تُطِيقُ ذَلِكَ، فَرَاجَعْتُهُ. فَقَالَ هِيَ خَمْسٌ وَهْىَ خَمْسُونَ، لاَ يُبَدَّلُ الْقَوْلُ لَدَىَّ. فَرَجَعْتُ إِلَى مُوسَى فَقَالَ رَاجِعْ رَبَّكَ. فَقُلْتُ اسْتَحْيَيْتُ مِنْ رَبِّي. ثُمَّ انْطَلَقَ بِي حَتَّى انْتَهَى بِي إِلَى سِدْرَةِ الْمُنْتَهَى، وَغَشِيَهَا أَلْوَانٌ لاَ أَدْرِي مَا هِيَ، ثُمَّ أُدْخِلْتُ الْجَنَّةَ، فَإِذَا فِيهَا حَبَايِلُ اللُّؤْلُؤِ، وَإِذَا تُرَابُهَا الْمِسْكُ "".
பாடம் : 1 (விண்ணுலகப் பயணமான ‘மிஅராஜ்’ நடந்த) ‘இஸ்ரா’ இரவில் தொழுகை எவ்வாறு கடமையாக்கப்பட்டது?2 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (கிழக்கு ரோமானியப் பேரரசர்) ஹிரக்ளீயஸ் தொடர்பான ஹதீஸில் அபூசுஃப்யான் (ரலி) அவர்கள், “தொழு கையை நிறைவேற்றுமாறும் உண்மையே உரைக்குமாறும் தன்மானத்தோடு வாழு மாறும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள்” என்று தாம் (ஹிரக்ளீயஸிடம்) கூறியதாக என்னிடம் தெரிவித்தார்கள்.3
349. அபூதர் (ரலி) அவர்கள் அறிவித்து வந்ததாக அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் மக்காவில் இருந்தபோது என் வீட்டின் கூரை பிளக்கப்பட்டது. (அதன் வழியாக வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் இறங்கி (வந்து), என்னுடைய நெஞ்சைப் பிளந்தார். பிறகு அதை ‘ஸம்ஸம்’ தண்ணீரால் கழுவினார். பிறகு நுண்ணறிவாலும் இறைநம்பிக்கையாலும் நிரம்பிய தங்கத் தட்டு ஒன்றைக் கொண்டுவந்து என் நெஞ்சத்தினுள் அதை ஊற்றி (நிரப்பி)னார். பிறகு (பழையபடியே நெஞ்சை) மூடிவிட்டார்.

பிறகு என் கையைப் பிடித்து (என்னை அழைத்து)க்கொண்டு விண்ணில் ஏறினார். முதலாவது வானத்திற்கு நான் சென்றபோது அந்த வானத்தின் காவலரிடம், ‘திறங்கள்’ என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் கூறினார். அதற்கு அவர், “யார் அது?” எனக் கேட்டார். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “ஜிப்ரீல்” என்று பதிலளித்தார். அதற்கு அவர், “உங்களுடன் யாரேனும் உள்ளார்களா?” எனக் கேட்டார். அவர், “ஆம்; என்னுடன் முஹம்மத் (ஸல்) அவர்கள் இருக்கிறார் கள்” என்று பதிலளித்தார். அதற்கு அவர், “(அவரை அழைத்துவரச் சொல்-) அவரிடம் ஆளனுப்பப்பட்டதா?” என்று கேட்க, ஜிப்ரீல் (அலை) அவர்கள் ‘ஆம்’ என்று கூறினார்.

(முதல் வானத்தின் கதவை) அவர் திறந்தபோது, நாங்கள் அந்த வானத்தின் மேலே (இன்னும்) சென்றோம். அங்கு ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். அவரது வலப் பக்கத்திலும் இடப் பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தமது வலப் பக்கம் பார்க்கும்போது சிரித்தார்; தமது இடப் பக்கம் பார்க்கும்போது அழுதார். (பிறகு என்னைப் பார்த்து,) “நல்ல இறைத்தூதரே வருக! நல்ல மகனே வருக!” என்று (வாழ்த்துக்) கூறினார். நான் ஜிப்ரீல் அவர்களிடம், “இவர் யார்?” எனக் கேட்டேன்.

ஜிப்ரீல் அவர்கள், “இவர்தான் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்கள்; இவருடைய வலப் பக்கமும் இடப் பக்கமும் இருக்கும் மக்கள் அவருடைய சந்ததிகள். அவர்களில் வலப் பக்கம் இருப்பவர்கள் சொர்க்கவாசிகள். இடப் பக்கத்தில் இருக்கும் மக்கள் நரகவாசிகள். ஆகவேதான், இவர் வலப் பக்கம் பார்க்கும்போது (மகிழ்ச்சியால்) சிரிக்கிறார்; இடப் பக்கம் பார்க்கும் போது (வேதனைப்பட்டு) அழுகிறார்” என்று பதிலளித்தார்.

பிறகு என்னை அழைத்துக்கொண்டு ஜிப்ரீல் இரண்டாம் வானத்திற்கு ஏறிச் சென்றார். அதன் காவலரிடம் ‘திறங்கள்’ என்று கூறினார். அதன் காவலரும் முதலாமவர் கேட்டதைப் போன்றே கேட்டார். பிறகு (முன்பு போன்றே ஜிப்ரீல் பதிலளித்தபின்) அவர் கதவைத் திறந்தார்.

அனஸ் (ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:

“நபி (ஸல்) அவர்கள், வானங்களில் ஆதம் (அலை), இத்ரீஸ் (அலை), மூசா (அலை), ஈசா (அலை), இப்ராஹீம் (அலை) ஆகியோரைக் கண்டதாக அபூதர்

(ரலி) அவர்கள் கூறினார்களே தவிர, அவர்கள் தங்கியிருந்த இடங்கள் எங்கெங்கே அமைந்திருந்தன என்பது பற்றி அவர்கள் (என்னிடம்) குறிப்பிட்டுக் கூறவில்லை. எனினும், நபி (ஸல்) அவர்கள் ஆதம் (அலை) அவர்களை அண்மையிலுள்ள (முதல்) வானத்தில் கண்டதாகவும் இப்ராஹீம் (அலை) அவர்களை ஆறாவது வானத்தில் கண்டதாகவும் மட்டுமே சொன்னார்கள்.4

அனஸ் (ரலி) அவர்கள் மேலும் கூறுகிறார்கள்:

“என்னுடன் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இத்ரீஸ் (அலை) அவர்களைக் கடந்து சென்றபோது “நல்ல இறைத்தூதரே வருக! நல்ல சகோதரரே வருக!” என்று இத்ரீஸ் (அலை) அவர்கள் (வாழ்த்துக்) கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். அதற்கு ஜிப்ரீல், “இவர்தான் இத்ரீஸ்” என்று பதிலளித்தார்.

பிறகு மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்களும், “நல்ல நபியே வருக! நல்ல சகோதரரே வருக!” என்று (வாழ்த்துக்) கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று (ஜீப்ரீ-டம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர்தான் மூசா” என்று பதிலளித்தார்.

பின்னர் நான் (அந்தப் பயணத்தில்) ஈசா (அலை) அவர்களையும் கடந்து சென்றேன். அவர்களும் “நல்ல சகோதரரே வருக! நல்ல இறைத்தூதரே வருக!” என்று கூறினார்கள். நான், “இவர் யார்?” என்று (ஜிப்ரீ-டம்) கேட்டேன். அதற்கு ஜிப்ரீல், “இவர்தான் ஈசா” என்று பதிலளித்தார்.

பிறகு நான் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அவர்கள், “நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!” என்று (வாழ்த்துச்) சொன்னார்கள். நான், “இவர் யார்?” என்று கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர்தான் இப்ராஹீம்” என்று கூறினார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்னு ஷிஹாப் (முஹம்மத் பின்

முஸ்-ம்) அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு அப்பாஸ் (ரலி), அபூஹப்பா அல்அன்சாரி (ரலி) ஆகியோர் கூறி வந்ததாக இப்னு ஹஸ்ம் (அபூபக்ர் பின் முஹம்மத்- ரஹ்) அவர்கள் என்னிடம் தெரிவித்ததாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பிறகு (இன்னும்) மேலே என்னை அழைத் துச் செல்லப்பட்டது. நான் ஓர் உயரமான இடத்தில் ஏறிக்கொண்டிருந்தபோது, (வானவர்கள் விதிகளைப் பதிவு செய்யும்) எழுதுகோல்களின் ஓசையைச் செவி யுற்றேன்.

இப்னு ஹஸ்ம் (ரஹ்) அவர்களும் அனஸ் பின் மா-க் (ரலி) அவர்களும் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அப்போது (நான் உட்பட) என் சமுதாயத்தார் அனைவர்மீதும் (நாளொன்றுக்கு) ஐம்பது தொழுகைகளை அல்லாஹ் கடமையாக்கினான். அதைப் பெற்றுக்கொண்டு நான் திரும்பியபோது மூசா (அலை) அவர்களைக் கடந்தேன். அப்போது மூசா (அலை) அவர்கள், “உங்கள்மீது உங்கள் சமுதாயத்தாருக்காக அல்லாஹ் என்ன கடமையாக்கினான்?” என்று கேட்டார்கள். நான், “(என் சமுதாயத்தார்மீது) ஐம்பது தொழுகைகளைக் கடமையாக்கியுள்ளான்” என்று பதிலளித்தேன்.

அவர்கள், “அப்படியானால் உங்கள் இறைவனிடம் திரும்பிச் செ(ன்று சற்று குறைத்துக் கடமையாக்கும்படி சொ)ல்லுங்கள் ஏனெனில், உங்கள் சமுதாயத்தாரால் அதைத் தாங்க முடியாது” என்று கூறினார்கள். உடனே நான் என் இறைவனிடம் திரும்பிச் சென்றேன். (தொழுகைகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கேட்டபோது) இறைவன் ஐம்பதில் ஒரு பகுதியைக் குறைத்தான். மூசா (அலை) அவர்களிடம் நான் திரும்பிச்சென்று, “அதில் ஒரு பகுதியை இறைவன் குறைத்துவிட்டான்” என்று சொன்னேன். அப்போதும் அவர்கள், “உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள் (இன்னும் சிறிது குறைத்துத் தரும்படி கேளுங்கள்). ஏனெனில், இதையும் உங்கள் சமுதாயத்தாரால் தாங்க முடியாது” என்று சொன்னார்கள்.

அவ்வாறே, நானும் (இறைவனிடம்) திரும்பினேன். அவன் அவற்றில் இன்னொரு பகுதியைக் குறைத்தான். மூசா (அலை) அவர்களிடம் வந்தபோது, “உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங் கள். இதையும் உங்கள் சமுதாயத்தார் தாங்கமாட்டார்கள்” என்றார்கள். இவ் வாறாக நான் திரும்பிச் சென்று (இறுதியில்) “இவை ஐவேளைத் தொழுகைகள் ஆகும். (நற்பலனில்) ஐம்பது (வேளைத் தொழு கைக்கு ஈடு) ஆகும். என்னிடம் இந்தச் சொல் (இனி) மாற்றப்படாது” என்று அல்லாஹ் கூறிவிட்டான்.

பின்னர் நான் மூசா (அலை) அவர்களி டம் திரும்பிச் சென்றேன். அவர்கள், “(மீண்டும்) உங்கள் இறைவனிடம் திரும்பிச் செல்லுங்கள்” என்றார்கள். நான், “என் இறைவனிடம் (மேலும் சலுகை கோர) வெட்கப்படுகிறேன்” என்று சொன்னேன்.

பிறகு ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னை அழைத்துக்கொண்டு (வானுலகின் எல்லையான) ‘சித்ரத்துல் முன்தஹா’வுக்குச் சென்றார்கள். இனம் புரியாத பல வண்ணங்கள் அதைப் போர்த்தியிருந்தன. பிறகு நான் சொர்க்கத்துக்குள் அனுமதிக்கப்பட்டேன். அங்கு முத்தாலான கழுத்தணிகளைக் கண்டேன். சொர்க்கத்தின் மண் (நறுமணம் கமழும்) கஸ்தூரியாக இருந்தது.


அத்தியாயம் : 8
350. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ، قَالَتْ "" فَرَضَ اللَّهُ الصَّلاَةَ حِينَ فَرَضَهَا رَكْعَتَيْنِ رَكْعَتَيْنِ فِي الْحَضَرِ وَالسَّفَرِ، فَأُقِرَّتْ صَلاَةُ السَّفَرِ، وَزِيدَ فِي صَلاَةِ الْحَضَرِ "".
பாடம் : 1 (விண்ணுலகப் பயணமான ‘மிஅராஜ்’ நடந்த) ‘இஸ்ரா’ இரவில் தொழுகை எவ்வாறு கடமையாக்கப்பட்டது?2 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (கிழக்கு ரோமானியப் பேரரசர்) ஹிரக்ளீயஸ் தொடர்பான ஹதீஸில் அபூசுஃப்யான் (ரலி) அவர்கள், “தொழு கையை நிறைவேற்றுமாறும் உண்மையே உரைக்குமாறும் தன்மானத்தோடு வாழு மாறும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள்” என்று தாம் (ஹிரக்ளீயஸிடம்) கூறியதாக என்னிடம் தெரிவித்தார்கள்.3
350. இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மிஅராஜ் இரவில்) அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கியபோது, சொந்த ஊரில் இருந்தாலும் பயணத்தில் இருந்தாலும் இரண்டு இரண்டு ரக்அத்களாகவே கடமையாக்கினான். பின்னர் பயணத் தொழுகை அவ்வாறே (இரண்டு இரண்டு ரக்அத்களாகவே) நீடித்தது; சொந்த ஊரில் தொழும் தொழுகையில் (லுஹ்ர், அஸ்ர், இஷா ஆகியவற்றில்) தலா இரண்டு ரக்அத்கள் கூடுதலாக்கப்பட்டது.5

அத்தியாயம் : 8
351. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أُمِّ عَطِيَّةَ، قَالَتْ أُمِرْنَا أَنْ نُخْرِجَ، الْحُيَّضَ يَوْمَ الْعِيدَيْنِ وَذَوَاتِ الْخُدُورِ، فَيَشْهَدْنَ جَمَاعَةَ الْمُسْلِمِينَ وَدَعْوَتَهُمْ، وَيَعْتَزِلُ الْحُيَّضُ عَنْ مُصَلاَّهُنَّ. قَالَتِ امْرَأَةٌ يَا رَسُولَ اللَّهِ، إِحْدَانَا لَيْسَ لَهَا جِلْبَابٌ. قَالَ "" لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا "". وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ رَجَاءٍ حَدَّثَنَا عِمْرَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِيرِينَ، حَدَّثَتْنَا أُمُّ عَطِيَّةَ، سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم بِهَذَا.
பாடம் : 2 ஆடை அணிந்து தொழுவதன் அவசியமும், “ஆதமின் மக்களே! (மனிதர்களே!) நீங்கள் தொழுமிடங்கள் ஒவ்வொன்றி லும் உங்களது அலங்காரத்தை மேற்கொள்ளுங்கள்” (7:31) எனும் இறைவசனமும், ஒரே ஒரு துணியை அணிந்து தொழுவதும்.6 (அவ்வாறு ஒரே துணியில் தொழும் ஒருவர்) அதை ஒரு முள்ளைக் கொண்டாவது மூடிக்கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. எனினும், இதன் அறிவிப்பாளர்தொடர் விவாதத்துக்குரியதாகும்.7 ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத் திய உறவு கொண்ட ஆடையில் அசிங்கம் எதையும் காணாத வரை அதை அணிந்துகொண்டு தொழலாம். நிர்வாணமாக யாரும் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வரக் கூடாதென நபி (ஸல்) அவர்கள் கட்டளை யிட்டுள்ளார்கள்.
351. உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரு பெருநாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள் ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களை யும் (தொழுகைத் திடலுக்கு) புறப்படச் செய்யுமாறு நாங்கள் (இறைத்தூதரால்) பணிக்கப்பட்டோம்.

“பெண்கள் அனைவரும் முஸ்-ம்களின் கூட்டுத் தொழுகையிலும் பிரார்த்தனை யிலும் கலந்துகொள்ள வேண்டும். மாதவிடாயுள்ள பெண்கள் மற்றப் பெண்கள் தொழும் இடத்தி-ருந்து விலகியிருக்க வேண்டும்” (என்று நபி (ஸல்) அவர்கள் கூற, இதைக் கேட்டுக் கொண்டிருந்த) ஒரு பெண், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருத்தியிடம் துப்பட்டா இல்லாவிட்டால் என்ன செய்வது)?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(ஒரு பெண்ணிடம் துப்பட்டா இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தன் துப்பட்டாக்களில் ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக் கொடுக்கட்டும்!” என்றார்கள்.8

இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 8
352. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي وَاقِدُ بْنُ مُحَمَّدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ صَلَّى جَابِرٌ فِي إِزَارٍ قَدْ عَقَدَهُ مِنْ قِبَلِ قَفَاهُ، وَثِيَابُهُ مَوْضُوعَةٌ عَلَى الْمِشْجَبِ قَالَ لَهُ قَائِلٌ تُصَلِّي فِي إِزَارٍ وَاحِدٍ فَقَالَ إِنَّمَا صَنَعْتُ ذَلِكَ لِيَرَانِي أَحْمَقُ مِثْلُكَ، وَأَيُّنَا كَانَ لَهُ ثَوْبَانِ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم
பாடம் : 3 கீழாடை மட்டும் அணிந்து தொழுதால், அதைப் பிடரியில் முடிச்சுப் போட்டுக்கொள் வது9 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபித்தோழர்கள்) சிலர், தம் கீழாடை களைத் தோள்களில் முடிச்சுப் போட்டுக் கொண்டவர்களாக நபி (ஸல்) அவர் களுடன் தொழுதனர்.
352. முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் (ரலி) அவர்கள் (ஒரு முறை) ஒரே கீழாடையை அணிந்துகொண்டு, அதைத் தமது பிடரியின் பக்கமாக முடிச்சுப்போட்டுக்கொண்டவர்களாகத் தொழுதார்கள். அப்போது அவர்களின் (மற்ற) ஆடைகள் துணி மாட்டும் பலகையில் வைக்கப்பட்டிருந்தன.

அவர்களிடம் ஒருவர், “ஒரே கீழாடையிலா தொழுகிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “உம்மைப் போன்ற விவரமில்லாதவர்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நான் செய்தேன்” என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்களது காலத்தில் எங்களில் யாருக்குத்தான் இரு ஆடைகள் இருந்தன?” என்று வினவினார்கள்.


அத்தியாயம் : 8
353. حَدَّثَنَا مُطَرِّفٌ أَبُو مُصْعَبٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الْمَوَالِي، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ، قَالَ رَأَيْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ وَقَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يُصَلِّي فِي ثَوْبٍ.
பாடம் : 3 கீழாடை மட்டும் அணிந்து தொழுதால், அதைப் பிடரியில் முடிச்சுப் போட்டுக்கொள் வது9 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபித்தோழர்கள்) சிலர், தம் கீழாடை களைத் தோள்களில் முடிச்சுப் போட்டுக் கொண்டவர்களாக நபி (ஸல்) அவர் களுடன் தொழுதனர்.
353. முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுவதை நான் பார்த்தேன். மேலும் அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழுவதை நான் கண்டேன்” என்றும் கூறினார்கள்.

அத்தியாயம் : 8