3096. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" لاَ يَقْتَسِمُ وَرَثَتِي دِينَارًا، مَا تَرَكْتُ بَعْدَ نَفَقَةِ نِسَائِي وَمَئُونَةِ عَامِلِي فَهْوَ صَدَقَةٌ "".
பாடம் : 3 நபி (ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் அவர்களுடைய துணைவியரின் வாழ்க்கைச் செலவு
3096. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் வாரிசுகள் ஒரு பொற்காசைக்கூட (வாரிசுப்) பங்காகப் பெறமாட்டார்கள். என் துணைவியருக்குச் சேரவேண்டிய வாழ்க்கைச் செலவும் என் பிரதிநிதியின் ஊதியமும்போக நான் விட்டுச்செல்பவை யெல்லாம் தர்மமேயாகும்.11

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.12


அத்தியாயம் : 57
3097. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَا فِي بَيْتِي مِنْ شَىْءٍ يَأْكُلُهُ ذُو كَبِدٍ، إِلاَّ شَطْرُ شَعِيرٍ فِي رَفٍّ لِي، فَأَكَلْتُ مِنْهُ حَتَّى طَالَ عَلَىَّ، فَكِلْتُهُ فَفَنِيَ.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் அவர்களுடைய துணைவியரின் வாழ்க்கைச் செலவு
3097. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் நிலைப்பேழையிலிருந்த சிறிதளவு தொலி நீக்கப்பட்ட கோதுமையைத் தவிர, உயிருள்ளவர் உண்ணக்கூடிய பொருள் எதுவும் என் வீட்டில் இல்லாத நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அதிலிருந்து எடுத்து நீண்ட காலம் நான் உண்டேன். பிறகு, அதை நான் அளந்தேன். (அதனால், சிறிது காலத் திற்குப்பின்) அது தீர்ந்துபோய்விட்டது.


அத்தியாயம் : 57
3098. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ عَمْرَو بْنَ الْحَارِثِ، قَالَ مَا تَرَكَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِلاَّ سِلاَحَهُ وَبَغْلَتَهُ الْبَيْضَاءَ، وَأَرْضًا تَرَكَهَا صَدَقَةً.
பாடம் : 3 நபி (ஸல்) அவர்களின் இறப்புக்குப்பின் அவர்களுடைய துணைவியரின் வாழ்க்கைச் செலவு
3098. அம்ர் பின் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் ஆயுதத்தை யும் வெள்ளைக் கோவேறுக் கழுதை யையும் தவிர வேறெதையும் (தாம் இறந்தபோது) விட்டுச்செல்லவில்லை. மேலும், அவர்கள் ஒரேயொரு நிலத்தை (மட்டும்) தர்மமாக விட்டுச்சென்றார்கள்.13

அத்தியாயம் : 57
3099. حَدَّثَنَا حِبَّانُ بْنُ مُوسَى، وَمُحَمَّدٌ، قَالاَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، وَيُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم اسْتَأْذَنَ أَزْوَاجَهُ أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي فَأَذِنَّ لَهُ.
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் இல்லங்கள் தொடர்பாக வந்துள்ளவையும் அவர்களின் பெயரால் அழைக்கப்பட்டுவந்த இல்லங்களும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தைப் போன்று (திரையின்றி) வெளியே நடமாடாதீர்கள். (33:33) இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் தவிர, நுழையாதீர்கள். (33:53)
3099. நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நோயின் கடுமை அதிகரித்து விட்டபோது என் வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற்றிட தம் மற்ற மனைவிமார்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி கொடுத்தார்கள்.14

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 57
3100. حَدَّثَنَا ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا نَافِعٌ، سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ، قَالَ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها تُوُفِّيَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي بَيْتِي، وَفِي نَوْبَتِي، وَبَيْنَ سَحْرِي وَنَحْرِي، وَجَمَعَ اللَّهُ بَيْنَ رِيقِي وَرِيقِهِ. قَالَتْ دَخَلَ عَبْدُ الرَّحْمَنِ بِسِوَاكٍ، فَضَعُفَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْهُ، فَأَخَذْتُهُ فَمَضَغْتُهُ ثُمَّ سَنَنْتُهُ بِهِ.
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் இல்லங்கள் தொடர்பாக வந்துள்ளவையும் அவர்களின் பெயரால் அழைக்கப்பட்டுவந்த இல்லங்களும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தைப் போன்று (திரையின்றி) வெளியே நடமாடாதீர்கள். (33:33) இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் தவிர, நுழையாதீர்கள். (33:53)
3100. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் வீட்டில் எனது முறைக்குரிய நாளில் (வந்திருந்தபோது) என் தொண்டைக்கும் என் மார்புக்குமிடையே (சாய்ந்திருந்த நிலையில்) நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். அல்லாஹ் எனது எச்சிலையும் அவர்களுடைய எச்சிலையும் ஒன்றுசேர்த்திருந்தான்.

(எப்படியெனில்) நபி (ஸல்) அவர்கள் (கடுமையான நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில் என் சகோதரர்) அப்துர் ரஹ்மான், பல் துலக்கும் குச்சியைக் கொண்டுவந்தார். நபி (ஸல்) அவர்கள் அதைப் பயன்படுத்த முடியாத அளவுக்குப் பலவீனமாக இருந்தார்கள். ஆகவே, நான் அந்தக் குச்சியை எடுத்து மென்று பிறகு அதனால் நபி (ஸல்) அவர்களுக்குப் பல் துலக்கிவிட்டேன்.15


அத்தியாயம் : 57
3101. حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ، قَالَ حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، أَنَّ صَفِيَّةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّهَا جَاءَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَزُورُهُ، وَهْوَ مُعْتَكِفٌ فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ فَقَامَ مَعَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى إِذَا بَلَغَ قَرِيبًا مِنْ باب الْمَسْجِدِ عِنْدَ باب أُمِّ سَلَمَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم مَرَّ بِهِمَا رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ، فَسَلَّمَا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، ثُمَّ نَفَذَا فَقَالَ لَهُمَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" عَلَى رِسْلِكُمَا "". قَالاَ سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ. وَكَبُرَ عَلَيْهِمَا ذَلِكَ. فَقَالَ "" إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنَ الإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ، وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَيْئًا "".
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் இல்லங்கள் தொடர்பாக வந்துள்ளவையும் அவர்களின் பெயரால் அழைக்கப்பட்டுவந்த இல்லங்களும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தைப் போன்று (திரையின்றி) வெளியே நடமாடாதீர்கள். (33:33) இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் தவிர, நுழையாதீர்கள். (33:53)
3101. நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஸஃபிய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருந்துகொண்டிருந்தபோது நான் அவர் களைச் சந்திக்கச் சென்றேன்; (சந்தித்து முடித்த) பின்பு திரும்பிச் செல்ல எழுந்தேன். என்னுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் எழுந்தார்கள். தமது (மற்றொரு) மனைவி உம்மு சலமா (ரலி) அவர்களின் வீட்டு வாசலை ஒட்டியுள்ள பள்ளிவாசல் கதவுக்கு அருகே வந்து சேர்ந்தபோது எங்கள் இருவரையும் இரண்டு அன்சாரிகள் கடந்துசென்றனர்.

அவ்விருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி சலாம் கூறி விட்டுச் சென்றுவிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விருவரையும் நோக்கி, ‘‘அவசரப்படாதீர்கள். (இவர் என் மனைவிதான்)” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இப்படித் தங்களிடம் சொன்னது அவர்களுக்கு மன வருத்தத்தை அளித்தது. அதற்கு அவ்விருவரும், ‘‘அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களை நாங்கள் சந்தேகிப்போமா?)” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘மனிதனின் இரத்தம் சென்றடை யும் இடங்களில் எல்லாம் ஷைத்தானும் சென்றடைகின்றான். உங்கள் உள்ளங்களில் அவன் சந்தேகம் எதையேனும் போட்டு விடுவானோ என்று நான் அஞ்சினேன்” என்று பதிலளித்தார்கள்.16


அத்தியாயம் : 57
3102. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ ارْتَقَيْتُ فَوْقَ بَيْتِ حَفْصَةَ، فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْضِي حَاجَتَهُ، مُسْتَدْبِرَ الْقِبْلَةِ، مُسْتَقْبِلَ الشَّأْمِ.
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் இல்லங்கள் தொடர்பாக வந்துள்ளவையும் அவர்களின் பெயரால் அழைக்கப்பட்டுவந்த இல்லங்களும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தைப் போன்று (திரையின்றி) வெளியே நடமாடாதீர்கள். (33:33) இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் தவிர, நுழையாதீர்கள். (33:53)
3102. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டிற்குமேலே (ஒரு வேலையாக) நான் ஏறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் கிப்லாவுக்கு முதுகைக் காட்டியபடியும் ‘ஷாம்’ (சிரியா) திசையை நோக்கியபடியும் (கழிப்பிடத்தில்) இயற்கைக் கடனை நிறைவேற்றிக்கொண்டிருப்பதை நான் பார்த்தேன்.17


அத்தியாயம் : 57
3103. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُصَلِّي الْعَصْرَ وَالشَّمْسُ لَمْ تَخْرُجْ مِنْ حُجْرَتِهَا.
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் இல்லங்கள் தொடர்பாக வந்துள்ளவையும் அவர்களின் பெயரால் அழைக்கப்பட்டுவந்த இல்லங்களும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தைப் போன்று (திரையின்றி) வெளியே நடமாடாதீர்கள். (33:33) இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் தவிர, நுழையாதீர்கள். (33:53)
3103. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் அறை’லிருந்து சூரிய வெளிச்சம் விலகாத நிலையில் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸ்ர் தொழுகையைத் தொழுவார்கள்.18


அத்தியாயம் : 57
3104. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم خَطِيبًا فَأَشَارَ نَحْوَ مَسْكَنِ عَائِشَةَ فَقَالَ "" هُنَا الْفِتْنَةُ ـ ثَلاَثًا ـ مِنْ حَيْثُ يَطْلُعُ قَرْنُ الشَّيْطَانِ "".
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் இல்லங்கள் தொடர்பாக வந்துள்ளவையும் அவர்களின் பெயரால் அழைக்கப்பட்டுவந்த இல்லங்களும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தைப் போன்று (திரையின்றி) வெளியே நடமாடாதீர்கள். (33:33) இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் தவிர, நுழையாதீர்கள். (33:53)
3104. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, ஆயிஷா (ரலி) அவர்களின் உறைவிடத்தை (இராக் நாடு அமைந்துள்ள கிழக்குத் திசையை) நோக்கிச் சைகை செய்து, ‘‘இங்கிருந்துதான் குழப்பம் ஏற்படும்” என்று மூன்று முறை கூறிவிட்டு, ‘‘ஷைத்தானின் கொம்பு எங்கிருந்து உதயமாகின்றதோ அங்கி ருந்து....” என்று கூறினார்கள்.19


அத்தியாயம் : 57
3105. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ عَمْرَةَ ابْنَةِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ، زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ عِنْدَهَا، وَأَنَّهَا سَمِعَتْ صَوْتَ إِنْسَانٍ يَسْتَأْذِنُ فِي بَيْتِ حَفْصَةَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، هَذَا رَجُلٌ يَسْتَأْذِنُ فِي بَيْتِكَ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أُرَاهُ فُلاَنًا، لِعَمِّ حَفْصَةَ مِنَ الرَّضَاعَةِ، الرَّضَاعَةُ تُحَرِّمُ مَا تُحَرِّمُ الْوِلاَدَةُ "".
பாடம் : 4 நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் இல்லங்கள் தொடர்பாக வந்துள்ளவையும் அவர்களின் பெயரால் அழைக்கப்பட்டுவந்த இல்லங்களும் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: (நபியின் துணைவியரே!) உங்கள் வீடுகளில் நீங்கள் தங்கியிருங்கள். முந்தைய அறியாமைக் காலத்தைப் போன்று (திரையின்றி) வெளியே நடமாடாதீர்கள். (33:33) இறைநம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் தவிர, நுழையாதீர்கள். (33:53)
3105. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். அப்போது ஒரு மனிதர் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டிற்குள் செல்ல அனுமதி கேட்டுக்கொண்டிருக்கும் குரலை நான் செவியுற்றேன். உடனே நான், ‘‘அல்லாஹ் வின் தூதரே! இதோ, ஒரு மனிதர் தங்கள் வீட்டினுள் நுழைய அனுமதி கேட்கின்றார்” என்று கூறினேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவரை இன்னார்லி ஹஃப்ஸாவின் தந்தைக்குப் பால்குடிச் சகோதரர்லி என்று நான் கருதுகின்றேன்; (ஒருவருடைய வயிற்றில்) பிறப்பது எந்த உறவுகளையெல்லாம் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவுகளாக்குமோ அந்த உறவுகளையெல்லாம் (ஒருவரிடம்) பால்குடிப்பதும் நெருங்கிய உறவுகளாக்கிவிடும்” என்று கூறினார்கள்.20

அத்தியாயம் : 57
3106. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيُّ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ ثُمَامَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ أَبَا بَكْرٍ ـ رضى الله عنه ـ لَمَّا اسْتُخْلِفَ بَعَثَهُ إِلَى الْبَحْرَيْنِ، وَكَتَبَ لَهُ هَذَا الْكِتَابَ وَخَتَمَهُ، وَكَانَ نَقْشُ الْخَاتَمِ ثَلاَثَةَ أَسْطُرٍ مُحَمَّدٌ سَطْرٌ، وَرَسُولُ سَطْرٌ، وَاللَّهِ سَطْرٌ.
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3106. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவராக (கலீஃபா) ஆக்கப்பட்ட பொழுது, என்னை பஹ்ரைனுக்கு (ஆளுந ராக) அனுப்பிவைத்தார்கள். எனக்கு ஓர் ஆணையை எழுதி, அதில் நபி (ஸல்) அவர்களுடைய மோதிரத்தால் முத்திரை யிட்டார்கள்.21

அந்த மோதிரத்தில் மூன்று வரிகள் பொறிக்கப்பட்டிருந்தன. யிமுஹம்மத்’ (எனும் சொல்) ஒரு வரியிலும் யிரசூல்’ (யிதூதர்’ எனும் சொல்) ஒரு வரியிலும் ‘அல்லாஹ்’ (‘அல்லாஹ்வின்’ எனும் சொல்) ஒரு வரியிலும் (யிமுஹம்மதுர் ரசூலுல்லாஹ்’ லி ‘அல்லாஹ்வின் தூதர் முஹம்மத்’ என்று) பொறிக்கப்பட்டிருந்தது.


அத்தியாயம் : 57
3107. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ الأَسَدِيُّ، حَدَّثَنَا عِيسَى بْنُ طَهْمَانَ، قَالَ أَخْرَجَ إِلَيْنَا أَنَسٌ نَعْلَيْنِ جَرْدَاوَيْنِ لَهُمَا قِبَالاَنِ، فَحَدَّثَنِي ثَابِتٌ الْبُنَانِيُّ بَعْدُ عَنْ أَنَسٍ أَنَّهُمَا نَعْلاَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3107. ஈசா பின் தஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள் எங்களிடம் இரண்டு தோல்வார்கள் கொண்ட, (அணிந்து) நைந்துபோன இரு காலணிகளைக் காட்டினார்கள். பின்னர், ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள், ‘‘அவ்விரண் டும் நபி (ஸல்) அவர்களின் காலணிகள்” என்று அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்.


அத்தியாயம் : 57
3108. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ ـ رضى الله عنها ـ كِسَاءً مُلَبَّدًا وَقَالَتْ فِي هَذَا نُزِعَ رُوحُ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَزَادَ سُلَيْمَانُ عَنْ حُمَيْدٍ عَنْ أَبِي بُرْدَةَ قَالَ أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ إِزَارًا غَلِيظًا مِمَّا يُصْنَعُ بِالْيَمَنِ، وَكِسَاءً مِنْ هَذِهِ الَّتِي يَدْعُونَهَا الْمُلَبَّدَةَ.
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3108. அபூபுர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் ஒட்டுப்போட்ட (கம்பளி) ஆடை ஒன்றை எடுத்துக்காட்டி, ‘‘இதை உடுத்திக்கொண்டி ருந்தபோதுதான் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் சுலைமான் பின் அல்முஃகீரா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வருமாறு காணப்படுகிறது:

ஆயிஷா (ரலி) அவர்கள் யமன் நாட்டில் தயாரிக்கப்படுகின்ற கெட்டியான கீழங்கி ஒன்றையும் நீங்கள் ‘அல்முலப்பதா’ (ஒட்டுப்போட்டது) என்றழைக்கின்ற வகையிலிருந்து ஒரு போர்வையையும் (நபி (ஸல்) அவர்களுடையவை என்று) எடுத்துக்காட்டினார்கள்.


அத்தியாயம் : 57
3109. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنْ عَاصِمٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ قَدَحَ، النَّبِيِّ صلى الله عليه وسلم انْكَسَرَ، فَاتَّخَذَ مَكَانَ الشَّعْبِ سِلْسِلَةً مِنْ فِضَّةٍ. قَالَ عَاصِمٌ رَأَيْتُ الْقَدَحَ وَشَرِبْتُ فِيهِ.
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3109. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் (மரத்தாலான) குவளை உடைந்துவிட்டது. (உடைந்து போய்) ஓட்டை (ஏற்பட்ட) பகுதியை நபி (ஸல்) அவர்கள் ஒரு வெள்ளிச் சங்கிலியால் அடைத்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் ஆஸிம் (ரஹ்) அவர்கள், ‘‘நான் அந்தக் குவளையைக் கண்டேன். அதில் தண்ணீர் குடித்தேன்” என்று கூறுகிறார்கள்.


அத்தியாயம் : 57
3110. حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الْجَرْمِيُّ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا أَبِي أَنَّ الْوَلِيدَ بْنَ كَثِيرٍ، حَدَّثَهُ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ الدُّؤَلِيِّ، حَدَّثَهُ أَنَّ ابْنَ شِهَابٍ حَدَّثَهُ أَنَّ عَلِيَّ بْنَ حُسَيْنٍ حَدَّثَهُ أَنَّهُمْ، حِينَ قَدِمُوا الْمَدِينَةَ مِنْ عِنْدِ يَزِيدَ بْنِ مُعَاوِيَةَ مَقْتَلَ حُسَيْنِ بْنِ عَلِيٍّ رَحْمَةُ اللَّهِ عَلَيْهِ لَقِيَهُ الْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ فَقَالَ لَهُ هَلْ لَكَ إِلَىَّ مِنْ حَاجَةٍ تَأْمُرُنِي بِهَا فَقُلْتُ لَهُ لاَ. فَقَالَ لَهُ فَهَلْ أَنْتَ مُعْطِيَّ سَيْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَإِنِّي أَخَافُ أَنْ يَغْلِبَكَ الْقَوْمُ عَلَيْهِ، وَايْمُ اللَّهِ، لَئِنْ أَعْطَيْتَنِيهِ لاَ يُخْلَصُ إِلَيْهِمْ أَبَدًا حَتَّى تُبْلَغَ نَفْسِي، إِنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ خَطَبَ ابْنَةَ أَبِي جَهْلٍ عَلَى فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ فَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَخْطُبُ النَّاسَ فِي ذَلِكَ عَلَى مِنْبَرِهِ هَذَا وَأَنَا يَوْمَئِذٍ مُحْتَلِمٌ فَقَالَ "" إِنَّ فَاطِمَةَ مِنِّي، وَأَنَا أَتَخَوَّفُ أَنْ تُفْتَنَ فِي دِينِهَا "". ثُمَّ ذَكَرَ صِهْرًا لَهُ مِنْ بَنِي عَبْدِ شَمْسٍ، فَأَثْنَى عَلَيْهِ فِي مُصَاهَرَتِهِ إِيَّاهُ قَالَ "" حَدَّثَنِي فَصَدَقَنِي، وَوَعَدَنِي فَوَفَى لِي، وَإِنِّي لَسْتُ أُحَرِّمُ حَلاَلاً وَلاَ أُحِلُّ حَرَامًا، وَلَكِنْ وَاللَّهِ لاَ تَجْتَمِعُ بِنْتُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَبِنْتُ عَدُوِّ اللَّهِ أَبَدًا "".
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3110. அலீ பின் ஹுசைன் (ஸைனுல் ஆபிதீன்) (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஹுசைன் பின் அலீ (ரலி) அவர்கள் லிஅவர்கள்மீது அல்லாஹ் கருணை புரிவானாக!லி கொல்லப்பட்ட காலகட்டத்தில் யஸீத் பின் முஆவியா வைச் சந்தித்துவிட்டு மதீனாவுக்கு வந்தேன்.22

என்னை மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் சந்தித்தார்கள். அப்போது அவர்கள், ‘‘என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகி றீர்களா? (நான் நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கின்றேன்)” என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு ‘‘அப்படி எதுவுமில்லை” என்று பதிலளித்தேன். மிஸ்வர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாளை எனக்குக் கொடுக்கிறீர்களா? ஏனெனில், அந்த (பனூ உமய்யா) குலத்தார் உங்களிடமிருந்து தமது அதிகாரத்தின் மூலமாக அதைப் பிடுங்கிக்கொள்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணை யாக! நீங்கள் அதை எனக்குக் கொடுத்தால் என் உயிர் போகும்வரை அது அவர்களிடம் சென்றுசேராது” என்று கூறினார்.23

(பிறகு பின்வரும் சம்பவத்தை விவரிக்கலானார்:) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்கள் (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூஜஹ்லுடைய மகளை (மணந்துகொள்ள)ப் பெண்பேசினார்கள். (அந்த நேரத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தமது இந்தச் சொற்பொழிவு மேடையில் (நின்ற படி) உரையாற்றியதை நான் செவியுற் றேன்.

லிஅப்போது நான் பருவவயதை அடைந்துவிட்டிருந்தேன்லி நபி (ஸல்) அவர்கள், ‘‘ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தமது மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படு வார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை லி(அபுல்ஆஸ் பின் ரபீஉவை)லி அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்துகொண்டதைக் குறித்து (நினைவுகூர்ந்து) புகழ்ந்தார்கள்.

‘‘அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்கு றுதியளித்து அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார்.24 மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக்கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்றுசேர முடியாது” என்று கூறினார்கள்.25


அத்தியாயம் : 57
3111. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، عَنْ مُنْذِرٍ، عَنِ ابْنِ الْحَنَفِيَّةِ، قَالَ لَوْ كَانَ عَلِيٌّ ـ رضى الله عنه ـ ذَاكِرًا عُثْمَانَ ـ رضى الله عنه ـ ذَكَرَهُ يَوْمَ جَاءَهُ نَاسٌ فَشَكَوْا سُعَاةَ عُثْمَانَ، فَقَالَ لِي عَلِيٌّ اذْهَبْ إِلَى عُثْمَانَ فَأَخْبِرْهُ أَنَّهَا صَدَقَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم، فَمُرْ سُعَاتَكَ يَعْمَلُونَ فِيهَا. فَأَتَيْتُهُ بِهَا فَقَالَ أَغْنِهَا عَنَّا. فَأَتَيْتُ بِهَا عَلِيًّا فَأَخْبَرْتُهُ فَقَالَ ضَعْهَا حَيْثُ أَخَذْتَهَا.
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3111. இப்னு ஹனஃபிய்யா (ரஹ்) அவர்கள்26 கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களைக் குறை பேசுபவர்களாக இருந்திருப்பின் மக்கள் சிலர் அவர்களிடம் வந்து, உஸ்மான் (ரலி) அவர்களுடைய (அரசின்) ஸகாத் வசூலிக்கும் ஊழியர்கள் குறித்து முறையிட்டபோதே குறை பேசியிருக்க வேண்டும். அந்த நேரத்தில் அலீ (ரலி) அவர்கள் என்னிடம், ‘‘நீ உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்று, யிஇந்த ஏடு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிர்ணயித்த ஸதகா (ஸகாத்தின் சட்டங்கள்) ஆகும். இந்த ஏட்டிலுள்ளபடி ஸகாத் வசூலிக்குமாறு அவர்களுக்கு உத்தரவிடுங்கள்’ என்று தெரிவி” என்று கூறினார்கள்.

நான் அதை எடுத்துக்கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘‘அது நமக்குத் தேவையில்லை. (அது ஏற்கெனவே நம்மிடம் உள்ளது)” என்று கூறிவிட்டார்கள். ஆகவே, நான் அதை அலீ (ரலி) அவர்களிடம் கொண்டு வந்து கொடுத்து விவரம் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், ‘‘அதை எடுத்த இடத்திலேயே வைத்துவிடு” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 57
3112. قَالَ الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُوقَةَ، قَالَ سَمِعْتُ مُنْذِرًا الثَّوْرِيَّ، عَنِ ابْنِ الْحَنَفِيَّةِ، قَالَ أَرْسَلَنِي أَبِي، خُذْ هَذَا الْكِتَابَ فَاذْهَبْ بِهِ إِلَى عُثْمَانَ، فَإِنَّ فِيهِ أَمْرَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الصَّدَقَةِ.
பாடம் : 5 நபி (ஸல்) அவர்களின் கவச உடை, கைத்தடி, வாள், குவளை, மோதிரம் ஆகியவை தொடர்பாகக் கூறப் பட்டவை இவற்றில் நபியவர்களுக்குப்பின் அவர்களுடைய பிரதிநிதிகள் (கலீஃபாக்கள்) பயன்படுத்திய யிபங்கிடப்பட வேண்டியவை’ என்று அறிவிக்கப்படாதவையும், நபியவர் கள் இறந்தபின் அவர்களின் தோழர்களும் மற்றவர்களும் வளம் (பரக்கத்) உள்ளவை என்று கருதிய நபியவர்களின் முடி, காலணி, பாத்திரம் ஆகியவையும்
3112. முஹம்மத் பின் ஹனஃபிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள்), ‘‘இந்த ஏட்டை எடுத்துக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களிடம் போ! ஏனெனில், இதில்தான் ஸகாத் பற்றிய நபி (ஸல்) அவர்களின் கட்டளைகள் உள்ள”’ என்று சொல்லி என்னை அனுப்பினார்கள்.27

அத்தியாயம் : 57
3113. حَدَّثَنَا بَدَلُ بْنُ الْمُحَبَّرِ، أَخْبَرَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي الْحَكَمُ، قَالَ سَمِعْتُ ابْنَ أَبِي لَيْلَى، حَدَّثَنَا عَلِيٌّ، أَنَّ فَاطِمَةَ ـ عَلَيْهَا السَّلاَمُ ـ اشْتَكَتْ مَا تَلْقَى مِنَ الرَّحَى مِمَّا تَطْحَنُ، فَبَلَغَهَا أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم أُتِيَ بِسَبْىٍ، فَأَتَتْهُ تَسْأَلُهُ خَادِمًا فَلَمْ تُوَافِقْهُ، فَذَكَرَتْ لِعَائِشَةَ، فَجَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَذَكَرَتْ ذَلِكَ عَائِشَةُ لَهُ، فَأَتَانَا وَقَدْ دَخَلْنَا مَضَاجِعَنَا، فَذَهَبْنَا لِنَقُومَ فَقَالَ "" عَلَى مَكَانِكُمَا "" حَتَّى وَجَدْتُ بَرْدَ قَدَمَيْهِ عَلَى صَدْرِي فَقَالَ "" أَلاَ أَدُلُّكُمَا عَلَى خَيْرٍ مِمَّا سَأَلْتُمَاهُ، إِذَا أَخَذْتُمَا مَضَاجِعَكُمَا فَكَبِّرَا اللَّهَ أَرْبَعًا وَثَلاَثِينَ، وَاحْمَدَا ثَلاَثًا وَثَلاَثِينَ، وَسَبِّحَا ثَلاَثًا وَثَلاَثِينَ، فَإِنَّ ذَلِكَ خَيْرٌ لَكُمَا مِمَّا سَأَلْتُمَاهُ "".
பாடம் : 6 ஐந்தில் ஒரு பாகம் (குமுஸ்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (அவசரத்) தேவை களுக்கும் ஏழைகளுக்கும் உரியது என்பதற்கான ஆதாரம் நபி (ஸல்) அவர்களிடம் (மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்கள் திருகையில் மாவரைத்துச் சிரமப்படுவது தொடர்பாக முறையிட்டு, போர்க் கைதிகளில் ஒருவரை பணிவிடைக்காகக் கோரியபோது திண்ணைத் தோழர்களுக்கும் விதவை களுக்கும் முன்னுரிமை அளித்துவிட்டு, ஃபாத்திமாவை இறைவன் பொறுப்பில் நபியவர்கள் ஒப்படைத்தது.
3113. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் துணைவியாரான) ஃபாத்திமா அவர்கள் மாவரைக்கும் திருகையினால் தமக்கு ஏற்பட்ட வேதனையைக் குறித்து முறையிட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சில போர்க் கைதிகள் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் (அவர் களை நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே பங்கிடவிருக்கிருக்கிறார்கள்) என்னும் செய்தி ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (அந்தப் போர்க் கைதிகளிலிருந்து) ஒரு பணியாளை (தமக்குக் கொடுக்கும்படி) கேட்கச் சென்றார்கள்.

ஆனால், நபி (ஸல்) அவர்கள் வீட்டில் இல்லாததால் அவர்களை ஃபாத்திமா (ரலி) அவர்களால் அந்த நேரத்தில் சந்திக்க முடியவில்லை. ஆகவே, ஆயிஷா (ரலி) அவர்களிடம் (தாம் வந்த காரணத்தைக்) கூறி(விட்டுத் திரும்பி)னார்கள்.

பின்னர் நபி (ஸல்) அவர்கள் வந்தவுடன் அவர்களுக்கு ஆயிஷா (ரலி) அவர்கள் விஷயத்தைச் சொன்னார்கள். (விவரமறிந்துகொண்ட) நபி (ஸல்) அவர்கள் நாங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்ட பின்னால் எங்களிடம் வருகை தந்தார்கள். அவர்களைக் கண்டவுடன் நாங்கள் எழுந்து நிற்க முனைந்தோம். நபி (ஸல்) அவர்கள், ‘‘(எழுந்திருக்க வேண்டாம்.) உங்கள் இடத்திலேயே இரு வரும் இருங்கள்” என்று கூறினார்கள். (பிறகு) நான் அவர்களின் பாதத்தின் குளிர்ச்சியை என் நெஞ்சின்மீது உணர்ந் தேன். (அந்த அளவுக்கு எங்கள் அருகில் வந்து அமர்ந்துகொண்டார்கள்).

பின்னர், ‘‘நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதைவிடச் சிறந்த ஒன்றை உங்க ளுக்கு நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் படுக்கைக்குச் செல்லும்போது, ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் பெரியவன்) என்று முப்பத்து நான்கு முறையும், ‘அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ் வுக்கே) என்று முப்பத்து மூன்று முறையும், யிசுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று முப்பத்து மூன்று முறையும் சொல்லுங்கள். ஏனெனில், அது நீங்கள் இருவரும் என்னிடம் கேட்டதைவிடச் சிறந்ததாகும்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 57
3114. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، وَمَنْصُورٍ، وَقَتَادَةَ، سَمِعُوا سَالِمَ بْنَ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ وُلِدَ لِرَجُلٍ مِنَّا مِنَ الأَنْصَارِ غُلاَمٌ، فَأَرَادَ أَنْ يُسَمِّيَهُ مُحَمَّدًا ـ قَالَ شُعْبَةُ فِي حَدِيثِ مَنْصُورٍ إِنَّ الأَنْصَارِيَّ قَالَ حَمَلْتُهُ عَلَى عُنُقِي فَأَتَيْتُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم. وَفِي حَدِيثِ سُلَيْمَانَ وُلِدَ لَهُ غُلاَمٌ، فَأَرَادَ أَنْ يُسَمِّيَهُ مُحَمَّدًا ـ قَالَ "" سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي، فَإِنِّي إِنَّمَا جُعِلْتُ قَاسِمًا أَقْسِمُ بَيْنَكُمْ "". وَقَالَ حُصَيْنٌ "" بُعِثْتُ قَاسِمًا أَقْسِمُ بَيْنَكُمْ "". قَالَ عَمْرٌو أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ قَتَادَةَ قَالَ سَمِعْتُ سَالِمًا عَنْ جَابِرٍ أَرَادَ أَنْ يُسَمِّيَهُ الْقَاسِمَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" سَمُّوا بِاسْمِي وَلاَ تَكْتَنُوا بِكُنْيَتِي "".
பாடம் : 7 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் போரில் அடைந்த பொருள் எதுவாக இருந்தாலும் அதில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். (8:41) அதாவது இறைத்தூதருக்கு அதைப் பங்கிடும் கடமை உண்டு.28 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான் பங்கிடுபவனும் கருவூலக் காப் பாளனும்தான். அல்லாஹ்வே கொடுக் கின்றான்.
3114. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களில் லிஅன்சாரிகளில்லி ஒரு மனிதருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு யிமுஹம்மத்’ என்று பெயர் வைக்க அவர் விரும்பினார். அந்த அன்சாரித் தோழர் (அனஸ் பின் ஃபுளாலா (ரலி) அவர்கள்) என்னிடம் கூறினார்:

நான் அக்குழந்தையை என் கழுத்தில் சுமந்துகொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்; நபி (ஸல்) அவர்கள், ‘‘என் பெயரைச் சூட்டி அழையுங்கள். ஆனால், (அபுல்காசிம் எனும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டி அழைக்காதீர்கள்.ஏனெனில், நான் உங்களிடையே பங்கீடு செய்பவனாகவே (காசிம்) ஆக்கப்பட்டுள் ளேன்” என்று கூறினார்கள்.29

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுஸைன் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘‘நான் பங்கிடுப வனாக அனுப்பப்பட்டுள்ளேன். உங்களி டையே நான் பங்கிடுகிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அம்ர் பின் மர்ஸூக் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் காணப்படுவதாவது: அந்த அன்சாரித் தோழர் ‘காசிம்’ என்ற பெயரைத் தம் குழந்தைக்குச் சூட்ட விரும்பினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள்; என் குறிப்புப் பெயரைச் சூட்டிக் கொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள்.


அத்தியாயம் : 57
3115. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيِّ، قَالَ وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ الْقَاسِمَ فَقَالَتِ الأَنْصَارُ لاَ نَكْنِيكَ أَبَا الْقَاسِمِ وَلاَ نُنْعِمُكَ عَيْنًا، فَأَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ وُلِدَ لِي غُلاَمٌ، فَسَمَّيْتُهُ الْقَاسِمَ فَقَالَتِ الأَنْصَارُ لاَ نَكْنِيكَ أَبَا الْقَاسِمِ وَلاَ نُنْعِمُكَ عَيْنًا. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَحْسَنَتِ الأَنْصَارُ، سَمُّوا بِاسْمِي، وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي، فَإِنَّمَا أَنَا قَاسِمٌ "".
பாடம் : 7 உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: நீங்கள் போரில் அடைந்த பொருள் எதுவாக இருந்தாலும் அதில் ஐந்தில் ஒரு பாகம் அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், வறியவர்களுக்கும், வழிப்போக்கருக்கும் உரியதாகும். (8:41) அதாவது இறைத்தூதருக்கு அதைப் பங்கிடும் கடமை உண்டு.28 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்: நான் பங்கிடுபவனும் கருவூலக் காப் பாளனும்தான். அல்லாஹ்வே கொடுக் கின்றான்.
3115. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது அக்குழந்தைக்கு அவர் யிகாசிம்’ என்று பெயர் சூட்டினார். அப்போது மற்ற அன்சாரித் தோழர்கள், ‘‘உம்மை நாங்கள் அபுல்காசிம் (காசிமின் தந்தை) என்ற குறிப்புப் பெயரால் அழைக்கவும்மாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உமக்கு மகிழ்ச்சியூட்டவும்மாட்டோம்” என்று கூறினார்கள்.

அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு நான் யிகாசிம்’ என்று பெயர் சூட்டினேன். அன்சாரித் தோழர்கள், யிஉம்மை நாங்கள் ‘அபுல்காசிம்’ என்ற குறிப்புப் பெயரால் அழைக்கவும்மாட்டோம்; (அவ்வாறு அழைத்து) உமக்கு மகிழ்ச்சியூட்டவும் மாட்டோம்’ என்று கூறிவிட்டார்கள்” என்று சொன்னார்.

அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘அன்சாரிகள் நல்ல வேலை செய்தார்கள். ஆகவே, என் பெயரை நீங்கள் சூட்டிக் கொள்ளுங்கள். ஆனால், எனது (அபுல் காசிம் என்னும்) குறிப்புப் பெயரை நீங்கள் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நான் பங்கிடுபவú”’ என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 57