3016. حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ بُكَيْرٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّهُ قَالَ بَعَثَنَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَعْثٍ فَقَالَ "" إِنْ وَجَدْتُمْ فُلاَنًا وَفُلاَنًا فَأَحْرِقُوهُمَا بِالنَّارِ "" ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حِينَ أَرَدْنَا الْخُرُوجَ "" إِنِّي أَمَرْتُكُمْ أَنْ تُحْرِقُوا فُلاَنًا وَفُلاَنًا، وَإِنَّ النَّارَ لاَ يُعَذِّبُ بِهَا إِلاَّ اللَّهُ، فَإِنْ وَجَدْتُمُوهُمَا فَاقْتُلُوهُمَا "".
பாடம் : 149
அல்லாஹ் வழங்கும் (நெருப்பால் கரிக்கும்) வேதனையால் யாரையும் வேதனை செய்யக் கூடாது.
3016. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களை ஒரு குழுவில் அனுப்பிவைத் தார்கள். அப்போது, ‘‘இன்னாரையும் இன்னாரையும் நீங்கள் கண்டால் அவ்விரு வரையும் நெருப்பால் எரித்துவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். பிறகு நாங்கள் புறப்பட தயாரானபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இன்னாரையும் இன்னாரையும் எரித்துவிடுங்கள் என்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால், அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் நெருப்பால் (உயிர்களை) வேதனை செய்யக் கூடாது. ஆகவே, அவ்விருவரையும் நீங்கள் கண்டால் அவர்களைக் கொன்றுவிடுங்கள்” என்று கூறினார்கள்.127
அத்தியாயம் : 56
3016. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எங்களை ஒரு குழுவில் அனுப்பிவைத் தார்கள். அப்போது, ‘‘இன்னாரையும் இன்னாரையும் நீங்கள் கண்டால் அவ்விரு வரையும் நெருப்பால் எரித்துவிடுங்கள்” என்று உத்தரவிட்டார்கள். பிறகு நாங்கள் புறப்பட தயாரானபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இன்னாரையும் இன்னாரையும் எரித்துவிடுங்கள் என்று நான் உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். ஆனால், அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் நெருப்பால் (உயிர்களை) வேதனை செய்யக் கூடாது. ஆகவே, அவ்விருவரையும் நீங்கள் கண்டால் அவர்களைக் கொன்றுவிடுங்கள்” என்று கூறினார்கள்.127
அத்தியாயம் : 56
3017. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَيُّوبَ، عَنْ عِكْرِمَةَ، أَنَّ عَلِيًّا ـ رضى الله عنه ـ حَرَّقَ قَوْمًا، فَبَلَغَ ابْنَ عَبَّاسٍ فَقَالَ لَوْ كُنْتُ أَنَا لَمْ أُحَرِّقْهُمْ، لأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تُعَذِّبُوا بِعَذَابِ اللَّهِ "". وَلَقَتَلْتُهُمْ كَمَا قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ بَدَّلَ دِينَهُ فَاقْتُلُوهُ "".
பாடம் : 149
அல்லாஹ் வழங்கும் (நெருப்பால் கரிக்கும்) வேதனையால் யாரையும் வேதனை செய்யக் கூடாது.
3017. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள் ஒரு கூட்டத்தாரை எரித்துவிட்டார்கள்.128 இந்தச் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், ‘‘நானாக இருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அளிக்கின்ற வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், யிஎவர் தமது மார்க்கத்தை மாற்றிக்கொள் கிறாரோ அவரைக் கொன்றுவிடுங்கள்’ என்று சொன்னதற்கேற்ப நான் அவர் களைக் கொன்றுவிட்டிருப்பேன்” என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 56
3017. இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அலீ (ரலி) அவர்கள் ஒரு கூட்டத்தாரை எரித்துவிட்டார்கள்.128 இந்தச் செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், ‘‘நானாக இருந்தால் அவர்களை எரித்திருக்கமாட்டேன். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அளிக்கின்ற வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்’ என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், யிஎவர் தமது மார்க்கத்தை மாற்றிக்கொள் கிறாரோ அவரைக் கொன்றுவிடுங்கள்’ என்று சொன்னதற்கேற்ப நான் அவர் களைக் கொன்றுவிட்டிருப்பேன்” என்று சொன்னார்கள்.
அத்தியாயம் : 56
3018. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا وُهَيْبٌ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ أَنَّ رَهْطًا، مِنْ عُكْلٍ ثَمَانِيَةً قَدِمُوا عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَاجْتَوَوُا الْمَدِينَةَ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ، ابْغِنَا رِسْلاً. قَالَ "" مَا أَجِدُ لَكُمْ إِلاَّ أَنْ تَلْحَقُوا بِالذَّوْدِ "". فَانْطَلَقُوا فَشَرِبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا حَتَّى صَحُّوا وَسَمِنُوا، وَقَتَلُوا الرَّاعِيَ، وَاسْتَاقُوا الذَّوْدَ، وَكَفَرُوا بَعْدَ إِسْلاَمِهِمْ، فَأَتَى الصَّرِيخُ النَّبِيَّ صلى الله عليه وسلم، فَبَعَثَ الطَّلَبَ، فَمَا تَرَجَّلَ النَّهَارُ حَتَّى أُتِيَ بِهِمْ، فَقَطَّعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، ثُمَّ أَمَرَ بِمَسَامِيرَ فَأُحْمِيَتْ فَكَحَلَهُمْ بِهَا، وَطَرَحَهُمْ بِالْحَرَّةِ، يَسْتَسْقُونَ فَمَا يُسْقَوْنَ حَتَّى مَاتُوا. قَالَ أَبُو قِلاَبَةَ قَتَلُوا وَسَرَقُوا وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ صلى الله عليه وسلم وَسَعَوْا فِي الأَرْضِ فَسَادًا.
பாடம் : 150
அல்லாஹ் கூறுகின்றான்:
‘‘அவர்களை நீங்கள் முற்றிலுமாக ஒடுக்கிவிட்ட பின்னால் கைதிகளை இறுக்கமாகக் கட்டிவிடுங்கள். அதன் பிறகு, (அவர்கள்மீது நீங்கள்) கருணை காட்டலாம்; அல்லது ஈட்டுத் தொகை பெற்றுக்கொள்ளலாம். (47:4)
இது பற்றி ஸுமாமா பின் உஸால் (ரலி) அவர்கள் குறித்த ஹதீஸ் அறிவிக்கப் பட்டுள்ளது.129
மேலும், வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
பூமியில் (எதிரிகளை) முற்றாக ஒழிக்காத வரை (அவர்களைப்) போர்க்கைதி களாக வைத்துக்கொள்வது எந்த இறைத்தூதருக்கும் உகந்ததன்று. நீங்கள் உலகப் பொருட்களை விரும்புகிறீர்கள். ஆனால், அல்லாஹ் (உங்களுக்கு) மறுமையை விரும்புகின்றான். அல்லாஹ் வல்லமை படைத்தோனும் ஞானம் நிறைந்தோனும் ஆவான். (8:67)
பாடம் : 151
(முஸ்லிம்) போர்க் கைதி இறைமறுப்பாளர்களிடமிருந்து தப்பிக்க, சிறைப்பிடித்தவர்களைக் கொல்லலாமா? அல்லது ஏமாற்றலாமா?
இது பற்றி நபி (ஸல்) அவர்களிட மிருந்து மிஸ்வர் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.130
பாடம் : 152
இணைவைப்பாளர் ஒரு முஸ்லிமை எரித்துவிட்டால் (அதற்குப் பதிலாக) அவரை எரிக்கலாமா?
3018. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யிஉக்ல்’ குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்தது.131 அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்ப நிலை ஒத்துக்கொள்ளவில்லை. ஆகவே அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை” என்று பதிலளித்தார்கள்.
உடனே (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும் பாலையும் குடித்தார்கள். (அதனால்) உடல் நலம்பெற்றுத் தெளிவானார்கள். பின்னர் ஒட்டக மேய்ப்பரைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டார்கள்; இஸ்லாத்தை ஏற்றபின் நிராகரித்து விட்டார்கள். ஒருவர் அபயக் குரல் எழுப்பியவாறு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்.
நபி (ஸல்) அவர்கள் யிஉக்ல்’ குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பிவைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்) கொண்டுவரப்பட்டனர். அவர்களின் கைகளையும் கால்களையும் நபியவர்கள் துண்டித்தார்கள்.
பிறகு ஆணிகளைக் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை (கொண்டுவரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களின் கண் இமைகளின் ஓரங்களில் சூடிட்டார்கள்; அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) ‘அல்ஹர்ரா’ எனுமிடத்தில் எறிந்துவிட்டார் கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும்வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படவில்லை.
அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
அவர்கள் (உக்ல் அல்லது உரைனா குலத்தார்) கொலை செய்தார்கள்; திருடி னார்கள்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டார்கள்; பூமியில் குழப்பத்தை விளைவிக்க முயன்றார்கள். (அதனால்தான், அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு கொடிய தண்டனையை அளிக்க நேர்ந்தது.)132
அத்தியாயம் : 56
3018. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
யிஉக்ல்’ குலத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் கொண்ட குழு ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்தது.131 அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்ப நிலை ஒத்துக்கொள்ளவில்லை. ஆகவே அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்குச் சிறிது (ஒட்டகப்) பால் கொடுத்து உதவுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீங்கள் ஒட்டக மந்தையை அணுகுவதைத் தவிர வேறு வழியை நான் காணவில்லை” என்று பதிலளித்தார்கள்.
உடனே (ஸகாத்தாகப் பெறப்பட்டிருந்த ஓர் ஒட்டக மந்தையை நோக்கி) அவர்கள் சென்றார்கள். அதன் சிறுநீரையும் பாலையும் குடித்தார்கள். (அதனால்) உடல் நலம்பெற்றுத் தெளிவானார்கள். பின்னர் ஒட்டக மேய்ப்பரைக் கொன்றுவிட்டு, ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டார்கள்; இஸ்லாத்தை ஏற்றபின் நிராகரித்து விட்டார்கள். ஒருவர் அபயக் குரல் எழுப்பியவாறு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்.
நபி (ஸல்) அவர்கள் யிஉக்ல்’ குலத்தாரைத் தேடிப் பிடித்து வர ஒரு குழுவினரை அனுப்பிவைத்தார்கள். பகல், உச்சிக்கு உயர்வதற்குள் அவர்கள் (பிடித்துக்) கொண்டுவரப்பட்டனர். அவர்களின் கைகளையும் கால்களையும் நபியவர்கள் துண்டித்தார்கள்.
பிறகு ஆணிகளைக் கொண்டுவரச் சொல்லி உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவை (கொண்டுவரப்பட்டு) பழுக்கக் காய்ச்சப்பட்டன. அவற்றால் அவர்களின் கண் இமைகளின் ஓரங்களில் சூடிட்டார்கள்; அவர்களை (கருங்கற்கள் நிறைந்த) ‘அல்ஹர்ரா’ எனுமிடத்தில் எறிந்துவிட்டார் கள். அவர்கள் (தாகத்தால்) தண்ணீர் கேட்டும் இறக்கும்வரை அவர்களுக்குத் தண்ணீர் புகட்டப்படவில்லை.
அறிவிப்பாளர் அபூகிலாபா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
அவர்கள் (உக்ல் அல்லது உரைனா குலத்தார்) கொலை செய்தார்கள்; திருடி னார்கள்; அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டார்கள்; பூமியில் குழப்பத்தை விளைவிக்க முயன்றார்கள். (அதனால்தான், அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு கொடிய தண்டனையை அளிக்க நேர்ந்தது.)132
அத்தியாயம் : 56
3019. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَأَبِي، سَلَمَةَ أَنَّ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" قَرَصَتْ نَمْلَةٌ نَبِيًّا مِنَ الأَنْبِيَاءِ، فَأَمَرَ بِقَرْيَةِ النَّمْلِ فَأُحْرِقَتْ، فَأَوْحَى اللَّهُ إِلَيْهِ أَنْ قَرَصَتْكَ نَمْلَةٌ أَحْرَقْتَ أُمَّةً مِنَ الأُمَمِ تُسَبِّحُ اللَّهِ.""
பாடம் : 153
3019. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அந்த எறும்புப் புற்றையே எரித்துவிடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ‘‘ஓர் எறும்பு உம்மைக் கடித்து விட்ட காரணத்தால் அல்லாஹ்வைத் துதித்துக்கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீர் எரித்துவிட்டீரே!” என்று அவருக்கு அறிவித்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 56
3019. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைத்தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்துவிட்டது. உடனே அந்த எறும்புப் புற்றையே எரித்துவிடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டுவிட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ‘‘ஓர் எறும்பு உம்மைக் கடித்து விட்ட காரணத்தால் அல்லாஹ்வைத் துதித்துக்கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீர் எரித்துவிட்டீரே!” என்று அவருக்கு அறிவித்தான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 56
3020. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنِي قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، قَالَ قَالَ لِي جَرِيرٌ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَلاَ تُرِيحُنِي مِنْ ذِي الْخَلَصَةِ "". وَكَانَ بَيْتًا فِي خَثْعَمَ يُسَمَّى كَعْبَةَ الْيَمَانِيَةَ قَالَ فَانْطَلَقْتُ فِي خَمْسِينَ وَمِائَةِ فَارِسٍ مِنْ أَحْمَسَ، وَكَانُوا أَصْحَابَ خَيْلٍ ـ قَالَ ـ وَكُنْتُ لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ، فَضَرَبَ فِي صَدْرِي حَتَّى رَأَيْتُ أَثَرَ أَصَابِعِهِ فِي صَدْرِي وَقَالَ "" اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا "". فَانْطَلَقَ إِلَيْهَا فَكَسَرَهَا وَحَرَّقَهَا، ثُمَّ بَعَثَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يُخْبِرُهُ فَقَالَ رَسُولُ جَرِيرٍ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ، مَا جِئْتُكَ حَتَّى تَرَكْتُهَا كَأَنَّهَا جَمَلٌ أَجْوَفُ أَوْ أَجْرَبُ. قَالَ فَبَارَكَ فِي خَيْلِ أَحْمَسَ وَرِجَالِهَا خَمْسَ مَرَّاتٍ.
பாடம் : 154
வீடுகளையும் பேரீச்ச மரங்களையும் எரித்தல்
3020. ஜரீர் பின் அப்திலில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) யிதுல்கலஸா’வின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர் களா?” என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே யியமன் நாட்டு கஅபா’ என்றழைக்கப்பட்டுவந்த ஆலயமாக இருந்தது.133
நான் ‘அஹ்மஸ்’ குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் (சிறந்த) குதிரை வீரர்களாக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, ‘‘இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப் பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.
பிறகு நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இச்செய்தியைத் தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி (ஸல்) அவர்களி டம், ‘‘உங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப்போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டுவிட்டுத்தான் உங்களிடம் வந்திருக்கின்றேன்” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அஹ்மஸ்’ குலத்தாருக்கும் அவர்களுடைய குதிரைப் படை வீரர்களுக்கும் வளம் வழங்குமாறு ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 56
3020. ஜரீர் பின் அப்திலில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘(தவ்ஸ் மற்றும் கஸ்அம் குலத்தாரின் தெய்வச் சிலைகள் உள்ள ஆலயமான) யிதுல்கலஸா’வின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர் களா?” என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே யியமன் நாட்டு கஅபா’ என்றழைக்கப்பட்டுவந்த ஆலயமாக இருந்தது.133
நான் ‘அஹ்மஸ்’ குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் புறப்பட்டேன்; அவர்கள் (சிறந்த) குதிரை வீரர்களாக இருந்தனர். நான் குதிரையின் மீது (சரியாக) உட்கார முடியாதவனாயிருந்தேன். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் என் நெஞ்சில் அடித்து, ‘‘இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப் பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தனை செய்தார்கள்.
பிறகு நான் அந்த ஆலயத்தை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு இச்செய்தியைத் தெரிவிப்பதற்காக ஆளனுப்பினேன். நான் அனுப்பிய தூதுவர் நபி (ஸல்) அவர்களி டம், ‘‘உங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன்மீது ஆணையாக! அந்த ஆலயத்தை மெலிந்து இளைத்துப்போன அல்லது சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டுவிட்டுத்தான் உங்களிடம் வந்திருக்கின்றேன்” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அஹ்மஸ்’ குலத்தாருக்கும் அவர்களுடைய குதிரைப் படை வீரர்களுக்கும் வளம் வழங்குமாறு ஐந்து முறை இறைவனிடம் பிரார்த்தித்தார்கள்.
அத்தியாயம் : 56
3021. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ حَرَّقَ النَّبِيُّ صلى الله عليه وسلم نَخْلَ بَنِي النَّضِيرِ.
பாடம் : 154
வீடுகளையும் பேரீச்ச மரங்களையும் எரித்தல்
3021. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.134
அத்தியாயம் : 56
3021. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் பனூ நளீர் குலத்தாரின் பேரீச்ச மரங்களைத் தீயிட்டுக் கொளுத்தினார்கள்.134
அத்தியாயம் : 56
3022. حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ، قَالَ حَدَّثَنِي أَبِي، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَهْطًا مِنَ الأَنْصَارِ إِلَى أَبِي رَافِعٍ لِيَقْتُلُوهُ، فَانْطَلَقَ رَجُلٌ مِنْهُمْ فَدَخَلَ حِصْنَهُمْ قَالَ فَدَخَلْتُ فِي مَرْبِطِ دَوَابَّ لَهُمْ، قَالَ وَأَغْلَقُوا باب الْحِصْنِ، ثُمَّ إِنَّهُمْ فَقَدُوا حِمَارًا لَهُمْ، فَخَرَجُوا يَطْلُبُونَهُ، فَخَرَجْتُ فِيمَنْ خَرَجَ أُرِيهِمْ أَنَّنِي أَطْلُبُهُ مَعَهُمْ، فَوَجَدُوا الْحِمَارَ، فَدَخَلُوا وَدَخَلْتُ، وَأَغْلَقُوا باب الْحِصْنِ لَيْلاً، فَوَضَعُوا الْمَفَاتِيحَ فِي كَوَّةٍ حَيْثُ أَرَاهَا، فَلَمَّا نَامُوا أَخَذْتُ الْمَفَاتِيحَ، فَفَتَحْتُ باب الْحِصْنِ ثُمَّ دَخَلْتُ عَلَيْهِ فَقُلْتُ يَا أَبَا رَافِعٍ. فَأَجَابَنِي، فَتَعَمَّدْتُ الصَّوْتَ، فَضَرَبْتُهُ فَصَاحَ، فَخَرَجْتُ ثُمَّ جِئْتُ، ثُمَّ رَجَعْتُ كَأَنِّي مُغِيثٌ فَقُلْتُ يَا أَبَا رَافِعٍ، وَغَيَّرْتُ صَوْتِي، فَقَالَ مَا لَكَ لأُمِّكَ الْوَيْلُ قُلْتُ مَا شَأْنُكَ قَالَ لاَ أَدْرِي مَنْ دَخَلَ عَلَىَّ فَضَرَبَنِي. قَالَ فَوَضَعْتُ سَيْفِي فِي بَطْنِهِ، ثُمَّ تَحَامَلْتُ عَلَيْهِ حَتَّى قَرَعَ الْعَظْمَ، ثُمَّ خَرَجْتُ وَأَنَا دَهِشٌ، فَأَتَيْتُ سُلَّمًا لَهُمْ لأَنْزِلَ مِنْهُ فَوَقَعْتُ فَوُثِئَتْ رِجْلِي، فَخَرَجْتُ إِلَى أَصْحَابِي فَقُلْتُ مَا أَنَا بِبَارِحٍ حَتَّى أَسْمَعَ النَّاعِيَةَ، فَمَا بَرِحْتُ حَتَّى سَمِعْتُ نَعَايَا أَبِي رَافِعٍ تَاجِرِ أَهْلِ الْحِجَازِ. قَالَ فَقُمْتُ وَمَا بِي قَلَبَةٌ حَتَّى أَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَأَخْبَرْنَاهُ.
பாடம் : 155
தூங்கும் இணைவைப்பாளரைக் கொல்வது
3022. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை (யூதர் களின் தலைவரான) அபூராஃபிஉவிடம் அவரைக் கொல்வதற்காக அனுப்பினார் கள்.135 அவர்களில் ஒருவர் சென்று அவர்களின் கோட்டைக்குள் நுழைந்தார்.
அவர் கூறுகிறார்: நான் அவர்களுடைய ஊர்திப் பிராணிகளைக் கட்டிவைக்கும் (தொழுவம் போன்ற) இடத்தில் நுழைந் தேன். அவர்கள் கோட்டையின் வாயிலை மூடிவிட்டனர். பிறகு அவர்கள், தங்கள் கழுதையைக் காணாமல் அதைத் தேடிக் கொண்டு புறப்பட்டார்கள். நானும் அவர் களுடன் சேர்ந்து அதைத் தேடுபவனைப் போன்று காட்டிக்கொண்டு புறப்பட்டேன். அவர்கள் கழுதையைக் கண்டுபிடித்து விட்டார்கள்.
(பிறகு திரும்பி) கோட்டைக்குள் நுழைந்தார்கள். நானும் நுழைந்தேன். கோட்டைக் கதவை இரவில் மூடிவிட்டார் கள். (அதன்) சாவிகளை நான் பார்க்கும் வகையில் (கோட்டைச் சுவரிலிருந்த) ஒரு மாடத்தில் வைத்தார்கள். அவர்கள் தூங்கியவுடன் நான் அந்தச் சாவிகளை எடுத்துக் கோட்டைக் கதவைத் திறந்தேன். பிறகு அபூராஃபிஉவிடம் சென்று, ‘அபூராஃபிஉவே!› என்று அழைத்தேன். அவன் எனக்குப் பதிலளித்தான். குரல் வந்த திசையை நோக்கிச் சென்று அவனைத் தாக்கினேன். அவன் கூச்சலிட் டான். உடனே நான் அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.
பிறகு (அவனைக்) காப்பாற்ற வந்த வனைப் போன்று மீண்டும் அவனிடம் திரும்பிச் சென்று, ‘‘அபூராஃபிஉவே!” என்று என் குரலை மாற்றிக்கொண்டு அவனை அழைத்தேன். அவன், ‘‘உனக் கென்ன நேர்ந்தது? உன் தாய்க்குக் கேடுதான்” என்று சொன்னான். நான், ‘‘உனக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன். அவன், ‘‘என்னிடம் யார் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவன் என்னைத் தாக்கிவிட்டான்” என்று கூறினான்.
உடனே நான், அவனது வயிற்றில் என் வாளை வைத்து (சிரமப்பட்டு)அழுத்தினேன். அது (அவனது வயிற்றுக் குள் சென்று) அவனது எலும்பில் இடித்தது. பிறகு நான் (எப்படி வெளியேறுவது என்ற) திகைப்புடன் வெளியே வந்தேன். அவர்களின் ஏணி ஒன்றின் வழியாக இறங்குவதற்காக வந்தேன். அப்போது கீழே விழுந்துவிட்டேன்; என் கால் சுளுக்கிக்கொண்டது. நான் என் தோழர்களிடம் சென்று, ‘‘(அவனது மரணத்தையறிந்து அவனது வீட்டார்) ஓலமிடும் சப்தத்தைக் கேட்காத வரை நான் இங்கிருந்து நகரமாட்டேன்” என்று கூறினேன்.
ஹிஜாஸ் பகுதியின் (பெரும்) வணிகரான அபூராஃபிஉ (உடைய மரணத்து)க்காக அவனுடைய வீட்டார் எழுப்பிய ஓலங்களைச் கேட்கும்வரை அந்த இடத்தை விட்டு நான் செல்லவில்லை. பிறகு எந்த வேதனையுமின்றி எழுந்தேன். இறுதியில், நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களுக்குத் தெரிவித் தோம்.
அத்தியாயம் : 56
3022. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை (யூதர் களின் தலைவரான) அபூராஃபிஉவிடம் அவரைக் கொல்வதற்காக அனுப்பினார் கள்.135 அவர்களில் ஒருவர் சென்று அவர்களின் கோட்டைக்குள் நுழைந்தார்.
அவர் கூறுகிறார்: நான் அவர்களுடைய ஊர்திப் பிராணிகளைக் கட்டிவைக்கும் (தொழுவம் போன்ற) இடத்தில் நுழைந் தேன். அவர்கள் கோட்டையின் வாயிலை மூடிவிட்டனர். பிறகு அவர்கள், தங்கள் கழுதையைக் காணாமல் அதைத் தேடிக் கொண்டு புறப்பட்டார்கள். நானும் அவர் களுடன் சேர்ந்து அதைத் தேடுபவனைப் போன்று காட்டிக்கொண்டு புறப்பட்டேன். அவர்கள் கழுதையைக் கண்டுபிடித்து விட்டார்கள்.
(பிறகு திரும்பி) கோட்டைக்குள் நுழைந்தார்கள். நானும் நுழைந்தேன். கோட்டைக் கதவை இரவில் மூடிவிட்டார் கள். (அதன்) சாவிகளை நான் பார்க்கும் வகையில் (கோட்டைச் சுவரிலிருந்த) ஒரு மாடத்தில் வைத்தார்கள். அவர்கள் தூங்கியவுடன் நான் அந்தச் சாவிகளை எடுத்துக் கோட்டைக் கதவைத் திறந்தேன். பிறகு அபூராஃபிஉவிடம் சென்று, ‘அபூராஃபிஉவே!› என்று அழைத்தேன். அவன் எனக்குப் பதிலளித்தான். குரல் வந்த திசையை நோக்கிச் சென்று அவனைத் தாக்கினேன். அவன் கூச்சலிட் டான். உடனே நான் அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.
பிறகு (அவனைக்) காப்பாற்ற வந்த வனைப் போன்று மீண்டும் அவனிடம் திரும்பிச் சென்று, ‘‘அபூராஃபிஉவே!” என்று என் குரலை மாற்றிக்கொண்டு அவனை அழைத்தேன். அவன், ‘‘உனக் கென்ன நேர்ந்தது? உன் தாய்க்குக் கேடுதான்” என்று சொன்னான். நான், ‘‘உனக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்டேன். அவன், ‘‘என்னிடம் யார் வந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவன் என்னைத் தாக்கிவிட்டான்” என்று கூறினான்.
உடனே நான், அவனது வயிற்றில் என் வாளை வைத்து (சிரமப்பட்டு)அழுத்தினேன். அது (அவனது வயிற்றுக் குள் சென்று) அவனது எலும்பில் இடித்தது. பிறகு நான் (எப்படி வெளியேறுவது என்ற) திகைப்புடன் வெளியே வந்தேன். அவர்களின் ஏணி ஒன்றின் வழியாக இறங்குவதற்காக வந்தேன். அப்போது கீழே விழுந்துவிட்டேன்; என் கால் சுளுக்கிக்கொண்டது. நான் என் தோழர்களிடம் சென்று, ‘‘(அவனது மரணத்தையறிந்து அவனது வீட்டார்) ஓலமிடும் சப்தத்தைக் கேட்காத வரை நான் இங்கிருந்து நகரமாட்டேன்” என்று கூறினேன்.
ஹிஜாஸ் பகுதியின் (பெரும்) வணிகரான அபூராஃபிஉ (உடைய மரணத்து)க்காக அவனுடைய வீட்டார் எழுப்பிய ஓலங்களைச் கேட்கும்வரை அந்த இடத்தை விட்டு நான் செல்லவில்லை. பிறகு எந்த வேதனையுமின்றி எழுந்தேன். இறுதியில், நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களுக்குத் தெரிவித் தோம்.
அத்தியாயம் : 56
3023. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، حَدَّثَنَا يَحْيَى بْنُ أَبِي زَائِدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم رَهْطًا مِنَ الأَنْصَارِ إِلَى أَبِي رَافِعٍ فَدَخَلَ عَلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ عَتِيكٍ بَيْتَهُ لَيْلاً، فَقَتَلَهُ وَهْوَ نَائِمٌ.
பாடம் : 155
தூங்கும் இணைவைப்பாளரைக் கொல்வது
3023. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை அபூ ராஃபிஉ என்பவரிடம் அனுப்பினார்கள். அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்கள் அவரது வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து அவர் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவரைக் கொன்றார்கள்.
அத்தியாயம் : 56
3023. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒரு குழுவினரை அபூ ராஃபிஉ என்பவரிடம் அனுப்பினார்கள். அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்கள் அவரது வீட்டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து அவர் தூங்கிக்கொண்டிருக்கும் போது அவரைக் கொன்றார்கள்.
அத்தியாயம் : 56
3024. حَدَّثَنَا يُوسُفُ بْنُ مُوسَى، حَدَّثَنَا عَاصِمُ بْنُ يُوسُفَ الْيَرْبُوعِيُّ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ الْفَزَارِيُّ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ أَبُو النَّضْرِ، مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ كُنْتُ كَاتِبًا لَهُ قَالَ كَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي أَوْفَى حِينَ خَرَجَ إِلَى الْحَرُورِيَّةِ فَقَرَأْتُهُ فَإِذَا فِيهِ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فِي بَعْضِ أَيَّامِهِ الَّتِي لَقِيَ فِيهَا الْعَدُوَّ انْتَظَرَ حَتَّى مَالَتِ الشَّمْسُ.
பாடம் : 156
எதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள்.
3024. உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் அடிமையாயிருந்த சாலிம் அபுந்நள்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் எழுத்தராக இருந்தேன். அவர்கள் யிஹரூரிய்யா’க்களை (காரிஜிய் யாக்களை) நோக்கி (போருக்கு)ப் புறப்பட்ட போது, அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள். அதை நான் படித்தேன்.
அதில் பின்வருமாறு எழுதப்பட்டி ருந்தது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எதிரிகளை(ப் போர்க் களத்தில்) சந்தித்த நாட்கள் சிலவற்றில் சூரியன் உச்சி சாயும் வரை (போர்க் களத்தில் இறங்காமல்) எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
அத்தியாயம் : 56
3024. உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் அடிமையாயிருந்த சாலிம் அபுந்நள்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் எழுத்தராக இருந்தேன். அவர்கள் யிஹரூரிய்யா’க்களை (காரிஜிய் யாக்களை) நோக்கி (போருக்கு)ப் புறப்பட்ட போது, அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கடிதம் எழுதியிருந்தார்கள். அதை நான் படித்தேன்.
அதில் பின்வருமாறு எழுதப்பட்டி ருந்தது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எதிரிகளை(ப் போர்க் களத்தில்) சந்தித்த நாட்கள் சிலவற்றில் சூரியன் உச்சி சாயும் வரை (போர்க் களத்தில் இறங்காமல்) எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
அத்தியாயம் : 56
3025. ثُمَّ قَامَ فِي النَّاسِ فَقَالَ " أَيُّهَا النَّاسُ لاَ تَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ وَسَلُوا اللَّهَ الْعَافِيَةَ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا وَاعْلَمُوا أَنَّ الْجَنَّةَ تَحْتَ ظِلاَلِ السُّيُوفِ ـ ثُمَّ قَالَ ـ اللَّهُمَّ مُنْزِلَ الْكِتَابِ وَمُجْرِيَ السَّحَابِ وَهَازِمَ الأَحْزَابِ اهْزِمْهُمْ وَانْصُرْنَا عَلَيْهِمْ ". وَقَالَ مُوسَى بْنُ عُقْبَةَ حَدَّثَنِي سَالِم أَبُو النَّضْرِ كُنْتُ كَاتِبًا لِعُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ فَأَتَاهُ كِتَابُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى ـ رضى الله عنهما أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " لاَ تَمَنَّوْا لِقَاءَ الْعَدُو ".
பாடம் : 156
எதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள்.
3025. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, ‘‘எதிரிகளைப் (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரின் அழிவுகளிலிருந்து) பாதுகாப்புக் கோருங்கள். (வேறு வழியின்றி போர்க் களத்தில்) எதிரிகளைச் சந்திக்க நேரிட்டால் (போரின் துன்பங்களைச் சகித்துப்) பொறுமையாக இருங்கள். சொர்க்கம் வாட்களின் நிழல்களுக்குக் கீழே இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
பிறகு, ‘‘இறைவா! வேதத்தை அருள் பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! கூட்டுப் படைகளைத் தோற்கடித்தவனே! இவர்களையும் தோற்கடித்து இவர்களுக் கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.136
அறிவிப்பாளர் மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
‘‘நான் உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் எழுத்தராக இருந்தேன். அப்போது அவரிடம் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களின் கடிதம் வந்தது. அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிஎதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க விரும்பாதீர்கள்’ என்று சொன்னார்கள் என்றிருந்தது” என சாலிம் அபுந்நள்ர் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 56
3025. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, ‘‘எதிரிகளைப் (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரின் அழிவுகளிலிருந்து) பாதுகாப்புக் கோருங்கள். (வேறு வழியின்றி போர்க் களத்தில்) எதிரிகளைச் சந்திக்க நேரிட்டால் (போரின் துன்பங்களைச் சகித்துப்) பொறுமையாக இருங்கள். சொர்க்கம் வாட்களின் நிழல்களுக்குக் கீழே இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.
பிறகு, ‘‘இறைவா! வேதத்தை அருள் பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! கூட்டுப் படைகளைத் தோற்கடித்தவனே! இவர்களையும் தோற்கடித்து இவர்களுக் கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.136
அறிவிப்பாளர் மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
‘‘நான் உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களின் எழுத்தராக இருந்தேன். அப்போது அவரிடம் அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்களின் கடிதம் வந்தது. அதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிஎதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க விரும்பாதீர்கள்’ என்று சொன்னார்கள் என்றிருந்தது” என சாலிம் அபுந்நள்ர் (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்.
அத்தியாயம் : 56
3026. وَقَالَ أَبُو عَامِرٍ حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" لاَ تَمَنَّوْا لِقَاءَ الْعَدُوِّ، فَإِذَا لَقِيتُمُوهُمْ فَاصْبِرُوا "".
பாடம் : 156
எதிரியை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள்.
3026. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எதிரிகளை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க் களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்துவிடாமல் பொறுமையாக இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 56
3026. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எதிரிகளை (போர்க் களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க் களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்துவிடாமல் பொறுமையாக இருங்கள்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 56
3027. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" هَلَكَ كِسْرَى ثُمَّ لاَ يَكُونُ كِسْرَى بَعْدَهُ، وَقَيْصَرٌ لَيَهْلِكَنَّ ثُمَّ لاَ يَكُونُ قَيْصَرٌ بَعْدَهُ، وَلَتُقْسَمَنَّ كُنُوزُهَا فِي سَبِيلِ اللَّهِ "".
பாடம் : 157
போர் என்பது சூழ்ச்சியாகும்137
3027. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
(தற்போதைய பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா (குஸ்ரூ) அழிந்துவிடுவார். அவருக்குப் பிறகு கிஸ்ரா (வமிச அரசர்) எவரும் இருக்கமாட்டார். (தற்போதைய கிழக்கு ரோமானியப் பேரரசர்) சீசர் நிச்சயம் அழிந்துவிடுவார். அவருக்குப் பிறகு சீசர் (வமிச அரசர்) எவரும் இருக்கமாட்டார். அவ்விருவரின் கருவூலங்களும் இறை வழியில் (போரிடுவோரிடையே) பங்கிடப் பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 56
3027. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:
(தற்போதைய பாரசீகப் பேரரசர்) கிஸ்ரா (குஸ்ரூ) அழிந்துவிடுவார். அவருக்குப் பிறகு கிஸ்ரா (வமிச அரசர்) எவரும் இருக்கமாட்டார். (தற்போதைய கிழக்கு ரோமானியப் பேரரசர்) சீசர் நிச்சயம் அழிந்துவிடுவார். அவருக்குப் பிறகு சீசர் (வமிச அரசர்) எவரும் இருக்கமாட்டார். அவ்விருவரின் கருவூலங்களும் இறை வழியில் (போரிடுவோரிடையே) பங்கிடப் பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 56
3028. وَسَمَّى الْحَرْبَ خَدْعَةً
பாடம் : 157
போர் என்பது சூழ்ச்சியாகும்137
3028. (தொடர்ந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:)
மேலும், நபி (ஸல்) அவர்கள் போரை யிசூழ்ச்சி’ என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 56
3028. (தொடர்ந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:)
மேலும், நபி (ஸல்) அவர்கள் போரை யிசூழ்ச்சி’ என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 56
3029. حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَصْرَمَ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمَّى النَّبِيُّ صلى الله عليه وسلم الْحَرْبَ خُدْعَةً.
பாடம் : 157
போர் என்பது சூழ்ச்சியாகும்137
3029. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் போரை யிசூழ்ச்சி’ என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 56
3029. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் போரை யிசூழ்ச்சி’ என்று குறிப்பிட்டார்கள்.
அத்தியாயம் : 56
3030. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" الْحَرْبُ خُدْعَةٌ "".
பாடம் : 157
போர் என்பது சூழ்ச்சியாகும்137
3030. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போர் என்பது சூழ்ச்சியாகும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 56
3030. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
போர் என்பது சூழ்ச்சியாகும்.
இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 56
3032. حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ لِكَعْبِ بْنِ الأَشْرَفِ "". فَقَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ أَتُحِبُّ أَنْ أَقْتُلَهُ قَالَ "" نَعَمْ "". قَالَ فَأْذَنْ لِي فَأَقُولَ. قَالَ "" قَدْ فَعَلْتُ "".
பாடம் : 158
போரில் பொய் சொல்வது
.3031 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவதற்கு (தயாராயி ருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக் கும் தொல்லை கொடுத்துவிட்டான்”என்று கேட்டார்கள்.138
அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ‘‘நான் அவனைக் கொல்வதைத் தாங்கள் விரும்புகிறீர்களா? அல்லாஹ்வின் தூதரே!” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அல்அஷ்ரஃபிடம் சென்று, ‘‘இவர் (முஹம்மத்) எங்களுக்குக் கடும் சிரமத்தைத் தந்துவிட்டார். எங்களிடம் (மக்களுக்கு) தர்மம் (செய்யும்படி) கேட்டார்” என்று (நபி (ஸல்) அவர்களைக் குறை கூறும் விதத்தில்) பேசினார்கள்.
கஅப் பின் அல்அஷ்ரஃப், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக அவரிடம் நீங்கள் சலிப்படைவீர்கள்” என்று கூறினான்.
அதற்கு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ‘‘நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரது விவகாரம் எதில் முடிகிறது என்பதைப் பார்க்காமல் அவரை விட்டுவிட நாங்கள் விரும்பவில்லை. (அதனால்தான் அவருடன் இன்னும் இருந்துகொண்டிருக்கிறோம்)” என்று (சலிப்பாகப் பேசுவதைப் போன்று) சொன் னார்கள்.
இவ்வாறு முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் அவனிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டேயிருந்து அவனைக் கொல்வதற்கு வசதியான தருணம் கிடைத்த வுடன் அவனைக் கொன்றுவிட்டார் கள்.139
பாடம் : 159
எதிர்பாராத வகையில் பகை நாட்டவர்மீது தாக்குதல்
3032. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவது யார்?” என்று கேட்டார்கள். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ‘‘நான் அவனைக் கொல்வதைத் தாங்கள் விரும்புகிறீர்களா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்க, அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், ‘‘அப்படியென்றால் தங்களைக் குறைகூற எனக்கு அனுமதியளியுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் ‘‘அவ்வாறே செய்தேன்” என்று பதிலளித்தார்கள்.140
அத்தியாயம் : 56
3032. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், ‘‘கஅப் பின் அல்அஷ்ரஃபை வீழ்த்துவது யார்?” என்று கேட்டார்கள். முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், ‘‘நான் அவனைக் கொல்வதைத் தாங்கள் விரும்புகிறீர்களா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்க, அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள். உடனே அவர்கள், ‘‘அப்படியென்றால் தங்களைக் குறைகூற எனக்கு அனுமதியளியுங்கள்” என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் ‘‘அவ்வாறே செய்தேன்” என்று பதிலளித்தார்கள்.140
அத்தியாயம் : 56
3033. قَالَ اللَّيْثُ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ انْطَلَقَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعَهُ أُبَىُّ بْنُ كَعْبٍ قِبَلَ ابْنِ صَيَّادٍ، فَحُدِّثَ بِهِ فِي نَخْلٍ، فَلَمَّا دَخَلَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّخْلَ، طَفِقَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، وَابْنُ صَيَّادٍ فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْرَمَةٌ، فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا صَافِ، هَذَا مُحَمَّدٌ، فَوَثَبَ ابْنُ صَيَّادٍ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لَوْ تَرَكَتْهُ بَيَّنَ "".
பாடம் : 160
யாருடைய தீங்கு குறித்து அஞ்சப்படுமோ அவரிடம் தந்திரமாகவும் எச்சரிக்கையாகவும் நடப்பது செல்லும்.
3033. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் இருக்க, (யூதச் சிறுவன்) இப்னு ஸய்யாதை நோக்கி நடந்தார்கள். இப்னு ஸய்யாத் ஒரு பேரீச்சந் தோட்டத்தில் இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சந் தோட்டத் தில் அவனிடம் நுழைந்தபோது (தாம் வருவதை அவன் அறியக் கூடாது என்பதற்காக) பேரீச்ச மரங்களின் அடிப் பகுதிகளால் தம்மை மறைத்துக்கொண்டு அவனை நோக்கி நடக்கலானார்கள்.
இப்னு ஸய்யாத் ஏதோ முணுமுணுத்தவ னாக ஒரு பூம்பட்டுப் போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்துவிட்டாள். உடனே ‘‘ஸாஃபியே! இதோ முஹம்மத்!” என்று அவள் கூற, இப்னு ஸய்யாத் குதித்தெழுந்துவிட்டான். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(நான் வருவதைத் தெரிவிக்காமல்) அவனை அவள் அப்படியே விட்டிருந்தால் அவன் (உண்மையை) வெளிப்படை யாகப் பேசியிருப்பான்” என்று சொன்னார்கள்.141
அத்தியாயம் : 56
3033. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் இருக்க, (யூதச் சிறுவன்) இப்னு ஸய்யாதை நோக்கி நடந்தார்கள். இப்னு ஸய்யாத் ஒரு பேரீச்சந் தோட்டத்தில் இருப்பதாக நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சந் தோட்டத் தில் அவனிடம் நுழைந்தபோது (தாம் வருவதை அவன் அறியக் கூடாது என்பதற்காக) பேரீச்ச மரங்களின் அடிப் பகுதிகளால் தம்மை மறைத்துக்கொண்டு அவனை நோக்கி நடக்கலானார்கள்.
இப்னு ஸய்யாத் ஏதோ முணுமுணுத்தவ னாக ஒரு பூம்பட்டுப் போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தான். இப்னு ஸய்யாதின் தாய் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்துவிட்டாள். உடனே ‘‘ஸாஃபியே! இதோ முஹம்மத்!” என்று அவள் கூற, இப்னு ஸய்யாத் குதித்தெழுந்துவிட்டான். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(நான் வருவதைத் தெரிவிக்காமல்) அவனை அவள் அப்படியே விட்டிருந்தால் அவன் (உண்மையை) வெளிப்படை யாகப் பேசியிருப்பான்” என்று சொன்னார்கள்.141
அத்தியாயம் : 56
3034. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنِ الْبَرَاءِ ـ رضى الله عنه ـ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَوْمَ الْخَنْدَقِ وَهُوَ يَنْقُلُ التُّرَابَ حَتَّى وَارَى التُّرَابُ شَعَرَ صَدْرِهِ، وَكَانَ رَجُلاً كَثِيرَ الشَّعَرِ وَهْوَ يَرْتَجِزُ بِرَجَزِ عَبْدِ اللَّهِ اللَّهُمَّ لَوْلاَ أَنْتَ مَا اهْتَدَيْنَا وَلاَ تَصَدَّقْنَا وَلاَ صَلَّيْنَا فَأَنْزِلَنْ سَكِينَةً عَلَيْنَا وَثَبِّتِ الأَقْدَامَ إِنْ لاَقَيْنَا إِنَّ الأَعْدَاءَ قَدْ بَغَوْا عَلَيْنَا إِذَا أَرَادُوا فِتْنَةً أَبَيْنَا يَرْفَعُ بِهَا صَوْتَهُ.
பாடம் : 161
போரில் ஈரசைச்சீர் (ரஜ்ஸ்) பாடல் பாடுவதும் அகழ் தோண்டுகையில் குரலெடுத்துப் பாடுவதும்
இது பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து சஹ்ல் (ரலி) அவர்களும் அனஸ் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.142
அவ்வாறே, இது தொடர்பாக சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்களிடமிருந்து அவர்களுடைய முன்னாள் அடிமையான யஸீத் பின் அபீஉபைத் (ரஹ்) அவர்களும் அறிவிக்கிறார்கள்.143
3034. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அகழ்ப் போரின்போது பார்த்தேன். அப்போது அவர்கள் (அகழ் வெட்டுவதற்காகத் தோண்டிய) மண்ணை எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். அந்த மண், அவர்களுடைய மார்பின் முடியை மறைத்துவிட்டிருந்தது லிமேலும், நபி (ஸல்) அவர்கள் அதிகமான முடி யுடையவர்களாக இருந்தார்கள்லி அவர்கள் (கவிஞரான தம் தோழர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களின் (பின் வரும்) ஈரசைச்சீர் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள்:
இறைவா!நீ இல்லாவிட்டால்நாங்கள்நல்வழி அடைந்திருக்கமாட்டோம்தர்மம் செய்திருக்கமாட்டோம்தொழுதும் இருக்கமாட்டோம்.
எங்கள்மீதுபொழிவாயாக அமைதியை!(எதிரிகளை)நாங்கள் சந்திக்கும்போதுபாதங்களைஉறுதிப்படுத்துவாயாக!
எதிரிகள்எங்களுக்குஅநீதியிழைத்துவிட்டனர்எங்களைச்சோதனையில் ஆழ்த்தஇவர்கள் விரும்பினாலும்இடம் தரமாட்டோம்!
இதை நபி (ஸல்) அவர்கள் உரத்த குரலுடன் பாடிக்கொண்டிருந்தார்கள்.144
அத்தியாயம் : 56
3034. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அகழ்ப் போரின்போது பார்த்தேன். அப்போது அவர்கள் (அகழ் வெட்டுவதற்காகத் தோண்டிய) மண்ணை எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். அந்த மண், அவர்களுடைய மார்பின் முடியை மறைத்துவிட்டிருந்தது லிமேலும், நபி (ஸல்) அவர்கள் அதிகமான முடி யுடையவர்களாக இருந்தார்கள்லி அவர்கள் (கவிஞரான தம் தோழர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களின் (பின் வரும்) ஈரசைச்சீர் பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள்:
இறைவா!நீ இல்லாவிட்டால்நாங்கள்நல்வழி அடைந்திருக்கமாட்டோம்தர்மம் செய்திருக்கமாட்டோம்தொழுதும் இருக்கமாட்டோம்.
எங்கள்மீதுபொழிவாயாக அமைதியை!(எதிரிகளை)நாங்கள் சந்திக்கும்போதுபாதங்களைஉறுதிப்படுத்துவாயாக!
எதிரிகள்எங்களுக்குஅநீதியிழைத்துவிட்டனர்எங்களைச்சோதனையில் ஆழ்த்தஇவர்கள் விரும்பினாலும்இடம் தரமாட்டோம்!
இதை நபி (ஸல்) அவர்கள் உரத்த குரலுடன் பாடிக்கொண்டிருந்தார்கள்.144
அத்தியாயம் : 56
3035. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ ـ رضى الله عنه ـ قَالَ مَا حَجَبَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم مُنْذُ أَسْلَمْتُ، وَلاَ رَآنِي إِلاَّ تَبَسَّمَ فِي وَجْهِي.
பாடம் : 162
குதிரையின் மீது சரியாக அமர முடியாதவர்
3035. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தமது வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர (வேறு முறையில்) அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை.
அத்தியாயம் : 56
3035. ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் இஸ்லாத்தைத் தழுவியதிலிருந்து (தமது வீட்டுக்குள் வரக் கூடாதென்று) நபி (ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை; புன்முறுவலுடன் சிரித்தவர்களாகவே தவிர (வேறு முறையில்) அவர்கள் என் முகத்தைப் பார்த்ததில்லை.
அத்தியாயம் : 56