2390. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، بِبَيْتِنَا يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، تَقَاضَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، فَأَغْلَظَ لَهُ، فَهَمَّ أَصْحَابُهُ، فَقَالَ "" دَعُوهُ، فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً. وَاشْتَرُوا لَهُ بَعِيرًا، فَأَعْطُوهُ إِيَّاهُ "". وَقَالُوا لاَ نَجِدُ إِلاَّ أَفْضَلَ مِنْ سِنِّهِ. قَالَ "" اشْتَرُوهُ فَأَعْطُوهُ إِيَّاهُ، فَإِنَّ خَيْرَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً "".
பாடம் : 4 ஒட்டகத்தைக் கடன் வாங்குதல்
2390. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், அவர்களுக்குத் தாம் கொடுத்த (ஒட்டகத்)தைத் திருப்பித் தரும்படி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் அந்த மனிதர் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபித்தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி,) ‘‘(அவரைத் தண்டிக்க வேண்டாம்;) விட்டுவிடுங்கள். ஏனெனில், கடன் கொடுத்தவருக்கு (இவ்வாறு) பேச உரிமையுண்டு. அவருக்காக ஓர் ஒட்டகத்தை வாங்கி அவரிடம் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள்.

நபித்தோழர்கள், ‘‘அவருக்குத் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதைவிட அதிக வயதை உடைய ஒட்டகம்தான் எங்களுக்குக் கிடைக்கிறது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அதையே வாங்கி அவருக்குக் கொடுத்துவிடுங்கள். ஏனெனில், உங்களில் எவர் நல்ல முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துகிறாரோ அவரே உங்களில் சிறந்தவர்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 43
2391. حَدَّثَنَا مُسْلِمٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ رِبْعِيٍّ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" مَاتَ رَجُلٌ، فَقِيلَ لَهُ قَالَ كُنْتُ أُبَايِعُ النَّاسَ، فَأَتَجَوَّزُ عَنِ الْمُوسِرِ، وَأُخَفِّفُ عَنِ الْمُعْسِرِ، فَغُفِرَ لَهُ "". قَالَ أَبُو مَسْعُودٍ سَمِعْتُهُ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 5 கடனைத் திருப்பிக் கேட்கும்போது நயமாக நடந்துகொள்வது
2391. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

ஒரு மனிதர் மரணித்துவிட்டார். அவரிடம் (அடக்கத் தலத்தில் வைத்து), ‘‘நீ (உலகில்) என்ன (நன்மையைச்) சொல்லி (செய்து)வந்தாய்?” என்று கேட்கப் பட்டது. அதற்கு அவர், ‘‘நான் மக்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்துவந்தேன். கடன் தொகையை வசூல் செய்யும்போது வசதி உள்ளவருக்கு அவகாசம் கொடுத்து வந்தேன். வசதியற்றவரை மன்னித்து (அவரது கடனைத் தள்ளுபடி செய்து)வந்தேன்” என்று கூறினார். (அவரது இந்த நற்செயல் அங்கீகரிக்கப்பட்டு) அவருக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டது.

இதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதே ஹதீஸை நபி (ஸல்) அவர்களி டம் தாம் கேட்டதாக அபூமஸ்ஊத் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 43
2392. حَدَّثَنَا مُسَدَّدٌ، عَنْ يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ حَدَّثَنِي سَلَمَةُ بْنُ كُهَيْلٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَقَاضَاهُ بَعِيرًا، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَعْطُوهُ "". فَقَالُوا مَا نَجِدُ إِلاَّ سِنًّا أَفْضَلَ مِنْ سِنِّهِ. فَقَالَ الرَّجُلُ أَوْفَيْتَنِي أَوْفَاكَ اللَّهُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَعْطُوهُ فَإِنَّ مِنْ خِيَارِ النَّاسِ أَحْسَنَهُمْ قَضَاءً "".
பாடம் : 6 (கடனாக வாங்கிய ஒட்டகத்தைவிட) வயதில் பெரிய ஒட்டகத்தைத் திருப்பிச் செலுத்தலாமா?
2392. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் தம்மிடம் நபி (ஸல்) அவர்கள் கடனாகப் பெற்றிருந்த ஒட்டகத்தைத் திருப்பிச் செலுத்தும்படி கேட்க வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), ‘‘அவருக்குக் கொடுத்துவிடுங்கள்” என்று கூறினார்கள். அதற்குத் தோழர்கள், ‘‘அவருக்கு நீங்கள் தர வேண்டிய ஒட்டகத்தின் வயதைவிட அதிக வயதுடைய ஒட்டகம்தான் எங்களிடம் உள்ளது” என்று கூறினர். இதைக் கேட்ட அம்மனிதர், ‘‘(என் உரிமையை) நிறைவாக எனக்கு நீங்கள் அளித்தீர்கள் என்றால், அல்லாஹ் உங்களுக்கும் நிறைவாக அளிப்பான்” என்று கூறினார்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவருக்கு (வயது அதிகமான) அந்த ஒட்டகத்தையே கொடுத்துவிடுங்கள். ஏனெனில், எவர் (தாம் வாங்கிய கடனை) அழகிய முறையில் திருப்பிச் செலுத்து கிறாரோ, அவரே மக்களில் சிறந்தவர் ஆவார்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 43
2393. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ لِرَجُلٍ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم سِنٌّ مِنَ الإِبِلِ فَجَاءَهُ يَتَقَاضَاهُ فَقَالَ صلى الله عليه وسلم "" أَعْطُوهُ "". فَطَلَبُوا سِنَّهُ، فَلَمْ يَجِدُوا لَهُ إِلاَّ سِنًّا فَوْقَهَا. فَقَالَ "" أَعْطُوهُ "". فَقَالَ أَوْفَيْتَنِي، وَفَّى اللَّهُ بِكَ. قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ خِيَارَكُمْ أَحْسَنُكُمْ قَضَاءً "".
பாடம் : 7 (கடனை) அழகிய முறையில் திருப்பிச் செலுத்துதல்
2393. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தாம் கடனாக வாங்கிய) ஒரு குறிப்பிட்ட வயதுடைய ஒட்டகத்தை ஒரு மனிதருக்குத் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (ஒருமுறை) அம்மனிதர் தமது ஒட்டகத்தைத் திருப்பித் தருமாறு கேட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். நபி (ஸல்) அவர்கள், ‘‘அவருக்குக் கொடுங்கள்” என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள். தோழர்கள் அந்த மனிதருக்குச் சேர வேண்டிய சிறு வயதுடைய ஒட்டகத்தைத் தேடினார்கள். ஆனால், அதிக வயதுடைய ஒட்டகம்தான் அவர்களுக்குக் கிடைத்தது. நபி (ஸல்) அவர்கள், ‘‘(அதையே) அவருக்குக் கொடுத்து விடுங்கள்” என்று கூறினார்கள்.

அந்த மனிதர், ‘‘நீங்கள் எனக்கு நிறைவாக அளித்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கும் நிறைவாக அளிப்பானாக!” என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களில் சிறந்தவர், தாம் வாங்கிய கடனை அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 43
2394. حَدَّثَنَا خَلاَّدٌ، حَدَّثَنَا مِسْعَرٌ، حَدَّثَنَا مُحَارِبُ بْنُ دِثَارٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَهْوَ فِي الْمَسْجِدِ ـ قَالَ مِسْعَرٌ أُرَاهُ قَالَ ضُحًى ـ فَقَالَ "" صَلِّ رَكْعَتَيْنِ "". وَكَانَ لِي عَلَيْهِ دَيْنٌ فَقَضَانِي وَزَادَنِي.
பாடம் : 7 (கடனை) அழகிய முறையில் திருப்பிச் செலுத்துதல்
2394. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். லிஞீமுற்பகல் நேரத்தில் சென்றேன்’ என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக நினைக்கிறேன் என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான மிஸ்அர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்லி நபி (ஸல்) அவர்கள், ‘‘இரண்டு ரக்அத்கள் தொழுவீ ராக!” என்று கூறினார்கள். என்னிடம் வாங்கிய ஒரு கடனை அவர்கள் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்தது. (நான் தொழுது முடித்தபின்) எனக்குத் தர வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்தியதுடன் எனக்கு அதிகமாகவும் கொடுத்தார்கள்.

அத்தியாயம் : 43
2395. حَدَّثَنَا عَبْدَانُ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا يُونُسُ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي ابْنُ كَعْبِ بْنِ مَالِكٍ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ قُتِلَ يَوْمَ أُحُدٍ شَهِيدًا، وَعَلَيْهِ دَيْنٌ فَاشْتَدَّ الْغُرَمَاءُ فِي حُقُوقِهِمْ، فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلَهُمْ أَنْ يَقْبَلُوا تَمْرَ حَائِطِي وَيُحَلِّلُوا أَبِي فَأَبَوْا، فَلَمْ يُعْطِهِمِ النَّبِيُّ صلى الله عليه وسلم حَائِطِي، وَقَالَ "" سَنَغْدُو عَلَيْكَ "". فَغَدَا عَلَيْنَا حِينَ أَصْبَحَ، فَطَافَ فِي النَّخْلِ، وَدَعَا فِي ثَمَرِهَا بِالْبَرَكَةِ، فَجَدَدْتُهَا فَقَضَيْتُهُمْ، وَبَقِيَ لَنَا مِنْ تَمْرِهَا.
பாடம் : 8 (கடன் கொடுத்தவர் சம்மதித்தால்) கடனாளி கடனைக் குறைத்துச் செலுத்துவதோ அல்லது கடன் கொடுத்தவர் முழுவதுமாகக் கடனை விட்டுவிடுவதோ செல்லும்.
2395. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை உஹுத் போரின்போது, தம்மீது கடன் இருந்த நிலையில் கொல்லப்பட்டுவிட்டார்கள். கடன் கொடுத்தவர்கள் தம் உரிமைகளைக் கேட்டுக் கடுமை காட்டினார்கள். உடனே நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். (விஷயத்தைக் கூறினேன்.) நபி (ஸல்) அவர்கள் கடன் கொடுத்தவர்களிடம் என் தோட்டத்தின் பேரீச்சம்பழங்களை (கடனுக்குப் பகரமாக) ஏற்றுக்கொண்டு என் தந்தையை மன்னித்து (மீதிக் கடனைத்) தள்ளுபடி செய்துவிடும்படி கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறு செய்ய) அவர்கள் மறுத்துவிட்டனர். ஆகவே, அவர்களுக்கு அந்தப் பேரீச்சம்பழங்களை நபி (ஸல்) அவர்கள் கொடுக்கவில்லை.

மாறாக, ‘‘நாம் உன்னிடம் காலையில் வருவோம்” என்று கூறினார்கள். பிறகு காலையில் என்னிடம் வந்தார்கள். பேரீச்ச மரங்களிடையே சுற்றி வந்து, அவற்றின் கனிகளில் வளம் வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். பிறகு, நான் அவற்றைப் பறித்துக் கடன் கொடுத்தவர்களின் கடன் களையெல்லாம் திருப்பிச்செலுத்தினேன். (முழுக் கடனையும் அடைத்த பின்பும்) அதன் கனிகள் எங்களுக்கு மீதி யிருந்தன.

அத்தியாயம் : 43
2396. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا أَنَسٌ، عَنْ هِشَامٍ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ أَبَاهُ تُوُفِّيَ، وَتَرَكَ عَلَيْهِ ثَلاَثِينَ وَسْقًا لِرَجُلٍ مِنَ الْيَهُودِ، فَاسْتَنْظَرَهُ جَابِرٌ، فَأَبَى أَنْ يُنْظِرَهُ، فَكَلَّمَ جَابِرٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِيَشْفَعَ لَهُ إِلَيْهِ، فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَكَلَّمَ الْيَهُودِيَّ لِيَأْخُذَ ثَمَرَ نَخْلِهِ بِالَّذِي لَهُ فَأَبَى، فَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّخْلَ، فَمَشَى فِيهَا ثُمَّ قَالَ لِجَابِرٍ "" جُدَّ لَهُ فَأَوْفِ لَهُ الَّذِي لَهُ "". فَجَدَّهُ بَعْدَ مَا رَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَوْفَاهُ ثَلاَثِينَ وَسْقًا، وَفَضَلَتْ لَهُ سَبْعَةَ عَشَرَ وَسْقًا، فَجَاءَ جَابِرٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِيُخْبِرَهُ بِالَّذِي كَانَ، فَوَجَدَهُ يُصَلِّي الْعَصْرَ، فَلَمَّا انْصَرَفَ أَخْبَرَهُ بِالْفَضْلِ، فَقَالَ "" أَخْبِرْ ذَلِكَ ابْنَ الْخَطَّابِ "". فَذَهَبَ جَابِرٌ إِلَى عُمَرَ، فَأَخْبَرَهُ. فَقَالَ لَهُ عُمَرُ لَقَدْ عَلِمْتُ حِينَ مَشَى فِيهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيُبَارَكَنَّ فِيهَا.
பாடம் : 9 கடனை அடைக்கும்போது (கடனா கப் பெற்ற) பேரீச்சம்பழத்திற்கோ வேறொரு தானியத்திற்கோ அதே அளவு சரியாக அளந்து கொடுத்தாலும், (கடன் கொடுத்தவர் சம்மதிக்கும்பட்சத்தில்) குத்து மதிப்பாகக் கணக்கிட்டுக் கொடுத் தாலும் (செல்லும்.)
2396. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (உஹுத் போரில் வீர) மரணம் அடைந்தார்கள்; ஒரு யூதருக்கு அவர் (திருப்பிச் செலுத்த வேண்டிய கடனாக) முப்பது வஸ்க்கு (கனி)களை என் பொறுப்பில் விட்டுவிட்டுச் சென்றார்கள்.3 அதைத் திருப்பிச் செலுத்த எனக்கு அவகாசம் அளிக்கும்படி நான் அந்த யூதரிடம் கேட்டேன். அவர் எனக்கு அவகாசம் தர மறுத்துவிட்டார். எனக்காக (கால அவகாசம் கேட்டு) அந்த யூதரிடம் பரிந்துரை செய்யும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டுக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அந்த யூதரிடம் வந்து அவருக்குச் சேரவேண்டிய கடனுக்குப் பகரமாக என் பேரீச்சந் தோப்பின் கனிகளை எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்கள். அதையும் அந்த யூதர் மறுத்துவிட்டார்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சந் தோட்டத்தில் புகுந்து அதன் மரங்களுக்கிடையே நடந்தார்கள். பிறகு என்னிடம், ‘‘அவருக்குப் பறித்துக் கொடு. அவருக்குச் சேர வேண்டியதை நிறைவாகக் கொடு” என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றபிறகு, நான் பேரீச்சங் கனிகளைப் பறித்து அந்த யூதருக்கு முப்பது வஸ்க்குளையும் (நிறைவாகக்) கொடுத்துவிட்டேன். அதற்குப் பிறகும் எனக்குப் பதினேழு வஸ்க்குகள் (அளவுக் குப் பேரீச்சங் கனிகள்) மீதியிருந்தன.

பின்னர் நான் நடந்ததைத் தெரிவிப்ப தற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தபோது, அவர்கள் அஸ்ர் தொழுகை தொழுதுகொண்டிருப்ப தைக் கண்டேன். அவர்கள் (சலாம் கொடுத்துத்) திரும்பியதும் பேரீச்சங் கனிகள் மீதியிருப்பதை அவர்களிடம் நான் தெரிவித்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்தச் செய்தியை கத்தாபின் புதல்வரிடம் (உமரிடம்) தெரிவி” என்று கூறினார்கள்.

எனவே, நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்ததும் உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பேரீச்சமரங்களுக் கிடையே நடந்து சென்றபோதே, அவற்றில் யிபரக்கத்’ (அருள் வளம்) வழங்கப்படும் என்று நான் அறிந்துகொண்டேன்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 43
2397. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، ح وَحَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنِي أَخِي، عَنْ سُلَيْمَانَ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي عَتِيقٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَخْبَرَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَدْعُو فِي الصَّلاَةِ وَيَقُولُ "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ "". فَقَالَ لَهُ قَائِلٌ مَا أَكْثَرَ مَا تَسْتَعِيذُ يَا رَسُولَ اللَّهِ مِنَ الْمَغْرَمِ قَالَ "" إِنَّ الرَّجُلَ إِذَا غَرِمَ حَدَّثَ فَكَذَبَ وَوَعَدَ فَأَخْلَفَ "".
பாடம் : 10 கடனிலிருந்து பாதுகாப்புக் கோரல்
2397. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் துஆ செய்யும்போது, ‘‘இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந் தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்” என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாகப் பாதுகாப்புக் கோருவதற்குக் காரணம் என்ன?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘மனிதன் கடன்படும்போது பொய் பேசுகிறான்; வாக்குறுதி தந்துவிட்டு (அதற்கு) மாறு செய்கிறான்” என்று பதிலளித்தார்கள்.4

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 43
2398. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ تَرَكَ مَالاً فَلِوَرَثَتِهِ، وَمَنْ تَرَكَ كَلاًّ فَإِلَيْنَا "".
பாடம் : 11 கடனை அடைக்காமல் விட்டுச் சென்றவருக்கு இறுதித் தொழுகை தொழுதல்
2398. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

ஒருவர் (இறக்கும்போது) ஒரு செல் வத்தை விட்டுச்சென்றால், அது அவரு டைய வாரிசுகளுக்குரியதாகும். ஒருவர் (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) தம் மனைவி மக்களை விட்டுச்சென்றால், அவர்களைப் பராமரிப்பது நமது பொறுப்பாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 43
2399.
பாடம் : 11 கடனை அடைக்காமல் விட்டுச் சென்றவருக்கு இறுதித் தொழுகை தொழுதல்
2399. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர் எவராயினும் அவருக்கு இந்த உலகிலும் மறுவுலகிலும் நானே மிக நெருக்கமான (உரிமையுடைய) வன் ஆவேன். நீங்கள் விரும்பினால், யிதிண்ணமாக, நம்பிக்கையாளர்களுக்கு, அவர்களின் உயிர்களைவிட நபிதான் நெருக்கமான (உரிமையுடைய)வர் ஆவார்’ (33:6) எனும் இறைவசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.

ஓர் இறைநம்பிக்கையாளர் (அவர் எவராயினும் சரி) மரணித்து ஒரு செல்வத்தை விட்டுச்சென்றால் அவருடைய தந்தைவழி உறவினர்கள் லி அவர்கள் எவ்வகையினராயினும் சரிலி அதற்கு வாரிசுகளாகட்டும். எவர் (இறக்கும்போது) ஒரு கடனை (அடைக்காமல்) விட்டுச் செல்கிறாரோ அல்லது (தம்மைத் தவிர வேறு திக்கற்ற) மனைவி மக்களை விட்டுச்செல்கிறாரோ அவர் என்னிடத்தில் வரட்டும்.  நானே அவர்களுக்குக் காப்பாளன் (பொறுப்பேற்றுப் பராமரிப்பவன்) ஆவேன்.5

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் :
2400. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، عَنْ مَعْمَرٍ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَخِي وَهْبِ بْنِ مُنَبِّهٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَطْلُ الْغَنِيِّ ظُلْمٌ "".
பாடம் : 12 வசதியுள்ளவர் கடனை (உடனடியாக) அடைக்காமல் (தவணை சொல்லி) இழுத்தடிப்பது அநியாயமாகும்.
2400. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வசதியுள்ளவர் (தமது கடனை அடைக்காமல் கடன் கொடுத்தவரிடம் தவணை சொல்லி) தள்ளிப்போடுவது அநியாய மாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6

அத்தியாயம் : 43
2401. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، عَنْ سَلَمَةَ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم رَجُلٌ يَتَقَاضَاهُ فَأَغْلَظَ لَهُ فَهَمَّ بِهِ أَصْحَابُهُ. فَقَالَ "" دَعُوهُ فَإِنَّ لِصَاحِبِ الْحَقِّ مَقَالاً "".
பாடம் : 13 கடன் கொடுத்தவருக்குப் பேச உரிமையுண்டு. ‘‘வசதியுள்ளவர் (கடனைத் தீர்க்காமல்) இழுத்தடித்துக்கொண்டே சென்றால் அதற் காக அவருக்குத் தண்டனை அளிப்பதும் அவரது மானத்தை வாங்குவதும் செல்லும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படுகிறது. (பலர் முன்னிலையில்,) ‘‘ ’நீ எனக்குத் தரவேண்டிய கடனை அடைக்காமல் இழுத்தடிக்கிறாய்’ என்று கூறுவதே கடனாளியின் மானத்தை வாங்குவதாகும்; அவனைச் சிறையில் தள்ளுவதே அவனுக்குத் தரும் தண்டனையாகும்” என்று சுஃப்யான் அஸ்ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
2401. அபூஹுரைரா  (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர், தாம் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு வந்தார். அப்போது அவர் நபி (ஸல்) அவர்களிடம் சற்றுக் கடுமையாகப் பேசினார். ஆகவே, நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் அவரைத் தண்டிக்க விரும்பினார்கள். (இதைப் புரிந்துகொண்ட) நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரை விட்டுவிடுங்கள். கடன் கொடுத்தவருக்கு(க் கடுமையாக)ப் பேச உரிமையுண்டு” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 43
2402. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ، أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ الْعَزِيزِ، أَخْبَرَهُ أَنَّ أَبَا بَكْرِ بْنَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ أَخْبَرَهُ أَنَّهُ، سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَوْ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" مَنْ أَدْرَكَ مَالَهُ بِعَيْنِهِ عِنْدَ رَجُلٍ أَوْ إِنْسَانٍ قَدْ أَفْلَسَ، فَهْوَ أَحَقُّ بِهِ مِنْ غَيْرِهِ "".
பாடம் : 14 ஒரு பொருளை விற்றவர், அல்லது கடனாகக் கொடுத்தவர், அல்லது கையடையாகக் கொடுத்தவர், (அதை வாங்கியபின்) திவாலாகிப் போனவரிடம் அப்பொருளைக் கண்டால், அதைப் பெறுவதற்கு அவரே (மற்ற கடன்காரர்களைவிட) அதிக உரிமை பெற்றவராவார்.7 ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் திவாலாகி அது (நீதிமன்றத்தில்) நிரூபணமாகியும்விட்டால், அவர் தம் அடிமையை விடுதலை செய்வதோ, அவர் எதையும் விற்பதோ வாங்குவதோ செல்லாது. ‘‘ஒருவர் திவாலாவதற்கு முன்பே அவரிடமிருந்து தமக்குரிய பொருளை யார் திருப்பி வாங்கிக்கொண்டாரோ, அவருக்கே அப்பொருள் சொந்தமாகும். திவாலாகிப் போனவரிடம் தமது பொருளை அப்படியே ஒருவர் காண்பாராயின், அதை எடுத்துக்கொள்ள (மற்ற கடன்காரர்களை விட) அவரே அதிக உரிமையுடையவர்” என்று உஸ்மான் (ரலி) அவர்கள் தீர்ப்பளித் தார்கள். இதை சயீத் பின் அல்முசய்யப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
2402. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் திவாலான ஒரு மனிதரிடம் தமது பொருளை அப்படியே (கொடுத்த போது இருந்தபடியே) காண்பாராயின், அதை எடுத்துக்கொள்ள மற்ற கடன் காரர்களைவிட அவருக்கே அதிக உரிமை இருக்கிறது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 43
2403. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا حُسَيْنٌ الْمُعَلِّمُ، حَدَّثَنَا عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ أَعْتَقَ رَجُلٌ غُلاَمًا لَهُ عَنْ دُبُرٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ يَشْتَرِيهِ مِنِّي "". فَاشْتَرَاهُ نُعَيْمُ بْنُ عَبْدِ اللَّهِ، فَأَخَذَ ثَمَنَهُ، فَدَفَعَهُ إِلَيْهِ.
பாடம் : 15 கடன் கொடுத்தவரிடம், நாளை, மறுநாள் என்று (கொடுக்கும் எண்ணத்துடன்) தவணை சொல்வது, இழுத்தடிப்பது ஆகாது என்ற கருத்து ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: கடன்காரர்கள், தங்களிடம் என் தந்தை வாங்கிய கடன் தொடர்பான தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காக (என்னிடம் கெடுபிடியாக நடந்து) கடுமை காட்டினார் கள். நபி (ஸல்) அவர்கள் என் தோட்டத்தின் பேரீச்சங் கனிகளை (தங்கள் கடனுக்குப் பகரமாக)ப் பெற்றுக்கொள்ளச் சம்மதிக்கும்படி அவர்களிடம் (எனக்காகக்) கேட்டார்கள். அதற்கு அவர்கள் மறுத்துவிட்டனர். ஆகவே, அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், என் தோட்டத்தை (அவர்களே கனிகளைப் பறித்துக்கொள்ளும்படி) கொடுக்கவுமில்லை; தாமே கனிகளைப் பறித்து அவர்களுக்குத் தரவுமில்லை. மாறாக, ‘‘நாளை உங்களிடம் வருகிறேன்” என்று கூறிவிட்டு மறுநாள் காலை எங்களிடம் வந்தார்கள். அப்போது என் தோட்டத்துக் கனிகளில் வளம் ஏற்பட யிதுஆ’ செய்தார்கள். ஆகவே, (பிறகு) நான் அவற்றைப் பறித்துக் கடன்காரர்களுக்குத் தரவேண்டிய கடனைத் தீர்த்தேன்.8 பாடம் : 16 திவாலாகிவிட்டவரின் பொருளை விற்றுக் கடன்காரர்களுக்குப் பங்கிடுவதும், ஓர் ஏழையின் பொருளை விற்று (அந்த ஏழை) தனக்காகச் செலவு செய்துகொள்வ தற்காக அவரிடமே அதைக் கொடுப்பதும்
2403. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர், தாம் இறந்தபிறகு தம்முடைய ஓர் அடிமை விடுதலையாகிக் கொள்ளட்டும் என்று கூறியிருந்தார். நபி (ஸல்) அவர்கள் (அந்த அடிமையைக் காட்டி), ‘‘இவரை யார் என்னிடத்திலிருந்து வாங்கிக்கொள்வது?” என்று கேட்டார்கள். நுஐம் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அவ்வடிமையை வாங்கிக்கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமைக்கான விலையை வாங்கி அந்த அடிமையின் உரிமையாளரிடமே கொடுத்துவிட்டார் கள்.9

அத்தியாயம் : 43
2404. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَنَّهُ ذَكَرَ رَجُلاً مِنْ بَنِي إِسْرَائِيلَ، سَأَلَ بَعْضَ بَنِي إِسْرَائِيلَ أَنْ يُسْلِفَهُ، فَدَفَعَهَا إِلَيْهِ إِلَى أَجَلٍ مُسَمًّى. فَذَكَرَ الْحَدِيثَ.
பாடம் : 17 குறிப்பிட்ட தவணைக்குக் கடன் கொடுப்பதும், குறிப்பிட்ட தவணையில் விலையைப் பெற்றுக்கொள்வதாகக் கூறி பொருளை விற்பதும் ‘‘ஒரு குறிப்பிட்ட தவணையில் திருப்பிச் செலுத்தும்படி கூறி கடன் கொடுப்பதில் தவறில்லை; கடனாளி கடன் கொடுத்தவருக்கு, அவர் கொடுத்த திர்ஹங்களைவிட உயர்தரமானதை முன்நிபந்தனை விதிக்காமல் கொடுத்தாலும் சரியே” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். ‘‘கடன் வாங்கியவர், தனக்குக் குறிப் பிடப்பட்ட தவணைக்குள் கடனைச் செலுத்தலாம்” என்று அதா (ரஹ்) அவர்களும் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களும் கூறுகிறார்கள்.
2404. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரைப் பற்றிக் கூறினார்கள். அவர், தம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு மனிதரிடம் கடன் கேட்டார். அந்த மனிதரும் ஒரு குறிப்பிட்ட தவணையில் திருப்பிச் செலுத்திவிட வேண்டும் என்னும் நிபந்தனையுடன் அவருக்குக் கடன் கொடுத்தார்... என்று முழு ஹதீஸையும் கூறினார்கள்.10

அத்தியாயம் : 43
2405. حَدَّثَنَا مُوسَى، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ عَامِرٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ أُصِيبَ عَبْدُ اللَّهِ وَتَرَكَ عِيَالاً وَدَيْنًا، فَطَلَبْتُ إِلَى أَصْحَابِ الدَّيْنِ أَنْ يَضَعُوا بَعْضًا مِنْ دَيْنِهِ فَأَبَوْا، فَأَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فَاسْتَشْفَعْتُ بِهِ عَلَيْهِمْ فَأَبَوْا، فَقَالَ " صَنِّفْ تَمْرَكَ كُلَّ شَىْءٍ مِنْهُ عَلَى حِدَتِهِ، عِذْقَ ابْنِ زَيْدٍ عَلَى حِدَةٍ، وَاللِّينَ عَلَى حِدَةٍ، وَالْعَجْوَةَ عَلَى حِدَةٍ، ثُمَّ أَحْضِرْهُمْ حَتَّى آتِيَكَ ". فَفَعَلْتُ، ثُمَّ جَاءَ صلى الله عليه وسلم فَقَعَدَ عَلَيْهِ، وَكَالَ لِكُلِّ رَجُلٍ حَتَّى اسْتَوْفَى، وَبَقِيَ التَّمْرُ كَمَا هُوَ كَأَنَّهُ لَمْ يُمَسَّ.
பாடம் : 18 கடனைச் சிறிது தள்ளுபடி செய்யு மாறு பரிந்துரைத்தல்
2405. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (உஹுத் போரில் ஷஹீதாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (மரணிக்கும்போது) பல குழந்தை குட்டிகளையும் கடனையும் விட்டுச்சென்றார்கள். ஆகவே, (அந்தக் கடனுக்கு நான் பொறுப்பாளியான காரணத்தால்) என் தந்தையின் கடனிலிருந்து சிறிதளவு தள்ளுபடி செய்து (குறைத்து)விடும்படி கடன்காரர்களிடம் நான் கேட்டுக்கொண்டேன். அவர்கள் (சிறிதளவும் தள்ளுபடி செய்ய) மறுத்து விட்டார்கள். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கடன்காரர்களிடம் எனக்காகப் பரிந்துரை செய்யும்படி கேட்டேன். (நபியவர்கள் அவ்வாறே பரிந்துரை செய்தும்) அவர்கள் (சிறிதளவும் தள்ளுபடி செய்ய) மறுத்துவிட்டனர்.

எனவே, நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் பேரீச்சங் கனிகளின் ஒவ்வொரு வகை யையும் தனித்தனியாகப் பிரித்து வையுங்கள். யிஇத்க் இப்னு ஸைத்’ என்னும் உயர் ரகப் பேரீச்சம் பழத்தைத் தனியாக வும் யிலீன்’ என்னும் தாழ்ந்த ரகப் பேரீச்சம் பழத்தைத் தனியாகவும் ‘அஜ்வா’ என்னும் சிறப்பு ரகப் பேரீச்சம் பழத்தைத் தனியாக வும் எடுத்துவையுங்கள். பின்னர் கடன் காரர்களை வரவழையுங்கள். பிறகு நான் உங்களிடம் வருகிறேன்” என்று சொன்னார் கள். நான் அவர்கள் கூறியபடியே செய்தேன்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் வந்து பேரீச்சங் குவியல்களின் அருகே அமர்ந்து கொண்டு (கடன்காரர்) ஒவ்வொருவருக்கும் அளந்து கொடுக்கலானார்கள். இறுதியில், நிறைவாக (அனைவருக்கும்) கொடுத்து முடித்தார்கள். பேரீச்சம் பழக்குவியல் யாருடைய கரமும் படாததைப் போல முன்பிருந்ததைப் போன்றே (சற்றும் குறையாமல்) அப்படியே இருந்தது.


அத்தியாயம் : 43
2406. وَغَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم عَلَى نَاضِحٍ لَنَا، فَأَزْحَفَ الْجَمَلُ فَتَخَلَّفَ عَلَىَّ فَوَكَزَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ خَلْفِهِ، قَالَ " بِعْنِيهِ وَلَكَ ظَهْرُهُ إِلَى الْمَدِينَةِ ". فَلَمَّا دَنَوْنَا اسْتَأْذَنْتُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي حَدِيثُ عَهْدٍ بِعُرْسٍ. قَالَ صلى الله عليه وسلم " فَمَا تَزَوَّجْتَ بِكْرًا أَمْ ثَيِّبًا ". قُلْتُ ثَيِّبًا، أُصِيبَ عَبْدُ اللَّهِ وَتَرَكَ جَوَارِيَ صِغَارًا، فَتَزَوَّجْتُ ثَيِّبًا تُعَلِّمُهُنَّ وَتُؤَدِّبُهُنَّ، ثُمَّ قَالَ " ائْتِ أَهْلَكَ ". فَقَدِمْتُ فَأَخْبَرْتُ خَالِي بِبَيْعِ الْجَمَلِ فَلاَمَنِي، فَأَخْبَرْتُهُ بِإِعْيَاءِ الْجَمَلِ، وَبِالَّذِي كَانَ مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَوَكْزِهِ إِيَّاهُ، فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم غَدَوْتُ إِلَيْهِ بِالْجَمَلِ، فَأَعْطَانِي ثَمَنَ الْجَمَلِ وَالْجَمَلَ وَسَهْمِي مَعَ الْقَوْمِ.
பாடம் : 18 கடனைச் சிறிது தள்ளுபடி செய்யு மாறு பரிந்துரைத்தல்
2406. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பேரீச்ச மரங்களுக்குத் தண்ணீர் இறைக்கும்) எங்கள் ஒட்டகம் ஒன்றின் மீது பயணம் செய்து நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் நான் கலந்துகொண்டேன். (திரும்பி வருகையில்) திடீரென ஒட்டகம் களைப்படைந்து என்னுடன் பின்தங்கி விட்டது. நபி (ஸல்) அவர்கள் அதன் பின்பகுதியில் அடித்து, ‘‘இதை எனக்கு நீ விற்றுவிடு. மதீனா சென்று சேரும்வரை இதன்மீது பயணம் செய்து நீ வரலாம்” என்று கூறினார்கள். நாங்கள் மதீனாவை நெருங்கியபோது, ‘‘அல்லாஹ்வின் தூதரே! சமீபத்தில்தான் எனக்குத் திருமணம் நடந்தது” என்று கூறி, நான் என் வீட்டிற்குச் செல்ல அனுமதி கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘யாரை மணம் முடித்தாய்? கன்னிப் பெண்ணையா? கன்னி கழிந்த பெண்ணையா?” என்று கேட்டார்கள். நான், ‘‘கன்னி கழிந்த பெண்ணையே மணமுடித்தேன். (ஏனெனில்,) என் தந்தை அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் (உஹுத் போரில் ஷஹீதாகக்) கொல்லப்பட்டுவிட்டார்கள்; (என் சகோதரிகளான) சிறு பெண் குழந்தை களை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார்கள். அவர்களுக்குக் கல்வி கற்றுக்கொடுப்பதற் காகவும் ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்து அனுபவமுள்ள ஒரு பெண் ணையே நான் மணமுடித்துக்கொண்டேன்” என்று கூறினேன்.

பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘‘உன் வீட்டாரிடம் போ!” என்று கூறினார்கள். நான் வீட்டிற்குச் சென்று என் தாய்மாமனி டம் ஒட்டகத்தை விற்றுவிட்டதைக் கூறினேன். அதற்கு அவர்கள் என்னைக் குறை கூறினார்கள். எனவே, நான் ஒட்டகம் களைத்துவிட்டதையும், நபி (ஸல்) அவர்கள் அதை (பின்பக்கத்தில்) அடித்ததையும் கூறினேன். நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்து சேர்ந்தபோது நான் காலை நேரத்தில் ஒட்டகத்துடன் அவர்களிடம் சென்றேன். அவர்கள் ஒட்டகத்தின் விலையையும் எனக்குக் கொடுத்து, ஒட்டகத்தையும் (எனக்கே) கொடுத்துவிட்டார்கள். மேலும், மக்களுக்குப் போர்ச் செல்வங்களை வழங்கும் போது அதில் எனது பங்கையும் (எனக்குக்) கொடுத்தார்கள்.

அத்தியாயம் : 43
2407. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، سَمِعْتُ ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنِّي أُخْدَعُ فِي الْبُيُوعِ. فَقَالَ "" إِذَا بَايَعْتَ فَقُلْ لاَ خِلاَبَةَ "". فَكَانَ الرَّجُلُ يَقُولُهُ.
பாடம் : 19 செல்வத்தை வீணாக்குவது தடை செய்யப்பட்டதாகும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் சீர்கேட்டை விரும்புவதில்லை. (2:205) சீர்கெடுப்பவர்களின் செயலை அல்லாஹ் சீராக்குவதில்லை. (10:81) (மத்யன் நகரவாசிகள்) ‘‘ஷுஐபே! எங்கள் மூதாதையர் வழிபட்டுவந்தவற்றை நாங்கள் விட்டுவிடவேண்டும் என்றா, அல்லது எங்களுடைய செல்வத்தை எங்கள் விருப்பப்படி பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்றா உம்முடைய தொழுகை உமக்குக் கற்றுத் தருகிறது?” என்று (ஏளனமாகக்) கூறி னார்கள். (11:87) அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள செல்வங்களை விவரமறியாதவர்(களாய் உள்ள அநாதை)களிடம் ஒப்படைக்காதீர்கள். (4:5) விவரமறியாதவரின் பொருளாதார நடவடிக்கைக்குத் தடை விதிக்கப்படும். மேலும், மோசடியும் தடை செய்யப் படும்.
2407. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நான் வியாபாரத்தில் (அடிக்கடி) ஏமாற்றப் பட்டுவிடுகிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘நீ வியாபாரம் செய்யும்போது (ஒரு பொருளை வாங்கும்போது, அல்லது விற்கும்போது) யிமோசடி கூடாது’ என்று சொல்லிவிடு” என்றார்கள். அதற்குப் பிறகு, அந்த மனிதர் அவ்வாறே கூறிக்கொண்டி ருந்தார்.


அத்தியாயம் : 43
2408. حَدَّثَنَا عُثْمَانُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ وَرَّادٍ، مَوْلَى الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ عُقُوقَ الأُمَّهَاتِ، وَوَأْدَ الْبَنَاتِ، وَمَنَعَ وَهَاتِ، وَكَرِهَ لَكُمْ قِيلَ وَقَالَ، وَكَثْرَةَ السُّؤَالِ، وَإِضَاعَةَ الْمَالِ "".
பாடம் : 19 செல்வத்தை வீணாக்குவது தடை செய்யப்பட்டதாகும். உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்: அல்லாஹ் சீர்கேட்டை விரும்புவதில்லை. (2:205) சீர்கெடுப்பவர்களின் செயலை அல்லாஹ் சீராக்குவதில்லை. (10:81) (மத்யன் நகரவாசிகள்) ‘‘ஷுஐபே! எங்கள் மூதாதையர் வழிபட்டுவந்தவற்றை நாங்கள் விட்டுவிடவேண்டும் என்றா, அல்லது எங்களுடைய செல்வத்தை எங்கள் விருப்பப்படி பயன்படுத்த எங்களுக்கு அதிகாரம் இருக்கக் கூடாது என்றா உம்முடைய தொழுகை உமக்குக் கற்றுத் தருகிறது?” என்று (ஏளனமாகக்) கூறி னார்கள். (11:87) அல்லாஹ் உங்களுக்கு வழங்கியுள்ள செல்வங்களை விவரமறியாதவர்(களாய் உள்ள அநாதை)களிடம் ஒப்படைக்காதீர்கள். (4:5) விவரமறியாதவரின் பொருளாதார நடவடிக்கைக்குத் தடை விதிக்கப்படும். மேலும், மோசடியும் தடை செய்யப் படும்.
2408. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

(பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும், (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப்பதையும், பிறரது செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக்கொள்வதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்துள்ளான். தேவையற்ற வீண் பேச்சுகள் பேசுவதையும் அதிகமாகக் கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வெறுத் துள்ளான்.

இதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 43
2409. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" كُلُّكُمْ رَاعٍ وَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَالإِمَامُ رَاعٍ، وَهْوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالرَّجُلُ فِي أَهْلِهِ رَاعٍ، وَهْوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، وَالْمَرْأَةُ فِي بَيْتِ زَوْجِهَا رَاعِيَةٌ وَهْىَ مَسْئُولَةٌ عَنْ رَعِيَّتِهَا، وَالْخَادِمُ فِي مَالِ سَيِّدِهِ رَاعٍ، وَهْوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ "". قَالَ فَسَمِعْتُ هَؤُلاَءِ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَحْسِبُ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" وَالرَّجُلُ فِي مَالِ أَبِيهِ رَاعٍ، وَهْوَ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ، فَكُلُّكُمْ رَاعٍ، وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ "".
பாடம் : 20 அடிமை (அல்லது பணியாள்) தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். உரிமை யாளரின் அனுமதியின்றி அவன் அதைக் கையாளக் கூடாது.
2409. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப் பாளரே. தமது பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தம் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தனது பொறுப்புக்கு உட்பட்ட வர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் உரிமையாளனின் உடைமை களுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தனது பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.

‘‘இவையனைத்தையும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான் கேட்டேன்” என்று கூறிவிட்டு இப்னு உமர் (ரலி) அவர்கள் மேலும் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள், ‘‘மனிதன் தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளன் ஆவான். அது குறித்தும் அவன் விசாரிக்கப்படுவான். ஆகவே, நீங்கள் ஒவ்வொருவரும் (ஏதேனும் ஒரு விஷயத்திற்குப்) பொறுப்பாளர்களே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்” என்றும் கூறியதாக நான் நினைக்கிறேன்.

அத்தியாயம் : 43