2251. حَدَّثَنَا مُحَمَّدٌ، حَدَّثَنَا يَعْلَى، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتِ اشْتَرَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم طَعَامًا مِنْ يَهُودِيٍّ بِنَسِيئَةٍ، وَرَهَنَهُ دِرْعًا لَهُ مِنْ حَدِيدٍ.
பாடம் : 5 முன்பணத்திற்குப் பிணையாக ஒன்றைப் பெறுவது6
2251. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு யூதரிடம் உணவுப் பொருளைக் கடனாக வாங்கினார்கள்; (அதற்காக) தமது இரும்புக் கவசத்தை அந்த யூதரிடம் அடைமானம் வைத்தார்கள்.

அத்தியாயம் : 35
2252. حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ تَذَاكَرْنَا عِنْدَ إِبْرَاهِيمَ الرَّهْنَ فِي السَّلَفِ فَقَالَ حَدَّثَنِي الأَسْوَدُ عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اشْتَرَى مِنْ يَهُودِيٍّ طَعَامًا إِلَى أَجَلٍ مَعْلُومٍ، وَارْتَهَنَ مِنْهُ دِرْعًا مِنْ حَدِيدٍ.
பாடம் : 6 முன்பண வணிகத்தில் அடைமானம் வைத்தல்
2252. சுலைமான் பின் மஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்களிடம், முன்பண வணிகத்தில் (சலஃப்) அடைமானம் வைப்பது தொடர் பாக விவாதித்துக்கொண்டோம். அப்போது அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்ததாகக் கூறி னார்கள்:

நபி (ஸல்) அவர்கள் யூதர் ஒருவரிடம் ஒரு குறிப்பிட்ட தவணைக்கு (கடனாக) உணவுப்பொருளை வாங்கினார்கள்; (அதற்காக) அந்த யூதர், நபி (ஸல்) அவர்களிடமிருந்து இரும்புக் கவசத்தை அடைமானமாகப் பெற்றார்.

அத்தியாயம் : 35
2253. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَثِيرٍ، عَنْ أَبِي الْمِنْهَالِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ وَهُمْ يُسْلِفُونَ فِي الثِّمَارِ السَّنَتَيْنِ وَالثَّلاَثَ، فَقَالَ "" أَسْلِفُوا فِي الثِّمَارِ فِي كَيْلٍ مَعْلُومٍ إِلَى أَجَلٍ مَعْلُومٍ "". وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا ابْنُ أَبِي نَجِيحٍ، وَقَالَ، "" فِي كَيْلٍ مَعْلُومٍ وَوَزْنٍ مَعْلُومٍ "".
பாடம் : 7 குறித்த தவணையில் (மட்டுமே) முன்பண வணிகம் (செல்லும்)7 இப்னு அப்பாஸ் (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்), அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) ஆகியோர் இவ்வாறு (முதலில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பொருளைத் தருவதாகக் கூறி விற்பதற்கே யிசலம்’ என்று சொல்லப்படும் என்று)தான் கூறுகின்றனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: குறிப்பிட்ட விலைக்கு குறிப்பிட்ட தவணைக்கு, குறிப்பிட்ட இன்ன உணவுப் பொருளுக்கு முன்பணம் கொடுப்பது தவறாகாது; ஆனால், பலன் உறுதிப்படாத பயிராக அது இருக்கலாகாது.
2253. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்தபோது, மக்கள் இரண்டு, மூன்று ஆண்டுகளில் பெற்றுக்கொள்வதாகக் கூறி, கனிகளுக்காக முன்பணம் கொடுத்து வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘குறிப்பிட்ட அளவுக்காகக் குறிப்பிட்ட தவணைக்கு (மட்டுமே) முன்பணம் கொடுங்கள்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல்லாஹ் பின் அல்வலீத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், யிகுறிப்பிட்ட அளவுக்கு, குறிப்பிட்ட எடைக்கு’ என இடம்பெற்றுள்ளது.


அத்தியாயம் : 35
2254. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ سُلَيْمَانَ الشَّيْبَانِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي مُجَالِدٍ، قَالَ أَرْسَلَنِي أَبُو بُرْدَةَ وَعَبْدُ اللَّهِ بْنُ شَدَّادٍ إِلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى وَعَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى فَسَأَلْتُهُمَا عَنِ السَّلَفِ،. فَقَالاَ كُنَّا نُصِيبُ الْمَغَانِمَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَكَانَ يَأْتِينَا أَنْبَاطٌ مِنْ أَنْبَاطِ الشَّأْمِ فَنُسْلِفُهُمْ فِي الْحِنْطَةِ وَالشَّعِيرِ وَالزَّبِيبِ إِلَى أَجَلٍ مُسَمًّى. قَالَ قُلْتُ أَكَانَ لَهُمْ زَرْعٌ، أَوْ لَمْ يَكُنْ لَهُمْ زَرْعٌ قَالاَ مَا كُنَّا نَسْأَلُهُمْ عَنْ ذَلِكَ.
பாடம் : 7 குறித்த தவணையில் (மட்டுமே) முன்பண வணிகம் (செல்லும்)7 இப்னு அப்பாஸ் (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி), ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்), அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) ஆகியோர் இவ்வாறு (முதலில் பணத்தைப் பெற்றுக் கொண்டு, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பொருளைத் தருவதாகக் கூறி விற்பதற்கே யிசலம்’ என்று சொல்லப்படும் என்று)தான் கூறுகின்றனர். இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: குறிப்பிட்ட விலைக்கு குறிப்பிட்ட தவணைக்கு, குறிப்பிட்ட இன்ன உணவுப் பொருளுக்கு முன்பணம் கொடுப்பது தவறாகாது; ஆனால், பலன் உறுதிப்படாத பயிராக அது இருக்கலாகாது.
2254. 2255 முஹம்மத் பின் அபீ முஜாலித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னை அபூபுர்தா (ரலி), அப்துல்லாஹ் பின் ஷத்தாத் (ரலி) ஆகிய இருவரும் அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி) அவர்களிடமும் அப்துல்லாஹ் பின் அபீஅஃவ்பா (ரலி) அவர்களிடமும் அனுப்பினார்கள். அவ்விருவரிடமும் நான் முன்பண வணிகம் (அஸ்ஸலஃப்) குறித்துக் கேட்டேன்.

அவ்விருவரும், ‘‘நாங்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுடன் போர்ச் செல்வங்களைப் பெற்றுவந்தோம்; அப்போது எங்களிடம் ‘ஷாம்’ (சிரியா) நாட்டைச் சேர்ந்த ‘அன்பாத்’ எனும் கலப்பின அரபியர் வருவர்; குறிப்பிட்ட தவணையில் (தந்துவிட வேண்டும் என்ற நிபந்தனையுடன்) கோதுமை, தொலி நீக்கப்படாத கோதுமை, ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுக்காக அவர்களிடம் முன்பணம் கொடுப்போம்” என்று கூறினார்கள்.

அப்போது நான், ‘‘அவர்களிடம் வேளாண்மை எதுவும் இருந்ததா, இல்லையா?” என்று கேட்டேன். அதற்கு அவ்விருவரும், ‘‘நாங்கள் இது பற்றி அவர்களிடம் கேட்ட தில்லை” என்றனர்.

அத்தியாயம் : 35
2256. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، أَخْبَرَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ كَانُوا يَتَبَايَعُونَ الْجَزُورَ إِلَى حَبَلِ الْحَبَلَةِ، فَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْهُ. فَسَّرَهُ نَافِعٌ أَنْ تُنْتَجَ النَّاقَةُ مَا فِي بَطْنِهَا.
பாடம் : 8 ஒட்டகத்தின் (வயிற்றிலுள்ள) குட்டியை வாங்க முன்பணம் கொடுத்தல்
2256. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அறியாமைக் கால) மக்கள் ‘ஹபலுல் ஹபலாவுக்காக’ (சினை ஒட்டகம் குட்டி ஈன்று, அந்தக் குட்டி சினையாகிப் பெறவிருக்கும் குட்டிக்காக) ஒட்டகத்தை விற்கவும் வாங்கவும் செய்துவந்தனர். இதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.8

அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள், ‘ஒட்டகம் தன் வயிற்றிலுள்ள குட்டியை ஈன்றெடுத்தல்’ என இதற்கு விளக்கம் அளித்தார்கள்.

™த்தியாயம் லி 36 : விலைக்கோள் உரிமை (™ஷ்ஷுஃப்ஆ)1

அத்தியாயம் : 35

2257. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ قَالَ قَضَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِالشُّفْعَةِ فِي كُلِّ مَا لَمْ يُقْسَمْ، فَإِذَا وَقَعَتِ الْحُدُودُ وَصُرِّفَتِ الطُّرُقُ فَلاَ شُفْعَةَ.
பாடம் : 1 பங்கிடப்படாத (கூட்டுப்) பொருளில்தான் விலைக்கோள் உரிமை உள்ளது; எல்லைகள் வகுக்கப்பட்டு விட்டால் விலைக்கோள் உரிமை கிடையாது.
2257. ஜாபிர் பின் ™ப்தில்லாஹ் (ரலி) ™வர்கள் கூறியதாவது:

‘‘விலைக்கோள் உரிமை என்பது, பிரிக்கப்படாத ஒவ்வொரு சொத்திலும்தான் உள்ளது. எல்லைகள் வகுக்கப்பட்டுப் பாதைகள் உருவாக்கப்பட்டுவிட்டால், விலைக்கோள் உரிமை கிடையாது” என நபி (ஸல்) ™வர்கள் தீர்ப்பளித்தார்கள்.2

அத்தியாயம் : 36
2258. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ مَيْسَرَةَ، عَنْ عَمْرِو بْنِ الشَّرِيدِ، قَالَ وَقَفْتُ عَلَى سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، فَجَاءَ الْمِسْوَرُ بْنُ مَخْرَمَةَ فَوَضَعَ يَدَهُ عَلَى إِحْدَى مَنْكِبَىَّ إِذْ جَاءَ أَبُو رَافِعٍ مَوْلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا سَعْدُ ابْتَعْ مِنِّي بَيْتَىَّ فِي دَارِكَ. فَقَالَ سَعْدٌ وَاللَّهِ مَا أَبْتَاعُهُمَا. فَقَالَ الْمِسْوَرُ وَاللَّهِ لَتَبْتَاعَنَّهُمَا. فَقَالَ سَعْدٌ وَاللَّهِ لاَ أَزِيدُكَ عَلَى أَرْبَعَةِ آلاَفٍ، مُنَجَّمَةٍ أَوْ مُقَطَّعَةٍ. قَالَ أَبُو رَافِعٍ لَقَدْ أُعْطِيتُ بِهَا خَمْسَمِائَةِ دِينَارٍ، وَلَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" الْجَارُ أَحَقُّ بِسَقَبِهِ "". مَا أَعْطَيْتُكَهَا بِأَرْبَعَةِ آلاَفٍ، وَأَنَا أُعْطَى بِهَا خَمْسَمِائَةِ دِينَارٍ. فَأَعْطَاهَا إِيَّاهُ.
பாடம் : 2 பிறருக்கு விற்பதற்குமுன், பங்காளிக்கு ™றிவித்தல் ‘‘விற்பதற்குமுன் பங்காளி ™னுமதி ™ளித்துவிட்டால், ™வருக்கு விலைக் கோள் உரிமை இல்லை” என்று ஹகம் பின் உ(த்)தைபா (ரஹ்) ™வர்கள் கூறுகிறார்கள். ‘‘தம் பங்காளியின் சொத்து பிறருக்கு விற்கப்படுவதை ஒருவர் ™றிந்திருந்து ™தை ™வர் ஆட்சேபிக்காதிருந்தால், ™வருக்கு விலைக்கோள் உரிமை இல்லை” என்று ஷ™பீ (ரஹ்) ™வர்கள் கூறுகிறார்கள்.
2258. ™ம்ர் பின் ™ஷ்ஷரீத் (ரஹ்) ™வர்கள் கூறியதாவது:

நான், ச™த் பின் ™பீவக்காஸ் (ரலி) ™வர்களிடம் தங்கியிருந்தேன். ™ப்போது மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ™வர்கள் வந்து, தமது கையை என் தோள்களில் ஒன்றில் வைத்தார்கள். ™ப்போது நபி (ஸல்) ™வர்களின் முன்னாள் ™டிமையான ™பூராஃபிஉ (ரலி) ™வர்கள் வந்து, ‘‘ச™தே! உங்கள் வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு ™றைகளை என்னிடமிருந்து வாங்கிக்கொள்வீராக!” எனக் கூறினார்கள்.

™தற்கு ச™த் (ரலி) ™வர்கள் ‘‘™ல்லாஹ்வின் மீதாணையாக! ™வற்றை நான் வாங்கமாட்டேன்” என்றார்கள். ™ருகிலிருந்த மிஸ்வர் (ரலி) ™வர்கள் (ச™த் (ரலி) ™வர்களிடம்), ‘‘™ல்லாஹ்வின் மீதாணையாக! நீர் வாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்” என்றார்கள். ™ப்போது ச™த் (ரலி) ™வர்கள், ‘‘™ல்லாஹ்வின் மீதாணை யாக! தவணை முறையில் நாலாயிரம் வெள்ளிக் காசுகளைவிட ™திகமாகத் தரமாட்டேன்” என்று கூறினார்கள்.

™தற்கு ™பூராஃபிஉ (ரலி) ™வர்கள், ‘‘ஐநூறு தங்கக் காசுகளுக்கு ™து கேட்கப்பட்டுள்ளது; யி™ண்டை வீட்டுக்காரர் ™ண்மையில் இருப்பதால் ™வரே ™திக உரிமை படைத்தவர்’ என்று நபி (ஸல்) ™வர்கள் கூறியதை நான் செவியுற்றிரா விட்டால், ஐநூறு தங்கக் காசுகளுக்குக் கேட்கப்பட்டதை நான்காயிரம் வெள்ளிக் காசுகளுக்கு உமக்கு விற்கமாட்டேன்” என்று கூறிவிட்டு, ச™துக்கே விற்றார்.

அத்தியாயம் : 36
2259. حَدَّثَنَا حَجَّاجٌ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنِي عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو عِمْرَانَ، قَالَ سَمِعْتُ طَلْحَةَ بْنَ عَبْدِ اللَّهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ لِي جَارَيْنِ، فَإِلَى أَيِّهِمَا أُهْدِي قَالَ "" إِلَى أَقْرَبِهِمَا مِنْكِ بَابًا "".
பாடம் : 3 ™ண்டை வீட்டாரில் நெருக்கமானவர் யார்?
2259. ஆயிஷா (ரலி) ™வர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) ™வர்களிடம்) ‘‘™ல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு ™ண்டை வீட்டார் உள்ளனர்; ™வர்களில் யாருக்கு நான் ™ன்பளிப்புச் செய்ய வேண்டும்?” என்று கேட்டேன். ™தற்கு நபி (ஸல்) ™வர்கள், ‘‘இருவரில் யார் வீட்டுவாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ ™வருக்கு” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 36

2260. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي بُرْدَةَ، قَالَ أَخْبَرَنِي جَدِّي أَبُو بُرْدَةَ، عَنْ أَبِيهِ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيَّ صلى الله عليه وسلم "" الْخَازِنُ الأَمِينُ الَّذِي يُؤَدِّي مَا أُمِرَ بِهِ طَيِّبَةً نَفْسُهُ أَحَدُ الْمُتَصَدِّقَيْنِ "".
பாடம் : 1 நல்ல மனிதரைக் கூலிக்கு அமர்த்துதல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்: என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரை (மூசாவை)க் கூலிக்கு அமர்த்திக்கொள்ளுங்கள்; (இவரைப் போன்ற) வலிமையுள்ளவரும் நம்பிக்கைக்குரியவரும்தான் நீங்கள் கூலிக்கு அமர்த்துவதற்குச் சிறந்தவராவார். (28:26) நேர்மையான காசாளர் பற்றி, ‘‘அவரும் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்” என நபிமொழியொன்று கூறுகிறது.2 பதவியை விரும்புபவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதவி வழங்கவில்லை.3
2260. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தை மனப்பூர்வமாக நிறைவேற்றக் கூடிய, நேர்மையான காசாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்.

இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 37
2261. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ قُرَّةَ بْنِ خَالِدٍ، قَالَ حَدَّثَنِي حُمَيْدُ بْنُ هِلاَلٍ، حَدَّثَنَا أَبُو بُرْدَةَ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ أَقْبَلْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَمَعِي رَجُلاَنِ مِنَ الأَشْعَرِيِّينَ، فَقُلْتُ مَا عَلِمْتُ أَنَّهُمَا يَطْلُبَانِ الْعَمَلَ. فَقَالَ "" لَنْ أَوْ لاَ نَسْتَعْمِلُ عَلَى عَمَلِنَا مَنْ أَرَادَهُ "".
பாடம் : 1 நல்ல மனிதரைக் கூலிக்கு அமர்த்துதல் உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின் றான்: அவ்விரு பெண்களில் ஒருவர் கூறினார்: என் அருமைத் தந்தையே! நீங்கள் இவரை (மூசாவை)க் கூலிக்கு அமர்த்திக்கொள்ளுங்கள்; (இவரைப் போன்ற) வலிமையுள்ளவரும் நம்பிக்கைக்குரியவரும்தான் நீங்கள் கூலிக்கு அமர்த்துவதற்குச் சிறந்தவராவார். (28:26) நேர்மையான காசாளர் பற்றி, ‘‘அவரும் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்” என நபிமொழியொன்று கூறுகிறது.2 பதவியை விரும்புபவருக்கு நபி (ஸல்) அவர்கள் பதவி வழங்கவில்லை.3
2261. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒருமுறை) நபி (ஸல்) அவர் களை நோக்கிச் சென்றேன். அப்போது என்னுடன் (என்) ‘அஷ்அரீ’ குலத்தைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். (அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் அரசாங்கப் பதவி கேட்டார்கள்; நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘இவ்விருவரும் பதவி கேட்பார்கள் என்பது (முன்பே) எனக்குத் தெரியாது” என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், எவர் பதவியை விரும்புகிறாரோ அவருக்கு நாம் ‘ஒருபோதும் பதவி கொடுக்க மாட்டோம்’ அல்லது ‘பதவி கொடுப்ப தில்லை’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 37
2262. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَكِّيُّ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ جَدِّهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَا بَعَثَ اللَّهُ نَبِيًّا إِلاَّ رَعَى الْغَنَمَ "". فَقَالَ أَصْحَابُهُ وَأَنْتَ فَقَالَ "" نَعَمْ كُنْتُ أَرْعَاهَا عَلَى قَرَارِيطَ لأَهْلِ مَكَّةَ "".
பாடம்: 2 சில ‘கீராத்'கள் கூலிக்காக ஆடு மேய்த்தல்
2262. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்தததில்லை” என்று (ஒருமுறை) கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ‘‘நீங்களுமா?” என்று கேட்டார்கள். ‘‘ஆம். மக்காவாசிகள் கொடுத்த சில ‘கீராத்’கள் கூலிக்காக நான் ஆடு மேய்த்திருக்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித் தார்கள்.4

அத்தியாயம் : 37
2263. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ وَاسْتَأْجَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ رَجُلاً مِنْ بَنِي الدِّيلِ ثُمَّ مِنْ بَنِي عَبْدِ بْنِ عَدِيٍّ هَادِيًا خِرِّيتًا ـ الْخِرِّيتُ الْمَاهِرُ بِالْهِدَايَةِ ـ قَدْ غَمَسَ يَمِينَ حِلْفٍ فِي آلِ الْعَاصِ بْنِ وَائِلٍ، وَهْوَ عَلَى دِينِ كُفَّارِ قُرَيْشٍ، فَأَمِنَاهُ فَدَفَعَا إِلَيْهِ رَاحِلَتَيْهِمَا، وَوَعَدَاهُ غَارَ ثَوْرٍ بَعْدَ ثَلاَثِ لَيَالٍ، فَأَتَاهُمَا بِرَاحِلَتَيْهِمَا، صَبِيحَةَ لَيَالٍ ثَلاَثٍ، فَارْتَحَلاَ، وَانْطَلَقَ مَعَهُمَا عَامِرُ بْنُ فُهَيْرَةَ، وَالدَّلِيلُ الدِّيلِيُّ فَأَخَذَ بِهِمْ أَسْفَلَ مَكَّةَ وَهْوَ طَرِيقُ السَّاحِلِ.
பாடம் : 3 அவசியம் ஏற்படும்போது அல்லது முஸ்லிம் (பணியாளர்)கள் கிடைக்காதபோது இணைவைப் பாளர்களை வேலைக்கு அமர்த்து தல் நபி (ஸல்) அவர்கள் கைபர் யூதர் களிடம் வேலை வாங்கியிருக்கிறார்கள்.
2263. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து மதீனாவுக்குச் சென்றபோது) நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் ‘பனுத் தீல்’ குலத்தைச் சேர்ந்தவரும் பின்னர் பனூ அப்தி பின் அதீ குலத்தைச் சேர்ந்தவருமான ஒரு மனிதரை பயண வழிகாட்டியாக இருக்கக் கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் திறமையான வழிகாட்டியாக இருந்தார். அம்மனிதர் ஆஸ் பின் வாயிலின் குடும்பத்தாருடன் நட்புறவு ஒப்பந்தம் செய்திருந்தார்; மேலும், அவர், குறைஷி இறைமறுப்பாளர்களின் மதத்தில் இருந்தார்.

நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அவரை நம்பித் தம்முடைய இரு ஊர்தி ஒட்டகங்களை அவரிடம் ஒப்படைத்து, மூன்று இரவுகள் கழித்து ‘ஸவ்ர்’ குகைக்கு வந்து சேருமாறு வாக்குறுதி வாங்கியிருந்தார்கள். அம்மனிதர் மூன்றாம் நாள் காலையில் அவ்விருவரின் ஊர்தி ஒட்டகங்களுடன் அவர்களிடம் வந்தார். உடனே நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (மதீனாவை நோக்கிப்) புறப்பட்டார்கள்.

அவர்களுடன் (அபூபக்ரின் முன்னாள் அடிமையான) ஆமிர் பின் ஃபுஹைரா என்பாரும் சேர்ந்துகொண்டார். ‘பனுத் தீல்’ கூட்டத்தைச் சேர்ந்த அந்த வழிகாட்டி அம்மூவரையும் மக்காவிற்குக் கீழே கடற் கரை வழியாக அழைத்துச் சென்றார்.

அத்தியாயம் : 37
2264. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، قَالَ ابْنُ شِهَابٍ فَأَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ وَاسْتَأْجَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ رَجُلاً مِنْ بَنِي الدِّيلِ، هَادِيًا خِرِّيتًا وَهْوَ عَلَى دِينِ كُفَّارِ قُرَيْشٍ، فَدَفَعَا إِلَيْهِ رَاحِلَتَيْهِمَا، وَوَاعَدَاهُ غَارَ ثَوْرٍ بَعْدَ ثَلاَثِ لَيَالٍ بِرَاحِلَتَيْهِمَا صُبْحَ ثَلاَثٍ.
பாடம் : 4 மூன்று நாட்கள், அல்லது ஒரு மாதம், அல்லது ஓராண்டுக்குப் பின் வேலை செய்வதற்காக, இப்போதே கூலியாளைப் பேசி வைத்துக்கொள்ளலாம்; முன்னர் அவர்கள் பேசிக்கொண்ட நிபந் தனைகள் உரிய நேரம் வந்ததும் செல்லுபடியாகும்.
2264. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (மதீனா பயணத்தில்) ‘பனுத் தீல்’ குலத்தைச் சேர்ந்த ஒருவரை (பயண வழிகாட்டுவதற்காகக்) கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் குறைஷி இறைமறுப்பாளர்களின் மதத்தில் இருந்தார். நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் தம்முடைய இரு ஊர்தி ஒட்டகங்களை அவரிடம் கொடுத்து ‘‘மூன்று இரவுகள் கழித்து (எங்கள் ஒட்டகங்களுடன்) ‘ஸவ்ர்’ குகைக்கு வர வேண்டும்” என்று அவரிடம் வாக்குறுதி வாங்கினார்கள். அவ்வாறே அவரும் மூன்றாம் நாள் காலையில் அவர்களின் ஊர்தி ஒட்டகங்களுடன் அவர்களிடம் வந்தார்.

அத்தியாயம் : 37
2265. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ صَفْوَانَ بْنِ يَعْلَى، عَنْ يَعْلَى بْنِ أُمَيَّةَ ـ رضى الله عنه ـ قَالَ غَزَوْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم جَيْشَ الْعُسْرَةِ فَكَانَ مِنْ أَوْثَقِ أَعْمَالِي فِي نَفْسِي، فَكَانَ لِي أَجِيرٌ، فَقَاتَلَ إِنْسَانًا، فَعَضَّ أَحَدُهُمَا إِصْبَعَ صَاحِبِهِ، فَانْتَزَعَ إِصْبَعَهُ، فَأَنْدَرَ ثَنِيَّتَهُ فَسَقَطَتْ، فَانْطَلَقَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَهْدَرَ ثَنِيَّتَهُ وَقَالَ " أَفَيَدَعُ إِصْبَعَهُ فِي فِيكَ تَقْضَمُهَا ـ قَالَ أَحْسِبُهُ قَالَ ـ كَمَا يَقْضَمُ الْفَحْلُ ".
பாடம் : 5 அறப்போரில் (பணியாற்றுவதற் காகக்) கூலியாளை நியமிப்பது5
2265. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் சிரமப் (போர் எனும் தபூக்) போரில் கலந்து கொண்டேன். என்னைப் பொறுத்தவரை அந்தப் போர்தான் என் அறங்களிலேயே மிகவும் வலுவானதாகும். என்னிடம் கூலியாள் ஒருவர் இருந்தார். அவர் ஒரு மனிதருடன் சண்டையிட்டார். அப்போது (அவர்களில்) ஒருவர், மற்றவரின் விரலைக் கடித்துவிட்டார். கடிபட்டவர் விரலை இழுத்தபோது, கடித்தவரின் முன்பல்லை உடைத்துவிட்டார். பல் கீழே விழுந்தது.

பல்லுடைக்கப்பட்டவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள் ‘‘அதற்கு எந்த நஷ்டஈடும் இல்லை” என்று தீர்ப்பளித்துவிட்டு, அவரிடம், ‘‘கடா ஒட்டகம் மெல்லுவதைப் போன்று, நீர் மெல்லுவதற்காக அவர் உமது வாயில் தமது விரலைக் கொடுத்துக் கொண்டு இருப்பாரா?” என்று கேட் டார்கள்.


அத்தியாயம் : 37
2266. قَالَ ابْنُ جُرَيْجٍ وَحَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي مُلَيْكَةَ، عَنْ جَدِّهِ، بِمِثْلِ هَذِهِ الصِّفَةِ أَنَّ رَجُلاً، عَضَّ يَدَ رَجُلٍ، فَأَنْدَرَ ثَنِيَّتَهُ، فَأَهْدَرَهَا أَبُو بَكْرٍ رضى الله عنه.
பாடம் : 5 அறப்போரில் (பணியாற்றுவதற் காகக்) கூலியாளை நியமிப்பது5
2266. ஸுஹைர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இன்னொருவரின் கையைக் கடித்துவிட்டார்; கடிபட்டவர் (கையை உருவியபோது) கடித்தவரின் முன்பல்லை உடைத்துவிட்டார். அதற்கு எந்த நஷ்ட ஈடும் தரத் தேவையில்லை என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.

அத்தியாயம் : 37
2267. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي يَعْلَى بْنُ مُسْلِمٍ، وَعَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، يَزِيدُ أَحَدُهُمَا عَلَى صَاحِبِهِ، وَغَيْرُهُمَا قَالَ قَدْ سَمِعْتُهُ يُحَدِّثُهُ عَنْ سَعِيدٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ حَدَّثَنِي أُبَىُّ بْنُ كَعْبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" فَانْطَلَقَا فَوَجَدَا جِدَارًا يُرِيدُ أَنْ يَنْقَضَّ "". قَالَ سَعِيدٌ بِيَدِهِ هَكَذَا، وَرَفَعَ يَدَيْهِ فَاسْتَقَامَ، قَالَ يَعْلَى حَسِبْتُ أَنَّ سَعِيدًا قَالَ. فَمَسَحَهُ بِيَدِهِ فَاسْتَقَامَ {قَالَ} ""لَوْ شِئْتَ لاَتَّخَذْتَ عَلَيْهِ أَجْرًا "". قَالَ سَعِيدٌ أَجْرًا نَأْكُلُهُ.
பாடம் : 6 ஒருவரைக் கூலிக்கு அமர்த்திய போது (வேலை செய்யும்) காலத் தைக் குறிப்பிட்டு, வேலையைக் குறிப்பிடாமல் இருத்தல் அல்லாஹ் கூறுகின்றான் : (அப்போது அப்பெண்களின் தந்தை மூசா (அலை) அவர்களிடம்) கூறினார்: நீர் என்னிடம் எட்டு ஆண்டுகள் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில், என்னுடைய இவ்விரு புதல்வியரில் ஒருவரை உமக்கு மணமுடித்துக்கொடுக்க நான் விரும்புகிறேன். ஆயினும், நீர் பத்து ஆண்டுகளைப் பூர்த்தி செய்தால், அது உம்மைப் பொறுத்தது. நான் உமக்குச் சிரமத்தைக் கொடுக்க விரும்பவில்லை. இறைவன் நாடினால் என்னை நல்லவராகக் காண்பீர். அதற்கு மூசா கூறினார்: இதுவே எனக்கும் உங்களுக்கும் இடையிலான (உடன்பாடு) அம்சமாகும். இவ்விரு தவணைகளில் நான் எதை நிறைவேற்றினாலும் என்மீது குற்றமில்லை. நாம் பேசிக்கொள்வதற்கு அல்லாஹ்வே சாட்சியாக இருக்கிறான். (28:27,28)6 (இங்கு ‘வேலை செய்ய வேண்டும்’ என்பதைக் குறிக்க மூலத்தில்) ‘தஃஜுர’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘(உன்னைக்) கூலியாகத் தர வேண்டும்’ என்பது பொருளாகும். ஆறுதல் கூறும்போது ‘‘உனக்கு அல்லாஹ் பிரதிபலன் தருவானாக!” (ஆஜரக்க) என்று சொல்வதுண்டு. பாடம் : 7 கீழே விழும் நிலையிலுள்ள சுவரை (செப்பனிட்டுத் தூக்கி) நிறுத்து வதற்காகப் பணியாளைக் கூலிக்கு அமர்த்தலாம்.
2267. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மூசா (அலை), களிர் (அலை) ஆகிய) இருவரும் (ஒரு கிராமத்திற்குச்) சென்றார் கள். (அவர்களுக்கு அவ்வூரார் உணவளிக்க மறுத்துவிட்டனர்.) அங்கு ஒரு சுவர் கீழே விழலாமா என யோசித் துக்கொண்டிருந்தது. உடனே (களிர்) தமது கையை உயர்த்தினார். அது நேராக நின்று விட்டது. அப்போது மூசா (அலை) அவர்கள் களிர் (அலை) அவர்களிடம், ‘‘நீர் விரும்பியிருந்தால் இதற்குக் கூலி வாங்கி யிருக்கலாமே!” என்று கூறினார்கள்.

இதை உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

‘‘களிர் (அலை) அவர்கள் தமது கையை உயர்த்தினார்கள்” என்று சொன்ன போது, அறிவிப்பாளர் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் (களிர் (அலை) அவர்களைப் போல) கையை உயர்த்திக் காட்டி, ‘இப்படி’ என்று கூறினார்கள்.

‘‘சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், ‘களிர் (அலை) அவர்கள் சுவரைத் தமது கரத்தால் தடவ, அதுநேராக நின்றுவிட்டது’ என்று கூறியதாகவே நான் நினைக்கிறேன்” என்று அறிவிப்பாளர் யஅலா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

மேலும், சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(நீர் விரும்பியிருந்தால் இதற்குக்) கூலி பெற்றிருக்கலாம்; அதை நாம் (நமது உணவுக்குப்) பயன்படுத்தியிருக்கலாம் (என்று மூசா (அலை) அவர்கள் கூறினார்கள்).

அத்தியாயம் : 37
2268. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَثَلُكُمْ وَمَثَلُ أَهْلِ الْكِتَابَيْنِ كَمَثَلِ رَجُلٍ اسْتَأْجَرَ أُجَرَاءَ فَقَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ غُدْوَةَ إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ فَعَمِلَتِ الْيَهُودُ، ثُمَّ قَالَ مَنْ يَعْمَلُ لِي مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى صَلاَةِ الْعَصْرِ عَلَى قِيرَاطٍ فَعَمِلَتِ النَّصَارَى ثُمَّ، قَالَ مَنْ يَعْمَلُ لِي مِنَ الْعَصْرِ إِلَى أَنْ تَغِيبَ الشَّمْسُ عَلَى قِيرَاطَيْنِ فَأَنْتُمْ هُمْ، فَغَضِبَتِ الْيَهُودُ وَالنَّصَارَى، فَقَالُوا مَا لَنَا أَكْثَرَ عَمَلاً، وَأَقَلَّ عَطَاءً قَالَ هَلْ نَقَصْتُكُمْ مِنْ حَقِّكُمْ قَالُوا لاَ. قَالَ فَذَلِكَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ "".
பாடம் : 8 நண்பகல்வரை கூலிக்கு அமர்த்துதல்
2268. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

உங்களுக்கும் (உங்களுக்குமுன்) வேதம் வழங்கப்பட்ட இரண்டு சமுதாயத் தாருக்கும் உவமையானது, ஒரு மனிதரால் வேலைக்கு அமர்த்தப்பட்ட கூலியாட்களின் நிலையாகும். ‘‘ஒரு கீராத் கூலிக்குக் காலையிலிருந்து நண்பகல்வரை எனக்கு வேலை செய்பவர் யார்?” என்று அம்மனிதர் கேட்டார். யூதர்கள் (அவ்வாறு) வேலை செய்தார்கள்.

பிறகு, ‘‘நண்பகலிலிருந்து அஸ்ர் தொழுகைவரை ஒரு கீராத் கூலிக்கு எனக்காக வேலை செய்பவர் யார்?” என்று அவர் கேட்டார். கிறித்தவர்கள் (அவ்வாறு) வேலை செய்தார்கள்.

பிறகு, ‘‘அஸ்ரிலிருந்து சூரியன் மறையும்வரை இரண்டு ‘கீராத்’கள் கூலிக்கு எனக்காக வேலை செய்பவர் யார்?” என்று அவர் கேட்டார். (முஸ்லிம்களான) நீங்கள்தான் அ(ப்படி வேலை செய்த)வர்கள். இதனால் யூதர்களும் கிறித்தவர் களும் கோபமுற்று, ‘‘நாங்கள் செய்த வேலை அதிகம்; கூலியோ குறைவு; ஏன்?” என்று கேட்டனர்.

அதற்கு அவர், ‘‘உங்களுக்கு உரியதை நான் குறைத்திருக்கிறேனா?” என்று கேட்டார். அவர்கள் ‘‘இல்லை” என்றனர். ‘‘சிலருக்கு நான் அதிகமாகக் கொடுப்பது எனது (தனிப்பட்ட) அருளாகும்; நான் விரும்பியவருக்கு அதைக் கொடுப்பேன்” என்று அவர் கூறினார்.7

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 37
2269. حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ حَدَّثَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّمَا مَثَلُكُمْ وَالْيَهُودُ وَالنَّصَارَى كَرَجُلٍ اسْتَعْمَلَ عُمَّالاً فَقَالَ مَنْ يَعْمَلُ لِي إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ فَعَمِلَتِ الْيَهُودُ عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ، ثُمَّ عَمِلَتِ النَّصَارَى عَلَى قِيرَاطٍ قِيرَاطٍ، ثُمَّ أَنْتُمُ الَّذِينَ تَعْمَلُونَ مِنْ صَلاَةِ الْعَصْرِ إِلَى مَغَارِبِ الشَّمْسِ عَلَى قِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، فَغَضِبَتِ الْيَهُودُ وَالنَّصَارَى وَقَالُوا نَحْنُ أَكْثَرُ عَمَلاً وَأَقَلُّ عَطَاءً، قَالَ هَلْ ظَلَمْتُكُمْ مِنْ حَقِّكُمْ شَيْئًا قَالُوا لاَ. فَقَالَ فَذَلِكَ فَضْلِي أُوتِيهِ مَنْ أَشَاءُ "".
பாடம் : 9 அஸ்ர் (மாலை) தொழுகைவரை கூலிக்கு அமர்த்துதல்
2269. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கும் யூதர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கும் உவமையானது, ஒரு மனிதர் வேலை வாங்கிய பணியாளர்களின் நிலையாகும். ‘‘ஒவ்வொரு கீராத் கூலிக்கு (காலையிலிருந்து) நண்பகல்வரை எனக்காக வேலை செய்பவர் யார்?” என்று அம் மனிதர் கேட்டார். யூதர்கள் ஒவ்வொரு கீராத் கூலிக்காக வேலை செய்தார்கள்; பிறகு கிறித்தவர்கள் ஒவ்வொரு கீராத் கூலிக்காக வேலை செய்தார்கள். பிறகு அஸ்ரிலிருந்து சூரியன் மறையும்வரை, இரண்டிரண்டு கீராத்கள் கூலிக்கு (முஸ்லிம்களாகிய) நீங்கள்தான் வேலை செய்கிறீர்கள்.

எனவே, யூதர்களும் கிறித்தவர்களும் கோபமுற்று, ‘‘நாங்கள் வேலை செய்தது அதிகம்; கூலியோ குறைவு” என்றனர். அதற்கு அவர், ‘‘உங்கள் உரிமையில் எதையேனும் குறைத்து உங்களுக்கு நான் அநீதியிழைத்தேனா?” என்று கேட்டார். அவர்கள், ‘‘இல்லை” என்றனர். ‘‘சிலருக்கு நான் அதிகமாகக் கொடுப்பது எனது தனிப்பட்ட அருளாகும்; நான் விரும்பியவருக்கு அதைக் கொடுப்பேன்” என்று அம்மனிதர் கூறினார்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.

அத்தியாயம் : 37