1988. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ مَالِكٍ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ، قَالَ حَدَّثَنِي عُمَيْرٌ، مَوْلَى أُمِّ الْفَضْلِ أَنَّ أُمَّ، الْفَضْلِ حَدَّثَتْهُ ح وَحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ عُمَيْرٍ مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ الْعَبَّاسِ عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ أَنَّ نَاسًا تَمَارَوْا عِنْدَهَا يَوْمَ عَرَفَةَ فِي صَوْمِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ بَعْضُهُمْ هُوَ صَائِمٌ. وَقَالَ بَعْضُهُمْ لَيْسَ بِصَائِمٍ. فَأَرْسَلَتْ إِلَيْهِ بِقَدَحِ لَبَنٍ وَهْوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ فَشَرِبَهُ.
பாடம் : 65 அரஃபா (துல்ஹிஜ்ஜா ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்றல்50
1988. உம்முல் ஃபள்ல் பின்த் அல் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘நபி (ஸல்) அவர்கள் அரஃபா (துல்ஹிஜ்ஜா ஒன்பதாம்) நாளில் நோன்பு நோற்றிருக்கிறார்களா?' என்பது குறித்து என்னருகே சிலர் விவாதித்தனர். சிலர் ‘அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்கள்' என்று கூறினர். வேறுசிலர் ‘நோன்பு நோற்றிருக்கவில்லை' என்றார்கள். அப்போது ஒட்டகத்தில் அமர்ந்திருந்த நபி (ஸல்) அவர்களிடம் நான் பால் பாத்திரத்தைக் கொடுத்து அனுப்பினேன்; அதை அவர்கள் அருந்தினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 30
1989. حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ ـ أَوْ قُرِئَ عَلَيْهِ ـ قَالَ أَخْبَرَنِي عَمْرٌو، عَنْ بُكَيْرٍ، عَنْ كُرَيْبٍ، عَنْ مَيْمُونَةَ ـ رضى الله عنها ـ أَنَّ النَّاسَ، شَكُّوا فِي صِيَامِ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ عَرَفَةَ، فَأَرْسَلَتْ إِلَيْهِ بِحِلاَبٍ وَهْوَ وَاقِفٌ فِي الْمَوْقِفِ، فَشَرِبَ مِنْهُ، وَالنَّاسُ يَنْظُرُونَ.
பாடம் : 65 அரஃபா (துல்ஹிஜ்ஜா ஒன்பதாவது) நாளில் நோன்பு நோற்றல்50
1989. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அரஃபா நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கிறார்களா என்பது தொடர்பாக மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. நான் அரஃபாவில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்களிடம் பால் பாத்திரத் தைக் கொடுத்தனுப்பினேன். மக்களெல் லாரும் பார்த்துக்கொண்டிருக்க அதை நபி (ஸல்) அவர்கள் அருந்தினார்கள்.

அத்தியாயம் : 30
1990. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي عُبَيْدٍ، مَوْلَى ابْنِ أَزْهَرَ قَالَ شَهِدْتُ الْعِيدَ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ ـ رضى الله عنه ـ فَقَالَ هَذَانِ يَوْمَانِ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ صِيَامِهِمَا يَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ، وَالْيَوْمُ الآخَرُ تَأْكُلُونَ فِيهِ مِنْ نُسُكِكُمْ. قَالَ أَبُو عَبْد اللَّهِ قَالَ ابْنُ عُيَيْنَةَ مَنْ قَالَ مَوْلَى ابْنِ أَزْهَرَ فَقَدْ أَصَابَ وَمَنْ قَالَ مَوْلَى عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فَقَدْ أَصَابَ
பாடம் : 66 நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) அன்று நோன்பு நோற்றல்51
1990. அபூஉபைத் சஅத் பின் உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு பெருநாளில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுடன் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

இவ்விரு நாட்களிலும் நோன்பு நோற்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ஒன்று, உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) ஆகும்; மற்றொன்று, உங்கள் குர்பானி பிராணிகளின் இறைச்சியை நீங்கள் உண் ணும் (ஹஜ்ஜு) பெருநாள் ஆகும்.

அபூஅப்தில்லாஹ் புகாரீ (ஆகிய நான்) கூறுகிறேன்:

இதன் அறிவிப்பாளரான அபூஉபைத் (ரஹ்) அவர்கள், அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை என்றும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களின் முன்னாள் அடிமை என்றும் (இரு விதமாகச்) சொல்வர். இரண்டும் சரிதான்லிஎன்று இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (அபூஉபைத் அவர்களின் வாரிசுரிமை இவ்விருவருக்கும் இருந்ததே இதற்குக் காரணம்.)


அத்தியாயம் : 30
1991. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ يَحْيَى، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ صَوْمِ يَوْمِ الْفِطْرِ وَالنَّحْرِ، وَعَنِ الصَّمَّاءِ، وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ. وَعَنْ صَلاَةٍ، بَعْدَ الصُّبْحِ وَالْعَصْرِ.
பாடம் : 66 நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) அன்று நோன்பு நோற்றல்51
1991. 1992 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜு பெருநாள் ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்பதையும், இரு தோள்களில் ஒன்றை மட்டும் மறைத்து, மற்றொன்று வெளியே தெரியும் வண்ணம் ஒரு துணியைப் போர்த்திக்கொள்வதையும், ஓர் ஆடையை சுற்றிக்கொண்டு முழங்கால்களைக் கட்டி அமர்வதையும், சுப்ஹுக்குப் பிறகும் அஸ்ர் தொழுகைக்குப் பிறகும் தொழு வதையும் நபி (ஸல்) அவர்கள் தடுத் தார்கள்.

அத்தியாயம் : 30
1993. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ دِينَارٍ، عَنْ عَطَاءِ بْنِ مِينَا، قَالَ سَمِعْتُهُ يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ يُنْهَى عَنْ صِيَامَيْنِ، وَبَيْعَتَيْنِ الْفِطْرِ، وَالنَّحْرِ،، وَالْمُلاَمَسَةِ، وَالْمُنَابَذَةِ،.
பாடம் : 67 ஹஜ்ஜு பெருநாள் (ஈதுல் அள்ஹா) அன்று நோன்பு நோற்றல்
1993. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நோன்புப் பெருநாள் அன்றும், ஹஜ்ஜு பெருநாள் அன்றும் நோன்பு நோற்பதும் பொருளைத் தொடல் (முலாமசா), பொருளை விட்டெறிதல் (முனாபதா) ஆகிய இரண்டு வியாபார முறைகளும் தடை செய்யப்பட்டுள் ளன.52


அத்தியாயம் : 30
1994. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُعَاذٌ، أَخْبَرَنَا ابْنُ عَوْنٍ، عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ فَقَالَ رَجُلٌ نَذَرَ أَنْ يَصُومَ يَوْمًا، قَالَ أَظُنُّهُ قَالَ الاِثْنَيْنِ، فَوَافَقَ يَوْمَ عِيدٍ. فَقَالَ ابْنُ عُمَرَ أَمَرَ اللَّهُ بِوَفَاءِ النَّذْرِ، وَنَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم عَنْ صَوْمِ هَذَا الْيَوْمِ.
பாடம் : 67 ஹஜ்ஜு பெருநாள் (ஈதுல் அள்ஹா) அன்று நோன்பு நோற்றல்
1994. ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘ஒருவர் ஒருநாள் நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருந்தார்லி அந்த மனிதர் ‘‘(அவர்) திங்கட்கிழமை யன்று (நோன்பு நோற்க நேர்ச்சை செய்திருந்தார்)” என்று கூறியதாக நான் நினைக்கிறேன்லி அவர் குறிப்பிட்ட அந்த நாள் பெருநாளாக அமைந்துவிட்டது” என்று சொன்னார்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘‘நேர்ச்சையை நிறைவேற்றுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்; நபி (ஸல்) அவர்கள் இந்த(ப் பெருநாள்) தினத் தில் நோன்பு நோற்பதைத் தடை செய்திருக்கிறார்கள்” என்று கூறினார்கள்.53


அத்தியாயம் : 30
1995. حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عُمَيْرٍ، قَالَ سَمِعْتُ قَزَعَةَ، قَالَ سَمِعْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ـ رضى الله عنه ـ وَكَانَ غَزَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم ثِنْتَىْ عَشْرَةَ غَزْوَةً قَالَ سَمِعْتُ أَرْبَعًا مِنَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَعْجَبْنَنِي قَالَ "" لاَ تُسَافِرِ الْمَرْأَةُ مَسِيرَةَ يَوْمَيْنِ إِلاَّ وَمَعَهَا زَوْجُهَا أَوْ ذُو مَحْرَمٍ، وَلاَ صَوْمَ فِي يَوْمَيْنِ الْفِطْرِ وَالأَضْحَى، وَلاَ صَلاَةَ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ، وَلاَ بَعْدَ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ، وَلاَ تُشَدُّ الرِّحَالُ إِلاَّ إِلَى ثَلاَثَةِ مَسَاجِدَ مَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِ الأَقْصَى، وَمَسْجِدِي هَذَا "".
பாடம் : 67 ஹஜ்ஜு பெருநாள் (ஈதுல் அள்ஹா) அன்று நோன்பு நோற்றல்
1995. நபி (ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்ட அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னைக் கவர்ந்தன. அவை: ஒரு பெண் தன் கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத நெருங்கிய உறவினர் (மஹ்ரம்) ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாட்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது; நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா) ஆகிய இரு நாட்களில் நோன்பு நோற்கக் கூடாது; சுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸ்ருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது.

(அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம் (மக்கா), பைத்துல் முகத்தஸ் (ஜெருசலேம்), எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்குத் தவிர வேறெங்கும் (புனிதப்) பயணம் மேற்கொள்ளக் கூடாது.

அத்தியாயம் : 30
1996. وَقَالَ لِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي كَانَتْ، عَائِشَةُ ـ رضى الله عنها ـ تَصُومُ أَيَّامَ مِنًى، وَكَانَ أَبُوهَا يَصُومُهَا.
பாடம் : 68 (துல்ஹஜ் மாதம் 11, 12, 13 ஆகிய) ‘அய்யாமுத் தஷ்ரீக்' நாட்களில் நோன்பு நோற்றல்54
1996. யஹ்யா பின் சயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘‘ஆயிஷா (ரலி) அவர்கள் மினாவில் தங்கக்கூடிய (தஷ்ரீக் உடைய) நாட்களில் நோன்பு நோற்பார்கள்” என்று தம் தந்தை உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாக ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

ஹிஷாமின் தந்தை உர்வா (ரஹ்) அவர்களும் அந்த நாட்களில் நோன்பு நோற்பார்கள்.55


அத்தியாயம் : 30
1997. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عِيسَى، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ،. وَعَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهم ـ قَالاَ لَمْ يُرَخَّصْ فِي أَيَّامِ التَّشْرِيقِ أَنْ يُصَمْنَ، إِلاَّ لِمَنْ لَمْ يَجِدِ الْهَدْىَ.
பாடம் : 68 (துல்ஹஜ் மாதம் 11, 12, 13 ஆகிய) ‘அய்யாமுத் தஷ்ரீக்' நாட்களில் நோன்பு நோற்றல்54
1997. 1998 ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) ஆகியோர் கூறியதாவது:

குர்பானிப் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் ‘தஷ்ரீக்' உடைய நாட் களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்பட வில்லை.


அத்தியாயம் : 30
1999. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ الصِّيَامُ لِمَنْ تَمَتَّعَ بِالْعُمْرَةِ إِلَى الْحَجِّ، إِلَى يَوْمِ عَرَفَةَ، فَإِنْ لَمْ يَجِدْ هَدْيًا وَلَمْ يَصُمْ صَامَ أَيَّامَ مِنًى. وَعَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ مِثْلَهُ. تَابَعَهُ إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنِ ابْنِ شِهَابٍ.
பாடம் : 68 (துல்ஹஜ் மாதம் 11, 12, 13 ஆகிய) ‘அய்யாமுத் தஷ்ரீக்' நாட்களில் நோன்பு நோற்றல்54
1999. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘தமத்துஉ' முறையில் இஹ்ராம் கட்டியவரே அரஃபா நாள்வரை நோன்பு நோற்கலாம். குர்பானிப் பிராணியும் கிடைக்கவில்லை; நோன்பும் நோற்க வில்லை என்றால் மினாவில் தங்கும் நாட்களில் நோன்பு நோற்கலாம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்களும் இவ்வாறு கூறியதாக உர்வா (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 30
2000. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدٍ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ عَاشُورَاءَ "" إِنْ شَاءَ صَامَ "".
பாடம் : 69 ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றல்56
2000. நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:

ஆஷூரா நாளில் விரும்பினால் நோன்பு நோற்கலாம்!

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


அத்தியாயம் : 30
2001. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، أَنَّ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَمَرَ بِصِيَامِ يَوْمِ عَاشُورَاءَ، فَلَمَّا فُرِضَ رَمَضَانُ كَانَ مَنْ شَاءَ صَامَ، وَمَنْ شَاءَ أَفْطَرَ.
பாடம் : 69 ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றல்56
2001. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டிருந்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் விரும்பிய வர் (ஆஷூரா தினத்தில்) நோன்பு நோற்றார்; விரும்பாதவர் விட்டுவிட்டார்.


அத்தியாயம் : 30
2002. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ يَوْمُ عَاشُورَاءَ تَصُومُهُ قُرَيْشٌ فِي الْجَاهِلِيَّةِ، وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصُومُهُ، فَلَمَّا قَدِمَ الْمَدِينَةَ صَامَهُ، وَأَمَرَ بِصِيَامِهِ، فَلَمَّا فُرِضَ رَمَضَانُ تَرَكَ يَوْمَ عَاشُورَاءَ، فَمَنْ شَاءَ صَامَهُ، وَمَنْ شَاءَ تَرَكَهُ.
பாடம் : 69 ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றல்56
2002. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் குறைஷியர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அந்நாளில் நோன்பு நோற்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது, தாமும் அந்நாளில் நோன்பு நோற்று (மக்களையும்) நோன்பு நோற்குமாறு பணித்தார்கள்; ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விட்டுவிட்டார்கள். விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்றார்; விரும்பாதவர் அதை விட்டு விட்டார்.


அத்தியாயம் : 30
2003. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ ـ رضى الله عنهما ـ يَوْمَ عَاشُورَاءَ عَامَ حَجَّ عَلَى الْمِنْبَرِ يَقُولُ يَا أَهْلَ الْمَدِينَةِ، أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ "" هَذَا يَوْمُ عَاشُورَاءَ، وَلَمْ يُكْتَبْ عَلَيْكُمْ صِيَامُهُ، وَأَنَا صَائِمٌ، فَمَنْ شَاءَ فَلْيَصُمْ وَمَنْ شَاءَ فَلْيُفْطِرْ "".
பாடம் : 69 ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றல்56
2003. ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்ற வருடம் ஆஷூரா நாளில் சொற்பொழிவுமேடை (மிம்பர்)மீது நின்றுகொண்டு, ‘‘மதீனா வாசிகளே! உங்கள் அறிஞர்கள் எங்கே? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘இது ஆஷூரா நாளாகும். இதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்களுக்குக் கடமையாக்கவில்லை. நான் நோன்பு நோற்றிருக்கிறேன். விரும்பியவர் நோன்பு நோற்கட்டும்; விரும்பாதவர் விட்டுவிடட்டும்' என்று கூறியதை நான் செவியுற்றுள்ளேன்” என்று சொன்னார்கள்.57


அத்தியாயம் : 30
2004. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا أَيُّوبُ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمَدِينَةَ، فَرَأَى الْيَهُودَ تَصُومُ يَوْمَ عَاشُورَاءَ، فَقَالَ "" مَا هَذَا "". قَالُوا هَذَا يَوْمٌ صَالِحٌ، هَذَا يَوْمٌ نَجَّى اللَّهُ بَنِي إِسْرَائِيلَ مِنْ عَدُوِّهِمْ، فَصَامَهُ مُوسَى. قَالَ "" فَأَنَا أَحَقُّ بِمُوسَى مِنْكُمْ "". فَصَامَهُ وَأَمَرَ بِصِيَامِهِ.
பாடம் : 69 ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றல்56
2004. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். ‘‘இது என்ன நாள்?” என்று கேட்டார்கள். யூதர் கள், ‘‘இது நல்ல நாள். இஸ்ரவேலர்களை, அவர்களின் எதிரியிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக (இறைத்தூதர்) மூசா (அலை) அவர்கள் நோன்பு நோற் றார்கள்” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களைவிட மூசாவுக்கு மிகவும் உரியவன் நான்” என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக் குக்) கட்டளையும் இட்டார்கள்.


அத்தியாயம் : 30
2005. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ أَبِي عُمَيْسٍ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى ـ رضى الله عنه ـ قَالَ كَانَ يَوْمُ عَاشُورَاءَ تَعُدُّهُ الْيَهُودُ عِيدًا، قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" فَصُومُوهُ أَنْتُمْ "".
பாடம் : 69 ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றல்56
2005. அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆஷூரா நாளை யூதர்கள் பெரு நாளாகக் கருதிவந்தனர். நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்நாளில் நீங்களும் நோன்பு வையுங்கள்” என்று (முஸ்லிம்களிடம்) கூறினார்கள்.


அத்தியாயம் : 30
2006. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، عَنِ ابْنِ عُيَيْنَةَ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ، إِلاَّ هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ وَهَذَا الشَّهْرَ. يَعْنِي شَهْرَ رَمَضَانَ.
பாடம் : 69 ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றல்56
2006. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அஷூரா எனும் இந்த (முஹர்ரம் பத்தாம்) நாளையும் லிரமளான் எனும்லி இந்த மாதத்தையும் தவிர, வேறெதையும் ஏனையவற்றைவிடச் சிறப்பாகத் தேர்ந் தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.


அத்தியாயம் : 30
2007. حَدَّثَنَا الْمَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا يَزِيدُ، عَنْ سَلَمَةَ بْنِ الأَكْوَعِ ـ رضى الله عنه ـ قَالَ أَمَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم رَجُلاً مِنْ أَسْلَمَ أَنْ أَذِّنْ فِي النَّاسِ "" أَنَّ مَنْ كَانَ أَكَلَ فَلْيَصُمْ بَقِيَّةَ يَوْمِهِ، وَمَنْ لَمْ يَكُنْ أَكَلَ فَلْيَصُمْ، فَإِنَّ الْيَوْمَ يَوْمُ عَاشُورَاءَ "".
பாடம் : 69 ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்றல்56
2007. சலமா பின் அல்அக்வஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அஸ்லம் கிளையைச் சேர்ந்த ஒரு மனிதரை அனுப்பி, ‘‘இன்று ஆஷூரா நாளாகும்; ஆகவே, இந்நாளில் யாரேனும் சாப்பிட்டிருந்தால் அவர் இந்நாளின் எஞ்சிய பகுதியில் நோன்பு இருக்கட்டும்! யாரேனும் சாப்பிடாமல் இருந்தால் அவர் நோன்பைத் தொடரட்டும்!” என்று அறிவிக்கச் செய்தார்கள்.

அத்தியாயம் : 30