1786. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا هِشَامٌ، قَالَ أَخْبَرَنِي أَبِي قَالَ، أَخْبَرَتْنِي عَائِشَةُ ـ رضى الله عنها ـ قَالَتْ خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مُوَافِينَ لِهِلاَلِ ذِي الْحَجَّةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ أَحَبَّ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهِلَّ، وَمَنْ أَحَبَّ أَنْ يُهِلَّ بِحَجَّةِ فَلْيُهِلَّ، وَلَوْلاَ أَنِّي أَهْدَيْتُ لأَهْلَلْتُ بِعُمْرَةٍ "". فَمِنْهُمْ مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ، وَمِنْهُمْ مِنْ أَهَلَّ بِحَجَّةٍ، وَكُنْتُ مِمَّنْ أَهَلَّ بِعُمْرَةٍ، فَحِضْتُ قَبْلَ أَنْ أَدْخُلَ مَكَّةَ، فَأَدْرَكَنِي يَوْمُ عَرَفَةَ، وَأَنَا حَائِضٌ، فَشَكَوْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" دَعِي عُمْرَتَكِ، وَانْقُضِي رَأْسَكِ وَامْتَشِطِي، وَأَهِلِّي بِالْحَجِّ "". فَفَعَلْتُ، فَلَمَّا كَانَتْ لَيْلَةُ الْحَصْبَةِ أَرْسَلَ مَعِي عَبْدَ الرَّحْمَنِ إِلَى التَّنْعِيمِ، فَأَرْدَفَهَا، فَأَهَلَّتْ بِعُمْرَةٍ مَكَانَ عُمْرَتِهَا، فَقَضَى اللَّهُ حَجَّهَا وَعُمْرَتَهَا، وَلَمْ يَكُنْ فِي شَىْءٍ مِنْ ذَلِكَ هَدْىٌ، وَلاَ صَدَقَةٌ، وَلاَ صَوْمٌ.
பாடம் : 7 ஹஜ்ஜுக்குப்பின், குர்பானி கொடுக்காமல் உம்ரா செய்தல்11
1786. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (விடைபெறும் ஹஜ்ஜின்போது துல்கஅதாவை பூர்த்தி செய்துவிட்டு) துல்ஹஜ் பிறையை எதிர் நோக்கியவர் களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் புறப்பட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் உம்ராவுக்கு (மட்டும்) இஹ்ராம் கட்ட விரும்புகிறாரோ, அவர் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும்; யார் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்ட விரும்புகிறாரோ அவர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்ளட் டும்! நான் குர்பானி பிராணியைக் கொண்டுவந்திராவிட்டால் உம்ராவுக்காக (மட்டும்) இஹ்ராம் கட்டியிருப்பேன்” என்றார்கள்.

சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினர்; வேறுசிலர் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி னர். நான் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிய வர்களில் ஒருத்தியாக இருந்தேன். ஆனால், மக்காவில் நுழைவதற்குமுன் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடா யுள்ள நிலையிலேயே அரஃபா நாளையும் அடைந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (இது பற்றி) நான் முறையிட்டபோது, “உனது உம்ராவை விட்டுவிட்டு; தலையை அவிழ்த்து, வாரிக் கொள்! மேலும், ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்!” என்றார்கள்.

நான் அவ்வாறே செய்தேன். அல்முஹஸ்ஸபில் தங்கும் இரவு வந்தபோது, என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மானை ‘தன்யீம்’வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்துர் ரஹ்மான் தமது ஒட்டகத்தின் பின்னால் என்னை ஏற்றிக்கொண்டார். விடுபட்ட உம்ராவுக்குப் பகரமாக, மற்றொரு உம்ராவுக்காக நான் இஹ்ராம் கட்டினேன்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ், ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றித் தந்தான். இதற்காக, ஆயிஷா (ரலி) அவர்கள் குர்பானியோ, தர்மமோ, நோன்போ பரிகாரமாகச் செய்யவில்லை.

அத்தியாயம் : 26
1787. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، وَعَنِ ابْنِ عَوْنٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالاَ قَالَتْ عَائِشَةُ ـ رضى الله عنها ـ يَا رَسُولَ اللَّهِ يَصْدُرُ النَّاسُ بِنُسُكَيْنِ وَأَصْدُرُ بِنُسُكٍ فَقِيلَ لَهَا "" انْتَظِرِي، فَإِذَا طَهُرْتِ فَاخْرُجِي إِلَى التَّنْعِيمِ، فَأَهِلِّي ثُمَّ ائْتِينَا بِمَكَانِ كَذَا، وَلَكِنَّهَا عَلَى قَدْرِ نَفَقَتِكِ، أَوْ نَصَبِكِ "".
பாடம் : 8 உம்ரா செய்யும்போது ஏற்படும் சிரமத்திற்குத் தக்கவாறு நற் பலன் கிடைக்கும்.
1787. காசிம் பின் முஹம்மத் (ரஹ்), அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! “மக்கள் அனைவரும் (ஹஜ், உம்ரா ஆகிய) இரண்டு வழிபாடுகளுடன் திரும்பு கின்றனர்; நான் மட்டும் (ஹஜ் என்கிற) ஒரேயொரு வழிபாட்டுடன் திரும்புகிறேனே?” என்று கேட்டார்கள்.

அவர்களிடம், “நீ சற்றுக் காத்திருந்து, (மாதவிடாயிலிருந்து) தூய்மையடைந்ததும் தன்யீமுக்குச் சென்று (உம்ராவுக்காக) இஹ்ராம் கட்டிக்கொள்! பிறகு (நீயும் உன் சகோதரரும்) எங்களை இன்ன இடத்தில் வந்து சந்தியுங்கள்! ஆனால், உம்ராவுக்கான நற்பலன் உனது சிரமத்திற்கோ, பொருட் செலவுக்கோ தக்கவாறுதான் கிடைக்கும்!” என (நபி (ஸல்) அவர்களால்) சொல்லப்பட்டது.

அத்தியாயம் : 26
1788. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا أَفْلَحُ بْنُ حُمَيْدٍ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ خَرَجْنَا مُهِلِّينَ بِالْحَجِّ فِي أَشْهُرِ الْحَجِّ، وَحُرُمِ الْحَجِّ، فَنَزَلْنَا سَرِفَ، فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لأَصْحَابِهِ "" مَنْ لَمْ يَكُنْ مَعَهُ هَدْىٌ، فَأَحَبَّ أَنْ يَجْعَلَهَا عُمْرَةً، فَلْيَفْعَلْ وَمَنْ كَانَ مَعَهُ هَدْىٌ فَلاَ "". وَكَانَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَرِجَالٍ مِنْ أَصْحَابِهِ ذَوِي قُوَّةٍ الْهَدْىُ، فَلَمْ تَكُنْ لَهُمْ عُمْرَةً، فَدَخَلَ عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا أَبْكِي فَقَالَ "" مَا يُبْكِيكِ "". قُلْتُ سَمِعْتُكَ تَقُولُ لأَصْحَابِكَ مَا قُلْتَ فَمُنِعْتُ الْعُمْرَةَ. قَالَ "" وَمَا شَأْنُكِ "". قُلْتُ لاَ أُصَلِّي. قَالَ "" فَلاَ يَضُرَّكِ أَنْتِ مِنْ بَنَاتِ آدَمَ، كُتِبَ عَلَيْكِ مَا كُتِبَ عَلَيْهِنَّ، فَكُونِي فِي حَجَّتِكِ عَسَى اللَّهُ أَنْ يَرْزُقَكِهَا "". قَالَتْ فَكُنْتُ حَتَّى نَفَرْنَا مِنْ مِنًى، فَنَزَلْنَا الْمُحَصَّبَ فَدَعَا عَبْدَ الرَّحْمَنِ، فَقَالَ "" اخْرُجْ بِأُخْتِكَ الْحَرَمَ، فَلْتُهِلَّ بِعُمْرَةٍ، ثُمَّ افْرُغَا مِنْ طَوَافِكُمَا، أَنْتَظِرْكُمَا هَا هُنَا "". فَأَتَيْنَا فِي جَوْفِ اللَّيْلِ. فَقَالَ "" فَرَغْتُمَا "". قُلْتُ نَعَمْ. فَنَادَى بِالرَّحِيلِ فِي أَصْحَابِهِ، فَارْتَحَلَ النَّاسُ، وَمَنْ طَافَ بِالْبَيْتِ، قَبْلَ صَلاَةِ الصُّبْحِ، ثُمَّ خَرَجَ مُوَجِّهًا إِلَى الْمَدِينَةِ.
பாடம் : 9 (ஹஜ்ஜுக்குப் பிறகு) உம்ரா செய்பவர், உம்ராவுக்கான தவாஃபை செய்துவிட்டு (மக்காவிலிருந்து) வெளியேறினால், அதுவே இறுதி தவாஃபுக்கு (தவாஃபுல் வதா) ஈடாகி விடுமா?
1788. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஹஜ் மாதங்களில், ஹஜ் கிரியைகளில் (பங்கேற்க) ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டி (மதீனாவிலிருந்து) புறப் பட்டோம். ‘சரிஃப்’ எனும் இடத்திற்கு வந்து தங்கினோம்.12 அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம், “யார் குர்பானி பிராணி கொண்டுவராமல் ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கிக்கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்துகொள்ளட்டும்! யாரிடம் குர்பானி பிராணி உள்ளதோ அவர் அவ்வாறு செய்ய வேண்டாம்” எனக் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களிடமும் அவர்களு டைய தோழர்களில் வசதி படைத்தவர் களிடமும் குர்பானி பிராணிகள் இருந்தன. எனவே, அவர்களுக்கு (தனியான) உம்ரா இல்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தபோது, நான் அழுது கொண்டிருந்தேன். அவர்கள் “ஏன் அழுகி றாய்?” எனக் கேட்டார்கள். “நீங்கள் உங்கள் தோழர்களிடம் கூறியதை நான் செவியுற் றேன்; ஆனால், நான் உம்ரா செய்வதிலிருந்து தடுக்கப்பட்டுவிட்டேன்” என்றேன்.

அதற்கு அவர்கள், “என்ன காரணம்?” எனக் கேட்டதும், “நான் தொழுகை இல்லாமல் இருக்கிறேன்” என்றேன். அவர்கள், “அதனால் உனக்கு ஒரு பாதிப்பும் இல்லை. நீ ஆதமின் பெண்மக்களில் ஒருத்தியே! அவர்களுக்கு விதிக்கப்பட்டது தான் உனக்கும் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, நீ ஹஜ் செய்துகொண்டிரு. அல்லாஹ் உனக்கு (உம்ரா செய்யவும்) வாய்ப்பளிக்கக்கூடும்!” என்றார்கள்.

நாங்கள் மினாவிலிருந்து புறப்படும் வரை நான் அப்படியே (ஹஜ்ஜில்) இருந்தேன். பிறகு (நான் தூய்மையானபின்) அல்முஹஸ்ஸப் வந்து தங்கினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானை அழைத்து, “உன் சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துப் போ! அவர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளட்டும்! பிறகு நீங்களிருவரும் தவாஃபை முடித்துக்கொள்ளுங்கள்! உங்களுக்காக நான் இந்த இடத்தில் காத்திருப்பேன்” என்றார்கள்.

நாங்கள் (தவாஃபை முடித்து) நடுநிசியில் வந்தபோது, “(தவாஃபை) முடித்துவிட்டீர்களா?” என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் புறப்படுமாறு அறிவித்தார் கள். மக்களும், சுப்ஹுக்கு முன்பே கஅபா ஆலயத்தை தவாஃப் (வதா) செய்தவர்களும் புறப்படத் தயாரானதும் நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கிப் பயணமானார்கள்.13

அத்தியாயம் : 26
1789. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا عَطَاءٌ، قَالَ حَدَّثَنِي صَفْوَانُ بْنُ يَعْلَى بْنِ أُمَيَّةَ يَعْنِي، عَنْ أَبِيهِ، أَنَّ رَجُلاً، أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم وَهُوَ بِالْجِعْرَانَةِ وَعَلَيْهِ جُبَّةٌ وَعَلَيْهِ أَثَرُ الْخَلُوقِ أَوْ قَالَ صُفْرَةٍ فَقَالَ كَيْفَ تَأْمُرُنِي أَنْ أَصْنَعَ فِي عُمْرَتِي فَأَنْزَلَ اللَّهُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم، فَسُتِرَ بِثَوْبٍ وَوَدِدْتُ أَنِّي قَدْ رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَقَدْ أُنْزِلَ عَلَيْهِ الْوَحْىُ. فَقَالَ عُمَرُ تَعَالَ أَيَسُرُّكَ أَنْ تَنْظُرَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم وَقَدْ أَنْزَلَ اللَّهُ الْوَحْىَ قُلْتُ نَعَمْ. فَرَفَعَ طَرَفَ الثَّوْبِ، فَنَظَرْتُ إِلَيْهِ لَهُ غَطِيطٌ وَأَحْسِبُهُ قَالَ كَغَطِيطِ الْبَكْرِ. فَلَمَّا سُرِّيَ عَنْهُ قَالَ "" أَيْنَ السَّائِلُ عَنِ الْعُمْرَةِ اخْلَعْ عَنْكَ الْجُبَّةَ وَاغْسِلْ أَثَرَ الْخَلُوقِ عَنْكَ، وَأَنْقِ الصُّفْرَةَ، وَاصْنَعْ فِي عُمْرَتِكَ كَمَا تَصْنَعُ فِي حَجِّكِ "".
பாடம் : 10 ஹஜ்ஜில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளையே உம்ராவிலும் கடைப்பிடிக்க வேண்டும்.14
1789. யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஜிஇர்ரானா எனுமிடத்தில் இருந்தபோது, நறுமணப் பொருளின் அடையாளமோ அல்லது மஞ்சள் நிறமோ உள்ள மேலங்கி அணிந் திருந்த ஒருவர் அவர்களிடம் வந்தார். அவர், “நான் என் உம்ராவில் என்ன செய்ய வேண்டும் எனக் கட்டளையிடு கிறீர்கள்?” எனக் கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அறிவித்தான்.

எனவே, நபி (ஸல்) அவர்கள் ஒரு துணியால் மறைக்கப்பட்டார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளப்படும் போது அவர்களைப் பார்க்க வேண்டும் என ஆவல் கொண்டிருந்தேன். உமர் (ரலி) அவர்கள், “இங்கு வாரும்! நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அருளும் போது அவர்களைப் பார்க்க வேண்டும் என்று நீர் விரும்புகிறீரா?” எனக் கேட்டார் கள். நான் ‘ஆம்’ என்றேன்.

உடனே (நபி (ஸல்) அவர்களை மறைத்திருந்த) அந்தத் துணியின் ஓரத்தை உமர் (ரலி) அவர்கள் விலக்கினார்கள். நான் நபி (ஸல்) அவர்களை உற்று நோக்கினேன். அப்போது குறட்டை சப்தம் -ஒட்டகத்தின் குறட்டை சப்தம் என்று சொன்னதாகவே எண்ணுகிறேன்- அவர் களிடமிருந்து வந்தது. பிறகு (வஹீயின்) அந்நிலை அவர்களைவிட்டு விலகியபோது அவர்கள், “உம்ராவைப் பற்றிக் கேள்வி கேட்டவர் எங்கே?” எனக் கேட்டுவிட்டு (அவரிடம்), “உமது மேலங்கியைக் கழற்றி நறுமணப் பொருளின் அடையாளத்தைக் கழுவிவிட்டு, மஞ்சள் நிறத்தையும் அகற்றிவிடுவீராக! மேலும், நீர் ஹஜ்ஜில் செய்வதைப் போன்று உம்ராவிலும் செய்வீராக!” எனக் கூறினார்கள்.


அத்தியாயம் : 26
1790. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ قُلْتُ لِعَائِشَةَ ـ رضى الله عنها ـ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَأَنَا يَوْمَئِذٍ حَدِيثُ السِّنِّ أَرَأَيْتِ قَوْلَ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا} فَلاَ أُرَى عَلَى أَحَدٍ شَيْئًا أَنْ لاَ يَطَّوَّفَ بِهِمَا. فَقَالَتْ عَائِشَةُ كَلاَّ، لَوْ كَانَتْ كَمَا تَقُولُ كَانَتْ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ لاَ يَطَّوَّفَ بِهِمَا. إِنَّمَا أُنْزِلَتْ هَذِهِ الآيَةُ فِي الأَنْصَارِ كَانُوا يُهِلُّونَ لِمَنَاةَ، وَكَانَتْ مَنَاةُ حَذْوَ قُدَيْدٍ، وَكَانُوا يَتَحَرَّجُونَ أَنْ يَطُوفُوا بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ سَأَلُوا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ ذَلِكَ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلاَ جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا}. زَادَ سُفْيَانُ وَأَبُو مُعَاوِيَةَ عَنْ هِشَامٍ مَا أَتَمَّ اللَّهُ حَجَّ امْرِئٍ وَلاَ عُمْرَتَهُ لَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.
பாடம் : 10 ஹஜ்ஜில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளையே உம்ராவிலும் கடைப்பிடிக்க வேண்டும்.14
1790. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சிறு வயதுடையவனாக இருந்தபோது நபி (ஸல்) அவர்களின் துணைவியார் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நிச்சயமாக, ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் அடையாளச் சின்னங் களில் உள்ளவையாகும். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்ற மன்று” (2:158) என உயர்வும் வளமும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்; எனவே, “அவ் விரண்டையும் சுற்றாமல் இருப்பது குற்ற மாகாது என்றே நான் கருதுகிறேன்” என்று கூறினேன்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அவ்வாறில்லை; நீ கருதுவதைப் போன்றி ருந்தால் ‘அவ்விரண்டையும் தவாஃப் செய்யாமலிருப்பதில் குற்றமில்லை’ என்று அவ்வசனம் அமைந்திருக்க வேண்டும்; மேலும், இந்த வசனம் அன்சாரிகள் தொடர்பாக அருளப்பட்டதாகும். (அறியா மைக் காலத்தில்) அவர்கள் ‘குதைத்’ என்ற இடத்தின் அருகில் ‘மனாத்’ என்ற சிலைக் காக இஹ்ராம் கட்டிவந்தார்கள். அதனால் (இஸ்லாத்தை ஏற்றபின்) ஸஃபா-மர்வாவுக் கிடையே சுற்றிவருவதைக் குற்றமாக அவர்கள் கருதினர்.

எனவே, அவர்கள் இஸ்லாத்திற்கு வந்ததும் அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டனர்; அப்போதுதான் இந்த வசனத்தை (2:158) உயர்ந்தோன் அல்லாஹ் அருளினான்” எனக் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இரு அறிவிப்புகளில், “ஸஃபா-மர்வாவுக்கிடையே சுற்றி வராதவரின் ஹஜ்ஜையோ உம்ராவையோ அல்லாஹ் முழுமைப்படுத்தவில்லை” என்றும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 26
1791. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ جَرِيرٍ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أَوْفَى، قَالَ اعْتَمَرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَاعْتَمَرْنَا مَعَهُ فَلَمَّا دَخَلَ مَكَّةَ طَافَ وَطُفْنَا مَعَهُ، وَأَتَى الصَّفَا وَالْمَرْوَةَ وَأَتَيْنَاهَا مَعَهُ، وَكُنَّا نَسْتُرُهُ مِنْ أَهْلِ مَكَّةَ أَنْ يَرْمِيَهُ أَحَدٌ. فَقَالَ لَهُ صَاحِبٌ لِي أَكَانَ دَخَلَ الْكَعْبَةَ قَالَ لاَ. قَالَ فَحَدِّثْنَا مَا، قَالَ لِخَدِيجَةَ. قَالَ " بَشِّرُوا خَدِيجَةَ بِبَيْتٍ فِي الْجَنَّةِ مِنْ قَصَبٍ لاَ صَخَبَ فِيهِ وَلاَ نَصَبَ ".
பாடம் : 11 உம்ரா செய்பவர் இஹ்ராமிலி ருந்து எப்போது விடுபடுவார்?15 “(ஹஜ்ஜை) உம்ராவாக ஆக்கிக் கொண்டு தவாஃப் (மற்றும் ‘சயீ’) செய்து விட்டு முடியைக் குறைத்துக்கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளை யிட்டார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
1791. 1792 அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் கூறிய தவாது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (‘களா’) உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினார்கள். நாங்களும் அவர்களுடன் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினோம். அவர்கள் மக்காவில் நுழைந்ததும் தவாஃப் செய்தார்கள். நாங்களும் அவர்களுடன் தவாஃப் செய்தோம். அவர்கள் ஸஃபா-மர்வாவுக்கு வந்தார்கள்; நாங்களும் அவர்களுடன் அங்கு வந்தோம்.

மேலும், மக்காவாசிகள் நபி (ஸல்) அவர்களைத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக நாங்கள் நபியவர்களை மறைத்துக்கொண்டிருந்தோம்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இஸ்மாயீல் பின் அபீகாலித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

என் நண்பர் ஒருவர் இப்னு அபீஅவ்ஃபா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் (அப்போது) கஅபாவின் உள்ளே சென்றார்களா?” எனக் கேட்டார். அதற்கு அவர்கள், “இல்லை!” என்றார்கள். பிறகு, அவர், “நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களைப் பற்றி என்ன கூறினார்கள் என்பதை எங்களுக்கு அறிவியுங்களேன்!” எனக் கேட்டார்.

அவர்கள், “கதீஜாவுக்கான நற்செய்தி பெறுங்கள்; அவருக்கு சொர்க்கத்தில் முத்து மாளிகை ஒன்று உள்ளது. அதில் கூச்சல் குழப்பமோ களைப்போ இருக்காது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்கள்.


அத்தியாயம் : 26
1793. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، قَالَ سَأَلْنَا ابْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ عَنْ رَجُلٍ، طَافَ بِالْبَيْتِ فِي عُمْرَةٍ، وَلَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، أَيَأْتِي امْرَأَتَهُ فَقَالَ قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَطَافَ بِالْبَيْتِ سَبْعًا، وَصَلَّى خَلْفَ الْمَقَامِ رَكْعَتَيْنِ، وَطَافَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ سَبْعًا، وَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ. قَالَ وَسَأَلْنَا جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنهما ـ فَقَالَ لاَ يَقْرَبَنَّهَا حَتَّى يَطُوفَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ.
பாடம் : 11 உம்ரா செய்பவர் இஹ்ராமிலி ருந்து எப்போது விடுபடுவார்?15 “(ஹஜ்ஜை) உம்ராவாக ஆக்கிக் கொண்டு தவாஃப் (மற்றும் ‘சயீ’) செய்து விட்டு முடியைக் குறைத்துக்கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளை யிட்டார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
1793. 1794 அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், “உம்ராவில் ஒருவர் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே தவாஃப் செய்யாமலேயே தம் மனைவியிடம் (தாம்பத்திய உறவு கொள்ள) வரலாமா?” என்று கேட்டோம்.

அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் (மக்கா) வந்ததும் இறையில்லம் கஅபாவை ஏழு முறை தவாஃப் செய்து விட்டு, மகாமு இப்ராஹீமில் இரண்டு ரக்அத்கள் தொழுதபின் ஸஃபா-மர்வா வுக்கிடையே ஏழு முறை ‘சயீ’ செய்தார்கள்; எனவே, நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி உள்ளது!” எனக் கூறினார்கள்.

நாங்கள் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் இது பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள், “ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்யாமல் ஒருவர் தம் மனைவியை நெருங்கக் கூடாது” எனக் கூறினார்கள்.


அத்தியாயம் : 26
1795. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ ـ رضى الله عنه ـ قَالَ قَدِمْتُ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِالْبَطْحَاءِ وَهُوَ مُنِيخٌ فَقَالَ "" أَحَجَجْتَ "". قُلْتُ نَعَمْ. قَالَ "" بِمَا أَهْلَلْتَ "". قُلْتُ لَبَّيْكَ بِإِهْلاَلٍ كَإِهْلاَلِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" أَحْسَنْتَ. طُفْ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالْمَرْوَةِ ثُمَّ أَحِلَّ "". فَطُفْتُ بِالْبَيْتِ، وَبِالصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ أَتَيْتُ امْرَأَةً مِنْ قَيْسٍ، فَفَلَتْ رَأْسِي، ثُمَّ أَهْلَلْتُ بِالْحَجِّ. فَكُنْتُ أُفْتِي بِهِ، حَتَّى كَانَ فِي خِلاَفَةِ عُمَرَ فَقَالَ إِنْ أَخَذْنَا بِكِتَابِ اللَّهِ فَإِنَّهُ يَأْمُرُنَا بِالتَّمَامِ، وَإِنْ أَخَذْنَا بِقَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَإِنَّهُ لَمْ يَحِلَّ حَتَّى يَبْلُغَ الْهَدْىُ مَحِلَّهُ.
பாடம் : 11 உம்ரா செய்பவர் இஹ்ராமிலி ருந்து எப்போது விடுபடுவார்?15 “(ஹஜ்ஜை) உம்ராவாக ஆக்கிக் கொண்டு தவாஃப் (மற்றும் ‘சயீ’) செய்து விட்டு முடியைக் குறைத்துக்கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளை யிட்டார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
1795. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ‘அல்பத்ஹா’ எனுமிடத்தில் ஒட்டகத்தை இளைப்பாற வைத்துக்கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “ஹஜ் செய்ய நாடியுள்ளீரா?” எனக் கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றதும், “எதற்காக இஹ்ராம் கட்டினீர்?” என்று கேட்டார்கள். நான் “நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் கட்டினார்களோ அதற்காகவே இஹ்ராம் கட்டியுள்ளேன்” என்று கூறினேன். அதற்கு அவர்கள், “நன்றே செய்தீர். இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக் கிடையே ‘சயீ’ செய்துவிட்டு இஹ்ராமி லிருந்து விடுபட்டுவிடுவீராக!” எனக் கூறினார்கள்.

நான் அவ்வாறே கஅபாவை தவாஃப் செய்துவிட்டு, ஸஃபா-மர்வாவுக்கிடையே ‘சயீ’ செய்துவிட்டு, பனூ கைஸ் கோத்திரத் தைச் சேர்ந்த (என் நெருங்கிய உறவின ரான) ஒரு பெண்ணிடம் வந்தேன். அவர் எனது தலையில் பேன் பார்த்தார்.

பிறகு நான் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினேன். இந்த அடிப்படையிலேயே நான் உமர் (ரலி) அவர்களது ஆட்சிக் காலம்வரை மக்களுக்குத் தீர்ப்பளித்துக் கொண்டிருந்தேன். உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் வேதத்தைப் பார்த்தால் அது நம்மை (ஹஜ்ஜையும் உம்ராவையும்) முழுமைப்படுத்துமாறு கட்டளையிடுகிறது; நபி (ஸல்) அவர்களின் நடைமுறையைப் பார்த்தாலும், குர்பானி பிராணி அதற்குரிய இடத்தை அடையும்வரை இஹ்ராமிலிருந்து அவர்கள் விடுபடவில்லை எனத் தெரிகிறது!” என்று கூறினார்கள்.16


அத்தியாயம் : 26
1796. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عِيسَى، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنَا عَمْرٌو، عَنْ أَبِي الأَسْوَدِ، أَنَّ عَبْدَ اللَّهِ، مَوْلَى أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ حَدَّثَهُ أَنَّهُ، كَانَ يَسْمَعُ أَسْمَاءَ تَقُولُ كُلَّمَا مَرَّتْ بِالْحَجُونِ صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ لَقَدْ نَزَلْنَا مَعَهُ هَا هُنَا، وَنَحْنُ يَوْمَئِذٍ خِفَافٌ، قَلِيلٌ ظَهْرُنَا، قَلِيلَةٌ أَزْوَادُنَا، فَاعْتَمَرْتُ أَنَا وَأُخْتِي عَائِشَةُ وَالزُّبَيْرُ وَفُلاَنٌ وَفُلاَنٌ، فَلَمَّا مَسَحْنَا الْبَيْتَ أَحْلَلْنَا، ثُمَّ أَهْلَلْنَا مِنَ الْعَشِيِّ بِالْحَجِّ.
பாடம் : 11 உம்ரா செய்பவர் இஹ்ராமிலி ருந்து எப்போது விடுபடுவார்?15 “(ஹஜ்ஜை) உம்ராவாக ஆக்கிக் கொண்டு தவாஃப் (மற்றும் ‘சயீ’) செய்து விட்டு முடியைக் குறைத்துக்கொண்டு இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்குக் கட்டளை யிட்டார்கள்” என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
1796. (அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமை) அப்துல்லாஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள், (மக்காவிலுள்ள) ‘அல்ஹஜூன்’ என்ற இடத்தைக் கடந்து செல்லும் போதெல்லாம், “முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ் கருணை புரிவானாக! (விடைபெறும் ஹஜ்ஜின்போது) நாங்கள் அவர்களுடன் இங்கு வந்து இறங்கினோம்; அப்போது எங்களிடம் (பயண) மூட்டை முடிச்சுகள் குறைவாகவே இருந்தன; (பயண) வாகனங்களும் உணவுகளும் குறைவாகவே இருந்தன; அப்போது நானும், என் சகோதரி ஆயிஷா (ரலி), (என் கணவர்) ஸுபைர் (ரலி) ஆகியோரும், மற்றும் இன்னாரும் இன்னாரும் உம்ராவுக் காக இஹ்ராம் கட்டியிருந்தோம்; கஅபாவை தவாஃப் செய்ததும் இஹ்ராமி லிருந்து விடுபட்டுவிட்டோம். பிறகு மாலையில் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டினோம்” என அஸ்மா (ரலி) அவர்கள் கூறுவார்கள்.17

அத்தியாயம் : 26
1797. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَفَلَ مِنْ غَزْوٍ أَوْ حَجٍّ أَوْ عُمْرَةٍ يُكَبِّرُ عَلَى كُلِّ شَرَفٍ مِنَ الأَرْضِ ثَلاَثَ تَكْبِيرَاتٍ، ثُمَّ يَقُولُ "" لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ، آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ سَاجِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ، صَدَقَ اللَّهُ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ "".
பாடம் : 12 ஹஜ், உம்ரா, அறப்போர் ஆகியவற்றை முடித்துவிட்டுத் திரும்பும்போது கூற வேண்டியவை
1797. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராவிலிருந்தோ அறப்போரிலிருந்தோ திரும்பும்போது மேடான இடங்களில் ஏறும்போதெல்லாம் மூன்று முறை தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறுவார்கள்.

மேலும், “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீ(க்)க லஹு, லஹுல் முல்கு வ லஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்; ஆயிபூன தாயிபூன, ஆபிதூன, சாஜிதூன, லி ரப்பினா ஹாமிதூன்; ஸத(க்)கல்லாஹு வஅதஹு, வ நஸர அப்தஹு, வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹ்” என்று கூறுவார்கள். (பொருள்: “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன்; அவனுக்கு இணை யாருமில்லை. ஆட்சி யதிகாரம் அவனுக்கே. புகழும் அவனுக்கே. அவன் அனைத்தின்மீதும் பேராற்றலுடையோன்; நாங்கள் பாவ மன்னிப்புக் கோரி மீண்டவர்களாகவும், (எங்கள் இறையை வழிபட்டவர்களாகவும், சஜ்தா செய்தவர்களாகவும்; எங்கள் இறையைப் புகழ்ந்தவர்களாகவும் திரும்பு கிறோம்; அல்லாஹ் தனது வாக்குறுதியை மெய்யாக்கிவிட்டான்; தன் அடியாருக்கு (முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு) உதவி செய்துவிட்டான். (எதிரிகளின்) கூட்டுப் படைகளைத் தன்னந்தனியாக அவனே தோற்கடித்துவிட்டான்)

அத்தியாயம் : 26
1798. حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا خَالِدٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَكَّةَ اسْتَقْبَلَتْهُ أُغَيْلِمَةُ بَنِي عَبْدِ الْمُطَّلِبِ، فَحَمَلَ وَاحِدًا بَيْنَ يَدَيْهِ وَآخَرَ خَلْفَهُ.
பாடம் : 13 ஹஜ்ஜுக்காக (மக்காவுக்கு) வருபவர்களை வரவேற்பதும் ஒரு பிராணியின் மீது மூவர் அமர்வதும்
1798. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபோது, அவர்களை அப்துல் முத்தலிப் குடும்பத்துச் சிறார்கள் வரவேற்றனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அச்சிறார்களில்) ஒருவரை தமக்கு முன்னாலும் மற்றொருவரைத் தமக்குப் பின்னாலும் வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்கள்.

அத்தியாயம் : 26
1799. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الْحَجَّاجِ، حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ إِذَا خَرَجَ إِلَى مَكَّةَ يُصَلِّي فِي مَسْجِدِ الشَّجَرَةِ، وَإِذَا رَجَعَ صَلَّى بِذِي الْحُلَيْفَةِ بِبَطْنِ الْوَادِي وَبَاتَ حَتَّى يُصْبِحَ.
பாடம் : 14 (வெளியூரிலிருந்து) காலை நேரத்தில் ஊர் திரும்புதல்
1799. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவுக்குப் புறப்பட்டால் (துல்ஹுலை ஃபாவில் உள்ள) ‘அஷ்ஷஜரா’ பள்ளி வாசலில் தொழுவார்கள். (மக்காவிலிருந்து) திரும்பும்போது பத்னுல் வாதியில் உள்ள துல்ஹுலைஃபாவில் தொழுவார்கள்; மேலும் அங்கேயே காலைவரை தங்குவார் கள். (பிறகுதான் மதீனா திரும்புவார்கள்.)

அத்தியாயம் : 26
1800. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ يَطْرُقُ أَهْلَهُ، كَانَ لاَ يَدْخُلُ إِلاَّ غُدْوَةً أَوْ عَشِيَّةً.
பாடம் : 15 (பயணம் முடிந்து) மாலை வேளையில் வீட்டிற்கு வருதல்
1800. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பயணத்தை முடித்து) இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்லமாட்டார்கள்; காலை யிலோ அல்லது மாலையிலோதான் செல்வார்கள்.

அத்தியாயம் : 26
1801. حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُحَارِبٍ، عَنْ جَابِرٍ ـ رضى الله عنه ـ قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ يَطْرُقَ أَهْلَهُ لَيْلاً.
பாடம் : 16 நகரை அடைந்துவிட்டாலும் திடீரென இரவு நேரத்தில் வீட் டாரிடம் செல்லக் கூடாது.
1801. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பயணத்திலிருந்து திரும்பும்போது) இரவு நேரத்தில் திடீரென வீட்டாரிடம் செல்வதை நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

அத்தியாயம் : 26
1802. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي حُمَيْدٌ، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ، فَأَبْصَرَ دَرَجَاتِ الْمَدِينَةِ أَوْضَعَ نَاقَتَهُ، وَإِنْ كَانَتْ دَابَّةً حَرَّكَهَا. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ زَادَ الْحَارِثُ بْنُ عُمَيْرٍ عَنْ حُمَيْدٍ حَرَّكَهَا مِنْ حُبِّهَا. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسٍ، قَالَ جُدُرَاتٍ. تَابَعَهُ الْحَارِثُ بْنُ عُمَيْرٍ.
பாடம் : 17 மதீனாவை அடைந்ததும் ஒட்டகத்தை விரைவாகச் செலுத்துதல்
1802. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பி மதீனாவின் உயரமான பாதைகளைப் பார்க்கும்போது தமது ஒட்டகத்தை விரைவாகச் செலுத்து வார்கள்; வாகனம் கால்நடையாக இருப் பின் அதைத் தட்டிவிடுவார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஹாரிஸ் பின் உமைர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “மதீனாமீது கொண்ட அன்பால் ஒட்டகத்தை முடுக்கி விடுவார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

இஸ்மாயீல் பின் ஜஅஃபர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘மதீனாவின் (சுற்றுச்) சுவர்களைப் பார்க்கும்போது’ என இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 26
1803. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ سَمِعْتُ الْبَرَاءَ ـ رضى الله عنه ـ يَقُولُ نَزَلَتْ هَذِهِ الآيَةُ فِينَا، كَانَتِ الأَنْصَارُ إِذَا حَجُّوا فَجَاءُوا لَمْ يَدْخُلُوا مِنْ قِبَلِ أَبْوَابِ بُيُوتِهِمْ، وَلَكِنْ مِنْ ظُهُورِهَا، فَجَاءَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ، فَدَخَلَ مِنْ قِبَلِ بَابِهِ، فَكَأَنَّهُ عُيِّرَ بِذَلِكَ، فَنَزَلَتْ {وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَى وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا}.
பாடம் : 18 உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: வீடுகளுக்குள் அவற்றின் வாசல்கள் வழியாகவே வாருங்கள். (2:189)
1803. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இந்த வசனம் (அன்சாரிகளான) எங்கள் விஷயத்தில்தான் அருளப் பெற்றது. (அறியாமைக் காலத்தில்) அன்சாரிகள் ஹஜ் செய்(ய இஹ்ராம் கட்டி முடித்)துவிட்டு, மீண்டும் (வீட்டுக்கு) வருவதானால், வீடுகளில் (முன்பக்க) வாசல் வழியாக நுழையமாட்டார்கள். மாறாக, பின்பக்க வாசல் வழியேதான் நுழைவார்கள்.

இந்நிலையில் அன்சாரிகளில் ஒருவர் தமது (வீட்டின்) முன்வாசல் வழியாகவே நுழைந்துவிட்டார். இதனால் அவரைப் பற்றி குறைசொல்லப்பட்டது.

அப்போதுதான், “நீங்கள் வீடுகளுக்குள் அவற்றின் பின்புற வழியாக வருவது புண்ணியமன்று. மாறாக, (இறைவனுக்கு) அஞ்சி நடப்பவரே புண்ணியவான் ஆவார். ஆகவே, வீடுகளுக்குள் அவற் றின் வாசல்கள் வழியாகவே வாருங்கள்” (2:189) எனும் வசனம் அருளப்பெற்றது.

அத்தியாயம் : 26
1804. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ سُمَىٍّ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" السَّفَرُ قِطْعَةٌ مِنَ الْعَذَابِ، يَمْنَعُ أَحَدَكُمْ طَعَامَهُ وَشَرَابَهُ وَنَوْمَهُ، فَإِذَا قَضَى نَهْمَتَهُ فَلْيُعَجِّلْ إِلَى أَهْلِهِ "".
பாடம் : 19 பயணம் வேதனையில் ஒரு பகுதியாகும்.
1804. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பயணம் வேதனையில் ஒரு பகுதி யாகும். அது உங்களில் ஒருவரது உணவையும் பானத்தையும் உறக்கத்தை யும் தடுத்துவிடுகிறது. எனவே, ஒருவர் தமது தேவையை முடித்ததும் தம் குடும்பத்தாரிடம் விரைந்து செல்லட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 26
1805. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، قَالَ كُنْتُ مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ بِطَرِيقِ مَكَّةَ، فَبَلَغَهُ عَنْ صَفِيَّةَ بِنْتِ أَبِي عُبَيْدٍ شِدَّةُ وَجَعٍ فَأَسْرَعَ السَّيْرَ، حَتَّى كَانَ بَعْدَ غُرُوبِ الشَّفَقِ نَزَلَ، فَصَلَّى الْمَغْرِبَ وَالْعَتَمَةَ، جَمَعَ بَيْنَهُمَا، ثُمَّ قَالَ إِنِّي رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم إِذَا جَدَّ بِهِ السَّيْرُ أَخَّرَ الْمَغْرِبَ، وَجَمَعَ بَيْنَهُمَا.
பாடம் : 20 அவசர நிலை ஏற்பட்டால், பயணி தம் குடும்பத்தாரிடம் விரைந்து செல்ல வேண்டும்.
1805. அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மக்கா செல்லும் வழியில் நானும் அவர்களுடன் (பயணம் செய்துகொண்டு) இருந்தேன். (அவர்களின் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் அபீஉபைத் அவர்களின் உடல்நிலை மோசமான செய்தி அவர்களுக்குக் கிடைத்தது. உடனே பயணத்தை விரைவுபடுத்தினார்கள்.

செம்மேகம் மறையும்வரை (மஃக்ரிப் தொழுகையைத்) தாமதப்படுத்தி ஓரிடத்தில் இறங்கினார்கள். அங்கு மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள்.

“நபி (ஸல்) அவர்கள் அவசரமாகப் பயணம் செய்ய நேரிட்டால் (இவ்வாறுதான்) மஃக்ரிபைத் தாமதப்படுத்தி இரு தொழுகைகளையும் சேர்த்துத் தொழுவதை நான் பார்த்திருக்கிறேன்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அத்தியாயம் : 26