1655. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ أَبِيهِ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى رَكْعَتَيْنِ، وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ صَدْرًا مِنْ خِلاَفَتِهِ.
பாடம் : 84 மினாவில் தொழுதல்
1655. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் உஸ்மான் (ரலி) அவர்கள், தமது ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் (கடமையான நான்கு ரக்அத்களைச் சுருக்கி) மினாவில் இரண்டு ரக்அத்களாகத் தொழுதார்கள்.


அத்தியாயம் : 25
1656. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ، عَنْ حَارِثَةَ بْنِ وَهْبٍ الْخُزَاعِيِّ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّى بِنَا النَّبِيُّ صلى الله عليه وسلم وَنَحْنُ أَكْثَرُ مَا كُنَّا قَطُّ وَآمَنُهُ بِمِنًى رَكْعَتَيْنِ.
பாடம் : 84 மினாவில் தொழுதல்
1656. ஹாரிஸா பின் வஹ்ப் அல் குஸாயீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மினாவில் எங்க ளுக்கு இரு ரக்அத்கள் தொழுவித்தார்கள். அந்நாளில் எப்போதும் இல்லாத அளவுக்கு நாங்கள் அதிகமாகவும் இருந்தோம்; எந்த அச்சமும் இல்லாமலும் இருந்தோம்.


அத்தியாயம் : 25
1657. حَدَّثَنَا قَبِيصَةُ بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَكْعَتَيْنِ، وَمَعَ أَبِي بَكْرٍ ـ رضى الله عنه ـ رَكْعَتَيْنِ وَمَعَ عُمَرَ ـ رضى الله عنه ـ رَكْعَتَيْنِ، ثُمَّ تَفَرَّقَتْ بِكُمُ الطُّرُقُ، فَيَا لَيْتَ حَظِّي مِنْ أَرْبَعٍ رَكْعَتَانِ مُتَقَبَّلَتَانِ.
பாடம் : 84 மினாவில் தொழுதல்
1657. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் (மினாவில்) இரண்டு ரக்அத்களாவே தொழுதேன்; அபூபக்ர் (ரலி) அவர்களுட னும் உமர் (ரலி) அவர்களுடனும் (மினாவில்) (கடமையான நான்கு ரக்அத் களைச் சுருக்கி) இரண்டு ரக்அத்களாகவே தொழுதேன். பின்னர் உங்களிடம் பல்வேறு கருத்துகள் தோன்றிவிட்டன. (நான் தொழுத) நான்கு ரக்அத்களிலிருந்து ஏற்றுக்கொள்ளப்படும் இரண்டு ரக்அத்கள் என் பங்காகக் கிடைத்தால் போதுமே!47

அத்தியாயம் : 25
1658. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنَا سَالِمٌ، قَالَ سَمِعْتُ عُمَيْرًا، مَوْلَى أُمِّ الْفَضْلِ عَنْ أُمِّ الْفَضْلِ، شَكَّ النَّاسُ يَوْمَ عَرَفَةَ فِي صَوْمِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَبَعَثْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم بِشَرَابٍ فَشَرِبَهُ.
பாடம் : 85 அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாளில் நோன்பு நோற்றல்48
1658. உம்முல் ஃபள்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹஜ்ஜின்போது) அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருக்கின்றார்களோ என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டது. எனவே, நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பானம் ஒன்றை அனுப்பிவைத்தேன். அதை அவர்கள் அருந்தினார்கள்.

அத்தியாயம் : 25
1659. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الثَّقَفِيِّ، أَنَّهُ سَأَلَ أَنَسَ بْنَ مَالِكٍ وَهُمَا غَادِيَانِ مِنْ مِنًى إِلَى عَرَفَةَ كَيْفَ كُنْتُمْ تَصْنَعُونَ فِي هَذَا الْيَوْمِ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ كَانَ يُهِلُّ مِنَّا الْمُهِلُّ فَلاَ يُنْكِرُ عَلَيْهِ، وَيُكَبِّرُ مِنَّا الْمُكَبِّرُ فَلاَ يُنْكِرُ عَلَيْهِ.
பாடம் : 86 மினாவிலிருந்து அரஃபாவுக்குப் புறப்பட்டதும் தல்பியாவும் தக்பீரும் கூறல்
1659. முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களும் மினாவிலிருந்து அரஃபாவுக் குப் போகும்போது அனஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தபோது இன்றைய (அரஃபா) நாள் என்ன செய்தீர்கள்?” எனக் கேட்டேன்.

அதற்கு, “அன்று எங்களில் சிலர் தல்பியா கூறிக்கொண்டிருந்தனர்; அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை. வேறுசிலர் தக்பீர் கூறினார்கள்; அதற்கும் ஆட்சேபம் தெரிவிக்கப்படவில்லை” என அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 25
1660. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ، قَالَ كَتَبَ عَبْدُ الْمَلِكِ إِلَى الْحَجَّاجِ أَنْ لاَ يُخَالِفَ ابْنَ عُمَرَ فِي الْحَجِّ، فَجَاءَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنه ـ وَأَنَا مَعَهُ يَوْمَ عَرَفَةَ حِينَ زَالَتِ الشَّمْسُ، فَصَاحَ عِنْدَ سُرَادِقِ الْحَجَّاجِ، فَخَرَجَ وَعَلَيْهِ مِلْحَفَةٌ مُعَصْفَرَةٌ فَقَالَ مَا لَكَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ فَقَالَ الرَّوَاحَ إِنْ كُنْتَ تُرِيدُ السُّنَّةَ. قَالَ هَذِهِ السَّاعَةَ قَالَ نَعَمْ. قَالَ فَأَنْظِرْنِي حَتَّى أُفِيضَ عَلَى رَأْسِي ثُمَّ أَخْرُجَ. فَنَزَلَ حَتَّى خَرَجَ الْحَجَّاجُ، فَسَارَ بَيْنِي وَبَيْنَ أَبِي، فَقُلْتُ إِنْ كُنْتَ تُرِيدُ السُّنَّةَ فَاقْصُرِ الْخُطْبَةَ وَعَجِّلِ الْوُقُوفَ. فَجَعَلَ يَنْظُرُ إِلَى عَبْدِ اللَّهِ، فَلَمَّا رَأَى ذَلِكَ عَبْدُ اللَّهِ قَالَ صَدَقَ.
பாடம் : 87 அரஃபா நாளில் நண்பகலில் (நமிரா’விலிருந்து அரஃபா) புறப்படுதல்
1660. சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மன்னர்) அப்துல் மலிக் (பின் மர்வான்), ஹஜ்ஜின்போது இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு மாற்றமாக நடந்துகொள்ள வேண்டாம் என (அமீர்) ஹஜ்ஜாஜுக்குக் கடிதம் எழுதினார். அரஃபா நாளில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது இப்னு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நானும் அவர்களுடன் இருந்தேன். அவர்கள் ஹஜ்ஜாஜின் கூடாரத்திற்குச் சென்று (புறப்படுமாறு) சப்தமிட்டார்கள். உடனே ஹஜ்ஜாஜ் மஞ்சள் சாயம் பூசப்பட்ட பெரிய கீழங்கியுடன் வெளியே வந்து, “அபூஅப்திர் ரஹ்மானே (இப்னு உமரே)! என்ன விஷயம்?” எனக் கேட்டார்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நீர் நபிவழியைப் பின்பற்ற விரும்பினால் இங்கிருந்து புறப்பட வேண்டியதுதான்” என்றார்கள். ஹஜ்ஜாஜ் “இந்த நேரத்திலா?” எனக் கேட்டதற்கு அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். ஹஜ்ஜாஜ் “தலைக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு, இதோ புறப்படுகின் றேன், அதுவரை பொறுங்கள்” எனக் கூறினார். இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜாஜ் புறப்படும்வரை (தமது வாகனத்தைவிட்டு) இறங்கி நின்றார்கள்.

ஹஜ்ஜாஜ், எனக்கும் என் தந்தை (இப்னு உமரு)க்குமிடையே நடந்து கொண்டிருந்தபோது நான் ஹஜ்ஜாஜிடம், “நீர் நபிவழியைப் பின்பற்ற விரும்பினால் உரையை (குத்பா) சுருக்கி (அரஃபாவில்) தங்குவதைத் துரிதப்படுத்தும்” என்றேன். உடனே அவர் அப்துல்லாஹ் பின் உமர் அவர்களைப் பார்க்கலானார். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அதைக் கண்டபோது, “சாலிம் சொன்னது உண்மைதான்” என்றார்கள்.

அத்தியாயம் : 25
1661. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ عُمَيْرٍ، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ الْعَبَّاسِ عَنْ أُمِّ الْفَضْلِ بِنْتِ الْحَارِثِ، أَنَّ نَاسًا، اخْتَلَفُوا عِنْدَهَا يَوْمَ عَرَفَةَ فِي صَوْمِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ بَعْضُهُمْ هُوَ صَائِمٌ. وَقَالَ بَعْضُهُمْ لَيْسَ بِصَائِمٍ. فَأَرْسَلَتْ إِلَيْهِ بِقَدَحِ لَبَنٍ وَهْوَ وَاقِفٌ عَلَى بَعِيرِهِ فَشَرِبَهُ.
பாடம் : 88 அரஃபாவில் (நீண்ட நேரம்) வாகனத்தில் தங்குதல்
1661. உம்முல் ஃபள்ல் பின்த் அல்ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாளில் நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருப்பது தொடர்பாக மக்கள் என்னிடம் சர்ச்சை செய்துகொண்டிருந்தனர். சிலர், ‘நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றுள்ளார்கள்’ என்றும் வேறுசிலர், ‘இல்லை’ என்றும் கூறிக்கொண்டிருந்தனர்.

எனவே, நான் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் பால் கொடுத்தனுப்பி னேன்; அவர்கள் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்துகொண்டே அதை அருந்தி னார்கள்.

அத்தியாயம் : 25
1662. وَقَالَ اللَّيْثُ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ أَخْبَرَنِي سَالِمٌ، أَنَّ الْحَجَّاجَ بْنَ يُوسُفَ، عَامَ نَزَلَ بِابْنِ الزُّبَيْرِ ـ رضى الله عنهما ـ سَأَلَ عَبْدَ اللَّهِ ـ رضى الله عنه ـ كَيْفَ تَصْنَعُ فِي الْمَوْقِفِ يَوْمَ عَرَفَةَ فَقَالَ سَالِمٌ إِنْ كُنْتَ تُرِيدُ السُّنَّةَ فَهَجِّرْ بِالصَّلاَةِ يَوْمَ عَرَفَةَ. فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ صَدَقَ. إِنَّهُمْ كَانُوا يَجْمَعُونَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ فِي السُّنَّةِ. فَقُلْتُ لِسَالِمٍ أَفَعَلَ ذَلِكَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ سَالِمٌ وَهَلْ تَتَّبِعُونَ فِي ذَلِكَ إِلاَّ سُنَّتَهُ
பாடம் : 89 அரஃபாவில் (லுஹ்ர், அஸ்ர் ஆகிய) இரு தொழுகைகளைச் சேர்த்து (ஜம்உ செய்து) தொழுதல் இப்னு உமர் (ரலி) அவர்கள், (அரஃபா நாளில்) தமக்கு இமாமுடன் சேர்ந்து தொழும் வாய்ப்புத் தவறிவிட்டால், (லுஹ்ர், அஸ்ர் ஆகிய) இருவேளைத் தொழு கைகளை (தமது இருப்பிடத்தில்) சேர்த்தே தொழுவார்கள்.
1662. இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள்மீது போர் தொடுக்க ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் (மக்கா) வந்திருந்த ஆண்டில் (ஹஜ்ஜுக்கு வந்திருந்த) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம், “அரஃபாவில் தங்கும்போது நீங்கள் எவ்வாறு செயல்படுவீர்கள்?” என ஹஜ்ஜாஜ் கேட்டார். அதற்கு சாலிம் (ரஹ்) அவர்கள், “நீர் நபிவழியைப் பின்பற்ற விரும்பினால் அரஃபா நாளில் நண்பகலில் தொழுது விடுவீராக!” என்றார்கள்.

அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “சாலிம் கூறியது உண்மைதான். (நபித்தோழர்கள் அரஃபாவில்) லுஹ்ரையும் அஸ்ரையும் நபிவழிப்படி சேர்த்தே தொழுபவர்களாக இருந்தனர்” என்றார்கள்.

நான் சாலிம் (ரஹ்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இந்த விஷயத்தில் நபிவழியைத் தவிர வேறு யாருடைய வழியை நபித்தோழர்கள் பின்பற்றுவார்கள்?” என்று கேட்டார்கள்.

அத்தியாயம் : 25
1663. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ الْمَلِكِ بْنَ مَرْوَانَ، كَتَبَ إِلَى الْحَجَّاجِ أَنْ يَأْتَمَّ، بِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فِي الْحَجِّ، فَلَمَّا كَانَ يَوْمُ عَرَفَةَ جَاءَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ وَأَنَا مَعَهُ حِينَ زَاغَتِ الشَّمْسُ أَوْ زَالَتْ، فَصَاحَ عِنْدَ فُسْطَاطِهِ أَيْنَ هَذَا فَخَرَحَ إِلَيْهِ فَقَالَ ابْنُ عُمَرَ الرَّوَاحَ. فَقَالَ الآنَ قَالَ نَعَمْ. قَالَ أَنْظِرْنِي أُفِيضُ عَلَىَّ مَاءً. فَنَزَلَ ابْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ حَتَّى خَرَجَ، فَسَارَ بَيْنِي وَبَيْنَ أَبِي. فَقُلْتُ إِنْ كُنْتَ تُرِيدُ أَنْ تُصِيبَ السُّنَّةَ الْيَوْمَ فَاقْصُرِ الْخُطْبَةَ وَعَجِّلِ الْوُقُوفَ. فَقَالَ ابْنُ عُمَرَ صَدَقَ.
பாடம் : 90 அரஃபாவில் உரையைச் சுருக் கிக்கொள்ளல்
1663. சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மன்னர்) அப்துல் மலிக் பின் மர்வான், ஹஜ்ஜின்போது இப்னு உமர் (ரலி) அவர் களைப் பின்பற்றுமாறு (அமீர்) ஹஜ்ஜாஜுக் குக் கடிதம் எழுதினார். அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாளில் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தபோது இப்னு உமர் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது நானும் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் ஹஜ்ஜாஜின் கூடாரத்திற்குச் சென்று ‘எங்கே அவர்?’ என்று சப்தமிட்டார்கள். உடனே ஹஜ்ஜாஜ் வெளியே வந்தார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘புறப்படு வீராக!’ என்றார் ஹஜ்ஜாஜ், ‘இப்போதேவா?’ எனக் கேட்டதற்கு, ‘ஆம்’ என்றார்கள். ஹஜ்ஜாஜ் “நான் தலைக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு, இதோ புறப்படுகிறேன்; அதுவரை பொறுங்கள்” எனக் கூறினார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ்ஜாஜ் புறப்படும்வரை, (தமது வாகனத்திலிருந்து) இறங்கிக் காத்திருந்தார்கள். ஹஜ்ஜாஜ் எனக்கும் என் தந்தை (இப்னு உமரு)க்கு மிடையே நடந்துகொண்டிருந்தபோது நான் ஹஜ்ஜாஜிடம், “நீர் நபிவழியைப் பின்பற்ற விரும்பினால், உரையை (குத்பாவை)ச் சுருக்கி (அரஃபாவில்) தங்குவதைத் துரிதப்படுத்துவீராக!” என்றேன். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் “(சாலிம்) உண்மையே சொன்னார்” என்றார்கள்.

அத்தியாயம் : 25
1664. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا عَمْرٌو، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِيهِ، كُنْتُ أَطْلُبُ بَعِيرًا لِي. وَحَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ مُحَمَّدَ بْنَ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ أَضْلَلْتُ بَعِيرًا لِي، فَذَهَبْتُ أَطْلُبُهُ يَوْمَ عَرَفَةَ، فَرَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَاقِفًا بِعَرَفَةَ، فَقُلْتُ هَذَا وَاللَّهِ مِنَ الْحُمْسِ فَمَا شَأْنُهُ هَا هُنَا
பாடம் : 91 அரஃபாவில் தங்குதல்
1664. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நான் இஸ்லாத்தை ஏற்பதற்குமுன் ஒரு முறை) அரஃபா (துல்ஹஜ் ஒன்பதாம்) நாளன்று எனது ஒட்டகத்தைத் தொலைத்து விட்டேன். அதைத் தேடிக்கொண்டு வந்த போது, நபி (ஸல்) அவர்கள் அரஃபா பெரு வெளியில் தங்கியிருப்பதைக் கண்டேன்.

அப்போது நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் (நபி (ஸல்) அவர்கள்), கடினமான சமயப் பற்றுடைய (குறைஷிக் குலத்த)வர் ஆயிற்றே! இவருக்கு இங்கு என்ன வேலை?” என என்னுள் கூறிக் கொண்டேன்.49

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 25
1665. حَدَّثَنَا فَرْوَةُ بْنُ أَبِي الْمَغْرَاءِ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، قَالَ عُرْوَةُ كَانَ النَّاسُ يَطُوفُونَ فِي الْجَاهِلِيَّةِ عُرَاةً إِلاَّ الْحُمْسَ، وَالْحُمْسُ قُرَيْشٌ وَمَا وَلَدَتْ، وَكَانَتِ الْحُمْسُ يَحْتَسِبُونَ عَلَى النَّاسِ يُعْطِي الرَّجُلُ الرَّجُلَ الثِّيَابَ يَطُوفُ فِيهَا، وَتُعْطِي الْمَرْأَةُ الْمَرْأَةَ الثِّيَابَ تَطُوفُ فِيهَا، فَمَنْ لَمْ يُعْطِهِ الْحُمْسُ طَافَ بِالْبَيْتِ عُرْيَانًا، وَكَانَ يُفِيضُ جَمَاعَةُ النَّاسِ مِنْ عَرَفَاتٍ، وَيُفِيضُ الْحُمْسُ مِنْ جَمْعٍ. قَالَ وَأَخْبَرَنِي أَبِي عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ أَنَّ هَذِهِ الآيَةَ نَزَلَتْ فِي الْحُمْسِ {ثُمَّ أَفِيضُوا مِنْ حَيْثُ أَفَاضَ النَّاسُ} قَالَ كَانُوا يُفِيضُونَ مِنْ جَمْعٍ فَدُفِعُوا إِلَى عَرَفَاتٍ.
பாடம் : 91 அரஃபாவில் தங்குதல்
1665. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் மக்கள் நிர்வாணமாகவே (கஅபாவைச்) சுற்றி வருவார்கள்; ‘ஹும்ஸ்’ (கடினமான சமயப் பற்றுடையவர்)களைத் தவிர! ‘ஹும்ஸ்’ என்போர், குறைஷியரும் அவர்கள் பெற்றெடுத்த மக்களும் ஆவர்.50

இந்த ‘ஹும்ஸ்’கள் இறைவனுக்காக மக்களுக்கு நற்பணி ஆற்றிவந்தனர். அவர்களில் ஓர் ஆண் இன்னொரு ஆணுக்கு, தவாஃப் செய்வதற்காக ஆடை கொடுப்பார். ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்கு, தவாஃப் செய்வதற்காக ஆடை கொடுப்பார். ‘ஹும்ஸ்’கள் யாருக்கு ஆடை கொடுக்கவில்லையோ அவர் நிர்வாணமாக தவாஃப் செய்வார்.

மேலும், மக்கள் கூட்டம் அரஃபாவி லிருந்தே திரும்பிச் செல்வார்கள். ஆனால், (குறைஷியரான) ஹும்ஸ்களோ (எல்லாம் முடிந்த பின்பு) முஸ்தலிஃபாவிலிருந்து தான் திரும்புவார்கள்.

“பின்பு மக்கள் திரும்புகிற இடத்தி லிருந்து நீங்களும் திரும்புங்கள்” (2:199) எனும் இறைவசனம் ‘ஹும்ஸ்’கள் தொடர் பாகவே அருளப்பெற்றது என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அவர்கள் ‘ஜம்உ’ (முஸ்தலிஃபா) எனும் இடத்திலிருந்து திரும்பிச் செல்பவர்களா யிருந்தனர். எனவே, அரஃபாவிலிருந்து திரும்பிச் செல்லுமாறு அவர்கள் திருப்பி விடப்பட்டனர்.

அத்தியாயம் : 25
1666. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، أَنَّهُ قَالَ سُئِلَ أُسَامَةُ وَأَنَا جَالِسٌ، كَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَسِيرُ فِي حَجَّةِ الْوَدَاعِ حِينَ دَفَعَ قَالَ كَانَ يَسِيرُ الْعَنَقَ، فَإِذَا وَجَدَ فَجْوَةً نَصَّ. قَالَ هِشَامٌ وَالنَّصُّ فَوْقَ الْعَنَقِ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ فَجْوَةٌ مُتَّسَعٌ، وَالْجَمِيعُ فَجَوَاتٌ وَفِجَاءٌ، وَكَذَلِكَ رَكْوَةٌ وَرِكَاءٌ. مَنَاصٌ لَيْسَ حِينَ فِرَارٍ.
பாடம் : 92 அரஃபாவிலிருந்து திரும்பும்போது பயணிக்கும் முறை
1666. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உசாமா (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தபோது, “விடைபெறும் ஹஜ்ஜில் (அரஃபாவிலிருந்து முஸ்தலிஃபாவுக்குத்) திரும்பியபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பயண (வேக)ம் எவ்வாறு இருந்தது?” என உசாமா (ரலி) அவர்களிடம் வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிதமான வேகத்தில் பயணிப்பார்கள். (நெரிசல் இல்லாத) விசாலமான இடம் கிடைத்ததும் விரைவாகச் செல்வார்கள்” எனக் கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

(இங்கு மூலத்தில் ‘விரைவாகச் செல்லல்’ என்பதைக் குறிக்க ‘நஸ்ஸு’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது.) ‘நஸ்ஸு’ என்பது மிதமான வேகத்துக்கு (‘அனக்’) மேலான வேகத்தைக் குறிக்கும்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (இங்கு மூலத்தில் இடம்பெற்றுள்ள) ‘ஃபஜ்வத்’ எனும் சொல்லுக்கு ‘விசாலமானது’ என்பது பொருளாகும். ‘ஃபஜ்வாத்’, ‘ஃபிஜாஉ’ என்பவை இதன் பன்மைகளாகும்; ‘ரக்வத்’ (தோல் கிண்ணம்) என்பதற்கு ‘ரிகாஉ’ என்பது பன்மை என்பதைப்போல. (‘நஸ்ஸு’ என்பதிலிருந்து பிறந்த) ‘மனாஸ்’ எனும் சொல்லுக்கு ‘விரண்டோடும் நேரம்’ என்பது பொருள். “விரண்டோடி தப்பிக்கும் நேரமாக அது இல்லை” (38:3) என்கிறது குர்ஆன்.

அத்தியாயம் : 25
1667. حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم حَيْثُ أَفَاضَ مِنْ عَرَفَةَ مَالَ إِلَى الشِّعْبِ فَقَضَى حَاجَتَهُ فَتَوَضَّأَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتُصَلِّي فَقَالَ "" الصَّلاَةُ أَمَامَكَ "".
பாடம் : 93 அரஃபாவுக்கும் முஸ்தலிஃபாவுக்கும் இடையே (சிறிது நேரம்) தங்குதல்
1667. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து திரும்பும்போது ஒரு பள்ளத்தாக்கிற்குப் போய் தமது இயற்கைத் தேவைகளை நிறைவேற்றிவிட்டு, அங்கத் தூய்மை செய்துகொண்டார்கள். அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொழப் போகிறீர்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்)தான்” எனக் கூறினார்கள்.


அத்தியாயம் : 25
1668. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا جُوَيْرِيَةُ، عَنْ نَافِعٍ، قَالَ كَانَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ ـ رضى الله عنهما ـ يَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِجَمْعٍ، غَيْرَ أَنَّهُ يَمُرُّ بِالشِّعْبِ الَّذِي أَخَذَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَيَدْخُلُ فَيَنْتَفِضُ وَيَتَوَضَّأُ، وَلاَ يُصَلِّي حَتَّى يُصَلِّيَ بِجَمْعٍ.
பாடம் : 93 அரஃபாவுக்கும் முஸ்தலிஃபாவுக்கும் இடையே (சிறிது நேரம்) தங்குதல்
1668. நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்து (ஜம்உ செய்து) முஸ்தலிஃபாவில் தொழுப வராக இருந்தார்கள். ஆயினும் அவர்கள், வழியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்ற ஒதுங்கிய பள்ளத்தாக்குக்குச் சென்று, தமது தேவையை நிறைவேற்றி, அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள். (ஆனால்,) முஸ்தலிஃபாவுக்கு வந்த பிறகுதான் தொழுவார்கள்.


அத்தியாயம் : 25
1669. حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ أَبِي حَرْمَلَةَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ قَالَ رَدِفْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ عَرَفَاتٍ فَلَمَّا بَلَغَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الشِّعْبَ الأَيْسَرَ الَّذِي دُونَ الْمُزْدَلِفَةِ أَنَاخَ، فَبَالَ ثُمَّ جَاءَ فَصَبَبْتُ عَلَيْهِ الْوَضُوءَ، فَتَوَضَّأَ وُضُوءًا خَفِيفًا. فَقُلْتُ الصَّلاَةَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ " الصَّلاَةُ أَمَامَكَ ". فَرَكِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى أَتَى الْمُزْدَلِفَةَ، فَصَلَّى ثُمَّ رَدِفَ الْفَضْلُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَدَاةَ جَمْعٍ.
பாடம் : 93 அரஃபாவுக்கும் முஸ்தலிஃபாவுக்கும் இடையே (சிறிது நேரம்) தங்குதல்
1669. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அரஃபாவிலிருந்து திரும்பும்போது நான் வாகனத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இருந் தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்தலிபாஃவுக்கு அருகில் உள்ள இடப் புறப் பள்ளத்தாக்கை அடைந்ததும் ஒட்டகத்தை மண்டியிடவைத்துவிட்டுச் சிறுநீர் கழித்துவிட்டுப் பிறகு வந்தார்கள். நான் அவர்களுக்கு அங்கத் தூய்மை செய்யத் தண்ணீர் ஊற்றினேன். சுருக்கமாக அங்கத் தூய்மை செய்தார்கள்.

அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! தொழப்போகிறீர்களா?” எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபா வில்)தான்” எனக் கூறிவிட்டு, வாகனத்தில் ஏறி முஸ்தலிஃபா வந்ததும் தொழுதார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்படும் அதிகாலையில், ஃபள்ல் பின் அப்பாஸ் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாகனத்தில் அவர்களுக்குப் பின்னால் இருந்தார்கள்.


அத்தியாயம் : 25
1670. قَالَ كُرَيْبٌ فَأَخْبَرَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ عَنِ الْفَضْلِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى بَلَغَ الْجَمْرَةَ.
பாடம் : 93 அரஃபாவுக்கும் முஸ்தலிஃபாவுக்கும் இடையே (சிறிது நேரம்) தங்குதல்
1670. ஃபள்ல் (ரலி) கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஐம்ர(த்துல் அகபா)வை அடையும்வரை தல்பியா கூறிக்கொண்டேயிருந்தார்கள்.

அத்தியாயம் : 25
1671. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سُوَيْدٍ، حَدَّثَنِي عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، مَوْلَى الْمُطَّلِبِ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ جُبَيْرٍ، مَوْلَى وَالِبَةَ الْكُوفِيُّ حَدَّثَنِي ابْنُ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ دَفَعَ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم يَوْمَ عَرَفَةَ فَسَمِعَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَرَاءَهُ زَجْرًا شَدِيدًا وَضَرْبًا وَصَوْتًا لِلإِبِلِ فَأَشَارَ بِسَوْطِهِ إِلَيْهِمْ وَقَالَ "" أَيُّهَا النَّاسُ عَلَيْكُمْ بِالسَّكِينَةِ، فَإِنَّ الْبِرَّ لَيْسَ بِالإِيضَاعِ "". أَوْضَعُوا أَسْرَعُوا. خِلاَلَكُمْ مِنَ التَّخَلُّلِ بَيْنَكُمْ، وَفَجَّرْنَا خِلاَلَهُمَا. بَيْنَهُمَا.
பாடம் : 94 (அரஃபாவிலிருந்து) திரும்பும் போது அமைதியாகச் செல்லு மாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதும் சாட்டை யால் அவர்கள் சைகை செய்த தும்
1671. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அரஃபா (துல்ஹஜ் பத்தாம்) நாளன்று நபி (ஸல்) அவர்களுடன் நான் திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் ஒட்டகத்தை அடித்து விரட்டக்கூடிய கடும் (அதட்டல்) சப்தத்தையும் ஒட்டகம் அலறுவதையும் செவியுற்றார்கள். உடனே தமது சாட்டை யால் சைகை செய்து “மக்களே! அமைதி யைக் கடைப்பிடியுங்கள். நன்மையென்பது வேகத்தில் இல்லை” எனக் கூறினார்கள்.

(இங்கு மூலத்தில் ‘வேகம்’ என்பதைக் குறிக்க ‘ஈளாஉ’ எனும் சொல் ஆளப்பட்டுள் ளது. இச்சொல்லில் இருந்த பிறந்த வினைச்சொல்லான) ‘அவ்ளஊ’ என்பதற்கு ‘அவர்கள் தீவிரம் காட்டுவார்கள்’ என்பது பொருள். “உங்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேகம் காட்டியிருப்பார்கள்” (9:47) எனும் இறைவசனத்தில் இச்சொல் (அவ்ளஊ) இடம்பெறுகிறது. இதில் ‘கிலால(க்)கும்’ என்பதற்கு ‘உங்களுக்கு மத்தியில்’ (பைன(க்)கும்) என்பது பொருள் ஆகும். “அவ்விரண்டுக்கும் இடையில் (கிலால ஹுமா) ஒரு நதியை நாம் ஓடச் செய்தோம்” (18:33) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அத்தியாயம் : 25
1672. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ ـ رضى الله عنهما ـ أَنَّهُ سَمِعَهُ يَقُولُ دَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ عَرَفَةَ، فَنَزَلَ الشِّعْبَ، فَبَالَ ثُمَّ تَوَضَّأَ، وَلَمْ يُسْبِغِ الْوُضُوءَ. فَقُلْتُ لَهُ الصَّلاَةُ. فَقَالَ "" الصَّلاَةُ أَمَامَكَ "". فَجَاءَ الْمُزْدَلِفَةَ، فَتَوَضَّأَ، فَأَسْبَغَ، ثُمَّ أُقِيمَتِ الصَّلاَةُ، فَصَلَّى الْمَغْرِبَ، ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ، ثُمَّ أُقِيمَتِ الصَّلاَةُ فَصَلَّى، وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا.
பாடம் : 95 முஸ்தலிஃபாவில் (மஃக்ரிப், இஷா ஆகிய) இரு தொழுகை களைச் சேர்த்துத் தொழுவது51
1672. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அரஃபாவிலிருந்து (முஸ்தலிஃபா) திரும்பி னார்கள். வழியிலுள்ள பள்ளத்தாக்கில் இறங்கிச் சிறுநீர் கழித்தார்கள். பிறகு சுருக்கமாக அங்கத் தூய்மை செய்தார்கள். நான் அவர்களிடம் “தொழப்போகிறீர் களா?” என்றேன்.

அதற்கு அவர்கள் “தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்தான் தொழப்பட) இருக்கிறது!” என்றார்கள். பிறகு முஸ்தலிஃபாவிற்கு வந்து முழுமையாக அங்கத் தூய்மை செய்தார்கள். இகாமத் சொல்லப்பட்டதும் மஃக்ரிப் தொழுதார்கள். பிறகு ஒவ்வொருவரும் தமது ஒட்டகத் தைத் தத்தமது இருப்பிடத்தில் படுக்க வைத்தார்கள். பிறகு (இஷா) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் தொழுதார்கள். அவ்விரண்டுக்குமிடையே (வேறு எதுவும்) தொழவில்லை.

அத்தியாயம் : 25
1673. حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ جَمَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِجَمْعٍ، كُلُّ وَاحِدَةٍ مِنْهُمَا بِإِقَامَةٍ، وَلَمْ يُسَبِّحْ بَيْنَهُمَا وَلاَ عَلَى إِثْرِ كُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا.
பாடம் : 96 இரு வேளைத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுபவர் கடமையல்லாத (கூடுதல்) தொழுகைகளைத் தொழாதிருத்தல்
1673. இப்னு உமர் (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் சேர்த்துத் தொழுதார்கள். அவை ஒவ்வொன்றுக்கும் (தனித்தனி) இகாமத் சொல்லப்பட்டது. இரண்டிற்குமிடையிலோ ஒவ்வொன்றுக் கும் பின்போ கடமையல்லாத (கூடுதல்) தொழுகை எதையும் அவர்கள் தொழ வில்லை.


அத்தியாயம் : 25
1674. حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ أَخْبَرَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْخَطْمِيُّ، قَالَ حَدَّثَنِي أَبُو أَيُّوبَ الأَنْصَارِيُّ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم جَمَعَ فِي حَجَّةِ الْوَدَاعِ الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِالْمُزْدَلِفَةِ.
பாடம் : 96 இரு வேளைத் தொழுகைகளைச் சேர்த்துத் தொழுபவர் கடமையல்லாத (கூடுதல்) தொழுகைகளைத் தொழாதிருத்தல்
1674. அபூஅய்யூப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

விடைபெறும் ஹஜ்ஜின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷா வையும் இணைத்து (ஜம்உ செய்து) தொழுதார்கள்.

அத்தியாயம் : 25