1136. حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ حُصَيْنٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ حُذَيْفَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا قَامَ لِلتَّهَجُّدِ مِنَ اللَّيْلِ يَشُوصُ فَاهُ بِالسِّوَاكِ.
பாடம் : 9
இரவுத் தொழுகையில் நீண்ட நேரம் நிற்றல்
1136. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவில் ‘தஹஜ் ஜுத்’ தொழுவதற்காக எழும்போது, பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைச் சுத்தம் செய்)வார்கள்.10
அத்தியாயம் : 19
1136. ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவில் ‘தஹஜ் ஜுத்’ தொழுவதற்காக எழும்போது, பல் துலக்கு(ம் குச்சியால் தமது வாயைச் சுத்தம் செய்)வார்கள்.10
அத்தியாயம் : 19
1137. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ إِنَّ رَجُلاً قَالَ يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ صَلاَةُ اللَّيْلِ قَالَ "" مَثْنَى مَثْنَى، فَإِذَا خِفْتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ "".
பாடம் : 10
நபி (ஸல்) அவர்கள் இரவில் எப்படி, எத்தனை ரக்அத்கள் தொழுவார்கள்?
1137. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை எவ்வாறு (தொழ வேண்டும்)?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஆனால், சுப்ஹு (நேரம் வந்துவிட்டது) பற்றி நீர் அஞ்சினால், ஒரு ரக்அத் (வித்ர்) தொழுவீராக” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 19
1137. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை எவ்வாறு (தொழ வேண்டும்)?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஆனால், சுப்ஹு (நேரம் வந்துவிட்டது) பற்றி நீர் அஞ்சினால், ஒரு ரக்அத் (வித்ர்) தொழுவீராக” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 19
1138. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا يَحْيَى، عَنْ شُعْبَةَ، قَالَ حَدَّثَنِي أَبُو جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما ـ قَالَ كَانَ صَلاَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً. يَعْنِي بِاللَّيْلِ.
பாடம் : 10
நபி (ஸல்) அவர்கள் இரவில் எப்படி, எத்தனை ரக்அத்கள் தொழுவார்கள்?
1138. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பதிமூன்று ரக்அத்களாக இருந்தது.
அத்தியாயம் : 19
1138. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பதிமூன்று ரக்அத்களாக இருந்தது.
அத்தியாயம் : 19
1139. حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، قَالَ أَخْبَرَنَا إِسْرَائِيلُ، عَنْ أَبِي حَصِينٍ، عَنْ يَحْيَى بْنِ وَثَّابٍ، عَنْ مَسْرُوقٍ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ عَنْ صَلاَةِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِاللَّيْلِ. فَقَالَتْ سَبْعٌ وَتِسْعٌ وَإِحْدَى عَشْرَةَ سِوَى رَكْعَتَىِ الْفَجْرِ.
பாடம் : 10
நபி (ஸல்) அவர்கள் இரவில் எப்படி, எத்தனை ரக்அத்கள் தொழுவார்கள்?
1139. மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி கேட்டேன்.
அதற்கு அவர்கள் “ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) தவிர ஏழு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) பதினொன்று ரக்அத்கள் (தொழுவார்கள்)” என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 19
1139. மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை பற்றி கேட்டேன்.
அதற்கு அவர்கள் “ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) தவிர ஏழு ரக்அத்கள், (சில சமயம்) ஒன்பது ரக்அத்கள், (சில சமயம்) பதினொன்று ரக்அத்கள் (தொழுவார்கள்)” என்று பதிலளித்தார்கள்.
அத்தியாயம் : 19
1140. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا حَنْظَلَةُ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُصَلِّي مِنَ اللَّيْلِ ثَلاَثَ عَشْرَةَ رَكْعَةً مِنْهَا الْوِتْرُ وَرَكْعَتَا الْفَجْرِ.
பாடம் : 10
நபி (ஸல்) அவர்கள் இரவில் எப்படி, எத்தனை ரக்அத்கள் தொழுவார்கள்?
1140. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். வித்ர், ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) ஆகியவை அவற்றில் அடங்கும்.11
அத்தியாயம் : 19
1140. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் இரவில் பதிமூன்று ரக்அத்கள் தொழுவார்கள். வித்ர், ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத் (சுன்னத்) ஆகியவை அவற்றில் அடங்கும்.11
அத்தியாயம் : 19
1141. حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ حُمَيْدٍ، أَنَّهُ سَمِعَ أَنَسًا ـ رضى الله عنه ـ يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُفْطِرُ مِنَ الشَّهْرِ حَتَّى نَظُنَّ أَنْ لاَ يَصُومَ مِنْهُ، وَيَصُومُ حَتَّى نَظُنَّ أَنْ لاَ يُفْطِرَ مِنْهُ شَيْئًا، وَكَانَ لاَ تَشَاءُ أَنْ تَرَاهُ مِنَ اللَّيْلِ مُصَلِّيًا إِلاَّ رَأَيْتَهُ وَلاَ نَائِمًا إِلاَّ رَأَيْتَهُ. تَابَعَهُ سُلَيْمَانُ وَأَبُو خَالِدٍ الأَحْمَرُ عَنْ حُمَيْدٍ.
பாடம் : 11
இரவுத் தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் உறக்கத்தி லிருந்து எழுந்ததும், பின்னர் இரவுத் தொழுகை (கட்டாய நிலையிலிருந்து) மாற்றப்பட்ட தும்
உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகின்றான்:
போர்வை போர்த்திக்கொண்டிருப்ப வரே! இரவில் சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக! அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது (நேரம்) குறைத்துக்கொள்வீராக! அல்லது அதை விடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக! மேலும் குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக! நிச்சயமாக, நாம் விரைவில் கனமான (உறுதியான) ஒரு வாக்கை உமக்கு அருள்வோம்.
நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வழிபடு)வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங் கிணைக்க வல்லது. சொல்லைச் செம்மைப்படுத்த வல்லது. (நிச்சயமாக, உமக்குப் பகலில் (பணியாற்ற) நீண்ட ஓய்வு (நேரம்) உள்ளது. (73:1-7)
மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:
நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு குழுவினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவோ, அதில் பாதியோ, அதில் மூன்றில் ஒரு பாகத்திலோ நின்று வழிபடுகிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணிக்கமாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்துவிட்டான்.
எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும் அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் பயணிக்கும் வேறுசிலரும் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியும் மற்றச் சிலரும் உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்; தொழுகையைக் கடைப்பிடியுங்கள்; ஸகாத்தும் கொடுத்துவாருங்கள்.
அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடன் கொடுங்கள்; நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆன்மாக்களுக்காகச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர் களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மேலானதாகவும் நற்பலனில் மகத் தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே பாவமன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன்; மிக்க அருள் உடையவன். (73:20)
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
(73:6ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ‘நாஷிஅத்’ எனும் சொல்லின் வினைச் சொல்லான) ‘நஷஅ’ எனும் சொல்லுக்கு அபிசீனிய மொழியில் ‘நின்றான்’ என்பது பொருள். (இதே வசனத்திலுள்ள ‘வத்அன்’ எனும் சொல் மற்றோர் ஓதல் முறையில் ‘வித்அன்’ என்று ஓதப்பட்டுள்ளது. பொருள்:) சமன் செய்யக்கூடியது. அதாவது குர்ஆனுடன் உமது செவி, பார்வை, மனம் ஆகியவற்றை நன்கு இயைந்துபோகச் செய்யும்.
(9:37ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘லி யுவாத்திஊ’ எனும் சொற்றொடருக்கு ‘சமமாக்குவதற்காக’ என்பது பொருள்.
1141. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இம்மாதம் நோன்பு நோற்கமாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்குச் சில மாதங்களில் அவர்கள் (தொடர்ந்து) நோன்பு நோற்காமல் இருப்பார்கள். இம்மாதம் அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்கு அவர்கள் (சில மாதங்களில்) நோன்பு நோற்பார்கள்.
அவர்களை இரவில் தொழும் நிலையில் நீ காண விரும்பினால், அவ்வாறே அவர்களைக் காண்பாய். அவர்களை (இரவில்) உறங்கும் நிலையில் நீ காண விரும்பினால், அவ்வாறே காண்பாய்.12
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 19
1141. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இம்மாதம் நோன்பு நோற்கமாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்குச் சில மாதங்களில் அவர்கள் (தொடர்ந்து) நோன்பு நோற்காமல் இருப்பார்கள். இம்மாதம் அவர்கள் நோன்பை விடமாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்கு அவர்கள் (சில மாதங்களில்) நோன்பு நோற்பார்கள்.
அவர்களை இரவில் தொழும் நிலையில் நீ காண விரும்பினால், அவ்வாறே அவர்களைக் காண்பாய். அவர்களை (இரவில்) உறங்கும் நிலையில் நீ காண விரும்பினால், அவ்வாறே காண்பாய்.12
இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 19
1142. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَعْقِدُ الشَّيْطَانُ عَلَى قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلاَثَ عُقَدٍ، يَضْرِبُ كُلَّ عُقْدَةٍ عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ، فَإِنِ اسْتَيْقَظَ فَذَكَرَ اللَّهَ انْحَلَّتْ عُقْدَةٌ، فَإِنْ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَةٌ، فَإِنْ صَلَّى انْحَلَّتْ عُقْدَةٌ فَأَصْبَحَ نَشِيطًا طَيِّبَ النَّفْسِ، وَإِلاَّ أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلاَنَ "".
பாடம் : 12
இரவில் தொழாவிட்டால் தலை யின் பின்பக்கத்தில் ஷைத்தான் முடிச்சுப் போடுகிறான்.
1142. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சின்போதும் “இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு” என்று கூறி (உங்களை விழிக்க விடாமல் உறங்கவைத்து)விடுகிறான்.
அவர் (அவனது கூற்றை ஏற்காமல்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்தால், மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் (இரவுத் தொழுகையோ ஃபஜ்ரோ) தொழுதுவிட்டால், முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்துவிடுகின்றன. அவர் உற்சாகத்துடனும் நல்ல மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையெனில், மந்தமான மனநிலையுடனும் சோம்பலுட னும் காலைப் பொழுதை அடைவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 19
1142. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் உறங்கும்போது உங்கள் தலையின் பின்பக்கத்தில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போட்டு விடுகிறான். ஒவ்வொரு முடிச்சின்போதும் “இன்னும் உனக்கு நீண்ட இரவு (ஓய்வெடுக்க எஞ்சி) இருக்கிறது. ஆகவே, நீ உறங்கு” என்று கூறி (உங்களை விழிக்க விடாமல் உறங்கவைத்து)விடுகிறான்.
அவர் (அவனது கூற்றை ஏற்காமல்) கண் விழித்து அல்லாஹ்வை நினைவுகூர்ந்தால், ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்தால், மற்றொரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது. அவர் (இரவுத் தொழுகையோ ஃபஜ்ரோ) தொழுதுவிட்டால், முடிச்சுகள் முழுவதும் அவிழ்ந்துவிடுகின்றன. அவர் உற்சாகத்துடனும் நல்ல மனநிலையுடனும் காலைப் பொழுதை அடைவார். இல்லையெனில், மந்தமான மனநிலையுடனும் சோம்பலுட னும் காலைப் பொழுதை அடைவார்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 19
1143. حَدَّثَنَا مُؤَمَّلُ بْنُ هِشَامٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا عَوْفٌ، قَالَ حَدَّثَنَا أَبُو رَجَاءٍ، قَالَ حَدَّثَنَا سَمُرَةُ بْنُ جُنْدَبٍ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي الرُّؤْيَا قَالَ "" أَمَّا الَّذِي يُثْلَغُ رَأْسُهُ بِالْحَجَرِ فَإِنَّهُ يَأْخُذُ الْقُرْآنَ فَيَرْفِضُهُ وَيَنَامُ عَنِ الصَّلاَةِ الْمَكْتُوبَةِ "".
பாடம் : 12
இரவில் தொழாவிட்டால் தலை யின் பின்பக்கத்தில் ஷைத்தான் முடிச்சுப் போடுகிறான்.
1143. சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், தாம் கனவில் கண்ட கல்லால் தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிடுகையில், “அவர் குர்ஆனைக் கற்று அ(தன்படி செயல்படுவ)தை விட்டுவிட்டவர்; கடமை யான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்” என்று கூறினார்கள்.13
அத்தியாயம் : 19
1143. சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், தாம் கனவில் கண்ட கல்லால் தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிடுகையில், “அவர் குர்ஆனைக் கற்று அ(தன்படி செயல்படுவ)தை விட்டுவிட்டவர்; கடமை யான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்” என்று கூறினார்கள்.13
அத்தியாயம் : 19
1144. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، قَالَ حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ ـ رضى الله عنه ـ قَالَ ذُكِرَ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم رَجُلٌ فَقِيلَ مَا زَالَ نَائِمًا حَتَّى أَصْبَحَ مَا قَامَ إِلَى الصَّلاَةِ. فَقَالَ "" بَالَ الشَّيْطَانُ فِي أُذُنِهِ "".
பாடம் : 13
ஒருவர் தொழாமல் உறங்குகிறார் எனில், அவரது காதில் ஷைத் தான் சிறுநீர் கழித்துவிட்டான் என்று பொருள்.
1144. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம். ஒரு மனிதர் பொழுது விடியும்வரை தொழுகைக்கு எழாமல் உறங்கிக்கொண்டேயிருப்பது பற்றிக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று கூறினார்கள்.14
அத்தியாயம் : 19
1144. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்களிடம். ஒரு மனிதர் பொழுது விடியும்வரை தொழுகைக்கு எழாமல் உறங்கிக்கொண்டேயிருப்பது பற்றிக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், “அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்” என்று கூறினார்கள்.14
அத்தியாயம் : 19
1145. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، وَأَبِي عَبْدِ اللَّهِ الأَغَرِّ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" يَنْزِلُ رَبُّنَا تَبَارَكَ وَتَعَالَى كُلَّ لَيْلَةٍ إِلَى السَّمَاءِ الدُّنْيَا حِينَ يَبْقَى ثُلُثُ اللَّيْلِ الآخِرُ يَقُولُ مَنْ يَدْعُونِي فَأَسْتَجِيبَ لَهُ مَنْ يَسْأَلُنِي فَأُعْطِيَهُ مَنْ يَسْتَغْفِرُنِي فَأَغْفِرَ لَهُ "".
பாடம் : 14
இரவின் இறுதிப் பகுதியில் பிரார்த்திப்பதும் தொழுவதும்
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் கூறுகின்றான்:
அவர்கள் இரவில் குறைவாகவே உறங்குவார்கள் (யஹ்ஜஊன்). இரவின் இறுதி நேரங்களில் (சஹர்) பாவமன்னிப்புக் கோரிக்கொண்டிருப்பார்கள். (51:17,18)
1145. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயர்வும் வளமும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும், இரவின் இறுதி மூன்றிலோரு பகுதி இருக்கும்போது கீழ் வானிற்கு இறங்கிவந்து, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னி டம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்” என்று கூறுகின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 19
1145. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உயர்வும் வளமும் மிக்க நம் இறைவன் ஒவ்வோர் இரவிலும், இரவின் இறுதி மூன்றிலோரு பகுதி இருக்கும்போது கீழ் வானிற்கு இறங்கிவந்து, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை நான் ஏற்கிறேன். என்னி டம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்” என்று கூறுகின்றான்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 19
1146. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، حَدَّثَنَا شُعْبَةُ،. وَحَدَّثَنِي سُلَيْمَانُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنِ الأَسْوَدِ، قَالَ سَأَلْتُ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَيْفَ صَلاَةُ النَّبِيِّ صلى الله عليه وسلم بِاللَّيْلِ قَالَتْ كَانَ يَنَامُ أَوَّلَهُ وَيَقُومُ آخِرَهُ، فَيُصَلِّي ثُمَّ يَرْجِعُ إِلَى فِرَاشِهِ، فَإِذَا أَذَّنَ الْمُؤَذِّنُ وَثَبَ، فَإِنْ كَانَ بِهِ حَاجَةٌ اغْتَسَلَ، وَإِلاَّ تَوَضَّأَ وَخَرَجَ.
பாடம் : 15
இரவின் ஆரம்பப் பகுதியில் உறங்கிவிட்டு இறுதிப் பகுதியில் விழித்திருத்தல்
(இரவின் ஆரம்ப நேரத்தில் தொழ முயன்ற) அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள், ‘உறங்குங்கள்!’ என்றார்கள். இரவின் கடைசி நேரம் ஆனதும் ‘இப்போது எழுங்கள்!’ என்று கூறினார்கள்.
இதை அறிந்த நபி (ஸல்) அவர்கள், “சல்மான் சொன்னது உண்மையே” என்று குறிப்பிட்டார்கள்.15
1146. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இரவின் ஆரம்பப் பகுதியில் நபி (ஸல்) அவர்கள் உறங்கு வார்கள். இரவின் இறுதிப் பகுதியில் எழுந்து தொழுவார்கள். பிறகு தமது படுக்கைக்குத் திரும்புவார்கள். தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொன்னதும் விரைவாக எழுந்து குளிக்க வேண்டிய அவசியம் இருந்தால் குளிப்பார்கள். இல்லாவிட்டால், அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு (தொழுகைக்காகப்) புறப்பட்டுவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 19
1146. அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “இரவின் ஆரம்பப் பகுதியில் நபி (ஸல்) அவர்கள் உறங்கு வார்கள். இரவின் இறுதிப் பகுதியில் எழுந்து தொழுவார்கள். பிறகு தமது படுக்கைக்குத் திரும்புவார்கள். தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) தொழுகை அறிவிப்பு (பாங்கு) சொன்னதும் விரைவாக எழுந்து குளிக்க வேண்டிய அவசியம் இருந்தால் குளிப்பார்கள். இல்லாவிட்டால், அங்கத் தூய்மை (உளூ) செய்துவிட்டு (தொழுகைக்காகப்) புறப்பட்டுவிடுவார்கள்” என்று பதிலளித்தார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 19
1147. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّهُ، سَأَلَ عَائِشَةَ ـ رضى الله عنها ـ كَيْفَ كَانَتْ صَلاَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي رَمَضَانَ فَقَالَتْ مَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَزِيدُ فِي رَمَضَانَ وَلاَ فِي غَيْرِهِ عَلَى إِحْدَى عَشْرَةَ رَكْعَةً، يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي أَرْبَعًا فَلاَ تَسَلْ عَنْ حُسْنِهِنَّ وَطُولِهِنَّ، ثُمَّ يُصَلِّي ثَلاَثًا، قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَتَنَامُ قَبْلَ أَنْ تُوتِرَ. فَقَالَ "" يَا عَائِشَةُ، إِنَّ عَيْنَىَّ تَنَامَانِ وَلاَ يَنَامُ قَلْبِي "".
பாடம் : 16
ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை
1147. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமலான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொன்று ரக்அத்களை விட அதிகமாகத் தொழமாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார் கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.
மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் தொழுவதற்குமுன் உறங்குவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என் கண்கள்தான் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 19
1147. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமலான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொன்று ரக்அத்களை விட அதிகமாகத் தொழமாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார் கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.
மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் தொழுவதற்குமுன் உறங்குவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “என் கண்கள்தான் உறங்குகின்றன; என் உள்ளம் உறங்குவதில்லை” என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம் : 19
1148. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ هِشَامٍ، قَالَ أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ مَا رَأَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقْرَأُ فِي شَىْءٍ مِنْ صَلاَةِ اللَّيْلِ جَالِسًا، حَتَّى إِذَا كَبِرَ قَرَأَ جَالِسًا، فَإِذَا بَقِيَ عَلَيْهِ مِنَ السُّورَةِ ثَلاَثُونَ أَوْ أَرْبَعُونَ آيَةً قَامَ فَقَرَأَهُنَّ ثُمَّ رَكَعَ.
பாடம் : 16
ரமளானிலும் ரமளான் அல்லாத நாட்களிலும் நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை
1148. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (முதுமை அடை யும்வரை) இரவுத் தொழுகை எதிலும் அமர்ந்து (குர்ஆன்) ஓதியதை நான் பார்த்ததில்லை. அவர்கள் முதுமை யடைந்தபின் அமர்ந்துகொண்டு ஓதினார் கள். ஓர் அத்தியாயத்தில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது, எழுந்து நின்று அவற்றை ஓதிவிட்டுப் பிறகு ருகூஉ செய்வார்கள்.
அத்தியாயம் : 19
1148. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (முதுமை அடை யும்வரை) இரவுத் தொழுகை எதிலும் அமர்ந்து (குர்ஆன்) ஓதியதை நான் பார்த்ததில்லை. அவர்கள் முதுமை யடைந்தபின் அமர்ந்துகொண்டு ஓதினார் கள். ஓர் அத்தியாயத்தில் முப்பது அல்லது நாற்பது வசனங்கள் எஞ்சியிருக்கும்போது, எழுந்து நின்று அவற்றை ஓதிவிட்டுப் பிறகு ருகூஉ செய்வார்கள்.
அத்தியாயம் : 19
1149. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ أَبِي حَيَّانَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لِبِلاَلٍ عِنْدَ صَلاَةِ الْفَجْرِ "" يَا بِلاَلُ حَدِّثْنِي بِأَرْجَى عَمَلٍ عَمِلْتَهُ فِي الإِسْلاَمِ، فَإِنِّي سَمِعْتُ دَفَّ نَعْلَيْكَ بَيْنَ يَدَىَّ فِي الْجَنَّةِ "". قَالَ مَا عَمِلْتُ عَمَلاً أَرْجَى عِنْدِي أَنِّي لَمْ أَتَطَهَّرْ طُهُورًا فِي سَاعَةِ لَيْلٍ أَوْ نَهَارٍ إِلاَّ صَلَّيْتُ بِذَلِكَ الطُّهُورِ مَا كُتِبَ لِي أَنْ أُصَلِّيَ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ دَفَّ نَعْلَيْكَ يَعْنِي تَحْرِيكَ.
பாடம் : 17
இரவிலும் பகலிலும் அங்கத் தூய்மை (உளூ) உடன் இருப்ப தன் சிறப்பும் அங்கத் தூய்மை செய்தபின் தொழுவதன் மேன்மையும்
1149. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அதிகாலைத் தொழுகை யின்போது நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்தபின் நீங்கள் ஈடுபாட்டுடன் செய்த ஒரு நற்செயல் குறித்து எனக்குச் சொல்வீராக! ஏனெனில், சொர்க்கத்தில் எனக்கு முன்பாக, (நீங்கள் நடந்து செல்லும்) காலணி ஓசையை நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள்.
அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் அங்கத் தூய்மை (உளூ) செய்தாலும் அந்த அங்கத் தூய்மை மூலம் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டி ருப்பதை நான் தொழாமல் இருந்ததில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்ததாக நான் கருது கிறேன்” என்று கூறினார்கள்.16
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘தஃப்ப நஅலைக்க’ எனும் சொற்றொடருக்கு ‘உங்கள் காலணி ஓசை’ என்பது பொருள்.
அத்தியாயம் : 19
1149. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு நாள்) அதிகாலைத் தொழுகை யின்போது நபி (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், “பிலாலே! இஸ்லாத்தில் இணைந்தபின் நீங்கள் ஈடுபாட்டுடன் செய்த ஒரு நற்செயல் குறித்து எனக்குச் சொல்வீராக! ஏனெனில், சொர்க்கத்தில் எனக்கு முன்பாக, (நீங்கள் நடந்து செல்லும்) காலணி ஓசையை நான் செவியுற்றேன்” என்று கூறினார்கள்.
அதற்கு பிலால் (ரலி) அவர்கள், “நான் இரவிலோ பகலிலோ எந்த நேரத்தில் அங்கத் தூய்மை (உளூ) செய்தாலும் அந்த அங்கத் தூய்மை மூலம் நான் தொழ வேண்டுமென என் விதியில் எழுதப்பட்டி ருப்பதை நான் தொழாமல் இருந்ததில்லை. இந்த நற்செயலைத்தான் நான் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்ததாக நான் கருது கிறேன்” என்று கூறினார்கள்.16
அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘தஃப்ப நஅலைக்க’ எனும் சொற்றொடருக்கு ‘உங்கள் காலணி ஓசை’ என்பது பொருள்.
அத்தியாயம் : 19
1150. حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ دَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَإِذَا حَبْلٌ مَمْدُودٌ بَيْنَ السَّارِيَتَيْنِ فَقَالَ "" مَا هَذَا الْحَبْلُ "". قَالُوا هَذَا حَبْلٌ لِزَيْنَبَ فَإِذَا فَتَرَتْ تَعَلَّقَتْ. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" لاَ، حُلُّوهُ، لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ، فَإِذَا فَتَرَ فَلْيَقْعُدْ "".
பாடம் : 18
வழிபாடுகளில் (சக்திக்கு மீறி) சிரமங்களை உருவாக்கிக் கொள்ளலாகாது.17
1150. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குள்) நுழைந்தபோது, இரு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. “இந்தக் கயிறு என்ன (ஏன்)?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், “இது ஸைனப் (ரலி) அவர்களுக்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும்போது) சோர்வடைந் தால் இந்தக் கயிற்றைப் பற்றிக்கொள்வார்” என்று கூறினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம். இதை அவிழ்த்துவிடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகமாக இருக்கும் போது (கூடுதலான தொழுகைகளைத்) தொழட்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்து கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 19
1150. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசலுக்குள்) நுழைந்தபோது, இரு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. “இந்தக் கயிறு என்ன (ஏன்)?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், “இது ஸைனப் (ரலி) அவர்களுக்கு உரியதாகும்; அவர் (நின்று தொழும்போது) சோர்வடைந் தால் இந்தக் கயிற்றைப் பற்றிக்கொள்வார்” என்று கூறினார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “வேண்டாம். இதை அவிழ்த்துவிடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகமாக இருக்கும் போது (கூடுதலான தொழுகைகளைத்) தொழட்டும். சோர்வடைந்தால் உட்கார்ந்து கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 19
1151. قَالَ وَقَالَ عَبْدُ اللَّهِ بْنِ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ كَانَتْ عِنْدِي امْرَأَةٌ مِنْ بَنِي أَسَدٍ فَدَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ "" مَنْ هَذِهِ "". قُلْتُ فُلاَنَةُ لاَ تَنَامُ بِاللَّيْلِ. فَذُكِرَ مِنْ صَلاَتِهَا فَقَالَ "" مَهْ عَلَيْكُمْ مَا تُطِيقُونَ مِنَ الأَعْمَالِ، فَإِنَّ اللَّهَ لاَ يَمَلُّ حَتَّى تَمَلُّوا "".
பாடம் : 18
வழிபாடுகளில் (சக்திக்கு மீறி) சிரமங்களை உருவாக்கிக் கொள்ளலாகாது.17
1151. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ‘பனூ அசத்’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) வந்து, “யார் இவர்?” என்று கேட்டார்கள். நான் “இவர் இன்னார்” என்று கூறிவிட்டு, “இரவெல்லாம் உறங்கமாட்டார் (தொழுதுகொண்டே இருப்பார்) என்று அவரது தொழுகை குறித்து கூறப்படுகிறது என்றேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் “போதும் நிறுத்து!” என்று கூறிவிட்டு, “(வழிபாடுகள் உள்ளிட்ட) நற்செயல்களில் உங்களால் இயன்றதையே (நிலையாகச்) செய்துவாருங்கள். நிச்சயமாக நீங்கள் சடைவடையாத வரை அல்லாஹ்வும் சடைவடையமாட்டான்” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 19
1151. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
என்னிடம் ‘பனூ அசத்’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) வந்து, “யார் இவர்?” என்று கேட்டார்கள். நான் “இவர் இன்னார்” என்று கூறிவிட்டு, “இரவெல்லாம் உறங்கமாட்டார் (தொழுதுகொண்டே இருப்பார்) என்று அவரது தொழுகை குறித்து கூறப்படுகிறது என்றேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் “போதும் நிறுத்து!” என்று கூறிவிட்டு, “(வழிபாடுகள் உள்ளிட்ட) நற்செயல்களில் உங்களால் இயன்றதையே (நிலையாகச்) செய்துவாருங்கள். நிச்சயமாக நீங்கள் சடைவடையாத வரை அல்லாஹ்வும் சடைவடையமாட்டான்” என்று கூறினார்கள்.
அத்தியாயம் : 19
1152. حَدَّثَنَا عَبَّاسُ بْنُ الْحُسَيْنِ، حَدَّثَنَا مُبَشِّرٌ، عَنِ الأَوْزَاعِيِّ،. وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَبُو الْحَسَنِ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا عَبْدَ اللَّهِ، لاَ تَكُنْ مِثْلَ فُلاَنٍ، كَانَ يَقُومُ اللَّيْلَ فَتَرَكَ قِيَامَ اللَّيْلِ "". وَقَالَ هِشَامٌ حَدَّثَنَا ابْنُ أَبِي الْعِشْرِينَ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى، عَنْ عُمَرَ بْنِ الْحَكَمِ بْنِ ثَوْبَانَ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، مِثْلَهُ. وَتَابَعَهُ عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ عَنِ الأَوْزَاعِيِّ،.
பாடம் : 19
இரவுத் தொழுகை தொழுது வருபவர் அதைக் கைவிடக் கூடாது.
1152. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ்! இரவில் (அதிகமாக) நின்று வழிபாடு செய்துவிட்டு, இறுதியில் இரவுத் தொழுகையையே கைவிட வேண்டிய நிலைக்கு ஆளான இன்ன மனிதரைப் போன்று நீரும் ஆகிவிட வேண்டாம்” என்று கூறி னார்கள்.18
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 19
1152. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “அப்துல்லாஹ்! இரவில் (அதிகமாக) நின்று வழிபாடு செய்துவிட்டு, இறுதியில் இரவுத் தொழுகையையே கைவிட வேண்டிய நிலைக்கு ஆளான இன்ன மனிதரைப் போன்று நீரும் ஆகிவிட வேண்டாம்” என்று கூறி னார்கள்.18
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 19
1153. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنْ أَبِي الْعَبَّاسِ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ـ رضى الله عنهما ـ قَالَ لِي النَّبِيُّ صلى الله عليه وسلم "" أَلَمْ أُخْبَرْ أَنَّكَ تَقُومُ اللَّيْلَ وَتَصُومُ النَّهَارَ "" قُلْتُ إِنِّي أَفْعَلُ ذَلِكَ. قَالَ "" فَإِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ هَجَمَتْ عَيْنُكَ وَنَفِهَتْ نَفْسُكَ، وَإِنَّ لِنَفْسِكَ حَقٌّ، وَلأَهْلِكَ حَقٌّ، فَصُمْ وَأَفْطِرْ، وَقُمْ وَنَمْ "".
பாடம் : 20
1153. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “நீர் இரவெல்லாம் நின்று வழிபடுவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் கேள்விப்பட்டேனே (உண்மையா)?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அப்படித்தான் செய்கிறேன்” என்றேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் இவ்வாறு செய்தால், உம்முடைய கண்கள் சொருகிவிடும்; உமது உடல் நலிந்துவிடும். நீர் உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன; உம்மு டைய குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன. எனவே, நீர் (ஒரு நாள்) நோன்பு நோற்பீ ராக! (ஒரு நாள்) நோன்பை விட்டுவிடு வீராக! (இரவில் சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக!” என்று கூறினார்கள்.19
அத்தியாயம் : 19
1153. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், “நீர் இரவெல்லாம் நின்று வழிபடுவதாகவும் பகலெல்லாம் நோன்பு நோற்பதாகவும் கேள்விப்பட்டேனே (உண்மையா)?” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அப்படித்தான் செய்கிறேன்” என்றேன்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீர் இவ்வாறு செய்தால், உம்முடைய கண்கள் சொருகிவிடும்; உமது உடல் நலிந்துவிடும். நீர் உமது உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன; உம்மு டைய குடும்பத்தாருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு உள்ளன. எனவே, நீர் (ஒரு நாள்) நோன்பு நோற்பீ ராக! (ஒரு நாள்) நோன்பை விட்டுவிடு வீராக! (இரவில் சிறிது நேரம்) தொழுவீராக! (சிறிது நேரம்) உறங்குவீராக!” என்று கூறினார்கள்.19
அத்தியாயம் : 19
1154. حَدَّثَنَا صَدَقَةُ بْنُ الْفَضْلِ، أَخْبَرَنَا الْوَلِيدُ، عَنِ الأَوْزَاعِيِّ، قَالَ حَدَّثَنِي عُمَيْرُ بْنُ هَانِئٍ، قَالَ حَدَّثَنِي جُنَادَةُ بْنُ أَبِي أُمَيَّةَ، حَدَّثَنِي عُبَادَةُ بْنُ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" مَنْ تَعَارَّ مِنَ اللَّيْلِ فَقَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ، وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ. الْحَمْدُ لِلَّهِ، وَسُبْحَانَ اللَّهِ، وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ، وَلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ. ثُمَّ قَالَ اللَّهُمَّ اغْفِرْ لِي. أَوْ دَعَا اسْتُجِيبَ، فَإِنْ تَوَضَّأَ وَصَلَّى قُبِلَتْ صَلاَتُهُ "".
பாடம் : 21
இரவில் உறக்கம் கலைந்தவர் தொழுவதன் சிறப்பு
1154. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இரவில் உறக்கம் கலைந்ததோடு வாய்விட்டு, “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்து லில்லாஹி, வ சுப்ஹானல்லாஹி, வ லா இலாஹ இல்லல்லாஹு. வல்லாஹு அக்பர். வ லா ஹவ்ல, வ லா குவ்வத்த இல்லா பில்லாஹ்”
(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு இணையானவர் யாரும் இல்லை; ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது; புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன; அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைத் தவிர வேறு இறையில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகுவதோ நன்மை செய்யும் ஆற்றல் பெறுவதோ கிடையாது) என்று கூறிவிட்டு,
‘அல்லாஹும்மஃக்பிர்லீ’ (இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக!) என்றோ, அல்லது வேறு பிரார்த்தனையோ புரிந்தால் அவை ஏற்கப்படும். அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக்கொள்ளப்படும்.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 19
1154. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இரவில் உறக்கம் கலைந்ததோடு வாய்விட்டு, “லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து. வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்ஹம்து லில்லாஹி, வ சுப்ஹானல்லாஹி, வ லா இலாஹ இல்லல்லாஹு. வல்லாஹு அக்பர். வ லா ஹவ்ல, வ லா குவ்வத்த இல்லா பில்லாஹ்”
(அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் ஏகன்; அவனுக்கு இணையானவர் யாரும் இல்லை; ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது; புகழ் அனைத்தும் அவனுக்கே உரியன; அவன் அனைத்தின் மீதும் ஆற்றல் உள்ளவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைத் தவிர வேறு இறையில்லை. அல்லாஹ் மிகப் பெரியவன்; அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகுவதோ நன்மை செய்யும் ஆற்றல் பெறுவதோ கிடையாது) என்று கூறிவிட்டு,
‘அல்லாஹும்மஃக்பிர்லீ’ (இறைவா! எனக்கு மன்னிப்பு அளிப்பாயாக!) என்றோ, அல்லது வேறு பிரார்த்தனையோ புரிந்தால் அவை ஏற்கப்படும். அவர் அங்கத் தூய்மை (உளூ) செய்து தொழுதால் அத்தொழுகை ஒப்புக்கொள்ளப்படும்.
இதை உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அத்தியாயம் : 19
1155. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي الْهَيْثَمُ بْنُ أَبِي سِنَانٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ وَهُوَ يَقْصُصُ فِي قَصَصِهِ وَهُوَ يَذْكُرُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ أَخًا لَكُمْ لاَ يَقُولُ الرَّفَثَ. يَعْنِي بِذَلِكَ عَبْدَ اللَّهِ بْنَ رَوَاحَةَ وَفِينَا رَسُولُ اللَّهِ يَتْلُو كِتَابَهُ إِذَا انْشَقَّ مَعْرُوفٌ مِنَ الْفَجْرِ سَاطِعُ أَرَانَا الْهُدَى بَعْدَ الْعَمَى فَقُلُوبُنَا بِهِ مُوقِنَاتٌ أَنَّ مَا قَالَ وَاقِعُ يَبِيتُ يُجَافِي جَنْبَهُ عَنْ فِرَاشِهِ إِذَا اسْتَثْقَلَتْ بِالْمُشْرِكِينَ الْمَضَاجِعُ تَابَعَهُ عُقَيْلٌ. وَقَالَ الزُّبَيْدِيُّ أَخْبَرَنِي الزُّهْرِيُّ عَنْ سَعِيدٍ وَالأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه.
பாடம் : 21
இரவில் உறக்கம் கலைந்தவர் தொழுவதன் சிறப்பு
1155. ஹைஸம் பின் அபீசினான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் உரை யாற்றிக்கொண்டிருந்தபோது, தமது பேச்சி னிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு, “உங்களுடைய சகோதரர் எதையும் தவறாகச் சொல்பவர் அல்லர்” என்று குறிப்பிட்டுவிட்டு, (நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர் இயற்றிய) பின்வரும் பாடல் வரிகளை எடுத்துரைத் தார்கள்:
எங்களிடையே
இறைவேதத்தை ஓதுகிறார்
இறைத்தூதர்
வைகறை புலரும்போது!
எங்களுக்கு
நல்வழி காட்டினார்
நாங்கள் இருந்ததோ இருட்டில்!
அவர்
சொன்னதெல்லாம் நடக்கும்
இப்போது எம்
இதயங்களுக்கு உறுதி!
இரவில் அவர் விலா
படுக்கைக்கு
அந்நியம்
இணைவைப்பாளர்களோ
மஞ்சங்களில் தஞ்சம்!
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 19
1155. ஹைஸம் பின் அபீசினான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அபூஹுரைரா (ரலி) அவர்கள் உரை யாற்றிக்கொண்டிருந்தபோது, தமது பேச்சி னிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது கவிஞர்) அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு, “உங்களுடைய சகோதரர் எதையும் தவறாகச் சொல்பவர் அல்லர்” என்று குறிப்பிட்டுவிட்டு, (நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர் இயற்றிய) பின்வரும் பாடல் வரிகளை எடுத்துரைத் தார்கள்:
எங்களிடையே
இறைவேதத்தை ஓதுகிறார்
இறைத்தூதர்
வைகறை புலரும்போது!
எங்களுக்கு
நல்வழி காட்டினார்
நாங்கள் இருந்ததோ இருட்டில்!
அவர்
சொன்னதெல்லாம் நடக்கும்
இப்போது எம்
இதயங்களுக்கு உறுதி!
இரவில் அவர் விலா
படுக்கைக்கு
அந்நியம்
இணைவைப்பாளர்களோ
மஞ்சங்களில் தஞ்சம்!
இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
அத்தியாயம் : 19