948. حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، قَالَ أَخَذَ عُمَرُ جُبَّةً مِنْ إِسْتَبْرَقٍ تُبَاعُ فِي السُّوقِ، فَأَخَذَهَا فَأَتَى رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ابْتَعْ هَذِهِ تَجَمَّلْ بِهَا لِلْعِيدِ وَالْوُفُودِ. فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ "". فَلَبِثَ عُمَرُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَلْبَثَ، ثُمَّ أَرْسَلَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِجُبَّةِ دِيبَاجٍ، فَأَقْبَلَ بِهَا عُمَرُ، فَأَتَى بِهَا رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ قُلْتَ "" إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ "". وَأَرْسَلْتَ إِلَىَّ بِهَذِهِ الْجُبَّةِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" تَبِيعُهَا أَوْ تُصِيبُ بِهَا حَاجَتَكَ "".
பாடம் : 1 இரு பெருநாட்களும் அவற் றில் அலங்காரம் செய்துகொள் வதும்
948. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) உமர் (ரலி) அவர்கள் கடைத்தெருவில் விற்பனை செய்யப் பட்ட தடித்த பட்டு நீளங்கி ஒன்றை விலைபேச முற்பட்டார்கள். அதை எடுத்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதைத் தாங்கள் வாங்கி பெருநாளிலும் தூதுக் குழுக்கள் தங்களிடம் வரும்போதும் (அணிந்து) அலங்கரித்துக்கொள்ளலாமே!” என்று கூறினார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ் வுலக) ஆடையாகும்” என்று கூறினார்கள்.

(பிறகு என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ் நாடிய நாட்கள்வரை (இது பற்றி ஏதும் கேட்காமல் பொறுமை யாக) இருந்தார்கள். பிறகு (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் (ரலி) அவர்களுக்கு அலங்காரப் பட்டாலான நீளங்கி ஒன்றைக் கொடுத் தனுப்பினார்கள். அதைப் பெற்றுக்கொண்ட உமர் (ரலி) அவர்கள் அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ‘இது (மறுமையில்) எந்தப் பேறும் இல்லாத (ஆட)வர்களின் (இவ்வுலக) ஆடை’ என்று நீங்கள் குறிப்பிட்டீர்கள். (பிறகு) நீங்களே இந்த அங்கியை எனக்குக் கொடுத்தனுப்பியுள்ளீர்களே?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதை நீங்கள் விற்றுவிடலாம்; அல்லது இதன் மூலம் உங்களது (வேறு ஏதேனும்) தேவையைப் பூர்த்தி செய்துகொள்ளலாம் (என்பதற்காகவே வழங்கினேன்)” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 13
949. حَدَّثَنَا أَحْمَدُ، قَالَ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنَا عَمْرٌو، أَنَّ مُحَمَّدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ الأَسَدِيَّ، حَدَّثَهُ عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ دَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَعِنْدِي جَارِيَتَانِ تُغَنِّيَانِ بِغِنَاءِ بُعَاثَ، فَاضْطَجَعَ عَلَى الْفِرَاشِ وَحَوَّلَ وَجْهَهُ، وَدَخَلَ أَبُو بَكْرٍ فَانْتَهَرَنِي وَقَالَ مِزْمَارَةُ الشَّيْطَانِ عِنْدَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَقْبَلَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ ـ عَلَيْهِ السَّلاَمُ ـ فَقَالَ " دَعْهُمَا " فَلَمَّا غَفَلَ غَمَزْتُهُمَا فَخَرَجَتَا.
பாடம் : 2 பெருநாள் தினத்தில் ஈட்டிகள், தோல் கேடயங்கள் (உள்ளிட்ட போர்க் கருவிகளால் வீரவிளையாட்டுகளில் ஈடுபடுவது)
949. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் அருகில் இரு (அன்சாரி) சிறுமியர் (சலங்கையில்லா கஞ்சிராக்களை அடித்து) ‘புஆஸ்’ போரைப் பற்றிய பாடலைப் பாடிக்கொண்டிருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள்.2 படுக்கையில் சாய்ந்து தமது முகத்தை (வேறு திசையில்) திருப்பிக்கொண்டார்கள் (பாட வேண்டாம் என்று அவர்களைத் தடுக்கவில்லை).

அப்போது (என் தந்தை) அபூபக்ர்

(ரலி) அவர்கள் வந்து என்னை அதட்டி, “நபி (ஸல்) அவர்களுக்கு முன்பாக ஷைத்தானின் இசைக் கருவியா?” என்று கடிந்துகொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி, “அவர்களை(ப் பாட) விடுங்கள்” என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்களின் கவனம் வேறுபுறம் திரும்பியபோது அவ்விரு சிறுமியரையும் நான் விரல்களால் தொட்டுணர்த்தி (வெளியேறிவிடுமாறு கூறி)னேன். உடனே அவர்கள் இருவரும் வெளியேறிவிட்டனர்.


அத்தியாயம் : 13
950. وَكَانَ يَوْمَ عِيدٍ يَلْعَبُ السُّودَانُ بِالدَّرَقِ وَالْحِرَابِ، فَإِمَّا سَأَلْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم وَإِمَّا قَالَ " تَشْتَهِينَ تَنْظُرِينَ ". فَقُلْتُ نَعَمْ. فَأَقَامَنِي وَرَاءَهُ خَدِّي عَلَى خَدِّهِ، وَهُوَ يَقُولُ " دُونَكُمْ يَا بَنِي أَرْفِدَةَ ". حَتَّى إِذَا مَلِلْتُ قَالَ " حَسْبُكِ ". قُلْتُ نَعَمْ. قَالَ " فَاذْهَبِي ".
பாடம் : 2 பெருநாள் தினத்தில் ஈட்டிகள், தோல் கேடயங்கள் (உள்ளிட்ட போர்க் கருவிகளால் வீரவிளையாட்டுகளில் ஈடுபடுவது)
950. மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்று பெருநாள் (ஈத்) தினமாக இருந்தது. சூடானியர்கள் தோல் கேடயத்தாலும் ஈட்டிகளாலும் (பள்ளிவாசல் வளாகத்தில் வீர விளையாட்டுகள்) விளையாடிக்கொண்டி ருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் நான் (அந்த விளையாட்டைப் பார்க்க அனுமதி) கேட்டிருக்க வேண்டும்; அல்லது அவர்களே என்னிடம், “நீ (இவர்களு டைய வீர விளையாட்டுகளைப்) பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டிருக்க வேண்டும். (சரியாக எனக்கு நினைவில்லை). அதற்கு நான், ‘ஆம்’ என்று பதிலளித் தேன்.

உடனே நபி (ஸல்) அவர்கள் என் கன்னம் அவர்களது கன்னத்தின் மீது ஒட்டியபடி இருக்க, என்னைத் தமக்குப் பின்னால் நிற்கவைத்துக்கொண்டார்கள். “அர்ஃபிதாவின் மக்களே! (எத்தியோப்பி யர்களே!) விளையாட்டைத் தொடருங்கள்” என்று கூறினார்கள். இறுதியில் நான் (விளையாட்டை நன்கு பார்த்து) ச-ப் புற்றுவிட்டபோது ‘போதுமா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க நான், “ஆம் (போதும்)” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் நீ போகலாம்” என்று சொன்னார்கள்

அத்தியாயம் : 13
951. حَدَّثَنَا حَجَّاجٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ أَخْبَرَنِي زُبَيْدٌ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، عَنِ الْبَرَاءِ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَخْطُبُ فَقَالَ "" إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ مِنْ يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ، فَمَنْ فَعَلَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا "".
பாடம் : 3 இரு பெருநாட்களிலும் இஸ் லாமியர் கடைப்பிடிக்க வேண் டிய வழிமுறை (சுன்னத்)
951. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெருநாளில்) உரையாற்றியதை நான் கேட்டேன். அவர்கள் (தமது உரையில்) “நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை (பெருநாள் தொழுகை) தொழுவ தாகும். பிறகு திரும்பி வந்து ‘குர்பானி’ பிராணிகளை அறுப்பதாகும். யார் (இதைச்) செய்கிறாரோ அவர் நமது வழிமுறையைப் பின்பற்றியவர் ஆவார்” என்று கூறி னார்கள்.


அத்தியாயம் : 13
952. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ ـ رضى الله عنها ـ قَالَتْ دَخَلَ أَبُو بَكْرٍ وَعِنْدِي جَارِيَتَانِ مِنْ جَوَارِي الأَنْصَارِ تُغَنِّيَانِ بِمَا تَقَاوَلَتِ الأَنْصَارُ يَوْمَ بُعَاثَ ـ قَالَتْ وَلَيْسَتَا بِمُغَنِّيَتَيْنِ ـ فَقَالَ أَبُو بَكْرٍ أَمَزَامِيرُ الشَّيْطَانِ فِي بَيْتِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَذَلِكَ فِي يَوْمِ عِيدٍ. فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يَا أَبَا بَكْرٍ إِنَّ لِكُلِّ قَوْمٍ عِيدًا، وَهَذَا عِيدُنَا "".
பாடம் : 3 இரு பெருநாட்களிலும் இஸ் லாமியர் கடைப்பிடிக்க வேண் டிய வழிமுறை (சுன்னத்)
952. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இரு அன்சாரிச் சிறுமியர் ‘புஆஸ்’ போர் நாளில் அன்சாரிகள் (ஒருவரை யொருவர் தாக்கியும் தூக்கியும்) பாடிய பாடல்களை (சலங்கையில்லா கஞ்சிராக்களை அடித்தபடி) பாடிக்கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். -(உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர்.- (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள், “இறைத்தூதர் இல்லத்திலேயே ஷைத்தானின் இசைக் கருவிகளா?” என்று கேட்டார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் தினத்திலாகும்.

அப்போது (படுத்துக்கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(அவ்விருவரையும் விட்டுவிடுங்கள்) அபூபக்ரே! ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 13
953. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يَغْدُو يَوْمَ الْفِطْرِ حَتَّى يَأْكُلَ تَمَرَاتٍ. وَقَالَ مُرَجَّى بْنُ رَجَاءٍ حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ قَالَ حَدَّثَنِي أَنَسٌ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَيَأْكُلُهُنَّ وِتْرًا.
பாடம் : 4 நோன்புப் பெருநாள் அன்று தொழச் செல்வதற்கு முன்பே உணவு உண்பது
953. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் (ஈதுல் ஃபித்ர்) தினத் தில் சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் (தொழுகைக்குப்) புறப்படமாட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், “அவற்றை ஒற்றைப்படை எண்ணிக்கையில் உண்பார்கள்” என்று வந்துள்ளது.

அத்தியாயம் : 13
954. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيُعِدْ "". فَقَامَ رَجُلٌ فَقَالَ هَذَا يَوْمٌ يُشْتَهَى فِيهِ اللَّحْمُ. وَذَكَرَ مِنْ جِيرَانِهِ فَكَأَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَدَّقَهُ، قَالَ وَعِنْدِي جَذَعَةٌ أَحَبُّ إِلَىَّ مِنْ شَاتَىْ لَحْمٍ، فَرَخَّصَ لَهُ النَّبِيُّ صلى الله عليه وسلم فَلاَ أَدْرِي أَبَلَغَتِ الرُّخْصَةُ مَنْ سِوَاهُ أَمْ لاَ.
பாடம் : 5 ஹஜ்ஜுப் பெருநாள் அன்று உணவு உண்பது
954. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஈதுல் அள்ஹா பெருநாள் அன்று) நபி (ஸல்) அவர்கள், “யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டாரோ அவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்” என்று கூறினார்கள்.

அப்போது ஒரு மனிதர் (அபூபுர்தா) எழுந்து, “(அல்லாஹ்வின் தூதரே!) இது, இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள்” என்று கூறி, தம் (வீட்டார் மற்றும்) அண்டைவீட்டார் சிலர் (உடைய தேவை) பற்றி(யும் அதனாலேயே தாம் தொழு கைக்கு முன்பு அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார். அவர் சொன்ன காரணத்தை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொண்டதைப் போன்று தெரிந்தது.

மேலும் அவர், “என்னிடம் இறைச்சி ஆடுகள் இரண்டைவிட நான் பெரிதும் விரும்பும் ஒரு வயது பூர்த்தியான (வெள்ளாடு) ஒன்று உள்ளது. (அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா?)” என்று கேட்க, நபி (ஸல்) அவர்களும் அவருக்கு அனுமதியளித்தார்கள்.3

இந்த அனுமதி அவரல்லாதவருக்கும் பொருந்துமா? அல்லது பொருந்தாதா? என்பது எனக்குத் தெரியாது.


அத்தியாயம் : 13
955. حَدَّثَنَا عُثْمَانُ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ ـ رضى الله عنهما ـ قَالَ خَطَبَنَا النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمَ الأَضْحَى بَعْدَ الصَّلاَةِ فَقَالَ "" مَنْ صَلَّى صَلاَتَنَا وَنَسَكَ نُسُكَنَا فَقَدْ أَصَابَ النُّسُكَ، وَمَنْ نَسَكَ قَبْلَ الصَّلاَةِ فَإِنَّهُ قَبْلَ الصَّلاَةِ، وَلاَ نُسُكَ لَهُ "". فَقَالَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ خَالُ الْبَرَاءِ يَا رَسُولَ اللَّهِ، فَإِنِّي نَسَكْتُ شَاتِي قَبْلَ الصَّلاَةِ، وَعَرَفْتُ أَنَّ الْيَوْمَ يَوْمُ أَكْلٍ وَشُرْبٍ، وَأَحْبَبْتُ أَنْ تَكُونَ شَاتِي أَوَّلَ مَا يُذْبَحُ فِي بَيْتِي، فَذَبَحْتُ شَاتِي وَتَغَدَّيْتُ قَبْلَ أَنْ آتِيَ الصَّلاَةَ. قَالَ "" شَاتُكَ شَاةُ لَحْمٍ "". قَالَ يَا رَسُولَ اللَّهِ، فَإِنَّ عِنْدَنَا عَنَاقًا لَنَا جَذَعَةً هِيَ أَحَبُّ إِلَىَّ مِنْ شَاتَيْنِ، أَفَتَجْزِي عَنِّي قَالَ "" نَعَمْ، وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ "".
பாடம் : 5 ஹஜ்ஜுப் பெருநாள் அன்று உணவு உண்பது
955. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஈதுல் அள்ஹா பெருநாளன்று எங்களுக்குத் தொழுகைக்குப்பின் உரையாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்) “யார் நமது தொழுகையைத் தொழுது (அதன் பிறகு) நமது குர்பானியைப் போன்று குர்பானி கொடுக்கிறாரோ அவரே (குர்பானி) வழிபாட்டை (முறைப்படி) முடித்தவர் ஆவார். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டாரோ அது தொழுகைக்கு முன்புள்ளதாகும். அவரது குர்பானிவழிபாடு நிறைவேறாது” என்று கூறினார்கள்.

அப்போது என் தாய்மாமன் அபூபுர்தா பின் நியார் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நான் இன்றைய தினம் உண்பதற்கும் குடிப்பதற்கும் உரிய நாள் என்று அறிந்தேன். எனது வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் எனது ஆடே முதல் ஆடாக இருக்க வேண்டும் எனவும் நான் விரும்பினேன் ஆகவே, (பெருநாள்) தொழுகைக்கு வருவதற்கு முன்பே நான் அறுத்துவிட்டேன். காலைச் சிற்றுண்டியாக வும் (அதை) உட்கொண்டும்விட்டேன்” என்றார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “(நீர் அறுத்த) உமது ஆடு இறைச்சி(க்காக அறுக்கப்பட்ட) ஆடு என்றே கருதப்படும்” என்று கூறினார்கள். அதற்கு அபூபுர்தா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் ஒரு வயதுடைய பெட்டை வெள்ளாடு ஒன்று உள்ளது. அது (கொழுத்திருப்பதால்) இரண்டு ஆடுகளை விட எனக்கு மிகவும் விருப்பமானதாகும். அ(தை நான் அறுப்ப)து எனக்குப் போதுமாகுமா?” என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆம் (உமக்கு மட்டும் அது போதுமாகும்.) உமக்குப் பிறகு வேறெவருக்கும் ஒருபோதும் அது போதுமாகாது” என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 13
956. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي زَيْدٌ، عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي سَرْحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ وَالأَضْحَى إِلَى الْمُصَلَّى، فَأَوَّلُ شَىْءٍ يَبْدَأُ بِهِ الصَّلاَةُ ثُمَّ يَنْصَرِفُ، فَيَقُومُ مُقَابِلَ النَّاسِ، وَالنَّاسُ جُلُوسٌ عَلَى صُفُوفِهِمْ، فَيَعِظُهُمْ وَيُوصِيهِمْ وَيَأْمُرُهُمْ، فَإِنْ كَانَ يُرِيدُ أَنْ يَقْطَعَ بَعْثًا قَطَعَهُ، أَوْ يَأْمُرَ بِشَىْءٍ أَمَرَ بِهِ، ثُمَّ يَنْصَرِفُ. قَالَ أَبُو سَعِيدٍ فَلَمْ يَزَلِ النَّاسُ عَلَى ذَلِكَ حَتَّى خَرَجْتُ مَعَ مَرْوَانَ وَهْوَ أَمِيرُ الْمَدِينَةِ فِي أَضْحًى أَوْ فِطْرٍ، فَلَمَّا أَتَيْنَا الْمُصَلَّى إِذَا مِنْبَرٌ بَنَاهُ كَثِيرُ بْنُ الصَّلْتِ، فَإِذَا مَرْوَانُ يُرِيدُ أَنْ يَرْتَقِيَهُ قَبْلَ أَنْ يُصَلِّيَ، فَجَبَذْتُ بِثَوْبِهِ فَجَبَذَنِي فَارْتَفَعَ، فَخَطَبَ قَبْلَ الصَّلاَةِ، فَقُلْتُ لَهُ غَيَّرْتُمْ وَاللَّهِ. فَقَالَ أَبَا سَعِيدٍ، قَدْ ذَهَبَ مَا تَعْلَمُ. فَقُلْتُ مَا أَعْلَمُ وَاللَّهِ خَيْرٌ مِمَّا لاَ أَعْلَمُ. فَقَالَ إِنَّ النَّاسَ لَمْ يَكُونُوا يَجْلِسُونَ لَنَا بَعْدَ الصَّلاَةِ فَجَعَلْتُهَا قَبْلَ الصَّلاَةِ.
பாடம் : 6 பெருநாள் தொழுகைக்காகச் சொற்பொழிவு மேடையேதும் இல்லாத (திறந்த வெளித்) திட லுக்குச் செல்வது
956. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிவாச-ல் தொழாமல்) திடலுக்குப் புறப்பட்டுச் செல்பவர்களாக இருந்தார்கள். அங்கு அவர்கள் செய்யும் முதல்வேலை தொழுவதேயாகும். (தொழுகை முடிந்த) பின்னர் மக்களை முன்னோக்கி எழுந்து நிற்பார்கள். மக்கள் அனைவரும் அப்படியே தத்தம் வரிசைகளில் அமர்ந்திருப்பார்கள்.

அப்போது மக்களுக்கு அவர்கள் உபதேசம் புரிவார்கள்; (வ-யுறுத்த வேண்டியதை) அவர்களுக்கு வ-யுறுத்துவார்கள்; (கட்டளையிட வேண்டி யதை) அவர்களுக்குக் கட்டளையிடு வார்கள். (ஏதேனும் ஒரு பகுதிக்கு) படைப் பிரிவுகளை அனுப்ப நினைத்திருந்தால் அனுப்பிவைப்பார்கள். அல்லது எதைப் பற்றியேனும் உத்தரவிட வேண்டியிருந் தால் உத்தரவிடுவார்கள். (இவற்றை முடித்த) பின்னரே (மதீனாவுக்கு) திரும்பிச் செல்வார்கள்.

இவ்வாறே மக்கள் செயல்பட்டு வந்தனர்; மதீனாவின் ஆளுநராக மர்வான் பின் ஹகம் ஆகும்வரை. அவருடன் ஒரு ஹஜ்ஜுப் பெருநாளிலோ அல்லது நோன்புப் பெருநாளிலோ நான் (தொழச்) சென்றேன். நாங்கள் தொழும் திடலுக்கு வந்தபோது கஸீர் பின் ஸல்த் அவர்கள் உருவாக்கிய சொற்பொழிவு மேடை (மிம்பர்) ஒன்று அங்கே தீடீரெனக் காணப்பட்டது. அப்போது மர்வான் (பெருநாள் தொழுகையைத்) தொழுவிப்பதற்கு முன்பே சொற்பொழிவு மேடையில் ஏறப்போனார்.

உடனே நான் (முத-ல் தொழுவித்துவிட்டுப் பிறகு உரையாற்றும்படி கோர) அவரது ஆடையைப் பிடித்து இழுத்தேன். அவர் என்னை இழுத்தார். முடிவில் அவர் (சொற்பொழிவு மேடையில்) ஏறித் தொழுகைக்கு முன்பே உரை (குத்பா) நிகழ்த்தலானார். அப்போது நான் அவரிடம், “அல்லாஹ்வின் மீதாணையாக! (நபிவழியை) மாற்றிவிட்டீர்கள்” என்று சொன்னேன்.

அதற்கு மர்வான், “அபூசயீதே! நீங்கள் அறிந்திருக்கும் (அந்த) நடைமுறை மலையேறிவிட்டது” என்று சொன்னார். அதற்கு நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிந்திருக்கும் (நபியவர்களின்) நடைமுறைதான் நான் அறியாத (இந்தப் புதிய) நடைமுறையைவிடச் சிறந்ததாகும்” என்று சொன்னேன். அதற்கு மர்வான், “மக்கள் தொழுகை முடிந்துவிட்டால் எம(து உரை)க்காக அமர்ந்துகொண்டிருக்கமாட்டார்கள். எனவே, நான் உரையைத் தொழுகைக்கு முன்பே வைத்துக்கொண்டேன்” என்று சொன்னார்.

அத்தியாயம் : 13
957. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَنَسٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ،. أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يُصَلِّي فِي الأَضْحَى وَالْفِطْرِ، ثُمَّ يَخْطُبُ بَعْدَ الصَّلاَةِ.
பாடம் : 7 பெருநாள் தொழுகைக்காக நடந்தும் ஊர்தியிலும் செல்வ தும், பாங்கும் இகாமத்தும் இல்லாமல் குத்பாவுக்கு முன்பே தொழுவதும்
957. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாளிலும் நோன்புப் பெருநாளிலும் (முத-ல்) தொழுவார்கள். தொழுகையை முடித்தபிறகே உரை (குத்பா) நிகழ்த்துவார்கள்.


அத்தியாயம் : 13
958. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، قَالَ أَخْبَرَنَا هِشَامٌ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُهُ يَقُولُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم خَرَجَ يَوْمَ الْفِطْرِ، فَبَدَأَ بِالصَّلاَةِ قَبْلَ الْخُطْبَةِ.
பாடம் : 7 பெருநாள் தொழுகைக்காக நடந்தும் ஊர்தியிலும் செல்வ தும், பாங்கும் இகாமத்தும் இல்லாமல் குத்பாவுக்கு முன்பே தொழுவதும்
958. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பொருநாள் அன்று புறப்பட்டுச் சென்று, உரை நிகழ்த்துவதற்குமுன் தொழுதார்கள்.


அத்தியாயம் : 13
959. قَالَ وَأَخْبَرَنِي عَطَاءٌ، أَنَّ ابْنَ عَبَّاسٍ، أَرْسَلَ إِلَى ابْنِ الزُّبَيْرِ فِي أَوَّلِ مَا بُويِعَ لَهُ إِنَّهُ لَمْ يَكُنْ يُؤَذَّنُ بِالصَّلاَةِ يَوْمَ الْفِطْرِ، إِنَّمَا الْخُطْبَةُ بَعْدَ الصَّلاَةِ.
பாடம் : 7 பெருநாள் தொழுகைக்காக நடந்தும் ஊர்தியிலும் செல்வ தும், பாங்கும் இகாமத்தும் இல்லாமல் குத்பாவுக்கு முன்பே தொழுவதும்
959. அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

‘(யஸீதுக்குப்பின் ஆட்சிப் பொறுப் பேற்ற) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமா ணம் (பைஅத்) நடைபெற்ற முதல் நாளில் அவர்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) நோன்புப் பெருநாளில் (பெருநாள்) தொழுகைக்காக பாங்கு சொல்லும் வழக்கம் இருக்கவில்லை; தொழுகைக்குப் பிறகுதான் உரை(யும் அமைந்திருந்தது)” என்ற செய்தியைச் சொல்லியனுப்பினார்கள்.4


அத்தியாயம் : 13
960. وَأَخْبَرَنِي عَطَاءٌ، عَنِ ابْنِ عَبَّاسٍ، وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالاَ لَمْ يَكُنْ يُؤَذَّنُ يَوْمَ الْفِطْرِ وَلاَ يَوْمَ الأَضْحَى.
பாடம் : 7 பெருநாள் தொழுகைக்காக நடந்தும் ஊர்தியிலும் செல்வ தும், பாங்கும் இகாமத்தும் இல்லாமல் குத்பாவுக்கு முன்பே தொழுவதும்
960. இப்னு அப்பாஸ் (ரலி), ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) ஆகியோர் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களது காலத்தில்) நோன்புப் பெருநாளிலோ ஹஜ்ஜுப் பொருநாளிலோ பாங்கு சொல்லும் வழக்கம் இருக்கவில்லை.


அத்தியாயம் : 13
961. وَعَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ سَمِعْتُهُ يَقُولُ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَامَ فَبَدَأَ بِالصَّلاَةِ، ثُمَّ خَطَبَ النَّاسَ بَعْدُ، فَلَّمَا فَرَغَ نَبِيُّ اللَّهِ صلى الله عليه وسلم نَزَلَ فَأَتَى النِّسَاءَ، فَذَكَّرَهُنَّ وَهْوَ يَتَوَكَّأُ عَلَى يَدِ بِلاَلٍ، وَبِلاَلٌ بَاسِطٌ ثَوْبَهُ، يُلْقِي فِيهِ النِّسَاءُ صَدَقَةً. قُلْتُ لِعَطَاءٍ أَتَرَى حَقًّا عَلَى الإِمَامِ الآنَ أَنْ يَأْتِيَ النِّسَاءَ فَيُذَكِّرَهُنَّ حِينَ يَفْرُغُ قَالَ إِنَّ ذَلِكَ لَحَقٌّ عَلَيْهِمْ، وَمَا لَهُمْ أَنْ لاَ يَفْعَلُوا
பாடம் : 7 பெருநாள் தொழுகைக்காக நடந்தும் ஊர்தியிலும் செல்வ தும், பாங்கும் இகாமத்தும் இல்லாமல் குத்பாவுக்கு முன்பே தொழுவதும்
961. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (நோன்புப் பெருநாளில்) எழுந்து முத-ல் தொழுதார் கள். அதற்குப் பிறகே மக்களுக்கு உரையாற்றினார்கள். நபி (ஸல்) அவர்கள் உரையாற்றி முடித்ததும் அங்கிருந்து புறப்பட்டுப் பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால் (ரலி) அவர்களது கைமீது சாய்ந்துகொண்டு, பெண்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையொன்றை விரித் துப் பிடிக்க, அதில் பெண்கள் தர்மத்தை இட்டுக்கொண்டிருந்தனர்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அதாஉ (ரஹ்) அவர்களிடம், “உரை நிகழ்த்தியபின் பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு அறிவுரை கூறுவது இன்றைக்கும் இமாம்கள்மீது கடமை என நீங்கள் கருதுகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நிச்சயமாக அது அவர்களுக்குக் கடமைதான். அவர்கள் எப்படி இதைச் செய்யமா-ருக்க முடியும்?” என்று கேட்டார்கள்.

அத்தியாயம் : 13
962. حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، قَالَ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ أَخْبَرَنِي الْحَسَنُ بْنُ مُسْلِمٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ شَهِدْتُ الْعِيدَ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبِي بَكْرٍ وَعُمَرَ وَعُثْمَانَ ـ رضى الله عنهم ـ فَكُلُّهُمْ كَانُوا يُصَلُّونَ قَبْلَ الْخُطْبَةِ.
பாடம் : 8 பெருநாள் தொழுகைக்குப் பிறகே குத்பா (உரை)
962. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் பெருநாள் தொழுகையில் கலந்துகொண் டுள்ளேன். அவர்கள் அனைவரும் (குத்பா) உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுப வர்களாக இருந்தனர்.


அத்தியாயம் : 13
963. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَبُو بَكْرٍ وَعُمَرُ ـ رضى الله عنهما ـ يُصَلُّونَ الْعِيدَيْنِ قَبْلَ الْخُطْبَةِ.
பாடம் : 8 பெருநாள் தொழுகைக்குப் பிறகே குத்பா (உரை)
963. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் இரு பெருநாட்களிலும் (குத்பா) உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுவார்கள்.


அத்தியாயம் : 13
964. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيِّ بْنِ ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم صَلَّى يَوْمَ الْفِطْرِ رَكْعَتَيْنِ، لَمْ يُصَلِّ قَبْلَهَا وَلاَ بَعْدَهَا، ثُمَّ أَتَى النِّسَاءَ وَمَعَهُ بِلاَلٌ، فَأَمَرَهُنَّ بِالصَّدَقَةِ، فَجَعَلْنَ يُلْقِينَ، تُلْقِي الْمَرْأَةُ خُرْصَهَا وَسِخَابَهَا.
பாடம் : 8 பெருநாள் தொழுகைக்குப் பிறகே குத்பா (உரை)
964. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெரு நாளில் இரண்டு ரக்அத்கள் (மட்டுமே) தொழுதார்கள். அதற்கு முன்போ பின்போ அவர்கள் (கூடுதலாக எதையும்) தொழ வில்லை. (உரை நிகழ்த்திய) பிறகு தம்முடன் பிலால் (ரலி) அவர்கள் இருக்க, பெண்கள் பகுதிக்கு நபி (ஸல்) அவர்கள் வந்து (அறிவுரை கூறினார்கள். அப்போது) தர்மம் செய்யுமாறு அவர்களைப் பணித் தார்கள்.

உடனே பெண்கள் (தம்மிடம் இருந் ததை பிலால் அவர்களின் கரத்திலிருந்த துணியில்) இடலாயினர். சில பெண்கள் தம் காதணிகளையும் தம் (கழுத்தில் அணிந்திருந்த) நறுமண மாலைகளையும் இட்டனர்.


அத்தியாயம் : 13
965. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ حَدَّثَنَا زُبَيْدٌ، قَالَ سَمِعْتُ الشَّعْبِيَّ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "" إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ فِي يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا، وَمَنْ نَحَرَ قَبْلَ الصَّلاَةِ فَإِنَّمَا هُوَ لَحْمٌ قَدَّمَهُ لأَهْلِهِ، لَيْسَ مِنَ النُّسْكِ فِي شَىْءٍ "". فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ يُقَالُ لَهُ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ يَا رَسُولَ اللَّهِ، ذَبَحْتُ وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ. فَقَالَ "" اجْعَلْهُ مَكَانَهُ، وَلَنْ تُوفِيَ أَوْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ "".
பாடம் : 8 பெருநாள் தொழுகைக்குப் பிறகே குத்பா (உரை)
965. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஈதுல் அள்ஹா பெருநாளின்போது) நபி (ஸல்) அவர்கள், “இன்றைய தினம் நாம் முதலாவதாகச் செய்ய வேண்டியது (யாதெனில்), நாம் (பெருநாள் தொழுகை) தொழுவோம்; பிறகு தொழுகையி-ருந்து திரும்பிவந்து ‘குர்பானி’ பிராணிகளை அறுப்போம். யார் இவ்வாறு செய்கிறாரோ அவர் நமது வழியைப் பின்பற்றிவிட்டார். (பெருநாள் தொழுகைக்கு) முன்பே யார் (குர்பானி பிராணியை) அறுக்கிறாரோ அவர் தம் குடும்பத்தாருக்காக முன் கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது” என்று சொன்னார்கள்.

அப்போது அன்சாரிகளில் அபூபுர்தா பின் நியார் எனப்படும் ஒருவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! (தொழுகைக்கு முன்பே நான் குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டேன். என்னிடம் ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்று உள்ளது. அது ஒரு வயது பூர்த்தியான ஆட்டை விடச் சிறந்தது (அதை நான் அறுக்க லாமா?)” என்று கேட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “முத-ல் அறுத்த தற்குப் பதிலாக இதையே அறுத்து விடுவீராக! ஆனால், உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் ஒருபோதும் ‘அது நிறைவேறாது’ அல்லது ‘போதுமாகாது’ என்று பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 13
966. حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ يَحْيَى أَبُو السُّكَيْنِ، قَالَ حَدَّثَنَا الْمُحَارِبِيُّ، قَالَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُوقَةَ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، قَالَ كُنْتُ مَعَ ابْنِ عُمَرَ حِينَ أَصَابَهُ سِنَانُ الرُّمْحِ فِي أَخْمَصِ قَدَمِهِ، فَلَزِقَتْ قَدَمُهُ بِالرِّكَابِ، فَنَزَلْتُ فَنَزَعْتُهَا وَذَلِكَ بِمِنًى، فَبَلَغَ الْحَجَّاجَ فَجَعَلَ يَعُودُهُ فَقَالَ الْحَجَّاجُ لَوْ نَعْلَمُ مَنْ أَصَابَكَ. فَقَالَ ابْنُ عُمَرَ أَنْتَ أَصَبْتَنِي. قَالَ وَكَيْفَ قَالَ حَمَلْتَ السِّلاَحَ فِي يَوْمٍ لَمْ يَكُنْ يُحْمَلُ فِيهِ، وَأَدْخَلْتَ السِّلاَحَ الْحَرَمَ وَلَمْ يَكُنِ السِّلاَحُ يُدْخَلُ الْحَرَمَ.
பாடம் : 9 பெருநாளின்போதும் ‘ஹரம்’ புனித எல்லைக்குள்ளும் (அச்சு றுத்தும் வகையில்) ஆயுதங்களை எடுத்துச் செல்லலாகாது. “பெருநாள் தினத்தில் ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாதென மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது; ஆனால், எதிரிகள் பற்றிய அச்சம் இருந்தால் தவிர!” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
966. சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(வாகனத்தில் அமர்ந்திருந்த) இப்னு உமர் (ரலி) அவர்களின் உள்ளங்கா-ல் (ஹிஜாஸின் ஆளுநர் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின் ஆட்களில் ஒருவர் பாய்ச்சிய) ஈட்டியின் முனை பாய்ந்தபோது, நானும் அவர்களுடன் இருந்தேன். அப்போது அவர்களின் பாதம் வாகனத்தில் ஒட்டிக் கொண்டது. உடனே நான் (வாகனத்தி-ருந்து) இறங்கி அதைப் பிடுங்கி எடுத்தேன். -இது மினாவில் இருந்தபோது நடந்தது.- இந்தச் செய்தி ஹஜ்ஜாஜுக்கு எட்டி, அவர் இப்னு உமர் (ரலி) அவர் களை உடல் நலம் விசாரிக்க (வர)லானார்.

அப்போது ஹஜ்ஜாஜ், “உங்களைத் தாக்கியவர் யாரென்று தெரிந்தால் (தக்க நடவடிக்கை எடுப்போம்)” என்று கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “நீர்தான் என்னைத் தாக்கினீர்” என்றார்கள். “அது எப்படி?” என்று ஹஜ்ஜாஜ் கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆயுதம் எடுத்துச் செல்லக் கூடாத (பெரு நாள்) தினத்தில் நீர்தான் ஆயுதம் ஏந்திட உத்தரவிட்டீர். ஹரம் புனித எல்லைக்குள் ஆயுதம் கொண்டுவரக் கூடாது என்றி ருக்க, ஹரமுக்குள் ஆயுதங்களை நடமாட விட்டதும் நீர்தான்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 13
967. حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يَعْقُوبَ، قَالَ حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ، عَنْ أَبِيهِ، قَالَ دَخَلَ الْحَجَّاجُ عَلَى ابْنِ عُمَرَ وَأَنَا عِنْدَهُ، فَقَالَ كَيْفَ هُوَ فَقَالَ صَالِحٌ. فَقَالَ مَنْ أَصَابَكَ قَالَ أَصَابَنِي مَنْ أَمَرَ بِحَمْلِ السِّلاَحِ فِي يَوْمٍ لاَ يَحِلُّ فِيهِ حَمْلُهُ، يَعْنِي الْحَجَّاجَ.
பாடம் : 9 பெருநாளின்போதும் ‘ஹரம்’ புனித எல்லைக்குள்ளும் (அச்சு றுத்தும் வகையில்) ஆயுதங்களை எடுத்துச் செல்லலாகாது. “பெருநாள் தினத்தில் ஆயுதங்கள் எடுத்துச் செல்லக் கூடாதென மக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது; ஆனால், எதிரிகள் பற்றிய அச்சம் இருந்தால் தவிர!” என்று ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
967. சயீத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் (உடல் நலம் விசாரிக்க) ஹஜ்ஜாஜ் வந்தார். அப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் அருகில் நானும் இருந்தேன். ஹஜ்ஜாஜ் (இப்னு உமரிடம்) அவர் எப்படி இருக்கிறார்? என்று வினவினார். தாம் நலமுடன் இருப்பதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

பிறகு “உம்மைத் தாக்கியவர் யார்?” என்று கேட்டார் ஹஜ்ஜாஜ். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், “ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடாத (பெருநாள்) தினத்தில் ஆயுதங்களை எடுத்துச் செல்ல உத்தரவிட்டவரே என்னைத் தாக்கினார்” என்று -ஹஜ்ஜாஜை மனதில் வைத்துக்- குறிப்பிட்டார்கள்.

அத்தியாயம் : 13