304. حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، قَالَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، قَالَ أَخْبَرَنِي زَيْدٌ ـ هُوَ ابْنُ أَسْلَمَ ـ عَنْ عِيَاضِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي أَضْحًى ـ أَوْ فِطْرٍ ـ إِلَى الْمُصَلَّى، فَمَرَّ عَلَى النِّسَاءِ فَقَالَ "" يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ، فَإِنِّي أُرِيتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ "". فَقُلْنَ وَبِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ "" تُكْثِرْنَ اللَّعْنَ، وَتَكْفُرْنَ الْعَشِيرَ، مَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الْحَازِمِ مِنْ إِحْدَاكُنَّ "". قُلْنَ وَمَا نُقْصَانُ دِينِنَا وَعَقْلِنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ "" أَلَيْسَ شَهَادَةُ الْمَرْأَةِ مِثْلَ نِصْفِ شَهَادَةِ الرَّجُلِ "". قُلْنَ بَلَى. قَالَ "" فَذَلِكَ مِنْ نُقْصَانِ عَقْلِهَا، أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ "". قُلْنَ بَلَى. قَالَ "" فَذَلِكَ مِنْ نُقْصَانِ دِينِهَا "".
பாடம் : 6 மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் நோன்பை விட்டு விடுவது4
304. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹஜ்ஜுப் பெருநாள்’ அல்லது ‘நோன்புப் பெருநாள்’ அன்று தொழுகைத் திடலுக்கு (‘முஸல்லா’) புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, “பெண்கள் சமுதாயமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிக எண்ணிக்கையில் எனக்குக் காட்டப் பட்டீர்கள்” என்று குறிப்பிட்டார்கள்.

அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?” எனப் பெண்கள் கேட்டதும். “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்துகொள்கிறீர்கள். அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர் களாகவும், தீர்க்கமான யோசனை உடைய ஆண்களின் கூர்மையான அறிவைக்கூட (கவர்ச்சியால்) மழுங்கவைப்பவர்களாகவும் (பெண்களாகிய) உங்களைப் போன்று வேறு யாரையும் நான் கண்டதில்லை” என்று கூறினார்கள்.

அப்போதும் அப்பெண்கள், “மார்க்கத் திலும் அறிவிலும் எங்களிடமுள்ள குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். “பெண் களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத் தில் பாதியல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், “ஆம் (பாதிதான்)” என்று பதிலளித்தார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்” என்று கூறிவிட்டு, “ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா?” என்று கேட்டார்கள். அப்பெண்கள் “ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறை பாடாகும்” என்று கூறினார்கள்

அத்தியாயம் : 6
305. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم لاَ نَذْكُرُ إِلاَّ الْحَجَّ، فَلَمَّا جِئْنَا سَرِفَ طَمِثْتُ، فَدَخَلَ عَلَىَّ النَّبِيُّ صلى الله عليه وسلم وَأَنَا أَبْكِي فَقَالَ {مَا يُبْكِيكِ}. قُلْتُ لَوَدِدْتُ وَاللَّهِ أَنِّي لَمْ أَحُجَّ الْعَامَ. قَالَ {لَعَلَّكِ نُفِسْتِ}. قُلْتُ نَعَمْ. قَالَ "" فَإِنَّ ذَلِكَ شَىْءٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَافْعَلِي مَا يَفْعَلُ الْحَاجُّ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي "".
பாடம் : 7 மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர ஹஜ்ஜின் மற்ற கிரியைகள் அனைத்தையும் நிறைவேற்றலாம். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், “மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் குர்ஆன் வசனங்களை ஓதுவதில் தவறேதுமில்லை” என்று கூறியுள்ளார்கள். பெருந்துடக்கு ஏற்பட்டுள்ளவர், குர்ஆனை ஓதுவதில் எந்தத் தவறுமில்லை என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கருதினார்கள். நபி (ஸல்) அவர்கள் எல்லா நேரமும் அல்லாஹ்வை ‘திக்ர்’ செய்துவந்தார்கள். உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது: (பெருநாள் தினத்தன்று) மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களை(யும்) (தொழுகைத் திடலுக்கருகில்) அழைத்துச் சென்று, ஆண்களைப் போன்று ‘தக்பீர்’ சொல்லவும் பிரார்த்திக்கவும் செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிடப்பட்டது. அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் கூறியதாவது: மன்னர் ஹிரக்ளீயஸ், தமக்கு நபி (ஸல்) அவர்கள் எழுதியிருந்த கடிதத்தைக் கொண்டுவரச் சொல்-, அதை வாசிக்கச் செய்தார். அதில்: ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ “யா அஹ்லல் கிதாபி தஆலவ் இலா க-மத்தின் ...” (அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்.... வேதக் காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பொதுவானதொரு கொள்கை யின்பால் நீங்கள் வாருங்கள்) என்று தொடங்கும் (குர்ஆன்) வசனங்கள் (3:64) எழுதப்பட்டிருந்தன. இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜின்போது) ஆயிஷா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அப்போது அவர்கள் இறை யில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வருவதைத் தவிர ஹஜ்ஜின் மற்ற கிரியைகள் அனைத்தையும் நிறைவேற்றினார்கள்; ஆனால், தொழவில்லை. இதை அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஹகம் பின் உ(த்)தைபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் பெருந்துடக்குடையவனாக இருந்தபோது, (அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி கால்நடைகளை) அறுப்பேன். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “அல்லாஹ் வின் பெயர் சொல்லப்படாமல் அறுக்கப்பட்டதை நீங்கள் புசிக்க வேண்டாம்” (6:121) என்று கூறுகின்றான்.
305. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (‘விடைபெறும்’) ஹஜ் செய்யும் எண்ணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் (மதீனாவி-ருந்து) புறப்பட்டுச் சென்றோம். (மக்காவுக்கு அருகிலுள்ள) ‘சரிஃப்’ எனும் இடத்துக்கு நாங்கள் வந்தபோது, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. இந்நிலை யில் நான் அழுதுகொண்டிருந்தேன். அப்போது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்து, “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள். நான், “இந்த ஆண்டு அல்லாஹ்வின் மீதாணையாக! என்னால் ஹஜ் செய்ய முடியாது என்றே நினைக்கிறேன்” என்றேன்.

“உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “இது ஆதமின் பெண் மக்களுக்கு அல்லாஹ் எழுதிவிட்ட ஒன்றாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் (கிரியைகள்) அனைத்தையும் நீயும் நிறைவேற்றிக்கொள். ஆயினும், தூய்மை யாகும்வரை இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வராதே” என்றார்கள்

அத்தியாயம் : 6
306. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّهَا قَالَتْ قَالَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَا رَسُولَ اللَّهِ إِنِّي لاَ أَطْهُرُ، أَفَأَدَعُ الصَّلاَةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِنَّمَا ذَلِكِ عِرْقٌ وَلَيْسَ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَاتْرُكِي الصَّلاَةَ، فَإِذَا ذَهَبَ قَدْرُهَا فَاغْسِلِي عَنْكِ الدَّمَ وَصَلِّي "".
பாடம் : 8 உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா)5
306. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), “அல்லாஹ்வின் தூதரே! (நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) ஏற்படும் பெண் ஆவேன்; தொடர்ந்து எனக்கு உதிரப் போக்கு ஏற்பட்டுக்கொண்டிருப்பதால்) நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இல்லை; தொழுகையை விட்டுவிடாதே. ஏனெனில்,) இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும்; மாத விடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு. (உனக்குரிய) மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைக் கழுவிவிட்டுத் தொழுதுகொள்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம் : 6
307. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامٍ، عَنْ فَاطِمَةَ بِنْتِ الْمُنْذِرِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ، أَنَّهَا قَالَتْ سَأَلَتِ امْرَأَةٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، أَرَأَيْتَ إِحْدَانَا إِذَا أَصَابَ ثَوْبَهَا الدَّمُ مِنَ الْحَيْضَةِ، كَيْفَ تَصْنَعُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أَصَابَ ثَوْبَ إِحْدَاكُنَّ الدَّمُ مِنَ الْحَيْضَةِ، فَلْتَقْرُصْهُ ثُمَّ لِتَنْضَحْهُ بِمَاءٍ، ثُمَّ لِتُصَلِّي فِيهِ "".
பாடம் : 9 மாதவிடாய் இரத்தத்தைக் கழுவுதல்
307. அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒரு பெண்ணின் ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால், அவள் என்ன செய்ய வேண்டும், என்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால், (அது காய்ந்துவிட்டிருந்தால்) அதைச் சுரண்டிவிட்டுப் பின்னர் அந்த இடத்தில் (சிறிது சிறிதாகத்) தண்ணீர் தெளித்து(க் கழுவி)க்கொள்ளட்டும்! பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளட்டும்” என்று கூறினார்கள்.


அத்தியாயம் : 6
308. حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَتْ إِحْدَانَا تَحِيضُ، ثُمَّ تَقْتَرِصُ الدَّمَ مِنْ ثَوْبِهَا عِنْدَ طُهْرِهَا فَتَغْسِلُهُ، وَتَنْضَحُ عَلَى سَائِرِهِ، ثُمَّ تُصَلِّي فِيهِ.
பாடம் : 9 மாதவிடாய் இரத்தத்தைக் கழுவுதல்
308. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும்போது, அவர் தமது ஆடையில் இரத்தம் பட்ட இடத்தைச் சுத்தம் செய்ய நினைத்தால், ஆடையி-ருந்து (காய்ந்துவிட்ட) இரத்தத்தைச் சுரண்டிவிட்டு, அந்த இடத்தைக் கழுவுவார்.

பின்னர் (மன நிம்மதிக்காக) ஆடை யின் மற்ற பகுதிகளிலும் தண்ணீர் தெளித்து, அந்த ஆடையுடன் (மாத விடாய் குளியலுக்குப்பின்) தொழுது கொள்வார்.

அத்தியாயம் : 6
309. حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اعْتَكَفَ مَعَهُ بَعْضُ نِسَائِهِ وَهْىَ مُسْتَحَاضَةٌ تَرَى الدَّمَ، فَرُبَّمَا وَضَعَتِ الطَّسْتَ تَحْتَهَا مِنَ الدَّمِ. وَزَعَمَ أَنَّ عَائِشَةَ رَأَتْ مَاءَ الْعُصْفُرِ فَقَالَتْ كَأَنَّ هَذَا شَىْءٌ كَانَتْ فُلاَنَةُ تَجِدُهُ.
பாடம் : 10 உயர் இரத்தப்போக்கு (இஸ்தி ஹாளா) உள்ள பெண் (பள்ளி வாச-ல்) ‘இஃதிகாஃப்’ இருப் பது
309. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ல்) நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் துணைவியரில் ஒருவர் ‘இஃதிகாஃப்’ இருந்தார். அவர் உயர் இரத்தப்போக்கி னால் இரத்தத்தைக் காண்பவராயிருந்தார். இந்நிலையில் சில சமயங்களில் இரத்தத் தின் காரணமாகத் தமக்குக் கீழே கையலம்பும் பாத்திரத்தை அவர் வைப்பார்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான கா-த் பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

“ஆயிஷா (ரலி) அவர்கள் (ஒரு முறை) குசும்பப் பூவின் (சாய) நீரைப் பார்த்துவிட்டு, “இ(தன் நிறமான)து இன்னவளுக்கு ஏற்படுகின்ற ஒன்றைப் போன்றதுதான்” என்று குறிப்பிட்டதாகவும் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.


அத்தியாயம் : 6
310. حَدَّثَنَا قُتَيْبَةُ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتِ اعْتَكَفَتْ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم امْرَأَةٌ مِنْ أَزْوَاجِهِ، فَكَانَتْ تَرَى الدَّمَ وَالصُّفْرَةَ، وَالطَّسْتُ تَحْتَهَا وَهْىَ تُصَلِّي.
பாடம் : 10 உயர் இரத்தப்போக்கு (இஸ்தி ஹாளா) உள்ள பெண் (பள்ளி வாச-ல்) ‘இஃதிகாஃப்’ இருப் பது
310. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களுடைய துணைவியரில் ஒருவர் ‘இஃதிகாஃப்’ இருந்தார். அப்போது அவர் குசும்பப் பூவின் நீரின் நிறத்தில் உதிரப்போக்கைக் காண்பவராக இருந்தார். அவர் தொழும்போது அவருக்குக் கீழே கையலம்பும் பாத்திரம் இருக்கும்.


அத்தியாயம் : 6
311. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا مُعْتَمِرٌ، عَنْ خَالِدٍ، عَنْ عِكْرِمَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ بَعْضَ، أُمَّهَاتِ الْمُؤْمِنِينَ اعْتَكَفَتْ وَهْىَ مُسْتَحَاضَةٌ.
பாடம் : 10 உயர் இரத்தப்போக்கு (இஸ்தி ஹாளா) உள்ள பெண் (பள்ளி வாச-ல்) ‘இஃதிகாஃப்’ இருப் பது
311. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறைநம்பிக்கையாளர்களின் அன்னை யரில் (நபியவர்களின் துணைவியரில்) ஒருவர் உயர் இரத்தப்போக்கு உடையவ ராய் இருக்கும் நிலையில் ‘இஃதிகாஃப்’ இருந்தார்.

அத்தியாயம் : 6
312. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ قَالَتْ عَائِشَةُ مَا كَانَ لإِحْدَانَا إِلاَّ ثَوْبٌ وَاحِدٌ تَحِيضُ فِيهِ، فَإِذَا أَصَابَهُ شَىْءٌ مِنْ دَمٍ، قَالَتْ بِرِيقِهَا فَقَصَعَتْهُ بِظُفْرِهَا.
பாடம் : 11 ஒரு பெண் மாதவிடாய் ஏற் பட்ட ஆடையுடன் தொழ லாமா?
312. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களில் சிலருக்கு ஒரேயோர் ஆடை மட்டுமே இருக்கும். அதில்தான் அவருக்கு மாதவிடாய் ஏற்படும். இரத்தம் ஏதேனும் அந்த ஆடையில் பட்டு(க் காய்ந்து)விட்டால், தமது உமிழ் நீரைத் தொட்டு அந்த இடத்தில் வைத்துத் தமது நகத்தால் சுரண்டிவிடுவார்.

அத்தியாயம் : 6
313. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْوَهَّابِ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ حَفْصَةَ ـ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ أَوْ هِشَامِ بْنِ حَسَّانَ عَنْ حَفْصَةَ، عَنْ أُمِّ عَطِيَّةَ ـ قَالَتْ كُنَّا نُنْهَى أَنْ نُحِدَّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ، إِلاَّ عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا، وَلاَ نَكْتَحِلَ وَلاَ نَتَطَيَّبَ وَلاَ نَلْبَسَ ثَوْبًا مَصْبُوغًا إِلاَّ ثَوْبَ عَصْبٍ، وَقَدْ رُخِّصَ لَنَا عِنْدَ الطُّهْرِ إِذَا اغْتَسَلَتْ إِحْدَانَا مِنْ مَحِيضِهَا فِي نُبْذَةٍ مِنْ كُسْتِ أَظْفَارٍ، وَكُنَّا نُنْهَى عَنِ اتِّبَاعِ الْجَنَائِزِ. قَالَ رَوَاهُ هِشَامُ بْنُ حَسَّانَ عَنْ حَفْصَةَ عَنْ أُمِّ عَطِيَّةَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
பாடம் : 12 மாதவிடாய் முடிந்து குளிக்கும் போது நறுமணத்தைப் பயன் படுத்துதல்
313. உம்மு அத்திய்யா நுசைபா பின்த் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறந்துபோன எவருக்காகவும் மூன்று நாட்களுக்குமேல் (அலங்காரம், நறுமணம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டு) துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென (பெண்களாகிய) நாங்கள் (நபியவர்களால்) தடை விதிக்கப்பட்டிருந்தோம்; ஆனால், (கணவருக்காக அவர் இறந்தபின் அவருடைய) மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் (துக்கம் கடைபிடிப்பதைத்) தவிர!

(அதாவது இந்த நாட்களில்) நாங்கள் (கண்ணில்) அஞ்சனம் தீட்டவோ, நறுமணம் பூசவோ, சாயமிட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால், நெய்வதற்குமுன் நூ-ல் சாயமிடப்பட்ட (‘அஸ்ப்’ எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்து கொள்ளலாம்.)

எங்களில் ஒரு பெண் குளித்து மாதவிடாயி-ருந்து தூய்மையடையும் போது, ‘ளிஃபார்’ நகரத்து (யமன்) ‘குஸ்த்’ (ஜாதிக் கோஷ்டக்) கட்டைத் துண்டைப் பயன்படுத்திக்கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், நாங்கள் ‘ஜனாஸா’வைத் தொடர்ந்து செல்ல வேண்டாமெனத் தடை விதிக்கப்பட்டி ருந்தோம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 6
314. حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ مَنْصُورِ ابْنِ صَفِيَّةَ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً، سَأَلَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ غُسْلِهَا مِنَ الْمَحِيضِ، فَأَمَرَهَا كَيْفَ تَغْتَسِلُ قَالَ "" خُذِي فِرْصَةً مِنْ مِسْكٍ فَتَطَهَّرِي بِهَا "". قَالَتْ كَيْفَ أَتَطَهَّرُ قَالَ "" تَطَهَّرِي بِهَا "". قَالَتْ كَيْفَ قَالَ "" سُبْحَانَ اللَّهِ تَطَهَّرِي "". فَاجْتَبَذْتُهَا إِلَىَّ فَقُلْتُ تَتَبَّعِي بِهَا أَثَرَ الدَّمِ.
பாடம் : 13 ஒரு பெண் மாதவிடாயி-ருந்து தூய்மையாகிக் குளிக்கும்போது தமது உடலைத் தேய்த்துக் கழுவுவதும், அவள் குளிக்க வேண்டிய முறையும், கஸ்தூரி தடவப்பட்ட பஞ்சை எடுத்து இரத்தம் படிந்த இடத்தைத் துடைக்கும் முறையும்.
314. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி மாதவிடாயி-ருந்து (தூய்மை அடைய) எவ்வாறு குளிக்க வேண்டுமென்பது குறித்துக் கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள், குளிக்கும் முறையைக் கூறினார்கள். “கஸ்தூரி (நறுமணம்) தடவப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து, அதனால் (உன் மறைவிடத்தைத் துடைத்து) தூய்மைப்படுத்திக்கொள்” என்று பதிலளித்தார்கள்.

அந்தப் பெண்மணி, “அதனால் நான் எவ்வாறு தூய்மைப்படுத்த வேண்டும்?” என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் “அதனால் தூய்மைப்படுத்திக்கொள்” என்று (மட்டும்) சொன்னார்கள். அப்பெண்மணி மீண்டும் “எவ்வாறு (தூய்மைப்படுத்த வேண்டும்)?” என்று கேட்டார்.

நபி (ஸல்) அவர்கள் (வெட்கப்பட்ட வாறு) ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்)! தூய்மைப்படுத்திக்கொள் என்று பதிலளித்தார்கள்.

(நபியவர்கள் என்ன சொல்லவருகி றார்கள் என்பதை நான் புரிந்துகொண்டு) அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்து, “இரத்தம் படிந்த இடத்தை அந்த (நறுமணப் பொருள் தடவப்பட்ட) பஞ்சினால் துடைப்பாயாக” என்று கூறினேன்.

அத்தியாயம் : 6
315. حَدَّثَنَا مُسْلِمٌ، قَالَ حَدَّثَنَا وُهَيْبٌ، حَدَّثَنَا مَنْصُورٌ، عَنْ أُمِّهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ امْرَأَةً، مِنَ الأَنْصَارِ قَالَتْ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم كَيْفَ أَغْتَسِلُ مِنَ الْمَحِيضِ قَالَ "" خُذِي فِرْصَةً مُمَسَّكَةً، فَتَوَضَّئِي ثَلاَثًا "". ثُمَّ إِنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اسْتَحْيَا فَأَعْرَضَ بِوَجْهِهِ أَوْ قَالَ "" تَوَضَّئِي بِهَا "" فَأَخَذْتُهَا فَجَذَبْتُهَا فَأَخْبَرْتُهَا بِمَا يُرِيدُ النَّبِيُّ صلى الله عليه وسلم.
பாடம் : 14 மாதவிடாய்க் குளியல்
315. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிப் பெண்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “மாதவிடாயி -ருந்து (தூய்மையாகிக்கொள்ள) நான் எவ்வாறு குளிக்க வேண்டும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் நறுமணம் தோய்க்கப்பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து, ‘மூன்று முறை சுத்தம் செய்’ என்றோ அல்லது ‘அதன் மூலம் சுத்தம் செய்’ என்றோ சொன்னார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் வெட்கப்பட்டுக்கொண்டு தமது முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். உடனே நான் அந்தப் பெண்மணியைப் பிடித்து (என் பக்கம்) இழுத்து, நபி (ஸல்) அவர்கள் சொல்ல வருவதை அவருக்கு விளக்கிச் சொன்னேன்.

அத்தியாயம் : 6
316. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، حَدَّثَنَا ابْنُ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، أَنَّ عَائِشَةَ، قَالَتْ أَهْلَلْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ، فَكُنْتُ مِمَّنْ تَمَتَّعَ، وَلَمْ يَسُقِ الْهَدْىَ، فَزَعَمَتْ أَنَّهَا حَاضَتْ، وَلَمْ تَطْهُرْ حَتَّى دَخَلَتْ لَيْلَةُ عَرَفَةَ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ، هَذِهِ لَيْلَةُ عَرَفَةَ، وَإِنَّمَا كُنْتُ تَمَتَّعْتُ بِعُمْرَةٍ. فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" انْقُضِي رَأْسَكِ، وَامْتَشِطِي، وَأَمْسِكِي عَنْ عُمْرَتِكِ "". فَفَعَلْتُ، فَلَمَّا قَضَيْتُ الْحَجَّ أَمَرَ عَبْدَ الرَّحْمَنِ لَيْلَةَ الْحَصْبَةِ فَأَعْمَرَنِي مِنَ التَّنْعِيمِ مَكَانَ عُمْرَتِي الَّتِي نَسَكْتُ.
பாடம் : 15 ஒரு பெண் மாதவிடாய் நின்றபின் குளிக்கும்போது சீப்பினால் தலையை வாரிக்கொள்ளல்
316. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் ‘இஹ்ராம்’ கட்டினேன். அப்போது நான் குர்பானிப் பிராணியைக் கொண்டு வராத ‘தமத்துஉ’ வகை இஹ்ராம் கட்டியவர்களில் ஒருவளாய் இருந்தேன். இந்நிலையில் எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. ‘அரஃபா’வுடைய இரவு (துல்ஹஜ் எட்டாம் நாள் பின்னேரம்) வரும்வரை நான் தூய்மையாகவில்லை.

(மாதவிடாயி-ருந்து நீங்கிய அந்த இரவு) நான் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இது ‘அரஃபா’ வுடைய இரவு; நான் ‘உம்ரா’ செய்துவிட்டுத் திரும்பி, ‘இஹ்ராம்’ கட்டி ஹஜ் செய்வதாக நினைத்திருந்தேன். (ஆனால், என்னால் உம்ரா செய்ய முடியாமல் போய்விட்டது)” என்று சொன்னேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன்னுடைய தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக்கொள். உம்ரா செய்வதை நிறுத்திவிடு (ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்!)” என்றார்கள். நானும் அவ்வாறே செய்தேன்.

ஹஜ்ஜின் கிரியைகளை நான் செய்து முடித்தபோது (மதீனா செல்லும் வழியில்) முஹஸ்ஸப்’ (எனுமிடத்தில் நாங்கள்) இரவில் (தங்கியிருந்தபோது என் சகோதரர்) அப்துர் ரஹ்மானை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘தன்ஈம்’ எனும் இடத்தி-ருந்து (இஹ்ராம் கட்டி) புறப்பட்டுச் சென்று என்னை உம்ரா செய்விக்குமாறு பணித்தார்கள். இந்த உம்ரா (மாதவிடாயினால் செய்ய முடியாமற்போன) அந்த உம்ராவுக்குப் பதிலாக அமைந்தது.

அத்தியாயம் : 6
317. حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجْنَا مُوَافِينَ لِهِلاَلِ ذِي الْحِجَّةِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ أَحَبَّ أَنْ يُهِلَّ بِعُمْرَةٍ فَلْيُهْلِلْ، فَإِنِّي لَوْلاَ أَنِّي أَهْدَيْتُ لأَهْلَلْتُ بِعُمْرَةٍ "". فَأَهَلَّ بَعْضُهُمْ بِعُمْرَةٍ، وَأَهَلَّ بَعْضُهُمْ بِحَجٍّ، وَكُنْتُ أَنَا مِمَّنْ أَهَلَّ بِعُمْرَةٍ، فَأَدْرَكَنِي يَوْمُ عَرَفَةَ وَأَنَا حَائِضٌ، فَشَكَوْتُ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ "" دَعِي عُمْرَتَكِ، وَانْقُضِي رَأْسَكِ وَامْتَشِطِي، وَأَهِلِّي بِحَجٍّ "". فَفَعَلْتُ حَتَّى إِذَا كَانَ لَيْلَةُ الْحَصْبَةِ أَرْسَلَ مَعِي أَخِي عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ، فَخَرَجْتُ إِلَى التَّنْعِيمِ، فَأَهْلَلْتُ بِعُمْرَةٍ مَكَانَ عُمْرَتِي. قَالَ هِشَامٌ وَلَمْ يَكُنْ فِي شَىْءٍ مِنْ ذَلِكَ هَدْىٌ وَلاَ صَوْمٌ وَلاَ صَدَقَةٌ.
பாடம் : 16 ஒரு பெண் மாதவிடாய் நின்றபின் குளிக்கும்போது தனது தலைமுடியை அவிழ்த்துவிடுவது
317. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

துல்ஹஜ் மாதப் பிறை நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் (மதீனாவி-ருந்து) நாங்கள் புறப்பட்டோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “யார் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்ள விரும்புகிறாரோ அவர் அவ்வாறே செய்துகொள்ளலாம். ஏனெனில், குர்பானிப் பிராணியை நான் கொண்டுவராமல் இருந்திருந்தால் கட்டாயம் நானும் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருப்பேன்” என்று கூறினார்கள்.

அப்போது சிலர் உம்ராவிற்காக இஹ்ராம் கட்டினர். வேறுசிலர் ஹஜ்ஜுக் காக இஹ்ராம் கட்டினர். நான் உம்ரா விற்காக இஹ்ராம் கட்டியவர்களில் ஒருவளாய் இருந்தேன். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வந்தது. (எனவே, என்னால் முத-ல் எண்ணி யிருந்த உம்ராவைச் செய்ய முடியாமல் போய்விட்டது.) ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றி முறையிட்டேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “உம்ரா செய்வதை விட்டுவிடு; உனது தலைமுடியை அவிழ்த்து தலைவாரிக்கொள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்” என்றார்கள். நானும் அவ்வாறே செய்து (ஹஜ்ஜை) முடித்தேன்.

‘அல்ஹஸ்பா’ (முஹஸ்ஸப்) எனும் இடத்தில் நாங்கள் தங்கியிருந்த இரவில் (உம்ரா செய்வதற்காக) என்னுடன் என் சகோதரர் அப்துர் ரஹ்மானை நபியவர்கள் அனுப்பி வைத்தார்கள். (அவருடன்) நான் ‘தன்ஈம்’ என்ற இடத்திற்குப் புறப்பட்டுச் சென்று, விட்டுப்போன எனது உம்ராவிற்காக அங்கிருந்து இஹ்ராம் கட்டினேன்.

ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(மூவகை இஹ்ராம் முறைகளான தமத்துஉ, கிரான், இஃப்ராத் ஆகிய) இந்த முறைகள் எதிலும் (பரிகாரமாக) குர்பானி கொடுப்பதோ நோன்பு நோற்பதோ தானதர்மங்கள் செய்வதோ இருக்க வில்லை.6

அத்தியாயம் : 6
318. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" إِنَّ اللَّهَ ـ عَزَّ وَجَلَّ ـ وَكَّلَ بِالرَّحِمِ مَلَكًا يَقُولُ يَا رَبِّ نُطْفَةٌ، يَا رَبِّ عَلَقَةٌ، يَا رَبِّ مُضْغَةٌ. فَإِذَا أَرَادَ أَنْ يَقْضِيَ خَلْقَهُ قَالَ أَذَكَرٌ أَمْ أُنْثَى شَقِيٌّ أَمْ سَعِيدٌ فَمَا الرِّزْقُ وَالأَجَلُ فَيُكْتَبُ فِي بَطْنِ أُمِّهِ "".
பாடம் : 17 (கருப்பையில் முழுமையாக) வடிவமைக்கப்படும் சதைக் கட்டியும் வடிவமைக்கப்படாத (கருச்சிதைவு) கட்டியும்7
318. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் (பெண்ணின்) கருப்பைக்கென ஒரு வானவரை நியமித்துள்ளான்.

(அதனுள்ளே ஆணின் விந்தணு செலுத்தப்பட்டு பரிணாம மாற்றங்கள் ஏற்படும்போது) அந்த வானவர், “என் இறைவா! (இது ஒரு துளி) விந்து. என் இறைவா! இது பற்றித் தொங்கும் கரு. என் இறைவா! இது மெல்லப்பட்ட சக்கை போன்ற) சதைத்துண்டு” என்று கூறிக்கொண்டிருப்பார்.

அதை வாழ்விக்க அல்லாஹ் விரும்பும்போது அவ்வானவர், “என் இறைவா! (இது) ஆணா, அல்லது பெண்ணா? நற்பேறற்றதா? நற்பேறு உடையதா? (இதன்) வாழ்வாதாரம் எவ்வளவு? (இதன்) ஆயுள் எவ்வளவு?” என்று கேட்பார். (அல்லாஹ் வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும் போதே எழுதப்படும்.

இதை அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 6
319. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فِي حَجَّةِ الْوَدَاعِ، فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ، وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ، فَقَدِمْنَا مَكَّةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" مَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ وَلَمْ يُهْدِ فَلْيُحْلِلْ، وَمَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ وَأَهْدَى فَلاَ يَحِلُّ حَتَّى يَحِلَّ بِنَحْرِ هَدْيِهِ، وَمَنْ أَهَلَّ بِحَجٍّ فَلْيُتِمَّ حَجَّهُ "". قَالَتْ فَحِضْتُ فَلَمْ أَزَلْ حَائِضًا حَتَّى كَانَ يَوْمُ عَرَفَةَ، وَلَمْ أُهْلِلْ إِلاَّ بِعُمْرَةٍ، فَأَمَرَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ أَنْقُضَ رَأْسِي وَأَمْتَشِطَ، وَأُهِلَّ بِحَجٍّ، وَأَتْرُكَ الْعُمْرَةَ، فَفَعَلْتُ ذَلِكَ حَتَّى قَضَيْتُ حَجِّي، فَبَعَثَ مَعِي عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ، وَأَمَرَنِي أَنْ أَعْتَمِرَ مَكَانَ عُمْرَتِي مِنَ التَّنْعِيمِ.
பாடம் : 18 மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண் ஹஜ்ஜுக்காகவும் உம்ரா வுக்காகவும் ‘இஹ்ராம்’ கட்ட லாமா? எப்படி?
319. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது நபி (ஸல்) அவர்களுடன் நாங்களும் சென் றோம். எங்களில் சிலர் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டினர். வேறுசிலர் ஹஜ்ஜுக் காக இஹ்ராம் கட்டினர்.

நாங்கள் மக்காவை அடைந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(உங்களில்) யார் குர்பானிப் பிராணியைத் தம்முடன் கொண்டுவராமல் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் (உம்ராவின் கிரியைகளை நிறைவேற்றிவிட்டு) இஹ்ராமி-ருந்து விலகிக்கொள்ளலாம். யார் தம்முடன் குர்பானிப் பிராணியைக் கொண்டுவந்து இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் தமது குர்பானிப் பிராணியை அறுக்கும் (துல்ஹஜ் பத்தாம்) நாள்வரை தமது இஹ்ராமி-ருந்து விலக வேண்டாம். (உங்களில்) யார் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியிருந்தாரோ அவர் தமது ஹஜ்ஜை நிறைவு செய்யட்டும்” என்று சொன்னார்கள்.

(இந்நிலையில் உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியிருந்த) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் ஆகும்வரை நான் மாதவிடாயில் நீடித்தேன். அப்போது நான் உம்ராவிற்காகவே இஹ்ராம் கட்டியிருந்தேன்.

(இது குறித்து நான் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டபோது) எனது தலைமுடியை அவிழ்த்து தலை வாரிக் கொள்ளும்படியும் உம்ராவை விட்டுவிட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளு மாறும் என்னைப் பணித்தார்கள். அவ்வாறே நான் செய்து எனது ஹஜ்ஜை நிறைவுசெய்தேன்.

பின்னர் என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை அனுப்பி ‘தன்ஈம்’ எனும் இடத்தி-ருந்து (புறப்பட்டு) எனது (விட்டுப்போன) உம்ரா வுக்காக உம்ரா செய்துகொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் என்னைப் பணித்தார்கள்.

அத்தியாயம் : 6
320. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، أَنَّ فَاطِمَةَ بِنْتَ أَبِي حُبَيْشٍ، كَانَتْ تُسْتَحَاضُ فَسَأَلَتِ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ "" ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَتْ بِالْحَيْضَةِ، فَإِذَا أَقْبَلَتِ الْحَيْضَةُ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْتَسِلِي وَصَلِّي "".
பாடம் : 19 மாதவிடாய் ஆரம்பிப்பதும் நிற்பதும் சில பெண்கள், (தமது மாதவிடாய் இரத்தம் நின்றுவிட்டதா என்பதை அறிய) மாதவிடாய் காலத்தில் அணியும் கச்சையில் வைக்கும் பஞ்சை ஆயிஷா (ரலி) அவர்களிடம் அனுப்பிவைப்பார்கள். அந்தப் பஞ்சில் மஞ்சள் நிறம் இருக்கும். (இதைக் காணும்) ஆயிஷா (ரலி) அவர்கள், அந்தப் பஞ்சை (நிறமேதும் படாமல்) வெள்ளை நிறமாகக் காணும்வரை நீங்கள் அவசரப்பட்டுவிடாதீர்கள்” என்று கூறுவார்கள். அதாவது “மாதவிடாயி-ருந்து தூய்மையடைந்துவிட்டதாகக் கருதிவிடாதீர்கள்” என்று கூறுவார்கள். “சில பெண்கள் நடுநிசி நேரத்தில் விளக்குகளைக் கொண்டுவரச் சொல்- மாதவிடாயி-ருந்து தூய்மை அடைந்துவிட்டோமா என்பதை (சிரமப்பட்டு) பார்க்கிறார்கள்” என்ற செய்தி ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்களின் புதல்விக்கு எட்டியது. அப்போது அவர், “(நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த) அந்தப் பெண்கள் இப்படிச் செய்ததில்லை” என்று கூறி, அந்தச் சிலரைக் கடிந்து கொண்டார்கள்.
320. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்கள் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) உடையவராக இருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கேட்டபோது, “இது இரத்தக் குழா(யி-ருந்து வெளிவருவதே)யாகும்; மாத விடாயன்று. எனவே, மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு; மாதவிடாய்க் காலம் கழிந்ததும் குளித்து விட்டு (ஒவ்வொரு தொழுகைக்கும் அங்கத் தூய்மை செய்து) தொழுதுகொள்” என்றார்கள்.

அத்தியாயம் : 6
321. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا هَمَّامٌ، قَالَ حَدَّثَنَا قَتَادَةُ، قَالَ حَدَّثَتْنِي مُعَاذَةُ، أَنَّ امْرَأَةً، قَالَتْ لِعَائِشَةَ أَتَجْزِي إِحْدَانَا صَلاَتَهَا إِذَا طَهُرَتْ فَقَالَتْ أَحَرُورِيَّةٌ أَنْتِ كُنَّا نَحِيضُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم فَلاَ يَأْمُرُنَا بِهِ. أَوْ قَالَتْ فَلاَ نَفْعَلُهُ.
பாடம் : 20 மாதவிடாய் காலத்தில் விடு பட்ட தொழுகைகளை மீண்டும் தொழ வேண்டியதில்லை. அபூசயீத் அல்குத்ரீ (ரலி), ஜாபிர் (ரலி) ஆகியோர் கூறுகிறார்கள்: “(மாதவிடாய் ஏற்பட்ட) அந்தப் பெண் தொழுகைகளை விட்டுவிட வேண்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
321. முஆதா பின்த் அப்தில்லாஹ் அல்அதவிய்யா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “பெண்களாகிய நாங்கள் மாதவிடாயி-ருந்து தூய்மையானதற்குப் பின்புள்ள தொழுகைகளைத் தொழுதால் போதுமா? (அல்லது மாதவிடாய்க் காலத்தில் விடுபட்ட தொழுகைகளையும் தொழ வேண்டுமா?) என்று கேட்டார்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “நீ (காரிஜிய்யா கூட்டத்தாரின் பிறப்பிடமான ‘கூஃபா’ நகருக்கு அருகிலுள்ள) ‘ஹரூரா’ எனும் இடத்தைச் சேர்ந்தவளா? நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கும்போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்படும். அப்போது விடுபட்ட தொழுகைகளைத் தொழுமாறு ‘எங்களை நபி (ஸல்) அவர்கள் பணிக்கமாட்டார்கள்’ அல்லது ‘அத்தொழுகைகளை நாங்கள் தொழமாட்டோம்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 6
322. حَدَّثَنَا سَعْدُ بْنُ حَفْصٍ، قَالَ حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِي سَلَمَةَ، حَدَّثَتْهُ أَنَّ أُمَّ سَلَمَةَ قَالَتْ حِضْتُ وَأَنَا مَعَ النَّبِيِّ، صلى الله عليه وسلم فِي الْخَمِيلَةِ، فَانْسَلَلْتُ فَخَرَجْتُ مِنْهَا، فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي فَلَبِسْتُهَا، فَقَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَنُفِسْتِ "". قُلْتُ نَعَمْ، فَدَعَانِي فَأَدْخَلَنِي مَعَهُ فِي الْخَمِيلَةِ. قَالَتْ وَحَدَّثَتْنِي أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ، وَكُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنَ الْجَنَابَةِ.
பாடம் : 21 மாதவிடாய் (இரத்தம் பட்ட) ஆடையை அணிந்திருக்கும் பெண்ணுடன் அவளுடைய கணவன் உறங்குவது
322. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் கரை வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கறுப்புப் போர்வைக்குள் இருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. உடனே நான் அதிலிருந்து மெல்ல நழுவி(ச் சென்று), மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுத்து அணிந்துகொண்டேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். ஆயினும், அவர்கள் என்னை அழைத்து, அந்தப் போர்வைக்குள் என்னை நுழைத்துக் கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது என்னை முத்தமிடு வார்கள். நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தி-ருந்து (தண்ணீர் அள்ளி) பெருந்துடக்கின் குளியலை நிறைவேற்றுவோம்.

அத்தியாயம் : 6
323. حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، قَالَ حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ زَيْنَبَ ابْنَةِ أَبِي سَلَمَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ بَيْنَا أَنَا مَعَ النَّبِيِّ، صلى الله عليه وسلم مُضْطَجِعَةً فِي خَمِيلَةٍ حِضْتُ، فَانْسَلَلْتُ فَأَخَذْتُ ثِيَابَ حِيضَتِي فَقَالَ "" أَنُفِسْتِ "". فَقُلْتُ نَعَمْ. فَدَعَانِي فَاضْطَجَعْتُ مَعَهُ فِي الْخَمِيلَةِ.
பாடம் : 22 தூய்மையாக இருக்கும்போது அணியும் ஆடை அல்லாமல், மாதவிடாய் காலத்திற்கெனத் தனியாக ஆடை வைத்துக் கொள்வது
323. உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் கரை வேலைப்பாடுகள் கொண்ட ஒரு கறுப்புப் போர்வைக்குள் படுத்திருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. உடனே (அதிலிருந்து) நழுவி(ச் சென்று), மாதவிடாய் காலத்தில் அணியும் துணியை எடுத்தேன்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். ஆயினும், அவர்கள் என்னை(த் தமக் கருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தப் போர்வைக்குள் படுத்துக்கொண்டேன்.

அத்தியாயம் : 6