248. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ بَدَأَ فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ يَتَوَضَّأُ كَمَا يَتَوَضَّأُ لِلصَّلاَةِ، ثُمَّ يُدْخِلُ أَصَابِعَهُ فِي الْمَاءِ، فَيُخَلِّلُ بِهَا أُصُولَ شَعَرِهِ ثُمَّ يَصُبُّ عَلَى رَأْسِهِ ثَلاَثَ غُرَفٍ بِيَدَيْهِ، ثُمَّ يُفِيضُ الْمَاءَ عَلَى جِلْدِهِ كُلِّهِ.
பாடம் : 1 குளிப்பதற்குமுன் அங்கத் தூய்மை (உளூ) செய்தல்2
248. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற் காக குளிக்க முற்பட்டால், முத-ல் தம் (முன்) கைகள் இரண்டையும் கழுவுவார் கள். பிறகு தொழுகைக்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள். பிறகு தம் விரல்களைத் தண்ணீருக்குள் நுழைத்து, அவற்றால், தமது (தலையின்) ரோமக்கால் (பகுதி)களைக் கோதிவிடுவார்கள்.

பிறகு தமது தலையின் மீது மூன்று முறை கைகளால் தண்ணீரை அள்ளி ஊற்றுவார்கள். பிறகு தமது மேனி முழுவதிலும் தண்ணீரை ஊற்றுவார்கள்.


அத்தியாயம் : 5
249. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وُضُوءَهُ لِلصَّلاَةِ غَيْرَ رِجْلَيْهِ، وَغَسَلَ فَرْجَهُ، وَمَا أَصَابَهُ مِنَ الأَذَى، ثُمَّ أَفَاضَ عَلَيْهِ الْمَاءَ، ثُمَّ نَحَّى رِجْلَيْهِ فَغَسَلَهُمَا، هَذِهِ غُسْلُهُ مِنَ الْجَنَابَةِ.
பாடம் : 1 குளிப்பதற்குமுன் அங்கத் தூய்மை (உளூ) செய்தல்2
249. நபி (ஸல்) அவர்களின் துணைவி யார் மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பெருந்துடக்கிற் காகக் குளிக்கும்போது) தம்மிரு கால்களை விட்டுவிட்டு (ஏனைய உறுப்புகளுக்கு) தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்வார்கள். மேலும், தமது மர்ம உறுப்பையும் உட-ல் பட்ட அசிங்கத்தையும் கழுவுவார்கள்.

பிறகு தம் (உடல்)மீது தண்ணீர் ஊற்றுவார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று, தம் கால்களைக் கழுவுவார்கள். இதுவே பெருந்துடக்கிற்காக நபி (ஸல்) அவர்கள் குளிக்கும் முறையாகும்.

அத்தியாயம் : 5
250. حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنْ قَدَحٍ يُقَالُ لَهُ الْفَرَقُ.
பாடம் : 2 ஒருவர் தம் மனைவியுடன் குளிப்பது
250. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் நபி (ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தி-ருந்து குளித்தோம். அந்தப் பாத்திரத்திற்கு ‘ஃபரக்‘ என்று கூறப்படும்.3

அத்தியாயம் : 5
251. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنِي عَبْدُ الصَّمَدِ، قَالَ حَدَّثَنِي شُعْبَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ حَفْصٍ، قَالَ سَمِعْتُ أَبَا سَلَمَةَ، يَقُولُ دَخَلْتُ أَنَا وَأَخُو، عَائِشَةَ عَلَى عَائِشَةَ فَسَأَلَهَا أَخُوهَا عَنْ غُسْلِ النَّبِيِّ، صلى الله عليه وسلم فَدَعَتْ بِإِنَاءٍ نَحْوًا مِنْ صَاعٍ، فَاغْتَسَلَتْ وَأَفَاضَتْ عَلَى رَأْسِهَا، وَبَيْنَنَا وَبَيْنَهَا حِجَابٌ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ قَالَ يَزِيدُ بْنُ هَارُونَ وَبَهْزٌ وَالْجُدِّيُّ عَنْ شُعْبَةَ قَدْرِ صَاعٍ.
பாடம் : 3 ஒரு ‘ஸாஉ’ அல்லது அதைப் போன்ற அளவுள்ள தண்ணீ ரில் குளிப்பது4
251. அபூசலமா (பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் ஆயிஷா (ரலி) அவர்களின் ஒரு சகோதரரும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (அவர்களின் இல்லத்திற் குச்) சென்றோம், அப்போது அவர்களுடைய சகோதரர் நபி (ஸல்) அவர்களின் குளியல் பற்றி (‘அவர்கள் எப்படிக் குளிப்பார்கள்?’ என்று) கேட்டார்.

உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் ‘ஸாஉ’ போன்ற ஒரு பாத்திரம் (தண்ணீர்) கொண்டுவரச் சொல்-க் குளித்துக்காட்டினார்கள். தமது தலைமீது தண்ணீரை ஊற்றினார்கள். (அது மட்டும் தெரிந்தது) அப்போது அவர்களுக்கும் எங்களுக்கும் இடையில் ஒரு திரை இருந்தது.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

ஷுஅபா (பின் ஹஜ்ஜாஜ்-ரஹ்) அவர் களின் ஓர் அறிவிப்பில் (‘ஸாஉ போன்ற’ என்பதற்குப் பதிலாக) ‘ஸாஉ அளவு’ என இடம்பெற்றுள்ளது


அத்தியாயம் : 5
252. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ، أَنَّهُ كَانَ عِنْدَ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ هُوَ وَأَبُوهُ، وَعِنْدَهُ قَوْمٌ فَسَأَلُوهُ عَنِ الْغُسْلِ،. فَقَالَ يَكْفِيكَ صَاعٌ. فَقَالَ رَجُلٌ مَا يَكْفِينِي. فَقَالَ جَابِرٌ كَانَ يَكْفِي مَنْ هُوَ أَوْفَى مِنْكَ شَعَرًا، وَخَيْرٌ مِنْكَ، ثُمَّ أَمَّنَا فِي ثَوْبٍ.
பாடம் : 3 ஒரு ‘ஸாஉ’ அல்லது அதைப் போன்ற அளவுள்ள தண்ணீ ரில் குளிப்பது4
252. அபூஜஅஃபர் (முஹம்மத் பின் அலீ அல்பாக்கிர்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அருகில் நானும் என் தந்தை (அலீ பின் ஹுசைன்) அவர்களும் வேறுசிலரும் இருந்தோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்களிடம் குளியல் பற்றிக் கேட்டோம். “ஒரு ‘ஸாஉ’ தண்ணீர் போதும்” என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ஒருவர், “அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது” என்றார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், “உன்னைவிட அதிக முடியுள்ளவரும் உன்னைவிடச் சிறந்தவரு (மான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு)க்கு அந்த அளவுத் தண்ணீர் போதுமானதாக இருந்தது” எனக் கூறினார்கள். பிறகு ஒரே ஆடை அணிந்தவர்களாக எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள்.


அத்தியாயம் : 5
253. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم وَمَيْمُونَةَ كَانَا يَغْتَسِلاَنِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ. قَالَ أَبُو عَبْدِ اللَّهِ كَانَ ابْنُ عُيَيْنَةَ يَقُولُ أَخِيرًا عَنِ ابْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ، وَالصَّحِيحُ مَا رَوَى أَبُو نُعَيْمٍ.
பாடம் : 3 ஒரு ‘ஸாஉ’ அல்லது அதைப் போன்ற அளவுள்ள தண்ணீ ரில் குளிப்பது4
253. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் (அவர்களின் துணைவியாரும் என் சிறிய தாயாருமாôன) மைமூனா (ரலி) அவர்களும் சேர்ந்து ஒரே பாத்திரத்தி-ருந்து குளிப்பது வழக்கம்.

ஷுஅபா பின் அல்ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘ஸாஉ அளவு(ள்ள பாத்திரத்தி-ருந்து)’ என இடம்பெற்றுள்ளது.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் தமது இறுதிக் காலத்தில், மைமூனா (ரலி) அவர்களிடமிருந்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கேட்டு அறிவித்ததாகக் கூறுவது வழக்கம். (அவர்கள் குளிக்கும்போது அவர்களைத் தாம் பார்த்ததாக அறிவிக்கவில்லை.) ஆயினும், (என் ஆசிரியர்) அபூநுஐம் (ரஹ்) அவர்களின் (மேற்கண்ட) அறிவிப்பே சரியானதாகும்.

அத்தியாயம் : 5
254. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ صُرَدٍ، قَالَ حَدَّثَنِي جُبَيْرُ بْنُ مُطْعِمٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" أَمَّا أَنَا فَأُفِيضُ عَلَى رَأْسِي ثَلاَثًا "". وَأَشَارَ بِيَدَيْهِ كِلْتَيْهِمَا.
பாடம் : 4 (குளிக்கும்போது) தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுதல்
254. ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நானோ (குளிக்கும்போது) மூன்று முறை எனது தலையில் தண்ணீரை ஊற்றுவேன்” என்று கூறி, தம்மிரு கைகளாலும் (தண்ணீர் அள்ளுவதைப் போன்று) சைகை செய்து காட்டினார்கள்.


அத்தியாயம் : 5
255. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مِخْوَلِ بْنِ رَاشِدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَلِيٍّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يُفْرِغُ عَلَى رَأْسِهِ ثَلاَثًا.
பாடம் : 4 (குளிக்கும்போது) தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுதல்
255. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (குளிக்கும் போது தம்மிரு கைகளால் அள்ளி) மூன்று முறை தமது தலையில் தண்ணீர் ஊற்றக்கூடியவர்களாக இருந்தார்கள்.


அத்தியாயம் : 5
256. حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا مَعْمَرُ بْنُ يَحْيَى بْنِ سَامٍ، حَدَّثَنِي أَبُو جَعْفَرٍ، قَالَ قَالَ لِي جَابِرٌ أَتَانِي ابْنُ عَمِّكَ يُعَرِّضُ بِالْحَسَنِ بْنِ مُحَمَّدٍ ابْنِ الْحَنَفِيَّةِ قَالَ كَيْفَ الْغُسْلُ مِنَ الْجَنَابَةِ فَقُلْتُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَأْخُذُ ثَلاَثَةَ أَكُفٍّ وَيُفِيضُهَا عَلَى رَأْسِهِ، ثُمَّ يُفِيضُ عَلَى سَائِرِ جَسَدِهِ. فَقَالَ لِي الْحَسَنُ إِنِّي رَجُلٌ كَثِيرُ الشَّعَرِ. فَقُلْتُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَكْثَرَ مِنْكَ شَعَرًا.
பாடம் : 4 (குளிக்கும்போது) தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுதல்
256. அபூஜஅஃபர் (முஹம்மத் பின் அலீ அல்பாக்கிர்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: உன் தந்தையின் சகோதரரின் புதல்வர் -ஹசன் பின் முஹம்மத் பின் அல்ஹனஃபிய்யா (ரஹ்) அவர்களையே குறிப்பிடுகிறார்கள்- வந்து, “பெருந்துடக் கிற்காகக் குளிப்பது எப்படி?” என்று கேட்டார். அதற்கு நான், “நபி (ஸல்) அவர்கள் மூன்று கை நிறையத் தண்ணீர் அள்ளி, அதைத் தமது தலையில் ஊற்றுவார்கள்; பின்னர் உடல் முழுவதும் ஊற்றுவார்கள்” என்று சொன்னேன்.

அதற்கு ஹசன் அவர்கள், “நான் அதிகமான முடியுடையவனாக இருக்கின் றேனே (மூன்று கைத் தண்ணீர் போதாதே)?” என்று கேட்டார். அதற்கு நான், “நபி (ஸல்) அவர்கள் உம்மைவிட அதிக முடியுடையவர்களாக இருந்தார்கள் (அவர்களுக்கே அது போதுமானதாயிருந் ததே?) என்று கூறினேன்.

அத்தியாயம் : 5
257. حَدَّثَنَا مُوسَى، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَتْ مَيْمُونَةُ وَضَعْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم مَاءً لِلْغُسْلِ، فَغَسَلَ يَدَيْهِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، ثُمَّ أَفْرَغَ عَلَى شِمَالِهِ فَغَسَلَ مَذَاكِيرَهُ، ثُمَّ مَسَحَ يَدَهُ بِالأَرْضِ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَحَوَّلَ مِنْ مَكَانِهِ فَغَسَلَ قَدَمَيْهِ.
பாடம் : 5 குளிக்கும்போது ஒரு தடவை தண்ணீர் ஊற்றுதல்
257. (நபி (ஸல்) அவர்களின் துணைவி யார்) மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தேன். அப்போது அவர்கள் ‘இரண்டு முறை’ அல்லது ‘மூன்று முறை’ தமது (முன்)கைகளைக் கழுவினார்கள். பிறகு தமது இடக் கையில் தண்ணீரை ஊற்றித் தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள். பிறகு தமது (இடக்) கையை பூமியில் தேய்த்(து சுத்தம் செய்)தார்கள்.

பிறகு வாய் கொப்புளித்து மூக்கிற்கு நீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள். தமது முகத்தையும் (முழங்கைவரை) இரு கைகளையும் கழுவினார்கள். பின்னர் தமது உடல்மீது (ஒரு முறை) தண்ணீர் ஊறறினார்கள். பிறகு அந்த இடத்தி-ருந்து சிறிது நகர்ந்து நின்று, இரு பாதங்களையும் கழுவினார்கள்.

அத்தியாயம் : 5
258. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنْ حَنْظَلَةَ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ دَعَا بِشَىْءٍ نَحْوَ الْحِلاَبِ، فَأَخَذَ بِكَفِّهِ، فَبَدَأَ بِشِقِّ رَأْسِهِ الأَيْمَنِ ثُمَّ الأَيْسَرِ، فَقَالَ بِهِمَا عَلَى رَأْسِهِ.
பாடம் : 6 குளிக்கப்போகும் ஒருவர், குவளை நீரால் கழுவத் தொடங் குவதா? அல்லது முதலில் நறுமணம் பூசிக்கொள்வதா?5
258. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற் காக (கடமையான குளியல்) குளிக்கும் போது, பால் கறக்கும் குவளை போன்ற ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி, அதிலிருந்து (தமது கையில் நீர் அள்ளித்) தமது தலையின் வலப் புறம் ஊற்றுவார் கள்; பிறகு இடப் புறம் ஊற்றுவார்கள். பிறகு தம் இரு கைகளால் (நீர் அள்ளி) தலையின் நடுவில் ஊற்றுவார்கள்.

அத்தியாயம் : 5
259. حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، قَالَ حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ حَدَّثَنِي سَالِمٌ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ حَدَّثَتْنَا مَيْمُونَةُ، قَالَتْ صَبَبْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم غُسْلاً، فَأَفْرَغَ بِيَمِينِهِ عَلَى يَسَارِهِ فَغَسَلَهُمَا، ثُمَّ غَسَلَ فَرْجَهُ، ثُمَّ قَالَ بِيَدِهِ الأَرْضَ فَمَسَحَهَا بِالتُّرَابِ، ثُمَّ غَسَلَهَا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ، وَأَفَاضَ عَلَى رَأْسِهِ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ قَدَمَيْهِ، ثُمَّ أُتِيَ بِمِنْدِيلٍ، فَلَمْ يَنْفُضْ بِهَا.
பாடம் : 7 பெருந்துடக்கிற்கான குளிய லின்போது வாய் கொப்புளித்து மூக்கில் தண்ணீர் செலுத்(திச் சிந்)துதல்
259. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்காகத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது வலக் கரத்தால் நீர் அள்ளி இடக்கையின் மீது ஊற்றி இரு கைகளையும் கழுவினார்கள்; பிறகு தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள். பிறகு தமது கையைப் பூமியில் மண் கொண்டு தேய்த்து, பிறகு அதை (நீரால்) கழுவினார்கள். பிறகு வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள். பிறகு தமது முகத்தைக் கழுவி, தலையில் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள்.

பிறகு (துடைத்துக்கொள்ள) துண்டு கொடுக்கப்பட்டது. ஆனால், அதன் மூலம் அவர்கள் துடைத்துக்கொள்ளவில்லை.6

அத்தியாயம் : 5
260. حَدَّثَنَا الْحُمَيْدِيُّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ، فَغَسَلَ فَرْجَهُ بِيَدِهِ، ثُمَّ دَلَكَ بِهَا الْحَائِطَ ثُمَّ غَسَلَهَا، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ، فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ غَسَلَ رِجْلَيْهِ.
பாடம் : 8 கை நன்றாகச் சுத்தமாவதற் காகக் கையை மண்ணில் தேய்த்துக் கழுவுதல்
260. மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற் காகக் குளித்தபோது (முதலில்) தமது மர்ம உறுப்பைக் கையால் கழுவினார்கள். பிறகு கையைச் சுவரில் தேய்த்துக் கழுவி னார்கள். பிறகு தொழுகைக்காக அங்கத் தூய்மை செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்தார்கள். குளித்து முடித்து (இறுதியில்) தம்மிரு கால்களையும் கழுவினார்கள்.

அத்தியாயம் : 5
261. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، أَخْبَرَنَا أَفْلَحُ، عَنِ الْقَاسِمِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ تَخْتَلِفُ أَيْدِينَا فِيهِ.
பாடம் : 9 பெருந்துடக்கு உடையவர் கையில் எவ்வித அசுத்தமும் இல்லாதபோது, கையைக் கழுவுவதற்கு முன்னர் கையை(த் தண்ணீர்) பாத்திரத்தில் நுழைக்க லாமா? இப்னு உமர் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோர் தங்கள் கையைக் கழுவுவதற்கு முன்னர் தண்ணீர் பாத்திரத் தில் கையை நுழைத்துள்ளனர்; பின்னர் அங்கத் தூய்மை செய்தனர். கடமையான குளியலை நிறைவேற்றும் போது, அதிலிருந்து தெறிக்கும் தண்ணீ ரால் எவ்விதப் பாதிப்புமில்லை என இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கருதினர்.
261. (நபி (ஸல்) அவர்களின் துணைவி யார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் நபி (ஸல்) அவர்களும் (சேர்ந்து) ஒரே பாத்திரத்திலிருந்து (தண்ணீர் அள்ளி) குளிப்போம். அப்போது எங்கள் இருவரின் கைகளும் அந்தப் பாத்திரத்தினுள் மாறிமாறிச் செல்லும்.


அத்தியாயம் : 5
262. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ غَسَلَ يَدَهُ.
பாடம் : 9 பெருந்துடக்கு உடையவர் கையில் எவ்வித அசுத்தமும் இல்லாதபோது, கையைக் கழுவுவதற்கு முன்னர் கையை(த் தண்ணீர்) பாத்திரத்தில் நுழைக்க லாமா? இப்னு உமர் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோர் தங்கள் கையைக் கழுவுவதற்கு முன்னர் தண்ணீர் பாத்திரத் தில் கையை நுழைத்துள்ளனர்; பின்னர் அங்கத் தூய்மை செய்தனர். கடமையான குளியலை நிறைவேற்றும் போது, அதிலிருந்து தெறிக்கும் தண்ணீ ரால் எவ்விதப் பாதிப்புமில்லை என இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கருதினர்.
262. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காகக் குளிக்கும்போது (முத-ல்) கைகளைக் கழுவிக்கொள் வார்கள்.


அத்தியாயம் : 5
263. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ، صلى الله عليه وسلم مِنْ إِنَاءٍ وَاحِدٍ مِنْ جَنَابَةٍ. وَعَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ مِثْلَهُ.
பாடம் : 9 பெருந்துடக்கு உடையவர் கையில் எவ்வித அசுத்தமும் இல்லாதபோது, கையைக் கழுவுவதற்கு முன்னர் கையை(த் தண்ணீர்) பாத்திரத்தில் நுழைக்க லாமா? இப்னு உமர் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோர் தங்கள் கையைக் கழுவுவதற்கு முன்னர் தண்ணீர் பாத்திரத் தில் கையை நுழைத்துள்ளனர்; பின்னர் அங்கத் தூய்மை செய்தனர். கடமையான குளியலை நிறைவேற்றும் போது, அதிலிருந்து தெறிக்கும் தண்ணீ ரால் எவ்விதப் பாதிப்புமில்லை என இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கருதினர்.
263. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் நபி (ஸல்) அவர்களும் பெருந்துடக்கிற்கான குளியலை ஒரே பாத்திரத்தி-ருந்து நிறைவேற்றினோம்..

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 5
264. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ، قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم وَالْمَرْأَةُ مِنْ نِسَائِهِ يَغْتَسِلاَنِ مِنْ إِنَاءٍ وَاحِدٍ. زَادَ مُسْلِمٌ وَوَهْبٌ عَنْ شُعْبَةَ مِنَ الْجَنَابَةِ.
பாடம் : 9 பெருந்துடக்கு உடையவர் கையில் எவ்வித அசுத்தமும் இல்லாதபோது, கையைக் கழுவுவதற்கு முன்னர் கையை(த் தண்ணீர்) பாத்திரத்தில் நுழைக்க லாமா? இப்னு உமர் (ரலி), பராஉ பின் ஆஸிப் (ரலி) ஆகியோர் தங்கள் கையைக் கழுவுவதற்கு முன்னர் தண்ணீர் பாத்திரத் தில் கையை நுழைத்துள்ளனர்; பின்னர் அங்கத் தூய்மை செய்தனர். கடமையான குளியலை நிறைவேற்றும் போது, அதிலிருந்து தெறிக்கும் தண்ணீ ரால் எவ்விதப் பாதிப்புமில்லை என இப்னு உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கருதினர்.
264. அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அவர்களின் துணைவியரில் ஒருவரும் (சேர்ந்து) ஒரே பாத்திரத்தி-ருந்து (தண்ணீர் அள்ளிக்) குளிப்பார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களிடமிருந்து முஸ்-ம் (பின் இப்ராஹீம் - ரஹ்), வஹ்ப் (பின் ஜரீர் - ரஹ்) ஆகியோர் அறிவிக்கும் தொடர்களில், ‘பெருந்துடக்கிற்காக (குளிப் பார்கள்)’ என்று கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம் : 5
265. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَحْبُوبٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، قَالَ حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَتْ مَيْمُونَةُ وَضَعْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مَاءً يَغْتَسِلُ بِهِ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ، فَغَسَلَهُمَا مَرَّتَيْنِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، ثُمَّ أَفْرَغَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ مَذَاكِيرَهُ، ثُمَّ دَلَكَ يَدَهُ بِالأَرْضِ، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ ثُمَّ غَسَلَ رَأْسَهُ ثَلاَثًا، ثُمَّ أَفْرَغَ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَنَحَّى مِنْ مَقَامِهِ فَغَسَلَ قَدَمَيْهِ.
பாடம் : 10 குளிக்கும்போதும் அங்கத் தூய்மை செய்யும்போதும் (சிறிது) இடைவெளி விட்டு உறுப்புகளைக் கழுவுதல் அங்கத் தூய்மை செய்த தண்ணீர் (உறுப்புகளில்) காய்ந்த பின்னர் தம்மிரு கால்களையும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கழுவியதாக அறிவிக்கப்படுகிறது.
265. (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பதற்காக நான் தண்ணீர் வைத்தேன். அவர்கள் (முத-ல்) தம்மிரு முன்கைகள்மீது தண்ணீர் ஊற்றி அவ்விரண்டையும் ‘இரண்டு முறை’ அல்லது ‘மூன்று முறை’ கழுவினார்கள். பிறகு தமது வலக் கையால் (நீர் அள்ளி) இடக் கையின் மீது தண்ணீர் ஊற்றி தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள். பிறகு தமது கையைத் தரையில் தேய்த்(துச் சுத்தம் செய்)தார்கள். பிறகு வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி (சிந்தி)னார்கள்.

பிறகு தம் முகத்தையும் ((முழங்கை வரை) இரண்டு கைகளையும் கழுவினார் கள்; தலையை மூன்று முறை (தண்ணீர் ஊற்றிக்) கழுவினார்கள். பிறகு உடம்பில் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு அந்த இடத்தி-ருந்து சற்றுத் தள்ளி நின்று தமது பாதங்கள் இரண்டையும் கழுவினார்கள்.

அத்தியாயம் : 5
266. حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ بِنْتِ الْحَارِثِ، قَالَتْ وَضَعْتُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم غُسْلاً وَسَتَرْتُهُ، فَصَبَّ عَلَى يَدِهِ، فَغَسَلَهَا مَرَّةً أَوْ مَرَّتَيْنِ ـ قَالَ سُلَيْمَانُ لاَ أَدْرِي أَذَكَرَ الثَّالِثَةَ أَمْ لاَ ـ ثُمَّ أَفْرَغَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ فَرْجَهُ، ثُمَّ دَلَكَ يَدَهُ بِالأَرْضِ أَوْ بِالْحَائِطِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، وَغَسَلَ رَأْسَهُ، ثُمَّ صَبَّ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ قَدَمَيْهِ، فَنَاوَلْتُهُ خِرْقَةً، فَقَالَ بِيَدِهِ هَكَذَا، وَلَمْ يُرِدْهَا.
பாடம் : 11 குளிக்கும்போது வலக் கையில் தண்ணீர் அள்ளி இடக் கையின் மீது ஊற்றுவது
266. மைமூனா பின்த் அல்ஹாரிஸ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பதற்காகத் தண்ணீர் வைத்து, அவர்களுக்குத் திரையிட்டேன். அப்போது அவர்கள் தமது கையில் தண்ணீர் ஊற்றி, அதை ‘ஒரு முறை’ அல்லது ‘இரு முறை’ கழுவினார்கள்

-“அறிவிப்பாளர் சா-ம் பின் அபில் ஜஅத் (ரஹ்) அவர்கள் ‘மூன்று முறை’ என்றும் சொன்னார்களா அல்லது இல்லையா என்பது எனக்குத் தெரிய வில்லை” என சுலைமான் (பின் மிஹ்ரான் அல்அஃமஷ் - ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். -

பிறகு நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கையால் (நீர் அள்ளி) இடக் கையின் மீது ஊற்றி தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள், பிறகு தமது (இடக்) கையை ‘பூமியில்’ அல்லது ‘சுவரில்’ தேய்த்துக் கழுவினார்கள்.

பிறகு வாய் கொப்புளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள்; முகத்தையும் (முழங்கைவரை) இரண்டு கைகளையும் கழுவினார்கள்; தலையையும் கழுவினார்கள்; பிறகு உடம்பில் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து நின்று தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள். அப்போது (துடைக்க) அவர்களுக்கு ஒரு துண்டை எடுத்துக்கொடுத்தேன். அப்போது ‘வேண்டாம்’ என்பதுபோல் தமது கையால் சைகை செய்தார்கள்.

அத்தியாயம் : 5
267. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، وَيَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ شُعْبَةَ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُحَمَّدِ بْنِ الْمُنْتَشِرِ، عَنْ أَبِيهِ، قَالَ ذَكَرْتُهُ لِعَائِشَةَ فَقَالَتْ يَرْحَمُ اللَّهُ أَبَا عَبْدِ الرَّحْمَنِ، كُنْتُ أُطَيِّبُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم، فَيَطُوفُ عَلَى نِسَائِهِ، ثُمَّ يُصْبِحُ مُحْرِمًا يَنْضَخُ طِيبًا.
பாடம் : 12 ஒரு முறை தாம்பத்தியஉறவு கொண்டபின் மீண்டும் தாம்பத் திய உறவு கொள்வதும், (பலதார மணம் புரிந்தவர்) தம் மனைவி யருடன் தாம்பத்திய உறவு கொண்டபின் ஒரேயொரு முறை குளிப்பதும்
267. முஹம்மத் பின் முன்தஷிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அ(ப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “நான் வாசனைத் திரவியங் களைப் பயன்படுத்திக் காலையில் ‘இஹ்ராம்’ கட்டியவனாக இருக்க விரும்ப வில்லை” எனக் கூறிய)து பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் குறிப்பிட்டேன்.

அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், “அபூஅப்திர் ரஹ்மானுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! நான் நபி (ஸல்) அவர்களுக்கு வாசனைத் திரவியங்களைப் பூசுவேன். அவர்கள் தம் துணைவியரிடம் (தாம்பத்திய உறவு கொண்டு)விட்டு வருவார்கள். பிறகு காலையில் நறுமணம் கமழக் கமழ ‘இஹ்ராம்’ கட்டியிருப்பார்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.


அத்தியாயம் : 5