132. حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُنْذِرٍ الثَّوْرِيِّ، عَنْ مُحَمَّدٍ ابْنِ الْحَنَفِيَّةِ، عَنْ عَلِيٍّ، قَالَ كُنْتُ رَجُلاً مَذَّاءً فَأَمَرْتُ الْمِقْدَادَ أَنْ يَسْأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَسَأَلَهُ فَقَالَ "" فِيهِ الْوُضُوءُ "".
பாடம் : 51 (கேள்வி கேட்க) வெட்கப்பட் டுப் பிறரைக் கேட்கச் சொல்லல்
132. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

பாலுணர்வு கிளர்ச்சி நீர் (‘மதீ’) அதிக மாக வெளிப்படும் ஆடவனாக நான் இருந்தேன். (இது பற்றிக் கேட்க வெட்கப் பட்டு) மிக்தாத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு பணித்தேன். அவர் அதுபற்றி நபியவர்களிடம் கேட்டார். “அதற்காக அங்கத் தூய்மை (உளூ) செய்வதுதான் கடமை (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அத்தியாயம் : 4
133. حَدَّثَنِي قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ، قَالَ حَدَّثَنَا نَافِعٌ، مَوْلَى عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ،. أَنَّ رَجُلاً، قَامَ فِي الْمَسْجِدِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ، مِنْ أَيْنَ تَأْمُرُنَا أَنْ نُهِلَّ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" يُهِلُّ أَهْلُ الْمَدِينَةِ مِنْ ذِي الْحُلَيْفَةِ، وَيُهِلُّ أَهْلُ الشَّأْمِ مِنَ الْجُحْفَةِ، وَيُهِلُّ أَهْلُ نَجْدٍ مِنْ قَرْنٍ "". وَقَالَ ابْنُ عُمَرَ وَيَزْعُمُونَ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ "" وَيُهِلُّ أَهْلُ الْيَمَنِ مِنْ يَلَمْلَمَ "". وَكَانَ ابْنُ عُمَرَ يَقُولُ لَمْ أَفْقَهْ هَذِهِ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم.
பாடம் : 52 பள்ளிவாசலில் கற்பிப்பதும் தீர்ப்பு வழங்குவதும்
133. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் எழுந்து நின்று (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எந்த இடத்திலிருந்து (ஹஜ் ஜுக்கா) ‘இஹ்ராம்’ கட்ட வேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “மதீனாவாசிகள் ‘துல்ஹுலைஃபா’ எனும் இடத்திலிருந்தும், ஷாம் (சிரியா)வாசிகள் ‘அல்ஜுஹ்ஃபா’ எனும் இடத்திலி ருந்தும், நஜ்த்வாசிகள் ‘கர்ன்’ எனும் இடத்திலிருந்தும் ‘இஹ்ராம்’ கட்ட வேண்டும்” என்று பதிலளித்தார்கள்.

‘யமன்’வாசிகள் ‘யலம்லம்’ எனும் இடத்திலிருந்து இஹ்ராம் கட்ட வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சிலர் கூறுகிறார்கள். இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து (எதையும்) நான் அறியவில்லை.

அத்தியாயம் : 4
134. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم. وَعَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّ رَجُلاً سَأَلَهُ مَا يَلْبَسُ الْمُحْرِمُ فَقَالَ "" لاَ يَلْبَسِ الْقَمِيصَ وَلاَ الْعِمَامَةَ وَلاَ السَّرَاوِيلَ وَلاَ الْبُرْنُسَ وَلاَ ثَوْبًا مَسَّهُ الْوَرْسُ أَوِ الزَّعْفَرَانُ، فَإِنْ لَمْ يَجِدِ النَّعْلَيْنِ فَلْيَلْبَسِ الْخُفَّيْنِ وَلْيَقْطَعْهُمَا حَتَّى يَكُونَا تَحْتَ الْكَعْبَيْنِ "".
பாடம் : 53 வினவப்பட்டதைவிட விரி வாகப் பதில் கூறல்
134. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ‘இஹ்ராம்’ கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “முழு நீளச் சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, முக்காடுள்ள மேலங்கி (புர்னுஸ்), (சாயம் எடுக்கப் பயன்படும்) ‘வர்ஸ்’ எனும் வாசனைச் செடியால் சாயம் தோய்த்த ஆடை, அல்லது குங்குமச் சாயம் தோய்த்த ஆடை ஆகியவற்றை (இஹ்ராம் கட்டியவர்) அணியக் கூடாது. காலணிகள் கிடைக்கா விட்டால் (தோலினாலான உயரமான) காலுறைகளை அணிந்து கொள்ளலாம். (ஆனால்) காலுறைகள் கணுக்காலுக்குக் கீழே இருக்கும்படி கத்தரித்து (அணிந்து)கொள்ளட்டும்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 4
135. حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، قَالَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" لاَ تُقْبَلُ صَلاَةُ مَنْ أَحْدَثَ حَتَّى يَتَوَضَّأَ "". قَالَ رَجُلٌ مِنْ حَضْرَمَوْتَ مَا الْحَدَثُ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ فُسَاءٌ أَوْ ضُرَاطٌ.
பாடம் : 1 அங்கத் தூய்மை தொடர்பாக வந்துள்ளவை உயர்ந்தோன் அல்லாஹ் கூறு கின்றான்: இறைநம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால், உங்கள் முகங்களையும், முழங்கைகள்வரை உங்கள் கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவிக்கொள்ளுங்கள். கணுக்கால்கள்வரை உங்கள் கால்களையும் (கழுவிக்கொள்ளுங்கள்). (5:6) அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்: அங்கத் தூய்மை செய்யும்போது உறுப்புகளை ஒரு தடவை கழுவுவதுதான் கட்டாயமாகும் என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். மேலும், அவர்களே அவ்வுறுப்புகளை இரண்டிரண்டு தடவைகளும் மும்மூன்று தடவைகளும் கழுவி அங்கத் தூய்மை செய்திருக்கிறார்கள். மூன்று தடவைக்கு மேல் அதிகப்படுத்தியது இல்லை. நபி (ஸல்) அவர்களின் செயல் முறையை மீறுவதையும் அங்கத் தூய்மை யில் (மூன்று தடவைகள் என்ற அந்த) எல்லையைத் தாண்டுவதையும் மார்க்க அறிஞர்கள் வெறுத்திருக்கிறார்கள்.2 பாடம் : 2 உடல் தூய்மையின்றி தொழுகை ஏற்கப்படாது.
135. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “சிறு துடக்கு ஏற்பட்டவர் அங்கத் தூய்மை செய்யாத வரை அவரது தொழுகை ஏற்கப்படாது” எனக் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது ‘ஹள்ரமவ்த்’ (யமன்) எனும் இடத்தைச் சேர்ந்த ஒருவர், “அபூஹுரைரா (ரலி) அவர்களே! சிறு துடக்கு என்பது என்ன?” என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘சப்தத் துடனோ சப்தமின்றியோ நாற்ற வாயு பிரிவது’ என்று பதிலளித்தார்கள்.3

அத்தியாயம் : 4
136. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ خَالِدٍ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، عَنْ نُعَيْمٍ الْمُجْمِرِ، قَالَ رَقِيتُ مَعَ أَبِي هُرَيْرَةَ عَلَى ظَهْرِ الْمَسْجِدِ، فَتَوَضَّأَ فَقَالَ إِنِّي سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ "" إِنَّ أُمَّتِي يُدْعَوْنَ يَوْمَ الْقِيَامَةِ غُرًّا مُحَجَّلِينَ مِنْ آثَارِ الْوُضُوءِ، فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ "".
பாடம் : 3 அங்கத் தூய்மையின் சிறப்பும் அங்கத் தூய்மையின் அடை யாளமாக முகம், கை, கால் ஆகி யவை (மறுமையில்) பிரகாசிப் பதும்
136. நுஐம் பின் அப்தில்லாஹ் அல் முஜ்மிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் மேல் புறத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள்.

பின்னர் “மறுமை நாளில் என் சமுதாயத்தார் அங்கத் தூய்மையின் உறுப்புகளிலுள்ள அடையாளங்களால் ‘(பிரதான) உறுப்புகள் பிரகாசிப்போரே!’ என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் யாருக்கு (தம் உறுப்புகளை நீட்டிக் கழுவி) தமது பிரகாசத்தையும் நீட்டிக்கொள்ள முடியுமோ அவர் அதைச் செய்து கொள்ளட்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைக் கேட்டிருக்கிறேன் என்றார்கள்.4

அத்தியாயம் : 4
137. حَدَّثَنَا عَلِيٌّ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، وَعَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ، عَنْ عَمِّهِ، أَنَّهُ شَكَا إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم الرَّجُلُ الَّذِي يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَجِدُ الشَّىْءَ فِي الصَّلاَةِ. فَقَالَ "" لاَ يَنْفَتِلْ ـ أَوْ لاَ يَنْصَرِفْ ـ حَتَّى يَسْمَعَ صَوْتًا أَوْ يَجِدَ رِيحًا "".
பாடம் : 4 அங்கத் தூய்மை முறிந்தது உறுதியாகத் தெரியாத வரை சந்தேகத்தின் பேரில் (மீண்டும்) அங்கத் தூய்மை செய்ய வேண் டியதில்லை.
137. அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தொழும்போது வாயு பிரி வதைப் போன்ற உணர்வு ஒருவருக்கு ஏற்படுவது பற்றி முறையிட்டேன்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(வாயு பிரிவதன்) சப்தத்தைக் கேட்காத வரை, அல்லது நாற்றத்தை உணராத வரை அவர் (தொழுகையிலி ருந்து) திரும்ப வேண்டாம்” என்றார்கள்.5

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம் : 4
138. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ أَخْبَرَنِي كُرَيْبٌ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم نَامَ حَتَّى نَفَخَ ثُمَّ صَلَّى ـ وَرُبَّمَا قَالَ اضْطَجَعَ حَتَّى نَفَخَ ـ ثُمَّ قَامَ فَصَلَّى. ثُمَّ حَدَّثَنَا بِهِ سُفْيَانُ مَرَّةً بَعْدَ مَرَّةٍ عَنْ عَمْرٍو عَنْ كُرَيْبٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ بِتُّ عِنْدَ خَالَتِي مَيْمُونَةَ لَيْلَةً، فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ اللَّيْلِ، فَلَمَّا كَانَ فِي بَعْضِ اللَّيْلِ قَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَتَوَضَّأَ مِنْ شَنٍّ مُعَلَّقٍ وُضُوءًا خَفِيفًا ـ يُخَفِّفُهُ عَمْرٌو وَيُقَلِّلُهُ ـ وَقَامَ يُصَلِّي فَتَوَضَّأْتُ نَحْوًا مِمَّا تَوَضَّأَ، ثُمَّ جِئْتُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ ـ وَرُبَّمَا قَالَ سُفْيَانُ عَنْ شِمَالِهِ ـ فَحَوَّلَنِي فَجَعَلَنِي عَنْ يَمِينِهِ، ثُمَّ صَلَّى مَا شَاءَ اللَّهُ، ثُمَّ اضْطَجَعَ، فَنَامَ حَتَّى نَفَخَ، ثُمَّ أَتَاهُ الْمُنَادِي فَآذَنَهُ بِالصَّلاَةِ، فَقَامَ مَعَهُ إِلَى الصَّلاَةِ، فَصَلَّى وَلَمْ يَتَوَضَّأْ. قُلْنَا لِعَمْرٍو إِنَّ نَاسًا يَقُولُونَ إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم تَنَامُ عَيْنُهُ وَلاَ يَنَامُ قَلْبُهُ. قَالَ عَمْرٌو سَمِعْتُ عُبَيْدَ بْنَ عُمَيْرٍ يَقُولُ رُؤْيَا الأَنْبِيَاءِ وَحْىٌ، ثُمَّ قَرَأَ {إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ}.
பாடம் : 5 அங்கத் தூய்மையில் (உறுப்புகளை) இலேசாகக் கழுவுதல்
138. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் ஓரிரவு தங்கியிருந்தேன். அந்த இரவில் (தொழுகைக்காக) நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்.

இரவின் ஒரு பகுதி ஆனதும் (உறங்கிக்கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்கள் எழுந்து, தொங்கவிடப்பட்டிருந்த ஒரு பழைய தோல் பையிலிருந்து, (தண்ணீர் எடுத்து) இலேசாக அங்கத் தூய்மை செய்தார்கள்.

-(இதன் அறிவிப்பவர்களில் ஒருவ ரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், ‘இலேசாக அங்கத் தூய்மை செய்தார்கள்’ என்பதோடு ‘குறைந்தபட்ச அளவில்’ என்ற வார்த்தையையும் சேர்த்துக் கூறினார்கள்.-6

பிறகு நபி (ஸல்) அவர்கள் தொழுவதற் காக நின்றார்கள். உடனே நானும் அவர்களைப் போன்றே (இலேசாக) அங்கத் தூய்மை செய்துவிட்டுவந்து அவர்களுக்கு இடப் பக்கத்தில் நின்று கொண்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் என்னைத் திருப்பி தமக்கு வலப் பக்கத்தில் நிறுத்திக்கொண்டார்கள். பின்னர் அவர்கள் அல்லாஹ் நாடிய அளவுக்குத் தொழுதுவிட்டுப் பின்னர் மீண்டும் சாய்ந்துபடுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள்.

பிறகு அவர்களிடம் தொழுகை அழைப்பாளர் வந்து தொழுகைக்கு அவர்களை அழைத்தார். அப்போது எழுந்து அவருடன் (சுப்ஹு) தொழுகைக்குப் போய் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆனால், (மீண்டும்) அவர்கள் அங்கத் தூய்மை செய்யவில்லை.7

(இதன் அறிவிப்பாளரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறு கிறார்கள்:

நாங்கள் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடம், “மக்கள் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்கள்தான் உறங்குகின்றன; அவர்களின் உள்ளம் உறங்காது’ என்று கூறுகின்றனரே! (அது உண்மையா?)” என்று கேட்டோம். அதற்கு அம்ர் (ரஹ்) அவர்கள், “இறைத் தூதர்களின் கனவு இறைவனிடமிருந்து வரும் செய்தி(யான வஹீ)யாகும் என்று (வந்துள்ள நபிமொழியை) உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.

பிறகு “(மகனே!) உன்னை நான் அறுத்துப் பலியிடுவதாக கனவில் கண்டேன்” (37:102) எனும் இறைவசனத்தையும் (தமது கருத்துக்குச் சான்றாக) ஓதிக்காட்டினார்கள்.

சுஃப்யான் (ரஹ்) அவர்கள் சில நேரங்களில், “நபி (ஸல்) அவர்கள், குறட்டை விட்டுத் தூங்கிவிட்டு பிறகு (எழுந்து) தொழுவார்கள்” என்றும், வேறுசில நேரங்களில் “நபி (ஸல்) அவர்கள் சாய்ந்துபடுத்து குறட்டைவிட்டு உறங்கினார்கள். பிறகு எழுந்து தொழுதார்கள்” என்றும் அறிவித்துள்ளார்கள்.

ஆனால், மேற்கண்ட முழு ஹதீஸில் உள்ளவாறே பல்வேறு சந்தர்ப்பங்களில் அறிவித்துள்ளார்கள்.

அத்தியாயம் : 4
139. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ، أَنَّهُ سَمِعَهُ يَقُولُ دَفَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ عَرَفَةَ حَتَّى إِذَا كَانَ بِالشِّعْبِ نَزَلَ فَبَالَ، ثُمَّ تَوَضَّأَ وَلَمْ يُسْبِغِ الْوُضُوءَ. فَقُلْتُ الصَّلاَةَ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ "" الصَّلاَةُ أَمَامَكَ "". فَرَكِبَ، فَلَمَّا جَاءَ الْمُزْدَلِفَةَ نَزَلَ فَتَوَضَّأَ، فَأَسْبَغَ الْوُضُوءَ، ثُمَّ أُقِيمَتِ الصَّلاَةُ فَصَلَّى الْمَغْرِبَ، ثُمَّ أَنَاخَ كُلُّ إِنْسَانٍ بَعِيرَهُ فِي مَنْزِلِهِ، ثُمَّ أُقِيمَتِ الْعِشَاءُ فَصَلَّى وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا.
பாடம் : 6 அங்கத் தூய்மையை நிறைவாகச் செய்தல் இப்னு உமர் (ரலி) அவர்கள், ‘அங்கத் தூய்மையை நிறைவாகச் செய்தல்’ (இஸ்பாஃகுல் உளூ) என்பதன் கருத்து, ‘நன்கு தூய்மைப்படுத்துதல் என்பதுதான்’ என்று கூறியுள்ளார்கள்.
139. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அரஃபா’விலிருந்து (‘முஸ்தலிஃபா’வுக்குத்) திரும்பிக்கொண்டி ருந்தார்கள். ஒரு கணவாயை அடைந்த போது, அங்கு (தமது ஊர்தியைவிட்டு) இறங்கி, சிறுநீர் கழித்தார்கள். பின்னர் அங்கத் தூய்மை செய்தார்கள்; அங்கத் தூய்மையை (சுருக்கமாகவே செய்தார்கள். நன்கு தேய்த்து மும்முறை கழுவி) முழுமையாக்கவில்லை.

அப்போது நான், “அல்லாஹ்வின் தூதரே! (இங்கு) தொழப் போகிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகை உமக்கு முன்னர் (உள்ள முஸ்தலிஃபாவில்) நடைபெறும்” என்று கூறிவிட்டு ஊர்தியில் ஏறிக்கொண்டார்கள்.

‘முஸ்தலிஃபா’வுக்கு வந்ததும், இறங்கி மீண்டும் அங்கத் தூய்மை செய்தார்கள். இப்போது அங்கத் தூய்மையை நிறைவாகச் செய்தார்கள். பின்னர் தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டதும், மஃக்ரிப் தொழுகை நடத்தினார்கள். பிறகு ஒவ்வொரு மனிதரும் தத்தமது ஒட்டகத்தை தம் தங்குமிடங்களில் படுக்கவைத்தனர்.

தொடர்ந்து இஷா தொழுகைக்காக ‘இகாமத்’ சொல்லப்பட்டபோது, அதையும் தொழுவித்தார்கள். (மஃக்ரிப், இஷா ஆகிய) இரு தொழுகைகளுக்கிடையே வேறெந்தத் தொழுகையையும் அவர்கள் தொழவில்லை.

அத்தியாயம் : 4
140. حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، قَالَ أَخْبَرَنَا أَبُو سَلَمَةَ الْخُزَاعِيُّ، مَنْصُورُ بْنُ سَلَمَةَ قَالَ أَخْبَرَنَا ابْنُ بِلاَلٍ ـ يَعْنِي سُلَيْمَانَ ـ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّهُ تَوَضَّأَ فَغَسَلَ وَجْهَهُ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَمَضْمَضَ بِهَا وَاسْتَنْشَقَ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَجَعَلَ بِهَا هَكَذَا، أَضَافَهَا إِلَى يَدِهِ الأُخْرَى، فَغَسَلَ بِهِمَا وَجْهَهُ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَغَسَلَ بِهَا يَدَهُ الْيُمْنَى، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ، فَغَسَلَ بِهَا يَدَهُ الْيُسْرَى، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ أَخَذَ غَرْفَةً مِنْ مَاءٍ فَرَشَّ عَلَى رِجْلِهِ الْيُمْنَى حَتَّى غَسَلَهَا، ثُمَّ أَخَذَ غَرْفَةً أُخْرَى، فَغَسَلَ بِهَا رِجْلَهُ ـ يَعْنِي الْيُسْرَى ـ ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَتَوَضَّأُ.
பாடம் : 7 ஒரு கை நிரம்பத் தண்ணீர் அள்ளி இரண்டு கைகளையும் சேர்த்துக்கொண்டு முகத்தைக் கழுவுதல்8
140. அதாஉ பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அங்கத் தூய்மை செய்தார்கள். அப்போது (ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதைக் கொண்டு) தமது முகத்தைக் கழுவினார்கள்.

-அதாவது (ஒரே) ஒரு கையில் தண்ணீர் எடுத்து அதன் மூலமே வாயும் கொப்புளித்து மூக்கிற்கும் நீர் செலுத்தி னார்கள். பிறகு ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதை -இவ்வாறு- மற்றொரு கையுடன் சேர்த்துக்கொண்டு அதன் மூலம் தமது முகத்தைக் கழுவினார்கள்.

பிறகு ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதன் மூலம் தமது வலக் கையைக் கழுவினார்கள். பின்னர் ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதன் மூலம் தமது இடக் கையைக் கழுவினார்கள். பிறகு தமது (ஈரக்கையால்) தலையைத் தடவி (மஸ்ஹு செய்யலா)னார்கள்.

பிறகு ஒரு கையில் தண்ணீர் அள்ளி அதைத் தமது வலக் காலின் மீது சிறுகச் சிறுக ஊற்றி அதைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தமது இடக் காலில் ஊற்றிக் கழுவினார்கள்.

பிறகு “இப்படித்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கத் தூய்மை செய்வதை நான் பார்த்தேன்” என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அத்தியாயம் : 4
141. حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ "" لَوْ أَنَّ أَحَدَكُمْ إِذَا أَتَى أَهْلَهُ قَالَ بِسْمِ اللَّهِ اللَّهُمَّ جَنِّبْنَا الشَّيْطَانَ وَجَنِّبِ الشَّيْطَانَ مَا رَزَقْتَنَا. فَقُضِيَ بَيْنَهُمَا وَلَدٌ، لَمْ يَضُرَّهُ "".
பாடம் : 8 (அங்கத் தூய்மை உள்பட) எல்லா நிலைகளிலும், (ஏன்) தாம்பத் திய உறவின்போதுகூட அல்லாஹ்வின் பெயர் (பிஸ்மில்லாஹ்) கூறல்
141. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் மனைவியிடம் (தாம்பத்திய உறவுகொள்ளும் எண்ணத் தில்) செல்லும்போது, “அல்லாஹ்வின் திருப்யெரால் (பிஸ்மில்லாஹ்); இறைவா! ஷைத்தானை எங்களைவிட்டு விலக்கி வைப்பாயாக! எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத் தானை விலக்கிவைப்பாயாக!” என்று பிரார்த்தித்து(விட்டு உறவு கொண்டு), அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந் தைக்கு ஷைத்தான் தீங்கு விளைவிப்ப தில்லை.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 4
142. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْخَلاَءَ قَالَ "" اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْخُبُثِ وَالْخَبَائِثِ "". تَابَعَهُ ابْنُ عَرْعَرَةَ عَنْ شُعْبَةَ. وَقَالَ غُنْدَرٌ عَنْ شُعْبَةَ إِذَا أَتَى الْخَلاَءَ. وَقَالَ مُوسَى عَنْ حَمَّادٍ إِذَا دَخَلَ. وَقَالَ سَعِيدُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ إِذَا أَرَادَ أَنْ يَدْخُلَ.
பாடம் : 9 கழிப்பிடம் செல்லும்போது சொல்ல வேண்டியது
142. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற் குள் நுழையும்போது, “அல்லாஹும்ம இன்னீ அஊதுபி(க்)க மினல் குபுஸி வல்கபாயிஸி” (இறைவா! அருவருக்கத் தக்க செயல்கள், இழிவான எண்ணங்கள் ஆகியவற்றைத் தூண்டும் ஆண், பெண் ஷைத்தானி(ன் தீங்கி)லிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்) என்று கூறுவார்கள்.

இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘கழிப்பிடத்திற்கு வந்தால்’ என்றும், ஹம்மாத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘(கழிப்பிடத்திற்குள்) நுழைந்தால்’ என்றும், அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ‘(கழிப்பிடத்திற்குள்) நுழைய நினைத்தால்’ என்றும் இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம் : 4
143. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، قَالَ حَدَّثَنَا هَاشِمُ بْنُ الْقَاسِمِ، قَالَ حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم دَخَلَ الْخَلاَءَ، فَوَضَعْتُ لَهُ وَضُوءًا قَالَ "" مَنْ وَضَعَ هَذَا "". فَأُخْبِرَ فَقَالَ "" اللَّهُمَّ فَقِّهْهُ فِي الدِّينِ "".
பாடம் : 10 கழிப்பிடம் அருகில் தண்ணீர் வைத்தல்
143. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் தங்கி யிருந்த இரவில்) நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திற்குள் நுழைந்தார்கள். அப் போது அவர்களுக்காக நான் (அங்கத் தூய்மை செய்ய) தண்ணீர் வைத்தேன். அவர்கள் (திரும்பிவந்ததும்), “இதை வைத்தவர் யார்?” என்று கேட்டார்கள். (என்னைப் பற்றித்) தெரிவிக்கப்பட்டது.

அப்போது “இறைவா! இவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தை அளிப்பாயாக!” என்று (எனக்காக) நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள்.

அத்தியாயம் : 4
144. حَدَّثَنَا آدَمُ، قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، قَالَ حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم "" إِذَا أَتَى أَحَدُكُمُ الْغَائِطَ فَلاَ يَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلاَ يُوَلِّهَا ظَهْرَهُ، شَرِّقُوا أَوْ غَرِّبُوا "".
பாடம் : 11 மலஜலம் கழிக்கும்போது கிப்லா (கஅபா) திசையை முன்னோக்கக் கூடாது; சுவர் உள்ளிட்ட கட்டடம் இருந்தால் தவிர.
144. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் மலம் கழிக்கச் சென்றால் அவர் கிப்லாவை முன்னோக்க வேண்டாம்; (அதன் திசையில்) தமது முதுகைக் காட்டி அமரவும் வேண்டாம். (மாறாக) கிழக்கு நோக்கியோ மேற்கு நோக்கியோ திரும்பிக்கொள்ளுங்கள்.9

இதை அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அத்தியாயம் : 4
145. حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ عَمِّهِ، وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ كَانَ يَقُولُ إِنَّ نَاسًا يَقُولُونَ إِذَا قَعَدْتَ عَلَى حَاجَتِكَ، فَلاَ تَسْتَقْبِلِ الْقِبْلَةَ وَلاَ بَيْتَ الْمَقْدِسِ. فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ لَقَدِ ارْتَقَيْتُ يَوْمًا عَلَى ظَهْرِ بَيْتٍ لَنَا، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلاً بَيْتَ الْمَقْدِسِ لِحَاجَتِهِ. وَقَالَ لَعَلَّكَ مِنَ الَّذِينَ يُصَلُّونَ عَلَى أَوْرَاكِهِمْ، فَقُلْتُ لاَ أَدْرِي وَاللَّهِ. قَالَ مَالِكٌ يَعْنِي الَّذِي يُصَلِّي وَلاَ يَرْتَفِعُ عَنِ الأَرْضِ، يَسْجُدُ وَهُوَ لاَصِقٌ بِالأَرْضِ.
பாடம் : 12 இரண்டு செங்கற்களின் மீது அமர்ந்து மலம் கழித்தல்
145. வாசிஉ பின் ஹப்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், “இயற்றைக் கடனை நிறைவேற்ற நீ அமரும்போது, கிப்லாவையோ, பைத்துல் மக்திஸையோ முன்னோக்கக் கூடாது என்று மக்கள் சிலர் சொல்கிறார்கள். ஆனால், நான் ஒரு நாள் எங்கள் (ஹஃப்ஸா) வீட்டின் கூரையின் மீது (ஒரு வேலையாக) ஏறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு செங்கற்களின் மீது பைத்துல் மக்திஸின் திசையை முன்னோக்கியபடி இயற்கைக் கடனை நிறைவேற்ற அமர்ந்திருப்பதை (தற் செயலாக)க் கண்டேன்” என்று கூறு வார்கள்.10

பிறகு என்னிடம், “புட்டங்களில் தொழுபவர்களில் நீங்களும் ஒருவரோ!” என்று கேட்டார்கள். அதற்கு நான், “அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் அவ்வாறு தொழுதேனா என்று) எனக்குத் தெரியாது” என்றேன்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

தரையுடன் (புட்டத்தை) சேர்த்துக் கொண்டவராகவும் புட்டத்தைத் தரை யிலிருந்து உயர்த்தாமலும் சஜ்தா செய்(து தொழு)பவரைத்தான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (இவ்வாறு) குறிப்பிட்டார்கள்.

அத்தியாயம் : 4
146. حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ حَدَّثَنَا اللَّيْثُ، قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، أَنَّ أَزْوَاجَ النَّبِيِّ، صلى الله عليه وسلم كُنَّ يَخْرُجْنَ بِاللَّيْلِ إِذَا تَبَرَّزْنَ إِلَى الْمَنَاصِعِ ـ وَهُوَ صَعِيدٌ أَفْيَحُ ـ فَكَانَ عُمَرُ يَقُولُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم احْجُبْ نِسَاءَكَ. فَلَمْ يَكُنْ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَفْعَلُ، فَخَرَجَتْ سَوْدَةُ بِنْتُ زَمْعَةَ زَوْجُ النَّبِيِّ صلى الله عليه وسلم لَيْلَةً مِنَ اللَّيَالِي عِشَاءً، وَكَانَتِ امْرَأَةً طَوِيلَةً، فَنَادَاهَا عُمَرُ أَلاَ قَدْ عَرَفْنَاكِ يَا سَوْدَةُ. حِرْصًا عَلَى أَنْ يَنْزِلَ الْحِجَابُ، فَأَنْزَلَ اللَّهُ آيَةَ الْحِجَابِ.
பாடம் : 13 பெண்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற திறந்த வெளிக்குச் செல்லல்
146. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியர் இயற்கைக் கடனை நிறைவேற்ற இரவு நேரத்தில் (ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருந்த) ‘மனாஸிஉ’களுக்கு (வீட்டை விட்டு) வெளியே செல்லும் வழக்க முடையவர்களாய் இருந்தார்கள். -மனாஸிஉ என்பது (மதீனாவின் புறநகரிலிருந்த) விசாலமான திறந்த வெளிகளாகும்.- இதையொட்டி உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “உங்கள் துணைவியரை (வெளியே செல்லும்போது) பர்தா இட்டு மறைத்துக்கொள்ளச் சொல்லுங்கள்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைச் செயல்படுத்தவில்லை.

இந்நிலையில், நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான சவ்தா (ரலி) அவர்கள் ஓர் இரவு இஷா நேரத்தில் (இயற்கைக் கடனை நிறைவேற்ற) வெளியே சென்றார்கள். -அவர்கள் உயரமான பெண்மணியாக இருந்தார்கள்.- அவர்களைப் பார்த்த உமர் (ரலி) அவர்கள், “சவ்தா! உங்களைக் கண்டுகொண்டோம்” என்று பர்தா (பற்றிய வசனம்) அருளப்படாதா என்ற பேராவலில் சவ்தா (ரலி) அவர்களை அழைத்துக் கூறினார்கள். அப்போது அல்லாஹ், பர்தா தொடர்பான வசனத்தை அருளினான்.


அத்தியாயம் : 4
147. حَدَّثَنَا زَكَرِيَّاءُ، قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ "" قَدْ أُذِنَ أَنْ تَخْرُجْنَ فِي حَاجَتِكُنَّ "". قَالَ هِشَامٌ يَعْنِي الْبَرَازَ.
பாடம் : 13 பெண்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற திறந்த வெளிக்குச் செல்லல்
147. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “(என் துணைவி யரே!) நீங்கள் உங்கள் தேவைக்காக வெளியே செல்ல உங்களுக்கு அனுமதி யளிக்கப்பட்டு உள்ளது” என்று சொன் னார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் ‘வெளியே செல்லல்’ என்பதற்கு ‘இயற்கைக் கடனை நிறைவேற்ற திறந்த வெளிகளுக்குச் செல்லல்’ என்பதே நபி (ஸல்) அவர்களின் கருத்தாகும் என்று கூறினார்கள்.

அத்தியாயம் : 4
148. حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنْ وَاسِعِ بْنِ حَبَّانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ ارْتَقَيْتُ فَوْقَ ظَهْرِ بَيْتِ حَفْصَةَ لِبَعْضِ حَاجَتِي، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقْضِي حَاجَتَهُ مُسْتَدْبِرَ الْقِبْلَةِ مُسْتَقْبِلَ الشَّأْمِ.
பாடம் : 14 வீடுகளில் கழிப்பறைகள் அமைத்துக்கொள்ளல்
148. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் தேவையொன்றுக்காக (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டுக் கூரைமீது ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கிப்லாவின் திசையைப் பின்னோக்கியும் (பைத்துல் மக்திஸ் இருக்கும்) ஷாம் (சிரியா) திசையை முன்னோக்கியும் அமர்ந்தவர்களாகத் (தமது வீட்டிலிருந்த கழிவறையில்) இயற்கைக் கடனை நிறைவேற்றிக்கொண்டிருப்பதை நான் (தற்செயலாகக்) கண்டேன்.


அத்தியாயம் : 4
149. حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالَ أَخْبَرَنَا يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، أَنَّ عَمَّهُ، وَاسِعَ بْنَ حَبَّانَ، أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ أَخْبَرَهُ قَالَ لَقَدْ ظَهَرْتُ ذَاتَ يَوْمٍ عَلَى ظَهْرِ بَيْتِنَا، فَرَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَاعِدًا عَلَى لَبِنَتَيْنِ مُسْتَقْبِلَ بَيْتِ الْمَقْدِسِ.
பாடம் : 14 வீடுகளில் கழிப்பறைகள் அமைத்துக்கொள்ளல்
149. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் நான் (ஒரு தேவை நிமித்தம்) எங்கள் வீட்டுக் கூரைமீது ஏறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரு செங்கற்கள் மீதமர்ந்தவர்களாக பைத்துல் மக்திஸ் இருக்கும் திசையை முன்னோக்கியபடி (இயற்கைக் கடனை நிறைவேற்றிக்கொண்டு) இருப்பதைக் கண்டேன்.11

அத்தியாயம் : 4
150. حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي مُعَاذٍ ـ وَاسْمُهُ عَطَاءُ بْنُ أَبِي مَيْمُونَةَ ـ قَالَ سَمِعْتُ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا خَرَجَ لِحَاجَتِهِ أَجِيءُ أَنَا وَغُلاَمٌ مَعَنَا إِدَاوَةٌ مِنْ مَاءٍ. يَعْنِي يَسْتَنْجِي بِهِ.
பாடம் : 15 இயற்கைக் கடனை நிறைவேற்றி விட்டு, தண்ணீரால் துப்புரவு செய்தல்12
150. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற (வீட்டை விட்டுப்) புறப்பட்டால், நானும் இன்னொரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றை எங்களுடன் எடுத்துக்கொண்டு செல்வோம்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுல்வலீத் ஹிஷாம் பின் அப்தில் மலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:)

“அந்தத் தண்ணீரால் நபி (ஸல்) அவர்கள் துப்புரவு செய்துகொள்வதற்காக (எடுத்துச் சென்றோம்)” என்ற கருத்தில்தான் அனஸ் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.

அத்தியாயம் : 4
151. حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي مُعَاذٍ ـ هُوَ عَطَاءُ بْنُ أَبِي مَيْمُونَةَ ـ قَالَ سَمِعْتُ أَنَسًا، يَقُولُ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا خَرَجَ لِحَاجَتِهِ تَبِعْتُهُ أَنَا وَغُلاَمٌ مِنَّا مَعَنَا إِدَاوَةٌ مِنْ مَاءٍ.
பாடம் : 16 ஒருவர் துப்புரவு செய்வதற்காக மற்றவர் தண்ணீர் எடுத்துச் செல்லல் “ஏன் (உங்கள் கூஃபா நகரில்) நபி (ஸல்) அவர்களின் காலணிகள், அவர்கள் சுத்தம் செய்வதற்கான தண்ணீர், மற்றும் தலையணையைச் சுமந்து (சேவகம் புரிந்து)கொண்டிருந்தவர் (இப்னு மஸ்ஊத் - ரலி) உங்களிடையே இல்லையா?” என்று அபுத்தர்தா (ரலி) அவர்கள் (அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்களிடம்) கேட்டார்கள்.
151. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இயற்கைக் கடனை நிறைவேற்ற வெளியே சென்றால், நானும் எங்க(ள் அன்சாரிக)ளில் ஒரு சிறுவரும் தண்ணீர் நிரம்பிய சிறிய தோல் பாத்திரம் ஒன்றுடன் அவர்களைப் பின்தொடர்ந்து செல்வோம். (அந்தத் தண்ணீரால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் துப்புரவு செய்துகொள்வார்கள்.)13

அத்தியாயம் : 4